- வணக்க மாதம்
- ஜெபமாலை அன்னை
- நாள் 1-5
முதல் நாள் :
ஜெபமாலையினால் யாவருக்கும் பயன்
செபமாலை சொல்லுவது முதன் முதல் குருக்களுக்குப் பெரிய பயன் . செபமாலை அவர்களுக்கு வெண் ரோஜா மலர் . அர்ச். லூயிஸ் மோராத்பர்ட் குருக்களுக்குச் சொல்லுகிறார் : "இறைவனுடைய சத்தியங்களையும் , நற்செய்தியையும் எல்லாச் சாதி சனங்களுக்கும் போதிக்கிறவர்களே, உங்கள் பல புத்தகங்களோடு செபமாளைப் புத்தகத்தையும் வெண் ரோஜா மலரைப் போல் காப்பாற்றுங்கள் . அதில் உள்ள சத்தியங்கள் யாவரும் கண்டு பிடிக்கும் தெளிவான முறையில் கூறப்பட்டிருக்கின்றன . அவைகளை உங்கள் உள்ளத்தில் பதனப்படுத்தி , நீங்களே செபமாலை செய்து அதன் கனியைச் சுவைத்து ருசி பாருங்கள் . அவைகள் உங்கள் உதடுகளில் இருக்கட்டும் .செபமாலைப் பக்தியின் மேன்மையை யாவருக்கும் கற்றுக் கொடுப்பதினால் அவர்களை மனந்திருப்புவீர்கள்
பெரும் பாவிகளையும் வேத விரோதிகளையும் மனந்திருப்பும் பெரும் ஆயுதமாகக் கடவுள் அதை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார் . இவ்வுலகில் தேவ அருளையும் , மறு உலகில் மோட்ச மகிமையையும் அதில் பொதிந்து வைத்திருக்கிறார் . புனிதர்களும் பாப்புமார்களும் இப்பக்தியைக் கொண்டாடினார்கள் . எந்த ஆத்தும குருவானவருக்கு இதன் இரகசியத்தைப் பரிசுத்த ஆவி வெளியிடுவாரோ , அக்குரு பெரும் பாக்கியவான் . அவரே தினந்தோறும் அதைச் செபித்து மற்றவர்களையும் தூண்டி விடுவார் . அவர் பேசுவது எளிய மொழியானாலும் மற்ற குருக்கள் பல ஆண்டுகளில் செய்து முடிக்கும் நன்மையை அவர் ஒரு மாதத்தில் செய்து முடிப்பார்
பாவிகளுக்கு அந்த புனிதர் சொல்லுவது :" செபமாலை உங்களுக்குச் சிவந்த ரோஜா மலர் . ஏனெனில் நமதாண்டவரின் விலையுயர்ந்த இரத்தம் அதன் மேல் விழுந்தது . உங்கள் வாழ்க்கையில் அது சுகந்த பரிமளத்தைக் கொண்டு வருவதாக . விசேஷமாய் நீங்கள் விழப்போகும் ஆபத்தின் குழியிலிருந்து உங்களை அது காப்பாற்றுவதாக . " ரோஜா மலரால் (இன்ப சுகத்தால் ) நம்மைச் சூடிக் கொள்ளுவாமாக " என்று ஒவ்வொரு நாளும் அவிசுவாசிகளும் மனம் மாறாப் பாவிகளும் ஆரவாரம் செய்கின்றனர் . நாம் சொல்ல வேண்டியதென்ன ? " பரிசுத்த செபமாலையின் ரோஜா மலர்களை நாம் சூடுவோமாக "
நம்முடைய ரோஜா மலர்களுக்கும் அவர்கள் ரோஜா மலர் என்று கருதுபவைக்கும் என்ன பார தூர வித்தியாசம் ! அவர்களுடைய மலர்கள் உடலின்பம் , உலக மகிமை , உடைந்த ஓட்டுக்கு நிகரான செல்வம். வெகு சீக்கிரம் அவை உதிர்ந்து போகும் , அழிந்து போகும் . நாம் சொல்லும் 'பரலோகத்திலிருக்கிற ' , 'அருள் நிறைந்த மரியே ' என்னும் ரோஜா மலர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பின்னும் அழியா . பாவிகளின் பார்வைக்கு ரோஜா மலர்களாய்த் தோன்றுபவைகள் கூறிய முட்கள் ; மனவேக்காட்டினால் அவர்கள் உள்ளத்தைக் குத்தும் . மரண நேரத்தில் அவநம்பிக்கை என்னும் அக்கினி அம்புகளால் எய்யும் ; நித்தியத்திற்கும் வாதையைப் பெருக்கும்.
ஆதலால் நாம் 153 மணிச் செபமாலையை கூடுமானால் ஒவ்வொரு நாளும் சொல்லுவோமாக ! அவைகள் மூன்று ஆரங்கள் ; மனித அவதாரத்தின் போது இயேசு தரித்த வரப்பிரசாதத்தின் ஆரம்; பாடுகள் சமயத்தில் அணிந்த முள்முடி , மோட்சத்தில் சூடிய மகிமையின் முடி . செபமாலை சொல்வதால் நமக்கும் மூன்று ஆரம் . வாழ்நாளில் பேறு பலன்களில் மாலை , மரண நேரத்தில் சமாதானத்தின் மாலை , மூன்றாவது மோட்சத்தின் மகிமையின் மாலை
மரணமட்டும் பிரமாணிக்கமாய் செபமாலை சொல்லி வருவாயேயாகில் சாபத்தின் சரிந்த கரையில் உன் பாதம் வழுக்கி நின்றாலும் , நரகத்தில் ஒரு கால் வைத்திட்டாலும் , சில மந்திரவாதிகளைப் போல் உன் ஆத்துமத்தைப் பேய்க்கு விற்று விட்டாலும் , சாத்தானைப் போல் நீ பிடிவாதமுள்ள வேத விரோதியாய் இருந்தாலும் , மனஸ்தாபத்திற்காக, உண்மையை அறிவதற்காக நீ ஜெபமாலையைப் பிரமாநிக்கமாய்ச் செய்து வந்திருப்பாயேயாகில் ஒரு நாளும் கெடாத மகிமையின் கிரீடம் உனக்குக் கிடைக்கும் என்று உறுதிமொழி கூறுகிறேன்
பக்திமான்களே, நீங்கள் வேறெந்தப் பக்தி முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் செபமாலைப் பக்தியையும் கைப்பற்றுங்கள் . செபமாலை உங்களுக்கு ஞான ரோஜா மலர் . உங்கள் ஆத்துமமாகிய பூங்காவில் இந்த நறுமண மலர்ச் செடியை வளருங்கள் . இந்த ஞான ரோஜா மலர்ச் செடி வாழ்விலும் , மரணத்திலும் மகிமையிலும் இயேசுவும் மரியுமாகும் . இச்செடியின் குளிர்ந்த பச்சை இலைகள் சந்தோசத் தேவ இரகசியங்கள் . மனம் வீசி மலர்ந்த மலர்கள் மகிமைத் தேவ இரகசியங்கள் . மொட்டுக்கள் சேசுவினுடையவும் மரியாவினுடையவும் குழந்தைப் பருவம் . அலர்ந்த மலர்கள் அவர்கள் பாடுகளைக் காண்பிக்கின்றன . முழுதும் மலர்ந்து விரிந்த மலர் அவர்களுடைய வெற்றியும் மகிமையுமாம் . இச்செடி வளர்ந்து பெரிய மரமாகும் . ஆகாயத்து பட்சிகள் அங்கு அடைக்கலம் புகும் ; எல்லாப் புண்ணியங்களும் அங்கு குடிகொள்ளும் . பறவைகள் பழங்களை அருந்துவது போல் அப்புண்ணியங்களும் அருந்தும் . எக்கனியை? சேசுவென்னும் மகிமைக்குரிய கனியை
செபம்
ஓ மரியே , அமலோற்பவ கன்னிகையே , செபமாலை இராக்கினியே , உமது வரப்பிரசாத நிறைவில் என்னை வைத்துக் காத்தருளும் . என் அற்ப வாழ்வை ஆட்கொண்டு இறைவனுடைய சித்தத்தின் செல்வப் பாதையில் நடத்தியருளும் . என் பாவங்களுக்கெல்லாம் பாவப் பொறுத்தலைப் பெற்றுத் தாரும் . எனக்கு அன்பின் அடைக்கலமாகவும் , ஆதரவாகவும் , அகலா வழித்துணையாகவும் கேடயமாகவும் திகழ்வீராக . சோதனை சமயத்தில் எனக்கு ஆறுதல் அளித்து , எல்லா ஆபத்திநின்றும் என்னைப் பத்திரமாகப் பாதுகாத்தருளும் . நானோ பலவீனன் , ஏமாந்தவன் . எல்லாவிதப் பாவத்தையும் , அசமந்தத்தையும் , கோழைத்தனத்தையும் , முகத்தாட்சண்யத்தையும் என்னைவிட்டு தூரத்திலே நிறுத்தியருளும். அகங்காரம் , தற்பெருமை , சுயசிநேகம் , உலகப்பற்று முதலியவற்றிலிருந்து என்னைக் காப்பாற்றும் . என் பலவீனத்தினாலும் , குற்றங்களினாலும் இறைவனுடைய கோபத்ஹைச் சம்பாதித்துக் கொண்டேன் . என்னை உம்முடைய உள்ளம் வைத்து காத்துப் புண்ணியத்தில் வளரச் செய்யும் . நானும் செபமாலை இராக்கினியே , தினந்தோறும் தவறாமல் ஜெபமாலை சொலி உம் தயவைப் புகழ்வேன். ஆமென்
சரிதை
தென் அமெரிக்காவில் பாராகுவே என்ற ஒரு மாகாணம் உண்டு.
சேசு சபைக்குருக்கள் அந்நாட்டு மக்களுக்கு வேதத்தைப் போதித்ததுமல்லாமல்
சமூக சேவையில் ஈடுபட்டு அவர்கள் தோட்டம் துரவுகளைப் பண்படுத்தி
வியாபாரத்தை விருத்தி செய்து இவ்வுலகில் முதலாய் அந்நாட்டு மக்கள் கண்ணியமாய் வாழ
வழி வகுத்தனர்.
அங்கு ஓர் ஊரில் அக்காளும் தங்கையுமான இரு சிறுமிகள் தங்கள் வீட்டிற்கு முன்
முழந்தாளில் இருந்து வெகு பக்தியாய்ச் செபமாலை செய்தனர்.
திடீரென ஒரு சோதிச் சுந்தரவதி அங்கு தோன்றி ஏழு வயதுள்ள தங்கையை
தன்னோடு எங்கோ அழைத்துச் சென்று விட்டாள் . மூத்தவள் தங்கையை எங்கும் காணாமல் அழுது கொண்டு
பெற்றோரிடம் சங்கதியைச் சொன்னாள் . அவர்கள் மூன்று நாள் தேடியும் குழந்தை அகப்படவில்லை . மூன்றாம் நாள்
மாலை சிரித்த முகத்தோடு முன் கதவண்டை காணாமல் போனவள் தோன்றினாள். அவர்கள் ஜெபமாலையைச்
சொல்லி போற்றி வந்த மாதரசி அழகிய பூங்கா ஒன்றுக்குத் தன்னை அழைத்துச் சென்று மகா ருசியான பண்டங்களையும்
பழங்களையும் தனக்குக் கொடுத்ததாகச் சொன்னாள் . மேலும் ஒரு அழகிய அருமையான ஆண் குழந்தையை அவளுடைய
மடியில் அம்மாதரசி வைத்ததாகவும் , அவர் மேல் தான் முத்தமாரி பொழிந்ததாகவும் கூறினாள். பெற்றோர் புதிதாய்
மனந்திரும்பியவர்கள் . தங்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்து ஞானஸ்நானம் கொடுத்த இயேசுசபைக்
குருவானவரிடம் இவ்வரலாற்றைச் சொன்னார்கள் . செபமாலையைத் தினமும் சொல்வதனால் வரும் மோட்ச இன்பமும்
, இறைவனுடைய கிருபைகளும் மகாப் பெரிதென அக்குருவானவர் அவர்களிடம் சொல்லி செபமாலைப் பக்தியை
ஊக்குவித்தார்
ஜெபமாலையினால் யாவருக்கும் பயன்
செபமாலை சொல்லுவது முதன் முதல் குருக்களுக்குப் பெரிய பயன் . செபமாலை அவர்களுக்கு வெண் ரோஜா மலர் . அர்ச். லூயிஸ் மோராத்பர்ட் குருக்களுக்குச் சொல்லுகிறார் : "இறைவனுடைய சத்தியங்களையும் , நற்செய்தியையும் எல்லாச் சாதி சனங்களுக்கும் போதிக்கிறவர்களே, உங்கள் பல புத்தகங்களோடு செபமாளைப் புத்தகத்தையும் வெண் ரோஜா மலரைப் போல் காப்பாற்றுங்கள் . அதில் உள்ள சத்தியங்கள் யாவரும் கண்டு பிடிக்கும் தெளிவான முறையில் கூறப்பட்டிருக்கின்றன . அவைகளை உங்கள் உள்ளத்தில் பதனப்படுத்தி , நீங்களே செபமாலை செய்து அதன் கனியைச் சுவைத்து ருசி பாருங்கள் . அவைகள் உங்கள் உதடுகளில் இருக்கட்டும் .செபமாலைப் பக்தியின் மேன்மையை யாவருக்கும் கற்றுக் கொடுப்பதினால் அவர்களை மனந்திருப்புவீர்கள்
பெரும் பாவிகளையும் வேத விரோதிகளையும் மனந்திருப்பும் பெரும் ஆயுதமாகக் கடவுள் அதை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார் . இவ்வுலகில் தேவ அருளையும் , மறு உலகில் மோட்ச மகிமையையும் அதில் பொதிந்து வைத்திருக்கிறார் . புனிதர்களும் பாப்புமார்களும் இப்பக்தியைக் கொண்டாடினார்கள் . எந்த ஆத்தும குருவானவருக்கு இதன் இரகசியத்தைப் பரிசுத்த ஆவி வெளியிடுவாரோ , அக்குரு பெரும் பாக்கியவான் . அவரே தினந்தோறும் அதைச் செபித்து மற்றவர்களையும் தூண்டி விடுவார் . அவர் பேசுவது எளிய மொழியானாலும் மற்ற குருக்கள் பல ஆண்டுகளில் செய்து முடிக்கும் நன்மையை அவர் ஒரு மாதத்தில் செய்து முடிப்பார்
பாவிகளுக்கு அந்த புனிதர் சொல்லுவது :" செபமாலை உங்களுக்குச் சிவந்த ரோஜா மலர் . ஏனெனில் நமதாண்டவரின் விலையுயர்ந்த இரத்தம் அதன் மேல் விழுந்தது . உங்கள் வாழ்க்கையில் அது சுகந்த பரிமளத்தைக் கொண்டு வருவதாக . விசேஷமாய் நீங்கள் விழப்போகும் ஆபத்தின் குழியிலிருந்து உங்களை அது காப்பாற்றுவதாக . " ரோஜா மலரால் (இன்ப சுகத்தால் ) நம்மைச் சூடிக் கொள்ளுவாமாக " என்று ஒவ்வொரு நாளும் அவிசுவாசிகளும் மனம் மாறாப் பாவிகளும் ஆரவாரம் செய்கின்றனர் . நாம் சொல்ல வேண்டியதென்ன ? " பரிசுத்த செபமாலையின் ரோஜா மலர்களை நாம் சூடுவோமாக "
நம்முடைய ரோஜா மலர்களுக்கும் அவர்கள் ரோஜா மலர் என்று கருதுபவைக்கும் என்ன பார தூர வித்தியாசம் ! அவர்களுடைய மலர்கள் உடலின்பம் , உலக மகிமை , உடைந்த ஓட்டுக்கு நிகரான செல்வம். வெகு சீக்கிரம் அவை உதிர்ந்து போகும் , அழிந்து போகும் . நாம் சொல்லும் 'பரலோகத்திலிருக்கிற ' , 'அருள் நிறைந்த மரியே ' என்னும் ரோஜா மலர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பின்னும் அழியா . பாவிகளின் பார்வைக்கு ரோஜா மலர்களாய்த் தோன்றுபவைகள் கூறிய முட்கள் ; மனவேக்காட்டினால் அவர்கள் உள்ளத்தைக் குத்தும் . மரண நேரத்தில் அவநம்பிக்கை என்னும் அக்கினி அம்புகளால் எய்யும் ; நித்தியத்திற்கும் வாதையைப் பெருக்கும்.
