- வணக்க மாதம்
- உத்தரிக்கிற ஆத்துமாக்கள்
- நாள் 16-20
பதினாறாம் நாள்
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குச் சொந்தமான ஆத்துமாக்கள் என்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்க வேணுமென்பதற்கு முன் சொன்ன நியாயங்கள் பலத்த நியாயங்களாயிருந்தாலும், எண்ணிக்கையில்லாத கிறிஸ்துவர் கள் இவைகளைச் சரியாய்க் கவனித்துப் பார்க்காமல் அந்த ஆத்துமாக்களை மறந்து, அவர்களுடைய அவதியைக் குறைக்க ஒன்றும் செய்யாமற் போகிறார்கள். அப்படி உத்தரிக்கிற ஆத்துமாக்களை மறந்து அவர்களுக்காக ஒன்றும் செய்யாதிருக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை யென்று இப்போது காண்பிக்க வேணும்.
ஒருவன் தன்னுடைய சொந்தக்காரரை விசாரிக்காமற்போனால் அவன் சத்திய வேதத்தை விட்டு புறமதத்தானைவிட அதிகக் கெட்டவனாயிருக்கிறானென்று அர்ச் சின்னப்பர் திமோத்தேயு இரண்டாம் நிருபம் ஐந்தாம் அதிகாரம் ஏழாம் வசனத்தில் எழுதியிருக்கிறார். உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குச் சொந்தமான ஆத்துமாக்களென்று காட்டுவோ மேயாகில், அவர்களை விசாரிக்காமல் போவது பெரிய துரோக மென்றும், பெரிய கொடுமையென்றும் ஒப்பித்தாற்போலாகுமல்லவோ?
முதலாவது சகலமான உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குத் தகப்பனாகிய சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்டு. அவருடைய பிரதாபமுள்ள சாயலைத் தரிசித்து, அவருடைய இஷ்டப்பிரசாதத்தோடு இறந்து, என்றென்றைக்கும் அவரிடத்திலே வாழ நியமிக்கப்பட்டிருக்கையில், அந்த ஆத்துமாக்கள் நமக்கு வேற்றுமையுள்ள ஆத்துமாக்களென்று சொல்லக்கூடுமோ? நமக்குச் சம்பந்தமற்ற ஆத்துமாக்களென்று நினைக்கக் கூடுமோ?
மீண்டும் நமதாண்டவருமாய் இரட்சகருமாய் சகோதரருமாயிருக்கிற சேசுகிறிஸ்துநாதருடைய திவ்விய இரத்தத்தினால் அந்த ஆத்துமாக்கள் மீட்டிரட்சிக்கப்பட்டு, அவருடைய ஞான உறுப்புகளாயிருந்து, அவருடன் தேவ சிநேகத்தால் பிரியாத பந்தனமாய் ஒன்றித்து, அவரோடேகூட நித்தியத்தில் எவ்வித பாக்கியங்களையும் அநுபவிக்கத் தெரிந்து கொள்ளப் பட்டிருக்கையில், அந்த ஆத்துமாக்களை உங்களுக்குப் புறத்தியாத்துமாக்களென் பீர்களோ? சம்பந்தமற்ற ஆத்துமாக்களென்று நினைப்பீர்களோ? மேலும், சகலமான கிறிஸ்துவர்களுக்கு சர்வேசுரன் ஒருவரே தகப்பனும், சேசுநாதர் ஒரே இரட்சகரும், தேவமாதா ஒரே தாயாரும், ஞானஸ்நானம் ஒரே ஞான முத்திரையும், திருச்சபை ஒரே ஞான மந்தையும், மோட்சபாக்கியம் ஒரே ஒரே ஞான சரிரமும் ஒரே ஆத்துமமுமாயிருக்கிறார்களே.
இது இப்படியிருக்க மரித்தவர்களுடைய ஆத்துமாக்களை உயிரோடிருக்கிற நமக்குப் புறத்தி ஆத்துமாக்களென்று சொல்லலாமோ? சம்பந்தமற்ற ஆத்துமாக்க ளென்று நினைக்கலாமோ? அவர்கள் பேரில் இரக்கமில்லா மலிருக்கலாமோ? அவர்களுக்கு ஆறுதலுமின்றி ஒத்தாசை புமின்றி அவர்களை வருத்தப்படவிட்டுவிடலாமோ? அவர்களை அப்படி விட்டால் அது பெரிய அநியாயமும் பலத்த கொடுமையுமென்று உங்களுக்குத் தோன்றாதோ?
இரண்டாவது உத்தரிக்கிற ஆத்துமாக்களை அப்படி பொதுப்படப் பார்த்தால் உங்களுக்குச் சொந்தமல்ல வென்றாலும், அந்த ஆத்துமாக்களுக்குள்ளே எத்தனையோ ஆத்துமாக்கள் உங்களுடனே அதிக சம்பந்தமும் அதிக பந்தனமும் அதிக சொந்தமுமாய் இருக்கிறார்களென்று பாருங்கள். உங்களுடைய தேசத்தார். ஊராரையும், சிநேகிதர், உபகாரிகளையும், உறவின் முறையாரையும், உபாத்தியாயர், உபதேசிமார்களையும் குருக்கள் மேற்றிராணிமார்களையும் உங்களுக்கு அந்நியர்களென்று நினைக்கவும் கூடாதென்றால் அவர்களுடைய ஆத்துமங்களுக்காக ஏதாவது பிரயாசைப்பட வேண்டாமோ? உங்களைப்பற்றி உங்களுடைய குருக்களும் உபதேசி உபாத்திமார்களும் எவ்வளவு துன்பப்பட்டு உங்களை மோட்சத்துக்குச் செல்லும் வழியிலே நிறுத்த வருந்தினார்களென்று அறியமாட்டீர்களோ?
உங்களுடைய உறவின்முறையார் எப்போதும் உங்களோடு கூட நன்மை தின்மை காரியங்களிலே நின்று உங்களுக்கு எவ்வளவு உதவி சகாயம் பண்ணினார்களென்று நினைக்காதிருப்பீர்களோ? நீங்கள் பட்ட வருத்தங்களிலும் இக்கட்டுகளிலும் உங்களுடைய சிநேகிதர் உபகாரிகளும் உங்களுக்கு எவ்வளவு பட்சங்காட்டி எவ்வளவு உபகாரம் செய்து கொண்டு வந்தார்களென்றும் உங்களுக்குத் தெரியாமல் இருக்குமோ ? உங்களுடைய ஊரார் தேசத்தாரும் உங்களோடு ஒரே சமூகமாய் இருந்ததினாலே யோசிக்காதிருப்பீர்களோ ? மெய்யாகவே ,சத்தியமாகவே , இவர்கள் எல்லோரும் உங்களுக்கு மிகவும் சொந்தமென்றும் உறவென்றும் பந்தனமென்றும் சொல்லவேண்டும் அல்லவோ ?இவை உண்மையென்றால், அவர்களுடைய ஆத்துமாக்களை மறவாமல் அவர்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்க உங்களுடைய செப தப தான தர்மங்களினாலே பிரயாசைப்பட வேணுமென்கிறதற்குச் சந்தேகமில்லை.
மூன்றாவது உங்களுடைய தாய் தகப்பன்மார்களையும், பிள்ளைகளையும், புருஷன் பெண் சாதியையும் தம்பி அண்ணனையும், தங்கை தமக்கையாரையும், மாமனாரையும், மைத்துனி மைத்துனன்மாரையும் உங்களுக்கு மிகச் சொந்தமென்றும் கிட்டின உறவென்றும் உற்ற பந்தனமென்றும் சற்றாகிலும் ஒத்துக் கொள்ளுவீர்கள் ஆயினும் அவர்கள் செத்தபிற்பாடு அவர்களை மறந்தது போல அவர்களுடைய ஆத்துமங்களின் மட்டில் வெகு அசட்டையாயிருக்கிறீர்களென்பது எல்லாருக்குந் தெரிந்த விஷயம் .
அவர்கள் உயிரோடிருந்தபோது அவர்கள் யாதொரு பெல்லாப்பு நிமித்தம் துன்பம் அனுபவிக்கிறதை யாவது நீங்கள் கண்டபோது, படாத பிரயாசையெல்லாம் பட்டு, செய்யாத செலவெல்லாம் செய்து யாதொன்றுக்கும் அஞ்சாமலும், பின்வாங்காமலும், அவர்களைக் காப்பாற்றவும் தேற்றவும் மீட்கவும் மிகவும் உழைத்திருப்பீர்களல்லவோ? இப்போது
அறிந்தும், அவர்களுக்கு ஆ றுதலையும் இளைப்பாற்றியையும் வருவிக்க ஒன்றும் செய்யாமலிருக்கிறதெப்படி? அந்த ஆத்துமாக்களுக்காக உங்களாலே கூடுமானதெல்லாம் செய்யாதுபோனால், நீங்கள் ஒநாய் கரடி புலியினங்களைக் காட்டிலும் அதிகக் கொடுமையுள்ளவர்களென்று சொல்ல வேண்டும்.
நீங்கள் குடியிருக்கிற வீடும், அணிந்திருக்கின்ற உடையும், உழுகிற காடும், பயிர் செய்யுந் தோட்டமும், விதைக்கற வயலும், செய்யுந் தொழிலும், அனுபவிக்கிற ஆஸ்தியும் அவர்களுடையதாகையால், இவையெல்லாம் மரித்த இவர்களுடைய பேரையும் உங்களுடைய கடமையையும் இரவும் பகலும் ஓயாமல் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதல்லவோ? இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதே போகுமோ?
மேலும் உங்களுடைய ஊரெல்லையிலே இருக்கிற கல்லறையிலிருந்து ஒரு சத்தம் புறப்படுகிறாற்போல, "எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்" என்று மரித்தவர்கள் உங்களைப் பேரொலியாய்க் கூப்பிடுகிறதாக நினைத்துக்கொள்ளுங்கள். இந்த அபயசத்தத்துக்கு முதலாய் நீங்கள் இரங்காதேபோனால், இனிமேல் உங்களுக்கு என்னத்தைச் சொல்லப்போகிறோம். அர்ச் சின்னப்பர் திருவுளம்பற்றினாற்போல, நீங்கள் உங்களுடையவர்களின் ஆத்துமங்களை நினைக்காதிருப்பதைப் பற்றி சத்திய வேதத்தை விட்டுவிட்டாற்போல புறமதத்தாரைவிட நீங்கள் கெடவர்களென்றும் கொடுமையுள்ளவர்களென்றுந்தான் உங்களைக் கூறவேனும்.
கிறிஸ்துவர்களே, அர்ச் சின்னப்பர் எழுதிவைத்த இந்தப் பயங்கரமான வாக்கியம் உங்களுக்கு வராதபடிக்குச் சமஸ்த உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரிலும், விசேஷமாய் உங்களுடையவர்களின் ஆத்துமாக்கள் பேரிலும் வெகு இரக்கமாயிருந்து அவர்களை ஒருபோதும் மறவாமல் அவர்களைக் குறித்து ஜெப தப தானதர்மங்களைச் செய்து, திருச்சபையினுடைய பலன்களைப் பெற்று, திவ்விய பூசையை அடிக்கடி ஒப்புக் கொடுக்கப் பண்ணவேனும். அப்படிச் செய்வீர்களேயானால் உங்களுக்குண்டான ஒரு பலத்த கடனைத் தீர்த்து விடுகிறதுமல்லாமல், உங்களுக்கு அநேகம் நன்மைகளை வருவித்துக் கொள்வீர்களென்று அறியக்கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்
சேசுவின் திரு இருதய மே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
செபம்
மட்டற்ற கிருபையுடைத்தான சர்வேசுரா, நாங்கள் பொழிந்த தாழ்மையான ஜெபங்களைக் கிருபாகடாக்ஷமாய்ப் பார்த்துக்கொள்ளும். தேவரீரை அறிந்து நம்பி உறுதியாய் ஸ்துதித்து வந்த எங்கள் பந்துக்களுடையவும், சகோதரருடையவும், உபகாரிகளுடையவும், சிநேகிதருடையவும் ஆத்துமங்களுக்காக நாங்கள் ஒப்புக் கொடுக்கும் இந்த எங்களுடைய செபங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை உம்மிடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று தேவரீரை பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
பதினாறாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது :
கல்லறைக்குப் போய் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து முழந்தாளிலிருந்து 10 பரமண்டல மந்திரமும், 10
பிரியதத்தமந்திரமும், 10 திரித்துவ ஆராதனையும் வேண்டிக்கொள்ளுகிறது.
புதுமை
ஜெர்மனியா தேசத்திலுள்ள வோர்ம்ஸ் என்ற பட்டணத்தருகிலுள்ள விஸ்தாரமான ஒரு காட்டில் இரண்டு பலத்த சேனைகளுக்குள் ஒரு கடின போர்ச் சண்டை நடந்தது. அச்சண்டையிலே திரளான சேவகர் மடிந்து அக்காட்டில்தானே அடக்கம்பண்ணப்பட்டார்கள். கொஞ்ச நாளைக்குப் பிற்பாடு இராத்திரி தோறும் ஆகாயத்தில் பெரிய சண்டை நடந்தாற்போலே சப்தித்தது. அந்நாட்டிலுள்ளவர்களெல்லாம் பயந்து கொண்டிருந்தார்கள். விடியற்காலமானதும் இதெல்லாம் நின்று போகும். சந்நியாசிகளுடைய மடம் ஒன்று அக்காட்டருகே இருந்ததினாலே அதில் கேட்கப்பட்ட பயங்கரமான இந்த சத்தங்களினாலே சந்நியாசிமார் தங்கள் செபத்தியானங்களைச் சரியாய் நிறைவேற்றக்கூடாமலிருந்தது. அதனால் மிகப்புண்ணியவானாயிருந்த ஒரு சந்நியாசியாரும் இன்னும் வேறு சில சந்நியாசிமார்களும் இதென்னவென்று அறிய அக்காட்டுக்குப் போனார்கள் . தங்களுடைய நம்பிக்கைஎல்லாம் சர்வேசுரன் பேரில் வைத்து செபங்களைப் பொழிந்து கொண்டு அந்த இடத்துக்கு வந்தார்கள் .வந்து சேர்ந்த உடனே திரளான போர்ச் சேவகர் வெகு இரைச்சலோடு தங்களுக்குள்ளே போர்ச் சண்டை செய்ய எத்தனிக்கிறாற் போலக் கண்டார்கள் .
மேற்சொன்ன புண்ணியவானான சந்நியாசியாரானவர் வெகுவாய்ப் பயந்தாலும், அர்ச் திரித்துவத்தின் பேரைச் சொல்லி, நீங்கள் யாரென்றும் உங்களுக்கு என்ன வேணுமென்றுஞ் சொல்லுங்கள் என்றார். அச்சேவகரில் ஒருவன் மறுமொழியாக நாங்கள் உயிருள்ள சேவகரல்ல, முன் இவ்விடத்தில் செத்து விழுந்த போர்ச் சேவகருடைய ஆத்துமங்கள்தான். எங்களுடைய பிரேதங்கள் இந்த இடத்தில் அடக்கம்பண்ணியிருந்தாலும், எங்களுடைய ஆத்துமங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கின்றன. எங்களைச் சுட்டெரிக்கும் அனல்களை நீங்கள் காணாதிருந்தாலும் அந்த அனல்களினால் பொறுக்கப்படாத வேதனைகள் அனுபவிக்கிறோம் என்றான். அதற்கு சந்நியாசியாரானவர் நடுநடுங்கிக்கொண்டு, இந்த ஆபத்துள்ள வேளையிலே சகாயமாக உங்களுக்கு நாங்கள் என்ன செய்யக்கூடுமென்று சொல்லுங்கள் என்றார். அதற்கு அந்தச் சேவகன் நீங்கள் எங்களுக்கிரங்கி எங்களுக்கு ஆறுதலையும
மீட்பையும் வருவிக்கும்படியாக சர்வேசுரனுடைய சித்தத்தின்படியே நீங்கள் கண்டதும் , கேட்டதுமாகிய இவைகள் எல்லாம் நடக்கிறது . சகலத்தையும் துறந்த சந்நியாசிமார்களான உங்களுடைய செபமும் தவமும் விசேச விதமாய் நீங்கள் ஒப்புக்கொடுக்கிற திவ்விய பூசையும் , எங்களை வருத்தமின்றி மீட்கக் கூடும் . நாங்கள் எங்கள் அவதி தீர ஒன்றும் செய்யக்கூடாததைப் பற்றி , எங்கள் பரிகாரத்தின் கடன் தீருமளவும் நாங்கள் வேகவும் , வருத்தப்படவும் வேண்டும் . ஆகையினாலே நீங்கள் எங்கள் பேரில் இரக்கமாய் இருக்க வேண்டுமென்று உங்களை மன்றாடுகிறோம் என்றான் . அவன் அப்படிச் சொன்ன உடனே கூட நின்ற திரளான சேவகர் எல்லோரும் குருக்களே, சந்நியாசிமார்களே, தகப்பன்மார்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூவினார்கள். அக்ஷனத்திலேதானே அவர்களெல்லோரும் ஆகாயத்திலே அக்கினிமயமாய் மறைந்து போகவே, அடுத்த ஒரு மலை மேல் ஒரு பெரிய
நெருப்பு காணப்பட்டது. சந்நியாசிகளோவெனில் அதிகமதிகமாய்ப் பயந்து தங்களுடைய மடத்துக்கு திரும்பி வந்து அந்த போர்ச்சேவகருடைய ஆத்துமங்களைக் குறித்து வெகு ஜெபங்களையும் தவங்களையும் நடப்பித்து, அநேகம் முறை திவ்விய பூசையையும் ஒப்புக் கொடுத்தார்கள். அதற்கப்பால் அந்தப் பேரொலியும் ஆயுதச் சப்தமும் முழுமையாய் நின்றுவிட்டது.
இந்தப் புதுமையைக் கேட்ட கிறிஸ்துவர்களே, உங்களுடையவர்களின் ஆத்துமாக்கள் தேவ சித்தத்தின்படியே கல்லறைகளிலிருந்து புறப்பட்டு உங்களுக்குக் காணப்பட்டால் என்ன சொல்லுவார்களென்று நினைத்துப் பாருங்கள். நிச்சயமாகவே தங்கள் பேரிலே இரக்கமாயிருக்க வேணுமென்று உங்களை மன்றாடுவார்கள். அதனாலே முன்சொன்ன சந்நியாசிமார்கள் இந்தச் சேவகரைக் குறித்துச் செபதபம் பூசை நடப்பித்தது போலவே நீங்களும் உங்களுடையவர்களின் ஆத்துமங்களைக் குறித்துச் செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குச் சொந்தமான ஆத்துமாக்கள் என்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்க வேணுமென்பதற்கு முன் சொன்ன நியாயங்கள் பலத்த நியாயங்களாயிருந்தாலும், எண்ணிக்கையில்லாத கிறிஸ்துவர் கள் இவைகளைச் சரியாய்க் கவனித்துப் பார்க்காமல் அந்த ஆத்துமாக்களை மறந்து, அவர்களுடைய அவதியைக் குறைக்க ஒன்றும் செய்யாமற் போகிறார்கள். அப்படி உத்தரிக்கிற ஆத்துமாக்களை மறந்து அவர்களுக்காக ஒன்றும் செய்யாதிருக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை யென்று இப்போது காண்பிக்க வேணும்.
ஒருவன் தன்னுடைய சொந்தக்காரரை விசாரிக்காமற்போனால் அவன் சத்திய வேதத்தை விட்டு புறமதத்தானைவிட அதிகக் கெட்டவனாயிருக்கிறானென்று அர்ச் சின்னப்பர் திமோத்தேயு இரண்டாம் நிருபம் ஐந்தாம் அதிகாரம் ஏழாம் வசனத்தில் எழுதியிருக்கிறார். உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குச் சொந்தமான ஆத்துமாக்களென்று காட்டுவோ மேயாகில், அவர்களை விசாரிக்காமல் போவது பெரிய துரோக மென்றும், பெரிய கொடுமையென்றும் ஒப்பித்தாற்போலாகுமல்லவோ?
முதலாவது சகலமான உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குத் தகப்பனாகிய சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்டு. அவருடைய பிரதாபமுள்ள சாயலைத் தரிசித்து, அவருடைய இஷ்டப்பிரசாதத்தோடு இறந்து, என்றென்றைக்கும் அவரிடத்திலே வாழ நியமிக்கப்பட்டிருக்கையில், அந்த ஆத்துமாக்கள் நமக்கு வேற்றுமையுள்ள ஆத்துமாக்களென்று சொல்லக்கூடுமோ? நமக்குச் சம்பந்தமற்ற ஆத்துமாக்களென்று நினைக்கக் கூடுமோ?
