புனித சூசையப்பர்
1. திருக்குடும்பத்தின் பாதுகாவலர் ;
2. குடும்பங்களின் பாதுகாவலர் ;
3. நன்மரணத்திற்குப் பாதுகாவலர் ; ( ஏனெனில் இவரது மரணத்தின் போது நம் அன்னையும் , நமது ஆண்டவரும் இவருக்கு அருகில் இருந்தனர் )
4. உழைப்பாளர்களின் பாதுகாவலர் ; ( திருக்குடும்பத்தைக் காக்க அயராது உழைத்தவர் ; எனவே எல்லா உழைப்பாளர்களுக்கும் பாதுகாவலர் )
5. பொறியியலாளர்களின் , பொறியியல் வேலை செய்பவர்களின் பாதுகாவலர்
இறை அனுபவம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் புனித சூசையப்பரைப் போல இருக்க வேண்டும்.
எவ்வாறெனில் ஆண்டவரையும் நம் அன்னையையும் அருகே காண வேண்டும் ; அவர்களோடு இருக்க வேண்டும் ; அவர்களுக்காக உழைக்க வேண்டும் ; அவர்களது மகிழ்ச்சியைத் தேட வேண்டும் ; அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் ;கேள்விகள் இன்றி ஆண்டவரையும் , அன்னையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் ;
எல்லாவற்றிக்கும் மேலாக , விவிலியத்தில் நீங்கள் எங்கேயும் ' சூசை கூறினார் ' என்று ஒரு வார்த்தை கூட இருக்காது ; இறை அனுபவம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை கூட பேச வேண்டிய அவசியம் இல்லாதபடி , பேச முடியாதபடி அவர் இறை அனுபவத்தில் நிறைந்திருந்தார் .
மார்ச் 19 - புனித சூசையப்பர் திருவிழா .
புனித சூசையப்பர் நவநாள் - புதன் கிழமை
மார்ச் மாதம் முழுவதும் இவருக்கு அர்பணிக்கப்பட்ட மாதம் . இவரது பரிந்துரை பெற இவரை மன்றாடுவோம்
1. திருக்குடும்பத்தின் பாதுகாவலர் ;
2. குடும்பங்களின் பாதுகாவலர் ;
3. நன்மரணத்திற்குப் பாதுகாவலர் ; ( ஏனெனில் இவரது மரணத்தின் போது நம் அன்னையும் , நமது ஆண்டவரும் இவருக்கு அருகில் இருந்தனர் )
4. உழைப்பாளர்களின் பாதுகாவலர் ; ( திருக்குடும்பத்தைக் காக்க அயராது உழைத்தவர் ; எனவே எல்லா உழைப்பாளர்களுக்கும் பாதுகாவலர் )
5. பொறியியலாளர்களின் , பொறியியல் வேலை செய்பவர்களின் பாதுகாவலர்
இறை அனுபவம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் புனித சூசையப்பரைப் போல இருக்க வேண்டும்.
எவ்வாறெனில் ஆண்டவரையும் நம் அன்னையையும் அருகே காண வேண்டும் ; அவர்களோடு இருக்க வேண்டும் ; அவர்களுக்காக உழைக்க வேண்டும் ; அவர்களது மகிழ்ச்சியைத் தேட வேண்டும் ; அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் ;கேள்விகள் இன்றி ஆண்டவரையும் , அன்னையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் ;
எல்லாவற்றிக்கும் மேலாக , விவிலியத்தில் நீங்கள் எங்கேயும் ' சூசை கூறினார் ' என்று ஒரு வார்த்தை கூட இருக்காது ; இறை அனுபவம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை கூட பேச வேண்டிய அவசியம் இல்லாதபடி , பேச முடியாதபடி அவர் இறை அனுபவத்தில் நிறைந்திருந்தார் .
மார்ச் 19 - புனித சூசையப்பர் திருவிழா .
புனித சூசையப்பர் நவநாள் - புதன் கிழமை
மார்ச் மாதம் முழுவதும் இவருக்கு அர்பணிக்கப்பட்ட மாதம் . இவரது பரிந்துரை பெற இவரை மன்றாடுவோம்
முந்தின நாள்
மார்ச் மாதத்தினை புனித சூசையப்பருக்கு ஒப்புக்கொடுப்பதற்கான காரணமும் நோக்கமும்
தியானம்
- தந்தையாகிய புனித சூசையப்பரை அனைத்து புனிதர்களையும் புண்ணியவான்களையும் விட அதிகமாக வணங்கி மேன்மைப்படுத்த வேண்டும். இவர் அனைவரையும்விட அதிகமாக உயர்த்தப் பட்டவரானதாலும், புண்ணியத்திலும், பக்தியிலும், மகிமையிலும், அதிகாரத்திலும் சிறந்து விளங்குவதாலும், சகல கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலமும ஆதரவுமாக இருப்பதாலும் நாமும் நம்முடைய துன்ப துயரங்களில் அவரை வணங்கி அவர் ஆதரவை நாடித்தேட வேண்டும். மரியன்னையின் கரங்களில் உயிர்விட்ட பாக்கியமும் நன் மரணத்திற்கு பாதுகாவலுமாக இருக்கும் மேன்மையும் உடையவராக இருப்பதாலும் அவரிடம் நாம் விசுவாசம், நம்பிக்கை பக்தியோடு செபிக்க கடமைப்பட்டுள்ளோம்.