ஆதலால் நாம் 153 மணிச் செபமாலையை கூடுமானால் ஒவ்வொரு நாளும் சொல்லுவோமாக ! அவைகள் மூன்று ஆரங்கள் ; மனித அவதாரத்தின் போது இயேசு தரித்த வரப்பிரசாதத்தின் ஆரம்; பாடுகள் சமயத்தில் அணிந்த முள்முடி , மோட்சத்தில் சூடிய மகிமையின் முடி . செபமாலை சொல்வதால் நமக்கும் மூன்று ஆரம் . வாழ்நாளில் பேறு பலன்களில் மாலை , மரண நேரத்தில் சமாதானத்தின் மாலை , மூன்றாவது மோட்சத்தின் மகிமையின் மாலை
மரணமட்டும் பிரமாணிக்கமாய் செபமாலை சொல்லி வருவாயேயாகில் சாபத்தின் சரிந்த கரையில் உன் பாதம் வழுக்கி நின்றாலும் , நரகத்தில் ஒரு கால் வைத்திட்டாலும் , சில மந்திரவாதிகளைப் போல் உன் ஆத்துமத்தைப் பேய்க்கு விற்று விட்டாலும் , சாத்தானைப் போல் நீ பிடிவாதமுள்ள வேத விரோதியாய் இருந்தாலும் , மனஸ்தாபத்திற்காக, உண்மையை அறிவதற்காக நீ ஜெபமாலையைப் பிரமாநிக்கமாய்ச் செய்து வந்திருப்பாயேயாகில் ஒரு நாளும் கெடாத மகிமையின் கிரீடம் உனக்குக் கிடைக்கும் என்று உறுதிமொழி கூறுகிறேன்
பக்திமான்களே, நீங்கள் வேறெந்தப் பக்தி முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் செபமாலைப் பக்தியையும் கைப்பற்றுங்கள் . செபமாலை உங்களுக்கு ஞான ரோஜா மலர் . உங்கள் ஆத்துமமாகிய பூங்காவில் இந்த நறுமண மலர்ச் செடியை வளருங்கள் . இந்த ஞான ரோஜா மலர்ச் செடி வாழ்விலும் , மரணத்திலும் மகிமையிலும் இயேசுவும் மரியுமாகும் . இச்செடியின் குளிர்ந்த பச்சை இலைகள் சந்தோசத் தேவ இரகசியங்கள் . மனம் வீசி மலர்ந்த மலர்கள் மகிமைத் தேவ இரகசியங்கள் . மொட்டுக்கள் சேசுவினுடையவும் மரியாவினுடையவும் குழந்தைப் பருவம் . அலர்ந்த மலர்கள் அவர்கள் பாடுகளைக் காண்பிக்கின்றன . முழுதும் மலர்ந்து விரிந்த மலர் அவர்களுடைய வெற்றியும் மகிமையுமாம் . இச்செடி வளர்ந்து பெரிய மரமாகும் . ஆகாயத்து பட்சிகள் அங்கு அடைக்கலம் புகும் ; எல்லாப் புண்ணியங்களும் அங்கு குடிகொள்ளும் . பறவைகள் பழங்களை அருந்துவது போல் அப்புண்ணியங்களும் அருந்தும் . எக்கனியை? சேசுவென்னும் மகிமைக்குரிய கனியை
செபம்
ஓ மரியே , அமலோற்பவ கன்னிகையே , செபமாலை இராக்கினியே , உமது வரப்பிரசாத நிறைவில் என்னை வைத்துக் காத்தருளும் . என் அற்ப வாழ்வை ஆட்கொண்டு இறைவனுடைய சித்தத்தின் செல்வப் பாதையில் நடத்தியருளும் . என் பாவங்களுக்கெல்லாம் பாவப் பொறுத்தலைப் பெற்றுத் தாரும் . எனக்கு அன்பின் அடைக்கலமாகவும் , ஆதரவாகவும் , அகலா வழித்துணையாகவும் கேடயமாகவும் திகழ்வீராக . சோதனை சமயத்தில் எனக்கு ஆறுதல் அளித்து , எல்லா ஆபத்திநின்றும் என்னைப் பத்திரமாகப் பாதுகாத்தருளும் . நானோ பலவீனன் , ஏமாந்தவன் . எல்லாவிதப் பாவத்தையும் , அசமந்தத்தையும் , கோழைத்தனத்தையும் , முகத்தாட்சண்யத்தையும் என்னைவிட்டு தூரத்திலே நிறுத்தியருளும். அகங்காரம் , தற்பெருமை , சுயசிநேகம் , உலகப்பற்று முதலியவற்றிலிருந்து என்னைக் காப்பாற்றும் . என் பலவீனத்தினாலும் , குற்றங்களினாலும் இறைவனுடைய கோபத்ஹைச் சம்பாதித்துக் கொண்டேன் . என்னை உம்முடைய உள்ளம் வைத்து காத்துப் புண்ணியத்தில் வளரச் செய்யும் . நானும் செபமாலை இராக்கினியே , தினந்தோறும் தவறாமல் ஜெபமாலை சொலி உம் தயவைப் புகழ்வேன். ஆமென்
சரிதை
தென் அமெரிக்காவில் பாராகுவே என்ற ஒரு மாகாணம் உண்டு.
சேசு சபைக்குருக்கள் அந்நாட்டு மக்களுக்கு வேதத்தைப் போதித்ததுமல்லாமல்
சமூக சேவையில் ஈடுபட்டு அவர்கள் தோட்டம் துரவுகளைப் பண்படுத்தி
வியாபாரத்தை விருத்தி செய்து இவ்வுலகில் முதலாய் அந்நாட்டு மக்கள் கண்ணியமாய் வாழ
வழி வகுத்தனர்.
அங்கு ஓர் ஊரில் அக்காளும் தங்கையுமான இரு சிறுமிகள் தங்கள் வீட்டிற்கு முன்
முழந்தாளில் இருந்து வெகு பக்தியாய்ச் செபமாலை செய்தனர்.
திடீரென ஒரு சோதிச் சுந்தரவதி அங்கு தோன்றி ஏழு வயதுள்ள தங்கையை
தன்னோடு எங்கோ அழைத்துச் சென்று விட்டாள் . மூத்தவள் தங்கையை எங்கும் காணாமல் அழுது கொண்டு
பெற்றோரிடம் சங்கதியைச் சொன்னாள் . அவர்கள் மூன்று நாள் தேடியும் குழந்தை அகப்படவில்லை . மூன்றாம் நாள்
மாலை சிரித்த முகத்தோடு முன் கதவண்டை காணாமல் போனவள் தோன்றினாள். அவர்கள் ஜெபமாலையைச்
சொல்லி போற்றி வந்த மாதரசி அழகிய பூங்கா ஒன்றுக்குத் தன்னை அழைத்துச் சென்று மகா ருசியான பண்டங்களையும்
பழங்களையும் தனக்குக் கொடுத்ததாகச் சொன்னாள் . மேலும் ஒரு அழகிய அருமையான ஆண் குழந்தையை அவளுடைய
மடியில் அம்மாதரசி வைத்ததாகவும் , அவர் மேல் தான் முத்தமாரி பொழிந்ததாகவும் கூறினாள். பெற்றோர் புதிதாய்
மனந்திரும்பியவர்கள் . தங்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்து ஞானஸ்நானம் கொடுத்த இயேசுசபைக்
குருவானவரிடம் இவ்வரலாற்றைச் சொன்னார்கள் . செபமாலையைத் தினமும் சொல்வதனால் வரும் மோட்ச இன்பமும்
, இறைவனுடைய கிருபைகளும் மகாப் பெரிதென அக்குருவானவர் அவர்களிடம் சொல்லி செபமாலைப் பக்தியை
ஊக்குவித்தார்
இரண்டாம் நாள்
செபமாலையின் வரலாறு
12 ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே ஜெபமாலை சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருந்தது .ஆனால் இந்நாளில் ஜெபிக்கும் முறையே அந்த நாட்களிலும் வழங்கியது என்று எண்ணலாகாது . ஜெபமாலை என்றும் அதற்குப் பெயரில்லை . மரியின் சங்கீத மாலை என்று வழங்கப்பட்டது . குருக்கள் பாடும் 150 சங்கீதங்களைச் சங்கீத மாலை என்று பாடினர். அதைப் பின்பற்றித்தான் மரியின் சங்கீத மாலை வந்தது . 150 முறை அருள் நிறைந்த ஜெபத்தைச் சொல்லி வந்தனர் . மேலும் ஒவ்வொரு சங்கீதத்திலும் உள்ள இரண்டொரு வார்த்தைகளையோ , எண்ணங்களையோ புகுத்தி செய்யுள் அமைத்து தாயைப் புகழ்ந்தனர் .ஓர் உதாரணம்
கன்னியரின் கன்னியும் நிகரற்ற தாயுமானவளே
ஆண்மகன் உதவியின்றி அருங்கரித்தவளே
தேவனின் சட்டத்தை தினம்தினம் தியானிக்கச் செய்யும்
தேவனின் அரசின் மகிமையில் ஆனந்திக்கச் செய்யும்
இதில் மூன்றாம் அடி சங்கீதத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது . இதே போல் தேவ தாய்க்கு 150 கண்ணி கொண்ட மாலை தொகுத்தனர்
ஆனால் பொதுவில் வழங்கியது 'அருள் நிறைந்த மரியே ' என்னும் ஜெபத்தை , ஐம்பது ஐம்பதாக மும்முறை சொல்வதாம். .அருள் நிறைந்த மரியே என்ற ஜெபம் இன்றையைப் போல் அன்று அவ்வளவு பூர்த்தியானதல்ல
சங்கீதங்கள் இறைவனுக்கு தோத்திரப்பாக்கள், அது போல் இச்செபம் மாமரிக்குத் தோத்திரப்பாக்கள் .
13ஆம் நூற்றாண்டிலிருந்த ஒரு துறவி சொல்லுவார் " நாம் மரியன்னைக்கு வந்தனை செலுத்துவோமேயாகில் , அவர் பதில் வந்தனை செலுத்தத் தெரியாத கிராமத்தாள் அல்ல . மரியின் வந்தனையைக் கேட்டவுடன் எலிசபெத் இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பப்பட்டாள். மாமரி சொல்லும் வந்தனையால் நாமும் வரப்பிரசாதத்தால் பூரிக்கும்படி மாமரிக்கு அடிக்கடி வந்தனை செய்வோமாக"
."மாமரி சொல்லும் வந்தனைக்கு என்ன வல்லமை ! அது நமக்கு ஆனந்தத்தை அளிக்கும். பரிசுத்த ஆவியைக் கொடுக்கும். இறைவனுடைய இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தும். தீர்க்கதரிசன வரத்தை நமக்குக் கொண்டு வரும்" என்றார் வேறொரு துறவி
"அருள் நிறைந்த " ஜெபம் தேவதாய்க்கு தோத்திரம் என்பதோடு கூட ,அதனால் வரும் நன்மைகளைக் காண்பித்து அடிக்கடி இந்தத் தோத்திர கீதத்தைப் பாடும்படி மக்களை அத்துறவிகள் தூண்டிப்போயிருக்கின்றனர்.
