- வணக்க மாதம்
- உத்தரிக்கிற ஆத்துமாக்கள்
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் புகழ்மாலை மற்றும் செபங்களுக்கு இங்கே சொடுக்கவும்
தினசரி தியானங்கள் அனைத்தும் எடுக்கப்பட்ட நூல் : உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்க மாதம்
ஆசிரியர் : அருட்திரு இஞ்ஞாசியார். சேசு சபை குரு(st.Cyr .)
முந்தின நாள்
சகல மோட்சவாசிகளும் உத்தரிக்கிற ஆத்துமாக்களும் இப்பூமியில் உள்ள கிறிஸ்தவர்களும் ஒரே சபையாமென்று காண்பிக்கிற விளக்கமாவது :
சகல உலகங்களைப் படைத்து இரட்சித்து அழிக்க வல்லவராயிருக்கிற மேலான கடவுளாகிய சேசுக் கிறிஸ்து நாதர் தமக்கு ஞானவுடலாகிய அர்ச்சியசிஷ்ட திருச்சபையை உண்டு பண்ணினாராமே . அத்திருச்சபையை அவரே ஆண்டு நடப்பித்து அலங்கரித்து மோட்ச பேரின்ப இராச்சியத்தில் தம்முடன் ஒன்றித்திருக்குமளவும் அதை சீர்படுத்திக் கொண்டு வருகிறார் . சுவாமிக்கு உடலும் பத்தினியுமாயிருக்கிற திருச்சபையானது இவ்வுலகத்தில் நிற்கும் திருச்சபை மாத்திரமல்ல . அத்திருச்சபை மோட்சத்திலே வாழும் திருச்சபையும் , உத்தரிக்குஞ் சபையும், இவ்வுலகத்தில் உலகம் பசாசு சரீரமென்கிற மூன்று சத்துருக்களோடு யுத்தம் செய்யும் திருச்சபையுமாகிய மூன்று சபையாம் . ஆயினும் இம்மூன்று சபைகள் பிரியாத ஐக்கியத்தாலும், முறியடிக்கப்படாத பந்தத்தாலும் , அன்னியோன்னிய நேசத்தாலும் தங்களை ஆளும் ஏக இரட்சகராலும் , தாங்கள் என்றென்றைக்கும் இருக்கப் போகிற ஒரே மோட்ச இராஜ்ஜியத்தாலும் ஏக சபையேயல்லாமல் வெவ்வேறு சபைகள் அல்ல
அத்திருச்சபையானது மோட்சத்தில் மாத்திரமே எவ்வகையிலும் சீர்ப்படுத்தப்பட்டு யாதோர் பழுதுமின்றி , கறையுமின்றி, குறைவுமின்றி , மங்கா ஒளியோடு இலங்கி மட்டற்ற செல்வ பாக்கியத்தை நுகர்ந்து சேசுக் கிறிஸ்து நாதருடன் ஒன்றித்து என்றென்றைக்கும் வாழாநிற்கும் . அதில் மாத்திரமே கண்ணாலே காணாததுமாய் , காதாலே கேளாததுமாய் , புத்தியினாலே எட்டாதிருக்கிறதுமாயிருக்கிற பேரின்பத்தைத் சுகித்து சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து , ஏக திருத்துவமாகிய கடவுளாகிய சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து அவருடைய பிரதாபத்திலே ,அவருடைய பிரதாபத்தைப் பார்த்து இராஜாக்களாகவும் தேவர்களாகவும் மோட்சவாசிகள் என்றென்றைக்கும் கர்த்தாவை ஸ்துதித்து நேசித்து வாழ்வார்களாமே. அதுவே மனுஷனுக்கு கதியும் அவதியும் ,அதுவே அவனுக்கு சம்பூரண பூரிப்பும் தீர்ந்த இரம்மியமுமாம் . அதற்குத்தான் சேர்ந்தார்கள் மோட்சவாசிகள் எல்லோரும் ; அதிலேயும் நாம் ஒரு நாள் சேருவோமென்று உறுதியாய் நம்பி இருக்கிறோம்
மகிமைப்படுத்தப்பட்ட அத்திருச்சபையில் யாதோர் பழுதும் ,யாதோர் கறையும், யாதோர் குறையும் இருக்கக்கூடாதென்கிறதைப்பற்றி அதில் சேருமுன்னே எந்தக் குற்றமுள்ளவர்களும் செம்பொன் உலையில் சுத்தமாய் இருக்கிறார்போல் ஒரே இடத்தில் சுத்திகரிக்கப்பட்டு தங்களிலுள்ள கன்மசமெல்லாம் சுட்டழித்து செஞ்சுடருக்கு ஒப்பாய் ஒளிர்ந்து முழுமையும் பரிசுத்தராகவேணும். இப்பேர்பட்டவர்களைச் சுத்தமாக்கி மோட்சசபைக்குத் தகுந்தவர்களாக்குகிற ஸ்தலம் உத்தரிக்கிற ஸ்தலம் எனப்படுகிறது . அந்த ஸ்தலத்திலே உத்தரிப்பு நிறைவேற்றுகிறவர்கள் உத்தரிக்கும் சபையாரென்று கூறப்படுகிறார்கள்
