- இயேசுவை நோக்கி
- இயேசுவின் பரிசுத்த நாமம்
.நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன் . யோவான் 14:14
(இந்தச் செபங்கள் கையெழுத்துப் பிரதியாகக் கிடைத்தவை )
இயேசு என்கிற பரிசுத்த நாமமே!
வல்லமையுள்ள நாமமே! மகத்துவமுள்ள நாமமே !
விடுதலை கொடுக்கிற நாமமே! வாழ்விக்கிற நாமமே !
ஆசீர்வதிக்கிற நாமமே! அற்புதங்களைச் செய்கிற நாமமே!
ஒரே ஏக தெய்வத்தின் நாமமே!
உம்மை நான் ஆராதிக்கிறேன். விசுவசிக்கிறேன்.
ஏற்றுக்கொள்கிறேன். உம்மைநான் நேசிக்கிறேன்.
உம்மோடு என்னை முழுமையாக ஒன்றிக்கிறேன்.
உம்மை நம்புகிறேன் . மகிமைப்படுத்துகிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே என்னை ஆசீர்வதிக்கிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே நான் சுகம் பெற்றுக் பெற்றுக்கொள்கிறேன்.
இயேசுவின் நாமத்தினாலே நான் பலம் அடைகிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே நான் வெற்றி பெறுகிறேன்.
இயேசு என்கிற நாமமே! என்னை அபிஷேகியும் . என்னை உருமாற்றும் .
என்னை முழுமையாக்கும் .எனது எல்லா வெற்றிடங்களையும் நிரப்பும்.
இயேசு என்னும் நாமத்தின் பிரசன்னம் எனக்குள் இறங்குவதாக.
என்னை நிரப்புவதாக . ஒளிர்விப்பதாக. அபிஷேகம் செய்வதாக அல்லேலுயா
இயேசு என்னும் நாமமே ! நீரே என் வாழ்வு ! என் உயிர் மூச்சு!
என் ஆதாரம் நீரே! என் சமாதானம் .என் வளமை. என் எதிர்காலம்.
என்னை பாதுகாக்கும் கோட்டையும் அரணும் நீரே !கேடயமும் நீரே !
கவசமும் நீரே நான் ஊன்றி நிற்கும் பாறையும் என் கன்மலையும் நீரே!
என் வெற்றியும் மகிழ்வும் நீரே !என் ஆறுதலும் ஆதரவும் நீரே!
இயேசு என்னும் நாமமே! என்னை சூழ்ந்துகொள்ளும்.
என்னை நெருங்கி இரும். என்னை பற்றிப் பிடித்துக் கொள்ளும்.
என்னுள்ளிருந்து ஜீவநீருற்றுகள் புறப்படச் செய்யும். உமது உயிர் மூச்சை எனக்குள் அனுப்பும் அல்லேலூயா
(சிறிது நேரம் துதிக்கவும்)
இயேசுவின் பெயரால் செபம்
இயேசு என்கிற மேலான வல்லமையான பெயரை என் உடலுக்குள் அனுப்பி செபிக்கிறேன். சுகப்படுத்துகிற ஆண்டவர் இயேசுவின் பெயரை என் மூளைக்குள்ளும் அதன் இயக்கங்களுக்குள்ளும், அதனால் கட்டுப்படுத்தப்படுகிற என் உடலின் எல்லா இயக்கங்களுக்குள்ளும் நான் அனுப்பி செபிக்கிறேன். இயேசு என்கிற மகத்துவமுள்ள பெயரை என் உடலில்
உள்ள எல்லா எலும்புகளுக்குள், முதுகு பகுதிகளுக்குள் எலும்பு மூட்டுக்கள். மூட்டுக் கிண்ணங்கள். தசைகள், தசை நார்கள் தோல், நரம்பு மண்டலங்களுக்குள் அனுப்பி செபிக்கிறேன் . என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும் , நுரையீரலின் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும் (சுருங்கி விரிதலுக்குள்) இயேசு என்கிற அபிஷேகிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு இரத்தத் துளிகளுக்குள்ளும் , நான் சுவாசிக்கும் காற்றின் அணுக்களுக்குள்ளும் இயேசு என்கிற உமது வல்லமையான பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா
நான் உண்ணுகிற உணவு , குடிக்கிற நீர் மற்றும் பானங்கள் , என் உடைகள் , நான் உடுத்தியிருக்கிற ஆடை , நான் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களுக்குள்ளும்இயேசு என்கிற வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . நான் பார்க்கிற ஒவ்வொரு காட்சிக்குள்ளும் , பொருட்களுக்குள்ளும் , நபர்களுக்குள்ளும் , என் கண்ணின் பார்வைகளுக்குள்ளும் , நான் கேட்கிற ஒலிகள் , இசை வார்த்தைகளுக்குள் , என் உணர்வுகளுக்குள் , சிந்தனைகளுக்குள் , தொடு உணர்வுகளுக்குள் , என் வாயின் வார்த்தைகளுக்குள் இயேசு என்கிற உம்முடைய அபிஷேகிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . அல்லேலூயா !
