- தேவன்னை
- ஆரோக்கிய மாதா
அன்னை அளித்த மூன்று காட்சிகள்
முதல் காட்சி
நாகப்பட்டினத்தருகே வேளாங்கண்ணி என்னும் சிற்றூரில் அண்ணாப் பிள்ளைத் தெருவில் உள்ள சிறு குளம். அதன் கரையில் ஒரு ஆலமரம். நாகைக்குப் பால் கொண்டு சென்ற சிறுவன் களைப்பாற அந்த மரத்தடியில் அமர்ந்த சிறிது நேரத்தில் திடீரென ஒரு பேரொளி அவன் முன் வீசியது . அழகு மங்கையும் அவள் கையில் தவழ்ந்த பால் முகத்தான மாசில்லாக் குழந்தையும் அவனிடம் வந்தனர் . அம்மங்கை அச்சிறுவனிடம் குழந்தைக்குப் பால் கேட்டாள். சிறுவன் கொடுத்து குழந்தை குடிப்பதைக் கண்டு மகிழ்ந்தான். ஒளி தேய்ந்து காட்சி மறைந்தது . மெய் மறந்து நின்ற சிறுவன் தன்னுணர்வு பெற்றவுடன் எழுந்து நாகைக்கு நடந்தான். காலம் தாழ்ந்து வந்ததற்கும் குறைந்துள்ள பாலுக்கும் மன்னிப்புக் கோரி பாத்திரத்தைத் திறந்தான் . ஆச்சரியம் ! பால் குறையவில்லை . மாறாக நிறைந்து வழிந்தது. வேளாங்கண்ணியில் நடந்த நிகழ்ச்சியை அறிந்த நாகைப் பெருங்குடி மகனார் அன்னை தோன்றிய ஆலமரத்தடிக்கு விரைந்து சென்றார். அன்னையைக் காட்சியில் கண்டு இறும்பூது எய்தி வேரறுந்த மரம் போல் வீழ்ந்து அன்னையை வணங்கினார். அந்தக் குளமே இப்பொழுது மாதா குளம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறது
இரண்டாம் காட்சி
இப்பொழுதுள்ள மாதா குளத்துக்கும் கோயிலுக்கும் இடையில் இருந்த நடுத்திட்டு என்னும் இடத்தில் முடவனான சிறுவன் மோர் விற்றுக் கொண்டிருந்தான் . கொடூரமான வெயிலில் நடந்து களைத்தவர் மோர் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் திடீரென பேரொளி கண்டான். அதனூடே பேரழகியான ஒரு தாயையும் குழந்தையையும் கண்டு ஆனந்தப் பரவசமானான். மோர் கேட்ட அந்த தாய்க்கு மோர் கொடுக்க இருவரும் பருகினர். மேலும் நாகைக்குச் சென்று நல்ல மனிதர் ஒருவரிடம் கூறி தனக்கொரு ஆலயம் அமைத்திடுமாறு அம்மாது அவனைக் கேட்டாள் . முடவன் தயங்கினான் . தன இயலாமையை எண்ணி வருந்தினான். எழுந்து நட என்றாள் அன்னை. முடவன் எழுந்தான் நடந்தான் ஓடினான். நாகைக்குச் செய்தியை அறிவித்தான். அவனே அந்த செய்திக்குச் சாட்சி. நம்பி ஓடி வந்த அந்த நல்ல குடிமகனும் நடுத்திட்டில் ஒரு ஓலைக் கோயிலைக் கட்டி வைத்தார். காட்சி தந்தவாறு ஒரு சுரூபமும் செய்து வைத்தார் . அன்னை தந்த சிறுவனின் அற்புத உடல்நலம் அனைவர் காதிலும் எட்டத் துவங்கியது. மக்கள் கூட்டம் வரத் துவங்கியது. அவ்வன்னையை ஆரோக்கிய மாதா என்று அழைத்து வணங்கினர்
மூன்றாம் காட்சி
பதினேழாம் நூற்றாண்டில் ஒரு போர்த்துகீசியக் கப்பல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வங்கக் கடலில் புயலால் தாக்குண்டது. கப்பலோட்டிகள் கதிகலங்கி விண்ணக அன்னையை நோக்கி மன்றாடினர். தாயே நலமுடன் கரை சேர்த்தருளும். ஆலயம் ஒன்று அழகுற அமைப்போம் என்று நேர்ந்து கொண்டனர். பேய்க்காற்று ஓய்ந்தது . இருண்ட வானம் ஒளி தந்தது . மரக்கலமும் வேளாங்கண்ணிக் கரை போய் சேர்ந்தது . அன்று செப்டம்பர் 8ஆம் நாள் . அதே இடத்தில் அன்னைக்கோர் ஆலயம் எழுப்பினர் . அது தான் இன்று அழகுற எழுந்து நிற்கும் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலங்களுக்கு முன்னோடியாக அமைந்தது . அந்த மாலுமிகள் கொண்டு வந்து பதிய வைத்த ரோசிலைன் கற்களாலான பீடம் இன்றும் அதே இடத்தில் உள்ளது .அதே செப்டம்பர் 8 ஆம் நாள் தான் பேராலய ஆண்டுத் திருவிழாவும் இன்றும் நடைபெறுகிறது
வேளாங்கண்ணி மாதாவுக்கு நவநாள் ஜெபம்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக .
ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்
மகா பரிசுத்த கன்னிகையே , இயேசுவின் தாயாராயிருக்குமாறு மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட மணியே ! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமானபோதும் ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசு அணுகாத கருவில் தாங்கிய போதும் , நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும் , ஜெபங்களினாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் ,கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே ! நீர் அப்போது அனுபவித்த இப்பெரு மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறவர்களுக்கு நீர் வாக்களித்த விசேஷ உதவியையும் பாதுகாப்பையும் எனக்காக இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின்போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுக்கள் கடவுளுடைய விருப்பத்திற்கு மாறானவையாக இருந்தால், எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்
(வேண்டுதலை உறுதியோடு கேட்கவும்)
தேவனின் தாயே ! இப்போது உமக்கு வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையைக் காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திருஉள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளையும் இப்போது நான் செய்யப்போகும் 'அருள் நிறை ' ஜெபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்
(அருள் நிறை ஜெபத்தை 9 முறை சொல்லவும் )
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே , 'அருள் நிறைந்தவள் ' என்று கபிரியேல் தூதர் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துதல்களைக் கூறுகிறேன் , ஏற்றுக் கொள்ளும்
நீர் அணிந்திருக்கும் முடியில் என் ஜெபங்கள் அத்தனையும் விண்மீன்கள் எனத் துலங்குமாறு விரும்புகிறேன் . வருந்துவோருக்கு ஆறுதலே , நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு, உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன் . உமது திருமகனும் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும், அது போன்ற உமதன்பையும் பார்த்து, ஏழையான எனது ஜெபத்தை ஏற்று ,என் மன்றாட்டை அடைந்து தந்தருளும் தாயே ஆமென்
வேளாங்கண்ணி மாதாவை நோக்கி மன்றாட்டு
கன்னி மரியே ! ஆரோக்கிய அன்னையே ! வேளாங்கன்னியில் இரக்கத்தின் அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் ஆண்டவளே ! எங்களின் ஆன்ம , உடல் நோய்களை அகற்றி , எங்களுக்கு ஆறுதலாயும் அடைக்கலமாயும் இருந்தருளும். உமது பேருதவியால் எண்ணற்ற பிணியாளர் நலமடைந்துள்ளனர். உமது வல்லமையையும், தயவையும் நம்பிக் கொண்டு உம்மை நாடி வந்துள்ளோம். உம திருமகனையும் , உம்மையும் அன்பு செய்து இறைத் தொண்டர்களாக நாங்கள் விளங்குமாறு செய்தருளும். எங்களின் ஆன்ம அருள் வாழ்வை வளப்படுத்தி அருளும்.
