- வணக்க மாதம்
- உத்தரிக்கிற ஆத்துமாக்கள்
- நாள் 1-5
முதல் தேதி
சாவுக்குப் பின் மூன்று ஸ்தலம் உண்டென்று காண்பிக்கும் பொது விளக்கமாவது
தியானம்
மனுஷர் எல்லாரும் சாகிறது நிச்சயம் . ஒவ்வொருவன் ஒரு முறை மாத்திரம் சாகிரதொழிய இரண்டு மூன்று முறை மரிப்பாரில்லை . சாவுக்குப் பின் தீர்வை நடக்கும் என்பது உறுதியான சத்தியமாகையால் இந்தத் தீர்வைக்குத் தப்பிப் போக வழி காணோம் . இந்தத் தீர்வையிலே சர்வ நீதியுள்ள சர்வேசுரன் ஒவ்வொருவன் புண்ணியத்துக்கும் பாவத்துக்கும் சம்பாவனையாவது ஆக்கினையாவது கட்டளை இடுவாரென்கிறதற்குச் சந்தேகம் இல்லை. சில புண்ணியாத்துமாக்கள் முழுமையும் பரிசுத்தராய் இஷ்டப் பிரசாதத்தோடே மரணத்தை அடைந்து விக்கினம் ஏதுமின்றி உடனே அளவில்லாத பேரின்ப பாக்கியம் நிறைந்த நித்திய மோட்சத்தில் என்றென்றைக்கும் வாழப் போவார்களாமே.
இஷ்டப்பிரசாதமில்லாமலும் மனந்திரும்பாமலும் சாவான பாவத்தோடு சாகிற பாவிகள் நித்திய நரகத்திற்குத் தள்ளுண்டு அவியாத நெருப்பிலே ஊழி ஊழிக்காலம் வெந்து சொல்லிலும் நினைவிலும் அடங்காத வேதனைகளை அனுபவிக்கப் போவார்கள் . அப்படி என்றென்றைக்கும் நிலை நிற்கும் மோட்சமென்றும் நரகமென்றும் இரண்டு ஸ்தலமுண்டு . ஆயினும் அநேகம் பேர்கள் நரகத்தை வருவிக்கும் சாவான பாவமில்லாமல் செத்தாலும் அவர்களுக்குச் சொற்பப் பாவங்கள் இருக்கிறதினால் ஆனாலும் , மன்னிக்கப்பட்ட தங்கள் சாவான பாவத்திற்கு சரியான பரிகாரம் அவர்கள் பண்ணாதிருக்கிறதிலென்கிலும் அவர்கள் எங்கே போவார்கள் என்றால் , சாவான பாவத்தோடே செத்த துர்மனப் பாவிகளின் இருப்பிடமாகிய நித்திய நரகத்துக்குப் போகாமலும் ,எவ்வித பாவக் குற்றமுமின்றி பழுதுமின்றி கறையுமின்றி முற்றும் பரிசுத்தமுள்ள ஆத்துமாக்களின் இராச்சியமாகிற மோட்சத்தில் உடனே பிரவேசிக்காமலும் ஒரு நாடு ஸ்தலத்துக்கு அனுப்பப்படுவார்களாமே. இந்த ஸ்தலத்தில் தாங்கள் செய்த அற்பப்பாவங்களுக்காக தண்டனையும் பட்டு , பொறுக்கப்பட்ட சாவான பாவங்களுக்கு வேண்டிய பரிகாரமும் செலுத்தி திவ்விய நீதியின் கட்டளைப்படியே உத்தரிப்பார்கள் . அப்படி சரியான விதமாய் உத்தரித்த பிற்பாடு இந்த ஆத்துமாக்கள் மோட்ச பேரின்பத்தைச் சுதந்தரித்து மற்ற மோட்ச வாசிகளுடனே என்றென்றைக்கும் வாழ்வார்கள் என்பது பரம சத்தியமாமே .
மேற்சொன்ன இந்த ஆத்துமாக்கள் சுத்திகரமாகிற ஸ்தலம் உத்தரிக்கிற ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது . இவ்வண்ணமே செத்த ஆத்துமாக்களுக்கு மூன்று ஸ்தலம் உண்டென்று சத்திய திருச்சபை போதித்துக் கொண்டு வருகிறதுமல்லாமல் அது புத்தியுள்ள எந்த மனுஷனுக்கும் காணப்படுகிற நியாயமுமாம் . மூர்க்கரான பாவிகளுக்கு நரகமும் , முற்றும் பரிசுத்த ஆத்துமாக்களுக்கு மோட்சமும் , இன்னம் உத்தரிக்க வேண்டிய ஆத்துமாக்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலமும் உண்டென்று விசுவசித்து சொல்லக்கடவோம். நித்திய நரகத்தில் நித்தியாக்கினை அனுபவிக்கிரவர்களுக்கு மனுஷராலே ஒரு அற்ப ஆறுதலும் உதவியும் பரிச்சேதமும் வரப்போகிறதில்லை. பேரின்ப வீட்டில் வாழும் மோட்ச வாசிகளை வாழ்த்திப் புகழ்ந்து ஸ்துதித்து அவர்கள் நமக்காக சர்வேசுரநிடத்தில் மன்றாடும்படிக்கு அவர்களை வேண்டிக் கொள்ளுகிறதே உத்தம வேத முறையாம் . உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிற ஆத்துமாக்களுடைய வேதனைகளை நம்முடைய ஜெப தவ தர்மத்தினாலும் , திருச்சபையின் வேண்டுதலினாலும் , விசேசமாய் திவ்விய பூசையின் பலியினாலும் அமர்த்தி குறைக்கக்கூடுமென்று சகலமான கிறிஸ்துவர்கள் அக்காலத்திலும் விசுவசித்து அனுசரித்த சத்திய வேதமென்று சொல்லக் கடவோம்
கிறிஸ்துவர்களே ! மோட்ச நரகம் உத்தரிக்கிற ஸ்தலமென்னும் இம்மூன்று ஸ்தலங்களை அடிக்கடி நினைத்து தியானித்தால் , அநேக ஞான பிரயோசனம் வரும் என்கிறதினாலே இவைகளை ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும் . நரகத்தையும் , நரகத்தின் அவியாத நெருப்பையும் , ஊழியுள்ள கால வேதனைகளையும் , பொறுக்க முடியாத பசி தாகத்தையும் ஒருபோதும் முடியாத நித்தியத்தையும் கவனித்து தியானித்தால் அதற்கு பயப்படாமலும் , அதற்கு வழியாயிருக்கிற சாவான பாவத்துக்கு அஞ்சாமலும் இருக்கக் கூடுமோ ?
மோட்சமானது எவ்வித நன்மை பாக்கியமுள்ள ஸ்தலமென்றும் இந்த சர்வ பாக்கியம் ஒருபோதும் முடிவு பெற போவதில்லை என்றும் அதிலே தனக்கு சிம்மாசனம் ஸ்தாபித்து இருக்கிறதென்றும் நன்றாய் நினைத்து உறுதியாய் விசுவசித்து அடிக்கடி தியானிக்கிற மனுஷன் அதற்கு ஆசைப்படுவானல்லோ ?
உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைக்கிரவனுக்கும் அப்படியே அநேகம் நன்மைகள் வருமென்கிறது தப்பானது . அவன் அதில் படப்போகிற வேதனைகளுக்கு தப்பும்படியாகத் தன்னாலே ஆனமட்டும் சொற்பப்பாவங்களை விலக்குவான். தான் கட்டிக் கொண்ட சாவான பாவங்களுக்கு பாவ சங்கீர்த்தனத்தின் வழியாய் மன்னிப்பை அடைந்திருந்தாலும் அவைகளுக்குப் பரிகாரமாக தவக்கிரியைகளை அனுசரிப்பான் . மீண்டும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் வருவிக்க செபங்களையும் தர்மங்களையும் செய்வான் . திவ்விய பூசையைக் காண்பான் , அல்லது ஒப்புக் கொடுக்கப் பண்ணுவான் . அப்படி இம்மூன்று ஸ்தலங்களை நினைக்கிறவனுக்கு அநேக சுகிர்த நன்மைகள் வருமென்று அறியக் கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
நித்திய பிதாவாகிய சர்வேசுரா ! உம்மிடத்தில் வாழும் சகலமான மோட்சவாசிகளை நாங்கள் புகழ்ந்து வணங்கி ச்துதிக்கும் பொழுது அவர்களுடைய உதவிகளை நாங்கள் பெற்றுக் கொள்ள கிருபை கூர்ந்தருளும் . எங்களுடைய காலங்களுக்கு மெய்யான சமாதானத்தையும் தந்து உமது திருச்சபையில் இருந்து எல்லாப் பொல்லாப்புகளையும் நீக்கி உமது ஊழியத்தில் எங்களுடையவும் சகல கிறிஸ்தவர்களுடையவும் மனோவாக்கு கிரியை யாவற்றையும் ஸ்திரப்படுத்தி எங்களுடைய உபகாரிகளுக்கு மோட்ச நன்மைகளையும் கொடுத்து மரித்த சகல விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்கு நித்திய இளைப்பற்றியையும் தந்தருள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
முதல் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை
கல்லறைகளைச் சந்தித்து அதில் அடக்கப்பட்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக 5 பர 5 பிரி 5 முறை திரித்துவ மந்திரமும் வேண்டிக் கொள்ளுகிறது
புதுமை
அர்ச் சாமிநாதர் உண்டு பண்ணின சபையிலே பேர்த்திரந்தூஸ் என்றும் ஆசீர்வாதப்பரென்றும் புண்ணியாத்துமாக்களான இரண்டு சந்நியாசிகள் இருந்தார்கள்
பாவிகள் மனந்திரும்ப வேண்டிக் கொள்ளுகிறதோ அல்லது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறதோ இவ்விரண்டு புண்ணியங்களில் எது பெரிய புண்ணியமென்று இந்த சந்நியாசிகளுக்குள்ளே ஒரு நாள் தர்க்கமுண்டானது . அதெப்படியென்றால் : நிர்பாக்கியரான பாவிகளின் பேரில் வெகு தயவாயிருக்கிற பேர்த்திரந்தூஸ் என்பவர் அவர்களுக்குப் புத்தி வர அடிக்கடி திவ்விய பூசை பண்ணி செபங்களை செபித்து கடின தவக்கிரியைகளை நடத்தி அதுதான் உத்தமம் என்று சொல்லுகிறதற்கு அவர் காண்பிக்கும் நியாயங்களாவன: "இந்தப் பாவிகள் எப்போதும் நரகத்துக்குப் போக ஏதுவாக இருக்கிறார்கள் அல்லவோ ? இந்த ஆத்துமாக்களைக் கெடுக்க பசாசுகள் எவ்வளவு தந்திர உபாயங்களையும் சோதனை யுத்தங்களையும் செய்கிறதென்று தெரியாதோ ? இந்த ஆத்துமாக்களை மீட்டு இரட்சிக்க சுதநாகிய சர்வேசுரன் மோட்சத்திலிருந்து இறங்கி மனுஷனாகிப் படாத பாடு பட்டு சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்து தம்முடைய திரு ரத்தத்தைச் சிந்தினாரல்லோ ? சேசுநாதர் சுவாமி அவ்வளவு மதித்த ஆத்துமாக்களை கெட்டுப் போக விடுகிறதே பெரிய நிர்பாக்கியமல்லாமல் திவ்விய இரட்சகர் சிந்தின விலைமதிப்பற்ற ரத்தத்தை வியர்த்தமாக்குகிறது தேவ துரோகமென்று தோன்றாதோ ? உத்தரிக்கிற ஆத்துமாக்களோ வென்றால் அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிறது மெய்தான் . ஆயினும் அவர்களுடைய ஈடேற்றம் நிச்சயமாகையால் , அவர்கள் நரகத்துக்குப் போக ஏதுமில்லை , வழியுமில்லை அச்சமுமில்லை . அவர்கள் சர்வேசுரனுக்குப் பிரியமுள்ள ஆத்துமாக்கள் ஆகையால் அவர்களுடைய கடன் தீர்ந்த உடனே அவர்கள் மோட்சத்திற்குப் போகிறது தப்பாது . பாவிகளோவென்றால் அவர்கள் தங்கள் பாவங்களை விடாதிருப்பார்களேயாகில் அவியாத நரகத்துக்குப் போவது குன்றாத சத்தியமாமே . அதிப்படிஇருக்கையில் இந்தப் பாவிகள் மனந்திரும்ப பிரயாசைப்படுவதே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது உத்தமம் என்று பொர்திரென்தூஸ் என்பவர் சாதித்துச் சொல்லுவார்
அதற்கு ஆசீர்வாதப்பர் எனப்பட்ட சந்நியாசியானவர் சொன்னதாவது :"இப்போது விவரித்த நியாயங்களின்படியே பாவிகள் மனந்திரும்ப பிரயாசைப்படுவது நல்லதாயினும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக முயற்சி செய்கிறது அதிக நன்மை . அதேதெனில்: ஒருத்தனுக்கு சௌக்கியமும் பெலனும் இருந்தாலும் அவன் சோம்பல் மிகுதியினால் யாதொரு வேலையும் செய்ய மனமின்றி இருக்கிறான் . வேறொருவன் வியாதியினிமித்தம் கால் சுருங்கிக் கை வழங்காமல் சர்வாங்கத்திலும் நொந்து வருத்தப்படுகிறான் . எவனுக்குப் பிச்சை தருகிறது தகும் என்பார்கள் ? தன் குற்றமின்றி சரியாய் வேலையும் செய்யக்கூடாத திராணியற்றவனுக்குக் கொடுக்க வேண்டுமல்லோ ? அப்படியானால் பாவிகள் வேண்டுமென்று தங்களுடைய துர்புத்தியினாலே கேட்டுப்போகிறதல்லாமல் மனதிருந்தால் திரும்புவார்களே ? உத்தரிக்கிற ஆத்துமாக்களோவெனில் தங்களுக்குத் தாங்களே யாதொரு உதவியும் செய்யக் கூடாமல் வருத்தப்படுகிறார்கள் அல்லவோ ? மேலும் இராஜாவுக்குப் பெரும் துரோகியை ஒருவன் இருக்கிறான் . வேறே ஒருவன் இராஜாவுக்குப் பிரியமான சிநேகிதனாய் இருக்கிறான் . .இராஜாவின் கிருபையை அடைய , துரோகிக்கு அல்லது சிநேகிதனுக்கு உதவி பண்ண வேண்டும் என்று எல்லோரும் சொல்லுவார்கள் அல்லவோ ? அப்படியானால் பாவிகளுக்கு உதவி பண்ணுகிறதிலும் சர்வேசுரனுக்கு உகந்த சிநேகிதராய் இருக்கிற உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி செய்கிறது உத்தமம் என்பதில் சந்தேகத்துக்கு இடமுண்டோ ? என்று விவரித்தார்
ஆனாலும் பேர்த்திரந்தூஸ் என்பவர் இந்த நியாங்களுக்கு இணங்காது போனார் .அடுத்த இராத்திரி அவர் நடுச்சாமத்தில் எழுந்திருந்து தனது சபை வழக்கப்படியே தேவ சங்கீதங்களைப் பாட கோவிலுக்குப் போகையில் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து தேவ சித்தத்தினால் வந்த ஓர் ஆத்துமத்தைக் கண்டார் . அந்த ஆத்துமம் சுமக்க கூடாத ஒரு பாரமான சுமையை சுமக்கிற பிரகாரமாய் இளைத்துக் களைத்து சோர்ந்து மிகவும் வருத்தப்பட்டு இந்த சந்நியாசியிடம் வந்து இந்தக் கடின சுமையை அவரது தோளின் மேல் வைத்ததாமே .சந்நியாசரானவர் அதைத் தாங்க மாட்டாமல் கீழே விழுந்து அதிக வருத்தத்தினாலே சாகிறார் போல் கிடந்து, இதெல்லாம் தேவ செய்கையினால் சம்பவித்ததென்று நிச்சயித்து இனிமேல் எப்போதும் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக எப்போதும் முயற்சி பண்ணுவேனென்று பிரார்த்தித்துக் கொண்டார் . அப்போது காணப்பட்ட ஆத்துமம் மறைந்து போனது . அவரோவென்றால் அதிகாலமே திவ்விய பூசையை ஆத்துமாக்களுக்குச் செய்ததுமல்லாமல் தாம் ஜீவித்த நாளெல்லாம் தாம் பண்ணின ஜெப தப தானக் கிரியை யாவற்றையும் அந்த ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுத்து வந்தார்
இந்தப் புதுமையைக் கேட்ட கிறிஸ்தவர்களே ! பாவிகள் மனந்திரும்பும்படியாய் வேண்டிக் கொள்ளுகிறது பெரிய புண்ணியம் அல்ல என்று நினைக்க வேண்டாம் . ஆனால் அப்படி அவர்களுக்காக பிரயாசைப்படுகிறது நன்மையையும் கடனும் தேவசித்தமுமாய் இருந்தாலும் , உத்தரிக்கிற ஆத்துமாக்களை ஒருபோதும் மறவாமல் அவர்களுடைய அவதிகளைக் குறைக்க முயற்சி பண்ணுகிறது பெரிய தர்மமும் பிரயோசனமுள்ள முறையும் சர்வேசுரனுக்குப் பிரியமான நற்கிரியையுமாமென்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இப்படி தினந்தோறும் செபிப்பதே முறை
இரண்டாம் தேதி
உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்று சகலமான ஜனங்களும் ஒத்துக் கொண்ட சத்திய விசேஷமாம்
தியானம்