இயேசு என்கிற மகா பரிசுத்த பெயரை என் மனதுக்குள் அனுப்பி செபிக்கிறேன் . என் மனதின் ஆழ் நிலைகளுக்குள் , அதன் சுகம் பெறாத காயங்களுக்குள் , விடுவிக்கப்படாத கட்டுகளுக்குள் , ஒருமனப்படமுடியாத அலைக்கழிப்புகளுக்குள் , நிலை நிற்க முடியாத தடுமாற்றங்களுக்குள் , உம்மோடு ஒன்றிக்க முடியாத நிலைகளுக்குள் , உம்மை அறிந்து கொள்ள இயலாத எல்லா அந்தகாரங்களுக்குள்ளும் , விடுவிக்கிற , ஒளிர்விக்கிற , அபிஷேகிக்கிற , உறுதிப்படுத்துகிற , இயேசு என்கிற வாழ்வு தருகிற வாழ்விக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
இயேசுவே உம்முடைய வெற்றி தருகிற பெயரை எனது மனதின் அமுக்கப்பட்ட உணர்வுகளுக்குள் , நிராசைகளுக்குள் , ஏமாற்றங்கள் , எதிர்பார்ப்புகளுக்குள் , சோர்வுகளுக்குள், ஏக்கங்களுக்குள் , தனிமைப்படுத்தப்பட்ட , புறக்கணிக்கப்பட்ட நிலைகள் மற்றும் உணர்வுகளுக்குள் குற்ற உணர்வுகள் , காயப்படுத்தப்பட்ட ,குற்றப்படுத்தப்பட்ட நிலைகளுக்குள் அவமானப்படுத்தப்பட்ட , புறந்தள்ளப்பட்ட உணர்வுகளுக்குள் , நம்பிக்கையற்ற நிலைகளுக்குள் , அனுப்பி செபிக்கிறேன் . இயேசு என்கிற விடுதலை அளிக்கிற பெயரை என் கோப உணர்வுகள் , எரிச்சல் உணர்வுகள் , வெறுப்பு சலிப்பு உணர்வுகள் , ஏற்றுக் கொள்ள முடியாத விட்டுக் கொடுக்க இயலாத நிலைகள் , மன்னிக்க முடியாத நிலைகள் , தெளிவற்ற குழப்பமான நிலைகள் , முடிவெடுக்க முடியாத நிலைகள் , இவற்றுக்குள் அனுப்பி செபிக்கிறேன் .
மனதின் எல்லா பரபரப்பான நினைவுகள் என்ன ஆகுமோ என்ற வீண் கவலைகள் , படபடப்பான நிலைகள் , தேவையில்லாத பேரார்வங்கள் , சந்தேகமான எதிர்மறையான நிலைகள் இவற்றுக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . என் மனதின் கற்பனைகள் , கனவுகள் , விடுபடமுடியாத பலவீனங்கள் , எல்லாவிதமான நன்மையான மற்றும் தீமையான நினைவுகளுக்குள்ளாகவும் இயேசு என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . எல்லாவிதமான பய உணர்வுகள் , நிர்பந்தப்படுத்தப்பட்ட நிலைகள் , கட்டாயப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்கள் , மனித வார்த்தைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் என் மீது திணிக்கப்பட்டிருக்கிற எல்லாவற்றின் மீதும் இந்த நேரத்தில் அன்பு செய்கிற விடுதலை கொடுக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
எல்லா வேதனையான நினைவுகள் , இழப்பின் உணர்வுகள் , இல்லாமை , இயலாமை உணர்வுகள் , நெருக்கப்பட்ட உணர்வுகள் எனது இயற்கையான இயல்பில்லாத சகல உணர்வுகள் மீதும் இயேசு என்கிற ஆறுதல் அளிக்கிற , பலப்படுத்துகிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என்னைக் குறித்து என் மனதில் இருக்கிற எல்லா எதிர்மறையான தீர்ப்புகள் , மனித வார்த்தைகள் , தீர்மானங்கள் , எதிர்பார்ப்புகள் , இவற்றுக்குள் மன்னிக்கிற, நேசிக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா
இயேசு என்கிற மேலான பெயரை அனைத்தையும் ஆளுகை செய்கிற பெயரை என் ஆன்மாவுக்குள் அனுப்பி செபிக்கிறேன் . என் ஆன்மாவின் அந்தரங்கங்களுக்குள் அதன் எல்லா அந்தரங்கங்களுக்குள் கட்டப்பட்ட உணர்வற்ற , உயிரற்ற , வறட்சியுற்ற நிலைகளுக்குள் இயேசு என்கிற உமது வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என் ஆன்மாவின் உலர்ந்து போன , ஆசீர்வாதமற்ற அழுகி நாற்றமெடுக்கிற எல்லா நிலைகளுக்குள்ளும் தெய்வமே உம்முடைய பிரசன்னத்தை உணர முடியாத , தக்க வைத்துக் கொள்ள முடியாதபடி , வெளிப்படுத்த முடியாதபடி என் ஆன்மாவைக் கட்டி இருக்கிற எல்லா பாவ பலவீன தீமைகளுக்குள் , என் உடலும் அதன் உணர்வு , என் மனமும் என் விருப்பங்களும் என் ஆன்மாவை அடிமைப்படுத்தி இருப்பதான எல்லா நிலைகளுக்குள்ளும் விடுதலை அளிக்கிற இயேசு என்கிற உம்முடைய அற்புத பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா !
என் வாழ்வின் எல்லா நிலைகளுக்குள்ளும், கடந்த காலங்கள் , நிகழ்காலங்கள் , எதிர்காலங்களுக்குள் ,இயேசு என்கிற உண்மையுள்ள உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் .என் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாய் இருக்க வேண்டியவைகள் மாறுபட்டு காணப்படுகிற நிலைகள் , எந்தவித நன்மைத்தனத்தையும் நிச்சயிக்கப்பட்ட நிலைகளைக் காண முடியாத நிலைகள் , தெய்வத்தின் திட்டங்கள் , வெளிப்படுத்தப்படாத, அறிந்து கொள்ள முடியாத கட்டப்பட்ட நிலைகள் , மறைக்கப்பட்ட , புரிந்து கொள்ள முடியாத நிலைகள் , இவைகளுக்குள் எல்லாம் அறிவூட்டுகிற, ஒளியூட்டுகிற ஆசீர்வதிக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
என் கடந்த கால வாழ்வின் கசப்புகள் , வேதனைகள் , தோல்விகள் , இழப்புகள் , அலைக்கழிக்கப்பட்ட நிலைகள் , தெய்வத்தைப் பற்றிய அறிவும் அபிஷேகமும் இல்லாததால் நான் இழந்து போன ஆசீர்வாதங்கள் , இவைகளுக்குள்ளாக இயேசு என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என் நிகழ்காலத்தின் எல்லாத் தேவைகளுக்குள்ளும் , ஆசைகளுக்குள்ளும் , திட்டங்களுக்குள்ளும் ,செயல்பாடுகளுக்குள்ளும் ,வாழ்வின் நிலைகளுக்குள்ளும் இயேசு என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா !
எனக்குள் இருக்கிற எல்லா பிரிவினைகளுக்குள்ளும் , பிரச்சனைகளுக்குள்ளும் , நானே அறிந்து கொள்ளமுடியாத , விடை காண முடியாத எல்லா கேள்விகளுக்குள்ளும் இயேசு என்கிற தெளிவு தரும் பெயரை அனுப்பி செபிக்கிறேன் . எனது அலட்சியங்கள் , உண்மையற்ற , பரிசுத்தமற்ற நிலைகள் , 'நான் ' என்கிற நிலைகள் , அங்கீகாரம் தேடுகிற நிலைகள் , முதன்மைப்படுத்துகிற நிலைகள் இவைகளுக்குள் எல்லாம் இயேசு என்கிற உமது மீட்பளிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன்
என்னுடைய அழைத்தலின் , ஊழியத்தின் திறமைகள் , ஆசீர்வாதங்களின் அடைக்கப்பட்ட குகைகளுக்குள் அவற்றுக்கு உயிரும் வாழ்வும் அளிக்கிற இயேசுவின் வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . கட்டவிழ்க்கிற, எழும்பிக் காலூன்றி நிற்கச் செய்கிற , எல்லா கூன்களையும் நிமிர்த்தி விடுகிற , இயேசு என்கிற பெயரை எனக்கென்று தெய்வம் தந்திருக்கிற எல்லா உறவுகளுக்குள்ளும் எல்லா ஆசீர்வாதங்களுக்குள்ளும் அனுப்பி செபிக்கிறேன் .இயேசு என்கிற பெயரின் மீது எனது விசுவாசத்தை பதியச் செய்கிறேன் அல்லேலூயா !
நான் இயேசு என்கிற பெயரை என்னால் முடியவே முடியாது என நினைக்கிற எனது நிறைவேறாத ஆசைகளுக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . என்னுடைய எல்லா பயங்களையும் , விசுவாசமாக மாற வேண்டிய அவைகளுக்குள்ளாக இயேசு என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . பரிசுத்த ஆவியின் அமைதியால் என்னை நிரப்பும்படி இயேசுவின் பெயரை எனக்குள்ளாகவும் என்னுடைய எல்லா பதற்றங்களுக்குள்ளாகவும் அனுப்பி செபிக்கிறேன் .எளிமையாய் என்னை மாற்ற இயேசுவின் பெயரை என் கோபத்துக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . கடவுள் பார்க்கிறார் என்ற பரிசுத்த உணர்வினால் என்னை நிரப்ப இயேசு என்கிற பெயரை என்னுடைய அலட்சிய மனப்பான்மைக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன்
என்னுடைய பொறுமையற்ற நிலையை விசுவாசம் , நம்பிக்கை, மன உறுதியால் நிரப்ப இயேசு என்கிற பெயரை எனக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . எனக்குள் இருக்கிற வெறுமையையும் அவருடைய பிரசன்னத்தை உணர முடியாமல் இருக்கிற நிலையையும் நீக்க இயேசு என்கிற பெயரை எனக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன். ஞானம் , விவேகம் , பகுத்தறியும் திறன் , அறிவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளுதலால் என்னை நிரப்ப இயேசு என்னும் பெயரை எனக்குள்ளாக அனுப்புகிறேன்.
என் மீதும் என்னுடைய உடல், ஆவி, மனம், ஆன்மா , வாழ்வு, எதிர்காலம் , அழைப்பு , பணிகள் , திறமைகள் , படிப்பு, புலன்கள் , எண்ணங்கள் , கற்பனைகள், பயணங்கள் , வேலைகள் , பொருளாதாரம் , வீடு, சொத்துக்கள், எனது குடும்பம் , நண்பர் மற்றும் உறவினர்கள் மீதும் இயேசு என்கிற பெயரை ஒரு முத்திரையாக வைக்கிறேன்.
இயேசுவின் பெயர் என்னை பரிசுத்தப்படுத்துவதாக !