உலக துன்பங்களாலும், மன வேதனைகளாலும் அல்லலுறுகின்றவர்களுக்கு அருகிலிருந்து உமது தாயன்புடன் ஆறுதலளியும். இறைவனின் திருவுளத்திற்கு ஏற்புடையதானால் அத்தகைய துன்ப வேதனைகளிநின்று அவர்களைக் காத்தருளும் . பாவச் சேற்றில் சிக்குண்டவர்களை உமது அருள் நீரால் கழுவி புனிதராக்கியருளும்
இதயத் தாழ்ச்சியும் , சாந்தமும் உள்ள இறைமகனை ஈன்றெடுத்த தாயே ! உமது உதவியை நாடியவர் எவராகிலும் உம்மால் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லையே ! எங்களுடைய துயர வேளைகளில் எங்களின் தஞ்சமாயிருப்பீர் என்று நாங்கள் உறுதியாயிருக்கிறோம். ஏனெனில் ஆறுதல் அளிக்க விரைந்திடும் விண்ணகத்தாய் நீரே ! இம்மண்ணகத்தில் கசிந்த கண்களையும் அவற்றினின்று வழிந்தோடும் துன்பக் கண்ணீரையும் கண்டு இரக்கமுடன் எங்களை அரவணைத்துக் கொள்வீராக
இறை மக்களுக்கெல்லாம் சகாயம் புரிந்து வரும் ஆரோக்கிய மாதாவே ! நீர் எல்லாம் வல்ல இறைமகன் கிறிஸ்துவின் அன்னையாகையால் எவ்வுதவியையும் எங்களுக்கு அடைந்து கொடுக்கக்கூடியவள் அன்றோ ! எல்லா ஆபத்துகளினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும் . எங்களைப் பற்றியுள்ள தீமைகளை அகற்றியருளும் . இறை அன்பில் வளர்ந்திட , நலமும் , வரமும் , அருளும் பெற்று நாங்கள் ஒவ்வொருவரும் உம்மோடு கூடி என்றென்றும் இறைபுகழ் பாடி அவரை வாழ்த்துவோமாக ஆமென்
ஆன்ம உடல் தேவையில் மன்றாட்டு
என் ஆண்டவளே , இறைவன் எனக்களித்த உண்மையான ஆறுதலே , இடுக்கண்களில் இளைப்பாற்றியளிக்கும் விண்ணக பத்தினியே ! பாவ இருளில் அகப்பட்டுத் தவித்திடும் ஆன்மாவுக்கு ஒளிச் சுடரே ! திருப்பயணத்தில் வழிகாட்டியே ! பலவீனத்தில் வலிமையே ! ஏழைகளின் ஆறுதலே ! நோயுற்றவர்களின் அமிழ்தமே ! பாவிகளின் தஞ்சமே ! என் மீட்பின் நம்பிக்கையே, எல்லையற்ற முறையில் அன்பு செய்யும் இறைவனுக்கு நீர் தாயாகையால் உமது மேலான மகத்துவத்திற்கேற்ப என் மீது இரக்கம் காட்டியருளும். என் தேவைகளை எல்லாம் அறிந்துள்ள உம்மிடம் என் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிக்கிறேன்
விண்ணக மண்ணக அரசியே ! கருணை நிறைந்த மரியே ! பாவிகளின் தஞ்சமே ! பாவக்கடலில் அமிழ்ந்தவர்களுக்குத் தெப்பமே ! உலகத்திற்கெல்லாம் தயாபரியே! அடிமையானவர்களை மீட்கின்ற கிரயமே ! நோயாளிகளுக்கு ஆரோக்கியமே ! உள்ளம் வேதனைப்படுகிறவர்களுக்குஆறுதலே ! இவ்வுலக வாழ்வுக்கான இருப்பிடமே ! தஞ்சமென்று நாடி வந்திருக்கும் அடியேனைப் புறக்கணிக்காது , நான் கேட்கின்ற சகாயத்தை அடைந்து தந்தருள உம திருமகனிடம் மன்றாடும் தாயே ஆமென்
முதல் நாள் ஜெபம்
அமலோற்பவ கன்னிகையே , இறைவனின் மேலான படைப்பே , வல்லப மிக்கவர் பெருமை உள்ளவைகளை உம்மிடத்தில் செய்தருளினார் என்பது முற்றிலும் உண்மையே .அவர் பூமியை உண்டாக்கி அலங்கரித்தபொழுது, தண்ணீர் அனைத்தையும் கடலில் ஒன்றாகச் சேர்த்தது போன்று எல்லா தேவ வரங்களையும் உம்மிடத்தில் நிறைத்து வைத்திருக்கிறார் . ஓ மனுக்குலத்தின் சிறப்பே ! பூவுலகின் எழிலே !! இறைவனின் ஆலயமே !! பரிசுத்த தமத்திருத்துவத்தின் இன்பப் பூங்காவே , நீர் வாழ்க ! வாழ்க !
ஆரோக்கியத்தாயே ! புனித பாப்பரசருக்காகவும் , திருச்சபைக்காகவும் , கிறிஸ்துவின் எல்லா அடியார்களுக்காகவும் இறைவனிடம் மன்றாடுமாறு உம்மை வேண்டுகின்றோம் . ஆன்ம வாழ்வையும் ,அறிவையும், ஆரோக்கியத்தையும் அளித்திட வேண்டியவர் நீரல்லவோ !
வாலிபர் பாவச் சோதனைகளில் சிக்கிக் கொள்ளாமல் அருள் வாழ்வில் நிலைத்து , அறநெறியில் நடந்திட அருள் கூர்ந்திடும் பரிசுத்த தாய் நீரன்றோ !
கன்னிப்பெண்கள் தங்கள் அணிகலனான கற்பினைக் களங்கம் ஏற்படாமல் காத்திட வரமளித்திடும் கற்பின் அரசி நீரல்லவோ ?
குடும்பப் பெண்கள் தங்கள் மாங்கல்ய மாட்சியை மங்காமல் காத்திட உதவிடும் தாவீது குலச்செல்வி நீரல்லவோ ?
தாய் தந்தையர்களுக்கு எடுத்துக்காட்டு நீர் ; விதவைகளுக்கு ஆறுதல் நீர் ; விரத்தர்களுக்குத் தஞ்சம் நீர் ; எளியோர்களுக்குச் செல்வம் நீர் ; நோயாளிகளுக்கு ஆரோக்கியம் நீர் ; மனத்துன்புறுவோருக்கு அடைக்கலமும் நீரன்றோ ! அம்மா , உம் வழியாய் இறைவனை அன்பு செய்து அவர் மகிமைக்காக வாழ்ந்திட எங்களுக்காக வேண்டிக்கொள்ளுவீராக (புகழ் மாலை ஜெபிக்கவும் )
இரண்டாம் நாள் ஜெபம்
தாவீது குலத்தின் மாணிக்கச் சுடரே ! யூத மக்களின் ஜோதிக்கதிரே , எளிய பாவிகளாகிய நாங்கள் உம் அன்பையும், மாட்சியையும் கண்டு வியக்கிறோம் . அழகியின் ஆட்சியை அழித்திட அமலோற்பவ திருக்குழந்தையாய்ப் பிறந்தீர் . இருளின் பிடியில் மருளும் மனுக்குலத்தோருக்கு கிறிஸ்துவின் ஒளிவீசிடச் செய்தீர். மருள் நீக்கி அருள் வாழ்வை அனைவருக்கும் அளித்திட வேளாங்கன்னித் திருத்தலத்தில் வீற்றிருக்கிறீர்.
ஓ! பேருபகார அன்னையே , மாசில்லாக் கன்னிகையே , பாவ சுமையால் வாடும் நாங்கள் உம்மிடம் புகலிடம் தேடி ஓடி வருகிறோம் . ஆழ்ந்த நம்பிக்கையோடு உம்மை அழைக்கின்றோம் . உம் திருப்பெயரை பக்தியுடன் நாவினிக்கப் புகழ்கின்றோம்
ஓ மரியே ! தயாளத் தாயே , விமலனின் அமலியே, எங்களுக்கு ஆன்ம நலமஅருளும் . தூய்மை வழி நடத்தும் . பாவம் சூழ்ந்த இருள் அகற்றி , கிறிஸ்துவின் ஒளியை எங்கள் உள்ளத்தில் ஏற்றும் . உடல் நலமும் அளித்திட வேண்டும் அம்மா (புகழ் மாலை )
மூன்றாம் நாள் ஜெபம்
எங்கள் நேசத்துக்குரிய மாதாவே ! நீரே புனித வாழ்வின் மேலான எடுத்துக்காட்டு . நீர் வாழ்க ! இளமையில் தானே உலகின் இன்பத்தைத் துறந்தவளாய் பெற்றோரையும் தனிமையில் விட்டு விட்டு ஆலயத்தில் உம்மைக் கடவுளுக்கே உரிய காணிக்கையாக அர்ப்பணித்தீர். கிறிஸ்துவில் புது வாழ்வு பெற்ற நாங்கள் , உடல் , உலகம், அலகை இம்மூன்றையும் விட்டு விட்டதாக வாக்களித்தோம் . ஆனால் பலமுறை தவறினோம் . வாக்குறுதியை மீறி குற்றங்கள் பல புரிந்தோம். உலக இன்பத்தையே நாடி அலைந்தோம் . நிலையான விண்ணகப் பேரின்பத்தை மறந்தோம் . சிலுவையில் அன்பில் செம்மலாக , மீட்பின் ஆயராக , பலியான இயேசுவை பாவ வாழ்வால் பரிகசித்தோம் . இகழ்ந்து ஒதுக்கினோம் .