திருந்தாத பெரும் பாவிகளுக்கு நித்திய நரகமும் முற்றும் பரிசுத்தவான்களுக்கு முடிவில்லாத மோட்சமுமல்லாமல் உத்தரிக்க வேண்டிய ஆத்துமாக்களுக்கு ஓர் நடுஸ்தலமும் இருக்கிறதென்று எக்காலத்தும் எத்தேசத்தும் ஜனங்களெல்லாம் விசுவசித்து நம்பி ஒத்துக் கொண்டார்கள் என்கிறதற்குச் சந்தேகமில்லை . இந்த ஸ்தலத்திலே உத்தரிப்பு நிமித்தமாக நிற்கும் ஆத்துமாக்கள் மிகுந்த வேதனையை அனுபவிக்கிறதொழிய மனுஷர் அவர்களுக்காக வேண்டிச் செய்த செப தப தான தருமங்களினாலும் செலுத்தின பலிகளினாலும் இந்த வேதனைகள் அமர்ந்து குறையும் என்று அறிந்து இதெல்லாவற்றையும் மகா ஆசையோடு நிறைவேற்றிக் கொண்டு வருவார்களாமே. சேசுநாதர் சுவாமி இவ்வுலகத்தை மீட்டு இரட்சிக்க வரும் முன் இருந்த பேர் பெற்ற அசீரியரும் , பெர்சியரும் , எஜிப்தரும் , கிரேசியரும், ரோமானியரும் மரித்தவர்களைக் குறித்து அநேக சடங்குகளையும் வேண்டுதல்களையும் பலிகளையும் செலுத்திக் கொண்டு வந்தார்கள் என்று அவர்களுடைய சரித்திரங்களிலே துலக்கமாகக் காணப்படுகிறது . மேலும் பூர்வீக காலத்தில் இருந்து இந்நாள் மட்டும் அஞ்ஞானிகளாய் இருக்கிற சீன தேசத்தார் மரணத்தை அடைந்த தங்களுடைய முன்னோர்களைக் குறித்து விசேச பயப்பற்றுதலோடு சில திருவிழாக்களைக் கொண்டாடி பற்பல பலி சடங்குகளை நடத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்துள்ள உண்மையாகும் . இந்த இந்து இராச்சியங்களிலே முதலாய் கிறிஸ்தவரல்லாத பல மதஸ்தரான ஜனங்கள் செத்தவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து மோட்ச விளக்கென்ற சடங்கையும் , அமாவாசை ஒருசந்தியையும் இன்னும் சில ஆசாரங்களையும் நிறைவேற்றுகிறார்கள் என்று உங்களுக்கு நன்றாய்த் தெரியுமே . இறந்து போனவர்களுக்காக இந்த திருநாட்களையும் பூசை பலிகளையும் செப தர்மங்களையும் நானாவித சடங்கு ஆச்சாரங்களையும் மேற்சொன்ன ஜாதி ஜனமெல்லாம் எதற்க்காக அனுசரித்து வருகிறார்கள் என்றால் "கட்டிக் கொண்ட குற்றங்களுக்கு ஆக்கினையாக வேதனைப்படும் ஆன்மாக்களுடைய குற்றங்கள் நீங்கி , இந்த ஆத்துமாக்கள் மோட்சகரை ஏற்கும் பொருட்டு இந்த முறைமைகளுக்கு இது முகாந்தரமல்லாமல் வேறெந்த முகாந்தரமும் இல்லை
மேலும் சேசுக்கிறிஸ்து நாதருக்கு முன்னமே மெய்க்கடவுளான சர்வேசுரனை அறிந்து வணங்கி வந்த யூதர்கள் மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் தங்களுடைய குற்றங்களில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு , மோட்ச பேரின்பத்தை அடையும் பொருட்டு செப, தர்ம ,பூசை பலிகளினாலே பிரயாசைப்படுவார்கள் என்று சத்திய வேத புத்தகன்களினாலே அறிந்து கொள்ளலாம் அதை நிரூபிக்கும் சரித்திரமாவது : மகா வீரசூரரான யூதாஸ் மக்கபெயருடைய நாட்களிலே சில போர்ச் சேவகர்கள் சத்திய வேதத்தை பற்றி செய்யும் போர் சண்டைகளிலே விழுந்து செத்தார்கள் . அவர்களுடைய பிரேதங்களை மகா மகிமையோடு அடக்கம் பண்ணி அவர்களுடைய ஆத்துமாக்களுக்காக எல்லோரும் வேண்டிக் கொண்டதுமன்றியே படைத்தலைவரான யூதாஸ் மக்கபெயர் ஜனங்களிடமிருந்து மிகுந்த பணம் சேகரித்து பன்னிரெண்டாயிரம் வெள்ளிப் பணங்களை ஜெருசலேம் நகரத்தில் இருக்கும் சர்வேசுரனுடைய கோவிலுக்கு அனுப்பி செத்தவர்களுடைய பாவங்களுக்காக பூசை நைவேத்தியம் ஒப்புக் கொடுக்கப் பண்ணினார் . ஆகையால் செத்தவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிக்கப்படும் பொருட்டு அவர்களுக்காக வேண்டிக் கொள்வது நன்மையையும் பிரயோசனமும் உள்ள காரியமென்று மக்கபெயர் இரண்டாம் ஆகமத்தில் சத்தியமாக எழுதி இருக்கிறது . இக்காலம் வரை சேசுக்கிறிஸ்து நாதரை அறிய மாட்டோமென்று யூதர்கள் சாதித்தாலும் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று விசுவசித்து செத்தவர்களுடைய ஆத்துமாக்களுக்காக சில சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள்
அதல்லாமலும் பூர்வீக திருச்சபை முதற்கொண்டு இந்நாள் மட்டும் சகலமான கிறிஸ்தவர்கள் , மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் படும் ஆக்கினைகள் குறையும்படிக்கு செப , தப , தான தருமங்களையும் , திவ்விய பூசைகளையும் ஒப்புக் கொடுத்துக் கொண்டு வருகிறது நிச்சயமாம் . அந்தந்த காலங்களிலே பசாசினுடைய சோதனையால் அநேகர் சத்திய திருச்சபையை விட்டுப் பிரிந்து , அரியானிகள் என்றும் , நேஸ்தோரியானிகள் என்றும் , கிரேசியர் என்றும் மோஸ்கோபித்தார் என்றும் பல பதிதரகப் போயிருந்தாலும் அவர்கள் எல்லோரும் மரித்தவர்களுக்காக வேண்டி நம்மைப் போல ஜெபங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறார்கள் . இந்து தேசத்தில் உள்ள மலையாள சீர்மையில் அநேகமாயிரம் பேர் நேஸ்தோரியானிகள் என்ற பதிதர்களாய் இருந்தாலும் அவர்களுக்குள்ளே அப்படித்தான் நடந்து வருகிறதென்று எவரும் கண்டறியலாம்
இப்போது சொன்னதைக் கேட்ட கிறிஸ்தவர்களே ! செய்ய வேண்டிய யோசனை ஏதென்றால் , சகலமான ஜனங்கள் எக்காலத்திலும் எத்தேசத்திலும் விசுவசித்து அனுசரித்த சாத்தியமானது தப்பாத சத்தியமாகையால் , நரகமும் மோட்சமும் இன்றி நடுஸ்தலமாகிய உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்றும் , இதில் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நம்முடைய நற்கிரியையினால் ஆறுதல் வருவிக்கக் கூடுமென்றும் ஒத்துக் கொள்ளவேண்டுமே அல்லாமல் மற்றபடியல்ல . அப்படி இருக்க , சேசுநாதர் ஸ்தாபித்த சத்திய வேதத்தைக் கெடுக்க நானூறு வருசத்துக்கு முன் முளைத்த புரோட்டஸ்டாண்டு என்ற பதிதர் மாத்திரமே எந்த முகாந்தரத்தினாலேயோ மேற்சொன்ன சத்தியத்தை மறுத்து விரோதித்து தங்களுடைய புத்தியீனத்தையும் ஆங்காரத்தையும் காண்பிக்கிறதும் தவிர உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் இரக்கம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள் அல்லவோ ? கிறிஸ்தவர்களே ! இவர்கள் சொல்லும் தப்பரைகளுக்குச் செவி கொடாமல் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உங்களாலான மட்டும் உதவியாய் இருக்க வேண்டுமென்று அறியக் கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா ! மரித்த உமது அடியார்களுக்காக செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து ,அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்புகிற பாவ மன்னிப்பை கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் . சதாகாலமும் சீவியரான சர்வேசுரா ! இந்த மன்றாட்டை தயவோடு கேட்டருளும் சுவாமி ஆமென்
இந்த தினத்தில் செய்ய வேண்டிய நற்கிரியை
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பூசையை செய்விக்கிறது அல்லது காண்கிறது
புதுமை
உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் சில சமயங்களிலே காணப்பட்டதென்றும் , தாங்கள் அனுபவிக்கும் வேதனையின் அகோரங்களைக் காண்பித்ததென்றும் தங்களுக்கு ஆறுதலாக செபங்களையும் தர்மங்களையும் பூசைகளையும் செய்யக் கேட்டதென்றும் அநேக பெரிய சாஸ்திரிகள் நிச்சயமாய் எழுதினார்களாமே . அப்படியே பூர்வீகத் திருச்சபையில் வேதசாட்சியான அர்ச்சிஷ்ட பெர்பேத்துவம்மாள் தன்னுடைய தம்பியான தினோக்கிராத் என்பவருடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிறதையும் பின்பு அதில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதையும் கண்டாள் என்று மகா சாஸ்திரியான அர்ச் அகுஸ்தீனுஸ் எழுதி வைத்தார்
சேசுக்கிறிஸ்து நாதர் சுவாமி பிறந்து ஐந்நூறு வருசத்துக்குப் பிறகு அயர்லாந்து தேசத்திலே உயர்ந்த கோத்திரத்திலே பிறந்த அர்ச் ஈதவம்மாள் வாழ்ந்து வந்தாள். அவள் சிறு வயது முதலாய் நானாவித புண்ணியங்களை அனுசரித்து வந்ததினாலே சர்வேசுரன் அவளுக்கு அநேக சுகிர்த வரங்களை அளிக்க சித்தமானார் . தம்முடைய காவலான சம்மனசுவை அடிக்கடி தரிசித்து அவரோடு சம்பாஷிப்பாள். திரளான அற்புதங்களைப் பண்ணி அதிசயமான காட்சிகளைக் காண்பாள் . அவள் ஒரு நாள் தியானத்தில் இருக்கும் போது அதற்கு சற்று முன் மரணத்தை அடைந்த தமது பெரிய தகப்பனாருடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே அகோரமாய் வாதைப்படுகிறதை தரிசித்தாள். தாமதமில்லாமல் அவரது எட்டு மக்களையும் வரவழைத்து தாம் கண்டதை அவர்களுக்கு வெளிப்படுத்தி :"அய்யய்யோ ! உங்களுடைய தகப்பனார் இந்நேரத்தில் அவ்வளவு வேதனைப்படுகிறாரே, அவருக்கு ஆறுதல் வருவிக்க நாமெல்லோரும் பிரயாசப்படக்கடவோமல்லவா ? நான் இடைவிடாமல் இரவும் பகலும் அவருக்காய் பிரார்த்தித்து, தபசு பண்ணுவேன் .நீங்களும் அவரைக் குறித்து நிறைய பிச்சை கொடுத்து பசித்திருக்கிரவர்களுக்கு போஜனம் தந்து கோவிலிலே மெழுகுதிரிகளை எரியப் பண்ணி , ஒரு வருஷமளவும் தினந்தோறும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்வீர்களாக என்றாள்
இந்த எட்டு பிள்ளைகளும் அர்ச் ஈதவம்மாள் கற்பித்த எல்லாவற்றையும் சரிவர நிறைவேற்றினார்கள் . மறு வருஷம் திரும்பவே அவள் தன பெரிய தகப்பனாருடைய ஆத்துமத்தைக் கண்டு அவர்களுக்குச் சொன்னதாவது:"நீங்கள் செய்த தருமங்களினாலும் நான் செய்த ஜெபங்களினாலும் உங்கள் தகப்பனாருக்கு நியமித்த வேதனையில் பாதி குறைந்து போனது .ஆனால் இன்னமும் ஒரு வருஷத்துக்கு இவருடைய ஆத்துமத்துக்காக பிரயாசைப்படக் கடவோம் என்றாள்
இப்படி அவள் ஜெபங்களையும் தவக்கிரியைகளையும் பிள்ளைகள் பிச்சை தருமங்களையும் மகாப் பிரயாசையோடு பண்ணினார்கள் . அந்த இரண்டாம் வருஷக் கடைசியில் அவள் சொன்னதாவது :"உங்கள் தகப்பனாருடைய வேதனைகள் முடிந்தது மெய்தான் . ஆயினும் அவர் உயிரோடு இருக்கிறபோது இவ்வுலக நன்மைகளை அதிக ஆசையோடு தேடியிருந்ததையும் , பிச்சைக்காரருக்கு வஸ்திரம் கொடாமல் இருந்ததையும் பற்றி அவர் இன்னும் மோட்ச பேரின்ப மகிமையை அடையவில்லை .ஆனதால் அவரைக் குறித்து இன்னும் ஒரு வருஷமட்டும் பிரயாசைப்படவேண்டியதுமல்லாமல் வஸ்திரமில்லாதவருக்கு வஸ்திரம் கொடுத்து வாருங்கள் என்றாள் . இந்தப் பிள்ளைகள் இதையும் குறைவின்றி நிறைவேற்றினார்கள் . இதன் பிற்பாடு இவர்களுடைய தகப்பனார் செத்த மூன்றாம் வருஷக் கடைசி நாளிலே இவருடைய ஆத்துமம் மகா பிரதாபத்தோடு மோட்ச பேரின்ப வீட்டிலே பிரவேசித்ததை அர்ச் ஈத்தம்மாள் நினைத்து ,அவர் இவ்வுலகத்தின் நிலையாத நன்மைகளை அதிக பற்றுதலோடு தேடினதைப் போல நீங்கள் தேட வேண்டாமென்று வசனித்தாள்
கிறிஸ்தவர்களே , இப்போது சொன்ன புதுமையிலே மூன்று விசேசங்களை நன்றாய் அறிய வேண்டும் . முதலாவது : ஆயிரத்து நானூறு வருசத்துக்கு முன் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து செபங்களையும் தவக்கிரியைகளையும் பிச்சை தர்மங்களைச் செய்யவும் , கோயில்களிலே விளக்கு மெழுகுதிரிகளை எரிய வைக்கவும், திவ்விய பூசைகளைச் செய்விக்கவும் , திருச்சபையில் வழக்கம் இருந்திருக்கும்போது ,இந்த ஆத்துமாக்களைக் குறித்து வேண்டிக் கொள்ளுகிறது புதிய முறை என்று பிரிவினை சபையினர் என்னும் பதிதர் சொல்லுமிடத்தில் ,இது அவர்கள் கக்கும் பதினாயிரம் பொய்களுக்குள்ளே ஒரு பெரிய பொய்யும் தப்பறையுமாகும்
இரண்டாவது : மேற்சொன்ன மனுஷனுடைய ஆத்துமம் பட்ட வேதனைகளை முடித்து அது மோட்சத்திற்கு சேர மூன்று வருஷமளவும் அவ்வளவு செபங்களையும் தாபங்களையும் பண்ணிப் பூசைகளையும் செய்வித்தார்கள் என்று அறிந்து , உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களை குறித்து கொஞ்சம் செபம் , தர்மம் செய்து ஒன்றிரண்டு பூசை செய்விக்கிறது போதும் என்று நினைக்க வேண்டாம்
மூன்றாவது : இவ்வுலகத்தின் செல்வ நன்மையெல்லாம் நில்லாது என்கிறதினாலே இவைகளை அதிக ஆசையோடு தேடுகிறதே பெரும் பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதல்லாமல் அதனால் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுவதற்கு இடமிருக்கிறது என்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இப்படி தினந்தோறும் செபிப்பதே முறை
உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்று சகலமான ஜனங்களும் ஒத்துக் கொண்ட சத்திய விசேஷமாம்
தியானம்
திருந்தாத பெரும் பாவிகளுக்கு நித்திய நரகமும் முற்றும் பரிசுத்தவான்களுக்கு முடிவில்லாத மோட்சமுமல்லாமல் உத்தரிக்க வேண்டிய ஆத்துமாக்களுக்கு ஓர் நடுஸ்தலமும் இருக்கிறதென்று எக்காலத்தும் எத்தேசத்தும் ஜனங்களெல்லாம் விசுவசித்து நம்பி ஒத்துக் கொண்டார்கள் என்கிறதற்குச் சந்தேகமில்லை . இந்த ஸ்தலத்திலே உத்தரிப்பு நிமித்தமாக நிற்கும் ஆத்துமாக்கள் மிகுந்த வேதனையை அனுபவிக்கிறதொழிய மனுஷர் அவர்களுக்காக வேண்டிச் செய்த செப தப தான தருமங்களினாலும் செலுத்தின பலிகளினாலும் இந்த வேதனைகள் அமர்ந்து குறையும் என்று அறிந்து இதெல்லாவற்றையும் மகா ஆசையோடு நிறைவேற்றிக் கொண்டு வருவார்களாமே. சேசுநாதர் சுவாமி இவ்வுலகத்தை மீட்டு இரட்சிக்க வரும் முன் இருந்த பேர் பெற்ற அசீரியரும் , பெர்சியரும் , எஜிப்தரும் , கிரேசியரும், ரோமானியரும் மரித்தவர்களைக் குறித்து அநேக சடங்குகளையும் வேண்டுதல்களையும் பலிகளையும் செலுத்திக் கொண்டு வந்தார்கள் என்று அவர்களுடைய சரித்திரங்களிலே துலக்கமாகக் காணப்படுகிறது . மேலும் பூர்வீக காலத்தில் இருந்து இந்நாள் மட்டும் அஞ்ஞானிகளாய் இருக்கிற சீன தேசத்தார் மரணத்தை அடைந்த தங்களுடைய முன்னோர்களைக் குறித்து விசேச பயப்பற்றுதலோடு சில திருவிழாக்களைக் கொண்டாடி பற்பல பலி சடங்குகளை நடத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்துள்ள உண்மையாகும் . இந்த இந்து இராச்சியங்களிலே முதலாய் கிறிஸ்தவரல்லாத பல மதஸ்தரான ஜனங்கள் செத்தவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து மோட்ச விளக்கென்ற சடங்கையும் , அமாவாசை ஒருசந்தியையும் இன்னும் சில ஆசாரங்களையும் நிறைவேற்றுகிறார்கள் என்று உங்களுக்கு நன்றாய்த் தெரியுமே . இறந்து போனவர்களுக்காக இந்த திருநாட்களையும் பூசை பலிகளையும் செப தர்மங்களையும் நானாவித சடங்கு ஆச்சாரங்களையும் மேற்சொன்ன ஜாதி ஜனமெல்லாம் எதற்க்காக அனுசரித்து வருகிறார்கள் என்றால் "கட்டிக் கொண்ட குற்றங்களுக்கு ஆக்கினையாக வேதனைப்படும் ஆன்மாக்களுடைய குற்றங்கள் நீங்கி , இந்த ஆத்துமாக்கள் மோட்சகரை ஏற்கும் பொருட்டு இந்த முறைமைகளுக்கு இது முகாந்தரமல்லாமல் வேறெந்த முகாந்தரமும் இல்லை