இயேசுவின் பெயர் என்னை முழுமையாக்குவதாக ! அல்லேலூயா !
இயேசு என்கிற பெயரை எனது கவசமாகவும் , வாளாகவும் , காவலாகவும் , கோட்டையாகவும் எடுத்துக் கொள்கிறேன் . எனக்குத் தெரியாத , உணர முடியாத , புதைக்கப்பட்டதாக கருதப்படுகிற ஆசீர்வாதங்கள் மற்றும் என் வாழ்வின் பகுதிகள் மீதும் என் நினைவிலிருந்து மறைந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் என்னைக் கட்டுப்படுத்துகின்ற உணர்வுகள் , நிகழ்வுகள் மீதும் நல வாழ்வையும் ஒளியையும் நிரப்ப வேண்டி இயேசுவின் பெயரை அனுப்புகிறேன் .
அன்பு ,பாசம், பரிவு ,அங்கீகாரம் மற்றும் எனது எல்லா உறவுகள் மூலமாக பிசாசு எனக்கு வைக்கிற எல்லா கண்ணிகளில் இருந்தும் என்னை விடுவிக்க இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் . முக்கியமாக யாரெல்லாம் என்னைத் தனக்கென வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ , அல்லது யாரெல்லாம் பரிசுத்தமற்ற ஆசையோடு என்னை என்னை அணுகுகிறார்களோ, யாரெல்லாம் தன்னல நோக்கோடு என்னை நேசிக்கிறார்களோ , மேலும் யாரெல்லாம் உமது பரிசுத்த சித்தத்திற்கு எதிரான திட்டங்களை ஆலோசனைகளை எனக்காக வைத்திருக்கிறார்களோ இவர்களிடமிருந்து விடுவிக்க இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
எனக்கெதிராக என்னைக் கட்ட அனுப்பப்பட்ட எல்லா ஏவல் , பில்லி சூனிய , மந்திரவாதக் கட்டுக்கள் மற்றும் தீய அவைகளுக்குள் இயேசுவின் பரிசுத்த வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன். எனக்குள்ளாக இயேசுவின் பெயரை அனுப்பி எல்லா தீமைகளுக்கு எதிரான மிக வலிமையுள்ள பாதுகாப்பாக அதை எடுத்துக் கொள்கிறேன். நிலம் , நீர், காற்று , ஆகாயம் மற்றும் என்னைச் சுற்றியுள்ள வான மண்டலங்களுக்குள்ளாக இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் . இவற்றின் மூலமாக எனக்குள் எந்தத் தீமையும் நுழையாதபடி இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
இயேசுவின் பரிசுத்த பெயர் என்னுள் மகிமை அடைவதாக !
இயேசுவின் பரிசுத்த பெயரின் வெற்றியில் நான் ஒரு சாட்சியாக நிற்பேனாக ! ஆமென்
இயேசுவின் பெயரால் நான் அமைதி அடைகிறேன் .இயேசுவின் பெயரால் நான் புதுப்படைப்பாகிறேன் ! இயேசுவின் பெயருக்கு என்னை அடிமைப்படுத்தி ஒப்புக் கொடுக்கிறேன்.
ஆமென் அல்லேலூயா !
இரக்கமுள்ள இயேசுவே !
என் கண்களை உமது தூய இதயத்துக்குள்ளாக வைக்கிறேன்.
எனது கரங்களை உமது தூய கண்களுக்குள்ளாக வைக்கிறேன் .
என் தொண்டை வாய் , குரல் வளையை உமது தூய தலைக்குள்ளாக வைக்கிறேன் .
என் இதயத்தை உமது தூய வலது கரத்துக்குள்ளாக வைக்கிறேன்.
என் சுவாசத்தை உமது தூய திரு இரத்தத்துக்குள்ளாக வைக்கிறேன் .
ஆமென் ! அல்லேலூயா !
இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம்
இயேசுவே எங்களுக்காக கல்வாரியில் நீர் சிந்திய உம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினால் எங்கள் குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கழுவும் . எங்கள் வீடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களிலும் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வையும். எங்கள் வீடுகளின் தரைகளிலும் ,சுவர்களிலும் , கூரைகளிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளியும் . எங்கள் வீடுகளைச் சுற்றிலும் நிலங்களின் எல்லைகளைச் சுற்றிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளித்து வைத்து உமது காவல் தூதர்களை எங்களுக்குத் துணையாக நிறுத்தி வையும் .எங்களுக்கு எதிராகச் செய்யப்படும் எந்தஒரு காரியமாக இருந்தாலும் , மாய மந்திர சக்திகள் ,சாத்தானின் ஏவுதல்கள் , பில்லி சூனியக் கட்டுகள் மற்றும் ஆபத்துகள் , விபத்துகள் ,அவமானங்கள் , நோய்கள் , பிற தேவைகள் அனைத்திலும் எங்களைப் பாதுகாத்து வழி நடத்தும் . நாங்கள் செல்லுகின்ற வழிகளில் எல்லாம் சென்றடைகின்ற ஒவ்வொரு இடங்களில் எல்லாம் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வைத்து எங்களுக்கு முன்னும் பின்னும் வலமும் இடமும் உமது பிரசன்னத்தால் வழி நடத்தும். இதுவரை எங்களைப் பாதுகாத்து வந்த தேவன் இனிவரும் நாட்களிலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும்படி செபிக்கிறோம் ஆமென்
(இந்தச் செபங்கள் கையெழுத்துப் பிரதியாகக் கிடைத்தவை )
இயேசு என்கிற பரிசுத்த நாமமே!
