- கேள்வி பதில்
- அன்னைமரியாள் என்றும் கன்னிகை
அன்னைமரியாள் என்றும் கன்னிகை
Article Source : Church of Jesus Facebook Page
Picture source : internet
பாகம்:1
லூக்காஸ் 1:26-ல் விண்ணககடவுள்,அதிதூதர் கபிரியேலைத் தமது தூதராக மரியா என்ற கன்னிகையிடம் அனுப்புகிறார்.
லூக்காஸ் 1:28-ல் வானதூதர் மரியாவுக்குத் தோன்றி ‘’அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’’ என்றார்.
சில முக்கிய கையெழுத்துப் பிரதிகளில் ‘’பெண்களுக்குள் நீர் ஆசீபெற்றவர்’’என்ற சொற்றொடரும் இவ்வசனத்தில் சேர்ந்து காணப்படுகிறது,
வுல்காத்தா என்னும் இலத்தீன் மொழி பெயர்ப்பில் ‘’அருள் நிறைந்தவரே வாழ்க’’ என்று காணப்படுகிறது.
பிரிவினை சபையினரின் வேதாகமத்தில்
‘’கிருபை பெற்றவளே வாழ்க கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்,ஸ்திரிகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்’’என்று காணப்படுகிறது.
இத்தகைய வாழ்த்துக்குப் பிறகு வானதூதர் தாம் கொண்டு வந்த செய்தியை கொடுக்கிறார்.
''லூக்காஸ் 1:31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.
35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்''
ஆண்டவரின் இந்த திட்டத்திற்கு மரியா அடிபணிந்து அதை ஏற்றுக் கொண்டாள்.அவ்வாறு அவள் கடவுளின் ஏக குமாரனைத் தன் உதரத்தில் தாங்கி இயேசுவின் தாயாகிறாள்.அதாவது கடவுளின் தாயாகிறாள்.
பாருங்கள்!
தமது அதிதூதர் கபிரியேலையே அனுப்பி எல்லாம் வல்ல கடவுள் அன்னைமரிக்கு வந்தனம் செலுத்துகின்றார்.
அவள் எல்லாம் வல்ல கடவுளின் மகனுக்கே தாயாகும் பாக்கியம் பெறுகின்றாள்.
அத்தகைய பாக்கியம் பெற்ற அன்னைமரியாள், பரிசுத்த ஆவியினால் நிழலிடப்பட்ட பின்பு,
அவளது ஆவி பரிசுத்த ஆவியால் அக்களிப்புற்று கடவுளால் களிகூர்கின்றது.
''லூக்காஸ் 1:48...இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்''
இந்த வாக்குகளை தூய ஆவியாரே கூறுகின்றார்.ஏனெனில் அந்நேரம் அன்னைமரியாள் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ள பட்டிருந்தாள்.
இப்படிப்பட்ட அன்னைமரியாளை ‘’பேறுபெற்றவள்’’ என்று தலைமுறை தலைமுறையாகப் போற்றவேண்டிய கடமையில் இருக்கிறோம்.
இந்நிலையில் எந்த மனிதனாவது அன்னைமரியாவை பழிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயமாக அவரில் அன்னைமரியாவின் பகைவனான[தொடக்கநூல் 3:15]சாத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
பாகம்:2
நான் கன்னி ஆயிற்றே
-----------------------------------------------------------------------------------
லூக்காஸ் 1:31-ல் கபிரியேல் தூதர் மரியாவிடம்
‘’இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்;அவருக்கு இயேசு என்றும் பெயரிடுவீர்’’
என்று சொல்லிய போது அன்னைமரி அவரிடம்
‘‘லூக்காஸ் 1:34 இது எப்படி நிகழும்?நான் கன்னி ஆயிற்றே!’’என்றார்.
மரியா இந்த கேள்வியை தூதரிடம் எழுப்புகின்ற போது,ஏற்கனவே அவருக்கு திருமண ஒப்பந்தம் நடந்து முடிந்திருந்தது[லூக்காஸ் 1:27]
எனவே நீர் கருவுற்று ஒரு மகனை பெறுவீர் என்று வானதூதர் சொன்ன போது சாதாரண நிலையில் அது நிகழாது என்று சிந்திக்கவோ அதற்கு எதிராக இது எப்படி நிகழும் என்று கேள்வி எழுப்பவோ ஒரு வாய்ப்பும் இல்லை.
சாதாரண மனிதர்களான நமக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இதே செய்தியை நம்மிடம் சொல்லியிருந்தால் நாம் நிச்சயமாக அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைய மாட்டோம் ஏனெனில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது,இனி திருமணம்தான் ,அடுத்து எனக்கு பிறக்க போகும் குழந்தையை பற்றி தான் தூதர் முன்னுரைக்கிறார் என அந்த செய்தியை சாதாரணமாகவே ஏற்று கொள்வோம்.
ஆனால் திருமண நிச்சயம் முடிந்த நிலையில் அன்னைமரியாள் அதிர்ச்சியும் பயமும் கலந்த நிலையில்
‘’இது எப்படி நிகழும்?நான் கன்னி ஆயிற்றே!’’
என அன்னை கத்துகிறார் எனத்தான் சொல்ல வேண்டும்.
இந்த கேள்வி இந்த நிலையில் ஒரு அசாதாரணமான .கேள்வி என்று தெரிகிறதல்லவா!
ஆனால் தன் உள்ளத்தில் தான் எக்காலத்திற்கும் கன்னியாக இருக்க போகிறவள் என்ற அசாதாரணமான ஒரு தீர்மானம் இருக்கிறபடியால் தான் இந்த அசாதாரண கேள்வியை அவள் கேட்கிறாள்.
‘’நான் கன்னி ஆயிற்றே’’ என்று சொல்வதில் அந்த அசாதாரணம் புதைத்து கிடக்கிறது.
விடுதலைப்பயணம் 3:14ஐ இந்நேரம் வாசிப்போம்
‘’கடவுள் மோசேயை நோக்கி ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல் என்றார்’’
‘’இருக்கின்றவர் நானே’’ என்பதன் அர்த்தம் என்ன?
எக்காலத்தும் இருக்கின்றவர் நானே என்பது தானே.
அதேபோல அன்னைமரியாள் தன்னை பற்றி ‘’நான் கன்னி ஆயிற்றே’’ என்று சொல்லும்போது தான் எக்காலத்துக்கும் கன்னி என்பதும் திருமணம் முடிந்தாலும் குழந்தையை பெற்று எடுக்க என்னால் முடியாதே என்றுதான் அதிர்ச்சியுடன் இக்கேள்வியை எழுப்புகிறார்.
இதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகின்ற ஒரு உண்மை என்னவென்றால் சூசையப்பரும் அன்னைமரியாளும் திருமணம் முடிந்தாலும் கன்னிமை விரதம் காக்கும்படித் தீர்மானித்து இருந்தனர் என்பதே .
மேலும் இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையின் உயிரோட்டமுள்ள திருமரபின் படியும்,
விவிலியத்தில் இணைக்கப்படாத ஒரு சில திருமறைகளிலும், இன்னும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் உள்ள சில கூற்றுக்களின் படியும் பார்க்கும்போது இந்த உண்மையை தெளிவாக நாம் அறிந்துகொள்ளலாம்.
இந்த குறிப்புகளின் படி அன்னைமரியாளை போன்றே அன்னைமரியாளின் தாயிடமும் வானதூதர் தோன்றி தூது உரைத்தபடி புனித குழந்தையாக பிறந்தவள் தான் அன்னைமரியாள்.
குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் இறைத்திட்டபடி ஆலயத்தில் கொண்டு சென்று கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கிறார்கள்
அன்னைமரியாள் தெய்வகுழந்தையாக வளர்கிறார். .வானதூதர் அவருக்கு உணவு கொடுக்கும் அற்புத நிகழ்வும் அவரது வாழ்வில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது
அன்றைய ஆணாதிக்க சமூகத்தின் கொடுமையிலிருந்து அன்னைமரியாளை பாதுகாக்கவே ,அன்னைமரியாளை விட மிக அதிக வயதுள்ள [அதாவது தந்தையும் மகளும் போன்ற வயது வித்தியாசம்] சூசையப்பரோடு இறைதிட்டபடி திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள்.
அதன் பிறகு நடந்தவைகளை தான் நாம் வேதாகம குறிப்புகளிலிருந்து பார்த்தோம்.இன்னும் அறிவோம்
பாகம்:3
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
‘’மத்தேயு 1:19,அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்,அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிட்டார்’’
பாவியாயிருந்தாலும் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க கூடாது என்ற நல்ல எண்ணம் கொண்ட நீதிமானான சூசையப்பர்,
தூய ஆவியார் நிழலிடுதலால் கடவுளையே பெற்றெடுக்கும் மாபெரும் அதிசயமான ,உலக சரித்திரத்தையே புரட்டி போடும் அந்த இறைமகனின் பிறப்பு,
அன்னைமரியாள் வழியாக நடக்க போகிறது என்பதை கடவுளின் தூதர் மூலமாக எப்போது அறிந்து கொள்கிறாரோ,
அதற்கு பிறகு அன்னைமரியாளை புனித பெண்ணாக தான் அனுகியிருப்பார்.கடவுள் குடியிருக்கும் கோவிலாகதான் பாவித்திருப்பார்.
.மிகுந்த மரியாதையோடும் பயபக்தியோடும் கடவுளின் தாயான அவருக்கு பணிவுடை செய்திருப்பார்.
நமது உறவுகளில் யாராவது குருக்களாகவோ,கன்னியராகவோ ஆயராகவோ இருந்தால் கூட நாம் அவர்களிடம் சாதாரண உறவு நிலையை கடந்து அவர்களின் புனித பணியை முன்னிட்டு இறை பணிவோடு பழகுவோம் அல்லவா ?
அப்படியிருக்கும் போது தூய ஆவியாரால் நிழலிடபட்டு,கடவுளின் திருமகனையே உதரத்தில் தாங்கி, பெற்றெடுத்த தூய ஆவியாரின் மணவாட்டியான அன்னைமரியாளிடம் எத்தகைய பணிவோடு நீதிமானான சூசையப்பர் பழகியிருப்பார் என்பதை எண்ணிப்பாருங்கள்...
அங்கே சாதரண மனித உறவுக்கு இடமில்லை மாறாக இயேசுகிறிஸ்துவோடு இணைந்து தந்தை இறைவன்,தூய ஆவியார் ஆகிய மூவொரு இறைவனின் பிரசன்னத்தில் அன்னைமரியாளும் சூசையப்பரும் அந்த தெய்வீக பேரின்பத்தை அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்திருப்பார்கள்
மேலும் வேதம் சொல்கிறது
‘’எசேக்கியல் 44:2 ஆண்டவர் என்னிடம் கூறியது,இந்த வாயில் மூடியே இருக்கவேண்டும்.அது திறக்கப்படக்கூடாது.யாரும் இதன் வழியாய் நுழையக்கூடாது.ஏனெனில் இஸ்ரெயலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழியாக நுழைந்தார்;இது மூடியே இருக்கவேண்டும்’’
யாராவது ஒருவர் இயேசுகிறிஸ்துவிற்கு பிறகு அன்னைமரியாளுக்கு வேறு பிள்ளைகளும் உண்டு என சொல்வானகில் அவன் அன்னையை அல்ல இயேசுவையே அவமதிக்கிறான்.
அவன் தன்னையும் அறியாமல் சாத்தானோடு சேர்ந்து இயேசு ஆண்டவரல்ல என அறிக்கையிடுகிறான்.
ஏனென்றால் இயேசுகிறிஸ்து ஆண்டவர் தான் என்றால், ஆண்டவாகிய கடவுள் இம்மண்ணில் வந்த வாசலான அன்னைமரியாள் வழியாக இன்னொரு உயிர் இவ்வுலகினில் நிச்சயமாக வரவே முடியாது.
ஒருவேளை அவ்வாறு அன்னைமரியாளுக்கு இயேசுவுக்கு பிறகு வேறு பிள்ளைகள் பிறந்திருந்தால் இயேசுகிறிஸ்து இறைவனாக இருக்கமுடியாது.
ஆகவே
அன்னைமரியாள் கன்னிகை என்று நாம் அறிக்கையிடும் போதெல்லாம் அன்னையை அல்ல,இயேசு கிறிஸ்துவை தான் மகிமை படுத்துகிறோம்.
இயேசுவே ஆண்டவர் என்று உலகிற்கு அறிவிக்கிறோம்
Part 4
’மத்தேயு 1:25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்''
'ஆண்டவரின் தாய் எக்காலத்தும் கன்னியானவள்'' என்ற கத்தோலிக்க திருச்சபையின் போதனையை குறைகாணும் கெட்டநோக்கில்
இந்த இறைவசனத்தில் ''வரை'' என்று எதற்காக அழுத்தம் கொடுத்து சொல்ல பட்டிருக்கிறது?
என்று திருச்சபையிலிருந்து பிரிந்துபோன சபையினர்
கேள்விகள் எழுப்புகின்றனர்.
