ஆபத்தான வேளையில் அன்னையை நோக்கி ஜெபம்
நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே, உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல், புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் , விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்பள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.
கிருபை தயாபரத்துச் செபம்
கிருபை தயாபரத்திற்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க!
எங்கள் சீவியமே, எங்கள் மதுரமே, எங்கள் தஞ்சமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம்.
இந்த கண்ணீர்க் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகின்றோம்.
ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உமது தயாபரமுள்ள திரு இரக்கக் கண்களை
எங்கள் பேரில் திருப்பியருளும். இதுவன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு
உமது திருவயிற்றின் கனியான இயேசு நாதருடைய
பிரத்தியச்சமான தரிசனத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தந்தருளும்.
கிருபாகரியே !தயாபரியே !பேரின்பரசமுள்ள கன்னிமாமரியே !சர்வேசுரனுடைய பரிசுத்தமாதாவே! இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு
நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக. சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எங்கள் சீவியமே, எங்கள் மதுரமே, எங்கள் தஞ்சமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம்.
இந்த கண்ணீர்க் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகின்றோம்.
ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உமது தயாபரமுள்ள திரு இரக்கக் கண்களை
எங்கள் பேரில் திருப்பியருளும். இதுவன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு
உமது திருவயிற்றின் கனியான இயேசு நாதருடைய
பிரத்தியச்சமான தரிசனத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தந்தருளும்.
கிருபாகரியே !தயாபரியே !பேரின்பரசமுள்ள கன்னிமாமரியே !சர்வேசுரனுடைய பரிசுத்தமாதாவே! இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு
நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக. சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பெர்னதெத்தம்மாளின் ஜெபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே! இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம்.
உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடையமன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட
ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கவில்லை
என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியாக கன்னிகையே
தயவுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடையதிருப்பாதத்தை அண்டிவருகின்றோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கின்ற நாங்கள் உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு
உமதுசமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே
எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத்தந்தருளும் தாயே ஆமென்.
உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடையமன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட
ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கவில்லை
என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியாக கன்னிகையே
தயவுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடையதிருப்பாதத்தை அண்டிவருகின்றோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கின்ற நாங்கள் உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு
உமதுசமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே
எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத்தந்தருளும் தாயே ஆமென்.
மூவேளைச்செபம்
ஆண்டவருடைய தூதர் மரியாவுக்கு தூதுரைத்தார்.
அவள் தூய ஆவியினால் கருத்தரித்தாள் (அருள் நிறைந்த மரியே)
இதோ ஆண்டவருடைய அடிமை
உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் (அருள் நிறைந்த மரியே)
வார்த்தை மனுவுருவானார்
எங்களிடையே குடிகொண்டார். (அருள் நிறைந்த மரியே)
இயேசுக்கிறிஸ்து நாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும் படியாக.
இறைவனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
சருவேசுரா சுவாமி! உமது திருக்குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து மனிதன் ஆனதைத் திருத்தூதர் சொன்னதினாலே
அதை அறிந்திருக்கின்ற நாங்கள்அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மகிமையை
அடையத்தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்றுதேவரீரை மன்றாடுகின்றோம்.
இந்த மன்றாட்டை அதே இயேசுக்கிறிஸ்து நாதர் மூலமாக ஏற்றுத்தந்தருளும் ஆமென்.
அவள் தூய ஆவியினால் கருத்தரித்தாள் (அருள் நிறைந்த மரியே)
இதோ ஆண்டவருடைய அடிமை
உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் (அருள் நிறைந்த மரியே)
வார்த்தை மனுவுருவானார்
எங்களிடையே குடிகொண்டார். (அருள் நிறைந்த மரியே)
இயேசுக்கிறிஸ்து நாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும் படியாக.
இறைவனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
சருவேசுரா சுவாமி! உமது திருக்குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து மனிதன் ஆனதைத் திருத்தூதர் சொன்னதினாலே
அதை அறிந்திருக்கின்ற நாங்கள்அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மகிமையை
அடையத்தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்றுதேவரீரை மன்றாடுகின்றோம்.