மேலும் சேசுக்கிறிஸ்து நாதருக்கு முன்னமே மெய்க்கடவுளான சர்வேசுரனை அறிந்து வணங்கி வந்த யூதர்கள் மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் தங்களுடைய குற்றங்களில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு , மோட்ச பேரின்பத்தை அடையும் பொருட்டு செப, தர்ம ,பூசை பலிகளினாலே பிரயாசைப்படுவார்கள் என்று சத்திய வேத புத்தகன்களினாலே அறிந்து கொள்ளலாம் அதை நிரூபிக்கும் சரித்திரமாவது : மகா வீரசூரரான யூதாஸ் மக்கபெயருடைய நாட்களிலே சில போர்ச் சேவகர்கள் சத்திய வேதத்தை பற்றி செய்யும் போர் சண்டைகளிலே விழுந்து செத்தார்கள் . அவர்களுடைய பிரேதங்களை மகா மகிமையோடு அடக்கம் பண்ணி அவர்களுடைய ஆத்துமாக்களுக்காக எல்லோரும் வேண்டிக் கொண்டதுமன்றியே படைத்தலைவரான யூதாஸ் மக்கபெயர் ஜனங்களிடமிருந்து மிகுந்த பணம் சேகரித்து பன்னிரெண்டாயிரம் வெள்ளிப் பணங்களை ஜெருசலேம் நகரத்தில் இருக்கும் சர்வேசுரனுடைய கோவிலுக்கு அனுப்பி செத்தவர்களுடைய பாவங்களுக்காக பூசை நைவேத்தியம் ஒப்புக் கொடுக்கப் பண்ணினார் . ஆகையால் செத்தவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிக்கப்படும் பொருட்டு அவர்களுக்காக வேண்டிக் கொள்வது நன்மையையும் பிரயோசனமும் உள்ள காரியமென்று மக்கபெயர் இரண்டாம் ஆகமத்தில் சத்தியமாக எழுதி இருக்கிறது . இக்காலம் வரை சேசுக்கிறிஸ்து நாதரை அறிய மாட்டோமென்று யூதர்கள் சாதித்தாலும் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று விசுவசித்து செத்தவர்களுடைய ஆத்துமாக்களுக்காக சில சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள்
அதல்லாமலும் பூர்வீக திருச்சபை முதற்கொண்டு இந்நாள் மட்டும் சகலமான கிறிஸ்தவர்கள் , மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் படும் ஆக்கினைகள் குறையும்படிக்கு செப , தப , தான தருமங்களையும் , திவ்விய பூசைகளையும் ஒப்புக் கொடுத்துக் கொண்டு வருகிறது நிச்சயமாம் . அந்தந்த காலங்களிலே பசாசினுடைய சோதனையால் அநேகர் சத்திய திருச்சபையை விட்டுப் பிரிந்து , அரியானிகள் என்றும் , நேஸ்தோரியானிகள் என்றும் , கிரேசியர் என்றும் மோஸ்கோபித்தார் என்றும் பல பதிதரகப் போயிருந்தாலும் அவர்கள் எல்லோரும் மரித்தவர்களுக்காக வேண்டி நம்மைப் போல ஜெபங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறார்கள் . இந்து தேசத்தில் உள்ள மலையாள சீர்மையில் அநேகமாயிரம் பேர் நேஸ்தோரியானிகள் என்ற பதிதர்களாய் இருந்தாலும் அவர்களுக்குள்ளே அப்படித்தான் நடந்து வருகிறதென்று எவரும் கண்டறியலாம்
இப்போது சொன்னதைக் கேட்ட கிறிஸ்தவர்களே ! செய்ய வேண்டிய யோசனை ஏதென்றால் , சகலமான ஜனங்கள் எக்காலத்திலும் எத்தேசத்திலும் விசுவசித்து அனுசரித்த சாத்தியமானது தப்பாத சத்தியமாகையால் , நரகமும் மோட்சமும் இன்றி நடுஸ்தலமாகிய உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்றும் , இதில் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நம்முடைய நற்கிரியையினால் ஆறுதல் வருவிக்கக் கூடுமென்றும் ஒத்துக் கொள்ளவேண்டுமே அல்லாமல் மற்றபடியல்ல . அப்படி இருக்க , சேசுநாதர் ஸ்தாபித்த சத்திய வேதத்தைக் கெடுக்க நானூறு வருசத்துக்கு முன் முளைத்த புரோட்டஸ்டாண்டு என்ற பதிதர் மாத்திரமே எந்த முகாந்தரத்தினாலேயோ மேற்சொன்ன சத்தியத்தை மறுத்து விரோதித்து தங்களுடைய புத்தியீனத்தையும் ஆங்காரத்தையும் காண்பிக்கிறதும் தவிர உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் இரக்கம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள் அல்லவோ ? கிறிஸ்தவர்களே ! இவர்கள் சொல்லும் தப்பரைகளுக்குச் செவி கொடாமல் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உங்களாலான மட்டும் உதவியாய் இருக்க வேண்டுமென்று அறியக் கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா ! மரித்த உமது அடியார்களுக்காக செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து ,அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்புகிற பாவ மன்னிப்பை கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் . சதாகாலமும் சீவியரான சர்வேசுரா ! இந்த மன்றாட்டை தயவோடு கேட்டருளும் சுவாமி ஆமென்
இந்த தினத்தில் செய்ய வேண்டிய நற்கிரியை
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பூசையை செய்விக்கிறது அல்லது காண்கிறது
புதுமை
உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் சில சமயங்களிலே காணப்பட்டதென்றும் , தாங்கள் அனுபவிக்கும் வேதனையின் அகோரங்களைக் காண்பித்ததென்றும் தங்களுக்கு ஆறுதலாக செபங்களையும் தர்மங்களையும் பூசைகளையும் செய்யக் கேட்டதென்றும் அநேக பெரிய சாஸ்திரிகள் நிச்சயமாய் எழுதினார்களாமே . அப்படியே பூர்வீகத் திருச்சபையில் வேதசாட்சியான அர்ச்சிஷ்ட பெர்பேத்துவம்மாள் தன்னுடைய தம்பியான தினோக்கிராத் என்பவருடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிறதையும் பின்பு அதில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதையும் கண்டாள் என்று மகா சாஸ்திரியான அர்ச் அகுஸ்தீனுஸ் எழுதி வைத்தார்
சேசுக்கிறிஸ்து நாதர் சுவாமி பிறந்து ஐந்நூறு வருசத்துக்குப் பிறகு அயர்லாந்து தேசத்திலே உயர்ந்த கோத்திரத்திலே பிறந்த அர்ச் ஈதவம்மாள் வாழ்ந்து வந்தாள். அவள் சிறு வயது முதலாய் நானாவித புண்ணியங்களை அனுசரித்து வந்ததினாலே சர்வேசுரன் அவளுக்கு அநேக சுகிர்த வரங்களை அளிக்க சித்தமானார் . தம்முடைய காவலான சம்மனசுவை அடிக்கடி தரிசித்து அவரோடு சம்பாஷிப்பாள். திரளான அற்புதங்களைப் பண்ணி அதிசயமான காட்சிகளைக் காண்பாள் . அவள் ஒரு நாள் தியானத்தில் இருக்கும் போது அதற்கு சற்று முன் மரணத்தை அடைந்த தமது பெரிய தகப்பனாருடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே அகோரமாய் வாதைப்படுகிறதை தரிசித்தாள். தாமதமில்லாமல் அவரது எட்டு மக்களையும் வரவழைத்து தாம் கண்டதை அவர்களுக்கு வெளிப்படுத்தி :"அய்யய்யோ ! உங்களுடைய தகப்பனார் இந்நேரத்தில் அவ்வளவு வேதனைப்படுகிறாரே, அவருக்கு ஆறுதல் வருவிக்க நாமெல்லோரும் பிரயாசப்படக்கடவோமல்லவா ? நான் இடைவிடாமல் இரவும் பகலும் அவருக்காய் பிரார்த்தித்து, தபசு பண்ணுவேன் .நீங்களும் அவரைக் குறித்து நிறைய பிச்சை கொடுத்து பசித்திருக்கிரவர்களுக்கு போஜனம் தந்து கோவிலிலே மெழுகுதிரிகளை எரியப் பண்ணி , ஒரு வருஷமளவும் தினந்தோறும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்வீர்களாக என்றாள்
இந்த எட்டு பிள்ளைகளும் அர்ச் ஈதவம்மாள் கற்பித்த எல்லாவற்றையும் சரிவர நிறைவேற்றினார்கள் . மறு வருஷம் திரும்பவே அவள் தன பெரிய தகப்பனாருடைய ஆத்துமத்தைக் கண்டு அவர்களுக்குச் சொன்னதாவது:"நீங்கள் செய்த தருமங்களினாலும் நான் செய்த ஜெபங்களினாலும் உங்கள் தகப்பனாருக்கு நியமித்த வேதனையில் பாதி குறைந்து போனது .ஆனால் இன்னமும் ஒரு வருஷத்துக்கு இவருடைய ஆத்துமத்துக்காக பிரயாசைப்படக் கடவோம் என்றாள்
இப்படி அவள் ஜெபங்களையும் தவக்கிரியைகளையும் பிள்ளைகள் பிச்சை தருமங்களையும் மகாப் பிரயாசையோடு பண்ணினார்கள் . அந்த இரண்டாம் வருஷக் கடைசியில் அவள் சொன்னதாவது :"உங்கள் தகப்பனாருடைய வேதனைகள் முடிந்தது மெய்தான் . ஆயினும் அவர் உயிரோடு இருக்கிறபோது இவ்வுலக நன்மைகளை அதிக ஆசையோடு தேடியிருந்ததையும் , பிச்சைக்காரருக்கு வஸ்திரம் கொடாமல் இருந்ததையும் பற்றி அவர் இன்னும் மோட்ச பேரின்ப மகிமையை அடையவில்லை .ஆனதால் அவரைக் குறித்து இன்னும் ஒரு வருஷமட்டும் பிரயாசைப்படவேண்டியதுமல்லாமல் வஸ்திரமில்லாதவருக்கு வஸ்திரம் கொடுத்து வாருங்கள் என்றாள் . இந்தப் பிள்ளைகள் இதையும் குறைவின்றி நிறைவேற்றினார்கள் . இதன் பிற்பாடு இவர்களுடைய தகப்பனார் செத்த மூன்றாம் வருஷக் கடைசி நாளிலே இவருடைய ஆத்துமம் மகா பிரதாபத்தோடு மோட்ச பேரின்ப வீட்டிலே பிரவேசித்ததை அர்ச் ஈத்தம்மாள் நினைத்து ,அவர் இவ்வுலகத்தின் நிலையாத நன்மைகளை அதிக பற்றுதலோடு தேடினதைப் போல நீங்கள் தேட வேண்டாமென்று வசனித்தாள்
கிறிஸ்தவர்களே , இப்போது சொன்ன புதுமையிலே மூன்று விசேசங்களை நன்றாய் அறிய வேண்டும் . முதலாவது : ஆயிரத்து நானூறு வருசத்துக்கு முன் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து செபங்களையும் தவக்கிரியைகளையும் பிச்சை தர்மங்களைச் செய்யவும் , கோயில்களிலே விளக்கு மெழுகுதிரிகளை எரிய வைக்கவும், திவ்விய பூசைகளைச் செய்விக்கவும் , திருச்சபையில் வழக்கம் இருந்திருக்கும்போது ,இந்த ஆத்துமாக்களைக் குறித்து வேண்டிக் கொள்ளுகிறது புதிய முறை என்று பிரிவினை சபையினர் என்னும் பதிதர் சொல்லுமிடத்தில் ,இது அவர்கள் கக்கும் பதினாயிரம் பொய்களுக்குள்ளே ஒரு பெரிய பொய்யும் தப்பறையுமாகும்
இரண்டாவது : மேற்சொன்ன மனுஷனுடைய ஆத்துமம் பட்ட வேதனைகளை முடித்து அது மோட்சத்திற்கு சேர மூன்று வருஷமளவும் அவ்வளவு செபங்களையும் தாபங்களையும் பண்ணிப் பூசைகளையும் செய்வித்தார்கள் என்று அறிந்து , உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களை குறித்து கொஞ்சம் செபம் , தர்மம் செய்து ஒன்றிரண்டு பூசை செய்விக்கிறது போதும் என்று நினைக்க வேண்டாம்
மூன்றாவது : இவ்வுலகத்தின் செல்வ நன்மையெல்லாம் நில்லாது என்கிறதினாலே இவைகளை அதிக ஆசையோடு தேடுகிறதே பெரும் பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதல்லாமல் அதனால் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுவதற்கு இடமிருக்கிறது என்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இப்படி தினந்தோறும் செபிப்பதே முறை
மூன்றாம் தேதி
உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்கிறது திருச்சபையின் சத்திய விசுவாசமாம்
தியானம்
சேசுக்கிறிஸ்து நாதர் சுவாமி இவ்வுலகத்திற்கு எழுந்தருளி வரும் முன்னே வரைந்த வரிவேத புஸ்தகங்களினாலும் , அவருடைய ஸ்தானாதிபதிகளாய் இருந்த அப்போஸ்தலர்களுடைய நிருபங்களினாலும் வேதபாரகர் அனைவோரும் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று திருஷ்டாந்தமாய் ஒப்பித்துக் கொண்டு வந்ததினாலே , இவர்கள் சொல்லும் பரம நியாயங்களை இதிலே பற்றும் பற்றாய்க் காண்பிக்க வேண்டியதில்லை . துஷ்ட பதிதர்களை மறுப்பதற்கு இந்த நியாயங்களை அறிய வேண்டுமானால் இவைகளை வேத விளக்கமென்னும் புஸ்தகத்திலும் ஞான சஞ்சீவி என்னும் புஸ்தகத்திலும் இவை போன்ற பிற புத்தகங்களிலும் வாசிக்கக் காணலாம்
மேலும் சத்திய வேதத்தை எங்கும் போதித்து ஸ்தாபித்த அப்போஸ்தலர்கள் நாள் முதற்கொண்டு இந்நாள் மட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களுக்காக ஜெப வேண்டுதல்களையும் பூசை பலிகளையும் பண்ணுகிற சுகிர்த வழக்கம் பாரம்பரியமான முறையாய் நடந்ததுமல்லாமல் ,அந்தந்த காலத்திலே விளங்கின வேதபாரகரும் , கிரந்த கர்த்தாக்களும் , தெய்வீக சாஸ்திரிகளும் இந்த முறைமையை பக்தி வணக்கத்துடன் அனுசரிக்க வேண்டுமென்று கற்பித்துக் கொண்டு வந்தார்கள் என்கிரதர்க்குச் சற்றாகிலும் சந்தேகப்பட இடமில்லை . அர்ச் இராயப்பருக்குச் சீடராய் இருந்த அர்ச் சாந்தப்பர் என்னும் பாப்பனவர் பிரசித்திபடுத்தின அப்போஸ்தலிக்கக் கட்டளைகளின் எட்டாம் அதிகாரத்தில் சொல்லுகிறதாவது : சர்வேசுரனுடைய சமாதானத்தில் மரித்த நமது சகோதரருடைய ஆத்துமாக்களுக்கு ஆண்டவர் கிருபை செய்து அவர்கள் பாவங்களைப் பொறுத்து அவர்களைப் பிதாப் பிதாவான ஆபிரகாமுடைய மதியான மோட்சத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுவோமாக என்று சொன்ன பிற்பாடு அவர்களைக் குறித்து ஒரு நேர்த்தியான ஜெபத்தை எழுதி வைத்திருக்கிறார் .
