- புனிதர்கள்
- தொகுப்பு
- செப்டம்பர்
செப்டம்பர் மாதப் புனிதர்கள்
- செப்டம்பர் 01
- செப்டம்பர் 02
- செப்டம்பர் 03
- செப்டம்பர் 04
- செப்டம்பர் 05
- செப்டம்பர் 06
- செப்டம்பர் 08
- செப்டம்பர் 09
- செப்டம்பர் 10
- செப்டம்பர் 11
- செப்டம்பர் 12
- செப்டம்பர் 13
- செப்டம்பர் 14
- செப்டம்பர் 15
- செப்டம்பர் 16
- செப்டம்பர் 17
- செப்டம்பர் 18
- செப்டம்பர் 19
- செப்டம்பர் 20
- செப்டம்பர் 21
- செப்டம்பர் 22
- செப்டம்பர் 23
- செப்டம்பர் 24
- செப்டம்பர் 25
- செப்டம்பர் 26
- செப்டம்பர் 27
- செப்டம்பர் 28
- செப்டம்பர் 29
- செப்டம்பர் 30
செப்டம்பர் 01:
துறவி கில்லஸ் (ஏகிடியுஸ்) Gilles (Ägidius)
பிறப்பு
ஏழாம் நூற்றாண்டு,
ஏதென்ஸ்(?), கிரேக்கம்
இறப்பு
01 செப்டம்பர் 710 / 720,
பிரான்ஸ்
பாதுகாவல்: பிச்சைக்காரர்கள், புற்று நோயாளிகள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள், வலிப்பு, மன நோயாளிகள்
இவரின் கிரேக்கப்பெயர்: ஏகிடியுஸ் (Ägidius). ஜெர்மானியப்பெயர்: ஷில்டுஹால்டர் (Schildhaltar). பிரெஞ்ச் பெயர்: கில்லஸ் (Gilles) இவர் ஓர் துறவி. இவர் பிரான்சு நாட்டில் உள்ள ரோன்(Rhone) என்ற ஆற்றின் அருகே புனிதராக வாழ்ந்துள்ளார். இவர் பல ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்துள்ளார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இவர் எப்போதும் தனிமையிலேயே வாழ்ந்துள்ளார். இவருக்கு துணையாக மான் ஒன்று இருந்திருக்கிறது. இவர் காட்டில் வாழ்ந்தபோதும் சைவ உணவு மட்டுமே உட்கொண்டுள்ளார்.
அரசர் ஒருவர் காட்டில் வேட்டையாட வந்தார். அப்போது கில்லசுக்கு சொந்தமான மானை வேட்டையாட அம்பு எறிந்துள்ளார். அம்பானது மானில் பாய்ந்தும், அடிபடாமல் இருந்தது. இதைக் கண்ட கில்லஸ் மானை குத்திய அம்பை பிடுங்கி எறிந்துவிட்டார். இவற்றை பார்த்த அரசர் கில்லசின் புனிதத்துவ வாழ்வை அறிந்தார். அவரை பின்பற்ற விரும்பினார். அவரின் வழியில் செல்ல கடினமாக இருந்தபோதும் முயற்சி செய்தார். கில்லசின் பெயரால் அக்காட்டில் மடம் ஒன்றை கட்டினார்.
கில்லஸ் தன் ஏழ்மையான வாழ்வின் வழியாக காட்டை சுற்றி வாழ்ந்த மக்களை மனந்திருப்பினார். நல்வாழ்வை வாழ கற்பித்தார். காட்டிலிருந்த தாவரங்களைக்கொண்டு, மக்களின் நோய்களை குணமாக்கினார். காட்டில் வாழ்ந்த விலங்குகள் இவரின் புனிதத்துவத்தைக் கண்டு, இவரை சந்திக்க வந்து சென்றது. இவர் பல மடங்களை அரசரின் உதவி கொண்டு கட்டினார். பல துறவிகளை உருவாக்கினார். இவர் வாழ்ந்த வாழ்வையே, இவரின் மடத்துறவிகளும் வாழ்ந்தனர். இவர் இறந்தபிறகு, பிரான்சு நாட்டிலிருந்து எடுத்துச் சென்று காட்டில் வாழ்ந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை இன்று யாத்திரை தலமாக உள்ளது.
செபம்:
காடு, மரம், பறவைகள், வனவிலங்குகள் என்று இயற்கையோடு வாழ்ந்து, இறைவனை போற்றிய துறவி கில்லஸைப்போல நாங்களும் இயற்கையை போற்றி பாதுகாக்க வரம் தாரும். நீர் படைத்த இந்த அழகான உலகை மென்மேலும் அழகூட்டி உம்மை மகிமைப்படுத்துவேன். ஆமென்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• மறைசாட்சி ஹாரால்டு (Harald)
பிறப்பு: 520, இத்தாலி(?)
இறப்பு: 574, பிரேசியா(Brescía), இத்தாலி
• ரைம்ஸ் நகர் பேராயர் நிவார்டு (Nivard von Reims)
பிறப்பு: 600, பிரான்ஸ்
இறப்பு: 01 செப்டம்பர் 673, ரைம்ஸ், பிரான்ஸ்
• எமோனா நகர் மறைசாட்சி பெலாகியஸ் (Pelagius von Aemona)
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு(?)
இறப்பு: 283/284(?), எமோனா
பாதுகாவல்: முன்ஸ்டர் மறைமாவட்டம் (Münster), ஜெர்மனி
• தர்சாக் நகர் வெரேனா, Verena von Zurzach
கன்னி. மிஷினரி
பிறப்பு: 300, எகிப்து (?)
இறப்பு: 350, சுர்சாக்(Zurzach), ஸ்விட்சர்லாந்து
பாதுகாவல்: பங்கு ஆலய பணியாளர்கள், மீன் பிடிப்பவர்கள், எழுத்தாளர்கள், தேவையில் இருப்போர், குழந்தைகள்
• மறைசாட்சியர் பன்னிரெண்டு சகோதரர்கள் Zwölf Brüder
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, துனிசியா (Tunesien)
இறப்பு: 250, இத்தாலி
துறவி கில்லஸ் (ஏகிடியுஸ்) Gilles (Ägidius)
பிறப்பு
ஏழாம் நூற்றாண்டு,
ஏதென்ஸ்(?), கிரேக்கம்
இறப்பு
01 செப்டம்பர் 710 / 720,
பிரான்ஸ்
பாதுகாவல்: பிச்சைக்காரர்கள், புற்று நோயாளிகள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள், வலிப்பு, மன நோயாளிகள்
இவரின் கிரேக்கப்பெயர்: ஏகிடியுஸ் (Ägidius). ஜெர்மானியப்பெயர்: ஷில்டுஹால்டர் (Schildhaltar). பிரெஞ்ச் பெயர்: கில்லஸ் (Gilles) இவர் ஓர் துறவி. இவர் பிரான்சு நாட்டில் உள்ள ரோன்(Rhone) என்ற ஆற்றின் அருகே புனிதராக வாழ்ந்துள்ளார். இவர் பல ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்துள்ளார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இவர் எப்போதும் தனிமையிலேயே வாழ்ந்துள்ளார். இவருக்கு துணையாக மான் ஒன்று இருந்திருக்கிறது. இவர் காட்டில் வாழ்ந்தபோதும் சைவ உணவு மட்டுமே உட்கொண்டுள்ளார்.
அரசர் ஒருவர் காட்டில் வேட்டையாட வந்தார். அப்போது கில்லசுக்கு சொந்தமான மானை வேட்டையாட அம்பு எறிந்துள்ளார். அம்பானது மானில் பாய்ந்தும், அடிபடாமல் இருந்தது. இதைக் கண்ட கில்லஸ் மானை குத்திய அம்பை பிடுங்கி எறிந்துவிட்டார். இவற்றை பார்த்த அரசர் கில்லசின் புனிதத்துவ வாழ்வை அறிந்தார். அவரை பின்பற்ற விரும்பினார். அவரின் வழியில் செல்ல கடினமாக இருந்தபோதும் முயற்சி செய்தார். கில்லசின் பெயரால் அக்காட்டில் மடம் ஒன்றை கட்டினார்.
கில்லஸ் தன் ஏழ்மையான வாழ்வின் வழியாக காட்டை சுற்றி வாழ்ந்த மக்களை மனந்திருப்பினார். நல்வாழ்வை வாழ கற்பித்தார். காட்டிலிருந்த தாவரங்களைக்கொண்டு, மக்களின் நோய்களை குணமாக்கினார். காட்டில் வாழ்ந்த விலங்குகள் இவரின் புனிதத்துவத்தைக் கண்டு, இவரை சந்திக்க வந்து சென்றது. இவர் பல மடங்களை அரசரின் உதவி கொண்டு கட்டினார். பல துறவிகளை உருவாக்கினார். இவர் வாழ்ந்த வாழ்வையே, இவரின் மடத்துறவிகளும் வாழ்ந்தனர். இவர் இறந்தபிறகு, பிரான்சு நாட்டிலிருந்து எடுத்துச் சென்று காட்டில் வாழ்ந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை இன்று யாத்திரை தலமாக உள்ளது.
செபம்:
காடு, மரம், பறவைகள், வனவிலங்குகள் என்று இயற்கையோடு வாழ்ந்து, இறைவனை போற்றிய துறவி கில்லஸைப்போல நாங்களும் இயற்கையை போற்றி பாதுகாக்க வரம் தாரும். நீர் படைத்த இந்த அழகான உலகை மென்மேலும் அழகூட்டி உம்மை மகிமைப்படுத்துவேன். ஆமென்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• மறைசாட்சி ஹாரால்டு (Harald)
பிறப்பு: 520, இத்தாலி(?)
இறப்பு: 574, பிரேசியா(Brescía), இத்தாலி
• ரைம்ஸ் நகர் பேராயர் நிவார்டு (Nivard von Reims)
பிறப்பு: 600, பிரான்ஸ்
இறப்பு: 01 செப்டம்பர் 673, ரைம்ஸ், பிரான்ஸ்
• எமோனா நகர் மறைசாட்சி பெலாகியஸ் (Pelagius von Aemona)
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு(?)
இறப்பு: 283/284(?), எமோனா
பாதுகாவல்: முன்ஸ்டர் மறைமாவட்டம் (Münster), ஜெர்மனி
• தர்சாக் நகர் வெரேனா, Verena von Zurzach
கன்னி. மிஷினரி
பிறப்பு: 300, எகிப்து (?)
இறப்பு: 350, சுர்சாக்(Zurzach), ஸ்விட்சர்லாந்து
பாதுகாவல்: பங்கு ஆலய பணியாளர்கள், மீன் பிடிப்பவர்கள், எழுத்தாளர்கள், தேவையில் இருப்போர், குழந்தைகள்
• மறைசாட்சியர் பன்னிரெண்டு சகோதரர்கள் Zwölf Brüder
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, துனிசியா (Tunesien)
இறப்பு: 250, இத்தாலி
Back to top
செப்டம்பர் 02:
மறைசாட்சி அப்போலினாரிஸ் மோரெல் Apollinaris Morel von Posat OFMcap
பிறப்பு
12 ஜூன் 1739,
சுவிட்சர்லாந்து
இறப்பு
1792, பாரீஸ்,
பிரான்ஸ்
புனிதர்பட்டம்: 17 அக்டோபர் 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
இவர் 1762 ஆம் ஆண்டு கப்புச்சின் சபையில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு அந்நாட்டிலேயே ஆன்ம வழிகாட்டியாகவும் பணிபுரிந்தார். 1788 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகருக்கு சென்றார். அங்கு பங்கு ஆலயம் ஒன்றில் தனது மறைப்பணியை ஆற்றினார். அத்துடன் அந்நாட்டிலிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிறிஸ்துவர்களுக்காகவும், அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் தன் வாழ்வின் இறுதிவரை பணிபுரிந்தார்.
செபம்:
ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! இவ்வுலகில் ஆசிரியர் பணியை ஆற்றிவரும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதியும். தங்களின் பணிக்கு தேவையான பொறுமையையும் வழிகாட்டும் திறமையையும் வழங்கி பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டி முன்னேற்றம் அடையச் செய்ய நீர் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• மறைசாட்சி & குரு பிரான்ஸ் ஊர்பான் சாலின்ஸ் டி நியார்ட் Franz Urban Salins de Niart
பிறப்பு: 1760, நியூ-பிரைசாக் (Neu Breisach), பிரான்ஸ்
இறப்பு: 2 செப்டம்பர் 1792, பாரீஸ், பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
• சபை நிறுவுனர் இன்கிரீட் எலோவ்ஸ்டோடர் Ingrid Elovsdotter
இவர் ஸ்வீடன் நாட்டில் முதல் தொமினிக்கன் சபையை நிறுவியவர்
பிறப்பு: 1220, ஸ்வீடன்
இறப்பு: 2 செப்டம்பர் 1282, ஸ்கென்னிங்(Skenninge), ஸ்வீடன்
• லூவேய்ன் நகர் மறைசாட்சி மர்கரீத்தா, Margareta von Löwen
பிறப்பு: 1207, லூவேய்ன், பெல்ஜியம்
இறப்பு: 2 செப்டம்பர் 1227, பெல்ஜியம்
• துறவி நொன்னோசஸ் Nonnosus OSB
பிறப்பு: 565 செராட்டோ Seratto, இத்தாலி
இறப்பு: பிரைசிங் மறைமாவட்டம், நேப்பி மறைமாவட்டம்
பாதுகாவல்: பள்ளியின் அவசர தேவைகளுக்கு
மறைசாட்சி வோல்ஃப்சிண்டீஸ் Wolfsindis
பிறப்பு: 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, ரைஸ்பாக் Reisbach, பவேரியா
செப்டம்பர் 02:
மறைசாட்சி அப்போலினாரிஸ் மோரெல் Apollinaris Morel von Posat OFMcap
பிறப்பு
12 ஜூன் 1739,
சுவிட்சர்லாந்து
இறப்பு
1792, பாரீஸ்,
பிரான்ஸ்
புனிதர்பட்டம்: 17 அக்டோபர் 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
இவர் 1762 ஆம் ஆண்டு கப்புச்சின் சபையில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு அந்நாட்டிலேயே ஆன்ம வழிகாட்டியாகவும் பணிபுரிந்தார். 1788 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகருக்கு சென்றார். அங்கு பங்கு ஆலயம் ஒன்றில் தனது மறைப்பணியை ஆற்றினார். அத்துடன் அந்நாட்டிலிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிறிஸ்துவர்களுக்காகவும், அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் தன் வாழ்வின் இறுதிவரை பணிபுரிந்தார்.
செபம்:
ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! இவ்வுலகில் ஆசிரியர் பணியை ஆற்றிவரும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதியும். தங்களின் பணிக்கு தேவையான பொறுமையையும் வழிகாட்டும் திறமையையும் வழங்கி பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டி முன்னேற்றம் அடையச் செய்ய நீர் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• மறைசாட்சி & குரு பிரான்ஸ் ஊர்பான் சாலின்ஸ் டி நியார்ட் Franz Urban Salins de Niart
பிறப்பு: 1760, நியூ-பிரைசாக் (Neu Breisach), பிரான்ஸ்
இறப்பு: 2 செப்டம்பர் 1792, பாரீஸ், பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
• சபை நிறுவுனர் இன்கிரீட் எலோவ்ஸ்டோடர் Ingrid Elovsdotter
இவர் ஸ்வீடன் நாட்டில் முதல் தொமினிக்கன் சபையை நிறுவியவர்
பிறப்பு: 1220, ஸ்வீடன்
இறப்பு: 2 செப்டம்பர் 1282, ஸ்கென்னிங்(Skenninge), ஸ்வீடன்
• லூவேய்ன் நகர் மறைசாட்சி மர்கரீத்தா, Margareta von Löwen
பிறப்பு: 1207, லூவேய்ன், பெல்ஜியம்
இறப்பு: 2 செப்டம்பர் 1227, பெல்ஜியம்
• துறவி நொன்னோசஸ் Nonnosus OSB
பிறப்பு: 565 செராட்டோ Seratto, இத்தாலி
இறப்பு: பிரைசிங் மறைமாவட்டம், நேப்பி மறைமாவட்டம்
பாதுகாவல்: பள்ளியின் அவசர தேவைகளுக்கு
மறைசாட்சி வோல்ஃப்சிண்டீஸ் Wolfsindis
பிறப்பு: 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, ரைஸ்பாக் Reisbach, பவேரியா
Back to top
செப்டம்பர் 03:
திருத்தந்தை பெரிய கிரகோரியார் St.Gregory the Great, Pope and Doctor of the Church
மறைவல்லுநர்
பிறப்பு
540,
உரோம்
இறப்பு
12 மார்ச் 604
பாதுகாவல்: ஆசிரியர்கள், மாணவர்கள், தொற்று நோயிலிருந்து
இவர் தனது 30 ஆம் வயதில் உரோம் நகரின் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடவுள் இவரை தம் பணிக்கு அழைப்பதை உணர்ந்த கிரகோரியார், அப்பதவியிலிருந்து விலகி புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். மிகுந்த பக்தியோடு பயிற்சிகளை பெற்று குருவானார். பின்னர் கான்ஸ்டாண்டினோபிளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக பணியாற்றினார். 590 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பேதுருவின் அரியணைக்கு உயர்த்தப்பெற்றார். அப்பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து இடைவிடாமல் திருச்சபைக்காக உழைத்தார். எச்சூழலிலும் நேர்மையை கடைபிடித்து ஆட்சி செய்தார். தன்னால் இயன்றவரை ஏழை எளியவர்களுக்கு உதவினார். சிசிலி என்ற தீவில் பல துறவற மடங்களை தொடங்கி இறைப்பணியை வளர்த்தெடுத்தார். தன் ஆட்சியிலிருந்த சிறைப்பட்ட மக்களை மீட்டார். திருச்சபையில் நேர்மையின்றி, நெறிகெட்ட பதவியிலிருந்த பணியாளர்களையும், குருக்களையும் பணியிலிருந்து நீக்கினார். அப்போது "லம்பர்ட்" என்ற இனத்தை சேர்ந்த அரக்கர்கள் கிறிஸ்துவ மக்களையும், திருச்சபையையும் கடுமையாக தாக்கினார். அவர்களை மிக தைரியத்துடன் கிரகோரியார் அடக்கினார். தன் பதவி காலத்தில் யூத மக்களுக்கு முன்னிடம் கொடுத்தார். அக்காலத்தில் பிளேக் நோய் நாடெங்கும் பரவி வந்ததால், பெருமளவில் அம்மக்களுக்கு உதவினார். அம்மக்களிடையே திருமறையை பரவ செய்து அதை நிலைநாட்டினார். இவர் பல நூல்களை எழுதி அதன் வழியாகவும் திருமறையை வளர்த்தார்.
செபம்:
அன்பான இறைவா! அறிவு, திறமை, பேர், புகழ் என்று அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாதவர்போல் வாழ்ந்து உமக்காக மட்டுமே வாழ்ந்த புனித பெரிய கிரகோரியாரை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நீதியோடும், நேர்மையோடும் ஆட்சி செய்து, உமக்குரியவராக வாழ்ந்த அவரின் முன்மாதிரியை பின்பற்றி நாங்களும் வாழ உமதருள் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• குழந்தை மறைசாட்சி பசிலிசா, Basilissa
பிறப்பு: 294, நிக்கோமேடீயன் Nikomedien, துருக்கி
இறப்பு: 300, நிக்கோமேடீயன்
பாதுகாவல்: பால் கொடுக்கும் தாய்மார்கள்
• இங்கிலாந்து அரசி & துறவி ஹெரெஸ்வித்தா Hereswitha OSB
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, இங்கிலாந்து
இறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, பாரீஸ், பிரான்ஸ்
• நீடர்ஆல்டைக் நகர் துறவி ஹெர்மான் Hermann von Niederaltaich
பிறப்பு: 13 ஆம் நூற்றாண்டு, ஹைடல்பெர்க் Heidelberg, Germany
இறப்பு: 1326 / 1327, பிரவனாவ் Frauenau, பவேரியா Bayern
• கொலோன் நகர் பேராயர் ஹில்டேபோல்டு
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 3 செப்டம்பர் 818, கொலோன்
ஆயர்பட்டம்: 787
• மறைசாட்சி & குரு லூட்விக் ஜோசப் பிரான்சிஸ் Ludwig Josef Francois
பிறப்பு: 3 பிப்ரவரி 1751, பசிக்னி Busigny, பிரான்ஸ்
இறப்பு: 3 செப்டம்பர் 1792, டிராய்ஸ் Troyes, பிரான்ஸ்
புனிதர்பட்டம்: 17 அக்டோபர் 1926, திருந்தந்தை 11 ஆம் பயஸ்
செப்டம்பர் 03:
திருத்தந்தை பெரிய கிரகோரியார் St.Gregory the Great, Pope and Doctor of the Church
மறைவல்லுநர்
பிறப்பு
540,
உரோம்
இறப்பு
12 மார்ச் 604
பாதுகாவல்: ஆசிரியர்கள், மாணவர்கள், தொற்று நோயிலிருந்து
இவர் தனது 30 ஆம் வயதில் உரோம் நகரின் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடவுள் இவரை தம் பணிக்கு அழைப்பதை உணர்ந்த கிரகோரியார், அப்பதவியிலிருந்து விலகி புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். மிகுந்த பக்தியோடு பயிற்சிகளை பெற்று குருவானார். பின்னர் கான்ஸ்டாண்டினோபிளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக பணியாற்றினார். 590 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பேதுருவின் அரியணைக்கு உயர்த்தப்பெற்றார். அப்பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து இடைவிடாமல் திருச்சபைக்காக உழைத்தார். எச்சூழலிலும் நேர்மையை கடைபிடித்து ஆட்சி செய்தார். தன்னால் இயன்றவரை ஏழை எளியவர்களுக்கு உதவினார். சிசிலி என்ற தீவில் பல துறவற மடங்களை தொடங்கி இறைப்பணியை வளர்த்தெடுத்தார். தன் ஆட்சியிலிருந்த சிறைப்பட்ட மக்களை மீட்டார். திருச்சபையில் நேர்மையின்றி, நெறிகெட்ட பதவியிலிருந்த பணியாளர்களையும், குருக்களையும் பணியிலிருந்து நீக்கினார். அப்போது "லம்பர்ட்" என்ற இனத்தை சேர்ந்த அரக்கர்கள் கிறிஸ்துவ மக்களையும், திருச்சபையையும் கடுமையாக தாக்கினார். அவர்களை மிக தைரியத்துடன் கிரகோரியார் அடக்கினார். தன் பதவி காலத்தில் யூத மக்களுக்கு முன்னிடம் கொடுத்தார். அக்காலத்தில் பிளேக் நோய் நாடெங்கும் பரவி வந்ததால், பெருமளவில் அம்மக்களுக்கு உதவினார். அம்மக்களிடையே திருமறையை பரவ செய்து அதை நிலைநாட்டினார். இவர் பல நூல்களை எழுதி அதன் வழியாகவும் திருமறையை வளர்த்தார்.
