- புனிதர்கள்
- புனித அந்தோனியார்
கோடி அற்புதர் எனக் கொண்டாடப்படுபவர் புனித அந்தோனியார் . காணாமல் போன பொருட்களை கண்டடைய , பேய்களை விரட்ட இவரது துணையை நாடுவர். செவ்வாய்க் கிழமை இவருக்கு நவநாள் ஒப்புக்கொடுக்கும் நாள் . ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் என ஒன்பது மாதங்களுக்கு நவநாள் (அல்லது) தொடர்ச்சியாக ஒன்பது செவ்வாய் என நவநாள் ஒப்புக்கொடுப்பர். ஜூன் 13 இவரது திருநாள் .13 துரதிர்ஷ்ட எண் என்று சொல்வர் , ஆனால் கத்தோலிக்கர்களுக்கு 13 என்பது புனித அந்தோனியாரின் எண் !
உலகெங்கும் திருமறையோரும் ஏனையோரும் பதுவா நகர் அந்தோனியாரை அண்டி
அவரிடம் மன்றாடி, அவர் வழியாய் இறைவனிடம்எண்ணிலடங்கா ஆன்ம,
உடல் நலன்களை பெற்று வருகின்றார்கள். புனித அந்தோனியார் போத்துக்கல் நாட்டவர். 1195 ஆம் ஆண்டு ஆகஸ்டுதிங்கள் 15ம் நாள் விஸ்பன் நகரில் பிறந்தார்.
அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு
பெர்டினாந்துஎன்று பெயரிட்டனர்.
பெற்றோரைப் போல குழந்தையும் சிறு வயதிலிருந்தே இறைப்பற்றிலே திளைத்து
நற்குண சீலராக வளர்ந்து வந்தார். சிறுவன் பெர்டினாந்து ஒருநாள் மேற்றிராசன
ஆலயத்தில் உருக்கமாக செபித்துக்கொண்டிருக்கம் போது தீடிரென்று பயங்கர
உருவத்தில் அலகை தோன்றியது. சிறுவன்அஞ்சி ஓடவில்லை. மனத்துணிவுடன்,
தான் முழந்தாளிலிருந்த சலவைக் கல்மேல் திருச்சிலுவை அடையாளத்தை வரைந்தான்.
பிசாசு வெகுண்டுஓடியது. அந்த கல்லில் பதித்த திருச்சிலுவை அடையாளத்ததை இன்னும் காணலாம்.
கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டினாந்து திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார்.
ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவறசபையில் சேர்ந்தார்.
ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது
விருப்பத்திற்கிணங்க அதிபரின்அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச்
சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.
மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம்
கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்தபெர்டினாந்து தானும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக
வேத சாட்சியாக வேண்டும் என்று தனியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித
அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரன்சீஸ்கன் சபையில் சேர்ந்தார். அப்போதுதான் பெர்ணாண்டு
என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின்பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார்.
சிறிதுகாலம் ஆப்பிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலைசரியில்லாததால்
மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி
அங்குள்ள பேராலயத்தில்மறையுரையாற்றினார். மடைதிறந்த வெள்ளம் போல சொற்கள் பொழிந்தன.
உள்ளத்தை ஊடுருவும் ஆழ்ந்த கருத்துக்கள்! அன்றுமுதல்அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார்.
அதன்பின் பதுவை நகரில் திருமறையாற்றி பேரிடி முழக்கம் செய்தார். அவரின் திருஉரையை
கேட்கஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை அந்த நாட்களில் நிலவிய
தப்பரைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப்போதித்தார். 1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறை
வல்லுனர்களில் ஒருவராக அறிவித்தார்.
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால்
அனேக புதுமைகள் செய்தார். இதனால் 'கோடி அற்புதர் புனிதஅந்தோனியார்' என்ற
சிறப்புப் பெயரைப் பெற்றார். வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த
புதுமைகளால் இவரைநாடிவருவோர் அதிகமாயிற்று. இதனால் துறவியர்கள் மடத்தில்
அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டது. இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர்எண்ணிலடங்கா
புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார்.
ஒருநாள் இவர் அன்றைக்குசெய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே
உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்துஒருவர் தவறி விழுந்தவேளையில்
'அந்தோனியாரே என்னை காப்பாற்றும்' என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே
அந்தரத்தில்தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது
புதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில்பத்திரமாகவும் இறக்கியதாகவும் கூறுவர். ஒரே
நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் வரலாறு
உண்டு.
அந்தோனியார் குழந்தை இயேசுவை காட்சியில் கண்டு கையில் ஏந்தியதாகவும் கூறுவர்.
ஆகவேதான் படங்களில் அவரது கையில் குழந்தைஇயேசுவும் மற்றொறு கையில் திருமறை
நூலை கையில் வைத்திருப்பதாகவும் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. காணமல் போன
பொருட்களைபுனித அந்தோனியாரை நினைத்து மன்றாடினால் கிடைக்கிறது என்ற விசுவாசம்
இன்றும் மக்களிடம் காணப்படுகிறது. "கோடி அற்புதர்" "பதுவை பதியர்"
"பசாசுகளை நடு நடுங்கச் செய்பவர்" "காணாமல் போனவைகளை கண்டுபிடித்துக் கொடுப்பவர்"
போன்ற அடைமொழிகளும் புனிதஅந்தோனியாருக்கே சொந்தம்.
1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும்
நோய்வாய் பட்டார். அதே ஆண்டில் ஜுன் மாதம் 13 நாள்இறுதி திருவருட்சாதனங்களைப்
பெற்றபின் இறைவனில் இளைப்பாறினார். அப்போது அவருக்கு வயது 36.
அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின்அவருடைய கல்லரையானது தோண்டப்பட்டு
அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிக்கப்பட்டது.
அந் நாக்கு இன்னும்பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Courtesy: http://www.tamilchristians.info/prayers/novena-prayers/antony-life-history.php
உலகெங்கும் திருமறையோரும் ஏனையோரும் பதுவா நகர் அந்தோனியாரை அண்டி
அவரிடம் மன்றாடி, அவர் வழியாய் இறைவனிடம்எண்ணிலடங்கா ஆன்ம,
உடல் நலன்களை பெற்று வருகின்றார்கள். புனித அந்தோனியார் போத்துக்கல் நாட்டவர். 1195 ஆம் ஆண்டு ஆகஸ்டுதிங்கள் 15ம் நாள் விஸ்பன் நகரில் பிறந்தார்.
அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு
பெர்டினாந்துஎன்று பெயரிட்டனர்.
பெற்றோரைப் போல குழந்தையும் சிறு வயதிலிருந்தே இறைப்பற்றிலே திளைத்து
நற்குண சீலராக வளர்ந்து வந்தார். சிறுவன் பெர்டினாந்து ஒருநாள் மேற்றிராசன
ஆலயத்தில் உருக்கமாக செபித்துக்கொண்டிருக்கம் போது தீடிரென்று பயங்கர
உருவத்தில் அலகை தோன்றியது. சிறுவன்அஞ்சி ஓடவில்லை. மனத்துணிவுடன்,
தான் முழந்தாளிலிருந்த சலவைக் கல்மேல் திருச்சிலுவை அடையாளத்தை வரைந்தான்.
பிசாசு வெகுண்டுஓடியது. அந்த கல்லில் பதித்த திருச்சிலுவை அடையாளத்ததை இன்னும் காணலாம்.
கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டினாந்து திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார்.
ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவறசபையில் சேர்ந்தார்.
ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது
விருப்பத்திற்கிணங்க அதிபரின்அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச்
சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.
மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம்
கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்தபெர்டினாந்து தானும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக
வேத சாட்சியாக வேண்டும் என்று தனியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித
அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரன்சீஸ்கன் சபையில் சேர்ந்தார். அப்போதுதான் பெர்ணாண்டு
என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின்பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார்.