எதற்காக இந்த இறைவசனத்தில் ''தம் மகனை பெற்றெடுக்கும் வரை'' என அழுத்தம் கொடுக்க பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
இயேசு மனித உறவின் காரணமாக பிறந்தவர் அல்லர் மாறாக தூய ஆவியின் நிழலிடுதலால் பிறந்தவர் ஆகவே இயேசு நம்மை போன்ற சாதாரண பிறவியல்ல மாறாக இறைவனின் திருமகன் ,என்பதை சொல்லவே மரியா தம் மகனை பெற்றெடுக்கும் வரை யோசேப்புடன் கூடி வாழவில்லை என அழுத்தம் கொடுத்து நற்செய்தியாளர் சொல்கிறார்.
ஏனெனில் இயேசு பிறக்கும்போது அன்னைமரியாவிற்கும் புனித சூசையப்பருக்கும் திருமணம் முடிந்திருந்தது..ஆகவே மனித உறவினால் பிறந்த சாதாரண மனிதர் தான் இயேசு என மக்கள் நினைக்க கூடும்.ஆகவே மனித உறவினால் இயேசு உருவாகவில்லை என்பதை எல்லா மக்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே ''இயேசுவை பெற்றெடுக்கும் வரையில் மரியா யோசேப்பை அறியவில்லை'' என்று அழுத்தம் கொடுக்கபட்டுள்ளது.
.இந்த இறைவசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது இயேசு மனித உறவினால் உருவானவர் அல்ல மாறாக தூய ஆவியினால் உருவானவர் ஆகவே இயேசு சாதாரண மனிதரல்ல கடவுளின் மகன் என்பது தான்.,
ஆனால்
எந்த வார்த்தையை வைத்து யாரை குறைகூறலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு வேதாகமத்தை வாசிக்கும் எமது பிரிவினை சபை நண்பர்,இந்த வசனத்தை மேற்கோள் காட்டி ஆகவே இயேசுவை பெற்றெடுத்த பிறகு அன்னைமரியா யோசேப்பை அறிந்தார் என்ற வேதாகமத்தில் எங்கேயும் சொல்லப்படாத தமது சொந்த கருத்தை தன் சுய உணர்வோடும் அறிவோடும் புகுத்தி, நற்செய்தியாளர் என்ன நோக்கத்திற்காக அந்த இறைவசனத்தை அழுத்தம் கொடுத்து எழுதினாரோ அதை விட்டுவிட்டு அன்னையை எப்படியாவது பழிக்க வேண்டும் என்ற தங்களது கெட்ட எண்ணத்தினால் அந்த இறைவசனத்திற்கு தவறான அர்த்தம் தேடி போதிக்கின்றார்.
வேதாகம வசனத்தில் தமது சொந்த கருத்துக்களை கூட்டி சேர்த்து அதன்படி போதிப்பது கடவுள் முன்னிலையில் மிகப்பெரிய குற்றம்.இதை இறைவன் கடுமையாக கண்டிக்கிறார்
''திருவெளிப்பாடு 22:18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்; இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.''
வேதாகமத்தில் இருக்கிற வசனங்களோடு தனது சொந்த சிந்தனைகளையும் யூகங்களையும் கற்பனைகளையும் கூட்டிச் சேர்த்து வேதாகமத்தில் இல்லாததை இருப்பதாக காட்டி அதை அப்படியே போதிக்கும் முன்பு எனது பிரிவினை சபை நண்பர் எச்சரிக்கையாய் இருப்பாராக!
தனது யூகங்களையும் கற்பனைகளையும் வேதாகமத்தில் கூட்டி சேர்க்கின்ற ஓர் ஆபத்தான நிலையில் எனது பிரிவினை சபை நண்பர் இருக்கிறார்.
அவர் உண்மையை அறிந்து கொள்ள முயல்வாராக!
பாகம்:5
♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫.♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫♫ ♫ ♫ ♫
இயேசுவின் சகோதர சகோதிரிகள்:-
பிரிவினை சகோதரர்கள் மேற்கோள் காட்டுகின்ற இயேசுவின் சகோதரர்கள் பற்றிய இறைவசனங்களை இனி பார்ப்போம்.
''யோவான் 7:3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, "நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்''
''மத்தேயு47 ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார்''
.
''மாற்கு31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. "அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்" என்று அவரிடம் சொன்னார்கள்''
''லூக்காஸ்19 இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.
20 "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள்''
மேற்கண்ட இறைவசனங்களில் இயேசுவுக்கு சகோதர சகோதிரிகள் இருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால் இவர்கள் அன்னைமரியாவின் பிள்ளைகள் என்று வேதாகமத்தில் எங்குமே சொல்லப்படவில்லை
எமது பிரிவினை சபை நண்பர்கள்,இந்த வசனங்களில் கூறப்படும் இயேசுவின் சகோதர்கள் அனைவருமே,அன்னைமரியாவிற்கு பிறந்தவர்கள் என அவர்களாகவே யூகம் செய்து அதன்படி போதிக்க தொடங்கி விட்டார்கள். .
இந்த வசனங்களில் கூறப்படுபவர்கள், இயேசுவுக்கு சகோதரர்,சகோதிரிகளே, .
இயேசுவுக்கு சகோதர சகோதிரி உறவு பல முறைகளில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எமது பிரிவினை நண்பர்களுக்கு அன்னைமரியாவை தாக்குவதும் இழிவுபடுத்துவதும் மட்டுமே குறிகோளாக இருப்பதால் இந்த சகோதர சகோதிரி உறவு,இயேசுவுக்கு ஏற்படுவதற்குரிய மற்ற எல்லா வழிகளையும் வாய்ப்புகளையும் குறித்து சிந்திக்காமல் இயேசுவின் சகோதர சகோதிரிகள் என கூறப்படுவதெல்லாம் அன்னைமரியாவின் குழந்தைகள் தான் என அறிதியிட்டு கூறி,பரிசுத்த ஆவியின் மணவாட்டியான அன்னைமரியாளை இழிவு படுத்துகிறார்கள்.
இவ்வாறு அன்னைமரியாவுக்கு எதிராக செயல்படுகின்றவர்களுக்கு தொடக்கநூல் 3:15-ல் கூறப்படும் பெண்ணான, அன்னைமரியாவின் பகைவன் சாத்தான், மிகுந்த ஊக்கத்தையும் பலத்தையும் கொடுத்து கொண்டிருக்கிறான்.
------------------
இயேசுவின் சகோதர்களின் பெயர்கள்:-
''மத்தேயு 13:55 இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள்.''
''மாற்கு6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்''
இங்கே யோசே என்ற பெயர் யோசேப்பு[JOSEPH] என்று ஆங்கில பொது மொழி பெயர்ப்பில் GOOD NEWS BIBIL]காணப்படுகிறது.
எனவே மேற்கண்ட வசனங்கள் மூலமாக இயேசுவின் சகோதரர்களின் பெயர்கள் யாக்கோபு,யோசேப்பு,யூதா,சீமோன் என்று தெரியவருகிறது.