செபம்:
அன்பான இறைவா! அறிவு, திறமை, பேர், புகழ் என்று அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாதவர்போல் வாழ்ந்து உமக்காக மட்டுமே வாழ்ந்த புனித பெரிய கிரகோரியாரை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நீதியோடும், நேர்மையோடும் ஆட்சி செய்து, உமக்குரியவராக வாழ்ந்த அவரின் முன்மாதிரியை பின்பற்றி நாங்களும் வாழ உமதருள் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• குழந்தை மறைசாட்சி பசிலிசா, Basilissa
பிறப்பு: 294, நிக்கோமேடீயன் Nikomedien, துருக்கி
இறப்பு: 300, நிக்கோமேடீயன்
பாதுகாவல்: பால் கொடுக்கும் தாய்மார்கள்
• இங்கிலாந்து அரசி & துறவி ஹெரெஸ்வித்தா Hereswitha OSB
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, இங்கிலாந்து
இறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, பாரீஸ், பிரான்ஸ்
• நீடர்ஆல்டைக் நகர் துறவி ஹெர்மான் Hermann von Niederaltaich
பிறப்பு: 13 ஆம் நூற்றாண்டு, ஹைடல்பெர்க் Heidelberg, Germany
இறப்பு: 1326 / 1327, பிரவனாவ் Frauenau, பவேரியா Bayern
• கொலோன் நகர் பேராயர் ஹில்டேபோல்டு
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 3 செப்டம்பர் 818, கொலோன்
ஆயர்பட்டம்: 787
• மறைசாட்சி & குரு லூட்விக் ஜோசப் பிரான்சிஸ் Ludwig Josef Francois
பிறப்பு: 3 பிப்ரவரி 1751, பசிக்னி Busigny, பிரான்ஸ்
இறப்பு: 3 செப்டம்பர் 1792, டிராய்ஸ் Troyes, பிரான்ஸ்
புனிதர்பட்டம்: 17 அக்டோபர் 1926, திருந்தந்தை 11 ஆம் பயஸ்
Back to top
செப்டம்பர் 04:
04-09-2015
புனித ரோசலீனா
St.Rosalina
நினைவுத்திருநாள் : செப்டம்பர் 4
பிறப்பு : 1130, பலேர்மோ (Palermo),இத்தாலி
இறப்பு : 1166, மவுண்ட் பெலேக்ரினோ Pellegrino, இத்தாலி
புனிதர்பட்டம்: 1625 திருத்தந்தை 8 ஆம் ஊர்பான் Pope Urban VIII
பாதுகாவல்: பலேர்மோ நகரின் பாதுகாவலர்
ரோசலீனா சீனிபால்டு(Sinibald) என்பவரின் மகள். இவரின் இதயம் இளம் வயதிலிருந்தே இறைவனை மட்டுமே நாடியது. விவிலிய வார்த்தைகளால் தன் இதயத்தை நிரப்பினார். இறைவன் மட்டுமே தன் வாழ்வின் மையமாக இருக்கவேண்டுமென்று எண்ணினார். இறை இயேசுவின் பாதையில் தன் வாழ்வை அமைத்தார். தன் வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு குகைக்கு சென்று வாழ்ந்தார். உலக வாழ்விலிருந்து தன்னை மறைத்து வாழ்ந்தார். இதயம் என்னும் அவரின் வீட்டில் கடவுளுக்கு மட்டுமே இடம் கொடுத்து வாழ்ந்தார். பின்னர் அவர் வாழ்ந்த குகையைவிட்டு வெளியேறி பெலேக்ரினோ என்ற மலைக்கு சென்றார்.
அம்மலையில் சிறிய இல்லம் அமைத்து தனது வாழ்வை இறைவனோடு வாழ்ந்தார். அங்கு ஒரு கெபி கட்டினார். அதன் அருகில் குழி ஒன்றை வெட்டி, தான் இறந்ததும் அதில் புதைக்கும்படி இறைவனிடம் வேண்டினார். இவர் செபித்தவாறே இவரின் இறந்த உடல் அக்குழியில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
இவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து 1625 ஆம் ஆண்டு உடல் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாண்டே இவர் புனிதர் பட்டமும் பெற்றார்.
Back to top
செப்டம்பர் 5
புனித பெர்டின்
St. Bertin
நினைவுத் திருநாள் : செப்டம்பர் 5
பிறப்பு : 615, கோடான்ஸ் (Coutances), பிரான்சு
இறப்பு : 709
பெர்டின் தனது இளம் வயதிலேயே பிரான்சு நாட்டிலுள்ள லக்ஸ்யூல் (Lexeuil) என்ற பெயர் கொண்ட துறவற மடத்திற்குஸ் சென்றார். இச்சபை புனித கெலம்பானூஸ் என்பவர் தயாரித்த சட்டதிட்டங்களை சபையின் ஒழுங்காகக் கொண்டு செயல்பட்டது. பெர்ட்டின் கொலம்பானூசின் உறவினர். 638 ஆம் ஆண்டு மோரினி (Morini) என்றழைக்கப்ட்டவர், இச்சபையின் முதல் துறவியாவர். இச்சபை வளர்வதற்கு, பிரான்சிஸ் ஆயராக இருந்த புனித ஓமர் என்பவர் மிகப்பெரிய அளவில் எல்லாவிதங்களிலும் உதவியானார்.
ஆயர் ஓமர் (Omer) தனது மறைமாவட்டத்திற்கு சொந்தமான, பாழடைந்த ஒரு நிலத்தைக் கொடுத்தார். அந்நிலம் காடு போன்று காணப்பட்டது. விஷப்பூச்சிகளும், கடற்பாசிகளும் நிறைந்திருந்தது. அந்நிலத்தைப் பரிசாகப் பெற்ற அத்துறவற சபையினர் நிலத்தை தூய்மைப்படுத்தி, பல குடும்பங்களை வாழ செய்தனர்.
இச்சபையினர் ஊர் ஊராக சென்று நற்செய்திப் பணியை ஆற்றினர். ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்த இத்துறவிகள் சில ஆண்டுகள் கழித்து பெரிய துறவற இல்லம் ஒன்றை கட்டினர். இதற்காக பெர்ட்டின் தன்னையே வருத்தி, கடினமாக உழைத்தார். இவரின் உழைப்பால் குறுகிய காலத்தில் 150 துறவிகள் இச்சபைக்கு வந்து சேர்ந்தனர். இவர் கிராமங்களுக்கு சென்று பணியாற்றினார். சிறுவர்களை ஒன்று சேர்த்து கல்வி கற்பித்தார். பல குடும்பங்களில் கல்வியை அறிமுகப்படுத்தினார்.
பெர்ட்டின் ஏழை மக்களின் மத்தியில் சிறப்பான பணியை ஆற்றினார். இவர் வாழும் போதே மக்களால் ஒரு புனிதராக போற்றப்பட்டார். இவர் தன்னுடன் இருந்த மற்ற துறவிகளுக்கும், ஒரு தாயாக இருந்தார். இவர் மட்டுமே தனது சொந்த உழைப்பால், மேலும் இரண்டு துறவற இல்லங்களை கட்டினார். அனைத்து இல்லங்களிலும், குழந்தைகள் கற்க ஏற்பாடு செய்தார்.
ஏழை குடும்பங்களில், வளமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த இவர், ஒருநாள் குடும்பங்களை சந்திக்க சென்றபோது உடல் நலம் குன்றிபோனது. அன்றிலிருந்து உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு இறந்தார்.
செப்டம்பர் 5
புனித பெர்டின்
St. Bertin
நினைவுத் திருநாள் : செப்டம்பர் 5
பிறப்பு : 615, கோடான்ஸ் (Coutances), பிரான்சு
இறப்பு : 709
பெர்டின் தனது இளம் வயதிலேயே பிரான்சு நாட்டிலுள்ள லக்ஸ்யூல் (Lexeuil) என்ற பெயர் கொண்ட துறவற மடத்திற்குஸ் சென்றார். இச்சபை புனித கெலம்பானூஸ் என்பவர் தயாரித்த சட்டதிட்டங்களை சபையின் ஒழுங்காகக் கொண்டு செயல்பட்டது. பெர்ட்டின் கொலம்பானூசின் உறவினர். 638 ஆம் ஆண்டு மோரினி (Morini) என்றழைக்கப்ட்டவர், இச்சபையின் முதல் துறவியாவர். இச்சபை வளர்வதற்கு, பிரான்சிஸ் ஆயராக இருந்த புனித ஓமர் என்பவர் மிகப்பெரிய அளவில் எல்லாவிதங்களிலும் உதவியானார்.
ஆயர் ஓமர் (Omer) தனது மறைமாவட்டத்திற்கு சொந்தமான, பாழடைந்த ஒரு நிலத்தைக் கொடுத்தார். அந்நிலம் காடு போன்று காணப்பட்டது. விஷப்பூச்சிகளும், கடற்பாசிகளும் நிறைந்திருந்தது. அந்நிலத்தைப் பரிசாகப் பெற்ற அத்துறவற சபையினர் நிலத்தை தூய்மைப்படுத்தி, பல குடும்பங்களை வாழ செய்தனர்.
இச்சபையினர் ஊர் ஊராக சென்று நற்செய்திப் பணியை ஆற்றினர். ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்த இத்துறவிகள் சில ஆண்டுகள் கழித்து பெரிய துறவற இல்லம் ஒன்றை கட்டினர். இதற்காக பெர்ட்டின் தன்னையே வருத்தி, கடினமாக உழைத்தார். இவரின் உழைப்பால் குறுகிய காலத்தில் 150 துறவிகள் இச்சபைக்கு வந்து சேர்ந்தனர். இவர் கிராமங்களுக்கு சென்று பணியாற்றினார். சிறுவர்களை ஒன்று சேர்த்து கல்வி கற்பித்தார். பல குடும்பங்களில் கல்வியை அறிமுகப்படுத்தினார்.
பெர்ட்டின் ஏழை மக்களின் மத்தியில் சிறப்பான பணியை ஆற்றினார். இவர் வாழும் போதே மக்களால் ஒரு புனிதராக போற்றப்பட்டார். இவர் தன்னுடன் இருந்த மற்ற துறவிகளுக்கும், ஒரு தாயாக இருந்தார். இவர் மட்டுமே தனது சொந்த உழைப்பால், மேலும் இரண்டு துறவற இல்லங்களை கட்டினார். அனைத்து இல்லங்களிலும், குழந்தைகள் கற்க ஏற்பாடு செய்தார்.
ஏழை குடும்பங்களில், வளமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த இவர், ஒருநாள் குடும்பங்களை சந்திக்க சென்றபோது உடல் நலம் குன்றிபோனது. அன்றிலிருந்து உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு இறந்தார்.
Back to top
செப்டம்பர் 06:
புனித எல்யூடேரியஸ்
St. Eleutherius
நினைவுத்திருநாள் : செப்டம்பர் 6
பிறப்பு : (தெரியவில்லை)
இறப்பு : 585, உரோம், செயிண்ட் ஆண்ரூ ஆலயம் (St. Andrew’s Church, Rome)
எல்யூடேரியஸ் அற்புதமான எளிமையான வாழ்வை வாழ்ந்தார். மனசாட்சியின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தூய ஆவியானவர் காட்டிய வழியில் சென்றார். ஸ்பொலேட்டோ (Spoleto) என்ற நகரிலிருந்த புனித மார்க்கின் துறவற மடத்தில் சேர்ந்து குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான சில ஆண்டுகளில் துறவற மடத்திற்கு மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். கடவுளின் அருளால் பல அற்புதங்களை செய்தார்.
இவர் தன் மடத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியை ஆற்றினார். அப்போது ஒருநாள் சாத்தான் இவரை சோதிக்க வந்தது. ஆனால் இவரின் இறைபக்தியை கண்டு சாத்தான் பயந்து ஓடிவிட்டது. ஆனால் மீண்டும் சாத்தான் குழந்தையின் வடிவில் வந்து சோதித்தது. பின்னர் ஒரு குழந்தைக்குள் புகுந்தது. அக்குழந்தை சாத்தான் கடுமையாக தாக்கி, நோயை உண்டாக்கியது. இதனைக் கண்ட எல்யூடேரியஸ் மற்றும் அவரது குழும உறுப்பினர்களும் இணைந்து தவமிருந்தும் கடினமான நோன்பிருந்தும் செபித்தனர். இறைவேண்டலால் சாத்தானின் பிடியிலிருந்து குழந்தை விடுபட்டது. ஆனால் குழந்தை மிகவும் சோர்ந்து பலவீனத்துடன் காணப்பட்டது. சாகும்தறுவாயில் குழந்தை இருந்தது இதனால் அக்குழந்தையை எல்யூடேரியஸ் செயிண்ட் ஆன்ரூஸ் பேராலயத்திற்கு எடுத்து சென்றார்.
இவர் அப்பேராலயத்தில் கடின நோயிலிருந்து இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டு குழந்தையை பழைய நிலைக்கு கொண்டு வந்தார். அக்குழந்தை மீண்டும் புந்து உயிர்பெற்றது. அதிலிருந்து இவர் தொடர்ந்து கண்ணீர் வடித்து திருச்சபைக்காகவும், மக்களுக்காகவும் மன்றாடினார். வாழ்நாள் முழுவதும் நோன்பிலிருந்து பல அருள் கொடைகலை பெற்றார். அதிகமாக நோன்பிருந்ததால் உடல் முழுவதும் சக்தி இழந்து காணப்பட்டார். இதனால் தன் தலைவர் பதவியை விட்டு விலகி செபிப்பதில் மட்டுமே இறக்கும்வரை தன் வாழ்வை கழித்தார்
செப்டம்பர் 06:
புனித எல்யூடேரியஸ்
St. Eleutherius
நினைவுத்திருநாள் : செப்டம்பர் 6
பிறப்பு : (தெரியவில்லை)
இறப்பு : 585, உரோம், செயிண்ட் ஆண்ரூ ஆலயம் (St. Andrew’s Church, Rome)
எல்யூடேரியஸ் அற்புதமான எளிமையான வாழ்வை வாழ்ந்தார். மனசாட்சியின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தூய ஆவியானவர் காட்டிய வழியில் சென்றார். ஸ்பொலேட்டோ (Spoleto) என்ற நகரிலிருந்த புனித மார்க்கின் துறவற மடத்தில் சேர்ந்து குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான சில ஆண்டுகளில் துறவற மடத்திற்கு மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். கடவுளின் அருளால் பல அற்புதங்களை செய்தார்.
இவர் தன் மடத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியை ஆற்றினார். அப்போது ஒருநாள் சாத்தான் இவரை சோதிக்க வந்தது. ஆனால் இவரின் இறைபக்தியை கண்டு சாத்தான் பயந்து ஓடிவிட்டது. ஆனால் மீண்டும் சாத்தான் குழந்தையின் வடிவில் வந்து சோதித்தது. பின்னர் ஒரு குழந்தைக்குள் புகுந்தது. அக்குழந்தை சாத்தான் கடுமையாக தாக்கி, நோயை உண்டாக்கியது. இதனைக் கண்ட எல்யூடேரியஸ் மற்றும் அவரது குழும உறுப்பினர்களும் இணைந்து தவமிருந்தும் கடினமான நோன்பிருந்தும் செபித்தனர். இறைவேண்டலால் சாத்தானின் பிடியிலிருந்து குழந்தை விடுபட்டது. ஆனால் குழந்தை மிகவும் சோர்ந்து பலவீனத்துடன் காணப்பட்டது. சாகும்தறுவாயில் குழந்தை இருந்தது இதனால் அக்குழந்தையை எல்யூடேரியஸ் செயிண்ட் ஆன்ரூஸ் பேராலயத்திற்கு எடுத்து சென்றார்.
இவர் அப்பேராலயத்தில் கடின நோயிலிருந்து இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டு குழந்தையை பழைய நிலைக்கு கொண்டு வந்தார். அக்குழந்தை மீண்டும் புந்து உயிர்பெற்றது. அதிலிருந்து இவர் தொடர்ந்து கண்ணீர் வடித்து திருச்சபைக்காகவும், மக்களுக்காகவும் மன்றாடினார். வாழ்நாள் முழுவதும் நோன்பிலிருந்து பல அருள் கொடைகலை பெற்றார். அதிகமாக நோன்பிருந்ததால் உடல் முழுவதும் சக்தி இழந்து காணப்பட்டார். இதனால் தன் தலைவர் பதவியை விட்டு விலகி செபிப்பதில் மட்டுமே இறக்கும்வரை தன் வாழ்வை கழித்தார்
Back to top
செப்டம்பர் 08:
புனித பீட்டர் கிளேவர், St. Peter Claver குரு
பிறப்பு
26 ஜூன் 1580,
ஸ்பெயின்
இறப்பு
8 செப்டம்பர் 1654
முத்திப்பேறுபட்டம்: 16 ஜூலை 1851
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
புனிதர்பட்டம்: 15 ஜனவரி 1888 திருத்தந்தை 13
ஆம் லியோ
பாதுகாவல்: அடிமைகள் மற்றும் கொலம்பியா நாட்டின் பாதுகாவலர்
கிளேவர் சிறு வயதிலிருந்தே அன்னைமரியாளின் மீது பக்தியை வளர்த்து வந்தார். பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கிய நாளிலிருந்து பல புத்தகங்களைப் படித்தார். தனது இளம் வயது படிப்பை முடித்தபின் 1596 ஆம் ஆண்டு பார்சலோனா என்ற நகரிலிருந்த புகழ் வாய்ந்த கல்லூரியில் படிக்க சென்றார். கல்லூரி படிப்பை முடித்ததும் 1802 ஆம் ஆண்டு குருவாக
ஆசைக்கொண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர் மயோர்க்கா நகரில் மீண்டும் தனது படிப்பை தொடர்ந்தார்.
அங்கு கல்லூரி படிப்பை முடித்தபின் 1616 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். புதிய குருவான இவர் நீக்ரோ அடிமை
மக்களிடம் பணியை தொடர அனுப்பப்பட்டார். அம்மக்களிடையே சிறப்பாக பணியாற்றி , சில நாட்கள் கழித்து, அவர்களில் ஒருவராகவே மாறினார். அப்போது அம்மக்களிடையே அடிமை வாணிகம் பெருகியது. அவற்றை ஒடுக்க இவர் பெரிதும் பாடுபட்டார். அச்சமயத்தில் ஆப்ரிக்கா நாட்டிலிருந்து மக்கள் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களோடு சேர்த்து
இறக்குமதியும் செய்யப்பட்டது. கிளேவர் அம்மருந்துகளை பெற்று, நீக்ரோ மக்களுக்கு மருத்துவப் பணியையும் ஆற்றினார். அடிமை மக்களிடையே மிகவும் அன்பாக பணியாற்றினார். தனது மறைப்பணியால் அம்மக்களின் கடுமையான மனதை மாற்றினார். அனைவரையும் இறைவன்பால் ஈர்த்து, இறையுறவில் வளர்த்தெடுத்தார். அடிமைகளின் மேல் கொண்ட அக்கறையாலும், அன்பாலும் இவர் அம்மக்களின் தந்தை என்றழைக்கப்பட்டார்.
செபம்:
விடுதலையின் நாயகனே எம் இறைவா! உறவில்லாமல், அன்பில்லாமல் வாழும் மக்களுக்கு, நீரே தந்தையாகவும், தாயாகவும், எல்லாமுமாகவும் இருந்து வருகின்றீர். நீர் கற்று தந்தவைகளை, புனித கிளேவரின் வாழ்விலிருந்து, நாங்கள் கற்று கொண்டு வாழ அருள்புரியும்.
