- தேவன்னை
- கண்ணீரின் அன்னை
கண்ணீரின் அன்னை
வரலாறு
Source :http://spiritual-matters777.blogspot.com
கண்ணீரின் அன்னை பக்தி முயற்சி அருட்சகோதரி அமலியாவினால் துவங்கப்பட்டது. சிலுவைப் பாடுகளின் மீது மிகுந்த பக்தி உருக்கம் கொண்ட அருட்சகோதரி அமலியா (Sister Amalia Aguirre (1901- 1977)) 1901 ம் ஆண்டில் ஸ்பெயினில் பிறந்தார். 1919 ம் ஆண்டில் அவரது குடும்பம் பிரேசிலுக்கு இடம் பெயர்ந்தது. 1920ம் ஆண்டில் பாடுபட்ட ஏசுவின் துறவற இயக்கத்தில் இணைந்த இவர் , அந்த சபையில் சேர்ந்த பின் பாடுபட்ட இயேசுவின் பேரில் மிகுந்த பக்தி உருக்கம் கொண்டவர் ஆனார் . சமூகப் பணிகளையும் அந்த சபையின் மூலம் செய்த இவர் 1931 ல் நித்திய வார்த்தைப்பாடு கொடுத்து , தனது பெயரை 'கசையடி பட்ட இயேசுவின் அருட்சகோதரி அமலியா ' (Sr. Amalia of the Scourged Jesus) என்று மாற்றிக் கொண்டார் .இவர் தன் உடலில் இயேசுவின் ஐந்து காய வரத்தைப் பெற்றுள்ளார்
அவர் இருந்த' பாடுபட்ட ஏசுவின் துறவற இயக்கம்' ஒரு சபையாக உருவெடுத்தது . ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவ விரும்பிய இந்த சகோதரி, அதற்கென ஒரு இல்லத்தை நிறுவி, அவர்களைப் பராமரித்து வந்தார் . இருபது குழந்தைகளைக் கொண்டு ஆரம்பித்த இந்த இல்லம் இன்று வரை செயல்படுகிறது . குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மறுவாழ்வு இல்லமும் தொடங்கப்பட்டது .
இவரது உறவினரின் மனைவி ஒருமுறை நோயினால் அவதிப்பட, அவரது கணவரும் குழந்தைகளும் இவரிடம் வந்து கண்கலங்கினர். "அவள் மரித்துப் போனால் , எங்கள் குடும்பமே நிர்கதியற்றுப் போகும் " என்று அவர்கள் வருந்த , அவர்களுக்காக அமலியா ஆலயத்தில் செபம் செய்யத் துவங்கினார் .
அப்பொழுது நமதாண்டவர் இயேசுக் கிறிஸ்து இவருக்குத் தோன்றி அன்னையின் கண்ணீரில் பேரில் செபிக்கப் பணித்தார் .
எவ்வாறு செபிப்பது என அருட்சகோதரி வினவ , நமதாண்டவர் செபங்களைக் கொடுத்தார் .
‘O Jesus, hear our prayer for the sake of the tears of Your Most Holy Mother!’
‘O Jesus, behold the tears of the one who loved You most on earth and who loves You most ardently in heaven!’
"ஓ இயேசுவே ! உமது மகா பரிசுத்த தாயாரின் கண்ணீரைப் பார்த்து , எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் "
"ஒ என் இயேசுவே ! இவ்வுலகில் உம்மை அதிகமாக நேசிக்கவும் , பரலோகத்தில் உம்மை
அதிகமாகப் போற்றவும் , உம்மோடு வாழவும் செய்கின்ற பரிசுத்த அன்னையின் இரத்தக் கண்ணீரின் துளிகளை,
நீர் கனிவோடு தயவாய் கண்ணோக்கிப் பார்த்தருளும். "
{or}
"ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. "
இந்த செபங்களைத் தந்த பின் ஆண்டவர் சொன்னதாவது "
‘My daughter, whatever people will ask of Me for the sake of the tears of My Mother, I shall lovingly grant them. Later, my Mother will hand over this treasure to Our beloved Institute as a Magnet of Mercy.’
