பெருங்கருணையின் திருவருட்சாதனம்
பேராயர் ஃபுல்டன் ஷீன் (Archbishop Fulton J. Sheen 1895-1979) அவர்கள் மரணத்திற்கு சுமார் இரு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கென பேட்டியளித்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று "பேராயர் அவர்களே , உங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலமாக கோடிக்கணக்கான மக்களை நீங்கள் நல்வழிப்படுத்தி இருக்கிறீர்கள் . எத்தனையோ பேருக்கு ஊக்கமளித்து , விசுவாச வாழ்வுக்குத் தூண்டுதலாக இருந்தீர்கள்.. ஆனால் உங்களை விசுவாசத்தில் ஆழப்படுத்தியவர் யார் ? அவர் ஒரு திருத்தந்தையா ? " என்பது.
அதற்கு அவர் அளித்த பதில் தான் ஆச்சர்யமானது "என்னை விசுவாசத்திலே தூண்டியவர் ஒரு திருத்தந்தை அல்லர், கர்தினாலோ, ஆயரோ , இன்னொரு குருவோ , கன்னியரோ அல்ல. ஒரு பதினோரு வயது சீனச் சிறுமி தான் " என்று கூறிவிட்டு மேலும் விளக்கலானார்.
" கம்யூனிசம் சீனாவை ஆக்கிரமித்திருந்த போது, கம்யூனிச தீவிரவாதிகள் ஒரு குருவானவரை அவரது இல்லத்திலேயே சிறைப்பிடித்தனர். வெளியே பூட்டப்பட்டிருந்த அவரது இல்லத்தின் ஜன்னல் வழியாக தனது ஆலயத்தை அந்தத் தீவிரவாதிகள் ஆக்கிரமித்தத்தை அந்தக் குரு கண்டார். அவர்கள் கோவிலைச் சூறையாடி , அங்கிருந்த பொருட்களை எல்லாம் உடைத்து , பீடத்தை நோக்கி முன்னேறினர். அங்கிருந்த நற்கருணைப் பேழையை உடைத்து வசீகரிக்கப்பட்ட அப்பங்களை தரையிலே சிதறடித்து அவசங்கை செய்தனர். அந்தக் குருவானவர் அந்த பேழையில் இருந்த அப்பங்களின் எண்ணிக்கையை அறிந்திருந்தார் - அவை மொத்தம் முப்பத்தி இரண்டு. அந்தத் தீவிரவாதிகள் செய்த அனைத்தையும் ஒரு சிறுமி மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
அதன் பின் தினம்தோறும் நள்ளிரவில் அந்தத் தீவிரவாதிகள் அயர்ந்த நேரத்தில் அச்சிறுமி ஆலயத்திற்கு வந்தாள். ஒரு மணி நேரம் ஆண்டவரின் சமூகத்தில் நிந்தைப் பரிகார ஜெபங்களை ஏறெடுத்தாள். அங்கு அவமதிக்கப்பட்ட நற்கருணை நாதருக்கு மன்னிப்பு மன்றாட்டுக்களை ஏறெடுத்தாள். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், முழங்காலில் நின்று , குனிந்து தரையில் கிடந்த அப்பங்களுள் ஒன்றை நாவினால் உட்கொண்டாள் (பொதுநிலையினர் கைகளில் அப்பங்களை ஏந்தக்கூடாது என்பதை அவள் அந்தச் சூழ்நிலையிலும் மறக்கவில்லை- தற்காலத்தில் இடக்கையில் நற்கருணையை வாங்கி , வலக்கையால் அள்ளி நாவில் போட்டுக் கொண்டு, சட்டையில் அசட்டையாய்க் கையைத் துடைத்துச் செல்லும் கிறிஸ்தவர்கள் சிந்திக்கவும்). இவ்வாறு அவள் தினமும் வந்து , செபித்து , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பமாய் உட்கொண்டு செல்வதை அந்த குருவானவர் கண்டார். அவள் செய்யும் பரிகார செபங்களைக் கண்டு மகிழ்ந்தார் . அவளுக்காக செபித்தார் .