கருணையே உருவான இறைவனின் அமல அன்னையே , எங்கள் பாவ நிலையை உணர்ந்து வருந்துகிறோம் . அவல நிலையிலிருந்து எங்களைக் காத்திட வேண்டுகின்றோம் . இறைவனை நிந்தித்த எங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும் பேருபகாரத்தாய் நீரல்லவோ ! அருளை இழந்து இருளில் அலைந்து திரியும் எங்களுக்கு உம் அன்புக்கரங்களை நீட்டியருளும் . இயேசுவின் இதய ஊற்று நீரைப்பருகி இறைவனின் புனித மக்களாக வாழ்ந்திட அருள் புரியும் ( புகழ் மாலை )
நான்காம் நாள் ஜெபம்
ஓ! தூய அன்பின் அன்னையான புனித ஆரோக்கிய கன்னிகையே , நீர் இயேசுவின் தாய் என்பது பற்றி மிக்க பெருமை கொள்கிறோம் . உம்மை உள்ளத்துடன் ஏற்றி போற்றி வாழ்த்துகிறோம் . இறைதூதர் அறிவித்த நற்செய்தியை தாழ்ச்சி உள்ளத்துடன் ஏற்றுக்கொண்டீர் என்பதை நாங்கள் பக்தியுடன் தியானிக்கின்றோம்
அருள் நிறைந்த மரியே வாழ்க ! நீர் இறைமகனை கருவாக உமது திருவயிற்றில் ஏந்திய நேரமுதல் , உம் புகழ் விண்ணோக்கி வளர்ந்தது . வரங்களும் அருளும் உம்மில் நிறைந்திட நீர் இறைவனின் தாயானீர். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே . கிறிஸ்துவில் நீர் பெற்ற புது வாழ்வில் நாங்களும் பங்கு கொண்டு அருள் நிறைந்தவர்களாக எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . உமது தாழ்ச்சியைக் கண்ட விண்ணக அரசர் உம்மில் மனிதனானார் . உமது நிகரில்லாக் கற்பின் மணம் கமழ பரிசுத்த ஆவி உம்மீது எழுந்தருளினார்
ஓ! கருணை நிறைந்தவளே ! உம்மில் இறைவன் ஒன்றித்தது போல் , திருவருட்சாதனங்கள் வழியாக நாங்களும் அவருடன் ஒன்றித்து வாழ எங்களுக்காக மன்றாடுவீராக .
ஆதித்தாயின் தீவினையால் சபிக்கப்பட்ட மனுக்குலம் உம் வழியாக ஆசீர் பெற்றுள்ளது . ஓ! மாதர்களின் மாணிக்க ஒளிச் சுடரே ! தாய்மார்களின் தூய இரத்தினமே ! , சுந்தரவதிகளின் சுந்தரியே , எல்லாத் தலைமுறைகளும் உம்மைப் பேறுடையாள் என்று போற்றுமே , உம்மைப் பணிந்து வாழ்த்துகிறோம் . தாயே எங்களை உம் அன்புக்கரங்களால் ஆசீர்வதித்தருளும். ( புகழ்மாலை )
ஐந்தாம் நாள் ஜெபம்
களங்கமற்ற ஆரோக்கிய கன்னிகையே ! இறைவனின் கொடைகளைப் பெற்றுத் தரும் பேருபகாரியே வாழ்க ! புனித எலிசபெத்தம்மாள் வீட்டில் நீர் தங்கி இருந்தபோது அவ்வீட்டாருக்கும் ஸ்நாபக அருளப்பருக்கும் எத்தனையோ நன்மைகள் கிடைக்கச் செய்தீர். வேளாங்கன்னித் திருத்தலத்தில் வீற்றிருக்கும் நீர் எங்களுக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் பெற்றுத் தாரும் . உமது தயவால் இத்திருத்தலத்தில் பார்வை பெற்றோரும் , ஆரோக்கியம் அடைந்தோரும் , பாவ வழி விட்டு மனந்திரும்பியோரும் ஆறுதல் அடைந்தோரும் எத்தனையோ பேர்
ஓ! தயை நிறைந்த தடாகமே ! இரக்கத்தின் திரு உருவே ! மனித குலத்துக்கு நீர் செய்துள்ள பேருபகாரங்களுக்கு வணக்கத்துடன் நன்றி கூறுகின்றோம் . உம்மை உயர்த்திய எல்லாம் வல்ல இறைவனைப் பணிந்து ஆராதிக்கிறோம் . எங்களுக்காக என்றும் இறைவனிடம் மன்றாட வேண்டுகின்றோம்
கன்றை அறியாப் பசுவில்லை; சேயை அறியாத் தாயில்லை . நீர் மனுக்குலத்தின் தாயாக உள்ளீர். உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் உம் அன்புக்கரங்களில் வைத்துக் காத்தருளும். மேலும் கிறிஸ்துவை நிராகரித்தவர்களும் , பாவ வழியில் வாழ்பவர்களும் மனந்திரும்ப இறைவனை வேண்டிக் கொள்ளும்
(புகழ் மாலை )
ஆறாம் நாள் ஜெபம்
இறை மக்களால் போற்றப்படும் அமல ஆரோக்கிய அன்னையே , உமது நிகரற்ற புகழினை எடுத்துரைக்க எவரால் இயலும் ? மனுவான இறைவன் உம் வழியாகவன்றோ உலகிற்கு மீட்பளித்தார் என்றும் கன்னிமைக்குப் பழுதின்றி கடவுளின் தாயாக விளங்குகிறீர் . உம்மை வாழ்த்துகிறோம்
ஓ! விண்ணகத்தில் வீற்றிருக்கும் எங்கள் இன்பமே , இறை ஒளியை அள்ளி வழங்கிடும் குளிர் நிலவே , உண்மை வழி காட்டும் விண்மீனே, உம் கரங்களில் தவழும் அன்புக் குழந்தையை ஆராதித்து உம்மை வணங்குகிறோம் . இயேசு எங்களின் அரசர் ; நீர் எங்கள் அரசியாக இருக்கிறீர் . அவர் எங்களின் ஆண்டவர் ; நீர் எங்களின் மாதாவாயிருக்கிறீர். விண்ணகத் தந்தைக்கும் மனிதருக்கும் இடையே நடுவராக இருக்கிறார் கிறிஸ்து . உமது திருமகனுக்கும் எங்களுக்கும் இடையே நீர் நடுவராக இருக்கிறீர் . இயேசு பரலோக வழியாக இருக்கிறார் . நீர் அதன் வாயிலாக இருக்கிறீர்.