நூற்றைம்பதாம் ஆண்டில் இருந்த தெர்த்துல்லியன் என்பவர் : பெண்ஜாதியானவள் செத்த தன புருஷனுடைய ஆத்துமத்திற்காக வேண்டிக் கொள்ள வேணுமென்கிற கவலையின்றி மறு கலியாணம் பண்ணுகிறது தகாது என்றார்
நூற்றைம்பதாம் ஆண்டில் மகா சாஸ்திரியான ஒரிஜென்என்பவர் எழுதினதாவது : இவ்வுலக யுத்தத்தில் இருந்து மறு லோகத்துக்குப் போகிறவன் உத்தரிக்க வேண்டி இருப்பதால் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது கடனும் பிரயோசனமும் உள்ள வழக்கமாம் என்கிறார்
முன்நூற்றைம்பதாம் ஆண்டில் மகா சாஸ்திரியாகவும் அர்மேனியா தேசத்தில் சத்திய வேத விளக்காகவும் துலங்கின அர்ச் எபிரேம் என்பவர் சாகப் போகிற தருணத்தில் தனக்கு அருகே இருந்த தன் சீடரை நோக்கி :" என் பிரியமுள்ள பிள்ளைகளே , மரிக்கப் போகிற உங்களுடைய தகப்பனாராகிய எனக்குக் கடைசி உபசரணை செய்ய வாருங்கள் . என் சரீரத்துக்குப் பரிமளங்களைக் கொடுக்க வேண்டாம். ஆனால் நான் சர்வேசுரனிடத்தில் கிருபை அடையும் பொருட்டு தேவ சங்கீதங்களைப் பாடிக் கண்ணீர் சொரிந்து என் ஆத்துமத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள் . இனிமேல் கோவிலில் நீங்கள் கூடும்போது எப்போதும் என்னை மறவாமல் எனக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் என்றார்
அர்ச் அமிர்தநாதரோவென்றால் "எனக்கு மகனும் ஆண்டவருமான தேயோதோசியூஸ் இராயனுடைய ஆத்துமத்தை மோட்சத்தில் பிரவேசிக்கப் பண்ணுமளவும் என்னுடைய செபங்களையும் தபங்களையும் அழுகையையும் தவக்கிரியைகளையும் விட்டு விடுகிறதில்லை என்றார்
தமது தாயாரான அர்ச் மோணிக்கம்மாள் செத்த பிற்பாடு அர்ச் அகுஸ்தீன் எழுதின சுகிர்த வாக்கியமாவது :" எனக்கு மகிமையும் உயிருமாய் இருக்கிற என் சர்வேசுரா ! இப்போது என்னுடைய தாயாரின் புண்ணியங்களை உம்மிடம் விவரித்துப் பேசாமல் , அவளுடைய பாவங்களுக்காக உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன் . அவள் பேரில் இரக்கமாயிரும் , இரக்கமாயிரும் சுவாமி . அவளுக்குக் கடின தீர்வை இடாதேயும் . கர்த்தாவே , அவள் மரிக்கப் போகிற தருணத்தில் தன்னுடைய சரீரத்தை நினைக்கவுமில்லை , அதற்கு மகிமையான அடக்கத்தைப் பண்ண கேட்டதுமில்லை என்று நினைத்தருளும் . திவ்விய பூசையிலே பாவங்களைப் போக்குகிற பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறதை அறிந்து ,அந்த திவ்விய பூசையில் தன்னை நினைக்க வேண்டுமென்று மாத்திரமே கேட்டுக் கொண்டாள். அதனால் என் ஆண்டவரான சர்வேசுரா ! இப்போது நான் எழுதினவைகளை வாசிக்கப் போகிற உமது ஊழியரும் என் சகோதரருமான சகலரும் உமது அடியாளாகிய மோனிக்கா என்ற அம்மாளை நினைத்து அவளது ஆத்துமத்துக்காக வேண்டிக் கொள்ளும்படி கிருபை செய்தருளும் என்று எழுதி வைத்தார் . மேலும் இந்த மகா சாஸ்திரியானவர் மரித்தவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளை குறித்து ஒரு நேர்த்தியான புத்தகத்தையும் எழுதி வைத்தாராம்
இது அளவின்றி விரியுமென்று அஞ்சி , அர்ச் கிரிசோஸ்தோமுஸ் ,அர்ச் எரோணிமூஸ் , அர்ச் பசிலியார் , அர்ச் சிரில், அர்ச் கிரகோரியார் முதலான பழைய வேதபாரகர் எழுதினவைகளை விவரித்துக் காட்டாமல் முன் சொன்னது புத்தியுள்ளவர்களுக்குப் போதும் என்று நினைத்திருக்கிறோம் . இப்போது சொன்னபடி அப்போஸ்தலர் நாளில் இருந்தவர்கள் துவக்கி இந்நாள் வரைக்கும் வழங்கின வேதபாரகர் எல்லோரும் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது திருச்சபை முறைமை என்று எழுதியதை மறுத்தவர் ஒருவருமில்லாமையால் , அப்போஸ்தலர் படிப்பினையால் துவக்கி திருச்சபையில் வழங்கின முறைமை இதுவேயென்று சொல்லக் கடவோம் . ஆயினும் உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாமல் இருந்தால் செத்தவர்களுக்காகச் செய்யும் வேண்டுதல் அபத்தம் தானே ? ஆகையால் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது அப்போஸ்தலர் படிப்பினையால் வந்த திருச்சபையின் முறைமை எனக் கொள்ள , உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று அப்போஸ்தலர் படிப்பித்தது சத்திய விசுவாசமல்லோ ?
கடைசியில் சத்தியம் வழுவாத திருச்சபையின் விசுவாசம் அதன் மட்டில் ஏதென்று நன்றாக அறியத்தக்கதாக புளோரன்ஸ் என்கிற பட்டணத்தில் கூடின சகல மேற்றிராணிமார்களுடைய சங்கத்தில் பிரசித்தி படுத்தப்பட்ட தீர்மானத்தைக் கேட்கக் கடவீர்கள் :" மெய்யான மனஸ்தாபப்பட்டு பாவிகள் தவக்கிரியைகளினால் தங்களுடைய பாவங்களுக்கு இவ்வுலகத்தில் பரிகாரம் பண்ணும் முன்னே செத்தால் , அவர்களுடைய ஆத்துமங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளில் சுத்திகரிக்கப்படும் .அப்போது இந்த ஆத்துமாக்களை உயிருள்ள கிறிஸ்தவர்களுடைய மன்றாட்டினால் மீட்டு இரட்சிக்கக்கூடும் என்பது மெய்யான சத்தியம் என்கிறதினால், அவைகளைக் குறித்து திவ்விய பூசை பண்ணுகிறதும் , ஜெபன்களைப் பொழிகிறதும், பிச்சைகளை இடுகிறதும் , மற்ற தருமங்கள் செய்கிறதும் திருச்சபையினுடைய வழக்கமும் கட்டளையுமாமே . அதல்லாமலும் 1583 ஆம் ஆண்டில் திரிதெந்தென்னும் நகரில் கூடின மிகவும் பேர் பெற்ற சமஸ்த சங்கத்தில் ,மேற்றிராணிமார்கள் உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்றும் திருச்சபையின் விசுவாசம அதுஎன்றும் சொன்ன பிற்பாடு இந்தப் பரம சத்தியத்தை குருக்கள் எல்லோரும் தங்கள் விசாரணைக் கிறிஸ்துவர்களுக்குக் குறைவின்றிப் போதித்து அவர்கள் அதைச் சரிவர ஒத்துக் கொள்ளும்படியாய்ச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்
கிறிஸ்தவர்களே ! இப்போது விவரித்துக் காண்பித்த உதாரணங்களினால் உங்களுடைய விசுவாசத்தில் சற்றாகிலும் தத்தளிக்காமல் நிலைத்து நிற்க வேண்டியதுமன்றியே மேன்மேலும் உங்களுடைய சுகிர்த மன்றாட்டுகளினாலும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாளுக்கு ஆறுதல் வருவித்து உதவியைச் செய்யக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
நித்திய பிதாவே ! பெற்றோர் பந்துக்கள் சிநேகிதர் உபகாரிகள் முதளியவர்களைத் தக்க விதமாய் நேசித்து அவர்களுக்கு வேண்டிய நன்மை சேயைக் கற்பித்தருளினீரே , ஆகையால் எங்களைப் பெற்று அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் பற்பல உபசாரம் எங்களுக்குச் செய்தவர்களும் எங்கள் பந்துக்கள் சிநேகிதர் முதலானவர்களும் வேதனை நீங்கி நித்திய காலம் உம்மை சந்தோசமாய் தரிசித்துக் கொண்டிருக்க தேவரீர் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது :
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிச்சைக்காரருக்குப் பிச்சை கொடுக்கிறது
புதுமை
எண்ணூறு வருஷத்துக்கு முன்னே வழுவாத பக்தி விசுவாசத்தாலும் தேர்ந்த சாஸ்திர படிப்பாலும் செய்த மட்டற்ற அற்புதங்களினாலும் பிரபலயமான பேர்பெற்ற அர்ச் பெர்னர்தூஸ் என்கிறவர் விளங்கிக் கொண்டிருந்தார் . அவர் உண்டு பண்ணி பிரசித்திபடுத்தின சுகிர்த புஸ்தகங்களில் அர்மாக்குப் பட்டணத்தின் மேற்றிராணியாரான அர்ச் மலக்கியாருடைய சரித்திரத்தை இன்பம் நிறைந்த சொற்களோடு எழுதி வைத்தார் . இந்த மேற்றிராணியார் தான் ஜீவித்த நாளெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் மிகுந்த பக்தி இரக்கமாய் இருந்து அவர்களுக்கு உதவி பண்ண தம்மாலே செய்யக் கூடுமான புண்ணியம் எல்லாவற்றையும் செய்வார் . அவர் குருவாகுமுன்னே மரித்த எளியவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஆறுதல் வருவிக்கத்தக்கதாக வேண்டிக் கொள்ளுகிறதுமல்லாமல்அவர்களுடைய அடக்கத்துக்கும் போவார் . சில சமயங்களில் அவர்களைத் தம் கரங்களினாலே வேண்டிய பணிவிடை செய்து அடக்கம் பண்ணுவார் . அவர் இந்த தர்ம கிரியைகளைச் செய்யுமிடத்தில் இவ்வுலக செல்வ மகிமையின் பேரில் மிகவும் பற்றுதலாய் இருந்த மதலேனம்மாள் என்னும் அவருடைய சகோதரியான ஒருத்தி அவரை நகைத்துச் சொன்னதாவது : உயர்ந்த கோத்திரத்திலே பிறந்த உமக்கு இந்த நீசத் தொழிலைச் செய்வது தகுமோ ? புத்தியில்லாதவரே , உமது பரம்பரை மகிமையை கெடுக்கிறவரே, இப்பேர்ப்பட்ட வேலையை விட்டு செத்தவர்கள் தங்கள் செத்தவர்களை அடக்கம் செய்ய விடுவீராக என்பாள் . இதையும் மற்ற ஆத்திரமூட்டும் வார்த்தைகளை அவள் சொன்னாலும் அவர் தான் துவக்கிய நற்கிரியைகளை விட்டு விட்டாரல்ல.
சில வருஷத்துக்கு பிற்பாடு அந்தப் பெண் பிள்ளையானவள் இன்னும் நல்ல வயதுள்ளவலாய் இருந்தாலும் தக்க ஆயத்தத்தோடு மரணத்தை அடைந்தாள் . ஆயினும் தன்னுடைய சகோதரரான மலக்கியார் ஆத்துமாக்களைக் குறித்து செய்த நற்கிரியைகளை நகைத்ததினாலே சகலத்தையும் அறிந்த சர்வேசுரன் அவள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மிகவும் உபாதிக்கப்படத் தீர்வை விதித்தார் . அர்ச் மலக்கியாரோவென்றால் வெகு நாள் அவளது ஆத்துமத்தைக் குறித்து திவ்விய பூசை பண்ணி செபித்து தவங்களை நடப்பித்த பிற்பாடு , இந்த ஆத்துமம் ஈடேறி இருக்குமென்று எண்ணி ஒன்றும் செய்யாது போனார் . ஒரு மாதம் கடந்த பின்பு இந்த ஆத்துமம் துக்க வருத்தத்தோடு கோவிலிலே பிரகாசிக்கக் கூடாத வகையாய் அவருக்குக் காணப்பட்டு :" தேவரீர் ஒரு மாதம் முழுவதும் என் ஆத்துமத்திர்க்காய்ப் பூசை பண்ணாததினிமித்தம் நான் படுகிற வாதனைகளில் ஒரு ஆறுதலும் இல்லை என்றது . இந்த அற்சிஷ்டவர் இந்த ஆத்துமத்திற்காய் மீண்டும் பூசை பண்ணத் துவக்கினார் . சில காலத்துக்குப் பிறகு இந்த ஆத்துமம் கோவிலில் பிரவேசித்தாலும் பீடத்துக்குக் கிட்ட வரக்கூடாமல் இருக்கிறதை மேற்றிராணியார் கண்டார் .ஆனதினால் அவர் அநேக தான தருமங்களைச் செஇததுமல்லாமல் , இந்த ஆத்துமத்துக்காக மகா பக்தியோடு திவ்விய பூசையும் செய்து கொண்டு வந்தார் . கடைசியிலே இந்த ஆத்துமம் மேன்மையும் மகிமையுமான வஸ்திரம் அணிந்து மிகுந்த சந்தோஷ பிரதாபத்தோடு உத்தரிக்கிற ஸ்தலத்தை விட்டு மோட்சத்துக்கு போகிறதை இவர் தரிசித்தார்
அவரோவென்றால் வெகு வருஷ காலத்துக்கு தேவ ஊழியங்களை நடத்தின பிற்பாடு தாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் திரு நாளிலே அர்ச் பெர்னர்தூஸ் என்பவர் உண்டு பண்ணின சபைக்குத் தலையான ஸ்தலமாகிய மடத்தில் பாக்கியமான மரணத்தை அடைந்தார் . அத்திருநாளில் செய்யப்படும் எல்லா பூசைகளிலும் தர்மங்களிலும் வேண்டுதல்களிலும் தனக்கு பங்கு கிடைக்கும் பொருட்டாக அந்நாளிலே அவர் சாக விரும்பினதுமல்லாமல் அம்மடத்தில் இருக்கும் சகலமான சந்நியாசிகள் தமது ஆத்துமத்தைக் குறித்து பூசை முதலான தவ தர்மங்கள் செய்வார்கள் என்பதினாலே அவ்விடத்தில் தாம் மரிக்க ஆசித்துக் கொண்டிருந்தார் . அப்படியே தேவ சித்தத்தால் அவருக்கு சம்பவித்தது என்று அர்ச் பெர்னர்தூஸ் எழுதினார் .
நல்ல வித்திலிருந்து அநேகங் கிளைகள் கிளைத்து அதிக பலனைக் கொடுக்குமாப்போல , மேற்சொன்ன புதுமையினால் உங்களுக்கும் அநேக ஞானப் பிரயோசனம் வரத்தகும்.
முதலாவது அர்ச் மலக்கியாரின் சகோதரியானவள் அவர் ஆத்துமாக்களைக் குறித்து செய்யும் நற்கிருத்தியங்களை இகழ்ந்து பழித்ததினாலே இளம் வயதில் செத்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு காலமாய் வேதனைப் பட்டாளென்று கேட்டீர்களே , அவளுக்குச் சம்பவித்தாற்போல உங்களுக்கும் வராதபடிக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகத் திருச்சபையில் செய்யப்படும் பூசை மோட்ச விளக்கு முதலிய சுகிர்த ஆச்சாரங்களை நீங்கள் புறக்கணியாமல் இருக்கிறதுமல்லாமல்அர்ச் மலாக்கியாரைக் கண்டு பாவித்து இவைகளைப் பக்தி விசுவாசத்தோடு அனுசரித்துக் கொண்டு வரவேண்டும்
இரண்டாவது அர்ச் பெர்னர்தூஸ் சொன்னது போல திவ்விய பூசையானது பாவங்களைப் போக்கவும் பேயினங்களை ஜெயிக்கவும் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மோட்சத்தில் சேர்க்கவும் மிகவும் வல்லமையை இருக்கிறது என்கிறதினால் திவ்விய பூசையை அடிக்கடி காண வேண்டியதுமன்றி கூடுமேயானால் அதைச் செய்விக்க வேண்டும் (காணிக்கை கொடுத்தல்).
மூன்றாவது மேற்சொன்ன புண்ணியவதியினுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்து மீட்டு இரட்சிக்க அர்ச் மலக்கியார் அத்தனை பூசை முதலான தர்மங்களைச் செய்து கொண்டிருக்கையில் , அநேக பெரிய பாவங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறவர்கள் நல்ல ஆயத்தத்தோடு செத்திருந்தாலும் வெகுகாலம் உத்தரிக்காமல் ஈடேறுவார்கள் என்று நினைக்கத்தக்கதாய் இல்லை . ஆனதினாலே செத்துப் போன உங்களுடையவர்களைக் குறித்து நீங்கள் செபித்துப் பிரயாசைப்பட்டு ஒரு போதும் அந்த புண்ணியத்தை விடக்கூடாதென்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இப்படி தினந்தோறும் செபிப்பதே முறை
உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்கிறது திருச்சபையின் சத்திய விசுவாசமாம்
தியானம்
சேசுக்கிறிஸ்து நாதர் சுவாமி இவ்வுலகத்திற்கு எழுந்தருளி வரும் முன்னே வரைந்த வரிவேத புஸ்தகங்களினாலும் , அவருடைய ஸ்தானாதிபதிகளாய் இருந்த அப்போஸ்தலர்களுடைய நிருபங்களினாலும் வேதபாரகர் அனைவோரும் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று திருஷ்டாந்தமாய் ஒப்பித்துக் கொண்டு வந்ததினாலே , இவர்கள் சொல்லும் பரம நியாயங்களை இதிலே பற்றும் பற்றாய்க் காண்பிக்க வேண்டியதில்லை . துஷ்ட பதிதர்களை மறுப்பதற்கு இந்த நியாயங்களை அறிய வேண்டுமானால் இவைகளை வேத விளக்கமென்னும் புஸ்தகத்திலும் ஞான சஞ்சீவி என்னும் புஸ்தகத்திலும் இவை போன்ற பிற புத்தகங்களிலும் வாசிக்கக் காணலாம்
மேலும் சத்திய வேதத்தை எங்கும் போதித்து ஸ்தாபித்த அப்போஸ்தலர்கள் நாள் முதற்கொண்டு இந்நாள் மட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களுக்காக ஜெப வேண்டுதல்களையும் பூசை பலிகளையும் பண்ணுகிற சுகிர்த வழக்கம் பாரம்பரியமான முறையாய் நடந்ததுமல்லாமல் ,அந்தந்த காலத்திலே விளங்கின வேதபாரகரும் , கிரந்த கர்த்தாக்களும் , தெய்வீக சாஸ்திரிகளும் இந்த முறைமையை பக்தி வணக்கத்துடன் அனுசரிக்க வேண்டுமென்று கற்பித்துக் கொண்டு வந்தார்கள் என்கிரதர்க்குச் சற்றாகிலும் சந்தேகப்பட இடமில்லை . அர்ச் இராயப்பருக்குச் சீடராய் இருந்த அர்ச் சாந்தப்பர் என்னும் பாப்பனவர் பிரசித்திபடுத்தின அப்போஸ்தலிக்கக் கட்டளைகளின் எட்டாம் அதிகாரத்தில் சொல்லுகிறதாவது : சர்வேசுரனுடைய சமாதானத்தில் மரித்த நமது சகோதரருடைய ஆத்துமாக்களுக்கு ஆண்டவர் கிருபை செய்து அவர்கள் பாவங்களைப் பொறுத்து அவர்களைப் பிதாப் பிதாவான ஆபிரகாமுடைய மதியான மோட்சத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுவோமாக என்று சொன்ன பிற்பாடு அவர்களைக் குறித்து ஒரு நேர்த்தியான ஜெபத்தை எழுதி வைத்திருக்கிறார் .