முப்பத்தி இரண்டாம் நாள் அவள் கடைசி அப்பத்தை உண்டுவிட்டு , செபித்து விட்டு எழுகையில், எதிர்பாராத விதமாய் ஏதோ ஒன்றில் தடுக்கி எழுந்தாள் . அந்தச் சப்தத்தில், அந்த ஆலயத்தில் உறங்கிக் கொண்டிருந்த தீவிரவாதி விழித்துக் கொண்டான். இந்தச் சிறுமியைக் கண்டு, அவளைத் துரத்திப் பிடித்து, தனது துப்பாக்கியால் அவளை அடித்தே கொன்றான். இதையும் அந்த குருவானவர் அதிர்ச்சியோடும் வேதனையோடும் கண்டார்.
அந்தச் சிறுமியின் இந்த இரத்த சாட்சியைக் கேட்ட பேராயர் , தினமும், தான் நற்கருணை ஆண்டவர் முன் ஒரு மணிநேரம் ஆராதனை செய்வதாக உறுதி பூண்டார். இந்த எளிய, சின்னஞ்சிறு சிறுமி நற்கருணையில் இருக்கும் நமதாண்டவரை இந்த அளவுக்கு உலகிற்கு சாட்சியாகக் கூற முடியும் எனில் , தான் எவ்வளவு சாட்சி பகர வேண்டும் என்பதை அறிந்தார். சாட்சிய வாழ்வின் கடமையை உணர்ந்தார்.
அதன் பின் நற்கருணை ஆண்டவரை பிரகடனப்படுத்துவதே அவரது தலையாய பணியாக இருந்தது. தைரியத்தையும் , பக்தியையும் அச்சிறுமி எண்பித்தாள். விசுவாசம் பயங்களை விலக்குவதையும், நற்கருணை ஆண்டவர் மீதுள்ள பக்தி நம் வாழ்வை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் அச்சிறுமி காண்பித்தாள். நற்கருணையில் மறைந்திருப்பது நமதாண்டவரின் அன்பின் மகிமையே! நமது விசுவாசமும் , நம்பிக்கையும் , ஆண்டவர் மீது கொண்டுள்ள பற்றுதலையும் , குறிப்பாக நற்கருணை ஆண்டவருக்கு நாம் செய்யும் வணக்கத்தையும் கனத்தையும் ஆழ்ந்து ஆராய வேண்டிய தருணம் இது.
அதற்கு அவர் அளித்த பதில் தான் ஆச்சர்யமானது "என்னை விசுவாசத்திலே தூண்டியவர் ஒரு திருத்தந்தை அல்லர், கர்தினாலோ, ஆயரோ , இன்னொரு குருவோ , கன்னியரோ அல்ல. ஒரு பதினோரு வயது சீனச் சிறுமி தான் " என்று கூறிவிட்டு மேலும் விளக்கலானார்.