ஓ! பேறு பெற்ற இஸ்ரயேல் குலமகளே ! அருளின் இருப்பிடமே ! படைத்த இறைவனை எங்களின் மீட்பராக ஈன்றெடுத்தீர். உலகமே கொள்ள முடியாதவரை நீர் உமது திரு வயிற்றில் தாங்கினீர். உயிர்களுக்கு உணவூட்டுகின்றவருக்கு நீர் பாலூட்டி வளர்த்தீர். இதனாலன்றோ எல்லாத் தலைமுறையினரும் உம்மைப் பேறுடையாள் என்று வாழ்த்துகின்றன . உம் திருமகனிடம் எமக்காய்ப் பரிந்து பேசும் . அவரை அன்பு செய்து சேவித்து வாழ வரமருளும் .அவரோடும் , உம்மோடும் விண்ணகத்தில் முடிவில்லா இன்பமடைய அருள் தாரும்
(புகழ் மாலை )
ஏழாம் நாள் ஜெபம்
இரக்கம் மிகுந்த தாயே , எங்கள் பாவங்களின் பொருட்டு நீர் இயேசுவுடன் அனுபவித்த வேதனை எவ்வளவோ கொடூரமானது . அதை நினைத்து ஆலைவாய்க் கரும்பென மனமுருகுகின்றோம்
ஓ! கருணைக் கடவுளின் கன்னித் தாயே ! நீர் சிந்திய கண்ணீர் யாவும் எங்களுக்கு அருட்சுனையாய்ப் பாயட்டும் . எங்கள் உள்ளத்தில் காணப்படும் தீய நாட்டங்களை எல்லாம் அகற்றி இறையன்பை வளர்க்கட்டும். அன்புத் தந்தைக்கு ஏற்ற பிள்ளைகளாக நாங்கள் வாழ எங்களுக்கு ஆசீர் தாரும்
பரிசுத்த மாதாவே ! எல்லா ஆபத்துகளினின்றும் எங்களை பாதுகாத்தருளும் . வேடனைக் கண்ட பறவை விண்ணிலே பறந்து மறைவது போலவும் , புலியைக் கண்ட புள்ளிமான் புதருக்குள் பதுங்கி ஒளிவது போலவும் பாவிகளாகிய நாங்கள் உமது மாசற்ற திரு இருதயத்தில் அடைக்கலம் நாடி ஓடி வருகிறோம் . எங்களை அரவணைத்து இறைவனிடம் அழைத்துச் செல்ல வேண்டுகிறோம்
(புகழ் மாலை )
எட்டாம் நாள் ஜெபம்
ஓ! உன்னதக் கடவுளின் ஆலயமே ! ஞானத்தின் இருப்பிடமே ! நீர் வாழ்க ! ஆதியில் அழியாத கேதுரு மரத்தினால் வாக்குத்தத்தப் பெட்டகம் செய்யப்பட்டு உள்ளும் புறமும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டிருந்தது . அதுபோன்று உமது திருவுடல் அழியாமையைத் தரித்துக் கொள்ள இறைவனின் மாட்சி உம்மில் அணிகலனாக விளங்கிற்று. உம்மைக்கண்டு பூரிப்படைகிறோம் . இறைவனுக்கு மகிமை உண்டாகுக என்று வாழ்த்துகிறோம்
மாசும் , குறையும் , கரையும் இல்லாத அழகுத் திரு உருவே , மண்ணக வாழ்வின் இறுதியில் விண்ணகத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதாவே , வழிபோக்கர்கலாகிய எங்களை மறந்து விடாதீர். ஒளியான இறைவனுடன் ஒன்றித்துள்ள விண் சுடரே , இருளில் வாழும் எங்களுக்கு ஒளியைப் பெற்றுத் தாரும் . உலகம் என்ற கடலிலே படகு போன்ற எங்கள் அற்ப வாழ்வு ஆபத்தின்றி கரை சேர்ந்திட அருள்வீராக . சிலுவையினடியில் இயேசு எங்களை உம் மக்களாக்கி ஒப்படைத்துள்ளார் அன்றோ ! அன்புத்தாயே , எங்களை ஆதரித்து காப்பற்றியருள உம்மை மன்றாடுகின்றோம். இம்மண்ணக வாழ்வில் அண்மைத் தூய்மையையும் உடல் ஆரோக்கியமும் பெற்றவர்களாய் விண்ணகத்தில் உம்மோடு என்றென்றும் இறைவனைப் போற்றிட வரம் அருள வேண்டுகிறோம்
(புகழ் மாலை )
ஒன்பதாம் நாள் ஜெபம்
ஆரோக்கிய அன்னையே ! இறைவனின் தாயான உம்மை வாழ்த்துகிறோம் . இறைவனின் புகழ் பாடும் படைப்புப் பொருட்கள் அனைத்தும் உம்மை வாழ்தும்படியாக அழைக்கின்றோம்
கடவுளின் படைப்புகளே , ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள் .வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள் . இறைவனின் தூதர்களே , ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானகப் படைப்புகளே வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். விண்ணகத்திலுள்ள புனிதர்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். பகலோனே , நிலவே ,வானத்தில் ஒளிர்கின்ற விண்மீன்களே
ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மழையே , பனியே விண்ணக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள்
வெம்மையே , குளிரே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மலைகளே, குன்றுகளே , பள்ளத்தாக்குகளே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள் . இருளே ஒளியே ஆரோக்கிய அன்னையை வாழ்த்துங்கள் . மேகங்களே , மின்னல்களே, ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள் . பூமிதனில் உள்ள விளைச்சல்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள் . சுனைகளே, மலையருவிகளே, நதிகளே , ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள் . கடலே , கடல்வாழ் உயிர்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள் . வானத்துப் பறவைகளே தரைவாழ் உயிரினங்களே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள்
ஆரோக்கியத் தாயே புகழ் பாடும் உம் மக்களின் மன்றாட்டுக்களை தயவுடன் ஏற்றுக் கொள்ளும் . நாங்கள் என்றென்றும் உம்மை எங்கள் தாயாக அன்பு செய்வோம் .நாங்கள் ஆன்மா, உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாக இறைவனின் அன்பில் நிலைத்துப் புனிதர்களாக வாழ்ந்திட எங்களுக்காக உம் திருமைந்தன் வழியாக விண்ணகத் தந்தையிடம் மன்றாடுவீராக ஆமென் (புகழ் மாலை )
புகழ் மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
ஜென்மபாவமில்லாமல் உற்பவித்த அர்சிஷ்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உலகம் படைக்கப்படுமுன் சர்வேசுரனால் தேர்ந்து கொள்ளப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே
இன்ப வனத்தில் ஆதிப் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே
பாவ இருளை அகற்றுகின்ற ஞான ஒளியான புனித ஆரோக்கிய மாதாவே
விடிவெள்ளி என இறைவாக்கினரால் போற்றப்படும் புனித ஆரோக்கிய மாதாவே
மனுக்குலத்துக்கு அருள்மழை பெறுவிக்கும் மேகமான புனித ஆரோக்கிய மாதாவே
எல்லா நன்மைத்தனத்துக்கும் பாத்திரமான ஆரோக்கிய மாதாவே
பிதாப்பிதாக்களால் பரிசுத்தமானவள் என்று அழைக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே
அகங்காரப் பேயின் தலையை மிதித்த புனித ஆரோக்கிய மாதாவே
இஸ்ராயேலரின் பதினாறு அரச குலங்களுள் சிறப்புற்ற குலத்தில் உதித்த புனித ஆரோக்கிய மாதாவே
பேறுபெற்ற அன்னம்மாள் சுவக்கீனின் திருமகளாகப் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
அவர்களின் வேண்டுதல்களாலும் நற்செயல்களாலும் இறைவனின் அன்புக் குழந்தையாகப் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
தூதர் , புனிதர் அனைவருக்கும் மேலாக நிறைந்த அருள் ஒளியோடு பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
படைப்புப் பொருட்கள் அனைத்திற்கும் மேலாக இறைவனுக்கு மகிமையளிக்கப் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
விண்ணுலகும் மண்ணுலகும் போற்றிடும் அழகுடன் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
கடவுளின் கொடைகளைஎல்லாம் பெறுவிக்கும் இறைகுலக் கொழுந்தான புனித ஆரோக்கிய மாதாவே
நித்தியமும் இறைவனின் திருமுன் தேர்ந்தெடுக்கப் பெற்றவளாக விளங்கிடும் புனித ஆரோக்கிய மாதாவே
தூய்மையின் வழியில் எல்லாப் புனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே
பிறப்பின்போது விண்ணக ஒளியால் சுடர்விட்ட புனித ஆரோக்கிய மாதாவே
மனுக்குலத்தின் மகிழ்ச்சியாக விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே
பிறந்தவுடன் விண்ணகத் தந்தைக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே
உமது அழகுக்கேற்ப மரிஎன்னும் புதிய பெயர் சூட்டப்பெற்ற புனித ஆரோக்கிய மாதாவே
என்றும் கன்னிகையாக விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே
ஆலயத்தில் அனைவருக்கும் ஆசிரியையாக விளங்கிய ஆரோக்கிய மாதாவே
