- வணக்க மாதம்
- உத்தரிக்கிற ஆத்துமாக்கள்
- நாள் 6-10
ஆறாம் தேதி
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் சர்வேசுரனைக் காணாமல் படுகிற வேதனையைக் காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராய் இருக்கிற சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து அவருடன் ஒருமைப்பட்டு அவரைக் குறையாத நேசத்தால் அனுபவிக்கிறதே மோட்ச பேரின்ப பாக்கியம் தான் . அவரைத் தரிசியாமலும் , அவரிடத்தில் நம்பிக்கை இல்லாமலும் ,அவரை ஊழியுள்ள காலம் நேசிக்கக் கூடாமல் இருக்கிறதே நரகந்தான் . இந்தப் பரம கடவுளைக் காணவும் நேசிக்கவும் அனுபவிக்கவும் கூடாமல் இருக்கிறது நரக வாசிகளுக்கு அவர்கள் படும் மற்ற வேதனைகளிலும் நூறாயிரம் பங்கு பெரிய வேதனையாம் என்று அர்ச் . கிரிசோஸ்தோம் அருளப்பர் திருவுளம் பற்றினார் . உத்தரிக்கிற ஆத்துமாக்களோவென்றால் தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட உத்தரிப்பு முடியும் வரை வெகு உபாதைகளை அனுபவிக்கிறதும் தவிர , தாங்கள் ஏகமாய் நேசிக்கும் சர்வேசுரனைத் தரிசிக்காமலும் அவரிடத்திலே சேரக் கூடாமலும் இருப்பார்கள் . சர்வேசுரனைக் காணாத வேதனை எவ்வளவு பெரிதென்று இப்போது கொஞ்சமாகிலும் கண்டுபிடிக்கப் பிரயாசைப்படக் கடவோம் . இந்த ஆத்துமாக்களுக்கு நேரிட்ட எந்த வருத்தங்களிலும் அதுவே விசேஷ வருத்தமும் பொறுக்கப்படாத ஆக்கினையுமாமென்று வேத பாரகர் எல்லோரும் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள் .
நல்ல தாய் தகப்பனை வெகு வருஷமாய்க் காணாத மகனானவன் அவர்களிடத்திலே திரும்பிச் சேரும் சமயத்தில் போகாதபடிக்கு வழியில் நிறுத்தப்பட்டால் எவ்வளவு வேதனை அனுபவிப்பான் ? ஒரு பெரிய இராச்சியத்தை ஒருவன் கைக்கொள்ள வரும்போது யாதோர் தடையினால் போகக்கூடாதிருப்பானேயாகில் அவனுக்குண்டான விசனம் எவ்வளவு பெரிதாய் இருக்கும் ? தூரப் பயணத்துக்கு யாத்திரையாய்ப் போனவன் எவ்வகைத் துன்பங்களையும் இக்கட்டுக்களையும் பட்டு பெரும் புயல்களுக்கும் கடல் திருடருக்கும் தப்பித்து மிகுந்த திரவியங்களைச் சம்பாதித்து இறங்குதுறைச் சமீபத்தில் சேரும்போது யாதொரு காரணத்தால் கரையேறாதபடிக்கு நிறுத்தப்படுவானேயாகில் மனோவாக்குக்கு எட்டாத கசதி அனுபவிப்பானல்லோ ? அதைப் போல உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எல்லாவற்றையும் விட தாங்கள் நேசித்து ஆசிக்கிற சர்வ நன்மைத்தன்மை நிறைந்த சர்வேசுரனை அடையக் கூடாமலும் இவ்வுலக பூசல்களில் இருந்து தப்பித்து இவ்வுலக யுத்தங்களிலே ஜெயங்கொண்டு வந்திருந்தாலும் மோட்ச கரையிலேறவும் மோட்ச முடியைச் சூட்டவும் கூடாமல் இருக்கும் காரணத்திற்காக இந்தப் பரிசுத்த ஆத்துமாக்களுக்கு எப்பேர்ப்பட்ட துக்கமும் வருத்தமும் இருக்கும் என்று சொல்லத்தகுந்த தன்மை இல்லை
தமக்குப் பிரியமுள்ள மகனான சூசையப்பர் காணாமற் போனதினிமித்தம் பிதாப் பிதாவாகிய யாக்கொபென்பவர் யாதோர் ஆறுதலுமின்றி துக்கப்பட்டு பிரலாபித்து அழுது கொண்டு , என் குமாரனை இனி காணாமற் பிழைப்பேனோ என்பார் . தாவீது ராஜாவின் மகனான அப்சலோம் என்பவர் தன்னுடைய தகப்பனாரின் சமூகத்துக்குப் போகக்கூடாதென்கிறதைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு , என் தகப்பனார் என் குற்றத்தைப் பற்றி இன்னும் நினைத்து தம்மிடத்தில் என்னை வரவொட்டாமல் இருப்பாரேயாகில் , என்னை வெட்டிச் சாகப் பண்ணினால் நல்லது என்பார். இவர்கள் அனுபவித்த துயரம் மகா பெரியது என்றாலும் , உத்தரிக்கிற ஆத்துமாக்கள் தங்களுக்குத் தகப்பனாருமாய் கடவுளுமாய் கதியுமாய் இரம்மியமுமாய் இருக்கிற சர்வேசுரனுடைய பிரதாபமுள்ள சமூகத்துக்கு வரக்கூடாதென்கிறதினால் அவர்கள் படும் துயரம் எம்மாத்திரம் கடினமானதென்று சொல்லுவாருண்டோ ? கண்டுபிடிப்பருண்டோ ?
பூர்வீக காலத்திலே ஏசா என்கிறவன் ஒரு பதார்த்தத்தைச் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையினாலே மூத்த மகனான தனக்குச் செல்லுஞ் சுதந்திரத்தைத் தன தம்பியான பிதாப் பிதாவாகிய யாக்கோபென்பவருக்கு விற்று விட்டான் . அப்படி அதோடு எவ்வித நன்மைகளையும் பெறுவிக்கும் தன் தகப்பனாருடைய விசேஷ ஆசீர்வாதத்தையும் இழந்து போனான் . மயக்கம் மாறிப் புத்தி தெளிந்து சகலத்தையும் பார்க்கும்போது இந்த நஷ்டமெல்லாம் தன் குற்றத்தினாலே தானே நடந்தது என்று நன்றாய் அறிந்து , தான் பட்ட துன்ப மிகுதியினாலே ஒரு துஷ்டமிருகம் ஊளையிடுகிறார்போலே அகோரமாய்க் கர்ஜித்து பயங்கரமாய்க் கதறி அபயசத்தமிட்டு பொறுக்கப்படாத விசனத்தை அனுபவித்தானென்று வேத புத்தகத்திலே சொல்லி இருக்கிறதாமே . இந்த மனுஷனுடைய வியாகுலம் மிஞ்சியதென்று காணப்பட்டாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் படும் துன்பமும் கிலேசமும் விசனமும் மனக்கவலையும் மேற்பட்டதாய் இருக்குமென்று சொல்வதற்குச் சந்தேகமில்லை .
ஏசா என்கிறவன் தன் போசனப்பிரியத்தாலும் வேணுமென்கிற மனதாலும் மேற்சொன்ன நஷ்டமெல்லாம் தனக்கு வந்ததைப் பற்றி அவ்வளவு கவலை காண்பித்தானே. அவ்வண்ணமே அந்த ஆத்துமாக்கள் தங்களுடைய புத்தியீனத்தாலேயும் சொற்ப காரணத்தினாலேயும் தாங்கள் தான் தங்களுடைய நிர்பாக்கிய நிலைக்குக் காரணமாய் இருக்கிறதைக் கண்டு அதிக வேதனைப்பட்டு வெகுவாய்ப் பிரலாபித்து தங்கள் பேரிலே முறையிடுவார்களாம். நரகத்தில் என்றென்றைக்கும் உபாதிக்கப்படுகிற பாவிகள் தாங்கள் இந்த குற்றங்களிலே விழுந்திருக்கிறது தங்களுடைய குற்றமல்லாமல் வேறல்லவென்று அறிந்ததினாலே இந்த நினைவு அவர்களை இடைவிடாது அரிக்கும் மனப்புழுவைப் போலேயும் ஓயாமல் வருத்தப்படுத்தும் மனக்கண்டனையை போலேயும் இருக்குமல்லவா ?இந்த நினைவு அவர்கள் படும் வேதனையை எவ்வளவு அதிகரிக்குமென்று சொல்லக் கூடுமோ ? உத்தரிக்கிற ஆத்துமாக்களோவென்றால் தங்களுடைய உபாதை வருத்தங்கள் எல்லாம் தங்களாலே வந்தது கண்டு அப்படியே அதிக கஷ்டப்படுவார்கள் என்கிறது தப்பாது . ஆகையினால் அவர்கள் தங்கள் பேரில் முறையிட்டு "அய்யய்யோ ! அப்படி அந்தப் பாவங்களைக் கட்டிக் கொண்டோம் ? எப்படிக் கேட்டுப் போனோம் ? எப்படி இந்த நிர்பாக்கிய ஸ்தலத்துக்கு வந்தோம் ? எப்படி தேவ ஊழியத்தில் அசட்டையாய் இருந்தோம் ? எப்படிப் புண்ணிய வழியில் சுறுசுறுப்பில்லாமல் நடந்தோம் ? எப்போது எங்கள் பேரில் வந்த கோபாக்கினை அமரும் ? எப்போது மோட்ச பேரின்பத்தை அடைவோம் ? எப்போது எங்களுக்குச் சகல நன்மையை இருக்கிற சர்வேசுரனை முகமுகமாய் தரிசிப்போம் ? பூமியிலே வசிக்கிற புண்ணிய ஆத்துமாக்களே , எங்கள் பேரில் இரக்கமாய் இருங்கள் . எங்களுடைய நிர்பாக்கியத்தைப் பாருங்கள் , இந்த நிற்பக்கியத்தை முடியப்பண்ணுகிறது உங்களாலே கூடுமான காரியம் . ஓ! எங்களை மறவாதேயுங்கள் என்று இந்த ஆத்துமாக்கள் புலம்புவது போல நினைக்கத் தக்கதாய் இருக்கிறது .
கிறிஸ்துவர்களே ! இந்த ஆத்துமாக்களின் பேரில் உங்களுக்கு இரக்கம் வரும்படியாய் இப்போது சொன்னதை நன்றாய் தியானித்தால் போதுமென்றிருக்கிறோம்.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
மட்டற்ற கிருபை உடைத்தான சர்வேசுரா ! உம்முடைய கிருபையை நம்பி மரித்தவர்களுடைய ஆத்துமாக்களை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து மூன்று சுத்தவாளரை சுவாலையிலே தேற்றினார்போல இந்த ஆத்துமாக்களை இளைப்பாறப்பண்ணி பேரின்ப பாக்கியத்தைக் கொடுக்கும் உம்மிடத்திலே சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று உம்மை பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது :
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒன்றிரண்டு பிச்சைக்காரருக்குச் சாப்பாடு கொடுக்கிறது
புதுமை
அர்ச் ஐந்து காயப் பிரான்சீஸ்கு உண்டு பண்ணின சபையிலே அந்தொனிக் கோர்சொ என்ற ஒரு சந்நியாசி இருந்தார் . அவர் சபையிலே தாம் பண்ணின சுகிர்த புண்ணியங்களினாலும் தம்முடைய சரீரத்தை ஒறுத்துத் தாம் பண்ணின அகோர தவங்களினாலும் ஒரு செஞ்சுடரைப் போல விளங்கிக் கொண்டிருந்தார் . ஆகையினாலே அவரை எல்லோரும் பெரிய அற்சிஷ்டவராக எண்ணிக் கொண்டிருந்தனர் .அது இப்படி இருந்தாலும் அவருடைய காலம் முடிவுற்று செத்துப் போய் மோட்ச பேரின்பத்துக்கு உடனே போகாமல் உத்தரிக்கிற ஸ்தலத்தின் கடினமான சிறைச்சாலையில் நிறுத்தப்பட்டார் . அதிலிருந்து தேவ உத்தாரத்தின்படியே ஒருநாள் புறப்பட்டு அதிக துக்கபடுகிற மாதிரியாகவும் , பொறுக்கப்படாத வேதனைப்படுகிற மாதிரியாகவும் தாம் செத்த மடத்தில் வியாதியஸ்தரை விசாரிக்கும் சந்நியாசியாருக்குத் தம்மைக் காண்பித்தார் . அந்த சந்நியாசியாரோ அந்த ஆத்துமத்தைக் கண்டு மிகவும் திகிலடைந்து பிரம்மித்துச் சொன்னதாவது :"சகோதரரான அந்தோனியாரே , நாங்கள் உம்மை மோட்ச பேரின்ப வீட்டில் இருக்கிறதாக எண்ணிக் கொண்டிருந்தோமே, நீர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கிறதெப்படி? நீர் அவ்விடத்தில் படுகிற வேதனை என்னவென்று சொல்லுவீராக "என்றார் . அதற்க்கு அந்த ஆத்துமம் மறுமொழியாய் " நான் அவ்விடத்தில் இருவகை வேதனை அனுபவிக்கிறேன் . சொல்லிலடங்காத வருத்தத்தைக் கொடுக்கும் அக்கினி முதலான வாதனைகளைப் படுகிறேன் . ஆயினும் நான் இன்னும் எவ்வித நன்மையும் உடைத்தான கடவுளாகிய சர்வேசுரனைக் காணாமல் இருக்கிறேன் . இந்த வருத்தமானது மேற்சொன்ன எல்லா வேதனைகளுக்கு மேற்பட்டதாகவும் எந்த மனுஷனுடைய புத்தியினாலேயும் கண்டுபிடிக்கக் கூடாததாகவும் இருக்கிறது உண்மை தான் . நான் கடவுளான சர்வேசுரனைக் காணாதிருக்கும் அளவும் என்னைப் போல நிர்பாக்கியமுள்ளவன் ஒருவனும் இல்லை .
ஆகையினால் நீர் என் பேரில் இரக்கமாய் இருந்து நமது சபையில் இருக்கிற சகல சகோதரர்களும் எனக்காக ஆண்டவரிடத்தில் வேண்டிக் கொண்டு என்னுடைய நிர்பாக்கியம் முடியும்படிக்குப் பிரயாசைப்பட வேணுமென்று மன்றாடுகிறேன் என்று சொல்லி மறைந்து போனார்
அவ்வாறே அச்சபை சந்நியாசியார்கள் இந்தச் செய்தியை அறிந்து மிகவும் அதிசயப்பட்டதுமல்லாமல் , அந்த ஆத்துமத்துக்கான தவ தான தர்மக்கிரியைகளைச் செய்து செபங்களைப் பொழிந்து அநேக தடவை திவ்விய பூசையை ஒப்புக்கொடுத்தார்கள்
கிறிஸ்துவர்களே ! ஒரு பெரிய அற்சிஷ்டவராக எல்லாப் புண்ணியங்களையும் பண்ணி அற்சிஷ்டவரைப் போலச் செத்த இந்த சந்நியாசியார் , மோட்சத்துக்கு உடனே போகாமல் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகுநாளாய் நிறுத்தப்பட்டிருக்கும் போது பாவச் சேற்றிலே உருண்டு புரண்டு அநேகம் பாவங்களைக் கட்டிக் கொண்ட நீங்கள் பாவசங்கீர்த்தனம் பண்ணிச் செத்தாலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே உங்களுக்கு வரப்போகிற வேதனைகள் எவ்வளவென்று பார்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்றாய் நினைத்து நேரத்தோடு வேண்டிய பரிகாரம் பண்ண வேண்டாமோ ?