யாருடைய மக்கள் இவர்கள் ?
எவ்வாறு இவர்கள், இயேசுவின் சகோதர்கள் ?
விவிலிய ஆதாரத்தோடு அடுத்தபாகத்தில் அறியலாம்.
பாகம்:6
வேதாகமம் குறிப்பிடுகின்ற இயேசுவின் சகோதரர்கள் யார்? அவர்கள் யாருடைய மக்கள் ?
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
சில பெண்மணிகள் இயேசு எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த நகரங்கள்,கிராமங்களிலெல்லாம் இயேசுவின் பனிரெண்டு சீடர்களோடு சேர்ந்து அவரைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.
''லூக்காஸ் 8:1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.
2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்
3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்''
இங்கே மகதலாமரியா,யோவன்னா,சூசன்னாஇவர்களுடன் பலப்பெண்களும் பனிரெண்டு சீடர்களுடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்து அவர் சென்ற இடமெல்லாம் அவரைத் பின்தொடர்ந்து சென்றதை பார்க்கிறோம்.
இவர்களில் பல பெண்கள் ஆண்டவரின் கொல்கொதா சிலுவைப்பலி வரை அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்
''மத்தேயு 27:55 கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
56 அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்''
இங்கே கொல்கொதாவில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அங்கே மகதலாமரியாவுடன் யாக்கோபு,யோசேப்பு என்பவருடைய தாயான இன்னொரு மரியாவும் நிற்பதை பார்க்கிறோம்.
இதே நிகழ்வை யோவானும் தனது நற்செய்தியில் விளக்கியுள்ளார்
அங்கேயும் மகதலா மரியாவுடன் இன்னொரு மரியாவைக் காண்கிறோம்.ஆனால் யோவான் இந்த மரியாவை தன் பிள்ளைகளான யாக்கோபு,யோசேப்பு இவர்களின் தாயாக வெளிப்படுத்துவதற்கு பதில் அவளது சகோதிரி வழியாகவும் கணவர் வழியாகவும் வெளிபடுத்தபடுவதைக் காண்கிறோம்
.
இந்த இன்னொரு மரியா அன்னைமரியின் சகோதிரி ஆவார்.
''யோவான்19:25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்''
இவ்வாறு அன்னைமரிக்கு ஒரு சகோதிரி இருப்பதையும் அவளது பெயரும் மரியா என்பதையும் இந்த வசனங்களில் நாம் காண்கிறோம்.
இந்த மரியா குளோப்பாவின் மனைவியும் யாக்கோபு,யோசேப்பு என்பவர்களின் தாயுமாக இருக்கிறாள்.
எனவே இந்த யாக்கோபும்,யோசேப்பும் இயேசுவுக்கு சகோதரர்களாகிறார்கள்.
பாகம்:7-[இறுதிபாகம்]
† † † † † † † † † † † † † † † † † † † † † † † †
இயேசு சிலுவை மரத்தடியில். தன் தாயைத் தமது அன்பு சீடரிடம் ஒப்படைக்க,அவரும் அவளை தன் இல்லத்தில் ஏற்றுகொள்கிறார்.
''யோவான்19:25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
26 இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.
27 பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்''
அன்னைமரியாவிற்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் இயேசு அவரை தமது சீடரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.தனது மற்ற குழந்தைகளுடன் அவள் வாழ்ந்திருக்க முடியும். அவளுடைய மற்ற பிள்ளைகள் அவளை பாதுகாத்து பராமரித்து இருப்பர்..
தங்கள் தாயைப் பராமரித்து பாதுகாப்பது பிள்ளைகளின் உரிமையாக இருக்கும்போது,அந்த அவர்களின் உரிமையை இயேசு கண்டிப்பாக மீறியிருக்க மாட்டார்.
ஆனால் இயேசு அன்னைமரியின் ஏக மகனாக இருப்பதால்தான் அவளைப் தனது மரணத்திற்கு பிறகு யாருடைய பராமரிப்பும் இன்றி தன்னந்தனியாக விட்டுவிட விரும்பவில்லை எனவே தான் சிலுவை மரத்தடியில் தனது தாயை தனது அன்பு சீடரின் பராமரிப்பில் ஒப்படைக்கின்ற பொறுப்பை அவர் செயல்படுத்துகின்றார்.
சீடரும் அவளைத் தன் இல்லத்தில் ஏற்றுகொள்ள,அவளும் அந்த சீடருடன் அவரது இல்லத்திற்கு சென்று அங்கே வசிக்கின்றாள்.இவ்வாறு தேவனின் தாய் ஒரு மனிதனை தன் மகனாக தத்தெடுத்து கொள்கிறாள்.
இந்த நிகழ்வானது தனது தாயை இவ்வுலகின் அனைத்து மக்களின் தாயாகவும்,இவ்வுலக மக்களனைவரையும் அன்னைமரியாவிற்கு பிள்ளைகளாகவும் இயேசு ஆண்டவர் ஒப்படைக்கும் ஓர் அடையாள நிகழ்வாகவும் அமைகிறது.
இறுதியாக
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய எல்லாம் வல்ல கடவுள் தனது தூதர் வழியாக அன்னைமரியாவிற்கு ஒரு வாக்கு கொடுக்கிறார்.
‘’லூக்காஸ் 1:31 இதோ கருவுற்று ‘ஒரு’ மகனைப் பெறுவீர்:அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்’’
என்பதே அவ்வாக்கு.
அன்னைமரியாள் பல பிள்ளைகள் பெற்றார் என சொல்பவன் தந்தை கடவுளின் உயிருள்ள வார்த்தைக்கு எதிரான ,தந்தை கடவுளின் திட்டத்திற்கு எதிரான ஆனால் அன்னைமரியாளின் பகைவனான சாத்தானின் நயவஞ்சக திட்டத்திற்கு உடன்பட்டவன் ஆகிறான்.
ஏனெனில் அன்னைமரியாள் கருவுற்று பெறுவது ஒரே ஒரு மகனை மட்டுமே என்பதே தந்தை கடவுளின் வாக்கு.
தந்தை கடவுளின் வாக்கின்படி அன்னைமரியா கருவுற்று பெற்றது இயேசுவை மட்டுமே ஆனால் அவள் கருவுற்று பெறாத பிள்ளைகள் , என்னையும் உங்களையும் சேர்த்து கோடிக்கணக்கானோர் உண்டு.
