- கேள்வி பதில்
- விண்ணகத்தில் அன்னை மரியாள் மற்றும் புனிதர்கள்
விண்ணகத்தில் அன்னை மரியாள் மற்றும் புனிதர்கள்
Courtesy:
"இயேசுவின் திருச்சபை church of Jesus" பேஸ்புக் பக்கத்தில் 18 பகுதிகள் கொண்ட தொடராக வெளிவந்த கட்டுரை.
https://www.facebook.com/The-Church-of-Jesus-
பாகம் - 1
† அன்னை மரியாள் †
நிகரற்ற பெண்மணி அன்னை மரியாள்!
இவர் வேதாகமத்தின் தொடக்கத்திலேயே தொடக்கநூல் 3:15-ல் தந்தை கடவுளாலேயே பேசப்படுகின்றார்.
அவர் ஒரு மானிடபிறவி என்றாலும் அவரில் எந்த பாவமும் இருக்கவில்லை.
லூக்காஸ் 1:26-33-ல் எல்லாம் வல்ல பரமபிதாவே, அதிதூதர் கபிரியேலை தமது தூதராக அன்னை மரியியாளிடம் அனுப்பி அவரை வாழ்த்த செய்கின்றார்.
வானதூதர் அவளைப் பார்த்து,
‘’அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’’
என்று வாழ்த்தி அவர் கடவுளின் குமாரனின் தாயாகப் போகின்ற செய்தியை அவருக்கு அறிவிக்கின்றார்.
அவ்வாறே அவர் விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய கடவுளின் குமாரனான இயேசுவின் தாயாகின்றார்.
எத்துனை பெரிய பாக்கியம் இது!!!
மூவொரு இறைவனின் இரண்டாம் நபரானவர் அன்னை மரியாளின் திரு உதிரத்தில் வந்து தங்குகிறார்.
தமது இறைத்தன்மையின் பூரணத்தில் ஒரு மனிதனாகவே அவரது வயிற்றில் இறைவன் இருக்கிறார்.
லூக்காஸ் 1:41-ல் ‘’மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது, அவர் வயிற்றிலிருந்து குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று; எலிசபெத் தூய ஆவியால் முற்றிலும் ஆள்கொள்ளப் பட்டார்.’’
லூக்காஸ் 1:15-ல் ‘’தாய் வயிற்றில் இருக்கும் போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார்’’ என்று திருமுழுக்கு யோவானை குறித்து முன்னுரைத்த நிகழ்ச்சி, இவ்வாறு அன்னை மரியாளின் ஒரே ஒரு சந்திப்பின் வழியாக நடந்தேறுகிறது.
பரிசுத்த ஆவியாரும் எலிசபெத்தின் வழியாக லூக்காஸ் 1:42-ல்,
‘’பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!’’
என்று அன்னை மரியாளை வாழ்த்துகிறார்.
விண்ணகத்தில் நீதிமான்கள் :
கடவுளால் விசேஷமான முறையில் தேர்ந்து கொள்ளப்பட்ட அன்னை மரியாள் உன்னதமான நீதிமானாகவும் இருக்கிறார்.
நீதிமான்கள் தங்கள் மரணத்திற்குப் பின்பும் உயர்ந்த பரிசை இறைவனிடமிருந்து பெற்று கொள்வார்கள்.
இவர்களை குறித்து வேதம் சொல்கிறது :
''சாலமோனின் ஞானம் 5:15" நீதிமான்களோ என்றென்றும் வாழ்வார்கள் அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது. அவர்களை பற்றிய கவலை உன்னத இறைவனுக்கு உண்டு.
16, அவர்கள் மாட்சிமிக்க பொன்முடியைப் பெறுவார்கள்; ஆண்டவருடைய கையிலிருந்து மணிமுடியைப் பெறுவார்கள். அவர்தம் வலக்கையால் அவர்களை அரவணைப்பார், தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.’’
‘’திருவெளிப்பாடு 3:21, நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே, எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.''
இயேசு ஆண்டவர் இவ்வுலகின் எல்லாவித அலகையின் சோதனைகளிலிருந்தும் வெற்றி பெற்று வெற்றி வீரராய் தந்தையின் அரியணையில் வீற்றிருப்பது போல,
இம்மண்ணுலகில் அலகையின் எல்லாவித சோதனைகளையும் வென்று நீதிமானாக, வாழ்ந்து வெற்றி வீரராய் விண்ணுலகம் சென்ற அன்னைமரியாள் மற்றும் புனிதர்களுக்கு, தந்தை கடவுளின் அரியணையில் வீற்றிருக்கும் தம்மோடு வீற்றிருக்கும் உரிமையை இயேசு ஆண்டவர் கொடுத்துள்ளார்.
இவ்வாறு இவ்வுலகம் முழுவதையும் உண்டாக்கிய சர்வ வல்ல கடவுளின் அரியணையில் வீற்றிருந்து இயேசு ஆண்டவர் நமக்காக கடவுளிடம் பரிந்து பேசிக்கொண்டிருப்பது போல, இயேசுவோடு அரியணையில் வீற்றிருக்கும் அன்னைமரியாள் மற்றும் புனிதர்கள், நமக்காக இயேசுவிடம் பரிந்து பேசிக்கொண்டேஇருக்கிறார்கள் என்பதே கத்தோலிக்க விசுவாச போதனையாகும்!
''திருவெளிப்பாடு 3:22"
கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதை கேட்கட்டும்.’’
பாகம்-2
எனது பிரிவினை சபை நண்பர்கள் அன்னைமரியாள், புனிதர்கள் உட்பட இறந்தவர்கள் எல்லோருமே மறதி நிலையில் நித்திரையில் பாதாளத்தில் இருப்பதாக எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே ,அவர்கள் கடவுளோடு இல்லையாதலால் அவர்களால் நமக்காக கடவுளிடம் பரிந்து பேச முடியாது.என்பதே அவர்களது விவாதம் .
அதற்கு அவர்கள் மேற்கோள் காட்டுகின்ற இறைவசனங்கள்
திருப்பாடல்கள் 6:5,திருப்பாடல்கள் 115:17,திருப்பாடல்கள் 88:10-1
இறந்தோரின் உலகமான கல்லறையில், இறந்தவர்கள் அமைதியில் இருக்கிறார்கள்.அது இருள் சூழ்ந்த பாதாள உலகம் ,அவர்கள் கடவுளை புகழவும் பார்க்கவும் பேசவும்,செபிக்கவும் முடியாது என்பதையே அவ்வசனங்கள் சொல்கின்றன.
இந்த வசனங்களில் இறந்தவர்கள் அல்லது இறந்தோர் என்று குறிப்பிடபடுவது இறந்த சடலங்களை தான் என்பதை நண்பர்கள் மிகத்தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
ஆனால் இறந்தவர்களின் ஆன்மாக்களோ பாதாளத்திலோ கல்லறையிலோ இல்லை அவைகள் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருகின்றன.என்பதையும் ஐயமுற புரிந்து கொள்ளவேண்டும்.
வேதம் இதை தெளிவாகவே சொல்கிறது.
‘’சபை உரையாளர் 12:7 மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.’’
ஆம் உடல் மண்ணின் அடியில் புதையுண்டு அழிந்து போகிறது,அதனால் பேச முடியாது,பார்க்கமுடியாது பரிந்து பேசவும் முடியாது ஆனால் ஆன்மா அதன் பாவ புண்ணியத்திற்கேற்ப கடவுளோடு வாழ்கிறது
கடவுள் உண்டாக்கிய இவ்வுலகில் வாழும்போது, எதிரியான சாத்தானின் எல்லாவித சோதனைகளிலிருந்தும் வெற்றி பெற்று வெற்றி வீரராய் மரிக்கும் நீதிமான்களின் ஆனமாக்களுக்கு இவ்வுலகின் மீது இயேசு ஆண்டவர் அதிகாரம் கொடுக்கிறார்
‘’திருவெளிபாடு 2:26,என் தந்தையிடமிருந்து நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல வெற்றி பெறுவோருக்கும் என் செயல்களை இறுதிவரை செய்வோருக்கும் வேற்றினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன்.அவர்கள் வேற்றினத்தாரை இரும்புகோலால் நடத்துவார்கள்,குயவர் கலத்தைப்போல நொறுக்குவார்கள்.விடிவெள்ளியையும் அவர்களுக்குக் கொடுப்பேன்’’
இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபை மத்தேயு 16:18,19 ல் இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்ட தமது அதிகாரத்தில் நின்றுகொண்டு அன்னைமரியை ‘’விண்ணக மண்ணக அரசி’’என்று வெளிப்படுத்தி மகிமைபடுதுகின்றது.
பெண்களுக்குள் ஆசி பெற்றவளும் மிக உன்னத நீதிமானும் ஆகிய அன்னைமரி இறுதிவரை ஆண்டவரின் செயல்களை செய்து வெற்றி பெற்றவள்.ஆகையால் நாடுகளின் மேல் அவள் அதிகாரம் கொண்டிருக்கிறாள் .
இந்த நீதிமான்களை குறித்து வேதம் சொல்கிறது
‘’சாலமோனின் ஞானம் 3:8நாடுகளுக்கு தீர்ப்பு வழங்குவார்கள்;மக்கள் மீது ஆட்சி நடத்துவார்கள்;ஆண்டவரோ அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார்’’
பாகம்-3
இறந்த புனிதர்களின் ஆன்மாக்கள் கல்லறையில் முடங்கி கிடக்காமல் கடவுளின் முன்னிலையில் நிறைவான மகிழ்ச்சியும் பரமானந்தமும் அனுபவிக்கும் படி விண்ணகத்தில் கடவுளிடம் சென்று சேருகிறது.
‘’திருப்பாடல்கள் 16:10,ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.’’
‘’திருப்பாடல்கள் 30:3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்’’
இறந்த பின்பு மனித ஆன்மா வாழ்கிறதை லூக்காஸ் 16:19-26-ல் செல்வரையும் லாசரையும் குறித்த உவமையில் இயேசு தெளிவாக விளக்குகிறார்.
இயேசு ஒருவரால் தான் மரணத்திற்குப் பின் இருக்கும் வாழ்வை குறித்த செய்தியை சொல்லமுடியும்.
மரணத்திற்குப் பின் உள்ள வாழ்வைக் குறித்த உண்மை நிலைகளைத்தான் இந்த உவமையில் இயேசு எடுத்து சொல்கிறார், உண்மையில் நடக்கும் சம்பவங்களைத் தான் உவமையாக ஆண்டவர் எப்போதுமே எடுத்துச் சொல்வதை நாம் பார்க்கமுடியும்.
‘’லூக்காஸ் 16:19 "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.
21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.
24 அவர், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்" என்று உரக்கக் கூறினார்.
25 அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.
26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது" என்றார்.’’
இங்கே ஏழையை வானதூதர்கள் ஆபிராகாமின் மடியில் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.அங்கே அவர் ஆறுதல் பெறுகிறார்.
செல்வரும் இறக்கிறார். அடக்கம் செயப்படுகிறார்.அவர் நல்ல வாழ்வு வாழாததால் பாதாளத்தில் வதைக்க படுகிறார்.
இங்கே இறந்த இவர்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்போது அவர்களின் சடலங்கள் கல்லறைகளில் இருந்தாலும் அவர்களது ஆன்மாக்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதைக் காணமுடிகிறது.
ஏழை லாசரின் ஆன்மா ஆபிரகாமுடனும் செல்வந்தரின் ஆன்மா பாதாளத்திலும் இருக்கிறது..மட்டுமல்ல இறந்த செல்வரின் ஆன்மா ஆபிராகாமிடம் பேசவும் செய்கிறது.
அவாரால் தீப்பிழம்பின் வேதனையை உணரவும் முடிகிறது.அவர் உரக்கக் கூறுவதை பாருங்கள் ‘’தந்தை ஆபிரகாமே எனக்கு இரங்கும் லாசர் தமது விரல்நுனியை தண்ணீரில் நனைத்து எனது நாவை குளிர செய்ய அவரை அனுப்பும்.ஏனெனில் இந்த தீப்பிளம்பில் நான் மிகுந்த வேதனைபடுகிறேன்’’
ஆம் இறந்தவர்களின் ஆன்மாவால் மற்றவர்களிடம் பேசவும் முடிகிறது.இன்னுமொன்றை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது இருக்கிறது.அதாவது நல்ல ஆன்மாவின் விரலின் நுனி ஆறுதலின் இருப்பிடம்.
மேலும் பாதாளத்தில் வதைக்கபடுகின்ற கெட்ட ஆன்மா கூட உலகிலே உயிரோடு வாழ்கின்ற உறவினர்களுக்காக வேண்டுதல் செய்கிறது.
இதிலிருந்து நமக்கு நிச்சயமாக தெரிய வருவது என்னவென்றால் இயேசு இந்த காலகட்டங்களை குறித்து தான் பேசுகிறாரே ஒழிய,சிலர் சொல்வதுபோல் இயேசுவின் ரெண்டாம் வருகையில் ஆன்ம சரீரத்தோடு உயிர்தெழுந்து பின் தண்டிக்க படுகிற ஆன்மாவை பற்றி பேசவில்லை
இந்த ஆன்மா,கெட்ட ஆன்மாவாக இருப்பதால் ஆபிரகாம் அதன் வேண்டுதல்களை ஏற்கவில்லை.
கெட்ட ஆன்மாக்கள் கூட உலகில் வாழும் தனது உறவினர்களுக்காக வேண்டுதல் செய்கிறது என்றால் நல்ல ஆன்மாக்களின் மனநிலை எப்படி இருக்கும்?
இது இப்படி இருக்க நீதிமான்களான புனிதர்களுக்கு கடவுளின் அரியணையில் அவரோடு வீற்றிருக்கும் இயேசுவோடு, அரியணையில் இருக்கும் உரிமையை இயேசுவே கொடுத்திருப்பதால்[திருவெளிபாடுகள் 2:26] அவர்கள் நமக்காக இயேசுவிடம் பரிந்து பேசுவார்கள் அல்லவா???
நீதிமான்களான புனிதர்களின் வேண்டுதல்களுக்கு, இயேசுஆண்டவர் செவி மடுக்காமல் இருப்பாரோ???
பாகம்-4
இயேசு ஒரு மலைமீது ஏறி ஜெபித்துக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது.அவரது முழுமையான தெய்வீக மகிமையில் அவர் வெளிபடுகின்றார்.
அந்நேரம் இறந்த மோசேயும் இறவாமல் உயிருடன் விண்ணகம் சென்ற இறைவாக்கினர் எலியாசும் மலையில் இயேசுவுடன் வந்து சேர்ந்து ஜெருசெலேமில் நடந்தேறப் போகின்ற இயேசுவின் இறப்பைக் குறித்து பேசி கொண்டிருக்கின்றனர்.
''லூக்காஸ் 9:29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.
30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.
31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்..........................
34,..............................ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.
35 அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது''.
இந்த குரல் தந்தையாம் இறைவனின் குரல் என்று நமக்கு தெரியும்.
அவர் மேகத்தில் இருக்கின்றார்.தூய தமத்துவத்தின் இரண்டாம் நபரான இயேசு தமது முழு தெய்வீக மகிமையில் ஒளிர்கிறார்.
இங்கே தான் இறந்த மோசேயின் ஆன்மாவும் இறவாமல் மோட்சம் சென்ற எலியா இறைவாக்கினரும் மாட்சியில் தோன்றுகிறார்கள்.
எனவே சந்தேகமற இறந்த புனித ஆன்மாக்கள் மாட்சியுடன்,விண்ணில் இறைவனோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று கண்டுணர முடியும்.
''திருவெளிப்பாடு 6:9 ஆட்டுக்குட்டி ஐந்தாவது முத்திரையை உடைத்தபொழுது, கடவுளின் வாக்கை அறிவித்துச் சான்று பகர்ந்ததற்காகக் கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மாக்களைப் பலிபீடத்தின் அடியில் கண்டேன்.
10 அவர்கள் உரத்த குரலில், "தூய்மையும் உண்மையும் உள்ள தலைவரே, எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு நீர் தீர்ப்பு அளிக்காமல் இருப்பீர்? ........................................................ இன்னும் சிறிது நேரம், அதாவது அவர்களின் உடன் பணியாளர்களான சகோதரர் சகோதரிகளும் அவர்களைப்போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள் பொறுத்திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது''
இங்கே இறந்த நல்ல ஆன்மாக்கள் விண்ணக பலிபீடத்தின் முன்னே ஆண்டவர் திருமுன் நின்று அவரோடு பேசுகிறார்கள்.[அவர்களால் ஆண்டவரோடு பேசமுடிவதை இங்கே நாம் காண தவறவேண்டாம்].
அவர்களுக்கு பதிலும் கிடைகிறது..இது இயேசுவின் இரெண்டாம் வருகையில் இறுதி உயிர்தெழுதலுக்கு பின்பு நடக்கும் சம்பவம் அல்ல.எனவே தான் அவர்களின் உடன் பணியாளர்களான சகோதர சகோதரிகளும் அவர்களை போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள் பொறுத்து இருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
இறந்தவர்களின் ஆன்மாக்கள் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளாக விண்ணக அரியணை முன் நிற்பதை இந்த இறைவசனங்களில் நாம் காணலாம்
''திருவெளிப்பாடு 7:9 இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைக் பிடித்திருந்தார்கள்.
13 மூப்பர்களுள் ஒருவர், "வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?" என்று என்னை வினவினார்.
14 நான் அவரிடம், "என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்" என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது; "இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.
15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.
16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா''
பாகம்-5
நல்ல ஆன்மாக்களின் இளைப்பாறுதலை குறித்து வேதம் கூறுவதை வாசிப்போம்.
''திருவெளிப்பாடு 14:13 பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்; ""இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்" என எழுது" என்று அது ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், "ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்; ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்" என்று கூறினார்''
லூக்காஸ் 23:43-ல் இயேசு நல்ல கள்வனிடம் ‘’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்’’என்றார்.
எனவே அன்றே வான்வீட்டில் இயேசுவோடு நல்ல கள்வன் இருக்கும் பாக்கியம் பெறுகிறார்
.நல்ல கள்வனின் சடலம் கல்லறையில் இருந்தாலும் அவரது ஆன்மா அன்றே விண்ணக வீட்டில் இயேசுவோடு போய் சேர்கிறது.
சபை உரையாளர் 12:7-ல் நாம் ஏற்கனவே கண்டது போல கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புகிறது.
திருப்பாடல்கள் 116:15 சொல்கிறது ‘’ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது;; காரணம் ஒரு மனிதன் இறக்கும்போது அவன் ஆன்மாவில் விண்ணில் பிறக்கிறான்.
''2-கொரிந்தியர் 5 :6 ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.
7 நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.
8 நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்''.
''பிலிப்பியர் 1:21 ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.
22 எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை.
23 இந்த இரண்டுக்குமிடையே ஒரு இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது.-
24 ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது''
இதிலிருந்து நல்ல ஆன்மாக்கள் உயிர் நீத்த பின்பு கிறிஸ்துவோடு இருப்பது தெள்ள தெளிவாகிறது.
ஆனால் எனது பிரிவினை சபை நண்பர் சொல்கிறார் ,
இறந்த ஆன்மாக்கள் கல்லறைகளில் நித்திரையில் இருந்து விட்டு இயேசுவின் இரண்டாம் வருகையில்தான் இயேசுவோடு இருப்பார்கள் என்று.