சிறிதுகாலம் ஆப்பிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலைசரியில்லாததால்
மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி
அங்குள்ள பேராலயத்தில்மறையுரையாற்றினார். மடைதிறந்த வெள்ளம் போல சொற்கள் பொழிந்தன.
உள்ளத்தை ஊடுருவும் ஆழ்ந்த கருத்துக்கள்! அன்றுமுதல்அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார்.
அதன்பின் பதுவை நகரில் திருமறையாற்றி பேரிடி முழக்கம் செய்தார். அவரின் திருஉரையை
கேட்கஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை அந்த நாட்களில் நிலவிய
தப்பரைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப்போதித்தார். 1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறை
வல்லுனர்களில் ஒருவராக அறிவித்தார்.
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால்
அனேக புதுமைகள் செய்தார். இதனால் 'கோடி அற்புதர் புனிதஅந்தோனியார்' என்ற
சிறப்புப் பெயரைப் பெற்றார். வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த
புதுமைகளால் இவரைநாடிவருவோர் அதிகமாயிற்று. இதனால் துறவியர்கள் மடத்தில்
அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டது. இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர்எண்ணிலடங்கா
புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார்.
ஒருநாள் இவர் அன்றைக்குசெய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே
உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்துஒருவர் தவறி விழுந்தவேளையில்
'அந்தோனியாரே என்னை காப்பாற்றும்' என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே
அந்தரத்தில்தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது
புதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில்பத்திரமாகவும் இறக்கியதாகவும் கூறுவர். ஒரே
நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் வரலாறு
உண்டு.
அந்தோனியார் குழந்தை இயேசுவை காட்சியில் கண்டு கையில் ஏந்தியதாகவும் கூறுவர்.
ஆகவேதான் படங்களில் அவரது கையில் குழந்தைஇயேசுவும் மற்றொறு கையில் திருமறை
நூலை கையில் வைத்திருப்பதாகவும் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. காணமல் போன
பொருட்களைபுனித அந்தோனியாரை நினைத்து மன்றாடினால் கிடைக்கிறது என்ற விசுவாசம்
இன்றும் மக்களிடம் காணப்படுகிறது. "கோடி அற்புதர்" "பதுவை பதியர்"
"பசாசுகளை நடு நடுங்கச் செய்பவர்" "காணாமல் போனவைகளை கண்டுபிடித்துக் கொடுப்பவர்"
போன்ற அடைமொழிகளும் புனிதஅந்தோனியாருக்கே சொந்தம்.
1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும்
நோய்வாய் பட்டார். அதே ஆண்டில் ஜுன் மாதம் 13 நாள்இறுதி திருவருட்சாதனங்களைப்
பெற்றபின் இறைவனில் இளைப்பாறினார். அப்போது அவருக்கு வயது 36.
அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின்அவருடைய கல்லரையானது தோண்டப்பட்டு
அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிக்கப்பட்டது.
அந் நாக்கு இன்னும்பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Courtesy: http://www.tamilchristians.info/prayers/novena-prayers/antony-life-history.php
செவ்வாய்க்கிழமைதோறும் சொல்லும் மூன்று மன்றாட்டுக்கள்
முதல் மன்றாட்டு
பதுவைப்பதியரான புனித அந்தோனியா ரே , பரிசுத்த தனம் விளங்கும்லீலியே, விலை மதிக்கப்படாத மாணிக்கமே / திருச்சபையில் துலங்கும் நட்சத்திரமே வாழ்க! மகா பேறு பெற்ற புனித அந்தோனியாரே! பரலோக வாசிகளால் தெளிந்த மெய்ஞான ஞானாதித்தரே! தெய்வ நேச அக்கினியால் சுடர் விட்டு எரிகிற மெய்ஞான பக்தி சுவாலகரே! என் முழு இருதயத்தோடு உம்மை ஸ்துதித்து வாழ்த்துகிறேன். சர்வேசுரன் உமக்கு ஏராளமாய்ப் பொழிந்த சகல உபகார சகாயங்களுக்காக உம்மை ஸ்துதிக்கிறேன். ஆl. என் நேச புனித அந்தோனியாரே! உமக்கு என் தோத்திரங்களை ஒப்புக் கொடுக்கிறதற்காக உமது திருச்சுரூபத்திற்கு முன்பாக தாழ்ச்சி விநயத்துடன் முழந்தாளிட்டு நிற்கிறேன்.
சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமான சினேகிதரே! நீர் செய்திருக்கிற வாக்குத்தத்தை நினைத்தருளும் . அடுத்தடுத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை உமது சுரூபத்தைச் சந்தித்து வணங்குகிறவர்களுக்கு உமது தயையின் சக்தியைக் காண்பித்தருளுவீரென்று நீர் எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறீரே! நீர் இதுவரையிலும் உமது வாக்குத்தத்தத்தைப் பிரமாணிக்கமாய் காப்பாற்றி வருகிறீர் .தகுந்தபடி உமது உதவியை மன்றாடினவர்கள் எல்லாரும் வல்லபமுள்ள உமது சிபாரிசைத் தடுக்க பெருத்த விக்கினங்கள் இல்லாத போதெல்லாம் தாங்கள் கேட்ட உபகாரத்தை அடைந்தார்களே!
ஆகையால் நானும் என் இருதயத்தை உமக்குத் திறந்து காட்டவும் என் அவசரங்களை உம்மிடத்தில் முழு நம்பிக்கையுடன் சொல்லிக் காட்டவும் இந்த ஆலயத்தில் வந்திருக்கிறேன் . உமது சுரூபத்தை உற்றுப் பார்க்கும் போது எனக்குக் கண்ணீர் ததும்புகின்றது. ஆயினும் என் ஆத்துமம் பரலோகம் நோக்கித் தாவுகின்றது . இத்தருணத்தில் உமது மட்டில் எனக்கு உண்டாயிருக்கிற நேச பாசத்துக்கு சரி யொத்த ஆசை அன்போடென் கிலும் மாட்சிமை தாங்கிய அம் மேலான வாசஸ்தலத்தினின்று நீர் என் பேரில் கிருபா நோக்கம் பாலித்தருளும் . உமது கரத்தில் ஏந்திய திருக் குழந்தை இயேசுவின் மட்டில் உமக்கு உண்டாயிருக்கிற நேசத்தைப் பார்த்து நான் கெஞ்சிக் கேட்பது ஏதெனில் என் அவசரங்கள் எல்லாம் அத்திருப்பாலனுக்குச் சொல்லிக் காட்டி அவரிடத்தில் எனக்காக மனுப் பேச வேண்டும் என்பதாம்.
என் ஆசைக்குரிய புனித அந்தோனியாரே / எனக்கு உதவி செய்கிறது உமக்கு எவ்வளவோ எளிதாயிருக்கிறது . என் மன்றாட்டைத் தந்தருளுவதற்காக நீர் சர்வேசுரனிடத்தில் வாய் திறந்து பேசுவது ஒன்றே போதுமானது. உள்ளபடியே உமது கரங்களில் நீர் அன்போடு அரவணைத்த திருக் குழந்தை இயேசு உமது விண்ணப்பங்களைத் தள்ளிப் போடப் போகிறதே இல்லை . நீர் இவ்வுலகில் சஞ்சரித்த காலத்தில் அவருக்கு உமது மட்டில் உண்டான நேசத்தால் பல தடவை அவர் உமக்கு தரிசனையானாரே / அவரைத் தொடவும் முத்தமிடவும் தழுவவும் சித்தமானீரே!