நூற்றைம்பதாம் ஆண்டில் இருந்த தெர்த்துல்லியன் என்பவர் : பெண்ஜாதியானவள் செத்த தன புருஷனுடைய ஆத்துமத்திற்காக வேண்டிக் கொள்ள வேணுமென்கிற கவலையின்றி மறு கலியாணம் பண்ணுகிறது தகாது என்றார்
நூற்றைம்பதாம் ஆண்டில் மகா சாஸ்திரியான ஒரிஜென்என்பவர் எழுதினதாவது : இவ்வுலக யுத்தத்தில் இருந்து மறு லோகத்துக்குப் போகிறவன் உத்தரிக்க வேண்டி இருப்பதால் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது கடனும் பிரயோசனமும் உள்ள வழக்கமாம் என்கிறார்
முன்நூற்றைம்பதாம் ஆண்டில் மகா சாஸ்திரியாகவும் அர்மேனியா தேசத்தில் சத்திய வேத விளக்காகவும் துலங்கின அர்ச் எபிரேம் என்பவர் சாகப் போகிற தருணத்தில் தனக்கு அருகே இருந்த தன் சீடரை நோக்கி :" என் பிரியமுள்ள பிள்ளைகளே , மரிக்கப் போகிற உங்களுடைய தகப்பனாராகிய எனக்குக் கடைசி உபசரணை செய்ய வாருங்கள் . என் சரீரத்துக்குப் பரிமளங்களைக் கொடுக்க வேண்டாம். ஆனால் நான் சர்வேசுரனிடத்தில் கிருபை அடையும் பொருட்டு தேவ சங்கீதங்களைப் பாடிக் கண்ணீர் சொரிந்து என் ஆத்துமத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள் . இனிமேல் கோவிலில் நீங்கள் கூடும்போது எப்போதும் என்னை மறவாமல் எனக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் என்றார்
அர்ச் அமிர்தநாதரோவென்றால் "எனக்கு மகனும் ஆண்டவருமான தேயோதோசியூஸ் இராயனுடைய ஆத்துமத்தை மோட்சத்தில் பிரவேசிக்கப் பண்ணுமளவும் என்னுடைய செபங்களையும் தபங்களையும் அழுகையையும் தவக்கிரியைகளையும் விட்டு விடுகிறதில்லை என்றார்
தமது தாயாரான அர்ச் மோணிக்கம்மாள் செத்த பிற்பாடு அர்ச் அகுஸ்தீன் எழுதின சுகிர்த வாக்கியமாவது :" எனக்கு மகிமையும் உயிருமாய் இருக்கிற என் சர்வேசுரா ! இப்போது என்னுடைய தாயாரின் புண்ணியங்களை உம்மிடம் விவரித்துப் பேசாமல் , அவளுடைய பாவங்களுக்காக உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன் . அவள் பேரில் இரக்கமாயிரும் , இரக்கமாயிரும் சுவாமி . அவளுக்குக் கடின தீர்வை இடாதேயும் . கர்த்தாவே , அவள் மரிக்கப் போகிற தருணத்தில் தன்னுடைய சரீரத்தை நினைக்கவுமில்லை , அதற்கு மகிமையான அடக்கத்தைப் பண்ண கேட்டதுமில்லை என்று நினைத்தருளும் . திவ்விய பூசையிலே பாவங்களைப் போக்குகிற பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறதை அறிந்து ,அந்த திவ்விய பூசையில் தன்னை நினைக்க வேண்டுமென்று மாத்திரமே கேட்டுக் கொண்டாள். அதனால் என் ஆண்டவரான சர்வேசுரா ! இப்போது நான் எழுதினவைகளை வாசிக்கப் போகிற உமது ஊழியரும் என் சகோதரருமான சகலரும் உமது அடியாளாகிய மோனிக்கா என்ற அம்மாளை நினைத்து அவளது ஆத்துமத்துக்காக வேண்டிக் கொள்ளும்படி கிருபை செய்தருளும் என்று எழுதி வைத்தார் . மேலும் இந்த மகா சாஸ்திரியானவர் மரித்தவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளை குறித்து ஒரு நேர்த்தியான புத்தகத்தையும் எழுதி வைத்தாராம்
இது அளவின்றி விரியுமென்று அஞ்சி , அர்ச் கிரிசோஸ்தோமுஸ் ,அர்ச் எரோணிமூஸ் , அர்ச் பசிலியார் , அர்ச் சிரில், அர்ச் கிரகோரியார் முதலான பழைய வேதபாரகர் எழுதினவைகளை விவரித்துக் காட்டாமல் முன் சொன்னது புத்தியுள்ளவர்களுக்குப் போதும் என்று நினைத்திருக்கிறோம் . இப்போது சொன்னபடி அப்போஸ்தலர் நாளில் இருந்தவர்கள் துவக்கி இந்நாள் வரைக்கும் வழங்கின வேதபாரகர் எல்லோரும் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது திருச்சபை முறைமை என்று எழுதியதை மறுத்தவர் ஒருவருமில்லாமையால் , அப்போஸ்தலர் படிப்பினையால் துவக்கி திருச்சபையில் வழங்கின முறைமை இதுவேயென்று சொல்லக் கடவோம் . ஆயினும் உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாமல் இருந்தால் செத்தவர்களுக்காகச் செய்யும் வேண்டுதல் அபத்தம் தானே ? ஆகையால் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது அப்போஸ்தலர் படிப்பினையால் வந்த திருச்சபையின் முறைமை எனக் கொள்ள , உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று அப்போஸ்தலர் படிப்பித்தது சத்திய விசுவாசமல்லோ ?
கடைசியில் சத்தியம் வழுவாத திருச்சபையின் விசுவாசம் அதன் மட்டில் ஏதென்று நன்றாக அறியத்தக்கதாக புளோரன்ஸ் என்கிற பட்டணத்தில் கூடின சகல மேற்றிராணிமார்களுடைய சங்கத்தில் பிரசித்தி படுத்தப்பட்ட தீர்மானத்தைக் கேட்கக் கடவீர்கள் :" மெய்யான மனஸ்தாபப்பட்டு பாவிகள் தவக்கிரியைகளினால் தங்களுடைய பாவங்களுக்கு இவ்வுலகத்தில் பரிகாரம் பண்ணும் முன்னே செத்தால் , அவர்களுடைய ஆத்துமங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளில் சுத்திகரிக்கப்படும் .அப்போது இந்த ஆத்துமாக்களை உயிருள்ள கிறிஸ்தவர்களுடைய மன்றாட்டினால் மீட்டு இரட்சிக்கக்கூடும் என்பது மெய்யான சத்தியம் என்கிறதினால், அவைகளைக் குறித்து திவ்விய பூசை பண்ணுகிறதும் , ஜெபன்களைப் பொழிகிறதும், பிச்சைகளை இடுகிறதும் , மற்ற தருமங்கள் செய்கிறதும் திருச்சபையினுடைய வழக்கமும் கட்டளையுமாமே . அதல்லாமலும் 1583 ஆம் ஆண்டில் திரிதெந்தென்னும் நகரில் கூடின மிகவும் பேர் பெற்ற சமஸ்த சங்கத்தில் ,மேற்றிராணிமார்கள் உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்றும் திருச்சபையின் விசுவாசம அதுஎன்றும் சொன்ன பிற்பாடு இந்தப் பரம சத்தியத்தை குருக்கள் எல்லோரும் தங்கள் விசாரணைக் கிறிஸ்துவர்களுக்குக் குறைவின்றிப் போதித்து அவர்கள் அதைச் சரிவர ஒத்துக் கொள்ளும்படியாய்ச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்
கிறிஸ்தவர்களே ! இப்போது விவரித்துக் காண்பித்த உதாரணங்களினால் உங்களுடைய விசுவாசத்தில் சற்றாகிலும் தத்தளிக்காமல் நிலைத்து நிற்க வேண்டியதுமன்றியே மேன்மேலும் உங்களுடைய சுகிர்த மன்றாட்டுகளினாலும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாளுக்கு ஆறுதல் வருவித்து உதவியைச் செய்யக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
நித்திய பிதாவே ! பெற்றோர் பந்துக்கள் சிநேகிதர் உபகாரிகள் முதளியவர்களைத் தக்க விதமாய் நேசித்து அவர்களுக்கு வேண்டிய நன்மை சேயைக் கற்பித்தருளினீரே , ஆகையால் எங்களைப் பெற்று அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் பற்பல உபசாரம் எங்களுக்குச் செய்தவர்களும் எங்கள் பந்துக்கள் சிநேகிதர் முதலானவர்களும் வேதனை நீங்கி நித்திய காலம் உம்மை சந்தோசமாய் தரிசித்துக் கொண்டிருக்க தேவரீர் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது :
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிச்சைக்காரருக்குப் பிச்சை கொடுக்கிறது
புதுமை
எண்ணூறு வருஷத்துக்கு முன்னே வழுவாத பக்தி விசுவாசத்தாலும் தேர்ந்த சாஸ்திர படிப்பாலும் செய்த மட்டற்ற அற்புதங்களினாலும் பிரபலயமான பேர்பெற்ற அர்ச் பெர்னர்தூஸ் என்கிறவர் விளங்கிக் கொண்டிருந்தார் . அவர் உண்டு பண்ணி பிரசித்திபடுத்தின சுகிர்த புஸ்தகங்களில் அர்மாக்குப் பட்டணத்தின் மேற்றிராணியாரான அர்ச் மலக்கியாருடைய சரித்திரத்தை இன்பம் நிறைந்த சொற்களோடு எழுதி வைத்தார் . இந்த மேற்றிராணியார் தான் ஜீவித்த நாளெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் மிகுந்த பக்தி இரக்கமாய் இருந்து அவர்களுக்கு உதவி பண்ண தம்மாலே செய்யக் கூடுமான புண்ணியம் எல்லாவற்றையும் செய்வார் . அவர் குருவாகுமுன்னே மரித்த எளியவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஆறுதல் வருவிக்கத்தக்கதாக வேண்டிக் கொள்ளுகிறதுமல்லாமல்அவர்களுடைய அடக்கத்துக்கும் போவார் . சில சமயங்களில் அவர்களைத் தம் கரங்களினாலே வேண்டிய பணிவிடை செய்து அடக்கம் பண்ணுவார் . அவர் இந்த தர்ம கிரியைகளைச் செய்யுமிடத்தில் இவ்வுலக செல்வ மகிமையின் பேரில் மிகவும் பற்றுதலாய் இருந்த மதலேனம்மாள் என்னும் அவருடைய சகோதரியான ஒருத்தி அவரை நகைத்துச் சொன்னதாவது : உயர்ந்த கோத்திரத்திலே பிறந்த உமக்கு இந்த நீசத் தொழிலைச் செய்வது தகுமோ ? புத்தியில்லாதவரே , உமது பரம்பரை மகிமையை கெடுக்கிறவரே, இப்பேர்ப்பட்ட வேலையை விட்டு செத்தவர்கள் தங்கள் செத்தவர்களை அடக்கம் செய்ய விடுவீராக என்பாள் . இதையும் மற்ற ஆத்திரமூட்டும் வார்த்தைகளை அவள் சொன்னாலும் அவர் தான் துவக்கிய நற்கிரியைகளை விட்டு விட்டாரல்ல.
சில வருஷத்துக்கு பிற்பாடு அந்தப் பெண் பிள்ளையானவள் இன்னும் நல்ல வயதுள்ளவலாய் இருந்தாலும் தக்க ஆயத்தத்தோடு மரணத்தை அடைந்தாள் . ஆயினும் தன்னுடைய சகோதரரான மலக்கியார் ஆத்துமாக்களைக் குறித்து செய்த நற்கிரியைகளை நகைத்ததினாலே சகலத்தையும் அறிந்த சர்வேசுரன் அவள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மிகவும் உபாதிக்கப்படத் தீர்வை விதித்தார் . அர்ச் மலக்கியாரோவென்றால் வெகு நாள் அவளது ஆத்துமத்தைக் குறித்து திவ்விய பூசை பண்ணி செபித்து தவங்களை நடப்பித்த பிற்பாடு , இந்த ஆத்துமம் ஈடேறி இருக்குமென்று எண்ணி ஒன்றும் செய்யாது போனார் . ஒரு மாதம் கடந்த பின்பு இந்த ஆத்துமம் துக்க வருத்தத்தோடு கோவிலிலே பிரகாசிக்கக் கூடாத வகையாய் அவருக்குக் காணப்பட்டு :" தேவரீர் ஒரு மாதம் முழுவதும் என் ஆத்துமத்திர்க்காய்ப் பூசை பண்ணாததினிமித்தம் நான் படுகிற வாதனைகளில் ஒரு ஆறுதலும் இல்லை என்றது . இந்த அற்சிஷ்டவர் இந்த ஆத்துமத்திற்காய் மீண்டும் பூசை பண்ணத் துவக்கினார் . சில காலத்துக்குப் பிறகு இந்த ஆத்துமம் கோவிலில் பிரவேசித்தாலும் பீடத்துக்குக் கிட்ட வரக்கூடாமல் இருக்கிறதை மேற்றிராணியார் கண்டார் .ஆனதினால் அவர் அநேக தான தருமங்களைச் செஇததுமல்லாமல் , இந்த ஆத்துமத்துக்காக மகா பக்தியோடு திவ்விய பூசையும் செய்து கொண்டு வந்தார் . கடைசியிலே இந்த ஆத்துமம் மேன்மையும் மகிமையுமான வஸ்திரம் அணிந்து மிகுந்த சந்தோஷ பிரதாபத்தோடு உத்தரிக்கிற ஸ்தலத்தை விட்டு மோட்சத்துக்கு போகிறதை இவர் தரிசித்தார்
அவரோவென்றால் வெகு வருஷ காலத்துக்கு தேவ ஊழியங்களை நடத்தின பிற்பாடு தாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் திரு நாளிலே அர்ச் பெர்னர்தூஸ் என்பவர் உண்டு பண்ணின சபைக்குத் தலையான ஸ்தலமாகிய மடத்தில் பாக்கியமான மரணத்தை அடைந்தார் . அத்திருநாளில் செய்யப்படும் எல்லா பூசைகளிலும் தர்மங்களிலும் வேண்டுதல்களிலும் தனக்கு பங்கு கிடைக்கும் பொருட்டாக அந்நாளிலே அவர் சாக விரும்பினதுமல்லாமல் அம்மடத்தில் இருக்கும் சகலமான சந்நியாசிகள் தமது ஆத்துமத்தைக் குறித்து பூசை முதலான தவ தர்மங்கள் செய்வார்கள் என்பதினாலே அவ்விடத்தில் தாம் மரிக்க ஆசித்துக் கொண்டிருந்தார் . அப்படியே தேவ சித்தத்தால் அவருக்கு சம்பவித்தது என்று அர்ச் பெர்னர்தூஸ் எழுதினார் .
நல்ல வித்திலிருந்து அநேகங் கிளைகள் கிளைத்து அதிக பலனைக் கொடுக்குமாப்போல , மேற்சொன்ன புதுமையினால் உங்களுக்கும் அநேக ஞானப் பிரயோசனம் வரத்தகும்.
முதலாவது அர்ச் மலக்கியாரின் சகோதரியானவள் அவர் ஆத்துமாக்களைக் குறித்து செய்யும் நற்கிருத்தியங்களை இகழ்ந்து பழித்ததினாலே இளம் வயதில் செத்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு காலமாய் வேதனைப் பட்டாளென்று கேட்டீர்களே , அவளுக்குச் சம்பவித்தாற்போல உங்களுக்கும் வராதபடிக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகத் திருச்சபையில் செய்யப்படும் பூசை மோட்ச விளக்கு முதலிய சுகிர்த ஆச்சாரங்களை நீங்கள் புறக்கணியாமல் இருக்கிறதுமல்லாமல்அர்ச் மலாக்கியாரைக் கண்டு பாவித்து இவைகளைப் பக்தி விசுவாசத்தோடு அனுசரித்துக் கொண்டு வரவேண்டும்
இரண்டாவது அர்ச் பெர்னர்தூஸ் சொன்னது போல திவ்விய பூசையானது பாவங்களைப் போக்கவும் பேயினங்களை ஜெயிக்கவும் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மோட்சத்தில் சேர்க்கவும் மிகவும் வல்லமையை இருக்கிறது என்கிறதினால் திவ்விய பூசையை அடிக்கடி காண வேண்டியதுமன்றி கூடுமேயானால் அதைச் செய்விக்க வேண்டும் (காணிக்கை கொடுத்தல்).
மூன்றாவது மேற்சொன்ன புண்ணியவதியினுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்து மீட்டு இரட்சிக்க அர்ச் மலக்கியார் அத்தனை பூசை முதலான தர்மங்களைச் செய்து கொண்டிருக்கையில் , அநேக பெரிய பாவங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறவர்கள் நல்ல ஆயத்தத்தோடு செத்திருந்தாலும் வெகுகாலம் உத்தரிக்காமல் ஈடேறுவார்கள் என்று நினைக்கத்தக்கதாய் இல்லை . ஆனதினாலே செத்துப் போன உங்களுடையவர்களைக் குறித்து நீங்கள் செபித்துப் பிரயாசைப்பட்டு ஒரு போதும் அந்த புண்ணியத்தை விடக்கூடாதென்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இப்படி தினந்தோறும் செபிப்பதே முறை
நான்காம் தேதி
உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்பது உள் நியாயங்களினால் காணப்படுகிற சத்தியமாம்
தியானம்
மதிகெட்ட மனுஷன் ஒருவன் தன்னைப் பெற்ற தாய் தகப்பனைக் கோபித்து அடித்து வெட்டிக் கொலை செய்கிறான் . அவன் கட்டிக் கொண்ட பாவம் எவ்வளவு கொடியதென்று சொல்லிலும் நினைவிலும் அடக்கும் தன்மையல்ல . மற்றொருவன் ஒரு கத்தரிப்பிஞ்சு திருடுகிறான் . இவன் செய்த குற்றம் தாய் தகப்பனைக் கொன்றவன் பண்ணின துரோகத்திற்கு எவ்வளவு தூர வித்தியாசம் ! மோக வெறி கொண்ட சண்டாளனான பாவி ஒருவன் பல தந்திர உபாயங்களைத் தேடி தனது சிநேகிதனுடைய பெண்ஜாதியை மோசப்படுத்துகிறான் . இதை எல்லோரும் பெரிய தோஷ துரோகம் என்பார்கள் . வேறொருவன் தன் மனதிலே தோன்றிய ஆகாத விசாரங்களை உடனே தள்ளாமல் சொற்ப நேரம் அசத்தையாய் இருக்கிறான் . இவன் இப்படிப் பண்ணின குற்றம் அந்த சண்டாளன் பண்ணின துரோகத்துக்குச் சரி என்று சொல்வாருண்டோ ? ஒருவன் தன் விரோதியைக் கெடுக்க வேண்டும் என்கிற ஆசையினாலே அவன் பேரில் இல்லாத குற்றத்தைச் சாட்டி, பொய் சாட்சிகளை ஏற்படுத்தி பல முகாந்தரங்களையும் ,அத்தாட்சிகளையும் பிறப்பித்து அவனுக்கு மரண தீர்வை வரப்பண்ணுகிறான். இதை போல அநியாய துஷ்டத்தனம் வேறு உண்டோ ? மற்றொருவன் விளையாட்டுக்கு ஒரு சொற்பப் பொய்யைச் சொல்லுகிறான் . இந்தக் குற்றம் அந்த பாதக தோஷத்துக்கு நிகரான தோஷமென்று சொல்லுவார் உண்டோ ?