நோயுற்றோரின் துன்பத்தை அகற்றி நலமருளும் புனித ஆரோக்கிய மாதாவே
உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான புனித ஆரோக்கிய அன்னையே
புனிதர்களின் விண்ணக முடியென விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
செபிப்போமாக
விண்ணகத் தந்தையே ! பரிசுத்த கன்னிகையாகிய புனித மரியாளை எல்லா அருட்கொடைகளாலும் அலங்கரித்து உமது திருக்குமாரனைப் பெற்று அமுதூட்டி வளர்க்கும் தாயாக நித்தியந்தொட்டு தெரிந்து கொண்டீரே ; அந்த உத்தமத் தாய் எங்களுக்காக மன்றாடிக் கேட்கும் விண்ணப்பங்களை நாங்கள் அடைந்து வறுமை , பிணி போன்ற துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்படுவோமாக
அத்தையின் வழியாக ஆரோக்கியமும் , மகிழ்ச்சியும் பெற்றவர்களாய் தூய்மையின் வழி நடந்து விண்ணக முடியைப் பெற்றுக் கொள்ள அருள் கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென்
முதல் காட்சி
நாகப்பட்டினத்தருகே வேளாங்கண்ணி என்னும் சிற்றூரில் அண்ணாப் பிள்ளைத் தெருவில் உள்ள சிறு குளம். அதன் கரையில் ஒரு ஆலமரம். நாகைக்குப் பால் கொண்டு சென்ற சிறுவன் களைப்பாற அந்த மரத்தடியில் அமர்ந்த சிறிது நேரத்தில் திடீரென ஒரு பேரொளி அவன் முன் வீசியது . அழகு மங்கையும் அவள் கையில் தவழ்ந்த பால் முகத்தான மாசில்லாக் குழந்தையும் அவனிடம் வந்தனர் . அம்மங்கை அச்சிறுவனிடம் குழந்தைக்குப் பால் கேட்டாள். சிறுவன் கொடுத்து குழந்தை குடிப்பதைக் கண்டு மகிழ்ந்தான். ஒளி தேய்ந்து காட்சி மறைந்தது . மெய் மறந்து நின்ற சிறுவன் தன்னுணர்வு பெற்றவுடன் எழுந்து நாகைக்கு நடந்தான். காலம் தாழ்ந்து வந்ததற்கும் குறைந்துள்ள பாலுக்கும் மன்னிப்புக் கோரி பாத்திரத்தைத் திறந்தான் . ஆச்சரியம் ! பால் குறையவில்லை . மாறாக நிறைந்து வழிந்தது. வேளாங்கண்ணியில் நடந்த நிகழ்ச்சியை அறிந்த நாகைப் பெருங்குடி மகனார் அன்னை தோன்றிய ஆலமரத்தடிக்கு விரைந்து சென்றார். அன்னையைக் காட்சியில் கண்டு இறும்பூது எய்தி வேரறுந்த மரம் போல் வீழ்ந்து அன்னையை வணங்கினார். அந்தக் குளமே இப்பொழுது மாதா குளம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறது
இரண்டாம் காட்சி
இப்பொழுதுள்ள மாதா குளத்துக்கும் கோயிலுக்கும் இடையில் இருந்த நடுத்திட்டு என்னும் இடத்தில் முடவனான சிறுவன் மோர் விற்றுக் கொண்டிருந்தான் . கொடூரமான வெயிலில் நடந்து களைத்தவர் மோர் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் திடீரென பேரொளி கண்டான். அதனூடே பேரழகியான ஒரு தாயையும் குழந்தையையும் கண்டு ஆனந்தப் பரவசமானான். மோர் கேட்ட அந்த தாய்க்கு மோர் கொடுக்க இருவரும் பருகினர். மேலும் நாகைக்குச் சென்று நல்ல மனிதர் ஒருவரிடம் கூறி தனக்கொரு ஆலயம் அமைத்திடுமாறு அம்மாது அவனைக் கேட்டாள் . முடவன் தயங்கினான் . தன இயலாமையை எண்ணி வருந்தினான். எழுந்து நட என்றாள் அன்னை. முடவன் எழுந்தான் நடந்தான் ஓடினான். நாகைக்குச் செய்தியை அறிவித்தான். அவனே அந்த செய்திக்குச் சாட்சி. நம்பி ஓடி வந்த அந்த நல்ல குடிமகனும் நடுத்திட்டில் ஒரு ஓலைக் கோயிலைக் கட்டி வைத்தார். காட்சி தந்தவாறு ஒரு சுரூபமும் செய்து வைத்தார் . அன்னை தந்த சிறுவனின் அற்புத உடல்நலம் அனைவர் காதிலும் எட்டத் துவங்கியது. மக்கள் கூட்டம் வரத் துவங்கியது. அவ்வன்னையை ஆரோக்கிய மாதா என்று அழைத்து வணங்கினர்
மூன்றாம் காட்சி
பதினேழாம் நூற்றாண்டில் ஒரு போர்த்துகீசியக் கப்பல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வங்கக் கடலில் புயலால் தாக்குண்டது. கப்பலோட்டிகள் கதிகலங்கி விண்ணக அன்னையை நோக்கி மன்றாடினர். தாயே நலமுடன் கரை சேர்த்தருளும். ஆலயம் ஒன்று அழகுற அமைப்போம் என்று நேர்ந்து கொண்டனர். பேய்க்காற்று ஓய்ந்தது . இருண்ட வானம் ஒளி தந்தது . மரக்கலமும் வேளாங்கண்ணிக் கரை போய் சேர்ந்தது . அன்று செப்டம்பர் 8ஆம் நாள் . அதே இடத்தில் அன்னைக்கோர் ஆலயம் எழுப்பினர் . அது தான் இன்று அழகுற எழுந்து நிற்கும் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலங்களுக்கு முன்னோடியாக அமைந்தது . அந்த மாலுமிகள் கொண்டு வந்து பதிய வைத்த ரோசிலைன் கற்களாலான பீடம் இன்றும் அதே இடத்தில் உள்ளது .அதே செப்டம்பர் 8 ஆம் நாள் தான் பேராலய ஆண்டுத் திருவிழாவும் இன்றும் நடைபெறுகிறது
வேளாங்கண்ணி மாதாவுக்கு நவநாள் ஜெபம்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக .
ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்
மகா பரிசுத்த கன்னிகையே , இயேசுவின் தாயாராயிருக்குமாறு மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட மணியே ! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமானபோதும் ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசு அணுகாத கருவில் தாங்கிய போதும் , நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும் , ஜெபங்களினாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் ,கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே ! நீர் அப்போது அனுபவித்த இப்பெரு மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறவர்களுக்கு நீர் வாக்களித்த விசேஷ உதவியையும் பாதுகாப்பையும் எனக்காக இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின்போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுக்கள் கடவுளுடைய விருப்பத்திற்கு மாறானவையாக இருந்தால், எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்
(வேண்டுதலை உறுதியோடு கேட்கவும்)
தேவனின் தாயே ! இப்போது உமக்கு வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையைக் காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திருஉள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளையும் இப்போது நான் செய்யப்போகும் 'அருள் நிறை ' ஜெபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்
(அருள் நிறை ஜெபத்தை 9 முறை சொல்லவும் )
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே , 'அருள் நிறைந்தவள் ' என்று கபிரியேல் தூதர் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துதல்களைக் கூறுகிறேன் , ஏற்றுக் கொள்ளும்
நீர் அணிந்திருக்கும் முடியில் என் ஜெபங்கள் அத்தனையும் விண்மீன்கள் எனத் துலங்குமாறு விரும்புகிறேன் . வருந்துவோருக்கு ஆறுதலே , நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு, உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன் . உமது திருமகனும் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும், அது போன்ற உமதன்பையும் பார்த்து, ஏழையான எனது ஜெபத்தை ஏற்று ,என் மன்றாட்டை அடைந்து தந்தருளும் தாயே ஆமென்
வேளாங்கண்ணி மாதாவை நோக்கி மன்றாட்டு
கன்னி மரியே ! ஆரோக்கிய அன்னையே ! வேளாங்கன்னியில் இரக்கத்தின் அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் ஆண்டவளே ! எங்களின் ஆன்ம , உடல் நோய்களை அகற்றி , எங்களுக்கு ஆறுதலாயும் அடைக்கலமாயும் இருந்தருளும். உமது பேருதவியால் எண்ணற்ற பிணியாளர் நலமடைந்துள்ளனர். உமது வல்லமையையும், தயவையும் நம்பிக் கொண்டு உம்மை நாடி வந்துள்ளோம். உம திருமகனையும் , உம்மையும் அன்பு செய்து இறைத் தொண்டர்களாக நாங்கள் விளங்குமாறு செய்தருளும். எங்களின் ஆன்ம அருள் வாழ்வை வளப்படுத்தி அருளும்.