சனிக்கிழமை மரியன்னைக்குரிய நாளாகும். புதன்கிழமையானது புனித சூசையப்பருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் மரியன்னைக்கும், மார்ச் மாதம் புனித சூசையப்பருக்கும் குறிக்கப்பட்ட மாதங்களாகும. இந்த முப்பத்தொரு நாட்களும் பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு, இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். இதனை கிறிஸ்தவ மக்கள் கடைப்பிடிக்க உதவியாக இந்நூல் விளங்குகிறது.
- நாம் செலுத்தும் பக்தி வணக்கமானது ஒரு மரத்திற்கு ஒப்பானது. இந்த மரத்தின் வேரானது நமது மனதில் உள்ள பாசம் ; இதன் மலர்கள் பக்தியால் வருகிற செபமும் மன்றாட்டும், இதன் காய் கனிகள் தூயவர்களை பின்பற்றுதல் ஆகும். மலர்கள் மலர்ந்து கனிகளை வழங்காவிட்டால் எந்த பயனும் இல்லாததுபோல் கிறிஸ்தவர்கள் புனித சூசையப்பரின் புண்ணிய வாழ்வு வாழாவிட்டால் எந்த பயனுமில்லை. எண்ணிக்கையில்லா கிறிஸ்தவர்கள் இம்மாதத்தினை புனித சூசையப்பருக்கு ஒப்புக்கொடுப்பதுபோல நாமும் ஒப்புக்கொடுத்து அவரின் ஆசீரைப் பெறுவோம்.
புதுமை
பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் மரியன்னையின் புகழ்பெற்ற ஆலயம் உள்ளது. அங்கு தூய இருதய சபை நிறுவப்பட்டுள்ளது. இச்சபையில் பல கோடி மக்கள் சேர்ந்து புண்ணிய வழியில் ஈடுபட்டு வருகிறார்கள். இம்மாதத்தில் புனித சூசையப்பரின் பீடம் அலங்கரிக்கப்பட்டு திருநாள்களை வெகு சிறப்புடன் நடத்திவருவதோடு கிறிஸ்தவர்கள் ஒப்புரவு அருட்சாதனம் பெற்று திவ்விய நற்கருணை உட்கொண்டு பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள். தாங்கள் பெற்ற உதவிகளுக்கு நன்றியாக பொன், வெள்ளி காணிக்கைகளை அவரது காலடியில் மக்கள் சமர்ப்பித்தனர். மக்கள் அவரிடம் பக்தி கொண்டு ஏராளமான வரங்களை பெற்று நன்மை அடைந்து வருகிறார்கள். நாமும் இறையாசீர் அதிகமாக கிடைக்கவும், பாவிகள் மனந்திரும்பவும், அனைத்து மக்களும் கிறிஸ்துவை வழிபடவும், நமக்கு தேவையான வரங்கள் கிடைக்கவும் புனித சூசையப்பரை மன்றாடுவோம்.
3பர, அரு, பிதா
செபம்
தந்தையாகிய புனித சூசையப்பரே! மிகுந்த பக்தியோடு இம்மாதத்தினை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இந்த மாதத்தில் எங்களுடைய செபங்களையும், புகழ்ச்சியையும், நற்செயல்களையும் தயவுடன் ஏற்றுக்கொள்ளும். சகல மக்களும் செய்யும் செபங்களை உமது பாதங்களில் காணிக்கையாக்குகிறோம். இந்த மாதத்திலும் எங்கள் வாழ்நாள் முழுவதிலும் நாங்கள் பாவத்தைச் செய்யாமல் தர்ம வழியில் நடக்க உதவி செய்யும். உமது மகனாகிய இயேசுகிறிஸ்துவிடமும், மரியன்னையிடமும் எங்களுக்காக செபிக்கும்படிக் கேட்டுகொள்கிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
தந்தையாகிய புனித சூசையப்பரே! உமது அடியவர்களாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தந்தையாகிய புனித சூசையப்பரே! உமது சீடர்களாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தந்தையாகிய புனித சூசையப்பரே! உமது குழந்தைகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
வீட்டிலோ, ஆலயத்திலோ இருக்கும் புனித சூசையப்பரின் திரு சுரூபத்தை அலங்காரம் செய்வது.