மோட்சத்தில் அவரோடு அரசாண்டு வரும் இத்தினத்தில் உம்மை நேசிக்கவும், உம்மை மகிமைப்படுத்தவும் நீர் சொல்வதைக் கேட்கவும் அவர் ஆயிரம் மடங்கு ஆசையுள்ளவராய் இருக்க மாட்டாரோ ? பூவுலகில் உமது திருக்கரங்களுக்கும் , நேசத்துக்குரிய உமது இருதயத்திற்கும் ஒப்புவிக்கப்பட்ட திவ்விய பாலனாகிய இயேசு , பரலோகத்திலும் இந்த இணை பிரியாத பட்சத்தைப் பாராட்டி வருகிறாரென்று உலகம் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. இதைப் பற்றியல்லோ மதுர குணமுள்ள நமது இரட்சகர் உமது சுரூபம் சௌந்தரியம் நிறைந்த குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தின வண்ணமாய் எழுதப்படவும் சித்தரிக்கப்படவும் சித்தமானார்
இயேசுவே ! புனித அந்தோனியாரே! என்றும் இணை பிரியாத நேசர்களே வாழ்க ! இயேசுவே ! புனித அந்தோனியாரே ! அன்னியோன்னிய நேசபந்தனமான இருதயங்களே! அடியேன் மட்டில் இரக்கம் புரிந்து பக்தி நேசத்தால் என் இருதயத்தை எரியச் செய்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் .இயேசுவே! உமது நேச அந்தோனியார் பேராலல்லோ நான் உம்மை மன்றாடுகின்றேன் .அந்தோனியாரே ! உமது நேச இயேசுவின் பெயராலே நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன் .
இயேசுவே ! புனித அந்தோனியாரே ! பூலோகத்தில் உங்களை ஐக்கியப்படுத்தினதும் பரலோகத்தில் இப்பொழுது உங்களை ஐக்கியப்படுத்துகிறதுமான உருக்க நேசத்தையும், அன்னியோன்னிய பட்சத்தையும் பார்த்து உங்களுக்கு அதிக பிரமாணிக்கமுள்ள சிநேகிதர்களில் அடியேனையும் ஒருவனாக ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுகிறேன். ஒ இயேசுவே ! புனித அந்தோனியாரே ! என் இருதயத்தை உங்கள் பாதுகாவலில் வைக்கிறேன். ஓ இயேசுவே! புனித அந்தோனியாரே ! உங்கள் கரங்களில் என் சகல கிலேசங்களையும் எனது ஏக்க கலக்கங்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். இவ்வுலகில் உங்கள் பரிசுத்த சுரூபங்களை மேரை மரியாதையோடும் , பக்தி வினயத்தோடும் நோக்கிப் பார்த்து வருகிற அடியேனுக்கு பரலோகத்தில் நித்தியத்திற்கும் உங்களை முகமுகமாய்த் தரிசிக்கிற மேலான பாக்கியத்தைத் தந்தருளுங்கள் ஆமென்
பதுவைப்பதியரான புனித அந்தோனியா ரே , பரிசுத்த தனம் விளங்கும்லீலியே, விலை மதிக்கப்படாத மாணிக்கமே / திருச்சபையில் துலங்கும் நட்சத்திரமே வாழ்க! மகா பேறு பெற்ற புனித அந்தோனியாரே! பரலோக வாசிகளால் தெளிந்த மெய்ஞான ஞானாதித்தரே! தெய்வ நேச அக்கினியால் சுடர் விட்டு எரிகிற மெய்ஞான பக்தி சுவாலகரே! என் முழு இருதயத்தோடு உம்மை ஸ்துதித்து வாழ்த்துகிறேன். சர்வேசுரன் உமக்கு ஏராளமாய்ப் பொழிந்த சகல உபகார சகாயங்களுக்காக உம்மை ஸ்துதிக்கிறேன். ஆl. என் நேச புனித அந்தோனியாரே! உமக்கு என் தோத்திரங்களை ஒப்புக் கொடுக்கிறதற்காக உமது திருச்சுரூபத்திற்கு முன்பாக தாழ்ச்சி விநயத்துடன் முழந்தாளிட்டு நிற்கிறேன்.
சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமான சினேகிதரே! நீர் செய்திருக்கிற வாக்குத்தத்தை நினைத்தருளும் . அடுத்தடுத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை உமது சுரூபத்தைச் சந்தித்து வணங்குகிறவர்களுக்கு உமது தயையின் சக்தியைக் காண்பித்தருளுவீரென்று நீர் எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறீரே! நீர் இதுவரையிலும் உமது வாக்குத்தத்தத்தைப் பிரமாணிக்கமாய் காப்பாற்றி வருகிறீர் .தகுந்தபடி உமது உதவியை மன்றாடினவர்கள் எல்லாரும் வல்லபமுள்ள உமது சிபாரிசைத் தடுக்க பெருத்த விக்கினங்கள் இல்லாத போதெல்லாம் தாங்கள் கேட்ட உபகாரத்தை அடைந்தார்களே!
ஆகையால் நானும் என் இருதயத்தை உமக்குத் திறந்து காட்டவும் என் அவசரங்களை உம்மிடத்தில் முழு நம்பிக்கையுடன் சொல்லிக் காட்டவும் இந்த ஆலயத்தில் வந்திருக்கிறேன் . உமது சுரூபத்தை உற்றுப் பார்க்கும் போது எனக்குக் கண்ணீர் ததும்புகின்றது. ஆயினும் என் ஆத்துமம் பரலோகம் நோக்கித் தாவுகின்றது . இத்தருணத்தில் உமது மட்டில் எனக்கு உண்டாயிருக்கிற நேச பாசத்துக்கு சரி யொத்த ஆசை அன்போடென் கிலும் மாட்சிமை தாங்கிய அம் மேலான வாசஸ்தலத்தினின்று நீர் என் பேரில் கிருபா நோக்கம் பாலித்தருளும் . உமது கரத்தில் ஏந்திய திருக் குழந்தை இயேசுவின் மட்டில் உமக்கு உண்டாயிருக்கிற நேசத்தைப் பார்த்து நான் கெஞ்சிக் கேட்பது ஏதெனில் என் அவசரங்கள் எல்லாம் அத்திருப்பாலனுக்குச் சொல்லிக் காட்டி அவரிடத்தில் எனக்காக மனுப் பேச வேண்டும் என்பதாம்.
என் ஆசைக்குரிய புனித அந்தோனியாரே / எனக்கு உதவி செய்கிறது உமக்கு எவ்வளவோ எளிதாயிருக்கிறது . என் மன்றாட்டைத் தந்தருளுவதற்காக நீர் சர்வேசுரனிடத்தில் வாய் திறந்து பேசுவது ஒன்றே போதுமானது. உள்ளபடியே உமது கரங்களில் நீர் அன்போடு அரவணைத்த திருக் குழந்தை இயேசு உமது விண்ணப்பங்களைத் தள்ளிப் போடப் போகிறதே இல்லை . நீர் இவ்வுலகில் சஞ்சரித்த காலத்தில் அவருக்கு உமது மட்டில் உண்டான நேசத்தால் பல தடவை அவர் உமக்கு தரிசனையானாரே / அவரைத் தொடவும் முத்தமிடவும் தழுவவும் சித்தமானீரே!
மோட்சத்தில் அவரோடு அரசாண்டு வரும் இத்தினத்தில் உம்மை நேசிக்கவும், உம்மை மகிமைப்படுத்தவும் நீர் சொல்வதைக் கேட்கவும் அவர் ஆயிரம் மடங்கு ஆசையுள்ளவராய் இருக்க மாட்டாரோ ? பூவுலகில் உமது திருக்கரங்களுக்கும் , நேசத்துக்குரிய உமது இருதயத்திற்கும் ஒப்புவிக்கப்பட்ட திவ்விய பாலனாகிய இயேசு , பரலோகத்திலும் இந்த இணை பிரியாத பட்சத்தைப் பாராட்டி வருகிறாரென்று உலகம் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. இதைப் பற்றியல்லோ மதுர குணமுள்ள நமது இரட்சகர் உமது சுரூபம் சௌந்தரியம் நிறைந்த குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தின வண்ணமாய் எழுதப்படவும் சித்தரிக்கப்படவும் சித்தமானார்
இயேசுவே ! புனித அந்தோனியாரே! என்றும் இணை பிரியாத நேசர்களே வாழ்க ! இயேசுவே ! புனித அந்தோனியாரே ! அன்னியோன்னிய நேசபந்தனமான இருதயங்களே! அடியேன் மட்டில் இரக்கம் புரிந்து பக்தி நேசத்தால் என் இருதயத்தை எரியச் செய்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் .இயேசுவே! உமது நேச அந்தோனியார் பேராலல்லோ நான் உம்மை மன்றாடுகின்றேன் .அந்தோனியாரே ! உமது நேச இயேசுவின் பெயராலே நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன் .