" கம்யூனிசம் சீனாவை ஆக்கிரமித்திருந்த போது, கம்யூனிச தீவிரவாதிகள் ஒரு குருவானவரை அவரது இல்லத்திலேயே சிறைப்பிடித்தனர். வெளியே பூட்டப்பட்டிருந்த அவரது இல்லத்தின் ஜன்னல் வழியாக தனது ஆலயத்தை அந்தத் தீவிரவாதிகள் ஆக்கிரமித்தத்தை அந்தக் குரு கண்டார். அவர்கள் கோவிலைச் சூறையாடி , அங்கிருந்த பொருட்களை எல்லாம் உடைத்து , பீடத்தை நோக்கி முன்னேறினர். அங்கிருந்த நற்கருணைப் பேழையை உடைத்து வசீகரிக்கப்பட்ட அப்பங்களை தரையிலே சிதறடித்து அவசங்கை செய்தனர். அந்தக் குருவானவர் அந்த பேழையில் இருந்த அப்பங்களின் எண்ணிக்கையை அறிந்திருந்தார் - அவை மொத்தம் முப்பத்தி இரண்டு. அந்தத் தீவிரவாதிகள் செய்த அனைத்தையும் ஒரு சிறுமி மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
அதன் பின் தினம்தோறும் நள்ளிரவில் அந்தத் தீவிரவாதிகள் அயர்ந்த நேரத்தில் அச்சிறுமி ஆலயத்திற்கு வந்தாள். ஒரு மணி நேரம் ஆண்டவரின் சமூகத்தில் நிந்தைப் பரிகார ஜெபங்களை ஏறெடுத்தாள். அங்கு அவமதிக்கப்பட்ட நற்கருணை நாதருக்கு மன்னிப்பு மன்றாட்டுக்களை ஏறெடுத்தாள். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், முழங்காலில் நின்று , குனிந்து தரையில் கிடந்த அப்பங்களுள் ஒன்றை நாவினால் உட்கொண்டாள் (பொதுநிலையினர் கைகளில் அப்பங்களை ஏந்தக்கூடாது என்பதை அவள் அந்தச் சூழ்நிலையிலும் மறக்கவில்லை- தற்காலத்தில் இடக்கையில் நற்கருணையை வாங்கி , வலக்கையால் அள்ளி நாவில் போட்டுக் கொண்டு, சட்டையில் அசட்டையாய்க் கையைத் துடைத்துச் செல்லும் கிறிஸ்தவர்கள் சிந்திக்கவும்). இவ்வாறு அவள் தினமும் வந்து , செபித்து , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பமாய் உட்கொண்டு செல்வதை அந்த குருவானவர் கண்டார். அவள் செய்யும் பரிகார செபங்களைக் கண்டு மகிழ்ந்தார் . அவளுக்காக செபித்தார் .
முப்பத்தி இரண்டாம் நாள் அவள் கடைசி அப்பத்தை உண்டுவிட்டு , செபித்து விட்டு எழுகையில், எதிர்பாராத விதமாய் ஏதோ ஒன்றில் தடுக்கி எழுந்தாள் . அந்தச் சப்தத்தில், அந்த ஆலயத்தில் உறங்கிக் கொண்டிருந்த தீவிரவாதி விழித்துக் கொண்டான். இந்தச் சிறுமியைக் கண்டு, அவளைத் துரத்திப் பிடித்து, தனது துப்பாக்கியால் அவளை அடித்தே கொன்றான். இதையும் அந்த குருவானவர் அதிர்ச்சியோடும் வேதனையோடும் கண்டார்.
அந்தச் சிறுமியின் இந்த இரத்த சாட்சியைக் கேட்ட பேராயர் , தினமும், தான் நற்கருணை ஆண்டவர் முன் ஒரு மணிநேரம் ஆராதனை செய்வதாக உறுதி பூண்டார். இந்த எளிய, சின்னஞ்சிறு சிறுமி நற்கருணையில் இருக்கும் நமதாண்டவரை இந்த அளவுக்கு உலகிற்கு சாட்சியாகக் கூற முடியும் எனில் , தான் எவ்வளவு சாட்சி பகர வேண்டும் என்பதை அறிந்தார். சாட்சிய வாழ்வின் கடமையை உணர்ந்தார்.
அதன் பின் நற்கருணை ஆண்டவரை பிரகடனப்படுத்துவதே அவரது தலையாய பணியாக இருந்தது. தைரியத்தையும் , பக்தியையும் அச்சிறுமி எண்பித்தாள். விசுவாசம் பயங்களை விலக்குவதையும், நற்கருணை ஆண்டவர் மீதுள்ள பக்தி நம் வாழ்வை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் அச்சிறுமி காண்பித்தாள். நற்கருணையில் மறைந்திருப்பது நமதாண்டவரின் அன்பின் மகிமையே! நமது விசுவாசமும் , நம்பிக்கையும் , ஆண்டவர் மீது கொண்டுள்ள பற்றுதலையும் , குறிப்பாக நற்கருணை ஆண்டவருக்கு நாம் செய்யும் வணக்கத்தையும் கனத்தையும் ஆழ்ந்து ஆராய வேண்டிய தருணம் இது.