பலமுறை ஒன்றைச் செய்வோமேயாகில் ,சொல்வோமேயாகில் அதைக் கணக்கில் வைக்க வேண்டாமா ? அதற்காக முதன்முதல் சிறு சிறு கூழாங்கற்களை உபயோகித்தனர் . பின்னர் சில உதிரிக் கொட்டைகளை உதவிக் கொண்டனர். அதன்பின் அக்கொட்டைகளை சிறு கயிறுகளாலோ கம்பிகளாலோ கோர்த்தனர் . முதலில் ஐம்பது ஐம்பதாகக் கோர்த்துக் கொண்டனர் . இப்பூவுலகில் தேவதாய் 63 வருடங்கள் இருந்ததாக ஒரு ஐதீகம் இருந்து வருவதால் 63 மணிகள் கோர்த்த சரடுகள் பல இடங்களில் இருந்து வந்தன
ஒவ்வொரு பத்துக்கும் இடையில் 'கர்த்தர் கற்பித்த ஜெபம் ' சொல்லும் வழக்கம் கிடையாது . 17ஆம் நூற்றாண்டின் முடிவில் முதலாய்ச் சிலர் அச்செபத்தைச் சொன்னாலும் அதைச் சொல்லும் சம்பிரதாயம் வழக்கில் இல்லை . பத்துப் பத்தாய்ப் பிரித்துக் காட்ட என்ன செய்தனர் ? ஆதியில் ஒவ்வொரு சங்கீத முடிவில் என்ன செய்தனரோ அதைச் செய்தனர் . அதாவது தலை குனிந்தனர் ; மார்பைத் தட்டினர் . ஒற்றை முழந்தாளில் நின்று எழுந்தனர் . அல்லது இரட்டை முழந்தாளிட்டனர் . சிலர் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து எழுந்தனர் . திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே மூவின ஜெபம் வழக்கத்தில் இருந்து வந்தது . மெய் , மொழி, மனம் . கரங்களைக் குவித்தல் , குவித்துத் தூக்குதல் , சிலுவையைப் போல் கரத்தை விரித்தல் , முழந்தாளில் இருத்தல் , நெடுஞ்சாண்கிடையாய்க் கிடத்தல் ஆகியனவாம் . இவை பல மதங்களிலும் வழக்கத்தில் உள்ளன
செபம்
செபமாலை மாதாவே , கல்வாரியில் என்னை உம் பிள்ளையாக ஏற்று எனக்காக நீர் கண்ணீர் சிந்தினதை நினைத்தருளும். தேவ நீதியிலிருந்து என்னைக் காப்பாற்ற இதுவரை நீர் எடுத்துக் கொண்ட கவலைகளையும் நினைவு கூரும். உமது பிள்ளைக்கு இவ்வளவு செய்தபின் அவனைக் கைவிட்டு விடமாட்டீர் . இவ்வெண்ணத்தால் நம்பிக்கை கொண்டு எனது குற்றங்களையும், நன்றி கெட்டத் தனத்தையும் கண்டு அஞ்சாமல் உம் பாதத்தண்டை சாஷ்டாங்கமாய் விழுகிறேன் . என் விண்ணப்பத்தைத் தள்ளிவிடாதேயும் . செபமாலையை நான் பக்தியாய்ச் சொல்லவும் , சேசுவை எல்லாவற்றையும்விட அதிகமாய் நேசிக்கவும் , பரிசுத்த வாழ்க்கையால் உம்மை மகிழ்விக்கவும் ஒரு நாள் நான் உம்மை மோட்சத்தில் காணவும் கிருபை செய்யும் செபமாலை இராக்கினியே ஆமென்
சரிதை
அர்ச். சாமிநாதர் பிரான்ஸ் தேசத்தில் போதித்துக் கொண்டிருந்தார் . ஆல்பிஜென்சியர் என்று சில வேத விரோதிகள் சத்திய திருச்சபைக்கு இக்கட்டாக இருந்தனர். இதற்குக் காரணம் மனிதர்களுடைய பாவாக்கிரமங்கள் என்று உணர்ந்தார் . தூலூஸ் பட்டணத்துக்கு அருகில் உள்ள காட்டில் சென்று மூன்று பகலும் மூன்று இரவும் செபத்தில் ஆழ்ந்தார் . கண்ணீர் சிந்தி அழுதார் . இறைவனுடைய கோபத்தை அமர்த்தக் கடுந்தவங்களைப் புரிந்தார் . ஓயாமல் தன்னை அடித்துக் கொண்டமையால் உடல் எல்லாம் புண்ணாகி மயங்கி விழுந்தார்
அந்நேரம் மூன்று சம்மனசுக்களோடு தேவதாய் அவருக்கு தரிசனையாகி "பிரிய தோமினிக், உலகத்தை மணந்திருப்ப பரம திரித்துவம் , நீ எச்சாதனத்தைக் கையாள வேண்டும் என்று ஆசிக்கிறார் என்பதை நீ அறிவாயா ? இப்போரில் எல்லா விக்கினங்களையும் தகர்த்தெறியும் இயந்திரம் மரியாயின் சங்கீத மாலை , ஆதலால் இக்கல்நெஞ்சரைக் கரை சேர்க்க வேண்டுமேயாகில் என் ஜெபமாலையைப் பற்றிப் போதித்து வா " என்றார்
சாமிநாதர் எழுந்தார் . மக்களைத் திருப்ப மனம் வெந்தார், நேரே மேற்றிராசனக் கோயிலுக்குச் சென்றார் . கண்ணுக்குத் தோன்றாத வானதூதர் மணிகளை அடித்தனர் . அனல் கக்கும் ஆவலோடு பிரசங்கத்தைத் துவங்கினார் .பிரசங்கத் துவக்கத்தில் சண்டமாருதம் ; தரை நடுங்கியது ; சூரியன் தெரியவில்லை ; கட கடவென இடி ; பளீர் பளீரென மின்னல் , யாவருக்கும் பயம் . அச்சமயம் படத்தில் உள்ள தேவதாய் மோட்சத்தின் ஆக்கினையை அழைத்தது போல தம் கரங்களை மேலே உயர்த்தினார் .யாவருக்கும் நடுக்கம் . செபமாலைப் பக்தியை யாவருக்கும் விளக்கவே இந்த அடையாளங்கள் போலும். சாமிநாதர் வேண்டுதலின் மேல் பேய்ப்புயல் அமர்ந்தது . உற்சாகமாய்ப் பிரசங்கத்தைத் தொடர்ந்து நடத்தினார் . வெகு சொற்ப நாளில் தூலூஸ் நகர மக்கள் தங்கள் பாவ வழியை விட்டு அக்கிரம அசத்தியங்களை அகற்றித் தள்ளி மெய்யான பாதை சேர்ந்தனர் . புண்ணிய சீவியம் மறுபடி தழைத்தோங்கியது
செபமாலையின் வரலாறு
12 ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே ஜெபமாலை சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருந்தது .ஆனால் இந்நாளில் ஜெபிக்கும் முறையே அந்த நாட்களிலும் வழங்கியது என்று எண்ணலாகாது . ஜெபமாலை என்றும் அதற்குப் பெயரில்லை . மரியின் சங்கீத மாலை என்று வழங்கப்பட்டது . குருக்கள் பாடும் 150 சங்கீதங்களைச் சங்கீத மாலை என்று பாடினர். அதைப் பின்பற்றித்தான் மரியின் சங்கீத மாலை வந்தது . 150 முறை அருள் நிறைந்த ஜெபத்தைச் சொல்லி வந்தனர் . மேலும் ஒவ்வொரு சங்கீதத்திலும் உள்ள இரண்டொரு வார்த்தைகளையோ , எண்ணங்களையோ புகுத்தி செய்யுள் அமைத்து தாயைப் புகழ்ந்தனர் .ஓர் உதாரணம்
கன்னியரின் கன்னியும் நிகரற்ற தாயுமானவளே
ஆண்மகன் உதவியின்றி அருங்கரித்தவளே
தேவனின் சட்டத்தை தினம்தினம் தியானிக்கச் செய்யும்
தேவனின் அரசின் மகிமையில் ஆனந்திக்கச் செய்யும்
இதில் மூன்றாம் அடி சங்கீதத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது . இதே போல் தேவ தாய்க்கு 150 கண்ணி கொண்ட மாலை தொகுத்தனர்
ஆனால் பொதுவில் வழங்கியது 'அருள் நிறைந்த மரியே ' என்னும் ஜெபத்தை , ஐம்பது ஐம்பதாக மும்முறை சொல்வதாம். .அருள் நிறைந்த மரியே என்ற ஜெபம் இன்றையைப் போல் அன்று அவ்வளவு பூர்த்தியானதல்ல
சங்கீதங்கள் இறைவனுக்கு தோத்திரப்பாக்கள், அது போல் இச்செபம் மாமரிக்குத் தோத்திரப்பாக்கள் .
13ஆம் நூற்றாண்டிலிருந்த ஒரு துறவி சொல்லுவார் " நாம் மரியன்னைக்கு வந்தனை செலுத்துவோமேயாகில் , அவர் பதில் வந்தனை செலுத்தத் தெரியாத கிராமத்தாள் அல்ல . மரியின் வந்தனையைக் கேட்டவுடன் எலிசபெத் இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பப்பட்டாள். மாமரி சொல்லும் வந்தனையால் நாமும் வரப்பிரசாதத்தால் பூரிக்கும்படி மாமரிக்கு அடிக்கடி வந்தனை செய்வோமாக"
."மாமரி சொல்லும் வந்தனைக்கு என்ன வல்லமை ! அது நமக்கு ஆனந்தத்தை அளிக்கும். பரிசுத்த ஆவியைக் கொடுக்கும். இறைவனுடைய இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தும். தீர்க்கதரிசன வரத்தை நமக்குக் கொண்டு வரும்" என்றார் வேறொரு துறவி
"அருள் நிறைந்த " ஜெபம் தேவதாய்க்கு தோத்திரம் என்பதோடு கூட ,அதனால் வரும் நன்மைகளைக் காண்பித்து அடிக்கடி இந்தத் தோத்திர கீதத்தைப் பாடும்படி மக்களை அத்துறவிகள் தூண்டிப்போயிருக்கின்றனர்.
பலமுறை ஒன்றைச் செய்வோமேயாகில் ,சொல்வோமேயாகில் அதைக் கணக்கில் வைக்க வேண்டாமா ? அதற்காக முதன்முதல் சிறு சிறு கூழாங்கற்களை உபயோகித்தனர் . பின்னர் சில உதிரிக் கொட்டைகளை உதவிக் கொண்டனர். அதன்பின் அக்கொட்டைகளை சிறு கயிறுகளாலோ கம்பிகளாலோ கோர்த்தனர் . முதலில் ஐம்பது ஐம்பதாகக் கோர்த்துக் கொண்டனர் . இப்பூவுலகில் தேவதாய் 63 வருடங்கள் இருந்ததாக ஒரு ஐதீகம் இருந்து வருவதால் 63 மணிகள் கோர்த்த சரடுகள் பல இடங்களில் இருந்து வந்தன
ஒவ்வொரு பத்துக்கும் இடையில் 'கர்த்தர் கற்பித்த ஜெபம் ' சொல்லும் வழக்கம் கிடையாது . 17ஆம் நூற்றாண்டின் முடிவில் முதலாய்ச் சிலர் அச்செபத்தைச் சொன்னாலும் அதைச் சொல்லும் சம்பிரதாயம் வழக்கில் இல்லை . பத்துப் பத்தாய்ப் பிரித்துக் காட்ட என்ன செய்தனர் ? ஆதியில் ஒவ்வொரு சங்கீத முடிவில் என்ன செய்தனரோ அதைச் செய்தனர் . அதாவது தலை குனிந்தனர் ; மார்பைத் தட்டினர் . ஒற்றை முழந்தாளில் நின்று எழுந்தனர் . அல்லது இரட்டை முழந்தாளிட்டனர் . சிலர் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து எழுந்தனர் . திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே மூவின ஜெபம் வழக்கத்தில் இருந்து வந்தது . மெய் , மொழி, மனம் . கரங்களைக் குவித்தல் , குவித்துத் தூக்குதல் , சிலுவையைப் போல் கரத்தை விரித்தல் , முழந்தாளில் இருத்தல் , நெடுஞ்சாண்கிடையாய்க் கிடத்தல் ஆகியனவாம் . இவை பல மதங்களிலும் வழக்கத்தில் உள்ளன
செபம்
செபமாலை மாதாவே , கல்வாரியில் என்னை உம் பிள்ளையாக ஏற்று எனக்காக நீர் கண்ணீர் சிந்தினதை நினைத்தருளும். தேவ நீதியிலிருந்து என்னைக் காப்பாற்ற இதுவரை நீர் எடுத்துக் கொண்ட கவலைகளையும் நினைவு கூரும். உமது பிள்ளைக்கு இவ்வளவு செய்தபின் அவனைக் கைவிட்டு விடமாட்டீர் . இவ்வெண்ணத்தால் நம்பிக்கை கொண்டு எனது குற்றங்களையும், நன்றி கெட்டத் தனத்தையும் கண்டு அஞ்சாமல் உம் பாதத்தண்டை சாஷ்டாங்கமாய் விழுகிறேன் . என் விண்ணப்பத்தைத் தள்ளிவிடாதேயும் . செபமாலையை நான் பக்தியாய்ச் சொல்லவும் , சேசுவை எல்லாவற்றையும்விட அதிகமாய் நேசிக்கவும் , பரிசுத்த வாழ்க்கையால் உம்மை மகிழ்விக்கவும் ஒரு நாள் நான் உம்மை மோட்சத்தில் காணவும் கிருபை செய்யும் செபமாலை இராக்கினியே ஆமென்
சரிதை
அர்ச். சாமிநாதர் பிரான்ஸ் தேசத்தில் போதித்துக் கொண்டிருந்தார் . ஆல்பிஜென்சியர் என்று சில வேத விரோதிகள் சத்திய திருச்சபைக்கு இக்கட்டாக இருந்தனர். இதற்குக் காரணம் மனிதர்களுடைய பாவாக்கிரமங்கள் என்று உணர்ந்தார் . தூலூஸ் பட்டணத்துக்கு அருகில் உள்ள காட்டில் சென்று மூன்று பகலும் மூன்று இரவும் செபத்தில் ஆழ்ந்தார் . கண்ணீர் சிந்தி அழுதார் . இறைவனுடைய கோபத்தை அமர்த்தக் கடுந்தவங்களைப் புரிந்தார் . ஓயாமல் தன்னை அடித்துக் கொண்டமையால் உடல் எல்லாம் புண்ணாகி மயங்கி விழுந்தார்
அந்நேரம் மூன்று சம்மனசுக்களோடு தேவதாய் அவருக்கு தரிசனையாகி "பிரிய தோமினிக், உலகத்தை மணந்திருப்ப பரம திரித்துவம் , நீ எச்சாதனத்தைக் கையாள வேண்டும் என்று ஆசிக்கிறார் என்பதை நீ அறிவாயா ? இப்போரில் எல்லா விக்கினங்களையும் தகர்த்தெறியும் இயந்திரம் மரியாயின் சங்கீத மாலை , ஆதலால் இக்கல்நெஞ்சரைக் கரை சேர்க்க வேண்டுமேயாகில் என் ஜெபமாலையைப் பற்றிப் போதித்து வா " என்றார்
சாமிநாதர் எழுந்தார் . மக்களைத் திருப்ப மனம் வெந்தார், நேரே மேற்றிராசனக் கோயிலுக்குச் சென்றார் . கண்ணுக்குத் தோன்றாத வானதூதர் மணிகளை அடித்தனர் . அனல் கக்கும் ஆவலோடு பிரசங்கத்தைத் துவங்கினார் .பிரசங்கத் துவக்கத்தில் சண்டமாருதம் ; தரை நடுங்கியது ; சூரியன் தெரியவில்லை ; கட கடவென இடி ; பளீர் பளீரென மின்னல் , யாவருக்கும் பயம் . அச்சமயம் படத்தில் உள்ள தேவதாய் மோட்சத்தின் ஆக்கினையை அழைத்தது போல தம் கரங்களை மேலே உயர்த்தினார் .யாவருக்கும் நடுக்கம் . செபமாலைப் பக்தியை யாவருக்கும் விளக்கவே இந்த அடையாளங்கள் போலும். சாமிநாதர் வேண்டுதலின் மேல் பேய்ப்புயல் அமர்ந்தது . உற்சாகமாய்ப் பிரசங்கத்தைத் தொடர்ந்து நடத்தினார் . வெகு சொற்ப நாளில் தூலூஸ் நகர மக்கள் தங்கள் பாவ வழியை விட்டு அக்கிரம அசத்தியங்களை அகற்றித் தள்ளி மெய்யான பாதை சேர்ந்தனர் . புண்ணிய சீவியம் மறுபடி தழைத்தோங்கியது
மூன்றாம் நாள்
செபமாலையின் வரலாறு