இயேசுவே ! புனித அந்தோனியாரே ! பூலோகத்தில் உங்களை ஐக்கியப்படுத்தினதும் பரலோகத்தில் இப்பொழுது உங்களை ஐக்கியப்படுத்துகிறதுமான உருக்க நேசத்தையும், அன்னியோன்னிய பட்சத்தையும் பார்த்து உங்களுக்கு அதிக பிரமாணிக்கமுள்ள சிநேகிதர்களில் அடியேனையும் ஒருவனாக ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுகிறேன். ஒ இயேசுவே ! புனித அந்தோனியாரே ! என் இருதயத்தை உங்கள் பாதுகாவலில் வைக்கிறேன். ஓ இயேசுவே! புனித அந்தோனியாரே ! உங்கள் கரங்களில் என் சகல கிலேசங்களையும் எனது ஏக்க கலக்கங்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். இவ்வுலகில் உங்கள் பரிசுத்த சுரூபங்களை மேரை மரியாதையோடும் , பக்தி வினயத்தோடும் நோக்கிப் பார்த்து வருகிற அடியேனுக்கு பரலோகத்தில் நித்தியத்திற்கும் உங்களை முகமுகமாய்த் தரிசிக்கிற மேலான பாக்கியத்தைத் தந்தருளுங்கள் ஆமென்
இரண்டாம் மன்றாட்டு
உபத்திரவப்படுகிறவர்களுக்கு ஊக்கமுள்ள சிநேகிதருமாய் , கச்திப்படுகிரவர்களுக்கு உமது ஆறுதல் உதவிகளை ஏராளமாய்ப் பொழிகிறவருமாகிய பேறு பெற்ற புனித அந்தோனியாரே! இத்தேவாலயத்தில் உம்மைத் தேடி வணங்க வருகிற நிர்பாக்கிய பாவியின் பேரில் நீர் வீற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய மேலான சிம்மாசனத்தினின்று கிருபா நோக்கம் பாலித்தருளும். நீர் ஒரு நாள் போலோனியா பட்டணத்து வங்கிஷபதியான ஓர் பெண் பிள்ளைக்கு கேள்வியுற அருளிய ஆறுதல் நிறைந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளும். தொடர்ச்சியாய் ஒன்பது செவ்வாய்க்கிழமை நமது சுரூபத்தைச் சந்தித்து வருவாயானால் உன் மன்றாட்டு கையேற்றுக் கொள்ளப்பட்டது என்று நீ அறிந்து கொள்ளுவாய் என்று திருவுளம் பற்றினீரே! இந்தக் கட்டளையை நிறைவேற்ற வேண்டி உமது சுரூபத்தை இக்கோவிலில் சந்திக்க வந்து அதன் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து உமக்கு என் அவசரங்களைச் சொல்லிக் காட்டுகிறேன்.
மகா பேறு பெற்ற அர்சிஷ்டவரே! கிருபை தயாபத்தின் விலை மதிக்கப்படாத பாத்திரமே! பரிசுத்தத்தனம் முதலிய சகல புண்ணியங்களும் விளங்கும் மாணிக்கமே ! அடியேன் உம்மை வணங்கி உமது சுரூபத்தைத் தோத்தரிக்கிறேன். இச்சுரூபத்திற்கு முன் முழந்தாழ்ப்படியிட்டு என் ஆத்துமத்தைத் தாழ்த்தி என் அவசரங்களை உமக்குச் சொல்லிக் காட்டி , இரக்கமுள்ள உமது இருதயத்தின் தயாளத்தைக் கெஞ்சி மன்றாடுகிறேன். உமது சுரூபத்திலல்லாமல் வேறெங்கே நான் உம்மைக் கண்டடைவேன் ? உமது பீடத்திற்கு அருகாமையிலன்றி வேறெங்கே நான் உமது அருகில் நெருங்குவேன்.? பரிசுத்தராகிய நீர் என் கண்முன்னே நிற்பதைக் கான்பேனாகில் உம்மைக் கனப்படுத்த நான் எவ்வளவோ தீவிரத்துடன் ஓடி வருகிறேன். உமது திருப்பாதங்களைத் தாழ்ச்சியுடன் வணங்கி முத்தம் செய்ய எவ்வளவோ ஆசிப்பேன். உம்மைக் கட்டி முத்தமிடவும் , உம்மிடத்தில் பேசவும் என் ஆவல் எவ்வளவோ பெரிதாய் இருக்கும் . இவ் விஷேசித்த கிருபை எனக்குக் கிடையாததினாலல்லோ , உம்மையே பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தால் நான் உமக்கு எவ்வித மகிமைகளைச் செலுத்துவேனோ , அந்த மகிமைகளையே உமது சுரூபத்திற்க்குச் செலுத்த ஆசிக்கிறேன் .
ஆகையால் புனித அந்தோனியாரே ! நான் உம்மை வணங்குகிறதுமல்லாமல் நான் உமக்குச் செலுத்த வேண்டிய மரியாதையோடு குற்றம் நிறைந்த என் சிரசை உமக்கு முன்பாகத் தாழ்த்தி பாவக்கறைபட்ட என் கண்களை உமது பேரில் நோக்குகிறேன். கஸ்திப்படும் என் இருதயம் உம்மை நோக்கித் தாவுகிறது. ஆத்துமங்களுக்கு உண்மையான ஆறுதல் தரும் உன்னத புனித அந்தோனியாரே ! என் துன்மார்க்கங்களை முன்னிட்டு உமது ஆதரவை அடைய நான் அபாத்திரவானென்பது உண்மையிலும் உண்மை. தெய்வ மகத்துவத்திலும் உமது மன்றாட்டின் உதவியினாலும் நீதிமான்களை மாத்திரமல்ல , மெய்யான பக்தியோடும் , உறுதியான நம்பிக்கையோடும் உம்மை நாடி வரும் பாவிகளையும் ஆறுதல் படுத்த சித்தமாய் இருக்கிறீர். ஆகையால் என் நெருக்கடியான அவசரங்களில் நான் உம்மை அண்டி வந்து என் முழு இருதயத்தோடு உமது தாள நெருக்கத்தை நோக்கி அபயமிடுகிறேன் . என் வேண்டுதல் உமது சன்னதி மட்டும் வரக்கடவது . இரக்கமுள்ள இருதயமே ! எனது பெருமூச்சுகளைக் கேட்க்கக் கடவது .