ஆகவே அன்னைமரியாயின் பிள்ளைகளான நாம்
லூக்காஸ் 1:48-ல் ‘’இது முதல் எல்லா தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்’’
என்று அன்னை தீர்க்கதரிசனமாக உரைத்தபடி அவளுக்கு கொடுக்க வேண்டிய மகிமையை அவளுக்கு கொடுப்போம்
Article Source : Church of Jesus Facebook Page
Picture source : internet
பாகம்:1
லூக்காஸ் 1:26-ல் விண்ணககடவுள்,அதிதூதர் கபிரியேலைத் தமது தூதராக மரியா என்ற கன்னிகையிடம் அனுப்புகிறார்.
லூக்காஸ் 1:28-ல் வானதூதர் மரியாவுக்குத் தோன்றி ‘’அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’’ என்றார்.
சில முக்கிய கையெழுத்துப் பிரதிகளில் ‘’பெண்களுக்குள் நீர் ஆசீபெற்றவர்’’என்ற சொற்றொடரும் இவ்வசனத்தில் சேர்ந்து காணப்படுகிறது,
வுல்காத்தா என்னும் இலத்தீன் மொழி பெயர்ப்பில் ‘’அருள் நிறைந்தவரே வாழ்க’’ என்று காணப்படுகிறது.
பிரிவினை சபையினரின் வேதாகமத்தில்
‘’கிருபை பெற்றவளே வாழ்க கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்,ஸ்திரிகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்’’என்று காணப்படுகிறது.
இத்தகைய வாழ்த்துக்குப் பிறகு வானதூதர் தாம் கொண்டு வந்த செய்தியை கொடுக்கிறார்.
''லூக்காஸ் 1:31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.
35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்''
ஆண்டவரின் இந்த திட்டத்திற்கு மரியா அடிபணிந்து அதை ஏற்றுக் கொண்டாள்.அவ்வாறு அவள் கடவுளின் ஏக குமாரனைத் தன் உதரத்தில் தாங்கி இயேசுவின் தாயாகிறாள்.அதாவது கடவுளின் தாயாகிறாள்.
பாருங்கள்!
தமது அதிதூதர் கபிரியேலையே அனுப்பி எல்லாம் வல்ல கடவுள் அன்னைமரிக்கு வந்தனம் செலுத்துகின்றார்.
அவள் எல்லாம் வல்ல கடவுளின் மகனுக்கே தாயாகும் பாக்கியம் பெறுகின்றாள்.
அத்தகைய பாக்கியம் பெற்ற அன்னைமரியாள், பரிசுத்த ஆவியினால் நிழலிடப்பட்ட பின்பு,
அவளது ஆவி பரிசுத்த ஆவியால் அக்களிப்புற்று கடவுளால் களிகூர்கின்றது.
''லூக்காஸ் 1:48...இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்''
இந்த வாக்குகளை தூய ஆவியாரே கூறுகின்றார்.ஏனெனில் அந்நேரம் அன்னைமரியாள் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ள பட்டிருந்தாள்.
இப்படிப்பட்ட அன்னைமரியாளை ‘’பேறுபெற்றவள்’’ என்று தலைமுறை தலைமுறையாகப் போற்றவேண்டிய கடமையில் இருக்கிறோம்.
இந்நிலையில் எந்த மனிதனாவது அன்னைமரியாவை பழிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயமாக அவரில் அன்னைமரியாவின் பகைவனான[தொடக்கநூல் 3:15]சாத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
பாகம்:2
நான் கன்னி ஆயிற்றே
-----------------------------------------------------------------------------------
லூக்காஸ் 1:31-ல் கபிரியேல் தூதர் மரியாவிடம்
‘’இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்;அவருக்கு இயேசு என்றும் பெயரிடுவீர்’’
என்று சொல்லிய போது அன்னைமரி அவரிடம்
‘‘லூக்காஸ் 1:34 இது எப்படி நிகழும்?நான் கன்னி ஆயிற்றே!’’என்றார்.
மரியா இந்த கேள்வியை தூதரிடம் எழுப்புகின்ற போது,ஏற்கனவே அவருக்கு திருமண ஒப்பந்தம் நடந்து முடிந்திருந்தது[லூக்காஸ் 1:27]
எனவே நீர் கருவுற்று ஒரு மகனை பெறுவீர் என்று வானதூதர் சொன்ன போது சாதாரண நிலையில் அது நிகழாது என்று சிந்திக்கவோ அதற்கு எதிராக இது எப்படி நிகழும் என்று கேள்வி எழுப்பவோ ஒரு வாய்ப்பும் இல்லை.
சாதாரண மனிதர்களான நமக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இதே செய்தியை நம்மிடம் சொல்லியிருந்தால் நாம் நிச்சயமாக அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைய மாட்டோம் ஏனெனில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது,இனி திருமணம்தான் ,அடுத்து எனக்கு பிறக்க போகும் குழந்தையை பற்றி தான் தூதர் முன்னுரைக்கிறார் என அந்த செய்தியை சாதாரணமாகவே ஏற்று கொள்வோம்.
ஆனால் திருமண நிச்சயம் முடிந்த நிலையில் அன்னைமரியாள் அதிர்ச்சியும் பயமும் கலந்த நிலையில்
‘’இது எப்படி நிகழும்?நான் கன்னி ஆயிற்றே!’’
என அன்னை கத்துகிறார் எனத்தான் சொல்ல வேண்டும்.
இந்த கேள்வி இந்த நிலையில் ஒரு அசாதாரணமான .கேள்வி என்று தெரிகிறதல்லவா!
ஆனால் தன் உள்ளத்தில் தான் எக்காலத்திற்கும் கன்னியாக இருக்க போகிறவள் என்ற அசாதாரணமான ஒரு தீர்மானம் இருக்கிறபடியால் தான் இந்த அசாதாரண கேள்வியை அவள் கேட்கிறாள்.
‘’நான் கன்னி ஆயிற்றே’’ என்று சொல்வதில் அந்த அசாதாரணம் புதைத்து கிடக்கிறது.
விடுதலைப்பயணம் 3:14ஐ இந்நேரம் வாசிப்போம்
‘’கடவுள் மோசேயை நோக்கி ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல் என்றார்’’
‘’இருக்கின்றவர் நானே’’ என்பதன் அர்த்தம் என்ன?
எக்காலத்தும் இருக்கின்றவர் நானே என்பது தானே.
அதேபோல அன்னைமரியாள் தன்னை பற்றி ‘’நான் கன்னி ஆயிற்றே’’ என்று சொல்லும்போது தான் எக்காலத்துக்கும் கன்னி என்பதும் திருமணம் முடிந்தாலும் குழந்தையை பெற்று எடுக்க என்னால் முடியாதே என்றுதான் அதிர்ச்சியுடன் இக்கேள்வியை எழுப்புகிறார்.
இதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகின்ற ஒரு உண்மை என்னவென்றால் சூசையப்பரும் அன்னைமரியாளும் திருமணம் முடிந்தாலும் கன்னிமை விரதம் காக்கும்படித் தீர்மானித்து இருந்தனர் என்பதே .