மீண்டும் நமதாண்டவருமாய் இரட்சகருமாய் சகோதரருமாயிருக்கிற சேசுகிறிஸ்துநாதருடைய திவ்விய இரத்தத்தினால் அந்த ஆத்துமாக்கள் மீட்டிரட்சிக்கப்பட்டு, அவருடைய ஞான உறுப்புகளாயிருந்து, அவருடன் தேவ சிநேகத்தால் பிரியாத பந்தனமாய் ஒன்றித்து, அவரோடேகூட நித்தியத்தில் எவ்வித பாக்கியங்களையும் அநுபவிக்கத் தெரிந்து கொள்ளப் பட்டிருக்கையில், அந்த ஆத்துமாக்களை உங்களுக்குப் புறத்தியாத்துமாக்களென் பீர்களோ? சம்பந்தமற்ற ஆத்துமாக்களென்று நினைப்பீர்களோ? மேலும், சகலமான கிறிஸ்துவர்களுக்கு சர்வேசுரன் ஒருவரே தகப்பனும், சேசுநாதர் ஒரே இரட்சகரும், தேவமாதா ஒரே தாயாரும், ஞானஸ்நானம் ஒரே ஞான முத்திரையும், திருச்சபை ஒரே ஞான மந்தையும், மோட்சபாக்கியம் ஒரே ஒரே ஞான சரிரமும் ஒரே ஆத்துமமுமாயிருக்கிறார்களே.
இது இப்படியிருக்க மரித்தவர்களுடைய ஆத்துமாக்களை உயிரோடிருக்கிற நமக்குப் புறத்தி ஆத்துமாக்களென்று சொல்லலாமோ? சம்பந்தமற்ற ஆத்துமாக்க ளென்று நினைக்கலாமோ? அவர்கள் பேரில் இரக்கமில்லா மலிருக்கலாமோ? அவர்களுக்கு ஆறுதலுமின்றி ஒத்தாசை புமின்றி அவர்களை வருத்தப்படவிட்டுவிடலாமோ? அவர்களை அப்படி விட்டால் அது பெரிய அநியாயமும் பலத்த கொடுமையுமென்று உங்களுக்குத் தோன்றாதோ?
இரண்டாவது உத்தரிக்கிற ஆத்துமாக்களை அப்படி பொதுப்படப் பார்த்தால் உங்களுக்குச் சொந்தமல்ல வென்றாலும், அந்த ஆத்துமாக்களுக்குள்ளே எத்தனையோ ஆத்துமாக்கள் உங்களுடனே அதிக சம்பந்தமும் அதிக பந்தனமும் அதிக சொந்தமுமாய் இருக்கிறார்களென்று பாருங்கள். உங்களுடைய தேசத்தார். ஊராரையும், சிநேகிதர், உபகாரிகளையும், உறவின் முறையாரையும், உபாத்தியாயர், உபதேசிமார்களையும் குருக்கள் மேற்றிராணிமார்களையும் உங்களுக்கு அந்நியர்களென்று நினைக்கவும் கூடாதென்றால் அவர்களுடைய ஆத்துமங்களுக்காக ஏதாவது பிரயாசைப்பட வேண்டாமோ? உங்களைப்பற்றி உங்களுடைய குருக்களும் உபதேசி உபாத்திமார்களும் எவ்வளவு துன்பப்பட்டு உங்களை மோட்சத்துக்குச் செல்லும் வழியிலே நிறுத்த வருந்தினார்களென்று அறியமாட்டீர்களோ?
உங்களுடைய உறவின்முறையார் எப்போதும் உங்களோடு கூட நன்மை தின்மை காரியங்களிலே நின்று உங்களுக்கு எவ்வளவு உதவி சகாயம் பண்ணினார்களென்று நினைக்காதிருப்பீர்களோ? நீங்கள் பட்ட வருத்தங்களிலும் இக்கட்டுகளிலும் உங்களுடைய சிநேகிதர் உபகாரிகளும் உங்களுக்கு எவ்வளவு பட்சங்காட்டி எவ்வளவு உபகாரம் செய்து கொண்டு வந்தார்களென்றும் உங்களுக்குத் தெரியாமல் இருக்குமோ ? உங்களுடைய ஊரார் தேசத்தாரும் உங்களோடு ஒரே சமூகமாய் இருந்ததினாலே யோசிக்காதிருப்பீர்களோ ? மெய்யாகவே ,சத்தியமாகவே , இவர்கள் எல்லோரும் உங்களுக்கு மிகவும் சொந்தமென்றும் உறவென்றும் பந்தனமென்றும் சொல்லவேண்டும் அல்லவோ ?இவை உண்மையென்றால், அவர்களுடைய ஆத்துமாக்களை மறவாமல் அவர்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்க உங்களுடைய செப தப தான தர்மங்களினாலே பிரயாசைப்பட வேணுமென்கிறதற்குச் சந்தேகமில்லை.
மூன்றாவது உங்களுடைய தாய் தகப்பன்மார்களையும், பிள்ளைகளையும், புருஷன் பெண் சாதியையும் தம்பி அண்ணனையும், தங்கை தமக்கையாரையும், மாமனாரையும், மைத்துனி மைத்துனன்மாரையும் உங்களுக்கு மிகச் சொந்தமென்றும் கிட்டின உறவென்றும் உற்ற பந்தனமென்றும் சற்றாகிலும் ஒத்துக் கொள்ளுவீர்கள் ஆயினும் அவர்கள் செத்தபிற்பாடு அவர்களை மறந்தது போல அவர்களுடைய ஆத்துமங்களின் மட்டில் வெகு அசட்டையாயிருக்கிறீர்களென்பது எல்லாருக்குந் தெரிந்த விஷயம் .
அவர்கள் உயிரோடிருந்தபோது அவர்கள் யாதொரு பெல்லாப்பு நிமித்தம் துன்பம் அனுபவிக்கிறதை யாவது நீங்கள் கண்டபோது, படாத பிரயாசையெல்லாம் பட்டு, செய்யாத செலவெல்லாம் செய்து யாதொன்றுக்கும் அஞ்சாமலும், பின்வாங்காமலும், அவர்களைக் காப்பாற்றவும் தேற்றவும் மீட்கவும் மிகவும் உழைத்திருப்பீர்களல்லவோ? இப்போது
அறிந்தும், அவர்களுக்கு ஆ றுதலையும் இளைப்பாற்றியையும் வருவிக்க ஒன்றும் செய்யாமலிருக்கிறதெப்படி? அந்த ஆத்துமாக்களுக்காக உங்களாலே கூடுமானதெல்லாம் செய்யாதுபோனால், நீங்கள் ஒநாய் கரடி புலியினங்களைக் காட்டிலும் அதிகக் கொடுமையுள்ளவர்களென்று சொல்ல வேண்டும்.
நீங்கள் குடியிருக்கிற வீடும், அணிந்திருக்கின்ற உடையும், உழுகிற காடும், பயிர் செய்யுந் தோட்டமும், விதைக்கற வயலும், செய்யுந் தொழிலும், அனுபவிக்கிற ஆஸ்தியும் அவர்களுடையதாகையால், இவையெல்லாம் மரித்த இவர்களுடைய பேரையும் உங்களுடைய கடமையையும் இரவும் பகலும் ஓயாமல் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதல்லவோ? இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதே போகுமோ?
மேலும் உங்களுடைய ஊரெல்லையிலே இருக்கிற கல்லறையிலிருந்து ஒரு சத்தம் புறப்படுகிறாற்போல, "எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்" என்று மரித்தவர்கள் உங்களைப் பேரொலியாய்க் கூப்பிடுகிறதாக நினைத்துக்கொள்ளுங்கள். இந்த அபயசத்தத்துக்கு முதலாய் நீங்கள் இரங்காதேபோனால், இனிமேல் உங்களுக்கு என்னத்தைச் சொல்லப்போகிறோம். அர்ச் சின்னப்பர் திருவுளம்பற்றினாற்போல, நீங்கள் உங்களுடையவர்களின் ஆத்துமங்களை நினைக்காதிருப்பதைப் பற்றி சத்திய வேதத்தை விட்டுவிட்டாற்போல புறமதத்தாரைவிட நீங்கள் கெடவர்களென்றும் கொடுமையுள்ளவர்களென்றுந்தான் உங்களைக் கூறவேனும்.
கிறிஸ்துவர்களே, அர்ச் சின்னப்பர் எழுதிவைத்த இந்தப் பயங்கரமான வாக்கியம் உங்களுக்கு வராதபடிக்குச் சமஸ்த உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரிலும், விசேஷமாய் உங்களுடையவர்களின் ஆத்துமாக்கள் பேரிலும் வெகு இரக்கமாயிருந்து அவர்களை ஒருபோதும் மறவாமல் அவர்களைக் குறித்து ஜெப தப தானதர்மங்களைச் செய்து, திருச்சபையினுடைய பலன்களைப் பெற்று, திவ்விய பூசையை அடிக்கடி ஒப்புக் கொடுக்கப் பண்ணவேனும். அப்படிச் செய்வீர்களேயானால் உங்களுக்குண்டான ஒரு பலத்த கடனைத் தீர்த்து விடுகிறதுமல்லாமல், உங்களுக்கு அநேகம் நன்மைகளை வருவித்துக் கொள்வீர்களென்று அறியக்கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்
சேசுவின் திரு இருதய மே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
செபம்
மட்டற்ற கிருபையுடைத்தான சர்வேசுரா, நாங்கள் பொழிந்த தாழ்மையான ஜெபங்களைக் கிருபாகடாக்ஷமாய்ப் பார்த்துக்கொள்ளும். தேவரீரை அறிந்து நம்பி உறுதியாய் ஸ்துதித்து வந்த எங்கள் பந்துக்களுடையவும், சகோதரருடையவும், உபகாரிகளுடையவும், சிநேகிதருடையவும் ஆத்துமங்களுக்காக நாங்கள் ஒப்புக் கொடுக்கும் இந்த எங்களுடைய செபங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை உம்மிடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று தேவரீரை பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
பதினாறாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது :
கல்லறைக்குப் போய் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து முழந்தாளிலிருந்து 10 பரமண்டல மந்திரமும், 10
பிரியதத்தமந்திரமும், 10 திரித்துவ ஆராதனையும் வேண்டிக்கொள்ளுகிறது.
புதுமை
ஜெர்மனியா தேசத்திலுள்ள வோர்ம்ஸ் என்ற பட்டணத்தருகிலுள்ள விஸ்தாரமான ஒரு காட்டில் இரண்டு பலத்த சேனைகளுக்குள் ஒரு கடின போர்ச் சண்டை நடந்தது. அச்சண்டையிலே திரளான சேவகர் மடிந்து அக்காட்டில்தானே அடக்கம்பண்ணப்பட்டார்கள். கொஞ்ச நாளைக்குப் பிற்பாடு இராத்திரி தோறும் ஆகாயத்தில் பெரிய சண்டை நடந்தாற்போலே சப்தித்தது. அந்நாட்டிலுள்ளவர்களெல்லாம் பயந்து கொண்டிருந்தார்கள். விடியற்காலமானதும் இதெல்லாம் நின்று போகும். சந்நியாசிகளுடைய மடம் ஒன்று அக்காட்டருகே இருந்ததினாலே அதில் கேட்கப்பட்ட பயங்கரமான இந்த சத்தங்களினாலே சந்நியாசிமார் தங்கள் செபத்தியானங்களைச் சரியாய் நிறைவேற்றக்கூடாமலிருந்தது. அதனால் மிகப்புண்ணியவானாயிருந்த ஒரு சந்நியாசியாரும் இன்னும் வேறு சில சந்நியாசிமார்களும் இதென்னவென்று அறிய அக்காட்டுக்குப் போனார்கள் . தங்களுடைய நம்பிக்கைஎல்லாம் சர்வேசுரன் பேரில் வைத்து செபங்களைப் பொழிந்து கொண்டு அந்த இடத்துக்கு வந்தார்கள் .வந்து சேர்ந்த உடனே திரளான போர்ச் சேவகர் வெகு இரைச்சலோடு தங்களுக்குள்ளே போர்ச் சண்டை செய்ய எத்தனிக்கிறாற் போலக் கண்டார்கள் .
மேற்சொன்ன புண்ணியவானான சந்நியாசியாரானவர் வெகுவாய்ப் பயந்தாலும், அர்ச் திரித்துவத்தின் பேரைச் சொல்லி, நீங்கள் யாரென்றும் உங்களுக்கு என்ன வேணுமென்றுஞ் சொல்லுங்கள் என்றார். அச்சேவகரில் ஒருவன் மறுமொழியாக நாங்கள் உயிருள்ள சேவகரல்ல, முன் இவ்விடத்தில் செத்து விழுந்த போர்ச் சேவகருடைய ஆத்துமங்கள்தான். எங்களுடைய பிரேதங்கள் இந்த இடத்தில் அடக்கம்பண்ணியிருந்தாலும், எங்களுடைய ஆத்துமங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கின்றன. எங்களைச் சுட்டெரிக்கும் அனல்களை நீங்கள் காணாதிருந்தாலும் அந்த அனல்களினால் பொறுக்கப்படாத வேதனைகள் அனுபவிக்கிறோம் என்றான். அதற்கு சந்நியாசியாரானவர் நடுநடுங்கிக்கொண்டு, இந்த ஆபத்துள்ள வேளையிலே சகாயமாக உங்களுக்கு நாங்கள் என்ன செய்யக்கூடுமென்று சொல்லுங்கள் என்றார். அதற்கு அந்தச் சேவகன் நீங்கள் எங்களுக்கிரங்கி எங்களுக்கு ஆறுதலையும
மீட்பையும் வருவிக்கும்படியாக சர்வேசுரனுடைய சித்தத்தின்படியே நீங்கள் கண்டதும் , கேட்டதுமாகிய இவைகள் எல்லாம் நடக்கிறது . சகலத்தையும் துறந்த சந்நியாசிமார்களான உங்களுடைய செபமும் தவமும் விசேச விதமாய் நீங்கள் ஒப்புக்கொடுக்கிற திவ்விய பூசையும் , எங்களை வருத்தமின்றி மீட்கக் கூடும் . நாங்கள் எங்கள் அவதி தீர ஒன்றும் செய்யக்கூடாததைப் பற்றி , எங்கள் பரிகாரத்தின் கடன் தீருமளவும் நாங்கள் வேகவும் , வருத்தப்படவும் வேண்டும் . ஆகையினாலே நீங்கள் எங்கள் பேரில் இரக்கமாய் இருக்க வேண்டுமென்று உங்களை மன்றாடுகிறோம் என்றான் . அவன் அப்படிச் சொன்ன உடனே கூட நின்ற திரளான சேவகர் எல்லோரும் குருக்களே, சந்நியாசிமார்களே, தகப்பன்மார்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூவினார்கள். அக்ஷனத்திலேதானே அவர்களெல்லோரும் ஆகாயத்திலே அக்கினிமயமாய் மறைந்து போகவே, அடுத்த ஒரு மலை மேல் ஒரு பெரிய
நெருப்பு காணப்பட்டது. சந்நியாசிகளோவெனில் அதிகமதிகமாய்ப் பயந்து தங்களுடைய மடத்துக்கு திரும்பி வந்து அந்த போர்ச்சேவகருடைய ஆத்துமங்களைக் குறித்து வெகு ஜெபங்களையும் தவங்களையும் நடப்பித்து, அநேகம் முறை திவ்விய பூசையையும் ஒப்புக் கொடுத்தார்கள். அதற்கப்பால் அந்தப் பேரொலியும் ஆயுதச் சப்தமும் முழுமையாய் நின்றுவிட்டது.
இந்தப் புதுமையைக் கேட்ட கிறிஸ்துவர்களே, உங்களுடையவர்களின் ஆத்துமாக்கள் தேவ சித்தத்தின்படியே கல்லறைகளிலிருந்து புறப்பட்டு உங்களுக்குக் காணப்பட்டால் என்ன சொல்லுவார்களென்று நினைத்துப் பாருங்கள். நிச்சயமாகவே தங்கள் பேரிலே இரக்கமாயிருக்க வேணுமென்று உங்களை மன்றாடுவார்கள். அதனாலே முன்சொன்ன சந்நியாசிமார்கள் இந்தச் சேவகரைக் குறித்துச் செபதபம் பூசை நடப்பித்தது போலவே நீங்களும் உங்களுடையவர்களின் ஆத்துமங்களைக் குறித்துச் செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
பதினேழாம் நாள்
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இடும் பிரலாபங்களைக் காண்பிக்கிற வகையாவது
தியானம்
பிதாப்பிதாவாகிய யோபென்பவர் எவராலுங் கைவிடப்பட்டு எல்லாவற்றையும் இழந்து, சர்வாங்கத்திலும் நொந்து புழுத்து நாறி தம்மைச் சந்திக்கவந்த தம்முடைய மூன்று விசேஷ சிநேகிதருக்குத் தாம் அநுபவித்த நிற்பாக்கியங்களை அழுகையுடன் விவரித்தப்பின், பெருமூச்சு விட்டு சொன்னதாவது :'ஆண்டவருடைய கையானது என்னைத் தண்டிக்கிறதினாலே என் சினேகிதரே, நீங்கள் சற்றாகிலும் என்பேரில் இரக்கமாயிருங்கள், என்பேரில் இரக்கமாயிருங்கள்' என்பார்.
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் சகலராலும் மறக்கப்பட்டு தங்களுக்கு ஆறுதலாகத் தாங்களே ஒன்றுஞ் செய்யக்கூடாமல் நெருப்பிலே சர்வாங்கத்திலும் வேதனைப்பட்டுப் பிதாப் பிதாவாகிய யோபென்பவர் விம்மிச்சொன்ன புலம்பல்களைப் போலே உங்களை நோக்கி மிகுந்த துயரத்துடனே உச்சரிக்கிறதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதாவது "சர்வேசுரனுடைய கையானது எங்களைத் தண்டிக்கிறதென்கிறதினாலே எங்கள் சிநேகிதரான நீங்கள் சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்."
"எங்களுடைய ஞான சகோதரரான அனைத்து கிறிஸ்துவர்களே! எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள். என்னத்தினாலேயென்றால், பூமண்டலத்தில் இருக்கக் கூடுமான சகல வேதனைகளிலும் அதிக வேதனைப்பட்டு, அகோரமாய் எரியும் நெருப்பிலே வெந்து யாதோர் ஆறுதலுமின்றி, இளைப்பாற்றியுமின்றி, மனோவாக்குக் கெட்டாத வருத்தங்களை அனுபவிக்கிறோமே.
எங்களுக்காக நீங்கள் கொஞ்சம் ஜெபம்பண்ணி ஒரு தவக்கிரியையும் செய்து பிச்சையையுங் கொடுத்து எங்களைத் தேற்றி மீட்கிறது உங்களாலே கூடுமான சகாயந்தான். இவைகளைத் செய்வீர்களென்ற நம்பிக்கையல்லாமல் எங்களுக்கு வேறே நம்பிக்கையில்லை. ஒ சகோதரர்களே ஆண்டவருடைய திருமுகத்தைப் பார்த்து நீங்கள் சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்" என்பார்கள். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே, உத்தரிக்கிற ஆத்துமாக்களுடைய பிரலாபத்தைக் கேட்டு அவர்களுடைய வேதனை தீர என்னத்தைச் செய்வீர்கள்?
"எங்களுடைய ஊரார் தேசத்தாரும், சிநேகிதர், உபகாரிகளும், உறவின்முறையாருமானவர்களே! நீங்களாவது எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள். என்னத்தினாலேயென்றால், நாங்கள் எவ்வித வாதை வேதனைகளையும் யாதோர் ஆதரவின்றி அநுபவிக்கிறதுமல்லாமல் மட்டில்லாத அன்போடு நேசித்து விரும்புகிற சர்வேசுரன் தாமே எங்களைக் கோபமாய்ப் பார்த்து தூரமாய்த் தள்ளி, அகோரமாய்த் தண்டித்து வருத்தப்படுத்துகிறாரே,
நாங்கள் உங்களுடன் பூமியிலே சஞ்சரிக்கும்போது, நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ, பட்சத்தைக் காண்பித்தீர்கள், எம்மாத்திரம் ஒத்தாசை பண்ணினீர்கள். எத்தனை உபகாரங்களைச் செய்தீர்களே, இப்போது எங்கள் பேரிலுள்ள அந்த பட்சம் அற்றுப் போச்சுதோ, உங்களுடைய தயவு மாறிப்போனதோ, உங்களுடைய தயாளஞ் சலித்ததோ, எங்களுடைய நிர்பாக்கியந் தீர கொஞ்சம் பிரயாசைப்படக்கூடாதோ, எங்களுக்காக ஒரு ஜெபத்தைச் செய்யமாட்டீர்களோ, பிச்சைக் கொடுக்க பணமில்லையோ, கொஞ்சந் தவம் பண்ணத் திராணியில்லாமற் போச்சுதோ? சொல்லுங்கள் ஒ சகோதரர்களே! ஆண்டவர் எங்களைக் கோபமா தண்டிக்கிறதினாலே நீங்களாவது எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள் " என்பார்கள்
புண்ணியவான்களான கிறிஸ்தவர்களே, ! உத்தரிக்கின்ற ஆத்துமாக்களின் இந்த அபய சத்தத்தைக் கேட்டு அவர்களுடைய அவதி நீங்க என்னத்தைச் செய்வீர்கள்?