"என் மகளே , என் அன்னையின் கண்ணீரின் பெயரால் கேட்கப்படும் பக்தர்களின் வேண்டுதல்களை நான் ஒருபோதும் மறுப்பதே இல்லை . இம்மாபெரும் பொக்கிஷத்தை இரக்கத்தின் கருவூலமாக என் அன்னை திருச்சபைக்கு அளிப்பார் " என்று கூறினார்
கண்ணீரின் அன்னை செபமாலையானது , அன்னை , அருட்சகோதரிக்குத் தந்த காட்சியில் கொடுக்கப்பட்டது. அன்னை, காட்சியில் ஊதா நிற அங்கியையும் , நீல நிற மேலங்கியும் , வெண்ணிற முக்காடும் அணிந்திருந்தார்.
மேலங்கியின் நீல நிறம் , பரலோகத்தைக் குறிக்கிறது . நமது வாழ்க்கையில் நாம் காணும் பிரச்சனை , போராட்டங்கள் , சிலுவைகளில் நாம் மனம் தளர்ந்து போகையில் பரலோகைக் குறித்த நினைவில் நாம் ஆறுதல் அடைய வேண்டும் .
இளஞ்சிவப்பு - ஊதா நிறம் வலியையும் வேதனையையும் குறிப்பிடுவது. பாடுகளில் இயேசுவின் வேதனையையும் , துன்புறும் இயேசுவைக் கண்ட அன்னையின் வியாகுலத்தையும் குறிப்பது.
முக்காட்டின் வெண்ணிறம் பரிசுத்தத்தைக் குறிப்பது . மூவொரு இறைவனின் வெண்ணிற லீலியான மரியாள் பரிசுத்தத்தின் அடையாளமான வெண்ணிறத்தைப் பிரதிபலிக்கிறார் .
அன்னை , கீழ்நோக்கிப் பார்த்த வண்ணமாய் காட்சி தருகிறார் . அமல உற்பவத்தைக் காண்பிக்கும் வண்ணம் ஓவியர்கள் அன்னையின் கண்கள் பரலோகத்தை நோக்கும் வண்ணமாகவே பொதுவாக வரைகின்றனர் . ஆனால் அன்னை நமது கண்ணீரையும் வருத்தங்களையும் காண்கிறார் . நம்மைக் காண்கிறார் . அன்னையை நாம் அண்டி வரும்போது அவர் நம்மைக் கருணையோடு நோக்குவதை நாம் காண வேண்டும் . எனவே பூலோகத்தை , நம்மைப் பார்த்த வண்ணமாய் காட்சி தருகிறார் . அருட்சகோதரி காட்சி கண்ட விதமாகவே அன்னையின் திரு உருவம் வரையப்படுகிறது . அவர் தந்த செபமாலையே கண்ணீரின் அன்னையின் செபமாலை
இந்த செபமாலையை தொடர்ந்து 9 நாட்களுக்கு நவநாளாக செபித்து வந்தவர்கள் பல ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்கள் .நமதாண்டவர் கொடுத்த வாக்குறுதி ஏதெனில் , 'என் அன்னையின் கண்ணீரின் நிமித்தமாய்க் கேட்கப்படும் எந்த மன்றாட்டும் கேட்கப்படும் " என்பதே .மரியன்னையின் கண்ணீரை தியானிக்கிற நாம் அவரது வியாகுலங்களையே தியானிக்கிறோம் .அவரது வியாகுலங்களுக்கு நமதாண்டவர் இரங்குவதால், வியாதிகள் நீங்கவும் , மனமாற்றம் பெறவும் , ஆத்துமாக்கள் உத்தரிப்புக் கடன் தீர்க்கவும் , போராட்டங்களை வெல்லவும் , விசுவாசத்தில் உறுதிப்படவும், இன்னும் பல ஆசீர்வாதங்களைப் பெறவும் இந்த செபமாலையை செபிக்க திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் இந்த செபமாலை பக்தியை அங்கீகரித்தார்
செபமாலையில் ஏழு மணிகளைக் கொண்ட ஏழு கோர்வைகள் உள்ளன . அன்னையின் ஏழு வியாகுலங்களைக் குறிப்பவை இவை . முடிவில் மூன்று மணிகளும் பதக்கமும் உள்ளன .