இந்த மன்றாட்டை அதே இயேசுக்கிறிஸ்து நாதர் மூலமாக ஏற்றுத்தந்தருளும் ஆமென்.
பாஸ்கா காலத்தில் மூவேளைச்செபம்
விண்ணக அரசியே மனம் களிகூரும் - அல்லேலூயா!
ஏனெனில் இறைவனை கருத்தாங்கப் பேறுபெற்றீர் - அல்லேலூயா
கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர் - அல்லேலூயா
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். . அல்லேலூயா
செபிப்போமாக
இறைவா! உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பினால்
உலகம் களிகூரத் திருவுளமானீரே அவருடையதிருத்தாயாகிய புனித கன்னிமரியாளின்
துணையால் நாங்கள் என்றும் நிலையான பேரின்ப வாழ்வைப் பெற அருள் புரிய வேண்டுமென்று
எங்கள்ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
ஏனெனில் இறைவனை கருத்தாங்கப் பேறுபெற்றீர் - அல்லேலூயா
கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர் - அல்லேலூயா
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். . அல்லேலூயா
செபிப்போமாக
இறைவா! உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பினால்
உலகம் களிகூரத் திருவுளமானீரே அவருடையதிருத்தாயாகிய புனித கன்னிமரியாளின்
துணையால் நாங்கள் என்றும் நிலையான பேரின்ப வாழ்வைப் பெற அருள் புரிய வேண்டுமென்று
எங்கள்ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
மாதாவிடம் அன்றாட ஜெபம்
வானதூதர்களுடைய அரசியே ! மனிதர்களுடைய சரணமே !அனைத்துலகின் நாயகியே !
நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் .
எப்படியாகிலும் எங்களை மீட்க வேண்டும் அன்னையே!
உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும்.
குறிப்பாக நாங்கள் சாகும்போது பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளிப்போட்டு ,
உம்முடைய திருமைந்தன்இயேசுவிடம் நாங்கள் வந்து சேருமட்டும் துணையாய் இரும் .
இதற்காக உம்முடைய திருவடியில் விழுந்து உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம் .
இதை அடியோர்களுக்கு இரக்கத்தொடே அளித்தருளும் தாயே ஆமென்
நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் .
எப்படியாகிலும் எங்களை மீட்க வேண்டும் அன்னையே!
உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும்.
குறிப்பாக நாங்கள் சாகும்போது பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளிப்போட்டு ,
உம்முடைய திருமைந்தன்இயேசுவிடம் நாங்கள் வந்து சேருமட்டும் துணையாய் இரும் .
இதற்காக உம்முடைய திருவடியில் விழுந்து உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம் .
இதை அடியோர்களுக்கு இரக்கத்தொடே அளித்தருளும் தாயே ஆமென்
சம்மனசுக்களின் இராக்கினியான புனித தேவமாதா படிப்பித்த ஜெபம்
ஓ! பிரதாபம் நிறைந்த மோட்ச இராக்கினியே ! சம்மனசுக்களின் அதி உன்னத ஆண்டவளே ! ஆதிகால முதல் பசாசின் தலையை நசுக்கும்படியான வல்லமையும் அலுவலும் இறைவன் உமக்குத் தந்தருளினாரே ! தேவரீர் தயவு செய்து உமது இராணுவச் சேனைகளை இப்பூமியில் அனுப்பி , அவர்கள் உமது வன்மையின் பலத்தாலும் அதிகார ஏவலாலும் , பசாசுகளை எங்கும் எதிர்த்துத் தாக்கி , பின் தொடர்ந்து துரத்தி , அவர்களுடைய ஆணவ கர்வத்தை அடக்கி நரக பாதாளத்துக்குத் திரும்பவும் அவைகளை விரட்டி ஓட்டும்படி கிருபை செய்வீராக . பரிசுத்த சம்மனசுக்களே ! அதி தூதர்களே ! எங்களைக் காப்பாற்றி ஆதரிப்பீராக ஆமென்
தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதின் பேரில் ஜெபம்
எல்லாம் வல்லவரும் நித்தியருமாய் இருக்கிற இறைவா ! உம்முடைய திருமகனாகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய மனிதப் பிறப்பைப் பரிசுத்த கன்னி மரியாளுக்கு கபிரியேல் சம்மனசைக் கொண்டு அறிவிக்க திருவுளமானதை அறிந்திருக்கிற அடியோர்கள் , அவருடைய சிலுவையினாலும் ,அத்திருக்கன்னிகையின் இரக்கமுள்ள மன்றாட்டினாலும் , உமது திருமகனுடைய உத்தான மகிமையில் ஒன்று சேரும்படிக்கு எங்கள் இதயங்களில் உமது இரக்கத்தைப் பொழிந்தருளும் . இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்
மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு புகழ்மாலை
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!
பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!
புனித மரியாயின் பரிசுத்த இருதயமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சர்வேசுரனுடைய திரு இருதயத்துக்கு உகந்த திரு இருதயமே
இயேசுவின் திரு இருதயத்தோடு ஒன்றான திரு இருதயமே
பரிசுத்த ஆவிக்குப் பிரிய சங்கீதமாகிய இருதயமே
புனித திருத்துவத்தின் தேவாலயமான திரு இருதயமே
மாம்சமாய் அவதரித்த தெய்வீக வார்த்தைக்குப் பிரிய இருப்பிடமான திரு இருதயமே
பிரியத்தத்தத்தினாலே பூரணமான திரு இருதயமே
சகல இருதயங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்ட திரு இருதயமே
மகிமைப் பிரதாபச் சிம்மாசனமாகிற திரு இருதயமே
அத்தியந்த தாழ்ச்சியுள்ள திரு இருதயமே திரு இருதயமே
தேவ சிநேகத்தின் பலியான திரு இருதயமே
இயேசுக்கிறிஸ்து நாதரோடு சிலுவையில் அறையுண்ட திரு இருதயமே
கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலாகிய திரு இருதயமே
பாவிகளுக்கு அடைக்கலமான திரு இருதயமே
மரிக்கிரவர்களுக்கு நம்பிக்கையாகிய திரு இருதயமே
இரக்கத்திற்கு இருப்பிடமான திரு இருதயமே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
இயேசுக்கிறிஸ்து நாதாருடைய வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
சர்வேசுரனுடைய அற்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உடைத்தான மாசற்ற மரியாயே
எங்கள் இருதயம் இயேசுவின் திரு இருதயத்தைப் போலாகும்படி செய்தருளும்
செபிப்போமாக
இரக்கம் நிறைந்த சர்வேசுரா ! புனித கன்னி மரியாயின் மாசற்ற இருதயம் பாவிகளுக்கு இரட்சணியமும் , நிர்பாக்கியருக்கு அடைக்கலமுமாய் இருக்கத்தக்கதாக அத்திரு இருதயத்தை சிநேகத்தினாலும் , இரக்கத்தினாலும், உமது திருக்குமாரன் இயேசு நாதருடைய திரு இருதயத்துக்கு மிகவும் ஒத்ததாயிருக்கச் செய்தருளினீரே! இந்த மிகுந்த மதுரமும் அன்பும் பொருந்திய இருதயத்தைக் கொண்டாடுகிற நாங்கள் அந்த பரிசுத்த கன்னிமரியாளின் பேறு பலன்களாலும் சலுகையாலும் இயேசுவின் திரு இருதயத்துக்கு உகந்தவர்களாய்க் காணும்படி அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி ஆமென்
ஓ! பிரதாபம் நிறைந்த மோட்ச இராக்கினியே ! சம்மனசுக்களின் அதி உன்னத ஆண்டவளே ! ஆதிகால முதல் பசாசின் தலையை நசுக்கும்படியான வல்லமையும் அலுவலும் இறைவன் உமக்குத் தந்தருளினாரே ! தேவரீர் தயவு செய்து உமது இராணுவச் சேனைகளை இப்பூமியில் அனுப்பி , அவர்கள் உமது வன்மையின் பலத்தாலும் அதிகார ஏவலாலும் , பசாசுகளை எங்கும் எதிர்த்துத் தாக்கி , பின் தொடர்ந்து துரத்தி , அவர்களுடைய ஆணவ கர்வத்தை அடக்கி நரக பாதாளத்துக்குத் திரும்பவும் அவைகளை விரட்டி ஓட்டும்படி கிருபை செய்வீராக . பரிசுத்த சம்மனசுக்களே ! அதி தூதர்களே ! எங்களைக் காப்பாற்றி ஆதரிப்பீராக ஆமென்
தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதின் பேரில் ஜெபம்