" என் மக்களே , உங்களுடைய தகப்பனாகிய என் பேரில் இரக்கமாயிருங்கள். அதேதென்றால் இப்போது நெருப்பு நிறைந்த இந்தச் சிறைக்கூடத்தில் சிறைப்பட்டுச் சொல்லிலும் நினைவிலும் அடங்காத வேதனைகளை அனுபவிக்கிறேன். மோட்ச பேரின்பத்துக்குப் போகவேணுமென்று பொறுக்கப்படாத ஆசையாயிருந்தாலும், நான் அதற்குப் போகாதபடிக்கு நிறுத்தப்பட்டு, அதிக தாகத்தால் தவிக்கிற மனுஷன் தண்ணீரைக் காணாமல் வருத்தப்படுகிறதை விட நான் அதிகமாய் வருத்தப்படுகிறேன் .
என் அன்புள்ள பிள்ளைகளே! உங்கள் தகப்பனாகிய என்னை மறந்துப் போனீர்களே? உங்களைப் பெற்று வளர்த்து, உங்களுக்காகப் படாத பிரயாசையெல்லாம் பட்டு, நீங்கள் அநுபவிக்கிற எல்லாவற்றையும் நானே உங்களுக்குத் தேடிவைத்தேன். உங்களுக்கு யாதொரு கவலை பொல்லாப்பு நேரிட்டிருந்த போது உங்களைத் தேற்றவும் , சொஸ்தமாக்கவும், காப்பாற்றவும் , இராப்பகலாய் உழைத்து ,அலைந்து செய்யக்கூடுமானதெல்லாம் செய்தேனே . ஐயையோ! உங்களுக்குத் திரண்ட ஆஸ்திகளை வைத்துப் போகவேணும் என்றும் , உங்களுடைய பாக்கியத்தையும் மகிமையையும் அதிகப்படுத்த வேண்டுமென்றும் எனக்கிருந்த மிகுந்த ஆசையினாலே அநேகம் குற்றங்களைப் பண்ணினேனே . அநேக பாவங்களையும் கட்டிக் கொண்டேன் . நான் உங்களை அதிகமாய் நேசித்ததனால் அல்லவோ இவ்வளவு தண்டிக்கப்படுகின்றேன். பிள்ளையாகிய நீங்கள், என் ஆஸ்திகளையெல்லாம் அடைந்திருக்கிற நீங்கள். நான் கட்டின வீட்டிலே குடியிருக்கிற நீங்கள், நான் உங்களுக்கு தேடி வைத்த சாப்பாட்டைச் சாப்பிடுகிற நீங்கள், என்னை மறந்து போகிறதெப்படி?
என் ஆத்துமத்தினுடைய நிர்பாக்கியத்தை தீர்த்து, என்னை மோட்ச பேரின்பத்தில் சேர்ப்பிப்பதற்காக சில பிச்சைக்காரருக்குப் பிச்சைத் கொடுக்கவும். கோவிலிலே காணிக்கை செலுத்தவும், சில தருமங்களைப் பண்ணுவிக்கவும் உங்களுடைய கையிலே காசில்லையென்பீர்களோ? உங்களுக்கு உண்டாயிருக்கிற பணம் காசெல்லாம் என்னுடையதென்று மறந்து போனீர்களோ? ஐயையோ !ஆண்டவருடைய கையானது என்னை அகோரமாய்த் தண்டிக்கிறதினாலே என் பிள்ளைகளாகிய நீங்களாவது சற்றாகிலும் என்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள் " என்று தகப்பன் சொல்லுவான். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே !இந்த பிரலாபமுள்ள வார்த்தைகளைக் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதி தீர என்னத்தைச் செய்ய மாட்டீர்கள் ?
" பிரியமுள்ள மக்களே !உங்களுடைய தாயார் நான்தான். நீங்களாவது என் பேரில் சற்று இரக்கமாயிருங்கள் ,ஏனென்றால் நான் உங்களை என் வயிற்றில் ஒன்பது மாதம் சுமந்து வெகு அபாயத்தோடு பெற்றேன். உங்களுக்கு இரண்டு வருஷம் தாய்ப் பாலூட்டினேன். உங்களை என் கையிலேந்தி, என் மடியிலே வளர்த்து, உங்களுக்கு சலியாத பட்சத்தைக் காட்டினேனே, நீங்கள் வியாதியாய் இருந்தபோது யாதோர் ஒய்வுமின்றி இரவிலும் விழித்துப் பகலிலும் உழைத்து உங்களைத் தேற்றி உங்களுக்கு வேண்டியவைகளைக் கொடுத்தேனல்லவோ? அப்போது என் பேரில் எவ்வளவு பட்சமாயிருந்தீர்கள் !இப்போது எல்லாவற்றையும் மறந்தது போலேயும், நான் உங்களுக்கு ஒரு பரதேசியாய் இருக்கிறாற்போலேயும், என்னையும் நினைக்கிறதில்லை, நான் படுகிற வருத்தங்களையும் பார்க்கிறதில்லை. எனக்கு உதவிசகாயமும் பண்ணுகிறதில்லை.
என் மகனே , என் மகளே! அப்படிச் செய்வது உங்களுக்கு நல்லதோ? உங்களுடைய தாயான நான் இவ்வளவு துன்ப வேதனையினை அநுபவித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் சந்தோஷித்து விருந்து கொண்டாடி விளையாடிக்கொண்டிருக்கலாமோ? மகனே! மகளே என்பேரில் இரங்கி என்னை, சுடும் நெருப்பை அவிக்கக் கொஞ்சங் கண்ணீரைச் சிந்துங்கள். என் நிர்ப்பாக்கியத்தைத் தீர்க்க பிச்சைக்காரரை அழைத்து அவர்களுக்கு போஜனம் கொடுங்கள். என் பரிகாரக்கடனை செலுத்த ஒருசந்தியாயிருங்கள்; என்னை மோட்சத்துக்குச் சேர்ப்பிக்கத் தேவமாதாவை வேண்டிக்கொள்ளுங்கள். ஆண்டவருடைய கோபம் என்பேரில் இருக்கிறபடியினாலே, என் பிள்ளைகளான நீங்கள் சற்றாகிலும் உங்கள் தாயான என் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்")என்று தாயானவள் பரதவித்துச் சொல்லுவாள். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே! இப்பேர்ப்பட்ட பிரலாபத்தைக் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதி தீர ஏதேனும் செய்ய மாட்டீர்களா ?
"தாய் தகப்பன்மார்களே! நாங்கள் உங்களுடைய பிள்ளைகள்தான். நீங்களாவது சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள். ஏனென்றால் நீங்கள் எப்போதும் எங்கள் பேரிலே பட்சமாய் இருந்து மகா தயவோடே எங்களை நடப்பித்து சொல்லில் அடங்காத நன்மைகளை செய்தீர்களே . ஐயையோ ! நாங்கள் சிறு வயதிலே செத்திருந்தாலும் அநேக பாவங்களையும் குற்றங்களையும் கட்டிக் கொண்டு மரணமடைந்தோம் . இந்தப் பாவங்களுக்குப் பரிகாரமாய் அநேக வருஷம் நாங்கள் இந்த அகோர நெருப்பிலே வேக எங்களுக்கு தீர்வை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆபத்திலே எங்களுக்கு உதவி பண்ண யாரைத் தேடுவோம் தாய் தகப்பன்மார்களான நீங்கள் எங்களைப் புறக்கணித்துத் தள்ளினால் யாருடைய அடைக்கலத்தில் போவோம்? உங்களுடைய பிள்ளைகளான நாங்கள் இவ்வளவு அவதிப் படுகிறது உங்களுக்கு நல்லதோ? நாங்கள் இந்த அகோர நெருப்பிலே வேகிற போது உங்களுக்கு வயிறெரியாதோ?
ஒ தகப்பனாரே ஒ தாயாரே உங்களுக்கு எங்கள் மன்றாட்டி லுள்ள பட்சத்தைப் பார்த்து உங்கள் பிள்ளைகளான எங்களை கைவிடாதேயுங்கள். ஆண்டவருடைய கையானது எங்களைக் கண்டிப்பாய்த் தண்டிக்கிறதினாலே, சற்றாகிலும் எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்" என்று பிள்ளைகள் புலம்பித் தவிக்கிறார்களே. பக்தியுள்ள கிறிஸ்துவர்களே. இப்பேர்ப்பட்ட துயரத்தைக் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதிதீர ஏதேனும் செய்யமாட்டீர்களா? இப்படியே, புருஷன் பெண்சாதியிடத்திலும், பெண்சாதி புருஷனிடத்திலும் இப்படிப் பிரலாபித்து விம்மிப் பெரு மூச்சுவிட்டு முறைப்படுகிறதாக நினத்துப் பாருங்கள்.
கிறிஸ்துவர்களே! இப்போது சொன்ன புலம்பல்களையும் முறைப்பாடுகளையும் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் இரக்கம் வைக்கவேண்டியதுமல்லாமல், அவர்களுடைய அவதி தீர நீங்கள் இந்நாள் மட்டும் செய்தது போதாதென்று நன்றாய்க் கண்டுபிடித்து இனிமேல் என்னத்தைச் செய்யப்போகிறீர்களென்று உறுதியாய்த் தீர்மானிக்க வேணுமென்று அறியக் கடவீர்களாக,
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திரு இருதயமே ! எங்கள் பேரில் இரக்கமாய் இரும்
செபம்
தயைக்காட்டவும் மன்னிப்பைக் கொடுக்கவும் எப்போதும் சார்பாயிருக்கிற சர்வேசுரா ! ஸ்திரிபூமான்களான எங்கள் பந்து ஜனங்களுடைய ஆத்துமாக்களைக் கிருபாகடாகமாய்ப் பார்த்து அவர்களுடைய சகலமான பாவங்களையும் பொறுத்துக் கொள்ளும் . இந்த ஆத்துமாக்களெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளிலிருந்து மீட்கப்பட்டு மெய்யான ஜீவியமாகிய உம்மிடத்திலே சேரப்பண்ணவேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
பதினேழாந் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:
மரித்த உங்களுடைய நெருங்கிய உறவின் முறையார் இன்னாரின்னாரென்று நினைத்து ஒரு பூசையைப் பண்ணுவிக்கிறது, அல்லது அவர்கள் ஆத்துமத்துக்காக 5 பர பிரி, 5 திரி வேண்டிக்கொள்ளுகிறது.
புதுமை
இத்தாலியா தேசத்திலுள்ள மிலான் என்னும் நகரத்திலே முத்திப்பேறு பெற்றவளாகிய அற்காஞ்சேலம்மாள் கன்னியாஸ்திரிகளுடைய ஒரு மடத்துக்கு சிரேஷ்டம்மாளாய் இருந்தாள். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியும் இரக்கமுமுள்ளவளாய் இருந்ததினாலே அவர்களுடைய அவதி தீர அடிக்கடி ஒருசந்தியாயிருப்பாள். அநேக செபங்களைப் பொழிவாள். கூடினமட்டும் தர்மங்களைப் பண்ணுவாள். அக்காலத்திலே அவள் மிகவும் நேசித்திருந்த அவளுடைய தகப்பனார் இறந்துபோனார். அவள் மற்ற ஆத்துமாக்களுக்குச் சகாயமாக மேற் சொன்னதெல்லாம் செய்துகொண்டுவந்தாலும், எந்த காரணத்தினாலேயே தன் தகப்பனுடைய ஆத்துமத்தை மறந்து போனாள்.
அநேகநாள் கடந்த பிற்பாடு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் திருநாளன்று அவள் தன்னுடைய சிற் றறையில் தியான ம் பண்ணிக்கொண்டிருந்தபோது அவளுடைய காவலான சம்மனசானவர் அவளுக்குத் தரிசனையாகி என் பின்னே வா' என்று அவளை உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு கூட்டிக் கொண்டுபோனார். அங்கே வேதனைப்பட்டுக்கொண்டிருந்த ஆத்துமாக்களுக்குள்ளே அவள் தகப்பனுடைய ஆத்துமம் அகோர வேதனைகளை அநுபவித்துக் கொண்டிருந்ததை அவளுக்குக் காண்பித்தார். அவள் தகப்பனாரோவென்றால் மகளைக் கண்ட க்ஷணத்திலே அபயச்சத்தமிட்டு "என் மகளே என் மகளே இம்மாத்திரம் வேதனைக்குள்ளே உன் தகப்பனான என்னை எப்படி இவ்வளவு நேரம் உபாதைப்பட விட்டுவிட்டாய். புறத்தி ஆத்துமாக்களின் பேரில் மிகவும், மிகவும் இரக்கமாயிருக்கிறாய்; உன்னுடைய வேண்டுதலினாலே அநேக ஆத்துமாக்கள் மீட்கப்பட்டு இந்த நிர்பாக்கியமான சிறைக்கூடத்திலிருந்து புறப்படக் கண்டேன்;
உன் தகப்பனான என்பேரில்மாத்திரம் இரக்கமின்றி என்னை மறந்து போனாயோ " என்றார் .
இந்தத் துயர வார்த்தைகளைக் கேட்டு அற்காஞ் சேலம்மாள் வெகுவாய்த் துக்கித்து நடுநடுங்கி திரளாய் அழுது :"
இனிமேல், என் பிரியமுள்ள தகப்பனாரே! நான் உம்மை இவ்விடத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் வரையில் ஆண்டவரைப் பிராத்தித்துக் கொள்ளுவேன் என்று வார்த்தைப்பாடு கொடுத்தாள்.
பின்பு தன் காவலான சம்மனசை நோக்கி: செம்மனசானவரே, நான் என் தகப்பனை மறந்துபோன காரணம் என்னவென்று சொல்லும்பனன்றாள். அதற்குக் காவலான சம்மனசு மறு மொழியாக உன்னுடைய தகப்பன் உயிரோடிருந்தபோது தன்னுடைய ஆத்தும காரியத்தில் அசட்டையாய் இருந்து வந்தபடியினாலேயும் சுறுசுறுப்பில் o சர்வேசுரனுக்கு ஊழியஞ்செய்துவந்ததினாலேயும் தண்டனையாக தேவ செய்கையால் நீ அவனை மறந்துபோனாய் தேவ காரியங்களிலே அசட்டையாய் இருக்கிறவர்களுக்கு அப்படித்தான் சம்பவிக்கும்.
தங்களுடைய ஆத்துமத்தை நினைக்காமல் இவ்வுலக செல்வ பாக்கியங்களை மாத்திரமே தேடிக்கொண்டு வருகிறவர்கள் தங்களுடைய பாவங்களுக்குப் பாவசங்கீர்த்தனத்தின் வழியாக மன்னிப்பை அடைந்திருந்தாலும், அந்தப் பாவங்களுக்குக் கனத்த ஒரு பரிகாரக்கடனை அவர்கள் செலுத்த வேண்டியதாயிருக்கிறது. அக்கடனைப் பூமியிலே செலுத்தாதிருந்தால், நூறுபங்கதிகமாய் உத்தரிக்கிற ஸ்தலத்திலே தப்பாமல் செலுத்தவேணும் என்று சொல்லி மறைந்துப் போனார் .
முத்திப்பேறுபெற்ற அற்காஞ்சேலம்மாளோவென்றால் தன் தகப்பனாரின் கொடிய வேதனைகளைக் கண்னாற் காண்கிறாற்போல ஓயாமல் அழுவாள், இடைவிடாமல் ஜெபிப்பாள். இரக்கமில்லாமல் தன்னை தண்டிப்பாள். தகப்பன் தேவ நீதிக்குச் செலுத்த வேண்டியக் கடனை எவ்வகையிலும் தீர்க்க ஏங்குவாள். இப்படி அநேகநாள் செய்தபிற்பாடு தன் தகப்பனுடைய ஆத்துமம் மிக்க சந்தோஷத்தோடும் மகிமைப்பிரதாபத்தோடும் மோட்சத் துக்குப் போகிறதைக் கண்டாளாம்.
கிறிஸ்துவர்களே நீங்களும் உங்களுடைய ஆத்துமக் காரியத்தில் அசட்டையாயிருப்பீர்களேயானால், மேற் சொன்ன மனுஷனுக்குச் சம்பவித்தாற்போல உங்களுக்கும் சம்பவிக்கும். உங்களுடைய பிள்ளைகள் உங்களை மறவாமல் நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிறபோது அவர்கள் உங்களுக்கு உதவி சகாயம் பண்னவேணுமென்று நீங்கள் விரும்பினால், உங்களுடைய முன்னோர்களை மறவாதேயுங்கள்.
ஒரு நாள் நீங்கள் சாப்பிடத் தவறிப் போனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒரு சின்ன செபத்தையாவது செபிக்க ஒருநாளும் தவறக் கூடாதென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இடும் பிரலாபங்களைக் காண்பிக்கிற வகையாவது
தியானம்
பிதாப்பிதாவாகிய யோபென்பவர் எவராலுங் கைவிடப்பட்டு எல்லாவற்றையும் இழந்து, சர்வாங்கத்திலும் நொந்து புழுத்து நாறி தம்மைச் சந்திக்கவந்த தம்முடைய மூன்று விசேஷ சிநேகிதருக்குத் தாம் அநுபவித்த நிற்பாக்கியங்களை அழுகையுடன் விவரித்தப்பின், பெருமூச்சு விட்டு சொன்னதாவது :'ஆண்டவருடைய கையானது என்னைத் தண்டிக்கிறதினாலே என் சினேகிதரே, நீங்கள் சற்றாகிலும் என்பேரில் இரக்கமாயிருங்கள், என்பேரில் இரக்கமாயிருங்கள்' என்பார்.
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் சகலராலும் மறக்கப்பட்டு தங்களுக்கு ஆறுதலாகத் தாங்களே ஒன்றுஞ் செய்யக்கூடாமல் நெருப்பிலே சர்வாங்கத்திலும் வேதனைப்பட்டுப் பிதாப் பிதாவாகிய யோபென்பவர் விம்மிச்சொன்ன புலம்பல்களைப் போலே உங்களை நோக்கி மிகுந்த துயரத்துடனே உச்சரிக்கிறதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதாவது "சர்வேசுரனுடைய கையானது எங்களைத் தண்டிக்கிறதென்கிறதினாலே எங்கள் சிநேகிதரான நீங்கள் சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்."
"எங்களுடைய ஞான சகோதரரான அனைத்து கிறிஸ்துவர்களே! எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள். என்னத்தினாலேயென்றால், பூமண்டலத்தில் இருக்கக் கூடுமான சகல வேதனைகளிலும் அதிக வேதனைப்பட்டு, அகோரமாய் எரியும் நெருப்பிலே வெந்து யாதோர் ஆறுதலுமின்றி, இளைப்பாற்றியுமின்றி, மனோவாக்குக் கெட்டாத வருத்தங்களை அனுபவிக்கிறோமே.
எங்களுக்காக நீங்கள் கொஞ்சம் ஜெபம்பண்ணி ஒரு தவக்கிரியையும் செய்து பிச்சையையுங் கொடுத்து எங்களைத் தேற்றி மீட்கிறது உங்களாலே கூடுமான சகாயந்தான். இவைகளைத் செய்வீர்களென்ற நம்பிக்கையல்லாமல் எங்களுக்கு வேறே நம்பிக்கையில்லை. ஒ சகோதரர்களே ஆண்டவருடைய திருமுகத்தைப் பார்த்து நீங்கள் சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்" என்பார்கள். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே, உத்தரிக்கிற ஆத்துமாக்களுடைய பிரலாபத்தைக் கேட்டு அவர்களுடைய வேதனை தீர என்னத்தைச் செய்வீர்கள்?
"எங்களுடைய ஊரார் தேசத்தாரும், சிநேகிதர், உபகாரிகளும், உறவின்முறையாருமானவர்களே! நீங்களாவது எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள். என்னத்தினாலேயென்றால், நாங்கள் எவ்வித வாதை வேதனைகளையும் யாதோர் ஆதரவின்றி அநுபவிக்கிறதுமல்லாமல் மட்டில்லாத அன்போடு நேசித்து விரும்புகிற சர்வேசுரன் தாமே எங்களைக் கோபமாய்ப் பார்த்து தூரமாய்த் தள்ளி, அகோரமாய்த் தண்டித்து வருத்தப்படுத்துகிறாரே,
நாங்கள் உங்களுடன் பூமியிலே சஞ்சரிக்கும்போது, நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ, பட்சத்தைக் காண்பித்தீர்கள், எம்மாத்திரம் ஒத்தாசை பண்ணினீர்கள். எத்தனை உபகாரங்களைச் செய்தீர்களே, இப்போது எங்கள் பேரிலுள்ள அந்த பட்சம் அற்றுப் போச்சுதோ, உங்களுடைய தயவு மாறிப்போனதோ, உங்களுடைய தயாளஞ் சலித்ததோ, எங்களுடைய நிர்பாக்கியந் தீர கொஞ்சம் பிரயாசைப்படக்கூடாதோ, எங்களுக்காக ஒரு ஜெபத்தைச் செய்யமாட்டீர்களோ, பிச்சைக் கொடுக்க பணமில்லையோ, கொஞ்சந் தவம் பண்ணத் திராணியில்லாமற் போச்சுதோ? சொல்லுங்கள் ஒ சகோதரர்களே! ஆண்டவர் எங்களைக் கோபமா தண்டிக்கிறதினாலே நீங்களாவது எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள் " என்பார்கள்
புண்ணியவான்களான கிறிஸ்தவர்களே, ! உத்தரிக்கின்ற ஆத்துமாக்களின் இந்த அபய சத்தத்தைக் கேட்டு அவர்களுடைய அவதி நீங்க என்னத்தைச் செய்வீர்கள்?