ஒ என் அன்புக்குரிய தந்தையே ! என் இக்கட்டு ஏக்க கலக்கங்களை நீர் அறிவீர். நான் கேட்பதைக் கடவுளிடத்தினின்று நீர் எளிதில் அடைந்து கொடுப்பீர். உமது கைகளால் தழுவப்பட சித்தமான நேசத்திற்குரிய இயேசு உமது ஆசைக்கு இணங்காதிருப்பாரோ ? உலக எத்திசையிலும் அதிசயிக்கப்படும் உமது இரக்கப் பெருக்கத்தை நான் கொண்டாட விடை கொடுத்தருளும் . நிர்பாக்கியப் பாவிகளின் மட்டில் நீர் காட்டும் உதாரத்துவத்தையும் உருக்கமுள்ள விசுவாசத்தோடு உம்மை மன்றாடுகிற நிர்பாக்கியங்களை ஆறுதல் படுத்த நீர் எடுத்துக் கொள்ளும் கவலையையும் , உமது ஒத்தாசையைக் கேட்ட ஏறக்குறைய அனைவரும் ஏற்கனவே கண்டறிந்து இருக்கிறார்கள் . ஆகையால் என் மன்றாட்டை உமது கரங்களில் ஒப்புவித்து உமது பாதுகாவலில் வைக்கிறேன். என் ஆசை விருப்பங்களை உமது நல்ல இயேசுவுக்கு ஒப்புக்கொடும் . அவர் அவைகளைத் தமது திருச்சித்தத்தின் படியே கேட்கக் கடவாராக ஆமென்
மூன்றாம் மன்றாட்டு
மகா பேறு பெற்ற புனித அந்தோனியாரே ! துன்பப்படுவோருக்கு நேசமுள்ள ஆறுதலானவரே ! எவ்வித பிணிகளையும் நிவிர்த்தி செய்யும் சோர்வடையாத பண்டிதரே ! உலகமெல்லாம் உம்மைப் புகழ்ந்தேற்றுகிறது . எப்பக்கங்களிலும் உமது புதுமைகளைப் பிரபல்லியமாய்ப் பேசி வருகிறார்கள் . உள்ளபடியே உமது வல்லமையின் பெருமையே பெருமையாம். நீர் உயிரோடிருக்கையில் அநேகமாயிரம் ஆத்துமங்களைத் திருப்ப கடவுள் உம்மைத் தெரிந்து கொண்டார் . பரலோகத்தில் அவரோடு நித்தியத்திற்கும் அரசாளும் இத்தினத்தில் சர்வ வல்லமையுள்ளவர் கரத்தில் ஏராளமான புதுமைகளைச் செய்யும் கருவியாக விளங்குகிறீர். நீர் அவரை மன்றாடுகையில் , அவர் மனிதர்களை நன்மை வரப்பிரசாதங்களினால் நிரப்பச் சித்தமாகிறார் .
ஆகையால் , கச்திப்படுகிரவர்களுக்கு ஆறுதலானவரே ! முழு நம்பிக்கையுடன் உம்மை மன்றாடுகின்றேன் . கடவுளிடத்தில் உமக்கு உண்டாகிய பெருத்த செல்வாக்குகளைக் கொண்டு திடன் கொள்ளுகிறேன் . துன்பப்படுகிறவர்களுக்கு மனுப்பேசுகிரவராக அவரால் நியமிக்கப்படுகிறீர். நீர் என் வேண்டுதலுக்கு இரங்கி நான் உம்மிடத்தில் சொல்லிக் கொள்ளும் என் நெருக்கடியான இடறுகளில் எனக்கு ஆறுதல் கொடுக்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். திவ்விய பாலன் இயேசுவின் முன் நீர் உமது கற்புள்ள இருதயத்தில் அனுபவித்த சொல்ல முடியாத பாக்கியத்தையும், அத்திருப்பாலன் தமக்கு, உமது மட்டிலுள்ள நேச நம்பிக்கையின் அடையாளங்களை காட்டுகையில் நீர் அனுபவித்த பேரானந்தங்களையும் பார்த்து உமது கரங்களில் ஏந்திய அந்த நல்ல இயேசுவுக்கு முன் , என் ஆவலுள்ள ஆசைகளை எடுத்துக் காட்டும்படி உம்மை மன்றாடுகின்றேன். இரட்சகர் இவ்வுலகில் உம்மை சகலவித நன்மை வரப்பிரசாதங்களினாலும் நிரப்பினாரே ! அவைகளைப் பார்த்து நீர் என்னை உம்முடைய பேறு பலன்களுக்குப் பங்காளியாகவும் நான் ஆசிக்கும் சலுகைகளை எனக்கு உறுதியாய் அடைந்து தந்தருளவும் தயை புரியும் படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்
ஒ மேலான புனித அந்தோனியாரே ! உதார குணமுள்ள உம்மைப் பார்த்து நான் வேண்டிக் கொண்டது வீண் போகவில்லைஎன்று நான் உணரச் செய்தருளுவீராக . உமது பேரில் எனக்குள்ள பக்தி பற்றுதல் இதனால் அதிகரிப்பதுடன் உமது திரு நாமத்தை சகலருக்கு முன்பாக நான் புகழ்ந்து கொண்டாடுவேன்
நமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதர் ஒலிவேத்து தோட்டத்தில் அவஸ்தையாய் இருக்கையில் அவர் துவங்கி முடித்த மூன்று மன்றாட்டுகளுக்கு உண்டாயிருந்த நம்பிக்கையோடும் அமைந்த மனதோடும் நான் இதோ உமது திருச் சுரூபத்துக்கு முன்பாக , உமக்கு ஒப்புக்கொடுத்த மூன்று மன்றாட்டுகளையும் முடிக்க ஆவலாயிருக்கிறேன் . அவரது வாயினாலும் , அவரது இருதயத்தினாலும் பிதாவை நோக்கி அடியேன் அபயமிட்டு சொல்கிறதாவது : என் பிதாவே , சகலமும் உம்மால் கூடியது . கஸ்திக்குரிய இப்பாத்திரத்தை என்னிடத்திநின்று அகலச் செய்து நான் கேட்கும் காரியத்தை தயவோடு எனக்கு அளித்தருளும் . ஆகிலும் இப்பொழுதும் எப்பொழுதும் என் மானதல்ல , உமது சித்தமே நிறைவேறக்கடவது ஆமென்
புனிதரை நோக்கி ஜெபம்
கற்பில் உத்தமமான லீலியென்கிற புஷ்பமுமாய் அட்சயமுள்ளவருமாயிருக்கிற புனித அந்தோனியாரே, எளிமைத்தனத்தின் ஆபரணமே / உபவாசத்தின் கண்ணாடியே, நிர்மல சுத்தத்தின் மாதிரியே , புனிதத்துவத்தின் ஒளி விடுகிற நட்சத்திரமே, ஆசார முறைகளின் சோடினையே , மோட்ச வர்க்கத்தின் தூணே, வரப்பிரசாதங்களின் பிரசங்கியே, காமாந்தகரை அடக்கு கிறவரே, புண்ணியங்களை விதைக்கிறவரே , கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறவரே, தேவரீருடைய திருக்கரங்களிலே சர்வேசுரனுடைய சுதனானவரைத் தாங்குகிறவராய், தேவ சிநேகத்தின் பேரில் மிகவும் எரிகிற அழலுமாய், பச்சாதாபத்தின் சீவியருமான சுவாலையுமாய், தேவரீருடைய பிரசங்கத்தைக் கொண்டு பாவியானவர்களை தேவ பட்சத்தின் நெருப்பினாலே கொளுத்தி எரித்தவருமாயிருக்கிற விருப்பமுள்ள வேத சாட்சியே, திவ்வியமான தீர்க்கதரிசனரே, பாவிகளைத் திருத்துகிறவரே , நரகத்திற்கு பயங்கரத்தை விடுகிறவரே, எளிய பாவிகளாய் இருக்கிற நாங்கள் உம்முடைய அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க எங்களைக் கையேற்று நடப்பித்துக் கொள்ளும் . பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும் அதனால் கண்ணீரும் உண்டாக வரப்பிரசாதத்தையும் , ஞானமுள்ள தியானத்தையும் சர்வேசுரனானவர் எங்களுக்குத் தந்தருளும்படி அவரை வேண்டிக் கொள்ளும். மிகவும் எரிகிற பட்சத்தின் அழலானவரே / பாவிகளான எங்களுடைய உலர்ந்த இருதயத்தை தேவ பட்சத்தினாலே கொளுத்தி எரிக்கச் சித்தமாய் இருக்க வேண்டுமென்று மிகுந்த தாழ்ச்சியுடனே உம்மை வேண்டிக் கொள்கிறோம் ஆமென்.