ஆனால் மேற்கண்ட வசனங்களில் அப்படி சொல்லவில்லையே
இயேசு இரண்டாம் வருகையில் வரும்வரை ஆன்மா நித்திரையில் காத்து இருப்பதாக இருந்தால் புனித பவுல் உலக பணிகளை பொறுமையோடு நடத்தி முடித்துவிட்டு இறந்து நித்திரைக்கு சென்றால் போதுமே.
ஆனால் அப்படியல்லாமல் உயிர் நீத்தவுடன் கிறிஸ்துவோடு இருக்கப் போவதால் தான் அவரது உள்ளம் மரணத்திற்கு ஆவலாய் ஏங்குகிறது.
''எபிரேயர் 12:22 ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.
23 விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,
24 புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.''
நிறைவுபெற்ற நேர்மையாளர்கள் என்று இங்கேக் குறிப்பிடுவது நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆன்மாவை தான்.
''1தேசலோனிக்கர் 5:10 நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு இறந்தார்''
ஆம் இந்த பூமியில் வாழ்ந்தாலும் அல்லது இறந்து விட்டாலும் அவரோடு இணைந்து வாழவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.அதற்காக அவர் நம்பொருட்டு இறந்தார்.
''யோவான் 17:24 "தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்''
''யோவான்12:26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்" என்றார்.''
ஆம் சர்வ வல்லமையுள்ள கடவுளாம் இயேசு இருக்கும் இடமாகிய விண்ணகத்தில் அவரது தொண்டர்களாகிய இறந்த புனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை மிகதெளிவாக அறிந்து கொண்டோம்.
இனி வரும் பாகத்தில் விண்ணக புனிதர்களின் மகிமையை பற்றி பார்ப்போம்
பாகம்-6
நீதிமானாக வாழ்ந்த ஒரு நல்ல மனிதன் இறக்கும்போது இந்த உடலை விட்டு குடிபெயர்ந்து விண்ணக வீட்டில் கடவுளோடு குடியேறுவதை நாம் ஏற்கனவே கண்டோம்.
ஆம் அவர் ஆன்மாவில் உயிர்த்தெழுந்தவராய் விண்ணிலேக் கடவுளோடு சென்று வாழ்கின்றார்.
‘’லூக்காஸ் 2௦: 37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, "ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள்" என்று கூறியிருக்கிறார்.
38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்’’.
கடவுள்,இறந்தோரின் கடவுள் அல்ல மாறாக வாழ்வோரின் கடவுள் என இயேசு சொல்லுகின்ற போது இம்மண்ணில் இறந்து போன ஆபிரகாம்,ஈஸாக்கு,யாக்கோப் இவர்களின் கடவுள் என சொல்கிறார் ஏனெனில் இந்த நல்ல மனிதர்கள் ஆன்மாக்களில் கடவுளோடு வாழ்ந்து கொண்டிருகிறார்கள்
‘’லூக்காஸ்:2௦: 35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.
36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே’’.
‘’எபிரேயர் 1: 14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா’’
‘’திருப்பாடல்கள் 8: 5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்’.
இவ்வாறு இறந்த புனிதர்கள் விண்ணிலே மகா மேன்மையில் துலங்குகிறார்கள்.
மரணத்திற்கு பின்பு அவர்கள் கடவுளை விட்டு விலகி இருக்கவில்லை மாறாக அவரோடு அவரது பிள்ளைகளாக விண்ணில் இருக்கிறார்கள்
இத்தகைய மாபெரும் மகிமையில் புனிதர்கள் கடவுளோடு இருக்கும்போது நமக்காக ஆண்டவரிடம் பரிந்து பேசி,நமது விண்ணப்பங்களை பெற்று தருகிறார்கள்.
‘’திருவெளிப்பாடு 8: 3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.
4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது’
இறைமக்களின் செபத்திற்கு தூப புகையிட்டு அதை ஒரு வானதூதரால் கடவுள் முன்னிலையில் ஒப்புகொடுக்க முடிகிறதென்றால் வானதூதர்களை போல அதுவும் ஒருபடி மேலே கடவுளின் மக்களாகவே இருக்கும் இறந்த புனிதர்களுக்கு நமது செபத்தை எடுத்து கடவுள் முன் உயர்த்த முடியாதா?
நிச்சயமாக அவர்களால் முடியும்.
புனிதர்கள் நமக்காக இறைவனிடம் பரிந்துபேசி நமது மன்றாட்டுக்களை பெற்று தருகிறார்கள் என்பதை நாம் பல்வேறு புனிதர்களின் திருத்தலங்களில் கண்டு அனுபவித்து கொண்டு தானே இருக்கிறோம்..
பாகம்-7
புனிதர்களின் செபத்தின் மகிமை:-
''1பேதுரு 3:12 ஏனெனில் ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை நோக்குகின்றன. அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைச் செய்வோருக்கு எதிராக இருக்கின்றது''
''திருப்பாடல்கள் 34:15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்''
இந்நிலையில் திருப்பாடல்கள் 53:2-3 சொல்கிறது
''திருப்பாடல்கள் 53:2 கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ என்று பார்க்கின்றார்.
3 எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டு போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர் கூட இல்லை''
மேலும்
''திருப்பாடல்கள் 143:2 தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்; ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும் உமது திருமுன் நீதிமான் இல்லை''
ஆனால் விண்ணிலே கடவுளோடு இறந்த புனிதர்கள் நேர்மையாளர்களாக ஆன்மாவில் இருக்கிறார்கள் என்று ஏற்கனவே எபிரேயர் 12:22-24-ல் கண்டோம்.
இந்த நேர்மையாளர்களான புனிதர்களின் செபத்திற்கு கடவுள் செவிசாய்த்து கேட்பதை திருப்பாடல்கள் 34-15-லும் 1பேதுரு 3:12-லும் நாம் கண்டோம்.
நமக்காக வேண்டுதல் செய்யும் இவர்களது செபத்திற்கு கடவுள் மதிப்புக் கொடுத்துக் கவனமுடன் செவிசாய்த்து கேட்பதால் அதன்வழியாக தெய்வ ஆசீரும் அற்புதங்களும் நம்மில் வந்து சேரும் என்பதில் ஐயம் சிறிதேனும் இல்லை.உண்மையில் ஆண்டவர் பரிந்துரை செபங்களை விரும்புகிறார்.
பரிந்துரை செபங்களை இறைவன் விரும்புகின்றார்:-
யாக்கோபு 5:16சொல்கிறது ‘’ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்’’
எனவே தான் குருக்களும் பாஸ்டர்களும்,பொதுநிலையின நற்செய்தி அறிவிப்பாளர்களும் மக்களுக்காக செபிக்கிரார்கள்.அந்த செபத்தை கேட்டு இறைவனும் விண்ணக கொடைகளையும் அசீர்வாதங்களையும் மக்கள் மீது பொழிகின்றார்.
நீதிமான்களான நல்ல மனிதர்கள் பாவிகளுக்காக செபிக்கவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.
அவ்வாறு செபிக்கும்போது இறைவன் அந்த பாவிகளை மன்னிக்கிறார்.
கடவுள் பாவி ஒருவரின் மன்றாட்டுக்காக யோபுவிடம் செபிக்கக் சொல்வதையும் யோபு செபிக்கவே அந்த மன்றாட்டை கடவுள் ஏற்று கொள்வதையும் இந்த இறைவசனங்கள் மூலமாக அறியலாம்
''யோபு 42:8 ஆகவே இப்பொழுது, "ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்; உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன். என் ஊழியன் யோபு போன்று என்னைப் பற்றிச் சரியாகப் பேசாத உங்கள் மடமைக்கு ஏற்றவாறு செய்யாது விடுவேன்''
யோபு 42:10-ல் யோபுவின் இந்த மன்றாட்டு ஏற்கபடுவதை காண்கிறோம்.
பரிந்துரை செபம் இன்றி அழிவு:-
நல்ல மனிதர்களின் பரிந்துரை செபம் இல்லாமையால் கடவுள் நாட்டு மக்களை அழித்து விடுகிறார்;
ஆண்டவருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையில் தமது பரிந்துரை செபத்தால் ஒரு சுவரை எழுப்பி கடவுளின் கோபம் நாட்டு மக்கள் மீது இறங்காத படி ஒரு பரிந்துரை செபம் செய்யும் ஒருவனை தேடியும் கிடைக்காததால் அவரது கோபம் மக்கள்மீது விழுவதை இந்த இறை வசனம் எடுத்தியம்புகிறது.
''எசேக்கியேல் 22:30 எனக்கும் இந்நாட்டு மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன் மூலம் நான் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை.
31 எனவே நான் அவர்கள்மேல் என் சினத்தைக் கொட்டி என் எரிசினத்தால் அவர்களை விழுங்குவேன். அவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர்கள் தலைமீதே சுமத்துவேன்" என்கிறார் தலைவராகிய ஆண்டவர்''
ஆம் புனிதர்கள் தங்களது இடைவிடா செபங்களினால் சுவரை எழுப்பி மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி வருகிறார்கள் .
அதனால் மக்கள் செய்த பாவங்களை கடவுள், மக்கள் மேல் சுமத்தாமல் மன்னிப்பு வழங்குவார் என்பதை இந்த இறை வசனம் தெளிவாக கூறுகிறது அல்லவா ?
பாகம்-8
பரிந்துரை செபத்தால் அழிவு அகன்றது :-
இஸ்ரேயல் மக்களின் குற்றங்களை முன்னிட்டு அவர்களை கொள்ளை நோயால் வதைக்கவிருந்ததை
மோசேயின் பரிந்துரை மன்றாட்டின் நிமித்தமாக கைவிட்டு அவர்களை கடவுள் மன்னித்து விடுகிறார்.
மோசேயின் பரிந்துரை செபத்தையும் இறைவன் கொடுக்கும் மன்னிப்பையும் வாசிப்போம்
''எண்ணிக்கை 14:19 உம்மை மன்றாடிக் கேட்கிறேன், இம்மக்களின் குற்றங்களை மன்னியும்; உன் அருளிரக்கத்தின் பேரளவின்படியும் எகிப்திலிருந்து இதுகாறும் இம்மக்களை நீர் மன்னித்து வந்தது போன்றும் செய்யும்.
20 ஆண்டவர் மோசேயிடம் கூறியது; உன் வாக்கின்படி நான் மன்னித்துவிட்டேன்;''
விடுதலைப்பயணம் 32:9-14-லும் மோசேயின் பரிந்துரை செபம் வழியாக இஸ்ரேயல் மக்களை மன்னித்துஅவர்களை அழிக்காமல் விட்டு விடுகிறார்.
கடவுள் மிகுந்த கொபமாயிருந்ததால் மோசேயிடம் பரிந்துரை செய்யாமல் இருக்கும்படி கடவுள் சொல்கிறார்.ஏனெனில் அவர்களை அழிக்கும்படி கடவுள் மிக்க சினம் கொண்டிருந்தார்.
என்றாலும் கடவுளின் கருணையில் நம்பிக்கை கொண்டவராக மோசே தொடர்ந்து மன்றாடி இஸ்ரேயல் மக்களை கடவுள் அழிக்காதிருக்கு வகை செய்கிறார்.
வசனங்களை வாசிப்போம்
''விடுதலைப்பயணம் 32:9 மேலும் ஆண்டவர் மோசேயிடம், "இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்.
10 இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்" என்றார்.
11 அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, "ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?
12 "மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்" என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்.
13 உம் அடியாராகிய ஆபிரகாமையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன். நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே" என்று வேண்டிக்கொண்டார்.
14 அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்''
அன்னைமரியின் பரிந்துரை செபம்:-
கடவுளின் திருதிட்டதின்படி அந்நாளில் புதுமைகள் புரியும் நேரம் ஏசுவுக்கு வரவில்லை,
என்றாலும் நீதிமான்களிளெல்லாம் நீதிமானாகிய அன்னைமரியின் ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே கடவுளின் திட்டத்தில் கூட மாற்றங்களை வருவித்து தமது முதல் புதுமையை அந்நேரம் இயேசு செய்கிறார்.
அன்னைமரியின் பரிந்துரைக்கு அவ்வளவு மகிமை இருக்கிறது.
''யோவான் 2:3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.
4 இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.
5 இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.
6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.
7 இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.
8 பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது''.
இறைதிட்டதின் எனது நேரம் இன்னும் வரவில்லையே எனவே இதைபற்றி நாம் என்ன செய்யமுடியும்?நாம் விருந்து கொடுப்பவர் அல்ல விருந்தாளிகள் தான் ஆகவே எனக்கும் உங்களுக்கும் இதில் என்ன கடமையிருக்கிறது? என்று ஒரு சாதாரண விருந்தாளியின் நிலையில் நின்று இயேசு சொல்கிறார்.
ஆனால் அன்னிமரியின் தாயுள்ளம் அந்த இல்லத்தாரின் நெருக்கடி வேளையில் அவர்களுக்கு உதவ துடிக்கிறது.
சாதாரண விருந்தினர்களை போல,அந்த வீட்டாரின் நெருக்கடி வேளையில் சாதாரணமாக வேடிக்கை பார்த்து விட்டு செல்வதற்கு அன்னைமரி ஒன்றும் சாதாரண பெண்ணில்லையே ?
மாறாக விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஒரே கடவுளின் திருமகனை தனது திரு வயிற்றில் தாங்கிட .பாக்கியம் பெற்ற பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட அற்புத தாயல்லவா அவள்?
அன்னைமரியா தன்னிடம் வேண்டிய பிறகு, வராத நேரத்தையும் வரவைத்து தனது முதல் அற்புதத்தை செய்த இயேசு ஆண்டவர், இப்போது அன்னை தனது கோடானுகோடி பிள்ளைகளுக்காக இயேசுவிடம் கேட்கும் வேண்டுதல்களுக்கு செவி மடுக்காமல் இருப்பாரோ?
பாகம்-9
நம்மால் நேரடியாக செபிக்கமுடியாதா?
1பேதுரு3:12 மற்றும் திருப்பாடல்கள் 34:15-17 ஆகிய இறைவசனங்களில் ஆண்டவர் நேர்மையாளர்களின் மன்றாட்டை கேட்கின்றார்.தீமை செய்வோருக்கு எதிராக இருக்கின்றார் என்பதை கண்டோம்.
மேலும்
‘’யாக்கோபு 5:16,நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்’’
என தெளிவாக கூறுகிறது.
விண்ணக புனிதர்கள் நிறைவுபெற்ற நேர்மையாளர்களாக[எபிரேயர் 12:23]இருக்கிறார்கள்.எனவே அவர்களது செபத்தின் வழியாக செபத்தின் கனிகளை மிகுதியாக நாம் அறுவடை செய்யமுடியும்.
எல்லா மனிதர்களும் கடவுளின் பிள்ளைகளே நாம் எல்லோருமே அவரிடம் நேரடியாக செபிக்கமுடியும்.
பாவிகளான நமது செபங்களும் இறைவனின் மகா கருணையை முன்னிட்டு கேட்கப்படலாம். ஆனால் நிறைவுபெற்ற நேர்மையாளர்களான புனிதர்களின் மன்றாட்டுக்கள் கடவுளிடமிருந்து மிக அதிகமான கிருபைகளை கொண்டுவருகிறது.
லூக்காஸ் 15:22-31ஐ படியுங்கள்
ஒரு பாவி மனம்திரும்புகிற போது கடவுள் அவனை ஏற்றுகொள்கிறார்.ஆனால் நேர்மையாளனாக நீதிமானாக வாழும் கடவுளின் பிள்ளைக்கும்,பாவ வாழ்க்கையிலிருந்து மனம்திரும்பி வருகின்ற ஒரு கடவுளின் பிள்ளைக்கும் கடவுள் வித்தியாசம் பாராட்டுகின்றார்.
மனம்திரும்பி வந்த பாவியின் பேரில் மகிழ்ச்சி உண்டாகிறது.மகிழ்ச்சியின் வெளிப்பாடாக விருந்துக்கு ஏற்பாடு நடக்கிறது.விலை உயர்ந்த அணிகலன்கள் அணிவிக்க படுகிறது.
ஆனால் எப்போதும் நீதிமானாக வாழ்ந்த மகனுக்கு
‘’மகனே,நீ எப்போதும் என்னுடன் இருகிறாய்;என்னுடையதெல்லாம்உன்னுடையதே ‘’
என்ற அமைதியான,அர்த்தமுள்ள ஒரே வார்த்தையின் மூலமாக எத்தகைய அதிகாரம் கிடைக்கிறது என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.
நாம் பாவிகளாகவோ,நேர்மையாளர்களாகவோ இருக்காலம் பொதுவாக கடவுள் நமது நன்மைத் தனத்திற்கு ஏற்பவே நமது செபங்களை ஏற்றுகொள்கிறார்.
எனவே தான் நம்மைவிட அதிக இறை நெருக்கத்தில் இருக்கிற பாதிரியாளர்களிடம் நமக்காக செபிக்க வேண்டுமென்று அவர்களை நாடுகிறோம்.அவர்களுடைய பரிந்துரை செபத்தால் விண்ணக கொடைகளையும்,ஆசீர்வாதங்களையும் நாம் அதிகமாக பெற்றுக் கொள்ளமுடிகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க நிறைவுபெற்ற நீதிமான்களாய் இருக்கும் கடவுளின் மக்களான,அன்னைமரியாள் மற்றும் விண்ணக புனிதர்களின் பரிந்துரை செபத்துக்குரிய மகிமையும்,வல்லமையும் பற்றி சிந்தித்து பாருங்கள்!
இத்தகைய வல்லமைமிக்க பரிந்துரை செபத்தை நாம் ஏன் இழக்கவேண்டும்?
பாகம்-10
† இயேசு மட்டுமே பரிந்துரையாளர் என்பது தவறானது.
ஆனால் இணைப்பாளர்[மத்தியஸ்தர்] இயேசு மட்டுமே †
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
சில நண்பர்கள் சொல்வது என்னவென்றால் நமக்கு ஒரேயொரு பரிந்துரையாளர் மட்டுமே உண்டு அவரே இயேசு.
அப்படியிருக்க பிறர் நமக்காக எப்படி பரிந்து பேசமுடியும்?.
இதற்காக அவர்கள் கோடிட்டு காட்டும் வசனம்
‘’உரோமையர் 8: 34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!''
இங்கே கிறிஸ்து நமக்காக பரிந்து பேசுகிறார் என்று தான் சொல்லபடுகிறதே ஒழிய இயேசு மட்டுமே பரிந்து பேசுகிறார் என சொல்லப்படவில்லை .
பிரிவினை சபையினரின் பைபிளில் இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது ஆகவே தான் அவர்கள் குழப்பமடைகிறார்கள் என நினைக்கிறேன்.
‘’உரோமையர் 8:34,கிறிஸ்துவே மரித்தவர்;அவரே எழுந்துமிருக்கிறவர்;அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்;நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே’’
இங்கேயும் நமக்காக வேண்டுதல் செய்பவர் அவரே என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது
மாறாக நமக்காக வேண்டுதல் செய்பவர் அவர் மட்டுமே என்று சொல்லப்படவில்லை.
அவர் மட்டுமே என்று பிரிவினை நண்பர்கள் அவர்களாகவே திரித்து பொருள் கொள்வார்களேயானால் கிறிஸ்து மரித்தவர் என்பதற்கு கிறிஸ்து மட்டுமே மரித்தவர் என்றல்லவா பொருள் கொள்ள நேரிடும் ?
மேலும் மோசே முதல் பலபல இறைவாக்கினர்கள் மற்றும் அன்னைமரியாள் போன்றோர்கள் பரிந்து பேசுவதை நாம் ஏற்கனவே விவிலிய ஆதாரத்தோடு அறிந்துகொண்டோம்..