" என் மக்களே , உங்களுடைய தகப்பனாகிய என் பேரில் இரக்கமாயிருங்கள். அதேதென்றால் இப்போது நெருப்பு நிறைந்த இந்தச் சிறைக்கூடத்தில் சிறைப்பட்டுச் சொல்லிலும் நினைவிலும் அடங்காத வேதனைகளை அனுபவிக்கிறேன். மோட்ச பேரின்பத்துக்குப் போகவேணுமென்று பொறுக்கப்படாத ஆசையாயிருந்தாலும், நான் அதற்குப் போகாதபடிக்கு நிறுத்தப்பட்டு, அதிக தாகத்தால் தவிக்கிற மனுஷன் தண்ணீரைக் காணாமல் வருத்தப்படுகிறதை விட நான் அதிகமாய் வருத்தப்படுகிறேன் .
என் அன்புள்ள பிள்ளைகளே! உங்கள் தகப்பனாகிய என்னை மறந்துப் போனீர்களே? உங்களைப் பெற்று வளர்த்து, உங்களுக்காகப் படாத பிரயாசையெல்லாம் பட்டு, நீங்கள் அநுபவிக்கிற எல்லாவற்றையும் நானே உங்களுக்குத் தேடிவைத்தேன். உங்களுக்கு யாதொரு கவலை பொல்லாப்பு நேரிட்டிருந்த போது உங்களைத் தேற்றவும் , சொஸ்தமாக்கவும், காப்பாற்றவும் , இராப்பகலாய் உழைத்து ,அலைந்து செய்யக்கூடுமானதெல்லாம் செய்தேனே . ஐயையோ! உங்களுக்குத் திரண்ட ஆஸ்திகளை வைத்துப் போகவேணும் என்றும் , உங்களுடைய பாக்கியத்தையும் மகிமையையும் அதிகப்படுத்த வேண்டுமென்றும் எனக்கிருந்த மிகுந்த ஆசையினாலே அநேகம் குற்றங்களைப் பண்ணினேனே . அநேக பாவங்களையும் கட்டிக் கொண்டேன் . நான் உங்களை அதிகமாய் நேசித்ததனால் அல்லவோ இவ்வளவு தண்டிக்கப்படுகின்றேன். பிள்ளையாகிய நீங்கள், என் ஆஸ்திகளையெல்லாம் அடைந்திருக்கிற நீங்கள். நான் கட்டின வீட்டிலே குடியிருக்கிற நீங்கள், நான் உங்களுக்கு தேடி வைத்த சாப்பாட்டைச் சாப்பிடுகிற நீங்கள், என்னை மறந்து போகிறதெப்படி?
என் ஆத்துமத்தினுடைய நிர்பாக்கியத்தை தீர்த்து, என்னை மோட்ச பேரின்பத்தில் சேர்ப்பிப்பதற்காக சில பிச்சைக்காரருக்குப் பிச்சைத் கொடுக்கவும். கோவிலிலே காணிக்கை செலுத்தவும், சில தருமங்களைப் பண்ணுவிக்கவும் உங்களுடைய கையிலே காசில்லையென்பீர்களோ? உங்களுக்கு உண்டாயிருக்கிற பணம் காசெல்லாம் என்னுடையதென்று மறந்து போனீர்களோ? ஐயையோ !ஆண்டவருடைய கையானது என்னை அகோரமாய்த் தண்டிக்கிறதினாலே என் பிள்ளைகளாகிய நீங்களாவது சற்றாகிலும் என்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள் " என்று தகப்பன் சொல்லுவான். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே !இந்த பிரலாபமுள்ள வார்த்தைகளைக் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதி தீர என்னத்தைச் செய்ய மாட்டீர்கள் ?
" பிரியமுள்ள மக்களே !உங்களுடைய தாயார் நான்தான். நீங்களாவது என் பேரில் சற்று இரக்கமாயிருங்கள் ,ஏனென்றால் நான் உங்களை என் வயிற்றில் ஒன்பது மாதம் சுமந்து வெகு அபாயத்தோடு பெற்றேன். உங்களுக்கு இரண்டு வருஷம் தாய்ப் பாலூட்டினேன். உங்களை என் கையிலேந்தி, என் மடியிலே வளர்த்து, உங்களுக்கு சலியாத பட்சத்தைக் காட்டினேனே, நீங்கள் வியாதியாய் இருந்தபோது யாதோர் ஒய்வுமின்றி இரவிலும் விழித்துப் பகலிலும் உழைத்து உங்களைத் தேற்றி உங்களுக்கு வேண்டியவைகளைக் கொடுத்தேனல்லவோ? அப்போது என் பேரில் எவ்வளவு பட்சமாயிருந்தீர்கள் !இப்போது எல்லாவற்றையும் மறந்தது போலேயும், நான் உங்களுக்கு ஒரு பரதேசியாய் இருக்கிறாற்போலேயும், என்னையும் நினைக்கிறதில்லை, நான் படுகிற வருத்தங்களையும் பார்க்கிறதில்லை. எனக்கு உதவிசகாயமும் பண்ணுகிறதில்லை.
என் மகனே , என் மகளே! அப்படிச் செய்வது உங்களுக்கு நல்லதோ? உங்களுடைய தாயான நான் இவ்வளவு துன்ப வேதனையினை அநுபவித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் சந்தோஷித்து விருந்து கொண்டாடி விளையாடிக்கொண்டிருக்கலாமோ? மகனே! மகளே என்பேரில் இரங்கி என்னை, சுடும் நெருப்பை அவிக்கக் கொஞ்சங் கண்ணீரைச் சிந்துங்கள். என் நிர்ப்பாக்கியத்தைத் தீர்க்க பிச்சைக்காரரை அழைத்து அவர்களுக்கு போஜனம் கொடுங்கள். என் பரிகாரக்கடனை செலுத்த ஒருசந்தியாயிருங்கள்; என்னை மோட்சத்துக்குச் சேர்ப்பிக்கத் தேவமாதாவை வேண்டிக்கொள்ளுங்கள். ஆண்டவருடைய கோபம் என்பேரில் இருக்கிறபடியினாலே, என் பிள்ளைகளான நீங்கள் சற்றாகிலும் உங்கள் தாயான என் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்")என்று தாயானவள் பரதவித்துச் சொல்லுவாள். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே! இப்பேர்ப்பட்ட பிரலாபத்தைக் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதி தீர ஏதேனும் செய்ய மாட்டீர்களா ?
"தாய் தகப்பன்மார்களே! நாங்கள் உங்களுடைய பிள்ளைகள்தான். நீங்களாவது சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள். ஏனென்றால் நீங்கள் எப்போதும் எங்கள் பேரிலே பட்சமாய் இருந்து மகா தயவோடே எங்களை நடப்பித்து சொல்லில் அடங்காத நன்மைகளை செய்தீர்களே . ஐயையோ ! நாங்கள் சிறு வயதிலே செத்திருந்தாலும் அநேக பாவங்களையும் குற்றங்களையும் கட்டிக் கொண்டு மரணமடைந்தோம் . இந்தப் பாவங்களுக்குப் பரிகாரமாய் அநேக வருஷம் நாங்கள் இந்த அகோர நெருப்பிலே வேக எங்களுக்கு தீர்வை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆபத்திலே எங்களுக்கு உதவி பண்ண யாரைத் தேடுவோம் தாய் தகப்பன்மார்களான நீங்கள் எங்களைப் புறக்கணித்துத் தள்ளினால் யாருடைய அடைக்கலத்தில் போவோம்? உங்களுடைய பிள்ளைகளான நாங்கள் இவ்வளவு அவதிப் படுகிறது உங்களுக்கு நல்லதோ? நாங்கள் இந்த அகோர நெருப்பிலே வேகிற போது உங்களுக்கு வயிறெரியாதோ?
ஒ தகப்பனாரே ஒ தாயாரே உங்களுக்கு எங்கள் மன்றாட்டி லுள்ள பட்சத்தைப் பார்த்து உங்கள் பிள்ளைகளான எங்களை கைவிடாதேயுங்கள். ஆண்டவருடைய கையானது எங்களைக் கண்டிப்பாய்த் தண்டிக்கிறதினாலே, சற்றாகிலும் எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்" என்று பிள்ளைகள் புலம்பித் தவிக்கிறார்களே. பக்தியுள்ள கிறிஸ்துவர்களே. இப்பேர்ப்பட்ட துயரத்தைக் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதிதீர ஏதேனும் செய்யமாட்டீர்களா? இப்படியே, புருஷன் பெண்சாதியிடத்திலும், பெண்சாதி புருஷனிடத்திலும் இப்படிப் பிரலாபித்து விம்மிப் பெரு மூச்சுவிட்டு முறைப்படுகிறதாக நினத்துப் பாருங்கள்.
கிறிஸ்துவர்களே! இப்போது சொன்ன புலம்பல்களையும் முறைப்பாடுகளையும் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் இரக்கம் வைக்கவேண்டியதுமல்லாமல், அவர்களுடைய அவதி தீர நீங்கள் இந்நாள் மட்டும் செய்தது போதாதென்று நன்றாய்க் கண்டுபிடித்து இனிமேல் என்னத்தைச் செய்யப்போகிறீர்களென்று உறுதியாய்த் தீர்மானிக்க வேணுமென்று அறியக் கடவீர்களாக,
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திரு இருதயமே ! எங்கள் பேரில் இரக்கமாய் இரும்
செபம்
தயைக்காட்டவும் மன்னிப்பைக் கொடுக்கவும் எப்போதும் சார்பாயிருக்கிற சர்வேசுரா ! ஸ்திரிபூமான்களான எங்கள் பந்து ஜனங்களுடைய ஆத்துமாக்களைக் கிருபாகடாகமாய்ப் பார்த்து அவர்களுடைய சகலமான பாவங்களையும் பொறுத்துக் கொள்ளும் . இந்த ஆத்துமாக்களெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளிலிருந்து மீட்கப்பட்டு மெய்யான ஜீவியமாகிய உம்மிடத்திலே சேரப்பண்ணவேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
பதினேழாந் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:
மரித்த உங்களுடைய நெருங்கிய உறவின் முறையார் இன்னாரின்னாரென்று நினைத்து ஒரு பூசையைப் பண்ணுவிக்கிறது, அல்லது அவர்கள் ஆத்துமத்துக்காக 5 பர பிரி, 5 திரி வேண்டிக்கொள்ளுகிறது.
புதுமை
இத்தாலியா தேசத்திலுள்ள மிலான் என்னும் நகரத்திலே முத்திப்பேறு பெற்றவளாகிய அற்காஞ்சேலம்மாள் கன்னியாஸ்திரிகளுடைய ஒரு மடத்துக்கு சிரேஷ்டம்மாளாய் இருந்தாள். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியும் இரக்கமுமுள்ளவளாய் இருந்ததினாலே அவர்களுடைய அவதி தீர அடிக்கடி ஒருசந்தியாயிருப்பாள். அநேக செபங்களைப் பொழிவாள். கூடினமட்டும் தர்மங்களைப் பண்ணுவாள். அக்காலத்திலே அவள் மிகவும் நேசித்திருந்த அவளுடைய தகப்பனார் இறந்துபோனார். அவள் மற்ற ஆத்துமாக்களுக்குச் சகாயமாக மேற் சொன்னதெல்லாம் செய்துகொண்டுவந்தாலும், எந்த காரணத்தினாலேயே தன் தகப்பனுடைய ஆத்துமத்தை மறந்து போனாள்.
அநேகநாள் கடந்த பிற்பாடு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் திருநாளன்று அவள் தன்னுடைய சிற் றறையில் தியான ம் பண்ணிக்கொண்டிருந்தபோது அவளுடைய காவலான சம்மனசானவர் அவளுக்குத் தரிசனையாகி என் பின்னே வா' என்று அவளை உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு கூட்டிக் கொண்டுபோனார். அங்கே வேதனைப்பட்டுக்கொண்டிருந்த ஆத்துமாக்களுக்குள்ளே அவள் தகப்பனுடைய ஆத்துமம் அகோர வேதனைகளை அநுபவித்துக் கொண்டிருந்ததை அவளுக்குக் காண்பித்தார். அவள் தகப்பனாரோவென்றால் மகளைக் கண்ட க்ஷணத்திலே அபயச்சத்தமிட்டு "என் மகளே என் மகளே இம்மாத்திரம் வேதனைக்குள்ளே உன் தகப்பனான என்னை எப்படி இவ்வளவு நேரம் உபாதைப்பட விட்டுவிட்டாய். புறத்தி ஆத்துமாக்களின் பேரில் மிகவும், மிகவும் இரக்கமாயிருக்கிறாய்; உன்னுடைய வேண்டுதலினாலே அநேக ஆத்துமாக்கள் மீட்கப்பட்டு இந்த நிர்பாக்கியமான சிறைக்கூடத்திலிருந்து புறப்படக் கண்டேன்;
உன் தகப்பனான என்பேரில்மாத்திரம் இரக்கமின்றி என்னை மறந்து போனாயோ " என்றார் .
இந்தத் துயர வார்த்தைகளைக் கேட்டு அற்காஞ் சேலம்மாள் வெகுவாய்த் துக்கித்து நடுநடுங்கி திரளாய் அழுது :"
இனிமேல், என் பிரியமுள்ள தகப்பனாரே! நான் உம்மை இவ்விடத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் வரையில் ஆண்டவரைப் பிராத்தித்துக் கொள்ளுவேன் என்று வார்த்தைப்பாடு கொடுத்தாள்.
பின்பு தன் காவலான சம்மனசை நோக்கி: செம்மனசானவரே, நான் என் தகப்பனை மறந்துபோன காரணம் என்னவென்று சொல்லும்பனன்றாள். அதற்குக் காவலான சம்மனசு மறு மொழியாக உன்னுடைய தகப்பன் உயிரோடிருந்தபோது தன்னுடைய ஆத்தும காரியத்தில் அசட்டையாய் இருந்து வந்தபடியினாலேயும் சுறுசுறுப்பில் o சர்வேசுரனுக்கு ஊழியஞ்செய்துவந்ததினாலேயும் தண்டனையாக தேவ செய்கையால் நீ அவனை மறந்துபோனாய் தேவ காரியங்களிலே அசட்டையாய் இருக்கிறவர்களுக்கு அப்படித்தான் சம்பவிக்கும்.
தங்களுடைய ஆத்துமத்தை நினைக்காமல் இவ்வுலக செல்வ பாக்கியங்களை மாத்திரமே தேடிக்கொண்டு வருகிறவர்கள் தங்களுடைய பாவங்களுக்குப் பாவசங்கீர்த்தனத்தின் வழியாக மன்னிப்பை அடைந்திருந்தாலும், அந்தப் பாவங்களுக்குக் கனத்த ஒரு பரிகாரக்கடனை அவர்கள் செலுத்த வேண்டியதாயிருக்கிறது. அக்கடனைப் பூமியிலே செலுத்தாதிருந்தால், நூறுபங்கதிகமாய் உத்தரிக்கிற ஸ்தலத்திலே தப்பாமல் செலுத்தவேணும் என்று சொல்லி மறைந்துப் போனார் .
முத்திப்பேறுபெற்ற அற்காஞ்சேலம்மாளோவென்றால் தன் தகப்பனாரின் கொடிய வேதனைகளைக் கண்னாற் காண்கிறாற்போல ஓயாமல் அழுவாள், இடைவிடாமல் ஜெபிப்பாள். இரக்கமில்லாமல் தன்னை தண்டிப்பாள். தகப்பன் தேவ நீதிக்குச் செலுத்த வேண்டியக் கடனை எவ்வகையிலும் தீர்க்க ஏங்குவாள். இப்படி அநேகநாள் செய்தபிற்பாடு தன் தகப்பனுடைய ஆத்துமம் மிக்க சந்தோஷத்தோடும் மகிமைப்பிரதாபத்தோடும் மோட்சத் துக்குப் போகிறதைக் கண்டாளாம்.
கிறிஸ்துவர்களே நீங்களும் உங்களுடைய ஆத்துமக் காரியத்தில் அசட்டையாயிருப்பீர்களேயானால், மேற் சொன்ன மனுஷனுக்குச் சம்பவித்தாற்போல உங்களுக்கும் சம்பவிக்கும். உங்களுடைய பிள்ளைகள் உங்களை மறவாமல் நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிறபோது அவர்கள் உங்களுக்கு உதவி சகாயம் பண்னவேணுமென்று நீங்கள் விரும்பினால், உங்களுடைய முன்னோர்களை மறவாதேயுங்கள்.
ஒரு நாள் நீங்கள் சாப்பிடத் தவறிப் போனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒரு சின்ன செபத்தையாவது செபிக்க ஒருநாளும் தவறக் கூடாதென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
பதினெட்டாம் நாள்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுவது நமக்கு மிகவும் பிரயோசனமுள்ளதென்று காண்பிக்கிற வகையாவது
தியானம்
முன்சொன்ன தியானங்களை தியானித்ததினால் உத்தரிக்கிற ஆத்துமங்களின் பேரில் அதிக பக்தி உங்களுக்கு உண்டாயிருக்குமென்று நம்புகிறோம் . இந்த பக்தி அதிகமதிகமாய் வளரும்படியாக உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிரயாசப்படுவதால் ,நமக்கு அநேக பிரயோசனங்கள் உண்டாகும் என்பதைப் பற்றி இப்போது தியானிப்போமாக
"இரக்கமுள்ளவர்கள் பாக்கிவான்கள், ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்" என்று நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் சுவாமி திருவுளம்பற்றினார். ஆகையினாலே, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரிலே இரக்கமாயிருந்து அவர்களுக்கு ஆறுதலையும் இளைப்பாற்றியையும் தங்களால் கூடின மட்டும் வருவிக்க விரும்புகிறவர்கள், தேவ இரக்கத்தையும், தேவ தயவையும், தேவ தயவினால் வருகிற நன்மைகளையும் ஆண்டவரிடத்திலே பெறுவார்களென்கிறதற்குச் சந்தேகமுண்டோ? யாதொருவன் பேரிலே ஓர் இராஜாவின் இரக்கமும் தயவும் இருக்குமேயாகில் அந்த மனுஷனுக்கு யாதோர் குறைவு நேரிடுமோ? குறைவு நேரிடாதென்றால் இராஜாதி இராஜாவாகிய சர்வேசுரனுடைய இரக்கமும் தயவும் நமக்கு இருந்தால் நமக்கு எந்த பொல்லாப்பு வரக்கூடும் ?
"தரித்திரப்பட்டவர் பேரிலும் எளியவர் பேரிலும் இரக்கமாயிருக்கிறவன் பாக்கியவான், ஏனெனில்: ஆபத்துள்ள வேளையில் ஆண்டவர்தாமே அவனை மீட்பார். ஆண்டவர் அவனைக் காப்பாற்றி, ஸ்திரப்படுத்தி, அவனுக்கு இவ்வுலக பாக்கியத்தைத் தந்து, சத்துருக்கள் கையிலே அவன் அகப்படாதபடிக்குச் செய்வார். அவன் வியாதியாய்க் கிடக்கும்போது அவனுக்கு ஆண்டவர் உதவியாய் இருப்பார்". என்று நாற்பதாம் சங்கீதத்திலே சொல்லப்பட்டுள்ளது. இவ்வுலகத்திலுள்ள தரித்திரவான்களுக்கு உதவி சகாயம் செய்கிறவர்களைத் தேவவாக்கியம் அவ்வளவு வாழ்த்தி அம்மாத்திரம் நன்மைவருமென்று நிச்சயித்துச் சொல்லுகிறபோது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுகிறவர்களுக்கு இன்னும அதிக நன்மை வருமென்றும், அவர்கள் அதிக பாக்கியவான்களென்றும் நிச்சயமாய்க் கூறவேண்டும்.
முன்சொன்ன தியானங்களில் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுதல், சர்வேசுரனுக்கும் இயேசுக்கிறிஸ்து நாதருக்கும், தேவமாதாவுக்கும் மற்ற மோட்சவாசிகளுக்கும் எம்மாத்திரும் உகந்த புண்ணியமென்று தெளிவாய்க் காண்பிக்கப்பட்டது. இவ்வுலக இராஜாக்களுக்கு உகந்த காரியங்களைச் செய்பவர்கள் அநேக முறை அவர்களால் ஒன்றையும் பெறாமல் போவார்களென்பது மெய்தான். ஆனால் சர்வேசுரனிடத்திலேயும், மோட்சவாசிகளிடத்திலேயும் அப்படியல்லவே. அவர்களைக் குறித்து ஒரு சொற்ப புண்ணியத்தையாவது, கொஞ்சம் தர்மத்தையாவது கொஞ்சம் தவத்தையாவது செய்துகொண்டுவருவோமேயானால் நமக்கு அநேகம் வெகுமதிகளை அவர்கள் கொடுப்பார்களென்கிறது தப்பாது.
அதனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களின்பேரில் பக்தியுள்ளவர்களுக்கு சர்வேசுரன் விசேஷ கிருபை காட்டி அவர்களுக்கு விசேச உபகாரங்களைத் தருவாரென்பது குன்றாத சத்தியமாம்.
அவர் இவர்களை அநேகம் பொல்லாப்புகளிலிருந்து இரட்சித்து, அவர்கள் பசாசின் சோதனைகளிலே அகப்படாதபடி அவர்களைக் காப்பாற்றி உலககாரியங்களிலே முதலாய் அவர்களை ஆசீர்வதிப்பார்.
உத்தரிக்கிற ஆத்துமாக்களோவென்றால் தங்களுக்கு உதவிசகாயம் பண்ணினவர்களை நன்றியறிந்த மனதோடே நினைத்து, அவர்களுக்காக சர்வேசுரனிடத்தில் மகா ஆசையோடும் இடைவிடாத முயற்சியோடும் வேண்டிக் கொள்ளுவார்களென்று வேதசாஸ்திரிகள் எல்லோரும் சொல்லியுள்ளார்கள். அதெப்படியென்றால் அந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்குமளவும் தங்களுக்குத் தாங்களே யாதொன்றையும் பெறக்கூடாதிருந்தாலும், தங்களுக்கு உபகாரம் செய்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளக் கூடுமல்லாமல், அவர்கள் சர்வேசுரனுக்குப் பிரியாத பந்தனப்பட்டவர்களாய் இருப்பதினாலே அவர்களுடைய வேண்டுதல் அநுகூலமாகி
அவர்கள் கேட்கிறதெல்லாம் கொடுக்கப்படுமென்பது உறுதியான நம்பிக்கையாகும்.
போலோனியாவென்ற அர்ச் கத்தரீனம்மாள் "நான் எதையாகிலும் நித்திய பிதாவினிடத்தில் பெற்றுக் கொள்ள விரும்பும்போது ,அதை எனக்காகக் கேட்கும்படிக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களை மன்றாடுவேன் . அப்படியே நான் விரும்புகிறதை எல்லாம் தப்பாமல் அடைகிறேன் " என்றாள். ஒரு பக்தியுள்ள சுவாமியானவர் நான் யாதோர் விசேச சகாயத்தை அடைய வேண்டியதாய் இருக்கும்போது உத்தரிக்கிற ஆத்துமாக்களைக்குறித்து பூசை பண்ணுவேன். அப்படியே நான் விரும்புகிறதெல்லாம் அநுகூலமாகிறது என்றார்.
இந்தச் சிந்து இராச்சியத்திலே முதலாய் அநேகம் பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் தாங்கள் செய்யப்போகிற யாதோர் பயணம் பொல்லாப்பின்றி நன்மையாய்ச் செய்யும்படிக்காவது தங்களுடைய வெள்ளாண்மை குறைவின்றி விளையும்படிக்காவது , ஒரு பிராது, ஒரு வியாச்சியம் தங்களுக்கு அநுகூலமாய் முடியும்படிக்காவது ஒரு வியாபாரம் சித்திக்கும்படிக்காவது, ஒரு வியாதி ஒரு பொல்லாப்பு நீங்கிப்போகும்படிக்காவது, ஒரு கலியாணம் நன்மையாய் முடியும்படிக்காவது வேறேதாகிலும் அநுகூலமாகும்படிக்காவது விரும்புகிறபோது உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒன்றிரண்டு பூசை செய்வித்து, தர்மங்களைக் கொடுத்துக் கோவிலிலே காணிக்கை செலுத்திக் கொண்டு வருகிறார்களென்று அறிவோம்.
அவர்கள் தானே தாங்கள் நினைத்த அனுகூலமாகும்படிக்கு அப்படிச் செய்வது நிச்சயமான வழியென்று உறுதியாகச் சொல்லுகிறார்கள். நிழல்
போன்ற இவ்வுலகத்துக்கும் அழிந்து போகும் சரீரத்துக்கும் அடுத்த காரியங்களில் அப்படியானால் , பரலோகத்துக்கும் ஆத்துமத்துக்கும் சம்பந்தப்பட்ட ஞான காரியங்களில் அதிக அனுகூலங்கள் உண்டாகும் என்பது தப்பாது
எளிமையாய் இருக்கிறவன் பேரில் தயவாயிருந்து அவனுக்குச் சகாயம் பண்ணுகிறவன் சர்வேசுரனுக்குத் தானே கடனாகக் கொடுக்கிறான். அவரும் திரும்பி உத்தரிப்பாரென்று வேத புஸ்தகங்களில் எழுதியிருக்கிறதாமே. இது இப்படியிருக்கையில் உத்தரிக்கிற ஆத்துமாக்களைப்போல் இவ்வுலகத்தில் எளிமைப்பட்டவர்களும் அவசரமுள்ளவர்களும் கஷ்டப்படுகிறவர்களும் ஒருவருமில்லையே ஆனதினாலே இந்த ஆத்துமங்களுக்கு உதவி சகாயமாய்ச் செய்கிறதெல்லாம் சர்வேசுரனுக்கு கொடுத்த ஒரு கடன் போல் இருக்கும் என்றும் ,சர்வேசுரன் திரும்ப அந்தக் கடனை உத்தரிக்கும்போது அதற்கு நூறு பங்கு அதிகமாய்க் கொடுக்க வேணுமென்று யோசிக்க வேணும் .
இது இப்படி இருக்கக் கிறிஸ்தவர்களே ! நீங்கள் யாதோர் நல்ல வியாபாரம் பண்ண வேண்டுமானால் , நீங்கள் அனுசரிக்கிற புண்ணியங்கள் எல்லாம் , செய்கிற தர்மங்கள் எல்லாம் , நடத்துவிக்கிற தேவ காரியமெல்லாம் , படுகிற துன்ப வருத்தமெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்க வேணும் .
இவைகளில் அப்படி ஒப்புக் கொடுத்தாலும் அந்தப் புண்ணியத்துக்கும், தர்மத்துக்கும். நற்கிரியைகளுக்கும் உண்டாயிருக்கிற பேறுபலனையல்லாமல், பிற சிநேகமும் தேவ சிநேகமும் உத்தமமேரையாயிருக்குமல்லவோ? அதனாலே இவையெல்லாம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்படும், உங்களுக்கும் அதிகமாய்ப் பலிக்குமென்று வேத சாஸ்திரிகள் நிச்சயமாய்ச் சொல்லுகிறார்கள். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்கிற பக்தியானது எல்லாவற்றிலும் உதவுமென்று அறிந்து, நீங்கள் மென்மேலும் அந்த ஆத்துமாக்களின் பேரில் அதிக பக்திவைக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவே எங்கள் பேரில் தயவாயிரும்.
செபம்
பிதாவாகிய சர்வேசுரா சுவாமி ! தேவரீருக்கு உகந்த குமாரனுமாய் எங்களுக்கு கர்த்தருமாய் இருக்கிற சேசுக்கிறிஸ்து நாதர் இத்தனை பாடுகள் பட்டாரே , அவருடைய பாடுகளையும் துன்பத்தையும் ,சிலுவையையும் , மரணத்தையும் , அடக்கத்தையும் , துக்கத்தையும் அவருடைய திருக்காயங்களிலிருந்து வடிந்தோடின திரு இரத்தத்தையும் பார்த்து, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதியைக் குறைத்து அவர்களை உம்முடைய சமூகத்துக்கு அழைக்கக் கிருபை பண்ணியருளவேணுமென்று உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
பதினெட்டாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
நீங்கள் இன்று செய்யும் கிரியைகளை எல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து சுத்த கருத்தோடே செய்து சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறது.
புதுமை
பழைய வேதத்தின் காலங்களிலே தம்முடைய பிரஜைகளுக்கு உதவி செய்யவும், அவர்களுடைய சத்துருக்களை சிதைக்கவும் சர்வேசுரன் சம்மனசுகளை அனுப்பினாரென்று வேத புத்தகங்களிலே எழுதியிருக்கிறது. அப்படியே இந்தக் காலங்களிலேயும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்களுக்குச் சகாயம் பண்ணவும், இவர்களுடைய எதிரிகளிடத்திலிருந்து இவர்களை மீட்கவும், சர்வேசுரன் உத்தரிக்கிற ஆத்துமாக்களைச் சில சமயங்களிலே அனுப்பினாரென்று நன்கு தெரியும். அதற்கு அத்தாட்சியாக நடந்த ஒரு சங்கதியைக் கேளுங்கள்.
சர்டீனியாவென்ற தீவுக்கு இராஜாவாயிருந்த உசேபியூஸ் என்கிறவர் உத்தரிக்கிற ஆத்துமாக்களின்பேரில் வெகு பக்தியாயிருந்து அந்த ஆத்துமாக்களைக் குறித்து வெகு தர்மங்களைப் பண்ணுவார். அந்த ஆத்துமாக்களுக்கு சகாயமாகத் தினந்தோறும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்க அநேக குருக்களை ஏற்படுத்தி நியமித்திருந்தார். அவர்களுக்கு வேண்டியவைகளை விசாரிக்கவும், மற்றத் தர்மங்களை நடப்பிக்கவும், ஒரு பட்டணத்திலே வரும் பகுதிப் பணமெல்லாவற்றையும் அதுக்காகக் குறித்துவிட்டிருந்தார். அதைக் கொண்டு அந்தப் பட்டணம் சர்வேசுரனுடைய பட்டணமென்று சொல்லப்படும்.
சிசிலியாவென்ற தீவுக்கு இராஜாவான அஸ்தோர்சியூஸ் என்கிறவன் பசாசினுடய காய்மகாரத்தால் ஏவப்பட்டு அநேகம் படைகளோடு உசேபியூஸ் என்கிறவரோடே இடை செய்ய வந்தான். அஸ்தோர்சியூஸ் என்கிறவன் மேற்சொன்ன பட்டணத்தை முற்றுகைசெய்து அதைப் பிடித்தானாம். உசேபியூஸ் என்கிறவர் சேதி அறிந்து தன் சேனைகளைச் சேர்த்து அவனுக்கு எதிரே போனார். ஆனாலும் சத்துருக்களுடைய படை பெரும் படைகளாய் இருந்ததினாலும் தம்முடைய சேவகர் கொஞ்சம்பேர்களாய் இருந்ததினாலும் ஜெயம் வருமோ வராதோவென்று அங்கலாய்த்துப் பயந்து சர்வேசுரனை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
இதோ சண்டை செய்யப்போகிற சமயத்தில் வெள்ளை வஸ்திரத்தை அணிந்து வெண்மையான ஆயுதங்களைப் பிடித்து வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறியிருந்த இராணுவத்தாரும் காலாட்படைச் சேவகரும் தமக்கு ஒத்தாசையாக வருகிறதைக் கண்டார். இராஜா இவர்களை நோக்கி நீங்கள் யார் என்று கேட்க நாங்கள் பரலோக இராஜாவினுடைய சேனைகள்தான். நீர் பயப்படவேண்டாம் உம்முடைய சத்துருக்களோடே சண்டை செய்யவும் உம்மைக் காக்கவும் வந்தோம் என்றார்கள். இந்த அதிசயமான சேனைகளைக் கண்டு, அஸ்தோர்சியூஸ் என்கிறவன் மிகவும் பயந்து சமாதானத்தின் பொறுத்தல் கேட்டு செய்த பொல்லாப்புகளுக்கு உத்தரவாதம் பண்ணித் தான் பிடித்த மேற் சொன்ன பட்டணத்தைத் திரும்பக் கொடுத்து விலகிப்போனான்.
உசேபியூஸ் இராஜாவோவென்றால், சர்வேசுரனுக்கு நன்றியறிந்த மனதோடே தோத்திரம் பண்ணி, தமக்கு உதவியாக வந்த சேவகருக்கு உபசாரம் பண் ணி. நீங்கள் வந்ததெப்படியென்று சொல்லுங்கள் என்றார். இதற்கு அந்த படைகளின் தலைவன் மறுமொழியாக இராஜாவே உம்முடைய பிரயாசையால் மீட்டிரச்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் நாங்கள்தானென்று அறிந்துகொள்ளும், ஆண்டவர் உம்மை இந்த ஆபத்துள்ள வேளையிலே ஆதரிக்கத்தக்கதாக இங்கே எங்களை
அனுப்பினார்.
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் எப்போதும் அப்படியே பக்தியாய் இருக்க வேணுமென்றும் நீர் மீட்டிரட்சிக்கும் ஆத்துமாக்கள் எல்லோரும் மோட்சத்தில் உமக்கு சிநேகிதரும் ஆதரவுள்ளவர்களுமாய் இருப்பார்கள் என்றும் சொல்லி ,அந்தத் தலைவனும் திரளான சேவகர்களும் மறைந்து போனார்கள் . அதைக் கண்ட இராஜாவானவர் முழந்தாளிட்டு தன்னைக் காப்பாற்றின சர்வேசுரனை வாழ்த்தி மேன்மேலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் அதிக பக்தியுள்ளவராய் இருந்தார்
கிறிஸ்துவர்களே ! ஜீவிய காலம் போர்க்களம் அல்லவோ ? உலகம் பசாசு சரீரம் என்ற இம்மூன்று சத்துருக்களால் உங்களுக்கு மோசம் வராதபடிக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களிடம் இருந்து உங்களுக்கு சகாயம் வரக் கூடும் என்று இப்போது சொன்ன புதுமையினாலே அறிந்து அந்த ஆத்துமாக்களின் பேரில் அதிக பக்தி வைக்க வேணுமென்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுவது நமக்கு மிகவும் பிரயோசனமுள்ளதென்று காண்பிக்கிற வகையாவது
தியானம்
முன்சொன்ன தியானங்களை தியானித்ததினால் உத்தரிக்கிற ஆத்துமங்களின் பேரில் அதிக பக்தி உங்களுக்கு உண்டாயிருக்குமென்று நம்புகிறோம் . இந்த பக்தி அதிகமதிகமாய் வளரும்படியாக உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிரயாசப்படுவதால் ,நமக்கு அநேக பிரயோசனங்கள் உண்டாகும் என்பதைப் பற்றி இப்போது தியானிப்போமாக
"இரக்கமுள்ளவர்கள் பாக்கிவான்கள், ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்" என்று நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் சுவாமி திருவுளம்பற்றினார். ஆகையினாலே, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரிலே இரக்கமாயிருந்து அவர்களுக்கு ஆறுதலையும் இளைப்பாற்றியையும் தங்களால் கூடின மட்டும் வருவிக்க விரும்புகிறவர்கள், தேவ இரக்கத்தையும், தேவ தயவையும், தேவ தயவினால் வருகிற நன்மைகளையும் ஆண்டவரிடத்திலே பெறுவார்களென்கிறதற்குச் சந்தேகமுண்டோ? யாதொருவன் பேரிலே ஓர் இராஜாவின் இரக்கமும் தயவும் இருக்குமேயாகில் அந்த மனுஷனுக்கு யாதோர் குறைவு நேரிடுமோ? குறைவு நேரிடாதென்றால் இராஜாதி இராஜாவாகிய சர்வேசுரனுடைய இரக்கமும் தயவும் நமக்கு இருந்தால் நமக்கு எந்த பொல்லாப்பு வரக்கூடும் ?
"தரித்திரப்பட்டவர் பேரிலும் எளியவர் பேரிலும் இரக்கமாயிருக்கிறவன் பாக்கியவான், ஏனெனில்: ஆபத்துள்ள வேளையில் ஆண்டவர்தாமே அவனை மீட்பார். ஆண்டவர் அவனைக் காப்பாற்றி, ஸ்திரப்படுத்தி, அவனுக்கு இவ்வுலக பாக்கியத்தைத் தந்து, சத்துருக்கள் கையிலே அவன் அகப்படாதபடிக்குச் செய்வார். அவன் வியாதியாய்க் கிடக்கும்போது அவனுக்கு ஆண்டவர் உதவியாய் இருப்பார்". என்று நாற்பதாம் சங்கீதத்திலே சொல்லப்பட்டுள்ளது. இவ்வுலகத்திலுள்ள தரித்திரவான்களுக்கு உதவி சகாயம் செய்கிறவர்களைத் தேவவாக்கியம் அவ்வளவு வாழ்த்தி அம்மாத்திரம் நன்மைவருமென்று நிச்சயித்துச் சொல்லுகிறபோது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுகிறவர்களுக்கு இன்னும அதிக நன்மை வருமென்றும், அவர்கள் அதிக பாக்கியவான்களென்றும் நிச்சயமாய்க் கூறவேண்டும்.
முன்சொன்ன தியானங்களில் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுதல், சர்வேசுரனுக்கும் இயேசுக்கிறிஸ்து நாதருக்கும், தேவமாதாவுக்கும் மற்ற மோட்சவாசிகளுக்கும் எம்மாத்திரும் உகந்த புண்ணியமென்று தெளிவாய்க் காண்பிக்கப்பட்டது. இவ்வுலக இராஜாக்களுக்கு உகந்த காரியங்களைச் செய்பவர்கள் அநேக முறை அவர்களால் ஒன்றையும் பெறாமல் போவார்களென்பது மெய்தான். ஆனால் சர்வேசுரனிடத்திலேயும், மோட்சவாசிகளிடத்திலேயும் அப்படியல்லவே. அவர்களைக் குறித்து ஒரு சொற்ப புண்ணியத்தையாவது, கொஞ்சம் தர்மத்தையாவது கொஞ்சம் தவத்தையாவது செய்துகொண்டுவருவோமேயானால் நமக்கு அநேகம் வெகுமதிகளை அவர்கள் கொடுப்பார்களென்கிறது தப்பாது.
அதனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களின்பேரில் பக்தியுள்ளவர்களுக்கு சர்வேசுரன் விசேஷ கிருபை காட்டி அவர்களுக்கு விசேச உபகாரங்களைத் தருவாரென்பது குன்றாத சத்தியமாம்.
அவர் இவர்களை அநேகம் பொல்லாப்புகளிலிருந்து இரட்சித்து, அவர்கள் பசாசின் சோதனைகளிலே அகப்படாதபடி அவர்களைக் காப்பாற்றி உலககாரியங்களிலே முதலாய் அவர்களை ஆசீர்வதிப்பார்.
உத்தரிக்கிற ஆத்துமாக்களோவென்றால் தங்களுக்கு உதவிசகாயம் பண்ணினவர்களை நன்றியறிந்த மனதோடே நினைத்து, அவர்களுக்காக சர்வேசுரனிடத்தில் மகா ஆசையோடும் இடைவிடாத முயற்சியோடும் வேண்டிக் கொள்ளுவார்களென்று வேதசாஸ்திரிகள் எல்லோரும் சொல்லியுள்ளார்கள். அதெப்படியென்றால் அந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்குமளவும் தங்களுக்குத் தாங்களே யாதொன்றையும் பெறக்கூடாதிருந்தாலும், தங்களுக்கு உபகாரம் செய்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளக் கூடுமல்லாமல், அவர்கள் சர்வேசுரனுக்குப் பிரியாத பந்தனப்பட்டவர்களாய் இருப்பதினாலே அவர்களுடைய வேண்டுதல் அநுகூலமாகி
அவர்கள் கேட்கிறதெல்லாம் கொடுக்கப்படுமென்பது உறுதியான நம்பிக்கையாகும்.
போலோனியாவென்ற அர்ச் கத்தரீனம்மாள் "நான் எதையாகிலும் நித்திய பிதாவினிடத்தில் பெற்றுக் கொள்ள விரும்பும்போது ,அதை எனக்காகக் கேட்கும்படிக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களை மன்றாடுவேன் . அப்படியே நான் விரும்புகிறதை எல்லாம் தப்பாமல் அடைகிறேன் " என்றாள். ஒரு பக்தியுள்ள சுவாமியானவர் நான் யாதோர் விசேச சகாயத்தை அடைய வேண்டியதாய் இருக்கும்போது உத்தரிக்கிற ஆத்துமாக்களைக்குறித்து பூசை பண்ணுவேன். அப்படியே நான் விரும்புகிறதெல்லாம் அநுகூலமாகிறது என்றார்.
இந்தச் சிந்து இராச்சியத்திலே முதலாய் அநேகம் பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் தாங்கள் செய்யப்போகிற யாதோர் பயணம் பொல்லாப்பின்றி நன்மையாய்ச் செய்யும்படிக்காவது தங்களுடைய வெள்ளாண்மை குறைவின்றி விளையும்படிக்காவது , ஒரு பிராது, ஒரு வியாச்சியம் தங்களுக்கு அநுகூலமாய் முடியும்படிக்காவது ஒரு வியாபாரம் சித்திக்கும்படிக்காவது, ஒரு வியாதி ஒரு பொல்லாப்பு நீங்கிப்போகும்படிக்காவது, ஒரு கலியாணம் நன்மையாய் முடியும்படிக்காவது வேறேதாகிலும் அநுகூலமாகும்படிக்காவது விரும்புகிறபோது உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒன்றிரண்டு பூசை செய்வித்து, தர்மங்களைக் கொடுத்துக் கோவிலிலே காணிக்கை செலுத்திக் கொண்டு வருகிறார்களென்று அறிவோம்.