பதக்கத்தில் அன்னையின் திரு உருவம் உள்ளது . நடுப்பதக்கத்தில் இயேசுவின் திருவுருவம் உள்ளது .
இந்த செபங்களை செபிக்க இந்த செபமாலை பரிந்துரைக்கப்படுகிறதே தவிர செபமாலை கட்டாயமல்ல . விரல்களால் எண்ணியும் , மனக்கணக்கால் எண்ணியும் இந்த செபமாலையைச் செபிக்கலாம்
இதல்லாமல் கழுத்தில் அணிய ஒரு பதக்கத்தை அன்னை தந்தார் .
பதக்கத்தில் ஒரு புறம் கண்ணீரின் அன்னையின் திரு உருவமும் , மறுபுறம் கற்றூணில் கட்டுண்டு கசையடிபட்ட இயேசுவின் திருவுருவமும் உள்ளது .
அன்னையின் திரு உருவத்தைச் சுற்றி
"வியாகுல அன்னையே , உமது வியாகுலக் கண்ணீரால் நரகத்தை நிர்மூலமாக்கினீர் "
(உமது இரத்தக் கண்ணீரால், துயரம் மிகுந்த தாயே, சாத்தானுடைய ஆட்சியை அழித்தருளும்)
என்று எழுதியுள்ளது .(“O Virgin Most Sorrowful, Your Tears Have Destroyed the Infernal Empire.”)
இயேசுவின் உருவத்தைச் சுற்றி
"தெய்வீக சிநேகத்தால் கட்டுண்டவராகிய சேசுவே, உலகத்தை பயமுறுத்தும் தப்பறைகளிலிருந்து அதனைக் காத்தருளும் "
என்று எழுதியுள்ளது .(“By Your Divine Meekness, O Jesus Bound, Save the World from the Error which Threatens It.”)
உத்தரியத்தைப் போல இதுவும் ஒரு பக்தி முயற்சியே .
கண்ணீரின் அன்னையின் செபமாலையை செபிக்கும் விதம்
On the Medal of Jesus
O crucified Jesus, we fall at Your feet and offer You the tears of the one, who with deep compassionate love accompanied You on Your sorrowful way of the Cross. O good Master, grant that we take to heart the lessons which the tears of Your most holy Mother teach us, so that we may fulfill Your holy will on earth, that we may be worthy to praise and exalt You in Heaven for all eternity. Amen.
In the large beads (instead of the “Our Father”):
V. O Jesus, look upon the tears of the one who loved You most on earth,
R. And loves You most ardently in heaven.
In the small beads (instead of the “Hail Mary”):
V. O Jesus, listen to our prayers,
R. For the sake of the tears of Your most Holy Mother.
On the final three beads:
V. O Jesus, look upon the tears of the one who loved You most on earth,
R. And loves You most ardently in heaven.
On the Medal of Mary
O Mary, Mother of Love, Sorrow and Mercy, we beseech you to unite your prayers with ours so that Jesus, your Divine Son, to whom we turn, may hear our petitions in the name of your maternal tears, and grant us, not only the favors we now ask, but the crown of everlasting life. Amen.
With your tears, O sorrowful Mother, destroy the rule of Satan. Through Your divine tenderness, O Jesus bound and fettered, defend the world from the errors that threaten it. Amen.
இரத்தக்கண்ணீர் ஜெபமாலை.
(மாதா உலகில் இருக்கும்போதும், பல்வேறு காட்சிகளிலும், மற்றும் சுரூபங்களிலும் சிந்தும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக)
ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில்: சிலுவையில் அறையப்பட்ட சேசுவே! உமது பாதத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப் பாதையில் அனுதாப வேதனையுடன் உம்மைப் பின்சென்ற உம்முடைய தாயின் கண்ணீர்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நல்லவரான ஆண்டவரே, உம் மிகப்புனித அன்னையின் கண்ணீர்கள் எங்களுக்குத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதனால் பூவுலகில் உமது திருச்சித்தத்தை நிறைவேற்றவும் மோட்சத்தில் நித்தியத்திற்கும் உம்மைப் புகழ்ந்து துதிக்கவும் தகுதி பெற்றவர்களாகும்படி செய்தருள்வீராக. ஆமென்.
