- புனிதர்கள்
- புனித யூதா ததேயுஸ்
Source : Bible in Tamil webSite
புனித யூதா ததேயுஸ் வாழ்க்கை வரலாறு:
புனித யூதா ததேயுஸ் இறைமகன் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர். திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினர். சிறுவயதில் இருந்தே இயேசுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். திருமணம் முடிந்து மனைவி மக்களுடன் இனிய இல்லற வாழ்வு நடத்தியவர். அண்ணல் இயேசுவின் அழைத்தலை ஏற்று அனைத்தையும் துறந்து அவரைப் பின் சென்றவர்.
பரிசுத்த ஆவியைப் பெற்றபின அஞ்சாநெஞ்சத்துடன் யூதேயா, சமாரியா, மெசபெத்தோமியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் திருமறையை பரப்பியவர். இறைமக்கள் தப்பறைகளைத் தவிர்கவும் உண்மையான விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் திருமுகம் ஒன்று எழுதியவர் நம் புனிதர். இறையருளாலும், புனிதரின் அயராத உழைப்பாலும் விசுவாசம் வளர்ந்தது; ஆன்மீகப் பணி பெருகியது. புதுமைகள் பல நிகழ்ந்தன. இதைக் கண்ணுற்ற வேத விரோதிகளின் மனதில் பொறாமைத் தீ வளர்ந்தது. எனவே அவர்கள் சதித்திட்டம் தீடடி அவரது உயிருக்கு உலை வைத்தனர். உண்மைக்கு சாட்சியாக உயிரை ஈந்தார். புனித யூதாவுக்கம் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசுக்கும் உள்ள பெயர் ஒற்றுமையால் புனித யூதாவின் பக்தி நாளடைவில் மங்கத்தொடங்கியது. மறைந்து கிடந்த மாணிக்கத்தின் பக்தி குறைவை நிறைவு செய்ய நமதாண்டவர் புனித பிரிஜித் அம்மாளுக்கு காட்சியளித்து "மக்கள் தங்களுடைய தேவைகளில் எல்லாம் புனித யூதா ததேயுசை மன்றாடட்டும்; அவர் தம் பெயருக்கிணங்க உதவி புரிவார்" என்று திருவாய் மலர்ந்தருளினார். கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கையிழந்தவர்களின் நம்பிக்கையாகவும், இயலதவற்றறை இயற்றுபவராகவும் திருச்சபை இவரை மகிமைப்படுத்திற்று. மக்களும் இதை நன்குணர்ந்தனர். மீண்டும் இவரத பக்தி முயற்சி மக்கள் மத்தியில் சிறக்கத் தொடங்கியது.
இத்தகைய வல்லமை வாய்ந்த புனிதரின் திருவிழாவை தாய் திருச்சபை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28ம் தேதி கொண்டாடுகிறது. யார் யார் தங்களின் தேவைகளில் உண்மையான, உறுதியான விசுவாசத்தோடும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் புனித யூதா ததேயுசை நம்பி வேண்டி வந்தால் அவர் நிச்சயம் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி உதவி செய்வார்.
புனிதரின் புகழ் மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்,
கிறிஸ்துவே இரக்கமாயிரும்,
ஆண்டவரே இரக்கமாயிரும்,
கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
பரலோக பிதாவாகிய சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
உலக மீட்பரான சுதன் சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த ஆவி சர்வேசுரா, எங்கள்மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த திரியேக சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
புனித யூதா ததேயுசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
மாட்சிமை மிக்க அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தெய்வீக ஆசிரியரின் உத்தம மாணக்கரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தேவ பராமரிப்புகள் அமைந்த யாத்திரிகரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
வேத விசுவாசத்தின் சாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தரித்திரத்தை நேசித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தாழ்ச்சிக்கும் பொறுமைக்கும் மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தேவ அன்பின் தீபமே, புனிதத்தின் விண்மீனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
இறையருளின் பேழையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
பேய்களை நடுநடுங்கச் செய்கிறவரே,
திருச்சபையின் தூணே,
துன்புறுவோரின் ஆறுதலே,
பாவிகளுக்காக பரிந்து பேசுபவரே,
திக்கற்றவர்களின் சகாயமே,
திகைக்கின்றவர்களின் பிரகாசமே,
நம்பிக்கையிழந்தவர்களின் ஊன்றுகோலே, வியத்தகு அற்புதங்களைச் செய்கிறவரே,
தேவவரங்களை வழங்குவதில் மிகவும் பேறுபெற்றவரே,; கொள்ளும்,
உம்மை மன்றாடுவோர்க்கு தப்பாமல் உதவி புரிபவரே, உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்குத் தவறாமல் உதவி செய்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
அவசரமுள்ளவர்களுக்கு தாமாகவே வந்துதவும் பேருபகாரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
இக்கட்டான வேளைகளில் உடன் உதவிபுரிய வல்லமை வாய்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
திக்கற்றவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் பேர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உம்மை வணங்குவோர்க்கு அன்புள்ள மெய்க்காப்பாளரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
எங்கள் சிறப்பு பாதுகாவலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உலகின் பாவங்களைப் போக்கியருளும் ஆண்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே,
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே,
குரு : செபிப்போமாக
எல் : எல்லா வல்லமையும் இரக்கமும் உள்ள மீட்பரான ஆண்டவரே உமது அளவில்லாத அன்புக்குரியவரும் உமது மனித அவதாரத்தில் நெருங்கிய உறவினரும் - அப்போஸ்தலருமான புனித யூதா ததேயுஸ் வழியாக நாங்கள் கேட்கும் மன்றாட்டுக்களையெல்லாம் தயவாய்த் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.