அதற்குப் பிற்பாடு இவ்வுலக கவைகளில் சிக்கப்பட்ட நீங்கள் சர்வேசுரனை முகமுகமாய் தரிசிக்காமல் இருக்கிற வேதனை எவ்வளவு பெரிதென்று அறியாமல் இருந்தாலும் இது எல்லா வேதனைகளையும் விட பெரிதாய் இருக்கிறதென்று விசுவசித்து , இந்த வேதனைகளை அனுபவிக்கும் பாவங்களைச் செய்யாமல் இருக்கும்படிக்கு மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள் .
கடைசியிலே உத்தரிக்கிற ஆத்துமங்கள் அபய சத்தமிட்டு தங்களுக்கு உதவி பண்ண வேணுமென்று அவ்வளவு ஆசையோடு கேட்குமிடத்தில் நீங்கள் அந்த ஆத்துமாக்களுக்கு இரங்காமல் இருப்பீர்களோ ? உங்களுக்குக் கொஞ்சம் இரக்கமாய் இருந்தால் அவர்களுடைய நிர்பாக்கியம் அமரும்படிக்கு உங்களுடைய செபங்களையும் தபங்களையும் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் சர்வேசுரனைக் காணாமல் படுகிற வேதனையைக் காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராய் இருக்கிற சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து அவருடன் ஒருமைப்பட்டு அவரைக் குறையாத நேசத்தால் அனுபவிக்கிறதே மோட்ச பேரின்ப பாக்கியம் தான் . அவரைத் தரிசியாமலும் , அவரிடத்தில் நம்பிக்கை இல்லாமலும் ,அவரை ஊழியுள்ள காலம் நேசிக்கக் கூடாமல் இருக்கிறதே நரகந்தான் . இந்தப் பரம கடவுளைக் காணவும் நேசிக்கவும் அனுபவிக்கவும் கூடாமல் இருக்கிறது நரக வாசிகளுக்கு அவர்கள் படும் மற்ற வேதனைகளிலும் நூறாயிரம் பங்கு பெரிய வேதனையாம் என்று அர்ச் . கிரிசோஸ்தோம் அருளப்பர் திருவுளம் பற்றினார் . உத்தரிக்கிற ஆத்துமாக்களோவென்றால் தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட உத்தரிப்பு முடியும் வரை வெகு உபாதைகளை அனுபவிக்கிறதும் தவிர , தாங்கள் ஏகமாய் நேசிக்கும் சர்வேசுரனைத் தரிசிக்காமலும் அவரிடத்திலே சேரக் கூடாமலும் இருப்பார்கள் . சர்வேசுரனைக் காணாத வேதனை எவ்வளவு பெரிதென்று இப்போது கொஞ்சமாகிலும் கண்டுபிடிக்கப் பிரயாசைப்படக் கடவோம் . இந்த ஆத்துமாக்களுக்கு நேரிட்ட எந்த வருத்தங்களிலும் அதுவே விசேஷ வருத்தமும் பொறுக்கப்படாத ஆக்கினையுமாமென்று வேத பாரகர் எல்லோரும் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள் .
நல்ல தாய் தகப்பனை வெகு வருஷமாய்க் காணாத மகனானவன் அவர்களிடத்திலே திரும்பிச் சேரும் சமயத்தில் போகாதபடிக்கு வழியில் நிறுத்தப்பட்டால் எவ்வளவு வேதனை அனுபவிப்பான் ? ஒரு பெரிய இராச்சியத்தை ஒருவன் கைக்கொள்ள வரும்போது யாதோர் தடையினால் போகக்கூடாதிருப்பானேயாகில் அவனுக்குண்டான விசனம் எவ்வளவு பெரிதாய் இருக்கும் ? தூரப் பயணத்துக்கு யாத்திரையாய்ப் போனவன் எவ்வகைத் துன்பங்களையும் இக்கட்டுக்களையும் பட்டு பெரும் புயல்களுக்கும் கடல் திருடருக்கும் தப்பித்து மிகுந்த திரவியங்களைச் சம்பாதித்து இறங்குதுறைச் சமீபத்தில் சேரும்போது யாதொரு காரணத்தால் கரையேறாதபடிக்கு நிறுத்தப்படுவானேயாகில் மனோவாக்குக்கு எட்டாத கசதி அனுபவிப்பானல்லோ ? அதைப் போல உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எல்லாவற்றையும் விட தாங்கள் நேசித்து ஆசிக்கிற சர்வ நன்மைத்தன்மை நிறைந்த சர்வேசுரனை அடையக் கூடாமலும் இவ்வுலக பூசல்களில் இருந்து தப்பித்து இவ்வுலக யுத்தங்களிலே ஜெயங்கொண்டு வந்திருந்தாலும் மோட்ச கரையிலேறவும் மோட்ச முடியைச் சூட்டவும் கூடாமல் இருக்கும் காரணத்திற்காக இந்தப் பரிசுத்த ஆத்துமாக்களுக்கு எப்பேர்ப்பட்ட துக்கமும் வருத்தமும் இருக்கும் என்று சொல்லத்தகுந்த தன்மை இல்லை
தமக்குப் பிரியமுள்ள மகனான சூசையப்பர் காணாமற் போனதினிமித்தம் பிதாப் பிதாவாகிய யாக்கொபென்பவர் யாதோர் ஆறுதலுமின்றி துக்கப்பட்டு பிரலாபித்து அழுது கொண்டு , என் குமாரனை இனி காணாமற் பிழைப்பேனோ என்பார் . தாவீது ராஜாவின் மகனான அப்சலோம் என்பவர் தன்னுடைய தகப்பனாரின் சமூகத்துக்குப் போகக்கூடாதென்கிறதைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு , என் தகப்பனார் என் குற்றத்தைப் பற்றி இன்னும் நினைத்து தம்மிடத்தில் என்னை வரவொட்டாமல் இருப்பாரேயாகில் , என்னை வெட்டிச் சாகப் பண்ணினால் நல்லது என்பார். இவர்கள் அனுபவித்த துயரம் மகா பெரியது என்றாலும் , உத்தரிக்கிற ஆத்துமாக்கள் தங்களுக்குத் தகப்பனாருமாய் கடவுளுமாய் கதியுமாய் இரம்மியமுமாய் இருக்கிற சர்வேசுரனுடைய பிரதாபமுள்ள சமூகத்துக்கு வரக்கூடாதென்கிறதினால் அவர்கள் படும் துயரம் எம்மாத்திரம் கடினமானதென்று சொல்லுவாருண்டோ ? கண்டுபிடிப்பருண்டோ ?
பூர்வீக காலத்திலே ஏசா என்கிறவன் ஒரு பதார்த்தத்தைச் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையினாலே மூத்த மகனான தனக்குச் செல்லுஞ் சுதந்திரத்தைத் தன தம்பியான பிதாப் பிதாவாகிய யாக்கோபென்பவருக்கு விற்று விட்டான் . அப்படி அதோடு எவ்வித நன்மைகளையும் பெறுவிக்கும் தன் தகப்பனாருடைய விசேஷ ஆசீர்வாதத்தையும் இழந்து போனான் . மயக்கம் மாறிப் புத்தி தெளிந்து சகலத்தையும் பார்க்கும்போது இந்த நஷ்டமெல்லாம் தன் குற்றத்தினாலே தானே நடந்தது என்று நன்றாய் அறிந்து , தான் பட்ட துன்ப மிகுதியினாலே ஒரு துஷ்டமிருகம் ஊளையிடுகிறார்போலே அகோரமாய்க் கர்ஜித்து பயங்கரமாய்க் கதறி அபயசத்தமிட்டு பொறுக்கப்படாத விசனத்தை அனுபவித்தானென்று வேத புத்தகத்திலே சொல்லி இருக்கிறதாமே . இந்த மனுஷனுடைய வியாகுலம் மிஞ்சியதென்று காணப்பட்டாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் படும் துன்பமும் கிலேசமும் விசனமும் மனக்கவலையும் மேற்பட்டதாய் இருக்குமென்று சொல்வதற்குச் சந்தேகமில்லை .
ஏசா என்கிறவன் தன் போசனப்பிரியத்தாலும் வேணுமென்கிற மனதாலும் மேற்சொன்ன நஷ்டமெல்லாம் தனக்கு வந்ததைப் பற்றி அவ்வளவு கவலை காண்பித்தானே. அவ்வண்ணமே அந்த ஆத்துமாக்கள் தங்களுடைய புத்தியீனத்தாலேயும் சொற்ப காரணத்தினாலேயும் தாங்கள் தான் தங்களுடைய நிர்பாக்கிய நிலைக்குக் காரணமாய் இருக்கிறதைக் கண்டு அதிக வேதனைப்பட்டு வெகுவாய்ப் பிரலாபித்து தங்கள் பேரிலே முறையிடுவார்களாம். நரகத்தில் என்றென்றைக்கும் உபாதிக்கப்படுகிற பாவிகள் தாங்கள் இந்த குற்றங்களிலே விழுந்திருக்கிறது தங்களுடைய குற்றமல்லாமல் வேறல்லவென்று அறிந்ததினாலே இந்த நினைவு அவர்களை இடைவிடாது அரிக்கும் மனப்புழுவைப் போலேயும் ஓயாமல் வருத்தப்படுத்தும் மனக்கண்டனையை போலேயும் இருக்குமல்லவா ?இந்த நினைவு அவர்கள் படும் வேதனையை எவ்வளவு அதிகரிக்குமென்று சொல்லக் கூடுமோ ? உத்தரிக்கிற ஆத்துமாக்களோவென்றால் தங்களுடைய உபாதை வருத்தங்கள் எல்லாம் தங்களாலே வந்தது கண்டு அப்படியே அதிக கஷ்டப்படுவார்கள் என்கிறது தப்பாது . ஆகையினால் அவர்கள் தங்கள் பேரில் முறையிட்டு "அய்யய்யோ ! அப்படி அந்தப் பாவங்களைக் கட்டிக் கொண்டோம் ? எப்படிக் கேட்டுப் போனோம் ? எப்படி இந்த நிர்பாக்கிய ஸ்தலத்துக்கு வந்தோம் ? எப்படி தேவ ஊழியத்தில் அசட்டையாய் இருந்தோம் ? எப்படிப் புண்ணிய வழியில் சுறுசுறுப்பில்லாமல் நடந்தோம் ? எப்போது எங்கள் பேரில் வந்த கோபாக்கினை அமரும் ? எப்போது மோட்ச பேரின்பத்தை அடைவோம் ? எப்போது எங்களுக்குச் சகல நன்மையை இருக்கிற சர்வேசுரனை முகமுகமாய் தரிசிப்போம் ? பூமியிலே வசிக்கிற புண்ணிய ஆத்துமாக்களே , எங்கள் பேரில் இரக்கமாய் இருங்கள் . எங்களுடைய நிர்பாக்கியத்தைப் பாருங்கள் , இந்த நிற்பக்கியத்தை முடியப்பண்ணுகிறது உங்களாலே கூடுமான காரியம் . ஓ! எங்களை மறவாதேயுங்கள் என்று இந்த ஆத்துமாக்கள் புலம்புவது போல நினைக்கத் தக்கதாய் இருக்கிறது .
கிறிஸ்துவர்களே ! இந்த ஆத்துமாக்களின் பேரில் உங்களுக்கு இரக்கம் வரும்படியாய் இப்போது சொன்னதை நன்றாய் தியானித்தால் போதுமென்றிருக்கிறோம்.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
மட்டற்ற கிருபை உடைத்தான சர்வேசுரா ! உம்முடைய கிருபையை நம்பி மரித்தவர்களுடைய ஆத்துமாக்களை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து மூன்று சுத்தவாளரை சுவாலையிலே தேற்றினார்போல இந்த ஆத்துமாக்களை இளைப்பாறப்பண்ணி பேரின்ப பாக்கியத்தைக் கொடுக்கும் உம்மிடத்திலே சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று உம்மை பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது :
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒன்றிரண்டு பிச்சைக்காரருக்குச் சாப்பாடு கொடுக்கிறது
புதுமை
அர்ச் ஐந்து காயப் பிரான்சீஸ்கு உண்டு பண்ணின சபையிலே அந்தொனிக் கோர்சொ என்ற ஒரு சந்நியாசி இருந்தார் . அவர் சபையிலே தாம் பண்ணின சுகிர்த புண்ணியங்களினாலும் தம்முடைய சரீரத்தை ஒறுத்துத் தாம் பண்ணின அகோர தவங்களினாலும் ஒரு செஞ்சுடரைப் போல விளங்கிக் கொண்டிருந்தார் . ஆகையினாலே அவரை எல்லோரும் பெரிய அற்சிஷ்டவராக எண்ணிக் கொண்டிருந்தனர் .அது இப்படி இருந்தாலும் அவருடைய காலம் முடிவுற்று செத்துப் போய் மோட்ச பேரின்பத்துக்கு உடனே போகாமல் உத்தரிக்கிற ஸ்தலத்தின் கடினமான சிறைச்சாலையில் நிறுத்தப்பட்டார் . அதிலிருந்து தேவ உத்தாரத்தின்படியே ஒருநாள் புறப்பட்டு அதிக துக்கபடுகிற மாதிரியாகவும் , பொறுக்கப்படாத வேதனைப்படுகிற மாதிரியாகவும் தாம் செத்த மடத்தில் வியாதியஸ்தரை விசாரிக்கும் சந்நியாசியாருக்குத் தம்மைக் காண்பித்தார் . அந்த சந்நியாசியாரோ அந்த ஆத்துமத்தைக் கண்டு மிகவும் திகிலடைந்து பிரம்மித்துச் சொன்னதாவது :"சகோதரரான அந்தோனியாரே , நாங்கள் உம்மை மோட்ச பேரின்ப வீட்டில் இருக்கிறதாக எண்ணிக் கொண்டிருந்தோமே, நீர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கிறதெப்படி? நீர் அவ்விடத்தில் படுகிற வேதனை என்னவென்று சொல்லுவீராக "என்றார் . அதற்க்கு அந்த ஆத்துமம் மறுமொழியாய் " நான் அவ்விடத்தில் இருவகை வேதனை அனுபவிக்கிறேன் . சொல்லிலடங்காத வருத்தத்தைக் கொடுக்கும் அக்கினி முதலான வாதனைகளைப் படுகிறேன் . ஆயினும் நான் இன்னும் எவ்வித நன்மையும் உடைத்தான கடவுளாகிய சர்வேசுரனைக் காணாமல் இருக்கிறேன் . இந்த வருத்தமானது மேற்சொன்ன எல்லா வேதனைகளுக்கு மேற்பட்டதாகவும் எந்த மனுஷனுடைய புத்தியினாலேயும் கண்டுபிடிக்கக் கூடாததாகவும் இருக்கிறது உண்மை தான் . நான் கடவுளான சர்வேசுரனைக் காணாதிருக்கும் அளவும் என்னைப் போல நிர்பாக்கியமுள்ளவன் ஒருவனும் இல்லை .