மேலும் இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையின் உயிரோட்டமுள்ள திருமரபின் படியும்,
விவிலியத்தில் இணைக்கப்படாத ஒரு சில திருமறைகளிலும், இன்னும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் உள்ள சில கூற்றுக்களின் படியும் பார்க்கும்போது இந்த உண்மையை தெளிவாக நாம் அறிந்துகொள்ளலாம்.
இந்த குறிப்புகளின் படி அன்னைமரியாளை போன்றே அன்னைமரியாளின் தாயிடமும் வானதூதர் தோன்றி தூது உரைத்தபடி புனித குழந்தையாக பிறந்தவள் தான் அன்னைமரியாள்.
குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் இறைத்திட்டபடி ஆலயத்தில் கொண்டு சென்று கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கிறார்கள்
அன்னைமரியாள் தெய்வகுழந்தையாக வளர்கிறார். .வானதூதர் அவருக்கு உணவு கொடுக்கும் அற்புத நிகழ்வும் அவரது வாழ்வில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது
அன்றைய ஆணாதிக்க சமூகத்தின் கொடுமையிலிருந்து அன்னைமரியாளை பாதுகாக்கவே ,அன்னைமரியாளை விட மிக அதிக வயதுள்ள [அதாவது தந்தையும் மகளும் போன்ற வயது வித்தியாசம்] சூசையப்பரோடு இறைதிட்டபடி திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள்.
அதன் பிறகு நடந்தவைகளை தான் நாம் வேதாகம குறிப்புகளிலிருந்து பார்த்தோம்.இன்னும் அறிவோம்
பாகம்:3
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
‘’மத்தேயு 1:19,அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்,அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிட்டார்’’
பாவியாயிருந்தாலும் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க கூடாது என்ற நல்ல எண்ணம் கொண்ட நீதிமானான சூசையப்பர்,
தூய ஆவியார் நிழலிடுதலால் கடவுளையே பெற்றெடுக்கும் மாபெரும் அதிசயமான ,உலக சரித்திரத்தையே புரட்டி போடும் அந்த இறைமகனின் பிறப்பு,
அன்னைமரியாள் வழியாக நடக்க போகிறது என்பதை கடவுளின் தூதர் மூலமாக எப்போது அறிந்து கொள்கிறாரோ,
அதற்கு பிறகு அன்னைமரியாளை புனித பெண்ணாக தான் அனுகியிருப்பார்.கடவுள் குடியிருக்கும் கோவிலாகதான் பாவித்திருப்பார்.
.மிகுந்த மரியாதையோடும் பயபக்தியோடும் கடவுளின் தாயான அவருக்கு பணிவுடை செய்திருப்பார்.
நமது உறவுகளில் யாராவது குருக்களாகவோ,கன்னியராகவோ ஆயராகவோ இருந்தால் கூட நாம் அவர்களிடம் சாதாரண உறவு நிலையை கடந்து அவர்களின் புனித பணியை முன்னிட்டு இறை பணிவோடு பழகுவோம் அல்லவா ?
அப்படியிருக்கும் போது தூய ஆவியாரால் நிழலிடபட்டு,கடவுளின் திருமகனையே உதரத்தில் தாங்கி, பெற்றெடுத்த தூய ஆவியாரின் மணவாட்டியான அன்னைமரியாளிடம் எத்தகைய பணிவோடு நீதிமானான சூசையப்பர் பழகியிருப்பார் என்பதை எண்ணிப்பாருங்கள்...
அங்கே சாதரண மனித உறவுக்கு இடமில்லை மாறாக இயேசுகிறிஸ்துவோடு இணைந்து தந்தை இறைவன்,தூய ஆவியார் ஆகிய மூவொரு இறைவனின் பிரசன்னத்தில் அன்னைமரியாளும் சூசையப்பரும் அந்த தெய்வீக பேரின்பத்தை அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்திருப்பார்கள்
மேலும் வேதம் சொல்கிறது
‘’எசேக்கியல் 44:2 ஆண்டவர் என்னிடம் கூறியது,இந்த வாயில் மூடியே இருக்கவேண்டும்.அது திறக்கப்படக்கூடாது.யாரும் இதன் வழியாய் நுழையக்கூடாது.ஏனெனில் இஸ்ரெயலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழியாக நுழைந்தார்;இது மூடியே இருக்கவேண்டும்’’
யாராவது ஒருவர் இயேசுகிறிஸ்துவிற்கு பிறகு அன்னைமரியாளுக்கு வேறு பிள்ளைகளும் உண்டு என சொல்வானகில் அவன் அன்னையை அல்ல இயேசுவையே அவமதிக்கிறான்.
அவன் தன்னையும் அறியாமல் சாத்தானோடு சேர்ந்து இயேசு ஆண்டவரல்ல என அறிக்கையிடுகிறான்.
ஏனென்றால் இயேசுகிறிஸ்து ஆண்டவர் தான் என்றால், ஆண்டவாகிய கடவுள் இம்மண்ணில் வந்த வாசலான அன்னைமரியாள் வழியாக இன்னொரு உயிர் இவ்வுலகினில் நிச்சயமாக வரவே முடியாது.
ஒருவேளை அவ்வாறு அன்னைமரியாளுக்கு இயேசுவுக்கு பிறகு வேறு பிள்ளைகள் பிறந்திருந்தால் இயேசுகிறிஸ்து இறைவனாக இருக்கமுடியாது.
ஆகவே
அன்னைமரியாள் கன்னிகை என்று நாம் அறிக்கையிடும் போதெல்லாம் அன்னையை அல்ல,இயேசு கிறிஸ்துவை தான் மகிமை படுத்துகிறோம்.
இயேசுவே ஆண்டவர் என்று உலகிற்கு அறிவிக்கிறோம்
Part 4
’மத்தேயு 1:25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்''
'ஆண்டவரின் தாய் எக்காலத்தும் கன்னியானவள்'' என்ற கத்தோலிக்க திருச்சபையின் போதனையை குறைகாணும் கெட்டநோக்கில்
இந்த இறைவசனத்தில் ''வரை'' என்று எதற்காக அழுத்தம் கொடுத்து சொல்ல பட்டிருக்கிறது?
என்று திருச்சபையிலிருந்து பிரிந்துபோன சபையினர்
கேள்விகள் எழுப்புகின்றனர்.