செப்டம்பர் 08:
புனித பீட்டர் கிளேவர், St. Peter Claver குரு
பிறப்பு
26 ஜூன் 1580,
ஸ்பெயின்
இறப்பு
8 செப்டம்பர் 1654
முத்திப்பேறுபட்டம்: 16 ஜூலை 1851
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
புனிதர்பட்டம்: 15 ஜனவரி 1888 திருத்தந்தை 13
ஆம் லியோ
பாதுகாவல்: அடிமைகள் மற்றும் கொலம்பியா நாட்டின் பாதுகாவலர்
கிளேவர் சிறு வயதிலிருந்தே அன்னைமரியாளின் மீது பக்தியை வளர்த்து வந்தார். பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கிய நாளிலிருந்து பல புத்தகங்களைப் படித்தார். தனது இளம் வயது படிப்பை முடித்தபின் 1596 ஆம் ஆண்டு பார்சலோனா என்ற நகரிலிருந்த புகழ் வாய்ந்த கல்லூரியில் படிக்க சென்றார். கல்லூரி படிப்பை முடித்ததும் 1802 ஆம் ஆண்டு குருவாக
ஆசைக்கொண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர் மயோர்க்கா நகரில் மீண்டும் தனது படிப்பை தொடர்ந்தார்.
அங்கு கல்லூரி படிப்பை முடித்தபின் 1616 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். புதிய குருவான இவர் நீக்ரோ அடிமை
மக்களிடம் பணியை தொடர அனுப்பப்பட்டார். அம்மக்களிடையே சிறப்பாக பணியாற்றி , சில நாட்கள் கழித்து, அவர்களில் ஒருவராகவே மாறினார். அப்போது அம்மக்களிடையே அடிமை வாணிகம் பெருகியது. அவற்றை ஒடுக்க இவர் பெரிதும் பாடுபட்டார். அச்சமயத்தில் ஆப்ரிக்கா நாட்டிலிருந்து மக்கள் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களோடு சேர்த்து
இறக்குமதியும் செய்யப்பட்டது. கிளேவர் அம்மருந்துகளை பெற்று, நீக்ரோ மக்களுக்கு மருத்துவப் பணியையும் ஆற்றினார். அடிமை மக்களிடையே மிகவும் அன்பாக பணியாற்றினார். தனது மறைப்பணியால் அம்மக்களின் கடுமையான மனதை மாற்றினார். அனைவரையும் இறைவன்பால் ஈர்த்து, இறையுறவில் வளர்த்தெடுத்தார். அடிமைகளின் மேல் கொண்ட அக்கறையாலும், அன்பாலும் இவர் அம்மக்களின் தந்தை என்றழைக்கப்பட்டார்.
செபம்:
விடுதலையின் நாயகனே எம் இறைவா! உறவில்லாமல், அன்பில்லாமல் வாழும் மக்களுக்கு, நீரே தந்தையாகவும், தாயாகவும், எல்லாமுமாகவும் இருந்து வருகின்றீர். நீர் கற்று தந்தவைகளை, புனித கிளேவரின் வாழ்விலிருந்து, நாங்கள் கற்று கொண்டு வாழ அருள்புரியும்.
Back to top
செப்டம்பர் 09
துறவி மரியா எத்திமியா Maria Euthymia
பிறப்பு
8 ஏப்ரல் 1914,
ஹால்வேர்தா, நார்ட்ரைன்
வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி
இறப்பு
9 செப்டம்பர் 1955,
மியூண்டர், நார்ட்ரைன்
வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி
இவர் 1934 ஆம் ஆண்டு இரக்கத்தின்அருள்சகோதரர்கள் Barmherzigen Schwestern என்ற துறவற சபையில் சேர்ந்து 1940 ல் துறவியானார்.இவர் தனது வார்த்தைப்பாடுகளை பெற்ற பின்னர்,இரண்டாம் உலகப் போரில் அடிப்பட்ட மக்களுக்காக
பணியாற்றினார். நோயாளிகளை அன்புடன்பராமரித்தார். போரினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் மனதில், மகிழ்ச்சியை வளர்க்க பெரிதும் உழைத்தார். இவர் தன்னுடைய அன்பான பேச்சாலும், அரவணைக்கும் இதயத்தாலும், பாதித்த மக்களின் வாழ்வை மாற்றினார். சோக வாழ்விலிருந்து விடுபட்டு, சுமுகமான வாழ்வுக்கு வழிகாட்டினார்.
இவர் மக்களால் "அன்பின் வானதூதர்" என்றழைக்கப்பட்டார். தன்னுடைய அன்பான புன்முறுவலுடன் வாழ்வில் எதுவுமே இல்லை என்று வாழ்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கினார். அனைவருக்கும் தன் முழு அன்பை வழங்கினார். ஏராளமான மக்களின் வாழ்வில் நம்பிக்கையை வளர்த்து நல்வாழ்வை அமைத்துக்கொடுத்தார்
செபம்:
ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர் என்று மொழிந்த இறைவா! ஆதரவற்ற மக்களுக்கு தாயாக இருந்து வாழ்வுக்கு வழிகாட்டிய, மரியா எத்திமியாவின் வாழ்வை, நாங்கள் பின்பற்ற உமதருள் தாரும். இன்றும் எங்களை சுற்றி,
துன்பத்தில் வாழும் சகோதர, சகோதரிகளை நாங்கள் அன்போடு பாதுகாத்து, நீர் எமக்குக் காட்டும் அன்பை நாங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ, உம் அருளைத் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
செப்டம்பர் 09
துறவி மரியா எத்திமியா Maria Euthymia
பிறப்பு
8 ஏப்ரல் 1914,
ஹால்வேர்தா, நார்ட்ரைன்
வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி
இறப்பு
9 செப்டம்பர் 1955,
மியூண்டர், நார்ட்ரைன்
வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி
இவர் 1934 ஆம் ஆண்டு இரக்கத்தின்அருள்சகோதரர்கள் Barmherzigen Schwestern என்ற துறவற சபையில் சேர்ந்து 1940 ல் துறவியானார்.இவர் தனது வார்த்தைப்பாடுகளை பெற்ற பின்னர்,இரண்டாம் உலகப் போரில் அடிப்பட்ட மக்களுக்காக
பணியாற்றினார். நோயாளிகளை அன்புடன்பராமரித்தார். போரினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் மனதில், மகிழ்ச்சியை வளர்க்க பெரிதும் உழைத்தார். இவர் தன்னுடைய அன்பான பேச்சாலும், அரவணைக்கும் இதயத்தாலும், பாதித்த மக்களின் வாழ்வை மாற்றினார். சோக வாழ்விலிருந்து விடுபட்டு, சுமுகமான வாழ்வுக்கு வழிகாட்டினார்.
இவர் மக்களால் "அன்பின் வானதூதர்" என்றழைக்கப்பட்டார். தன்னுடைய அன்பான புன்முறுவலுடன் வாழ்வில் எதுவுமே இல்லை என்று வாழ்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கினார். அனைவருக்கும் தன் முழு அன்பை வழங்கினார். ஏராளமான மக்களின் வாழ்வில் நம்பிக்கையை வளர்த்து நல்வாழ்வை அமைத்துக்கொடுத்தார்
செபம்:
ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர் என்று மொழிந்த இறைவா! ஆதரவற்ற மக்களுக்கு தாயாக இருந்து வாழ்வுக்கு வழிகாட்டிய, மரியா எத்திமியாவின் வாழ்வை, நாங்கள் பின்பற்ற உமதருள் தாரும். இன்றும் எங்களை சுற்றி,
துன்பத்தில் வாழும் சகோதர, சகோதரிகளை நாங்கள் அன்போடு பாதுகாத்து, நீர் எமக்குக் காட்டும் அன்பை நாங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ, உம் அருளைத் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 10
புனித அல்பி சால்வியன் St. Salvius of Albi
இறப்பு
584
இவர் அல்பி என்ற நகரில் ஆயராக இருந்தார்.திருத்தந்தை முதலாம் பெரிய கிரகோரியின்(Pope Gregory I) நண்பர். இவரின் சொந்த ஊரானஅல்பியில் வழக்கறிஞராக பணியாற்றினார்.அதன்பிறகு ஒரு துறவு மடத்திற்குள் நுழைந்து,
துறவியாகவே பணியாற்றினார். அதன்பிறகுதுறவியானார். அதன்பிறகு அத்துறவற மடத்துறவிகளை கவனிப்பதற்கான பொறுப்பை ஏற்றார். பின்னர் 574-584 வரை அல்பியிலுள்ள மக்களின் ஆயனாக ஆயர் பதவி வகித்தார். அங்கு நோயாளிகளை கவனிக்கும் பணியிலும் ஈடுபட்டார். அங்கிருந்த கைதிகளை மீட்டுக்கொண்டு வந்து, அவர்களின் வாழ்வையும் மாற்றினார். அரசர் சில்பெரிக்(King Chilperic) என்பவரையும் மனம் மாற்றி கிறிஸ்துவ நெறியில் வளர்த்தெடுத்தார்.
செபம்:
குணமளிப்பவரே எம் தலைவரே! நோயாளிகளின் மீது அக்கறை கொண்டு பணிபுரிய ஒவ்வொரு செவிலியர்க்கும், மருத்துவர்க்கும் உதவிசெய்யும் பணியிலிருக்கும் நேரங்களில் பொறுமையோடும், தியாக உணர்வோடும் செயல்பட உமதருள் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
செப்டம்பர் 10
புனித அல்பி சால்வியன் St. Salvius of Albi
இறப்பு
584
இவர் அல்பி என்ற நகரில் ஆயராக இருந்தார்.திருத்தந்தை முதலாம் பெரிய கிரகோரியின்(Pope Gregory I) நண்பர். இவரின் சொந்த ஊரானஅல்பியில் வழக்கறிஞராக பணியாற்றினார்.அதன்பிறகு ஒரு துறவு மடத்திற்குள் நுழைந்து,
துறவியாகவே பணியாற்றினார். அதன்பிறகுதுறவியானார். அதன்பிறகு அத்துறவற மடத்துறவிகளை கவனிப்பதற்கான பொறுப்பை ஏற்றார். பின்னர் 574-584 வரை அல்பியிலுள்ள மக்களின் ஆயனாக ஆயர் பதவி வகித்தார். அங்கு நோயாளிகளை கவனிக்கும் பணியிலும் ஈடுபட்டார். அங்கிருந்த கைதிகளை மீட்டுக்கொண்டு வந்து, அவர்களின் வாழ்வையும் மாற்றினார். அரசர் சில்பெரிக்(King Chilperic) என்பவரையும் மனம் மாற்றி கிறிஸ்துவ நெறியில் வளர்த்தெடுத்தார்.
செபம்:
குணமளிப்பவரே எம் தலைவரே! நோயாளிகளின் மீது அக்கறை கொண்டு பணிபுரிய ஒவ்வொரு செவிலியர்க்கும், மருத்துவர்க்கும் உதவிசெய்யும் பணியிலிருக்கும் நேரங்களில் பொறுமையோடும், தியாக உணர்வோடும் செயல்பட உமதருள் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 11
புனித பாப்னுடீயஸ், (ஆயர்)
St.Paphnutius,( Bishop)
நினைவுத் திருநாள் : செப்டம்பர் 11
இவர் பல ஆண்டுகள் பாலைவனத்தின் வாழ்ந்தார். பிறகு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு எகிப்து நாட்டில் ஆயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் மறைமாநில மக்கள் பாவமன்னிப்பு பெற வேண்டுமென்று விரும்பினார். இதன் வழியாக அமைதியை நிலை நாட்ட எண்ணினார். அதற்காக பெரிதும் உழைத்து, தம் மந்தையை மனந்திருப்பினார். பின்னர் தம் மக்களை நல்ல கிறிஸ்துவர்களாக வளர்த்தெடுத்தார். பல பாவமன்னிப்பு வழிபாடு வழங்கி , மக்களின் மனதை முழுவதுமாக இறைவன் பால் திருப்பினார்.
அப்போது 325 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டின்(Constantine) என்ற அரசன் ஓர் கூட்டத்தை கூட்டினான். ஆயர் பாப்னுடீயஸை அக்கூட்டத்திற்கு வரவழைத்தான். தனக்கு தனிபட்ட முறையில் அனைவர் முன்னிலையிலும் மரியாதை அளிக்கும்படி ஆயரிடம் கட்டளையிட்டார்ன். ஆனால் ஆயர் அதை செய்ய மறுத்தார். இதனால் அரசன் கோபங்கொண்டு ஆயரின் வலது கண்ணை பிடுங்கி எரிந்தான். அக்கூட்டத்தில் திருச்சபைக்காக தன் கண்ணை இழந்தார் ஆயர். ஒரு கண்ணைக் கொண்டே 355 ஆம் ஆண்டு மீண்டும் தொழிற்சங்கக் கூட்டத்திற்கு வந்தார். அப்போதுதான் நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றி இறந்தார்.
செப்டம்பர் 11
புனித பாப்னுடீயஸ், (ஆயர்)
St.Paphnutius,( Bishop)
நினைவுத் திருநாள் : செப்டம்பர் 11
இவர் பல ஆண்டுகள் பாலைவனத்தின் வாழ்ந்தார். பிறகு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு எகிப்து நாட்டில் ஆயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் மறைமாநில மக்கள் பாவமன்னிப்பு பெற வேண்டுமென்று விரும்பினார். இதன் வழியாக அமைதியை நிலை நாட்ட எண்ணினார். அதற்காக பெரிதும் உழைத்து, தம் மந்தையை மனந்திருப்பினார். பின்னர் தம் மக்களை நல்ல கிறிஸ்துவர்களாக வளர்த்தெடுத்தார். பல பாவமன்னிப்பு வழிபாடு வழங்கி , மக்களின் மனதை முழுவதுமாக இறைவன் பால் திருப்பினார்.
அப்போது 325 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டின்(Constantine) என்ற அரசன் ஓர் கூட்டத்தை கூட்டினான். ஆயர் பாப்னுடீயஸை அக்கூட்டத்திற்கு வரவழைத்தான். தனக்கு தனிபட்ட முறையில் அனைவர் முன்னிலையிலும் மரியாதை அளிக்கும்படி ஆயரிடம் கட்டளையிட்டார்ன். ஆனால் ஆயர் அதை செய்ய மறுத்தார். இதனால் அரசன் கோபங்கொண்டு ஆயரின் வலது கண்ணை பிடுங்கி எரிந்தான். அக்கூட்டத்தில் திருச்சபைக்காக தன் கண்ணை இழந்தார் ஆயர். ஒரு கண்ணைக் கொண்டே 355 ஆம் ஆண்டு மீண்டும் தொழிற்சங்கக் கூட்டத்திற்கு வந்தார். அப்போதுதான் நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றி இறந்தார்.
Back to top
செப்டம்பர் 12
✠ புனித எல்பே ✠
( St. Ailbe )
பிறப்பு : 5ம் நூற்றாண்டு
இறப்பு : 528
பாதுகாவல் : கேஷல் (Cashel) மற்றும் எமிலி (Emly) மறைமாவட்டங்களுக்கு பாதுகாவலர்
புனித எல்பே, அயர்லாந்து நாட்டில் மறைபோதகராக பணியாற்றினார். பின்னர் ஆயராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் புனித பாட்ரிக் (Patrick) சபையை சார்ந்தவர். இவர் அல்பேயுஸ் (Albeus) என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக சில வரலாறுகள் கூறுகின்றது. ஜெர்மனியிலுள்ள முன்ஸ்டர் (Münster) என்ற மறைமாவட்டத்திலிருந்த அரசன் ஒருவரால் அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.
இவரிடம் பல கொடுமையான மிருகங்கள் அன்பை நாடி இவரிடம் வந்து செல்லும் என்று சொல்லப்படுகின்றது. அப்போது ஒரு நாள், ஒரு ஓநாய் வந்து இவரின் மார்பில் படுத்துகொண்டு பல மணிநேரம் கழித்தே, அவரைவிட்டு சென்றாக சொல்படுகின்றது. இவர் அயர்லாந்தில் பலரை திருமுழுக்கு கொடுத்து மனந்திருப்பி உள்ளார். இவர் அயர்லாந்து நாட்டு சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்டு, அந்நாட்டு அரசால் கண்டிக்கப்பட்டுள்ளார். அப்போதும் கூட இவர் தனது போதனைகளில் கிறிஸ்துவை முன் வைத்து மறைப்பணி ஆற்றியுள்ளார்.
இதனால் அந்நாட்டு அரசாங்கங்கள் இவரைக்கொண்டு சென்று, அடர்ந்த காட்டு பகுதியில், விலங்குகளிடையே விட்டுள்ளனர். அச்சமயத்தில் கூட பொறுமையைக் கடைபிடித்து, எளிமையான வாழ்ந்து, தன்னை நாடி வந்த மக்களுக்கு மறையுரையாற்றி அவர்களின்மேல் கரிசனை காட்டி வந்துள்ளார். இவர் அயர்லாந்து மக்களை தன் இதயத்தில் வழிநடத்தினார்.
செபம் :
அன்புத் தந்தையே!
நீர் எல்லா உயிர்களையும் நேசிக்க மனிதர்களைப் படைத்தீர். உயிரினங்கள் மேல் அக்கறைகொண்டு அன்பு செய்து அவைகளின் வழியாக நாங்கள் உம்மை காண எமக்கு உதவி செய்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்
செப்டம்பர் 12
✠ புனித எல்பே ✠
( St. Ailbe )
பிறப்பு : 5ம் நூற்றாண்டு
இறப்பு : 528
பாதுகாவல் : கேஷல் (Cashel) மற்றும் எமிலி (Emly) மறைமாவட்டங்களுக்கு பாதுகாவலர்
புனித எல்பே, அயர்லாந்து நாட்டில் மறைபோதகராக பணியாற்றினார். பின்னர் ஆயராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் புனித பாட்ரிக் (Patrick) சபையை சார்ந்தவர். இவர் அல்பேயுஸ் (Albeus) என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக சில வரலாறுகள் கூறுகின்றது. ஜெர்மனியிலுள்ள முன்ஸ்டர் (Münster) என்ற மறைமாவட்டத்திலிருந்த அரசன் ஒருவரால் அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.
இவரிடம் பல கொடுமையான மிருகங்கள் அன்பை நாடி இவரிடம் வந்து செல்லும் என்று சொல்லப்படுகின்றது. அப்போது ஒரு நாள், ஒரு ஓநாய் வந்து இவரின் மார்பில் படுத்துகொண்டு பல மணிநேரம் கழித்தே, அவரைவிட்டு சென்றாக சொல்படுகின்றது. இவர் அயர்லாந்தில் பலரை திருமுழுக்கு கொடுத்து மனந்திருப்பி உள்ளார். இவர் அயர்லாந்து நாட்டு சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்டு, அந்நாட்டு அரசால் கண்டிக்கப்பட்டுள்ளார். அப்போதும் கூட இவர் தனது போதனைகளில் கிறிஸ்துவை முன் வைத்து மறைப்பணி ஆற்றியுள்ளார்.
இதனால் அந்நாட்டு அரசாங்கங்கள் இவரைக்கொண்டு சென்று, அடர்ந்த காட்டு பகுதியில், விலங்குகளிடையே விட்டுள்ளனர். அச்சமயத்தில் கூட பொறுமையைக் கடைபிடித்து, எளிமையான வாழ்ந்து, தன்னை நாடி வந்த மக்களுக்கு மறையுரையாற்றி அவர்களின்மேல் கரிசனை காட்டி வந்துள்ளார். இவர் அயர்லாந்து மக்களை தன் இதயத்தில் வழிநடத்தினார்.
செபம் :
அன்புத் தந்தையே!
நீர் எல்லா உயிர்களையும் நேசிக்க மனிதர்களைப் படைத்தீர். உயிரினங்கள் மேல் அக்கறைகொண்டு அன்பு செய்து அவைகளின் வழியாக நாங்கள் உம்மை காண எமக்கு உதவி செய்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்
Back to top
செப்டம்பர் 13
புனித யோவான் கிறிசோஸ்தோம்
ஆயர், மறைவல்லுநர்
பிறப்பு
354,
அந்தியோக்கியா
இறப்பு
407,
கோமானா, போந்து
பாதுகாவல்: கல்வி, வலிப்புநோய், மறையுரையாளர்கள்
இவர் ஓர் சிறந்த மறைபோதகர். மிகச் சிறந்த முறையில் கல்வி கற்றார். இவர் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு குருத்துவப்பயிற்சி பெற்று குருவானார். மறைபோதகராக பணியாற்றி, ஏராளமான நன்மைகளை செய்தார். 397 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோபிளுக்கு ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொறுப்பை மிக சிறப்பாக ஆற்றினார். பணிகளின் நடுவிலும் தவ வாழ்வை விடாமல் மேற்கொண்டார். குருக்களின் நடத்தையும் மறைபணியாளர்களின் வாழ்வையும் அறநெறிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அரசர்களாலும், தனக்கு எதிராக செயல்பட்டவர்களாலும் அதை நிறைவேற்ற
முடியாமல் தவித்தார். இவர் நாட்டைவிட்டு வெளியேற அரசர்களால் வலியுறுத்தப்பட்டார். இருப்பினும் அம்மக்களின்
நடுவே அஞ்சா நெஞ்சுடன் பணியாற்றினார். தன் சொல்வன்மையால் பலரின் மனதில் இடம்பிடித்தார். ஆடம்பர வாழ்விலிருந்து வெளியேறி ஏழைமக்களுக்கு பணிசெய்து, தன்னிடம் இருப்பவற்றை அவர்களோடு பகிர்ந்து அரசர்களை
அழைத்தார். இதனால் வெறிகொண்ட அரசர்கள் அவரை நாடு கடத்தினர். ஆர்மினியா நாட்டில் 3 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் கருங்கடலின் தென்கிழக்கு பகுதிக்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டார். மிகவும் நலிவுற்று உடல் நலம் குன்றி காணப்பட்டார். ஒன்றும் செய்ய இயலாதவராய் அங்கேயே இறந்தார்.