ஆகையினால் நீர் என் பேரில் இரக்கமாய் இருந்து நமது சபையில் இருக்கிற சகல சகோதரர்களும் எனக்காக ஆண்டவரிடத்தில் வேண்டிக் கொண்டு என்னுடைய நிர்பாக்கியம் முடியும்படிக்குப் பிரயாசைப்பட வேணுமென்று மன்றாடுகிறேன் என்று சொல்லி மறைந்து போனார்
அவ்வாறே அச்சபை சந்நியாசியார்கள் இந்தச் செய்தியை அறிந்து மிகவும் அதிசயப்பட்டதுமல்லாமல் , அந்த ஆத்துமத்துக்கான தவ தான தர்மக்கிரியைகளைச் செய்து செபங்களைப் பொழிந்து அநேக தடவை திவ்விய பூசையை ஒப்புக்கொடுத்தார்கள்
கிறிஸ்துவர்களே ! ஒரு பெரிய அற்சிஷ்டவராக எல்லாப் புண்ணியங்களையும் பண்ணி அற்சிஷ்டவரைப் போலச் செத்த இந்த சந்நியாசியார் , மோட்சத்துக்கு உடனே போகாமல் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகுநாளாய் நிறுத்தப்பட்டிருக்கும் போது பாவச் சேற்றிலே உருண்டு புரண்டு அநேகம் பாவங்களைக் கட்டிக் கொண்ட நீங்கள் பாவசங்கீர்த்தனம் பண்ணிச் செத்தாலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே உங்களுக்கு வரப்போகிற வேதனைகள் எவ்வளவென்று பார்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்றாய் நினைத்து நேரத்தோடு வேண்டிய பரிகாரம் பண்ண வேண்டாமோ ?
அதற்குப் பிற்பாடு இவ்வுலக கவைகளில் சிக்கப்பட்ட நீங்கள் சர்வேசுரனை முகமுகமாய் தரிசிக்காமல் இருக்கிற வேதனை எவ்வளவு பெரிதென்று அறியாமல் இருந்தாலும் இது எல்லா வேதனைகளையும் விட பெரிதாய் இருக்கிறதென்று விசுவசித்து , இந்த வேதனைகளை அனுபவிக்கும் பாவங்களைச் செய்யாமல் இருக்கும்படிக்கு மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள் .
கடைசியிலே உத்தரிக்கிற ஆத்துமங்கள் அபய சத்தமிட்டு தங்களுக்கு உதவி பண்ண வேணுமென்று அவ்வளவு ஆசையோடு கேட்குமிடத்தில் நீங்கள் அந்த ஆத்துமாக்களுக்கு இரங்காமல் இருப்பீர்களோ ? உங்களுக்குக் கொஞ்சம் இரக்கமாய் இருந்தால் அவர்களுடைய நிர்பாக்கியம் அமரும்படிக்கு உங்களுடைய செபங்களையும் தபங்களையும் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
ஏழாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நெருப்பில் வேதனைப்படுகிற விளக்கமாவது
தியானம்
செம்பொன் உலையில் சுத்தமாகிறதைப் போல உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நெருப்பிலே சுத்திகரிக்கப்பட்டு மோட்ச பேரின்பத்தை அடைவார்கள் என்று வேதபாரகர் ஒழுங்குடன் சொல்லுகிற சத்தியமாம் . சரீரத்தை விட்டு பிரிந்து போன ஆத்துமம் எப்படி நெருப்பிலே வாதிக்கப்படுமென்றால், சர்வேசுரனுடைய சர்வ வல்லபத்தால் புதுமையாக அப்படி மெய்யாகவே ஆகுமென்று அர்ச். அகுஸ்தீனுஸ் எழுதி வைத்தார் . ஆத்துமாக்களை சுட்டழிக்காமல் அவைகளை சுட்டெரித்து சுத்தமாக்குகிற இந்த நெருப்பு எவ்வளவு பெரிய வேதனை என்று சற்று நேரம் தியானிப்போமாக
நெருப்பினாலே வருகிற வேதனை எல்லா வேதனைகளை விடக் கொடியது என்று சிறு பிள்ளைகள் முதலாய்ச் சொல்லுவார்கள் அல்லவோ ? ஓர் இராச்சியத்தை சுதந்தரிக்க வேணுமென்றால் ஒன்றிரண்டு நாள் அல்லது ஒன்றிரண்டு மணிநேரம் நெருப்பிலே வேகவேணுமென்றிருந்தால் அதற்குச் சம்மதிப்பாருண்டோ ? இவ்வுலகத்திலுள்ள நெருப்பானது அவ்வளவு பயங்கரமான வேதனை கொடுக்கும்போது உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு எப்பேர்பட்டதாய் இருக்கும்?
நெருப்பானது கற்பாறைகளையும் ,இரும்பு ,வெள்ளி, தங்கம் முதலான உலோகங்களையும் வைரக் கற்களையும் உருகப் பண்ணுமே . இந்த நெருப்பு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு என்று சொல்ல கூடுமோ ? அப்படி உத்தேசமாய்ச் சொல்ல முடியாது நேபுக்கோத்தநேசர் மன்னன் மூன்று சுத்த வாலிபரைச் சுட்டெரிக்க நெருப்பு சுவாலையை ஏழு பங்கு அதிகமாய் மூட்டி எரிக்க வேணுமென்று மகா கோபத்தோடு கற்பித்தானே, அகோரமாய் எரியும் அந்த சுவாலையின் நெருப்பு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பென்று சொல்லக் கூடுமோ ? அப்படிச் சொல்லவும் முடியாது
சோதோம் , கொமேர் பட்டணங்களில் இருந்த குடிகள் பெரும் பாவிகளாய் இருந்தபடியினாலே இந்தப் பட்டணங்களையும் சுற்றுப் பட்டணங்களையும் முழுதும் அழிக்கத்தக்கதாக சர்வேசுரனுடைய கோபத்தினாலே நெருப்பு மழை பொழிந்து இந்த நாடெல்லாம் அக்கினியிலே எரிந்து போனதே , இப்பேர்பட்ட அக்கினி உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்புக்குச் சரியொத்தது என்று சொல்ல முடியுமோ ? அதையும் சொல்ல முடியாது
சர்வசங்கார நாள் வரும்போது இவ்வுலகத்தையும் அதில் அடங்கிய மாட மாளிகைகளையும் ,ஊர் பட்டணங்களையும் மலை பர்வதங்களையும் சகல மனுஷரையும் அழிக்கத்தக்கதாக நெருப்பினாலே மழை பெய்து உண்டானதெல்லாம் ஏக அக்கினியாய் போய் சங்கரிக்கப்படும். அப்போது சகலத்தையும் சுட்டெரிக்கும் அந்த நெருப்பு உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்புக்கு ஒப்பனை என்று சொல்லுவது சரியோ? அதுவும் சொல்ல முடியாது
இப்போது காண்பிக்கப்பட்ட நெருப்புக்கு உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பு மேற்பட்டதாய் இருக்கிறதென்பது சாத்தியமாகையால் அதனுடைய அகோரத்தை விவரித்துக் காண்பிக்கிறது எந்த மனுஷனாலேயும் செய்யக் கூடிய தன்மை அல்ல . அதெப்படிஎன்றால் , சர்வேசுரனுடைய பிரதாபமுள்ள இலட்சணங்களை எல்லாம் அளவறுக்கப்படாத தன்மையாய் எல்லாவற்றிலும் மனுஷனுடைய புத்திக்கு மேற்பட்டதென்பது பரம சத்தியமாகும். அளவில்லாத அவருடைய நீதி கோபத்தினால் இந்த நெருப்பு உண்டாயிருக்கிறதல்லாமல் அளவில்லாத அவருடைய பரிசுத்த தனத்துக்குத் தக்கது ஆத்துமாக்களை சுத்திகரிக்க உண்டாயிருக்கிறது . அதனாலே அதனுடைய அகோரம் அளவின்றி மட்டின்றி இடையின்றி உத்தரிக்கிற ஆத்துமாக்களைப் பிடித்து ,தீயாக்கி, அழிக்காமல் சுட்டெரித்து , எவ்வகையாலும் வருத்தப்படுத்தும் . அதனால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் தேவ சிநேகமும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்தால் உத்தரிக்கிற ஸ்தலம் நரகமென்று கருதப்படும் . அற்சிஷ்டவர்கள் முதலாய் இப்பேர்ப்பட்ட நெருப்பை நினைக்கும்போது பயந்து நடுங்கி ஐயையொவென்று கடின தபசு பண்ணுவார்களே . பெரிய பாவிகளாய் இருக்கிற நாம் அதற்குப் பயப்படாமல் இருக்கிறது எப்படி ?
மீண்டும் இந்த நெருப்பு சர்வேசுரனுடைய நீதியினாலே கொளுத்தப்பட்டு , நீதியின்படியே ஆத்துமாக்களை வருத்தப்படுத்தும் என்கிறதற்குச் சந்தேகமில்லை. அதெப்படி என்றால் , ஒவ்வொருவன் செய்த பாவங்களுக்கும் இந்தப் பாவங்களுடைய கொடுமைக்கும் எண்ணிக்கைக்கும் ஆக்கினைக்கும் தக்கதாய் இருக்கும் . ஒன்றிரண்டு பாவங்களுக்கும் ,நூறு , ஆயிரம் பாவங்களுக்கும் அசட்டையினாலே கட்டிக் கொண்ட பாவங்களுக்கும் அறிந்து மனதோடு துணிந்த பாவங்களுக்கும் ஆத்துமாக்களை அந்த நெருப்பு வெவ்வேறு விதமாய் வெவ்வேறு கடினமாய் உபாதிக்கும் என்பது சத்தியமாமே . சர்வ நீதியுள்ள சர்வேசுரன் எந்த புன்னியத்துக்கும் வெகுமதி கொடாமல் இருக்க மாட்டார் என்பது போல எந்தப் பாவத்துக்கும் தண்டனை கட்டளையிடாமல் இருக்க மாட்டார் . இது இப்படி இருக்க , கணக்கின்றி மட்டின்றி அச்சமின்றி பாவங்களைக் கட்டிக் கொள்ளுகிற உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பவிக்கும் என்று பாருங்கள்
அதல்லாமலும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமமானது தன் சரீரத்தோடு இல்லாமல் இருந்தாலும் இந்த சரீரத்தைக் கொண்டும் இந்த சரீரத்தின் அவயவங்களைக் கொண்டும் செய்த பாவங்களினிமித்தம் ஆத்துமம் அந்தந்த அவயவங்களில் வாதிக்கப்படுகிறார்போல வெகுவாய் வருத்தப்ப்படுமென்று சாஸ்திரிகள் சொல்லுகிற தன்மையாம் . பொய், ஆவலாதி ,அவதூறு இது முதலான பாவங்களுக்காக நாக்கு வேகிறார்போலவும் , இல்லாத சேதிகளையும் சிற்றின்ப பாட்டுக்களையும் சந்தோசமாய்க் கேட்டுக்கொண்டிருந்த பாவத்துக்காக காதுகளில் நெருப்பு வேகிறார்போலேயும் களவுகளையும் சண்டை சச்சரவுகளையும் செய்ததுக்காக இரண்டு கைகள் நெருப்பிலே இருக்கிறார்போலேயும் ஆகாத நினைவுகளுக்காய்த் தலை மண்டையில் மூளை கொதிக்கிறார்போலேயும் போசனப்பிரியத்துக்காக குடலெல்லாம் நெருப்பாய் இருக்கிறார்போலேயும் ஆத்துமமானது அந்தந்த வாதிகள் எல்லாவற்றையும் அனுபவிக்கும் .
இப்போது விவரித்தவைகளை ஆராய்ந்து பார்த்து தியானிக்கும்போது மனமிளகிப் புத்தி மயங்கி ,பலமற்று , பிரக்கினை தப்பி அய்யய்யோ எப்படிப் பொறுக்கக் கூடுமென்று மிகுந்த அச்சமும் நடுநடுக்கமும் வருகிறதல்லவா ?ஆயினும் இந்த பயம் பிரயோசனமில்லாமல் போகாதபடிக்கு நாம் சொல்லப்போகிறதைக் கேளுங்கள் . ஒரு முனிவர் பாவத்தைக் கட்டிக் கொள்ள பசாசு சோதனை வருவிக்கும்போது நரகத்தின் நெருப்பைப் பொறுக்கக் கூடுமோ கூடாதொவென்று சோதிக்கிறார் போல தமது இரண்டு கால்களை அனலிலே வைத்தார் . பொறுக்கவேண்டும் என்று பிரயாசைப்பட்டாலும் கொஞ்ச நேரமாவது பொறுக்கக் கூடாதென்று கண்டு பசாசின் சோதனைகளை தள்ளி அற்சிஷ்டவராக ஜீவித்தார் . கிறிஸ்துவர்களே ! உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு நரக நெருப்புக்கு சமமாய் இருக்கிறபடியினாலே அதைப் பொறுக்கக் கூடுமோ கூடாதொவென்று சோதிக்க இந்த முனிவரைப் போலச் செய்யுங்கள் . பொறுக்கக் கூடாதென்றால் இந்த நெருப்பில் விழாதபடிக்குத் தக்க பிரகாரமாய் நடக்க வேண்டும்
வர்த்தகனானவன் கடன் படுமுன்னே அவைகளை அடைக்க வழியும் வகையும் உண்டோ ? இல்லையோவென்று பார்க்கக்கடவானல்லோ ? அப்படிச் செய்யாமல் கடன் மேல் கடன்பட்டால் அவன் முழுமையும் கெட்டுப் போகிறது தப்பாது . நீங்கள் அப்படி எந்த பாவத்தையும் செய்யும் முன்னே இந்தப் பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்திலாகிலும் கடன்களை செலுத்துகிறார் போலே உத்தரிக்க வேண்டியதை இருக்கும் என்று நினைக்க வேண்டாமோ ? அதை நினைக்காதிருந்தால் நீங்கள் வெகு வேதனைகளைச் சம்பாதிக்கிறதுமல்லாமல் நித்திய நரகத்துக்குப் போகிற மகா ஆபத்தில் இருப்பீர்கள் என்பதற்குச் சந்தேகமில்லை
உங்களுடைய பிள்ளைகளாவது உங்களுடைய பெண்ஜாதியாவது வேறே எந்த மனுஷனாவது நெருப்பிலே விழுகிறதைக் கண்டால் எவ்வளவு ஜாக்கிரதையுடனேயும் எவ்வளவு வருத்தத்துடனேயும் அவர்களை எடுக்க பிரயாசைப்படுவீர்கள் ? உங்களுடைய மகன் மகளாவது தாய் தகப்பனாவது புருஷன் பெண்ஜாதியாவது இப்பூமியின் நெருப்பில் ஆயிரம் பங்கு அகோரமாய் எரியும் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பிலே வெந்து கிடக்கிறதை அறியும்போது அவர்களை மீட்க ஒன்றும் செய்யாமல் இருக்கக் கூடுமோ ?