பத்து பத்தாகக் குறிப்பதற்கு உடல் ஜெபத்தை முன் காலத்தில் உபயோகித்தனர் என்று சொல்லப்பட்டது . வாய்ச் செபம் எனில் உதடுகளை அசைத்து உச்சரித்துச் சொல்லும் ஜெபம் . உரத்த சத்தமாகச் சொன்னாலும் சரி எவருக்கும் கேட்காவண்ணம் நமக்கு மட்டும் புரியும்படி உதட்டை அசைத்துச் சொன்னாலும் சரி , அது வாய்ச் செபம் . இவ்விதம் ஏற்கனவே மனப்பாடம் செய்திருந்த செபத்தைத் சொன்னாலும் ,அப்போதைக்கப்போது மனத்தில் எழுவதை உச்சரித்தாலும் அது வாய்ச் செபம் . ஒரு மடத்தில் உள்ள துறவிகள் கூடி சங்கீத மாலையைப் பாடுவது வாய்ச் செபம். தற்காலத்தில் செபமாலைக்கு அளித்திருக்கும் பலன்களை அடைய வேண்டுமானால் மற்றவர்களோடு சேர்ந்தோ தனித்தோ மந்திரங்களை வாய்ச் செபமாகச் சொல்வது அவசியம்
பத்து மணி வாய்ச் செப முடிவைக் குறிக்க முதல் துவக்கத்தில் உடல் ஜெபத்தை வழங்கினர் என்று கண்டோம்.பின்னர் ஒவ்வொரு பத்துக்கும் இடையில் கர்த்தர் கற்பித்த ஜெபத்தைச் சொன்னார்கள்
"ரோஜாமலர் பூங்கா " என்று பொருள்படும் மேல்நாட்டு மொழிகளில் தற்சமயம் வழங்கும் ரோசரி என்னும் மொழி எக்காலத்தில் பெரிதும் வழங்கினது என்று தெரியவில்லை .இதைப் பற்றி மேல்நாட்டில் ஒரு சரிதை பிரபலமாகி இருந்தது . ஓர் இளைஞன் பகதியாய்ச் செபமாலை சொல்லுவது வழக்கம் . ஒரு நாள் அவன் முன் தேவதாய் தோன்றினார் . அவன் ஒவ்வொரு முறை 'அருள் நிறைந்த ஜெபத்தைச் சொல்லுகையில் அவன் உதடுகளினின்று ஒரு சிவந்த ரோஜா வந்து அன்னையின் சிரசில் முடியாக அமர்ந்தது
16ஆம் நூற்றாண்டில் தான் விசுவாச மந்திரத்தைச் செபமாலை நேரத்தில் சொல்லும் வழக்கம் உதித்தது . 15ஆம் நூற்றாண்டில் இருந்து சிலர் ஜெபமாலை சொல்லும் பொது , சமயத்துக்கு சமயம் மனோ ஜெபத்தையும் சொல்லத்தொடங்கினர். தொண்டை , நா , உதடுகளின் அசைவின்றியே உள்ளத்திலேயே இறைவனையோ தேவதாயையோ புகழ்வதும் அவர்கள் பெருமையைச் சிந்திப்பதும் துதிப்பதும் ,அவர்களைக் கெஞ்சுவதும் மனோ ஜெபமாம் . துவக்கத்தில் தாயின் சந்தோஷங்களையும், வியாகுலங்களையும், மகிமையையும் பொதுவில் தியானித்து வந்தனர் . இவ்வழக்கத்தை அர்ச் சாமிநாதர் மரித்து இரு நூற்றாண்டுகளுக்குப் பின் கர்த்தூசியர் சபையினரான ப்ரஷ்ஷிய நாட்டு டொமினிக் துவங்கினார் . ஒவ்வொரு பத்துக்குப் பின்னும் தேவ இரகசியம் சொல்லி அதைத் தியானிக்கும் வழக்கம் இன்னும் வெகுகாலத்துக்குப் பின் தான் சம்பிரதாய வழக்கில் நடைமுறையாயிற்று. செபமாலையில் முடி போல் தொங்கும் மூன்று மணிகளும் அவைகளில் இப்போது சொல்லும் செபமும் வெகுகாலம் சென்று தான் வந்தன . என்னவானாலும் இப்போது சொல்வது போல செபமாலை சொல்லும் வழக்கம் 18ஆம் நூற்றாண்டில் வந்ததெனச் சொல்லலாம்
"அருள் நிறைந்த மரியே " என்று சொல்கிற மந்திரமும் இப்போது நாம் சொல்வது போலவே முதல் தொடங்கி இருந்தது என்று எண்ணலாகாது . செபமாலை அல்லது மரியின் சங்கீத மாலை சொல்லிவந்த துவக்கத்தில் சம்மனசின் மங்களத்தை மட்டும் சொன்னார்கள் . "அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே " . சில நூற்றாண்டுகள் சென்று எலிசபெத்தம்மாளின் வாழ்த்துதளையும் சேர்த்துக் கொண்டனர். "அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்த்தர் உம்முடனே ; பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ; உம்முடைய திரு வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே " இயேசு என்ற சொல் இன்னும் சிலகாலம் சென்ற பின்னர் சேர்க்கப்பட்டது . "கனியான இயேசு " மேலும் பல நாள் சென்று "அர்ச் மரியாயே , சர்வேசுரனுடைய மாதாவே " என்கிற மன்றாட்டைத் திருச்சபை சேர்த்தது .
செபம்
முத்திப் பேறு பெற்ற கன்னிகையே , எல்லாச் செல்வாக்குள்ள அரசருக்கு அன்னையானவரே , பட்டப்பகலில் என்னைப் பார்த்தருளும் . இருண்ட இரவில் என்னைக் காத்தருளும் . செபமாலை மாதாவே , நான் நின்றாலும் , படுத்தாலும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாலும் எனக்குக் காவலாகவும் , பாதுகாவலாகவும் வாரும். நித்திரை நேரத்தில் என்னைக் காத்தருளும் . கன்னித் தாயான செபமாலை இராக்கினியே , என் கரத்தைப் பற்றி நான் உம் மகனோடு உறவு கொண்டாடச் செய்தருளும் . கெட்ட அரூபிகள் என்னை அண்டாதபடி அவர்களுக்கும் எனக்கும் இடையில் அருட்பிரசாத அரசர் நிற்பாராக. பாவிகளுக்கு அடைக்கலமான ஜெபமாலை மாதாவே , எல்லாப் பாவிகளிலும் கேடு கெட்டவனாகிய என்னிடத்தில் மனச்தாபத்தைப் பிறப்பித்தருளும். என் மன்றாட்டைக் கேட்டருளும் . எனக்காக மன்றாடும், நித்திய நாசத்திலிருந்து என்னை இரட்சியும் . இறைவனின் சிம்மாசனத்தைச் சூழ்ந்திருக்கும் மோட்ச மகிமை சாவின் வேதனையிலிருந்து என் ஆத்துமத்தைப் பிரித்து ஏற்றுக் கொள்வதாக ஆமென்
சரிதை
செபமாலை எல்லா இடைஞ்சல்களையும் ஒழித்துக் கட்டும் என்னும் நம்பிக்கை 82 வயதுள்ள ஒரு வயோதிக மாதுக்கு நலனை அளித்தது . கம்யூனிசப் பேய் தாண்டவமாடும் யூகோஸ்லாவியாவிலிருந்து அமெரிக்கா ஓடி ஒளிய ஆசித்தாள்.அங்கு நியூயார்க் என்னும் நகரில் அவரது மகனும் மருமகளும் இருந்தனர் .அனுமதிச் சீட்டு பெறுவதற்கு இடையூறாக இருந்த பற்பல விஷயங்களுள் ஒன்று அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்னும் அபிப்பிராயமாம் . இதிலும் செபமாலை சொல்லி வெற்றி கொள்ளலாம் என்னும் நம்பிக்கை அவளுக்கு . "இரக்கமுள்ள நிலையம் " ஒன்று இருந்தது அங்கு . வேறொரு முறை அங்கு வைத்தியர்கள் அவளை சோதிக்கச் செய்தனர் . எக்ஸ்ரே உடல் குறைகள் ஒன்றையும் காட்டவில்லையென வைத்தியர்கள் அவளுக்கு நல்ல செய்தி கொண்டு வந்தனர் . இதைக் கேட்டதும் அவள் ஒன்றும் பதிலளிக்காமல் ஏமாந்தவளைப் போல் ஏங்கி இருக்கவே , அதை மறுமுறையும் வைத்தியர் சொன்னார் . " சும்மா இரு ஐயா.. உனக்குத் தெரியவில்லையா ? நான் ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன் " என்றாள் அந்த வியாதியஸ்தி. செபமாலை தான் சொல்லிக்கொண்டிருந்தாள். இன்னொருமுறை மனுப் போடச் சொல்லினர் .மனுப்போட்டாள் செபமாலை சொன்னாள் . இறுதியில் வெற்றி . 1953 ஆம் ஆண்டில் வெரோனிக்கா பூசணிக் என்ற அந்த மாது அனுமதிச்சீட்டு பெற்று அமெரிக்கா சென்றாள்
சாமிநாதர் ஜெபமாலையைப் பற்றி போதித்தார் .பெரிய பிரசங்கி என்று பேரெடுத்தார் . பல கலாசாலை கல்லூரிகளுக்கே முதன்மையான பாரீஸ் பட்டணத்து பேராலயத்தில் அருளப்பர் திருநாளன்று பிரசங்கம் வைக்க அவருக்கு அழைப்பு . பெரிய பெரிய சாஸ்திரிகள் வருவார்கள் என்று எண்ணி அர்ச் அருளப்பரைப் பற்றி அருமையான பிரசங்கம் ஒன்று தயார் செய்தார் ,பிரசங்கம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேவதாய் அவருக்கு தரிசனையாகி ஒரு புத்தகத்தை நீட்டி " மகனே டோமினிக், நீ தயாரித்த பிரசங்கம் அபாரம் ; நான் கொண்டு வந்திருக்கும் பிரசங்கம் அதைவிட அபாரம் . வீண் சிலாக்கியத்தைத் தேடாதே . இலேசான நடையில் இப்புத்தகத்தில் உள்ளது போல் எளிய நடையில் சொல் " என்று கூறி மறைந்தார் . பிரசங்க மேடைக்கு வந்த போது, எதிரில் பெரிய பெரிய பட்டதாரிகளான கலாசாலை மாணவர்களும் , ஆசிரியர்களும் , பிரபுக்களும் குழுமி இருக்கக் கண்டார் . " நம் அருமையான பிரசங்கத்தைச் சொல்ல முடியவில்லையே , இப்போது சொல்லப் போவதை இவர்கள் இரசிக்கவா போகிறார்கள் என்ற எண்ணம் இலேசான பனிப்படலம் போல் அவர் மனதில் தோன்றியிருக்கக் கூடும் . ஜெபமாலையை பற்றி சாதாரண பொருளையே எளிய வடிவில் சொன்னார் . ஆண்டவள் அவருக்குத் தோன்றி " டொமினிக் , நீ உன் புத்தித் திறமையில் ஊன்றி நிற்காமல் , மனிதர் புகழ்ச்சியைத் தேடாமல் , மக்கள் ஈடேற்றத்துக்காக தாழ்மையாய் நடப்பதைக் கண்டு எனக்கு மனமகிழ்ச்சி . மக்கள் செபத்தின் மேல் பிரியங்கொண்டு , செபமாளையைச் செய்து வருவார்களேயானால் இரக்கமுள்ள ஆண்டவர் அவர்களுக்கு வரப்பிரசாதத்தைக் கொடுப்பார் என்பது நிச்சயம் . ஆதலால் செபமாலையைப் பற்றி பிரசங்கம் வை " என்று சொல்லிப் போனார்
செபமாலையின் வரலாறு
பத்து பத்தாகக் குறிப்பதற்கு உடல் ஜெபத்தை முன் காலத்தில் உபயோகித்தனர் என்று சொல்லப்பட்டது . வாய்ச் செபம் எனில் உதடுகளை அசைத்து உச்சரித்துச் சொல்லும் ஜெபம் . உரத்த சத்தமாகச் சொன்னாலும் சரி எவருக்கும் கேட்காவண்ணம் நமக்கு மட்டும் புரியும்படி உதட்டை அசைத்துச் சொன்னாலும் சரி , அது வாய்ச் செபம் . இவ்விதம் ஏற்கனவே மனப்பாடம் செய்திருந்த செபத்தைத் சொன்னாலும் ,அப்போதைக்கப்போது மனத்தில் எழுவதை உச்சரித்தாலும் அது வாய்ச் செபம் . ஒரு மடத்தில் உள்ள துறவிகள் கூடி சங்கீத மாலையைப் பாடுவது வாய்ச் செபம். தற்காலத்தில் செபமாலைக்கு அளித்திருக்கும் பலன்களை அடைய வேண்டுமானால் மற்றவர்களோடு சேர்ந்தோ தனித்தோ மந்திரங்களை வாய்ச் செபமாகச் சொல்வது அவசியம்
பத்து மணி வாய்ச் செப முடிவைக் குறிக்க முதல் துவக்கத்தில் உடல் ஜெபத்தை வழங்கினர் என்று கண்டோம்.பின்னர் ஒவ்வொரு பத்துக்கும் இடையில் கர்த்தர் கற்பித்த ஜெபத்தைச் சொன்னார்கள்
"ரோஜாமலர் பூங்கா " என்று பொருள்படும் மேல்நாட்டு மொழிகளில் தற்சமயம் வழங்கும் ரோசரி என்னும் மொழி எக்காலத்தில் பெரிதும் வழங்கினது என்று தெரியவில்லை .இதைப் பற்றி மேல்நாட்டில் ஒரு சரிதை பிரபலமாகி இருந்தது . ஓர் இளைஞன் பகதியாய்ச் செபமாலை சொல்லுவது வழக்கம் . ஒரு நாள் அவன் முன் தேவதாய் தோன்றினார் . அவன் ஒவ்வொரு முறை 'அருள் நிறைந்த ஜெபத்தைச் சொல்லுகையில் அவன் உதடுகளினின்று ஒரு சிவந்த ரோஜா வந்து அன்னையின் சிரசில் முடியாக அமர்ந்தது
16ஆம் நூற்றாண்டில் தான் விசுவாச மந்திரத்தைச் செபமாலை நேரத்தில் சொல்லும் வழக்கம் உதித்தது . 15ஆம் நூற்றாண்டில் இருந்து சிலர் ஜெபமாலை சொல்லும் பொது , சமயத்துக்கு சமயம் மனோ ஜெபத்தையும் சொல்லத்தொடங்கினர். தொண்டை , நா , உதடுகளின் அசைவின்றியே உள்ளத்திலேயே இறைவனையோ தேவதாயையோ புகழ்வதும் அவர்கள் பெருமையைச் சிந்திப்பதும் துதிப்பதும் ,அவர்களைக் கெஞ்சுவதும் மனோ ஜெபமாம் . துவக்கத்தில் தாயின் சந்தோஷங்களையும், வியாகுலங்களையும், மகிமையையும் பொதுவில் தியானித்து வந்தனர் . இவ்வழக்கத்தை அர்ச் சாமிநாதர் மரித்து இரு நூற்றாண்டுகளுக்குப் பின் கர்த்தூசியர் சபையினரான ப்ரஷ்ஷிய நாட்டு டொமினிக் துவங்கினார் . ஒவ்வொரு பத்துக்குப் பின்னும் தேவ இரகசியம் சொல்லி அதைத் தியானிக்கும் வழக்கம் இன்னும் வெகுகாலத்துக்குப் பின் தான் சம்பிரதாய வழக்கில் நடைமுறையாயிற்று. செபமாலையில் முடி போல் தொங்கும் மூன்று மணிகளும் அவைகளில் இப்போது சொல்லும் செபமும் வெகுகாலம் சென்று தான் வந்தன . என்னவானாலும் இப்போது சொல்வது போல செபமாலை சொல்லும் வழக்கம் 18ஆம் நூற்றாண்டில் வந்ததெனச் சொல்லலாம்
"அருள் நிறைந்த மரியே " என்று சொல்கிற மந்திரமும் இப்போது நாம் சொல்வது போலவே முதல் தொடங்கி இருந்தது என்று எண்ணலாகாது . செபமாலை அல்லது மரியின் சங்கீத மாலை சொல்லிவந்த துவக்கத்தில் சம்மனசின் மங்களத்தை மட்டும் சொன்னார்கள் . "அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே " . சில நூற்றாண்டுகள் சென்று எலிசபெத்தம்மாளின் வாழ்த்துதளையும் சேர்த்துக் கொண்டனர். "அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்த்தர் உம்முடனே ; பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ; உம்முடைய திரு வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே " இயேசு என்ற சொல் இன்னும் சிலகாலம் சென்ற பின்னர் சேர்க்கப்பட்டது . "கனியான இயேசு " மேலும் பல நாள் சென்று "அர்ச் மரியாயே , சர்வேசுரனுடைய மாதாவே " என்கிற மன்றாட்டைத் திருச்சபை சேர்த்தது .