மேலும்
தூய ஆவியாரும் நமக்காக பரிந்து பேசுகிறார்
''உரோமையர் 8:26 இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.
27 உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்''
எல்லோருமே பிறருக்காக பரிந்துரை செபம் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்
''யாக்கோபு 5:16 ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்''
ஆம் நேர்மையாளர்களான அன்னைமரியா மற்றும் புனிதர்களின் பரிந்துரை மன்றாட்டு வல்லமையுடையது .பயனளிக்க கூடியது.
இணைப்பாளர் என்றாலும் பரிந்துரையாளர் என்றாலும் ஒன்றே என்ற தப்பறை போதனையை சிலர் போதிக்கிறார்கள் ஆனால் உண்மையில் இவர்கள் வெவ்வேறானவர்களே .....
இணைப்பாளர் அதாவது மத்தியஸ்தர் என்றால் தனித்தனியாக இணைப்பின்றி வேறுபட்டு நிற்பவர்களை இணைப்பது ஆனால் பரிந்துரையாளர் என்றால் ஒருவர் இன்னொருவர் மீது கருணையும் இரக்கமும் காட்டும் படி பரிந்துரை வேண்டுதல் செய்பவர்.
அன்னைமரியா பாவிகளாகிய நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிற பரிந்துரையாளர்
ஆனால் இயேசுவோ தமது கல்வாரி பலி வழியாக மனிதகுலத்தை இறைவனிடம் கொண்டு வந்து இணைத்த ஒரே இணைப்பாளர்[மத்தியஸ்தர்]
''1திமோத்தேயு 2:5 ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.
6 அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்''.
ஆம் இணைப்பாளர்[மத்தியஸ்தர்]இயேசு கிறிஸ்து ஒருவரே ஆனால் அன்னைமரியா மற்றும் விண்ணக புனிதர்கள் எல்லோருமே நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி கொண்டிருக்கும் பரிந்துரையாளர்களே
பாகம்-11
இயேசுவின் பெயராலின்றி மீட்பில்லை:-
‘’திருதூதர்பணிகள் 4:12 இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை''
நமது மீட்பு என்பது ஆதாமின் மனிதகுல வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவது என்று நாம் அனைவரும் அறிவோம்.
மனிதகுல மீட்பிற்கு இயேசு ஒருவரின் பெயரே மனிதர்களுக்கு நல்க பட்டிருக்கிறது.
அப்படியானால் மனிதகுல மீட்பில் அன்னைமரியின் பங்கு என்ன?
அன்னைமரி செயலாற்றுவது இயேசுவின் நாமத்தில்தான்.அவள் தன்னையே கடவுளின் அடிமையாக வெளிப்படுத்துகின்றாள்[லூக்காஸ் 1:38]
1கொரிந்தியர் 3:9-ல் பவுல் சொல்கிறார்,
’’நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள்’’
அன்னைமரியும் இறைவனின் உடன் உழைப்பாளர்.
ஆம் அன்னைமரியாள். இயேசுவின் கீழில்,இயேசுவுடன் உழைக்கும் உடன் உழைப்பாளர்.
ஒரு இறைபணியாளர் தமது மந்தையின் ஆடுகளை இயேசுவிடம் இட்டு செல்வதைப்போல் அன்னைமரியும் மனிதகுலம் முழுவதையும் இயேசுவிடம் இட்டு செல்ல உழைக்கிறார்.கடவுளால் நேரடியாகவே சாத்தனின் பகைவனாக நியமிக்கபட்டவள் அன்னைமரியாள்[தொடக்கநூல்3:15]
தந்தையிடமிருந்து வருகின்ற சாத்தானுக்கெதிரான வல்லமையான படைக்கலம் அவள்.
தந்தை நியமித்ததும் அவரிடமிருந்து வருகின்றதுமான படைக்கலம் சாத்தானை கீழடக்க வலிமையுள்ளது.\
ஆகவே அந்த படைகலமான அன்னைமரி மனிதகுல முழுவதையும் இறைவனிடம் கொண்டு சேர்க்க வல்லவள்.
புனிதர்கள் அருள் வரங்களை நம்முடன் பகிர்பவர் :-
ஆண்டவாகிய கடவுள் சொல்கிறார்
‘’யோவான்4:37,37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.
38 இவ்வாறு "விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்''
மோசே ஆண்டவரில் ஐக்கியப்பட்டு அவருக்கு கீழ்படிந்து வாழ்ந்தார்.மட்டுமல்ல விடுதலைப்பயணம் 34:28-ல் சொல்கிறபடி அவர் மலையின் முகட்டில் நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார்.அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை.தண்ணீர் பருகவும் இல்லை இவ்வாறு அவர் விண்ணக கொடைகளாலும் அருளாலும் நிரம்பி இருந்தார்.
ஆனால் இவரிடம் இருகின்ற இந்த கொடைகளில் சிலவற்றை எழுபது பேர்களுக்கு கடவுளே பகிர்ந்து கொடுக்க வகை செய்கிறார்.
வசனத்தை வாசிப்போம்
‘’எண்ணிக்கை 11:24 அவ்வாறே மோசே வெளியே சென்று மக்களிடம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறினார்; மக்களின் மூப்பரில் எழுபது பேரை அழைத்துக் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தி வைத்தார்.
25 பின்னர் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து அவரோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்''
மோசே தமது வாழ்வால் விதைத்ததை எழுபது மூப்பர்கள் இலவசமாக தமக்கென்று அறுவடை செய்கிறார்கள்.
இதைபோலவே புனிதர்களின் வழியாக இலவசமாக வரங்களை நாம் பெற்று கொள்ளமுடியும்.
விண்ணக புனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்த போது தங்களது நல்ல வாழ்வாலும் செயலாலும் மேலானவைகளை விதைத்தார்கள்.ஆனால் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அவர்களது அறுவடையின் பலனில் பங்குகொண்டு ஆனந்தமாக அனுபவிக்கமுடியும்.
அதேபோல் அன்னைமரி தமது பரிசுத்தத்தையும் அருள் கிருபைகளையும் தம்மில் நிறைந்து ததும்பும் தூய ஆவியையும் நமக்கு பகிர்ந்து பரிசாக தருகின்றாள்
எங்கள் வாழ்க்கையில் நிஜமாகவே புனிதர்களிடமிருந்தும் மிக அதிகமாக அன்னை மரியிடமிருந்தும் அவர்களது விண்ணகக் கொடைகளில் பங்குகொண்டு தான் இருக்கின்றோம்.
எனவே நீதிமான்களான புனிதர்களையும் அன்னைமரியையும் நாம் நமது ஐக்கியத்தில் கொண்டு,அவர்களை வணக்கத்தோடு மரியாதை செலுத்துவோமாக,அதை கடவுளே விரும்புகின்றார்.
இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையானது இயேசு ஆண்டவரை மட்டுமே இறைவனாக ஏற்றுகொண்டு,அவருக்கு மட்டுமே சிறப்பான வழிபாடும் புகழுரைகளையும் .செலுத்துகின்றது.மாறாக இவ்வுலகிலுள்ள அனைத்து புனிதர்களையும் எல்லோரும் ஏற்று கொண்டே ஆக வேண்டும் என யாரையும் கட்டாய படுத்துவதில்லை.
ஆனால் விண்ணக புனிதர்கள் தங்களது மறைசாட்சியான வாழ்வால் கடவுளிடமிருந்து பெற்றிருக்கும் விண்ணக கொடைகளையும் வரங்களையும் இலவசமாக நாம் பகிர்ந்து கொள்ள முடிகின்றபோது இத்தகைய மகிமையான விண்ணக கொடைகளை நாம் ஏன் வீணாக இழக்க வேண்டும்?
பாகம்-12
பிரிவினை சபையை சார்ந்த எனது நண்பர் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி,புனிதர்களுக்கும் வானதூதர்களுக்கும் வணக்கம் செலுத்துதல் கூடாது என சொல்லுகிறார்.வசனத்தை வாசிப்போம்.
‘’திருவெளிப்பாடு 22:8 யோவானாகிய நானே இவற்றையெல்லாம் கண்டேன், கேட்டேன். அப்பொழுது இவற்றை எனக்குக் காட்டிய வானதூதரை வணங்கும் பொருட்டு அவருடைய காலடியில் விழுந்தேன்.
9 அவரோ என்னிடம், "வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர் சகோதரிகளுக்கும், இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைப்பிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்" என்றார்.''
ஆனால் தந்தையாம் கடவுளே ஒரு வானதூதரை எச்சரிக்கையாக இருந்து அவரது வாக்குக்கு செவி சாய்க்க வேண்டுமென்று சொல்கிறார்.அதாவது மிகுந்த மரியாதையோடும் பவ்வியத்தோடும் அவருக்கு கீழ்படிந்து நடக்கவேண்டுமென்று ஆணையிடுகிறார்.
இங்கே வானதூதருக்கு மோசே கொடுக்கவேண்டிய மரியாதையை குறித்து பேசப்படுகிறது.
''விடுதலைப்பயணம் 23:20 வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
21 அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக்கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது.
22 நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்''
ஆம் அந்த வானதூதர் தந்தை கடவுளின் நாமத்தில் வருபவராக இருக்கிறார்.கடவுள் அந்த வானதூதர் வழியாக பேசுகிறார்.வானதூதரின் வாக்குகள் தநதையின் வாக்குகளாக இருகின்றன.
எனவே தான்
‘’..நீ அவர் சொல் கேட்டு நடந்தால்,நான் சொல்வது யாவற்றையும் கேட்டு செயல்பட்டால் ....’’
என்று கடவுள் சொல்கிறார்.
நமது விண்ணக புனிதர்களும்வானதூதர்களை போல கடவுளின் நாமத்தில் வருபவர்களே!அவர்கள் கடவுளின் சொந்தமாகவும் அவருடைய மகிமைக்காகவே உழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆம் புனிதர்கள் தங்கள் மகிமைக்காக உழைப்பவர்கள் அல்ல,மாறாக கடவுளின் மகிமைக்காக,கடவுளுக்காக உழைப்பவர்கள்.
ஆனால் கடவுளோ அவர்களது மகிமையைக் குறித்து கவனத்தோடு இருக்கிறார்.வானதூதர்களின் மகிமையைக் குறித்து கடவுள் கவனத்துடன் இருப்பதை விடுதலைப்பயணம் 23:20-22-ல் பார்த்தோமே!
எனவே நாமும் அவர்களை மதித்து மரியாதையோடு வணங்க கடமை பட்டிருக்கிறோம்.
பாகம்-13
விடுதலைப்பயணம் 22:2௦-22 ல்’...............என் பெயர் அவரில்[வானதூதர்] உள்ளது..............’’என கடவுள் மோசேயுடன் சொல்வதை முந்தைய பாகத்தில் பார்த்தோம்.
யோசுவா , வானதூதரை முகம் குப்பற வணங்கியதை சொல்லும் இறைவசனத்தை காண்போம்
''யோசுவா 5:13 அச்சமயத்தில் யோசுவா எரிகோவில் இருந்தார். அப்போது அவர் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ! ஓர் ஆடவர் அவர் எதிரில் தோன்றினார். கையில் உருவிய கத்தியுடன் அவர்நின்று கொண்டிருந்தார். யோசுவா அவரிடம் சென்று, "நீர் எங்கள் பக்கமா? அல்லது எதிரிகள் பக்கமா?" என்று கேட்டார்.
14 அவரோ, "இல்லை, நான் ஆண்டவரின் படைத்தலைவன் என்ற முறையில் இப்பொழுது வந்துள்ளேன்" என்றார். யோசுவா முகம் தரையில்பட வீழ்ந்து வணங்கி அவரிடம், "என் ஆண்டவர் தம் அடியானுக்கு என்ன கூறியுள்ளார்?" என்று கேட்டார்.
15 ஆண்டவரின் படைத்தலைவர் யோசுவாவிடம், "உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில் நீ நிற்கும் இடம் புனிதமானது" என்றார். யோசுவாவும் அப்படியே செய்தார்.''
ஆண்டவரின் படைத்தலைவரான [காண்க:திருவெளிப்பாடு 12:7,தானியேல் 12:1&தானியேல் 1௦:13] வானதூதருக்கு யோசுவா மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறார்.
நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்ன்வென்றால் யோசுவா தன் முகம் தரையில் பட வீழ்ந்து வணங்கி அவருக்கு மரியாதை செய்கிறார்.
இனி நாம் திருவெளிப்பாடு 22:8-9-ல் யோவான் வானதூதரின் முன் விழுந்து வணங்கிய போது அதை ஏன் வானதூதர் தடை செய்கிறார் என்று பார்ப்போம்.
இங்கே புனித யோவான்,யோசுவாவை போல் விழுந்து வணங்கி மரியாதை செய்கிறார்.
ஆனால் யோவான்,ஒரு சாதாரண மனிதர் அல்ல, மற்ற பதினொன்று திருதூதர்களுடன் சேர்ந்து இவர் அனுபவிக்க போகும் மகிமையை குறித்து இயேசுவிடம் வாக்குத்தத்தம் பெற்றவர்.
அதை வாசிப்போம்
''மத்தேயு 19:28 அதற்கு இயேசு, "புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்''
இத்தகைய மகிமைக்குரியவர் தான் யோவான்,
ஆகவே இவர் வானதூதர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டியதில்லை என்றாலும் இவர் தனது எளிமை தனத்தினால் வானதூதருக்கு அப்படிப்பட்ட மரியாதையை செலுத்துகிறார்.
ஆனால் புனித யோவானின் இத்தகைய மாபெரும் பெருமைக்குரிய மகிமையை அறிந்திருந்த வானதூதர் தமது முன்னிலையில் யோவான் முகங்குப்புற விழுந்து தம்மை வணங்கியதை தடுத்து விட்டார்.
செய்த உதவிக்கு ஒருவர் நமக்கு நன்றி சொன்னால்,நாமும் பெருந்தன்மையாய் எனக்கு வேண்டாம்.கடவுளுக்கே நன்றி செலுத்துங்கள் என்று சொல்வோம் அல்லவா ?
அதனால் உதவி செய்த மனிதர்களுக்கு நன்றி செலுத்துதல் கூடாது என அர்த்தம் கொள்ள முடியுமா?
அதேபோல் தான் தமக்கு வணக்கம் செலுத்த வந்த புனித யோவானை வானதூதர் ,தடுத்ததால் சாதாரண மனிதர்களான நாம் எல்லோருமே வானதூதர்களுக்கோ புனிதர்களுக்கோ வணக்கம் செலுத்துதல் கூடாது என அர்த்தம் கொள்ள வேண்டியதில்லையே
யோசுவா வானதூதர் முன்னிலையில் முகம் தரையில் பட விழுந்து அவரை வணங்கியதையும் மோசேயிடம் கடவுள் வானதூதருக்கு எத்தகைய மரியாதை செலுத்தப்பட வேண்டும் என சொல்வதையும் பார்த்தோமே
எனவே நாம் வானதூதர்களுக்கும் புனிதர்களுக்கும் வணக்கம் செலுத்தவேண்டும்.
ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது,வணக்கம் வேறு ஆராதனை வேறு
ஆராதனை செய்வது கடவுளை மட்டுமே ஆனால் வணக்கம் நாம் யாருக்கும் செலுத்தலாம்.
ஆராதனை கடவுளுக்குரிய மகிமை அது யாருக்கும் விட்டுக்கொடுக்கப்படக் கூடாதது.
பாகம் -14
புனிதர்கள் அதிகாரம் வாய்ந்தவர்கள்:-
சில குறிப்பிட்ட துறைகளுக்கு வானதூதர்கள் அதிகாரமும் வல்லமையும் வாய்ந்தவர்களாக இருப்பதை விவிலியத்தில் காணமுடிகிறது.
''திருவெளிப்பாடு 14:18 நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், "உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது" என்று உரத்த குரலில் கூறினார்''
இங்கே வானதூதர் நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டவராக இருப்பதை காண்கிறோம்.
''திருவெளிப்பாடு 7:2 கதிரவன் எழும் திலையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து''
இவ்வாறு அதிகாரம் கொண்டிருக்கிற வானதூதர்களின் வல்லமையும் அதிகாரமும் கடவுளின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
''2 சாமுவேல் 24:15 ஆண்டவர் காலை முதல் குறித்த நேரம் வரை இஸ்ரயேலின் மீது கொள்ளை நோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர்.
16 வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அவன்மீது தன் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையை குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக் கொண்டிருந்த வானத்தூதரை நோக்கி, "போதும்! உன் கையைக் கீழே போடு "என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எப+சியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார்
25 தாவீது அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவருக்கு எரிபலிகளும், நல்லுறவு பலிகளும் செலுத்தினார். நாட்டுக்காகச் செய்த மன்றாட்டை ஆண்டவர் கேட்டருள, இஸ்ரயேலிலிருந்து கொள்ளை நோய் நீங்கியது''
எனவே ஆண்டவர் வானதூதர்களுக்குக் கொடுக்கும் அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்குக் கீழ்பட்டது என்பதை அறிகிறோம்..
''
விண்ணக புனிதர்களும் வானதூதர்களைப் போல் கடவுளின் மக்களாக இருக்கிறார்கள் என்பதை திருவிவிலியம் தெளிவுபட சொல்கிறது.
''லூக்காஸ் 2௦:36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே''
இந்நேரத்தில் ஏற்கனவே இந்த தொடரில் நாம் பார்த்த, திருவெளிப்பாடு 3:21 மற்றும் திருவெளிப்பாடு 2:26-28 ஆகிய இறைவசனங்களை ஒருமுறை கூட விவிலியத்தை எடுத்து படித்து பாருங்கள்.
புனிதர்கள் தங்கள் மரணம் வரை இறைவனின் செயல்களை செய்து வாழ்வில் வெற்றி வாகைசூடி மறைந்தவர்கள்.
இவர்களுக்கு இறைவனால் மக்களினங்கள் மேல் அதிகாரம் நல்கப்படுவதைக் காண்கிறோம்.இத்தகைய இறந்த நீதிமான்களை குறித்துதான் வேதாகமம் சொல்கிறது.
‘’சாலமோனின் ஞானம் 3:8 நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார்''
ஆம் புனிதர்கள் மக்களினங்கள் மீது அதிகாரம் கொண்டவர்கள் என்றாலும் வானதூதர்களின் அதிகாரத்தின் மேல் இறைவனுக்கு அதிகாரம் இருப்பது போல இந்த புனிதர்கள் இறைவனின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.''ஆண்டவரே அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார்''
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடம் புனித பேதுருவின் வழிவழியாக இறைவன் இயேசுவிடமிருந்து பெற்று கொண்டிருக்கிற அதிகாரத்தைக் குறித்து ஒருமுறை வாசிப்போம்
''மத்தேயு 16:19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்''
இந்த அதிகாரத்தை பயன்படுத்தி கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு புனிதர்களையும் ஒவ்வொரு துறைக்கு பாதுகாவலர்களாகவும் பரிந்துரையாளர்களாகவும் ஏற்படுத்துகின்றது.
உதாரணமாக புனித யூதா ததேயுவை கைவிடபட்டவர்களின் பாதுகாவலராக திருச்சபை ஏற்படுத்தி உள்ளது.
''திருவெளிப்பாடு12:7 பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.