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் :
சேசுவே எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
கடவுளான சர்வேசுரா ! எங்களுக்குமுன் விசுவாசத்தின் முத்திரையோடு இறந்து தேவரீருடைய சமாதானத்தில் இருக்கிற ஸ்திரீ பூமான்களான உமது ஊழியர்களை நினைத்தருளும் ஆண்டவரே ! அவர்களுக்கும் சேசுக்கிறிஸ்து நாதரிடமாக மரித்த மற்ற எல்லோருக்கும் நித்திய இளைப்பாற்றியையும் குறையாத பிரகாசத்தையும் துன்பமறியாத சமாதானத்தையும் கிருபையாய்த் தந்தருள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
ஏழாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரியை
கூடுமானால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களைக் குறித்து ஒருசந்தியாய் இருக்கிறது முடியாது போனால் ஒரு பிச்சைக்காரனுக்கு ஏதாகிலும் கொடுப்பது
புதுமை
முத்திபேறு பெற்ற ரக்கொனீக் கத்தரீனம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் மிகவும் பக்தியாய் இருந்ததினாலே அவர்களுடைய வேதனையைக் குறைக்க மகா தவக்கிரியைகளை நடத்துவாள் . ஒரு நாள் அவள் காய்ச்சலாய்க் கிடந்தது அகோரமாய்க் காய்ந்து அதிகமாய் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் தனக்குப் பொறுமை வரத்தக்கதாய் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளை நினைத்துக் கொண்டிருந்தாள் .அப்போது சர்வேசுரனுடைய கிருபையால் பரவசத்தை அடைந்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் அகோரமாய் எரியும் அக்கினித் திரளை கண்டாள். மேலும் அந்த அக்கினி எவ்வளவு கொடிதென்று அவள் அறியும்படியாகவும் ,ஆத்டுஹ்மாக்களின் பேரில் அவளுக்கு இன்னும் பக்தி வரும்படியாகவும் ஆண்டவருடைய செய்கையினாலே அந்த நெருப்பிலிருந்து ஒரு பொறி அவளுடைய இடது கன்னத்தின் பேரில் விழுந்தது . உடனே அதில் கனத்த காயமாகி முகமெல்லாம் வீங்கிப் போய் அவளுக்குப் பொறுக்கப்படாத வேதனை உண்டானது . இதைக் கண்டவர்களுக்கு இவள் : இவ்வுலகத்தில் வரக்கூடுமான வருத்த நோக்காடெல்லாம் இந்தச் சின்னத் தீப்பொறி எனக்கு வருவிக்கும் வேதனையினிடமாக ஒன்றுமில்லாதது போல இருக்கிறதென்பாள்.
அர்ச் சாமிநாதர் உண்டு பண்ணின சபையிலே ஸ்தனிஸ்லாஸ் என்னும் பேர் பெற்ற குருவானவர் ஒருவர் இருந்தார் . அவர் ஒரு நாள் அக்கினியால் சூழப்பட்ட ஒரு உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமத்தைக் கண்டார். அந்த ஆத்துமத்தைப் பார்த்து உன்னை உபாதிக்கும் நெருப்பு இந்த உலகத்து நெருப்பை விட அதிக வேகமுள்ளதோ என்று கேட்டதற்கு , அந்த ஆத்துமம் மறுமொழியாக பூலோகத்தின் நெருப்பை எல்லாம் என்னைச் சுட்டெரிக்கும் அக்கினியோடு ஒப்பிட்டால் குளிர்ந்த காற்றைப் போல் காணப்படும் என்றது . மறுபடியும் குருவானவர் நான் அதன் அகோரத்தைப் பரீட்சை செய்யலாமோ என்று கேட்டதற்கு , அந்த ஆத்துமம் , இவ்வுலகத்தில் உள்ள எந்த மனுஷனும் கொஞ்சமாவது பொறுக்கக் கூடாதென்றிருந்தாலும் உம்முடைய கையை நீட்டும் , கொஞ்சம் பார்ப்பீராக என்றவுடனே , அந்த ஆத்துமம் தனது நெற்றியிலிருந்து ஒரு துளி வியர்வை விழுந்தாற்போல அந்த சந்நியாசியாருடைய கையிலே பட்டது . அதனாலே சந்நியாசியாருக்கு வந்த வருத்த மிகுதியினால் பெரும் சப்தமிட்டு தரையிலே விழுந்து சாகிறார்போல கிடந்தார் . இந்த சத்தத்தைக் கேட்டு மற்ற சந்நியாசிமார்கள் ஓடி வந்து என்ன நடந்ததென்று கேட்க , மிரண்டு , நடுக்கமெடுத்து தமது கையைக் காண்பித்து நடந்ததை விவரித்தார் . அவர் இன்னும் ஒரு வருஷம் தனக்கு உண்டாயிருந்த காயத்தால் சொல்லில் அடங்காத வேதனைகளை அனுபவித்து , பிற்பாடு சாகப் போகிற தருணத்தில் கிட்ட நின்றவர்களைப் பார்த்து 'தம்பிமார்களே ! இவ்வளவு பயங்கரமான வேதனைகளை நீங்கள் அனுபவிக்காதபடிக்கு உங்களாலே கூடுமான மட்டும் எல்லா பாவங்களையும் விலக்க வேண்டியதுமல்லாமல் செய்த பாவங்களுக்கு எப்போதும் தபசு பண்ணுங்கள் என்று சொல்லி மரணத்தை அடைந்தார் .
கிறிஸ்தவர்களே ! இந்த சந்நியாசியார் சொன்ன வார்த்தைகள் உங்களுக்குத் தானே சொல்லப்பட்டாற்போல தியானித்து எப்போதும் நினைக்கக் கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
எட்டாம் நாள்
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எத்தனை காலம் உத்தரிக்கிறார்கள் என்று காண்பிக்கிற வகையாவது
தியானம்
ஒரு சொற்ப வேதனையானாலும் வெகு நாளாய் அதை அனுபவிக்க வேண்டியதானால் பெரிதாகிப் பொறுக்கப்படாத வேதனையைக் காணப்படும் என்கிறதற்குச் சந்தேகமில்லை . போன தியானங்களிலே காண்பித்தாற் போல உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் அவ்வளவு கடினமும் அகோரமுமாய் இருக்கையிலே இவைகளை வெகு வருஷமாய் அனுபவிக்கிறது எவ்வளவு வருத்தமாய் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது யோசித்துக் கொள்ள வேண்டும்
மகா சாஸ்திரியான பெல்லாமீனூஸ் என்கிறவர் இவ்விஷயத்தில் எழுதினதாவது : சில ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளில் பத்து , இருபது வருஷத்துக்கு அதிகம் , நூறு ஐந்நூறு வருஷத்துக்கு அதிகம் உபாதிக்கப்படுவார்கள் என்பது நிச்சயந்தான் என்ற பிற்பாடு , தாம் சொல்லுகிறதை அநேக உதாரணங்களினாலும் ,வேத பாரகருடைய வாக்கியங்களினாலும் , சில அர்சியசிஷ்டவர்களுடைய காட்சிகளாலும் ஒப்பித்துக் கொண்டு வருகிறார். இவைகளெல்லாம் இங்கே விவரிக்காமல் ஒன்றிரண்டு நியாயங்களை மாத்திரம் சொல்லிக் காட்டுவோம் .அது எப்படி என்றால் :
நீதியுள்ளவருமாய் சகலத்தையும் அறிகிறவருமாய் இருக்கிற சர்வேசுரன் சகலமான நற்கிரியைகளுக்கு மோட்சத்தில் வெகுமதி கொடுக்குமாப் போல சகலமான பாவங்களுக்கு தண்டனை இடுவாரென்பது தப்பில்லாத சத்திய விசுவாசமாம் . ஆகையால் ஒரு மனுஷனுக்கு நேரிடப்போகிற தண்டனை எவ்வளவென்று அறிவதற்கு அவன் செய்த பாவங்களுக்கு கணக்கேற்றிப் பார்க்க வேண்டுமல்லவோ ? இந்தப் பிரகாரமாய் முதன் முதலில் கிறிஸ்தவன் ஆன ஒரு நல்ல மனுஷனுடைய சொற்பப் பாவங்களை உத்தேசித்து எண்ணிக் கொள்ளலாம் . நீதிமானானவன் நாளொன்றுக்கு ஏழு தரம் பாவத்தைக் கட்டிக் கொள்ளுகிறான் என்று சத்திய வேதத்திலே எழுதி இருக்கிறது . இப்போது நாம் குறிக்கிற மனுஷன் நாள் ஒன்றுக்கு பத்து சொற்ப பாவங்களைக் கட்டிக் கொள்ளுகிறான் என்கிறாற்போல கணக்கு சொல்லலாம் . ஒரு வருஷத்திலே அந்த மனுஷன் நாளொன்றுக்கு பத்து பாவங்களைச் செய்கிற விதமாக ஒரு வருஷத்திலே மூவாயிரத்து அறுநூற்று ஐம்பது பாவங்களைக் கட்டிக் கொண்டிருப்பான் .பத்து வருஷத்துக்கு பிற்பாடு முப்பத்து ஆறாயிரத்து ஐந்நூறு பாவங்களைச் செய்திருப்பானே. இன்னும் வேறே பத்து வருஷம் இந்த மனுஷன் ஜீவித்திருந்தால் எழுபத்து மூன்றாயிரம் பாவங்களைச் செய்திருப்பான் அல்லவோ ? அப்படி இருபது வருஷத்துக்குள்ளாக எழுபத்து மூன்றாயிரம் பாவங்களைக் கட்டிக் கொண்ட மனுஷன் எவ்வளவாய் சர்வேசுரனுடைய நீதிக்குப் பரிகாரமாக தண்டனை இடப்பட வேண்டியதாய் இருக்கும் . ஒரு பாவத்துக்கு ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்க வேண்டுமென்றாலும் முன் சொன்ன மனுஷன் எழுபத்து மூன்றாயிரம் நாள் அந்த அகோர நெருப்பிலே வேக வேண்டும் , எழுபத்து மூன்றாயிரம் நாள் சர்வேசுரனைக் காணாமல் இருக்க வேண்டும் , எழுபத்து மூன்றாயிரம் நாள் மேற்சொன்ன வேதனைகளை அனுபவிக்க வேண்டும் . எழுபத்து மூன்றாயிரம் நாள் காய்ச்சலோடும்,அல்லது பல்வலியோடும் அல்லது வாயிற்று வலியோடும் வருத்தப்பட்டுக் கிடக்க வேண்டுமென்றால் பொறுக்கக் கூடுமோ சொல்லுங்கள் . அந்தந்த பாவம் சொற்ப பாவமென்றாலும் அவைகள் அம்மாத்திரமான பெரும் தொகையாய் இருக்கிறதென்று கண்டு அப்பேற்பட்ட தண்டனைகளுக்குக் காரணம் ஆகிறதினால் அவைகளைச் சொற்ப போல்லாப்பென்று சொல்லுவீர்களோ ? பயப்படாமல் இருப்பீர்களோவென்று அர்ச் அகுஸ்தீனூஸ் கேட்கிறார் .
தேவநீதிக்கு எழுபத்து மூன்றாயிர நாள் கடன்பட்ட இந்த மனுஷன் நல்ல கிறிஸ்தவன் என்றும் சாவான பாவத்தைக் கட்டிக் கொள்ளாத மனுஷனென்றும் இருக்கிறார்போலே மேற்சொன்ன கணக்கை எண்ணிக் கொண்டோமே . ஆயினும் இவ்வுலகத்திலே அப்படிப்பட்ட மனுஷர்கள் கொஞ்சம் பேர்தான் . மற்ற எல்லோரும் பொதுப்பட அநேகம் சாவான பாவங்களைக் கட்டிக் கொண்டு வருகிறார்கள் என்றும் உங்களுக்கு நன்றாய்த் தெரிந்த காரியம் தானே . சிலர் யாதோர் பயம் அச்சமின்றி ,சிலர் பத்து இருபது வருஷம் மோகப் பாவச் சேற்றிலே விழுந்து ,சிலர் விடாத மனஸ்தாபத்தோடே வாழ்ந்து ,சிலர் புறத்தியாருடைய உடைமைகளைத் திருடி உத்தரிக்காமல் இருந்து சிலர் ஆங்காரத்தால் பொங்கி குருக்களுக்கும் திருச்சபைக்கும் கீழ்ப்படியாமல் நின்று , சிலர் புத்தி மயங்கி லாகிரியான வஸ்துக்களை தின்னப் பழகி , இது முதலான துரோகங்களைப் பண்ணி பெரும் பாவிகளாகத் திரிவார்கள் அல்லவோ ? இத்தகைய பாவங்களைக் கட்டிக் கொண்ட பிற்பாடு ஒரு மணி நேரம் ஆயத்தம் செய்து அடிமை மனஸ்தாபப்பட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணுவார்கள் என்பது மெய்தான் . ஆயினும் அத்தோடே எல்லாம் முடிந்ததென்று நினைக்கிறார்போலே அவர்கள் யாதொரு தபசு பண்ணவும் , யாதொரு பரிகாரம் பண்ணவும் யாதோர் பிச்சை தருமமும் கொடுக்கக் காணோமே . திரும்பத் திரும்ப அவர்கள் அநேகம் பாவங்களை கட்டிக் கொள்ளுகிறதல்லாமல் யாதொரு உத்தரிப்பையும் பரிகாரத்தையும் செய்கிறவர்கள் அல்ல .அப்படித் தங்களுக்கு ஆயுள் இருக்குமளவும் நடந்த பின்னர் கடைசியிலே சர்வேசுரனுடைய அளவிறந்த கிருபையினாலே நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணி இஷ்டப் பிரசாதத்தோடு சாவார்கள் . ஆனால் முன் சொன்ன மனுஷன் தான் கட்டிக் கொண்ட சொற்ப பாவங்களுக்கு எழுபத்து மூன்றாயிரம் நாள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே உத்தரிக்க வேண்டியதாய் இருக்கையில் இவ்வளவு சாவான பாவங்களைச் செய்தவர்கள் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணிச் செத்திருந்தாலும் எத்தனை வருஷ காலம் உத்தரிப்பார்கள் என்று சொல்லுங்கள் .ஆனால் அர்ச் சிப்பரியானூஸ் எழுதினாற்போல சில பாவிகள் உலகம் முடியுமட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருப்பார்கள் என்று சொல்லத்தக்கதாய் இருக்கிறது
செய்த சொற்ப பாவங்களுக்கும் ,கட்டிக் கொண்ட சாவான பாவங்களுக்கும் ,இவ்வுலகத்தில் தான ,தர்ம, தப , செபத்தினாலும் திருச்சபையின் பலன்களினாலும் பரிகாரம் பண்ணலாம் என்பது மெய்தான் . ஆயினும் தங்களுடைய பாவங்களுக்காக செபங்களைப் பொழிகிறவர்களும் , பிச்சை கொடுக்கிறவர்களும் , தவக்கிரியைகளை நடத்துகிறவர்களும் மிகவும் கொஞ்சம் பேர்களே என்று நீங்கள் முதலாய் சொல்லுவீர்கள் அல்லவோ ? எல்லோரும் ஏறக்குறைய இவ்வுலகத்தின் சுகபாக்கியங்களையும் ஆஸ்தி திரவியங்களையும் சிலாக்கிய மகிமைகளையும் மகா கவனத்தோடு தேடுகிறதுமல்லாமல் அவர்கள் தவத்தினுடைய பேரை முதலாய் அறியார்கள் . இது இப்படி இருக்க அவர்கள் தாங்கள் தேவ நீதிக்குச் செலுத்தவேண்டிய சகலமான கடன்களோடு செத்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வருஷகாலம் உபாதிக்கப்படுவார்கள் என்பது தப்பாது .
அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறபோது அவர்களுக்காகச் செய்யப்பட்ட ஜெபங்களினாலும் கொடுத்த பிச்சைகளினாலும் செய்வித்த பூசைகளினாலும் அவர்களுடைய அவதி குறையலாம் என்பது மெய்தான் . ஆனாலும் தோமாஸ் ஆக்கென்பிஸ் சொன்னது போல உயிரோடிருக்கும்போது தன்னைத்தான் மறந்து போகிறவன் செத்த பிற்பாடு அவனை நினைக்கப் போகிறது யார் ? அப்படித்தான் உங்களுக்கும் சம்பவிக்குமோ இல்லையோ என்று அறிவதற்கு உங்களுடைய மரித்தோர்கள் மட்டில் நீங்கள் இப்போது செய்கிறதைப் பாருங்கள் . மரித்த உங்களுடைய உற்றார் , பெற்றார் , சேர்ந்தார் ,சிநேகிதர் , உபகாரிகளுக்கோ என்னத்தைச் செய்கிறீர்கள் ? என்ன பிச்சை கொடுக்கிறீர்கள் ? எத்தனை பூசை பண்ணுவித்தீர்கள்? மிகவும் கொஞ்ச மாத்திரம் செய்தோமென்றால் அப்படித்தான் உங்களுக்கும் மிகவும் கொஞ்ச மாத்திரம் செய்வார்கள் . உங்களை எல்லோரும் மறந்து போகிறார்போல நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் எத்தனையோ வருஷம் கிடப்பீர்கள் என்று உத்தேசித்துப் பார்க்கக் கடவீர்கள் . முன் சொன்ன நியாயங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் மெத்தவும் கடினமாய் இருக்கிறதும் தவிர ,அவைகளை அநேக வருஷ காலம் அனுபவிக்க வேண்டுமென்று தெளிவிக்கப்பட்டது . அதன் பேரிலே நீங்கள் நன்றாய் யோசனை பண்ணக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாய் இரும்
செபம்
நித்திய பிதாவாகிய சர்வேசுரா ! எங்களுடைய தாய் தகப்பனை வணங்க வேணுமென்று கற்பித்தீரே, மரித்த எங்களது தாய் தகப்பனுடைய ஆத்துமாக்களுக்குக் கிருபை செய்து அவர்களுடைய பாவங்களைப் பொறுத்து , நாங்கள் அவர்களை நித்திய பிரகாசமுள்ள உம்முடைய இராஜ்ஜியத்தில் பார்க்கும்படி செய்ய வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
எட்டாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை
மரித்த உங்களுடைய தாய் தகப்பனை நினைத்து அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும் , என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் யோசிக்கிறது
புதுமை
1644 ம் ஆண்டில் இராஜ கோத்திரத்திலே பிறந்த பேர் பெற்ற ஒரு துரையானவன் தன் மைத்துனனான வேறொரு துரையிடம் சண்டை செய்த நிமித்தம் அவர்களுக்கிடையில் ஒரு தனிப்போர் உண்டானது . அந்த தனிப்போரில் மேற்சொன்ன துரையானவன் ஈட்டியினாலே நெஞ்சிலே குத்தப்பட்டு உடனே செத்துப் போனான் . இப்படிப்பட்ட தனிப்போர்களை திருச்சபையானது விலக்குகிறதினாலே செத்தவனுடைய ஆத்துமத்துக்காக தேவாலயத்தில் யாதொரு சடங்கும் பண்ணவில்லை ,அவனுடைய பிரேதம் மந்திரிக்கப்பட்ட கல்லறையிலே வைக்கப்பட்டதுமில்லை . அந்தப் பிரபு பாவசங்கீர்த்தனம் இல்லாமலே திடீரென்று செத்துப் போனதால் அவன் நரகத்திற்குப் போயிருப்பான் என்று எல்லோரும் நிச்சயித்துக் கொண்டிருந்தார்கள் . அர்ச் பிரான்சீஸ்கு சலேசியூஸ் உண்டு பண்ணின சபையிலே புண்ணியம் நிறைந்த ஒரு கன்னியாஸ்திரி அக்காலத்திலே இருந்து வந்தாள். சர்வேசுரன் அவளுக்கு அந்த துரை உயிரோடிருக்கும்போது பண்ணின தர்மங்களைக் குறித்து ஆண்டவருடைய விசேஷ கிருபையினாலே அவன் சாகிற தருணத்தில் உத்தம மனஸ்தாபப்பட்டு நித்திய நரகத்துக்குத் தப்பி உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறதாக அறியப் பண்ணினார்
அவன் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகுகாலமாய் உபாதிக்கப்படத் தீர்வை இடப்பட்டானென்று அந்தக் கன்னியாஸ்திரியானவள் கண்டு அவனுடைய அவதியைக் குறைக்கத் தன்னுடைய செபத்தியானங்களை ஒப்புக் கொடுத்தாள். அப்படி வெகு நாளாய்ச் செய்த பிற்பாடு அந்த ஆத்துமத்தினுடைய வேதனை சில மணிநேரமாகக் குறைந்தது என்று சர்வேசுரனாலே அறிந்தாள். இந்தச் செய்தியை மற்ற கன்னியாஸ்திரிமாரோடு சந்தோசத்துடன் அறிக்கை பண்ணுமிடத்தில், அவ்வளவு சொற்ப ஆறுதலுக்கு அத்தனை சந்தோசப்படுவானேன் என்று அவர்கள் சொன்னார்கள் .அதற்க்கு அவள் அந்த ஆத்துமத்தின் வேதனைகள் கொஞ்ச நாழிகை அமர்ந்திருந்ததை அற்ப ஆறுதலாய் நினைக்காதேயுங்கள் . கொஞ்ச நேரம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுகிறதற்கு முன்பாக இவ்வுலகத்தில் அநேக வருஷம் கடின வியாதியினாலே வருகிற வருத்தமெல்லாம் நிகரல்ல என்றாள்
மீண்டும் அந்தப் புண்ணியவதி அந்த நிர்பாக்கியமுள்ள ஆத்துமத்தைக் குறித்து பத்து வுருஷம் ஒருசந்தியாய் இருந்து செய்யக் கூடிய தவக்கிரியை எல்லாம் செய்து ஓயாமல் செபித்துக் கொண்டிருந்தாள் . அதற்க்கு அப்பால் இந்த ஆத்துமத்திற்கு விதித்த வேதனைகளில் ஒரு பங்கு தனக்கு அனுப்ப வேண்டுமென்று ஆண்டவரை மன்றாடினாள் . ஆண்டவர் அந்த மன்றாட்டுக்கு இரங்கி ஓர் அகோரமான வியாதியை அவளுக்கு அனுப்பினதின் பேரில் அவளுடைய சரீரமெல்லாம் கடினமாய் வலித்து வேகமாய்க் காய்ந்து அவளுடைய கை கால் பொறுக்கப்படாத குளிரினாலே திமிர்ந்து அவளுடைய மனதில் அதிகத் துன்பமும் கிலேசமும் உண்டாயிருந்தது . அவள் இதெல்லாவற்றையும் அந்த ஆத்துமத்திற்காகச் செய்திருந்தாலும் அந்த ஆத்துமத்தை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து முழுமையும் மீட்டு இரட்சிக்கக்கூடாமல் செத்தாள்
கிறிஸ்துவர்களே , மேற்சொன்ன புதுமையினாலே உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் எவ்வளவு கடினமாய் இருக்கிறதோ , எவ்வளவு காலம் இருக்கப் போகிறதோவென்று யோசித்து அவ்விடத்துக்கு நீங்கள் போகாதபடிக்கு தக்க முறையாய் நடக்க வேண்டியதுமல்லாமல் அதிலே அதிக உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களைக் குறித்து சோம்பல் , சலிப்பு மறதி இன்றி இடைவிடாமல் செபம் பண்ண வேண்டுமென்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எத்தனை காலம் உத்தரிக்கிறார்கள் என்று காண்பிக்கிற வகையாவது
தியானம்
ஒரு சொற்ப வேதனையானாலும் வெகு நாளாய் அதை அனுபவிக்க வேண்டியதானால் பெரிதாகிப் பொறுக்கப்படாத வேதனையைக் காணப்படும் என்கிறதற்குச் சந்தேகமில்லை . போன தியானங்களிலே காண்பித்தாற் போல உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் அவ்வளவு கடினமும் அகோரமுமாய் இருக்கையிலே இவைகளை வெகு வருஷமாய் அனுபவிக்கிறது எவ்வளவு வருத்தமாய் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது யோசித்துக் கொள்ள வேண்டும்
மகா சாஸ்திரியான பெல்லாமீனூஸ் என்கிறவர் இவ்விஷயத்தில் எழுதினதாவது : சில ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளில் பத்து , இருபது வருஷத்துக்கு அதிகம் , நூறு ஐந்நூறு வருஷத்துக்கு அதிகம் உபாதிக்கப்படுவார்கள் என்பது நிச்சயந்தான் என்ற பிற்பாடு , தாம் சொல்லுகிறதை அநேக உதாரணங்களினாலும் ,வேத பாரகருடைய வாக்கியங்களினாலும் , சில அர்சியசிஷ்டவர்களுடைய காட்சிகளாலும் ஒப்பித்துக் கொண்டு வருகிறார். இவைகளெல்லாம் இங்கே விவரிக்காமல் ஒன்றிரண்டு நியாயங்களை மாத்திரம் சொல்லிக் காட்டுவோம் .அது எப்படி என்றால் :
நீதியுள்ளவருமாய் சகலத்தையும் அறிகிறவருமாய் இருக்கிற சர்வேசுரன் சகலமான நற்கிரியைகளுக்கு மோட்சத்தில் வெகுமதி கொடுக்குமாப் போல சகலமான பாவங்களுக்கு தண்டனை இடுவாரென்பது தப்பில்லாத சத்திய விசுவாசமாம் . ஆகையால் ஒரு மனுஷனுக்கு நேரிடப்போகிற தண்டனை எவ்வளவென்று அறிவதற்கு அவன் செய்த பாவங்களுக்கு கணக்கேற்றிப் பார்க்க வேண்டுமல்லவோ ? இந்தப் பிரகாரமாய் முதன் முதலில் கிறிஸ்தவன் ஆன ஒரு நல்ல மனுஷனுடைய சொற்பப் பாவங்களை உத்தேசித்து எண்ணிக் கொள்ளலாம் . நீதிமானானவன் நாளொன்றுக்கு ஏழு தரம் பாவத்தைக் கட்டிக் கொள்ளுகிறான் என்று சத்திய வேதத்திலே எழுதி இருக்கிறது . இப்போது நாம் குறிக்கிற மனுஷன் நாள் ஒன்றுக்கு பத்து சொற்ப பாவங்களைக் கட்டிக் கொள்ளுகிறான் என்கிறாற்போல கணக்கு சொல்லலாம் . ஒரு வருஷத்திலே அந்த மனுஷன் நாளொன்றுக்கு பத்து பாவங்களைச் செய்கிற விதமாக ஒரு வருஷத்திலே மூவாயிரத்து அறுநூற்று ஐம்பது பாவங்களைக் கட்டிக் கொண்டிருப்பான் .பத்து வருஷத்துக்கு பிற்பாடு முப்பத்து ஆறாயிரத்து ஐந்நூறு பாவங்களைச் செய்திருப்பானே. இன்னும் வேறே பத்து வருஷம் இந்த மனுஷன் ஜீவித்திருந்தால் எழுபத்து மூன்றாயிரம் பாவங்களைச் செய்திருப்பான் அல்லவோ ? அப்படி இருபது வருஷத்துக்குள்ளாக எழுபத்து மூன்றாயிரம் பாவங்களைக் கட்டிக் கொண்ட மனுஷன் எவ்வளவாய் சர்வேசுரனுடைய நீதிக்குப் பரிகாரமாக தண்டனை இடப்பட வேண்டியதாய் இருக்கும் . ஒரு பாவத்துக்கு ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்க வேண்டுமென்றாலும் முன் சொன்ன மனுஷன் எழுபத்து மூன்றாயிரம் நாள் அந்த அகோர நெருப்பிலே வேக வேண்டும் , எழுபத்து மூன்றாயிரம் நாள் சர்வேசுரனைக் காணாமல் இருக்க வேண்டும் , எழுபத்து மூன்றாயிரம் நாள் மேற்சொன்ன வேதனைகளை அனுபவிக்க வேண்டும் . எழுபத்து மூன்றாயிரம் நாள் காய்ச்சலோடும்,அல்லது பல்வலியோடும் அல்லது வாயிற்று வலியோடும் வருத்தப்பட்டுக் கிடக்க வேண்டுமென்றால் பொறுக்கக் கூடுமோ சொல்லுங்கள் . அந்தந்த பாவம் சொற்ப பாவமென்றாலும் அவைகள் அம்மாத்திரமான பெரும் தொகையாய் இருக்கிறதென்று கண்டு அப்பேற்பட்ட தண்டனைகளுக்குக் காரணம் ஆகிறதினால் அவைகளைச் சொற்ப போல்லாப்பென்று சொல்லுவீர்களோ ? பயப்படாமல் இருப்பீர்களோவென்று அர்ச் அகுஸ்தீனூஸ் கேட்கிறார் .
தேவநீதிக்கு எழுபத்து மூன்றாயிர நாள் கடன்பட்ட இந்த மனுஷன் நல்ல கிறிஸ்தவன் என்றும் சாவான பாவத்தைக் கட்டிக் கொள்ளாத மனுஷனென்றும் இருக்கிறார்போலே மேற்சொன்ன கணக்கை எண்ணிக் கொண்டோமே . ஆயினும் இவ்வுலகத்திலே அப்படிப்பட்ட மனுஷர்கள் கொஞ்சம் பேர்தான் . மற்ற எல்லோரும் பொதுப்பட அநேகம் சாவான பாவங்களைக் கட்டிக் கொண்டு வருகிறார்கள் என்றும் உங்களுக்கு நன்றாய்த் தெரிந்த காரியம் தானே . சிலர் யாதோர் பயம் அச்சமின்றி ,சிலர் பத்து இருபது வருஷம் மோகப் பாவச் சேற்றிலே விழுந்து ,சிலர் விடாத மனஸ்தாபத்தோடே வாழ்ந்து ,சிலர் புறத்தியாருடைய உடைமைகளைத் திருடி உத்தரிக்காமல் இருந்து சிலர் ஆங்காரத்தால் பொங்கி குருக்களுக்கும் திருச்சபைக்கும் கீழ்ப்படியாமல் நின்று , சிலர் புத்தி மயங்கி லாகிரியான வஸ்துக்களை தின்னப் பழகி , இது முதலான துரோகங்களைப் பண்ணி பெரும் பாவிகளாகத் திரிவார்கள் அல்லவோ ? இத்தகைய பாவங்களைக் கட்டிக் கொண்ட பிற்பாடு ஒரு மணி நேரம் ஆயத்தம் செய்து அடிமை மனஸ்தாபப்பட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணுவார்கள் என்பது மெய்தான் . ஆயினும் அத்தோடே எல்லாம் முடிந்ததென்று நினைக்கிறார்போலே அவர்கள் யாதொரு தபசு பண்ணவும் , யாதொரு பரிகாரம் பண்ணவும் யாதோர் பிச்சை தருமமும் கொடுக்கக் காணோமே . திரும்பத் திரும்ப அவர்கள் அநேகம் பாவங்களை கட்டிக் கொள்ளுகிறதல்லாமல் யாதொரு உத்தரிப்பையும் பரிகாரத்தையும் செய்கிறவர்கள் அல்ல .அப்படித் தங்களுக்கு ஆயுள் இருக்குமளவும் நடந்த பின்னர் கடைசியிலே சர்வேசுரனுடைய அளவிறந்த கிருபையினாலே நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணி இஷ்டப் பிரசாதத்தோடு சாவார்கள் . ஆனால் முன் சொன்ன மனுஷன் தான் கட்டிக் கொண்ட சொற்ப பாவங்களுக்கு எழுபத்து மூன்றாயிரம் நாள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே உத்தரிக்க வேண்டியதாய் இருக்கையில் இவ்வளவு சாவான பாவங்களைச் செய்தவர்கள் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணிச் செத்திருந்தாலும் எத்தனை வருஷ காலம் உத்தரிப்பார்கள் என்று சொல்லுங்கள் .ஆனால் அர்ச் சிப்பரியானூஸ் எழுதினாற்போல சில பாவிகள் உலகம் முடியுமட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருப்பார்கள் என்று சொல்லத்தக்கதாய் இருக்கிறது
செய்த சொற்ப பாவங்களுக்கும் ,கட்டிக் கொண்ட சாவான பாவங்களுக்கும் ,இவ்வுலகத்தில் தான ,தர்ம, தப , செபத்தினாலும் திருச்சபையின் பலன்களினாலும் பரிகாரம் பண்ணலாம் என்பது மெய்தான் . ஆயினும் தங்களுடைய பாவங்களுக்காக செபங்களைப் பொழிகிறவர்களும் , பிச்சை கொடுக்கிறவர்களும் , தவக்கிரியைகளை நடத்துகிறவர்களும் மிகவும் கொஞ்சம் பேர்களே என்று நீங்கள் முதலாய் சொல்லுவீர்கள் அல்லவோ ? எல்லோரும் ஏறக்குறைய இவ்வுலகத்தின் சுகபாக்கியங்களையும் ஆஸ்தி திரவியங்களையும் சிலாக்கிய மகிமைகளையும் மகா கவனத்தோடு தேடுகிறதுமல்லாமல் அவர்கள் தவத்தினுடைய பேரை முதலாய் அறியார்கள் . இது இப்படி இருக்க அவர்கள் தாங்கள் தேவ நீதிக்குச் செலுத்தவேண்டிய சகலமான கடன்களோடு செத்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வருஷகாலம் உபாதிக்கப்படுவார்கள் என்பது தப்பாது .
அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறபோது அவர்களுக்காகச் செய்யப்பட்ட ஜெபங்களினாலும் கொடுத்த பிச்சைகளினாலும் செய்வித்த பூசைகளினாலும் அவர்களுடைய அவதி குறையலாம் என்பது மெய்தான் . ஆனாலும் தோமாஸ் ஆக்கென்பிஸ் சொன்னது போல உயிரோடிருக்கும்போது தன்னைத்தான் மறந்து போகிறவன் செத்த பிற்பாடு அவனை நினைக்கப் போகிறது யார் ? அப்படித்தான் உங்களுக்கும் சம்பவிக்குமோ இல்லையோ என்று அறிவதற்கு உங்களுடைய மரித்தோர்கள் மட்டில் நீங்கள் இப்போது செய்கிறதைப் பாருங்கள் . மரித்த உங்களுடைய உற்றார் , பெற்றார் , சேர்ந்தார் ,சிநேகிதர் , உபகாரிகளுக்கோ என்னத்தைச் செய்கிறீர்கள் ? என்ன பிச்சை கொடுக்கிறீர்கள் ? எத்தனை பூசை பண்ணுவித்தீர்கள்? மிகவும் கொஞ்ச மாத்திரம் செய்தோமென்றால் அப்படித்தான் உங்களுக்கும் மிகவும் கொஞ்ச மாத்திரம் செய்வார்கள் . உங்களை எல்லோரும் மறந்து போகிறார்போல நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் எத்தனையோ வருஷம் கிடப்பீர்கள் என்று உத்தேசித்துப் பார்க்கக் கடவீர்கள் . முன் சொன்ன நியாயங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் மெத்தவும் கடினமாய் இருக்கிறதும் தவிர ,அவைகளை அநேக வருஷ காலம் அனுபவிக்க வேண்டுமென்று தெளிவிக்கப்பட்டது . அதன் பேரிலே நீங்கள் நன்றாய் யோசனை பண்ணக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே ! எங்கள் பேரில் தயவாய் இரும்
செபம்
நித்திய பிதாவாகிய சர்வேசுரா ! எங்களுடைய தாய் தகப்பனை வணங்க வேணுமென்று கற்பித்தீரே, மரித்த எங்களது தாய் தகப்பனுடைய ஆத்துமாக்களுக்குக் கிருபை செய்து அவர்களுடைய பாவங்களைப் பொறுத்து , நாங்கள் அவர்களை நித்திய பிரகாசமுள்ள உம்முடைய இராஜ்ஜியத்தில் பார்க்கும்படி செய்ய வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
எட்டாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை
மரித்த உங்களுடைய தாய் தகப்பனை நினைத்து அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும் , என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் யோசிக்கிறது
புதுமை
1644 ம் ஆண்டில் இராஜ கோத்திரத்திலே பிறந்த பேர் பெற்ற ஒரு துரையானவன் தன் மைத்துனனான வேறொரு துரையிடம் சண்டை செய்த நிமித்தம் அவர்களுக்கிடையில் ஒரு தனிப்போர் உண்டானது . அந்த தனிப்போரில் மேற்சொன்ன துரையானவன் ஈட்டியினாலே நெஞ்சிலே குத்தப்பட்டு உடனே செத்துப் போனான் . இப்படிப்பட்ட தனிப்போர்களை திருச்சபையானது விலக்குகிறதினாலே செத்தவனுடைய ஆத்துமத்துக்காக தேவாலயத்தில் யாதொரு சடங்கும் பண்ணவில்லை ,அவனுடைய பிரேதம் மந்திரிக்கப்பட்ட கல்லறையிலே வைக்கப்பட்டதுமில்லை . அந்தப் பிரபு பாவசங்கீர்த்தனம் இல்லாமலே திடீரென்று செத்துப் போனதால் அவன் நரகத்திற்குப் போயிருப்பான் என்று எல்லோரும் நிச்சயித்துக் கொண்டிருந்தார்கள் . அர்ச் பிரான்சீஸ்கு சலேசியூஸ் உண்டு பண்ணின சபையிலே புண்ணியம் நிறைந்த ஒரு கன்னியாஸ்திரி அக்காலத்திலே இருந்து வந்தாள். சர்வேசுரன் அவளுக்கு அந்த துரை உயிரோடிருக்கும்போது பண்ணின தர்மங்களைக் குறித்து ஆண்டவருடைய விசேஷ கிருபையினாலே அவன் சாகிற தருணத்தில் உத்தம மனஸ்தாபப்பட்டு நித்திய நரகத்துக்குத் தப்பி உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறதாக அறியப் பண்ணினார்
அவன் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகுகாலமாய் உபாதிக்கப்படத் தீர்வை இடப்பட்டானென்று அந்தக் கன்னியாஸ்திரியானவள் கண்டு அவனுடைய அவதியைக் குறைக்கத் தன்னுடைய செபத்தியானங்களை ஒப்புக் கொடுத்தாள். அப்படி வெகு நாளாய்ச் செய்த பிற்பாடு அந்த ஆத்துமத்தினுடைய வேதனை சில மணிநேரமாகக் குறைந்தது என்று சர்வேசுரனாலே அறிந்தாள். இந்தச் செய்தியை மற்ற கன்னியாஸ்திரிமாரோடு சந்தோசத்துடன் அறிக்கை பண்ணுமிடத்தில், அவ்வளவு சொற்ப ஆறுதலுக்கு அத்தனை சந்தோசப்படுவானேன் என்று அவர்கள் சொன்னார்கள் .அதற்க்கு அவள் அந்த ஆத்துமத்தின் வேதனைகள் கொஞ்ச நாழிகை அமர்ந்திருந்ததை அற்ப ஆறுதலாய் நினைக்காதேயுங்கள் . கொஞ்ச நேரம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுகிறதற்கு முன்பாக இவ்வுலகத்தில் அநேக வருஷம் கடின வியாதியினாலே வருகிற வருத்தமெல்லாம் நிகரல்ல என்றாள்
மீண்டும் அந்தப் புண்ணியவதி அந்த நிர்பாக்கியமுள்ள ஆத்துமத்தைக் குறித்து பத்து வுருஷம் ஒருசந்தியாய் இருந்து செய்யக் கூடிய தவக்கிரியை எல்லாம் செய்து ஓயாமல் செபித்துக் கொண்டிருந்தாள் . அதற்க்கு அப்பால் இந்த ஆத்துமத்திற்கு விதித்த வேதனைகளில் ஒரு பங்கு தனக்கு அனுப்ப வேண்டுமென்று ஆண்டவரை மன்றாடினாள் . ஆண்டவர் அந்த மன்றாட்டுக்கு இரங்கி ஓர் அகோரமான வியாதியை அவளுக்கு அனுப்பினதின் பேரில் அவளுடைய சரீரமெல்லாம் கடினமாய் வலித்து வேகமாய்க் காய்ந்து அவளுடைய கை கால் பொறுக்கப்படாத குளிரினாலே திமிர்ந்து அவளுடைய மனதில் அதிகத் துன்பமும் கிலேசமும் உண்டாயிருந்தது . அவள் இதெல்லாவற்றையும் அந்த ஆத்துமத்திற்காகச் செய்திருந்தாலும் அந்த ஆத்துமத்தை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து முழுமையும் மீட்டு இரட்சிக்கக்கூடாமல் செத்தாள்
கிறிஸ்துவர்களே , மேற்சொன்ன புதுமையினாலே உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் எவ்வளவு கடினமாய் இருக்கிறதோ , எவ்வளவு காலம் இருக்கப் போகிறதோவென்று யோசித்து அவ்விடத்துக்கு நீங்கள் போகாதபடிக்கு தக்க முறையாய் நடக்க வேண்டியதுமல்லாமல் அதிலே அதிக உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களைக் குறித்து சோம்பல் , சலிப்பு மறதி இன்றி இடைவிடாமல் செபம் பண்ண வேண்டுமென்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
ஒன்பதாம் தேதி
உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு பேறுபலன் வருகிறதில்லை என்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
ஒருவனும் வேலை செய்யக்கூடாத இராக்காலம் வரும் என்று சேசுநாதர் சுவாமி தாமே திருவுளம் பற்றினார் .இத்திவ்விய வாக்கியத்துக்கு அர்த்தம் எதுவோவெனில்: செத்த பிற்பாடு ஒருவரும் யாதோர் பலனுள்ள புண்ணியத்தைச் செய்ய முடியாது என்றும் பலனளிக்கும் யாதொரு தர்மத்தைப் பண்ண முடியாதென்றும் வேதபாரகர் எல்லோரும் சொல்லுகிறார்கள் . ஆகையினாலே சகலமான மனுஷரும் அவர்கள் உயிர் வாழும்போதே மோட்சத்தையும் நற்பலன்களையும் பெருவிக்கும் எவ்வித புண்ணியங்களையும் தர்மங்களையும் மகா சுறுசுறுப்புடனே பண்ணக் கடவார்கள் அல்லவோ ?
ஜீவியக் காலத்தில் தக்க பிரகாரமாய்ச் செய்ததெல்லாம் பலிக்கும் . தவத்தினால் அதிக சந்தோசத்தையும் செபத்தினால் அதிக பேரின்பத்தையும் தர்மத்தினால் அதிக பிரதாபத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது சத்தியமாம் . உத்தரிக்கிற ஸ்தலத்திலோ அப்படியல்லவே . அதில் படுகிற சொல்லிலும் நினைவிலும் அடங்காத வருத்தங்கள் யாவும் உத்தரிப்புக் கடனுக்கு உதவுமல்லாமல் அவைகளால் மோட்சத்தில் ஓர் அற்ப பிரயோஜனமும் சிறிய பலனும் வரத்தக்கதாய் இல்லை . அதில் ஆத்துமாக்கள் பண்ணுகிற செபங்களினாலே தங்களுடைய வேதனைகள் கொஞ்சமாகிலும் குறைந்து போகிறதுமில்லை. சர்வேசுரனுடைய கோபாக்கினி அமர்ந்து போகிறதுமில்லை . அதில் , மோட்சத்தின் பேரில் அந்த ஆத்துமாக்கள் படுகிற ஆசைகளினாலே அவர்களுக்கு அதிக வருத்தம் உண்டாகிறதன்றியே அதனால் ஒரு க்ஷணத்திற்கு முன் மோட்ச பாக்கியம் வரப்போகிறதாய் இல்லை . அதனால் தாங்கள் படுகிறதெல்லாம் மிகவும் கொடியாதாயினும் தங்களுக்கு ஓர் அற்ப பிரயோசனமும் கொடுக்கிறதில்லை என்று கண்டு இந்த ஆத்துமாக்கள் அதிகம் வருத்தப்படுகிறார்கள் என்கிறதக்குச் சந்தேகம் இல்லை.
ஜெருசலேமாநகரில் வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குளம் ஒன்று இருந்தது . அதிலே தினந்தோறும் குறித்த நேரத்தில் முழுகிற முதல் வியாதியஸ்தன் எந்த நோயினாலும் நீங்கிக் குணமடைவான். முப்பத்தெட்டு வருஷ காலமாய் திமிர்வாதம் கொண்ட ஒரு வியாதியஸ்தன் ஒருவன் அக்குளத்தின் ஓரமாய் வெகுகாலம் உட்கார்ந்திருந்தாலும் பிறர் உதவி இன்றி அவன் தனக்கு உதவிக் கொள்ளக் கூடாதிருந்ததினால் ஆரோக்கியத்தைத் தரும் இந்த ஜலத்தில் இறங்க இயலாதவனாக இருந்தான் . அதனால் இந்த வியாதியஸ்தனுக்கு வந்த விசனம் கொஞ்சமென்று சொல்லக் கூடுமோ ? உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கும் அப்படியே சம்பவிக்கும் . இந்த ஆத்துமாக்கள் தங்களுக்குத் தானே யாதோர் சகாயம் பண்ணிக் கொள்ளக் கூடாதென்கிறதினாலே தங்களுக்குப் புறத்தில் இருந்து உதவி வராவிட்டால் தங்களுடைய உத்தரிப்புக் காலம் மட்டும் மிகவும் வேதனைப்பட்டு வருந்துவார்களாம். மற்ற அநேக ஆத்துமாக்கள் அவர்களுக்காக நடந்த தர்மங்களினால் மோட்சத்திற்குப் போகிறதையும் ,தங்களுக்கு ஒருவரும் சகாயம் பண்ணாதிருப்பதையும் கண்டு, அந்த ஆத்துமாக்களுக்கு எவ்வளவு வேதனை என்று கண்டுபிடிப்பாருண்டோ ?