செபம்
முத்திப் பேறு பெற்ற கன்னிகையே , எல்லாச் செல்வாக்குள்ள அரசருக்கு அன்னையானவரே , பட்டப்பகலில் என்னைப் பார்த்தருளும் . இருண்ட இரவில் என்னைக் காத்தருளும் . செபமாலை மாதாவே , நான் நின்றாலும் , படுத்தாலும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாலும் எனக்குக் காவலாகவும் , பாதுகாவலாகவும் வாரும். நித்திரை நேரத்தில் என்னைக் காத்தருளும் . கன்னித் தாயான செபமாலை இராக்கினியே , என் கரத்தைப் பற்றி நான் உம் மகனோடு உறவு கொண்டாடச் செய்தருளும் . கெட்ட அரூபிகள் என்னை அண்டாதபடி அவர்களுக்கும் எனக்கும் இடையில் அருட்பிரசாத அரசர் நிற்பாராக. பாவிகளுக்கு அடைக்கலமான ஜெபமாலை மாதாவே , எல்லாப் பாவிகளிலும் கேடு கெட்டவனாகிய என்னிடத்தில் மனச்தாபத்தைப் பிறப்பித்தருளும். என் மன்றாட்டைக் கேட்டருளும் . எனக்காக மன்றாடும், நித்திய நாசத்திலிருந்து என்னை இரட்சியும் . இறைவனின் சிம்மாசனத்தைச் சூழ்ந்திருக்கும் மோட்ச மகிமை சாவின் வேதனையிலிருந்து என் ஆத்துமத்தைப் பிரித்து ஏற்றுக் கொள்வதாக ஆமென்
சரிதை
செபமாலை எல்லா இடைஞ்சல்களையும் ஒழித்துக் கட்டும் என்னும் நம்பிக்கை 82 வயதுள்ள ஒரு வயோதிக மாதுக்கு நலனை அளித்தது . கம்யூனிசப் பேய் தாண்டவமாடும் யூகோஸ்லாவியாவிலிருந்து அமெரிக்கா ஓடி ஒளிய ஆசித்தாள்.அங்கு நியூயார்க் என்னும் நகரில் அவரது மகனும் மருமகளும் இருந்தனர் .அனுமதிச் சீட்டு பெறுவதற்கு இடையூறாக இருந்த பற்பல விஷயங்களுள் ஒன்று அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்னும் அபிப்பிராயமாம் . இதிலும் செபமாலை சொல்லி வெற்றி கொள்ளலாம் என்னும் நம்பிக்கை அவளுக்கு . "இரக்கமுள்ள நிலையம் " ஒன்று இருந்தது அங்கு . வேறொரு முறை அங்கு வைத்தியர்கள் அவளை சோதிக்கச் செய்தனர் . எக்ஸ்ரே உடல் குறைகள் ஒன்றையும் காட்டவில்லையென வைத்தியர்கள் அவளுக்கு நல்ல செய்தி கொண்டு வந்தனர் . இதைக் கேட்டதும் அவள் ஒன்றும் பதிலளிக்காமல் ஏமாந்தவளைப் போல் ஏங்கி இருக்கவே , அதை மறுமுறையும் வைத்தியர் சொன்னார் . " சும்மா இரு ஐயா.. உனக்குத் தெரியவில்லையா ? நான் ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன் " என்றாள் அந்த வியாதியஸ்தி. செபமாலை தான் சொல்லிக்கொண்டிருந்தாள். இன்னொருமுறை மனுப் போடச் சொல்லினர் .மனுப்போட்டாள் செபமாலை சொன்னாள் . இறுதியில் வெற்றி . 1953 ஆம் ஆண்டில் வெரோனிக்கா பூசணிக் என்ற அந்த மாது அனுமதிச்சீட்டு பெற்று அமெரிக்கா சென்றாள்
சாமிநாதர் ஜெபமாலையைப் பற்றி போதித்தார் .பெரிய பிரசங்கி என்று பேரெடுத்தார் . பல கலாசாலை கல்லூரிகளுக்கே முதன்மையான பாரீஸ் பட்டணத்து பேராலயத்தில் அருளப்பர் திருநாளன்று பிரசங்கம் வைக்க அவருக்கு அழைப்பு . பெரிய பெரிய சாஸ்திரிகள் வருவார்கள் என்று எண்ணி அர்ச் அருளப்பரைப் பற்றி அருமையான பிரசங்கம் ஒன்று தயார் செய்தார் ,பிரசங்கம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேவதாய் அவருக்கு தரிசனையாகி ஒரு புத்தகத்தை நீட்டி " மகனே டோமினிக், நீ தயாரித்த பிரசங்கம் அபாரம் ; நான் கொண்டு வந்திருக்கும் பிரசங்கம் அதைவிட அபாரம் . வீண் சிலாக்கியத்தைத் தேடாதே . இலேசான நடையில் இப்புத்தகத்தில் உள்ளது போல் எளிய நடையில் சொல் " என்று கூறி மறைந்தார் . பிரசங்க மேடைக்கு வந்த போது, எதிரில் பெரிய பெரிய பட்டதாரிகளான கலாசாலை மாணவர்களும் , ஆசிரியர்களும் , பிரபுக்களும் குழுமி இருக்கக் கண்டார் . " நம் அருமையான பிரசங்கத்தைச் சொல்ல முடியவில்லையே , இப்போது சொல்லப் போவதை இவர்கள் இரசிக்கவா போகிறார்கள் என்ற எண்ணம் இலேசான பனிப்படலம் போல் அவர் மனதில் தோன்றியிருக்கக் கூடும் . ஜெபமாலையை பற்றி சாதாரண பொருளையே எளிய வடிவில் சொன்னார் . ஆண்டவள் அவருக்குத் தோன்றி " டொமினிக் , நீ உன் புத்தித் திறமையில் ஊன்றி நிற்காமல் , மனிதர் புகழ்ச்சியைத் தேடாமல் , மக்கள் ஈடேற்றத்துக்காக தாழ்மையாய் நடப்பதைக் கண்டு எனக்கு மனமகிழ்ச்சி . மக்கள் செபத்தின் மேல் பிரியங்கொண்டு , செபமாளையைச் செய்து வருவார்களேயானால் இரக்கமுள்ள ஆண்டவர் அவர்களுக்கு வரப்பிரசாதத்தைக் கொடுப்பார் என்பது நிச்சயம் . ஆதலால் செபமாலையைப் பற்றி பிரசங்கம் வை " என்று சொல்லிப் போனார்
நான்காம் நாள்
செபமாலை சொல்லும் விதம்
பரிசுத்த ஆவியின் உதவியை நாடியபின் செபமாலை சொல்லத் துவங்குவது நல்லது. முதன் முதல் விசுவாச மந்திரம் ; கிறிஸ்தவ வாழ்க்கைக்கு விசுவாசந்தானே அஸ்திவாரம் ; கர்த்தர் கற்பித்த ஜெபம் , மூன்று முறை அருள் நிறைந்த மரியே என்னும் ஜெபம் , பின் பத்து பத்தாய் ஐந்து முறை அருள் நிறைந்த மரியே என்னும் ஜெபம் , ஒவ்வொரு பத்துக்குப் பின் 'பிதாவுக்கும் சுதனுக்கும் ' என்ற திரித்துவ ஸ்தோத்திரம் சொல்லுகிறோம் . ஒவ்வொரு பத்துக்கு முன்னரும் ஒரு தேவ இரகசியத்தைச் சொல்லி அதைப் பற்றிச் சிறிது நேரம் , இரண்டொரு வினாடியாவது யோசிக்க வேண்டும்
சில நாடுகளில் 53 மணிக்குப் பின் கிருபை தாயாபத்து செபத்தை சொல்லுகிறார்கள்
எண்ணுவதற்கு மணிகள் உதவுகின்றன என்று பார்த்தோம் .அதோடு அவை நம் கவனத்தையும் கவர்கின்றன . நாம் சுத்த அரூபிகளான சம்மனசுகள் அல்லோம் . நாம் ஆத்துமமும் சரீரமும் சேர்ந்தவர்கள், அவை இரண்டும் ஒத்துழைக்கின்றன . இரண்டொரு சிறு வெளிச் செயல்கள் புத்திக்கு வேகத்தைக் கொடுக்கின்றன . ஒரு பெரியவர் , பெரிய சிந்தனையாளர் , பெரிய அறிஞர் . அவரைப் போய்ப் பார்க்கும்போதெல்லாம் எதைக் கவனிக்கலாம் ? மேசையின் மேல் புத்தகம் ஒன்றும் இராது . எழுதத் தாள் ஒன்று , வலது கரத்தில் எழுதுகோல் , இடது கரத்தில் சுருட்டொன்று . நாலைந்து மணி நேரமாக ஒரே சுருட்டு தான் . ஏன்? அச்சுருட்டு சிந்தனா சக்தியைப் பெருக்குகிறது என்பார் . இத்தகைய வழிகளைப் பின்பற்றும் பலரைப் பார்த்திருக்கலாம் . பெண்களில் சிலர் சிந்திப்பதற்கு உதவியாகப் பின்னுகிறார்கள் . எவ்வளவு வேகமாய்ப் பின்னுகிறார்களோ, அவ்வளவு வேகமாய் அவர்களது சிந்தனையும் ஓடுகிறது .சிந்தனைக்கு உதவியாக சிலர் வேகமாய் நடப்பதைக் கண்டிருக்கலாம் . அதே போல மணிகளும், அவைகளை உருட்டுவதும் செபிப்போரின் கவனத்தை எழுப்புகின்றன. உலக சிந்தனைகள் பல படையெடுத்து பாய்கின்றன அல்லவா , அந்தப் பராக்கை எல்லாம் சிறிதளவாவது தள்ளி விட மணிகள் உருட்டுதல் உதவுகிறது . அதே போல் வாய்ச் செபமும் மனோ செபத்திற்கு உதவியாக இருக்கிறது
மானிட சுபாவத்தை அறியாதவர்கள் தான் ஒரே செபத்தை திரும்பத் திரும்பச் சொல்லுவதில் பயன் இல்லை என்பர் . மன மகிழ்ச்சியோ அன்போ பொங்கி பொங்கி எழும்போது, அபூர்வங்களைக் கண்டு அதிசயம் பூத்து நிற்கும்போதும் பெரும் சோகத்தால் உள்ளம் கரையும்போதும் , ஒரே மொழியை, ஒரே பொருளைத் திரும்பத் திரும்ப சொல்லுவார்கள் . அன்பின் பெருக்கால் தாயண்டை வந்த பிள்ளை " அம்மா , நான் உன்னை நேசிக்கிறேன் , அம்மா உன்னை நேசிக்கிறேன் , நேசிக்கிறேன் அம்மா " என்று சொல்லுவதைக் கேட்கும் தாயின் மனம் பூரிக்குமா ? புழுங்குமா?