ஏழு மன்றாட்டுக்கள்:
1. சேசுவே! ஓர் வாள் உம் இருதயத்தை ஊடுருவும் என்ற சிமையோனின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டு உமது மாதா சிந்தின கண்ணீர்களைப் பார்த்து எங்கள் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோடிருக்கக் கிருபை செய்வீராக.
பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
2. சேசுவே! உமது மாதா எகிப்துக்கு ஓடிப்போனபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எல்லா அகதிகள் மேலும், விசுவாசத்திற்காக உபத்திரவ வேதனைகளை அனுபவிக்கிறவர்கள் மேலும் இரக்கமாயிருப்பீராக!
பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
3. சேசுவே! மூன்று நாளாக உம்மைக் காணாமல் உமது தாய் தேடியலைந்தபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து உம்மை இழந்துவிட்ட ஆன்மாக்கள் மீண்டும் உம்மைக் கண்டடைய கிருபை செய்வீராக.
பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
4. சேசுவே! உம்முடைய வேதனை நிறைந்த சிலுவையின் பாதையில் நீர் நடந்து சென்றபோது உமது தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நோயாலும் துன்ப துரிதங்களாலும் நாங்கள் வருந்தும்போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, தப்பறைகளில் விழுகிறவர்களின் வழியும் உயிரும் உண்மையும் நீரே என்பதை அவர்களுக்குக் காட்டியருள்வீராக.
பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
5. சேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண அவஸ்தைப்பட்டபோது உமது மாதா வடித்த கண்ணீர்களைப் பார்த்து, மரண அவஸ்தையாயிருக்கிறவர்கள் மேல் இரக்கமாயிருந்து, நாங்கள் எங்கள் மரணத்தை உமது கரங்களிலிருந்து அன்போடு ஏற்றுக்கொள்ள கிருபை செய்வீராக.
பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
6. சேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு வியாகுல மாதாவின் மடியில் வளர்த்தப்பட்டபோது, அத்தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, துன்ப வேதனைப்படுகிறவர்கள் மேல் இரக்கமாயிரும். அவர்களின் சக்திக்கு அதிகமான துன்பங்களை சர்வேசுரன் அனுமதிக்க மாட்டார் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்தருளும்.
பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
7. சேசுவே! நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள கிருபை செய்வீராக.
பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும்போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது திருத்தாயாரின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக.
(3 முறை சொல்லவும்).
முடிவு ஜெபம்.
ஓ மரியாயே, சிநேகத்தினுடையவும் துயரங்களுடையவும், இரக்கத்தினுடையவும் தாயே, உம்முடைய ஜெபங்களை எங்களுடைய ஜெபங்களுடன் சேர்த்து, எங்களுடைய வேண்டுதல்களை உமது தாய்மையுள்ள இரத்தக்கண்ணீரின் பெயரால் ஏற்றுக்கொண்டு, நாங்கள் சேசுவையே எப்போதும் நோக்கியிருக்கவும், நாங்கள் கேட்கும் வரப்பிரசாதங்களுடன் இறுதியாக நித்திய ஜீவியக் கொடையையும் தந்தருளும்படி உம்மிடம் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
உமது இரத்தக் கண்ணீரால், துயரம் மிகுந்த தாயே, சாத்தானுடைய ஆட்சியை அழித்தருளும்.
தெய்வீக சிநேகத்தால் கட்டுண்டவராகிய சேசுவே, உலகத்தை பயமுறுத்தும் தப்பறைகளிலிருந்து அதனைக் காத்தருளும்.
ஆமென்.
குறிப்பு : பிழைகள் இருப்பின் தெரியப்படுத்தவும் . தமிழ் செபங்கள் உங்களிடம் இருந்தால், மின்னஞ்சல் முகவரியில்([email protected]) தொடர்பு கொள்ளவும் .