8 அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று''
மிக்கேல் அதிதூதர் சாத்தானை வீழ்த்துவதற்கு இறைவனிடம் அதிகாரம் பெற்றிருப்பது போல இன்றும் கத்தோலிக்க திருச்சபை வழியாக ஒவ்வொரு புனிதர்களும் ஒவ்வொரு துறைக்கு பாதுகாவலாராக நியமிக்கப்பட்டு , இம்மண்ணுலகின் மீது செயல்பட்டு கொண்டிருகிறார்கள்
பாகம் -15
புனித அந்தோணியாரின் சாட்சியம்:-
சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த புனித அந்தோணியாருக்கு அன்னைமரி விண்ணகத்தில் இருக்கிறாரா என்று ஒரு சந்தேகம் எழுந்தது.
எனவே அவர் வழக்கமாக அன்னைமரியிடம் செபிக்கும் செபத்தை செபிக்க செல்லாமல் தனது அறையிலேயே இருந்துவிட்டார்.
ஆனால் அந்நேரம் அவரது அறையிலே அன்னைமரி காட்சி நல்கி சொன்னாள்
''இறைவன் இயேசுவையே உதரத்தில் தாங்கிய என் சரீரத்தை கல்லறையில் அழிவுறும்படி ஆண்டவர் கையளிக்கவில்லை.அவர் என்னை ஆன்ம சரீரத்தோடு எழச்செய்து விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டினார்’’
இந்த செய்தியை சொல்லிவிட்டு அன்னைமரி மறைந்துவிட்டாள்.
புனித அந்தோணியார் தான் வாழ்ந்த காலத்தில் இந்த செய்தியை உலகிற்கு அறிவித்தார்.
இந்த சத்தியத்தை உலகிற்கு எடுத்தியம்பிய அவரது நாவு இன்றுவரை அழியாமல் இருக்கிறது.
இத்தாலி நாட்டிலே பதுவா நகரில் கடந்த 6௦௦ ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை அவரது அழியா நாவு பயபக்தியோடு பக்தர்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னைமரியினைக் குறித்த இந்த பேருண்மையை உலகுக்கு எடுத்தியம்பிய அவரது அழியா நாவை எல்லாம் வல்ல கடவுள் கல்லறையில் அழிவுறும்படி கையளிக்கவில்லை அன்னைமரியாயை பற்றிய இந்த பேருண்மைக்கு அவரது அழியா நாவு ஒரு நிலையான சாட்சியாக விளங்குகிறது.
விண்ணக வீட்டில் ஆன்மாவில் மட்டும் வாழ்கின்ற விண்ணக புனிதர்களைப் போலன்றி,அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்றார்கள் என்ற நம்பிக்கை கிறிஸ்தவத்தின் தொடக்க கால முதலே விசுவாசிகள் மத்தியில் ஆழமாக வேரூன்றி இருந்தது.
இந்த நம்பிக்கை விசுவாச சத்தியமாக கத்தோலிக்க திருச்சபையால் தக்க ஆய்வுக்குப் பிறகு பிரகடனப்படுத்தப்பட்டு அறிக்கையிடபட்டது.
புனித அந்தோணியாரின் வாழக்கையில் நடந்த மேற்கண்ட நிகழ்வும் இந்த சத்தியதிர்கான இன்னொரு ஆதாராமாகத் திகழ்கிறது.
பாகம் -16
உத்தரிக்கிற ஸ்தலம்:-
ஒரு மனிதன் விண்ணகம் செல்ல வேண்டுமென்றால் அவன் மாசற்றவனாக, தூயவனாக இருக்கவேண்டும்.
பாவத்தோடு மரிக்கும் ஒரு மனிதன் விண்ணகம் செல்லமுடியாது என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
1யோவான் 5:16சொல்கிறது ‘’...சாவுக்குரிய பாவமும் உண்டு....’’ இந்த பாவம் ஒரு மனிதனின் ஆன்மாவை சாவுக்குள் வீழ்த்துகின்றது.
ஆனால் ஒரு மனிதனை சாவுக்குள் வீழ்த்தாத பாவமும் உண்டு அதுதான் அற்பபாவம் .அது சாவான பாவம் அல்ல
''1 யோவான் 5:17 தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல'.
'' இனி 1யோவான் 5:16 வசனத்தின் தொடக்கத்தை வாசிப்போம்
''பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்.''
‘’
இங்கே ஒரு மனிதன் சாவுக்கேதுவான பாவம் செய்யாமல் வெறும் அற்பபாவம் மட்டும் செய்யும்போது அவனுக்காக இன்னொருவர் செபித்தால் அந்த செபத்தின் வழியாக அந்த பாவி மன்னிப்பை பெற்று வாழ்வு பெறுகின்றான்.
இங்கே அவன் வாழ்வு பெறுவது அந்த பாவியின் சொந்த செயலால் அல்ல மாறாக பிறருடைய செபத்தின் வழியாகத்தான்.
''யோவான் 4:37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.
38 இவ்வாறு "விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்''
இந்நிலையில் சாவுக்குரிய பாவம் செய்யாமல் வெறும் அற்ப பாவங்கள் செய்த ஒருவர் அந்த பாவத்தோடு இறந்து போகின்றார்.இந்த அற்பப் பாவங்களால் அவர் ஆன்மா கறைபடிந்து மாசற்ற நிலையை இழந்து நிற்கிறது.
இந்த பாவ கறைகளோடு அவரால் நேரடியாக விண்ணகம் செல்ல முடியுமா?முடியாது.ஆனால் இந்த பாவம் அவரது ஆன்மாவுக்கு ஆன்மீக சாவை வருத்தி வைப்பதில்லை.அப்படியானால் இந்த ஆன்மாவின் நிலை என்ன?
இந்த சூழ்நிலையில் இயேசுவால் உருவாக்கப்பட்டு[மத்தேயு:16:18-19],
தூய ஆவியால் வழிநடத்தபடுகின்ற[யோவான் 16:12-13],
கத்தோலிக்க திருச்சபை
‘’உத்தரிக்கிற ஸ்தலம்’’
என்ற ஆன்மீக சுத்திகரிப்பு ஸ்தலத்தை குறித்த உண்மையை வெளிபடுத்துகின்றது.
‘’செக்கரியா 13: 8 நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்; மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்', என்கிறார் ஆண்டவர்.
9 இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்; பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்; அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள்; நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்; 'இவர்கள் என் மக்கள்' என்பேன் நான், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்."
இதேபோல் மாபெரும் துன்பங்கள் வேதனைகள் என்ற நெருப்பினால் அற்பபாவத்தோடு இறந்து போகின்றவரின் ஆன்மாக்கள் சுத்திகரிக்க படுகின்ற ஆன்மீக நிலை தான் உத்தரிக்கிற ஸ்தலம்
''1 கொரிந் 3 : 13 ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்; தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.
14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.
15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்''.
இந்த ஆன்மாக்களுக்காக இவ்வுலகில் வாழ்பவரால் ஒப்புகொடுக்கபடும் செபங்களாலும் ,திவ்ய பலிகளாலும் புண்ணிய அறச்செயல்களாலும்,அவர்களுடைய இந்த மாபெரும் துன்பங்களையும் வேதனைகளையும் குறைக்கமுடியும்.
''1யோவான்5:16.......அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்''
உத்தரிக்கிற ஸ்தலத்தில் தூய்மைபடுத்துவதின் வழியாக ஒரு ஆன்மா பரிசுத்த வெண்மையை தரித்து கொள்கிறது
‘’திருவெளிப்பாடு 3:5 வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்''
இவர்கள் பரிசுத்தம் என்ற வெண்ணாடை தரிக்கபட்டவர்கள் மோட்சம் சேரத் தகுதியானவர்கள்.இவர்கள் தான் நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகள் இத்தகைய நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகளை தான் எபிரேயர் 12:23-ல் வாசித்தோம்.
இவ்வாறு உத்தரிக்கிற ஸ்தலம் என்பது அற்பபாவத்தோடு இறக்கும் ஒருவரின் ஆன்மா சுத்திகரிக்கப்படும் உலை.
அந்த துன்ப வேதனை என்ற தீச்சூளையில் சுத்திகரிகப்பட்ட பின்பு ஆன்மாக்கள் மோட்சம் அடைகின்றனர் என்பது தான் உண்மை,
ஆகவே மரித்த ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புகொடுப்பது,செபிப்பது,தானதர்மங்கள் செய்வது போன்றவைகளை அதிகமாக செய்திட மறவாதீர்கள்
பாகம் -17
அன்னைமரிக்கு எதிரான சாத்தானின் திட்டம்:-
நாம் ஏற்கனவே வாசித்தது போல
‘’தொடக்கநூல் 3:15, உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார்''.
இங்கே பெண் என்று குறிப்பிடுவது அன்னைமரியாள்.
அவள் வித்து இயேசு.
ஆகவே உனக்கும் என்று குறிக்கபடுகிற சாத்தானுக்கும் பெண்ணுக்கும் தான் முதல் பகைமை!
எனவே அன்னைமரி தான் சாத்தானின் முதல் பகைவனாக இருக்கும் படி இறைவனே ஏற்படுத்திவிட்டார்.
இதுதான் இறைவனின் திருசித்தம்.ஆம் சாத்தானின் பகைவனாக செயல்படும் படி தந்தையாம் கடவுளே அன்னைமரியை நியமித்திருக்கிறார்.
அவள் விழுந்துவிட்ட மனிதகுலத்தை மீட்டு இரட்சிக்கும் பணியிலே தந்தையாம் இறைவனின் வல்லமைமிக்க படைக்கருவியாக ஆகிறாள்.
ஆம் சாத்தானுக்கெதிராக அவனது பகைவனாக செயல்படும்படி அவரது வலிமையான படைக்கலமாக அவள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.எனவே தான் சாத்தான் எப்போதும் அன்னைமரியை குறிவைத்தே எதிர்த்து நிற்கிறான்.
எச்சரிக்கை! அறிந்தோ அறியாமலோ அன்னைமரிக்கு எதிராக எழுபவர்கள் சாத்தானின் அணியில் நின்று சாத்தானுக்காக செயல்புரிகிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்!
சாத்தான் மாபெரும் அகங்காரி அவன் கடவுளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்புகிறவன்,அவனது வல்லமைகளை வெளிப்படுத்தி கடவுளைப்போல ஆராதனை பெற விரும்புகிறவன்.எப்போதுமே கடவுளை போல தானும் இருப்பதாகக் காட்டிக்கொள்ள போராடி கொண்டிருக்கிறவன்.
ஆனால் இந்த போராட்டத்தில் அவனுக்கு வெற்றி இல்லை என்றும் தனக்கிருப்பது கொஞ்சகாலமே என்றும் அவனுக்குத் தெரியும்
''திருவெளிப்பாடு 12:12...தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது; அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது"
அவனது தோல்வி முன் குறிக்கப்பட்டது தான்,ஆனால் இந்த தோல்வியை நேரடியாக கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளவே அவன் விரும்புகிறான்.ஏனெனில் இதன் வழியாக கடவுள் மட்டுமே அவனை தோற்கடிக்க முடிந்தது என்றும் அதன்மூலம் கடவுளுக்கு அடுத்த படியான வலியவன் நான்தான் என்றும் அவனால் மார்தட்ட முடியும்.
கடவுளோ நீதியை நிலைநாட்டுபவர்.சாத்தான் எந்த விதத்தில் வெற்றி அடைந்தானோ அதே விதத்திலேயே அவன் தோற்கடிக்கப்படவேண்டும்.அப்போதுதான் அவனது தோல்வி முழுமை பெறும்
.சாத்தான் ஏவாள் என்ற ஒரு பெண்ணை விழச்செய்து அந்தப் பெண்ணின் வழியாக ஆதாமை வீழ்த்தி அதன்மூலம் மனுகுலத்தையே விழச்செய்தான்.அதை சீர் செய்வதற்கு ஒரு பெண்ணை நமக்கு நல்கி அந்த பெண்ணின் வழியாக சாத்தான் தோற்கடிக்க படவும்,அந்த பெண்ணின் வித்தாக வருகின்ற புதிய ஆதாம் அனைத்தையும் பழைய மகிமைக்குத் திருப்பிக் கொண்டுவரவும்,நீதியின் தேவன் திருவுளம் கொண்டார்.
தான் தோற்கடித்த ஒரு பெண்ணினத்தாலேயே தான் வீழ வேண்டும் என்ற இந்த இறைவனின் நீதியின் திட்டம் சாத்தானுக்கு மிகுந்த கசப்பாக இருக்கிறது.அதை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.
அதுவும் படைப்பு பொருளான ஒரு பெண்ணால் தான் தோற்கடிக்கப்பட விரும்பவேயில்லை.
அவன் படைப்பாளரால் மட்டுமே தோற்கடிக்க விரும்புகிறான்.
ஆனால் கடவுளின் திட்டமும் திருவுளமும் அவரது நீதியின் திட்டமும் அவன் ஒரு பெண்ணாலேயேத் தோற்கடிக்கபடவேண்டும் என்றிருக்கிறது.
எனவே தான் இந்த மனிதகுல மீட்பின் திட்டத்திலே பெண்ணுக்கு இத்தனை முக்கியத்துவம் நல்க பட்டிருக்கிறது.
இந்த பெண் தந்தையாம் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட சாத்தானுக்கெதிரான படைகலமாக இருப்பதினால் இவள் மிகுந்த வல்லமை நிறைந்தவளாக இருக்கிறாள்.அவள் தோற்கடிக்க முடியாதவளும் வெற்றி ஒன்றே அடைபவளும் ஆவாள்.
இன்றும் இவள் விண்ணகத்திலிருந்து சாத்தானுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருகிறாள்
பாகம் -18 [ இறுதி பாகம் ]
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
அன்னைமரியாளிடமிருந்து தோல்வியை தாங்கி கொள்ளமுடியாத சாத்தான்,மனிதகுல மீட்பில் பெண்ணாகிய அன்னைமரிக்கு இன்று எந்தவித பங்குமில்லை,பணியுமில்லை என்ற ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்தி,அன்னைமரியாளால் தான் தோற்கடிக்கபடுவதில்லை என்று சாதிக்க விரும்புகின்றான்.
எனவே தான் 16-ம் நூற்றாண்டின் காலகட்டத்தில் சில புரட்சியாளர்களின் ஆன்மாக்களில் புகுந்து ,புதியதொரு திட்டத்தை உலகுக்கு வெளிபடுத்தினான்.
அந்த திட்டம் கடவுள் மனிதனுக்காக அமைத்த திட்டம் அல்ல,மாறாக சாத்தான் உருவாக்கிய திட்டம்,அது சாத்தானிடமிருந்து தோன்றி அந்த புரட்சியாளர்கள் வழியாக வெளிவந்து வளர்ந்தது.
தாங்கள் செய்வது என்னவென்று அறியாமலேயே,அந்த புரட்சியாளர்களின் வழியை பின்பற்றுபவர்கள், சாத்தானின் தந்திரவலையில் விழுந்து மனிதகுல மீட்பின் திட்டத்திலே அன்னைமரிக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை,இன்று அவளுக்கு எவ்வித பணியுமில்லை என்று விவாதிக்கிறார்கள்.
விண்ணக புனிதர்கள் விண்ணிலிருந்து கொண்டு நமக்காகக் கடவுளிடம் பரிந்துரை செய்தும்,நமக்கு உதவிகள் செய்தும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்றாலும் சாத்தான் அந்த பிரிவினை புரட்சியாளர்களின் கண்களை மூடவைத்து புனிதர்கள் கல்லறையில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார்கள் என்ற பொய்யை நம்ப செய்துவிடுகிறான்.
இதில் அவனது குறி விண்ணக புனிதர்கள் மீதல்ல மாறாக அன்னைமரியின் மீது தான்.
இறந்த புனிதர்கள் கல்லறையில் ஆன்ம சரீரத்தோடு தூங்கி கொண்டிருகிறார்கள் என்று சாதித்துவிட்டால் அன்னைமரியும் அவ்வாறே என நிரூபித்து உலகிற்கு காட்டிவிடலாம் என எண்ணுகிறான்
இந்த வழிமுறைகள் எல்லாம் சாத்தானின் அகங்காரத்திலிருந்து பிறக்கும் திட்டங்கள்.
இதன்வழியாக, தான் கடவுளுக்கு அடுத்தபடியாக இருக்கிறவன் என்று தன்னை வெளிபடுத்த முயலுகிறான்.
கடவுளின் திட்டத்திற்கு எதிராக செயல்படும் புரட்சியாளர்களை பின்பற்றி கொண்டிருக்கும் நண்பர்களே,
நீவிர் அறியாமலேயே,சாத்தான் உருவாக்கிய திட்டத்திலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்
ஆண்டவரின் நீதியின் திட்டத்தின்படி அன்னைமரியாயை நமது மீட்புக்காக கடவுள் நல்குகின்றார்.அன்னையோ இவ்வுலகின் மக்களாகிய நமக்காக செயல்பட்டு கொண்டிருகிறாள்.
ஆனால் நீவிர் கடவுள் மனிதர்களை தமக்கு ஏற்புடையவர்களாக்கும் முறைமைக்கு உங்களை உட்படுத்தாமல் அந்த வழியை விட்டு விலகி உங்களின் சிந்தையின் படி உங்கள் வழிகளையே மீட்புக்குப் பின்பற்றுகிறீர்கள்.
இந்நேரம் புனித பவுல் யூதர்களைக் குறித்துச் சொன்ன வசனங்களை நினைவுகூர்வோம்
''உரோமையர் 1௦:2 கடவுள்மேல் அவர்களுக்குப் பற்று உண்டு என்பதற்கு நானே சாட்சி. ஆனால் அப்பற்று உண்மையான அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல.
3 அதாவது, கடவுள் மனிதர்களைத் தமக்கு ஏற்புடையவர்களாக்கும் முறையை அறிந்து கொள்ளாமல், யூதர்கள் தங்கள் முயற்சியாலேயே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக முயன்றார்கள்; ஆகவே அவர்கள் கடவுளின் செயல்முறைக்குத் தங்களை உட்படுத்தவில்லை''
இந்த வசனம் உங்களை பற்றியதாக அமையாமல் பார்த்து கொள்ளவேண்டியது உங்கள் கடமை.
முடிவுரை:-
இன்று அன்னைமரியாள் விண்ணிலிருந்து கொண்டு அகில உலகையுமே ஆண்டவர் நாமத்தில் ஆண்டு கொண்டிருக்கிறார்,
இறையரசின் பூரணத்தை இவ்வுலகில் உருவாக்கி சாத்தானைத் தோற்கடிக்க இவ்வுலகை அவள் ஆயுததப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
விண்ணக புனிதர்கள் அனைவருமே, அன்னையின் உடன் உழைப்பாளர்களாக இறைவனின் மனிதகுல மீட்பு திட்டத்திற்காக அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் இறைவனின் திருவுளம்.அவரது திருவுளத்திற்கு நாம் அனைவருமே அடிபணிய வேண்டியவர்கள்.நமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவரது திருவுளத்தின் திட்டங்களை மாற்ற நாம் வலிமையற்றவர்கள்,உரிமையற்றவர்கள்
எனவே இந்த உலகின் இறையரசை,மனிதகுல மீட்பைப் பூரணப்படுத்த அன்னைமரியாவோடு சேர்ந்து பணிபுரிவோம்.அவளை மதிப்போடும் மரியாதையோடும் வணக்கம் செய்வோம்.
இயேசு அமைக்கின்ற பூரண இறையரசுக்கு உலகை ஆயத்தபடுத்தவும் வழியமைக்கவும்,இறைவனின் நாமத்தில் புதிய ஏவாளாம் அன்னைமரியைத் தலைவியாக கொண்டு அவளுடன் உடன் உழைப்பாளர்களாகவும் செயல்படுவோம்.