நவநாள் ஜெபம்
கற்பில் மேன்மையான லீலி என்ற மலரின் அடையாளமான தூய அந்தோனியாரே / எளிமையின் ஆபரணமே, உபவாசத்தின் கண்ணாடியே, தூய்மையின் எடுத்துக் காட்டே , தூய தன்மையின் ஒளிரும் தாரகையே / ஆசார முறைமைகளின் சோடினையே, பரத்தின் வடிவே, திருச்சபையின் தூணே, திரு அருள் மறை உரையாளரே , காமாந்தகரை அடக்குபவரே, புண்ணியங்களை விதைக்கிறவரே / துயருற்றோருக்கு ஆறுதல் தருபவளே, உம் திருக்கரங்களில் இறைவனின் திருமகனை ஏந்துகிறவருமாய் தேவநேசத்தால் எரியும் அனலுமாய் பச்சாதாபத்தின் சீவிய சுவாலையாய் வம் பிரசங்கத்தால் பாவிகளை தேவ பயத்தின் நெருப்பினால் பற்றி எரித்தவரே, வேத சாட்சியாக விரும்பியவரே ,தூய தீர்க்கதரிசியே/
பாவிகளைத் திருத்துகிறவரே! நரகத்திற்கு பயங்கரத்தை வருவிக்கிறவரே/ எளிய பாவிகளாகிய நாங்கள் உம் அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க /எங்களைக் கையேற்று நடத்தியருளும். பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும் /அதனால் கண்ணீரும் /உண்டாகும் அருளையும் ஞானமுள்ள தியாகத்தையும் இறைவன் எங்களுக்குத் தந்தருளும்படி அவரை வேண்டிக் கொள்ளும் . மிகவும் எரிகிற அன்பினால் எங்களைக் கொளுத்தி எரிக்கச் சித்தமாய் இருக்க வேண்டுமென்று மிகவும் தாழ்ச்சியுடன் உம்மை வேண்டிக் கொள்கிறோம்
செபிப்போமாக
தயை மிகுந்த இறைவா! உம் பிரிய அடியாரான தூய அந்தோனியாரைப் போல் நானும் அழிந்து போகிற உலக செல்வங்கள் மேல் எனக்குள்ள பற்றை அகற்றி,உம தண்டை வந்து உமக்கு ஊழியம் செய்து வருவதே இப்பூவுலகில் எனக்கு உண்மையான நன்மையே யொழிய வேறு இல்லை என்று கண்டுபிடிக்கச் செய்வீர் . உலக நாட்டங்களிலாவது செல்வம், பெருமை, வெகுமானத்தின் பேரிலாவது, உடல் இன்பங்கள் பேரிலாவது என்னில் ஏற்படும் ஆசையை முழுதும் அகற்றிட எனக்கு அறிவைத் தந்தருளும் . சத்தியத் திருச்சபையின் உத்தம மைந்தனாக நான் என்றும் வாழ அருள் தாரும் - ஆமென்.
பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை
தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக
பரமண்டல திருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க....
மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே
தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே
தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே
தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே
சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே
இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே
சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே
அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே
மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே
வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே
ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே
பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே
வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே
மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே
பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே
காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே
இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே
பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே
உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே
எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே
நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே
நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே
புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே
திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே
ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே
சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம்
வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியைசீக்கிரத்திலே அமர்த்துகிறவரும்
உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர். இம்மையினுடைய
அவதிக்கு பிற்பாடுஎளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.
இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற
உமது புனித பத்தினியான திருச்சபையின்பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல
அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்தியபேரின்பத்திற்கு
பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.
அனுகூலமடைய செபம்:
ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே !
மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே!பரிசுத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே !
உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளிவாரும்.
விஷேசித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ !
அதுபோல் வல்லமையுள் ள உம்முடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்றவேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை
செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய்பிரகாசிக்கிறதல்லவோ ! தேவரீர் என்பேரில்
இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்.....
(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)
அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும்.
என் பாவங்களுக்காக நான் மெய்யானமனஸ்தாபப்படவும்,
ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும்
எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய்நான் இம்மையில்
ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த
தரிசித்துப் போற்றிப் புகழ்ந்துவாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.
பேய் ஓட்டுகிறதற்கு செபம்:
இதோ ஆண்டவருடைய சிலுவை;
சத்துராதிகளாகிய நீங்கள் அகன்று போகக்கடவீர்கள்.
அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா !
யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார்.
அல்லேலூயா!
நரக வல்லமையை அடக்கின புனித அந்தோனியாரே !
இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய வேதத்திற்கும் சத்துராதிகளாய்
இருக்கிறவர்கள்எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல் துன்மார்க்கங்களையும்
துர்க்குணங்களையும் நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.
காணாமல் போனவற்றைக் கண்டெடுக்க ஜெபம்
ஓ புனித அந்தோனியா ரே கடவுளின் அருள் உம்மை எங்கள் தேவைகளில்
இறைவனிடம் பரிந்து பேசுபவராகவும் களவு போன அல்லது காணாமல் போன
பொருட்களைக் காட்டிக் கொடுக்கிறவராக செய்தது அம் இன்று குழந்தைக்குரிய
அன்புடனும் பற்றுதலுடனும் உம்மை அண்டி வருகிறேன். தவறுகிறவர்களுக்கு
ஆலோசனை நீரே! துன்புறுகிறவருக்கு ஆறுதல் நீரே நோயாளிகளுக்குக் குணம் நீரே,
பாவிகளுக்கு அடைக்கலம் நீரே, கடவுளின் எண்ணற்ற மக்களுக்கு காணாமல் போன
பொருட்களையும் ஞான வாழ்விலபு இழகிய தங்களையும் குறிப்பாக விசுவநாம் நம்பிக்கை,
தேவ சிநேகம் முதலானவற்றையும் கண்டுபிடிக்கச் செய்துள்ளீர்.உறுதியான நம்பிக்கையுடன்
வருகின்ற எனக்கு இத்தருணத்தில் உதவி செய்யும். இழந்து போன (பொருளை)
இறைவனுக்குச் சித்தமானால் நீர் பெற்றுத் தருவீர் என்று திட மனதுடன் வேண்டுகிறேன் ஆமென்.
பதின்மூன்று மன்றாட்டுகள்
1.பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, அமலோற்பவ கன்னிகையின்
அடைக்கலத்தில் பிறந்தவரே I உமது தூய கற்பினால் தூய்மையான லீலியே,
ஐந்து வயதிலேயே உமது கன்னிமையை தூய கன்னிகைக்கு அர்ப்பணித்தீரே!
