எனக்குத் தெரிந்த / வாசித்த / கேட்டுத் தெளிந்த அனுபவங்களின் அடிப்படையில் பகிர்ந்திருக்கிறேன். இன்னும் தெளிவான விளக்கங்கள் தங்களிடம் இருப்பின் தயை கூர்ந்து தெரியப்படுத்தவும்.
கேள்வி : மாதாவுக்கு இயேசுக்கிறிஸ்து மட்டும் தான் மகனா? அவருக்குச் சகோதரர்கள் இருப்பதாக விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே !
இந்தக் கேள்வி பல முறை கேட்கப்பட்டது தான் . எனவே இதை முதலில் தெரிவு செய்தேன்
பதில்
" மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை "மத் 1: 25. அப்படியென்றால் அதற்குப் பிறகு அவர்கள் கூடி வாழ்ந்தார்கள் என்று அர்த்தமா ?
இதோ ! உலக முடிவு வரை நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் மத் :28:20 இதன் அர்த்தம் உலகம் முடிந்த பின் இயேசு நம்மை விட்டுப் போய் விடுவார் என்பதா? மூல பாடத்தின் படி 'வரை ' என்பதின் அர்த்தம் வேறு
தொடர்ந்து வாசிப்போம்
பிலிப்பியர் 2:8
ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
பிரிவினை பைபிளில் இந்த வசனம் இவ்வாறு இருக்கிறது
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
இந்த வசனத்தின்படி சிந்தித்தால் மரண பரியந்தமும் என்றால் மரணம் வரைக்கும் கீழ்ப்படிந்தவர் என்று அர்த்தம். அப்படியென்றால் சிலுவை மரணத்திற்குப் பின் அவர் கீழ்ப்படியவில்லை என்று அர்த்தமா ? மொழிபெயர்ப்பு தரும் அர்த்தங்கள் வேறு . ஆனால் மூல பாடம் ஒன்று .
அதன் படி , புனித சூசையப்பர் மரியாளைப் பற்றித் தெரிந்த பின், அதாவது , அவர் பரிசுத்த ஆவியால் கருவுற்றது தெரிந்த பின் , மரியாளுக்கும் இயேசுவுக்கும் பாதுகாவலராக இருந்தார் . மரியாள் , பரிசுத்த ஆவியானவரின் மணவாட்டி. இதை அவர் அறிந்திருந்தார். எனவே தான் புனித சூசையப்பரை நேர்மையாளர் என்று கத்தோலிக்க திருச்சபை கூறுகிறது
பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசியவர்கள் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்கள் . எனவே பரிசுத்த ஆவியாரின் மணவாட்டியைப் பற்றி பேசுவதற்கும் இது பொருந்தும் அல்லவா ?
அடுத்தபடியாக
மத் 13:55 இவ்வாறு கூறுகிறது
55இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? 56இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?
மாற் 6:3
3இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?”
யோவான் 6:42
2“இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?
இதை வாசித்து விட்டு , இயேசுவுக்கு சகோதரரும் சகோதரிகளும் இருந்தார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா ? இந்த வசனத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மரியாளிடம் பிறந்து , இயேசுவுக்குச் சகோதரரும் சகோதரிகளும் இருந்திருந்தால் இந்த வசனம் "இவர் மரியாவின் மகன்தானே" என்பதற்குப் பதிலாக "மரியாவின் மகன்களில் ஒருவர்தானே" என்று இருந்திருக்கும் . அவரது சகோதரர்கள் , சகோதரிகள் என்று குறிப்பிடப்படுபவர்கள் அவருடைய சகோதரர் முறை உள்ள உறவினர்கள் என்று புலனாகிறதா ?
மூலபாடமாகிய கிரேக்கம் , கிறிஸ்துவின் காலத்தில் பேசப்பட்ட அரமைக் மொழிகளில் cousins ஐ குறிக்க வார்த்தைகள் இல்லை . எனவே சகோதரர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது
இயேசுவைத் தவிர வேறு குழந்தைகள் மாதாவுக்கு இல்லை
மாதா இயேசுவைப் பெரும் முன்னும் , பெறும் போதும் , பெற்ற பின்பும் கன்னியாகவே இருந்தார். பழைய ஏற்பாட்டில் மோயீசன் கண்ட முட்செடி எரிந்த போதும் அது தீய்ந்து போகாதது போல் ,பனி பெய்த போதும் கிதியோனின் போர்வை மட்டும் பனியில் நனையாதது போல் (நீதித் தலைவர்கள் ) மாதா இயேசுவைப் பெற்றும் கன்னியாகவே இருக்கிறார் .
2. கத்தோலிக்க குருக்கள் ஏன் திருமணம் செய்து கொள்வதில்லை ?
1. குடும்ப காரியங்கள் ஊழியத்திற்குத் தடையாக இருக்கும் என்பதால் . உலகப்பிரகாரமான காரியங்கள் ஊழிய வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்
2. இயேசு, தானே திருமணம் செய்து கொள்ளாதவர் என்பதால் . இயேசுவுக்கு மனைவியும் மக்களும் இருந்தனர் என்று கட்டுக்கதைகள் உலவுகின்றன . இத்தகைய கதைகளை எழுதிக் கொண்டு பணமும் சம்பாதித்துக் கொண்டும் இருக்கின்றனர் . ஆனால், உண்மை என்னவெனில் இயேசுக்கிறிஸ்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே
3. குருக்கள் பரலோகத்தை அடையாளப்படுத்துகின்றனர் . அங்கே பெண் கொடுப்பதும் இல்லை எடுப்பதும் இல்லை. . குருக்கள் வெண் அங்கியை அணிவதும் அதனால் தான் . பரலோகத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அதை மண்ணுலகில் பிரதிபலிக்கின்றனர்
கேள்வி : மாதாவுக்கு இயேசுக்கிறிஸ்து மட்டும் தான் மகனா? அவருக்குச் சகோதரர்கள் இருப்பதாக விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே !
இந்தக் கேள்வி பல முறை கேட்கப்பட்டது தான் . எனவே இதை முதலில் தெரிவு செய்தேன்
பதில்
" மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை "மத் 1: 25. அப்படியென்றால் அதற்குப் பிறகு அவர்கள் கூடி வாழ்ந்தார்கள் என்று அர்த்தமா ?
இதோ ! உலக முடிவு வரை நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் மத் :28:20 இதன் அர்த்தம் உலகம் முடிந்த பின் இயேசு நம்மை விட்டுப் போய் விடுவார் என்பதா? மூல பாடத்தின் படி 'வரை ' என்பதின் அர்த்தம் வேறு
தொடர்ந்து வாசிப்போம்
பிலிப்பியர் 2:8
ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
பிரிவினை பைபிளில் இந்த வசனம் இவ்வாறு இருக்கிறது
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
இந்த வசனத்தின்படி சிந்தித்தால் மரண பரியந்தமும் என்றால் மரணம் வரைக்கும் கீழ்ப்படிந்தவர் என்று அர்த்தம். அப்படியென்றால் சிலுவை மரணத்திற்குப் பின் அவர் கீழ்ப்படியவில்லை என்று அர்த்தமா ? மொழிபெயர்ப்பு தரும் அர்த்தங்கள் வேறு . ஆனால் மூல பாடம் ஒன்று .
அதன் படி , புனித சூசையப்பர் மரியாளைப் பற்றித் தெரிந்த பின், அதாவது , அவர் பரிசுத்த ஆவியால் கருவுற்றது தெரிந்த பின் , மரியாளுக்கும் இயேசுவுக்கும் பாதுகாவலராக இருந்தார் . மரியாள் , பரிசுத்த ஆவியானவரின் மணவாட்டி. இதை அவர் அறிந்திருந்தார். எனவே தான் புனித சூசையப்பரை நேர்மையாளர் என்று கத்தோலிக்க திருச்சபை கூறுகிறது
பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசியவர்கள் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்கள் . எனவே பரிசுத்த ஆவியாரின் மணவாட்டியைப் பற்றி பேசுவதற்கும் இது பொருந்தும் அல்லவா ?
அடுத்தபடியாக
மத் 13:55 இவ்வாறு கூறுகிறது
55இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? 56இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?
மாற் 6:3
3இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?”
யோவான் 6:42
2“இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?
இதை வாசித்து விட்டு , இயேசுவுக்கு சகோதரரும் சகோதரிகளும் இருந்தார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா ? இந்த வசனத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மரியாளிடம் பிறந்து , இயேசுவுக்குச் சகோதரரும் சகோதரிகளும் இருந்திருந்தால் இந்த வசனம் "இவர் மரியாவின் மகன்தானே" என்பதற்குப் பதிலாக "மரியாவின் மகன்களில் ஒருவர்தானே" என்று இருந்திருக்கும் . அவரது சகோதரர்கள் , சகோதரிகள் என்று குறிப்பிடப்படுபவர்கள் அவருடைய சகோதரர் முறை உள்ள உறவினர்கள் என்று புலனாகிறதா ?
மூலபாடமாகிய கிரேக்கம் , கிறிஸ்துவின் காலத்தில் பேசப்பட்ட அரமைக் மொழிகளில் cousins ஐ குறிக்க வார்த்தைகள் இல்லை . எனவே சகோதரர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது
இயேசுவைத் தவிர வேறு குழந்தைகள் மாதாவுக்கு இல்லை
மாதா இயேசுவைப் பெரும் முன்னும் , பெறும் போதும் , பெற்ற பின்பும் கன்னியாகவே இருந்தார். பழைய ஏற்பாட்டில் மோயீசன் கண்ட முட்செடி எரிந்த போதும் அது தீய்ந்து போகாதது போல் ,பனி பெய்த போதும் கிதியோனின் போர்வை மட்டும் பனியில் நனையாதது போல் (நீதித் தலைவர்கள் ) மாதா இயேசுவைப் பெற்றும் கன்னியாகவே இருக்கிறார் .
2. கத்தோலிக்க குருக்கள் ஏன் திருமணம் செய்து கொள்வதில்லை ?
1. குடும்ப காரியங்கள் ஊழியத்திற்குத் தடையாக இருக்கும் என்பதால் . உலகப்பிரகாரமான காரியங்கள் ஊழிய வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்
2. இயேசு, தானே திருமணம் செய்து கொள்ளாதவர் என்பதால் . இயேசுவுக்கு மனைவியும் மக்களும் இருந்தனர் என்று கட்டுக்கதைகள் உலவுகின்றன . இத்தகைய கதைகளை எழுதிக் கொண்டு பணமும் சம்பாதித்துக் கொண்டும் இருக்கின்றனர் . ஆனால், உண்மை என்னவெனில் இயேசுக்கிறிஸ்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே
3. குருக்கள் பரலோகத்தை அடையாளப்படுத்துகின்றனர் . அங்கே பெண் கொடுப்பதும் இல்லை எடுப்பதும் இல்லை. . குருக்கள் வெண் அங்கியை அணிவதும் அதனால் தான் . பரலோகத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அதை மண்ணுலகில் பிரதிபலிக்கின்றனர்