"மணியாம், செபமாம் , இரகசியமாம் , என்ன இடைஞ்சல்கள் " என்று செபமாலை செய்யாதவர்கள் சொல்லலாம் . தமிழ்நாட்டு கிராமவாசி ஒருவன் , மேல் நாட்டான் உணவருந்த உட்காருகையில் உண்கலத்தையும், லோட்டாவையும் , கத்தியையும் , கரண்டியையும் , முள்ளையும், மடித்துவாலையையும் கண்டு இதென்னடா சங்கடம் என்று நினைக்கலாம் . உணவருந்த உட்கார்ந்த மகராசனுக்கு சங்கடம் தெரியவில்லை . பத்து நிமிஷத்டுஹ்க்குள் கை அசுத்தப்படாமல் விலாப்புடைக்கத் தின்று எழும்புகிறான் . கத்தி ,முள் , கரண்டி அவனுக்கு சங்கடமல்ல . அவை அவனுக்கு உதவி
எவ்விதம் சிந்திப்பது ? தியானம் செய்து பழகியவர்களுக்கு அது அவ்வளவு கஷ்டம் அல்ல . ஆனால் சாதாரண மக்களுக்கு அதற்க்குச் சுலபமான வழிகள் உள. ஒவ்வொரு தேவ இரகசியத்தைச் சொல்லும்போதும் , அதை விவரிக்கும் நற்செய்தி வாசகத்தை வாசிப்பது நல்லது . அவ்வாறு வாசித்தால் பத்துமணியைச் சொல்லும்போது அந்த இரகசியத்தில் உள்ள பற்பல எண்ணங்கள் , புத்தியில் மின்னி மின்னி மறையும் . ஒவ்வொரு இரகசியத்தையும் படம் போல் சித்தரித்து , அவைகளைப் பார்த்துக் கொண்டே சிலர் சுலபமாய்ப் பத்து மணியைத் தியானத்தோடு சொல்லி முடிக்கிறார்கள் . இது சரியான தியானம் , அல்லது ஒவ்வொரு பத்திலும் அந்த இரகசியத்துக்கு அடுத்த ஓர் எண்ணம் , ஒரு புண்ணியம் புத்தியில் ஊன்றி நிற்கும் அல்லது உலாவி வரும் . இதுவும் நல்ல தியானம் . சிறிதளவேனும் தியானிப்பதால் தான் செபமாலை சொல்லுவதால் பெரும் பலனை அடையலாம்
செபம்
மகாப் பரிசுத்த செபமாலை இராக்கினியே , மனுக்குலத்தின் அடைக்கலமே , சர்வேசுரனுக்காகப் புரியும் போர்களிலெல்லாம் ஜெயசீலியே, நம்பிக்கையோடு தாழ்மையாய் உம் பீடம் முன்பு சாஷ்டாங்கமாய் விழுகிறோம் . தற்சமயம் எங்களைச் சூழ்ந்திருக்கும் அபாயமான நிலையில் எங்களுடைய பேறுபலன்களின் நிமித்தம் அல்ல உம் தாய்க்குரிய இதயத்தின் பெரும் தயாளத்தினிமித்தம் இரக்கமும், வரப்பிரசாதமும் , தயாள உதவியும் பெறுவோம் என்று நம்பியிருக்கிறோம் . மாசில்லாத இருதய மரியே ! உலகின் பயங்கரமான இந்நாளில் திருச்சபையின் தந்தையாகிய பரிசுத்த பாப்பரசரோடு சேர்ந்து முதல் முதல் சத்தியத் திருச்சபையை உம்மிடத்தில் ஒப்படைத்து நேர்ந்து கொள்ளுகிறோம் . திருச்சபை சேசுவின் ஞானச் சரீரம் அல்லவா ? அதன்மேல் இந்நாள் எத்தனை இடங்களில் துன்பமும் துயரமும் படைஎடுத்திருக்கின்றன! . இரண்டாவதாக உலகையே உமக்கு நேர்ந்து கொள்ளுகிறோம் . உலக ஆன்ம காரியங்களில் எத்தனை நாசம் . தாய் தந்தையர்களும், கணவன் மனைவியும் , சகோதரர் சகோதரிகளும் , மாசற்ற குழந்தைகளும் அநியாயமாய் , அக்கிரமமாய் , ஆயிரம் ஆயிரமாய்க் கொல்லப்படுவதை , செபமாலை இராக்கினியே , நீர் பார்ப்பதில்லையா ? இந்தக் கொடுமையைக் கண்டு எங்கள் மேலும் திருச்சபையின் மேலும் இவ்வுலகத்தின் மேலும் இரங்கி எல்லோரையும் உமது மாசற்ற இருதயத்தில் வைத்தருளும் செபமாலைத் தாயே ஆமென்
சரிதை
1. அவித்த செபமாலை : அவள் ஒரு கிழவி . அமெரிக்காவில் ஒரு சிற்றூரில் எல்லைப்புறத்தில் வசித்து வந்தாள். ஒரு நாள் அவளுக்கு அவஸ்தை கொடுக்க ஒரு குருவானவரை அழைத்தார்கள் . அவர் சென்று குடிசைக் கதவைத் தட்டினார் . உள்ளே நுழைந்தார் . குடிசையில் தட்டு முட்டு சாமான்கள் அதிகம் இல்லை. ஒரு கட்டில் . அதனருகே ஆவியால் எரியும் சிறு அடுப்பில் ஒரு பாத்திரம் . அவளைத் தயார் செய்து திவ்விய நன்மை அவஸ்தை கொடுத்தபின் பாத்திரத்தில் இருந்த கொத்தி தண்ணீரை உற்று நோக்கினார் . இரு செபமாலைகள் பாத்திரத்தின் அடியில் கிடந்தன . அவைகளைக் கட்டிய சரடு கட்டிலோடும் கட்டப்பட்டிருந்தது . ஒரு நிமிஷம் யோசித்தபின் குருவானவர் அவளை நோக்கி , " பாட்டி செபமாலையை எதற்காக அவிக்கிறாய் ?" என்றார் . " சுவாமி , என் விரல்களில் உணர்ச்சியே இல்லை ; மரத்துப் போயின . செபமாலையின் மணிகள் நல்ல சூடாய் இருந்தால் தான் நான் உணர்கிறேன் . இவ்விதம் நாள் முழுதும் எனக்கு செபமாலை செய்வதற்கு எனக்கு ஏதுவாய் இருக்கிறது" என்றாள். அம்மூதாட்டிக்கு செபமாலை மேல் என்னே பற்று !
2. அர்ச் சாமிநாதர் காலத்திற்கு முன்னரே செபமாலை சொல்லும் வழக்கம் இருந்தது . அவர் அவ்வழக்கத்தைச் சில இடங்களில் பரப்ப பிரயாசைப்பட்டார் . ஆயினும் வெகு சீக்கிரம் மக்கள் அவ்வழக்கத்தை விட்டு விட்டனர் . 1349 ஆம் ஆண்டு அதுவரைக் கேட்டறியாத கொள்ளை நோயால் ஆண்டவர் ஐரோப்பா முழுவதையும் வாட்டினார் . கொள்ளை நோயைப் பின்தொடர்ந்து இரண்டு அசாத்தியங்கள் வேகமாய்ப் பரவின
அச்சமயம் முத் ஆலன் ரோச்சுக்கு ஆண்டவர் பூசை நேரத்தில் காட்சியளித்து ஒஸ்தியில் இருந்து சொன்னது : " இவ்வளவு சீக்கிரம் மறுமுறையும், நீ என்னைச் சிலுவையில் அறையலாமா? முன் உன் பாவங்களால் என்னைச் சிலுவையில் அறைந்தாய் . உன் பாவங்களால் என் பிதாவுக்கு வந்த துரோகத்தை நிறுத்த இன்னும் ஒரு முறை சிலுவையில் அறையப்படவும் நான் தயார் . இப்பொழுது என்னைச் சிலுவையில் அறைகிறாய் . எப்படியென்று கேள் . திருச்செபமாலைப் பக்தியைப் பரப்ப உனக்கு எவ்வளவோ புத்தியும் சாமர்த்தியமும் இருந்தும் நீ வாளா இருக்கிறாய் . நீ அப்பக்தியைப் பரப்பினால் அநேகரைப் பாவ வழியில் இருந்து நல் வழிக்குக் கொண்டு வரலாம் . நீ இவ்விதம் செய்யாததினால் , நீயும் அம்மக்கள் பாவங்களுக்கு உடந்தையாயிருக்கிறாய்" என்று கடிந்து கொண்டார் . தேவதாயும் அவருக்கு காட்சியளித்து " நீ வாலிபத்தில் பெரும் பாவியாய் இருந்தாய் . நீ மனந்திரும்பும் வரத்தை என் மகனிடமிருந்து உனக்கு பெற்றுத் தந்தேன். உன்னைத் திருப்ப எத்தனையோ இன்னல்களிலிருந்து காப்பாற்ற நான் தயாராயிருந்தேன் . மனந்திரும்பிய பாவிகள் எனக்கு மகிமை . உன்னை மனந்திரும்பச் செய்ததற்கு வேறொரு காரணம் என் செபமாலைப் பக்தியை நீ வெகுதூரத்துக்கு பரப்புவாய் என்ற எண்ணம் " என்று சொல்லி மறைந்தார் . அர்ச் சாமிநாதரும் செபமாலைப் பக்தியைப் பரப்பும்படி காட்சியில் ரோச்சுக்குச் சொன்னார் . 1460 ஆம் ஆண்டிலிருந்து ஆலன் இப்பக்தியைப் பற்றிப் போதித்து பலரை நல்வழிக்குக் கொண்டு வந்தார்
செபமாலை சொல்லும் விதம்
பரிசுத்த ஆவியின் உதவியை நாடியபின் செபமாலை சொல்லத் துவங்குவது நல்லது. முதன் முதல் விசுவாச மந்திரம் ; கிறிஸ்தவ வாழ்க்கைக்கு விசுவாசந்தானே அஸ்திவாரம் ; கர்த்தர் கற்பித்த ஜெபம் , மூன்று முறை அருள் நிறைந்த மரியே என்னும் ஜெபம் , பின் பத்து பத்தாய் ஐந்து முறை அருள் நிறைந்த மரியே என்னும் ஜெபம் , ஒவ்வொரு பத்துக்குப் பின் 'பிதாவுக்கும் சுதனுக்கும் ' என்ற திரித்துவ ஸ்தோத்திரம் சொல்லுகிறோம் . ஒவ்வொரு பத்துக்கு முன்னரும் ஒரு தேவ இரகசியத்தைச் சொல்லி அதைப் பற்றிச் சிறிது நேரம் , இரண்டொரு வினாடியாவது யோசிக்க வேண்டும்
சில நாடுகளில் 53 மணிக்குப் பின் கிருபை தாயாபத்து செபத்தை சொல்லுகிறார்கள்
எண்ணுவதற்கு மணிகள் உதவுகின்றன என்று பார்த்தோம் .அதோடு அவை நம் கவனத்தையும் கவர்கின்றன . நாம் சுத்த அரூபிகளான சம்மனசுகள் அல்லோம் . நாம் ஆத்துமமும் சரீரமும் சேர்ந்தவர்கள், அவை இரண்டும் ஒத்துழைக்கின்றன . இரண்டொரு சிறு வெளிச் செயல்கள் புத்திக்கு வேகத்தைக் கொடுக்கின்றன . ஒரு பெரியவர் , பெரிய சிந்தனையாளர் , பெரிய அறிஞர் . அவரைப் போய்ப் பார்க்கும்போதெல்லாம் எதைக் கவனிக்கலாம் ? மேசையின் மேல் புத்தகம் ஒன்றும் இராது . எழுதத் தாள் ஒன்று , வலது கரத்தில் எழுதுகோல் , இடது கரத்தில் சுருட்டொன்று . நாலைந்து மணி நேரமாக ஒரே சுருட்டு தான் . ஏன்? அச்சுருட்டு சிந்தனா சக்தியைப் பெருக்குகிறது என்பார் . இத்தகைய வழிகளைப் பின்பற்றும் பலரைப் பார்த்திருக்கலாம் . பெண்களில் சிலர் சிந்திப்பதற்கு உதவியாகப் பின்னுகிறார்கள் . எவ்வளவு வேகமாய்ப் பின்னுகிறார்களோ, அவ்வளவு வேகமாய் அவர்களது சிந்தனையும் ஓடுகிறது .சிந்தனைக்கு உதவியாக சிலர் வேகமாய் நடப்பதைக் கண்டிருக்கலாம் . அதே போல மணிகளும், அவைகளை உருட்டுவதும் செபிப்போரின் கவனத்தை எழுப்புகின்றன. உலக சிந்தனைகள் பல படையெடுத்து பாய்கின்றன அல்லவா , அந்தப் பராக்கை எல்லாம் சிறிதளவாவது தள்ளி விட மணிகள் உருட்டுதல் உதவுகிறது . அதே போல் வாய்ச் செபமும் மனோ செபத்திற்கு உதவியாக இருக்கிறது
மானிட சுபாவத்தை அறியாதவர்கள் தான் ஒரே செபத்தை திரும்பத் திரும்பச் சொல்லுவதில் பயன் இல்லை என்பர் . மன மகிழ்ச்சியோ அன்போ பொங்கி பொங்கி எழும்போது, அபூர்வங்களைக் கண்டு அதிசயம் பூத்து நிற்கும்போதும் பெரும் சோகத்தால் உள்ளம் கரையும்போதும் , ஒரே மொழியை, ஒரே பொருளைத் திரும்பத் திரும்ப சொல்லுவார்கள் . அன்பின் பெருக்கால் தாயண்டை வந்த பிள்ளை " அம்மா , நான் உன்னை நேசிக்கிறேன் , அம்மா உன்னை நேசிக்கிறேன் , நேசிக்கிறேன் அம்மா " என்று சொல்லுவதைக் கேட்கும் தாயின் மனம் பூரிக்குமா ? புழுங்குமா?
"மணியாம், செபமாம் , இரகசியமாம் , என்ன இடைஞ்சல்கள் " என்று செபமாலை செய்யாதவர்கள் சொல்லலாம் . தமிழ்நாட்டு கிராமவாசி ஒருவன் , மேல் நாட்டான் உணவருந்த உட்காருகையில் உண்கலத்தையும், லோட்டாவையும் , கத்தியையும் , கரண்டியையும் , முள்ளையும், மடித்துவாலையையும் கண்டு இதென்னடா சங்கடம் என்று நினைக்கலாம் . உணவருந்த உட்கார்ந்த மகராசனுக்கு சங்கடம் தெரியவில்லை . பத்து நிமிஷத்டுஹ்க்குள் கை அசுத்தப்படாமல் விலாப்புடைக்கத் தின்று எழும்புகிறான் . கத்தி ,முள் , கரண்டி அவனுக்கு சங்கடமல்ல . அவை அவனுக்கு உதவி
எவ்விதம் சிந்திப்பது ? தியானம் செய்து பழகியவர்களுக்கு அது அவ்வளவு கஷ்டம் அல்ல . ஆனால் சாதாரண மக்களுக்கு அதற்க்குச் சுலபமான வழிகள் உள. ஒவ்வொரு தேவ இரகசியத்தைச் சொல்லும்போதும் , அதை விவரிக்கும் நற்செய்தி வாசகத்தை வாசிப்பது நல்லது . அவ்வாறு வாசித்தால் பத்துமணியைச் சொல்லும்போது அந்த இரகசியத்தில் உள்ள பற்பல எண்ணங்கள் , புத்தியில் மின்னி மின்னி மறையும் . ஒவ்வொரு இரகசியத்தையும் படம் போல் சித்தரித்து , அவைகளைப் பார்த்துக் கொண்டே சிலர் சுலபமாய்ப் பத்து மணியைத் தியானத்தோடு சொல்லி முடிக்கிறார்கள் . இது சரியான தியானம் , அல்லது ஒவ்வொரு பத்திலும் அந்த இரகசியத்துக்கு அடுத்த ஓர் எண்ணம் , ஒரு புண்ணியம் புத்தியில் ஊன்றி நிற்கும் அல்லது உலாவி வரும் . இதுவும் நல்ல தியானம் . சிறிதளவேனும் தியானிப்பதால் தான் செபமாலை சொல்லுவதால் பெரும் பலனை அடையலாம்
செபம்
மகாப் பரிசுத்த செபமாலை இராக்கினியே , மனுக்குலத்தின் அடைக்கலமே , சர்வேசுரனுக்காகப் புரியும் போர்களிலெல்லாம் ஜெயசீலியே, நம்பிக்கையோடு தாழ்மையாய் உம் பீடம் முன்பு சாஷ்டாங்கமாய் விழுகிறோம் . தற்சமயம் எங்களைச் சூழ்ந்திருக்கும் அபாயமான நிலையில் எங்களுடைய பேறுபலன்களின் நிமித்தம் அல்ல உம் தாய்க்குரிய இதயத்தின் பெரும் தயாளத்தினிமித்தம் இரக்கமும், வரப்பிரசாதமும் , தயாள உதவியும் பெறுவோம் என்று நம்பியிருக்கிறோம் . மாசில்லாத இருதய மரியே ! உலகின் பயங்கரமான இந்நாளில் திருச்சபையின் தந்தையாகிய பரிசுத்த பாப்பரசரோடு சேர்ந்து முதல் முதல் சத்தியத் திருச்சபையை உம்மிடத்தில் ஒப்படைத்து நேர்ந்து கொள்ளுகிறோம் . திருச்சபை சேசுவின் ஞானச் சரீரம் அல்லவா ? அதன்மேல் இந்நாள் எத்தனை இடங்களில் துன்பமும் துயரமும் படைஎடுத்திருக்கின்றன! . இரண்டாவதாக உலகையே உமக்கு நேர்ந்து கொள்ளுகிறோம் . உலக ஆன்ம காரியங்களில் எத்தனை நாசம் . தாய் தந்தையர்களும், கணவன் மனைவியும் , சகோதரர் சகோதரிகளும் , மாசற்ற குழந்தைகளும் அநியாயமாய் , அக்கிரமமாய் , ஆயிரம் ஆயிரமாய்க் கொல்லப்படுவதை , செபமாலை இராக்கினியே , நீர் பார்ப்பதில்லையா ? இந்தக் கொடுமையைக் கண்டு எங்கள் மேலும் திருச்சபையின் மேலும் இவ்வுலகத்தின் மேலும் இரங்கி எல்லோரையும் உமது மாசற்ற இருதயத்தில் வைத்தருளும் செபமாலைத் தாயே ஆமென்
சரிதை
1. அவித்த செபமாலை : அவள் ஒரு கிழவி . அமெரிக்காவில் ஒரு சிற்றூரில் எல்லைப்புறத்தில் வசித்து வந்தாள். ஒரு நாள் அவளுக்கு அவஸ்தை கொடுக்க ஒரு குருவானவரை அழைத்தார்கள் . அவர் சென்று குடிசைக் கதவைத் தட்டினார் . உள்ளே நுழைந்தார் . குடிசையில் தட்டு முட்டு சாமான்கள் அதிகம் இல்லை. ஒரு கட்டில் . அதனருகே ஆவியால் எரியும் சிறு அடுப்பில் ஒரு பாத்திரம் . அவளைத் தயார் செய்து திவ்விய நன்மை அவஸ்தை கொடுத்தபின் பாத்திரத்தில் இருந்த கொத்தி தண்ணீரை உற்று நோக்கினார் . இரு செபமாலைகள் பாத்திரத்தின் அடியில் கிடந்தன . அவைகளைக் கட்டிய சரடு கட்டிலோடும் கட்டப்பட்டிருந்தது . ஒரு நிமிஷம் யோசித்தபின் குருவானவர் அவளை நோக்கி , " பாட்டி செபமாலையை எதற்காக அவிக்கிறாய் ?" என்றார் . " சுவாமி , என் விரல்களில் உணர்ச்சியே இல்லை ; மரத்துப் போயின . செபமாலையின் மணிகள் நல்ல சூடாய் இருந்தால் தான் நான் உணர்கிறேன் . இவ்விதம் நாள் முழுதும் எனக்கு செபமாலை செய்வதற்கு எனக்கு ஏதுவாய் இருக்கிறது" என்றாள். அம்மூதாட்டிக்கு செபமாலை மேல் என்னே பற்று !
2. அர்ச் சாமிநாதர் காலத்திற்கு முன்னரே செபமாலை சொல்லும் வழக்கம் இருந்தது . அவர் அவ்வழக்கத்தைச் சில இடங்களில் பரப்ப பிரயாசைப்பட்டார் . ஆயினும் வெகு சீக்கிரம் மக்கள் அவ்வழக்கத்தை விட்டு விட்டனர் . 1349 ஆம் ஆண்டு அதுவரைக் கேட்டறியாத கொள்ளை நோயால் ஆண்டவர் ஐரோப்பா முழுவதையும் வாட்டினார் . கொள்ளை நோயைப் பின்தொடர்ந்து இரண்டு அசாத்தியங்கள் வேகமாய்ப் பரவின
அச்சமயம் முத் ஆலன் ரோச்சுக்கு ஆண்டவர் பூசை நேரத்தில் காட்சியளித்து ஒஸ்தியில் இருந்து சொன்னது : " இவ்வளவு சீக்கிரம் மறுமுறையும், நீ என்னைச் சிலுவையில் அறையலாமா? முன் உன் பாவங்களால் என்னைச் சிலுவையில் அறைந்தாய் . உன் பாவங்களால் என் பிதாவுக்கு வந்த துரோகத்தை நிறுத்த இன்னும் ஒரு முறை சிலுவையில் அறையப்படவும் நான் தயார் . இப்பொழுது என்னைச் சிலுவையில் அறைகிறாய் . எப்படியென்று கேள் . திருச்செபமாலைப் பக்தியைப் பரப்ப உனக்கு எவ்வளவோ புத்தியும் சாமர்த்தியமும் இருந்தும் நீ வாளா இருக்கிறாய் . நீ அப்பக்தியைப் பரப்பினால் அநேகரைப் பாவ வழியில் இருந்து நல் வழிக்குக் கொண்டு வரலாம் . நீ இவ்விதம் செய்யாததினால் , நீயும் அம்மக்கள் பாவங்களுக்கு உடந்தையாயிருக்கிறாய்" என்று கடிந்து கொண்டார் . தேவதாயும் அவருக்கு காட்சியளித்து " நீ வாலிபத்தில் பெரும் பாவியாய் இருந்தாய் . நீ மனந்திரும்பும் வரத்தை என் மகனிடமிருந்து உனக்கு பெற்றுத் தந்தேன். உன்னைத் திருப்ப எத்தனையோ இன்னல்களிலிருந்து காப்பாற்ற நான் தயாராயிருந்தேன் . மனந்திரும்பிய பாவிகள் எனக்கு மகிமை . உன்னை மனந்திரும்பச் செய்ததற்கு வேறொரு காரணம் என் செபமாலைப் பக்தியை நீ வெகுதூரத்துக்கு பரப்புவாய் என்ற எண்ணம் " என்று சொல்லி மறைந்தார் . அர்ச் சாமிநாதரும் செபமாலைப் பக்தியைப் பரப்பும்படி காட்சியில் ரோச்சுக்குச் சொன்னார் . 1460 ஆம் ஆண்டிலிருந்து ஆலன் இப்பக்தியைப் பற்றிப் போதித்து பலரை நல்வழிக்குக் கொண்டு வந்தார்
ஐந்தாம் நாள்
விசுவாச மந்திரம்
பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடிய பின் செபமாலையின் பாடுபட்ட சுரூபத்தைப் பிடித்துக் கொண்டு விசுவாச மந்திரத்தைச் சொல்லுகிறோம் . புண்ணிய ஜீவியத்தின் தொடக்கம் , ஞான சீவியத்தின் ஆரம்பம் , விசுவாசம், திருச்சபையில் ஞானஸ்நானத்தினால் மக்களாகும்போது, முதன் முதல் நமக்கு அளிக்கப்படும் கொடை விசுவாசம் . விசுவாசம் இன்றி நாம் இறைவனுக்கு ப்ரியப்பட முடியாது. விசுவாசம் பூர்த்தியாகும்படி வேதம் சொல்லுகிறதென்ன ? நீதிக்காக உள்ளத்தில் விசுவசிக்கிறோம், ஈடேற்றத்திற்காக வாயினால் அவ்விசுவாசத்தை அறிக்கை செய்கிறோம் . வாய்ச் செபத்தை அவமதிக்கும் போலி ஞானிகள் இதைக் கவனிப்பார்களா ?
இவ்விதம் விசுவாசம் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக இருப்பதினால் செபமாலையைத் தொடங்கும்போதே விசுவாச மந்திரத்தைச் சொல்வது எவ்வளவு பொருத்தம் ! இறைவன் அருகில் வருகிறவன் இறைவன் இருக்கிறார் என்றும் , அவரைத் தேடுகிறவர்களுக்கு சன்மானம் அளிக்கிறார் என்றும் விசுவசிப்பது அவசியம் என்கிறது வேதம் .ஆதலின் மூவொரு கடவுள் இருக்கிறார் என்றும் ,எல்லாப் படைப்புக்களுக்கும் அவர் கர்த்தர் என்றும் ,அவரது வல்லமைக்கும், ஞானத்துக்கும் அளவில்லை என்றும் விசுவசிக்கிறோம். ஜெபமாலை சொல்லத் தொடங்கும்போது நாஸ்திக கம்யூனிசத்தையோ, நாம் தான் கடவுள் என்னும் வேதாந்தத்தையோ , கடவுள் இல்லை என்றோ ( கடவுள் கிருபையாக நமக்களித்த ) புத்தி தான் கடவுள் என்றோ புலம்பும் கழகக்காரர்களுக்குச் சவால் விடுகிறோம் . இறைவனுடைய இரக்கமுள்ள பராமரிப்பை உணர்ந்து நமது கவலைகளையும் , ஏக்கங்களையும் தள்ளி வைக்கிறோம் . அவர் பட்சமுள்ள நல்ல தகப்பனார் என்று அறிகிறோம் . இவ்விதம் விசுவாச மந்திரத்தில் முதல் பிரிவைச் சொல்லும் போதே நமது புத்தி பிரகாசத்தினால் மகிழ்கிறது . நமது உள்ளம் பிள்ளைக்குரிய பாசத்தினாலும் நம்பிக்கையினாலும் துள்ளுகிறது . செபமாலை சொல்லும்போது நாம் இறைவனை மறந்துவிடுகிறோம் என்று சொல்லுகிறவன் யார் ?
அல்லது நம் ஏக கர்த்தரும் ஒரே மனுப்பேசுகிறவருமான இயேசுக்கிறிஸ்துவைத் தள்ளி வைக்கிறோம் என்று வாய் கூசாமல் உளறுகிறவன் யார் ? செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைப் பற்றி சற்றே சிந்திக்கிறோம் . அப்போது என்ன செய்கிறோம் ? சேசுவின் வாழ்க்கையை ஆதி முதல் அந்தம் வரைப் படமாய்க் காண்கிறோம் . இதைத்தான் விசுவாச மந்திரம் சுருக்கமாய்ச் சொல்லுகிறது . ஒரே உண்மையான கடவுளையும் , அவர் அனுப்பிய இயேசுக்கிறிஸ்துவையும் அறிய வருவது தான் நித்திய சீவியம் என்றது வேத வாசகம் . நாம் வேதாகமத்தைப் புறக்கணிக்கிறோமா ?
நமது விசுவாசத்தின் ஆதிகர்த்தாவென்றும் அதைச் சம்பூரணமாக்குகிறவர் என்றும் வேதம் சொல்லும் இயேசுவைத்தானே , இயேசுவின் வாழ்க்கையைத்தானே காட்சி காட்சியாய்க் காண்கிறோம் ? தெய்வத்தின் சம்பூரணம் எல்லாம் குடிகொண்டு இருக்கிறவர் என்றும் வேதம் போதிக்கும் இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றத் தேடுவது தப்பிதமல்ல அரும் புண்ணியத்திற்கு வழி
கடவுள் நமக்கு விசுவாசத்தை அளித்தபோது நமக்கு பெரும் ஆசீர்வாதத்தைக் கொடுத்தருளினார் . விசுவாசத்தினால் மற்ற மனுமக்களுக்குமேல் உயர்த்தப்பட்டு தேவசுபாவத்தைத் தரிசிக்கவும் , அதில் பங்கடையவும் ஆற்றல் அளித்து மோட்ச சன்மானத்தைச் சம்பாதிக்கும் சாதனத்தையும் கொடுத்தருளினார் . ஆதலால் கண்ணாடியில் கண்டதுபோல் சிருஷ்டிகளிடத்தில் கடவுளைக் காணாமல் திரை மறையின்றிப் பூரண பிரகாசத்தில் அளவில்லா நன்மைத்தனத்தைக் கண்டு களிப்போம் என்ற நம்பிக்கை நம்மிடம் ஓங்கி வளர்கிறது
விசுவாச மந்திரம் நமக்கு எவ்வளவு அரிய பெரிய காரியங்களை நமக்கு ஊட்டுகிறது . செபமாலையின் துவக்கத்தில் இதைச் சொல்லுகிறோம்
செபம்
செபமாலை ராக்கினியே , பாத்திமாவின் பாக்கிய சீலியே, போர்த்துகலில் தோன்றச் சித்தமாகி எங்கும் அமைதியை நிறுவியவரே , இக்கட்டு வெள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் எங்கள் நாட்டை கடைக்கண் திருப்பிப் பார்த்தருளும் . அதன்மேல் இரங்கி அது கிடக்கும் மடுவிலிருந்து தூக்கி ஞானத்தின் ஒளியையும் ஊக்கத்தின் உறுதியையும் அதற்குத் தந்தருளும்
உலகிலுள்ள சகல சாதி சனங்களுக்கும் எங்கள் தேசத்திற்கும் சமாதானத்தைக் கொடுத்து நாங்கள் யாவரும் உம்மைச் சமாதானத்தின் அரசி என்று அழைத்து ஆர்ப்பரித்து உம்மை போற்றிப் புகழ கிருபை செய்தருளும்
செபமாலை இராக்கினியே , எங்கள் நாட்டிற்காக வேண்டிக் கொள்ளும்
ஆமென்
சரிதை
ஒன்பதாம் பத்திநாதருக்கு புனிதர் பட்டம் கொடுக்க அப்போது ஏற்பாடுகள் நடக்கின்றன. அவர் காலம் பெரும் கிளர்ச்சியான காலம் . எல்லா இக்கட்டிலும் தேவதாயிடத்தில் சரணடைவார் . அவருக்கு அமலோற்பவ நாயகியின் மேல் அதிகப் பக்தி . அவர் தானே கன்னித்தாய் ஜென்மபாவமின்றி உற்பவித்தார் என்பதை விசுவாச சத்தியமாய்ப் பிரகடனம் செய்தார் . உலகில் நடக்கும் எல்லா தப்பறைகளும் அக்கிரமிகளின் அட்டூழியங்களும் ஒரு நிபந்தனையின் மேல் அழிந்து விடும் , அந்த நிபந்தனை விசுவாசிகள் தினந்தோறும் ஜெபமாலை சொல்லி வருவதாம் என்றார்
அவர் கடைசி நாளில் வியாதியாய்ப் படுத்திருக்கும்போது ,முன்னையைப் போல் நீண்ட நேரம் ஜெபம் செய்ய சக்தி இல்லை . இக்குறையை நீக்க ஒரு வழி கண்டுபிடித்து ஒரு நாள் தன் ஆத்தும குருவானவரிடம் ' அது சரியா ? என்று கேட்டார். " என்னுடைய சயன அறையில் செபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களையும் படமாய்ச் சித்தரித்து வைத்திருக்கிறேன் . செபமாக ஒவ்வொன்றையும் சிறிது நேரம் பார்க்கிறேன் . உங்களுக்கு விளங்குகிறதா ? " என்றார் . " அது சரி , பரிசுத்த பாப்பரசரே , அவைகளுக்கு நீர் பலன் தாபிக்கவில்லையே " என்றார் ஆத்தும குரு . " இல்லை , இல்லை அதைக் கவனியாமல் இருப்பேன் என்று எண்ணினீர்களா ?" என புன்னகை பூத்து பதில் இறுத்தார் பாப்பானவர் . இவ்விதம் செபமாலையின் பரம இரகசியங்களைத் தியானித்த வண்ணம் அந்த பாப்பாண்டவர் இவ்வுலகை விட்டேகினார்
இதைவிட பாக்கியமான மரணம் வேண்டுமா ?
நாம் முன் கண்ட பெரியோர்கள் அர்ச் சாமிநாதரும் , முத் ஆலன் ரோச்சும் செபமாலைப் பக்தியைப் பரப்ப முயன்றனர் . எனினும் , இவர்கள் யாரையும்விட அதிகம் உழைத்தவர் கர்த்தூசியன் சபையைச் சேர்ந்த தோமினிக் குருவானவர் . ஒரு நாள் அவர் ஒரு காட்சி கண்டார் . மோட்சம் திறந்தது ; மோட்ச சபையில் அனைவரும் வெகு கம்பீரமாக விளங்கினர். வெகு இனிமையாக செபமாலையைப் பாடினர் .நம் ஆண்டவளின் நாமத்தைச் சொல்லும் போதெல்லாம் மோட்ச வாசிகள் தலை குனிவதையும் , இயேசுவின் நாமத்தை உச்சரிக்கும் போதெல்லாம் முழந்தாளிடுவதையும் கவனித்தார் . பரிசுத்த ஜெபமாலையால் பரலோக , பூலோகத்தில் செய்தருளிய நன்மைகளுக்காக நன்றி செலுத்தினர் . செபமாலைப் பக்தியை அனுசரிக்கிறவர்களுக்காக மோட்சவாசிகள் வேண்டிக் கொண்டனர். செபமாலையைப் பக்தியாய்ச் சொல்லுகிறவர்கள் மேல் வைக்க நறுமணம் வீசும் மலர்களால் ஆன எண்ணிக்கையில்லா முடிகள் தயாராக இருப்பதையும் கர்த்தூசியர் தோமினிக் கண்டார் . அவர்கள் செபமாலை செய்யும் ஒவ்வொரு முறையும் மோட்சத்தில் தரிப்பதற்கு ஒரு முடி செய்து கொள்வதையும் தரிசித்தார் .
விசுவாச மந்திரம்
பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடிய பின் செபமாலையின் பாடுபட்ட சுரூபத்தைப் பிடித்துக் கொண்டு விசுவாச மந்திரத்தைச் சொல்லுகிறோம் . புண்ணிய ஜீவியத்தின் தொடக்கம் , ஞான சீவியத்தின் ஆரம்பம் , விசுவாசம், திருச்சபையில் ஞானஸ்நானத்தினால் மக்களாகும்போது, முதன் முதல் நமக்கு அளிக்கப்படும் கொடை விசுவாசம் . விசுவாசம் இன்றி நாம் இறைவனுக்கு ப்ரியப்பட முடியாது. விசுவாசம் பூர்த்தியாகும்படி வேதம் சொல்லுகிறதென்ன ? நீதிக்காக உள்ளத்தில் விசுவசிக்கிறோம், ஈடேற்றத்திற்காக வாயினால் அவ்விசுவாசத்தை அறிக்கை செய்கிறோம் . வாய்ச் செபத்தை அவமதிக்கும் போலி ஞானிகள் இதைக் கவனிப்பார்களா ?
இவ்விதம் விசுவாசம் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக இருப்பதினால் செபமாலையைத் தொடங்கும்போதே விசுவாச மந்திரத்தைச் சொல்வது எவ்வளவு பொருத்தம் ! இறைவன் அருகில் வருகிறவன் இறைவன் இருக்கிறார் என்றும் , அவரைத் தேடுகிறவர்களுக்கு சன்மானம் அளிக்கிறார் என்றும் விசுவசிப்பது அவசியம் என்கிறது வேதம் .ஆதலின் மூவொரு கடவுள் இருக்கிறார் என்றும் ,எல்லாப் படைப்புக்களுக்கும் அவர் கர்த்தர் என்றும் ,அவரது வல்லமைக்கும், ஞானத்துக்கும் அளவில்லை என்றும் விசுவசிக்கிறோம். ஜெபமாலை சொல்லத் தொடங்கும்போது நாஸ்திக கம்யூனிசத்தையோ, நாம் தான் கடவுள் என்னும் வேதாந்தத்தையோ , கடவுள் இல்லை என்றோ ( கடவுள் கிருபையாக நமக்களித்த ) புத்தி தான் கடவுள் என்றோ புலம்பும் கழகக்காரர்களுக்குச் சவால் விடுகிறோம் . இறைவனுடைய இரக்கமுள்ள பராமரிப்பை உணர்ந்து நமது கவலைகளையும் , ஏக்கங்களையும் தள்ளி வைக்கிறோம் . அவர் பட்சமுள்ள நல்ல தகப்பனார் என்று அறிகிறோம் . இவ்விதம் விசுவாச மந்திரத்தில் முதல் பிரிவைச் சொல்லும் போதே நமது புத்தி பிரகாசத்தினால் மகிழ்கிறது . நமது உள்ளம் பிள்ளைக்குரிய பாசத்தினாலும் நம்பிக்கையினாலும் துள்ளுகிறது . செபமாலை சொல்லும்போது நாம் இறைவனை மறந்துவிடுகிறோம் என்று சொல்லுகிறவன் யார் ?
அல்லது நம் ஏக கர்த்தரும் ஒரே மனுப்பேசுகிறவருமான இயேசுக்கிறிஸ்துவைத் தள்ளி வைக்கிறோம் என்று வாய் கூசாமல் உளறுகிறவன் யார் ? செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைப் பற்றி சற்றே சிந்திக்கிறோம் . அப்போது என்ன செய்கிறோம் ? சேசுவின் வாழ்க்கையை ஆதி முதல் அந்தம் வரைப் படமாய்க் காண்கிறோம் . இதைத்தான் விசுவாச மந்திரம் சுருக்கமாய்ச் சொல்லுகிறது . ஒரே உண்மையான கடவுளையும் , அவர் அனுப்பிய இயேசுக்கிறிஸ்துவையும் அறிய வருவது தான் நித்திய சீவியம் என்றது வேத வாசகம் . நாம் வேதாகமத்தைப் புறக்கணிக்கிறோமா ?
நமது விசுவாசத்தின் ஆதிகர்த்தாவென்றும் அதைச் சம்பூரணமாக்குகிறவர் என்றும் வேதம் சொல்லும் இயேசுவைத்தானே , இயேசுவின் வாழ்க்கையைத்தானே காட்சி காட்சியாய்க் காண்கிறோம் ? தெய்வத்தின் சம்பூரணம் எல்லாம் குடிகொண்டு இருக்கிறவர் என்றும் வேதம் போதிக்கும் இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றத் தேடுவது தப்பிதமல்ல அரும் புண்ணியத்திற்கு வழி
கடவுள் நமக்கு விசுவாசத்தை அளித்தபோது நமக்கு பெரும் ஆசீர்வாதத்தைக் கொடுத்தருளினார் . விசுவாசத்தினால் மற்ற மனுமக்களுக்குமேல் உயர்த்தப்பட்டு தேவசுபாவத்தைத் தரிசிக்கவும் , அதில் பங்கடையவும் ஆற்றல் அளித்து மோட்ச சன்மானத்தைச் சம்பாதிக்கும் சாதனத்தையும் கொடுத்தருளினார் . ஆதலால் கண்ணாடியில் கண்டதுபோல் சிருஷ்டிகளிடத்தில் கடவுளைக் காணாமல் திரை மறையின்றிப் பூரண பிரகாசத்தில் அளவில்லா நன்மைத்தனத்தைக் கண்டு களிப்போம் என்ற நம்பிக்கை நம்மிடம் ஓங்கி வளர்கிறது
விசுவாச மந்திரம் நமக்கு எவ்வளவு அரிய பெரிய காரியங்களை நமக்கு ஊட்டுகிறது . செபமாலையின் துவக்கத்தில் இதைச் சொல்லுகிறோம்
செபம்
செபமாலை ராக்கினியே , பாத்திமாவின் பாக்கிய சீலியே, போர்த்துகலில் தோன்றச் சித்தமாகி எங்கும் அமைதியை நிறுவியவரே , இக்கட்டு வெள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் எங்கள் நாட்டை கடைக்கண் திருப்பிப் பார்த்தருளும் . அதன்மேல் இரங்கி அது கிடக்கும் மடுவிலிருந்து தூக்கி ஞானத்தின் ஒளியையும் ஊக்கத்தின் உறுதியையும் அதற்குத் தந்தருளும்
உலகிலுள்ள சகல சாதி சனங்களுக்கும் எங்கள் தேசத்திற்கும் சமாதானத்தைக் கொடுத்து நாங்கள் யாவரும் உம்மைச் சமாதானத்தின் அரசி என்று அழைத்து ஆர்ப்பரித்து உம்மை போற்றிப் புகழ கிருபை செய்தருளும்
செபமாலை இராக்கினியே , எங்கள் நாட்டிற்காக வேண்டிக் கொள்ளும்
ஆமென்
சரிதை
ஒன்பதாம் பத்திநாதருக்கு புனிதர் பட்டம் கொடுக்க அப்போது ஏற்பாடுகள் நடக்கின்றன. அவர் காலம் பெரும் கிளர்ச்சியான காலம் . எல்லா இக்கட்டிலும் தேவதாயிடத்தில் சரணடைவார் . அவருக்கு அமலோற்பவ நாயகியின் மேல் அதிகப் பக்தி . அவர் தானே கன்னித்தாய் ஜென்மபாவமின்றி உற்பவித்தார் என்பதை விசுவாச சத்தியமாய்ப் பிரகடனம் செய்தார் . உலகில் நடக்கும் எல்லா தப்பறைகளும் அக்கிரமிகளின் அட்டூழியங்களும் ஒரு நிபந்தனையின் மேல் அழிந்து விடும் , அந்த நிபந்தனை விசுவாசிகள் தினந்தோறும் ஜெபமாலை சொல்லி வருவதாம் என்றார்
அவர் கடைசி நாளில் வியாதியாய்ப் படுத்திருக்கும்போது ,முன்னையைப் போல் நீண்ட நேரம் ஜெபம் செய்ய சக்தி இல்லை . இக்குறையை நீக்க ஒரு வழி கண்டுபிடித்து ஒரு நாள் தன் ஆத்தும குருவானவரிடம் ' அது சரியா ? என்று கேட்டார். " என்னுடைய சயன அறையில் செபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களையும் படமாய்ச் சித்தரித்து வைத்திருக்கிறேன் . செபமாக ஒவ்வொன்றையும் சிறிது நேரம் பார்க்கிறேன் . உங்களுக்கு விளங்குகிறதா ? " என்றார் . " அது சரி , பரிசுத்த பாப்பரசரே , அவைகளுக்கு நீர் பலன் தாபிக்கவில்லையே " என்றார் ஆத்தும குரு . " இல்லை , இல்லை அதைக் கவனியாமல் இருப்பேன் என்று எண்ணினீர்களா ?" என புன்னகை பூத்து பதில் இறுத்தார் பாப்பானவர் . இவ்விதம் செபமாலையின் பரம இரகசியங்களைத் தியானித்த வண்ணம் அந்த பாப்பாண்டவர் இவ்வுலகை விட்டேகினார்
இதைவிட பாக்கியமான மரணம் வேண்டுமா ?
நாம் முன் கண்ட பெரியோர்கள் அர்ச் சாமிநாதரும் , முத் ஆலன் ரோச்சும் செபமாலைப் பக்தியைப் பரப்ப முயன்றனர் . எனினும் , இவர்கள் யாரையும்விட அதிகம் உழைத்தவர் கர்த்தூசியன் சபையைச் சேர்ந்த தோமினிக் குருவானவர் . ஒரு நாள் அவர் ஒரு காட்சி கண்டார் . மோட்சம் திறந்தது ; மோட்ச சபையில் அனைவரும் வெகு கம்பீரமாக விளங்கினர். வெகு இனிமையாக செபமாலையைப் பாடினர் .நம் ஆண்டவளின் நாமத்தைச் சொல்லும் போதெல்லாம் மோட்ச வாசிகள் தலை குனிவதையும் , இயேசுவின் நாமத்தை உச்சரிக்கும் போதெல்லாம் முழந்தாளிடுவதையும் கவனித்தார் . பரிசுத்த ஜெபமாலையால் பரலோக , பூலோகத்தில் செய்தருளிய நன்மைகளுக்காக நன்றி செலுத்தினர் . செபமாலைப் பக்தியை அனுசரிக்கிறவர்களுக்காக மோட்சவாசிகள் வேண்டிக் கொண்டனர். செபமாலையைப் பக்தியாய்ச் சொல்லுகிறவர்கள் மேல் வைக்க நறுமணம் வீசும் மலர்களால் ஆன எண்ணிக்கையில்லா முடிகள் தயாராக இருப்பதையும் கர்த்தூசியர் தோமினிக் கண்டார் . அவர்கள் செபமாலை செய்யும் ஒவ்வொரு முறையும் மோட்சத்தில் தரிப்பதற்கு ஒரு முடி செய்து கொள்வதையும் தரிசித்தார் .