சிலுவை அடையாளத்தில் அலகைகளைச் சிதறடித்தவரே, நாங்களும் தூய கன்னி
மரியாளின் மட்டில் உத்தம் பக்தி உள்ளவர்களாகும் படிக்கும், நரக சர்ப்பம்
எங்களுக்குச் செய்கிற எல்லா தீங்கும் விலகும் படிக்கும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
2. பதுவைப்பதியரான தூய அந்தோனியாரே, உலக மாயையை
விலக்குவதற்காக உயர்குல மகிமையையும் செல்வங்களையும்
துறந்து, தூய அகுஸ்தின் சபையில் உட்பட்டவரே, நாங்களும் உலக
நாட்டங்களை வெறுத்து நடக்கும்படி எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
3. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, இயேசுக்கிறிஸ்துவுக்காக
உமது இரத்தத்தைச் சிந்த விரும்பி, தூய பிரான்சிஸ்கு சபையில் உட்பட்டவரே,
நாங்களும் தவ முயற்சிகளை மேற்கொண்டு தூயவராக ஒழுக எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
4. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உமது அத்தியந்த தாழ்ச்சியாலும்
நீர் உம்மை உலகத்திற்கு மறைத்துக் கொண்டாலும் உலகத்திற்கெல்லாம் உமது
திறமை சாமர்த்தியமும் உமது தூய தன்மையும் விளங்கும்படியாய் இறைவனால்
தேர்ந்து கொள்ளப்பட்டவரே, நாங்களும் தாழ்ச்சி எனும் புண்ணியத்தைக்
கடைப்பிடிக்கும் படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
5. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, சத்திய வேதபோதகத்தைப் பரப்புவதற்கு
இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவரே, அனைத்து மொழிகளையும் பேசவும்,
வியப்புக்குரிய அருங்குறிகளைச் செய்யவும் வரம் பெற்றவரே, நாங்களும்
இறைவார்த்தையை நல்ல மனதோடு கேட்டு பலன் அளிக்கும் படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
6. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, இறையன்பின் மிகுதியால்,
திருப்பாலனை உம் கரங்களில் ஏந்தப் பேறு பெற்றவரே திவ்விய நற்கருணை
திருவருட் சாதனத்தை நாங்கள் நல்ல ஆயத்தத்தோடு பெறும்படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
7. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, திவ்விய நற்கருணையிலே உண்மையாகவே
இயேசுக்கிறிஸ்து எழுந்தருளி இருப்பதை எண்பிக்கும் படியாய், ஒரு விலங்கே திவ்விய
நற்கருணையை ஆராதிக்கும்படி செய்தவரே, நாங்கள் திவ்விய நற்கருணையில் இருக்கிற
இயேசுக்கிறிஸ்துவை உயிருள்ள பற்றுறுதியோடு ஆராதிக்கும்படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
8. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, பதிதர்களும் பாவிகளும் உமது
போதகங்களைக் கேளாததினால், ஆழ்கடலில் மீன்கள் உம் அழைப்பிற்குப் பணிந்து,
உம் மறையுரையை விருப்புடன் கேட்கும்படி செய்தீரே, நாங்கள் இறைவார்த்தைக்கு
முழு கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருக்கும்படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
9. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உம்மீது பக்தியுள்ளோர்கள் எல்லாரையும்
அனைத்து ஆபத்துகளினின்று மீட்கிறதுமல்லாமல், மரணத்தினின்று முதலாய்ப் பாதுகாக்கிறவரே,
எங்கள் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வரக்கூடுமான எல்லா தீமைகளையும் குறிப்பாக முடிவில்லா
மரணத்தையும் நாங்கள் விலக்கும்படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
10. மாசில்லாதவர்களுக்குப் பாதுகாவலரே, ஒரு பெண் பிள்ளையின் நற்பெயரைக் காப்பதற்காக,
அவருடைய பூங்குழந்தையே பேசும்படி செய்தவரே,
உலகினில் நாங்கள் படும் அனைத்து துன்பங்களிலும் திடமுள்ளவர்களாயிருக்கும்
படிக்கும் எங்கள் ஆன்மாவை எந்தப் பாவக்கறையும் இல்லாமல் காப்பாற்றும் படிக்கும்
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
11. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உம் தந்தைக்கு அவ துறைப் போக்கவும்
மரணத் தீர்வையை நீக்கவும் Uது வைப்பட்டணத்திற்கு மறையுரையாற்றிக் கொண்டிருந்த போது
அற்புதமாய் லிஸ்பன் பட்டணத்திலும் இருந்தவரே, நாங்கள் எங்களுக்கு வருகிற அனைத்து
நிந்தைகளையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு எங்கள் பகைவர்களை மன்னித்து அன்பு
செய்யும்படி எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
12. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உமது செப தவங்களினாலும் ஆன்மமீ்ட்பில்
உமக்குள்ள ஆவலினாலும் உமது தூய போதகத்தினாலும் ஆயிரமாயிரம் பதிதர்களையும்
பாவிகளையும் மனந்திருப்பினவரே , நாங்கள் முழுதும் மனந்திரும்பி இறைவனுக்கு
என்றென்றைக்கும் சொந்தமாகும் படி எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
13. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உலக மீட்பரைப் போல உமது வாழ்நாள் முழுமையும்
ஆன்மாக்களை ஈடேற்ற செலவழித்தவரே, அடி யோர் உமது நல் மாதிரிகையைப் பின்பற்றி எங்கள்
வாழ்நாளில் திரு நூல்களை ஆவலோடு அடிக்கடி வாசித்து நல்ல மறையுரைகளைக் கேட்டுணர்ந்து
நேரிய வழியில் நடந்து, நீர் உமது அந்திவேளையில் இயேசு, மரியைத் தரிசித்து இறந்தது போல
நாங்களும் எங்கள் மரணத் தருவாயில் இயேசு மரியின் வணக்கத்துக்குரிய நாமங்களை உச்சரித்து
உயிர் துறக்கும் படிக்கும் உம்மைப் பின்பற்றி அவர்களை என்றென்றைக்கும் துதிக்கும் படிக்கும்
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
பாவிகளைத் திருத்துகிறவரே! நரகத்திற்கு பயங்கரத்தை வருவிக்கிறவரே/ எளிய பாவிகளாகிய நாங்கள் உம் அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க /எங்களைக் கையேற்று நடத்தியருளும். பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும் /அதனால் கண்ணீரும் /உண்டாகும் அருளையும் ஞானமுள்ள தியாகத்தையும் இறைவன் எங்களுக்குத் தந்தருளும்படி அவரை வேண்டிக் கொள்ளும் . மிகவும் எரிகிற அன்பினால் எங்களைக் கொளுத்தி எரிக்கச் சித்தமாய் இருக்க வேண்டுமென்று மிகவும் தாழ்ச்சியுடன் உம்மை வேண்டிக் கொள்கிறோம்
செபிப்போமாக
தயை மிகுந்த இறைவா! உம் பிரிய அடியாரான தூய அந்தோனியாரைப் போல் நானும் அழிந்து போகிற உலக செல்வங்கள் மேல் எனக்குள்ள பற்றை அகற்றி,உம தண்டை வந்து உமக்கு ஊழியம் செய்து வருவதே இப்பூவுலகில் எனக்கு உண்மையான நன்மையே யொழிய வேறு இல்லை என்று கண்டுபிடிக்கச் செய்வீர் . உலக நாட்டங்களிலாவது செல்வம், பெருமை, வெகுமானத்தின் பேரிலாவது, உடல் இன்பங்கள் பேரிலாவது என்னில் ஏற்படும் ஆசையை முழுதும் அகற்றிட எனக்கு அறிவைத் தந்தருளும் . சத்தியத் திருச்சபையின் உத்தம மைந்தனாக நான் என்றும் வாழ அருள் தாரும் - ஆமென்.
பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை
தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக
பரமண்டல திருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க....
மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே
தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே
தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே
தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே
சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே
இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே
சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே
அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே
மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே
வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே
ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே
பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே
வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே
மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே
பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே
காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே
இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே
பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே
உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே
எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே
நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே
நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே
புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே
திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே
ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே
சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம்
வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியைசீக்கிரத்திலே அமர்த்துகிறவரும்
உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர். இம்மையினுடைய
அவதிக்கு பிற்பாடுஎளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.
இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற
உமது புனித பத்தினியான திருச்சபையின்பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல
அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்தியபேரின்பத்திற்கு
பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.
அனுகூலமடைய செபம்:
ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே !
மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே!பரிசுத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே !
உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளிவாரும்.
விஷேசித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ !
அதுபோல் வல்லமையுள் ள உம்முடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்றவேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை
செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய்பிரகாசிக்கிறதல்லவோ ! தேவரீர் என்பேரில்
இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்.....
(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)
அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும்.
என் பாவங்களுக்காக நான் மெய்யானமனஸ்தாபப்படவும்,
ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும்
எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய்நான் இம்மையில்
ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த
தரிசித்துப் போற்றிப் புகழ்ந்துவாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.
பேய் ஓட்டுகிறதற்கு செபம்:
இதோ ஆண்டவருடைய சிலுவை;
சத்துராதிகளாகிய நீங்கள் அகன்று போகக்கடவீர்கள்.
அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா !
யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார்.
அல்லேலூயா!
நரக வல்லமையை அடக்கின புனித அந்தோனியாரே !
இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய வேதத்திற்கும் சத்துராதிகளாய்
இருக்கிறவர்கள்எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல் துன்மார்க்கங்களையும்
துர்க்குணங்களையும் நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.