செபம்:
நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! கடுந்தவ வாழ்வை மேற்கொண்டு, இடர்பாடுகளின் மத்தியிலும் வாழ எமக்கு கற்றுத்தாரும். எச்சூழலிலும் உம்மை பற்றிக்கொண்டு, உமது பாதையில் சென்று, உமக்கு சாட்சியம் பகர வரம்
தாரும்.
செப்டம்பர் 13
புனித யோவான் கிறிசோஸ்தோம்
ஆயர், மறைவல்லுநர்
பிறப்பு
354,
அந்தியோக்கியா
இறப்பு
407,
கோமானா, போந்து
பாதுகாவல்: கல்வி, வலிப்புநோய், மறையுரையாளர்கள்
இவர் ஓர் சிறந்த மறைபோதகர். மிகச் சிறந்த முறையில் கல்வி கற்றார். இவர் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு குருத்துவப்பயிற்சி பெற்று குருவானார். மறைபோதகராக பணியாற்றி, ஏராளமான நன்மைகளை செய்தார். 397 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோபிளுக்கு ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொறுப்பை மிக சிறப்பாக ஆற்றினார். பணிகளின் நடுவிலும் தவ வாழ்வை விடாமல் மேற்கொண்டார். குருக்களின் நடத்தையும் மறைபணியாளர்களின் வாழ்வையும் அறநெறிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அரசர்களாலும், தனக்கு எதிராக செயல்பட்டவர்களாலும் அதை நிறைவேற்ற
முடியாமல் தவித்தார். இவர் நாட்டைவிட்டு வெளியேற அரசர்களால் வலியுறுத்தப்பட்டார். இருப்பினும் அம்மக்களின்
நடுவே அஞ்சா நெஞ்சுடன் பணியாற்றினார். தன் சொல்வன்மையால் பலரின் மனதில் இடம்பிடித்தார். ஆடம்பர வாழ்விலிருந்து வெளியேறி ஏழைமக்களுக்கு பணிசெய்து, தன்னிடம் இருப்பவற்றை அவர்களோடு பகிர்ந்து அரசர்களை
அழைத்தார். இதனால் வெறிகொண்ட அரசர்கள் அவரை நாடு கடத்தினர். ஆர்மினியா நாட்டில் 3 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் கருங்கடலின் தென்கிழக்கு பகுதிக்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டார். மிகவும் நலிவுற்று உடல் நலம் குன்றி காணப்பட்டார். ஒன்றும் செய்ய இயலாதவராய் அங்கேயே இறந்தார்.
செபம்:
நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! கடுந்தவ வாழ்வை மேற்கொண்டு, இடர்பாடுகளின் மத்தியிலும் வாழ எமக்கு கற்றுத்தாரும். எச்சூழலிலும் உம்மை பற்றிக்கொண்டு, உமது பாதையில் சென்று, உமக்கு சாட்சியம் பகர வரம்
தாரும்.
Back to top
செப்டம்பர் 14 :
கொலோன் நகர் ஆயர் மட்டேர்னஸ் Maternus von Köln
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு
இறப்பு
14 செப்டம்பர் 314
பாதுகாவல்: காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களிலிருந்து
இவர் கொலோன் நகர் ஆயர்களில் மிகச் சிறந்த முதல் வரலாற்று ஆயர் என்ற பெருமையை பெற்றவர். 313
ஆம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஆயர்கள் கூட்டத்தில் முதன்முதலில் பங்கெடுத்தவர். நற்செய்தியை பரப்புவதில் அதிக ஈடுபாடு காட்டினார்.நற்செய்தியை நிலைநாட்ட பெரும்பாடுபட்டார். பல இன்னல்களை அடைந்தார். உரோமில் பேதுருவிற்குப் பிறகு, நற்செய்தியை பரப்புவதில், அதிகம் ஆர்வம் காட்டியவர் இவர் என்று
கூறப்படுகின்றது. கொலோன் மறைமாவட்டத்தை உருவாக்கிய முதல் ஆயர் இவர். டிரியர் மறைமாவட்டத்தையும்
இவர்தான் உருவாக்கினார் என்று வரலாறு கூறுகின்றது. டிரியரில் மக்கள் ஒன்றுமில்லாமல் துன்பப்படும்போதும், வாழ வழி இல்லாமல் தவித்தபோதும் இவர்தான் வழிகாட்டினார் என்று கூறப்படுகின்றது.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! புதிய மறைமாவட்டங்களை உருவாக்கி, உம் பாதையில்
செல்ல வழிவகுத்த ஆயர் மட்டேர்னசை நீர் எமக்கு பரிசாக கொடுத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர் உருவாக்கிய கொலோன் மறைமாவட்டத்தை நீர் கண்ணோக்கியருளும். அம்மறைமாநில மக்களோடு இருந்து
அவர்களுக்கு தேவையான எல்லா அருள்வரங்களையும் நலன்களையும் கொடுத்து, உம் ஆசீரை பொழிந்தருளும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
செப்டம்பர் 14 :
கொலோன் நகர் ஆயர் மட்டேர்னஸ் Maternus von Köln
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு
இறப்பு
14 செப்டம்பர் 314
பாதுகாவல்: காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களிலிருந்து
இவர் கொலோன் நகர் ஆயர்களில் மிகச் சிறந்த முதல் வரலாற்று ஆயர் என்ற பெருமையை பெற்றவர். 313
ஆம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஆயர்கள் கூட்டத்தில் முதன்முதலில் பங்கெடுத்தவர். நற்செய்தியை பரப்புவதில் அதிக ஈடுபாடு காட்டினார்.நற்செய்தியை நிலைநாட்ட பெரும்பாடுபட்டார். பல இன்னல்களை அடைந்தார். உரோமில் பேதுருவிற்குப் பிறகு, நற்செய்தியை பரப்புவதில், அதிகம் ஆர்வம் காட்டியவர் இவர் என்று
கூறப்படுகின்றது. கொலோன் மறைமாவட்டத்தை உருவாக்கிய முதல் ஆயர் இவர். டிரியர் மறைமாவட்டத்தையும்
இவர்தான் உருவாக்கினார் என்று வரலாறு கூறுகின்றது. டிரியரில் மக்கள் ஒன்றுமில்லாமல் துன்பப்படும்போதும், வாழ வழி இல்லாமல் தவித்தபோதும் இவர்தான் வழிகாட்டினார் என்று கூறப்படுகின்றது.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! புதிய மறைமாவட்டங்களை உருவாக்கி, உம் பாதையில்
செல்ல வழிவகுத்த ஆயர் மட்டேர்னசை நீர் எமக்கு பரிசாக கொடுத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர் உருவாக்கிய கொலோன் மறைமாவட்டத்தை நீர் கண்ணோக்கியருளும். அம்மறைமாநில மக்களோடு இருந்து
அவர்களுக்கு தேவையான எல்லா அருள்வரங்களையும் நலன்களையும் கொடுத்து, உம் ஆசீரை பொழிந்தருளும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 15
புனித மரியன்னையின் துயரங்கள்
தூய மரியாவின் (வியாகுல அன்னை) துயரங்கள் நினைவு:-
திருமகன் சிலுவையில் தொங்கியபோது அருகில், கண்ணீர் பெருகிடத் துயருடன் அந்தோ! நின்றார் வியாகுலத் தாய்மரி.
பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத் துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ! ஊடுருவிற்றே கூர்வாள், காணீர்.
தேவ சுதனின் அன்பால் அன்னை, பேரரும் ஆசி பெற்றவர், அன்று எத்துணைத் துயரும் வருத்தமும் கொண்டார்.
அன்புத் தாயவர் மாண்புறு மகனின் துன்பம் அனைத்தும் நோக்கிய போது கொண்ட துயரமும் வருத்தமும் என்னே!
இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும் கிறிஸ்துவின் அன்னையைக் காணும் போதில் எவரும் வருந்தாதிருந்திடுவாரோ!
தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும் கிறிஸ்துவின் அன்னையை நோக்கிடும் போதில் உளம் உருகாமல் நிற்பவர் யாரோ!
தம்முடைய மக்களின் பாவம் நீங்க தாங்கரும் வேதனை, கசையடி ஏற்ற தம் திருமகனாம் இயேசுவைக் கண்டார்.
தேனினுமினிய தேவனின் மைந்தன் அனைவரும் கைவிட ஆறுதலின்றித் தனிமையில் தமது உயிர்விடக் கண்டார்.
அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா, அடியேன் உம்முடன் அழுது வருந்த, உமதுள்ளத் துயரை உணர்ந்திடச் செய்வீர்.
இறைவனாம் கிறிஸ்துவுக் கன்பு செய்து என்றும் அவருக் குகந்தவராக, என்னுளம் அன்பால் எரிந்திடச் செய்வீர்.
தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்: துயருறும் சிலுவை நாதரின் காயம் ஆழமாய் நெஞ்சில் அழுந்திடச் செய்வீர்.
அடியேனுக்காய்க் காயமும் துன்பமும் ஏற்கத் திருவுளம் கொண்ட உம் மகனின் துயரில் எனக்கொரு பங்கு தருவீர்.
சிலுவை நாதருடன் துயருறவும், பக்தியால் உம்முடன் புலம்பவும், என்றன் உயிருள்ளளவும் அருள் புரிவீரே.
சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும் கண்ணீர் அழுகையில் நானும் சேர்ந்து பங்குற விரும்புகின்றேனே.
கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே, கனிவுடன் என்னைக் கடைக்கண் நோக்கி உம்மோடழுதிட அருள் செய், அம்மா.
கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும் பாடுகள் யாவிலும் பங்கு கொள்ளவும் காயம் நினைத்து இரங்கவும் செய்யும்.
நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும் அவரது சிலுவையும், சிந்திய இரத்தமும் என் மனம் நிரப்ப அருள் செய்வீரே.
என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில் வீழ்ந்து அவதியுறாமல் கன்னியே, என்னைக் காத்திடுவீரே.
கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே வந்திடும் வேளை வெற்றிக் குருத்தைத் தாங்க நும் அன்னை வழியாய் அருள்வீர்.
என்னுடல் மரித்து அழியும் போதில் என்றன் ஆன்மா பரகதி மகிமை எய்திடும் வரத்தை வேண்டி நின்றேன்.
- ஆமென்.
வியாகுல மாதா ஜெபமாலை மற்றும் புகழ் மாலைக்கு இங்கே சொடுக்கவும்
ஜெனுவா நகர் திருக்காட்சியாளர் & தாதி
கத்தரீனா Katharina von Genua
பிறப்பு
1447,ஜெனுவா, இத்தாலி
இறப்பு
15 செப்டம்பர் 1510,ஜெனுவா
புனிதர்பட்டம்: 1737, திருத்தந்தை 12 ஆம்கிளமென்ட்
பாதுகாவல்: ஜெனுவா நகர்,மருத்துவமனைகள்
இவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர். தனது சிறுவயதிலிருந்தே துறவியாக வேண்டுமென்று மிக ஆசைக்கொண்டார். ஆனால்
1463 ஆம் ஆண்டு தனது 16 ஆம் வயதில் பத்ரீசியர் கியூலியானோ Patrizier Giuliano என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதன்பிறகு இவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இவரால் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு முடியாமல் மிகவும் துன்பப்பட்டார். குடும்பவாழ்வில் இருக்கும்போதும் கூட இவரின் மனம் இறைவனையே நாடிச் சென்றது. இறைவன் மீது கொண்ட அன்பால் 1474 ல் இறைவனின் காட்சியை முதன்முறையாக பெற்றார். இதனால் மிக
மகிழ்ச்சி அடைந்தார் கத்தரீனா. இதற்கிடையில் அவரின் கணவரும் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார்.
கத்தரீனாவின் ஆன்மீக வாழ்வால் அவரின் கணவர் ஈர்க்கப்பட்டார். அவரும் இறைவனை நம்பி ஏற்றுக்கொண்டார். தானும் ஓர் துறவற இல்லத்தில் சேர்ந்து தொண்டாற்ற எண்ணினார். இதனால் கத்தரீனாவும் அவரிடமிருந்து பிரிந்து, நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு மீண்டும் மீண்டும் இறைவனின் தரிசனத்தை பெற்றார். பல ஆண்டுகள் உண்ணாநோன்பிருந்து செபித்து, திவ்ய நற்கருணை மட்டுமே உட்கொண்டு, உயிர் வாழ்ந்தார்
செபம்:
இரக்கத்தின் ஆண்டவரே! புனித கத்தரீனாவின் வழியாக, உம்மை நீர் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினீர். அவரின் மூலம்
நோயாளிகளை குணமாக்கினீர். உம்மீது அளவில்லா பற்றுக்கொண்டு வாழ்ந்த அவரின் முன்மாதிரியான வாழ்வை பின்பற்றி நாங்களும் வாழ, உம் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 16
கார்த்தேஜ் நகர் ஆயர் மறைசாட்சி சிப்ரியான், ஆயர், St.Cyprian
பிறப்பு
200 / 210,
கார்த்தேஜ் Carthage, ஆப்ரிக்கா
இறப்பு
258,
கார்த்தேஜ்
பாதுகாவல்: காலரா நோயிலிருந்து
இவர் ஓர் கிறிஸ்தவர் அல்லாதவரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலிருந்தே கிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமென்று ஆசைக்கொண்டு, குடும்பத்தினரின் உதவியுடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். திருவருட்சாதனங்களை பெற்று, திருமறையைப் பற்றி நன்கு அறிந்தார். பின்னர் தான் பிறந்த ஊரிலே இருந்த குருமடத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். சிறந்த மறைபரப்புப் பணியாளராக பணியாற்றினார். தன் குடும்பத்திலிருந்து இவருக்கு ஏராளமான சொத்துக்களை வழங்கினர். அவற்றையெல்லாம் விற்று, வேறுபாடு பார்க்காமல் பணியாற்றினார்.
இவர் 249 ஆம் ஆண்டு இவரின் சொந்த மறைமாவட்டத்திற்கே ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு பிரச்சனைகள் நிறைந்திருந்தபோதும், திறம்பட தம் பணியை ஆற்றினார். பல அரசர் இவருக்கு எதிராக செயல்பட்டனர். அவர்களிடமும் இறைநம்பிக்கையை வளர்த்து கிறிஸ்துவர்களாக மாற்றினார்.
இச்செயல்களை கண்ட பல கிறித்தவரல்லாதவர்கள் சிப்ரியானின் செயல்களை எதிர்த்தனர். கிறிஸ்துவர்களை பலவிதங்களில் வதைத்துக்கொன்றனர். சில மக்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து பிரிந்து புறவின சபையில் சேர்ந்தனர். அவர்களின் பயத்தைப் பார்த்து, சிப்ரியான் கிறிஸ்துவர்களாக வாழ தைரியமூட்டி கிறிஸ்துவை பற்றிக்கொள்ள இன்னும் சிறப்பாக குரல் கொடுத்து பணியாற்றினார். இதனால் டீசியன் (Disiyan) என்ற மன்னன் ஆத்திரமடைந்து, சிப்ரியானை சிங்கங்களின் வாயிலிட்டு கொல்லும்படி கட்டளையிட்டான். அதை அறிந்த சிப்ரியான் அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பித்து சென்றான்.
அப்போது அம்மறைமாநிலத்தில் ஆயர் இல்லாமல் போனது. இதனை அறிந்த நோவெற்றஸ் (Nowetras) என்பவன் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்துவை மறுதலித்தவர்களை, தன்னுடன் சேர்த்துக்கொண்டு, திருச்சபையில் இருந்துக்கொண்டே, திருச்சபைக்கு எதிராக செயல்பட்டான். உரோம் நகர் சென்று, அங்கும் தவறான வதந்திகளை பரப்பினான். இதையறிந்த சிப்ரியான் மனங்கலங்கினார். மீண்டும் கார்த்தேஜ் வந்தடைந்தார். அப்போது சில கூட்டங்களை கூட்டி திருச்சபையில் சில நிலையான தீர்மானங்களை கொண்டுவந்தார். 257 ஆம் ஆண்டு மீண்டும் சிலைவழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனை சிப்ரியான் எதிர்த்தார். இதனால் பட்டேனஸ்(Patenas) என்ற ஆளுநர் ஒருவரால் நாடு கடத்தப்பட்டார். அப்போதும் இவர் கிறிஸ்துவ மக்களுக்காக மட்டுமே பரிந்து பேசினார். அதனால் மீண்டும் வலேரியன் என்பவனால் மீண்டும் நாடு கடத்தப்பட்டு, கடுமையான தண்டனையை அளித்தார். பல துன்பங்களை அனுபவித்தார் ஆயர். அப்போதும் கூட ஆப்ரிக்கா மண்ணில் வாழும் கிறிஸ்துவர்களுக்காக பரிந்து பேசி, குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். தனது இறுதி மூச்சுவரை கிறிஸ்துவின் பெயரை உச்சரித்தவண்ணமாய் இருந்தார். இதனால் தலை வெட்டப்பட்டு இறந்தார்.
செபம்:
எல்லாம் வல்லவரே! புனித சிப்ரியான் உமது மாட்சிக்காக, மறைசாட்சியாக இறந்தார். அவரின் பக்தியை நாங்கள் கடைபிடித்து வாழ எமக்கு உதவி செய்தருளும். உம்மீது நம்பிக்கைக்கொண்டு, விசுவாச வாழ்வில் வளர்ந்து, என்றும் உம்மை உம் வாழ்வில் பறைசாற்றி வாழ, உமதருளை பொழிந்தருளும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
செப்டம்பர் 16
கார்த்தேஜ் நகர் ஆயர் மறைசாட்சி சிப்ரியான், ஆயர், St.Cyprian
பிறப்பு
200 / 210,
கார்த்தேஜ் Carthage, ஆப்ரிக்கா
இறப்பு
258,
கார்த்தேஜ்
பாதுகாவல்: காலரா நோயிலிருந்து
இவர் ஓர் கிறிஸ்தவர் அல்லாதவரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலிருந்தே கிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமென்று ஆசைக்கொண்டு, குடும்பத்தினரின் உதவியுடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். திருவருட்சாதனங்களை பெற்று, திருமறையைப் பற்றி நன்கு அறிந்தார். பின்னர் தான் பிறந்த ஊரிலே இருந்த குருமடத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். சிறந்த மறைபரப்புப் பணியாளராக பணியாற்றினார். தன் குடும்பத்திலிருந்து இவருக்கு ஏராளமான சொத்துக்களை வழங்கினர். அவற்றையெல்லாம் விற்று, வேறுபாடு பார்க்காமல் பணியாற்றினார்.
இவர் 249 ஆம் ஆண்டு இவரின் சொந்த மறைமாவட்டத்திற்கே ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு பிரச்சனைகள் நிறைந்திருந்தபோதும், திறம்பட தம் பணியை ஆற்றினார். பல அரசர் இவருக்கு எதிராக செயல்பட்டனர். அவர்களிடமும் இறைநம்பிக்கையை வளர்த்து கிறிஸ்துவர்களாக மாற்றினார்.
இச்செயல்களை கண்ட பல கிறித்தவரல்லாதவர்கள் சிப்ரியானின் செயல்களை எதிர்த்தனர். கிறிஸ்துவர்களை பலவிதங்களில் வதைத்துக்கொன்றனர். சில மக்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து பிரிந்து புறவின சபையில் சேர்ந்தனர். அவர்களின் பயத்தைப் பார்த்து, சிப்ரியான் கிறிஸ்துவர்களாக வாழ தைரியமூட்டி கிறிஸ்துவை பற்றிக்கொள்ள இன்னும் சிறப்பாக குரல் கொடுத்து பணியாற்றினார். இதனால் டீசியன் (Disiyan) என்ற மன்னன் ஆத்திரமடைந்து, சிப்ரியானை சிங்கங்களின் வாயிலிட்டு கொல்லும்படி கட்டளையிட்டான். அதை அறிந்த சிப்ரியான் அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பித்து சென்றான்.
அப்போது அம்மறைமாநிலத்தில் ஆயர் இல்லாமல் போனது. இதனை அறிந்த நோவெற்றஸ் (Nowetras) என்பவன் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்துவை மறுதலித்தவர்களை, தன்னுடன் சேர்த்துக்கொண்டு, திருச்சபையில் இருந்துக்கொண்டே, திருச்சபைக்கு எதிராக செயல்பட்டான். உரோம் நகர் சென்று, அங்கும் தவறான வதந்திகளை பரப்பினான். இதையறிந்த சிப்ரியான் மனங்கலங்கினார். மீண்டும் கார்த்தேஜ் வந்தடைந்தார். அப்போது சில கூட்டங்களை கூட்டி திருச்சபையில் சில நிலையான தீர்மானங்களை கொண்டுவந்தார். 257 ஆம் ஆண்டு மீண்டும் சிலைவழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனை சிப்ரியான் எதிர்த்தார். இதனால் பட்டேனஸ்(Patenas) என்ற ஆளுநர் ஒருவரால் நாடு கடத்தப்பட்டார். அப்போதும் இவர் கிறிஸ்துவ மக்களுக்காக மட்டுமே பரிந்து பேசினார். அதனால் மீண்டும் வலேரியன் என்பவனால் மீண்டும் நாடு கடத்தப்பட்டு, கடுமையான தண்டனையை அளித்தார். பல துன்பங்களை அனுபவித்தார் ஆயர். அப்போதும் கூட ஆப்ரிக்கா மண்ணில் வாழும் கிறிஸ்துவர்களுக்காக பரிந்து பேசி, குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். தனது இறுதி மூச்சுவரை கிறிஸ்துவின் பெயரை உச்சரித்தவண்ணமாய் இருந்தார். இதனால் தலை வெட்டப்பட்டு இறந்தார்.