இது இப்படி இருக்க , எந்த மனுஷரும் பெரிய பாவங்களும் சொற்ப பாவங்களும் உண்டென்று சுபாவ புத்தியினால் அறிந்து சொல்லுவார்கள் என்பதற்க்குச் சந்தேகமில்லை . மேற்சொன்ன பாவங்களைக் கட்டிக் கொண்டவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்யாமலும் உத்தம மனச்தாபப்படாமலும் திடீரெனச் சாகிறார்கள் . சர்வ நீதி நிறைந்த கடவுளாகிய சர்வேசுரன் அவர்களை என்ன செய்வார் ? ஒருமிக்க அவர்களை தீயெரி நரகத்தில் தள்ளி விடுவாரோ ? பெரிய தோஷ துரோகங்களைக் கட்டிக் கொண்டவர்களைப் போலவே அற்பப் பொய் அற்பத் திருட்டு என்கிற சொற்ப குற்றங்களையும் செய்தவர்களையும் தண்டிப்பாரோ ? அப்படிச் செய்வது அவரது நீதிக்கும் தயவுக்கும் ஏற்குமோ ? அது நியாயம் இல்லை என்று யாவருக்கும் காணப்படுகிற சத்தியமாமே . அதனால் மனம் திரும்பாத மூர்க்கரான பாவிகளை என்றென்றைக்கும் வேதனைப்பட நித்திய நரகத்துக்கு நீதியான சர்வேசுரன் அனுப்பும்போது சொற்ப குற்றங்களோடு செத்தவர்களை அப்படிச் சபித்துத் தள்ள மாட்டார் . ஆயினும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் எந்த குற்றத்தொடும் ஒருவராவது பிரவேசிக்கக் கூடாது என்கிறதினாலே, இந்த சொற்ப பாவத்தோடு சாகிறவர்கள் அவ்விடத்துக்கு உடனே போகாமல் தாங்கள் சுத்தராகும் மட்டும் ஒரு நாடு ஸ்தலத்திலே நிறுத்தப்படுவார்கள் என்று சொல்ல வேண்டியுள்ளது . செத்த பிற்பாடு நரகத்தைப் பெருவிக்கும் பாவமும் மோட்சத்தை வருவிக்கும் புண்ணியமும் செய்ய இடமும் காலமும் இல்லாததினாலே , இந்த ஆத்துமாக்கள் கெட்டுப் போக மாட்டார்கள் . யாதொரு பேறு பலன்களைப் பெற்றுக் கொள்ளவும் மாட்டார்கள் . ஆகையால் தங்களுடைய குற்றங்களுக்குத் தக்க ஆக்கினைகளை அனுபவித்து சுத்திகரப்படுவார்கள் அல்லாமல் மற்றபடியல்ல . இந்த ஆத்துமாக்கள் ஆக்கினைப்படுகிற இடம் உத்தரிக்கிற ஸ்தலம் எனப்படும்
மேலும் சொற்பக் குற்றங்களோடு செத்தவர்களைத் தவிர அநேகர் சாவான பாவங்களைக் கட்டிக் கொண்ட பிற்பாடு பாவசங்கீர்த்தனத்தால் ஆனாலும் உத்தம மனஸ்தாபத்திலென்கிலும் இந்த பாவத்திற்கு மன்னிப்பை அடைந்த பின் சாகிறார்களே , அவர்கள் மட்டில் அறிய வேண்டிய சத்திய விசேஷமென்னவென்றால் : மனம் பொருந்திச் செய்த சாவான பாவத்தால் பாவிக்கு இரண்டு கேடுண்டாம் . அதாவது : பாவதோஷமும் அபராதக் கடனும் இவ்விரண்டுமாம் . பாவியானவன் பாவதோஷத்தால் இஷ்டப்பிரசாதத்தை இழந்து சர்வேசுரனுக்குத் துரோகி ஆகிறான் . அபராதக் கடனோவெனில் இரண்டுண்டாம் : நரகத்துக்குப் போக நித்திய அபராதக் கடனும் அநித்திய அபராதக் கடனும் நீங்காததினாலே என்றென்றைக்கும் நரகத்தில் வேகக் கடனுண்டாம் . அந்தப் பாவதோஷம் பாவசங்கீர்த்தனத்தினாலாவது மெய்யான மனஸ்தாபத்தினாலாவது தீர்ந்தால் நித்திய நரகத்திற்குப் போக இருக்கிற அபராதக் கடனும் தீரும்; ஆனாலும் இந்தப் பாவத்துக்குச் செலுத்த வேண்டிய அநித்திய அபராதக் கடன் தீராது .
இந்த அபராதத்தை இவ்வுலகத்தில் தான் செலுத்த வேண்டும் என்று இருந்தாலும் அநேகர் இதைச் சரிவரச் செலுத்தாமல் மரிக்கிறார்களே, அவர்கள் இஷ்டப்பிரசாதத்தோடே சாகிறதினால் நித்திய நரகத்துக்குத் தள்ளப்படுகிறதில்லை. ஆயினும் பாவத்துக்குச் செய்ய வேண்டிய அநித்திய அபராதத்தை அவர்கள் செலுத்தாமல் இருக்கிறதினால் அவர்கள் மோட்சத்துக்குப் போகிறதுமில்லை. அதனால் அவர்கள் தங்களுடைய பாவங்களுக்குச் செலுத்த வேண்டிய அபராதத்தையும் செலுத்துவதற்கு ஓரிடம் இருக்க வேண்டியதல்லவோ ? அதிலே முன் சொன்ன பிரகாரமே , பேறுபலன்களை அடையவும் , புண்ணியத்தைச் செய்யவும் காலமில்லாததினாலே தாங்கள் அனுபவிக்கும் வேதனைகளால் அந்த பரிகார அபராதத்தைச் செலுத்த வேண்டும் . இப்பொழுது சொன்னதெல்லாம் புத்தியுள்ள எந்த மனுஷனுக்கும் சரியான நியாயமுமாய் தேவ நீதிக்கும் தேவ கிருபைக்கும் ஏற்புடைய நடவடிக்கையுமாய்க் காணப்படுமல்லோ?
சர்வேசுரன் அருளிச் செய்த கற்பனைகளெல்லாம் இரண்டு கற்பனைகளுக்குள் அடங்கி இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமே . அதாவது : தேவ சிநேகமும் , பிறர் சிநேகமும், இவ்விரண்டு கற்பனையாம் . மற்றவர்கள் எல்லோரையும் தன்னைத்தான் நேசிப்பது போல நேசிக்க வேண்டுமென்று இருந்தாலும் , பந்து ஜனங்களையும் ,சிநேகிதர் உபகாரிகளையும் , மற்ற யாவரையும் அதிகமாய் நேசிக்க வேணுமல்லவா ? இந்த விசேஷ சிநேகமும் பொதுவாகப் பிறர் சிநேகமும் சாவினால் அற்றுப் போகுமோ ? அப்படிச் சொல்லவும் நினைக்கவும் கூடாது . அதிலே நாம் நேசித்துச் செத்தவர்களுக்கு யாதொரு நன்மையையும் சகாயமும் செய்ய கூடுமானால் இதை மகா பிரியத்துடனே செய்வோம் என்பதில் சந்தேகம் உண்டோ ? ஆண்டவருடைய மட்டில்லாத கிருபை தாளத்தை நம்பி அப்படிச் செய்யலாமென்று நாம் நினைத்து நம்முடைய ஜனங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் படும் ஆக்கினைகளை அமர்த்தவும் , குறைக்கவும் , முடிக்கவும் , வேணுமென்கிற ஆசையினாலே ஜெபங்களைப் பொழிவோம் , பிச்சைகளைத் தருவோம் . தவத்தைச் செய்வோம் . திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கப் பண்ணுவோம்
அப்படி அவர்கள் நம்முடைய ஜெப தப தான தருமத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்பத்துக்குச் சேர்ந்த பிற்பாடு , நம்மை மறவாமல் சர்வேசுரனிடத்திலே நமக்காக வேண்டிக் கொள்ளுவார்கள் என்கிற நம்பிக்கையானது சந்தோசம் நிறைந்த சத்திய விசுவாசமாம் . இவ்வாறு இன்னும் இவ்வுலகத்திலே ஜீவிக்கிறவர்களும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிறவர்களும் மோட்சத்திலே வாழுகிறவர்களும் தங்களுக்குள் விடாத சிநேகமும் முறியாத பந்தமுமாய் இருக்கிறார்கள் என்று புத்தியினாலே போதிக்கப்பட்ட சத்திய விசுவாசமென்று அறியக் கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா ! ஜீவியர்கள் மேலும் மரித்தவர்கள் மேலும் செங்கோன்மை செலுத்தி விசுவாசத்தாலும் நற்கிரியைகளாலும் உமது பட்சமாவார்கள் என்று தேவரீர் முன் தெரிந்த சமஸ்தருக்கும் தயையுள்ளவராய் இருக்கிறீர் . நாங்கள் யாருக்காக செபித்து மன்றாடுகிறோமோ, அவர்கள் எல்லோரும் சரீர சம்பந்தத்தோடு இவ்வுலகில் இருக்கின்றவர்களாயினும் சரீரத்தை விட்டு மறுவுலகில் சென்றவர்களாயினும் சகல அற்சிஷ்டவர்களுடைய வேண்டுதலாலும் உமது நன்மைப் பெருக்கத்தின் கிருபா கடாட்சத்தினாலும் பாவப் பொறுத்தலை அடையத்தக்கதாக தேவரீரைப் பிரார்த்திக்கிறோம் சுவாமி ஆமென்
இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஐம்பத்து மூன்று மணி செபம் சொல்லுகிறது
புதுமை
உத்தரிக்கிற ஸ்தலம் இல்லை என்றும் செத்த ஆத்துமாக்களுக்கும் உயிரோடிருக்கும் ஆத்துமாக்களுக்கும் பந்தமில்லை என்றும் இந்த ஆத்துமாக்களுக்கு மனுஷராலே ஆறுதல் வரப்போகிறதில்லை என்றும் துஷ்டப் பதித்தார் சொல்லுமிடத்தில் தங்களுடைய புத்தியீனத்தைக் கான்பிக்கிறதும் தவிர அவர்கள் மகா கொடுமையுள்ளவர்களாய் எண்ணப்படுகிறார்கள் என்கிறதற்குச் சந்தேகமில்லை . மரித்த தாய் தகப்பனுக்குப் பிள்ளைகளும், இறந்த புருஷனுக்குப் பெண்சாதியும், செத்த தமையனுக்கு தம்பியும் , உயிர்விட்ட சிநேகிதனும் , யாதொரு உதவி ஒத்தாசை பண்ணக் கூடாதென்று இந்த பதிதர் சொல்லும் பொய் பிரச்சாரம் எந்த மனுஷனுக்கு சரியென்றும் நியாயமென்றும் காணப்படும் ?
ஸ்கோசியா இராஜ்ஜியத்தில் பெரும் செல்வந்தரான இரண்டு சகோதரிகள் இருந்தார்கள் . அவர்களுக்குள்ளே சரி சமானமான குணமும் , உற்ற நேசமும் இருந்ததினாலே இருவரும் ஒரே உயிர் போலவும் ஒரே சரீரம் போலவும் பிரிந்து போகாமல் எப்போதும் கூட இருப்பார்களாம் . ஆனால் இவ்விருவர் பதிதர் மதத்தில் பிறந்து வளர்ந்ததினாலே வேறொன்றையும் அறியாமல் அதைத் தான் கூடிய மட்டும் அனுசரிப்பார்கள் . ஒரு விசேச நாளிலே இவர்களும் சில சிநேகிதர்களும் ஒரு பெரிய விருந்து செய்து ஆசனத்தில் உட்கார்ந்து சந்தோசமாய்ச் சாப்பிடும்போது இளையவன் திடீரென்று மூர்ச்சையாய் விழுந்து செத்தான் . செத்தவனுடைய அண்ணனானவன் தன் தம்பியினுடைய உயிரில்லாத பிரேதத்தைக் கண்டு சொல்லில் அடங்காத துக்கம் அனுபவித்ததுமல்லாமல் அதற்கப்பால் ஒரு சந்தோசமும் மன இரம்மியமும் அற்ப ஆறுதலும் அடைந்தானில்லை . இரவும் பகலும் தன் தம்பியின் ரூபத்தைக் கண்டாற்போலே கவலைப்பட்டு பிரலாபித்து ஓயாமல் கண்ணீர் சொரிவான் . தம்பியானவன் மறு லோகத்தில் நன்றாய் இருக்கிறானென்று நம்பிக்கை இருந்ததால் கொஞ்சம் பிழைப்பேனென்று அண்ணன் நினைத்தாலும் , பதித்த மார்க்கத்தை உண்டு பண்ணின லூத்தர் என்கிறவன் உத்தரிக்கிற ஸ்தலம் இல்லை என்று தள்ளி இருந்ததினாலே பதிதனான இந்த மனுஷனுக்கு நம்பிக்கை இல்லாதிருந்தது
அதனால் அவன் தன்னுடைய தம்பி யாதொரு ஆயத்தமில்லாமல் திடீர் மரணமடைந்து நீதியுள்ள சர்வேசுரனுடைய தீர்வைக்குப் போனதை நினைக்கும் போது அவனுக்கு அதிக பயமும் கவலையும் கஸ்தியும் உண்டாயிருந்தது . நாள் பட இந்த நினைவினாலே அவனுக்கு பகலிலே அமைதியும் இரவிலே நித்திரையும் மனதிலே சந்தோசமும் இல்லாததினால் அதிக வருத்தப்பட்டு வியாதியாய் விழுந்தான் . அப்போது அவனுடைய சிநேகிதரும் , பந்து ஜனங்களும் அவனுக்குப் பல பராக்குகளும் வெவ்வேறான சிந்தனைகளும் வரும்படி வெளியூருக்கு அனுப்பினார்கள் . பிரான்சு இராஜ்ஜியத்திற்கு வந்து அதில் ஒரு குருசாமியாரைத் தற்செயலாய்க் கண்டு அவருக்குத் தன் தம்பி செத்த வகையையும் அதனாலே தனக்கிருக்கும் தீராத கவலையையும் அறிவித்து " உங்களுக்காவது நம்பிக்கையுண்டு , செத்த உங்கள் சிநேகிதரைக் குறித்து நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறீர்களே , அய்யய்யோ ! எங்களுக்கு அந்த நம்பிக்கையும் இல்லை ,அப்படி வேண்டிக் கொள்ளுகிறதர்குப் பலமும் இல்லை " என்றான்
குருசுவாமியார் அவனுக்கு இரங்கி நல்ல வார்த்தைகளைச் சொல்லி :" நீரே ஏக சத்தியமான கத்தோலிக்க மதத்தைக் கைக்கொள்ளுவீரேயானால், உமக்கு நம்பிக்கை வரும் , செபத்தினாலே உருவாகும் திருப்தியும் கிடைக்கும் என்றார் . இதைக் கேட்டு அந்த நல்ல வாலிபன் தனக்கு நம்பிக்கையும் சந்தோசமும் வரும் பொருட்டு சத்திய வேதத்தினுடைய நியாயங்களையும் திருஷ்டாந்தங்களையும் படித்து நன்றாகக் கற்றுக் கொண்ட பின் குருசுவாமியிடத்திலே வந்து :" எல்லாம் தீர்மானித்தாயிற்று . நான் இப்போது கத்தோலிக்க கிறிஸ்தவனாய் இருக்கத் தீர்மானித்திருக்கிறேன் . என்னுடைய தம்பி ஆத்துமத்தைக் குறித்து நான் வேண்டிக் கொள்ளக் கூடும்போது என்னுடைய நிர்பாக்கியம் நீங்கும் அவனுக்கு மோட்ச பாக்கியத்தை தரவேண்டுமென்று தினம் தினம் ஆண்டவரைப் பிரார்த்தித்துக் கொண்டு சீவிப்பேன் . மெய்யாகவே திருச்சபையானது மனுஷனுடைய சுபாவத்தையும் குணா குணங்களையும் நன்றாய் அறிந்ததினாலே இவ்வுலகத்தின் எல்லையிலே உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்று போதித்துக் கொண்டு வருகிறது . அதிலே என் தம்பியினுடைய ஆத்துமமும் ஒருவேளை இருக்கக் கூடுமே , அவனுக்காக எப்போதும் வேண்டிக் கொள்ளுகிறதே எனக்கு எவ்வளவோ ஆறுதலாய் இருக்கும் அதனாலே நான் கிறிஸ்தவனாய் இருக்கத் தீர்மானித்தேன் என்றான் . இவ்வாறு அவன் சத்திய வேதத்தைக் கைக் கொண்டு தன் ஆத்துமத்திற்குச் சந்தோசமும் நம்பிக்கையும் அடைந்து நல்ல கிறிஸ்தவனாக நடந்தான்
செட்டியானவன் எந்த வியாபாரத்திலும் இலாபம் தேடிக் கொண்டு வருகிறதைப் போலே நீங்களும் கிறிஸ்தவர்களே ! மேற்சொன்ன புதுமையினாலே உங்களுக்கு ஞான பிரயோசனம் வர வேண்டும்
முதலாவது சர்வ கிருபையுடைத்தான சர்வேசுரன் உங்களை பதிதருடைய மார்கத்திலே பிறக்கவொட்டாமல் சத்திய வேதத்தில் பிறந்து வளர்ந்து நிலைகொள்ளக் கிருபை செய்தாரென்று நினைத்து அவருக்கு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ண வேண்டியதுமல்லாமல் , இந்த சுகிர்த வேதத்தின் கட்டளை எல்லாவற்றையும் தாழ்ச்சியுடன் அனுசரிக்க வேண்டியது
இரண்டாவது உங்களுடைய தாய் தகப்பனாவது மகன் மகளாவது புருஷன் பெண்ஜாதியாவது அண்ணன் தம்பியாவது சாகிறபோது வேதத்தை அறியாத புறவினத்தார் போலவும் நம்பிக்கையில்லாத பதிதரைப் போலவும் அதிக கஷ்டப்பட வேண்டாம் . உத்தரிக்கிற ஸ்தலத்தினின்று உங்களுடைய ஜனங்களின் ஆத்துமத்தை இரட்சிக்கக் கூடுமென்று அறிந்ததினாலே அவர்களைக் குறித்து செப தப தான தருமங்களைச் செய்யுங்கள்
மூன்றாவது உங்கள் பந்துக்கள் சிநேகிதர்களுடைய ஆத்துமாக்கள் எவ்வளவு காலம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே உபாதிக்கப்படுவர்கள் என்று தெரியாததினாலே மேற்சொன்ன நல்ல வாலிபன் தான் ஜீவிக்கும் நாள் எல்லாம் தன்னுடைய தம்பியின் ஆத்துமத்தைக் குறித்து செபிக்கிறேன் என்றதுபோல நீங்களும் உங்கள் ஆயுள் நாளெல்லாம் உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களுக்காக வேண்டிக் கொள்ள வேண்டுமென்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
ஐந்தாம் தேதி
உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்கள் படுகிற வேதனைகளைக் குறிக்கிற விளக்கமாவது
தியானம்
உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்றும் அதில் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வேதனைப்படுகிறதென்றும் முன் செய்த தியானங்களில் எடுத்துக் காட்டப்பட்டது . இப்போது நீங்கள் இந்த ஆக்கினைகளுக்குப் பயந்திருக்கவும் ,அவைகளை வருவிக்கும் பாவங்களைச் செய்யாதிருக்கவும் , இந்த ஆக்கினைகளை அனுபவிக்கும் ஆத்துமங்களின் பேரில் இரக்கமாய் இருக்கவும் , இந்த வேதனைகள் எப்பேர்ப்பட்டதென்று ஆராய்ந்து தியானித்துப் பார்க்கக் கடவீர்கள்
ஒரு நாள் சில புத்தியில்லாத வாலிபர் , நாங்கள் நரகத்துக்குப் போகாமலிருந்தால் மாத்திரம் போதும் , உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிறது பாரமல்ல என்று சொல்லுவதை அர்ச்.அகுஸ்தீனூஸ் கேட்டு ஞான கோபம் கொண்டு " நிர்பாக்கியரே ! அப்படிப் பேசாதீர்கள் . இவ்வுலகத்தின் வாதை வேதனைகள் எல்லாவற்றையும் கூட்டினாலும் , இவைகளெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளுக்கு நிகரல்லவென்று அறியக் கடவீர்கள் " என்று வற்புறுத்திச் சொன்னார் . இந்த ஒரு சொல்லிலே எவ்வளவு உண்மை இருக்கிறது என்று கொஞ்ச நேரம் தியானிக்கக் கடவோம்
இவ்வுலகத்திலே மனுஷனை உபாதிக்கும் வியாதிகள் எத்தனை என்றும் எப்பேர்பட்டதென்றும் எவ்வளவு வருத்தமுள்ளதென்றும் யாராலே சொல்லக் கூடும் ? நேத்திர வலியும், காது வலியும் , பல் வலியும் வயிற்று வலியும் ,சூலைக் கட்டும் ,பக்க வாதமும் , குஷ்ட ரோகமும் , பலவகைப் பிளவையும் , இது முதலான வியாதிகளுக்குக் கணக்குண்டோ ? இந்தச் சகலமான வியாதிகளினாலே நேரிடும் வருத்தங்கள் எல்லாவற்றையும் ஒழுங்குடன் ஒரு மனுஷன் அனுபவிக்க வேண்டுமென்றால் அவைகளை பொறுக்கமாட்டான் என்று எல்லாரும் நினைப்பார்கள் அல்லவோ ? ஆயினும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் இப்போது சொன்ன வருத்தங்களுக்கு எல்லாம் மேற்பட்டதாய் இருக்கிறது என்று வேத சாஸ்திரிகள் நிச்சயிக்கிறார்களாம் . இவைகளைப் பொறுத்துக் கொள்ளுவீர்களோ , சொல்லுங்கள் .