எதற்காக இந்த இறைவசனத்தில் ''தம் மகனை பெற்றெடுக்கும் வரை'' என அழுத்தம் கொடுக்க பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
இயேசு மனித உறவின் காரணமாக பிறந்தவர் அல்லர் மாறாக தூய ஆவியின் நிழலிடுதலால் பிறந்தவர் ஆகவே இயேசு நம்மை போன்ற சாதாரண பிறவியல்ல மாறாக இறைவனின் திருமகன் ,என்பதை சொல்லவே மரியா தம் மகனை பெற்றெடுக்கும் வரை யோசேப்புடன் கூடி வாழவில்லை என அழுத்தம் கொடுத்து நற்செய்தியாளர் சொல்கிறார்.
ஏனெனில் இயேசு பிறக்கும்போது அன்னைமரியாவிற்கும் புனித சூசையப்பருக்கும் திருமணம் முடிந்திருந்தது..ஆகவே மனித உறவினால் பிறந்த சாதாரண மனிதர் தான் இயேசு என மக்கள் நினைக்க கூடும்.ஆகவே மனித உறவினால் இயேசு உருவாகவில்லை என்பதை எல்லா மக்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே ''இயேசுவை பெற்றெடுக்கும் வரையில் மரியா யோசேப்பை அறியவில்லை'' என்று அழுத்தம் கொடுக்கபட்டுள்ளது.
.இந்த இறைவசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது இயேசு மனித உறவினால் உருவானவர் அல்ல மாறாக தூய ஆவியினால் உருவானவர் ஆகவே இயேசு சாதாரண மனிதரல்ல கடவுளின் மகன் என்பது தான்.,
ஆனால்
எந்த வார்த்தையை வைத்து யாரை குறைகூறலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு வேதாகமத்தை வாசிக்கும் எமது பிரிவினை சபை நண்பர்,இந்த வசனத்தை மேற்கோள் காட்டி ஆகவே இயேசுவை பெற்றெடுத்த பிறகு அன்னைமரியா யோசேப்பை அறிந்தார் என்ற வேதாகமத்தில் எங்கேயும் சொல்லப்படாத தமது சொந்த கருத்தை தன் சுய உணர்வோடும் அறிவோடும் புகுத்தி, நற்செய்தியாளர் என்ன நோக்கத்திற்காக அந்த இறைவசனத்தை அழுத்தம் கொடுத்து எழுதினாரோ அதை விட்டுவிட்டு அன்னையை எப்படியாவது பழிக்க வேண்டும் என்ற தங்களது கெட்ட எண்ணத்தினால் அந்த இறைவசனத்திற்கு தவறான அர்த்தம் தேடி போதிக்கின்றார்.
வேதாகம வசனத்தில் தமது சொந்த கருத்துக்களை கூட்டி சேர்த்து அதன்படி போதிப்பது கடவுள் முன்னிலையில் மிகப்பெரிய குற்றம்.இதை இறைவன் கடுமையாக கண்டிக்கிறார்
''திருவெளிப்பாடு 22:18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்; இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.''
வேதாகமத்தில் இருக்கிற வசனங்களோடு தனது சொந்த சிந்தனைகளையும் யூகங்களையும் கற்பனைகளையும் கூட்டிச் சேர்த்து வேதாகமத்தில் இல்லாததை இருப்பதாக காட்டி அதை அப்படியே போதிக்கும் முன்பு எனது பிரிவினை சபை நண்பர் எச்சரிக்கையாய் இருப்பாராக!
தனது யூகங்களையும் கற்பனைகளையும் வேதாகமத்தில் கூட்டி சேர்க்கின்ற ஓர் ஆபத்தான நிலையில் எனது பிரிவினை சபை நண்பர் இருக்கிறார்.
அவர் உண்மையை அறிந்து கொள்ள முயல்வாராக!
பாகம்:5
♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫.♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫♫ ♫ ♫ ♫
இயேசுவின் சகோதர சகோதிரிகள்:-
பிரிவினை சகோதரர்கள் மேற்கோள் காட்டுகின்ற இயேசுவின் சகோதரர்கள் பற்றிய இறைவசனங்களை இனி பார்ப்போம்.
''யோவான் 7:3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, "நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்''
''மத்தேயு47 ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார்''
.
''மாற்கு31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. "அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்" என்று அவரிடம் சொன்னார்கள்''
''லூக்காஸ்19 இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.
20 "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள்''
மேற்கண்ட இறைவசனங்களில் இயேசுவுக்கு சகோதர சகோதிரிகள் இருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால் இவர்கள் அன்னைமரியாவின் பிள்ளைகள் என்று வேதாகமத்தில் எங்குமே சொல்லப்படவில்லை
எமது பிரிவினை சபை நண்பர்கள்,இந்த வசனங்களில் கூறப்படும் இயேசுவின் சகோதர்கள் அனைவருமே,அன்னைமரியாவிற்கு பிறந்தவர்கள் என அவர்களாகவே யூகம் செய்து அதன்படி போதிக்க தொடங்கி விட்டார்கள். .
இந்த வசனங்களில் கூறப்படுபவர்கள், இயேசுவுக்கு சகோதரர்,சகோதிரிகளே, .
இயேசுவுக்கு சகோதர சகோதிரி உறவு பல முறைகளில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எமது பிரிவினை நண்பர்களுக்கு அன்னைமரியாவை தாக்குவதும் இழிவுபடுத்துவதும் மட்டுமே குறிகோளாக இருப்பதால் இந்த சகோதர சகோதிரி உறவு,இயேசுவுக்கு ஏற்படுவதற்குரிய மற்ற எல்லா வழிகளையும் வாய்ப்புகளையும் குறித்து சிந்திக்காமல் இயேசுவின் சகோதர சகோதிரிகள் என கூறப்படுவதெல்லாம் அன்னைமரியாவின் குழந்தைகள் தான் என அறிதியிட்டு கூறி,பரிசுத்த ஆவியின் மணவாட்டியான அன்னைமரியாளை இழிவு படுத்துகிறார்கள்.
இவ்வாறு அன்னைமரியாவுக்கு எதிராக செயல்படுகின்றவர்களுக்கு தொடக்கநூல் 3:15-ல் கூறப்படும் பெண்ணான, அன்னைமரியாவின் பகைவன் சாத்தான், மிகுந்த ஊக்கத்தையும் பலத்தையும் கொடுத்து கொண்டிருக்கிறான்.
------------------
இயேசுவின் சகோதர்களின் பெயர்கள்:-
''மத்தேயு 13:55 இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள்.''
''மாற்கு6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்''
இங்கே யோசே என்ற பெயர் யோசேப்பு[JOSEPH] என்று ஆங்கில பொது மொழி பெயர்ப்பில் GOOD NEWS BIBIL]காணப்படுகிறது.
எனவே மேற்கண்ட வசனங்கள் மூலமாக இயேசுவின் சகோதரர்களின் பெயர்கள் யாக்கோபு,யோசேப்பு,யூதா,சீமோன் என்று தெரியவருகிறது.