அவர்கள் தானே தாங்கள் நினைத்த அனுகூலமாகும்படிக்கு அப்படிச் செய்வது நிச்சயமான வழியென்று உறுதியாகச் சொல்லுகிறார்கள். நிழல்
போன்ற இவ்வுலகத்துக்கும் அழிந்து போகும் சரீரத்துக்கும் அடுத்த காரியங்களில் அப்படியானால் , பரலோகத்துக்கும் ஆத்துமத்துக்கும் சம்பந்தப்பட்ட ஞான காரியங்களில் அதிக அனுகூலங்கள் உண்டாகும் என்பது தப்பாது
எளிமையாய் இருக்கிறவன் பேரில் தயவாயிருந்து அவனுக்குச் சகாயம் பண்ணுகிறவன் சர்வேசுரனுக்குத் தானே கடனாகக் கொடுக்கிறான். அவரும் திரும்பி உத்தரிப்பாரென்று வேத புஸ்தகங்களில் எழுதியிருக்கிறதாமே. இது இப்படியிருக்கையில் உத்தரிக்கிற ஆத்துமாக்களைப்போல் இவ்வுலகத்தில் எளிமைப்பட்டவர்களும் அவசரமுள்ளவர்களும் கஷ்டப்படுகிறவர்களும் ஒருவருமில்லையே ஆனதினாலே இந்த ஆத்துமங்களுக்கு உதவி சகாயமாய்ச் செய்கிறதெல்லாம் சர்வேசுரனுக்கு கொடுத்த ஒரு கடன் போல் இருக்கும் என்றும் ,சர்வேசுரன் திரும்ப அந்தக் கடனை உத்தரிக்கும்போது அதற்கு நூறு பங்கு அதிகமாய்க் கொடுக்க வேணுமென்று யோசிக்க வேணும் .
இது இப்படி இருக்கக் கிறிஸ்தவர்களே ! நீங்கள் யாதோர் நல்ல வியாபாரம் பண்ண வேண்டுமானால் , நீங்கள் அனுசரிக்கிற புண்ணியங்கள் எல்லாம் , செய்கிற தர்மங்கள் எல்லாம் , நடத்துவிக்கிற தேவ காரியமெல்லாம் , படுகிற துன்ப வருத்தமெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்க வேணும் .
இவைகளில் அப்படி ஒப்புக் கொடுத்தாலும் அந்தப் புண்ணியத்துக்கும், தர்மத்துக்கும். நற்கிரியைகளுக்கும் உண்டாயிருக்கிற பேறுபலனையல்லாமல், பிற சிநேகமும் தேவ சிநேகமும் உத்தமமேரையாயிருக்குமல்லவோ? அதனாலே இவையெல்லாம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்படும், உங்களுக்கும் அதிகமாய்ப் பலிக்குமென்று வேத சாஸ்திரிகள் நிச்சயமாய்ச் சொல்லுகிறார்கள். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்கிற பக்தியானது எல்லாவற்றிலும் உதவுமென்று அறிந்து, நீங்கள் மென்மேலும் அந்த ஆத்துமாக்களின் பேரில் அதிக பக்திவைக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவே எங்கள் பேரில் தயவாயிரும்.
செபம்
பிதாவாகிய சர்வேசுரா சுவாமி ! தேவரீருக்கு உகந்த குமாரனுமாய் எங்களுக்கு கர்த்தருமாய் இருக்கிற சேசுக்கிறிஸ்து நாதர் இத்தனை பாடுகள் பட்டாரே , அவருடைய பாடுகளையும் துன்பத்தையும் ,சிலுவையையும் , மரணத்தையும் , அடக்கத்தையும் , துக்கத்தையும் அவருடைய திருக்காயங்களிலிருந்து வடிந்தோடின திரு இரத்தத்தையும் பார்த்து, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதியைக் குறைத்து அவர்களை உம்முடைய சமூகத்துக்கு அழைக்கக் கிருபை பண்ணியருளவேணுமென்று உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
பதினெட்டாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
நீங்கள் இன்று செய்யும் கிரியைகளை எல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து சுத்த கருத்தோடே செய்து சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறது.
புதுமை
பழைய வேதத்தின் காலங்களிலே தம்முடைய பிரஜைகளுக்கு உதவி செய்யவும், அவர்களுடைய சத்துருக்களை சிதைக்கவும் சர்வேசுரன் சம்மனசுகளை அனுப்பினாரென்று வேத புத்தகங்களிலே எழுதியிருக்கிறது. அப்படியே இந்தக் காலங்களிலேயும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்களுக்குச் சகாயம் பண்ணவும், இவர்களுடைய எதிரிகளிடத்திலிருந்து இவர்களை மீட்கவும், சர்வேசுரன் உத்தரிக்கிற ஆத்துமாக்களைச் சில சமயங்களிலே அனுப்பினாரென்று நன்கு தெரியும். அதற்கு அத்தாட்சியாக நடந்த ஒரு சங்கதியைக் கேளுங்கள்.
சர்டீனியாவென்ற தீவுக்கு இராஜாவாயிருந்த உசேபியூஸ் என்கிறவர் உத்தரிக்கிற ஆத்துமாக்களின்பேரில் வெகு பக்தியாயிருந்து அந்த ஆத்துமாக்களைக் குறித்து வெகு தர்மங்களைப் பண்ணுவார். அந்த ஆத்துமாக்களுக்கு சகாயமாகத் தினந்தோறும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்க அநேக குருக்களை ஏற்படுத்தி நியமித்திருந்தார். அவர்களுக்கு வேண்டியவைகளை விசாரிக்கவும், மற்றத் தர்மங்களை நடப்பிக்கவும், ஒரு பட்டணத்திலே வரும் பகுதிப் பணமெல்லாவற்றையும் அதுக்காகக் குறித்துவிட்டிருந்தார். அதைக் கொண்டு அந்தப் பட்டணம் சர்வேசுரனுடைய பட்டணமென்று சொல்லப்படும்.
சிசிலியாவென்ற தீவுக்கு இராஜாவான அஸ்தோர்சியூஸ் என்கிறவன் பசாசினுடய காய்மகாரத்தால் ஏவப்பட்டு அநேகம் படைகளோடு உசேபியூஸ் என்கிறவரோடே இடை செய்ய வந்தான். அஸ்தோர்சியூஸ் என்கிறவன் மேற்சொன்ன பட்டணத்தை முற்றுகைசெய்து அதைப் பிடித்தானாம். உசேபியூஸ் என்கிறவர் சேதி அறிந்து தன் சேனைகளைச் சேர்த்து அவனுக்கு எதிரே போனார். ஆனாலும் சத்துருக்களுடைய படை பெரும் படைகளாய் இருந்ததினாலும் தம்முடைய சேவகர் கொஞ்சம்பேர்களாய் இருந்ததினாலும் ஜெயம் வருமோ வராதோவென்று அங்கலாய்த்துப் பயந்து சர்வேசுரனை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
இதோ சண்டை செய்யப்போகிற சமயத்தில் வெள்ளை வஸ்திரத்தை அணிந்து வெண்மையான ஆயுதங்களைப் பிடித்து வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறியிருந்த இராணுவத்தாரும் காலாட்படைச் சேவகரும் தமக்கு ஒத்தாசையாக வருகிறதைக் கண்டார். இராஜா இவர்களை நோக்கி நீங்கள் யார் என்று கேட்க நாங்கள் பரலோக இராஜாவினுடைய சேனைகள்தான். நீர் பயப்படவேண்டாம் உம்முடைய சத்துருக்களோடே சண்டை செய்யவும் உம்மைக் காக்கவும் வந்தோம் என்றார்கள். இந்த அதிசயமான சேனைகளைக் கண்டு, அஸ்தோர்சியூஸ் என்கிறவன் மிகவும் பயந்து சமாதானத்தின் பொறுத்தல் கேட்டு செய்த பொல்லாப்புகளுக்கு உத்தரவாதம் பண்ணித் தான் பிடித்த மேற் சொன்ன பட்டணத்தைத் திரும்பக் கொடுத்து விலகிப்போனான்.
உசேபியூஸ் இராஜாவோவென்றால், சர்வேசுரனுக்கு நன்றியறிந்த மனதோடே தோத்திரம் பண்ணி, தமக்கு உதவியாக வந்த சேவகருக்கு உபசாரம் பண் ணி. நீங்கள் வந்ததெப்படியென்று சொல்லுங்கள் என்றார். இதற்கு அந்த படைகளின் தலைவன் மறுமொழியாக இராஜாவே உம்முடைய பிரயாசையால் மீட்டிரச்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் நாங்கள்தானென்று அறிந்துகொள்ளும், ஆண்டவர் உம்மை இந்த ஆபத்துள்ள வேளையிலே ஆதரிக்கத்தக்கதாக இங்கே எங்களை
அனுப்பினார்.
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் எப்போதும் அப்படியே பக்தியாய் இருக்க வேணுமென்றும் நீர் மீட்டிரட்சிக்கும் ஆத்துமாக்கள் எல்லோரும் மோட்சத்தில் உமக்கு சிநேகிதரும் ஆதரவுள்ளவர்களுமாய் இருப்பார்கள் என்றும் சொல்லி ,அந்தத் தலைவனும் திரளான சேவகர்களும் மறைந்து போனார்கள் . அதைக் கண்ட இராஜாவானவர் முழந்தாளிட்டு தன்னைக் காப்பாற்றின சர்வேசுரனை வாழ்த்தி மேன்மேலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் அதிக பக்தியுள்ளவராய் இருந்தார்
கிறிஸ்துவர்களே ! ஜீவிய காலம் போர்க்களம் அல்லவோ ? உலகம் பசாசு சரீரம் என்ற இம்மூன்று சத்துருக்களால் உங்களுக்கு மோசம் வராதபடிக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களிடம் இருந்து உங்களுக்கு சகாயம் வரக் கூடும் என்று இப்போது சொன்ன புதுமையினாலே அறிந்து அந்த ஆத்துமாக்களின் பேரில் அதிக பக்தி வைக்க வேணுமென்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
பத்தொன்பதாம் நாள்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவதால் நமக்கு மூன்று விசேச நன்மைகள் உண்டாகுமென்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நம்மாலே கூடுமான மட்டும் உதவிசகாயம் பண்ணுகிறது எவ்வளவு பிரயோசனமுள்ள புண்ணியமென்று போன தியானத்தில் பொதுவாய்க் காண்பித்தாயிற்று. இந்தச் சுகிர்த பக்தியினால் மூன்று விசேஷ பெரிய நன்மைகள் வருமென்று இப்போது விவரித்து ஒப்புவிக்கவேணும். மனுஷனானவன் பாவ மன்னிப்பையும், நன்மரணத்தையும், மோட்சத்துக்குப் போவேனென்கிற உறுதியான நம்பிக்கையும் இம்மூன்று பெரிய நன்மைகளை விரும்புவானல்லவோ? இம்மூன்று நன்மைகளை அடைவதற்கு உத்தரிக்கற ஆத்துமாக்களின் பேரில் வைத்த விசேஷ பக்தியானது உத்தம வழியாமென்கிறதற்குச் சந்தேகமில்லை.
அதெப்படியென்றால்:
முதலாவது :
இஸ்பிரித்து சாந்துவினால் ஏவப்பட்டு அர்ச். யாகப்பர் சொன்னதாவது தப்பிப்போகிற பாவியைத் திருப்புகிறவன், அவன் ஆத்துமத்தை சாகாதபடிக்கு காப்பாற்றுகிறது.மல்லாமல், தன் பாவத்திரளையும் காணாதபடிக்குச் செய்வான் என்றார்.
இதே உங்களுடைய பாவக் கடனை யெல்லாம் துலைத்து கர்த்தர் சந்நிதியில் பரிசுத்தனாகிறதற்குப் பாவியை மனந்திருப்பப் பிரயாசைப்படுவது இஸ்பிரித்து சாந்துவினா காண்பிக்கப்பட்ட வழிதான். ஆயினும் ஒரு பாவியை மனந்திருப்புகிறதைவிட ஒர் ஆத்துமத்தை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டு மோட்சத்துக்கு, சேர்ப்பிக்கிறதே பெரிதான காரியமாம். ஆகையால் அப்படிச் செய்வது உங்களுடைய பாவக்கடனைத் தீர்க்கிறதற்கு உத்தம வழியென்று சொல்லவேனுமல்லவோ?
மேலும் தீர்க்கதரிசியான தனியேல் என்பவர் நபுக்கொதோனோசோர் இராஜாவை நோக்கிச் சொன்ன
வாக்கியமாவது இராஜாவே, பிச்சைகளினாலே உம்முடைய பாவங்களைப் பரிகளியும், தரித்திரருக்கு தர்மங்களை கொடுத்து உம்முடைய அக்கிரமங்களைத் தீர்த்துக் கொள்ளும் என்றார். வேறொருவேத புத்தகத்திலே, தர்மமாவது பாவங்களை எதிர்த்துத் தடுக்குமென்று எழுதியிருக்கிறது. இதோ பிச்சையும் தர்மமும் பாவங்களைத் தீர்த்துவிடுகிறதென்றும், பாவங்களைப் பரிகரிக்கிறதென்றும், பாவங்களைத் தடுக்கிறதென்றும் வெளிப்படையாய்க் காணப்படுகிற சத்தியமாம்.
இவ்வுலகத்திலுள்ள நிர்பாக்கியருக்குச் செய்யும் பிச்சை தர்மம் அப்படிப் பாவங்களைத் தீர்க்க வல்லதாயிருந்தால், உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிற ஆத்துமாக்களுக்கு பண்ணும் சகாயம் அம்மாத்திரம் வல்லமையைக் கொண்டிருக்காதோயென்ன? உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இஷ்டப்பிரசாதத்தில் நிலைக் கொண்டு சர்வேசுரனுக்கு அதிகமாய்ப் பிரியப்பட்டிருக்கிற தினாலேயும், அந்த ஆத்துமாக்கள் அதிக வேதனை அநுபவிக்கிறதினாலேயும், அவர்களுக்குச் செய்யும் உதவி சகாயம் எல்லாப் பிச்சை தர்மங்களிலும் மேற்பட்டதாகையால், இந்த உதவி சகாயத்தினால் நம்முடைய பாவங்கள் அதிகமாய்த் தீருமென்றும் அதிகமாய்ப் பரிகரிக்கப்படுமென்றும் நினைக்கவும் வேணும்; சொல்லவும் வேணும். கிறிஸ்துவர்களே, நீங்கள் கட்டிக் கொண்ட பாவங்களை நினைக்கும்போது மிகவும் பயப்படுகிறீர்களே, இதோ! உங்களுடைய பாவங்கள் தீரவும் ,உங்களுடைய அச்சம் நீங்கவும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருப்பது உத்தமமான உபாயமாம்
இரண்டாவது :
நன் மரணமாவது சகல நன்மைகளும் நிறைந்த மோட்சத்துக்குச் செல்லும் வழியாம் . அதுவே பேரின்ப இராஜ்ஜியத்துக்கு வாசல் ஆனதினாலே , அதை எல்லோரும் அடைய ஒருமனப்பட விரும்புவார்கள் அல்லவோ ? இந்த அதிர்ஷ்டம் தங்களுக்குக் கிடைக்கும்படியாக அநேகஞ் ஜெபங்களைப் பொழிந்தும் அநேகம் அற்சிஷ்டவர்களை மன்றாடியும், சில உத்தரியங்களைத் தரித்தும், இதுமுதலான நற்கிரியைகளைச் செய்துகொண்டு வருகிறார்களே. இதெல்லாம் நல்லதுதான், பிரியோசனமுள்ளதுதான். என்றாலும், தாங்கள் விரும்பின நன்மரணத்தை அடைய உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருத்தலே நிச்சயமான வழியென்னலாம்.
அதெப்படியென்றால் இஷ்டப்பிரசாதத்தோடே இருக்கிற மனுஷன் தேவ கிருபையைக் கொண்டு செய்யும் நற்கிரியையெல்லாம் பலனுள்ளதென்கிறதினாலே, அவன் பண்ணும் ஜெப தர்மங்களினாலும், அடைந்த திருச்சபைப் பலன்களினாலும் செய்வித்த திவ்விய பூசைகளினாலும் அநேக ஆத்துமாக்கள் உத்தரிக்கிற லதலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சக்கரை ஏறியிருப்பார்கள் என்று சொல்வதற்குச் சந்தேகமில்லை . மோட்ச பேரின்பத்தில் அமிழ்ந்திருந்த அந்த ஆத்துமாக்கள் தங்களை அவ்விடத்துச் சேர்ப்பித்த மனுஷர்பேரில் மகாபட்சத்தை வைத்திருப்பார்களாமே. பட்சமானது சிநேகந்தான், பட்சமுள்ளவன் சிநேகிதன்தான். ஆகையால் இரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாக்களை நமக்கு மெய்யான சிநேகிதன் எப்போதும் நேசிப்பானென்பதும், விசேஷமாய்
ஆபத்துள்ள சமயங்களில் சகோதரனாகத் தோன்றுவானென்றும், வேதபுஸ்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
சாவானது மோட்சத்துக்காவது நரகத்துக்காவது துவக்கமாகையால், அதை எல்லா ஆபத்துக்களிலும் அதிக ஆபத்தான சமயமென்று சொல்லவேணுமல்லவோ அப்படியிருக்க, மோட்சத்தில் வாழும் நமது சிநேகிதரான ஆத்துமாக்கள் இந்த ஆபத்தான வேளையிலே நம்மைக் கைவிடுவார்களோ ?உதவி பண்ணாதிருப்பார்களோ ?அச்சமயத்தில் பசாசினால் வரும் சோதனைகளை அகற்றாமலிருப்பார்களோ? அந்த ஆத்துமாக்கள் நமது பேரில் வைத்த பட்சத்தைப்பற்றி நமது மரண வேதனையிலே விசேஷமாய் அவர்களுடைய உதவியைச் செய்வார் களென்பது நிச்சயந்தான். எத்தனை ஆத்துமாக்களை நமது பிரயாசையால் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சித்திருப்போமோ, அத்தனை ஆத்துமாக்கள் பயங்கரமான மரண வேளையிலே நமக்கு உதவியாக நின்று நமக்கு அதிர்ஷ்டமான மரணம் கிடைக்க உதவுவார்களென்பது உறுதியான சத்தியமாம்.
அதனாலே மரித்தவர்களின் ஆத்துமாக்களுக்கு நாமும் ஈடேறும்படிக்கு அந்த ஆத்துமாக்களுக்கு ஆறுதலாகச் செய்யக் கூடுமானதெல்லாம் அசட்டையில்லாமல் நாம் சிரமப்பட்டாவது செய்யக்கடவோமென்று அர்ச் கிறிசோஸ்தோம் அருளப்பர் வசனித்தார். இது இப்படி யிருக்க உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த மெய்யான பக்தியானது நன்மரணத்தையும், மோட்ச பேரின்பத்தையும் அடைவதற்கு ஓர் அச்சாரமும் உறுதியான ஈடும் தப்பாத அடைமானமுமா மென்று வேத சாஸ்திரிகள் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள்.
மூன்றாவது:
ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்கள் மோட்சத்துக்குப் போவார்களென்று உறுதியான நம்பிக்கை யிருக்கிறதென்பது நிச்சயம்தான் என்னத்தினாலே யென்றால், நடுத்தீர்வைநாளிலே எல்லா உலகங்களுக்கும் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் பல தர்மங்களைப் பண்ணினவர்களுக்கு நித்திய பேரின்பத்தை வெகுமதியாகக் கட்டளையிடுவாரல்லவோ? ஆயினும் முன்காண்பித்தாற்போல உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குச் செய்த உதவி சகாயம் எல்லா தர்மங்களிலும் மேற்பட்டதாகையால், இப்பேர்ப்பட்ட தர்மங்களைச் செய்பவர்களுக்கு மோட்ச பிரதாபமுள்ள இராச்சியம் நிச்சயமாகவே கொடுக்கப்படுமென்கிறதற்கு கொஞ்சமாகிலும் சந்தேகம் இருக்கக் கூடுமோ? மேலும் "உங்களை நித்திய கூடாரங்க ளிலே ஏற்றுக்கொள்ளும்படிக்கு உங்களுக்கு சிநேகிதரைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று சுவாமிதாமே திருவுளம் பற்றினார்.
அப்படியே நம்மை மோட்சத்துக்குச் சேர்ப்பிக்கத் தகுந்த சிநேகிதர் நம்மாலே மீட்டிரட்சிக்கப்பட்ட உத்தரிக்கிற ஆத்துமாக்களல்லவோ அந்த ஆத்துமாக்கள் தங்களுடைய உதவியினாலேயும், சர்வேசுரனிடத்திலே தங்களுடைய வேண்டுதலினாலேயும் நமக்கு ஒத்தாசையாக நின்று நம்முடைய ஆத்துமம் மோட்சகரை சேரும்வரையில் நம்மைக் கைவிடமாட்டார்களென்பது நிச்சயமாமே.
பிதாப்பிதாவாகிய தொபியாசென்கிறவர் தம்முடைய குமாரனுக்குப் புத்தி சொல்லும்போது வசனித்ததாவது: உன்னுடைய ஆஸ்தியைக்கொண்டு பிச்சைக் கொடுப்பாயாக யாதோர் பிச்சைக்காரனை அகற்றாதே, அப்படி நடந்தால் ஆண்டவரும் உன்னை அகற்றித் தள்ள மாட்டார்.