அதல்லாமலும் அர்ச். வனத்து சின்னப்பரும் , பெரிய அந்தோணியாரும் , இரண்டு மாக்காரியாரும் சிமையோனும் மற்றப் பேர் பெற்ற தபோதனரும் , ரிஷிகளும் வெகு வருஷமாய் நடத்திய தவக் கிரியைகளையும் அனுசரித்த ஒருசந்திகளையும் தரித்துக் கொண்ட முள் ஒட்டியானங்களையும் தாங்கள் அடித்துக் கொண்ட கசைகளையும் புசித்த கொஞ்சம் ஆகாரங்களையும் நினைக்குமிடத்தில் இதெல்லாம் மகா பெரியவைகளென்றும் மகா கடினமென்றும் ஒருவராலேயும் பொறுக்கப்படாத தவமென்றும் எண்ணுவீர்கள் .
ஆயினும் இவையெல்லாவற்றையும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளோடு ஒப்பிட்டால் கொஞ்சமும் சொற்பமும் எளிதுமான தவமென்கிறதற்குச் சந்தேகமில்லை. ஒரு மணி நேரம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதைப்படுகிறதிலும் நூறு வருஷ காலம் கடின தபசு பண்ணி ஒருசந்தியாய் இருக்கிறதே பெரிய ஆறுதல் போலக் காணப்படுமென்று ஒரு சாஸ்திரி சொல்லி இருக்கிறார். திருச்சபை கற்பித்த ஒருசந்தி நாட்களை அனுசரிக்கிறதே பெரிய வருத்தமென்று எண்ணி வேறே தவம் செய்யாத நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளை பொறுத்துக் கொள்ளுவீர்களோ என்ன , சொல்லுங்கள் .
மேலும் வேத சாட்சிகள் புறமதத்தாரால் அனுபவித்த எவ்வித குரூரமான வேதனைகளையும் நினைக்க வேண்டும் . அவர்கள் சிறைச்சாலைகளிலும் நீதிஸ்தலங்களிலும் அகோரமாய் அடிக்கப்பட்டு , இரும்பு ஆயுதங்களால் சரீரம் ஆதியந்தமும் கிழிக்கப்பட்டு , உருகின ஈயத்தைக் குடிக்கக் கொடுக்கப்பட்டு , புலி , கரடி ,சிங்கம் முதலான துஷ்ட மிருகங்களுக்கு இரையாய் தள்ளப்பட்டு , அவயங்கள் எல்லாம் துண்டு துண்டாய் அறுக்கப்பட்டு அகோரமாய் எரியும் நெருப்புச் சூளையிலே போடப்பட்டு , சாகுமுன்னே ஆயிரந்தடவை செத்து , அவர்கள் அவ்வளவான வாதிகளை எப்படிப் பொறுத்தார்கள் என்று சொல்லுவாருண்டோ ? கண்டுபிடிப்பாருண்டோ ?
ஆயினும் இந்த பிரதாபமுள்ள வேத சாட்சிகள் அனுபவித்த வேதனைகள் எல்லாவற்றையும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனையின் முன்பாக அது நிழலென்றும் சித்திரமென்றும் சொல்லி இருக்கிறது . சத்தியமாகவே இந்த வேதனைகள் மனுஷனுடைய புத்திக்கு மேற்பட்டதாய் இருக்கிறதினாலே இவைகளுடைய அகோரத்தை மனுஷனானவன் கண்டு பிடிக்க முடியாதென்று அர்ச் அகுஸ்தீனுஸ் எழுதி வைத்தார் .இது இப்படி இருக்க , ஒரு கொசுக் கடிக்கும் கொஞ்சம் குளிர் வெயிலுக்கும் பயப்படுகிற நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளைப் பொறுப்பீர்களோ சொல்லுங்கள்
கடைசியில் நித்திய நரகத்தில் சபிக்கப்பட்ட பாவிகள் அனுபவிக்கும் ஆக்கினைகளுக்கும் , உத்தரிக்கிற ஆத்துமங்கள் படும் வேதனைகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தவிர வேறே வித்தியாசமில்லை என்று அர்ச் சிரில்லூஸ் என்பவரும் அர்ச் தோமாஸ் என்கிறவரும் நிச்சயித்தார்களாமே. அந்த வித்தியாசம் ஏதென்றால் :
உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனை முடியும் , நித்திய நரகத்தின் ஆக்கினை ஒருபோதும் முடியாது. அது இப்படி இருக்கையில் நரகத்துக்குப் பயப்படுகிற நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் பயப்படாமல் போகிறது எப்படி ? அதனுடைய வேதனைகளைப் பொறுத்துக் கொள்ளுகிறதற்குத் திராணி உண்டோ சொல்லுங்கள்
கிறிஸ்துவர்களே ! இப்போது நான் புன்சொற்களால் விவரித்ததைக் கண்டு பயந்து அஞ்சி ,ஐயோ ஐயோ என்பீர்களல்லாமல், அவ்வளவான வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் பேரில் மிகுந்த இரக்கமாய் இருப்பீர்கள் என்று நம்பி இருக்கிறேன் . ஆயினும் இந்த தியானத்தால் உங்களுக்கு வேறே ஆதாயம் வர வேணும்
முதலாவது : இத்தகைப்பட்ட வாதைகளையும் வருத்தங்களையும் வருவிக்கும் சொற்ப பாவங்களை மிக கவனத்துடனே விலக்க வேண்டியது. அநேகர் சொல்லுவது போல இது சொற்பப் போயும் சொற்ப திருட்டும் சொற்ப பாவமும் என்று நினைக்க வேண்டாம் . சொல்லவும் வேண்டாம் . வரும் தண்டனையால் ஒரு குற்றத்தின் கனம் தெரியப்படுமல்லோ ? இந்தப் பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் மேற்காண்பித்த ஆக்கினைகளை நீதியுள்ள சர்வேசுரன் கட்டளையிடும் போது இந்தப் பாவங்கள் சொற்பமென்று எண்ணுவீர்களோ என்ன ?
இரண்டாவது: நீங்கள் சிறுவயதிலும் வாலிப வயதிலும் நல்ல வயதிலும் கட்டிக் கொண்ட சாவான பாவங்களை நினைத்துக் கொள்ளுங்கள் . நல்ல பாவசங்கீர்த்தனத்தைச் செய்து இவற்றுக்காக மன்னிப்பை அடைந்திருப்பது மெய்தான் .ஆயினும் இவற்றுக்கான பரிகாரங்கள் என என்ன செய்தீர்கள் ? சொல்லுங்கள் . இவ்விஷயத்தில் உங்களை நீங்களே ஏய்க்க வேண்டாம் . இவ்வுலகத்தில் அதற்குத் தகுந்த பரிகாரத்தைச் செய்யாதிருப்பீர்களேயானால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மேற் சொன்ன வாதனைகளை எத்தனை வருஷம் எத்தனை நாள் அனுபவிக்க வேண்டியதாய் இருக்குமென்று தியானித்துக் கொள்ளுங்கள் . அதனாலே இப்போது இந்தப் பரிகாரத்துக்கு அதிக ஜெபம் பண்ணுங்கள் . அதிகப் பிச்சை கொடுங்கள் . அதிக தபசு செய்யுங்கள் . அதிக பிரயாசையோடு திருச்சபையின் பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள்
மூன்றாவது : இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு வியாதியினாலேயும் பசி தாகத்தினாலென்கிலும் எதிரிகளுடைய விரோதத்தினாலேயாயினும் எவ்வித துன்ப வேதனை வருத்தம் வருகிறதென்று உங்களுக்கு நன்றாய் தெரியுமே .உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளைச் சரியாய் நினைத்தால் இவைகளெல்லாம் சொற்பமென்று கருதி அமைந்த பொறுமையோடும் தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிதலோடும் சகித்து பொறுத்துக் கொள்ளுவீர்கள் . இப்படிக்கு இந்த வருத்தம் கஷ்டமெல்லாம் கொஞ்ச வருத்தம் போல் காணப்படுமல்லாமல் இவைகள் உங்கள் பாவங்களுக்கு நல்ல பரிகாரமென்று அறியக் கடவீர்கள்
இன்றைய தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
கிருபை நிறைந்த சர்வேசுரா ! மரணத்தை அடைந்த எங்கள் சகோதரரைக் கிருபையாய்ப் பார்த்தருளும். அவர்களுடைய ஆத்துமாக்களை பிதாப் பிதாக்களான ஆபிரகாம் ,ஈசாக்கு , யாக்கோப் என்பவர்களோடு என்றென்றைக்கும் வாழும் மோட்சவாசிகளினடத்தில் சேர்த்தருளும் . அழுகை ,துக்கம் , வருத்தம் அறியாத ஸ்தலமான பேரின்பம் நிறைந்த உம்முடைய பரகதியில் இந்த ஆத்துமாக்களை வைத்துக் கொள்ள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
ஐந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியை
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பிச்சைக்காரிக்குப் பிச்சை கொடுக்கிறது
புதுமை
தொலோமை என்னும் ஆஞ்சலேம்மாள் உயர்ந்த கோத்திரமான தாய் தகப்பனிடத்தில் பிறந்து இளம் பிராயத்தில் முதலாய் எல்லாப் புண்ணியங்களையும் அனுசரித்துக் கொண்டு வந்தாள். பின்பு தேவ சிநேகத்தில் மேன்மேலும் வளரும்படிக்கு அர்ச் சாமிநாதர் உண்டு பண்ணின கன்னியாஸ்திரீகளுடைய சபையிலே பிரவேசித்தாள்.
அம்மடத்தில் அவள் மற்ற கன்னியாஸ்திரீகளுக்கு நன்மாதிரிகையும் சகல புண்ணியங்களின் கண்ணாடியைப் போல் இருந்தாலும் சில சொற்ப குற்றங்களை அசட்டையிலே பண்ணுவாள் . இதிப்படி இருக்கையிலே , ஒரு நாள் கடின வியாதியாய் விழுந்து அவஸ்தையாகிச் சாகக் கிடக்கும்போது ஒரு தரிசனத்தைக் கண்டாள். அதெப்படியெனில் : உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள பயங்கரமான வேதனைகள் எல்லாவற்றையும் பற்றும் பற்றாய்த் தரித்து , இந்த ஸ்தலத்திலே தனக்கு நியமித்திருக்கிற இடத்தையும் கண்ணால் காண்கிறார்போலே தெளிவாய்க் கண்டாள் .
இந்தக் காட்சியினாலே அவளுக்கு வந்த பயம் எம்மாத்திரம் என்றால் , விழித்த பிற்பாடு அவளது சரீரமெல்லாம் திகிலடைந்தாற்போல் நடுநடுங்கி துடி துடித்து வலிப்பெடுத்து அமரக்கூடாதிருந்ததாம் . அதற்கப்பால் அவள் சௌக்கியத்தை அடைந்து ஓர் அற்ப சந்தோசம் தேடாமலும் ,சொற்ப ஆறுதல் முதலாய் விரும்பாமலும் , எவ்வித தவக்கிரியைகளையும் செய்து கொண்டு வருவாள் .
மேலும் அச்சபையில் வழங்கின ஒருசந்திகளும் முள் ஒட்டியானங்களும்,சாட்டை கசைகளும் , நெடும் ஜெபங்களும் அவளுக்குப் போதாமல் தன்னை உபாதிக்கும்படி மற்ற எவ்வித உபாதைகளையும் தேடிக் கொண்டிருப்பாள் . சில சமயங்களிலே தன்னை நெருப்பினால் சுட்டெரித்துக் காயப்படுத்துவாள். சில சமயங்களிலே இரத்தம் ஓடுமட்டும் முட்சேடிகளிலே விழுந்து புரளுவாள் . அநேக நாளில் யாதொரு ஆகாரமும் புசியாது இருப்பாள் . அப்படியே செய்யக்கூடுமான தபசெல்லாம் பண்ணுவாள் . அவள் நடத்துகிற அந்த பயங்கரமான தவக்கிரியைகளைக் கண்டு மற்ற கன்னியாஸ்திரிகள் பிரம்மித்து , அப்படிச் செய்வது மகா கொடுமை என்றும் ஏற்காத காரியமென்றும் சொல்லுவார்கள் .
.அதற்கு அவள் மறு உத்தாரமாக மறு உலகத்தில் சொற்ப பாவங்களுக்கும் சொற்ப குற்றங்களுக்கும் நியமித்த வேதனைகளுடனே இவற்றை எல்லாம் ஒப்பிட்டால் ஒன்றுமில்லாதது போலக் காணப்படும் . இவையெல்லாம் ஆயிரம் வருஷம் அனுபவித்தாலும் உத்தரிக்கிற ஸ்தலத்தை விட எளிதாய் இருக்குமே என்பாள் . ஆகையினாலே அவள் சாகும் பரியந்தம் தனது தவக்கிரியைகளில் ஒன்றும் குறையாமல் செய்து பெயர் பெற்ற அற்சிஷ்டவளானாள்.