–ஆமென்
Courtesy:
"இயேசுவின் திருச்சபை church of Jesus" பேஸ்புக் பக்கத்தில் 18 பகுதிகள் கொண்ட தொடராக வெளிவந்த கட்டுரை.
https://www.facebook.com/The-Church-of-Jesus-
பாகம் - 1
† அன்னை மரியாள் †
நிகரற்ற பெண்மணி அன்னை மரியாள்!
இவர் வேதாகமத்தின் தொடக்கத்திலேயே தொடக்கநூல் 3:15-ல் தந்தை கடவுளாலேயே பேசப்படுகின்றார்.
அவர் ஒரு மானிடபிறவி என்றாலும் அவரில் எந்த பாவமும் இருக்கவில்லை.
லூக்காஸ் 1:26-33-ல் எல்லாம் வல்ல பரமபிதாவே, அதிதூதர் கபிரியேலை தமது தூதராக அன்னை மரியியாளிடம் அனுப்பி அவரை வாழ்த்த செய்கின்றார்.
வானதூதர் அவளைப் பார்த்து,
‘’அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’’
என்று வாழ்த்தி அவர் கடவுளின் குமாரனின் தாயாகப் போகின்ற செய்தியை அவருக்கு அறிவிக்கின்றார்.
அவ்வாறே அவர் விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய கடவுளின் குமாரனான இயேசுவின் தாயாகின்றார்.
எத்துனை பெரிய பாக்கியம் இது!!!
மூவொரு இறைவனின் இரண்டாம் நபரானவர் அன்னை மரியாளின் திரு உதிரத்தில் வந்து தங்குகிறார்.
தமது இறைத்தன்மையின் பூரணத்தில் ஒரு மனிதனாகவே அவரது வயிற்றில் இறைவன் இருக்கிறார்.
லூக்காஸ் 1:41-ல் ‘’மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது, அவர் வயிற்றிலிருந்து குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று; எலிசபெத் தூய ஆவியால் முற்றிலும் ஆள்கொள்ளப் பட்டார்.’’
லூக்காஸ் 1:15-ல் ‘’தாய் வயிற்றில் இருக்கும் போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார்’’ என்று திருமுழுக்கு யோவானை குறித்து முன்னுரைத்த நிகழ்ச்சி, இவ்வாறு அன்னை மரியாளின் ஒரே ஒரு சந்திப்பின் வழியாக நடந்தேறுகிறது.
பரிசுத்த ஆவியாரும் எலிசபெத்தின் வழியாக லூக்காஸ் 1:42-ல்,
‘’பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!’’
என்று அன்னை மரியாளை வாழ்த்துகிறார்.
விண்ணகத்தில் நீதிமான்கள் :
கடவுளால் விசேஷமான முறையில் தேர்ந்து கொள்ளப்பட்ட அன்னை மரியாள் உன்னதமான நீதிமானாகவும் இருக்கிறார்.
நீதிமான்கள் தங்கள் மரணத்திற்குப் பின்பும் உயர்ந்த பரிசை இறைவனிடமிருந்து பெற்று கொள்வார்கள்.
இவர்களை குறித்து வேதம் சொல்கிறது :
''சாலமோனின் ஞானம் 5:15" நீதிமான்களோ என்றென்றும் வாழ்வார்கள் அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது. அவர்களை பற்றிய கவலை உன்னத இறைவனுக்கு உண்டு.
16, அவர்கள் மாட்சிமிக்க பொன்முடியைப் பெறுவார்கள்; ஆண்டவருடைய கையிலிருந்து மணிமுடியைப் பெறுவார்கள். அவர்தம் வலக்கையால் அவர்களை அரவணைப்பார், தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.’’
‘’திருவெளிப்பாடு 3:21, நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே, எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.''
இயேசு ஆண்டவர் இவ்வுலகின் எல்லாவித அலகையின் சோதனைகளிலிருந்தும் வெற்றி பெற்று வெற்றி வீரராய் தந்தையின் அரியணையில் வீற்றிருப்பது போல,
இம்மண்ணுலகில் அலகையின் எல்லாவித சோதனைகளையும் வென்று நீதிமானாக, வாழ்ந்து வெற்றி வீரராய் விண்ணுலகம் சென்ற அன்னைமரியாள் மற்றும் புனிதர்களுக்கு, தந்தை கடவுளின் அரியணையில் வீற்றிருக்கும் தம்மோடு வீற்றிருக்கும் உரிமையை இயேசு ஆண்டவர் கொடுத்துள்ளார்.
இவ்வாறு இவ்வுலகம் முழுவதையும் உண்டாக்கிய சர்வ வல்ல கடவுளின் அரியணையில் வீற்றிருந்து இயேசு ஆண்டவர் நமக்காக கடவுளிடம் பரிந்து பேசிக்கொண்டிருப்பது போல, இயேசுவோடு அரியணையில் வீற்றிருக்கும் அன்னைமரியாள் மற்றும் புனிதர்கள், நமக்காக இயேசுவிடம் பரிந்து பேசிக்கொண்டேஇருக்கிறார்கள் என்பதே கத்தோலிக்க விசுவாச போதனையாகும்!
''திருவெளிப்பாடு 3:22"
கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதை கேட்கட்டும்.’’
பாகம்-2
எனது பிரிவினை சபை நண்பர்கள் அன்னைமரியாள், புனிதர்கள் உட்பட இறந்தவர்கள் எல்லோருமே மறதி நிலையில் நித்திரையில் பாதாளத்தில் இருப்பதாக எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே ,அவர்கள் கடவுளோடு இல்லையாதலால் அவர்களால் நமக்காக கடவுளிடம் பரிந்து பேச முடியாது.என்பதே அவர்களது விவாதம் .
அதற்கு அவர்கள் மேற்கோள் காட்டுகின்ற இறைவசனங்கள்
திருப்பாடல்கள் 6:5,திருப்பாடல்கள் 115:17,திருப்பாடல்கள் 88:10-1
இறந்தோரின் உலகமான கல்லறையில், இறந்தவர்கள் அமைதியில் இருக்கிறார்கள்.அது இருள் சூழ்ந்த பாதாள உலகம் ,அவர்கள் கடவுளை புகழவும் பார்க்கவும் பேசவும்,செபிக்கவும் முடியாது என்பதையே அவ்வசனங்கள் சொல்கின்றன.
இந்த வசனங்களில் இறந்தவர்கள் அல்லது இறந்தோர் என்று குறிப்பிடபடுவது இறந்த சடலங்களை தான் என்பதை நண்பர்கள் மிகத்தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
ஆனால் இறந்தவர்களின் ஆன்மாக்களோ பாதாளத்திலோ கல்லறையிலோ இல்லை அவைகள் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருகின்றன.என்பதையும் ஐயமுற புரிந்து கொள்ளவேண்டும்.
வேதம் இதை தெளிவாகவே சொல்கிறது.
‘’சபை உரையாளர் 12:7 மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.’’
ஆம் உடல் மண்ணின் அடியில் புதையுண்டு அழிந்து போகிறது,அதனால் பேச முடியாது,பார்க்கமுடியாது பரிந்து பேசவும் முடியாது ஆனால் ஆன்மா அதன் பாவ புண்ணியத்திற்கேற்ப கடவுளோடு வாழ்கிறது
கடவுள் உண்டாக்கிய இவ்வுலகில் வாழும்போது, எதிரியான சாத்தானின் எல்லாவித சோதனைகளிலிருந்தும் வெற்றி பெற்று வெற்றி வீரராய் மரிக்கும் நீதிமான்களின் ஆனமாக்களுக்கு இவ்வுலகின் மீது இயேசு ஆண்டவர் அதிகாரம் கொடுக்கிறார்
‘’திருவெளிபாடு 2:26,என் தந்தையிடமிருந்து நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல வெற்றி பெறுவோருக்கும் என் செயல்களை இறுதிவரை செய்வோருக்கும் வேற்றினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன்.அவர்கள் வேற்றினத்தாரை இரும்புகோலால் நடத்துவார்கள்,குயவர் கலத்தைப்போல நொறுக்குவார்கள்.விடிவெள்ளியையும் அவர்களுக்குக் கொடுப்பேன்’’
இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபை மத்தேயு 16:18,19 ல் இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்ட தமது அதிகாரத்தில் நின்றுகொண்டு அன்னைமரியை ‘’விண்ணக மண்ணக அரசி’’என்று வெளிப்படுத்தி மகிமைபடுதுகின்றது.
பெண்களுக்குள் ஆசி பெற்றவளும் மிக உன்னத நீதிமானும் ஆகிய அன்னைமரி இறுதிவரை ஆண்டவரின் செயல்களை செய்து வெற்றி பெற்றவள்.ஆகையால் நாடுகளின் மேல் அவள் அதிகாரம் கொண்டிருக்கிறாள் .
இந்த நீதிமான்களை குறித்து வேதம் சொல்கிறது
‘’சாலமோனின் ஞானம் 3:8நாடுகளுக்கு தீர்ப்பு வழங்குவார்கள்;மக்கள் மீது ஆட்சி நடத்துவார்கள்;ஆண்டவரோ அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார்’’
பாகம்-3
இறந்த புனிதர்களின் ஆன்மாக்கள் கல்லறையில் முடங்கி கிடக்காமல் கடவுளின் முன்னிலையில் நிறைவான மகிழ்ச்சியும் பரமானந்தமும் அனுபவிக்கும் படி விண்ணகத்தில் கடவுளிடம் சென்று சேருகிறது.
‘’திருப்பாடல்கள் 16:10,ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.’’
‘’திருப்பாடல்கள் 30:3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்’’
இறந்த பின்பு மனித ஆன்மா வாழ்கிறதை லூக்காஸ் 16:19-26-ல் செல்வரையும் லாசரையும் குறித்த உவமையில் இயேசு தெளிவாக விளக்குகிறார்.
இயேசு ஒருவரால் தான் மரணத்திற்குப் பின் இருக்கும் வாழ்வை குறித்த செய்தியை சொல்லமுடியும்.
மரணத்திற்குப் பின் உள்ள வாழ்வைக் குறித்த உண்மை நிலைகளைத்தான் இந்த உவமையில் இயேசு எடுத்து சொல்கிறார், உண்மையில் நடக்கும் சம்பவங்களைத் தான் உவமையாக ஆண்டவர் எப்போதுமே எடுத்துச் சொல்வதை நாம் பார்க்கமுடியும்.
‘’லூக்காஸ் 16:19 "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.
21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.
24 அவர், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்" என்று உரக்கக் கூறினார்.
25 அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.
26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது" என்றார்.’’
இங்கே ஏழையை வானதூதர்கள் ஆபிராகாமின் மடியில் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.அங்கே அவர் ஆறுதல் பெறுகிறார்.
செல்வரும் இறக்கிறார். அடக்கம் செயப்படுகிறார்.அவர் நல்ல வாழ்வு வாழாததால் பாதாளத்தில் வதைக்க படுகிறார்.
இங்கே இறந்த இவர்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்போது அவர்களின் சடலங்கள் கல்லறைகளில் இருந்தாலும் அவர்களது ஆன்மாக்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதைக் காணமுடிகிறது.
ஏழை லாசரின் ஆன்மா ஆபிரகாமுடனும் செல்வந்தரின் ஆன்மா பாதாளத்திலும் இருக்கிறது..மட்டுமல்ல இறந்த செல்வரின் ஆன்மா ஆபிராகாமிடம் பேசவும் செய்கிறது.
அவாரால் தீப்பிழம்பின் வேதனையை உணரவும் முடிகிறது.அவர் உரக்கக் கூறுவதை பாருங்கள் ‘’தந்தை ஆபிரகாமே எனக்கு இரங்கும் லாசர் தமது விரல்நுனியை தண்ணீரில் நனைத்து எனது நாவை குளிர செய்ய அவரை அனுப்பும்.ஏனெனில் இந்த தீப்பிளம்பில் நான் மிகுந்த வேதனைபடுகிறேன்’’
ஆம் இறந்தவர்களின் ஆன்மாவால் மற்றவர்களிடம் பேசவும் முடிகிறது.இன்னுமொன்றை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது இருக்கிறது.அதாவது நல்ல ஆன்மாவின் விரலின் நுனி ஆறுதலின் இருப்பிடம்.
மேலும் பாதாளத்தில் வதைக்கபடுகின்ற கெட்ட ஆன்மா கூட உலகிலே உயிரோடு வாழ்கின்ற உறவினர்களுக்காக வேண்டுதல் செய்கிறது.
இதிலிருந்து நமக்கு நிச்சயமாக தெரிய வருவது என்னவென்றால் இயேசு இந்த காலகட்டங்களை குறித்து தான் பேசுகிறாரே ஒழிய,சிலர் சொல்வதுபோல் இயேசுவின் ரெண்டாம் வருகையில் ஆன்ம சரீரத்தோடு உயிர்தெழுந்து பின் தண்டிக்க படுகிற ஆன்மாவை பற்றி பேசவில்லை
இந்த ஆன்மா,கெட்ட ஆன்மாவாக இருப்பதால் ஆபிரகாம் அதன் வேண்டுதல்களை ஏற்கவில்லை.
கெட்ட ஆன்மாக்கள் கூட உலகில் வாழும் தனது உறவினர்களுக்காக வேண்டுதல் செய்கிறது என்றால் நல்ல ஆன்மாக்களின் மனநிலை எப்படி இருக்கும்?
இது இப்படி இருக்க நீதிமான்களான புனிதர்களுக்கு கடவுளின் அரியணையில் அவரோடு வீற்றிருக்கும் இயேசுவோடு, அரியணையில் இருக்கும் உரிமையை இயேசுவே கொடுத்திருப்பதால்[திருவெளிபாடுகள் 2:26] அவர்கள் நமக்காக இயேசுவிடம் பரிந்து பேசுவார்கள் அல்லவா???
நீதிமான்களான புனிதர்களின் வேண்டுதல்களுக்கு, இயேசுஆண்டவர் செவி மடுக்காமல் இருப்பாரோ???
பாகம்-4
இயேசு ஒரு மலைமீது ஏறி ஜெபித்துக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது.அவரது முழுமையான தெய்வீக மகிமையில் அவர் வெளிபடுகின்றார்.
அந்நேரம் இறந்த மோசேயும் இறவாமல் உயிருடன் விண்ணகம் சென்ற இறைவாக்கினர் எலியாசும் மலையில் இயேசுவுடன் வந்து சேர்ந்து ஜெருசெலேமில் நடந்தேறப் போகின்ற இயேசுவின் இறப்பைக் குறித்து பேசி கொண்டிருக்கின்றனர்.
''லூக்காஸ் 9:29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.
30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.
31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்..........................
34,..............................ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.
35 அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது''.
இந்த குரல் தந்தையாம் இறைவனின் குரல் என்று நமக்கு தெரியும்.
அவர் மேகத்தில் இருக்கின்றார்.தூய தமத்துவத்தின் இரண்டாம் நபரான இயேசு தமது முழு தெய்வீக மகிமையில் ஒளிர்கிறார்.
இங்கே தான் இறந்த மோசேயின் ஆன்மாவும் இறவாமல் மோட்சம் சென்ற எலியா இறைவாக்கினரும் மாட்சியில் தோன்றுகிறார்கள்.
எனவே சந்தேகமற இறந்த புனித ஆன்மாக்கள் மாட்சியுடன்,விண்ணில் இறைவனோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று கண்டுணர முடியும்.
''திருவெளிப்பாடு 6:9 ஆட்டுக்குட்டி ஐந்தாவது முத்திரையை உடைத்தபொழுது, கடவுளின் வாக்கை அறிவித்துச் சான்று பகர்ந்ததற்காகக் கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மாக்களைப் பலிபீடத்தின் அடியில் கண்டேன்.
10 அவர்கள் உரத்த குரலில், "தூய்மையும் உண்மையும் உள்ள தலைவரே, எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு நீர் தீர்ப்பு அளிக்காமல் இருப்பீர்? ........................................................ இன்னும் சிறிது நேரம், அதாவது அவர்களின் உடன் பணியாளர்களான சகோதரர் சகோதரிகளும் அவர்களைப்போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள் பொறுத்திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது''
இங்கே இறந்த நல்ல ஆன்மாக்கள் விண்ணக பலிபீடத்தின் முன்னே ஆண்டவர் திருமுன் நின்று அவரோடு பேசுகிறார்கள்.[அவர்களால் ஆண்டவரோடு பேசமுடிவதை இங்கே நாம் காண தவறவேண்டாம்].
அவர்களுக்கு பதிலும் கிடைகிறது..இது இயேசுவின் இரெண்டாம் வருகையில் இறுதி உயிர்தெழுதலுக்கு பின்பு நடக்கும் சம்பவம் அல்ல.எனவே தான் அவர்களின் உடன் பணியாளர்களான சகோதர சகோதரிகளும் அவர்களை போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள் பொறுத்து இருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
இறந்தவர்களின் ஆன்மாக்கள் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளாக விண்ணக அரியணை முன் நிற்பதை இந்த இறைவசனங்களில் நாம் காணலாம்
''திருவெளிப்பாடு 7:9 இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைக் பிடித்திருந்தார்கள்.
13 மூப்பர்களுள் ஒருவர், "வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?" என்று என்னை வினவினார்.
14 நான் அவரிடம், "என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்" என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது; "இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.
15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.
16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா''
பாகம்-5
நல்ல ஆன்மாக்களின் இளைப்பாறுதலை குறித்து வேதம் கூறுவதை வாசிப்போம்.
''திருவெளிப்பாடு 14:13 பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்; ""இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்" என எழுது" என்று அது ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், "ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்; ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்" என்று கூறினார்''
லூக்காஸ் 23:43-ல் இயேசு நல்ல கள்வனிடம் ‘’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்’’என்றார்.
எனவே அன்றே வான்வீட்டில் இயேசுவோடு நல்ல கள்வன் இருக்கும் பாக்கியம் பெறுகிறார்
.நல்ல கள்வனின் சடலம் கல்லறையில் இருந்தாலும் அவரது ஆன்மா அன்றே விண்ணக வீட்டில் இயேசுவோடு போய் சேர்கிறது.
சபை உரையாளர் 12:7-ல் நாம் ஏற்கனவே கண்டது போல கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புகிறது.
திருப்பாடல்கள் 116:15 சொல்கிறது ‘’ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது;; காரணம் ஒரு மனிதன் இறக்கும்போது அவன் ஆன்மாவில் விண்ணில் பிறக்கிறான்.
''2-கொரிந்தியர் 5 :6 ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.
7 நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.
8 நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்''.
''பிலிப்பியர் 1:21 ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.
22 எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை.
23 இந்த இரண்டுக்குமிடையே ஒரு இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது.-
24 ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது''
இதிலிருந்து நல்ல ஆன்மாக்கள் உயிர் நீத்த பின்பு கிறிஸ்துவோடு இருப்பது தெள்ள தெளிவாகிறது.
ஆனால் எனது பிரிவினை சபை நண்பர் சொல்கிறார் ,
இறந்த ஆன்மாக்கள் கல்லறைகளில் நித்திரையில் இருந்து விட்டு இயேசுவின் இரண்டாம் வருகையில்தான் இயேசுவோடு இருப்பார்கள் என்று.
ஆனால் மேற்கண்ட வசனங்களில் அப்படி சொல்லவில்லையே
இயேசு இரண்டாம் வருகையில் வரும்வரை ஆன்மா நித்திரையில் காத்து இருப்பதாக இருந்தால் புனித பவுல் உலக பணிகளை பொறுமையோடு நடத்தி முடித்துவிட்டு இறந்து நித்திரைக்கு சென்றால் போதுமே.