எல்லாம் வல்லவரும் நித்தியருமாய் இருக்கிற இறைவா ! உம்முடைய திருமகனாகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய மனிதப் பிறப்பைப் பரிசுத்த கன்னி மரியாளுக்கு கபிரியேல் சம்மனசைக் கொண்டு அறிவிக்க திருவுளமானதை அறிந்திருக்கிற அடியோர்கள் , அவருடைய சிலுவையினாலும் ,அத்திருக்கன்னிகையின் இரக்கமுள்ள மன்றாட்டினாலும் , உமது திருமகனுடைய உத்தான மகிமையில் ஒன்று சேரும்படிக்கு எங்கள் இதயங்களில் உமது இரக்கத்தைப் பொழிந்தருளும் . இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்
மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு புகழ்மாலை
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!
பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!
புனித மரியாயின் பரிசுத்த இருதயமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சர்வேசுரனுடைய திரு இருதயத்துக்கு உகந்த திரு இருதயமே
இயேசுவின் திரு இருதயத்தோடு ஒன்றான திரு இருதயமே
பரிசுத்த ஆவிக்குப் பிரிய சங்கீதமாகிய இருதயமே
புனித திருத்துவத்தின் தேவாலயமான திரு இருதயமே
மாம்சமாய் அவதரித்த தெய்வீக வார்த்தைக்குப் பிரிய இருப்பிடமான திரு இருதயமே
பிரியத்தத்தத்தினாலே பூரணமான திரு இருதயமே
சகல இருதயங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்ட திரு இருதயமே
மகிமைப் பிரதாபச் சிம்மாசனமாகிற திரு இருதயமே
அத்தியந்த தாழ்ச்சியுள்ள திரு இருதயமே திரு இருதயமே
தேவ சிநேகத்தின் பலியான திரு இருதயமே
இயேசுக்கிறிஸ்து நாதரோடு சிலுவையில் அறையுண்ட திரு இருதயமே
கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலாகிய திரு இருதயமே
பாவிகளுக்கு அடைக்கலமான திரு இருதயமே
மரிக்கிரவர்களுக்கு நம்பிக்கையாகிய திரு இருதயமே
இரக்கத்திற்கு இருப்பிடமான திரு இருதயமே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
இயேசுக்கிறிஸ்து நாதாருடைய வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
சர்வேசுரனுடைய அற்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உடைத்தான மாசற்ற மரியாயே
எங்கள் இருதயம் இயேசுவின் திரு இருதயத்தைப் போலாகும்படி செய்தருளும்
செபிப்போமாக
இரக்கம் நிறைந்த சர்வேசுரா ! புனித கன்னி மரியாயின் மாசற்ற இருதயம் பாவிகளுக்கு இரட்சணியமும் , நிர்பாக்கியருக்கு அடைக்கலமுமாய் இருக்கத்தக்கதாக அத்திரு இருதயத்தை சிநேகத்தினாலும் , இரக்கத்தினாலும், உமது திருக்குமாரன் இயேசு நாதருடைய திரு இருதயத்துக்கு மிகவும் ஒத்ததாயிருக்கச் செய்தருளினீரே! இந்த மிகுந்த மதுரமும் அன்பும் பொருந்திய இருதயத்தைக் கொண்டாடுகிற நாங்கள் அந்த பரிசுத்த கன்னிமரியாளின் பேறு பலன்களாலும் சலுகையாலும் இயேசுவின் திரு இருதயத்துக்கு உகந்தவர்களாய்க் காணும்படி அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி ஆமென்