இந்தப் புதுமையைக் கேட்ட கிறிஸ்தவர்களே ! இப்போது என்ன நினைக்கிறீர்கள் ? நீங்கள் யாதொரு பயமும் இல்லாமல் கட்டிக் கொள்ளுகிற பற்பல சொற்ப குற்றங்கள் கொஞ்ச பொல்லாப்பென்றும் அவைகளுக்கு வருகிற உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் சொற்ப வேதனைகள் என்றும் நினைப்பீர்களோ ? இவ்விராஜ்ஜியத்தில் பழமொழியாகச் சூடு கண்ட பூனை அடுப்பையண்டாதென்று சொல்லுகிறார்களே . முன் சொன்ன கன்னியாஸ்திரியானவள் உத்தரிக்கிற ஸ்தலத்தைக் கண்ட பிற்பாடு அந்த சொற்ப பாவங்களுக்கு அஞ்சி நடந்ததுமல்லாமல் , அகோர தவக்கிரியைகளையும் செய்தது போலே நீங்கள் இனிமேல் எந்தப் பாவங்களையும் விலக்கிக் கூடினமட்டும் தவத்தைச் செய்ய வேண்டுமென்று அறிய கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்கள் படுகிற வேதனைகளைக் குறிக்கிற விளக்கமாவது
தியானம்
உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்றும் அதில் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வேதனைப்படுகிறதென்றும் முன் செய்த தியானங்களில் எடுத்துக் காட்டப்பட்டது . இப்போது நீங்கள் இந்த ஆக்கினைகளுக்குப் பயந்திருக்கவும் ,அவைகளை வருவிக்கும் பாவங்களைச் செய்யாதிருக்கவும் , இந்த ஆக்கினைகளை அனுபவிக்கும் ஆத்துமங்களின் பேரில் இரக்கமாய் இருக்கவும் , இந்த வேதனைகள் எப்பேர்ப்பட்டதென்று ஆராய்ந்து தியானித்துப் பார்க்கக் கடவீர்கள்
ஒரு நாள் சில புத்தியில்லாத வாலிபர் , நாங்கள் நரகத்துக்குப் போகாமலிருந்தால் மாத்திரம் போதும் , உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிறது பாரமல்ல என்று சொல்லுவதை அர்ச்.அகுஸ்தீனூஸ் கேட்டு ஞான கோபம் கொண்டு " நிர்பாக்கியரே ! அப்படிப் பேசாதீர்கள் . இவ்வுலகத்தின் வாதை வேதனைகள் எல்லாவற்றையும் கூட்டினாலும் , இவைகளெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளுக்கு நிகரல்லவென்று அறியக் கடவீர்கள் " என்று வற்புறுத்திச் சொன்னார் . இந்த ஒரு சொல்லிலே எவ்வளவு உண்மை இருக்கிறது என்று கொஞ்ச நேரம் தியானிக்கக் கடவோம்
இவ்வுலகத்திலே மனுஷனை உபாதிக்கும் வியாதிகள் எத்தனை என்றும் எப்பேர்பட்டதென்றும் எவ்வளவு வருத்தமுள்ளதென்றும் யாராலே சொல்லக் கூடும் ? நேத்திர வலியும், காது வலியும் , பல் வலியும் வயிற்று வலியும் ,சூலைக் கட்டும் ,பக்க வாதமும் , குஷ்ட ரோகமும் , பலவகைப் பிளவையும் , இது முதலான வியாதிகளுக்குக் கணக்குண்டோ ? இந்தச் சகலமான வியாதிகளினாலே நேரிடும் வருத்தங்கள் எல்லாவற்றையும் ஒழுங்குடன் ஒரு மனுஷன் அனுபவிக்க வேண்டுமென்றால் அவைகளை பொறுக்கமாட்டான் என்று எல்லாரும் நினைப்பார்கள் அல்லவோ ? ஆயினும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் இப்போது சொன்ன வருத்தங்களுக்கு எல்லாம் மேற்பட்டதாய் இருக்கிறது என்று வேத சாஸ்திரிகள் நிச்சயிக்கிறார்களாம் . இவைகளைப் பொறுத்துக் கொள்ளுவீர்களோ , சொல்லுங்கள் .
அதல்லாமலும் அர்ச். வனத்து சின்னப்பரும் , பெரிய அந்தோணியாரும் , இரண்டு மாக்காரியாரும் சிமையோனும் மற்றப் பேர் பெற்ற தபோதனரும் , ரிஷிகளும் வெகு வருஷமாய் நடத்திய தவக் கிரியைகளையும் அனுசரித்த ஒருசந்திகளையும் தரித்துக் கொண்ட முள் ஒட்டியானங்களையும் தாங்கள் அடித்துக் கொண்ட கசைகளையும் புசித்த கொஞ்சம் ஆகாரங்களையும் நினைக்குமிடத்தில் இதெல்லாம் மகா பெரியவைகளென்றும் மகா கடினமென்றும் ஒருவராலேயும் பொறுக்கப்படாத தவமென்றும் எண்ணுவீர்கள் .
ஆயினும் இவையெல்லாவற்றையும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளோடு ஒப்பிட்டால் கொஞ்சமும் சொற்பமும் எளிதுமான தவமென்கிறதற்குச் சந்தேகமில்லை. ஒரு மணி நேரம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதைப்படுகிறதிலும் நூறு வருஷ காலம் கடின தபசு பண்ணி ஒருசந்தியாய் இருக்கிறதே பெரிய ஆறுதல் போலக் காணப்படுமென்று ஒரு சாஸ்திரி சொல்லி இருக்கிறார். திருச்சபை கற்பித்த ஒருசந்தி நாட்களை அனுசரிக்கிறதே பெரிய வருத்தமென்று எண்ணி வேறே தவம் செய்யாத நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளை பொறுத்துக் கொள்ளுவீர்களோ என்ன , சொல்லுங்கள் .
மேலும் வேத சாட்சிகள் புறமதத்தாரால் அனுபவித்த எவ்வித குரூரமான வேதனைகளையும் நினைக்க வேண்டும் . அவர்கள் சிறைச்சாலைகளிலும் நீதிஸ்தலங்களிலும் அகோரமாய் அடிக்கப்பட்டு , இரும்பு ஆயுதங்களால் சரீரம் ஆதியந்தமும் கிழிக்கப்பட்டு , உருகின ஈயத்தைக் குடிக்கக் கொடுக்கப்பட்டு , புலி , கரடி ,சிங்கம் முதலான துஷ்ட மிருகங்களுக்கு இரையாய் தள்ளப்பட்டு , அவயங்கள் எல்லாம் துண்டு துண்டாய் அறுக்கப்பட்டு அகோரமாய் எரியும் நெருப்புச் சூளையிலே போடப்பட்டு , சாகுமுன்னே ஆயிரந்தடவை செத்து , அவர்கள் அவ்வளவான வாதிகளை எப்படிப் பொறுத்தார்கள் என்று சொல்லுவாருண்டோ ? கண்டுபிடிப்பாருண்டோ ?
ஆயினும் இந்த பிரதாபமுள்ள வேத சாட்சிகள் அனுபவித்த வேதனைகள் எல்லாவற்றையும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனையின் முன்பாக அது நிழலென்றும் சித்திரமென்றும் சொல்லி இருக்கிறது . சத்தியமாகவே இந்த வேதனைகள் மனுஷனுடைய புத்திக்கு மேற்பட்டதாய் இருக்கிறதினாலே இவைகளுடைய அகோரத்தை மனுஷனானவன் கண்டு பிடிக்க முடியாதென்று அர்ச் அகுஸ்தீனுஸ் எழுதி வைத்தார் .இது இப்படி இருக்க , ஒரு கொசுக் கடிக்கும் கொஞ்சம் குளிர் வெயிலுக்கும் பயப்படுகிற நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளைப் பொறுப்பீர்களோ சொல்லுங்கள்
கடைசியில் நித்திய நரகத்தில் சபிக்கப்பட்ட பாவிகள் அனுபவிக்கும் ஆக்கினைகளுக்கும் , உத்தரிக்கிற ஆத்துமங்கள் படும் வேதனைகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தவிர வேறே வித்தியாசமில்லை என்று அர்ச் சிரில்லூஸ் என்பவரும் அர்ச் தோமாஸ் என்கிறவரும் நிச்சயித்தார்களாமே. அந்த வித்தியாசம் ஏதென்றால் :
உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனை முடியும் , நித்திய நரகத்தின் ஆக்கினை ஒருபோதும் முடியாது. அது இப்படி இருக்கையில் நரகத்துக்குப் பயப்படுகிற நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் பயப்படாமல் போகிறது எப்படி ? அதனுடைய வேதனைகளைப் பொறுத்துக் கொள்ளுகிறதற்குத் திராணி உண்டோ சொல்லுங்கள்
கிறிஸ்துவர்களே ! இப்போது நான் புன்சொற்களால் விவரித்ததைக் கண்டு பயந்து அஞ்சி ,ஐயோ ஐயோ என்பீர்களல்லாமல், அவ்வளவான வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் பேரில் மிகுந்த இரக்கமாய் இருப்பீர்கள் என்று நம்பி இருக்கிறேன் . ஆயினும் இந்த தியானத்தால் உங்களுக்கு வேறே ஆதாயம் வர வேணும்
முதலாவது : இத்தகைப்பட்ட வாதைகளையும் வருத்தங்களையும் வருவிக்கும் சொற்ப பாவங்களை மிக கவனத்துடனே விலக்க வேண்டியது. அநேகர் சொல்லுவது போல இது சொற்பப் போயும் சொற்ப திருட்டும் சொற்ப பாவமும் என்று நினைக்க வேண்டாம் . சொல்லவும் வேண்டாம் . வரும் தண்டனையால் ஒரு குற்றத்தின் கனம் தெரியப்படுமல்லோ ? இந்தப் பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் மேற்காண்பித்த ஆக்கினைகளை நீதியுள்ள சர்வேசுரன் கட்டளையிடும் போது இந்தப் பாவங்கள் சொற்பமென்று எண்ணுவீர்களோ என்ன ?
இரண்டாவது: நீங்கள் சிறுவயதிலும் வாலிப வயதிலும் நல்ல வயதிலும் கட்டிக் கொண்ட சாவான பாவங்களை நினைத்துக் கொள்ளுங்கள் . நல்ல பாவசங்கீர்த்தனத்தைச் செய்து இவற்றுக்காக மன்னிப்பை அடைந்திருப்பது மெய்தான் .ஆயினும் இவற்றுக்கான பரிகாரங்கள் என என்ன செய்தீர்கள் ? சொல்லுங்கள் . இவ்விஷயத்தில் உங்களை நீங்களே ஏய்க்க வேண்டாம் . இவ்வுலகத்தில் அதற்குத் தகுந்த பரிகாரத்தைச் செய்யாதிருப்பீர்களேயானால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மேற் சொன்ன வாதனைகளை எத்தனை வருஷம் எத்தனை நாள் அனுபவிக்க வேண்டியதாய் இருக்குமென்று தியானித்துக் கொள்ளுங்கள் . அதனாலே இப்போது இந்தப் பரிகாரத்துக்கு அதிக ஜெபம் பண்ணுங்கள் . அதிகப் பிச்சை கொடுங்கள் . அதிக தபசு செய்யுங்கள் . அதிக பிரயாசையோடு திருச்சபையின் பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள்
மூன்றாவது : இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு வியாதியினாலேயும் பசி தாகத்தினாலென்கிலும் எதிரிகளுடைய விரோதத்தினாலேயாயினும் எவ்வித துன்ப வேதனை வருத்தம் வருகிறதென்று உங்களுக்கு நன்றாய் தெரியுமே .உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளைச் சரியாய் நினைத்தால் இவைகளெல்லாம் சொற்பமென்று கருதி அமைந்த பொறுமையோடும் தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிதலோடும் சகித்து பொறுத்துக் கொள்ளுவீர்கள் . இப்படிக்கு இந்த வருத்தம் கஷ்டமெல்லாம் கொஞ்ச வருத்தம் போல் காணப்படுமல்லாமல் இவைகள் உங்கள் பாவங்களுக்கு நல்ல பரிகாரமென்று அறியக் கடவீர்கள்
இன்றைய தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
கிருபை நிறைந்த சர்வேசுரா ! மரணத்தை அடைந்த எங்கள் சகோதரரைக் கிருபையாய்ப் பார்த்தருளும். அவர்களுடைய ஆத்துமாக்களை பிதாப் பிதாக்களான ஆபிரகாம் ,ஈசாக்கு , யாக்கோப் என்பவர்களோடு என்றென்றைக்கும் வாழும் மோட்சவாசிகளினடத்தில் சேர்த்தருளும் . அழுகை ,துக்கம் , வருத்தம் அறியாத ஸ்தலமான பேரின்பம் நிறைந்த உம்முடைய பரகதியில் இந்த ஆத்துமாக்களை வைத்துக் கொள்ள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
ஐந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியை
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பிச்சைக்காரிக்குப் பிச்சை கொடுக்கிறது
புதுமை
தொலோமை என்னும் ஆஞ்சலேம்மாள் உயர்ந்த கோத்திரமான தாய் தகப்பனிடத்தில் பிறந்து இளம் பிராயத்தில் முதலாய் எல்லாப் புண்ணியங்களையும் அனுசரித்துக் கொண்டு வந்தாள். பின்பு தேவ சிநேகத்தில் மேன்மேலும் வளரும்படிக்கு அர்ச் சாமிநாதர் உண்டு பண்ணின கன்னியாஸ்திரீகளுடைய சபையிலே பிரவேசித்தாள்.
அம்மடத்தில் அவள் மற்ற கன்னியாஸ்திரீகளுக்கு நன்மாதிரிகையும் சகல புண்ணியங்களின் கண்ணாடியைப் போல் இருந்தாலும் சில சொற்ப குற்றங்களை அசட்டையிலே பண்ணுவாள் . இதிப்படி இருக்கையிலே , ஒரு நாள் கடின வியாதியாய் விழுந்து அவஸ்தையாகிச் சாகக் கிடக்கும்போது ஒரு தரிசனத்தைக் கண்டாள். அதெப்படியெனில் : உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள பயங்கரமான வேதனைகள் எல்லாவற்றையும் பற்றும் பற்றாய்த் தரித்து , இந்த ஸ்தலத்திலே தனக்கு நியமித்திருக்கிற இடத்தையும் கண்ணால் காண்கிறார்போலே தெளிவாய்க் கண்டாள் .
இந்தக் காட்சியினாலே அவளுக்கு வந்த பயம் எம்மாத்திரம் என்றால் , விழித்த பிற்பாடு அவளது சரீரமெல்லாம் திகிலடைந்தாற்போல் நடுநடுங்கி துடி துடித்து வலிப்பெடுத்து அமரக்கூடாதிருந்ததாம் . அதற்கப்பால் அவள் சௌக்கியத்தை அடைந்து ஓர் அற்ப சந்தோசம் தேடாமலும் ,சொற்ப ஆறுதல் முதலாய் விரும்பாமலும் , எவ்வித தவக்கிரியைகளையும் செய்து கொண்டு வருவாள் .
மேலும் அச்சபையில் வழங்கின ஒருசந்திகளும் முள் ஒட்டியானங்களும்,சாட்டை கசைகளும் , நெடும் ஜெபங்களும் அவளுக்குப் போதாமல் தன்னை உபாதிக்கும்படி மற்ற எவ்வித உபாதைகளையும் தேடிக் கொண்டிருப்பாள் . சில சமயங்களிலே தன்னை நெருப்பினால் சுட்டெரித்துக் காயப்படுத்துவாள். சில சமயங்களிலே இரத்தம் ஓடுமட்டும் முட்சேடிகளிலே விழுந்து புரளுவாள் . அநேக நாளில் யாதொரு ஆகாரமும் புசியாது இருப்பாள் . அப்படியே செய்யக்கூடுமான தபசெல்லாம் பண்ணுவாள் . அவள் நடத்துகிற அந்த பயங்கரமான தவக்கிரியைகளைக் கண்டு மற்ற கன்னியாஸ்திரிகள் பிரம்மித்து , அப்படிச் செய்வது மகா கொடுமை என்றும் ஏற்காத காரியமென்றும் சொல்லுவார்கள் .
.அதற்கு அவள் மறு உத்தாரமாக மறு உலகத்தில் சொற்ப பாவங்களுக்கும் சொற்ப குற்றங்களுக்கும் நியமித்த வேதனைகளுடனே இவற்றை எல்லாம் ஒப்பிட்டால் ஒன்றுமில்லாதது போலக் காணப்படும் . இவையெல்லாம் ஆயிரம் வருஷம் அனுபவித்தாலும் உத்தரிக்கிற ஸ்தலத்தை விட எளிதாய் இருக்குமே என்பாள் . ஆகையினாலே அவள் சாகும் பரியந்தம் தனது தவக்கிரியைகளில் ஒன்றும் குறையாமல் செய்து பெயர் பெற்ற அற்சிஷ்டவளானாள்.
இந்தப் புதுமையைக் கேட்ட கிறிஸ்தவர்களே ! இப்போது என்ன நினைக்கிறீர்கள் ? நீங்கள் யாதொரு பயமும் இல்லாமல் கட்டிக் கொள்ளுகிற பற்பல சொற்ப குற்றங்கள் கொஞ்ச பொல்லாப்பென்றும் அவைகளுக்கு வருகிற உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் சொற்ப வேதனைகள் என்றும் நினைப்பீர்களோ ? இவ்விராஜ்ஜியத்தில் பழமொழியாகச் சூடு கண்ட பூனை அடுப்பையண்டாதென்று சொல்லுகிறார்களே . முன் சொன்ன கன்னியாஸ்திரியானவள் உத்தரிக்கிற ஸ்தலத்தைக் கண்ட பிற்பாடு அந்த சொற்ப பாவங்களுக்கு அஞ்சி நடந்ததுமல்லாமல் , அகோர தவக்கிரியைகளையும் செய்தது போலே நீங்கள் இனிமேல் எந்தப் பாவங்களையும் விலக்கிக் கூடினமட்டும் தவத்தைச் செய்ய வேண்டுமென்று அறிய கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்