மக்கபேயர் இரண்டாம் ஆகமம் ஏழாம் அதிகாரத்தில் எழுதியிருக்கிறது போல ,அக்காலத்தில் ஒரு தாயும் அவளுடைய ஏழு பிள்ளைகளும் பிடிபட்டு சத்திய வேதத்துக்காக கொடுங்கோலனான அந்தியோக்குஸ் இராஜாவினால் மிகுதியான வேதனைகளை அனுபவிக்கும் போது ,அந்த வேதனைகளால் தங்களுக்கு மோட்சத்தில் அதிக மகிமையும் அதிக பாக்கியமும் சந்தோசமும் வரும் என்கிற நம்பிக்கையினாலே , புறமதத்தார் எல்லோரும் அதிசயப்பட , விடாத பொறுமையோடும், ஆனந்த சந்தோசத்தோடும் அந்த வேதனைகளை அனுபவித்து மகிமையாய்ச் செத்தார்கள் . உத்தரிக்கிற ஆத்துமாக்களோவெனில், தாங்கள் படுகிற வேதனைகளினாலே கொஞ்சமாகிலும் பலன் வராததைப் பற்றி அதிக வருத்தப்படுவார்கள் அல்லாது மற்றபடியல்ல . பூமியிலே இருக்கிறவர்கள் ஒரு சின்ன செபத்தைப் பண்ணினால் , ஒரு காசு பிச்சை கொடுத்தால் , ஓர் அற்ப துன்பம் சர்வேசுரனைக் குறித்து சகித்தால் அவர்களுக்குப் பலன் இருக்கிறது . அதற்கு தக்க பலன் மோட்சத்திலே கிடைக்கும் . வேத சாட்சிகள் எல்லோரும் அனுபவித்த வருத்தங்களை விட உத்தரிக்கிற ஆத்துமாக்கள் அதிக கொடுமையான வருத்தங்களைப் பட்டாலும் அதனால் அவர்களுக்கு யாதொரு பலனும் இல்லை . ஆகையினால் எவ்வகையிலும் அவர்களுடைய வேதனை மிகுதியாகுமல்லாமல் அவர்களுக்கு ஓர் அற்ப ஆறுதலும் வரக் காணோம்
சற்றாகிலும் அந்த ஆத்துமாக்களுக்கு புறத்திலிருந்து ஆறுதல், உதவி வரக் கூடுமோ ? அப்படி வருகிறது சந்தேகமாய் இருக்கிறதுமல்லாமல் அப்படி வந்தாலும் மிகவும் கொஞ்சமாய் இருக்கும் .அது எப்படிஎன்றால் பழைய ஏற்பாட்டில் விளங்கின பிதாப்பிதாவாகிய சூசையப்பர் தனது சகோதரர்களின் காய்மகாரத்தால் அடிமையாய் விற்கப்பட்டு அநியாயமாய்த் தன் பேரில் சாட்டின இல்லாத குற்றத்துக்காய் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் . அதில் தம்மோடு கூட சிறைப்பட்ட இராஜாவினுடைய ஒரு உத்தியோகஸ்தனுக்கு பெரிய சகாயம் பண்ணினதன் பேரில் சூசையப்பர் அவனுக்கு சொன்னதாவது " நீ நன்றாய் இருக்கும்போது என்னை நினைத்து என் பேரில் தயவாய் இருந்து இராஜாவிடத்தில் எனக்காகப் பேசி என்னை இந்தச் சிறைக்கூடத்தில் இருந்து விடுவிக்கும்படியாய் செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறேன் என்றார் .
அப்படி இருந்தும் அந்த மனுஷனுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமானாலும் , தனக்கு உபகாரம் செய்த சூசையப்பரை மறந்து போனான் . உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அந்தப்பிரகாரம் சம்பவிக்கும் என்பது நிச்சயம் தான் . பிள்ளைகள் தங்களுடைய தாய் தகப்பனையும் , தாய் தகப்பன் தங்களுடைய பிள்ளைகளையும் சிநேகிதர் தங்களுடைய சிநேகிதரையும் , உபகாரம் பெற்றவர்கள் தங்கள் உபகாரிகளையும் மறந்து அவர்களுடைய அவதியைக் குறைக்க ஒன்றும் செய்யாது போவார்களாம் . ஏதாகிலும் செய்வார்களேயானால் மிகவும் கொஞ்சமாய் இருக்கும் .
மரித்தவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் பொறுக்கப்படாத வேதனைகளை அனுபவிக்கிறபோது ,அவர்களுடைய பிள்ளைகளும் உறவு முறையாரும் ஊரார் சிநேகிதரும் அந்த செத்தவர்களுடைய ஆஸ்திகளைச் செலவழித்து திருப்தியாய்ச் சாப்பிட்டு சிலாக்கியமாய் உடுத்தி ஆடிப் பாடிக் கொண்டாடி அவர்களுக்காக யாதொன்றையும் செய்ய மாட்டார்கள் . அதனாலே அவ்வளவு வருத்தப்படுகிற ஆத்துமாக்கள் யாதொரு உதவியின்றி தங்களுக்கு விதித்த உத்தரிப்பெல்லாம் நிறைவேற்ற வேண்டி இருக்கும்
கிறிஸ்தவர்களே ! நீங்களும் உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களுக்கு உதவி செய்யாமல் அவர்களை மறந்து போவீர்களோ ? அவர்களை மறந்து போவீர்களேயானால் அது பெரிய கொடுமை என்று உங்களுக்குத் தோன்றாதோ ? ஆகையினாலே நீங்கள் செய்கிறதெல்லாம் அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்படிக்கு நல்ல கருத்தோடே சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்
ஜீவிய காலம் பலனுள்ள காலமென்றும் அறுப்புக் காலமென்றும் , மகிமை சம்பாவனை பெறுவிக்கும் காலமென்றும் நன்றாய் விசாரித்து இராக்காலமான சாவு வருமுந்தி நீங்கள் எல்லோரும் எவ்வித புண்ணியங்களையும் விரும்பிச் செய்யக் கடவீர்கள்
நானாவித துன்பங்கள் நிறைந்த சிறைச்சாலைக்குச் சந்தோசமாய்ப் போக சம்மதிப்பாருண்டோ ? சம்மதிப்பார் இல்லை என்றால் , நீங்கள் எப்படி பற்பல பாவங்களைக் கட்டிக் கொண்டு சகல வேதனைகள் நிறைந்த ஸ்தலமாகிய உத்தரிக்கிற ஸ்தலமாகிய சிறைச்சாலைக்குப் போக சம்மதிக்கிறாற்போல இருக்கிறீர்கள் ? இதைப் போல புத்தியீனம் உண்டோ சொல்லுங்கள்
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவே எங்கள் பேரில் தயவாய் இரும்
செபம்
கடவுளான சர்வேசுரா ! ஸ்திரீ பூமான்களாகிய உமது அடியார்களுடைய ஆத்துமாக்களின் பேரில் உம்முடைய கிருபையை ஏராளமாய் பொழியப் பண்ணி ,அவர்கள் ஞானஸ்நானம் பெறும்படிக்கு தேவரீர் திருவுளமானீர் என்கிறதினாலே ,நித்திய பேரின்பத்தில் முடியாத சந்தோசத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் சுவாமி ஆமென்
ஒன்பதாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து கோவிலில் ஏதாகிலும் காணிக்கை வைக்கிறது
புதுமை
அர்ச் நிக்கோலோ என்கிறவர் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் மிகுந்த பக்தியாய் இருக்கிறவர் . சர்வேசுரனிடத்தில் அவருடைய செபத்தியானமும் ஒறுத்தல் தவமும் வல்லமையாய் இருந்ததினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் தங்களுக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று கேட்கத்தக்கதாக அவருக்கு அநேகம் முறை காணப்பட்டார்கள் என்று அவரது சரித்திரத்திலே எழுதி இருக்கிறது . ஒரு நாள் அவர் நித்திரை செய்து கொண்டிருந்த போது , சில நாட்களுக்கு முன்னர் இறந்து போன அவரது சிநேகிதரான பெலேகிரீனோ என்னும் சந்நியாசியாருடைய ஆத்துமம் அவரிடத்திலே வந்து தான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறதாக அறிவித்து , 'குருவே , என்னோடு கூட வந்து உத்தரிக்கிற ஸ்தலத்திலே ஆத்துமாக்கள் படும் வேதனையை பாரும் ' என்றது . அப்படியே அந்த அற்சிஷ்டவர் அந்த ஆத்துமத்தை பின்தொடர்ந்து போகிறார்போல ஒரு விஸ்தாரமான மைதானத்தில் வந்து சேர்ந்தார் .
அந்த மைதானத்தின் எப்பக்கத்திலும் அகோரமாய் எரிந்து வானமட்டும் பாயும் அனல் நிறைந்த ஒரு பெரிய சுவாலையைக் கண்டார். அந்தச் சுவாலையின் நடுவில் எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்கள் மிகுந்த வருத்தத்தோடே வருகிறதையும் பயங்கரமான அபய சத்தம் இடுகிறதையும் தங்களுக்கு எப்படியாகிலும் உதவி ஒத்தாசை பண்ண வேண்டுமென்று கேட்கிறதையும் கண்டார் . அதைக் கண்டு பயந்து வெருண்டு நடு நடுங்கி நிற்கும் போது அவரைக் கூட்டிக் கொண்டு வந்த அந்த சந்நியாசியாருடைய ஆத்துமம் ' குருவே , இவ்வளவு வருத்தப்படுகிற ஆத்துமாக்களின் பேரில் இரக்கம் இல்லாது இருப்பீரோ ? அவர்கள் படும் வேதனை மனுஷருடைய புத்திக்கு எட்டாததாய் இருந்தாலும் ,அவர்கள் தங்களுக்கு ஒரு அற்ப உதவியும் வருவிக்கத் திராணி உள்ளவர்கள் அல்ல . நீரோவெனில் அவர்களுக்காக செபங்களையும் திவ்விய பூசைகளையும் தவக்கிரியைகளையும் ஒப்புக் கொடுக்க சம்மதிப்பீரேயானால் அவர்களுக்கு உதவுகிறதுமல்லாமல் உம்முடைய கிருபையால் அநேக ஆத்துமாக்கள் இந்த நிர்பாக்கியமான இடத்தை விட்டு மோட்சத்துக்குப் போகக் கடவார்கள் ' என்று சொல்லி மறைந்து போனது
அர்ச் நிக்கோலா என்கிறவர் விழித்தவுடனே எழுந்திருந்து சாஷ்டாங்கமாய் விழுந்து திரளான கண்ணீரைச் சொரிந்து தாம் கண்ட நிர்பாக்கியமான ஆத்துமன்களைக் குறித்து மகா பக்தியோடு செபங்களைச் செய்து சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார் . விடியற்காலம் சிரேஷ்டரான குருவின் உத்தரவைப் பெற்று அந்த ஆத்துமாக்களுக்கு திவ்விய பூசை செய்து அதோடல்லாமல் , எட்டு நாட்களுக்கு மிகுந்த சுறுசுறுபோடு செபங்களைச் செய்து திவ்விய பூசை ஒப்புக் கொடுத்தார் . எட்டாம் நாளிலே முன் சொன்ன பேலேகிரீனோ என்ற சந்நியாசியாருடைய ஆத்துமம் பிரதாபமுள்ள முகத்தோடு அவருக்குக் காணப்பட்டு தாமும் தம்மோடு அநேகம் ஆத்துமாக்களும் அவரது செப தபம் மற்றும் பூசையினாலே உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதாக அறிவித்து நன்றியரிந்த மனத்தொடே சுவாமியாருக்கு ஸ்தோத்திரஞ் சொல்லி மறைந்து போனது
கிறிஸ்தவர்களே ! இப்போது சொன்ன புதுமையினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களை மீட்டு இரட்சிக்க வேண்டுமென்கிற ஆசை உங்களுக்கு வருகிறது என்பதற்க்குச் சந்தேகமில்லை . ஆனாலும் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும்படிக்கு அர்ச் நிக்கோலோ வைப் பார்த்து ஆத்துமாக்களுக்காக அதிக சுறுசுறுப்போடு ஜெபதப தான தருமங்களைச் செய்ய வேணும் . அப்படிச் செய்வீர்களானால் உங்களாலே அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்பத்தை அடைவார்கள் என்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
10-ம் தேதி
எண்ணிறந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுவதாகக் காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
தினந்தினம் எண்பதினாயிரம் மனுஷர் சாகிறார் களென்று சாஸ்திரிகள் கணக்கேற்றி ஒப்பித்துக்கொண்டு வருகிறார்களாம். இந்த எண்பதினாயிரம் மனுஷருக்குள்ளே இருபத்தையாயிரம் பேர்கள் மெய்யான சத்திய வேதக் கிறிஸ்துவர்களாயிருக்கிறார்களென்று உத்தேசித்துச் சொல்லலாம். இந்த எண்ணிக்கையின்படியே பத்து நாளுக்குள்ளாக இரண்டு இலட்சத்து ஐம்பதனாயிரம் பேர்கள் செத்திருப்பார்களே. ஒருமாதங் கணக்குப்பார்த்தால் ஏழுலட்சத்து ஐம்பதனாயிரம் பேர்கள் மடிந்திருப்பார்களே! ஒருவருஷத்துக்குள்ளே தொண்ணுாறு லட்சங்கணக்காகும். பத்து வருஷத்துக்குப் பிற்பாடு ஏறக்குறைய ஒன்பது கோடி கிறிஸ்துவர்கள் செத்திருப்பார்களே. இந்தக் கணக்கதிகமாய்ப் பெருக்காமல் ஒரு நாளிலே சாகிற இருபத்தையாயிரம் கிறிஸ்துவருக்குள்ளே எத்தனை ஆத்துமாக்கள் நேரே மோட்சத்துக்குப் போகப் பிராப்தியாயிருப்பார்களென்று நினைக்கிறீர்கள். மிகவுங் கொஞ்சம் பேர்கள் முற்றும் பரிசுத்தராயிருந்து அப்படி தாமதமில்லாமல் மோட்சத்தை அடைவார்களென்று சொல்லத்தக்கதாயிருக்கிறது.
அதெப்படியென்றால் முன் தியானங்களிலே காண்பித்தாற் போல சாகிறவர்களெல்லோரும் ஏறக்குறைய அநேகர் சொற்பப் பாவங்களோடும், மன்னிக்கப்பட்ட சாவான பாவங்களுக்குச் செலுத்தவேண்டிய அபராதக் கடனோடும் திரிக்கிறார்களல்லவோ? அதல்லாமலும் ஒவ்வொருவன் செத்தப்பிற்பாடு வெகு நாள் வெகு வருஷ காலம்
உத்தரிக்கவேண்டியதென்று முன்னே சொல்லிவிட்டோமே. இதிலும் செத்தவர்களுக்கு ஆறுதலையும் உதவியையும் வருவிக்கப் பிரயாசைப்படுகிறவர்கள் மிகவுங் கொஞ்சம் பேர்கள்தான். இதிப்படியிருக்க நாளொன்றுக்கு இருபத்தையாயிரம் கிறிஸ்துவர்கள் சாகிறபோது, எத்தனை லட்சம், எத்தனை கோடி ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் கொடிய வேதனைகளில் உபாதிக்கப்படுவார் களென்று நினைத்துப் பாருங்கள்.
பேர்பெற்ற மேற்றிராணியாரான அர்ச் அமிர்த நாதர், புண் ணியவான்கள் முதலாய்த் தேவ ஊழியத்தில் அசட்டையும், தவக்கிரியைகளில் சோம்பலும், தர்மஞ் செய்வதில் கஞ் சத்தன முமாயிருக்கிற தை கண் டு மோட்சத்துக்கு நியமிக்கப்பட்டவர்களெல்லோரும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு வழியாகத்தான் ஈடேறுவார்களென்றார். அர்ச் வித்தாலியானம் மாளும், கணக்கில்லாத அற்புதங்களைப் பண்ணின அர்ச் செவேரியானுசென் கிறவரும், அர்ச்சியசிஷ்ட பட்டம் பெற்ற அநேக புண்ணிய ஆத்துமாக்களும் உத்தரிக்கிற
ஸ்தலத்தில் வேதனைப்பட்டபின்னரே மோட்சத்துக்கு போனதாக அறிந்திருக்கிறோம். ஒர் அர்ச்சியசிஷ்டவர் தான் கண்ட காட்சியினால் ஒரு நாளிலே செத்தவர்களுக்குள்ளே ஒருத்தன்மாத்திரம் நேரே மோட்சத்துக்குப் போனானென்றும், வேறு இரண்டு ஆத்துமாக்கள் கொஞ்சநேரமட்டும் உத்தரிக்கிறஸ்தலத் திலிருந்து ஈடேறினார்களென்றும் வசனித்தார். அப்படி யிருக்கையில் எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்பட்டுக் கிடக்கிறார் களென்பது விளங்கும் சத்தியந்தானல்லவா?