செபம்:
எல்லாம் வல்லவரே! புனித சிப்ரியான் உமது மாட்சிக்காக, மறைசாட்சியாக இறந்தார். அவரின் பக்தியை நாங்கள் கடைபிடித்து வாழ எமக்கு உதவி செய்தருளும். உம்மீது நம்பிக்கைக்கொண்டு, விசுவாச வாழ்வில் வளர்ந்து, என்றும் உம்மை உம் வாழ்வில் பறைசாற்றி வாழ, உமதருளை பொழிந்தருளும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 17:
ஆயர் இராபர்ட் பெல்லார்மின், மறைவல்லுநர் St.Robert Bellarmine
பிறப்பு
1542,
தஸ்கனி(Tuscany), மோந்தே புல்சியானோ(Monte Pulciano)
இறப்பு
17 செப்டம்பர் 1621,
உரோம்
முத்திபேறுபட்டம்:
1923
புனிதர்பட்டம்: 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
இவர் தமது 18 ஆம் வயதில் உரோம் நகரிலிருந்த இயேசு சபையில் சேர்ந்தார். 1559 ஆம் ஆண்டு பெல்ஜிய நாட்டிற்கு கல்லூரி படிப்பிற்காக அனுப்பப்பட்டார். சிறந்த முறையில் கல்வி கற்றபின் மீண்டும் உரோம் திரும்பினார். அங்கிருந்த இயேசு சபையில் பணியாற்றி குருப்பட்டம் பெற்று, சிறந்த மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க திருச்சபையை
பாதுகாக்கும் பொருட்டு, புகழ் பெற்ற விவாதங்களை நடத்தினார். பிறகு உரோமன் கல்லூரிகளில் இறையியல் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பல நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் இன்று ஏராளமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பின்னர் இவர் இயேசு சபையில் பல உயர்பதவிகளைப் பெற்று, அனைத்தையும்
சிறப்பாக ஆற்றினார். திருத்தந்தை 8 ஆம் கிளமெண்ட் அவர்கள், இராபர்ட் பெல்லார்மினை கர்தினாலாக உயர்த்தினார். இவர் காப்புவா என்ற மறைமாவட்டத்தில் ஆயர் பொறுப்பையும் ஏற்றார். பிறகு 11 ஆம் சிங்கராயர் அவர்களால் உரோம் நகருக்கு சிறந்த ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றது. நாம் அதை
முழுமையாக கடவுளின் மேன்மைக்காக பயன்படுத்த வேண்டுமென்பதை இவர் அடிக்கடி கூறுவார். நீதியோடும், நேர்மையோடும் தன்னிடம் ஒப்படைத்த பணியை செய்தார். அக்காலத்தில் எழுந்த பல ஐயப்பாடுகளையும்,
தெளிவுப்படுத்தி, திருச்சபையின் வளர்ச்சிக்கு துணை நின்றார். திருச்சபையில் இருந்த மறைநூல் வல்லுநர்களில், இவரும் ஓர் சிறந்த மறைவல்லுநர் என்ற பெயரையும் பெற்றார்.
செபம்:
வரங்களை வாரி வழங்குபவரே எம் கடவுளே! திருச்சபையின் நம்பிக்கையை பாதுகாக்க புனித இராபர்ட் பெல்லார்மினை ஏற்படுத்தினீர். உமது வியத்தகு அறிவாற்றலையும், நீதியையும், நேர்மையையும் அவருக்குத் தந்தீர். அவருக்கு நீர் அளித்த கொடைகளை எமக்கும் அளித்து, எம் வழியாக உமது திருச்சபையை வளரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
செப்டம்பர் 17:
ஆயர் இராபர்ட் பெல்லார்மின், மறைவல்லுநர் St.Robert Bellarmine
பிறப்பு
1542,
தஸ்கனி(Tuscany), மோந்தே புல்சியானோ(Monte Pulciano)
இறப்பு
17 செப்டம்பர் 1621,
உரோம்
முத்திபேறுபட்டம்:
1923
புனிதர்பட்டம்: 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
இவர் தமது 18 ஆம் வயதில் உரோம் நகரிலிருந்த இயேசு சபையில் சேர்ந்தார். 1559 ஆம் ஆண்டு பெல்ஜிய நாட்டிற்கு கல்லூரி படிப்பிற்காக அனுப்பப்பட்டார். சிறந்த முறையில் கல்வி கற்றபின் மீண்டும் உரோம் திரும்பினார். அங்கிருந்த இயேசு சபையில் பணியாற்றி குருப்பட்டம் பெற்று, சிறந்த மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க திருச்சபையை
பாதுகாக்கும் பொருட்டு, புகழ் பெற்ற விவாதங்களை நடத்தினார். பிறகு உரோமன் கல்லூரிகளில் இறையியல் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பல நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் இன்று ஏராளமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பின்னர் இவர் இயேசு சபையில் பல உயர்பதவிகளைப் பெற்று, அனைத்தையும்
சிறப்பாக ஆற்றினார். திருத்தந்தை 8 ஆம் கிளமெண்ட் அவர்கள், இராபர்ட் பெல்லார்மினை கர்தினாலாக உயர்த்தினார். இவர் காப்புவா என்ற மறைமாவட்டத்தில் ஆயர் பொறுப்பையும் ஏற்றார். பிறகு 11 ஆம் சிங்கராயர் அவர்களால் உரோம் நகருக்கு சிறந்த ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றது. நாம் அதை
முழுமையாக கடவுளின் மேன்மைக்காக பயன்படுத்த வேண்டுமென்பதை இவர் அடிக்கடி கூறுவார். நீதியோடும், நேர்மையோடும் தன்னிடம் ஒப்படைத்த பணியை செய்தார். அக்காலத்தில் எழுந்த பல ஐயப்பாடுகளையும்,
தெளிவுப்படுத்தி, திருச்சபையின் வளர்ச்சிக்கு துணை நின்றார். திருச்சபையில் இருந்த மறைநூல் வல்லுநர்களில், இவரும் ஓர் சிறந்த மறைவல்லுநர் என்ற பெயரையும் பெற்றார்.
செபம்:
வரங்களை வாரி வழங்குபவரே எம் கடவுளே! திருச்சபையின் நம்பிக்கையை பாதுகாக்க புனித இராபர்ட் பெல்லார்மினை ஏற்படுத்தினீர். உமது வியத்தகு அறிவாற்றலையும், நீதியையும், நேர்மையையும் அவருக்குத் தந்தீர். அவருக்கு நீர் அளித்த கொடைகளை எமக்கும் அளித்து, எம் வழியாக உமது திருச்சபையை வளரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 18:
புனித ஜோசப் கப்பர் (குரு, திருக்காட்சியாளர்)
St. Joseph of Cuper
நினைவுத் திருநாள்: செப்டம்பர் 18
பிறப்பு : 1603, பிரிந்திசி Brindisi, அப்போலியன் Apulion
இறப்பு : 18 செப்டம்பர் 1663
முத்திபேறுபட்டம் : 24 பிப்ரவரி 1753, திருத்தந்தை 14 ஆம் பெனடிக்ட்
புனிதர்பட்டம் : 16 ஜூலை 1767, திருத்தந்தை 13 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல் : விமான போக்குவரத்து, விண்வெளி, மாணவர்கள்
இவரின் பெற்றோர் பிரான்செஸ்கா பானரா Francesca Panara மற்றும் பெலீஸ் டேசா Felice Desa என்பவர்கள் ஆவார். இவர் பிறப்பதற்கு முன்பே இவரின் தந்தை இறந்துவிட்டார்.தந்தை ஏற்படுத்திய கடனை இவரின் தாயால் அடைக்கமுடியவில்லை. இதனால் தாயிடமிருந்த அனைத்து சொத்துக்களையும்கடன்காரர்கள் அபகரித்து சென்றார்கள். இதனால் இவரின் தாய், மகன் ஜோசப்பை கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்தார். இளம் வயதிலிருந்தே ஜோசப்பிற்கு, தாய் ஞானப்பாலை ஊட்டி வளர்த்தார். இறைபக்தியில் வளர்ந்த ஜோசப், சிறுவயதிலிருந்தே இறைதரிசனங்களை பெற்றார்.
ஜோசப் பல நல்ல குணங்களை பெற்று வளர்ந்தார். இருப்பினும் கோபம் என்னும் குணமும் இவரோடு வளர்ந்தது. இதனால் துன்பங்களுக்கும் ஆளானார். இவரும் இவரின் தாயும் துன்பப்படுவதை அறிந்த இவரின் மாமா ஜோசப்பை தன்னுடன் அழைத்து சென்றார். இவர் செய்த ஷூமேக்கர் தொழிலை ஜோசப்பிற்கும் கற்றுக்கொடுத்தார். அத்தொழிலை செய்தபோதும், ஜோசப்பின் மனம் குருவாக வேண்டுமென்ற ஆசையை கொண்டிருந்தது. இதனால் 1620 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையினர் நடத்திய சிறுவர்களின் பள்ளியில் சேர்ந்து படித்தார். ஆனால் போதுமான கல்வியை அவரால் கற்கமுடியவில்லை. இருப்பினும் குருவாகும் ஆசையை விடாமல் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். அங்கு வாழ்ந்தபோது, பல பயிற்சிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் சில தகுதிகள் அவரிடம் இல்லையென்பதை உணர்ந்த அச்சபையினர் அவரை வெளியில் அனுப்பினர். தன் வீட்டிற்கு சென்று வாழ்ந்தபோது 1625 ஆம் ஆண்டு, அவர் வாழ்ந்த மறைமாவட்டத்திலிருந்த குருத்துவ இல்லம் சென்று, தன் ஆசையை அம்மறைமாவட்ட குருக்களிடம் தெரிவித்து குருமடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். எளிமையிலும், பக்தியிலும் வாழ்ந்து 1628 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் குருப்பட்டம் பெற்றார்.
பிறகு மடோனாடெல்லா கிராசியா Madonna della Grazia என்ற ஆலயத்தில் ஏறக்குறைய 15 ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு ஜோசப் பலமுறை கடவுளின் காட்சிகளை பெற்றார். பல மணிநேரங்கள் தொடர்ந்து தன்னை மறந்து செபித்தார். இவர் திருப்பலி நிறைவேற்றிய ஒவ்வொரு நாளும் மக்கள் இவரின் புனிதத்துவத்தை உணர்ந்தனர். இவர் மனிதர்களை பார்த்தவுடனே அவர்களின் மனதில் உள்ளவற்றை அப்படியே கூறுவார். இதனால் சில நேரங்களில் இவர் கட்டுக்கதைகளைக்கட்டுகிறார் என்று கூறி சிறைப்பிடித்து கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் பிரான்சிஸ்கன் சிறுவர் இல்லத்திற்கு மாற்றப்பட்டார். 1639-1653 வரை அவ்வில்லத்தில் பணியாற்றினார். அங்கும் பலமுறை காட்சிகளை கண்டார். 1653-1657 வரை வாரத்திற்கு இருமுறை மட்டுமே உணவு உட்கொண்டு கடுமையான தவ வாழ்வை கடைபிடித்தார். இவ்வாறே 35 ஆண்டுகள் வாழ்ந்தார்.
செபம்:
அன்பான இறைவா! உம்மீது கொண்ட அன்பால், கடுமையான தவம் புரிந்து உம்மிடம் இருந்து பலமுறை காட்சிகளை பெற்று வாழ்ந்த புனித ஜோசப்பைப் போல, நாங்களும் உம்மை தரிசித்து, உம்மைக்காணும் பேற்றைப் பெற, நீர் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 19
காண்டர்பரி பேராயர் தியோடர் Theodar
பிறப்பு
602,
தார்சுஸ் Tarsus, துருக்கி
இறப்பு
19 செப்டம்பர் 690,
காண்டர்பரி Canterbury,
இங்கிலாந்து
இவர் இங்கிலாந்து நாட்டில் கேண்டர்பரி நகரில் ஆயராக இருந்தார். இவருக்கு இங்கிலாந்து நாட்டில் பெரிய பேராலயம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இவர் தனது சொந்த ஊரான தர்சிலும், துருக்கி, கிரேக்கத்திலும் கல்லூரி படிப்பை ஏதென்ஸ் நாட்டிலும் கற்றார். பின்னர் உரோம் சென்று குருப்பட்டம் பெற்றார். பின்னர் 667 ஆம் ஆண்டில் திருத்தந்தை வித்தாலியன் (Vitalian) அவர்களால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 668 ஆம் ஆண்டு ஆப்ரிக்கா நாட்டிலுள்ள பழங்குடி மக்களுக்கு பணியாற்ற பொறுப்பேற்றார். அப்போது ஆப்ரிக்காவை ஆண்டுவந்த கேண்டர்பரி மன்னனை எதிர்த்தார். 669
ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பி உயர் பதவி வகித்த மன்னன் இவருக்கு உதவினார். பின்னர் 673 மற்றும் 680 ஆண்டுகளில் இரண்டுமுறை Synod- ஐ கூட்டினார். இவர் இங்கிலாந்து நாட்டின் முதல் பேராயர் என்ற பெயர்
பெற்றார்.
செபம்:
சாதி, மத இனங்களை கடந்தவரே எம் தலைவரே! ஆப்ரிக்கா நாட்டில் வாழும் சகோதர சகோதரர்களை உம் கரத்தில் சமர்ப்பிக்கின்றோம். அம்மக்களை நீர் பராமரித்து வழிநடத்தியருளும். அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும். அம்மக்களின் வளர்ச்சிக்கு உதவி செய்ய தாராள் உள்ளங்கொண்ட மனிதர்களை தந்து, அம்மக்களின்
வாழ்வில் ஏற்றம் காண செய்தருள தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
செப்டம்பர் 20
புனித எஸ்தாக்கியுஸ் St. Eustachius
இறப்பு
118
பாதுகாவல்: தீயணைப்பு வீரர்கள்,
வேட்டைக்காரர்கள், பெண்விடுதலை
எஸ்தாக்கியுஸ் என்பது ஓர் கிரேக்கப்பெயர். இவர் மனமாற்றம் பெறுவதற்கு முன் பிளாசிடஸ் Placidus என்றழைக்கப்பெற்றார். உரோமில் அதிரியான் Adrian ஆட்சி செய்த காலத்தில் தேயோபிஷ்டா Theopista மற்றும் அவரின் மகன்கள் அகாபியஸ் (Agapius), தேயோபிஷ்டஸ்(Theopistus) என்பவர்களுடன் சேர்த்து துன்பப்படுத்தப்பட்டார். எஸ்தாக்கியுஸ் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கி மறைப்பணியை
ஆற்றியுள்ளார். இவர் தனது 12 வயதிலிருந்து திருச்சபைக்காக உழைத்தார்.
இவர் இறந்தபிறகு இவரின் உடலிலிருந்த எலும்புகள் அனைத்தையும் ஒன்றாக் சேர்த்து 1567 ல் பாரிஸ் நாட்டில் புனித எஸ்தாக்கியுஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டது, இவர் நீதியோடும்,நேர்மையோடு வாழ்ந்தார். மிகவும் எளிமையான
வாழ்வை வாழ்ந்தார். சாதி, மதம் பார்க்காமல் பணியாற்றினார். மனசாட்சிக்கு மட்டுமே செவிசாய்த்தார். இவருக்கு தீங்கு
செய்தவர்களிடமும் அன்பாக இருந்தார். அவர்களை மன்னித்து, அவர்களிடத்தில் அளவில்லா அன்பு காட்டி, வாழ்வையும் மாற்றினார். பிறரை பாராட்டுவதிலும் எப்போதும் முதலிடம் வகித்தார். மற்றவர்களின் பலவீனங்களை அறிந்து,
அவைகளிலிருந்து வெளியேற உதவினார். இவரின் நல்ல குணங்களை அறிந்த எதிரிகள் , சமுதாயத்தில் இவரின் பெயரை கெடுக்க திட்டமிட்டனர். கொடூரமான பழிகளை அவரின் மேல் சுமத்தினர். பல அநீதிகளை செய்ததாக குற்றம் சாட்டினர். அப்போதும் கூட இவர் பொறுமையை கடைபிடித்து, கடவுளை மட்டுமே தன் வாழ்வின் மையமாக கொண்டு
செயல்பட்டார். எதிரிகளின் இதயங்களிலும், ஈரத்தை ஏற்படுத்தி இறையுறவை வளர்த்து, மனமாற்றினார்.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! நற்செய்தியின் மதிப்பிடுகளின்படி தன் வாழ்வை அமைத்து வாழ்ந்த புனித எஸ்தாக்கியுஸை நினைத்து உம்மை போற்றுகின்றோம். அவர் வாழ்ந்து விட்டு சென்ற முன் மாதிரியான அவரின் வாழ்வை
நாங்களும் கற்றுக்கொண்டு அவரை எம் வாழ்வில் பிரதிபலிக்க நீர் அருள் தர வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 21
✠ புனித மத்தேயு ✠
( St. Matthew )
திருத்தூதர், நற்செய்தியாளர் :
ஏற்கும் சபை/ சமயம் :
கத்தோலிக்க திருச்சபை & கிழக்கு மரபுவழி திருச்சபை,
அங்கிலிக்கன்,
லூத்தரனியம்.
முக்கிய திருத்தலங்கள் :
சலெர்னோ, இத்தாலி
திருவிழா :
செப்டம்பர் 21 (மேலைத் திருச்சபை)
நவம்பர் 16 (கீழைத் திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகை : தேவதூதர், புத்தகம்.
திருத்தூதர் புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.
அடையாளம் :
இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர் (மத்தேயு 9:9).
கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை, இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டு தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார்
(மத்தேயு 10:3).
மாற்கு (3:18), லூக்கா (6:15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் (1:13) நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன.
மாற்கு (2:14), லூக்கா (5:27) நற்செய்திகளில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது.
புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
ஆரம்ப நாட்கள் :
அல்பேயுவின் மகனான மத்தேயு, ரோம ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர்.
ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணியாற்றியவர்களை யூத மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினர். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில்தான், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். அழைப்பை ஏற்ற மத்தேயு, இயேசுவைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார்.
இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மாற்கு 2:16-17)
மத்தேயுவின் பணி :
புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும், அவரது உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து செபித்தனர்.
பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு பின்பு, அவர்கள் அனைவரும் 'இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா' என்று எருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர்.
சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்.
கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.
கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூத கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூத கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூத கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத்தேயு 28:20).
இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையில், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.
ஆசிரியர் :
இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது.
எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.
சூழல் :
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.
நினைவு :
மத்தேயு கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்தவ பிரிவுகளில் புனிதராகப் போற்றப்படுகிறார்.
இவரது விழா, மேலைத் திருச்சபை கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 21ந்தேதியும், கீழைத் திருச்சபை கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 16ந்தேதியும் கொண்டாடப்படுகிறது.
இவரது திருப்பண்டங்கள் இத்தாலியின் சலெர்னோ கதீட்ரலில் பாதுகாக்கப்படுகின்றன.
மற்ற நற்செய்தியாளர்களைப் போன்றே, கிறிஸ்தவ கலையில் திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்படும் நான்கு உயிர்களில் ஒன்றான சிறகுள்ள மனிதனோடு சித்தரிக்கப்படுகிறார்.
பாதுகாவல் :
புனித மத்தேயு கணக்காளர்கள், வங்கிப் பணியாளர்கள், நூலகர்கள், பங்குத் தரகர்கள், சுங்க அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாவலராக இருக்கிறார்.
செப்டம்பர் 21
✠ புனித மத்தேயு ✠
( St. Matthew )
திருத்தூதர், நற்செய்தியாளர் :
ஏற்கும் சபை/ சமயம் :
கத்தோலிக்க திருச்சபை & கிழக்கு மரபுவழி திருச்சபை,
அங்கிலிக்கன்,
லூத்தரனியம்.
முக்கிய திருத்தலங்கள் :
சலெர்னோ, இத்தாலி
திருவிழா :
செப்டம்பர் 21 (மேலைத் திருச்சபை)
நவம்பர் 16 (கீழைத் திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகை : தேவதூதர், புத்தகம்.
திருத்தூதர் புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.
அடையாளம் :
இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர் (மத்தேயு 9:9).
கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை, இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டு தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார்
(மத்தேயு 10:3).
மாற்கு (3:18), லூக்கா (6:15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் (1:13) நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன.
மாற்கு (2:14), லூக்கா (5:27) நற்செய்திகளில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது.
புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
ஆரம்ப நாட்கள் :
அல்பேயுவின் மகனான மத்தேயு, ரோம ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர்.
ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணியாற்றியவர்களை யூத மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினர். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில்தான், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். அழைப்பை ஏற்ற மத்தேயு, இயேசுவைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார்.
இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மாற்கு 2:16-17)
மத்தேயுவின் பணி :
புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும், அவரது உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து செபித்தனர்.
பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு பின்பு, அவர்கள் அனைவரும் 'இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா' என்று எருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர்.
சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்.
கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.
கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூத கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூத கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூத கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத்தேயு 28:20).
இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையில், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.
ஆசிரியர் :
இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது.
எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.
சூழல் :
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.
நினைவு :
மத்தேயு கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்தவ பிரிவுகளில் புனிதராகப் போற்றப்படுகிறார்.
இவரது விழா, மேலைத் திருச்சபை கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 21ந்தேதியும், கீழைத் திருச்சபை கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 16ந்தேதியும் கொண்டாடப்படுகிறது.