ஆனால் அப்படியல்லாமல் உயிர் நீத்தவுடன் கிறிஸ்துவோடு இருக்கப் போவதால் தான் அவரது உள்ளம் மரணத்திற்கு ஆவலாய் ஏங்குகிறது.
''எபிரேயர் 12:22 ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.
23 விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,
24 புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.''
நிறைவுபெற்ற நேர்மையாளர்கள் என்று இங்கேக் குறிப்பிடுவது நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆன்மாவை தான்.
''1தேசலோனிக்கர் 5:10 நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு இறந்தார்''
ஆம் இந்த பூமியில் வாழ்ந்தாலும் அல்லது இறந்து விட்டாலும் அவரோடு இணைந்து வாழவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.அதற்காக அவர் நம்பொருட்டு இறந்தார்.
''யோவான் 17:24 "தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்''
''யோவான்12:26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்" என்றார்.''
ஆம் சர்வ வல்லமையுள்ள கடவுளாம் இயேசு இருக்கும் இடமாகிய விண்ணகத்தில் அவரது தொண்டர்களாகிய இறந்த புனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை மிகதெளிவாக அறிந்து கொண்டோம்.
இனி வரும் பாகத்தில் விண்ணக புனிதர்களின் மகிமையை பற்றி பார்ப்போம்
பாகம்-6
நீதிமானாக வாழ்ந்த ஒரு நல்ல மனிதன் இறக்கும்போது இந்த உடலை விட்டு குடிபெயர்ந்து விண்ணக வீட்டில் கடவுளோடு குடியேறுவதை நாம் ஏற்கனவே கண்டோம்.
ஆம் அவர் ஆன்மாவில் உயிர்த்தெழுந்தவராய் விண்ணிலேக் கடவுளோடு சென்று வாழ்கின்றார்.
‘’லூக்காஸ் 2௦: 37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, "ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள்" என்று கூறியிருக்கிறார்.
38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்’’.
கடவுள்,இறந்தோரின் கடவுள் அல்ல மாறாக வாழ்வோரின் கடவுள் என இயேசு சொல்லுகின்ற போது இம்மண்ணில் இறந்து போன ஆபிரகாம்,ஈஸாக்கு,யாக்கோப் இவர்களின் கடவுள் என சொல்கிறார் ஏனெனில் இந்த நல்ல மனிதர்கள் ஆன்மாக்களில் கடவுளோடு வாழ்ந்து கொண்டிருகிறார்கள்
‘’லூக்காஸ்:2௦: 35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.
36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே’’.
‘’எபிரேயர் 1: 14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா’’
‘’திருப்பாடல்கள் 8: 5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்’.
இவ்வாறு இறந்த புனிதர்கள் விண்ணிலே மகா மேன்மையில் துலங்குகிறார்கள்.
மரணத்திற்கு பின்பு அவர்கள் கடவுளை விட்டு விலகி இருக்கவில்லை மாறாக அவரோடு அவரது பிள்ளைகளாக விண்ணில் இருக்கிறார்கள்
இத்தகைய மாபெரும் மகிமையில் புனிதர்கள் கடவுளோடு இருக்கும்போது நமக்காக ஆண்டவரிடம் பரிந்து பேசி,நமது விண்ணப்பங்களை பெற்று தருகிறார்கள்.
‘’திருவெளிப்பாடு 8: 3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.
4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது’
இறைமக்களின் செபத்திற்கு தூப புகையிட்டு அதை ஒரு வானதூதரால் கடவுள் முன்னிலையில் ஒப்புகொடுக்க முடிகிறதென்றால் வானதூதர்களை போல அதுவும் ஒருபடி மேலே கடவுளின் மக்களாகவே இருக்கும் இறந்த புனிதர்களுக்கு நமது செபத்தை எடுத்து கடவுள் முன் உயர்த்த முடியாதா?
நிச்சயமாக அவர்களால் முடியும்.
புனிதர்கள் நமக்காக இறைவனிடம் பரிந்துபேசி நமது மன்றாட்டுக்களை பெற்று தருகிறார்கள் என்பதை நாம் பல்வேறு புனிதர்களின் திருத்தலங்களில் கண்டு அனுபவித்து கொண்டு தானே இருக்கிறோம்..
பாகம்-7
புனிதர்களின் செபத்தின் மகிமை:-
''1பேதுரு 3:12 ஏனெனில் ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை நோக்குகின்றன. அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைச் செய்வோருக்கு எதிராக இருக்கின்றது''
''திருப்பாடல்கள் 34:15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்''
இந்நிலையில் திருப்பாடல்கள் 53:2-3 சொல்கிறது
''திருப்பாடல்கள் 53:2 கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ என்று பார்க்கின்றார்.
3 எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டு போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர் கூட இல்லை''
மேலும்
''திருப்பாடல்கள் 143:2 தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்; ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும் உமது திருமுன் நீதிமான் இல்லை''
ஆனால் விண்ணிலே கடவுளோடு இறந்த புனிதர்கள் நேர்மையாளர்களாக ஆன்மாவில் இருக்கிறார்கள் என்று ஏற்கனவே எபிரேயர் 12:22-24-ல் கண்டோம்.
இந்த நேர்மையாளர்களான புனிதர்களின் செபத்திற்கு கடவுள் செவிசாய்த்து கேட்பதை திருப்பாடல்கள் 34-15-லும் 1பேதுரு 3:12-லும் நாம் கண்டோம்.
நமக்காக வேண்டுதல் செய்யும் இவர்களது செபத்திற்கு கடவுள் மதிப்புக் கொடுத்துக் கவனமுடன் செவிசாய்த்து கேட்பதால் அதன்வழியாக தெய்வ ஆசீரும் அற்புதங்களும் நம்மில் வந்து சேரும் என்பதில் ஐயம் சிறிதேனும் இல்லை.உண்மையில் ஆண்டவர் பரிந்துரை செபங்களை விரும்புகிறார்.
பரிந்துரை செபங்களை இறைவன் விரும்புகின்றார்:-
யாக்கோபு 5:16சொல்கிறது ‘’ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்’’
எனவே தான் குருக்களும் பாஸ்டர்களும்,பொதுநிலையின நற்செய்தி அறிவிப்பாளர்களும் மக்களுக்காக செபிக்கிரார்கள்.அந்த செபத்தை கேட்டு இறைவனும் விண்ணக கொடைகளையும் அசீர்வாதங்களையும் மக்கள் மீது பொழிகின்றார்.
நீதிமான்களான நல்ல மனிதர்கள் பாவிகளுக்காக செபிக்கவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.
அவ்வாறு செபிக்கும்போது இறைவன் அந்த பாவிகளை மன்னிக்கிறார்.
கடவுள் பாவி ஒருவரின் மன்றாட்டுக்காக யோபுவிடம் செபிக்கக் சொல்வதையும் யோபு செபிக்கவே அந்த மன்றாட்டை கடவுள் ஏற்று கொள்வதையும் இந்த இறைவசனங்கள் மூலமாக அறியலாம்
''யோபு 42:8 ஆகவே இப்பொழுது, "ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்; உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன். என் ஊழியன் யோபு போன்று என்னைப் பற்றிச் சரியாகப் பேசாத உங்கள் மடமைக்கு ஏற்றவாறு செய்யாது விடுவேன்''
யோபு 42:10-ல் யோபுவின் இந்த மன்றாட்டு ஏற்கபடுவதை காண்கிறோம்.
பரிந்துரை செபம் இன்றி அழிவு:-
நல்ல மனிதர்களின் பரிந்துரை செபம் இல்லாமையால் கடவுள் நாட்டு மக்களை அழித்து விடுகிறார்;
ஆண்டவருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையில் தமது பரிந்துரை செபத்தால் ஒரு சுவரை எழுப்பி கடவுளின் கோபம் நாட்டு மக்கள் மீது இறங்காத படி ஒரு பரிந்துரை செபம் செய்யும் ஒருவனை தேடியும் கிடைக்காததால் அவரது கோபம் மக்கள்மீது விழுவதை இந்த இறை வசனம் எடுத்தியம்புகிறது.
''எசேக்கியேல் 22:30 எனக்கும் இந்நாட்டு மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன் மூலம் நான் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை.
31 எனவே நான் அவர்கள்மேல் என் சினத்தைக் கொட்டி என் எரிசினத்தால் அவர்களை விழுங்குவேன். அவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர்கள் தலைமீதே சுமத்துவேன்" என்கிறார் தலைவராகிய ஆண்டவர்''
ஆம் புனிதர்கள் தங்களது இடைவிடா செபங்களினால் சுவரை எழுப்பி மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி வருகிறார்கள் .
அதனால் மக்கள் செய்த பாவங்களை கடவுள், மக்கள் மேல் சுமத்தாமல் மன்னிப்பு வழங்குவார் என்பதை இந்த இறை வசனம் தெளிவாக கூறுகிறது அல்லவா ?
பாகம்-8
பரிந்துரை செபத்தால் அழிவு அகன்றது :-
இஸ்ரேயல் மக்களின் குற்றங்களை முன்னிட்டு அவர்களை கொள்ளை நோயால் வதைக்கவிருந்ததை
மோசேயின் பரிந்துரை மன்றாட்டின் நிமித்தமாக கைவிட்டு அவர்களை கடவுள் மன்னித்து விடுகிறார்.
மோசேயின் பரிந்துரை செபத்தையும் இறைவன் கொடுக்கும் மன்னிப்பையும் வாசிப்போம்
''எண்ணிக்கை 14:19 உம்மை மன்றாடிக் கேட்கிறேன், இம்மக்களின் குற்றங்களை மன்னியும்; உன் அருளிரக்கத்தின் பேரளவின்படியும் எகிப்திலிருந்து இதுகாறும் இம்மக்களை நீர் மன்னித்து வந்தது போன்றும் செய்யும்.
20 ஆண்டவர் மோசேயிடம் கூறியது; உன் வாக்கின்படி நான் மன்னித்துவிட்டேன்;''
விடுதலைப்பயணம் 32:9-14-லும் மோசேயின் பரிந்துரை செபம் வழியாக இஸ்ரேயல் மக்களை மன்னித்துஅவர்களை அழிக்காமல் விட்டு விடுகிறார்.
கடவுள் மிகுந்த கொபமாயிருந்ததால் மோசேயிடம் பரிந்துரை செய்யாமல் இருக்கும்படி கடவுள் சொல்கிறார்.ஏனெனில் அவர்களை அழிக்கும்படி கடவுள் மிக்க சினம் கொண்டிருந்தார்.
என்றாலும் கடவுளின் கருணையில் நம்பிக்கை கொண்டவராக மோசே தொடர்ந்து மன்றாடி இஸ்ரேயல் மக்களை கடவுள் அழிக்காதிருக்கு வகை செய்கிறார்.
வசனங்களை வாசிப்போம்
''விடுதலைப்பயணம் 32:9 மேலும் ஆண்டவர் மோசேயிடம், "இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்.
10 இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்" என்றார்.
11 அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, "ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?
12 "மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்" என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்.
13 உம் அடியாராகிய ஆபிரகாமையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன். நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே" என்று வேண்டிக்கொண்டார்.
14 அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்''
அன்னைமரியின் பரிந்துரை செபம்:-
கடவுளின் திருதிட்டதின்படி அந்நாளில் புதுமைகள் புரியும் நேரம் ஏசுவுக்கு வரவில்லை,
என்றாலும் நீதிமான்களிளெல்லாம் நீதிமானாகிய அன்னைமரியின் ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே கடவுளின் திட்டத்தில் கூட மாற்றங்களை வருவித்து தமது முதல் புதுமையை அந்நேரம் இயேசு செய்கிறார்.
அன்னைமரியின் பரிந்துரைக்கு அவ்வளவு மகிமை இருக்கிறது.
''யோவான் 2:3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.
4 இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.
5 இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.
6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.
7 இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.
8 பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது''.
இறைதிட்டதின் எனது நேரம் இன்னும் வரவில்லையே எனவே இதைபற்றி நாம் என்ன செய்யமுடியும்?நாம் விருந்து கொடுப்பவர் அல்ல விருந்தாளிகள் தான் ஆகவே எனக்கும் உங்களுக்கும் இதில் என்ன கடமையிருக்கிறது? என்று ஒரு சாதாரண விருந்தாளியின் நிலையில் நின்று இயேசு சொல்கிறார்.
ஆனால் அன்னிமரியின் தாயுள்ளம் அந்த இல்லத்தாரின் நெருக்கடி வேளையில் அவர்களுக்கு உதவ துடிக்கிறது.
சாதாரண விருந்தினர்களை போல,அந்த வீட்டாரின் நெருக்கடி வேளையில் சாதாரணமாக வேடிக்கை பார்த்து விட்டு செல்வதற்கு அன்னைமரி ஒன்றும் சாதாரண பெண்ணில்லையே ?
மாறாக விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஒரே கடவுளின் திருமகனை தனது திரு வயிற்றில் தாங்கிட .பாக்கியம் பெற்ற பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட அற்புத தாயல்லவா அவள்?
அன்னைமரியா தன்னிடம் வேண்டிய பிறகு, வராத நேரத்தையும் வரவைத்து தனது முதல் அற்புதத்தை செய்த இயேசு ஆண்டவர், இப்போது அன்னை தனது கோடானுகோடி பிள்ளைகளுக்காக இயேசுவிடம் கேட்கும் வேண்டுதல்களுக்கு செவி மடுக்காமல் இருப்பாரோ?
பாகம்-9
நம்மால் நேரடியாக செபிக்கமுடியாதா?
1பேதுரு3:12 மற்றும் திருப்பாடல்கள் 34:15-17 ஆகிய இறைவசனங்களில் ஆண்டவர் நேர்மையாளர்களின் மன்றாட்டை கேட்கின்றார்.தீமை செய்வோருக்கு எதிராக இருக்கின்றார் என்பதை கண்டோம்.
மேலும்
‘’யாக்கோபு 5:16,நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்’’
என தெளிவாக கூறுகிறது.
விண்ணக புனிதர்கள் நிறைவுபெற்ற நேர்மையாளர்களாக[எபிரேயர் 12:23]இருக்கிறார்கள்.எனவே அவர்களது செபத்தின் வழியாக செபத்தின் கனிகளை மிகுதியாக நாம் அறுவடை செய்யமுடியும்.
எல்லா மனிதர்களும் கடவுளின் பிள்ளைகளே நாம் எல்லோருமே அவரிடம் நேரடியாக செபிக்கமுடியும்.
பாவிகளான நமது செபங்களும் இறைவனின் மகா கருணையை முன்னிட்டு கேட்கப்படலாம். ஆனால் நிறைவுபெற்ற நேர்மையாளர்களான புனிதர்களின் மன்றாட்டுக்கள் கடவுளிடமிருந்து மிக அதிகமான கிருபைகளை கொண்டுவருகிறது.
லூக்காஸ் 15:22-31ஐ படியுங்கள்
ஒரு பாவி மனம்திரும்புகிற போது கடவுள் அவனை ஏற்றுகொள்கிறார்.ஆனால் நேர்மையாளனாக நீதிமானாக வாழும் கடவுளின் பிள்ளைக்கும்,பாவ வாழ்க்கையிலிருந்து மனம்திரும்பி வருகின்ற ஒரு கடவுளின் பிள்ளைக்கும் கடவுள் வித்தியாசம் பாராட்டுகின்றார்.
மனம்திரும்பி வந்த பாவியின் பேரில் மகிழ்ச்சி உண்டாகிறது.மகிழ்ச்சியின் வெளிப்பாடாக விருந்துக்கு ஏற்பாடு நடக்கிறது.விலை உயர்ந்த அணிகலன்கள் அணிவிக்க படுகிறது.
ஆனால் எப்போதும் நீதிமானாக வாழ்ந்த மகனுக்கு
‘’மகனே,நீ எப்போதும் என்னுடன் இருகிறாய்;என்னுடையதெல்லாம்உன்னுடையதே ‘’
என்ற அமைதியான,அர்த்தமுள்ள ஒரே வார்த்தையின் மூலமாக எத்தகைய அதிகாரம் கிடைக்கிறது என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.
நாம் பாவிகளாகவோ,நேர்மையாளர்களாகவோ இருக்காலம் பொதுவாக கடவுள் நமது நன்மைத் தனத்திற்கு ஏற்பவே நமது செபங்களை ஏற்றுகொள்கிறார்.
எனவே தான் நம்மைவிட அதிக இறை நெருக்கத்தில் இருக்கிற பாதிரியாளர்களிடம் நமக்காக செபிக்க வேண்டுமென்று அவர்களை நாடுகிறோம்.அவர்களுடைய பரிந்துரை செபத்தால் விண்ணக கொடைகளையும்,ஆசீர்வாதங்களையும் நாம் அதிகமாக பெற்றுக் கொள்ளமுடிகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க நிறைவுபெற்ற நீதிமான்களாய் இருக்கும் கடவுளின் மக்களான,அன்னைமரியாள் மற்றும் விண்ணக புனிதர்களின் பரிந்துரை செபத்துக்குரிய மகிமையும்,வல்லமையும் பற்றி சிந்தித்து பாருங்கள்!
இத்தகைய வல்லமைமிக்க பரிந்துரை செபத்தை நாம் ஏன் இழக்கவேண்டும்?
பாகம்-10
† இயேசு மட்டுமே பரிந்துரையாளர் என்பது தவறானது.
ஆனால் இணைப்பாளர்[மத்தியஸ்தர்] இயேசு மட்டுமே †
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
சில நண்பர்கள் சொல்வது என்னவென்றால் நமக்கு ஒரேயொரு பரிந்துரையாளர் மட்டுமே உண்டு அவரே இயேசு.
அப்படியிருக்க பிறர் நமக்காக எப்படி பரிந்து பேசமுடியும்?.
இதற்காக அவர்கள் கோடிட்டு காட்டும் வசனம்
‘’உரோமையர் 8: 34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!''
இங்கே கிறிஸ்து நமக்காக பரிந்து பேசுகிறார் என்று தான் சொல்லபடுகிறதே ஒழிய இயேசு மட்டுமே பரிந்து பேசுகிறார் என சொல்லப்படவில்லை .
பிரிவினை சபையினரின் பைபிளில் இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது ஆகவே தான் அவர்கள் குழப்பமடைகிறார்கள் என நினைக்கிறேன்.
‘’உரோமையர் 8:34,கிறிஸ்துவே மரித்தவர்;அவரே எழுந்துமிருக்கிறவர்;அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்;நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே’’
இங்கேயும் நமக்காக வேண்டுதல் செய்பவர் அவரே என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது
மாறாக நமக்காக வேண்டுதல் செய்பவர் அவர் மட்டுமே என்று சொல்லப்படவில்லை.
அவர் மட்டுமே என்று பிரிவினை நண்பர்கள் அவர்களாகவே திரித்து பொருள் கொள்வார்களேயானால் கிறிஸ்து மரித்தவர் என்பதற்கு கிறிஸ்து மட்டுமே மரித்தவர் என்றல்லவா பொருள் கொள்ள நேரிடும் ?
மேலும் மோசே முதல் பலபல இறைவாக்கினர்கள் மற்றும் அன்னைமரியாள் போன்றோர்கள் பரிந்து பேசுவதை நாம் ஏற்கனவே விவிலிய ஆதாரத்தோடு அறிந்துகொண்டோம்..