அதனால் வருத்தமுள்ள காலங்களிலே உனக்கு உதவும் ஒரு பொக்கிஷத்தை சம்பாதிப்பாய். அதேதெனில் பிச்சை யானது எல்லாப் பாவங்களினின்றும் மரணத்தினின்றும் உன்னை இரட்சிப்பதுமல்லாமல் உன்னை இருள் நிறைந்த இடங்களுக்கு போகவிடாது என்றார். இந்த தேவ வாக்கியத்தில் பாவமன்னிப்பும் நன்மரணமும் ஈடேற்றத்தின் நம்பிக்கையும் ஆகிய மூன்று விசேஷ வரங்கள் தர்மத்தினால் வருகிறதென்று உச்சிப்பகலினும் தெளிவாய்க் காண்பிக்கிறது. அதனாலே இம்மூன்று விசேஷ வரங்களை விரும்புகிற நீங்கள் எல்லாத் தர்மங்களிலும் மேலான தர்மமாகிய உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுகிற தர்மத்தைச் செய்யவேணுமென்று அறியக்கடவிர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திரு இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
செபம்
மூன்று சுத்தவாலிபர்களை நெருப்புச்சுவாலையிலிருந்து காப்பாற்றினவருமாய், தீர்க்கதரிசியான தனியேலைச் சிங்கக் கெபியிலிருந்து மீட்டிரட்சித்தவருமாய், எல்லா வேதனைகளிலும் வேதசாட்சிகளை ஸ்திரப்படுத்தினவருமாயிருக்கிற சர்வேசுரா ! நாங்கள் உமது சந்நிதியிலே பொழிகிற ஜெபங்களைக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பினின்றும் சகல வேதனைகளினின்றும் மரித்தவர்களுடைய ஆத்துமங்களை மீட்டுக் கொண்டு பிரதாபமுள்ள உமது சமூகத்துக்கு வரப்பண்ண வேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம். சுவாமி, ஆமென்.
புதுமை
சாஸ்திரிகளுக்குள்ளே பேர் பெற்ற பாரோனியூஸ் என்கிறவர் எழுதின சரித்திரமாவது உரோமாபுரியிலே ஒரு புண்ணியவதி உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியாயிருந்து அவர்களுக்கு ஆறுதல் வருவிக்க வெகு பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தாளாம். அவள் வியாதியாய் விழுந்து அவஸ்தையாகிற தருணத்தில் துர்மனப் பசாசானது அச்சமும் பயமும் அவநம்பிக்கையும் கலக்கமும் இவை முதலான சோதனைகளை அவளுக்கு வருவித்தது.
அதனாலே அவள் கலங்கி நடுநடுங்கி என்ன வருமோ வென்று அதிகமாய்ப் பயந்திருக்கையிலே, இதோ மோட்சத்திலிருந்து தனக்கு ஒத்தாசையாக அநேகமாயிரம் பேர்கள் வருகிறதைக் கண்டாள். வந்தவர்கள் அவளுடைய படுக்கையைச் சுற்றிலும் சந்தோஷ முகத்தோடே நின்று, பயப்படாதே, ஜெயம் வரும் என்று அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார்கள். அக்ஷணத்திலே துஷ்டப் பசாசானது ஓடிப்போகவே, அவள் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்தவர்களைப் பார்த்து நீங்கள் எனக்கு இப்பேர்ப்பட்ட சகாயம் பண்ணினதற்கு முகாந்தரம் என்ன சொல்லுங்கள் என்று கேட்க, அவர்கள் "உன்னுடைய வேண்டுதலினாலே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போன ஆத்துமாக்கள் நாங்கள்தான் எங்களுடைய நன்றியறிதலை உனக்குக காண்பிக்கவும், உன்னுடைய ஆத்துமத்தை மோட்சத்துக்குக் கூட்டிப் போகவும் வந்தோம் என்றார்கள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்தப் புண்ணியவதி சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து மோட்சபாக்கியத்தை நுகரத்துவங்குகிறாற்போலே சிரித்த முகத்தோடு இன்பமாய் மரித்து, அந்த ஆத்துமாக்களுடன் பரலோகத்துக்குப் போனாளென்று மேற்சொன்ன சாஸ்திரி நிச்சயமாய் எழுதிவைத்தார்.
உரோமாபுரியிலே பிரபலமான பேரை அடைந்த அர்ச். பிலிப்புநேரி என்கிறவர், சகல உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருந்ததுமல்லாமல், தம்முடைய விசாரணை யிலிருந்தவர்களுடைய ஆத்துமாக்களை விசேஷமாய் நினைத்துக் கொள்ளுவாராம். அந்த ஆத்துமாக்களும் அவருக்கு அநேகம் முறை தோன்றி, தங்களுக்காக வேண்டிக் கொள்ளவேணுமென்று கேட்டதுந் தவிர, அவருக்கு அநேகம் சகாயங்களையும் பண்ணுவர்.
மீண்டும் அந்த ஆத்துமாக்கள் மோட்சத்துக்குப் போன்பிற்பாடு திரும்பவும் அவருக்குத் தோன்றி நன்றியறிந்த மனதோடே தோத்திரம் பண்ணுவார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சாகிறபோது அந்த ஆத்துமாக்கள் பெரும் படையாய் வந்து பரிவாரமாக நின்று அவரை மோட்சத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அவர் செத்தப்பிற்பாடு பக்தியுள்ள ஒரு சந்நியாசியார் அவர் மோட்சத்தில் சொல்லிலடங்காத பிரதாபத்தோடு விளங்குகிறதையும், அவருக்கு மகிமையாக அவரால் ஈடேறின ஆத்துமாக்கள் சூழ்ந்துநிற்கிறதையும் கண்டாரென்று அர்ச். பிலிப்பு நேரியுடைய சரித்திரத்தில் எழுதியிருந்தது.
கிறிஸ்துவர்களே !உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்கள் பேரில் வைத்த விசேஷ பக்தியினாலே எவ்வளவு பிரயோசனம் வருகிறதென்று இவ்விரண்டு புதுமைகளினாலே கண்டறிந்து அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம்பண்ண மென்மேலும் பிரியப்படக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவதால் நமக்கு மூன்று விசேச நன்மைகள் உண்டாகுமென்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நம்மாலே கூடுமான மட்டும் உதவிசகாயம் பண்ணுகிறது எவ்வளவு பிரயோசனமுள்ள புண்ணியமென்று போன தியானத்தில் பொதுவாய்க் காண்பித்தாயிற்று. இந்தச் சுகிர்த பக்தியினால் மூன்று விசேஷ பெரிய நன்மைகள் வருமென்று இப்போது விவரித்து ஒப்புவிக்கவேணும். மனுஷனானவன் பாவ மன்னிப்பையும், நன்மரணத்தையும், மோட்சத்துக்குப் போவேனென்கிற உறுதியான நம்பிக்கையும் இம்மூன்று பெரிய நன்மைகளை விரும்புவானல்லவோ? இம்மூன்று நன்மைகளை அடைவதற்கு உத்தரிக்கற ஆத்துமாக்களின் பேரில் வைத்த விசேஷ பக்தியானது உத்தம வழியாமென்கிறதற்குச் சந்தேகமில்லை.
அதெப்படியென்றால்:
முதலாவது :
இஸ்பிரித்து சாந்துவினால் ஏவப்பட்டு அர்ச். யாகப்பர் சொன்னதாவது தப்பிப்போகிற பாவியைத் திருப்புகிறவன், அவன் ஆத்துமத்தை சாகாதபடிக்கு காப்பாற்றுகிறது.மல்லாமல், தன் பாவத்திரளையும் காணாதபடிக்குச் செய்வான் என்றார்.
இதே உங்களுடைய பாவக் கடனை யெல்லாம் துலைத்து கர்த்தர் சந்நிதியில் பரிசுத்தனாகிறதற்குப் பாவியை மனந்திருப்பப் பிரயாசைப்படுவது இஸ்பிரித்து சாந்துவினா காண்பிக்கப்பட்ட வழிதான். ஆயினும் ஒரு பாவியை மனந்திருப்புகிறதைவிட ஒர் ஆத்துமத்தை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டு மோட்சத்துக்கு, சேர்ப்பிக்கிறதே பெரிதான காரியமாம். ஆகையால் அப்படிச் செய்வது உங்களுடைய பாவக்கடனைத் தீர்க்கிறதற்கு உத்தம வழியென்று சொல்லவேனுமல்லவோ?
மேலும் தீர்க்கதரிசியான தனியேல் என்பவர் நபுக்கொதோனோசோர் இராஜாவை நோக்கிச் சொன்ன
வாக்கியமாவது இராஜாவே, பிச்சைகளினாலே உம்முடைய பாவங்களைப் பரிகளியும், தரித்திரருக்கு தர்மங்களை கொடுத்து உம்முடைய அக்கிரமங்களைத் தீர்த்துக் கொள்ளும் என்றார். வேறொருவேத புத்தகத்திலே, தர்மமாவது பாவங்களை எதிர்த்துத் தடுக்குமென்று எழுதியிருக்கிறது. இதோ பிச்சையும் தர்மமும் பாவங்களைத் தீர்த்துவிடுகிறதென்றும், பாவங்களைப் பரிகரிக்கிறதென்றும், பாவங்களைத் தடுக்கிறதென்றும் வெளிப்படையாய்க் காணப்படுகிற சத்தியமாம்.
இவ்வுலகத்திலுள்ள நிர்பாக்கியருக்குச் செய்யும் பிச்சை தர்மம் அப்படிப் பாவங்களைத் தீர்க்க வல்லதாயிருந்தால், உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிற ஆத்துமாக்களுக்கு பண்ணும் சகாயம் அம்மாத்திரம் வல்லமையைக் கொண்டிருக்காதோயென்ன? உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இஷ்டப்பிரசாதத்தில் நிலைக் கொண்டு சர்வேசுரனுக்கு அதிகமாய்ப் பிரியப்பட்டிருக்கிற தினாலேயும், அந்த ஆத்துமாக்கள் அதிக வேதனை அநுபவிக்கிறதினாலேயும், அவர்களுக்குச் செய்யும் உதவி சகாயம் எல்லாப் பிச்சை தர்மங்களிலும் மேற்பட்டதாகையால், இந்த உதவி சகாயத்தினால் நம்முடைய பாவங்கள் அதிகமாய்த் தீருமென்றும் அதிகமாய்ப் பரிகரிக்கப்படுமென்றும் நினைக்கவும் வேணும்; சொல்லவும் வேணும். கிறிஸ்துவர்களே, நீங்கள் கட்டிக் கொண்ட பாவங்களை நினைக்கும்போது மிகவும் பயப்படுகிறீர்களே, இதோ! உங்களுடைய பாவங்கள் தீரவும் ,உங்களுடைய அச்சம் நீங்கவும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருப்பது உத்தமமான உபாயமாம்
இரண்டாவது :
நன் மரணமாவது சகல நன்மைகளும் நிறைந்த மோட்சத்துக்குச் செல்லும் வழியாம் . அதுவே பேரின்ப இராஜ்ஜியத்துக்கு வாசல் ஆனதினாலே , அதை எல்லோரும் அடைய ஒருமனப்பட விரும்புவார்கள் அல்லவோ ? இந்த அதிர்ஷ்டம் தங்களுக்குக் கிடைக்கும்படியாக அநேகஞ் ஜெபங்களைப் பொழிந்தும் அநேகம் அற்சிஷ்டவர்களை மன்றாடியும், சில உத்தரியங்களைத் தரித்தும், இதுமுதலான நற்கிரியைகளைச் செய்துகொண்டு வருகிறார்களே. இதெல்லாம் நல்லதுதான், பிரியோசனமுள்ளதுதான். என்றாலும், தாங்கள் விரும்பின நன்மரணத்தை அடைய உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருத்தலே நிச்சயமான வழியென்னலாம்.
அதெப்படியென்றால் இஷ்டப்பிரசாதத்தோடே இருக்கிற மனுஷன் தேவ கிருபையைக் கொண்டு செய்யும் நற்கிரியையெல்லாம் பலனுள்ளதென்கிறதினாலே, அவன் பண்ணும் ஜெப தர்மங்களினாலும், அடைந்த திருச்சபைப் பலன்களினாலும் செய்வித்த திவ்விய பூசைகளினாலும் அநேக ஆத்துமாக்கள் உத்தரிக்கிற லதலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சக்கரை ஏறியிருப்பார்கள் என்று சொல்வதற்குச் சந்தேகமில்லை . மோட்ச பேரின்பத்தில் அமிழ்ந்திருந்த அந்த ஆத்துமாக்கள் தங்களை அவ்விடத்துச் சேர்ப்பித்த மனுஷர்பேரில் மகாபட்சத்தை வைத்திருப்பார்களாமே. பட்சமானது சிநேகந்தான், பட்சமுள்ளவன் சிநேகிதன்தான். ஆகையால் இரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாக்களை நமக்கு மெய்யான சிநேகிதன் எப்போதும் நேசிப்பானென்பதும், விசேஷமாய்
ஆபத்துள்ள சமயங்களில் சகோதரனாகத் தோன்றுவானென்றும், வேதபுஸ்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
சாவானது மோட்சத்துக்காவது நரகத்துக்காவது துவக்கமாகையால், அதை எல்லா ஆபத்துக்களிலும் அதிக ஆபத்தான சமயமென்று சொல்லவேணுமல்லவோ அப்படியிருக்க, மோட்சத்தில் வாழும் நமது சிநேகிதரான ஆத்துமாக்கள் இந்த ஆபத்தான வேளையிலே நம்மைக் கைவிடுவார்களோ ?உதவி பண்ணாதிருப்பார்களோ ?அச்சமயத்தில் பசாசினால் வரும் சோதனைகளை அகற்றாமலிருப்பார்களோ? அந்த ஆத்துமாக்கள் நமது பேரில் வைத்த பட்சத்தைப்பற்றி நமது மரண வேதனையிலே விசேஷமாய் அவர்களுடைய உதவியைச் செய்வார் களென்பது நிச்சயந்தான். எத்தனை ஆத்துமாக்களை நமது பிரயாசையால் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சித்திருப்போமோ, அத்தனை ஆத்துமாக்கள் பயங்கரமான மரண வேளையிலே நமக்கு உதவியாக நின்று நமக்கு அதிர்ஷ்டமான மரணம் கிடைக்க உதவுவார்களென்பது உறுதியான சத்தியமாம்.
அதனாலே மரித்தவர்களின் ஆத்துமாக்களுக்கு நாமும் ஈடேறும்படிக்கு அந்த ஆத்துமாக்களுக்கு ஆறுதலாகச் செய்யக் கூடுமானதெல்லாம் அசட்டையில்லாமல் நாம் சிரமப்பட்டாவது செய்யக்கடவோமென்று அர்ச் கிறிசோஸ்தோம் அருளப்பர் வசனித்தார். இது இப்படி யிருக்க உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த மெய்யான பக்தியானது நன்மரணத்தையும், மோட்ச பேரின்பத்தையும் அடைவதற்கு ஓர் அச்சாரமும் உறுதியான ஈடும் தப்பாத அடைமானமுமா மென்று வேத சாஸ்திரிகள் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள்.
மூன்றாவது:
ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்கள் மோட்சத்துக்குப் போவார்களென்று உறுதியான நம்பிக்கை யிருக்கிறதென்பது நிச்சயம்தான் என்னத்தினாலே யென்றால், நடுத்தீர்வைநாளிலே எல்லா உலகங்களுக்கும் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் பல தர்மங்களைப் பண்ணினவர்களுக்கு நித்திய பேரின்பத்தை வெகுமதியாகக் கட்டளையிடுவாரல்லவோ? ஆயினும் முன்காண்பித்தாற்போல உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குச் செய்த உதவி சகாயம் எல்லா தர்மங்களிலும் மேற்பட்டதாகையால், இப்பேர்ப்பட்ட தர்மங்களைச் செய்பவர்களுக்கு மோட்ச பிரதாபமுள்ள இராச்சியம் நிச்சயமாகவே கொடுக்கப்படுமென்கிறதற்கு கொஞ்சமாகிலும் சந்தேகம் இருக்கக் கூடுமோ? மேலும் "உங்களை நித்திய கூடாரங்க ளிலே ஏற்றுக்கொள்ளும்படிக்கு உங்களுக்கு சிநேகிதரைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று சுவாமிதாமே திருவுளம் பற்றினார்.
அப்படியே நம்மை மோட்சத்துக்குச் சேர்ப்பிக்கத் தகுந்த சிநேகிதர் நம்மாலே மீட்டிரட்சிக்கப்பட்ட உத்தரிக்கிற ஆத்துமாக்களல்லவோ அந்த ஆத்துமாக்கள் தங்களுடைய உதவியினாலேயும், சர்வேசுரனிடத்திலே தங்களுடைய வேண்டுதலினாலேயும் நமக்கு ஒத்தாசையாக நின்று நம்முடைய ஆத்துமம் மோட்சகரை சேரும்வரையில் நம்மைக் கைவிடமாட்டார்களென்பது நிச்சயமாமே.
பிதாப்பிதாவாகிய தொபியாசென்கிறவர் தம்முடைய குமாரனுக்குப் புத்தி சொல்லும்போது வசனித்ததாவது: உன்னுடைய ஆஸ்தியைக்கொண்டு பிச்சைக் கொடுப்பாயாக யாதோர் பிச்சைக்காரனை அகற்றாதே, அப்படி நடந்தால் ஆண்டவரும் உன்னை அகற்றித் தள்ள மாட்டார்.
அதனால் வருத்தமுள்ள காலங்களிலே உனக்கு உதவும் ஒரு பொக்கிஷத்தை சம்பாதிப்பாய். அதேதெனில் பிச்சை யானது எல்லாப் பாவங்களினின்றும் மரணத்தினின்றும் உன்னை இரட்சிப்பதுமல்லாமல் உன்னை இருள் நிறைந்த இடங்களுக்கு போகவிடாது என்றார். இந்த தேவ வாக்கியத்தில் பாவமன்னிப்பும் நன்மரணமும் ஈடேற்றத்தின் நம்பிக்கையும் ஆகிய மூன்று விசேஷ வரங்கள் தர்மத்தினால் வருகிறதென்று உச்சிப்பகலினும் தெளிவாய்க் காண்பிக்கிறது. அதனாலே இம்மூன்று விசேஷ வரங்களை விரும்புகிற நீங்கள் எல்லாத் தர்மங்களிலும் மேலான தர்மமாகிய உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுகிற தர்மத்தைச் செய்யவேணுமென்று அறியக்கடவிர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திரு இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
செபம்
மூன்று சுத்தவாலிபர்களை நெருப்புச்சுவாலையிலிருந்து காப்பாற்றினவருமாய், தீர்க்கதரிசியான தனியேலைச் சிங்கக் கெபியிலிருந்து மீட்டிரட்சித்தவருமாய், எல்லா வேதனைகளிலும் வேதசாட்சிகளை ஸ்திரப்படுத்தினவருமாயிருக்கிற சர்வேசுரா ! நாங்கள் உமது சந்நிதியிலே பொழிகிற ஜெபங்களைக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பினின்றும் சகல வேதனைகளினின்றும் மரித்தவர்களுடைய ஆத்துமங்களை மீட்டுக் கொண்டு பிரதாபமுள்ள உமது சமூகத்துக்கு வரப்பண்ண வேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம். சுவாமி, ஆமென்.
புதுமை
சாஸ்திரிகளுக்குள்ளே பேர் பெற்ற பாரோனியூஸ் என்கிறவர் எழுதின சரித்திரமாவது உரோமாபுரியிலே ஒரு புண்ணியவதி உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியாயிருந்து அவர்களுக்கு ஆறுதல் வருவிக்க வெகு பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தாளாம். அவள் வியாதியாய் விழுந்து அவஸ்தையாகிற தருணத்தில் துர்மனப் பசாசானது அச்சமும் பயமும் அவநம்பிக்கையும் கலக்கமும் இவை முதலான சோதனைகளை அவளுக்கு வருவித்தது.
அதனாலே அவள் கலங்கி நடுநடுங்கி என்ன வருமோ வென்று அதிகமாய்ப் பயந்திருக்கையிலே, இதோ மோட்சத்திலிருந்து தனக்கு ஒத்தாசையாக அநேகமாயிரம் பேர்கள் வருகிறதைக் கண்டாள். வந்தவர்கள் அவளுடைய படுக்கையைச் சுற்றிலும் சந்தோஷ முகத்தோடே நின்று, பயப்படாதே, ஜெயம் வரும் என்று அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார்கள். அக்ஷணத்திலே துஷ்டப் பசாசானது ஓடிப்போகவே, அவள் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்தவர்களைப் பார்த்து நீங்கள் எனக்கு இப்பேர்ப்பட்ட சகாயம் பண்ணினதற்கு முகாந்தரம் என்ன சொல்லுங்கள் என்று கேட்க, அவர்கள் "உன்னுடைய வேண்டுதலினாலே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போன ஆத்துமாக்கள் நாங்கள்தான் எங்களுடைய நன்றியறிதலை உனக்குக காண்பிக்கவும், உன்னுடைய ஆத்துமத்தை மோட்சத்துக்குக் கூட்டிப் போகவும் வந்தோம் என்றார்கள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்தப் புண்ணியவதி சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து மோட்சபாக்கியத்தை நுகரத்துவங்குகிறாற்போலே சிரித்த முகத்தோடு இன்பமாய் மரித்து, அந்த ஆத்துமாக்களுடன் பரலோகத்துக்குப் போனாளென்று மேற்சொன்ன சாஸ்திரி நிச்சயமாய் எழுதிவைத்தார்.