இவரது திருப்பண்டங்கள் இத்தாலியின் சலெர்னோ கதீட்ரலில் பாதுகாக்கப்படுகின்றன.
மற்ற நற்செய்தியாளர்களைப் போன்றே, கிறிஸ்தவ கலையில் திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்படும் நான்கு உயிர்களில் ஒன்றான சிறகுள்ள மனிதனோடு சித்தரிக்கப்படுகிறார்.
பாதுகாவல் :
புனித மத்தேயு கணக்காளர்கள், வங்கிப் பணியாளர்கள், நூலகர்கள், பங்குத் தரகர்கள், சுங்க அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாவலராக இருக்கிறார்.
Back to top
செப்டம்பர் 22
மறைசாட்சிகள் மவுரிசியஸ் மற்றும் தோழர்கள்
St. Mauritius and companions
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு,எகிப்து
இறப்பு
302,அகாவ்னும் Agaunum(செயிண்ட் மௌரிஸ் St.Maurice), சுவிட்சர்லாந்து
பாதுகாவல்: போர் வீரர்கள், வியாபாரிகள்,சாயத் தொழிலாளிகள், ஆடை நிறுவனங்கள்,காது, மூட்டு நோய்களிலிருந்து
இவர் எகிப்து நாட்டில் முதன்முதலில் இராணுவப் படையை உருவாக்கினார். இவர், தன் படைவீரர்களுடன் சேர்ந்து சிலுவைப்போரை புரிந்தனர். இவரின் படைவீரர்களை, தன் படைக்கு கொடையாக தருமாறு, எதிர்படையினர்,
மவுரிசியஸிடம் கேட்டனர். அப்படி தந்தால் வெற்றியடைய செய்வோம் என்றும் கூறினர். ஆனால் மவுரிசியஸ் இதனை ஏற்க மறுத்தார். இதனால் மீண்டும் போர் மூண்டது. மவுரிசியசின் படையிலிருந்த படைவீரர்கள் சிலரின் அந்த
செயல்களால், மவுரிசியஸ், அப்படையை விட்டு விலக வேண்டியதாயிற்று. இவர் அப்படையிலிருந்து விலகியப்பின் படைவீரர்கள் மிகக் கடினமான ஒழுங்குகளை கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டார்கள். இதனை கடைபிடிக்க மறுத்ததால், பலம் வாய்ந்த வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இராணுவவீரர்கள் 6000 பேர், மாக்சிமில்லியனுடன் (Maxmilian)
சேர்ந்து, ஜெனிவா என்ற ஏரியின் அருகே எதிரிகளுடன் போரிட்டனர். இப்போரில் மீண்டும் பலர் இறந்தனர். இதனால் இராணுவத்தில் மிகக்குறைவான பலம் வாய்ந்த வீரர்களே இருந்தனர். இவற்றை கண்ட மவுரிசியஸ், மீண்டும் ராணுவத்தில் நுழைந்தார். இராணுவ வீரர்களுக்கு சிறப்பான பயிற்சியை கொடுத்தார். வீரர்களை மீண்டும்
திடப்படுத்தி பலமூட்டினார். அத்துடன் அவர்களுக்கு கிறிஸ்துவ நெறியை கற்பித்து நல்ல கிறிஸ்துவர்களாகவும் வாழ வைத்தார். இந்நிலையில் எதிரிகள் மீண்டும் படையெடுத்து வந்து மவுரிசியசையும் அவரின் படைவீரர்களையும் கொன்றார்கள்
செபம்:
கருணையின் மறு உருவே எம் கடவுளே! எதிரிகளால் இரக்கமின்றி கொல்லப்பட்ட ஒவ்வொரு படைவீரர்களையும் நீர் நினைவு கூர்ந்தருளும். உமது மகிமைக்காக போரிட்டு மடிந்த ஆன்மாக்களின் பாவங்களை மன்னித்து, நீர்தாமே
அவர்களுக்கு உமது வான்வீட்டில் நிலையான வாழ்வை தந்தருளும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
செப்டம்பர் 22
மறைசாட்சிகள் மவுரிசியஸ் மற்றும் தோழர்கள்
St. Mauritius and companions
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு,எகிப்து
இறப்பு
302,அகாவ்னும் Agaunum(செயிண்ட் மௌரிஸ் St.Maurice), சுவிட்சர்லாந்து
பாதுகாவல்: போர் வீரர்கள், வியாபாரிகள்,சாயத் தொழிலாளிகள், ஆடை நிறுவனங்கள்,காது, மூட்டு நோய்களிலிருந்து
இவர் எகிப்து நாட்டில் முதன்முதலில் இராணுவப் படையை உருவாக்கினார். இவர், தன் படைவீரர்களுடன் சேர்ந்து சிலுவைப்போரை புரிந்தனர். இவரின் படைவீரர்களை, தன் படைக்கு கொடையாக தருமாறு, எதிர்படையினர்,
மவுரிசியஸிடம் கேட்டனர். அப்படி தந்தால் வெற்றியடைய செய்வோம் என்றும் கூறினர். ஆனால் மவுரிசியஸ் இதனை ஏற்க மறுத்தார். இதனால் மீண்டும் போர் மூண்டது. மவுரிசியசின் படையிலிருந்த படைவீரர்கள் சிலரின் அந்த
செயல்களால், மவுரிசியஸ், அப்படையை விட்டு விலக வேண்டியதாயிற்று. இவர் அப்படையிலிருந்து விலகியப்பின் படைவீரர்கள் மிகக் கடினமான ஒழுங்குகளை கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டார்கள். இதனை கடைபிடிக்க மறுத்ததால், பலம் வாய்ந்த வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இராணுவவீரர்கள் 6000 பேர், மாக்சிமில்லியனுடன் (Maxmilian)
சேர்ந்து, ஜெனிவா என்ற ஏரியின் அருகே எதிரிகளுடன் போரிட்டனர். இப்போரில் மீண்டும் பலர் இறந்தனர். இதனால் இராணுவத்தில் மிகக்குறைவான பலம் வாய்ந்த வீரர்களே இருந்தனர். இவற்றை கண்ட மவுரிசியஸ், மீண்டும் ராணுவத்தில் நுழைந்தார். இராணுவ வீரர்களுக்கு சிறப்பான பயிற்சியை கொடுத்தார். வீரர்களை மீண்டும்
திடப்படுத்தி பலமூட்டினார். அத்துடன் அவர்களுக்கு கிறிஸ்துவ நெறியை கற்பித்து நல்ல கிறிஸ்துவர்களாகவும் வாழ வைத்தார். இந்நிலையில் எதிரிகள் மீண்டும் படையெடுத்து வந்து மவுரிசியசையும் அவரின் படைவீரர்களையும் கொன்றார்கள்
செபம்:
கருணையின் மறு உருவே எம் கடவுளே! எதிரிகளால் இரக்கமின்றி கொல்லப்பட்ட ஒவ்வொரு படைவீரர்களையும் நீர் நினைவு கூர்ந்தருளும். உமது மகிமைக்காக போரிட்டு மடிந்த ஆன்மாக்களின் பாவங்களை மன்னித்து, நீர்தாமே
அவர்களுக்கு உமது வான்வீட்டில் நிலையான வாழ்வை தந்தருளும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 23
✠ பியட்ரல்சினா நகரின் புனித பியோ ✠
( St. Pio of Pietrelcina )
கப்புச்சின் துறவற சபையின் குரு, துறவி, ஒப்புரவாளர்,
ஐந்துகாய வரம் பெற்ற முதல் குரு :
பிறப்பு : மே 25, 1887
பியட்ரல்சினா, இத்தாலி
இறப்பு : செப்டம்பர் 23, 1968 (அகவை 81)
சான் ஜியோவானி ரொட்டொன்டோ
ஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம் : மே 2, 1999
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் - ரோம், இத்தாலி
புனிதர் பட்டம் : ஜூன் 16, 2002
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் - ரோம், இத்தாலி
முக்கிய திருத்தலங்கள் :
சான் ஜியோவானி ரொட்டொன்டோ
நினைவுத் திருவிழா : செப்டம்பர் 23
பாதுகாவல் :
மக்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள்,
கத்தோலிக்க பதின்வயதினர்
பியட்ரல்சினா நகரின் புனித பியோ, கப்புச்சின் துறவற சபையின் குருவும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது திருமுழுக்கு பெயர் பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன், கப்புச்சின் சபையில் இணைந்தபோது பியோ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்; குருவானது முதல் பாத்ரே பியோ என்னும் பெயரில் பொதுவாக அறியப்படுகிறார். இவர் தனது உடலில் பெற்ற இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் இவரை உலகறியச் செய்தன. 2002 ஜூன் 16 அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
தொடக்க காலம் :
இத்தாலியின் விவசாய நகரான பியட்ரல்சினாவில், க்ராசியோ மரியோ ஃபோர்ஜியொன் (1860–1946) - மரிய க்யுசெப்பா டி நுன்சியோ (1859–1929) தம்பதியரின் மகனாக பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன் 1887 மே 25ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அங்கிருந்த சிற்றாலயத்தில், தனது சிறுவயதில் இவர் பலிபீடப் பணியாளராக இருந்து திருப்பலியில் குருவுக்கு உதவி செய்தார். இவருக்கு மைக்கேல் என்ற அண்ணனும், பெலிசிட்டா, பெலக்ரீனா மற்றும் க்ராசியா ஆகிய மூன்று தங்கைகளும் இருந்தனர். பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினந்தோறும் திருப்பலியில் பங்கேற்றதுடன், இரவில் செபமாலை செபிப்பதையும், வாரத்தில் மூன்று நாட்கள் புலால் உணவைத் தவிர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
சிறு வயது முதலே பக்தியில் சிறந்து விளங்கிய இவர், கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவராக வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே இவர் விண்ணக காட்சிகளைக் கண்டார். 1903 ஜனவரி 6 அன்று, தனது 15ஆம், வயதில் மொர்கோனில் இருந்த கப்புச்சின் சபையில் நவசந்நியாசியாக நுழைந்த இவர், ஜனவரி 22ந்தேதி தனது துறவற ஆடையைப் பெற்றுக் கொண்டு, பியட்ரல்சினோவின் பாதுகாவலரான புனித ஐந்தாம் பயசின் (பியோ) பெயரைத் தனது துறவற பெயராக ஏற்றுக்கொண்டார். இவர் ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் ஆகிய துறவற வாக்குறுதிகளையும் எடுத்துக்கொண்டார்.
குருத்துவ வாழ்வு :
ஆறு ஆண்டுகள் குருத்துவப் படிப்புக்குப் பின்னர் 1910ம் ஆண்டு பியோ குருவானார். இவர் இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சொரூபத்தின் முன்பாக அடிக்கடி செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். சிறிது காலம் குருவாகப் பணியாற்றியப்பின், உடல் நலம் குன்றியதால் இவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1916 செப்டம்பர் 4ஆம் நாள் மீண்டும் குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டார்.
1917ஆம் ஆண்டு, இவர் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். அப்போதும் உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குநராக செயல்பட்டார். ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் பாவ மன்னிப்புக்கான ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார்.
இவர் உடல் நலமின்றி துன்புற்ற வேளைகளில் இயேசுவின் திருப்பாடுகளை அதிகமாக தியானம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் வேதனைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும் உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும்ää பியோ தனது வேதனைகளை இயேசு நாதருக்கு ஒப்புக்கொடுத்தார். பியோ மக்களை கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாற்ற பெரிதும் முயற்சி செய்தார். மக்களின் உள்ளங்களை அறியும் திறன் பெற்றிருந்த இவரிடம் பலரும் ஆன்மீக ஆலோசனை கேட்கத் திரண்டு வந்தனர்.
திருக்காய வரம் :
1918ஆம் ஆண்டு செப்டம்பர் 20ந்தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் பியோவின் உடலில் இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் இவரது உடலில் பெறும் பேறுபெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் வலது விலாப்பகுதி ஆகிய ஐந்து இடங்களிலும் இவருக்கு இயேசுவின் காயங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து சிந்திய இரத்தம் இனிமையான நறுமணம் வீசியது.
அன்று முதல் இவர் இறக்கும் நாள் வரை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் அனுபவித்த வேதனைகளை பியோ இந்த காயங்களால் தனது வாழ்வில் அனுபவித்தார். இந்த திருக்காயங்கள் சில மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இவரது புனிதத்தன்மைக்கு கிடைத்த பரிசு என்ற சான்று வழங்கப்பட்டது. இப்புனித காயங்களால் உடல் வேதனை மட்டுமன்றி மனரீதியாக பல இன்னல்களை சந்தித்தார், இவரது ஐந்து காயங்களை குறித்து சிலர் அவதூறு பரப்பினர், அது நாளும் தலைப்பு செய்திகளாய் இத்தாலியன் நாளிதழ்களில் வெளியாகி தந்தை பியோவின் ஆன்மீக பணிவாழ்வுக்கு தடையாய் நின்றது. ஆனால் புனித வாழ்வால் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது உண்மையான வாழ்வை உலகிற்கு ஓங்கி உரைத்தார்.
இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது. இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின. லுய்ஜி ரொம்னெல்லி என்ற மருத்துவர், இவரது காயங்களைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக ஆய்வு செய்தார். ஜியார்ஜியோ ஃபெஸ்டா, க்யுசெப்பே பாஸ்டியனெல்லி, அமிக்கோ பிக்னமி ஆகிய மருத்துவர்களும் பலமுறை அவற்றை ஆராய்ந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் கூறமுடியவில்லை.ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு, இந்த காயங்களின் தாக்கம் எலும்புகளில் இல்லை என்று உறுதி செய்தார்.
இது இவருக்கு புகழைத் தேடித் தந்தாலும், அக்காயங்கள் இவரது வேதனையை அதிகரிப்பதாகவே இருந்தன. இவரது நிழற்படங்கள் பலவும் இவரது காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தின் பதிவுகளைக் காண்பிகின்றன. 1968ல் பியோ இறந்தபோது, இவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.
புனிதர் பட்டம் :
கிறிஸ்தவ தியானத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பியோ, "புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர், தியானத்தின் வழியாக அவரைக் கண்டுகொள்ள முடியும்" என்று குறிப்பிடுவார். 1960களில் பியோவின் உடல்நலம் குன்றத் தொடங்கியபோதும்,இவர் தொடர்ந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். 1968 செப்டம்பர் 22ந்தேதி, தனது இறுதி திருப்பலியை பியோ நிறைவேற்றினார்.
1968 செப்டம்பர் 23ஆம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், "இயேசு, மரியா" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு 1999ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 2002 ஜூன் 16ஆம் நாள் புனிதர் பட்டமும் வழங்கினார். இவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 மார்ச் 3ந்தேதி இவரது கல்லறைத் தோண்டப்பட்டபோதுகண்டெடுக்கப்பட்ட பியோவின் அழியாத உடல், சான் ஜியோவானி ரொட்டொன்டோ அருகிலுள்ள புனித பியோ ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
To watch Father Padre Pio's last mass click here
செப்டம்பர் 23
✠ பியட்ரல்சினா நகரின் புனித பியோ ✠
( St. Pio of Pietrelcina )
கப்புச்சின் துறவற சபையின் குரு, துறவி, ஒப்புரவாளர்,
ஐந்துகாய வரம் பெற்ற முதல் குரு :
பிறப்பு : மே 25, 1887
பியட்ரல்சினா, இத்தாலி
இறப்பு : செப்டம்பர் 23, 1968 (அகவை 81)
சான் ஜியோவானி ரொட்டொன்டோ
ஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம் : மே 2, 1999
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் - ரோம், இத்தாலி
புனிதர் பட்டம் : ஜூன் 16, 2002
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் - ரோம், இத்தாலி
முக்கிய திருத்தலங்கள் :
சான் ஜியோவானி ரொட்டொன்டோ
நினைவுத் திருவிழா : செப்டம்பர் 23
பாதுகாவல் :
மக்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள்,
கத்தோலிக்க பதின்வயதினர்
பியட்ரல்சினா நகரின் புனித பியோ, கப்புச்சின் துறவற சபையின் குருவும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது திருமுழுக்கு பெயர் பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன், கப்புச்சின் சபையில் இணைந்தபோது பியோ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்; குருவானது முதல் பாத்ரே பியோ என்னும் பெயரில் பொதுவாக அறியப்படுகிறார். இவர் தனது உடலில் பெற்ற இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் இவரை உலகறியச் செய்தன. 2002 ஜூன் 16 அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
தொடக்க காலம் :
இத்தாலியின் விவசாய நகரான பியட்ரல்சினாவில், க்ராசியோ மரியோ ஃபோர்ஜியொன் (1860–1946) - மரிய க்யுசெப்பா டி நுன்சியோ (1859–1929) தம்பதியரின் மகனாக பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன் 1887 மே 25ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அங்கிருந்த சிற்றாலயத்தில், தனது சிறுவயதில் இவர் பலிபீடப் பணியாளராக இருந்து திருப்பலியில் குருவுக்கு உதவி செய்தார். இவருக்கு மைக்கேல் என்ற அண்ணனும், பெலிசிட்டா, பெலக்ரீனா மற்றும் க்ராசியா ஆகிய மூன்று தங்கைகளும் இருந்தனர். பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினந்தோறும் திருப்பலியில் பங்கேற்றதுடன், இரவில் செபமாலை செபிப்பதையும், வாரத்தில் மூன்று நாட்கள் புலால் உணவைத் தவிர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
சிறு வயது முதலே பக்தியில் சிறந்து விளங்கிய இவர், கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவராக வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே இவர் விண்ணக காட்சிகளைக் கண்டார். 1903 ஜனவரி 6 அன்று, தனது 15ஆம், வயதில் மொர்கோனில் இருந்த கப்புச்சின் சபையில் நவசந்நியாசியாக நுழைந்த இவர், ஜனவரி 22ந்தேதி தனது துறவற ஆடையைப் பெற்றுக் கொண்டு, பியட்ரல்சினோவின் பாதுகாவலரான புனித ஐந்தாம் பயசின் (பியோ) பெயரைத் தனது துறவற பெயராக ஏற்றுக்கொண்டார். இவர் ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் ஆகிய துறவற வாக்குறுதிகளையும் எடுத்துக்கொண்டார்.
குருத்துவ வாழ்வு :
ஆறு ஆண்டுகள் குருத்துவப் படிப்புக்குப் பின்னர் 1910ம் ஆண்டு பியோ குருவானார். இவர் இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சொரூபத்தின் முன்பாக அடிக்கடி செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். சிறிது காலம் குருவாகப் பணியாற்றியப்பின், உடல் நலம் குன்றியதால் இவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1916 செப்டம்பர் 4ஆம் நாள் மீண்டும் குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டார்.
1917ஆம் ஆண்டு, இவர் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். அப்போதும் உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குநராக செயல்பட்டார். ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் பாவ மன்னிப்புக்கான ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார்.
இவர் உடல் நலமின்றி துன்புற்ற வேளைகளில் இயேசுவின் திருப்பாடுகளை அதிகமாக தியானம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் வேதனைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும் உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும்ää பியோ தனது வேதனைகளை இயேசு நாதருக்கு ஒப்புக்கொடுத்தார். பியோ மக்களை கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாற்ற பெரிதும் முயற்சி செய்தார். மக்களின் உள்ளங்களை அறியும் திறன் பெற்றிருந்த இவரிடம் பலரும் ஆன்மீக ஆலோசனை கேட்கத் திரண்டு வந்தனர்.
திருக்காய வரம் :
1918ஆம் ஆண்டு செப்டம்பர் 20ந்தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் பியோவின் உடலில் இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் இவரது உடலில் பெறும் பேறுபெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் வலது விலாப்பகுதி ஆகிய ஐந்து இடங்களிலும் இவருக்கு இயேசுவின் காயங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து சிந்திய இரத்தம் இனிமையான நறுமணம் வீசியது.
அன்று முதல் இவர் இறக்கும் நாள் வரை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் அனுபவித்த வேதனைகளை பியோ இந்த காயங்களால் தனது வாழ்வில் அனுபவித்தார். இந்த திருக்காயங்கள் சில மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இவரது புனிதத்தன்மைக்கு கிடைத்த பரிசு என்ற சான்று வழங்கப்பட்டது. இப்புனித காயங்களால் உடல் வேதனை மட்டுமன்றி மனரீதியாக பல இன்னல்களை சந்தித்தார், இவரது ஐந்து காயங்களை குறித்து சிலர் அவதூறு பரப்பினர், அது நாளும் தலைப்பு செய்திகளாய் இத்தாலியன் நாளிதழ்களில் வெளியாகி தந்தை பியோவின் ஆன்மீக பணிவாழ்வுக்கு தடையாய் நின்றது. ஆனால் புனித வாழ்வால் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது உண்மையான வாழ்வை உலகிற்கு ஓங்கி உரைத்தார்.
இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது. இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின. லுய்ஜி ரொம்னெல்லி என்ற மருத்துவர், இவரது காயங்களைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக ஆய்வு செய்தார். ஜியார்ஜியோ ஃபெஸ்டா, க்யுசெப்பே பாஸ்டியனெல்லி, அமிக்கோ பிக்னமி ஆகிய மருத்துவர்களும் பலமுறை அவற்றை ஆராய்ந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் கூறமுடியவில்லை.ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு, இந்த காயங்களின் தாக்கம் எலும்புகளில் இல்லை என்று உறுதி செய்தார்.