புனித யூதா ததேயுஸ் இறைமகன் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர். திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினர். சிறுவயதில் இருந்தே இயேசுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். திருமணம் முடிந்து மனைவி மக்களுடன் இனிய இல்லற வாழ்வு நடத்தியவர். அண்ணல் இயேசுவின் அழைத்தலை ஏற்று அனைத்தையும் துறந்து அவரைப் பின் சென்றவர்.
பரிசுத்த ஆவியைப் பெற்றபின அஞ்சாநெஞ்சத்துடன் யூதேயா, சமாரியா, மெசபெத்தோமியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் திருமறையை பரப்பியவர். இறைமக்கள் தப்பறைகளைத் தவிர்கவும் உண்மையான விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் திருமுகம் ஒன்று எழுதியவர் நம் புனிதர். இறையருளாலும், புனிதரின் அயராத உழைப்பாலும் விசுவாசம் வளர்ந்தது; ஆன்மீகப் பணி பெருகியது. புதுமைகள் பல நிகழ்ந்தன. இதைக் கண்ணுற்ற வேத விரோதிகளின் மனதில் பொறாமைத் தீ வளர்ந்தது. எனவே அவர்கள் சதித்திட்டம் தீடடி அவரது உயிருக்கு உலை வைத்தனர். உண்மைக்கு சாட்சியாக உயிரை ஈந்தார். புனித யூதாவுக்கம் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசுக்கும் உள்ள பெயர் ஒற்றுமையால் புனித யூதாவின் பக்தி நாளடைவில் மங்கத்தொடங்கியது. மறைந்து கிடந்த மாணிக்கத்தின் பக்தி குறைவை நிறைவு செய்ய நமதாண்டவர் புனித பிரிஜித் அம்மாளுக்கு காட்சியளித்து "மக்கள் தங்களுடைய தேவைகளில் எல்லாம் புனித யூதா ததேயுசை மன்றாடட்டும்; அவர் தம் பெயருக்கிணங்க உதவி புரிவார்" என்று திருவாய் மலர்ந்தருளினார். கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கையிழந்தவர்களின் நம்பிக்கையாகவும், இயலதவற்றறை இயற்றுபவராகவும் திருச்சபை இவரை மகிமைப்படுத்திற்று. மக்களும் இதை நன்குணர்ந்தனர். மீண்டும் இவரத பக்தி முயற்சி மக்கள் மத்தியில் சிறக்கத் தொடங்கியது.
இத்தகைய வல்லமை வாய்ந்த புனிதரின் திருவிழாவை தாய் திருச்சபை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28ம் தேதி கொண்டாடுகிறது. யார் யார் தங்களின் தேவைகளில் உண்மையான, உறுதியான விசுவாசத்தோடும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் புனித யூதா ததேயுசை நம்பி வேண்டி வந்தால் அவர் நிச்சயம் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி உதவி செய்வார்.
புனிதரின் புகழ் மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்,
கிறிஸ்துவே இரக்கமாயிரும்,
ஆண்டவரே இரக்கமாயிரும்,
கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
பரலோக பிதாவாகிய சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
உலக மீட்பரான சுதன் சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த ஆவி சர்வேசுரா, எங்கள்மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த திரியேக சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
புனித யூதா ததேயுசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
மாட்சிமை மிக்க அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தெய்வீக ஆசிரியரின் உத்தம மாணக்கரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தேவ பராமரிப்புகள் அமைந்த யாத்திரிகரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
வேத விசுவாசத்தின் சாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தரித்திரத்தை நேசித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தாழ்ச்சிக்கும் பொறுமைக்கும் மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தேவ அன்பின் தீபமே, புனிதத்தின் விண்மீனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
இறையருளின் பேழையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
பேய்களை நடுநடுங்கச் செய்கிறவரே,
திருச்சபையின் தூணே,
துன்புறுவோரின் ஆறுதலே,
பாவிகளுக்காக பரிந்து பேசுபவரே,
திக்கற்றவர்களின் சகாயமே,
திகைக்கின்றவர்களின் பிரகாசமே,
நம்பிக்கையிழந்தவர்களின் ஊன்றுகோலே, வியத்தகு அற்புதங்களைச் செய்கிறவரே,
தேவவரங்களை வழங்குவதில் மிகவும் பேறுபெற்றவரே,; கொள்ளும்,
உம்மை மன்றாடுவோர்க்கு தப்பாமல் உதவி புரிபவரே, உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்குத் தவறாமல் உதவி செய்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
அவசரமுள்ளவர்களுக்கு தாமாகவே வந்துதவும் பேருபகாரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
இக்கட்டான வேளைகளில் உடன் உதவிபுரிய வல்லமை வாய்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
திக்கற்றவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் பேர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உம்மை வணங்குவோர்க்கு அன்புள்ள மெய்க்காப்பாளரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
எங்கள் சிறப்பு பாதுகாவலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உலகின் பாவங்களைப் போக்கியருளும் ஆண்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே,
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே,
குரு : செபிப்போமாக
எல் : எல்லா வல்லமையும் இரக்கமும் உள்ள மீட்பரான ஆண்டவரே உமது அளவில்லாத அன்புக்குரியவரும் உமது மனித அவதாரத்தில் நெருங்கிய உறவினரும் - அப்போஸ்தலருமான புனித யூதா ததேயுஸ் வழியாக நாங்கள் கேட்கும் மன்றாட்டுக்களையெல்லாம் தயவாய்த் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.