காணாமல் போனவற்றைக் கண்டெடுக்க ஜெபம்
ஓ புனித அந்தோனியா ரே கடவுளின் அருள் உம்மை எங்கள் தேவைகளில்
இறைவனிடம் பரிந்து பேசுபவராகவும் களவு போன அல்லது காணாமல் போன
பொருட்களைக் காட்டிக் கொடுக்கிறவராக செய்தது அம் இன்று குழந்தைக்குரிய
அன்புடனும் பற்றுதலுடனும் உம்மை அண்டி வருகிறேன். தவறுகிறவர்களுக்கு
ஆலோசனை நீரே! துன்புறுகிறவருக்கு ஆறுதல் நீரே நோயாளிகளுக்குக் குணம் நீரே,
பாவிகளுக்கு அடைக்கலம் நீரே, கடவுளின் எண்ணற்ற மக்களுக்கு காணாமல் போன
பொருட்களையும் ஞான வாழ்விலபு இழகிய தங்களையும் குறிப்பாக விசுவநாம் நம்பிக்கை,
தேவ சிநேகம் முதலானவற்றையும் கண்டுபிடிக்கச் செய்துள்ளீர்.உறுதியான நம்பிக்கையுடன்
வருகின்ற எனக்கு இத்தருணத்தில் உதவி செய்யும். இழந்து போன (பொருளை)
இறைவனுக்குச் சித்தமானால் நீர் பெற்றுத் தருவீர் என்று திட மனதுடன் வேண்டுகிறேன் ஆமென்.
பதின்மூன்று மன்றாட்டுகள்
1.பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, அமலோற்பவ கன்னிகையின்
அடைக்கலத்தில் பிறந்தவரே I உமது தூய கற்பினால் தூய்மையான லீலியே,
ஐந்து வயதிலேயே உமது கன்னிமையை தூய கன்னிகைக்கு அர்ப்பணித்தீரே!
சிலுவை அடையாளத்தில் அலகைகளைச் சிதறடித்தவரே, நாங்களும் தூய கன்னி
மரியாளின் மட்டில் உத்தம் பக்தி உள்ளவர்களாகும் படிக்கும், நரக சர்ப்பம்
எங்களுக்குச் செய்கிற எல்லா தீங்கும் விலகும் படிக்கும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
2. பதுவைப்பதியரான தூய அந்தோனியாரே, உலக மாயையை
விலக்குவதற்காக உயர்குல மகிமையையும் செல்வங்களையும்
துறந்து, தூய அகுஸ்தின் சபையில் உட்பட்டவரே, நாங்களும் உலக
நாட்டங்களை வெறுத்து நடக்கும்படி எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
3. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, இயேசுக்கிறிஸ்துவுக்காக
உமது இரத்தத்தைச் சிந்த விரும்பி, தூய பிரான்சிஸ்கு சபையில் உட்பட்டவரே,
நாங்களும் தவ முயற்சிகளை மேற்கொண்டு தூயவராக ஒழுக எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
4. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உமது அத்தியந்த தாழ்ச்சியாலும்
நீர் உம்மை உலகத்திற்கு மறைத்துக் கொண்டாலும் உலகத்திற்கெல்லாம் உமது
திறமை சாமர்த்தியமும் உமது தூய தன்மையும் விளங்கும்படியாய் இறைவனால்
தேர்ந்து கொள்ளப்பட்டவரே, நாங்களும் தாழ்ச்சி எனும் புண்ணியத்தைக்
கடைப்பிடிக்கும் படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
5. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, சத்திய வேதபோதகத்தைப் பரப்புவதற்கு
இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவரே, அனைத்து மொழிகளையும் பேசவும்,
வியப்புக்குரிய அருங்குறிகளைச் செய்யவும் வரம் பெற்றவரே, நாங்களும்
இறைவார்த்தையை நல்ல மனதோடு கேட்டு பலன் அளிக்கும் படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
6. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, இறையன்பின் மிகுதியால்,
திருப்பாலனை உம் கரங்களில் ஏந்தப் பேறு பெற்றவரே திவ்விய நற்கருணை
திருவருட் சாதனத்தை நாங்கள் நல்ல ஆயத்தத்தோடு பெறும்படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
7. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, திவ்விய நற்கருணையிலே உண்மையாகவே
இயேசுக்கிறிஸ்து எழுந்தருளி இருப்பதை எண்பிக்கும் படியாய், ஒரு விலங்கே திவ்விய
நற்கருணையை ஆராதிக்கும்படி செய்தவரே, நாங்கள் திவ்விய நற்கருணையில் இருக்கிற
இயேசுக்கிறிஸ்துவை உயிருள்ள பற்றுறுதியோடு ஆராதிக்கும்படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
8. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, பதிதர்களும் பாவிகளும் உமது
போதகங்களைக் கேளாததினால், ஆழ்கடலில் மீன்கள் உம் அழைப்பிற்குப் பணிந்து,
உம் மறையுரையை விருப்புடன் கேட்கும்படி செய்தீரே, நாங்கள் இறைவார்த்தைக்கு
முழு கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருக்கும்படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
9. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உம்மீது பக்தியுள்ளோர்கள் எல்லாரையும்
அனைத்து ஆபத்துகளினின்று மீட்கிறதுமல்லாமல், மரணத்தினின்று முதலாய்ப் பாதுகாக்கிறவரே,
எங்கள் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வரக்கூடுமான எல்லா தீமைகளையும் குறிப்பாக முடிவில்லா
மரணத்தையும் நாங்கள் விலக்கும்படிஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
10. மாசில்லாதவர்களுக்குப் பாதுகாவலரே, ஒரு பெண் பிள்ளையின் நற்பெயரைக் காப்பதற்காக,
அவருடைய பூங்குழந்தையே பேசும்படி செய்தவரே,
உலகினில் நாங்கள் படும் அனைத்து துன்பங்களிலும் திடமுள்ளவர்களாயிருக்கும்
படிக்கும் எங்கள் ஆன்மாவை எந்தப் பாவக்கறையும் இல்லாமல் காப்பாற்றும் படிக்கும்
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
11. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உம் தந்தைக்கு அவ துறைப் போக்கவும்
மரணத் தீர்வையை நீக்கவும் Uது வைப்பட்டணத்திற்கு மறையுரையாற்றிக் கொண்டிருந்த போது
அற்புதமாய் லிஸ்பன் பட்டணத்திலும் இருந்தவரே, நாங்கள் எங்களுக்கு வருகிற அனைத்து
நிந்தைகளையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு எங்கள் பகைவர்களை மன்னித்து அன்பு
செய்யும்படி எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
12. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உமது செப தவங்களினாலும் ஆன்மமீ்ட்பில்
உமக்குள்ள ஆவலினாலும் உமது தூய போதகத்தினாலும் ஆயிரமாயிரம் பதிதர்களையும்
பாவிகளையும் மனந்திருப்பினவரே , நாங்கள் முழுதும் மனந்திரும்பி இறைவனுக்கு
என்றென்றைக்கும் சொந்தமாகும் படி எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.
13. பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, உலக மீட்பரைப் போல உமது வாழ்நாள் முழுமையும்
ஆன்மாக்களை ஈடேற்ற செலவழித்தவரே, அடி யோர் உமது நல் மாதிரிகையைப் பின்பற்றி எங்கள்
வாழ்நாளில் திரு நூல்களை ஆவலோடு அடிக்கடி வாசித்து நல்ல மறையுரைகளைக் கேட்டுணர்ந்து
நேரிய வழியில் நடந்து, நீர் உமது அந்திவேளையில் இயேசு, மரியைத் தரிசித்து இறந்தது போல
நாங்களும் எங்கள் மரணத் தருவாயில் இயேசு மரியின் வணக்கத்துக்குரிய நாமங்களை உச்சரித்து
உயிர் துறக்கும் படிக்கும் உம்மைப் பின்பற்றி அவர்களை என்றென்றைக்கும் துதிக்கும் படிக்கும்
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
1 பர.அரு.திரி.