இது இவருக்கு புகழைத் தேடித் தந்தாலும், அக்காயங்கள் இவரது வேதனையை அதிகரிப்பதாகவே இருந்தன. இவரது நிழற்படங்கள் பலவும் இவரது காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தின் பதிவுகளைக் காண்பிகின்றன. 1968ல் பியோ இறந்தபோது, இவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.
புனிதர் பட்டம் :
கிறிஸ்தவ தியானத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பியோ, "புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர், தியானத்தின் வழியாக அவரைக் கண்டுகொள்ள முடியும்" என்று குறிப்பிடுவார். 1960களில் பியோவின் உடல்நலம் குன்றத் தொடங்கியபோதும்,இவர் தொடர்ந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். 1968 செப்டம்பர் 22ந்தேதி, தனது இறுதி திருப்பலியை பியோ நிறைவேற்றினார்.
1968 செப்டம்பர் 23ஆம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், "இயேசு, மரியா" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு 1999ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 2002 ஜூன் 16ஆம் நாள் புனிதர் பட்டமும் வழங்கினார். இவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 மார்ச் 3ந்தேதி இவரது கல்லறைத் தோண்டப்பட்டபோதுகண்டெடுக்கப்பட்ட பியோவின் அழியாத உடல், சான் ஜியோவானி ரொட்டொன்டோ அருகிலுள்ள புனித பியோ ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
To watch Father Padre Pio's last mass click here
Back to top
செப்டம்பர் 24
புனித ஜெரார்ட் சார்கிரேடோ
St. Gerard Sargredo
நினைவுத் திருநாள்: செப்டம்பர் 24
பிறப்பு : 980
இறப்பு : 24 செப்டம்பர் 1046
புனிதர்பட்டம் : 1083, திருத்தந்தை 7 ஆம் கிரகோரி
பாதுகாவல் : ஹங்கேரி, புடாபெஸ்ட் நாடு
இவர் கசானாட் (Csanad) என்ற மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். வெனிஸ் நகர் ஆயர் ஹங்கேரி நாட்டு அரசருக்கு பலவிதங்களில் உதவினார். அதனால் புனித ஜெரார்ட் வெனிஸ் நகர ஆயருக்கு மறைமாவட்டத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். பின்னர் ஹங்கேரி நாட்டு அரசர் புனித ஸ்டீபனின் மகன் வெனிஸ் நகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, அவருக்கும், படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். ஹங்கேரி நாட்டில் கிறிஸ்தவம் வளர்வதற்கு அந்நாட்டு அரசர் புனித ஸ்டீபனிற்கும் பெரும் உதவியாளராக இருந்தார்.
இவர் ஹங்கேரியில் மலைப்பகுதியில் செல்லும்போது, அவர் சென்ற இரு சக்கர வண்டி கீழே சரிந்ததில், மலை உச்சியிலிருந்து விழுந்துள்ளார். அவர் கீழே பாதாளத்தில் விழுந்ததும் இறந்துவிட்டார் போல காணப்பட்டார். ஆனால் அவரின் உடலில் சிறிதும் அடிபடாமல் தன் கைகளை கூப்பி, தான் இறப்பதற்காக செபித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இவர் இறந்தப்பிறகு அம்மலையானது கில்லர்ட் ஹில் (Gillert Hill) என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இவர் இறக்கும் வரை வெனிஸ் மற்றும் ஹங்கேரி நாட்டு மக்களுக்காக பெரிதும் உழைத்து மறைப்பணியை ஆற்றியுள்ளார்.
செபம்:
அருள் பொழியும் அருள்நாதரே! உமது சிறந்த போதகராக மறைப்பணியாளராம் புனித ஜெரார்டை நீர் திருச்சபைக்கு தந்தீர். தனது நலன்களினாலும், போதனையாலும் இடைவிடா இறைவேண்டலினாலும், எங்கள் வாழ்வில் எங்களுக்கு அவர் துணையாய் இருக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 24
புனித ஜெரார்ட் சார்கிரேடோ
St. Gerard Sargredo
நினைவுத் திருநாள்: செப்டம்பர் 24
பிறப்பு : 980
இறப்பு : 24 செப்டம்பர் 1046
புனிதர்பட்டம் : 1083, திருத்தந்தை 7 ஆம் கிரகோரி
பாதுகாவல் : ஹங்கேரி, புடாபெஸ்ட் நாடு
இவர் கசானாட் (Csanad) என்ற மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். வெனிஸ் நகர் ஆயர் ஹங்கேரி நாட்டு அரசருக்கு பலவிதங்களில் உதவினார். அதனால் புனித ஜெரார்ட் வெனிஸ் நகர ஆயருக்கு மறைமாவட்டத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். பின்னர் ஹங்கேரி நாட்டு அரசர் புனித ஸ்டீபனின் மகன் வெனிஸ் நகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, அவருக்கும், படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். ஹங்கேரி நாட்டில் கிறிஸ்தவம் வளர்வதற்கு அந்நாட்டு அரசர் புனித ஸ்டீபனிற்கும் பெரும் உதவியாளராக இருந்தார்.
இவர் ஹங்கேரியில் மலைப்பகுதியில் செல்லும்போது, அவர் சென்ற இரு சக்கர வண்டி கீழே சரிந்ததில், மலை உச்சியிலிருந்து விழுந்துள்ளார். அவர் கீழே பாதாளத்தில் விழுந்ததும் இறந்துவிட்டார் போல காணப்பட்டார். ஆனால் அவரின் உடலில் சிறிதும் அடிபடாமல் தன் கைகளை கூப்பி, தான் இறப்பதற்காக செபித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இவர் இறந்தப்பிறகு அம்மலையானது கில்லர்ட் ஹில் (Gillert Hill) என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இவர் இறக்கும் வரை வெனிஸ் மற்றும் ஹங்கேரி நாட்டு மக்களுக்காக பெரிதும் உழைத்து மறைப்பணியை ஆற்றியுள்ளார்.
செபம்:
அருள் பொழியும் அருள்நாதரே! உமது சிறந்த போதகராக மறைப்பணியாளராம் புனித ஜெரார்டை நீர் திருச்சபைக்கு தந்தீர். தனது நலன்களினாலும், போதனையாலும் இடைவிடா இறைவேண்டலினாலும், எங்கள் வாழ்வில் எங்களுக்கு அவர் துணையாய் இருக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித ஜியோன்னா ஆல்பர்ட் St. Albert of Geona
பிறப்பு
1149,பார்மா (Parma), இத்தாலி
இறப்பு
1215,பாலஸ்தீனா
பாதுகாவல்: கார்மேல் சபை
ஆல்பர்ட் ஓர் உன்னத குடும்பத்தில் பிறந்தார்.திருச்சிலுவை(Holy Cross) என்ற சபையில்குருவானார். 1184 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிலுள்ள பிப்பியோ (Bibbio) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1205 ஆம் ஆண்டு எருசலேமில் உள்ள கிறிஸ்துவ மக்களின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அம்மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்தார். அந்நாட்டில் கிறிஸ்துவ மக்கள் அரசரின் கீழ் அடிமைகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். 1187 ஆம் ஆண்டு பேரரசரிடமிருந்து அம்மக்களை விடுவித்து, விடுதலை வாழ்வை வழங்கினார்.அன்றிலிருந்து எருசலேம் கிறிஸ்துவர்கள் அமைதியாக வாழ்ந்தனர். சில ஆண்டுகளில் மீண்டும் அம்மக்கள் முஸ்லீம்களின் கையில்
அகப்பட்டனர். ஆல்பர்ட் அம்மக்களை மீண்டும் முஸ்லீம்களிடமிருந்து விடுவித்து சுதந்திரத்துடன் அமைதியாக வாழ
வழிவகுத்தார்.
பேரரசர் பிரடெரிக் பர்ப்ரோச்சா (Frederick Babbarossa) என்பவர் திருச்சபையில் கலகம் ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து ஆல்பர்ட், அரசனிடம் தொடர்பு கொண்டார். பேரரசருக்கும் திருத்தந்தை 2 ஆம் கிளமெண்ட்டிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரின் நடுவிலும் சமாதானப் புறாவாக ஆல்பர்ட் இருந்தார். பேரரசரை அன்பான, அமைதியான மனிதனாக மாற்றினார். ஆல்பர்ட் பிறகு தன் இருப்பிடத்தை அக்கோ Akko என்ற இடத்திற்கு மாற்றினார். அங்கு கார்மேல் என்றழைக்கப்பட்ட மலை ஒன்று இருந்தது. அம்மலையில் துறவற மடங்களைக் கட்டினார்.
துறவிகள் தனித்தனி குகைகளிலும், செல்களிலும் தங்கி செப வாழ்வில் ஈடுபட ஏற்பாடு செய்தார். 1209 ஆம் ஆண்டு துறவியர்கள் கடைபிடிக்க ஒழுங்குகளை எழுதினார். அவ்விதங்களின்படி, துறவிகளை வாழ ஊக்கமூட்டினார். கடுமையான விரதமிருந்து செபிக்க தூண்டினார். இறைச்சி உண்பதை குறைத்தார். அமைதியை கடைபிடித்து வாழ
வற்புறுத்தினார். மிக மிகக் கடுமையான ஒழுங்குகளை கடைபிடிக்க துறவிகளை தூண்டினார். 1254 ஆம் ஆண்டு திருத்தந்தை 4 ஆம் இன்னொசெண்ட் அவர்கள், இவர் எழுதிய ஒழுங்குகளை, கார்மேல் சபைத்துறவிகள் கடைபிடித்து வாழ, அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தார். பின்னர் ஆல்பர்ட் பாலஸ்தீனாவில் நடைபெற்ற லேடெரன் என்றழைக்கப்பட்ட பொது சங்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர், இவருக்கெதிராக சதித்திட்டங்களை தீட்டினர். அவர்களின் சதித்திட்டத்தால் அக்கூட்டத்திலேயே கொலை செய்யப்பட்டார். உயிருக்கு போராடியபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து வெளியேறியபின் புனித திருச்சிலுவை திருநாளன்று இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
விடுதலை அளிப்பவரே எம் கடவுளே! இன்றும் பாலஸ்தீனா நாட்டில், கிறிஸ்தவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை நீர் அறிவீர். அம்மக்களின் மனங்களை அறிந்து, நீர்தாமே விடுதலை அளித்து, அமைதியான வழியில் வாழ்க்கை நடத்த,
உமது அருளையும், ஆசீர்வாதங்களையும் நிறைவாக அம்மக்களுக்கு தந்து வழிநடத்தும்படியாக இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
Back to top
பிறப்பு
1149,பார்மா (Parma), இத்தாலி
இறப்பு
1215,பாலஸ்தீனா
பாதுகாவல்: கார்மேல் சபை
ஆல்பர்ட் ஓர் உன்னத குடும்பத்தில் பிறந்தார்.திருச்சிலுவை(Holy Cross) என்ற சபையில்குருவானார். 1184 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிலுள்ள பிப்பியோ (Bibbio) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1205 ஆம் ஆண்டு எருசலேமில் உள்ள கிறிஸ்துவ மக்களின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அம்மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்தார். அந்நாட்டில் கிறிஸ்துவ மக்கள் அரசரின் கீழ் அடிமைகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். 1187 ஆம் ஆண்டு பேரரசரிடமிருந்து அம்மக்களை விடுவித்து, விடுதலை வாழ்வை வழங்கினார்.அன்றிலிருந்து எருசலேம் கிறிஸ்துவர்கள் அமைதியாக வாழ்ந்தனர். சில ஆண்டுகளில் மீண்டும் அம்மக்கள் முஸ்லீம்களின் கையில்
அகப்பட்டனர். ஆல்பர்ட் அம்மக்களை மீண்டும் முஸ்லீம்களிடமிருந்து விடுவித்து சுதந்திரத்துடன் அமைதியாக வாழ
வழிவகுத்தார்.
பேரரசர் பிரடெரிக் பர்ப்ரோச்சா (Frederick Babbarossa) என்பவர் திருச்சபையில் கலகம் ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து ஆல்பர்ட், அரசனிடம் தொடர்பு கொண்டார். பேரரசருக்கும் திருத்தந்தை 2 ஆம் கிளமெண்ட்டிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரின் நடுவிலும் சமாதானப் புறாவாக ஆல்பர்ட் இருந்தார். பேரரசரை அன்பான, அமைதியான மனிதனாக மாற்றினார். ஆல்பர்ட் பிறகு தன் இருப்பிடத்தை அக்கோ Akko என்ற இடத்திற்கு மாற்றினார். அங்கு கார்மேல் என்றழைக்கப்பட்ட மலை ஒன்று இருந்தது. அம்மலையில் துறவற மடங்களைக் கட்டினார்.
துறவிகள் தனித்தனி குகைகளிலும், செல்களிலும் தங்கி செப வாழ்வில் ஈடுபட ஏற்பாடு செய்தார். 1209 ஆம் ஆண்டு துறவியர்கள் கடைபிடிக்க ஒழுங்குகளை எழுதினார். அவ்விதங்களின்படி, துறவிகளை வாழ ஊக்கமூட்டினார். கடுமையான விரதமிருந்து செபிக்க தூண்டினார். இறைச்சி உண்பதை குறைத்தார். அமைதியை கடைபிடித்து வாழ
வற்புறுத்தினார். மிக மிகக் கடுமையான ஒழுங்குகளை கடைபிடிக்க துறவிகளை தூண்டினார். 1254 ஆம் ஆண்டு திருத்தந்தை 4 ஆம் இன்னொசெண்ட் அவர்கள், இவர் எழுதிய ஒழுங்குகளை, கார்மேல் சபைத்துறவிகள் கடைபிடித்து வாழ, அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தார். பின்னர் ஆல்பர்ட் பாலஸ்தீனாவில் நடைபெற்ற லேடெரன் என்றழைக்கப்பட்ட பொது சங்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர், இவருக்கெதிராக சதித்திட்டங்களை தீட்டினர். அவர்களின் சதித்திட்டத்தால் அக்கூட்டத்திலேயே கொலை செய்யப்பட்டார். உயிருக்கு போராடியபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து வெளியேறியபின் புனித திருச்சிலுவை திருநாளன்று இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
விடுதலை அளிப்பவரே எம் கடவுளே! இன்றும் பாலஸ்தீனா நாட்டில், கிறிஸ்தவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை நீர் அறிவீர். அம்மக்களின் மனங்களை அறிந்து, நீர்தாமே விடுதலை அளித்து, அமைதியான வழியில் வாழ்க்கை நடத்த,
உமது அருளையும், ஆசீர்வாதங்களையும் நிறைவாக அம்மக்களுக்கு தந்து வழிநடத்தும்படியாக இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 26
புனித கோஸ்மாஸ், புனித தமியான்
(மறைசாட்சியர் & மருத்துவர்கள்)
St. Cosmas and St. Damian
நினைவுத் திருநாள் : செப்டம்பர் 26
பிறப்பு : 3 ஆம் நூற்றாண்டு, சிரியா
இறப்பு : 287, அகேயா, சிரியாவின் ரோமானிய மாநிலம்
பாதுகாவல் : அறுவை சிகிச்சை, மருத்துவர்கள், முடி திருத்துவோர், கால்நடை மருத்துவர்கள்
கோஸ்மாஸ், தமியான் இவர்கள் இருவரும் இரட்டைச் சகோதரர்கள். இருவரும் அறிவியலும், மருத்துவமும் பயின்றவர்கள். இவர்கள் பணி செய்தபோதும், மக்களை குணப்படுத்தியபோதும், சிறிதளவு பணம் கூட பெறாமல் பணியாற்றினர். சிலிசியாவிலுள்ள(Cilicia) எகாயா(Egaea) என்ற ஊரில் தொண்டாற்றும்போது, மக்களிடையே சிறப்பான பணியாற்றினர். அம்மக்களிடையே வாழ்வதில் இவர்கள் பெரும்மகிழ்ச்சியடைந்தனர். இவர்கள் இருவரும் ஆற்றிய சேவையினால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தனர். இதனால் பொறாமைக்கொண்ட தியோக்ளேசியன்(Diocletian) என்பவன் இருவரையும் பிடித்துச் சென்று துன்புறுத்தினான். பின்னர் சிலிசியா நாட்டு ஆளுநர் லிசியஸ்(Lysias) என்பவனிடம் இருவரையும் ஒப்படைத்தான். அங்கு அவன் இருவரையும் சிறையிலடைத்து, துன்புறுத்தி, இறுதியில் இருவரின் தலையையும் வெட்டி கொன்றான்.
இவர்களின் பெயரால் உரோமையில் பல ஆலயங்கள் உள்ளது. திருச்சபையில் இவர்களின் பெயரால் பல மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது மிகத் தொன்மை வாய்ந்த நினைவுக்குறிப்புகளில், இவர்களின் கல்லறை சிரியாவில் சைர் என்னுமிடத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. அங்கு இவர்களின் பெயரால் பேராலயமும் கட்டப்பட்டுள்ளது. இப்புனிதர்களின் பக்தி அங்கிருந்து உரோம் வந்தடைந்தது. பின்னர் தான் திருச்சபை முழுவதும் பரவியது என்றும் கூறப்படுகின்றது.
செபம்:
பரிவன்புமிக்க தந்தையே! புனித கோஸ்மாஸ், தமியான் என்றழைக்கப்படும் மறைசாட்சியரின் நினைவுநாளை கொண்டாடுவதின் வழியாக, உமது பேராற்றலை உணர்கின்றோம். உமது பராமரிப்பினால் அவர்களை மாட்சியில் உயர்த்தினீர். அவர்களது பாதுகாப்பு மிக்க இறைவேண்டல் எங்களுக்கு கிடைக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித கோஸ்மாஸ், புனித தமியான்
(மறைசாட்சியர் & மருத்துவர்கள்)
St. Cosmas and St. Damian
நினைவுத் திருநாள் : செப்டம்பர் 26
பிறப்பு : 3 ஆம் நூற்றாண்டு, சிரியா
இறப்பு : 287, அகேயா, சிரியாவின் ரோமானிய மாநிலம்
பாதுகாவல் : அறுவை சிகிச்சை, மருத்துவர்கள், முடி திருத்துவோர், கால்நடை மருத்துவர்கள்
கோஸ்மாஸ், தமியான் இவர்கள் இருவரும் இரட்டைச் சகோதரர்கள். இருவரும் அறிவியலும், மருத்துவமும் பயின்றவர்கள். இவர்கள் பணி செய்தபோதும், மக்களை குணப்படுத்தியபோதும், சிறிதளவு பணம் கூட பெறாமல் பணியாற்றினர். சிலிசியாவிலுள்ள(Cilicia) எகாயா(Egaea) என்ற ஊரில் தொண்டாற்றும்போது, மக்களிடையே சிறப்பான பணியாற்றினர். அம்மக்களிடையே வாழ்வதில் இவர்கள் பெரும்மகிழ்ச்சியடைந்தனர். இவர்கள் இருவரும் ஆற்றிய சேவையினால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தனர். இதனால் பொறாமைக்கொண்ட தியோக்ளேசியன்(Diocletian) என்பவன் இருவரையும் பிடித்துச் சென்று துன்புறுத்தினான். பின்னர் சிலிசியா நாட்டு ஆளுநர் லிசியஸ்(Lysias) என்பவனிடம் இருவரையும் ஒப்படைத்தான். அங்கு அவன் இருவரையும் சிறையிலடைத்து, துன்புறுத்தி, இறுதியில் இருவரின் தலையையும் வெட்டி கொன்றான்.
இவர்களின் பெயரால் உரோமையில் பல ஆலயங்கள் உள்ளது. திருச்சபையில் இவர்களின் பெயரால் பல மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது மிகத் தொன்மை வாய்ந்த நினைவுக்குறிப்புகளில், இவர்களின் கல்லறை சிரியாவில் சைர் என்னுமிடத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. அங்கு இவர்களின் பெயரால் பேராலயமும் கட்டப்பட்டுள்ளது. இப்புனிதர்களின் பக்தி அங்கிருந்து உரோம் வந்தடைந்தது. பின்னர் தான் திருச்சபை முழுவதும் பரவியது என்றும் கூறப்படுகின்றது.
செபம்:
பரிவன்புமிக்க தந்தையே! புனித கோஸ்மாஸ், தமியான் என்றழைக்கப்படும் மறைசாட்சியரின் நினைவுநாளை கொண்டாடுவதின் வழியாக, உமது பேராற்றலை உணர்கின்றோம். உமது பராமரிப்பினால் அவர்களை மாட்சியில் உயர்த்தினீர். அவர்களது பாதுகாப்பு மிக்க இறைவேண்டல் எங்களுக்கு கிடைக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
செப்டம்பர் 27
புனித வின்சென்ட் தே பவுல்
(ஒப்புரவாளர், சபை நிறுவனர்)
நினைவுத் திருநாள் : செப்டம்பர் 27
பிறப்பு : ஏப்ரல் 24, 1581, பாவ்ய், காஸ்கனி, பிரான்ஸ்
இறப்பு : செப்டம்பர் 27 1660(அகவை 79) பாரிஸ், பிரான்ஸ்
அருளாளர் பட்டம் : 13 ஆகஸ்ட் 1729, ரோம் (திருத்தந்தை 13ம் பெனடிக்ட்)
புனிதர் பட்டம் : 16 ஜூன் 1737, ரோம் (திருத்தந்தை 12ம் கிளமென்ட்)
பாதுகாவல் : தொண்டு நிறுவனங்கள்; மருத்துவமனைகள்; தொழுநோய்; சிறைக்கைதிகள்; புனித வின்சென்ட் தெ பவுல் சபைகள்; தன்னார்வலர்கள்
முக்கியத் திருத்தலங்கள் : புனித வின்சென்ட் தெ பவுல் சிற்றாலயம், ர்யூ டி செவ்ரெஸ், பாரிஸ், பிரான்ஸ்
புனித வின்சென்ட் தே பவுல் (24 ஏப்ரல் 1581 – 27 செப்டம்பர் 1660) கத்தோலிக்க திருச்சபையில் வாழ்ந்த, ஏழைகளுக்கு தொண்டு செய்யத் தன்னையே அர்ப்பணித்த ஒரு குரு ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையிலும்,ஆங்கிலிக்க ஒன்றியத்திலும் புனிதராக போற்றப்படுகிறார். இவருக்கு 1737ல் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
வாழ்க்கை குறிப்பு
புனித வின்சென்ட் பிரான்ஸ் நாட்டில் காஸ்கனியின் பாவ்ய் பகுதியில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.