மேலும்
தூய ஆவியாரும் நமக்காக பரிந்து பேசுகிறார்
''உரோமையர் 8:26 இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.
27 உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்''
எல்லோருமே பிறருக்காக பரிந்துரை செபம் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்
''யாக்கோபு 5:16 ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்''
ஆம் நேர்மையாளர்களான அன்னைமரியா மற்றும் புனிதர்களின் பரிந்துரை மன்றாட்டு வல்லமையுடையது .பயனளிக்க கூடியது.
இணைப்பாளர் என்றாலும் பரிந்துரையாளர் என்றாலும் ஒன்றே என்ற தப்பறை போதனையை சிலர் போதிக்கிறார்கள் ஆனால் உண்மையில் இவர்கள் வெவ்வேறானவர்களே .....
இணைப்பாளர் அதாவது மத்தியஸ்தர் என்றால் தனித்தனியாக இணைப்பின்றி வேறுபட்டு நிற்பவர்களை இணைப்பது ஆனால் பரிந்துரையாளர் என்றால் ஒருவர் இன்னொருவர் மீது கருணையும் இரக்கமும் காட்டும் படி பரிந்துரை வேண்டுதல் செய்பவர்.
அன்னைமரியா பாவிகளாகிய நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிற பரிந்துரையாளர்
ஆனால் இயேசுவோ தமது கல்வாரி பலி வழியாக மனிதகுலத்தை இறைவனிடம் கொண்டு வந்து இணைத்த ஒரே இணைப்பாளர்[மத்தியஸ்தர்]
''1திமோத்தேயு 2:5 ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.
6 அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்''.
ஆம் இணைப்பாளர்[மத்தியஸ்தர்]இயேசு கிறிஸ்து ஒருவரே ஆனால் அன்னைமரியா மற்றும் விண்ணக புனிதர்கள் எல்லோருமே நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி கொண்டிருக்கும் பரிந்துரையாளர்களே
பாகம்-11
இயேசுவின் பெயராலின்றி மீட்பில்லை:-
‘’திருதூதர்பணிகள் 4:12 இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை''
நமது மீட்பு என்பது ஆதாமின் மனிதகுல வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவது என்று நாம் அனைவரும் அறிவோம்.
மனிதகுல மீட்பிற்கு இயேசு ஒருவரின் பெயரே மனிதர்களுக்கு நல்க பட்டிருக்கிறது.
அப்படியானால் மனிதகுல மீட்பில் அன்னைமரியின் பங்கு என்ன?
அன்னைமரி செயலாற்றுவது இயேசுவின் நாமத்தில்தான்.அவள் தன்னையே கடவுளின் அடிமையாக வெளிப்படுத்துகின்றாள்[லூக்காஸ் 1:38]
1கொரிந்தியர் 3:9-ல் பவுல் சொல்கிறார்,
’’நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள்’’
அன்னைமரியும் இறைவனின் உடன் உழைப்பாளர்.
ஆம் அன்னைமரியாள். இயேசுவின் கீழில்,இயேசுவுடன் உழைக்கும் உடன் உழைப்பாளர்.
ஒரு இறைபணியாளர் தமது மந்தையின் ஆடுகளை இயேசுவிடம் இட்டு செல்வதைப்போல் அன்னைமரியும் மனிதகுலம் முழுவதையும் இயேசுவிடம் இட்டு செல்ல உழைக்கிறார்.கடவுளால் நேரடியாகவே சாத்தனின் பகைவனாக நியமிக்கபட்டவள் அன்னைமரியாள்[தொடக்கநூல்3:15]
தந்தையிடமிருந்து வருகின்ற சாத்தானுக்கெதிரான வல்லமையான படைக்கலம் அவள்.
தந்தை நியமித்ததும் அவரிடமிருந்து வருகின்றதுமான படைக்கலம் சாத்தானை கீழடக்க வலிமையுள்ளது.\
ஆகவே அந்த படைகலமான அன்னைமரி மனிதகுல முழுவதையும் இறைவனிடம் கொண்டு சேர்க்க வல்லவள்.
புனிதர்கள் அருள் வரங்களை நம்முடன் பகிர்பவர் :-
ஆண்டவாகிய கடவுள் சொல்கிறார்
‘’யோவான்4:37,37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.
38 இவ்வாறு "விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்''
மோசே ஆண்டவரில் ஐக்கியப்பட்டு அவருக்கு கீழ்படிந்து வாழ்ந்தார்.மட்டுமல்ல விடுதலைப்பயணம் 34:28-ல் சொல்கிறபடி அவர் மலையின் முகட்டில் நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார்.அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை.தண்ணீர் பருகவும் இல்லை இவ்வாறு அவர் விண்ணக கொடைகளாலும் அருளாலும் நிரம்பி இருந்தார்.
ஆனால் இவரிடம் இருகின்ற இந்த கொடைகளில் சிலவற்றை எழுபது பேர்களுக்கு கடவுளே பகிர்ந்து கொடுக்க வகை செய்கிறார்.
வசனத்தை வாசிப்போம்
‘’எண்ணிக்கை 11:24 அவ்வாறே மோசே வெளியே சென்று மக்களிடம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறினார்; மக்களின் மூப்பரில் எழுபது பேரை அழைத்துக் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தி வைத்தார்.
25 பின்னர் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து அவரோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்''
மோசே தமது வாழ்வால் விதைத்ததை எழுபது மூப்பர்கள் இலவசமாக தமக்கென்று அறுவடை செய்கிறார்கள்.
இதைபோலவே புனிதர்களின் வழியாக இலவசமாக வரங்களை நாம் பெற்று கொள்ளமுடியும்.
விண்ணக புனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்த போது தங்களது நல்ல வாழ்வாலும் செயலாலும் மேலானவைகளை விதைத்தார்கள்.ஆனால் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அவர்களது அறுவடையின் பலனில் பங்குகொண்டு ஆனந்தமாக அனுபவிக்கமுடியும்.
அதேபோல் அன்னைமரி தமது பரிசுத்தத்தையும் அருள் கிருபைகளையும் தம்மில் நிறைந்து ததும்பும் தூய ஆவியையும் நமக்கு பகிர்ந்து பரிசாக தருகின்றாள்
எங்கள் வாழ்க்கையில் நிஜமாகவே புனிதர்களிடமிருந்தும் மிக அதிகமாக அன்னை மரியிடமிருந்தும் அவர்களது விண்ணகக் கொடைகளில் பங்குகொண்டு தான் இருக்கின்றோம்.
எனவே நீதிமான்களான புனிதர்களையும் அன்னைமரியையும் நாம் நமது ஐக்கியத்தில் கொண்டு,அவர்களை வணக்கத்தோடு மரியாதை செலுத்துவோமாக,அதை கடவுளே விரும்புகின்றார்.
இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையானது இயேசு ஆண்டவரை மட்டுமே இறைவனாக ஏற்றுகொண்டு,அவருக்கு மட்டுமே சிறப்பான வழிபாடும் புகழுரைகளையும் .செலுத்துகின்றது.மாறாக இவ்வுலகிலுள்ள அனைத்து புனிதர்களையும் எல்லோரும் ஏற்று கொண்டே ஆக வேண்டும் என யாரையும் கட்டாய படுத்துவதில்லை.
ஆனால் விண்ணக புனிதர்கள் தங்களது மறைசாட்சியான வாழ்வால் கடவுளிடமிருந்து பெற்றிருக்கும் விண்ணக கொடைகளையும் வரங்களையும் இலவசமாக நாம் பகிர்ந்து கொள்ள முடிகின்றபோது இத்தகைய மகிமையான விண்ணக கொடைகளை நாம் ஏன் வீணாக இழக்க வேண்டும்?
பாகம்-12
பிரிவினை சபையை சார்ந்த எனது நண்பர் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி,புனிதர்களுக்கும் வானதூதர்களுக்கும் வணக்கம் செலுத்துதல் கூடாது என சொல்லுகிறார்.வசனத்தை வாசிப்போம்.
‘’திருவெளிப்பாடு 22:8 யோவானாகிய நானே இவற்றையெல்லாம் கண்டேன், கேட்டேன். அப்பொழுது இவற்றை எனக்குக் காட்டிய வானதூதரை வணங்கும் பொருட்டு அவருடைய காலடியில் விழுந்தேன்.
9 அவரோ என்னிடம், "வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர் சகோதரிகளுக்கும், இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைப்பிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்" என்றார்.''
ஆனால் தந்தையாம் கடவுளே ஒரு வானதூதரை எச்சரிக்கையாக இருந்து அவரது வாக்குக்கு செவி சாய்க்க வேண்டுமென்று சொல்கிறார்.அதாவது மிகுந்த மரியாதையோடும் பவ்வியத்தோடும் அவருக்கு கீழ்படிந்து நடக்கவேண்டுமென்று ஆணையிடுகிறார்.
இங்கே வானதூதருக்கு மோசே கொடுக்கவேண்டிய மரியாதையை குறித்து பேசப்படுகிறது.
''விடுதலைப்பயணம் 23:20 வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
21 அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக்கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது.
22 நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்''
ஆம் அந்த வானதூதர் தந்தை கடவுளின் நாமத்தில் வருபவராக இருக்கிறார்.கடவுள் அந்த வானதூதர் வழியாக பேசுகிறார்.வானதூதரின் வாக்குகள் தநதையின் வாக்குகளாக இருகின்றன.
எனவே தான்
‘’..நீ அவர் சொல் கேட்டு நடந்தால்,நான் சொல்வது யாவற்றையும் கேட்டு செயல்பட்டால் ....’’
என்று கடவுள் சொல்கிறார்.
நமது விண்ணக புனிதர்களும்வானதூதர்களை போல கடவுளின் நாமத்தில் வருபவர்களே!அவர்கள் கடவுளின் சொந்தமாகவும் அவருடைய மகிமைக்காகவே உழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆம் புனிதர்கள் தங்கள் மகிமைக்காக உழைப்பவர்கள் அல்ல,மாறாக கடவுளின் மகிமைக்காக,கடவுளுக்காக உழைப்பவர்கள்.
ஆனால் கடவுளோ அவர்களது மகிமையைக் குறித்து கவனத்தோடு இருக்கிறார்.வானதூதர்களின் மகிமையைக் குறித்து கடவுள் கவனத்துடன் இருப்பதை விடுதலைப்பயணம் 23:20-22-ல் பார்த்தோமே!
எனவே நாமும் அவர்களை மதித்து மரியாதையோடு வணங்க கடமை பட்டிருக்கிறோம்.
பாகம்-13
விடுதலைப்பயணம் 22:2௦-22 ல்’...............என் பெயர் அவரில்[வானதூதர்] உள்ளது..............’’என கடவுள் மோசேயுடன் சொல்வதை முந்தைய பாகத்தில் பார்த்தோம்.
யோசுவா , வானதூதரை முகம் குப்பற வணங்கியதை சொல்லும் இறைவசனத்தை காண்போம்
''யோசுவா 5:13 அச்சமயத்தில் யோசுவா எரிகோவில் இருந்தார். அப்போது அவர் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ! ஓர் ஆடவர் அவர் எதிரில் தோன்றினார். கையில் உருவிய கத்தியுடன் அவர்நின்று கொண்டிருந்தார். யோசுவா அவரிடம் சென்று, "நீர் எங்கள் பக்கமா? அல்லது எதிரிகள் பக்கமா?" என்று கேட்டார்.
14 அவரோ, "இல்லை, நான் ஆண்டவரின் படைத்தலைவன் என்ற முறையில் இப்பொழுது வந்துள்ளேன்" என்றார். யோசுவா முகம் தரையில்பட வீழ்ந்து வணங்கி அவரிடம், "என் ஆண்டவர் தம் அடியானுக்கு என்ன கூறியுள்ளார்?" என்று கேட்டார்.
15 ஆண்டவரின் படைத்தலைவர் யோசுவாவிடம், "உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில் நீ நிற்கும் இடம் புனிதமானது" என்றார். யோசுவாவும் அப்படியே செய்தார்.''
ஆண்டவரின் படைத்தலைவரான [காண்க:திருவெளிப்பாடு 12:7,தானியேல் 12:1&தானியேல் 1௦:13] வானதூதருக்கு யோசுவா மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறார்.
நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்ன்வென்றால் யோசுவா தன் முகம் தரையில் பட வீழ்ந்து வணங்கி அவருக்கு மரியாதை செய்கிறார்.
இனி நாம் திருவெளிப்பாடு 22:8-9-ல் யோவான் வானதூதரின் முன் விழுந்து வணங்கிய போது அதை ஏன் வானதூதர் தடை செய்கிறார் என்று பார்ப்போம்.
இங்கே புனித யோவான்,யோசுவாவை போல் விழுந்து வணங்கி மரியாதை செய்கிறார்.
ஆனால் யோவான்,ஒரு சாதாரண மனிதர் அல்ல, மற்ற பதினொன்று திருதூதர்களுடன் சேர்ந்து இவர் அனுபவிக்க போகும் மகிமையை குறித்து இயேசுவிடம் வாக்குத்தத்தம் பெற்றவர்.
அதை வாசிப்போம்
''மத்தேயு 19:28 அதற்கு இயேசு, "புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்''
இத்தகைய மகிமைக்குரியவர் தான் யோவான்,
ஆகவே இவர் வானதூதர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டியதில்லை என்றாலும் இவர் தனது எளிமை தனத்தினால் வானதூதருக்கு அப்படிப்பட்ட மரியாதையை செலுத்துகிறார்.
ஆனால் புனித யோவானின் இத்தகைய மாபெரும் பெருமைக்குரிய மகிமையை அறிந்திருந்த வானதூதர் தமது முன்னிலையில் யோவான் முகங்குப்புற விழுந்து தம்மை வணங்கியதை தடுத்து விட்டார்.
செய்த உதவிக்கு ஒருவர் நமக்கு நன்றி சொன்னால்,நாமும் பெருந்தன்மையாய் எனக்கு வேண்டாம்.கடவுளுக்கே நன்றி செலுத்துங்கள் என்று சொல்வோம் அல்லவா ?
அதனால் உதவி செய்த மனிதர்களுக்கு நன்றி செலுத்துதல் கூடாது என அர்த்தம் கொள்ள முடியுமா?
அதேபோல் தான் தமக்கு வணக்கம் செலுத்த வந்த புனித யோவானை வானதூதர் ,தடுத்ததால் சாதாரண மனிதர்களான நாம் எல்லோருமே வானதூதர்களுக்கோ புனிதர்களுக்கோ வணக்கம் செலுத்துதல் கூடாது என அர்த்தம் கொள்ள வேண்டியதில்லையே
யோசுவா வானதூதர் முன்னிலையில் முகம் தரையில் பட விழுந்து அவரை வணங்கியதையும் மோசேயிடம் கடவுள் வானதூதருக்கு எத்தகைய மரியாதை செலுத்தப்பட வேண்டும் என சொல்வதையும் பார்த்தோமே
எனவே நாம் வானதூதர்களுக்கும் புனிதர்களுக்கும் வணக்கம் செலுத்தவேண்டும்.
ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது,வணக்கம் வேறு ஆராதனை வேறு
ஆராதனை செய்வது கடவுளை மட்டுமே ஆனால் வணக்கம் நாம் யாருக்கும் செலுத்தலாம்.
ஆராதனை கடவுளுக்குரிய மகிமை அது யாருக்கும் விட்டுக்கொடுக்கப்படக் கூடாதது.
பாகம் -14
புனிதர்கள் அதிகாரம் வாய்ந்தவர்கள்:-
சில குறிப்பிட்ட துறைகளுக்கு வானதூதர்கள் அதிகாரமும் வல்லமையும் வாய்ந்தவர்களாக இருப்பதை விவிலியத்தில் காணமுடிகிறது.
''திருவெளிப்பாடு 14:18 நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், "உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது" என்று உரத்த குரலில் கூறினார்''
இங்கே வானதூதர் நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டவராக இருப்பதை காண்கிறோம்.
''திருவெளிப்பாடு 7:2 கதிரவன் எழும் திலையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து''
இவ்வாறு அதிகாரம் கொண்டிருக்கிற வானதூதர்களின் வல்லமையும் அதிகாரமும் கடவுளின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
''2 சாமுவேல் 24:15 ஆண்டவர் காலை முதல் குறித்த நேரம் வரை இஸ்ரயேலின் மீது கொள்ளை நோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர்.
16 வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அவன்மீது தன் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையை குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக் கொண்டிருந்த வானத்தூதரை நோக்கி, "போதும்! உன் கையைக் கீழே போடு "என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எப+சியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார்
25 தாவீது அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவருக்கு எரிபலிகளும், நல்லுறவு பலிகளும் செலுத்தினார். நாட்டுக்காகச் செய்த மன்றாட்டை ஆண்டவர் கேட்டருள, இஸ்ரயேலிலிருந்து கொள்ளை நோய் நீங்கியது''
எனவே ஆண்டவர் வானதூதர்களுக்குக் கொடுக்கும் அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்குக் கீழ்பட்டது என்பதை அறிகிறோம்..
''
விண்ணக புனிதர்களும் வானதூதர்களைப் போல் கடவுளின் மக்களாக இருக்கிறார்கள் என்பதை திருவிவிலியம் தெளிவுபட சொல்கிறது.
''லூக்காஸ் 2௦:36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே''
இந்நேரத்தில் ஏற்கனவே இந்த தொடரில் நாம் பார்த்த, திருவெளிப்பாடு 3:21 மற்றும் திருவெளிப்பாடு 2:26-28 ஆகிய இறைவசனங்களை ஒருமுறை கூட விவிலியத்தை எடுத்து படித்து பாருங்கள்.
புனிதர்கள் தங்கள் மரணம் வரை இறைவனின் செயல்களை செய்து வாழ்வில் வெற்றி வாகைசூடி மறைந்தவர்கள்.
இவர்களுக்கு இறைவனால் மக்களினங்கள் மேல் அதிகாரம் நல்கப்படுவதைக் காண்கிறோம்.இத்தகைய இறந்த நீதிமான்களை குறித்துதான் வேதாகமம் சொல்கிறது.
‘’சாலமோனின் ஞானம் 3:8 நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார்''
ஆம் புனிதர்கள் மக்களினங்கள் மீது அதிகாரம் கொண்டவர்கள் என்றாலும் வானதூதர்களின் அதிகாரத்தின் மேல் இறைவனுக்கு அதிகாரம் இருப்பது போல இந்த புனிதர்கள் இறைவனின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.''ஆண்டவரே அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார்''
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடம் புனித பேதுருவின் வழிவழியாக இறைவன் இயேசுவிடமிருந்து பெற்று கொண்டிருக்கிற அதிகாரத்தைக் குறித்து ஒருமுறை வாசிப்போம்
''மத்தேயு 16:19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்''
இந்த அதிகாரத்தை பயன்படுத்தி கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு புனிதர்களையும் ஒவ்வொரு துறைக்கு பாதுகாவலர்களாகவும் பரிந்துரையாளர்களாகவும் ஏற்படுத்துகின்றது.
உதாரணமாக புனித யூதா ததேயுவை கைவிடபட்டவர்களின் பாதுகாவலராக திருச்சபை ஏற்படுத்தி உள்ளது.
''திருவெளிப்பாடு12:7 பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.