உலக துன்பங்களாலும், மன வேதனைகளாலும் அல்லலுறுகின்றவர்களுக்கு அருகிலிருந்து உமது தாயன்புடன் ஆறுதலளியும். இறைவனின் திருவுளத்திற்கு ஏற்புடையதானால் அத்தகைய துன்ப வேதனைகளிநின்று அவர்களைக் காத்தருளும் . பாவச் சேற்றில் சிக்குண்டவர்களை உமது அருள் நீரால் கழுவி புனிதராக்கியருளும்
இதயத் தாழ்ச்சியும் , சாந்தமும் உள்ள இறைமகனை ஈன்றெடுத்த தாயே ! உமது உதவியை நாடியவர் எவராகிலும் உம்மால் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லையே ! எங்களுடைய துயர வேளைகளில் எங்களின் தஞ்சமாயிருப்பீர் என்று நாங்கள் உறுதியாயிருக்கிறோம். ஏனெனில் ஆறுதல் அளிக்க விரைந்திடும் விண்ணகத்தாய் நீரே ! இம்மண்ணகத்தில் கசிந்த கண்களையும் அவற்றினின்று வழிந்தோடும் துன்பக் கண்ணீரையும் கண்டு இரக்கமுடன் எங்களை அரவணைத்துக் கொள்வீராக
இறை மக்களுக்கெல்லாம் சகாயம் புரிந்து வரும் ஆரோக்கிய மாதாவே ! நீர் எல்லாம் வல்ல இறைமகன் கிறிஸ்துவின் அன்னையாகையால் எவ்வுதவியையும் எங்களுக்கு அடைந்து கொடுக்கக்கூடியவள் அன்றோ ! எல்லா ஆபத்துகளினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும் . எங்களைப் பற்றியுள்ள தீமைகளை அகற்றியருளும் . இறை அன்பில் வளர்ந்திட , நலமும் , வரமும் , அருளும் பெற்று நாங்கள் ஒவ்வொருவரும் உம்மோடு கூடி என்றென்றும் இறைபுகழ் பாடி அவரை வாழ்த்துவோமாக ஆமென்
ஆன்ம உடல் தேவையில் மன்றாட்டு
என் ஆண்டவளே , இறைவன் எனக்களித்த உண்மையான ஆறுதலே , இடுக்கண்களில் இளைப்பாற்றியளிக்கும் விண்ணக பத்தினியே ! பாவ இருளில் அகப்பட்டுத் தவித்திடும் ஆன்மாவுக்கு ஒளிச் சுடரே ! திருப்பயணத்தில் வழிகாட்டியே ! பலவீனத்தில் வலிமையே ! ஏழைகளின் ஆறுதலே ! நோயுற்றவர்களின் அமிழ்தமே ! பாவிகளின் தஞ்சமே ! என் மீட்பின் நம்பிக்கையே, எல்லையற்ற முறையில் அன்பு செய்யும் இறைவனுக்கு நீர் தாயாகையால் உமது மேலான மகத்துவத்திற்கேற்ப என் மீது இரக்கம் காட்டியருளும். என் தேவைகளை எல்லாம் அறிந்துள்ள உம்மிடம் என் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிக்கிறேன்
விண்ணக மண்ணக அரசியே ! கருணை நிறைந்த மரியே ! பாவிகளின் தஞ்சமே ! பாவக்கடலில் அமிழ்ந்தவர்களுக்குத் தெப்பமே ! உலகத்திற்கெல்லாம் தயாபரியே! அடிமையானவர்களை மீட்கின்ற கிரயமே ! நோயாளிகளுக்கு ஆரோக்கியமே ! உள்ளம் வேதனைப்படுகிறவர்களுக்குஆறுதலே ! இவ்வுலக வாழ்வுக்கான இருப்பிடமே ! தஞ்சமென்று நாடி வந்திருக்கும் அடியேனைப் புறக்கணிக்காது , நான் கேட்கின்ற சகாயத்தை அடைந்து தந்தருள உம திருமகனிடம் மன்றாடும் தாயே ஆமென்
முதல் நாள் ஜெபம்
அமலோற்பவ கன்னிகையே , இறைவனின் மேலான படைப்பே , வல்லப மிக்கவர் பெருமை உள்ளவைகளை உம்மிடத்தில் செய்தருளினார் என்பது முற்றிலும் உண்மையே .அவர் பூமியை உண்டாக்கி அலங்கரித்தபொழுது, தண்ணீர் அனைத்தையும் கடலில் ஒன்றாகச் சேர்த்தது போன்று எல்லா தேவ வரங்களையும் உம்மிடத்தில் நிறைத்து வைத்திருக்கிறார் . ஓ மனுக்குலத்தின் சிறப்பே ! பூவுலகின் எழிலே !! இறைவனின் ஆலயமே !! பரிசுத்த தமத்திருத்துவத்தின் இன்பப் பூங்காவே , நீர் வாழ்க ! வாழ்க !
ஆரோக்கியத்தாயே ! புனித பாப்பரசருக்காகவும் , திருச்சபைக்காகவும் , கிறிஸ்துவின் எல்லா அடியார்களுக்காகவும் இறைவனிடம் மன்றாடுமாறு உம்மை வேண்டுகின்றோம் . ஆன்ம வாழ்வையும் ,அறிவையும், ஆரோக்கியத்தையும் அளித்திட வேண்டியவர் நீரல்லவோ !
வாலிபர் பாவச் சோதனைகளில் சிக்கிக் கொள்ளாமல் அருள் வாழ்வில் நிலைத்து , அறநெறியில் நடந்திட அருள் கூர்ந்திடும் பரிசுத்த தாய் நீரன்றோ !
கன்னிப்பெண்கள் தங்கள் அணிகலனான கற்பினைக் களங்கம் ஏற்படாமல் காத்திட வரமளித்திடும் கற்பின் அரசி நீரல்லவோ ?
குடும்பப் பெண்கள் தங்கள் மாங்கல்ய மாட்சியை மங்காமல் காத்திட உதவிடும் தாவீது குலச்செல்வி நீரல்லவோ ?
தாய் தந்தையர்களுக்கு எடுத்துக்காட்டு நீர் ; விதவைகளுக்கு ஆறுதல் நீர் ; விரத்தர்களுக்குத் தஞ்சம் நீர் ; எளியோர்களுக்குச் செல்வம் நீர் ; நோயாளிகளுக்கு ஆரோக்கியம் நீர் ; மனத்துன்புறுவோருக்கு அடைக்கலமும் நீரன்றோ ! அம்மா , உம் வழியாய் இறைவனை அன்பு செய்து அவர் மகிமைக்காக வாழ்ந்திட எங்களுக்காக வேண்டிக்கொள்ளுவீராக (புகழ் மாலை ஜெபிக்கவும் )
இரண்டாம் நாள் ஜெபம்
தாவீது குலத்தின் மாணிக்கச் சுடரே ! யூத மக்களின் ஜோதிக்கதிரே , எளிய பாவிகளாகிய நாங்கள் உம் அன்பையும், மாட்சியையும் கண்டு வியக்கிறோம் . அழகியின் ஆட்சியை அழித்திட அமலோற்பவ திருக்குழந்தையாய்ப் பிறந்தீர் . இருளின் பிடியில் மருளும் மனுக்குலத்தோருக்கு கிறிஸ்துவின் ஒளிவீசிடச் செய்தீர். மருள் நீக்கி அருள் வாழ்வை அனைவருக்கும் அளித்திட வேளாங்கன்னித் திருத்தலத்தில் வீற்றிருக்கிறீர்.
ஓ! பேருபகார அன்னையே , மாசில்லாக் கன்னிகையே , பாவ சுமையால் வாடும் நாங்கள் உம்மிடம் புகலிடம் தேடி ஓடி வருகிறோம் . ஆழ்ந்த நம்பிக்கையோடு உம்மை அழைக்கின்றோம் . உம் திருப்பெயரை பக்தியுடன் நாவினிக்கப் புகழ்கின்றோம்
ஓ மரியே ! தயாளத் தாயே , விமலனின் அமலியே, எங்களுக்கு ஆன்ம நலமஅருளும் . தூய்மை வழி நடத்தும் . பாவம் சூழ்ந்த இருள் அகற்றி , கிறிஸ்துவின் ஒளியை எங்கள் உள்ளத்தில் ஏற்றும் . உடல் நலமும் அளித்திட வேண்டும் அம்மா (புகழ் மாலை )
மூன்றாம் நாள் ஜெபம்
எங்கள் நேசத்துக்குரிய மாதாவே ! நீரே புனித வாழ்வின் மேலான எடுத்துக்காட்டு . நீர் வாழ்க ! இளமையில் தானே உலகின் இன்பத்தைத் துறந்தவளாய் பெற்றோரையும் தனிமையில் விட்டு விட்டு ஆலயத்தில் உம்மைக் கடவுளுக்கே உரிய காணிக்கையாக அர்ப்பணித்தீர். கிறிஸ்துவில் புது வாழ்வு பெற்ற நாங்கள் , உடல் , உலகம், அலகை இம்மூன்றையும் விட்டு விட்டதாக வாக்களித்தோம் . ஆனால் பலமுறை தவறினோம் . வாக்குறுதியை மீறி குற்றங்கள் பல புரிந்தோம். உலக இன்பத்தையே நாடி அலைந்தோம் . நிலையான விண்ணகப் பேரின்பத்தை மறந்தோம் . சிலுவையில் அன்பில் செம்மலாக , மீட்பின் ஆயராக , பலியான இயேசுவை பாவ வாழ்வால் பரிகசித்தோம் . இகழ்ந்து ஒதுக்கினோம் .