பிரான்சின், டாக்சில் கலை இலக்கியப் படிப்பையும், தவ்லோசில் இறையியல் படிப்பையும் முடித்து, 1600ஆம் ஆண்டு கத்தோலிக்க குருவானார். அதன் பிறகும், சிறிது காலம் தவ்லோசிலேயே தங்கி இருந்தார். 1605ல், மார்செய்ல் பகுதிக்கு திரும்பும் வழியில் துருக்கிய கடற்கொள்ளையரால் பிடித்துச்செல்லப்பட்டு, துனீசியாவின் டுனிஸ் பகுதியில் அடிமையாக விற்கப்பட்டார். தனது உரிமையாளரை கிறிஸ்தவராக மனந்திருப்பிய பிறகு, 1607ல் அங்கிருந்து தப்பித்தார்.
பிரான்சுக்கு திரும்பியதும், வின்சென்ட் ரோமுக்கு பயணம் மேற்கொண்டு, தனது படிப்பைத் தொடர்ந்தார். 1609ல், அரசர் 4ஆம் ஹென்றிக்கு பணி செய்ய பிரான்ஸ் அனுப்பப்பட்டார்; அங்கு அவர் மார்கரெட் டி வலோயிசின் குருவாக பணியாற்றினார். சிறிது காலம் க்ளிச்சியின் பங்கு குருவாக இருந்துவிட்டு, 1612 முதல் புகழ்பெற்ற கான்டி குடும்பத்துக்கு குருவாக பணியாற்றினார். இவர் டி கான்டி சீமாட்டியின் ஒப்புரவாளராகவும், ஆன்ம இயக்குனராகவும் இருந்தார்; மேலும் அந்த சீமாட்டியின் உதவியோடு, பண்ணையில் பணிபுரிந்த விவசாயிகளுக்கு இயேசுவைப் பற்றி போதித்தார்.
1622ல், வின்சென்ட் தே பவுல் போர் கப்பலில் குருவாக நியமிக்கப்பட்டார்; அங்கு இவர் போர் கைதிகளுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.
1625ஆம் ஆண்டு, வின்சென்ட் மறைப்பணி சபை என்ற துறவற சபையை நிறுவினர்; மறைபரப்பு பணியை மேற்கொள்ளும் இச்சபையின் குருக்கள் பொதுவாக வின்சென்டியர்கள் அல்லது லாசரிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். 1633ல் லூயிஸ் தே மரிலாக்கின் வழிகாட்டுதலோடு,பிறரன்பு புதல்விகள் என்ற பெண்களுக்கான துறவற சபையை இவர் நிறுவினார். இவர் ஜான்செனிச பேதகத்திற்கு எதிராகவும் போராடினார். (பேதகம் என்பதற்கு தவறான கிறிஸ்தவ போதனை என்பது பொருள்).
பிறரன்பு பணிகளில் அதிக ஆர்வம் காட்டிய வின்சென்ட் தே பவுல், 1660 செப்டம்பர் 27ந்தேதி மரணம் அடைந்தார். இவரது தே பவுலின் கருணை, பணிவு, தாராள குணம் ஆகியவை அவருக்கு புகழைத் தேடித் தந்திருக்கின்றன.
வணக்கம்
1705ல், வின்சென்ட் தே பவுலின் புனிதர் பட்டமளிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, வின்சென்ட்டியர்களின் தலைவர் கோரிக்கை விடுத்தார். 13 ஆகஸ்ட் 1729 அன்று, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் வின்சென்ட்டுக்கு முத்திப்பேறு (அருளாளர்) பட்டம் வழங்கினார். 16 ஜூன் 1737 அன்று, திருத்தந்தை 13ம் கிளமென்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
வின்சென்ட் தே பவுல் இறந்த 52 ஆண்டுகளுக்கு பிறகு, 1712ல் முதன்முறை அவரது கல்லறை தோண்டப்பட்டபோது, அவருடைய உடல் முழுவதும் அழியாமல் இருந்தது. ஆனால் 1737ல் புனிதர் பட்டத்திற்காக இவரது கல்லறை மீண்டும் தோண்டப்பட்டபோது, சில எலும்புகளும் இதயமும் மட்டுமே அழியாமல் கிடைத்தன.
பாரிசில் வின்சென்ட்டியர்களின் தலைமையகச் சிற்றாலயத்தில் உள்ள, புனித வின்சென்ட் தே பவுலின் மெழுகு உருவத்தின் உள்ளே அவரது எலும்புகள் வைக்கப்பட்டுள்ளன. பாரிசில் உள்ள பிறரன்பு புதல்விகளின் தலைமை இல்லத்தில் இருக்கும் திருப்பண்டப் பேழையில் வின்சென்ட் தே பவுலின் இதயம் வைக்கப்பட்டுள்ளது.
1737ல், இவரது விழா நாளாக ஜூலை 19ந்தேதி குறிக்கப்பட்டு ரோமன் நாள்காட்டியில் இணைக்கப்பட்டது.1885ல்,திருத்தந்தை 13ம் லியோ இவரை பிறரன்பு சகோதரிகளின் பாதுகாவலராக அறிவித்தார். இவர் பிறரன்பு சகோதரர்களின் பாதுகாவலராகவும்இருக்கிறார். திருத்தந்தை 6ம் பவுல் புனித வின்சென்ட் தே பவுலின் விழாவை செப்டம்பர் 27ந்தேதிக்கு மாற்றினார்.
சிறப்புகள்
• 1833ல், அருளாளர் ஃப்ரடெரிக் ஓசானம் இவரது பெயரால், ஏழைகளுக்கு உதவி செய்யும் பிறரன்பு அமைப்பாக புனித வின்சென்ட் தே பவுல் சபையை நிறுவினார். இந்த சபை இன்று 132 நாடுகளில் உள்ளது.
• புனித வின்சென்ட் தே பவுலின் வரலாற்றை மையப்படுத்தி, 1947ல் பைரே ஃப்ரெஸ்னே என்பவர் மான்சியர் வின்சென்ட் என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
Back to top
செப்டம்பர் 28
புனித லொரென்சோ
இவர் முதல் பிலிப்பினோ மறைசாட்சி மற்றும் புனிதர் ஆவார் . ஒரு மகளும் ,இரு மகன்களும் கொண்ட பொதுநிலை கத்தோலிக்கராக இருந்தார் .மணிலாவில் 1600 களின் துவக்கத்தில் பிறந்த இவர் ,அங்கிருந்த ஒரு தொமினிக்கன் பள்ளியில் பயின்றார் . பிநோண்டோ தேவாலயத்தில் பீடச் சிறுவனாகவும் , பின்னர் உபதேசியாராகவும் பணி புரிந்தார் . செபமாலை மாதா சபையின் உறுப்பினராகவும் இருந்தார் . அலுவலக மற்றும் சொந்த பயன்பாட்டுக்கென உருவாக்கப்படும் ஆவணங்களில் அழகிய கையெழுத்து எழுதும் எழுத்தராக பணிபுரிந்தார் . அவர் வாழ்ந்த காலகட்டங்களில் மெத்தப் படித்த ,அதிகத் திறமையுள்ளவர்களே இப்பணியைச் செய்தனர்.1636 ம் ஆண்டில் இவர் ஒரு குற்றப்பழியைச் சுமக்க நேரிட்டது . இவர் குற்றமுள்ளவரா , இல்லையா என்பது தெளிவாக்க முடியாததால் ஜப்பானுக்கு புலம் பெயர்ந்தார் .அங்கு கத்தோலிக்கர்கள் பெருமளவில் வதைபட்டனர். இவரும் இவரது நண்பர்களும் பலவேறு இன்னல்களுக்கு ஆளாயினர் . கத்தோலிக்க மதத்தை விட்டு வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இவர்களோ மறுத்து விட்டனர் .தனக்கு ஆயிரம் உயிர்கள் இருந்தாலும் அத்தனையையும் கடவுளுக்கு அர்பணிக்க தான் தயாராக இருப்பதாக இவர் கூறினார் . இறுதியாக தூக்கிலே தொங்க விடப்பட்டு இரு நாட்கள் மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் வதைபட்டு மரித்தார் . இவரது உடல் எரிக்கப்பட்டு அஸ்தி கடலிலே கரைக்கப்பட்டது . இவருக்கும் இவரோடு மரித்த 15 பேருக்கும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1981 இல் முத்திப்பேறு பட்டம் அளித்தார் . மீண்டும் 1987ல் புனிதர் பட்டம் அளித்தார்.
Back to top
புனித லொரென்சோ
இவர் முதல் பிலிப்பினோ மறைசாட்சி மற்றும் புனிதர் ஆவார் . ஒரு மகளும் ,இரு மகன்களும் கொண்ட பொதுநிலை கத்தோலிக்கராக இருந்தார் .மணிலாவில் 1600 களின் துவக்கத்தில் பிறந்த இவர் ,அங்கிருந்த ஒரு தொமினிக்கன் பள்ளியில் பயின்றார் . பிநோண்டோ தேவாலயத்தில் பீடச் சிறுவனாகவும் , பின்னர் உபதேசியாராகவும் பணி புரிந்தார் . செபமாலை மாதா சபையின் உறுப்பினராகவும் இருந்தார் . அலுவலக மற்றும் சொந்த பயன்பாட்டுக்கென உருவாக்கப்படும் ஆவணங்களில் அழகிய கையெழுத்து எழுதும் எழுத்தராக பணிபுரிந்தார் . அவர் வாழ்ந்த காலகட்டங்களில் மெத்தப் படித்த ,அதிகத் திறமையுள்ளவர்களே இப்பணியைச் செய்தனர்.1636 ம் ஆண்டில் இவர் ஒரு குற்றப்பழியைச் சுமக்க நேரிட்டது . இவர் குற்றமுள்ளவரா , இல்லையா என்பது தெளிவாக்க முடியாததால் ஜப்பானுக்கு புலம் பெயர்ந்தார் .அங்கு கத்தோலிக்கர்கள் பெருமளவில் வதைபட்டனர். இவரும் இவரது நண்பர்களும் பலவேறு இன்னல்களுக்கு ஆளாயினர் . கத்தோலிக்க மதத்தை விட்டு வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இவர்களோ மறுத்து விட்டனர் .தனக்கு ஆயிரம் உயிர்கள் இருந்தாலும் அத்தனையையும் கடவுளுக்கு அர்பணிக்க தான் தயாராக இருப்பதாக இவர் கூறினார் . இறுதியாக தூக்கிலே தொங்க விடப்பட்டு இரு நாட்கள் மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் வதைபட்டு மரித்தார் . இவரது உடல் எரிக்கப்பட்டு அஸ்தி கடலிலே கரைக்கப்பட்டது . இவருக்கும் இவரோடு மரித்த 15 பேருக்கும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1981 இல் முத்திப்பேறு பட்டம் அளித்தார் . மீண்டும் 1987ல் புனிதர் பட்டம் அளித்தார்.
Back to top
செப்டம்பர் 29
அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல்
திருவிழா : செப்டம்பர் 29
புனித மிக்கேல்
பாதுகாவல்: திவ்விய நற்கருணை, திருத்தந்தையரின் காவல் தூதர்
மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளுக்கு நிகர் யார்?" என்பது பொருள். விண்ணகத்தில் இறைதூதர்களின் நடுவே பிரச்சனைகள் ஏற்பட்டபோது, புனித மிக்கேல் தூதரின் தலைமையில் கடவுளுக்கு நிகர் யார் என்று கூறி குழப்பம் செய்த லூசிபர் சாத்தானையும் அதன் தோழர்களையும் நெருப்பில் தள்ளினார். நோயாளிகள், அதிதூதர் மிக்கேலின் பெயரைக் கூறி செபித்தால், நோய் நீங்கும் என்றும் ஆதிகாலத்திலிருந்து கூறப்படுகின்றது. மனிதர்கள் இறந்ததும், அவர்களின் ஆன்மாவை சாத்தானிடமிருந்து விடுவித்து, தனித்தீர்வைக்கு இறைவனிடம் கொண்டு சேர்ப்பதை, தன் வேலையாக கொண்டு செயல்பட்டார் மிக்கேல்.
புனித கபிரியேல்:
இவரின் பெயருக்கு எபிரேய மொழியில் "கடவுளின் ஆற்றல் அல்லது கடவுளின் செய்தி" என்பது பொருள். கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழுபேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான். தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும், அவரின் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர். இஸ்லாமியர்கள் இவரை தேவதூதர்களின் தலைவர்களாகக் கருதுகின்றனர். இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும்,வெற்றியையும் முன்னறிவித்தார். இவர் மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தியை இன்று திருச்சபை மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது.
புனித இரபேல்
பாதுகாவல்: நோயாளிகள், பயணிகள்
எபிரேய மொழியில் கூறப்படும் இவரின் பெயரின் பொருள் "கடவுள் குணமளிக்கின்றார்" என்பது. இவரும் இறைவனின் முக்கிய தூதர்கல் எழுவரில் ஒருவர். இவர் கடவுளிடம் பரிந்துப்பேசி குணமளிக்கிறவராக இருக்கின்றார். நீண்ட பயணங்களிலும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கின்றார்
செபம்:
வான் படைகளின் ஆண்டவராகிய கடவுளே! வானத்தூதருக்கும், மானிடருக்கும், அவரவருக்குரிய பணிகளை ஞானமிகு முறையில் திட்டமிட்டருனீர். விண்ணகத்தில் உம்மை வழிபடும் இவர்கள், மண்ணகத்தில் எங்கள் வாழ்வை பாதுகாத்திட அருள்புரியும்.
Back to top
அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல்
திருவிழா : செப்டம்பர் 29
புனித மிக்கேல்
பாதுகாவல்: திவ்விய நற்கருணை, திருத்தந்தையரின் காவல் தூதர்
மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளுக்கு நிகர் யார்?" என்பது பொருள். விண்ணகத்தில் இறைதூதர்களின் நடுவே பிரச்சனைகள் ஏற்பட்டபோது, புனித மிக்கேல் தூதரின் தலைமையில் கடவுளுக்கு நிகர் யார் என்று கூறி குழப்பம் செய்த லூசிபர் சாத்தானையும் அதன் தோழர்களையும் நெருப்பில் தள்ளினார். நோயாளிகள், அதிதூதர் மிக்கேலின் பெயரைக் கூறி செபித்தால், நோய் நீங்கும் என்றும் ஆதிகாலத்திலிருந்து கூறப்படுகின்றது. மனிதர்கள் இறந்ததும், அவர்களின் ஆன்மாவை சாத்தானிடமிருந்து விடுவித்து, தனித்தீர்வைக்கு இறைவனிடம் கொண்டு சேர்ப்பதை, தன் வேலையாக கொண்டு செயல்பட்டார் மிக்கேல்.
புனித கபிரியேல்:
இவரின் பெயருக்கு எபிரேய மொழியில் "கடவுளின் ஆற்றல் அல்லது கடவுளின் செய்தி" என்பது பொருள். கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழுபேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான். தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும், அவரின் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர். இஸ்லாமியர்கள் இவரை தேவதூதர்களின் தலைவர்களாகக் கருதுகின்றனர். இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும்,வெற்றியையும் முன்னறிவித்தார். இவர் மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தியை இன்று திருச்சபை மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது.
புனித இரபேல்
பாதுகாவல்: நோயாளிகள், பயணிகள்
எபிரேய மொழியில் கூறப்படும் இவரின் பெயரின் பொருள் "கடவுள் குணமளிக்கின்றார்" என்பது. இவரும் இறைவனின் முக்கிய தூதர்கல் எழுவரில் ஒருவர். இவர் கடவுளிடம் பரிந்துப்பேசி குணமளிக்கிறவராக இருக்கின்றார். நீண்ட பயணங்களிலும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கின்றார்
செபம்:
வான் படைகளின் ஆண்டவராகிய கடவுளே! வானத்தூதருக்கும், மானிடருக்கும், அவரவருக்குரிய பணிகளை ஞானமிகு முறையில் திட்டமிட்டருனீர். விண்ணகத்தில் உம்மை வழிபடும் இவர்கள், மண்ணகத்தில் எங்கள் வாழ்வை பாதுகாத்திட அருள்புரியும்.
Back to top
செப்டம்பர் 30
புனித ஹிரோனிமூஸ் (ஜெரோம்) மறைவல்லுநர்
St. Jerome
நினைவுத்திருநாள்: செப்டம்பர் 30
பிறப்பு : 347, ஸ்டீரிடன்(Stridon), டல்மாத்தியா(Dalmatia) குரோசியா
இறப்பு : 30 செப்டம்பர் 419 / 420, பெத்லஹேம், பாலஸ்தீனா
பாதுகாவல் : விவிலிய அறிஞர்கள், நூலகர்கள், மொழிப்பெயர்ப்பாளர்கள்
ஹிரோனிமூஸின் தந்தை ஓர் கிறிஸ்துவர். இவரை ரோம் நகருக்கு அனுப்பி, இவரின் தந்தை ஜெரோமை படிக்கவைத்தார். இவர் இலக்கணத்தை நன்றாக கற்றார். லத்தீன் மொழியையும், கிரேக்க மொழியையும் சரளமாக கற்றுத் தேர்ந்தார். அம்மொழியிலேயே பல நூல்களை படித்தார். ஜெரோம் 360 ஆம் ஆண்டு திருத்தந்தை லிபேரியஸ்(Liberius) என்பவரிடம் திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்தவராக மாறினார். இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், தவறாமல் தன் நண்பர்களுடன், மறைசாட்சியர்கள் மற்றும் திருத்தந்தையர்களின் கல்லறையும் சந்தித்து, செபித்து வந்தார். அருங்காட்சியகங்களுக்கு சென்று, அவர்களின் வரலாற்றை வாசித்தார்.
மூன்று ஆண்டுகள் வரலாற்றைப் படித்து அதில் ஆராய்ச்சி மேற்கொண்டார். பின்னர் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, அக்குயிலா(Aquileia) என்ற நாட்டிற்கும் மற்றும் பல அயல்நாடுகளுக்கும் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின்னர் தன் நண்பர் போனோசாஸுடன்(Bonosus) சேர்ந்து, டிரேவஸ்(Treves) நகரிலிருந்த ஒரு துறவற சபையை சந்தித்து, அச்சபையில் தங்கி, மீண்டும் தன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அப்போது அத்துறவிகளின் வாழ்வு இவரை கவரவே, தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணிக்க எண்ணினார். அதன்பிறகு கத்தோலிக்க் நூலகம் ஒன்றை நிறுவினார். அப்போது புனித ஹிலாரியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் ஒன்று இவருக்கு கிடைத்தது. அப்புத்தகத்தை படித்தபின் இவர் மீண்டும் தனது சொந்த ஊரான ஸ்டீரிடன்னிற்குதிரும்பினார்.
அங்கு சில நாட்கல் மாணவர்களுடன் தங்கியிருந்தார். அம்மாணவர்களுக்கு கல்லூரியில் கற்றுக்கொடுத்தார். பின்னர் 373 ஆம் ஆண்டு ஏதென்ஸ், பித்தினியா, கலாத்தியா, பொந்து, கப்பதோக்கியா மற்றும் சிலிசியா என்ற நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கல்லூரிகளில் கற்றுக்கொடுத்தார். பின்னர் அந்தியோக்கியா சென்று மறையுரை ஆற்றினார். இம்மறையுரை மிகவும் புகழ்பெற்றது.
ஜெரோம் அந்தியோக்கிவிலேயே தங்கி மறைப்பணியை செய்தார். அப்போது உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டார். பாலைநிலத்தின் வெப்பம் இவரால் தாங்க முடியவில்லை. இருப்பினும் இறைவேண்டல் செய்து, மீண்டும் நல்ல உடல் நலம் பெற்றார். ஜெரோம் 380 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோபிஸ் சென்று, அங்கு விவிலியத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின்னர் பல புத்தகங்களை எழுதி, கிறிஸ்தவ வாழ்வையும், மறைபரப்பு பணியையும் செய்தார். சிறப்பான பணியை செய்த ஜெரோம் மீண்டும் நோய்வாய்ப்பட்டுஇறந்து போனார்.
செபம்:
என்றும் வாழ்பவரே எம் கடவுளே! பல மொழிகளை கற்றுத்தேர்ந்து, விவிலியத்தில் பல ஆராய்ச்சிகளை செய்த புனித ஜெரோமை எம் திருச்சபைக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம். உமது ஞானத்தையும், அறிவையும் அவருக்கு வழங்கி உம் பணியை இவ்வுலகில் மேன்மைபடுத்தினீர். நாங்களும் தூய ஆவியிடமிருந்து பாதுகாப்பை பெற்று ஞானத்தில் சிறந்து என்றும் உமது போதனைகளின்படி வாழ எமக்கு உதவியருளும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top