யாருடைய மக்கள் இவர்கள் ?
எவ்வாறு இவர்கள், இயேசுவின் சகோதர்கள் ?
விவிலிய ஆதாரத்தோடு அடுத்தபாகத்தில் அறியலாம்.
பாகம்:6
வேதாகமம் குறிப்பிடுகின்ற இயேசுவின் சகோதரர்கள் யார்? அவர்கள் யாருடைய மக்கள் ?
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
சில பெண்மணிகள் இயேசு எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த நகரங்கள்,கிராமங்களிலெல்லாம் இயேசுவின் பனிரெண்டு சீடர்களோடு சேர்ந்து அவரைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.
''லூக்காஸ் 8:1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.
2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்
3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்''
இங்கே மகதலாமரியா,யோவன்னா,சூசன்னாஇவர்களுடன் பலப்பெண்களும் பனிரெண்டு சீடர்களுடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்து அவர் சென்ற இடமெல்லாம் அவரைத் பின்தொடர்ந்து சென்றதை பார்க்கிறோம்.
இவர்களில் பல பெண்கள் ஆண்டவரின் கொல்கொதா சிலுவைப்பலி வரை அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்
''மத்தேயு 27:55 கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
56 அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்''
இங்கே கொல்கொதாவில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அங்கே மகதலாமரியாவுடன் யாக்கோபு,யோசேப்பு என்பவருடைய தாயான இன்னொரு மரியாவும் நிற்பதை பார்க்கிறோம்.
இதே நிகழ்வை யோவானும் தனது நற்செய்தியில் விளக்கியுள்ளார்
அங்கேயும் மகதலா மரியாவுடன் இன்னொரு மரியாவைக் காண்கிறோம்.ஆனால் யோவான் இந்த மரியாவை தன் பிள்ளைகளான யாக்கோபு,யோசேப்பு இவர்களின் தாயாக வெளிப்படுத்துவதற்கு பதில் அவளது சகோதிரி வழியாகவும் கணவர் வழியாகவும் வெளிபடுத்தபடுவதைக் காண்கிறோம்
.
இந்த இன்னொரு மரியா அன்னைமரியின் சகோதிரி ஆவார்.
''யோவான்19:25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்''
இவ்வாறு அன்னைமரிக்கு ஒரு சகோதிரி இருப்பதையும் அவளது பெயரும் மரியா என்பதையும் இந்த வசனங்களில் நாம் காண்கிறோம்.
இந்த மரியா குளோப்பாவின் மனைவியும் யாக்கோபு,யோசேப்பு என்பவர்களின் தாயுமாக இருக்கிறாள்.
எனவே இந்த யாக்கோபும்,யோசேப்பும் இயேசுவுக்கு சகோதரர்களாகிறார்கள்.
பாகம்:7-[இறுதிபாகம்]
† † † † † † † † † † † † † † † † † † † † † † † †
இயேசு சிலுவை மரத்தடியில். தன் தாயைத் தமது அன்பு சீடரிடம் ஒப்படைக்க,அவரும் அவளை தன் இல்லத்தில் ஏற்றுகொள்கிறார்.
''யோவான்19:25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
26 இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.
27 பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்''
அன்னைமரியாவிற்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் இயேசு அவரை தமது சீடரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.தனது மற்ற குழந்தைகளுடன் அவள் வாழ்ந்திருக்க முடியும். அவளுடைய மற்ற பிள்ளைகள் அவளை பாதுகாத்து பராமரித்து இருப்பர்..
தங்கள் தாயைப் பராமரித்து பாதுகாப்பது பிள்ளைகளின் உரிமையாக இருக்கும்போது,அந்த அவர்களின் உரிமையை இயேசு கண்டிப்பாக மீறியிருக்க மாட்டார்.
ஆனால் இயேசு அன்னைமரியின் ஏக மகனாக இருப்பதால்தான் அவளைப் தனது மரணத்திற்கு பிறகு யாருடைய பராமரிப்பும் இன்றி தன்னந்தனியாக விட்டுவிட விரும்பவில்லை எனவே தான் சிலுவை மரத்தடியில் தனது தாயை தனது அன்பு சீடரின் பராமரிப்பில் ஒப்படைக்கின்ற பொறுப்பை அவர் செயல்படுத்துகின்றார்.
சீடரும் அவளைத் தன் இல்லத்தில் ஏற்றுகொள்ள,அவளும் அந்த சீடருடன் அவரது இல்லத்திற்கு சென்று அங்கே வசிக்கின்றாள்.இவ்வாறு தேவனின் தாய் ஒரு மனிதனை தன் மகனாக தத்தெடுத்து கொள்கிறாள்.
இந்த நிகழ்வானது தனது தாயை இவ்வுலகின் அனைத்து மக்களின் தாயாகவும்,இவ்வுலக மக்களனைவரையும் அன்னைமரியாவிற்கு பிள்ளைகளாகவும் இயேசு ஆண்டவர் ஒப்படைக்கும் ஓர் அடையாள நிகழ்வாகவும் அமைகிறது.
இறுதியாக
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய எல்லாம் வல்ல கடவுள் தனது தூதர் வழியாக அன்னைமரியாவிற்கு ஒரு வாக்கு கொடுக்கிறார்.
‘’லூக்காஸ் 1:31 இதோ கருவுற்று ‘ஒரு’ மகனைப் பெறுவீர்:அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்’’
என்பதே அவ்வாக்கு.
அன்னைமரியாள் பல பிள்ளைகள் பெற்றார் என சொல்பவன் தந்தை கடவுளின் உயிருள்ள வார்த்தைக்கு எதிரான ,தந்தை கடவுளின் திட்டத்திற்கு எதிரான ஆனால் அன்னைமரியாளின் பகைவனான சாத்தானின் நயவஞ்சக திட்டத்திற்கு உடன்பட்டவன் ஆகிறான்.
ஏனெனில் அன்னைமரியாள் கருவுற்று பெறுவது ஒரே ஒரு மகனை மட்டுமே என்பதே தந்தை கடவுளின் வாக்கு.
தந்தை கடவுளின் வாக்கின்படி அன்னைமரியா கருவுற்று பெற்றது இயேசுவை மட்டுமே ஆனால் அவள் கருவுற்று பெறாத பிள்ளைகள் , என்னையும் உங்களையும் சேர்த்து கோடிக்கணக்கானோர் உண்டு.
ஆகவே அன்னைமரியாயின் பிள்ளைகளான நாம்
லூக்காஸ் 1:48-ல் ‘’இது முதல் எல்லா தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்’’
என்று அன்னை தீர்க்கதரிசனமாக உரைத்தபடி அவளுக்கு கொடுக்க வேண்டிய மகிமையை அவளுக்கு கொடுப்போம்