மூவொரு கடவுள் புகழ் (திரித்துவப் புகழ்)
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக/ ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்
திருச்சிலுவை அடையாளம்
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே , ஆமென்
திருச்சிலுவை மன்றாட்டு
அர்ச்சியஷ்ட சிலுவை அடையாளத்தினாலே / எங்கள் சத்துருக்களிடமிருந்து /எங்களை இரட்சித்தருளும் / எங்கள் சர்வேசுரா / பிதா சுதன் / பரிசுத்த ஆவியின் பெயராலே , ஆமென்
கிறிஸ்து கற்பித்த ஜெபம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே/ உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக / உம்முடைய இராச்சியம் வருக / உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல / பூலோகத்திலும் செய்யப்படுவதாக /
எங்கள் அனுதின உணவை / எங்களுக்கு இன்று அளித்தருளும்/ எங்களுக்குத் தீமை செய்தவர்களை / நாங்கள் பொறுப்பது போல / எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் / எங்களை சோதனையில் விழ விடாதேயும் / தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும் - ஆமென்
எங்கள் அனுதின உணவை / எங்களுக்கு இன்று அளித்தருளும்/ எங்களுக்குத் தீமை செய்தவர்களை / நாங்கள் பொறுப்பது போல / எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் / எங்களை சோதனையில் விழ விடாதேயும் / தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும் - ஆமென்
மங்கள வார்த்தை ஜெபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்த்தர் உம்முடனே ! பெண்களுக்குள் ஆசீர் பெற்றவர் நீரே ! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே !
அர்சிஷ்ட மரியாயே ! சர்வேசுரனுடைய மாதாவே ! பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் - ஆமென்
அர்சிஷ்ட மரியாயே ! சர்வேசுரனுடைய மாதாவே ! பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் - ஆமென்
விசுவாச அறிக்கை
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன் . அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய ஆண்டவர் ஏசுக் கிறிஸ்துவை விசுவசிக்கிறேன் . இவர் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பமாய் உற்பவித்து அர்சிஷ்ட கன்னி மரியாளிடமிருந்து பிறந்தார்.போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் . பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார் . அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சிச்டவர்களுடைய சமூதீத பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன் ஆமென்
(This is not a prayer. )
(This is not a prayer. )