கருணையே உருவான இறைவனின் அமல அன்னையே , எங்கள் பாவ நிலையை உணர்ந்து வருந்துகிறோம் . அவல நிலையிலிருந்து எங்களைக் காத்திட வேண்டுகின்றோம் . இறைவனை நிந்தித்த எங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும் பேருபகாரத்தாய் நீரல்லவோ ! அருளை இழந்து இருளில் அலைந்து திரியும் எங்களுக்கு உம் அன்புக்கரங்களை நீட்டியருளும் . இயேசுவின் இதய ஊற்று நீரைப்பருகி இறைவனின் புனித மக்களாக வாழ்ந்திட அருள் புரியும் ( புகழ் மாலை )
நான்காம் நாள் ஜெபம்
ஓ! தூய அன்பின் அன்னையான புனித ஆரோக்கிய கன்னிகையே , நீர் இயேசுவின் தாய் என்பது பற்றி மிக்க பெருமை கொள்கிறோம் . உம்மை உள்ளத்துடன் ஏற்றி போற்றி வாழ்த்துகிறோம் . இறைதூதர் அறிவித்த நற்செய்தியை தாழ்ச்சி உள்ளத்துடன் ஏற்றுக்கொண்டீர் என்பதை நாங்கள் பக்தியுடன் தியானிக்கின்றோம்
அருள் நிறைந்த மரியே வாழ்க ! நீர் இறைமகனை கருவாக உமது திருவயிற்றில் ஏந்திய நேரமுதல் , உம் புகழ் விண்ணோக்கி வளர்ந்தது . வரங்களும் அருளும் உம்மில் நிறைந்திட நீர் இறைவனின் தாயானீர். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே . கிறிஸ்துவில் நீர் பெற்ற புது வாழ்வில் நாங்களும் பங்கு கொண்டு அருள் நிறைந்தவர்களாக எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . உமது தாழ்ச்சியைக் கண்ட விண்ணக அரசர் உம்மில் மனிதனானார் . உமது நிகரில்லாக் கற்பின் மணம் கமழ பரிசுத்த ஆவி உம்மீது எழுந்தருளினார்
ஓ! கருணை நிறைந்தவளே ! உம்மில் இறைவன் ஒன்றித்தது போல் , திருவருட்சாதனங்கள் வழியாக நாங்களும் அவருடன் ஒன்றித்து வாழ எங்களுக்காக மன்றாடுவீராக .
ஆதித்தாயின் தீவினையால் சபிக்கப்பட்ட மனுக்குலம் உம் வழியாக ஆசீர் பெற்றுள்ளது . ஓ! மாதர்களின் மாணிக்க ஒளிச் சுடரே ! தாய்மார்களின் தூய இரத்தினமே ! , சுந்தரவதிகளின் சுந்தரியே , எல்லாத் தலைமுறைகளும் உம்மைப் பேறுடையாள் என்று போற்றுமே , உம்மைப் பணிந்து வாழ்த்துகிறோம் . தாயே எங்களை உம் அன்புக்கரங்களால் ஆசீர்வதித்தருளும். ( புகழ்மாலை )
ஐந்தாம் நாள் ஜெபம்
களங்கமற்ற ஆரோக்கிய கன்னிகையே ! இறைவனின் கொடைகளைப் பெற்றுத் தரும் பேருபகாரியே வாழ்க ! புனித எலிசபெத்தம்மாள் வீட்டில் நீர் தங்கி இருந்தபோது அவ்வீட்டாருக்கும் ஸ்நாபக அருளப்பருக்கும் எத்தனையோ நன்மைகள் கிடைக்கச் செய்தீர். வேளாங்கன்னித் திருத்தலத்தில் வீற்றிருக்கும் நீர் எங்களுக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் பெற்றுத் தாரும் . உமது தயவால் இத்திருத்தலத்தில் பார்வை பெற்றோரும் , ஆரோக்கியம் அடைந்தோரும் , பாவ வழி விட்டு மனந்திரும்பியோரும் ஆறுதல் அடைந்தோரும் எத்தனையோ பேர்
ஓ! தயை நிறைந்த தடாகமே ! இரக்கத்தின் திரு உருவே ! மனித குலத்துக்கு நீர் செய்துள்ள பேருபகாரங்களுக்கு வணக்கத்துடன் நன்றி கூறுகின்றோம் . உம்மை உயர்த்திய எல்லாம் வல்ல இறைவனைப் பணிந்து ஆராதிக்கிறோம் . எங்களுக்காக என்றும் இறைவனிடம் மன்றாட வேண்டுகின்றோம்
கன்றை அறியாப் பசுவில்லை; சேயை அறியாத் தாயில்லை . நீர் மனுக்குலத்தின் தாயாக உள்ளீர். உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் உம் அன்புக்கரங்களில் வைத்துக் காத்தருளும். மேலும் கிறிஸ்துவை நிராகரித்தவர்களும் , பாவ வழியில் வாழ்பவர்களும் மனந்திரும்ப இறைவனை வேண்டிக் கொள்ளும்
(புகழ் மாலை )
ஆறாம் நாள் ஜெபம்
இறை மக்களால் போற்றப்படும் அமல ஆரோக்கிய அன்னையே , உமது நிகரற்ற புகழினை எடுத்துரைக்க எவரால் இயலும் ? மனுவான இறைவன் உம் வழியாகவன்றோ உலகிற்கு மீட்பளித்தார் என்றும் கன்னிமைக்குப் பழுதின்றி கடவுளின் தாயாக விளங்குகிறீர் . உம்மை வாழ்த்துகிறோம்
ஓ! விண்ணகத்தில் வீற்றிருக்கும் எங்கள் இன்பமே , இறை ஒளியை அள்ளி வழங்கிடும் குளிர் நிலவே , உண்மை வழி காட்டும் விண்மீனே, உம் கரங்களில் தவழும் அன்புக் குழந்தையை ஆராதித்து உம்மை வணங்குகிறோம் . இயேசு எங்களின் அரசர் ; நீர் எங்கள் அரசியாக இருக்கிறீர் . அவர் எங்களின் ஆண்டவர் ; நீர் எங்களின் மாதாவாயிருக்கிறீர். விண்ணகத் தந்தைக்கும் மனிதருக்கும் இடையே நடுவராக இருக்கிறார் கிறிஸ்து . உமது திருமகனுக்கும் எங்களுக்கும் இடையே நீர் நடுவராக இருக்கிறீர் . இயேசு பரலோக வழியாக இருக்கிறார் . நீர் அதன் வாயிலாக இருக்கிறீர்.