மார்ச் மாதத்தினை புனித சூசையப்பருக்கு ஒப்புக்கொடுப்பதற்கான காரணமும் நோக்கமும்
தியானம்
- தந்தையாகிய புனித சூசையப்பரை அனைத்து புனிதர்களையும் புண்ணியவான்களையும் விட அதிகமாக வணங்கி மேன்மைப்படுத்த வேண்டும். இவர் அனைவரையும்விட அதிகமாக உயர்த்தப் பட்டவரானதாலும், புண்ணியத்திலும், பக்தியிலும், மகிமையிலும், அதிகாரத்திலும் சிறந்து விளங்குவதாலும், சகல கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலமும ஆதரவுமாக இருப்பதாலும் நாமும் நம்முடைய துன்ப துயரங்களில் அவரை வணங்கி அவர் ஆதரவை நாடித்தேட வேண்டும். மரியன்னையின் கரங்களில் உயிர்விட்ட பாக்கியமும் நன் மரணத்திற்கு பாதுகாவலுமாக இருக்கும் மேன்மையும் உடையவராக இருப்பதாலும் அவரிடம் நாம் விசுவாசம், நம்பிக்கை பக்தியோடு செபிக்க கடமைப்பட்டுள்ளோம்.
சனிக்கிழமை மரியன்னைக்குரிய நாளாகும். புதன்கிழமையானது புனித சூசையப்பருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் மரியன்னைக்கும், மார்ச் மாதம் புனித சூசையப்பருக்கும் குறிக்கப்பட்ட மாதங்களாகும. இந்த முப்பத்தொரு நாட்களும் பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு, இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். இதனை கிறிஸ்தவ மக்கள் கடைப்பிடிக்க உதவியாக இந்நூல் விளங்குகிறது.
- நாம் செலுத்தும் பக்தி வணக்கமானது ஒரு மரத்திற்கு ஒப்பானது. இந்த மரத்தின் வேரானது நமது மனதில் உள்ள பாசம் ; இதன் மலர்கள் பக்தியால் வருகிற செபமும் மன்றாட்டும், இதன் காய் கனிகள் தூயவர்களை பின்பற்றுதல் ஆகும். மலர்கள் மலர்ந்து கனிகளை வழங்காவிட்டால் எந்த பயனும் இல்லாததுபோல் கிறிஸ்தவர்கள் புனித சூசையப்பரின் புண்ணிய வாழ்வு வாழாவிட்டால் எந்த பயனுமில்லை. எண்ணிக்கையில்லா கிறிஸ்தவர்கள் இம்மாதத்தினை புனித சூசையப்பருக்கு ஒப்புக்கொடுப்பதுபோல நாமும் ஒப்புக்கொடுத்து அவரின் ஆசீரைப் பெறுவோம்.
புதுமை
பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் மரியன்னையின் புகழ்பெற்ற ஆலயம் உள்ளது. அங்கு தூய இருதய சபை நிறுவப்பட்டுள்ளது. இச்சபையில் பல கோடி மக்கள் சேர்ந்து புண்ணிய வழியில் ஈடுபட்டு வருகிறார்கள். இம்மாதத்தில் புனித சூசையப்பரின் பீடம் அலங்கரிக்கப்பட்டு திருநாள்களை வெகு சிறப்புடன் நடத்திவருவதோடு கிறிஸ்தவர்கள் ஒப்புரவு அருட்சாதனம் பெற்று திவ்விய நற்கருணை உட்கொண்டு பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள். தாங்கள் பெற்ற உதவிகளுக்கு நன்றியாக பொன், வெள்ளி காணிக்கைகளை அவரது காலடியில் மக்கள் சமர்ப்பித்தனர். மக்கள் அவரிடம் பக்தி கொண்டு ஏராளமான வரங்களை பெற்று நன்மை அடைந்து வருகிறார்கள். நாமும் இறையாசீர் அதிகமாக கிடைக்கவும், பாவிகள் மனந்திரும்பவும், அனைத்து மக்களும் கிறிஸ்துவை வழிபடவும், நமக்கு தேவையான வரங்கள் கிடைக்கவும் புனித சூசையப்பரை மன்றாடுவோம்.
3பர, அரு, பிதா
செபம்
தந்தையாகிய புனித சூசையப்பரே! மிகுந்த பக்தியோடு இம்மாதத்தினை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இந்த மாதத்தில் எங்களுடைய செபங்களையும், புகழ்ச்சியையும், நற்செயல்களையும் தயவுடன் ஏற்றுக்கொள்ளும். சகல மக்களும் செய்யும் செபங்களை உமது பாதங்களில் காணிக்கையாக்குகிறோம். இந்த மாதத்திலும் எங்கள் வாழ்நாள் முழுவதிலும் நாங்கள் பாவத்தைச் செய்யாமல் தர்ம வழியில் நடக்க உதவி செய்யும். உமது மகனாகிய இயேசுகிறிஸ்துவிடமும், மரியன்னையிடமும் எங்களுக்காக செபிக்கும்படிக் கேட்டுகொள்கிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
தந்தையாகிய புனித சூசையப்பரே! உமது அடியவர்களாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தந்தையாகிய புனித சூசையப்பரே! உமது சீடர்களாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தந்தையாகிய புனித சூசையப்பரே! உமது குழந்தைகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
வீட்டிலோ, ஆலயத்திலோ இருக்கும் புனித சூசையப்பரின் திரு சுரூபத்தை அலங்காரம் செய்வது.