- பொது ஜெபங்கள்
- பொது ஜெபங்கள் 1
பத்துக் கட்டளைகள்
இறைவன் நமக்கு அருளிச் செய்த கட்டளைகள் பத்து
1. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே . நம்மைத் தவிர வேறு சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.
2. சர்வேசுரனுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்பாயாக
3. சர்வேசுரனுடைய திரு நாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக
5.கொலை செய்யாதிருப்பாயாக
6. மோக பாவம் செய்யாதிருப்பாயாக
7. களவு செய்யாதிருப்பாயாக
8. பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக
இந்த பத்து கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்
1. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசிப்பது
2. தன்னைத்தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது
1. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே . நம்மைத் தவிர வேறு சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.
2. சர்வேசுரனுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்பாயாக
3. சர்வேசுரனுடைய திரு நாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக
5.கொலை செய்யாதிருப்பாயாக
6. மோக பாவம் செய்யாதிருப்பாயாக
7. களவு செய்யாதிருப்பாயாக
8. பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக
இந்த பத்து கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்
1. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசிப்பது
2. தன்னைத்தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது
திருச்சபையின் ஒழுங்கு முறைகள் ஆறு
1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன்திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது
2. வருடத்திற்கு இரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது
3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்ளுகிறது
4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும் ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது
5. விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவின் முறையாரோடு கல்யாணம் செய்யாதிருக்கிறது
6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது
2. வருடத்திற்கு இரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது
3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்ளுகிறது
4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும் ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது
5. விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவின் முறையாரோடு கல்யாணம் செய்யாதிருக்கிறது
6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது
உத்தம மனஸ்தாப ஜெபம்
சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையையும் கிருபையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன் . இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்பேர்ப்பட்ட பாவங்களைச் செய்வதில்லைஎன்று உறுதியான மனதுடனே பிரதிக்னை செய்கிறேன் . மேலும் எனக்குப் பலன் போதாமையால் ஏசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்ப்ரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழு மனதோடு நம்பி இருக்கிறேன். திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் ஆமென்