- கேள்வி பதில்
- தசமபாகம்
தசமபாகம் குறித்துக் கத்தோலிக்கத் திருச்சபை சொல்லுவது என்ன?
பத்தில் ஒரு பாகம் என்று அல்ல ; வருமானத்தில் இத்தனை சதவிகிதம் கண்டிப்பாக ஆலயத்திற்கு செலுத்தியே ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் கத்தோலிக்கத் திருச்சபை தருவதில்லை . ஆனால் , கீழ்காண்பவற்றை திருச்சபை வலியுறுத்துகிறது
The fifth precept ("You shall help to provide for the needs of the Church") means that the faithful are obliged to assist with the material needs of the Church, each according to his own ability. . . The faithful also have the duty of providing for the material needs of the Church, each according to his own abilities. (CCC 2043)
The Christian faithful are obliged to assist with the needs of the Church so that the Church has what is necessary for divine worship, for apostolic works and works of charity, and for the decent sustenance of ministers. They are also obliged to promote social justice and, mindful of the precept of the Lord, to assist the poor from their own resources. (CIC 222)
ஆலயத்தின் தேவைகளை சந்திக்க விசுவாசிகள் தங்களால் இயன்ற ஒத்துழைப்பைத் தர வேண்டும் . ஆலயத்தின் தேவைகளுக்குத் தங்களால் இயன்ற மூலப் பொருட்கள்/ சாதனங்களைத் தர வேண்டும். அவர்கள் அவ்வாறு திருச்சபைக்குத் துணை செய்வதன் மூலம் திருச்சபை , திருவழிபாட்டுக்கும் , அப்போஸ்தலப் பணிக்கும் , தான தருமங்களுக்கும் , சபை மேய்ப்பர்களைத் தாங்குவதற்கும் தேவையானவற்றைக் கொண்டிருக்க முடியும். மட்டுமல்லாமல், சமூக நீதியை மேம்படுத்தவும் , ஆண்டவரின் கட்டளைகளை மனதில் கொண்டு ஏழைகளுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்யவும் கத்தோலிக்கர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே , கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்கள் திருச்சபைக்குக் காணிக்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் திருச்சபை இன்ன சதவிகிதம்இருக்க வேண்டும் ; இவ்வளவு இருக்க வேண்டும் , என்கிற வரைமுறை எதுவும் வகுக்கவில்லை .
தசமபாகம் என்பது யூதர்களுக்கு மோசேயால் கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாட்டுச் சட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமக்குத் தசம பாகம் என்பது கட்டாயமல்ல ; ஆனால் ஆலயத்திற்குக் காணிக்கை கொடுக்க நாம் அழைக்கப்பட்டுளோம் என்பதை நாம் மறக்கலாகாது.
ஆலயத்திற்கு நாம் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார் என்பதை கீழ்காணும் வசனங்களில் நாம் காணலாம் .
"நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்." 1 Corinthians 16:2
"அது கட்டாயப்படுத்தித் திரட்டப்பட்டதாக அன்றி, நீங்களாகக் கொடுத்த நன்கொடையாகவும் இருக்கும்.
குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்." 2 Corinthians 9:5-8
இறைவன் நம்மிடமிருந்து இத்தனை கொடுத்தே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் அல்ல ; ஆனால் கொடுப்பதை இதயத்தில் இருந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.இன்ன தொகை கொடுக்க வேண்டும் என்று வரையறை வகுத்து வாங்குவது மிரட்டிப் பணம் பறிப்பது போன்றது தான் . மாறாக , இதயபூர்வமாக (இயன்றதைக் ) கொடுப்பதே உண்மையான காணிக்கை என்பதாகும்