வல்லமையுள்ள நாமமே! மகத்துவமுள்ள நாமமே !
விடுதலை கொடுக்கிற நாமமே! வாழ்விக்கிற நாமமே !
ஆசீர்வதிக்கிற நாமமே! அற்புதங்களைச் செய்கிற நாமமே!
ஒரே ஏக தெய்வத்தின் நாமமே!
உம்மை நான் ஆராதிக்கிறேன். விசுவசிக்கிறேன்.
ஏற்றுக்கொள்கிறேன். உம்மைநான் நேசிக்கிறேன்.
உம்மோடு என்னை முழுமையாக ஒன்றிக்கிறேன்.
உம்மை நம்புகிறேன் . மகிமைப்படுத்துகிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே என்னை ஆசீர்வதிக்கிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே நான் சுகம் பெற்றுக் பெற்றுக்கொள்கிறேன்.
இயேசுவின் நாமத்தினாலே நான் பலம் அடைகிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே நான் வெற்றி பெறுகிறேன்.
இயேசு என்கிற நாமமே! என்னை அபிஷேகியும் . என்னை உருமாற்றும் .
என்னை முழுமையாக்கும் .எனது எல்லா வெற்றிடங்களையும் நிரப்பும்.
இயேசு என்னும் நாமத்தின் பிரசன்னம் எனக்குள் இறங்குவதாக.
என்னை நிரப்புவதாக . ஒளிர்விப்பதாக. அபிஷேகம் செய்வதாக அல்லேலுயா
இயேசு என்னும் நாமமே ! நீரே என் வாழ்வு ! என் உயிர் மூச்சு!
என் ஆதாரம் நீரே! என் சமாதானம் .என் வளமை. என் எதிர்காலம்.
என்னை பாதுகாக்கும் கோட்டையும் அரணும் நீரே !கேடயமும் நீரே !
கவசமும் நீரே நான் ஊன்றி நிற்கும் பாறையும் என் கன்மலையும் நீரே!
என் வெற்றியும் மகிழ்வும் நீரே !என் ஆறுதலும் ஆதரவும் நீரே!
இயேசு என்னும் நாமமே! என்னை சூழ்ந்துகொள்ளும்.
என்னை நெருங்கி இரும். என்னை பற்றிப் பிடித்துக் கொள்ளும்.
என்னுள்ளிருந்து ஜீவநீருற்றுகள் புறப்படச் செய்யும். உமது உயிர் மூச்சை எனக்குள் அனுப்பும் அல்லேலூயா
(சிறிது நேரம் துதிக்கவும்)
இயேசுவின் பெயரால் செபம்
இயேசு என்கிற மேலான வல்லமையான பெயரை என் உடலுக்குள் அனுப்பி செபிக்கிறேன். சுகப்படுத்துகிற ஆண்டவர் இயேசுவின் பெயரை என் மூளைக்குள்ளும் அதன் இயக்கங்களுக்குள்ளும், அதனால் கட்டுப்படுத்தப்படுகிற என் உடலின் எல்லா இயக்கங்களுக்குள்ளும் நான் அனுப்பி செபிக்கிறேன். இயேசு என்கிற மகத்துவமுள்ள பெயரை என் உடலில்
உள்ள எல்லா எலும்புகளுக்குள், முதுகு பகுதிகளுக்குள் எலும்பு மூட்டுக்கள். மூட்டுக் கிண்ணங்கள். தசைகள், தசை நார்கள் தோல், நரம்பு மண்டலங்களுக்குள் அனுப்பி செபிக்கிறேன் . என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும் , நுரையீரலின் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும் (சுருங்கி விரிதலுக்குள்) இயேசு என்கிற அபிஷேகிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு இரத்தத் துளிகளுக்குள்ளும் , நான் சுவாசிக்கும் காற்றின் அணுக்களுக்குள்ளும் இயேசு என்கிற உமது வல்லமையான பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா
நான் உண்ணுகிற உணவு , குடிக்கிற நீர் மற்றும் பானங்கள் , என் உடைகள் , நான் உடுத்தியிருக்கிற ஆடை , நான் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களுக்குள்ளும்இயேசு என்கிற வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . நான் பார்க்கிற ஒவ்வொரு காட்சிக்குள்ளும் , பொருட்களுக்குள்ளும் , நபர்களுக்குள்ளும் , என் கண்ணின் பார்வைகளுக்குள்ளும் , நான் கேட்கிற ஒலிகள் , இசை வார்த்தைகளுக்குள் , என் உணர்வுகளுக்குள் , சிந்தனைகளுக்குள் , தொடு உணர்வுகளுக்குள் , என் வாயின் வார்த்தைகளுக்குள் இயேசு என்கிற உம்முடைய அபிஷேகிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . அல்லேலூயா !
இயேசு என்கிற மகா பரிசுத்த பெயரை என் மனதுக்குள் அனுப்பி செபிக்கிறேன் . என் மனதின் ஆழ் நிலைகளுக்குள் , அதன் சுகம் பெறாத காயங்களுக்குள் , விடுவிக்கப்படாத கட்டுகளுக்குள் , ஒருமனப்படமுடியாத அலைக்கழிப்புகளுக்குள் , நிலை நிற்க முடியாத தடுமாற்றங்களுக்குள் , உம்மோடு ஒன்றிக்க முடியாத நிலைகளுக்குள் , உம்மை அறிந்து கொள்ள இயலாத எல்லா அந்தகாரங்களுக்குள்ளும் , விடுவிக்கிற , ஒளிர்விக்கிற , அபிஷேகிக்கிற , உறுதிப்படுத்துகிற , இயேசு என்கிற வாழ்வு தருகிற வாழ்விக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
இயேசுவே உம்முடைய வெற்றி தருகிற பெயரை எனது மனதின் அமுக்கப்பட்ட உணர்வுகளுக்குள் , நிராசைகளுக்குள் , ஏமாற்றங்கள் , எதிர்பார்ப்புகளுக்குள் , சோர்வுகளுக்குள், ஏக்கங்களுக்குள் , தனிமைப்படுத்தப்பட்ட , புறக்கணிக்கப்பட்ட நிலைகள் மற்றும் உணர்வுகளுக்குள் குற்ற உணர்வுகள் , காயப்படுத்தப்பட்ட ,குற்றப்படுத்தப்பட்ட நிலைகளுக்குள் அவமானப்படுத்தப்பட்ட , புறந்தள்ளப்பட்ட உணர்வுகளுக்குள் , நம்பிக்கையற்ற நிலைகளுக்குள் , அனுப்பி செபிக்கிறேன் . இயேசு என்கிற விடுதலை அளிக்கிற பெயரை என் கோப உணர்வுகள் , எரிச்சல் உணர்வுகள் , வெறுப்பு சலிப்பு உணர்வுகள் , ஏற்றுக் கொள்ள முடியாத விட்டுக் கொடுக்க இயலாத நிலைகள் , மன்னிக்க முடியாத நிலைகள் , தெளிவற்ற குழப்பமான நிலைகள் , முடிவெடுக்க முடியாத நிலைகள் , இவற்றுக்குள் அனுப்பி செபிக்கிறேன் .
மனதின் எல்லா பரபரப்பான நினைவுகள் என்ன ஆகுமோ என்ற வீண் கவலைகள் , படபடப்பான நிலைகள் , தேவையில்லாத பேரார்வங்கள் , சந்தேகமான எதிர்மறையான நிலைகள் இவற்றுக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . என் மனதின் கற்பனைகள் , கனவுகள் , விடுபடமுடியாத பலவீனங்கள் , எல்லாவிதமான நன்மையான மற்றும் தீமையான நினைவுகளுக்குள்ளாகவும் இயேசு என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . எல்லாவிதமான பய உணர்வுகள் , நிர்பந்தப்படுத்தப்பட்ட நிலைகள் , கட்டாயப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்கள் , மனித வார்த்தைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் என் மீது திணிக்கப்பட்டிருக்கிற எல்லாவற்றின் மீதும் இந்த நேரத்தில் அன்பு செய்கிற விடுதலை கொடுக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
எல்லா வேதனையான நினைவுகள் , இழப்பின் உணர்வுகள் , இல்லாமை , இயலாமை உணர்வுகள் , நெருக்கப்பட்ட உணர்வுகள் எனது இயற்கையான இயல்பில்லாத சகல உணர்வுகள் மீதும் இயேசு என்கிற ஆறுதல் அளிக்கிற , பலப்படுத்துகிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என்னைக் குறித்து என் மனதில் இருக்கிற எல்லா எதிர்மறையான தீர்ப்புகள் , மனித வார்த்தைகள் , தீர்மானங்கள் , எதிர்பார்ப்புகள் , இவற்றுக்குள் மன்னிக்கிற, நேசிக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா
இயேசு என்கிற மேலான பெயரை அனைத்தையும் ஆளுகை செய்கிற பெயரை என் ஆன்மாவுக்குள் அனுப்பி செபிக்கிறேன் . என் ஆன்மாவின் அந்தரங்கங்களுக்குள் அதன் எல்லா அந்தரங்கங்களுக்குள் கட்டப்பட்ட உணர்வற்ற , உயிரற்ற , வறட்சியுற்ற நிலைகளுக்குள் இயேசு என்கிற உமது வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என் ஆன்மாவின் உலர்ந்து போன , ஆசீர்வாதமற்ற அழுகி நாற்றமெடுக்கிற எல்லா நிலைகளுக்குள்ளும் தெய்வமே உம்முடைய பிரசன்னத்தை உணர முடியாத , தக்க வைத்துக் கொள்ள முடியாதபடி , வெளிப்படுத்த முடியாதபடி என் ஆன்மாவைக் கட்டி இருக்கிற எல்லா பாவ பலவீன தீமைகளுக்குள் , என் உடலும் அதன் உணர்வு , என் மனமும் என் விருப்பங்களும் என் ஆன்மாவை அடிமைப்படுத்தி இருப்பதான எல்லா நிலைகளுக்குள்ளும் விடுதலை அளிக்கிற இயேசு என்கிற உம்முடைய அற்புத பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா !
என் வாழ்வின் எல்லா நிலைகளுக்குள்ளும், கடந்த காலங்கள் , நிகழ்காலங்கள் , எதிர்காலங்களுக்குள் ,இயேசு என்கிற உண்மையுள்ள உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் .என் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாய் இருக்க வேண்டியவைகள் மாறுபட்டு காணப்படுகிற நிலைகள் , எந்தவித நன்மைத்தனத்தையும் நிச்சயிக்கப்பட்ட நிலைகளைக் காண முடியாத நிலைகள் , தெய்வத்தின் திட்டங்கள் , வெளிப்படுத்தப்படாத, அறிந்து கொள்ள முடியாத கட்டப்பட்ட நிலைகள் , மறைக்கப்பட்ட , புரிந்து கொள்ள முடியாத நிலைகள் , இவைகளுக்குள் எல்லாம் அறிவூட்டுகிற, ஒளியூட்டுகிற ஆசீர்வதிக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
என் கடந்த கால வாழ்வின் கசப்புகள் , வேதனைகள் , தோல்விகள் , இழப்புகள் , அலைக்கழிக்கப்பட்ட நிலைகள் , தெய்வத்தைப் பற்றிய அறிவும் அபிஷேகமும் இல்லாததால் நான் இழந்து போன ஆசீர்வாதங்கள் , இவைகளுக்குள்ளாக இயேசு என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என் நிகழ்காலத்தின் எல்லாத் தேவைகளுக்குள்ளும் , ஆசைகளுக்குள்ளும் , திட்டங்களுக்குள்ளும் ,செயல்பாடுகளுக்குள்ளும் ,வாழ்வின் நிலைகளுக்குள்ளும் இயேசு என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா !
எனக்குள் இருக்கிற எல்லா பிரிவினைகளுக்குள்ளும் , பிரச்சனைகளுக்குள்ளும் , நானே அறிந்து கொள்ளமுடியாத , விடை காண முடியாத எல்லா கேள்விகளுக்குள்ளும் இயேசு என்கிற தெளிவு தரும் பெயரை அனுப்பி செபிக்கிறேன் . எனது அலட்சியங்கள் , உண்மையற்ற , பரிசுத்தமற்ற நிலைகள் , 'நான் ' என்கிற நிலைகள் , அங்கீகாரம் தேடுகிற நிலைகள் , முதன்மைப்படுத்துகிற நிலைகள் இவைகளுக்குள் எல்லாம் இயேசு என்கிற உமது மீட்பளிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன்
என்னுடைய அழைத்தலின் , ஊழியத்தின் திறமைகள் , ஆசீர்வாதங்களின் அடைக்கப்பட்ட குகைகளுக்குள் அவற்றுக்கு உயிரும் வாழ்வும் அளிக்கிற இயேசுவின் வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . கட்டவிழ்க்கிற, எழும்பிக் காலூன்றி நிற்கச் செய்கிற , எல்லா கூன்களையும் நிமிர்த்தி விடுகிற , இயேசு என்கிற பெயரை எனக்கென்று தெய்வம் தந்திருக்கிற எல்லா உறவுகளுக்குள்ளும் எல்லா ஆசீர்வாதங்களுக்குள்ளும் அனுப்பி செபிக்கிறேன் .இயேசு என்கிற பெயரின் மீது எனது விசுவாசத்தை பதியச் செய்கிறேன் அல்லேலூயா !
நான் இயேசு என்கிற பெயரை என்னால் முடியவே முடியாது என நினைக்கிற எனது நிறைவேறாத ஆசைகளுக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . என்னுடைய எல்லா பயங்களையும் , விசுவாசமாக மாற வேண்டிய அவைகளுக்குள்ளாக இயேசு என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . பரிசுத்த ஆவியின் அமைதியால் என்னை நிரப்பும்படி இயேசுவின் பெயரை எனக்குள்ளாகவும் என்னுடைய எல்லா பதற்றங்களுக்குள்ளாகவும் அனுப்பி செபிக்கிறேன் .எளிமையாய் என்னை மாற்ற இயேசுவின் பெயரை என் கோபத்துக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . கடவுள் பார்க்கிறார் என்ற பரிசுத்த உணர்வினால் என்னை நிரப்ப இயேசு என்கிற பெயரை என்னுடைய அலட்சிய மனப்பான்மைக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன்
என்னுடைய பொறுமையற்ற நிலையை விசுவாசம் , நம்பிக்கை, மன உறுதியால் நிரப்ப இயேசு என்கிற பெயரை எனக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . எனக்குள் இருக்கிற வெறுமையையும் அவருடைய பிரசன்னத்தை உணர முடியாமல் இருக்கிற நிலையையும் நீக்க இயேசு என்கிற பெயரை எனக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன். ஞானம் , விவேகம் , பகுத்தறியும் திறன் , அறிவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளுதலால் என்னை நிரப்ப இயேசு என்னும் பெயரை எனக்குள்ளாக அனுப்புகிறேன்.
என் மீதும் என்னுடைய உடல், ஆவி, மனம், ஆன்மா , வாழ்வு, எதிர்காலம் , அழைப்பு , பணிகள் , திறமைகள் , படிப்பு, புலன்கள் , எண்ணங்கள் , கற்பனைகள், பயணங்கள் , வேலைகள் , பொருளாதாரம் , வீடு, சொத்துக்கள், எனது குடும்பம் , நண்பர் மற்றும் உறவினர்கள் மீதும் இயேசு என்கிற பெயரை ஒரு முத்திரையாக வைக்கிறேன்.
இயேசுவின் பெயர் என்னை பரிசுத்தப்படுத்துவதாக !
இயேசுவின் பெயர் என்னை முழுமையாக்குவதாக ! அல்லேலூயா !
இயேசு என்கிற பெயரை எனது கவசமாகவும் , வாளாகவும் , காவலாகவும் , கோட்டையாகவும் எடுத்துக் கொள்கிறேன் . எனக்குத் தெரியாத , உணர முடியாத , புதைக்கப்பட்டதாக கருதப்படுகிற ஆசீர்வாதங்கள் மற்றும் என் வாழ்வின் பகுதிகள் மீதும் என் நினைவிலிருந்து மறைந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் என்னைக் கட்டுப்படுத்துகின்ற உணர்வுகள் , நிகழ்வுகள் மீதும் நல வாழ்வையும் ஒளியையும் நிரப்ப வேண்டி இயேசுவின் பெயரை அனுப்புகிறேன் .
அன்பு ,பாசம், பரிவு ,அங்கீகாரம் மற்றும் எனது எல்லா உறவுகள் மூலமாக பிசாசு எனக்கு வைக்கிற எல்லா கண்ணிகளில் இருந்தும் என்னை விடுவிக்க இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் . முக்கியமாக யாரெல்லாம் என்னைத் தனக்கென வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ , அல்லது யாரெல்லாம் பரிசுத்தமற்ற ஆசையோடு என்னை என்னை அணுகுகிறார்களோ, யாரெல்லாம் தன்னல நோக்கோடு என்னை நேசிக்கிறார்களோ , மேலும் யாரெல்லாம் உமது பரிசுத்த சித்தத்திற்கு எதிரான திட்டங்களை ஆலோசனைகளை எனக்காக வைத்திருக்கிறார்களோ இவர்களிடமிருந்து விடுவிக்க இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
எனக்கெதிராக என்னைக் கட்ட அனுப்பப்பட்ட எல்லா ஏவல் , பில்லி சூனிய , மந்திரவாதக் கட்டுக்கள் மற்றும் தீய அவைகளுக்குள் இயேசுவின் பரிசுத்த வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன். எனக்குள்ளாக இயேசுவின் பெயரை அனுப்பி எல்லா தீமைகளுக்கு எதிரான மிக வலிமையுள்ள பாதுகாப்பாக அதை எடுத்துக் கொள்கிறேன். நிலம் , நீர், காற்று , ஆகாயம் மற்றும் என்னைச் சுற்றியுள்ள வான மண்டலங்களுக்குள்ளாக இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் . இவற்றின் மூலமாக எனக்குள் எந்தத் தீமையும் நுழையாதபடி இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
இயேசுவின் பரிசுத்த பெயர் என்னுள் மகிமை அடைவதாக !
இயேசுவின் பரிசுத்த பெயரின் வெற்றியில் நான் ஒரு சாட்சியாக நிற்பேனாக ! ஆமென்
இயேசுவின் பெயரால் நான் அமைதி அடைகிறேன் .இயேசுவின் பெயரால் நான் புதுப்படைப்பாகிறேன் ! இயேசுவின் பெயருக்கு என்னை அடிமைப்படுத்தி ஒப்புக் கொடுக்கிறேன்.
ஆமென் அல்லேலூயா !
இரக்கமுள்ள இயேசுவே !
என் கண்களை உமது தூய இதயத்துக்குள்ளாக வைக்கிறேன்.
எனது கரங்களை உமது தூய கண்களுக்குள்ளாக வைக்கிறேன் .
என் தொண்டை வாய் , குரல் வளையை உமது தூய தலைக்குள்ளாக வைக்கிறேன் .
என் இதயத்தை உமது தூய வலது கரத்துக்குள்ளாக வைக்கிறேன்.
என் சுவாசத்தை உமது தூய திரு இரத்தத்துக்குள்ளாக வைக்கிறேன் .
ஆமென் ! அல்லேலூயா !
இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம்
இயேசுவே எங்களுக்காக கல்வாரியில் நீர் சிந்திய உம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினால் எங்கள் குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கழுவும் . எங்கள் வீடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களிலும் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வையும். எங்கள் வீடுகளின் தரைகளிலும் ,சுவர்களிலும் , கூரைகளிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளியும் . எங்கள் வீடுகளைச் சுற்றிலும் நிலங்களின் எல்லைகளைச் சுற்றிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளித்து வைத்து உமது காவல் தூதர்களை எங்களுக்குத் துணையாக நிறுத்தி வையும் .எங்களுக்கு எதிராகச் செய்யப்படும் எந்தஒரு காரியமாக இருந்தாலும் , மாய மந்திர சக்திகள் ,சாத்தானின் ஏவுதல்கள் , பில்லி சூனியக் கட்டுகள் மற்றும் ஆபத்துகள் , விபத்துகள் ,அவமானங்கள் , நோய்கள் , பிற தேவைகள் அனைத்திலும் எங்களைப் பாதுகாத்து வழி நடத்தும் . நாங்கள் செல்லுகின்ற வழிகளில் எல்லாம் சென்றடைகின்ற ஒவ்வொரு இடங்களில் எல்லாம் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வைத்து எங்களுக்கு முன்னும் பின்னும் வலமும் இடமும் உமது பிரசன்னத்தால் வழி நடத்தும். இதுவரை எங்களைப் பாதுகாத்து வந்த தேவன் இனிவரும் நாட்களிலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும்படி செபிக்கிறோம் ஆமென்