ஓ! பேறு பெற்ற இஸ்ரயேல் குலமகளே ! அருளின் இருப்பிடமே ! படைத்த இறைவனை எங்களின் மீட்பராக ஈன்றெடுத்தீர். உலகமே கொள்ள முடியாதவரை நீர் உமது திரு வயிற்றில் தாங்கினீர். உயிர்களுக்கு உணவூட்டுகின்றவருக்கு நீர் பாலூட்டி வளர்த்தீர். இதனாலன்றோ எல்லாத் தலைமுறையினரும் உம்மைப் பேறுடையாள் என்று வாழ்த்துகின்றன . உம் திருமகனிடம் எமக்காய்ப் பரிந்து பேசும் . அவரை அன்பு செய்து சேவித்து வாழ வரமருளும் .அவரோடும் , உம்மோடும் விண்ணகத்தில் முடிவில்லா இன்பமடைய அருள் தாரும்
(புகழ் மாலை )
ஏழாம் நாள் ஜெபம்
இரக்கம் மிகுந்த தாயே , எங்கள் பாவங்களின் பொருட்டு நீர் இயேசுவுடன் அனுபவித்த வேதனை எவ்வளவோ கொடூரமானது . அதை நினைத்து ஆலைவாய்க் கரும்பென மனமுருகுகின்றோம்
ஓ! கருணைக் கடவுளின் கன்னித் தாயே ! நீர் சிந்திய கண்ணீர் யாவும் எங்களுக்கு அருட்சுனையாய்ப் பாயட்டும் . எங்கள் உள்ளத்தில் காணப்படும் தீய நாட்டங்களை எல்லாம் அகற்றி இறையன்பை வளர்க்கட்டும். அன்புத் தந்தைக்கு ஏற்ற பிள்ளைகளாக நாங்கள் வாழ எங்களுக்கு ஆசீர் தாரும்
பரிசுத்த மாதாவே ! எல்லா ஆபத்துகளினின்றும் எங்களை பாதுகாத்தருளும் . வேடனைக் கண்ட பறவை விண்ணிலே பறந்து மறைவது போலவும் , புலியைக் கண்ட புள்ளிமான் புதருக்குள் பதுங்கி ஒளிவது போலவும் பாவிகளாகிய நாங்கள் உமது மாசற்ற திரு இருதயத்தில் அடைக்கலம் நாடி ஓடி வருகிறோம் . எங்களை அரவணைத்து இறைவனிடம் அழைத்துச் செல்ல வேண்டுகிறோம்
(புகழ் மாலை )
எட்டாம் நாள் ஜெபம்
ஓ! உன்னதக் கடவுளின் ஆலயமே ! ஞானத்தின் இருப்பிடமே ! நீர் வாழ்க ! ஆதியில் அழியாத கேதுரு மரத்தினால் வாக்குத்தத்தப் பெட்டகம் செய்யப்பட்டு உள்ளும் புறமும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டிருந்தது . அதுபோன்று உமது திருவுடல் அழியாமையைத் தரித்துக் கொள்ள இறைவனின் மாட்சி உம்மில் அணிகலனாக விளங்கிற்று. உம்மைக்கண்டு பூரிப்படைகிறோம் . இறைவனுக்கு மகிமை உண்டாகுக என்று வாழ்த்துகிறோம்
மாசும் , குறையும் , கரையும் இல்லாத அழகுத் திரு உருவே , மண்ணக வாழ்வின் இறுதியில் விண்ணகத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதாவே , வழிபோக்கர்கலாகிய எங்களை மறந்து விடாதீர். ஒளியான இறைவனுடன் ஒன்றித்துள்ள விண் சுடரே , இருளில் வாழும் எங்களுக்கு ஒளியைப் பெற்றுத் தாரும் . உலகம் என்ற கடலிலே படகு போன்ற எங்கள் அற்ப வாழ்வு ஆபத்தின்றி கரை சேர்ந்திட அருள்வீராக . சிலுவையினடியில் இயேசு எங்களை உம் மக்களாக்கி ஒப்படைத்துள்ளார் அன்றோ ! அன்புத்தாயே , எங்களை ஆதரித்து காப்பற்றியருள உம்மை மன்றாடுகின்றோம். இம்மண்ணக வாழ்வில் அண்மைத் தூய்மையையும் உடல் ஆரோக்கியமும் பெற்றவர்களாய் விண்ணகத்தில் உம்மோடு என்றென்றும் இறைவனைப் போற்றிட வரம் அருள வேண்டுகிறோம்
(புகழ் மாலை )
ஒன்பதாம் நாள் ஜெபம்
ஆரோக்கிய அன்னையே ! இறைவனின் தாயான உம்மை வாழ்த்துகிறோம் . இறைவனின் புகழ் பாடும் படைப்புப் பொருட்கள் அனைத்தும் உம்மை வாழ்தும்படியாக அழைக்கின்றோம்
கடவுளின் படைப்புகளே , ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள் .வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள் . இறைவனின் தூதர்களே , ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானகப் படைப்புகளே வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். விண்ணகத்திலுள்ள புனிதர்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். பகலோனே , நிலவே ,வானத்தில் ஒளிர்கின்ற விண்மீன்களே
ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மழையே , பனியே விண்ணக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள்
வெம்மையே , குளிரே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மலைகளே, குன்றுகளே , பள்ளத்தாக்குகளே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள் . இருளே ஒளியே ஆரோக்கிய அன்னையை வாழ்த்துங்கள் . மேகங்களே , மின்னல்களே, ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள் . பூமிதனில் உள்ள விளைச்சல்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள் . சுனைகளே, மலையருவிகளே, நதிகளே , ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள் . கடலே , கடல்வாழ் உயிர்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள் . வானத்துப் பறவைகளே தரைவாழ் உயிரினங்களே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள்
ஆரோக்கியத் தாயே புகழ் பாடும் உம் மக்களின் மன்றாட்டுக்களை தயவுடன் ஏற்றுக் கொள்ளும் . நாங்கள் என்றென்றும் உம்மை எங்கள் தாயாக அன்பு செய்வோம் .நாங்கள் ஆன்மா, உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாக இறைவனின் அன்பில் நிலைத்துப் புனிதர்களாக வாழ்ந்திட எங்களுக்காக உம் திருமைந்தன் வழியாக விண்ணகத் தந்தையிடம் மன்றாடுவீராக ஆமென் (புகழ் மாலை )
புகழ் மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
ஜென்மபாவமில்லாமல் உற்பவித்த அர்சிஷ்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உலகம் படைக்கப்படுமுன் சர்வேசுரனால் தேர்ந்து கொள்ளப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே
இன்ப வனத்தில் ஆதிப் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே
பாவ இருளை அகற்றுகின்ற ஞான ஒளியான புனித ஆரோக்கிய மாதாவே
விடிவெள்ளி என இறைவாக்கினரால் போற்றப்படும் புனித ஆரோக்கிய மாதாவே
மனுக்குலத்துக்கு அருள்மழை பெறுவிக்கும் மேகமான புனித ஆரோக்கிய மாதாவே
எல்லா நன்மைத்தனத்துக்கும் பாத்திரமான ஆரோக்கிய மாதாவே
பிதாப்பிதாக்களால் பரிசுத்தமானவள் என்று அழைக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே
அகங்காரப் பேயின் தலையை மிதித்த புனித ஆரோக்கிய மாதாவே
இஸ்ராயேலரின் பதினாறு அரச குலங்களுள் சிறப்புற்ற குலத்தில் உதித்த புனித ஆரோக்கிய மாதாவே
பேறுபெற்ற அன்னம்மாள் சுவக்கீனின் திருமகளாகப் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
அவர்களின் வேண்டுதல்களாலும் நற்செயல்களாலும் இறைவனின் அன்புக் குழந்தையாகப் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
தூதர் , புனிதர் அனைவருக்கும் மேலாக நிறைந்த அருள் ஒளியோடு பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
படைப்புப் பொருட்கள் அனைத்திற்கும் மேலாக இறைவனுக்கு மகிமையளிக்கப் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
விண்ணுலகும் மண்ணுலகும் போற்றிடும் அழகுடன் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே
கடவுளின் கொடைகளைஎல்லாம் பெறுவிக்கும் இறைகுலக் கொழுந்தான புனித ஆரோக்கிய மாதாவே
நித்தியமும் இறைவனின் திருமுன் தேர்ந்தெடுக்கப் பெற்றவளாக விளங்கிடும் புனித ஆரோக்கிய மாதாவே
தூய்மையின் வழியில் எல்லாப் புனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே
பிறப்பின்போது விண்ணக ஒளியால் சுடர்விட்ட புனித ஆரோக்கிய மாதாவே
மனுக்குலத்தின் மகிழ்ச்சியாக விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே
பிறந்தவுடன் விண்ணகத் தந்தைக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே
உமது அழகுக்கேற்ப மரிஎன்னும் புதிய பெயர் சூட்டப்பெற்ற புனித ஆரோக்கிய மாதாவே
என்றும் கன்னிகையாக விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே
ஆலயத்தில் அனைவருக்கும் ஆசிரியையாக விளங்கிய ஆரோக்கிய மாதாவே
நோயுற்றோரின் துன்பத்தை அகற்றி நலமருளும் புனித ஆரோக்கிய மாதாவே
உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான புனித ஆரோக்கிய அன்னையே
புனிதர்களின் விண்ணக முடியென விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
செபிப்போமாக
விண்ணகத் தந்தையே ! பரிசுத்த கன்னிகையாகிய புனித மரியாளை எல்லா அருட்கொடைகளாலும் அலங்கரித்து உமது திருக்குமாரனைப் பெற்று அமுதூட்டி வளர்க்கும் தாயாக நித்தியந்தொட்டு தெரிந்து கொண்டீரே ; அந்த உத்தமத் தாய் எங்களுக்காக மன்றாடிக் கேட்கும் விண்ணப்பங்களை நாங்கள் அடைந்து வறுமை , பிணி போன்ற துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்படுவோமாக
அத்தையின் வழியாக ஆரோக்கியமும் , மகிழ்ச்சியும் பெற்றவர்களாய் தூய்மையின் வழி நடந்து விண்ணக முடியைப் பெற்றுக் கொள்ள அருள் கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென்