- வணக்க மாதம்
- ஜெபமாலை அன்னை
- நாள் 6-10
ஆறாம் நாள்
கர்த்தர் கற்பித்த ஜெபம்
நமதாண்டவர் கற்றுக்கொடுத்த ஜெபம் எவ்வளவு மேலானது ! அதை ஆக்கியவர் மனிதரல்லர் ; சம்மனசுமல்லர்; மனிதர்களுக்கும் சம்மனசுக்களுக்கும் அரசர், நமதாண்டவராகிய இயேசுநாதர் ! அச்செபத்தின் அமைப்பில் உள்ள ஒழுங்கு முறையும் , உருக்கமான வன்மையும் , தெளிவும் நம் தேவ ஆசிரியரின் ஞானத்தை விளக்குகிறது . சிறு செபமானாலும் அநேக காரியங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது . படிக்காத பாமரருக்கும் அது விளங்கும் . கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களும் விசுவாச இரகசியங்களில் புதுப்புது எண்ணங்களை அறிய வருவார்கள்
இம்மந்திரத்தில் இறைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய எல்லாக் கடமைகளும் , எல்லா புண்ணியங்களும் நமது எல்லா ஆத்தும சரீர தேவைகளுக்கு மன்றாட்டும் பொதிந்து கிடக்கின்றன . இச்செபம் புதிய ஏற்பாட்டின் சுருக்கம் என்றார் தெர்த்துல்லியன். எல்லாப் புனிதர்களுடைய சகல ஆசைகளுக்கும் மேற்பட்டது இம்மந்திரத்தின் வேண்டுகோள் என்று ' கிறிஸ்து நாதர் அனுசார'த்தின் ஆசிரியர் குறிப்பிடுகிறார் . சங்கீதங்களிலும் உன்னத கானத்திலும் உள்ள இரசமானவைகளின் சுருக்கம் என்பதும் அதில் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கடவுளிடமிருந்து கேட்கிறோம் என்பதும் , அதில் மேலான விதமாய்க் கடவுளைப் புகழுகிறோம் என்பதும் , நமது உள்ளத்தை எழுப்பி இறைவனோடு ஒன்றிக்கிறோம் என்பதும் அவரது கருத்து
தமது மகனிடமிருந்து கற்றுக்கொண்ட செபத்தை நாம் சொல்லும்போது பிதாவானவர் அதை எவ்வளவு கவனமுடன் கேட்பார் ; கேட்பதைக் கொடுப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம் . கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லும்போதெல்லாம் நம் அற்ப பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன என்பது அர்ச் அகுஸ்தீனாரின் அபிப்பிராயம் . நம் பலவீனத்தையும் எளிமைத்தனத்தையும் நன்குணர்ந்த நாதர் நாம் எத்தனைச் சங்கடங்களுக்கு ஆளாகிறோம் என்று உணர்ந்து அந்த செபத்தைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லி வைத்திருக்கிறார்
பெரிய கலைஞர்களே ! அருமையான செப புஸ்தகங்களில் அணி அலங்காரத்தோடு எழுதிய நீங்க ஜெபங்கள் தாம் நல்லது என்று சொல்லாதீர்கள் . எவ்வளவு ஞானமுள்ள சாஸ்திரி ஆனாலும் மனிதன் ஆக்கிய செபத்தை விட , ஆண்டவர் அமைத்த ஜெபம் எவ்வளவு மேலானதாயிருக்க வேண்டும் . தெளிவான நீரூற்றை விட்டு விட்டு கலங்கலான நீர் ஓடைக்குச் செல்லாதீர்கள் . சுத்த ஜலத்தை விட்டு விட்டு சேறு கலந்த நீரைப் பருகுவது மேல் என எண்ணாதீர்கள் . இந்த செபமாகிய ஊற்றிலிருந்து புறப்படும் சிற்றோடைகள் அன்றோ மற்ற ஜெபங்கள் ?
இச்செபத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்துப் பார்த்து யோசித்துக் கவனத்தோடு இச்செபத்தைச் சொல்லுகிறவர்கள் மகா பாக்கியவான்கள் .ஏனெனில் அவர்கள் ஆசிப்பது எல்லாவற்றையும் , அவர்களுக்குத் தேவையான யாவற்றையும் இதில் கண்டடைவார்கள்
இந்த அதிசய ஜெபத்தை உச்சரிக்கத் தொடங்கும்போதே கடவுளைப் பிதாவே என்றழைத்து , அவரது மனத்தை இளக்கி நம் பக்கம் சாயச் செய்கிறோம் . தந்தையர் யாவரிலும் அவர் மகா அன்புள்ளவர் . அவர் படைத்தவைகளில் யாவற்றிலும் சகல வல்லமையுள்ளவர் . அவைகளின் பராமரிப்பில் நேசத்துக்குரியவர் . விசேஷமாய் இரட்சணிய அலுவலில் மகா அன்புக்குரிய நேசத்தந்தை . நம் தந்தை கடவுளா? அப்படியாகில் நாம் யாவரும் சகோதரர்கள் , சகோதரிகள் . மோட்சம் நமது சொந்த வீடு . இந்த ஊர் எண்ணமே இவ்வுலகப் பொருட்களிலிருந்து நம்மைப் பிரித்து இறைவனையும் அயலாரையும் நேசிக்கத்தூண்ட வேண்டும்
செபம்
ஓ செபமாலை இராக்கினியே , மாசற்ற மரியே , திரு இருதயத்தின் அன்னையே , மக்கள் உள்ளங்களை வாட்டும் பாவங்களுக்காக உண்மையிலேயே நான் மனம் நொந்து கஸ்திப்பட எனக்குக் கிருபை செய்யும். கூரிய முட்களையும் கொடிய முள் முடியையும் குரூரமான சாட்டை அடிகளையும் , இயேசுவுக்கு மரண வாதை கொடுத்த யாவற்றையும் என் கண்ணை வருத்தும் விதம் காண்கிறேன் எனினும் துன்பத்தைக் கொடுக்கும் உயிரற்ற பொருட்கள் அவை . என் பாவங்கள் அல்லவா அவரது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தச் செய்தன. எனது ஈடேற்றத்திற்காக என் மேல் வைத்த அளவற்ற அன்பால் இவை யாவற்றையும் அனுபவிக்க அவர் சித்தமானார் . இதற்கு ஏதாவது கைம்மாறு நான் செய்ய வேண்டாமா? உண்மையைச் சிந்திக்காத யோசனையற்ற உலகத்திற்காக பரிகாரம் செய்வதில் என் அற்ப சிநேகத்தைக் காட்ட வேண்டாமா ?
துக்கத்துக்குரிய பாடுகளின் வியாகுல மாதாவே , எங்கள் பாவங்கள் அவரைப் படுத்தி வைத்த ஒவ்வொரு வாதனையிலும் நீர் பங்கு கொண்டீர் . மனமார நாங்கள் செய்த அக்கிரமத்திற்கும் , துரோகத்திற்கும் பரிகாரம் செய்யும் பிரயாசையில் எங்கள் இதயத்தை உம்முடைய இதயத்தோடு ஒன்றிக்கும் அரிய வரப்பிரசாதத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும்
செபமாலை இராக்கினியே தூய அன்பினால் எங்கள் இதயம் பற்றி எரியச் செய்தருளும் ஆமென்
சரிதை
ஸ்பெயின் தேசத்து எட்டாம் அல்போன்ஸ் அரசன் மகா கேவலமான வாழ்க்கை நடத்தினான் . ஆண்டவர் அவனைப் பற்பல விதத்தில் தண்டித்து வந்தார். ஒரு சமயம் அவன் சண்டையில் முறியடிக்கப்பட்டு தன் நேசன் ஒருவன் ஊரில் அடைக்கலம் புகுந்தான் . இயேசுபாலன் பிறந்த திருநாள் அன்று சாமிநாதர் அந்தப் பட்டணம் வந்து , செபமாலையின் பெருமையைப் பற்றிப் போதித்தார் . இதைக் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மன்னன் சாமினாதரை அழைத்து அவர் சொன்னதெல்லாம் நிச்சயமாய் நடக்குமா என்றான் . " இது மகா உண்மை . நீர் தினம் பக்தியைச் செபமாலை செய்து செபமாலை மாதா சபையில் சேருவீரேயாகில் நான் சொன்ன பலன்களைக் கண்டடைவீர் " என்றார் தோமினிக். அன்று முதல் தினந்தோறும் அரசன் செபமாலை செய்து முடித்தபின் , ஒரு நாள் செபமாலை மாதா அவனுக்கு காட்சி கொடுத்து ," அல்போன்ஸ் , ஒவ்வொரு நாளும் பிரமாணிக்கமாய்ச் செபமாலை செய்து எனக்கு ஊழியம் செய்தாய் , உனக்கு வெகுமதியளிப்பேன் . என் மகனிடம் இருந்து உன் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றேன் . இன்னும் இதோ உனக்கு ஒரு செபமாலை , இதை எப்போதும் தரித்திரு . உன் பகைவர்களால் உனக்கு ஒரு தீமையும் செய்ய முடியாது " என்று சொல்லி மறைந்தார்
மன்னனுக்கு என்ன மகிழ்ச்சி ! உடனே தன் மனைவியிடம் சென்று நடந்ததையெல்லாம் சொல்லி குருடியான அவள் கண்முன் தான் பெற்ற செபமாலையைக் காண்பித்தான் . அதிசயம் ! அந்தக்கணமே அவள் இழந்த பார்வையைத் திரும்பப் பெற்றாள். சிறிது நாள் சென்று ஒரு சேனையைச் சேர்த்துக் கொண்டு தன் பகைவர்களை எதிர்த்துச் சண்டையிட்டு தான் இதுவரை இழந்த நாட்டை திரும்ப அடைந்தான். அது முதல் அவன் எச்சண்டைக்குப் போனாலும் வெற்றி ! ஆதலால் பல சேவகர்கள் ஓடி வந்து அவன் சேனையில் சேர்ந்தனர் . வெற்றிக்குக் காரணம் எது தெரியுமா? அவன் முழந்தாளில் நின்று செபம் சொல்லாமல் ஒரு சண்டைக்கும் செல்வதில்லை . தன் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள யாவரும் செபமாலை சபையில் சேர்ந்து , செபமாலை சொல்வதில் பிரமாணிக்கமாய் இருக்கச் செய்தான் . அவனும் அவன் மனைவியும் தாயின் சேவையில் ஈடுபட்டு புண்ணிய வாழ்க்கை பொலிவுற நடத்தினர்
கர்த்தர் கற்பித்த ஜெபம்
நமதாண்டவர் கற்றுக்கொடுத்த ஜெபம் எவ்வளவு மேலானது ! அதை ஆக்கியவர் மனிதரல்லர் ; சம்மனசுமல்லர்; மனிதர்களுக்கும் சம்மனசுக்களுக்கும் அரசர், நமதாண்டவராகிய இயேசுநாதர் ! அச்செபத்தின் அமைப்பில் உள்ள ஒழுங்கு முறையும் , உருக்கமான வன்மையும் , தெளிவும் நம் தேவ ஆசிரியரின் ஞானத்தை விளக்குகிறது . சிறு செபமானாலும் அநேக காரியங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது . படிக்காத பாமரருக்கும் அது விளங்கும் . கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களும் விசுவாச இரகசியங்களில் புதுப்புது எண்ணங்களை அறிய வருவார்கள்
இம்மந்திரத்தில் இறைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய எல்லாக் கடமைகளும் , எல்லா புண்ணியங்களும் நமது எல்லா ஆத்தும சரீர தேவைகளுக்கு மன்றாட்டும் பொதிந்து கிடக்கின்றன . இச்செபம் புதிய ஏற்பாட்டின் சுருக்கம் என்றார் தெர்த்துல்லியன். எல்லாப் புனிதர்களுடைய சகல ஆசைகளுக்கும் மேற்பட்டது இம்மந்திரத்தின் வேண்டுகோள் என்று ' கிறிஸ்து நாதர் அனுசார'த்தின் ஆசிரியர் குறிப்பிடுகிறார் . சங்கீதங்களிலும் உன்னத கானத்திலும் உள்ள இரசமானவைகளின் சுருக்கம் என்பதும் அதில் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கடவுளிடமிருந்து கேட்கிறோம் என்பதும் , அதில் மேலான விதமாய்க் கடவுளைப் புகழுகிறோம் என்பதும் , நமது உள்ளத்தை எழுப்பி இறைவனோடு ஒன்றிக்கிறோம் என்பதும் அவரது கருத்து
தமது மகனிடமிருந்து கற்றுக்கொண்ட செபத்தை நாம் சொல்லும்போது பிதாவானவர் அதை எவ்வளவு கவனமுடன் கேட்பார் ; கேட்பதைக் கொடுப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம் . கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லும்போதெல்லாம் நம் அற்ப பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன என்பது அர்ச் அகுஸ்தீனாரின் அபிப்பிராயம் . நம் பலவீனத்தையும் எளிமைத்தனத்தையும் நன்குணர்ந்த நாதர் நாம் எத்தனைச் சங்கடங்களுக்கு ஆளாகிறோம் என்று உணர்ந்து அந்த செபத்தைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லி வைத்திருக்கிறார்
பெரிய கலைஞர்களே ! அருமையான செப புஸ்தகங்களில் அணி அலங்காரத்தோடு எழுதிய நீங்க ஜெபங்கள் தாம் நல்லது என்று சொல்லாதீர்கள் . எவ்வளவு ஞானமுள்ள சாஸ்திரி ஆனாலும் மனிதன் ஆக்கிய செபத்தை விட , ஆண்டவர் அமைத்த ஜெபம் எவ்வளவு மேலானதாயிருக்க வேண்டும் . தெளிவான நீரூற்றை விட்டு விட்டு கலங்கலான நீர் ஓடைக்குச் செல்லாதீர்கள் . சுத்த ஜலத்தை விட்டு விட்டு சேறு கலந்த நீரைப் பருகுவது மேல் என எண்ணாதீர்கள் . இந்த செபமாகிய ஊற்றிலிருந்து புறப்படும் சிற்றோடைகள் அன்றோ மற்ற ஜெபங்கள் ?
இச்செபத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்துப் பார்த்து யோசித்துக் கவனத்தோடு இச்செபத்தைச் சொல்லுகிறவர்கள் மகா பாக்கியவான்கள் .ஏனெனில் அவர்கள் ஆசிப்பது எல்லாவற்றையும் , அவர்களுக்குத் தேவையான யாவற்றையும் இதில் கண்டடைவார்கள்
இந்த அதிசய ஜெபத்தை உச்சரிக்கத் தொடங்கும்போதே கடவுளைப் பிதாவே என்றழைத்து , அவரது மனத்தை இளக்கி நம் பக்கம் சாயச் செய்கிறோம் . தந்தையர் யாவரிலும் அவர் மகா அன்புள்ளவர் . அவர் படைத்தவைகளில் யாவற்றிலும் சகல வல்லமையுள்ளவர் . அவைகளின் பராமரிப்பில் நேசத்துக்குரியவர் . விசேஷமாய் இரட்சணிய அலுவலில் மகா அன்புக்குரிய நேசத்தந்தை . நம் தந்தை கடவுளா? அப்படியாகில் நாம் யாவரும் சகோதரர்கள் , சகோதரிகள் . மோட்சம் நமது சொந்த வீடு . இந்த ஊர் எண்ணமே இவ்வுலகப் பொருட்களிலிருந்து நம்மைப் பிரித்து இறைவனையும் அயலாரையும் நேசிக்கத்தூண்ட வேண்டும்
செபம்
ஓ செபமாலை இராக்கினியே , மாசற்ற மரியே , திரு இருதயத்தின் அன்னையே , மக்கள் உள்ளங்களை வாட்டும் பாவங்களுக்காக உண்மையிலேயே நான் மனம் நொந்து கஸ்திப்பட எனக்குக் கிருபை செய்யும். கூரிய முட்களையும் கொடிய முள் முடியையும் குரூரமான சாட்டை அடிகளையும் , இயேசுவுக்கு மரண வாதை கொடுத்த யாவற்றையும் என் கண்ணை வருத்தும் விதம் காண்கிறேன் எனினும் துன்பத்தைக் கொடுக்கும் உயிரற்ற பொருட்கள் அவை . என் பாவங்கள் அல்லவா அவரது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தச் செய்தன. எனது ஈடேற்றத்திற்காக என் மேல் வைத்த அளவற்ற அன்பால் இவை யாவற்றையும் அனுபவிக்க அவர் சித்தமானார் . இதற்கு ஏதாவது கைம்மாறு நான் செய்ய வேண்டாமா? உண்மையைச் சிந்திக்காத யோசனையற்ற உலகத்திற்காக பரிகாரம் செய்வதில் என் அற்ப சிநேகத்தைக் காட்ட வேண்டாமா ?
துக்கத்துக்குரிய பாடுகளின் வியாகுல மாதாவே , எங்கள் பாவங்கள் அவரைப் படுத்தி வைத்த ஒவ்வொரு வாதனையிலும் நீர் பங்கு கொண்டீர் . மனமார நாங்கள் செய்த அக்கிரமத்திற்கும் , துரோகத்திற்கும் பரிகாரம் செய்யும் பிரயாசையில் எங்கள் இதயத்தை உம்முடைய இதயத்தோடு ஒன்றிக்கும் அரிய வரப்பிரசாதத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும்
செபமாலை இராக்கினியே தூய அன்பினால் எங்கள் இதயம் பற்றி எரியச் செய்தருளும் ஆமென்
சரிதை
ஸ்பெயின் தேசத்து எட்டாம் அல்போன்ஸ் அரசன் மகா கேவலமான வாழ்க்கை நடத்தினான் . ஆண்டவர் அவனைப் பற்பல விதத்தில் தண்டித்து வந்தார். ஒரு சமயம் அவன் சண்டையில் முறியடிக்கப்பட்டு தன் நேசன் ஒருவன் ஊரில் அடைக்கலம் புகுந்தான் . இயேசுபாலன் பிறந்த திருநாள் அன்று சாமிநாதர் அந்தப் பட்டணம் வந்து , செபமாலையின் பெருமையைப் பற்றிப் போதித்தார் . இதைக் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மன்னன் சாமினாதரை அழைத்து அவர் சொன்னதெல்லாம் நிச்சயமாய் நடக்குமா என்றான் . " இது மகா உண்மை . நீர் தினம் பக்தியைச் செபமாலை செய்து செபமாலை மாதா சபையில் சேருவீரேயாகில் நான் சொன்ன பலன்களைக் கண்டடைவீர் " என்றார் தோமினிக். அன்று முதல் தினந்தோறும் அரசன் செபமாலை செய்து முடித்தபின் , ஒரு நாள் செபமாலை மாதா அவனுக்கு காட்சி கொடுத்து ," அல்போன்ஸ் , ஒவ்வொரு நாளும் பிரமாணிக்கமாய்ச் செபமாலை செய்து எனக்கு ஊழியம் செய்தாய் , உனக்கு வெகுமதியளிப்பேன் . என் மகனிடம் இருந்து உன் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றேன் . இன்னும் இதோ உனக்கு ஒரு செபமாலை , இதை எப்போதும் தரித்திரு . உன் பகைவர்களால் உனக்கு ஒரு தீமையும் செய்ய முடியாது " என்று சொல்லி மறைந்தார்
மன்னனுக்கு என்ன மகிழ்ச்சி ! உடனே தன் மனைவியிடம் சென்று நடந்ததையெல்லாம் சொல்லி குருடியான அவள் கண்முன் தான் பெற்ற செபமாலையைக் காண்பித்தான் . அதிசயம் ! அந்தக்கணமே அவள் இழந்த பார்வையைத் திரும்பப் பெற்றாள். சிறிது நாள் சென்று ஒரு சேனையைச் சேர்த்துக் கொண்டு தன் பகைவர்களை எதிர்த்துச் சண்டையிட்டு தான் இதுவரை இழந்த நாட்டை திரும்ப அடைந்தான். அது முதல் அவன் எச்சண்டைக்குப் போனாலும் வெற்றி ! ஆதலால் பல சேவகர்கள் ஓடி வந்து அவன் சேனையில் சேர்ந்தனர் . வெற்றிக்குக் காரணம் எது தெரியுமா? அவன் முழந்தாளில் நின்று செபம் சொல்லாமல் ஒரு சண்டைக்கும் செல்வதில்லை . தன் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள யாவரும் செபமாலை சபையில் சேர்ந்து , செபமாலை சொல்வதில் பிரமாணிக்கமாய் இருக்கச் செய்தான் . அவனும் அவன் மனைவியும் தாயின் சேவையில் ஈடுபட்டு புண்ணிய வாழ்க்கை பொலிவுற நடத்தினர்
ஏழாம் நாள்
கர்த்தர் கற்பித்த ஜெபம்
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே : உமது சர்வ வியாபகத்தால் பரலோக பூலோகத்தை நிரப்புகிறவரே, எங்கும் நிறைந்திருக்கிறவரே, உமது மகிமையினால் அர்சிஷ்டவர்களிடத்திலும், உமது நீதியினால் நரகவாசிகளிடத்திலும் , உம்முடைய வரப்பிரசாதத்தினால் நல்லவர்களிடமும் , உமது சகிப்புத் தன்மையால் பாவிகளிடத்திலும் இருக்கிறீர் . நாங்கள் உம்மிடம் தங்கி இருந்து உம்மையே நினைக்கவும் , உம்முடைய உண்மையான மக்கள் வாழ வேண்டிய முறையில் நாங்கள் வாழவும் , நாங்கள் உம்மையே நோக்கி நாடவும் ,எங்கள் சத்துவத்தைஎல்லாம் கூட்டி உம்மையே நாங்கள் தேடவும் , எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும் . நீர் மனுக்குலத்தின் தந்தை . ஏனெனில் எல்லாவற்றையும் உருவாக்கிக் காப்பாற்றுகிறீர் . விசேஷமாய் எங்களை இரட்சித்தீர். பாவிகளுக்கு நீர் இரக்கமுள்ள தந்தை . நீதிமான்களின் நண்பரான தந்தை . மோட்சவாசிகளுக்கு மகிமையுள்ள தகப்பன்
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக : " கர்த்தரின் நாமம் பரிசுத்தமும் பயங்கரமானதுமென்றார் தாவீது அரசர் . " பக்தி சுவாலகர் , ஞானாதிக்கர்களுடைய வாழ்த்துக்களினால் மோட்சம் முழங்குகிறது " என்றார் இசையாஸ் . பரிசுத்தரான மாட்சிமை நிறைந்த கர்த்தாவே , உம் குணாதிசயங்களை உலகெலாம் அறிய வேண்டும் . யூதர்கள் முதலிய பிற மதத்தினர் உம்மை அறிந்து ஆராதிக்க வேண்டும் . எல்லா மக்களும் உயிருள்ள விசுவாசத்தோடும் ,அசையாத நம்பிக்கையோடும் , கொழுந்து விட்டு எரியும் நேசத்தோடும் எல்லாப் பொய்க் கோட்பாடுகளையும் எறிந்து விட்டு உமக்கு ஊழியம் செய்து உம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்
உம்முடைய இராச்சியம் வருக : மரணத்திற்குப் பின் உம்முடைய அரசாளும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டும் வண்ணம் இப்போது உம் வரப்பிரசதத்தால் எங்கள் ஆன்மாவில் அரசாளும் . மோட்சத்தில் சம்மனசுக்கள் உமக்குக் கீழ்ப்படிவது போல உலகில் மனிதர்கள் யாவரும் உமக்கே கீழ்ப்படிந்து வருவார்களாக . மோட்ச ராஜ்ஜியம் எங்களுக்கு கிட்டும்படி கேட்கிறோம் . அச்சந்தோஷத்தையும் மகிமையையும் ஆசித்து வேண்டிக் கொள்ளுகிறோம் . மோட்ச அரசில் நாம் சேர வேண்டுமானாலும் , பிறரைச் சேரச் செய்ய வேண்டுமானாலும் முதன் முதலில் வரப்பிரசாதத்தினால் அந்த ராச்சியத்தை நாம் உள்ளத்தில் தாபிக்க வேண்டும்
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக :
மனிதர்கள் இறைவனுடைய சித்தம் , தீர்மானம் நிறைவேறாமல் தடுத்துவிடுவார்கள் என்ற பயம் நமக்கில்லை. நாம் கேட்பது யாதெனில் " பிதாவே , நாங்கள் உமது சித்தத்தோடு ஒத்துழைக்கும் பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருளும். இவ்வுலகில் என்னிலோ, மற்றவர்களிடமோ என்னென்ன நடந்தேற நீர் சம்மதிக்கிரீரோ , அவைகளைஎல்லாம் நாங்கள் பொறுமையாய் ஏற்றுக் கொள்ள கிருபை செய்தருளும் " உம் கற்பனைகளினால் , ஏவுதலினால், சம்மதத்தினால் என்னென்ன நடைபெற நீர் ஆசிக்கிறீரோ , அவைகளெல்லாம் எங்களிலும் , எங்களாலும் , மேலும் நடைபெறக் கிருபை கூரும்.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் : நம் ஆத்துமத்தின் ஜீவியத்திற்கோ , சரீரத்தின் ஜீவியத்திற்கோ தேவையான யாவற்றையும் கடவுளிடம் இருந்து கேட்க வேண்டும் . ஆண்டவரே , நாங்கள் தரித்திரர் , ஒன்றும் இல்லாதவர்கள் , ஒன்றுக்கும் ஆகாதவர்கள் , உம் பராமரிப்பு ஒன்றையே நாங்கள் நம்பி வாழ்கிறோம் . எங்களுக்கு இவ்வுலகில் வேண்டிய உணவையும் உறைவிடத்தையும் உடையையும் நாங்கள் கேட்கிறோம் . சுகமான வாழ்வையோ, விருந்து உணவையோ , கம்பீரமான உடையையோ கேட்கவில்லை . எங்களுக்குத் தேவையானதைக் கேட்கிறோம்
உலகப் பொருட்கள் மேல் எங்களுக்குப் பற்றில்லை .அவைகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் இல்லை . நாளையை நினையாத குழந்தைகளைப் போல இன்றைக்கு வேண்டிய உணவைக் கேட்கிறோம் . நாளைக்கு வேண்டியதை நீர் பார்த்துக் கொள்வீர். உம்முடைய உதவி ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவை . நாள்தோறும் நாங்கள் உமது அடைக்கலத்தை நம்பி வாழ்வோம் . எனக்கு மாத்திரம் இவைகளைக் கேட்கவில்லை. எங்கள் உற்றார் , உறவினர்களுக்காகவும் , எங்கள் ஊராருக்காகவும் , எங்கள் நாட்டாருக்காகவும் கேட்கிறோம் . இக்காலம் அகதிகளின் நாள் . இக்காலத்தில் தவிக்கும் கோடிக்கணக்கான அகதிகளுக்கு உணவு , உடை , உறைவிடம் தந்தருளும் தேவ பிதாவே
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் :
பாவி, கடன்காரன். இறைவனுக்கு கடன் செலுத்த வேண்டியவன். நாம் கட்டிக்கொண்ட எல்லா பாவங்களுக்காகவும் மனஸ்தாபத்தோடு , தாழ்மையோடு , நம்பிக்கையோடு மன்னிப்பு கேட்க வேண்டும் . பிதாவே எங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களை உமக்காக நாங்கள் மன்னிக்கிறோம் . இரக்கமுள்ள பிதாவே , அன்புள்ள பிதாவே , நீரும் எங்கள் பாவங்களை மன்னிக்கத் தயை புரியும்
எங்களைச் சோதனையில் விழ விடாதேயும் : பிதாவே சோதனையை ஜெயிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பைக் காட்டுவோம் . சோதனையில்லாவிடில் நாங்கள் அகங்காரிகளாகி விடுவோம் . சோதனை வந்தால் அதை வெல்ல எங்களுக்கு உதவி செய்யும்
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும் : பஞ்சம் படை கொள்ளை நோய்களினின்று எங்களைக் காப்பாற்றும் . சண்டைக்கு ஆயத்தமான இடி எங்கும் முழங்குகிறது . யுத்தம் வேண்டாம் ஆண்டவரே
பேய் எங்களுக்குத் தீமை ; எங்களுடைய சத்துரு . ஆண்டவரே எங்கள் அருகிலிருந்து அவனை ஓட்டியருளும் ஆமென்
செபம்
செபமாலை இராக்கினியே , செபமாலை மணிகளை நாங்கள் விரும்ப வேண்டும் . உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்கு எல்லா இக்கட்டிலும் , இன்னலிலும் செபமாலை ஆறுதல் அளித்தது . ஓ மாமரியே ! என் அன்னையே , என்னுடைய பலவீனத்தில் பலமாகவும் , சந்தேகத்தில் ஒளியாகவும் , துயரத்தில் சமாதானமாகவும் , சோதனை நேரத்தில் தைரியமாகவும் , வாழ்நாள் எல்லாம் உம் செபமாலை தேற்றரவாகவும் இருப்பதாக . செபமாலை மாதாவே , செபமாலை பக்தி உலகெங்கிலும் விரைவில் பரவுவதாக ஆமென்
சரிதை
தனித்த ஆளோ, குடும்பங்களோ , தேசங்களோ , செபமாலை வழியாய்ப் பேய்கள் மேலும் , தங்கள் எதிரிகள் மேலும் கொண்ட வெற்றிகளுக்குக் கணக்கில்லை . போர் முனையில் செபமாலையினால் பெற்ற வெற்றிகளில் எல்லாம் முதன்மையானது லெப்பாந்தொ என்னும் கப்பல் சண்டையில் கிறிஸ்தவர்கள் கொண்ட ஜெயமாம்
துருக்கியர்கள் கப்பல் படையில் மகா வலிமை பெற்றிருந்த காலம் . மத்தியதரைக்கடலில் தங்கள் கப்பல் படையை நிறுத்தி கிறிஸ்தவ ஐரோப்பா முழுவதும் நாசமாக்க நினைத்திருந்தனர் . இக்கலக நேரத்தில் அர்ச் 5 ஆம் பத்திநாதர் அவர்களை எதிர்க்க ஓர் ஐக்கிய அணியை உருவாக்கினார் . வெனிஸ் , ஜெனீவா , ஸ்பானியா இராச்சியங்களின் கப்பற் படைகள் ஒன்றாய்ச் சேர்ந்தன . அவைகளை ஆஸ்திரியா நாட்டு தொன்ஜான் தலைமை தாங்கி நடத்தினார்
1569 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி அர்ச் 5 ஆம் பத்திநாதர் சுற்றறிக்கை அனுப்பி கிறிஸ்துவ சேனையின் வெற்றிக்காக எல்லாக் கிறிஸ்தவர்களும் செபமாலை சொல்லி வேண்டும்படிக் கேட்டுக் கொண்டார் . எல்லா ஆலயங்களிலும் நாற்பது மணி நேர ஆராதனை , செபமாலையின் பேரால் சுற்றுப்பிரகாரங்கள் நடத்தவும் , செபமாலை சொல்லவும் கற்பித்தார் . அக்டோபர் ஏழாம் தேதிக்கு முந்தின இரவு முழுவதும் பாப்பாண்டவர் செபத்தில் ஊன்றி நின்றார்
லெப்பாந்தொ என்ற இடத்தில் யுத்தத்திற்கு அணிவகுத்தவுடன் எல்லா மாலுமிகளும் செபமாலை செய்து ஒப்புக்கொடுத்தனர் . அதன்பின் அப்போஸ்தலிக் தானாதிபதி அப்போஸ்தலிக் ஆசீர்வாதம் அவர்களுக்களித்தார் . அறுபத்து ஐந்தாயிரம் மக்கள் காலைப் பூசையில் தேவ நற்கருணை அருந்தி , மூன்று மணி நேரமாகச் செபமாலை செய்தனர் . போர் தொடங்கியது . துவக்கத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் காற்று வீசியது . ஆனால் அது திடீரென நின்று விட்டது . மாலை வெகு நேரம் வரை போர் மும்முரமாக நடந்தது . துருக்கியர்கள் பின்னடைந்து ஓடினர் . இந்த வெற்றியால் கிறிஸ்தவர்கள் துருக்கியரது கப்பல் படையின் முதுகெலும்பை நொறுக்கி விட்டனர் எனலாம். அதற்குப் பின் அவர்கள் கடற்போரில் தலை தூக்கவில்லை . மத்திய தரைக்கடலில் அவர்களது கொட்டம் அடங்கியது
முதல் துவக்கத்திலிருந்தே தொன்ஜான் செபமாலையினால் தான் வெற்றி ஏற்பட்டது என்றார் . வெனிஸ் மந்திர ஆலோசனை சபையும் மற்ற நாடுகளுக்கு இந்த வெற்றியை அறிவித்தபோது , தள கர்த்தர்கள் அல்ல ,மாலுமிகளின் படையல்ல வெற்றிக்குக் காரணம் . வெற்றியைக் கொடுத்தது செபமாலை மாதா தான் என்றனர் .
செபமாலை இராக்கினி கொடுத்த இந்த வெற்றிக்கு நன்றியறிதலாகத்தான் தேவமாதாப் பிரார்த்தனையில் செபமாலை இராக்கினியே என்று அழைத்தார்கள். இவ்வெற்றியின் நினைவாக அக்டோபர் 7 ஆம் நாள் செபமாலை மாதாவின் திருநாளாகக் கொண்டாடுகிறோம்
கர்த்தர் கற்பித்த ஜெபம்
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே : உமது சர்வ வியாபகத்தால் பரலோக பூலோகத்தை நிரப்புகிறவரே, எங்கும் நிறைந்திருக்கிறவரே, உமது மகிமையினால் அர்சிஷ்டவர்களிடத்திலும், உமது நீதியினால் நரகவாசிகளிடத்திலும் , உம்முடைய வரப்பிரசாதத்தினால் நல்லவர்களிடமும் , உமது சகிப்புத் தன்மையால் பாவிகளிடத்திலும் இருக்கிறீர் . நாங்கள் உம்மிடம் தங்கி இருந்து உம்மையே நினைக்கவும் , உம்முடைய உண்மையான மக்கள் வாழ வேண்டிய முறையில் நாங்கள் வாழவும் , நாங்கள் உம்மையே நோக்கி நாடவும் ,எங்கள் சத்துவத்தைஎல்லாம் கூட்டி உம்மையே நாங்கள் தேடவும் , எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும் . நீர் மனுக்குலத்தின் தந்தை . ஏனெனில் எல்லாவற்றையும் உருவாக்கிக் காப்பாற்றுகிறீர் . விசேஷமாய் எங்களை இரட்சித்தீர். பாவிகளுக்கு நீர் இரக்கமுள்ள தந்தை . நீதிமான்களின் நண்பரான தந்தை . மோட்சவாசிகளுக்கு மகிமையுள்ள தகப்பன்
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக : " கர்த்தரின் நாமம் பரிசுத்தமும் பயங்கரமானதுமென்றார் தாவீது அரசர் . " பக்தி சுவாலகர் , ஞானாதிக்கர்களுடைய வாழ்த்துக்களினால் மோட்சம் முழங்குகிறது " என்றார் இசையாஸ் . பரிசுத்தரான மாட்சிமை நிறைந்த கர்த்தாவே , உம் குணாதிசயங்களை உலகெலாம் அறிய வேண்டும் . யூதர்கள் முதலிய பிற மதத்தினர் உம்மை அறிந்து ஆராதிக்க வேண்டும் . எல்லா மக்களும் உயிருள்ள விசுவாசத்தோடும் ,அசையாத நம்பிக்கையோடும் , கொழுந்து விட்டு எரியும் நேசத்தோடும் எல்லாப் பொய்க் கோட்பாடுகளையும் எறிந்து விட்டு உமக்கு ஊழியம் செய்து உம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்
உம்முடைய இராச்சியம் வருக : மரணத்திற்குப் பின் உம்முடைய அரசாளும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டும் வண்ணம் இப்போது உம் வரப்பிரசதத்தால் எங்கள் ஆன்மாவில் அரசாளும் . மோட்சத்தில் சம்மனசுக்கள் உமக்குக் கீழ்ப்படிவது போல உலகில் மனிதர்கள் யாவரும் உமக்கே கீழ்ப்படிந்து வருவார்களாக . மோட்ச ராஜ்ஜியம் எங்களுக்கு கிட்டும்படி கேட்கிறோம் . அச்சந்தோஷத்தையும் மகிமையையும் ஆசித்து வேண்டிக் கொள்ளுகிறோம் . மோட்ச அரசில் நாம் சேர வேண்டுமானாலும் , பிறரைச் சேரச் செய்ய வேண்டுமானாலும் முதன் முதலில் வரப்பிரசாதத்தினால் அந்த ராச்சியத்தை நாம் உள்ளத்தில் தாபிக்க வேண்டும்
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக :
மனிதர்கள் இறைவனுடைய சித்தம் , தீர்மானம் நிறைவேறாமல் தடுத்துவிடுவார்கள் என்ற பயம் நமக்கில்லை. நாம் கேட்பது யாதெனில் " பிதாவே , நாங்கள் உமது சித்தத்தோடு ஒத்துழைக்கும் பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருளும். இவ்வுலகில் என்னிலோ, மற்றவர்களிடமோ என்னென்ன நடந்தேற நீர் சம்மதிக்கிரீரோ , அவைகளைஎல்லாம் நாங்கள் பொறுமையாய் ஏற்றுக் கொள்ள கிருபை செய்தருளும் " உம் கற்பனைகளினால் , ஏவுதலினால், சம்மதத்தினால் என்னென்ன நடைபெற நீர் ஆசிக்கிறீரோ , அவைகளெல்லாம் எங்களிலும் , எங்களாலும் , மேலும் நடைபெறக் கிருபை கூரும்.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் : நம் ஆத்துமத்தின் ஜீவியத்திற்கோ , சரீரத்தின் ஜீவியத்திற்கோ தேவையான யாவற்றையும் கடவுளிடம் இருந்து கேட்க வேண்டும் . ஆண்டவரே , நாங்கள் தரித்திரர் , ஒன்றும் இல்லாதவர்கள் , ஒன்றுக்கும் ஆகாதவர்கள் , உம் பராமரிப்பு ஒன்றையே நாங்கள் நம்பி வாழ்கிறோம் . எங்களுக்கு இவ்வுலகில் வேண்டிய உணவையும் உறைவிடத்தையும் உடையையும் நாங்கள் கேட்கிறோம் . சுகமான வாழ்வையோ, விருந்து உணவையோ , கம்பீரமான உடையையோ கேட்கவில்லை . எங்களுக்குத் தேவையானதைக் கேட்கிறோம்
உலகப் பொருட்கள் மேல் எங்களுக்குப் பற்றில்லை .அவைகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் இல்லை . நாளையை நினையாத குழந்தைகளைப் போல இன்றைக்கு வேண்டிய உணவைக் கேட்கிறோம் . நாளைக்கு வேண்டியதை நீர் பார்த்துக் கொள்வீர். உம்முடைய உதவி ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவை . நாள்தோறும் நாங்கள் உமது அடைக்கலத்தை நம்பி வாழ்வோம் . எனக்கு மாத்திரம் இவைகளைக் கேட்கவில்லை. எங்கள் உற்றார் , உறவினர்களுக்காகவும் , எங்கள் ஊராருக்காகவும் , எங்கள் நாட்டாருக்காகவும் கேட்கிறோம் . இக்காலம் அகதிகளின் நாள் . இக்காலத்தில் தவிக்கும் கோடிக்கணக்கான அகதிகளுக்கு உணவு , உடை , உறைவிடம் தந்தருளும் தேவ பிதாவே
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் :
பாவி, கடன்காரன். இறைவனுக்கு கடன் செலுத்த வேண்டியவன். நாம் கட்டிக்கொண்ட எல்லா பாவங்களுக்காகவும் மனஸ்தாபத்தோடு , தாழ்மையோடு , நம்பிக்கையோடு மன்னிப்பு கேட்க வேண்டும் . பிதாவே எங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களை உமக்காக நாங்கள் மன்னிக்கிறோம் . இரக்கமுள்ள பிதாவே , அன்புள்ள பிதாவே , நீரும் எங்கள் பாவங்களை மன்னிக்கத் தயை புரியும்
எங்களைச் சோதனையில் விழ விடாதேயும் : பிதாவே சோதனையை ஜெயிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பைக் காட்டுவோம் . சோதனையில்லாவிடில் நாங்கள் அகங்காரிகளாகி விடுவோம் . சோதனை வந்தால் அதை வெல்ல எங்களுக்கு உதவி செய்யும்
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும் : பஞ்சம் படை கொள்ளை நோய்களினின்று எங்களைக் காப்பாற்றும் . சண்டைக்கு ஆயத்தமான இடி எங்கும் முழங்குகிறது . யுத்தம் வேண்டாம் ஆண்டவரே
பேய் எங்களுக்குத் தீமை ; எங்களுடைய சத்துரு . ஆண்டவரே எங்கள் அருகிலிருந்து அவனை ஓட்டியருளும் ஆமென்
செபம்
செபமாலை இராக்கினியே , செபமாலை மணிகளை நாங்கள் விரும்ப வேண்டும் . உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்கு எல்லா இக்கட்டிலும் , இன்னலிலும் செபமாலை ஆறுதல் அளித்தது . ஓ மாமரியே ! என் அன்னையே , என்னுடைய பலவீனத்தில் பலமாகவும் , சந்தேகத்தில் ஒளியாகவும் , துயரத்தில் சமாதானமாகவும் , சோதனை நேரத்தில் தைரியமாகவும் , வாழ்நாள் எல்லாம் உம் செபமாலை தேற்றரவாகவும் இருப்பதாக . செபமாலை மாதாவே , செபமாலை பக்தி உலகெங்கிலும் விரைவில் பரவுவதாக ஆமென்
சரிதை
தனித்த ஆளோ, குடும்பங்களோ , தேசங்களோ , செபமாலை வழியாய்ப் பேய்கள் மேலும் , தங்கள் எதிரிகள் மேலும் கொண்ட வெற்றிகளுக்குக் கணக்கில்லை . போர் முனையில் செபமாலையினால் பெற்ற வெற்றிகளில் எல்லாம் முதன்மையானது லெப்பாந்தொ என்னும் கப்பல் சண்டையில் கிறிஸ்தவர்கள் கொண்ட ஜெயமாம்
துருக்கியர்கள் கப்பல் படையில் மகா வலிமை பெற்றிருந்த காலம் . மத்தியதரைக்கடலில் தங்கள் கப்பல் படையை நிறுத்தி கிறிஸ்தவ ஐரோப்பா முழுவதும் நாசமாக்க நினைத்திருந்தனர் . இக்கலக நேரத்தில் அர்ச் 5 ஆம் பத்திநாதர் அவர்களை எதிர்க்க ஓர் ஐக்கிய அணியை உருவாக்கினார் . வெனிஸ் , ஜெனீவா , ஸ்பானியா இராச்சியங்களின் கப்பற் படைகள் ஒன்றாய்ச் சேர்ந்தன . அவைகளை ஆஸ்திரியா நாட்டு தொன்ஜான் தலைமை தாங்கி நடத்தினார்
1569 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி அர்ச் 5 ஆம் பத்திநாதர் சுற்றறிக்கை அனுப்பி கிறிஸ்துவ சேனையின் வெற்றிக்காக எல்லாக் கிறிஸ்தவர்களும் செபமாலை சொல்லி வேண்டும்படிக் கேட்டுக் கொண்டார் . எல்லா ஆலயங்களிலும் நாற்பது மணி நேர ஆராதனை , செபமாலையின் பேரால் சுற்றுப்பிரகாரங்கள் நடத்தவும் , செபமாலை சொல்லவும் கற்பித்தார் . அக்டோபர் ஏழாம் தேதிக்கு முந்தின இரவு முழுவதும் பாப்பாண்டவர் செபத்தில் ஊன்றி நின்றார்
லெப்பாந்தொ என்ற இடத்தில் யுத்தத்திற்கு அணிவகுத்தவுடன் எல்லா மாலுமிகளும் செபமாலை செய்து ஒப்புக்கொடுத்தனர் . அதன்பின் அப்போஸ்தலிக் தானாதிபதி அப்போஸ்தலிக் ஆசீர்வாதம் அவர்களுக்களித்தார் . அறுபத்து ஐந்தாயிரம் மக்கள் காலைப் பூசையில் தேவ நற்கருணை அருந்தி , மூன்று மணி நேரமாகச் செபமாலை செய்தனர் . போர் தொடங்கியது . துவக்கத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் காற்று வீசியது . ஆனால் அது திடீரென நின்று விட்டது . மாலை வெகு நேரம் வரை போர் மும்முரமாக நடந்தது . துருக்கியர்கள் பின்னடைந்து ஓடினர் . இந்த வெற்றியால் கிறிஸ்தவர்கள் துருக்கியரது கப்பல் படையின் முதுகெலும்பை நொறுக்கி விட்டனர் எனலாம். அதற்குப் பின் அவர்கள் கடற்போரில் தலை தூக்கவில்லை . மத்திய தரைக்கடலில் அவர்களது கொட்டம் அடங்கியது
முதல் துவக்கத்திலிருந்தே தொன்ஜான் செபமாலையினால் தான் வெற்றி ஏற்பட்டது என்றார் . வெனிஸ் மந்திர ஆலோசனை சபையும் மற்ற நாடுகளுக்கு இந்த வெற்றியை அறிவித்தபோது , தள கர்த்தர்கள் அல்ல ,மாலுமிகளின் படையல்ல வெற்றிக்குக் காரணம் . வெற்றியைக் கொடுத்தது செபமாலை மாதா தான் என்றனர் .
செபமாலை இராக்கினி கொடுத்த இந்த வெற்றிக்கு நன்றியறிதலாகத்தான் தேவமாதாப் பிரார்த்தனையில் செபமாலை இராக்கினியே என்று அழைத்தார்கள். இவ்வெற்றியின் நினைவாக அக்டோபர் 7 ஆம் நாள் செபமாலை மாதாவின் திருநாளாகக் கொண்டாடுகிறோம்
எட்டாம் நாள்
அருள் நிறைந்த மரியே
இம்மந்திரத்திர்க்கு மேல்நாட்டு மொழியில் சாதாரணமாய் வழங்கும் மொழி, சம்மனசின் வாழ்த்து அல்லது சம்மனசின் மங்களம் . இச்செபம் பரலோகத்துக்கு உரியது . மகா அழ்ந்த கருத்துக்கள் அடங்கினதாக இருக்கிறபடியால் கன்னித்தாயும் இயேசுவும் தான் இதைச் சரிவரக் கண்டுபிடிக்க முடியும் என்றார் முத். ஆலன் ரோச் . இது மரியன்னைக்குச் சொல்லப்பட்ட மங்களமானபடியாலும், கபிரியேல் வான தூதர் கொண்டு வந்த நற்செய்தியானதாலும் இதன் மதிப்பு உயர்ந்தது.
சம்மனசின் வாழ்த்து தேவதாயைப் பற்றிச் சொல்லக்கூடிய போதனையின் தொகுதி . இதில் இரு பகுதி உள்ளது . முந்தியது தேவதாயின் மகிமையைக் கூறுகிறது . பிந்தியது அவரது நன்மைத்தனத்திளிருந்து அடையக்கூடியவைகளைக் காட்டுகிறது . முதல் பாகத்தில் உள்ளது மகா பரிசுத்த திரித்துவம் மொழிந்தது . மற்றது அர்ச் எலிசபெத்தமாளின் கூற்று . இரண்டாம் பாகம் திருச்சபை அமைத்தது
உலக சரித்திரத்திலேயே அதி உன்னத நிகழ்ச்சி நித்திய வார்த்தையின் மனிதாவதாரம் .அவர் உலகத்தை இரட்சித்து மனிதனுக்கும் , தேவனுக்கும் இடையில் சமாதானத்தை மறுபடியும் நிறுவியவர் . கபிரியேல் மாமரிக்கு மங்களம் கூறியபோது இந்நிகழ்ச்சி நடைமுறையில் வந்தது
சம்மனசின் மங்களத்தில் பிதாப் பிதாக்களுடையவும் , தீர்க்கதரிசிகளுடையவும் , அப்போஸ்தலர்களுடையவும் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் காணலாம் . வேதசாட்சிக்கு அசையாத உறுதியையும் , பலனையும் இது பொழிந்தது . திருச்சபையின் வேத பாரகர்களுக்கு ஞானம் இது ;ஸ்துதியர்களுக்குப் பிரமானிக்கமும் , துதியர்களுக்கு வாழ்வும் இது . இது வரப்பிரசாத சட்டத்தின் புதிய சங்கீதம் . சம்மனசுக்களுக்கும் , மனிதர்களுக்கும் ஆனந்தம் . பேய்களைக் கலங்கடித்து வெட்கத்தை ஊற்றித் துரத்தி விரட்டும் . காரணம் சம்மனசின் மங்களத்தால் கடவுள் மனிதரானார் , கன்னி கடவுளின் தாயானார் , நீதிமான்களுடைய ஆத்துமங்கள் பாதாளத்திலிருந்து விடுதலை அடைந்தன . மோட்சத்தின் காலி ஆசனங்கள் நிறைந்தன. அத்தோடு பாவம் மன்னிக்கப்பட்டது . நமக்கு வரப்பிரசாதம் வழங்கப்பட்டது . நோயாளிகள் சுகமானார்கள் . மரித்தோர் திரும்பவும் உயிர் பெற்றார்கள் . அகதிகள் வீடு வந்து சேர்ந்தனர் , தமத்திருத்துவத்தின் கோபம் தணிக்கப்பட்டது , மனிதர்கள் நித்திய சீவன் அடைந்தனர்
இறைவனுடைய மகத்துவத்தைப் போல் பெரிது ஒன்றும் இல்லை . பாவத்தின் ஈனத்தைப் போல வேறொரு ஈனமும் கிடையாது . எனினும் நாம் அவருக்குச் செலுத்தும் வாழ்த்துதலையும், விண்ணப்பத்தையும் அவர் தள்ளி விடுவதில்லை . சம்மனசின் மங்களம் ஓர் அருமையான கீதம் . மனிதாவதாரம் இரட்சணியம் என்னும் வரப்பிரசாதத்துக்காக செலுத்தும் நன்றியின் கீதம் . இதில் பிதாவுக்கு மங்களம் சொல்லுகிறோம் . ஏனெனில் அவர்தம் ஏக குமாரனையே நமக்கு இரட்சகராகத் தந்தார். சுதனுக்கு நன்றி கூரிகிறோம். ஏனெனில் வானத்தை விட்டுப் பூமியில் வந்து மனிதராகிய நம்மை இரட்சித்தார். பரிசுத்த ஆவிக்குத் தோத்திரம் புரிகிறோம் . ஏனெனில் கன்னி மரியின் உதரத்தில் நமதாண்டவருக்குப் புனித உடலை உருவாக்கினார். மூவருக்கும் நன்றியரிந்த தோத்திரமாக 'அருள் நிறைந்த மரியே' என சொல்லுகிறோம்
இம்மந்திரத்தில் நேர்முகமாகக் கடவுளின் தாயைப் புகழ்கிறோம் .எனினும் அது தமத்திருத்துவத்திற்குப் பெரும் மகிமை வளர்க்கிறது . தேவதாயைப் புகழும்போது பிதாவின் அருமையான சிருஷ்டியை , சுதனின் அமலோற்பவ மாதாவை பரிசுத்த ஆவியின் பத்தினியைப் புகழ்வதால் திரித்துவத்திற்குப் புகழ்ச்சி தானே ? எலிசபெத்தம்மாள் வாழ்த்தின போது தாய் அந்த வாழ்த்துதலை உடனே கடவுளின் பக்கம் திருப்பினார் அன்றோ ? அது போல் இப்பொழுதும் செய்கிறார் .
செபம்
செபமாலை இராக்கினியே , அமலோற்பவ மாமரியே , மனுமக்களுக்காக மனுப்பேசுகிறவரே, பாத்திமாவில் நீர் அளித்த வாக்கும் , நம்பிக்கையும் சீக்கிரம் நடைமுறைக்கு வரக் கிருபை செய்யும். உலகில் எத்தனையோ மக்கள் உயிரிழந்தார்கள் . வேறு எத்தனை பேர் அடிமைத் தளங்களிலும் இக்கட்டிலும் நெஞ்சுருகிக் கிடக்கின்றனர் . சமாதானத்துக்கு அடுத்தவைகளை நாங்கள் அறிய வேண்டும் என்பது மாசில்லா உமது இருதயத்தின் மட்டுக்கடங்கா ஆசையல்லவா? தேவதாயே, நீர் பரிகாரத்தையும், செபமாலை செபத்தையும் எங்கள் பாவங்களுக்காக உள்ளம் உடைந்த மனஸ்தாபத்தையும் விரும்புகிறீர் என்றீர் . கிறிஸ்தவர்கள் யாவரும் உமது வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கும்படி செய்தருளும் . இந்தியாவின் மேல் உமது கிருபைக் கண்களைத் திருப்பியருளும் . நங்கள் ஏழை மக்கள் அம்மா . இந்துத்துவா மாய வலையில் இருந்து எங்களைக் காப்பாற்றும் . அதற்காக இந்தியக் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பழுதற்றவர்களாய் இருக்கச் செய்யும் அம்மா , இரக்கமுள்ள செபமாலை மாதாவே ஆமென்
சரிதை
கலீஷியாவுக்கும் லியோனுக்கும் அரசரான அல்போன்சுக்கு ஒரே ஓர் ஆசை , தன் பணியாளர் யாவரும் செபமாலை செய்து தேவதாயை வாழ்த்த வேண்டும் என்பது . அதற்காகத்தான் அரைக் கச்சையிலிருந்து ஒரு பெரிய செபமாலையைத் தொங்க விட்டிருந்தான் . என்ன காரணத்தினாலோ அவன் செபமாலை சொல்லுவதில்லை . எனினும் அவனிடம் இருந்த செபமாலையைக் கண்டு அவனுடைய அரண்மனையிலே உள்ளவர்கள் பக்தியாய்ச் செபமாலை செய்து வந்தனர்.
ஒருநாள் அரசன் கடும் வியாதியாய் விழுந்தான் . அவன் இறந்துவிட்டான் என்றே எல்லோரும் எண்ணினர். அச்சமயம் அவன் ஒரு காட்சி கண்டான் . ஆண்டவரின் நீதி ஸ்தலமுன் நின்றான் . கணக்கற்ற பேய்கள் அவனைச் சூழ்ந்து நின்று அவன் கட்டிக்கொண்ட சகல பாவங்களையும் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டின . ஆண்டவரும் அவனை நரகத்துக்கு அனுப்பத் தயாராக இருந்தார் . அந்நேரம் தேவதாய் தோன்றி அவனுக்காக மனுப்பேசி அவன் செய்திருந்த பாவங்களை தராசின் ஒரு தட்டிலும் , அவன் தரித்திருந்த செபமாளையையும், அதைக் கண்டு மக்கள் சொல்லிய செபமாலைகளையும் மற்ற தட்டிலும் வைத்தார். அதிக கணம் செபமாலைகளுக்கு இருந்தன
மகா பட்சத்தோடு தேவதாய் அரசனை நோக்கி " நீ செபமாலையை எப்போதும் தரித்து என்னை மகிமைப்படுத்தினபடியால் என்னுடைய மகனிடமிருந்து உனக்குப் பெரும் கிருபையைப் பெற்றேன் . இன்னும் சில ஆண்டுகளுக்கு உலகில் உயிரோடு இருப்பாய் . தபஞ்செய்து அக்காலத்தை நன்றாய்ச் செலவழி" என்று சொல்லி மறைந்தார். அரசன் தன் நினைவு பெற்றபோது உரத்த சத்தமாய்ச் சொன்னான் " மகாப் பரிசுத்த மரியின் செபமாலை பாக்கியம் பெற்றது . அதனால் தான் நித்திய நரகத்திலிருந்து தப்பினேன் " . முழுதும் சுகம் பெற்று , தன் மீதி வாழ்நாளை செபமாலை பக்தியைப் பரப்புவதிலும் அதைப் பிரமாணிக்கமாய்த் தானே தினந்தோறும் செய்வதிலும் செலவழித்தான்
அருள் நிறைந்த மரியே
இம்மந்திரத்திர்க்கு மேல்நாட்டு மொழியில் சாதாரணமாய் வழங்கும் மொழி, சம்மனசின் வாழ்த்து அல்லது சம்மனசின் மங்களம் . இச்செபம் பரலோகத்துக்கு உரியது . மகா அழ்ந்த கருத்துக்கள் அடங்கினதாக இருக்கிறபடியால் கன்னித்தாயும் இயேசுவும் தான் இதைச் சரிவரக் கண்டுபிடிக்க முடியும் என்றார் முத். ஆலன் ரோச் . இது மரியன்னைக்குச் சொல்லப்பட்ட மங்களமானபடியாலும், கபிரியேல் வான தூதர் கொண்டு வந்த நற்செய்தியானதாலும் இதன் மதிப்பு உயர்ந்தது.
சம்மனசின் வாழ்த்து தேவதாயைப் பற்றிச் சொல்லக்கூடிய போதனையின் தொகுதி . இதில் இரு பகுதி உள்ளது . முந்தியது தேவதாயின் மகிமையைக் கூறுகிறது . பிந்தியது அவரது நன்மைத்தனத்திளிருந்து அடையக்கூடியவைகளைக் காட்டுகிறது . முதல் பாகத்தில் உள்ளது மகா பரிசுத்த திரித்துவம் மொழிந்தது . மற்றது அர்ச் எலிசபெத்தமாளின் கூற்று . இரண்டாம் பாகம் திருச்சபை அமைத்தது
உலக சரித்திரத்திலேயே அதி உன்னத நிகழ்ச்சி நித்திய வார்த்தையின் மனிதாவதாரம் .அவர் உலகத்தை இரட்சித்து மனிதனுக்கும் , தேவனுக்கும் இடையில் சமாதானத்தை மறுபடியும் நிறுவியவர் . கபிரியேல் மாமரிக்கு மங்களம் கூறியபோது இந்நிகழ்ச்சி நடைமுறையில் வந்தது
சம்மனசின் மங்களத்தில் பிதாப் பிதாக்களுடையவும் , தீர்க்கதரிசிகளுடையவும் , அப்போஸ்தலர்களுடையவும் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் காணலாம் . வேதசாட்சிக்கு அசையாத உறுதியையும் , பலனையும் இது பொழிந்தது . திருச்சபையின் வேத பாரகர்களுக்கு ஞானம் இது ;ஸ்துதியர்களுக்குப் பிரமானிக்கமும் , துதியர்களுக்கு வாழ்வும் இது . இது வரப்பிரசாத சட்டத்தின் புதிய சங்கீதம் . சம்மனசுக்களுக்கும் , மனிதர்களுக்கும் ஆனந்தம் . பேய்களைக் கலங்கடித்து வெட்கத்தை ஊற்றித் துரத்தி விரட்டும் . காரணம் சம்மனசின் மங்களத்தால் கடவுள் மனிதரானார் , கன்னி கடவுளின் தாயானார் , நீதிமான்களுடைய ஆத்துமங்கள் பாதாளத்திலிருந்து விடுதலை அடைந்தன . மோட்சத்தின் காலி ஆசனங்கள் நிறைந்தன. அத்தோடு பாவம் மன்னிக்கப்பட்டது . நமக்கு வரப்பிரசாதம் வழங்கப்பட்டது . நோயாளிகள் சுகமானார்கள் . மரித்தோர் திரும்பவும் உயிர் பெற்றார்கள் . அகதிகள் வீடு வந்து சேர்ந்தனர் , தமத்திருத்துவத்தின் கோபம் தணிக்கப்பட்டது , மனிதர்கள் நித்திய சீவன் அடைந்தனர்
இறைவனுடைய மகத்துவத்தைப் போல் பெரிது ஒன்றும் இல்லை . பாவத்தின் ஈனத்தைப் போல வேறொரு ஈனமும் கிடையாது . எனினும் நாம் அவருக்குச் செலுத்தும் வாழ்த்துதலையும், விண்ணப்பத்தையும் அவர் தள்ளி விடுவதில்லை . சம்மனசின் மங்களம் ஓர் அருமையான கீதம் . மனிதாவதாரம் இரட்சணியம் என்னும் வரப்பிரசாதத்துக்காக செலுத்தும் நன்றியின் கீதம் . இதில் பிதாவுக்கு மங்களம் சொல்லுகிறோம் . ஏனெனில் அவர்தம் ஏக குமாரனையே நமக்கு இரட்சகராகத் தந்தார். சுதனுக்கு நன்றி கூரிகிறோம். ஏனெனில் வானத்தை விட்டுப் பூமியில் வந்து மனிதராகிய நம்மை இரட்சித்தார். பரிசுத்த ஆவிக்குத் தோத்திரம் புரிகிறோம் . ஏனெனில் கன்னி மரியின் உதரத்தில் நமதாண்டவருக்குப் புனித உடலை உருவாக்கினார். மூவருக்கும் நன்றியரிந்த தோத்திரமாக 'அருள் நிறைந்த மரியே' என சொல்லுகிறோம்
இம்மந்திரத்தில் நேர்முகமாகக் கடவுளின் தாயைப் புகழ்கிறோம் .எனினும் அது தமத்திருத்துவத்திற்குப் பெரும் மகிமை வளர்க்கிறது . தேவதாயைப் புகழும்போது பிதாவின் அருமையான சிருஷ்டியை , சுதனின் அமலோற்பவ மாதாவை பரிசுத்த ஆவியின் பத்தினியைப் புகழ்வதால் திரித்துவத்திற்குப் புகழ்ச்சி தானே ? எலிசபெத்தம்மாள் வாழ்த்தின போது தாய் அந்த வாழ்த்துதலை உடனே கடவுளின் பக்கம் திருப்பினார் அன்றோ ? அது போல் இப்பொழுதும் செய்கிறார் .
செபம்
செபமாலை இராக்கினியே , அமலோற்பவ மாமரியே , மனுமக்களுக்காக மனுப்பேசுகிறவரே, பாத்திமாவில் நீர் அளித்த வாக்கும் , நம்பிக்கையும் சீக்கிரம் நடைமுறைக்கு வரக் கிருபை செய்யும். உலகில் எத்தனையோ மக்கள் உயிரிழந்தார்கள் . வேறு எத்தனை பேர் அடிமைத் தளங்களிலும் இக்கட்டிலும் நெஞ்சுருகிக் கிடக்கின்றனர் . சமாதானத்துக்கு அடுத்தவைகளை நாங்கள் அறிய வேண்டும் என்பது மாசில்லா உமது இருதயத்தின் மட்டுக்கடங்கா ஆசையல்லவா? தேவதாயே, நீர் பரிகாரத்தையும், செபமாலை செபத்தையும் எங்கள் பாவங்களுக்காக உள்ளம் உடைந்த மனஸ்தாபத்தையும் விரும்புகிறீர் என்றீர் . கிறிஸ்தவர்கள் யாவரும் உமது வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கும்படி செய்தருளும் . இந்தியாவின் மேல் உமது கிருபைக் கண்களைத் திருப்பியருளும் . நங்கள் ஏழை மக்கள் அம்மா . இந்துத்துவா மாய வலையில் இருந்து எங்களைக் காப்பாற்றும் . அதற்காக இந்தியக் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பழுதற்றவர்களாய் இருக்கச் செய்யும் அம்மா , இரக்கமுள்ள செபமாலை மாதாவே ஆமென்
சரிதை
கலீஷியாவுக்கும் லியோனுக்கும் அரசரான அல்போன்சுக்கு ஒரே ஓர் ஆசை , தன் பணியாளர் யாவரும் செபமாலை செய்து தேவதாயை வாழ்த்த வேண்டும் என்பது . அதற்காகத்தான் அரைக் கச்சையிலிருந்து ஒரு பெரிய செபமாலையைத் தொங்க விட்டிருந்தான் . என்ன காரணத்தினாலோ அவன் செபமாலை சொல்லுவதில்லை . எனினும் அவனிடம் இருந்த செபமாலையைக் கண்டு அவனுடைய அரண்மனையிலே உள்ளவர்கள் பக்தியாய்ச் செபமாலை செய்து வந்தனர்.
ஒருநாள் அரசன் கடும் வியாதியாய் விழுந்தான் . அவன் இறந்துவிட்டான் என்றே எல்லோரும் எண்ணினர். அச்சமயம் அவன் ஒரு காட்சி கண்டான் . ஆண்டவரின் நீதி ஸ்தலமுன் நின்றான் . கணக்கற்ற பேய்கள் அவனைச் சூழ்ந்து நின்று அவன் கட்டிக்கொண்ட சகல பாவங்களையும் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டின . ஆண்டவரும் அவனை நரகத்துக்கு அனுப்பத் தயாராக இருந்தார் . அந்நேரம் தேவதாய் தோன்றி அவனுக்காக மனுப்பேசி அவன் செய்திருந்த பாவங்களை தராசின் ஒரு தட்டிலும் , அவன் தரித்திருந்த செபமாளையையும், அதைக் கண்டு மக்கள் சொல்லிய செபமாலைகளையும் மற்ற தட்டிலும் வைத்தார். அதிக கணம் செபமாலைகளுக்கு இருந்தன
மகா பட்சத்தோடு தேவதாய் அரசனை நோக்கி " நீ செபமாலையை எப்போதும் தரித்து என்னை மகிமைப்படுத்தினபடியால் என்னுடைய மகனிடமிருந்து உனக்குப் பெரும் கிருபையைப் பெற்றேன் . இன்னும் சில ஆண்டுகளுக்கு உலகில் உயிரோடு இருப்பாய் . தபஞ்செய்து அக்காலத்தை நன்றாய்ச் செலவழி" என்று சொல்லி மறைந்தார். அரசன் தன் நினைவு பெற்றபோது உரத்த சத்தமாய்ச் சொன்னான் " மகாப் பரிசுத்த மரியின் செபமாலை பாக்கியம் பெற்றது . அதனால் தான் நித்திய நரகத்திலிருந்து தப்பினேன் " . முழுதும் சுகம் பெற்று , தன் மீதி வாழ்நாளை செபமாலை பக்தியைப் பரப்புவதிலும் அதைப் பிரமாணிக்கமாய்த் தானே தினந்தோறும் செய்வதிலும் செலவழித்தான்
ஒன்பதாம் நாள்
அருள் நிறைந்த மரியாயே
முத். ஆலன் ரோச் கண்ட பற்பல காட்சிகளிலிருந்து இரண்டொரு காரியம் அழுத்திக் கூறுகிறார். இந்த மந்திரத்தை அசமந்தத்தினாலாவது , அசட்டையினாலாவது , வெறுப்பினாலாவது சொல்லாதவர்கள் சீக்கிரம் இறந்து நித்திய ஆக்கினைக்கு ஆளாவார்கள் என்று நினைக்க இடமுண்டு . சம்மனசின் மங்களம் அல்லவா உலகைக் காப்பாற்றியது ! இந்த மங்களத்தின் மேல் பிரியமுள்ளவர்கள் ஈடேற்றத்திற்கு முன்நியமனம் செய்யப்பட்டவர்கள் எனக் கருதலாம் . நமதாண்டவளை நேசித்து அவளுக்கு சேவை செய்யும் கிருபையை ஆண்டவரிடம் இருந்து பெற்றவர்கள் மோட்சகரைச் சேருமட்டும் அவ்வணக்கத்தைத் தொடர்ந்து செலுத்துவார்களாக.
அர்ச் லூயிஸ் மான்போர்ட் சொல்லுவார் " அருள் நிறைந்த மரியாயே , ஐம்பத்து மூன்று மணியோ , நூற்று ஐம்பத்து மூன்று மணியோ செபமாலை சொல்லுகிறவர்கள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் என்று சொல்வேன். பெரும் காட்சி வரம் பெற்றவர்களில் முதலாய் சிலர் பேயால் ஏமாந்து போனார்கள் . நான் காரணத்தைத் தேடிய போது , அவர்கள் 'அருள் நிறைந்த மரியே ' என்பதையும் செபமாலையையும் அலட்சியம் செய்தார்கள் "
முன் நியமகம் செய்யப்பட்டவர்களுக்கு மோட்சம் அளிக்கும் பெருங்கிருபை 'அருள் நிறைந்த மரியே ' என்னும் செபத்தைச் சொல்லத் தூண்டுவதாம் . அது கூரிய அம்புக்குச் சமானம் . அதைத் தாங்களே உபயோகித்து அதைப் பற்றிப் போதிக்கும் குருக்கள் , கற்பாறையைப் போல கடினமான உள்ளத்தையும் ஊடுருவிப் பாய்ந்து இளக்கவல்லவர்கள் ஆவார்கள் .
அருள் நிறைந்த மரியாயே வாழ்க :
நீதி சூரியனது கதிர்களில் குளித்தெழுந்தவளே வாழி ! மோட்ச பாதையை விட்டு விலகி விட்டாயேயாகில் , இவ்வுலக வாழ்வின் யாத்திரையில் நம் ஆத்துமமாகிய கப்பல் அலை மோதி நிற்குமேயாகில் , சமுத்திரத்தின் நட்சத்திரமாகிய மரியை அழை, அவர் நித்திய ஜீவியத்தின் துறைமுகம் கொண்டு போய் உன்னைச் சேர்ப்பார். துன்பக் கடலில் மிதக்கிறாயா ? அத்துன்பக் கடலை மோட்சத்தின் மெய்யான ஆனந்தக் கடலாக மாற்றுகிறவர் அவர். மரிஎன்றழை , உன் தீய துன்பத்தை மதுரமான இன்பமாக மாற்றுவார் .
அருள் நிலையை இழந்துவிட்டாயா ? கன்னித்தாய்க்கு கர்த்தர் அளித்து நிரப்பிய பற்பல கிருபைகளைப் புகழ்ந்தேத்து . அருளாலும் பரிசுத்த ஆவியின் கொடைகளாலும் நிறைந்தவர் மரியா . அருட்கொடைகளை உனக்களிப்பார் .
கர்த்தர் உம்முடனே :
கடவுளுடைய உதவியை இழந்து தவிக்கிறாயா ? மாமரியை அண்டி வந்து சொல் ."ஆண்டவளே , கர்த்தர் உம்முடனே ; அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் ஆண்டவருக்கும் இருந்த ஐக்கியத்தை விட உமக்கும் அவருக்கும் மிகுந்த நெருங்கிய ஐக்கியம் . நீங்கள் இருவரும் ஒன்று . அவர் உம் மகன் ; அவர் சதை உம் சதை ; அவருடைய உத்தம சாயல் நீரானபடியினாலும் , நீர் அவருடைய அன்னையானபடியினாலும் ஆண்டவரோடு உமக்கு நெருங்கிய ஐக்கியம் .நீர் திருத்துவத்தின் திரு ஆலயம் . தமத்திருத்துவத்தின் மூன்று ஆட்களும் உம்மோடு இருக்கிறார்கள் " இதைக் கேட்ட உடனே நேசத்தாய் உன்னை அழைத்துச் சென்று ஆண்டவரின் பட்சமுள்ள பாதுகாப்பில் வைப்பார்.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே :
உம்முடைய பரிசுத்த தனத்தினாலும் , பிள்ளைப் பேற்றாலும் எல்லாப் பெண்களுக்குமேல் உயர்ந்தவர் . எல்லா சாதி சனங்களுக்கு மேல் உயர்ந்தவர் . இறைவனுடைய சாபத்தை நீர் ஆசீராக மாற்றி விட்டீர் . என்னையும் ஆசீர்வதிப்பாய் அம்மா !
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே :
வரப்பிரசாத அன்னத்தின் மேலும் சீவிய அப்பத்தின் மேலும் உனக்குப் பசியா ? மோட்சத்திலிருந்து இறங்கி வந்த சீவிய அப்பத்தை உதரத்தில் தாங்கியவரை அண்டி வந்து சொல் ; உமது கன்னிமைக்கு யாதொரு அற்பப் பழுதின்றி கருத்தரித்து யாதொரு நோவின்றித் தாங்கிச் சென்று யாதொரு வாதனையின்றிப் பெற்றெடுத்தவர் . உமது உதரத்தின் கனியானவர் அர்ச்சிக்கப்பட்டவரே , நாங்கள் பாவ அடிமைத்தனத்தில் இருந்த போது , வருந்திய இவ்வுலகை இரட்சித்த இயேசு , உலகத்தை அதன் நோயினின்று குணமாக்கியவர், மரித்தோரை உயிர்ப்பித்தவர் . அகதிகளை வீடு அழைத்து வந்தவர் ; பாவிகளுக்கு வரப்பிரசாத வாழ்வை வழங்கியவர் ; நித்திய ஆக்கினையினின்று மனிதர்களை இரட்சித்தவர் , அர்ச்சிக்கப்பட்டவரே
அர்ச் மரியாயே :
உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்தமானவரே , சர்வேசுரனுடைய சேவையில் நிகரற்றதனமாய் பிரமாநிக்கத்தால் சொந்தமானவரே , மேலான பதவியை வகித்ததால் பரிசுத்தமானவரே , மேலான அர்ச்சிப்பைக் கடவுள் உமக்குத் தந்தார்
சர்வேசுரனுடைய மாதாவே :
எங்களுடைய மாதாவே , எங்களது பரிபாலியே, மனுப்பேசுகிறவரே , இறைவனுடைய வரப்பிரசாதங்களின் பொக்கிஷ தாரிணியே, உம் பிரியம் போல் அப்பொக்கிஷத்தை வழங்குகிறவரே, எங்கள் பாவங்களுக்குச் சீக்கிரம் மன்னிப்பைப் பெற்றுத் தந்து மாட்சிமை தங்கிய கடவுளோடு உறவாடும் பாக்கியத்தையும் கொண்டு வருவாய்
பாவிகளாகிய எங்களுக்காக :
அம்மா , ஏழைகளுக்கு எப்போதும் நீர் இரங்குபவர். நீர் பாவிகளை ஒரு நாளும் அவமதிப்பது இல்லை, அவர்களைத் தள்ளிவிடுவதும் இல்லை . பாவிகள் இல்லாவிடில் நீர் ஒருநாளும் இரட்சகரின் தாயாகியிருக்க மாட்டீரன்றோ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இப்பொழுதும் :
துன்பத்தாலும் வருங்கால பயத்தாலும் நிறைந்திருக்கும் இக்குறுகிய வாழ்நாளில் , நரகப் பேய்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் எங்கள் மேல் சாடி வரும் இந்நாளில் , சோதனைகள் அலை அலையாய் மோதும் இப்பொழுது , மனித ரூபத்திலோ , தினத்தாள் , புத்தகங்கள் ,தொலைகாட்சி, கணினித்திரை வாயிலாலோ , உல்லாசப் போக்குக் காட்சி என்ற போர்வையிலோ மறைந்துள்ள பலசாலிகளான பகைவர்கள் பலர் எங்கள் மேல் பாயக் காத்திருக்கும் இப்பொழுது எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும் :
எங்கள் பலம் எல்லாம் தளர்ந்து போய் , உள்ளம் ஒடுங்கி ஆத்துமமும் சரீரமும் பயத்தாலும் வலியாலும் நைந்திருக்கும் வேளை, அப்பயங்கரமான வேளையில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் . எங்களைத் தம் வலையில் தள்ளி படுகுழிக்குக் கொண்டு போகத் தங்கள் சத்துவம் எல்லாவற்றையும் கூடிப் பேய்கள் தாக்கும் மரண நேரத்தில் , நரகமோ மோட்சமோ என்ற நிலையை நித்தியத்திற்கும் தீர்மானிக்கும் அச்சமயம் , இரக்கத்தின் சுந்தர மாதாவே , ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரைந்து வாரும் . பாவிகளின் அடைக்கலமும் , மனுப்பேசுகிறவருமான அன்னையே , மரண நேரத்தில் எங்களைப் பாதுகாத்து , எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லி எங்களைப் பயமுறுத்தும் பேய்களை அந்நேரத்தில் எங்களை விட்டு துரத்தியருளும் . சாவின் நிழலிலும் அந்தகாரத்திலும் பதிந்த எங்கள் பாதையைப் பிரகாசத்தால் துலக்கி உமது திருமகனின் நீதி ஸ்தலமுன் எங்களை அழைத்துச் செல்லும் . அத்தோடு நில்லாமல் அவ்விடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசும் . எங்கள் பாவங்களை மன்னிக்கவும் , நித்திய மகிமையின் வாசஸ்தலத்தில் புனிதர்கள் மத்தியில் எங்களை அமரச் செய்யவும் உமது திருமகனை மன்றாடும் என் நேசத்தாயே ஆமென்
செபம்
செபமாலை இராக்கினியே , அன்பின் வடிவே , அமலோற்பவ நாயகியே , உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும் எளிய ஆத்துமன்களைக் கரை சேர்க்க விரைந்து வாரும் . அவர்களுக்காக வேண்டிக் கொள்ளச் சொன்னீரே , இரக்கமுள்ள மகனின் மதுரமான அன்னையே , அவர்கள் செலுத்தவேண்டிய கடனை , அவதியின் காலத்தைக் குறைத்தருளும் . எங்கள் சிறிய பரித்தியாகங்களை , பராக்கு நிறைந்த செபங்களை , அற்பப் பரிகார முயற்சிகளை தயவு செய்து ஏற்றுக்கொள்ளும் . திருச்சபையின் குறைக்க முடியாத நிதியிலிருந்து அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரத்தைத் தீர்த்தருளும் . எங்கள் எளிய மன்றாட்டைக் கேட்டு தேவ நீதியின் கடுமையைக் குறைத்து உத்தரிக்கிற ஸ்தல வாசிகள் சீக்கிரம் மோட்சம் சேரக் கிருபை செய்யும் செபமாலை இராக்கினியே ஆமென்
சரிதை
முத் அருளப்பரின் தோமாஸ் அடிக்கடி செபமாலையைப் பற்றி அருமையான பிரசங்கங்கள் செய்வார் . ஆத்துமங்களுக்கு அவர் செய்து வந்த நன்மையைக் கண்டு சகியாத பேய்கள் , அவரை அதிகம் அலட்டி வந்தன . அதைத் தாங்கமுடியாமல் வியாதியை விழுந்து நெடுநாள் நோய் வாய்ப்பட்டு இருந்தார். வைத்தியர்கள் அவர் பிழைக்க மாட்டார் என்று சொல்லி விட்டனர் . பேயும் பயங்கரமான ரூபத்தில் அவருக்குத் தோன்றியது . கட்டிலண்டை தேவதையின் படம் ஒன்று இருந்தது அதை உற்று நோக்கினார் . " மதுரமான அன்னையே , எனக்கு உதவியாக வாரும் , என்னை இரட்சியும் " என்று அலறினார் . இவ்விதம் தேவதாயை அழைத்த உடனே படத்துக்கு உயிர் வந்தது போல இருந்தது. தேவதாய் அவரது கரத்தைப் பிடித்துச் சொல்லுவார்: " என் மகனே தோமாஸ் , அஞ்சாதே . இதோ நான் இங்கிருக்கிறேன் , உன்னைக் காப்பாற்றுவேன் , எழுந்திரு . வழக்கம் போல் செபமாலை பக்தியைப் பற்றிப் போதனை செய் . உன் பகைவரிடமிருந்து உன்னைக் காக்கிறேன் என்று வாக்களிக்கிறேன் "
நமதாண்டவள் இதைச் சொன்னவுடனே பேய் பறந்து ஓடிற்று . அந்நேரமே முழுச் சுகத்துடன் தோமாஸ் எழுந்தார். கண்களிலிருந்து நீர் வடிய நம் நல்ல தாய்க்கு நன்றி சொன்னார் . வழக்கம் போல் செபமாலை பக்தியைப் பரப்பும் அப்போஸ்தலத்துவத்தில் முனைந்து நின்றார் . செபமாலையை பக்தியாய்ப் பிரமாணிக்கமாய்ச் சொல்லி வருவோமாக
அருள் நிறைந்த மரியாயே
முத். ஆலன் ரோச் கண்ட பற்பல காட்சிகளிலிருந்து இரண்டொரு காரியம் அழுத்திக் கூறுகிறார். இந்த மந்திரத்தை அசமந்தத்தினாலாவது , அசட்டையினாலாவது , வெறுப்பினாலாவது சொல்லாதவர்கள் சீக்கிரம் இறந்து நித்திய ஆக்கினைக்கு ஆளாவார்கள் என்று நினைக்க இடமுண்டு . சம்மனசின் மங்களம் அல்லவா உலகைக் காப்பாற்றியது ! இந்த மங்களத்தின் மேல் பிரியமுள்ளவர்கள் ஈடேற்றத்திற்கு முன்நியமனம் செய்யப்பட்டவர்கள் எனக் கருதலாம் . நமதாண்டவளை நேசித்து அவளுக்கு சேவை செய்யும் கிருபையை ஆண்டவரிடம் இருந்து பெற்றவர்கள் மோட்சகரைச் சேருமட்டும் அவ்வணக்கத்தைத் தொடர்ந்து செலுத்துவார்களாக.
அர்ச் லூயிஸ் மான்போர்ட் சொல்லுவார் " அருள் நிறைந்த மரியாயே , ஐம்பத்து மூன்று மணியோ , நூற்று ஐம்பத்து மூன்று மணியோ செபமாலை சொல்லுகிறவர்கள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் என்று சொல்வேன். பெரும் காட்சி வரம் பெற்றவர்களில் முதலாய் சிலர் பேயால் ஏமாந்து போனார்கள் . நான் காரணத்தைத் தேடிய போது , அவர்கள் 'அருள் நிறைந்த மரியே ' என்பதையும் செபமாலையையும் அலட்சியம் செய்தார்கள் "
முன் நியமகம் செய்யப்பட்டவர்களுக்கு மோட்சம் அளிக்கும் பெருங்கிருபை 'அருள் நிறைந்த மரியே ' என்னும் செபத்தைச் சொல்லத் தூண்டுவதாம் . அது கூரிய அம்புக்குச் சமானம் . அதைத் தாங்களே உபயோகித்து அதைப் பற்றிப் போதிக்கும் குருக்கள் , கற்பாறையைப் போல கடினமான உள்ளத்தையும் ஊடுருவிப் பாய்ந்து இளக்கவல்லவர்கள் ஆவார்கள் .
அருள் நிறைந்த மரியாயே வாழ்க :
நீதி சூரியனது கதிர்களில் குளித்தெழுந்தவளே வாழி ! மோட்ச பாதையை விட்டு விலகி விட்டாயேயாகில் , இவ்வுலக வாழ்வின் யாத்திரையில் நம் ஆத்துமமாகிய கப்பல் அலை மோதி நிற்குமேயாகில் , சமுத்திரத்தின் நட்சத்திரமாகிய மரியை அழை, அவர் நித்திய ஜீவியத்தின் துறைமுகம் கொண்டு போய் உன்னைச் சேர்ப்பார். துன்பக் கடலில் மிதக்கிறாயா ? அத்துன்பக் கடலை மோட்சத்தின் மெய்யான ஆனந்தக் கடலாக மாற்றுகிறவர் அவர். மரிஎன்றழை , உன் தீய துன்பத்தை மதுரமான இன்பமாக மாற்றுவார் .
அருள் நிலையை இழந்துவிட்டாயா ? கன்னித்தாய்க்கு கர்த்தர் அளித்து நிரப்பிய பற்பல கிருபைகளைப் புகழ்ந்தேத்து . அருளாலும் பரிசுத்த ஆவியின் கொடைகளாலும் நிறைந்தவர் மரியா . அருட்கொடைகளை உனக்களிப்பார் .
கர்த்தர் உம்முடனே :
கடவுளுடைய உதவியை இழந்து தவிக்கிறாயா ? மாமரியை அண்டி வந்து சொல் ."ஆண்டவளே , கர்த்தர் உம்முடனே ; அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் ஆண்டவருக்கும் இருந்த ஐக்கியத்தை விட உமக்கும் அவருக்கும் மிகுந்த நெருங்கிய ஐக்கியம் . நீங்கள் இருவரும் ஒன்று . அவர் உம் மகன் ; அவர் சதை உம் சதை ; அவருடைய உத்தம சாயல் நீரானபடியினாலும் , நீர் அவருடைய அன்னையானபடியினாலும் ஆண்டவரோடு உமக்கு நெருங்கிய ஐக்கியம் .நீர் திருத்துவத்தின் திரு ஆலயம் . தமத்திருத்துவத்தின் மூன்று ஆட்களும் உம்மோடு இருக்கிறார்கள் " இதைக் கேட்ட உடனே நேசத்தாய் உன்னை அழைத்துச் சென்று ஆண்டவரின் பட்சமுள்ள பாதுகாப்பில் வைப்பார்.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே :
உம்முடைய பரிசுத்த தனத்தினாலும் , பிள்ளைப் பேற்றாலும் எல்லாப் பெண்களுக்குமேல் உயர்ந்தவர் . எல்லா சாதி சனங்களுக்கு மேல் உயர்ந்தவர் . இறைவனுடைய சாபத்தை நீர் ஆசீராக மாற்றி விட்டீர் . என்னையும் ஆசீர்வதிப்பாய் அம்மா !
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே :
வரப்பிரசாத அன்னத்தின் மேலும் சீவிய அப்பத்தின் மேலும் உனக்குப் பசியா ? மோட்சத்திலிருந்து இறங்கி வந்த சீவிய அப்பத்தை உதரத்தில் தாங்கியவரை அண்டி வந்து சொல் ; உமது கன்னிமைக்கு யாதொரு அற்பப் பழுதின்றி கருத்தரித்து யாதொரு நோவின்றித் தாங்கிச் சென்று யாதொரு வாதனையின்றிப் பெற்றெடுத்தவர் . உமது உதரத்தின் கனியானவர் அர்ச்சிக்கப்பட்டவரே , நாங்கள் பாவ அடிமைத்தனத்தில் இருந்த போது , வருந்திய இவ்வுலகை இரட்சித்த இயேசு , உலகத்தை அதன் நோயினின்று குணமாக்கியவர், மரித்தோரை உயிர்ப்பித்தவர் . அகதிகளை வீடு அழைத்து வந்தவர் ; பாவிகளுக்கு வரப்பிரசாத வாழ்வை வழங்கியவர் ; நித்திய ஆக்கினையினின்று மனிதர்களை இரட்சித்தவர் , அர்ச்சிக்கப்பட்டவரே
அர்ச் மரியாயே :
உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்தமானவரே , சர்வேசுரனுடைய சேவையில் நிகரற்றதனமாய் பிரமாநிக்கத்தால் சொந்தமானவரே , மேலான பதவியை வகித்ததால் பரிசுத்தமானவரே , மேலான அர்ச்சிப்பைக் கடவுள் உமக்குத் தந்தார்
சர்வேசுரனுடைய மாதாவே :
எங்களுடைய மாதாவே , எங்களது பரிபாலியே, மனுப்பேசுகிறவரே , இறைவனுடைய வரப்பிரசாதங்களின் பொக்கிஷ தாரிணியே, உம் பிரியம் போல் அப்பொக்கிஷத்தை வழங்குகிறவரே, எங்கள் பாவங்களுக்குச் சீக்கிரம் மன்னிப்பைப் பெற்றுத் தந்து மாட்சிமை தங்கிய கடவுளோடு உறவாடும் பாக்கியத்தையும் கொண்டு வருவாய்
பாவிகளாகிய எங்களுக்காக :
அம்மா , ஏழைகளுக்கு எப்போதும் நீர் இரங்குபவர். நீர் பாவிகளை ஒரு நாளும் அவமதிப்பது இல்லை, அவர்களைத் தள்ளிவிடுவதும் இல்லை . பாவிகள் இல்லாவிடில் நீர் ஒருநாளும் இரட்சகரின் தாயாகியிருக்க மாட்டீரன்றோ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இப்பொழுதும் :
துன்பத்தாலும் வருங்கால பயத்தாலும் நிறைந்திருக்கும் இக்குறுகிய வாழ்நாளில் , நரகப் பேய்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் எங்கள் மேல் சாடி வரும் இந்நாளில் , சோதனைகள் அலை அலையாய் மோதும் இப்பொழுது , மனித ரூபத்திலோ , தினத்தாள் , புத்தகங்கள் ,தொலைகாட்சி, கணினித்திரை வாயிலாலோ , உல்லாசப் போக்குக் காட்சி என்ற போர்வையிலோ மறைந்துள்ள பலசாலிகளான பகைவர்கள் பலர் எங்கள் மேல் பாயக் காத்திருக்கும் இப்பொழுது எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும் :
எங்கள் பலம் எல்லாம் தளர்ந்து போய் , உள்ளம் ஒடுங்கி ஆத்துமமும் சரீரமும் பயத்தாலும் வலியாலும் நைந்திருக்கும் வேளை, அப்பயங்கரமான வேளையில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் . எங்களைத் தம் வலையில் தள்ளி படுகுழிக்குக் கொண்டு போகத் தங்கள் சத்துவம் எல்லாவற்றையும் கூடிப் பேய்கள் தாக்கும் மரண நேரத்தில் , நரகமோ மோட்சமோ என்ற நிலையை நித்தியத்திற்கும் தீர்மானிக்கும் அச்சமயம் , இரக்கத்தின் சுந்தர மாதாவே , ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரைந்து வாரும் . பாவிகளின் அடைக்கலமும் , மனுப்பேசுகிறவருமான அன்னையே , மரண நேரத்தில் எங்களைப் பாதுகாத்து , எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லி எங்களைப் பயமுறுத்தும் பேய்களை அந்நேரத்தில் எங்களை விட்டு துரத்தியருளும் . சாவின் நிழலிலும் அந்தகாரத்திலும் பதிந்த எங்கள் பாதையைப் பிரகாசத்தால் துலக்கி உமது திருமகனின் நீதி ஸ்தலமுன் எங்களை அழைத்துச் செல்லும் . அத்தோடு நில்லாமல் அவ்விடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசும் . எங்கள் பாவங்களை மன்னிக்கவும் , நித்திய மகிமையின் வாசஸ்தலத்தில் புனிதர்கள் மத்தியில் எங்களை அமரச் செய்யவும் உமது திருமகனை மன்றாடும் என் நேசத்தாயே ஆமென்
செபம்
செபமாலை இராக்கினியே , அன்பின் வடிவே , அமலோற்பவ நாயகியே , உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும் எளிய ஆத்துமன்களைக் கரை சேர்க்க விரைந்து வாரும் . அவர்களுக்காக வேண்டிக் கொள்ளச் சொன்னீரே , இரக்கமுள்ள மகனின் மதுரமான அன்னையே , அவர்கள் செலுத்தவேண்டிய கடனை , அவதியின் காலத்தைக் குறைத்தருளும் . எங்கள் சிறிய பரித்தியாகங்களை , பராக்கு நிறைந்த செபங்களை , அற்பப் பரிகார முயற்சிகளை தயவு செய்து ஏற்றுக்கொள்ளும் . திருச்சபையின் குறைக்க முடியாத நிதியிலிருந்து அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரத்தைத் தீர்த்தருளும் . எங்கள் எளிய மன்றாட்டைக் கேட்டு தேவ நீதியின் கடுமையைக் குறைத்து உத்தரிக்கிற ஸ்தல வாசிகள் சீக்கிரம் மோட்சம் சேரக் கிருபை செய்யும் செபமாலை இராக்கினியே ஆமென்
சரிதை
முத் அருளப்பரின் தோமாஸ் அடிக்கடி செபமாலையைப் பற்றி அருமையான பிரசங்கங்கள் செய்வார் . ஆத்துமங்களுக்கு அவர் செய்து வந்த நன்மையைக் கண்டு சகியாத பேய்கள் , அவரை அதிகம் அலட்டி வந்தன . அதைத் தாங்கமுடியாமல் வியாதியை விழுந்து நெடுநாள் நோய் வாய்ப்பட்டு இருந்தார். வைத்தியர்கள் அவர் பிழைக்க மாட்டார் என்று சொல்லி விட்டனர் . பேயும் பயங்கரமான ரூபத்தில் அவருக்குத் தோன்றியது . கட்டிலண்டை தேவதையின் படம் ஒன்று இருந்தது அதை உற்று நோக்கினார் . " மதுரமான அன்னையே , எனக்கு உதவியாக வாரும் , என்னை இரட்சியும் " என்று அலறினார் . இவ்விதம் தேவதாயை அழைத்த உடனே படத்துக்கு உயிர் வந்தது போல இருந்தது. தேவதாய் அவரது கரத்தைப் பிடித்துச் சொல்லுவார்: " என் மகனே தோமாஸ் , அஞ்சாதே . இதோ நான் இங்கிருக்கிறேன் , உன்னைக் காப்பாற்றுவேன் , எழுந்திரு . வழக்கம் போல் செபமாலை பக்தியைப் பற்றிப் போதனை செய் . உன் பகைவரிடமிருந்து உன்னைக் காக்கிறேன் என்று வாக்களிக்கிறேன் "
நமதாண்டவள் இதைச் சொன்னவுடனே பேய் பறந்து ஓடிற்று . அந்நேரமே முழுச் சுகத்துடன் தோமாஸ் எழுந்தார். கண்களிலிருந்து நீர் வடிய நம் நல்ல தாய்க்கு நன்றி சொன்னார் . வழக்கம் போல் செபமாலை பக்தியைப் பரப்பும் அப்போஸ்தலத்துவத்தில் முனைந்து நின்றார் . செபமாலையை பக்தியாய்ப் பிரமாணிக்கமாய்ச் சொல்லி வருவோமாக
பத்தாம் நாள்
தேவ இரகசியங்கள்
மூவகை தேவ இரகசியங்கள் உண்டென யாவருக்கும் தெரியும் . சந்தோஷ தேவ இரகசியங்கள் ; துக்க தேவ இரகசியங்கள் ; மகிமையின் தேவ இரகசியங்கள் . செபமாலையில் தியானிக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு வகையையும் பொதுவில் எடுத்துக் கொண்டு தான் தியானித்து வந்தனர். 2003 ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 'ஒளியின் தேவ இரகசியம் ' என்ற நான்காவது வகை தேவ இரகசியத்தைத் தந்தார்.
எத்தகைய வாழ்க்கை நடை மனிதனுக்குப் பொருந்தியது என்று சந்தோஷ தேவ இரகசியங்கள் காட்டுகின்றன. சேசுநாதர் தெரிந்து கொண்ட வாழ்க்கை என்ன ? எளிய வாழ்க்கை, உழைப்பு மிகுந்த வாழ்க்கை. தொழிலாளியின் வாழ்க்கையும் அத்தோடு சம்பந்தப்பட்ட புண்ணியங்களும் நமக்கேற்றவை . தரித்திரம் என்னும் புண்ணியம், வருந்தி உழைக்கும் புண்ணியம். உழைத்தால் போதாது; திறம்பட உழைக்க வேண்டும் .சுத்தமான வேலை, நல்ல வேலையாய் இருக்க வேண்டும் . ஏனோ தானோ என்ற வேலையை நமதாண்டவர் ஒரு பொழுதாவது செய்திருப்பார் என்று நாம் கனவிலும் கருதக் கூடுமா ? அடுப்பெரிக்கும் சமயம் உட்காரும் முக்காலியாயிருந்தாலும், எவ்வளவு திறமையோடு யேசு அதைச் செய்து முடித்தார் ! எப்பொழுதும் எந்நாளும் எவ்விடத்திலும் அவர் செய்வன திருந்தச் செய்தார் . சேசுவின் வாழ்க்கையை நாம் மறைந்த வாழ்க்கை என்கிறோம் . தாழ்ச்சியும் , நேர்மையும் , பகட்டையும் படாடோபத்தையும் தேடாத் தன்மையும் பெருங்குணங்களாக விளங்கின . இந்த இரகசியங்களைச் சந்தோஷ தேவ இரகசியங்கள் என்கிறோம். நாம் அவைகளைக் கண்டு பாவிப்போமாகில் இவ்வுலகிலேயே, இவ்வாழ்நாளிலேயே நாம் சந்தோசத்தைக் கண்டடைவோம் .
தற்கால சமூக பிரச்சனைகளுக்கு முடிவு காண வேண்டுமேயாகில் நாசரேத்தூர் வாழ்க்கையை கவனிக்க வேண்டும் என்றார் 13 ஆம் சிங்கராயர் . திருக்குடும்பம் வருவாயைப் பெருக்கத் தேடவில்லை . ஏனெனில் அவர்கள் தங்கள் தங்கள் தேவையைப் பெருக்கத் தேடவில்லை . தங்கள் தேவையைக் குறைத்துக் கொண்டனர். காலை முதல் மாலை வரை கஷ்டப்பட்டு உழைத்தனர் . நசரேத்தூரை கவனித்துப் பார்த்தால், இத்தொழில் அத்தொழில் நலமென்று சிந்தித்து கைகட்டி வேலையில்லாத திண்டாட்டத்தை மனிதர் பெருக்க மாட்டார்கள் . எத்தகைய வாழ்க்கை எனக்கு ஏற்றது என்று அலையாமல் கடவுள் எனக்கு வகுத்த வழி என்ன என்று அறிய ஆசிப்பார்கள் . உணவு, உடை , உறைவிடம் முதலானவைகளில் 'போதுமென்ற மனதே பொன் செய்யும் மருந்து " என்று எண்ணி திருப்திப்பட்டுக் கொள்வார்கள் . நாசரேத்தை நாடிப் போக வேண்டும் .
இயேசுவின் பகிரங்க வாழ்க்கையை விட்டுவிட்டு அவரது மறைந்த வாழ்க்கையிலிருந்து பாடுகளின் வாழ்க்கையை காண செபமாலை நம்மை அழைத்துச் செல்கிறது . எனினும் பகிரங்க வாழ்க்கையின் முதலும் முடிவும் தானே பாடுகள் . பகிரங்க வாழ்க்கையின் சுருக்கம் " அவர் நன்மை செய்து கொண்டே போனார் " . நமக்காக உயிரைக் கொடுத்த அவரது மரணம் , அவரது நன்மைத் தனத்தின் மணிமுடி அன்றோ ? இவ்வுலகில் நாம் முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவைகள் துக்க தேவ இரகசியங்கள் . ஆண்டவர் நமக்கு அனுப்பும் துன்பங்களையும் ஆண்டவருடைய சம்மதத்தால் நமக்கு வரும் சிறுமை , சில்லறை வருத்தம் , வாதனைகளையும் பொறுமையாய் ஏற்றுக் கொண்டு அவருடைய வாதனைகளோடு அவைகளை ஒன்றித்து மனுக்குலத்தின் ஈடேற்றத்துக்காக ஒப்புக் கொடுப்போமாக . இதில் நமக்கு எவ்வளவு மகிமை ! துக்கத் தேவ இரகசியங்களைத் தியானிப்பதால் இவைகளைத் தாங்க நமக்குத் தைரியம் வரும்
துக்கத் தேவ இரகசியங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் மேலான பாடம் நமக்கு ஒன்று உண்டு . ஏசுநாதர் வேதனையைத் தெரிந்து கொண்டவர் . ஆதலால் வாதனைப்படுவோர் , துக்கப்படுவோர்களில் நாம் அவரைக் கனப்படுத்த வேண்டும் . அவரது ஞான சரீரத்தில் அவர் இன்னும் வாதனைப்படுகிறார் . நாம் ஞான சரீரத்தின் அங்கமானபடியால் நாம் வாதனைப்பட வேண்டும் . " சவுலே , சவுலே , ஏன் என்னை வதைக்கிறாய் ?" " ஆண்டவரே , நீர் யார் ?" " நீ வதைக்கும் இயேசு நான் தான் " நாள் கணக்காய் ஆண்டுக்கணக்காய் இதை அலசி ஆராய்ந்து பார்த்து , சேசுவின் ஞான சரீரத்தின் சத்தியத்தின் நன்மையைக் கோருகிறவன் நாசரேத்தில் துவங்கி கல்வாரியிலே ஏற வேண்டும் . சமூக சேவை தேவ அன்பை ஊட்டி வளர்க்கும் . இது கை மேல் கண்ட பலன் . மறு உலகத்திற்குக் காத்திருக்க வேண்டியதில்லை.
இவ்வுலகிலேயே நம் மேல் வெற்றி கொள்ள வேண்டுமென்று மகிமைத் தேவ இரகசியங்கள் நமக்கு கற்பிக்கின்றன . " கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்திருந்தால் மேலுள்ள காரியங்களைத் தேடுங்கள் அங்கு இறைவனின் வலது பக்கத்தில் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார் "
இயேசுவின் உத்தானத்தின் மகிமையை உலகில் பரப்ப நாம் பிரயாசைப்பட வேண்டும் . மற்ற மக்களும் இதில் பங்கடைய உழைக்க வேண்டும் . நாம் இயேசுவைத் தேட வேண்டும் . மோட்ச பாதை அவர் . மோட்ச பாதையை நாம் தேட வேண்டும் . ஆகிலும் தினந்தோறும் இவ்வுலக பாதையில் நாம் நடக்க வேண்டியவர்கள் . இப்பாதையில் அருளும் , அயரா ஊக்கமும் நமக்குத் தேவை . செபமாலை சொல்வதனால் தேவ தாய் நடந்த பாதையில் நாமும் நடந்து சந்தோஷிப்போம், துக்கிப்போம் , வெற்றி கண்டு மகிழ்வோம் .
இயேசு போதித்தார் , புதுமைகளைச் செய்தார் , நற்கருணையை ஸ்தாபித்தார் என்ற இயேசுவின் மறைப்பணியை எடுத்தியம்புகின்றன இந்த ஒளியின் தேவ இரகசியங்கள் . இப்பணிக்கு இயேசு தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள அருளப்பரிடம் யோர்தானில் திருமுழுக்குப் பெற்று , தனது முதற் புதுமையைக் கானாவூரில் செய்து மலைப்பொழிவின் மூலம் தன் போதனையின் சுருக்கத்தை தந்து , தனது தெய்வீகத்தை தாபோர் மலையில் வெளிப்படுத்தி , நற்கருணையின் மூலம் உலகம் முடிவு மட்டும் நம்மோடும் இருப்பதாக நமக்கு இந்த ஒளியின் தேவ இரகசியங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன
செபம்
செபமாலை இராக்கினியே ! இரக்கமுள்ள தாயே ! நரகத்தின் வேதனையை நீர் எங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய அவசியம் விசனத்துக்குரியது . பாத்திமா சிறுவர்களுக்கு நீர் காட்டிய நரகத்தின் காட்சி , எங்களுக்காகவே காட்டினீர். எங்கள் உள்ளத்தில் உயிருள்ள விசுவாசத்தை எழுப்பி , நரகத்தின் பயங்கரமான சத்தியத்தை உணரும்படிச் செய்தருளும் . நித்திய ஆக்கினையைக் கொடுக்கும் நீதித் தீர்வையிலிருந்து எங்களை இரட்சியும் . பாவத்தின் தோஷம் நரகத்தில் முடியும் என்று வேதாகமம் எங்களுக்குக் கற்பிக்கிறது . ஏக திரித்துவமாகிய கடவுள் அளவில்லாத நீதியுள்ளவரென்று நான் விசுவசிக்கிறேன் . இயேசுவின் உதவியைக் கொண்டு இவ்வுலகில் நேர்மையாய் வாழ்ந்து பரகதியில் பாக்கியமாய் வாழும் கிருபையை இயேசுவின் திரு இருதயம் எனக்கு அளிப்பதாக . இக்கிருபையை என்னைச் சுற்றியுள்ள யாவருக்கும் கேட்கிறேன் . செபமாலை இராக்கினியே பாத்திமா மாதாவே என்மேல் இரங்கியருளும் ஆமென்
சரிதை
ஜான் ஆமத் என்னும் சாமிநாதர் சபைத் துறவி ஸ்பெயின் தேசத்தில் ஓராண்டு தபசுகாலப் பிரசங்கங்கள் செய்துக் களைப்பாயிருந்தார். அப்போது பேய் பிடித்த ஒரு சிறுமியை அவரிடம் கொண்டு வந்தார்கள் . பற்பல பேயோட்டும் சடங்கைச் செய்தும் பயன் இல்லாததைக் கண்டு , தன் செபமாலையை எடுத்து அக்குழந்தையின் கழுத்தில் போட்டார் . உடனே " அதை எடுத்து விடுங்கள் . அதை அகற்றுங்கள் ; செபமாலை என்னை வாதிக்கிறது " என்று அக்குழந்தை அலறினாள் . வீணாக இறங்கிக் குருவானவர் செபமாலையைக் குழந்தையின் கழுத்தில் இருந்து நீக்கி விட்டார். அடுத்த இரவு அக்குருவானவர் படுத்திருந்த போது குழந்தையைப் பிடித்திருந்த பேய்கள் ஆறாக் கோபத்தால் சீறி விழுந்து அவரைக் கொல்ல வந்தன . அவர் தன் கையால் செபமாலையை இறுக்கிப் பிடித்திருந்தார் . அப்பேய்கள் என்ன பிரயாசைப்பட்டும் அதைப் பறிக்க அவைகளால் இயலவில்லை . அதைக்கொண்டு அவைகளை நன்றாய் அடித்து , " பரிசுத்த மாமரியே , பரிசுத்த செபமாலையின் மாதாவே , என் உதவிக்கு வாரும் " என்று கூறி அவைகளை விரட்டி விட்டார்
மறுநாள் குருவானவர் கோயிலுக்குப் போனபோது மறுபடியும் அக்குழந்தையைக் கண்டார் . பேய்கள் அவளை விட்டு இன்னும் போகவில்லை . ஒரு பேய் சிரிக்கத் தொடங்கி தமாஷாய்க் கேட்டது, " சகோதரரே , நேற்றிரவு செபமாலை இல்லாமல் இருந்திருப்பீரேயாகில் உம்மை தொலைத்திருப்போம் " . பக்தியுள்ள அக்குருவானவர் உடனே செபமாலையைக் குழந்தையின் கழுத்தில் போட்டுச் சொன்னார் : " இச்சிறுமியின் உடலை விட்டு ஓடும்படி இயேசுவின் திருநாமத்தைக் கொண்டும் , அவருடைய திருத்தாயாரான மரியின் நாமத்தைக் கொண்டும் , மகா பரிசுத்த செபமாலையின் வல்லமையைக் கொண்டும் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன் " அப்பேய்கள் பயந்து அண்டு ஓடிவிட்டன
16 ஆம் நூற்றாண்டில் அர்ச். சவேரியார் தமிழ்நாட்டில் போதித்துக்கொண்டிருக்கும் போது பற்பல சமயத்தில் மக்கள் வந்து தங்கள் வீட்டில் பேய் பிடித்தவர்கள் கத்துகிறார்கள் , வருந்துகிறார்கள் என்பர் . சவேரியார் ஞானோபதேசம் கற்றுக்கொடுக்கும் அலுவலை நிறுத்தாமல் தன் செபமாலையை எடுத்து ஒரு குழந்தையின் கையில் கொடுத்து பேய் பிடித்தவள் மேல் கொண்டு வைத்து வரும்படி சொல்லுவார் . செபமாலை உடலில் பட்டவுடனே பேய்கள் உருண்டடித்துதோடி விடும் . பற்பல சமயங்களில் இது நடந்தது
தேவ இரகசியங்கள்
மூவகை தேவ இரகசியங்கள் உண்டென யாவருக்கும் தெரியும் . சந்தோஷ தேவ இரகசியங்கள் ; துக்க தேவ இரகசியங்கள் ; மகிமையின் தேவ இரகசியங்கள் . செபமாலையில் தியானிக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு வகையையும் பொதுவில் எடுத்துக் கொண்டு தான் தியானித்து வந்தனர். 2003 ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 'ஒளியின் தேவ இரகசியம் ' என்ற நான்காவது வகை தேவ இரகசியத்தைத் தந்தார்.
எத்தகைய வாழ்க்கை நடை மனிதனுக்குப் பொருந்தியது என்று சந்தோஷ தேவ இரகசியங்கள் காட்டுகின்றன. சேசுநாதர் தெரிந்து கொண்ட வாழ்க்கை என்ன ? எளிய வாழ்க்கை, உழைப்பு மிகுந்த வாழ்க்கை. தொழிலாளியின் வாழ்க்கையும் அத்தோடு சம்பந்தப்பட்ட புண்ணியங்களும் நமக்கேற்றவை . தரித்திரம் என்னும் புண்ணியம், வருந்தி உழைக்கும் புண்ணியம். உழைத்தால் போதாது; திறம்பட உழைக்க வேண்டும் .சுத்தமான வேலை, நல்ல வேலையாய் இருக்க வேண்டும் . ஏனோ தானோ என்ற வேலையை நமதாண்டவர் ஒரு பொழுதாவது செய்திருப்பார் என்று நாம் கனவிலும் கருதக் கூடுமா ? அடுப்பெரிக்கும் சமயம் உட்காரும் முக்காலியாயிருந்தாலும், எவ்வளவு திறமையோடு யேசு அதைச் செய்து முடித்தார் ! எப்பொழுதும் எந்நாளும் எவ்விடத்திலும் அவர் செய்வன திருந்தச் செய்தார் . சேசுவின் வாழ்க்கையை நாம் மறைந்த வாழ்க்கை என்கிறோம் . தாழ்ச்சியும் , நேர்மையும் , பகட்டையும் படாடோபத்தையும் தேடாத் தன்மையும் பெருங்குணங்களாக விளங்கின . இந்த இரகசியங்களைச் சந்தோஷ தேவ இரகசியங்கள் என்கிறோம். நாம் அவைகளைக் கண்டு பாவிப்போமாகில் இவ்வுலகிலேயே, இவ்வாழ்நாளிலேயே நாம் சந்தோசத்தைக் கண்டடைவோம் .
தற்கால சமூக பிரச்சனைகளுக்கு முடிவு காண வேண்டுமேயாகில் நாசரேத்தூர் வாழ்க்கையை கவனிக்க வேண்டும் என்றார் 13 ஆம் சிங்கராயர் . திருக்குடும்பம் வருவாயைப் பெருக்கத் தேடவில்லை . ஏனெனில் அவர்கள் தங்கள் தங்கள் தேவையைப் பெருக்கத் தேடவில்லை . தங்கள் தேவையைக் குறைத்துக் கொண்டனர். காலை முதல் மாலை வரை கஷ்டப்பட்டு உழைத்தனர் . நசரேத்தூரை கவனித்துப் பார்த்தால், இத்தொழில் அத்தொழில் நலமென்று சிந்தித்து கைகட்டி வேலையில்லாத திண்டாட்டத்தை மனிதர் பெருக்க மாட்டார்கள் . எத்தகைய வாழ்க்கை எனக்கு ஏற்றது என்று அலையாமல் கடவுள் எனக்கு வகுத்த வழி என்ன என்று அறிய ஆசிப்பார்கள் . உணவு, உடை , உறைவிடம் முதலானவைகளில் 'போதுமென்ற மனதே பொன் செய்யும் மருந்து " என்று எண்ணி திருப்திப்பட்டுக் கொள்வார்கள் . நாசரேத்தை நாடிப் போக வேண்டும் .
இயேசுவின் பகிரங்க வாழ்க்கையை விட்டுவிட்டு அவரது மறைந்த வாழ்க்கையிலிருந்து பாடுகளின் வாழ்க்கையை காண செபமாலை நம்மை அழைத்துச் செல்கிறது . எனினும் பகிரங்க வாழ்க்கையின் முதலும் முடிவும் தானே பாடுகள் . பகிரங்க வாழ்க்கையின் சுருக்கம் " அவர் நன்மை செய்து கொண்டே போனார் " . நமக்காக உயிரைக் கொடுத்த அவரது மரணம் , அவரது நன்மைத் தனத்தின் மணிமுடி அன்றோ ? இவ்வுலகில் நாம் முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவைகள் துக்க தேவ இரகசியங்கள் . ஆண்டவர் நமக்கு அனுப்பும் துன்பங்களையும் ஆண்டவருடைய சம்மதத்தால் நமக்கு வரும் சிறுமை , சில்லறை வருத்தம் , வாதனைகளையும் பொறுமையாய் ஏற்றுக் கொண்டு அவருடைய வாதனைகளோடு அவைகளை ஒன்றித்து மனுக்குலத்தின் ஈடேற்றத்துக்காக ஒப்புக் கொடுப்போமாக . இதில் நமக்கு எவ்வளவு மகிமை ! துக்கத் தேவ இரகசியங்களைத் தியானிப்பதால் இவைகளைத் தாங்க நமக்குத் தைரியம் வரும்
துக்கத் தேவ இரகசியங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் மேலான பாடம் நமக்கு ஒன்று உண்டு . ஏசுநாதர் வேதனையைத் தெரிந்து கொண்டவர் . ஆதலால் வாதனைப்படுவோர் , துக்கப்படுவோர்களில் நாம் அவரைக் கனப்படுத்த வேண்டும் . அவரது ஞான சரீரத்தில் அவர் இன்னும் வாதனைப்படுகிறார் . நாம் ஞான சரீரத்தின் அங்கமானபடியால் நாம் வாதனைப்பட வேண்டும் . " சவுலே , சவுலே , ஏன் என்னை வதைக்கிறாய் ?" " ஆண்டவரே , நீர் யார் ?" " நீ வதைக்கும் இயேசு நான் தான் " நாள் கணக்காய் ஆண்டுக்கணக்காய் இதை அலசி ஆராய்ந்து பார்த்து , சேசுவின் ஞான சரீரத்தின் சத்தியத்தின் நன்மையைக் கோருகிறவன் நாசரேத்தில் துவங்கி கல்வாரியிலே ஏற வேண்டும் . சமூக சேவை தேவ அன்பை ஊட்டி வளர்க்கும் . இது கை மேல் கண்ட பலன் . மறு உலகத்திற்குக் காத்திருக்க வேண்டியதில்லை.
இவ்வுலகிலேயே நம் மேல் வெற்றி கொள்ள வேண்டுமென்று மகிமைத் தேவ இரகசியங்கள் நமக்கு கற்பிக்கின்றன . " கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்திருந்தால் மேலுள்ள காரியங்களைத் தேடுங்கள் அங்கு இறைவனின் வலது பக்கத்தில் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார் "
இயேசுவின் உத்தானத்தின் மகிமையை உலகில் பரப்ப நாம் பிரயாசைப்பட வேண்டும் . மற்ற மக்களும் இதில் பங்கடைய உழைக்க வேண்டும் . நாம் இயேசுவைத் தேட வேண்டும் . மோட்ச பாதை அவர் . மோட்ச பாதையை நாம் தேட வேண்டும் . ஆகிலும் தினந்தோறும் இவ்வுலக பாதையில் நாம் நடக்க வேண்டியவர்கள் . இப்பாதையில் அருளும் , அயரா ஊக்கமும் நமக்குத் தேவை . செபமாலை சொல்வதனால் தேவ தாய் நடந்த பாதையில் நாமும் நடந்து சந்தோஷிப்போம், துக்கிப்போம் , வெற்றி கண்டு மகிழ்வோம் .
இயேசு போதித்தார் , புதுமைகளைச் செய்தார் , நற்கருணையை ஸ்தாபித்தார் என்ற இயேசுவின் மறைப்பணியை எடுத்தியம்புகின்றன இந்த ஒளியின் தேவ இரகசியங்கள் . இப்பணிக்கு இயேசு தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள அருளப்பரிடம் யோர்தானில் திருமுழுக்குப் பெற்று , தனது முதற் புதுமையைக் கானாவூரில் செய்து மலைப்பொழிவின் மூலம் தன் போதனையின் சுருக்கத்தை தந்து , தனது தெய்வீகத்தை தாபோர் மலையில் வெளிப்படுத்தி , நற்கருணையின் மூலம் உலகம் முடிவு மட்டும் நம்மோடும் இருப்பதாக நமக்கு இந்த ஒளியின் தேவ இரகசியங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன
செபம்
செபமாலை இராக்கினியே ! இரக்கமுள்ள தாயே ! நரகத்தின் வேதனையை நீர் எங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய அவசியம் விசனத்துக்குரியது . பாத்திமா சிறுவர்களுக்கு நீர் காட்டிய நரகத்தின் காட்சி , எங்களுக்காகவே காட்டினீர். எங்கள் உள்ளத்தில் உயிருள்ள விசுவாசத்தை எழுப்பி , நரகத்தின் பயங்கரமான சத்தியத்தை உணரும்படிச் செய்தருளும் . நித்திய ஆக்கினையைக் கொடுக்கும் நீதித் தீர்வையிலிருந்து எங்களை இரட்சியும் . பாவத்தின் தோஷம் நரகத்தில் முடியும் என்று வேதாகமம் எங்களுக்குக் கற்பிக்கிறது . ஏக திரித்துவமாகிய கடவுள் அளவில்லாத நீதியுள்ளவரென்று நான் விசுவசிக்கிறேன் . இயேசுவின் உதவியைக் கொண்டு இவ்வுலகில் நேர்மையாய் வாழ்ந்து பரகதியில் பாக்கியமாய் வாழும் கிருபையை இயேசுவின் திரு இருதயம் எனக்கு அளிப்பதாக . இக்கிருபையை என்னைச் சுற்றியுள்ள யாவருக்கும் கேட்கிறேன் . செபமாலை இராக்கினியே பாத்திமா மாதாவே என்மேல் இரங்கியருளும் ஆமென்
சரிதை
ஜான் ஆமத் என்னும் சாமிநாதர் சபைத் துறவி ஸ்பெயின் தேசத்தில் ஓராண்டு தபசுகாலப் பிரசங்கங்கள் செய்துக் களைப்பாயிருந்தார். அப்போது பேய் பிடித்த ஒரு சிறுமியை அவரிடம் கொண்டு வந்தார்கள் . பற்பல பேயோட்டும் சடங்கைச் செய்தும் பயன் இல்லாததைக் கண்டு , தன் செபமாலையை எடுத்து அக்குழந்தையின் கழுத்தில் போட்டார் . உடனே " அதை எடுத்து விடுங்கள் . அதை அகற்றுங்கள் ; செபமாலை என்னை வாதிக்கிறது " என்று அக்குழந்தை அலறினாள் . வீணாக இறங்கிக் குருவானவர் செபமாலையைக் குழந்தையின் கழுத்தில் இருந்து நீக்கி விட்டார். அடுத்த இரவு அக்குருவானவர் படுத்திருந்த போது குழந்தையைப் பிடித்திருந்த பேய்கள் ஆறாக் கோபத்தால் சீறி விழுந்து அவரைக் கொல்ல வந்தன . அவர் தன் கையால் செபமாலையை இறுக்கிப் பிடித்திருந்தார் . அப்பேய்கள் என்ன பிரயாசைப்பட்டும் அதைப் பறிக்க அவைகளால் இயலவில்லை . அதைக்கொண்டு அவைகளை நன்றாய் அடித்து , " பரிசுத்த மாமரியே , பரிசுத்த செபமாலையின் மாதாவே , என் உதவிக்கு வாரும் " என்று கூறி அவைகளை விரட்டி விட்டார்
மறுநாள் குருவானவர் கோயிலுக்குப் போனபோது மறுபடியும் அக்குழந்தையைக் கண்டார் . பேய்கள் அவளை விட்டு இன்னும் போகவில்லை . ஒரு பேய் சிரிக்கத் தொடங்கி தமாஷாய்க் கேட்டது, " சகோதரரே , நேற்றிரவு செபமாலை இல்லாமல் இருந்திருப்பீரேயாகில் உம்மை தொலைத்திருப்போம் " . பக்தியுள்ள அக்குருவானவர் உடனே செபமாலையைக் குழந்தையின் கழுத்தில் போட்டுச் சொன்னார் : " இச்சிறுமியின் உடலை விட்டு ஓடும்படி இயேசுவின் திருநாமத்தைக் கொண்டும் , அவருடைய திருத்தாயாரான மரியின் நாமத்தைக் கொண்டும் , மகா பரிசுத்த செபமாலையின் வல்லமையைக் கொண்டும் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன் " அப்பேய்கள் பயந்து அண்டு ஓடிவிட்டன
16 ஆம் நூற்றாண்டில் அர்ச். சவேரியார் தமிழ்நாட்டில் போதித்துக்கொண்டிருக்கும் போது பற்பல சமயத்தில் மக்கள் வந்து தங்கள் வீட்டில் பேய் பிடித்தவர்கள் கத்துகிறார்கள் , வருந்துகிறார்கள் என்பர் . சவேரியார் ஞானோபதேசம் கற்றுக்கொடுக்கும் அலுவலை நிறுத்தாமல் தன் செபமாலையை எடுத்து ஒரு குழந்தையின் கையில் கொடுத்து பேய் பிடித்தவள் மேல் கொண்டு வைத்து வரும்படி சொல்லுவார் . செபமாலை உடலில் பட்டவுடனே பேய்கள் உருண்டடித்துதோடி விடும் . பற்பல சமயங்களில் இது நடந்தது