உரோமாபுரியிலே பிரபலமான பேரை அடைந்த அர்ச். பிலிப்புநேரி என்கிறவர், சகல உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருந்ததுமல்லாமல், தம்முடைய விசாரணை யிலிருந்தவர்களுடைய ஆத்துமாக்களை விசேஷமாய் நினைத்துக் கொள்ளுவாராம். அந்த ஆத்துமாக்களும் அவருக்கு அநேகம் முறை தோன்றி, தங்களுக்காக வேண்டிக் கொள்ளவேணுமென்று கேட்டதுந் தவிர, அவருக்கு அநேகம் சகாயங்களையும் பண்ணுவர்.
மீண்டும் அந்த ஆத்துமாக்கள் மோட்சத்துக்குப் போன்பிற்பாடு திரும்பவும் அவருக்குத் தோன்றி நன்றியறிந்த மனதோடே தோத்திரம் பண்ணுவார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சாகிறபோது அந்த ஆத்துமாக்கள் பெரும் படையாய் வந்து பரிவாரமாக நின்று அவரை மோட்சத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அவர் செத்தப்பிற்பாடு பக்தியுள்ள ஒரு சந்நியாசியார் அவர் மோட்சத்தில் சொல்லிலடங்காத பிரதாபத்தோடு விளங்குகிறதையும், அவருக்கு மகிமையாக அவரால் ஈடேறின ஆத்துமாக்கள் சூழ்ந்துநிற்கிறதையும் கண்டாரென்று அர்ச். பிலிப்பு நேரியுடைய சரித்திரத்தில் எழுதியிருந்தது.
கிறிஸ்துவர்களே !உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்கள் பேரில் வைத்த விசேஷ பக்தியினாலே எவ்வளவு பிரயோசனம் வருகிறதென்று இவ்விரண்டு புதுமைகளினாலே கண்டறிந்து அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம்பண்ண மென்மேலும் பிரியப்படக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இருபதாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியானது உத்தரிக்கிற ஸ்தலத்தில் நமக்கு முதலாய் உதவுமென்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருந்து அவர்களுக்கு உதவி சகாயம்பண்ணுகிறது சர்வேசுரனுக்கு உகந்த புண்ணியமென்றும், நமது பேரில் சுமந்த பெரிய கடனென்றும், நமக்கு வெகு பிரயோசனத்தைத் தரும் பக்தியென்றும் தெளிவாய்க் காண்பித்துவிட்டோம். முன் விவரித்த நியாயங்களை நன்றாய் ஆராய்ந்து உற்றுப் பார்ப்பீர்களேயானால், அந்தச் சுகிர்த பக்தியானது உங்களிடத்திலே மென்மேலும் வளருமென்று நம்பியிருக்கிறோம். ஆயினும் இவ்விஷயத்தில் பசாசினுடைய சோதனையினாலேயும், பதிதர் முதலான துர்ச்சனுடைய பொல்லாத புத்தினாலேயும், சிலபேர்களுடைய மனம் தத்தளித்து, அதென்னமோவென்று அசட்டையாயிருக்கிறார்களென்று அறிவோம். இப்பேர்ப்பட்டவர்கள் நாம் இப்போது சொல்லப்போகிறதைக் கவனமாய்க் கேட்டுச் சரியாய் ஆராய்ந்து யோசனை பண்ணக்கடவார்களாக.
சத்திய சுருபியாயிருக்கிற சேசுகிறிஸ்துநாதர் சுவாமி தமது திருவாய் மலர்ந்து, கூடியிருந்த திரளான ஜனங்களுக்குத் திருவுளம் பற்றின பரம வாக்கியமாவது: "கொடுங்கள், அப்போது உங்களுக்கு கொடுக்கப்படும். அமுக்கவும் குலுக்கவும் பட்டுச் சரிந்துவிழும் நல்லளவை உங்கள் மடியிலே போடுவார்கள். ஏனெனில் எந்த அளவைக்கொண்டு அளந்திருப்பீர்களோ, அதைக் கொண்டு தானே உங்களுக்கும், அளக்கப்படும்" என்றார்.
ஆண்டவர் திருவுளம் பற்றின இந்த வாக்கியத்தை கவனித்து தியானிக்க வேனும் அது எப்படியென்றால், ஏறக்குறைய எல்லா மனுஷரும் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போவார்களென்றும், அதில் அகோர வேதனைகளை அநுபவிப்பார்களென்றும், அதில் நீண்ட காலமாய்க் கிடப்பார்களென்றும், முன் சொன்ன நியாயங்களினால் உச்சிப்பகலினும் தெளிவாய் விளங்கியிருக்குமே. அது இப்படியிருக்க, விவேகமுள்ள மனுஷன் தனக்கு இப்படி சம்பவிக்குமென்று அறிந்து என்ன செய்யவேணுமென்றால், தான் இவ்வுலகத்தில் ஜீவிக்கும் போதே மறு உலகத்தில் தனக்கு நேரிடப்போகிற நிர்ப்பாக்கியத்தை விலக்கவாவது, அதனுடைய கடினத்தைத் தணிக்கவாவது, அதனுடைய காலத்தைக் குறைக்கவாவது, தகுந்த வழிபாடுகளைத் தேடிக் கொள்வானல்லவோ? ஏற்கனவே பிச்சைக் கொடுத்து, ஜெபத்தியானம்பண்ணி, தபசுசெய்து, மற்ற நற்கிரியைகளைச் செலுத்தி, இவைகளுடைய பேறுபலனைத் தனக்கு முன் ஒரு பொக்கிஷத்தை அனுப்பினாற்போல மறு உலகத்துக்கு அனுப்புவான்.
ஆயினும் அவன் தேவநீதிக்குச் செலுத்த வேண்டிய பரிகாரக் கடன் கனத்த கடனாகையால், அவன் தனக்குச் செய்ததெல்லாம் போதாமல் மிகவும் குறைச்சலாயிருக்குமென்கிறதற்குச் சந்தேகமில்லை. இதற்கு என்னத்தைச் செய்யவேண்டியதாயிருக்குமென்றால் எந்த அளவைக் கொண்டு அளந்திருப்பீர்களோ, அந்த அளவையைக் கொண்டுதான் உங்களுக்கும் அளக்கப்படும் என்று சுவாமி திருவுளம்பற்றினாரே. இதற்கு அர்த்தமேதெனில் நீங்கள் உயிரோடிருக்கும்போது உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு எந்த அளவையைக் கொண்டு உதவப் பிரயாசைப் பட்டிருப்பீர்களோ, அந்த அளவையைக்கொண்டுதானே சர்வேசுரன் உங்களுக்கு மன்னிப்பு கொடுப்பதுமல்லாமல், நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வருத்தப்படும்போது அந்த அளவையைக் கொண்டுதானே மற்றவர்கள் உங்களுக்கு உதவி பண்ணுவார்களென்று அர்த்தமாயிருக்கிறதாக வேதசாஸ்திரிகள் நிச்சயித்துச்சொல்லுகிறார்கள்.
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து அதிகமாய் செய்யவேணுமென்கிற ஆசையினாலே அதிக ஜெபதப தானங்களை நடப்பித்து, அதிக பேறுபலன்களைச் சம்பாதித்து, அநேகம் முறை திவ்விய பூசைகளைப் பண்ணுவித்து வந்திருப்பீர்களேயானால், நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும்போது அப்படித் தான் உங்களைக்குறித்தும் செய்யப்படும். அதிகமாய்க் கொடுக்கிறவனுக்கு அதிகமாய்க் கொடுக்கப்படும். குறைச்சலாய்க் கொடுக்கிறவனுக்கு குறைச்சலாய்க் கொடுக்கப்படுமென்பது வேதவாக்கியமாம். இப்போது சொன்னதெல்லாம் வேத வாக்கியங்களுக்கும், உள்ள நியாயத்திற்கும் ஒத்ததாயிருக்கிறதாகத் தோன்றுகிறதுமல்லாமல், எண்ணிறந்த புதுமைகளினாலும் சரித்திரங்களினாலும் அது மெய்யென்று நிரூபிக்கப்பட்டதாகும்.
இரக்கமற்றவன் பேரில் இரக்கமற்ற தீர்வை வரும் என்று அர்ச் யாகப்பர் எழுதிவைத்தார். மேலும் சேசுகிறிஸ்து நாதர் , ஒவ்வொருவனும் பிறர்பேரில் இரக்கமாயிருந்து அவர்களுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளவேணுமென்று ஒர் உவமையினால் காண்பித்த பிற்பாடு, இரக்கமில்லாதவனை அவனுடைய எஜமான் கோபித்து, கடனெல்லாம் செலுத்த மட்டும் உபாதைப் படுத்துகிறவர்களிடத்தில் அவனைக் கையளித்தான். உன்னில் ஒருவன் தன் சகோதரனை முழுமனதோடே மன்னிக்காவிட்டால், அப்படியே என் பரம பிதாவானவர் அவனுக்குச் செய்வார் என்று திருவுளம்பற்றினார். இதோ இரக்கமற்றவனுக்கு இரக்கமற்ற தீர்வை வருமென்றும் இரக்கமில்லாதவன் தன் கடன் எல்லாவற்றையும் செலுத்துமட்டும் உபாதிக்கப்படுவானென்றும், சேசு கிறிஸ்துநாதரும், அவருடைய அப்போஸ்தலருமான அர்ச் யாகப்பரும் சொல்லுகிறார்கள். இரக்கமில்லாதவன் எவனென்றால், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில்
இரக்கமில்லாதவன்தான். பிள்ளைகள் தங்கள் தாய் தகப்பன்மாரையும், தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளையும் , புருஷன் தன் பெண்ஜாதியையும், பெஞ்சாதி தன் புருஷனையும் , சிநேகிதர் தங்கள் சிநேகிதரையும், பந்துக்கள் தங்கள் பந்து ஜனங்களையும் மறந்து, அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் கொடிய வேதனைகளில் ஆறுதலுமின்றி உதவியுமின்றி அகோரமாய் உபாதிக்கப்படுகிறதை அறிந்தும், அவர்களைக் கை நெகிழ்ந்து ஒரு உதவியும் செய்யாவிட்டால், இவர்கள் தான் இரக்கமற்றவர்கள். இவர்களுக்குத்தான் இரக்கமற்ற தீர்வை கிடைக்கும். இவர்கள் தான் தங்களுடைய கடனெல்லாம் தீருமட்டும் அந்த பயங்கரமான சிறைச்சாலையில் உபாதிக்கப்படுவார்கள். மெய்யாகவே மெய்யாகவே, நாம் உத்தரிக்கற ஆத்துமாக்களின் அவதியைக் குறைக்கவும் அமர்த்தவும் என்னத்தைச் செய்திருப்போமோ அப்படித்தான் நமக்கும் செய்யப்படும். அந்த ஆத்துமாக்களின் பேரில் நமக்கு இரக்கமில்லாதிருந்தால் நாம் உத்தரிக்கும்போது ஒருவரும் நமக்கு இரங்கமாட்டார்களென்பது தப்பாத சத்தியமாம்.
செத்தவர்களுக்கு நீங்கள் எப்படி கிருபை செய்தீர்களோ அப்படித்தான் சர்வேசுரன் உங்களுக்கும் கிருபை செய்யக்கடவாராக என்று ரூத்தென்ற வேத புஸ்தகத்து முதல் அதிகாரம் 8-ம் வசனத்தில் எழுதியிருக்கிறது. மேலும் போர்ச்சண்டையிலே செத்த சவுல் இராஜாவையும் அவனுடைய மகனான யோனத் தாசென்பவனையும் ஷாபேஸ்காலாதென்ற ஊரார் நல்லடக்கம் பண்ணினதை தாவீது இராஜா அறிந்து அவர்களை வாழ்த்தினதுமல்லாமல், அதற்காக உங்களுக்கு சர்வேசுரன் கிருபை செய்வார் என்று சொல்லி அனுப்பினார்.
செத்தவர்களை அடக்கம் பண்ணுகிறது நல்லதாயினும், அவர்களுடைய ஆத்துமத்துக்கு இரங்கி நல்ல இடமாகிய மோட்சத்துக்கு அவர்களைச் சேர்ப்பிக்கிறது அதிக நல்லது என்பதில் சந்தேகப்படுவாருண்டோ ?ஆனதனாலே மனுஷனானவன் எப்படி அந்த ஆத்துமாக்களுக்குக் கிருபை காண்பித்திருப்பானோ அப்படித்தான் அவனுக்கும் கிருபை காண்பிக்கப்படும். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவன் பாக்கியவான். ஏனெனில் அவன் அந்த ஆத்துமாக்களுக்குக் கிருபை செய்தாற் போலே அவனும் கிருபை அடைவான். உத்தரிக்கின்ற ஆத்துமாக்களுக்குக் கிருபை செய்யாதிருந்தாற் போல, அவனும் கிருபை அடையப் போகிறதில்லை. தேவநீதிக்கு அவன் செலுத்த வேண்டிய கடனெல்லாம் தீருமளவும், அவன் உத்தரிக்கிறஸ்தலத்திலே கிடப்பானென்பது தப்பாது.
கிறிஸ்துவர்களே ! இதெல்லாவற்றையும் நீங்கள் கேட்டபின் உங்களுக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு இரக்கமும், பக்தியும் உண்டாகுமென்று நினைத்திருக்கிறோம். அந்த ஆத்துமாக்களுக்கு ஏராளமான உதவி சகாயம் பண்ணுகிறது நமக்கு பெரும் ஆதாயந்தான். அதெப்படி என்றால், நாம் ஆத்துமாக்களுக்காக ஒப்புக் கொடுக்கிறதெல்லாம் நமக்கே பேறுபலனாக திரும்பி வருகிறதுமல்லாமல், சாவுக்குப் பிற்பாடு ஒன்றுக்கு நூறாக நமக்குக் கொடுக்கப்படும் என்று அர்ச் அமிர்தநாதர் திருவுளம்பற்றினார், இது இப்படியிருக்க, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது எல்லாவற்றிலும் வெகு பிரயோசனமுள்ளதென்று கண்டறிந்து, முன்னும் பின்னும் யோசனை பண்ணாமல், உங்களாலே கூடுமான யாவற்றையும் அவர்களுக்குச் செய்யவேணுமென்று தீர்மானிக்கக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மன வல்லயச் செபம்.
சேசுவின் திரு இருதயமே எங்கள் பேரில் இரக்கமாயிரும்
செபம்
மரித்தவர்களுடைய ஆத்துமங்களுக்கு நித்திய ஜீவியத்தைத் தருகிறவரும் அவர்களுடைய சரீரங்களை உயிர்ப்பிக்கிறவருமாய் இருக்கிற சர்வேசுரா ! பாவிகளுடைய மன்றாட்டுகளுக்கு இரங்கச் சித்தமாயிருக்கிறீரே.! மரித்த ஸ்திரி பூமான்களுடைய ஆத்துமங்களைக் குறித்துப் பாவிகளாகிய நாங்கள் பொழிகிற செபங்களையும், சிந்துகிற காணிக்கைகளையும் மகாக்கிருபையோடு பார்த்தருளும். அந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற வேதனைகளிலிருந்து மீட்கப்பட்டு மோட்சத்தின் மங்காத மகிமையைத் தரித்துப் பேரின்ப வெள்ளத்தில் அமிழ்ந்து உம்மிடத்தில் என்றென்றைக்கும் வாழ வரும்படிக்குச் செய்யவேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபதாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது
ஒரு வியாதியஸ்தனைச் சந்தித்து அவனுக்கு ஆறுதலான வார்த்தை சொல்லி அந்தப் புண்ணியத்தை உத்தரிக்கிற
ஆத்துமாக்களுக்காக ஒப்புக்கொடுக்கிறது.
புதுமை
முத். லித்வினம்மாள் எல்லாப் புண்ணியங்களுக்கும் தெளிந்த கண்ணாடியாயிருந்தாலும் அவளிடத்திலே உண்டான பொறுமையென்கிற புண்ணியம் அதிகமாய்த் துலங்கும்படியாய்ச் சர்வேசுரன் அவளுக்கு கடின வியாதியை அனுப்பினார். மேலும் அவள் உத்திரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியுள்ள வளாய் இருந்ததினாலே அந்த ஆத்துமாக்கள் எவ்வளவு வேதனை அநுபவிக்கிறார்களென்று சர்வேசுரன் அவளுக்கு பலமுறை காண்பித்தார்.
அதைக்கண்டு முத். லித்வினம்மாள் பல வியாதிகளினாலேயும் பல ரனங்களினாலேயும் தனக்கு வந்த வருத்தமெல்லாவற்றையும் அந்த ஆத்துமங்களுக்கு ஆறுதலாக ஒப்புக் கொடுத்தாள். ஆண்டவருடைய சந்நிதியிலே அவளுடைய இரு கண்களில் இருந்து இரத்தம் சொரியுமட்டும் கண்ணீர் சிந்தி அந்த ஆத்துமங்களுக்காக வேண்டிக் கொள்ளுவாள் . அதற்க்கு மேற்பட்டு கடின தவத்தின் கிரியைகளைச் செய்தாள். இதெல்லாவற்றையும் செய்துகொண்டு வந்ததால் உத்தரிக்கிற ஸ்தலத்தினின்று எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்களை மீட்டு மோட்சத்துக்குப் போகப் பண்ணினாளென்று அவளுடைய சரித்திரத்திலே எழுதியிருக்கிறது.
அவள் இதெல்லாம் செய்திருக்கையில் அவளுடைய தாயானவள் இறந்துபோனாள். அவளுடைய ஆத்துமத்துக்காக முத். லித்வினம்மாள் தான் அந்நாள்மட்டும் அநுபவித்த இருத்தமெல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்ததுமல்லாமல் அந்த ஆத்துமத்துக்குத் தர்மம் செய்யத் தன் வீட்டிலே இருந்த தட்டு முட்டுக்களை விற்றுக் கொடுத்தாள் . அவள் சாகிறபோது அவளாலே மீட்டிரச்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் அவளுக்கு வெகு ஆறுதலை அளித்து அவளை மோட்ச பேரின்பத்துக்குக் கூட்டிக் கொண்டு போனார்களாம்.
பிரஞ்சு இராச்சியத்திலே ஆர்சென்னும் சிற்றுாரிலே ஒரு குரு சுவாமியார் சகல புண்ணியங்களையும் பண்ணி அநேக அற்புதங்களையும் செய்த பிற்பாடு, ஆயிரத் தெண்னுாற்றைம்பத்தொன்பதாம் ஆண்டில் அர்ச்சியசிஷ்ட வராக மரித்தார். அவரும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் இடைவிடாத பக்தியை வைத்து அந்த ஆத்துமாக் களுக்கு உதவிசகாயம்பண்ண எப்போதும் விரும்புவார். அவர் செய்கிற அருமையான கிருத்தியங்களையும், படுகிற பல வருத்தங்களையும், செய்யும் தவக் கிரியைகளையும் மூன்று பங்காய்ப் பிரித்து, தம்முடைய பாவங்களுக்காக ஒரு பங்கும், பாவிகளுடைய பாவங்களுக்காக ஒரு பங்கும் , உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒரு பங்கும் வைத்துக் கொண்டுவருவார்.
பாவிகள் மனந்திரும்பும்படிக்குப் பகலிலே வருத்தப்படவும், உத்தரிக்கிற ஆத்துமாக்கள் ஈடேறும்படிக்கு இராத்திரியிலே வருத்தப்படவும், சர்வேசுரனிடத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். அப்படித்தான் தேவசித்தத்தினாலே சம்பவித்தது. இராத்திரி தோறும் காய்ச்சலோடே வெந்து, இருமலினால் அவஸ்தைப்பட்டு, பசாசினாலே அடிப்பட்டு ஒரு மணி நேரமாவது நல்ல நித்தரை செய்யாமல் சொல்லிலடங்காத வருத்தங்களை அனுபவித்துக் கொண்டு வந்தார். அவர் அப்படிச் செய்துவருகையில் அவர் மனந்திரும்பின பாவிகள் எத்தனையென்றும், மீட்டிரச்சித்த பாவிகள் எத்தனையென்றும் சொல்லி முடியாது.
கிறிஸ்துவர்களே இப்போது சொன்ன இரண்டு புண்ணியாத்துமாக்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து செய்ததைக் கண்டு அதிசயப்படவேண்டியது மட்டுமல்லாமல், அந்த ஆத்துமாக்களுக்கு நீங்களும் அதிகமாய்ச் செய்யவேண்டுமென்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்