கிறிஸ்துவர்களுக்குள்ளே திரளான பேர்கள் நரகத்தில் தள்ளப்படுகிறதாகச் சில சாஸ்திரிகள் நிச்சயித்தாலும், எந்தப் பாவியையுங்குறித்து அவன் கெட்டானென்று நிச்சயமாகச் சொல்லக் கூடாது .
எதனாலேயென்றால் அநேகர் பாவசங்கிர்த்தனமில்லாமல் திடீரென மரித்து அவலமாய் செத்தார்களென்று காணப்பட்டாலும், சர்வேசுரனுடைய
மட்டற்ற கிருபையினாலே ஆத்துமம் பிரியுஞ் சமயத்தில் ஒருவேளை தங்களுடைய பாவங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபப்பட்டு நரகத்துக்குத் தப்பினார்களென்று நினைக்கத்தக்கதாயிருக்கிறது. மீண்டும் சர்வேசுரனுடைய மட்டுக்கடந்த கிருபையைப் பாராட்டி அர்ச். லிகோரியூஸ். அர்ச். லேயோநார்துஸ், சாஸ்திரிகளுக்குள்ளே பெரிய சாஸ்திரியான சுவாரேசியூஸ் முதலான பேர்பெற்ற சாஸ்திரிகள் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் மிகுதியான பேர்கள் நித்திய நரகத்துக்குத் தப்பி உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வேதனைப்பட்டாவது ஈடேறுவார்களென்று சொல்லுகிறார்கள்.
இப்பேர்ப்பட்ட அர்சிஷ்டவர்களும் சாஸ்திரிகளும் சொல்லும் இந்தச் சத்தியம் யாவருது ஆறுதலாயிருந்தாலும், அதனால் தேவ ஊழியத்தில் அசட்டையாயிருக்கக்கூடாது. பாவவழியிலே மூர்க்கமாய் நடக்கக் கூடாது . ஏனென்றால் , அப்படி நடப்பீர்களேயானால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அகோர வேதனைகளைச் சம்பாதித்துக்கொள்வீர்களல்லாமல் நித்திய நரகத்துக்குப்போகிற மகா ஆபத்திலிருப்பீர்களென்பதற்கும் சந்தேகமில்லை.
இதுவுமல்லாமல் பதிதரும் பிரிவினைக்காரரும் எல்லோரும் ஒருங்குடன் நரகத்துக்குப் போகிறார்களென்று சொல்லக்கூடுமோ? அதுவும் சொல்லக்கூடாது. ஏனெனில், அவர்களில் அநேகர் மெய்யான இரட்சகரான சேசுகிறிஸ்துநாதரை விசுவசித்து நம்பி ஞானஸ்நானம் பெற்றுக் கூடின மட்டும் பாவங்களை விலக்கி செய்த பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட்டுத் தாங்களிருக்கிற மார்க்கம் துர்மார்க்கமென்று அறியாமல் செத்தால் அவர்கள் ஈடேறுவார்கள் என்பது சத்திய விசுவாசமாம்.
ஆயினும் அப்படி உத்தமமனஸ்தாபத்தோடு சாகிற பதிதர் திரளான பேர்களோ கொஞ்சம்பேர்களோ என்று சர்வேசுரனுக்கு மாத்திரம் தான் தெரியும். அது எப்படி இருந்தாலும் அவர்களில் ஈடேறிப்போகிறவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மகாவேதனைப்படுவார்களென்பது யாவரும் எளிதில் உணரக் கூடியதாகும்.
புறமதத்தாருக்கும் துலுக்கருக்கும் என்ன சம்பவிக்கு மோவென்று கேட்டால், அவர்கள் ஏக இரட்சகரான சேசுகிறீஸ்துநாதரை அறியாததினாலேயும், மோட்சத்தின் ஏக வாசலாயிருக்கிற ஞானஸ்நானத்தைப் பெறாதிருக் கிறதினாலேயும், அவர்களில் ஒருவரும் ஈடேறமாட்டார் களென்பது நிச்சயந்தான். ஆகையினாலே அவர்களில் ஒருவரும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கப்போகிறதில்லை.
இப்போது சொன்ன நியாயங்களினால், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் எத்தனை வென்று சொல்லிலும் கணக்கிலும் அடங்குந் தன்மை அல்லவே. ஆயினும் தினந்தோறும் திருச்சபையிலே எங்கும் செய்யப்படுகிற செபதப தான தர்மங்களினாலும், ஒப்புக்கொடுக்கப்படுகிற திவ்விய பூசைகளினாலும் திரண்ட ஆத்துமாக்கள் உத்தரிக்கிறஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப் பட்டு மோட்சகரை ஏறுவார்களென்று சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுகிறது மெய்யாயினும், பத்துப் பணங் கொடுத்துப் பதினாயிரம் ரூபாய்க் கடன் தீருமோவென்ன? பத்துப் பேருக்குச் செல்லுமான தண்ணிரால் பதினாயிரம் பேர்களுடைய தாகம் தீருமோ வென்ன சொல்லுங்கள். அப்படிப்போல், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வருத்தப்படுகிற கனக்கில்லாத ஆத்துமாக்களுக்கும் அந்த ஆத்துமாக்கள் செலுத்தவேண்டிய பரிகாரக்கடன்களுக்கும் அந்தச் செபதப தானதர்ம பூசை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப்பார்த்தால் வெகு கொஞ்சமென்று தோன்றுமல்லவோ? எவராலும் கைவிடப்பட்ட ஆத்துமாக்கள் எத்தனையோ பரதேசிகளுடைய ஆத்துமாக்கள் எத்தனையோ? சொந்தக்காரராலே முதலாய் மறக்கப்பட்ட ஆத்துமாக்கள் எத்தனையோவென்று பாருங்கள்.
கிறிஸ்தவர்களே! ஒரு தேசத்தில் அநேகாயிரம் ஜனங்கள் பஞ்சத்தினாலே சாகிறார்களென்று கேள்விப் பட்டால் என்ன செய்வீர்கள்? அவர்களுக்கிரங்கி வருத்தப் பட்டாவது உங்களாலே கூடியமட்டும் அவர்களுக்கு உதவியாக தாராளமாய்த் தர்மம் செய்வீர்களல்லவோ? அப்படித்தான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் எண்ணிக்கை இல்லாத ஆத்துமாக்கள் வேதனைப்படுகிறதைக்கண்டு ஏராளமாய் அவர்களுக்கு உதவ வேணும்; ஏராளமாய் அவர்களைக் குறித்துப் பிச்சைகொடுக்கவேனும், ஜெபம் பண்ணவேனும், திவ்விய பூசை ஒப்புக்கொடுக்கச் செய்யவேணும். பெரும்பாவிகளும் பதிதரும் பிரிவினைக்காரரும் முதலாய் மட்டில்லாத தேவகிருபையினால் ஒருவேளை நரகத்துக்குத் தப்பி உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருப்பார்கள் என்கிறதினாலே அவர்களுக்காகக்கூட வேண்டிக்கொள்ளவேணும்.
தினந்தோறும் எண்பதினாயிரம் மனுஷர் செத்துத் தீர்வையிடப்படுகிறார்கள் என்று அறிந்து அவர்களுக்கு கிருபை நிறைந்த சேசுகிறீஸ்துநாதர் சுவாமி இரங்கும்படிக்கு, அவஸ்தைப்படுகிற அவருடைய திவ்விய இருதயத்தைக் குறித்து: "கருணாம்பர சேசுவே! ஆத்துமாக்களை நேசிக்கிறவரே" என்கிற சுகிர்த மந்திரத்தை அடிக்கடி சொல்லுவார்களாக. இந்தச் செபத்தினாலே அநேகம் பேர்கள் நல்லமரணத்தை அடைவார்களென்று அறியக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லயச் செபம்:
யேசுவே! எங்கள்பேரில் தயவாயிரும்.
செபம்
கிருபை நிறைந்த கர்த்தாவே! எங்கள் தாய் தகப்பன் மார்களுடையவும் சகோதரர்களுடையவும் ஆத்துமாக்களை மறவாமல் அவர்கள் சத்திய விசுவாசத்தில் செத்தார்களென்று நினைத்தருளும். அவர்களை மோட்சத்துக்குத் தூரமாய் நிறுத்துகிற கட்டுகளை அவிழ்த்துப் பாவங்களை மன்னித்து அபராதக் கடனெல்லாம் தீர்த்து மகா தயவுசெய்து உம்மிடத்திலே சேர்த்துக்கொள்ள வேணுமென்று உம்மைப் பிராத்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
பத்தாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:
ஆத்துமாக்களின்பேரில் பக்தியாயிருக்கவேணுமென்று சிலபேர்களைத் தூண்டிவிடுகிறது.
புதுமை
இத்தாலியா இராஜ்ஜியத்தில் ஒரு பட்டணத்தில் மரியா என்றொரு பெண் பிள்ளை இருந்தாள். அவள் இளமையிலே யாதொரு பயமும் அச்சமும் இன்றி எவ்வித துன்மார்க்கமான பாவங்களையும் பண்ணிக் கொண்டு வந்ததுமல்லாமல் வயது வர வர அதிக பாவியானாள்.
அவள் கிழவியானபோது மேரை மரியாதையுமின்றி, தேவபயமுமின்றி, நரகத்தின் பேரில் அச்சமுமின்றி யாவருக்கும் துர்புத்தி சொல்லிக்கொண்டு வந்தாள் என்பதைப்பற்றி, அவள் இருந்தப் பட்டணத்தார் அவளைத் துரத்தி விட்டார்கள். அவளுக்கு விடு வாசல் இல்லிடம் இல்லாததினாலே அடுத்த மலையிலிருந்த ஒரு கெபியிலே வெகு வருத்தப்பட்டு யாதொரு உதவியில்லாமல் கிடந்து அவளுடைய சரீரம் புழுத்து நாறி யாதோர் நற்புத்தியைக் காண்பிக்காமல் ஒருவருக்குந் தெரியாதபடிக்கு நிற்பாக்கிய மாய்ச் செத்தாள். அவள் மிருகம்போல் செத்தாளென்று கிறிஸ்துவர்களுடைய கல்லறையிலே அவளுடைய பிரேதத்தை
அடக்கம்பண்ணாமல் ஒரு காட்டிலே புதைத்தார்கள் . அந்தப் பட்டன மத்தியிலேதான் கத்தரீனம்மாள்
என்னும் பேர்கொண்ட பக்தியுள்ள ஒரு கன்னியாஸ்திரி இருந்தாள். அந்தப் புண்ணியவதி யாருடைய மரணத்தையும் கேட்ட கடினத்திலே அவர்களுடைய ஆத்துமத்தைக் குறித்து மிகுந்த பக்தியோடு ஜெபங்களைப் பொழிவாள். அப்படியிருந் தாலும் மேற்சொன்ன பாவியான மரியம்மாள் என்கிறவள் செத்தாளென்று கேள்விப்பட்டிருந்தும், அவள் நிச்சமாய் நரகத்துக்குப் போயிருப்பாளென்று நினைத்து அவளுடைய ஆத்துமத்துக்காக ஒரு ஜெபமாவது பண்ணினதில்லை.
நாலு மாதமானபின்னர் அவள் தியானத்தில் இருக்கும் போது ஒர் ஆத்துமம் அவளுக்குக் காணப்பட்டுச் சொன்னதாவது" சகோதரியான கத்திரினம்மாளே என் நிர்ப்பாக்கியம் மகாப் பெரிது. அதேனென்றால், நீர் எல்லா ஆத்துமாக்களுக்காகவும் செபித்தாலும் என் ஆத்துமத்தை முழுமையும் மறந்து என்பேரில் இரக்கமில்லாமல் இருக்கிறீரே "என்றது. "நீ யார் "என்று அந்தப் புண்ணியவதி கேட்க," கெபியிலே நிர்ப்பாக்கியமாய்ச் செத்த மரியம்மாள் நான்தான் "என்றதற்கு, "நீ நரகத்துக்கு தப்பினது எப்படி" என்று விசாரித்தாள். அதற்கு அந்த ஆத்துமம் "தேவ கிருபையினாலேயும், பரிசுத்த கன்னிகையின் வேண்டு தலினாலேயும் தப்பித்துக்கொண்டேன். எவராலும் கைவிடப்பட்டுச் சாகப்போகிற தருணத்திலேதான் என் பாவங்களின் மிகுதியைக்கண்டு மிகவும் பயந்து ஐயோ! கெட்டுப்போனேனே என்று நான் பேர்கொண்டிருக்கிற தேவமாதாவை நினைத்து அவளை நோக்கி பரிசுத்த கன்னிகையே யாதொரு உதவியில்லாதவர்களுக்கு நீரே தஞ்சம் , பெரும்பாவியான என்னை எல்லோரும் இகழ்ந்திருந்தாலும் நீர் என்னைக் கைவிட மாட்டீரென்று நம்பியிருக்கிறேன் . எனக்கும் உதவியாய் இரும் , என் பேரில் தயவாயிரும் ஆண்டவளே "என்று மன்றாடினேன் .
"இந்த என் மன்றாட்டுக்கு இரங்கி தேவமாதாவானவள் நான் என் பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப் படும்படியாய் எனக்கு அனுக்கிரகம் பெறுவித்தாள் .அப்படி உத்தம மனஸ்தாபப்பட்டு இஷ்டப்பிராசத்தோடே செத்து நித்திய நரகத்துக்குத் தப்பினேன். ஆனால் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு வேதனைப்படுகிறேன். என் நல்ல சகோதரியானவளே, என் ஆத்துமத்துக்காகச் சில பூசைகளைப் பண்ணுவிப்பீராகில் என் உத்தரிப்பு காலம் குறைந்து மோட்சத்துக்குப் போவேன். இந்தக்கிருபை எனக்குப் பண்ணினால் உமக்காக எப்போதும் சர்வேசுரனையும், தேவமாதாவையும் வேண்டிக் கொள்ளுவேன்" என்று சொல்லி, அது ஆததுமம மறைந்து போனது.
அந்தப்படிக்கு பக்தியுள்ள கத்தரினம்மாள் இந்தப் பூசைகளைப் பண்னுவிக்கக் சிலநாளைக்குப் பிற்பாடு அந்த ஆத்துமம் மகா பிரதாபத்தோடு காணப்பட்டு "சகோதரியான கத்தரினம்மாளே, நீர் எனக்குப் பெரிய உபகாரம் பண்ணினிரே நீர் செய்வித்த பூசைகளினாலே என்னுடைய உத்தரிப்புக் கடன் தீர்ந்து சர்வேசுரனுடைய கிருபைகளை வாழ்த்தவும் உமக்காக வேண்டிக்கொள்ளவும் மோட்சத்துக்குப் போகிறேன்" என்று சொன்னபிறகு, அந்த ஆத்துமம் பரமண்டலத்துக்குச் சூரியனை மங்கச்செய்யும் பிரகாசத்தோடு எழுந்தருளிப்போகிறதாகக் கன்னியாஸ்திரி யானவள் கண்டாள் . கிறிஸ்துவர்களே மேற்சொன்ன பாவியானவள் நித்திய நரகத்துக்குத் தப்பி மோட்சத்துக்குப் போகிறதைக் கண்டு எந்தப் பாவியின்பேரிலும் அவநம்பிக்கையாய் இராமல், எல்லா ஆத்துமாக்களுக்காகவும் வேண்டிக்கொள்ள வேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்