8 அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று''
மிக்கேல் அதிதூதர் சாத்தானை வீழ்த்துவதற்கு இறைவனிடம் அதிகாரம் பெற்றிருப்பது போல இன்றும் கத்தோலிக்க திருச்சபை வழியாக ஒவ்வொரு புனிதர்களும் ஒவ்வொரு துறைக்கு பாதுகாவலாராக நியமிக்கப்பட்டு , இம்மண்ணுலகின் மீது செயல்பட்டு கொண்டிருகிறார்கள்
பாகம் -15
புனித அந்தோணியாரின் சாட்சியம்:-
சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த புனித அந்தோணியாருக்கு அன்னைமரி விண்ணகத்தில் இருக்கிறாரா என்று ஒரு சந்தேகம் எழுந்தது.
எனவே அவர் வழக்கமாக அன்னைமரியிடம் செபிக்கும் செபத்தை செபிக்க செல்லாமல் தனது அறையிலேயே இருந்துவிட்டார்.
ஆனால் அந்நேரம் அவரது அறையிலே அன்னைமரி காட்சி நல்கி சொன்னாள்
''இறைவன் இயேசுவையே உதரத்தில் தாங்கிய என் சரீரத்தை கல்லறையில் அழிவுறும்படி ஆண்டவர் கையளிக்கவில்லை.அவர் என்னை ஆன்ம சரீரத்தோடு எழச்செய்து விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டினார்’’
இந்த செய்தியை சொல்லிவிட்டு அன்னைமரி மறைந்துவிட்டாள்.
புனித அந்தோணியார் தான் வாழ்ந்த காலத்தில் இந்த செய்தியை உலகிற்கு அறிவித்தார்.
இந்த சத்தியத்தை உலகிற்கு எடுத்தியம்பிய அவரது நாவு இன்றுவரை அழியாமல் இருக்கிறது.
இத்தாலி நாட்டிலே பதுவா நகரில் கடந்த 6௦௦ ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை அவரது அழியா நாவு பயபக்தியோடு பக்தர்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னைமரியினைக் குறித்த இந்த பேருண்மையை உலகுக்கு எடுத்தியம்பிய அவரது அழியா நாவை எல்லாம் வல்ல கடவுள் கல்லறையில் அழிவுறும்படி கையளிக்கவில்லை அன்னைமரியாயை பற்றிய இந்த பேருண்மைக்கு அவரது அழியா நாவு ஒரு நிலையான சாட்சியாக விளங்குகிறது.
விண்ணக வீட்டில் ஆன்மாவில் மட்டும் வாழ்கின்ற விண்ணக புனிதர்களைப் போலன்றி,அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்றார்கள் என்ற நம்பிக்கை கிறிஸ்தவத்தின் தொடக்க கால முதலே விசுவாசிகள் மத்தியில் ஆழமாக வேரூன்றி இருந்தது.
இந்த நம்பிக்கை விசுவாச சத்தியமாக கத்தோலிக்க திருச்சபையால் தக்க ஆய்வுக்குப் பிறகு பிரகடனப்படுத்தப்பட்டு அறிக்கையிடபட்டது.
புனித அந்தோணியாரின் வாழக்கையில் நடந்த மேற்கண்ட நிகழ்வும் இந்த சத்தியதிர்கான இன்னொரு ஆதாராமாகத் திகழ்கிறது.
பாகம் -16
உத்தரிக்கிற ஸ்தலம்:-
ஒரு மனிதன் விண்ணகம் செல்ல வேண்டுமென்றால் அவன் மாசற்றவனாக, தூயவனாக இருக்கவேண்டும்.
பாவத்தோடு மரிக்கும் ஒரு மனிதன் விண்ணகம் செல்லமுடியாது என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
1யோவான் 5:16சொல்கிறது ‘’...சாவுக்குரிய பாவமும் உண்டு....’’ இந்த பாவம் ஒரு மனிதனின் ஆன்மாவை சாவுக்குள் வீழ்த்துகின்றது.
ஆனால் ஒரு மனிதனை சாவுக்குள் வீழ்த்தாத பாவமும் உண்டு அதுதான் அற்பபாவம் .அது சாவான பாவம் அல்ல
''1 யோவான் 5:17 தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல'.
'' இனி 1யோவான் 5:16 வசனத்தின் தொடக்கத்தை வாசிப்போம்
''பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்.''
‘’
இங்கே ஒரு மனிதன் சாவுக்கேதுவான பாவம் செய்யாமல் வெறும் அற்பபாவம் மட்டும் செய்யும்போது அவனுக்காக இன்னொருவர் செபித்தால் அந்த செபத்தின் வழியாக அந்த பாவி மன்னிப்பை பெற்று வாழ்வு பெறுகின்றான்.
இங்கே அவன் வாழ்வு பெறுவது அந்த பாவியின் சொந்த செயலால் அல்ல மாறாக பிறருடைய செபத்தின் வழியாகத்தான்.
''யோவான் 4:37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.
38 இவ்வாறு "விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்''
இந்நிலையில் சாவுக்குரிய பாவம் செய்யாமல் வெறும் அற்ப பாவங்கள் செய்த ஒருவர் அந்த பாவத்தோடு இறந்து போகின்றார்.இந்த அற்பப் பாவங்களால் அவர் ஆன்மா கறைபடிந்து மாசற்ற நிலையை இழந்து நிற்கிறது.
இந்த பாவ கறைகளோடு அவரால் நேரடியாக விண்ணகம் செல்ல முடியுமா?முடியாது.ஆனால் இந்த பாவம் அவரது ஆன்மாவுக்கு ஆன்மீக சாவை வருத்தி வைப்பதில்லை.அப்படியானால் இந்த ஆன்மாவின் நிலை என்ன?
இந்த சூழ்நிலையில் இயேசுவால் உருவாக்கப்பட்டு[மத்தேயு:16:18-19],
தூய ஆவியால் வழிநடத்தபடுகின்ற[யோவான் 16:12-13],
கத்தோலிக்க திருச்சபை
‘’உத்தரிக்கிற ஸ்தலம்’’
என்ற ஆன்மீக சுத்திகரிப்பு ஸ்தலத்தை குறித்த உண்மையை வெளிபடுத்துகின்றது.
‘’செக்கரியா 13: 8 நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்; மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்', என்கிறார் ஆண்டவர்.
9 இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்; பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்; அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள்; நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்; 'இவர்கள் என் மக்கள்' என்பேன் நான், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்."
இதேபோல் மாபெரும் துன்பங்கள் வேதனைகள் என்ற நெருப்பினால் அற்பபாவத்தோடு இறந்து போகின்றவரின் ஆன்மாக்கள் சுத்திகரிக்க படுகின்ற ஆன்மீக நிலை தான் உத்தரிக்கிற ஸ்தலம்
''1 கொரிந் 3 : 13 ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்; தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.
14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.
15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்''.
இந்த ஆன்மாக்களுக்காக இவ்வுலகில் வாழ்பவரால் ஒப்புகொடுக்கபடும் செபங்களாலும் ,திவ்ய பலிகளாலும் புண்ணிய அறச்செயல்களாலும்,அவர்களுடைய இந்த மாபெரும் துன்பங்களையும் வேதனைகளையும் குறைக்கமுடியும்.
''1யோவான்5:16.......அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்''
உத்தரிக்கிற ஸ்தலத்தில் தூய்மைபடுத்துவதின் வழியாக ஒரு ஆன்மா பரிசுத்த வெண்மையை தரித்து கொள்கிறது
‘’திருவெளிப்பாடு 3:5 வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்''
இவர்கள் பரிசுத்தம் என்ற வெண்ணாடை தரிக்கபட்டவர்கள் மோட்சம் சேரத் தகுதியானவர்கள்.இவர்கள் தான் நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகள் இத்தகைய நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகளை தான் எபிரேயர் 12:23-ல் வாசித்தோம்.
இவ்வாறு உத்தரிக்கிற ஸ்தலம் என்பது அற்பபாவத்தோடு இறக்கும் ஒருவரின் ஆன்மா சுத்திகரிக்கப்படும் உலை.
அந்த துன்ப வேதனை என்ற தீச்சூளையில் சுத்திகரிகப்பட்ட பின்பு ஆன்மாக்கள் மோட்சம் அடைகின்றனர் என்பது தான் உண்மை,
ஆகவே மரித்த ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புகொடுப்பது,செபிப்பது,தானதர்மங்கள் செய்வது போன்றவைகளை அதிகமாக செய்திட மறவாதீர்கள்
பாகம் -17
அன்னைமரிக்கு எதிரான சாத்தானின் திட்டம்:-
நாம் ஏற்கனவே வாசித்தது போல
‘’தொடக்கநூல் 3:15, உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார்''.
இங்கே பெண் என்று குறிப்பிடுவது அன்னைமரியாள்.
அவள் வித்து இயேசு.
ஆகவே உனக்கும் என்று குறிக்கபடுகிற சாத்தானுக்கும் பெண்ணுக்கும் தான் முதல் பகைமை!
எனவே அன்னைமரி தான் சாத்தானின் முதல் பகைவனாக இருக்கும் படி இறைவனே ஏற்படுத்திவிட்டார்.
இதுதான் இறைவனின் திருசித்தம்.ஆம் சாத்தானின் பகைவனாக செயல்படும் படி தந்தையாம் கடவுளே அன்னைமரியை நியமித்திருக்கிறார்.
அவள் விழுந்துவிட்ட மனிதகுலத்தை மீட்டு இரட்சிக்கும் பணியிலே தந்தையாம் இறைவனின் வல்லமைமிக்க படைக்கருவியாக ஆகிறாள்.
ஆம் சாத்தானுக்கெதிராக அவனது பகைவனாக செயல்படும்படி அவரது வலிமையான படைக்கலமாக அவள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.எனவே தான் சாத்தான் எப்போதும் அன்னைமரியை குறிவைத்தே எதிர்த்து நிற்கிறான்.
எச்சரிக்கை! அறிந்தோ அறியாமலோ அன்னைமரிக்கு எதிராக எழுபவர்கள் சாத்தானின் அணியில் நின்று சாத்தானுக்காக செயல்புரிகிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்!
சாத்தான் மாபெரும் அகங்காரி அவன் கடவுளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்புகிறவன்,அவனது வல்லமைகளை வெளிப்படுத்தி கடவுளைப்போல ஆராதனை பெற விரும்புகிறவன்.எப்போதுமே கடவுளை போல தானும் இருப்பதாகக் காட்டிக்கொள்ள போராடி கொண்டிருக்கிறவன்.
ஆனால் இந்த போராட்டத்தில் அவனுக்கு வெற்றி இல்லை என்றும் தனக்கிருப்பது கொஞ்சகாலமே என்றும் அவனுக்குத் தெரியும்
''திருவெளிப்பாடு 12:12...தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது; அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது"
அவனது தோல்வி முன் குறிக்கப்பட்டது தான்,ஆனால் இந்த தோல்வியை நேரடியாக கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளவே அவன் விரும்புகிறான்.ஏனெனில் இதன் வழியாக கடவுள் மட்டுமே அவனை தோற்கடிக்க முடிந்தது என்றும் அதன்மூலம் கடவுளுக்கு அடுத்த படியான வலியவன் நான்தான் என்றும் அவனால் மார்தட்ட முடியும்.
கடவுளோ நீதியை நிலைநாட்டுபவர்.சாத்தான் எந்த விதத்தில் வெற்றி அடைந்தானோ அதே விதத்திலேயே அவன் தோற்கடிக்கப்படவேண்டும்.அப்போதுதான் அவனது தோல்வி முழுமை பெறும்
.சாத்தான் ஏவாள் என்ற ஒரு பெண்ணை விழச்செய்து அந்தப் பெண்ணின் வழியாக ஆதாமை வீழ்த்தி அதன்மூலம் மனுகுலத்தையே விழச்செய்தான்.அதை சீர் செய்வதற்கு ஒரு பெண்ணை நமக்கு நல்கி அந்த பெண்ணின் வழியாக சாத்தான் தோற்கடிக்க படவும்,அந்த பெண்ணின் வித்தாக வருகின்ற புதிய ஆதாம் அனைத்தையும் பழைய மகிமைக்குத் திருப்பிக் கொண்டுவரவும்,நீதியின் தேவன் திருவுளம் கொண்டார்.
தான் தோற்கடித்த ஒரு பெண்ணினத்தாலேயே தான் வீழ வேண்டும் என்ற இந்த இறைவனின் நீதியின் திட்டம் சாத்தானுக்கு மிகுந்த கசப்பாக இருக்கிறது.அதை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.
அதுவும் படைப்பு பொருளான ஒரு பெண்ணால் தான் தோற்கடிக்கப்பட விரும்பவேயில்லை.
அவன் படைப்பாளரால் மட்டுமே தோற்கடிக்க விரும்புகிறான்.
ஆனால் கடவுளின் திட்டமும் திருவுளமும் அவரது நீதியின் திட்டமும் அவன் ஒரு பெண்ணாலேயேத் தோற்கடிக்கபடவேண்டும் என்றிருக்கிறது.
எனவே தான் இந்த மனிதகுல மீட்பின் திட்டத்திலே பெண்ணுக்கு இத்தனை முக்கியத்துவம் நல்க பட்டிருக்கிறது.
இந்த பெண் தந்தையாம் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட சாத்தானுக்கெதிரான படைகலமாக இருப்பதினால் இவள் மிகுந்த வல்லமை நிறைந்தவளாக இருக்கிறாள்.அவள் தோற்கடிக்க முடியாதவளும் வெற்றி ஒன்றே அடைபவளும் ஆவாள்.
இன்றும் இவள் விண்ணகத்திலிருந்து சாத்தானுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருகிறாள்
பாகம் -18 [ இறுதி பாகம் ]
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
அன்னைமரியாளிடமிருந்து தோல்வியை தாங்கி கொள்ளமுடியாத சாத்தான்,மனிதகுல மீட்பில் பெண்ணாகிய அன்னைமரிக்கு இன்று எந்தவித பங்குமில்லை,பணியுமில்லை என்ற ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்தி,அன்னைமரியாளால் தான் தோற்கடிக்கபடுவதில்லை என்று சாதிக்க விரும்புகின்றான்.
எனவே தான் 16-ம் நூற்றாண்டின் காலகட்டத்தில் சில புரட்சியாளர்களின் ஆன்மாக்களில் புகுந்து ,புதியதொரு திட்டத்தை உலகுக்கு வெளிபடுத்தினான்.
அந்த திட்டம் கடவுள் மனிதனுக்காக அமைத்த திட்டம் அல்ல,மாறாக சாத்தான் உருவாக்கிய திட்டம்,அது சாத்தானிடமிருந்து தோன்றி அந்த புரட்சியாளர்கள் வழியாக வெளிவந்து வளர்ந்தது.
தாங்கள் செய்வது என்னவென்று அறியாமலேயே,அந்த புரட்சியாளர்களின் வழியை பின்பற்றுபவர்கள், சாத்தானின் தந்திரவலையில் விழுந்து மனிதகுல மீட்பின் திட்டத்திலே அன்னைமரிக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை,இன்று அவளுக்கு எவ்வித பணியுமில்லை என்று விவாதிக்கிறார்கள்.
விண்ணக புனிதர்கள் விண்ணிலிருந்து கொண்டு நமக்காகக் கடவுளிடம் பரிந்துரை செய்தும்,நமக்கு உதவிகள் செய்தும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்றாலும் சாத்தான் அந்த பிரிவினை புரட்சியாளர்களின் கண்களை மூடவைத்து புனிதர்கள் கல்லறையில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார்கள் என்ற பொய்யை நம்ப செய்துவிடுகிறான்.
இதில் அவனது குறி விண்ணக புனிதர்கள் மீதல்ல மாறாக அன்னைமரியின் மீது தான்.
இறந்த புனிதர்கள் கல்லறையில் ஆன்ம சரீரத்தோடு தூங்கி கொண்டிருகிறார்கள் என்று சாதித்துவிட்டால் அன்னைமரியும் அவ்வாறே என நிரூபித்து உலகிற்கு காட்டிவிடலாம் என எண்ணுகிறான்
இந்த வழிமுறைகள் எல்லாம் சாத்தானின் அகங்காரத்திலிருந்து பிறக்கும் திட்டங்கள்.
இதன்வழியாக, தான் கடவுளுக்கு அடுத்தபடியாக இருக்கிறவன் என்று தன்னை வெளிபடுத்த முயலுகிறான்.
கடவுளின் திட்டத்திற்கு எதிராக செயல்படும் புரட்சியாளர்களை பின்பற்றி கொண்டிருக்கும் நண்பர்களே,
நீவிர் அறியாமலேயே,சாத்தான் உருவாக்கிய திட்டத்திலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்
ஆண்டவரின் நீதியின் திட்டத்தின்படி அன்னைமரியாயை நமது மீட்புக்காக கடவுள் நல்குகின்றார்.அன்னையோ இவ்வுலகின் மக்களாகிய நமக்காக செயல்பட்டு கொண்டிருகிறாள்.
ஆனால் நீவிர் கடவுள் மனிதர்களை தமக்கு ஏற்புடையவர்களாக்கும் முறைமைக்கு உங்களை உட்படுத்தாமல் அந்த வழியை விட்டு விலகி உங்களின் சிந்தையின் படி உங்கள் வழிகளையே மீட்புக்குப் பின்பற்றுகிறீர்கள்.
இந்நேரம் புனித பவுல் யூதர்களைக் குறித்துச் சொன்ன வசனங்களை நினைவுகூர்வோம்
''உரோமையர் 1௦:2 கடவுள்மேல் அவர்களுக்குப் பற்று உண்டு என்பதற்கு நானே சாட்சி. ஆனால் அப்பற்று உண்மையான அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல.
3 அதாவது, கடவுள் மனிதர்களைத் தமக்கு ஏற்புடையவர்களாக்கும் முறையை அறிந்து கொள்ளாமல், யூதர்கள் தங்கள் முயற்சியாலேயே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக முயன்றார்கள்; ஆகவே அவர்கள் கடவுளின் செயல்முறைக்குத் தங்களை உட்படுத்தவில்லை''
இந்த வசனம் உங்களை பற்றியதாக அமையாமல் பார்த்து கொள்ளவேண்டியது உங்கள் கடமை.
முடிவுரை:-
இன்று அன்னைமரியாள் விண்ணிலிருந்து கொண்டு அகில உலகையுமே ஆண்டவர் நாமத்தில் ஆண்டு கொண்டிருக்கிறார்,
இறையரசின் பூரணத்தை இவ்வுலகில் உருவாக்கி சாத்தானைத் தோற்கடிக்க இவ்வுலகை அவள் ஆயுததப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
விண்ணக புனிதர்கள் அனைவருமே, அன்னையின் உடன் உழைப்பாளர்களாக இறைவனின் மனிதகுல மீட்பு திட்டத்திற்காக அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் இறைவனின் திருவுளம்.அவரது திருவுளத்திற்கு நாம் அனைவருமே அடிபணிய வேண்டியவர்கள்.நமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவரது திருவுளத்தின் திட்டங்களை மாற்ற நாம் வலிமையற்றவர்கள்,உரிமையற்றவர்கள்
எனவே இந்த உலகின் இறையரசை,மனிதகுல மீட்பைப் பூரணப்படுத்த அன்னைமரியாவோடு சேர்ந்து பணிபுரிவோம்.அவளை மதிப்போடும் மரியாதையோடும் வணக்கம் செய்வோம்.
இயேசு அமைக்கின்ற பூரண இறையரசுக்கு உலகை ஆயத்தபடுத்தவும் வழியமைக்கவும்,இறைவனின் நாமத்தில் புதிய ஏவாளாம் அன்னைமரியைத் தலைவியாக கொண்டு அவளுடன் உடன் உழைப்பாளர்களாகவும் செயல்படுவோம்.
–ஆமென்