போர் செய்யும் ஸ்தலமும் , சொதனைப்படும் ஸ்தலமும் , பாவ புண்ணியமுள்ள ஸ்தலமும் இப்பூலோகந்தான் . இதிலே தான் ஞான சத்துருக்களை வென்றொழித்து மோட்ச கிரீடத்துக்கு சுதந்திரத்தை அடையலாம் . இதிலே தான் சோதனையிலே தத்தளிக்காமல் தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமாய் நடந்து பரம இராஜாவிடத்தில் ஊழியுள்ள காலம் வாழப் பேறுபலனைப் பெற்றுக் கொள்ளலாம் . இதிலே தான் பாவ அழிவை வெறுத்து துர் இச்சைகளை அடக்கும் தவத்தை வெற்றிக் கொடியாகத் தெரிந்து மோட்ச பேரின்பத்துக்கு பிராப்தியை அடையலாம் . ஜெயம் கொண்டவர்களுக்கு மாத்திரமே இராஜமுடி சூட்டப்படும் . உறுதியாய் நடந்தவர்களுக்கு மாத்திரமே மோட்ச சம்பாவனை அளிக்கப்படும் . புண்ணியம் செய்தவர்களுக்கு மாத்திரமே மோட்ச பேரின்பம் கொடுக்கப்படும் . அப்படிப் பூமண்டலத்தில் வருத்தப்பட்டு போராடி சேசுவின் திருநாமதேயத்தை தரித்து திருச்சிளுவையின் மகிமையான வெற்றிக் கொடியின் கீழ் யுத்தம் பண்ணுகிறவர்கள் யுத்த சபை எனப்படுகிறார்களாம். ஆயினும் ஒட்டோலோகச் சபை என்றும் உத்தரிக்கிற சபை என்றும் யுத்த சபைஎன்றும் சொன்னாலும் , மூன்று சபையல்ல , ஒரே சபை தான்
இவ்வுலகத்திலுள்ள யுத்த சபையானது தனக்குப் பேறுபலனையும் மோட்சத்துக்கு சுதந்திரத்தையும் நித்திய பிரதாபத்துக்கு பிராப்தியையும் அடைவதுமன்றியே வானோர்களை வாழ்த்தி ஸ்துதித்து மகிமைப்படுத்தும் உத்தரிக்கிற சபையில் உபாதிக்கப்படுகிரவர்களுக்காக மன்றாடும் , அவர்களுக்கு உதவி சகாயம் பண்ணும் ,அவர்களை பரம வீட்டுக்கு சேர்த்துக் கொள்ளும் .
உத்தரிக்கிற சபையொவெனில் தனக்கு யாதொன்றையும் பெறக்கூடாமல் தனக்கு உதவி சகாயம் செய்யும் யுத்த சபைக்கு ஆண்டவருடைய அனுக்கிரகம் வர மன்றாடும் . ஒட்டோலோகச் சபை இடத்திலே சேர விரும்பி தேவ சித்தத்துக்கு அமைந்து சுத்திகரிக்கப்படும் .
மோட்சத்தில் வாழும் ஒட்டோலோகச் சபையானது யுத்த சபையைக் கிருபையாய்ப் பார்த்து இடைவிடாமல் ஆண்டவரை மன்றாடி அதற்க்கு வேண்டிய தேவ வரங்களைப் பொழியப் பண்ணும் . யுத்தம் பண்ணுகிறவர்களை ஏவி எங்களிடத்திலே வாருங்கள் என்று மோட்சானந்தத்தை அவர்களுக்குக் காண்பிக்கும் . உத்தரிக்கிற சபைக்கு உதவியாக நெருப்பை அவிக்கும் தர்மங்களையும் பரிகாரத்தை செலுத்தும் தவக்கிரியைகளையும் ,கட்டுகளை அவிழ்க்கும் செபங்களையும் , எல்லா வேதனைகளையும் அவியச் செய்யும் திவ்விய பூசைகளையும் நடப்பிக்கச் செய்யும்
கடைசியிலே இச்சபையாறேல்லாம் மோட்சத்திலே கூடி சுவாமியுடன் ஏகோபித்து சொல்லிலும் நினைவிலும் அடங்காத சகலமான பேரின்ப பாக்கியங்களை அனுபவித்து சர்வேசுரனைப் புகழ்ந்து ஸ்துதித்து நேசித்து வாழ்வார்கள் , வாழ்வார்களாமே
கிறிஸ்தவர்களே இம்மாதத் துவக்கத்திலே சகலமான மோட்சவாசிகளுடைய திருநாள் கொண்டாடப்படுகிறதினாலே மோட்சத்தை நினைத்து அவ்விடத்திற்குச் சேர வேண்டியதற்காக பிரயாசைப்படுவோமென்று உறுதியாய்த் தீர்மானிக்கக் கடவீர்கள் . ஆயினும் அவ்விடத்திற்கு உடனே சேர்வது வெகு அருமையாயிருப்பதால் ஏறக்குறைய எல்லோரும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வழியாய் ஈடெறுவோம் என்கிறதற்குச் சந்தேகமே இல்லை .அதனாலே இந்த மாதம் முழுமையும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களை குறித்து சில தியானங்களையும் ஜெபங்களையும் செய்து அவர்களுக்கு உதவி சகாயம் வருவிக்கப் பிரயாசைப்படுவோமாக .
சகல மோட்சவாசிகளுக்குத் தோத்திரமாக 3 பர 3 பிரி 3 முறை திரித்துவ மந்திரமும் வேண்டிக் கொள்ளுவோம்
தினசரி தியானங்கள் அனைத்தும் எடுக்கப்பட்ட நூல் : உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்க மாதம்
ஆசிரியர் : அருட்திரு இஞ்ஞாசியார். சேசு சபை குரு(st.Cyr .)
முந்தின நாள்
சகல மோட்சவாசிகளும் உத்தரிக்கிற ஆத்துமாக்களும் இப்பூமியில் உள்ள கிறிஸ்தவர்களும் ஒரே சபையாமென்று காண்பிக்கிற விளக்கமாவது :
சகல உலகங்களைப் படைத்து இரட்சித்து அழிக்க வல்லவராயிருக்கிற மேலான கடவுளாகிய சேசுக் கிறிஸ்து நாதர் தமக்கு ஞானவுடலாகிய அர்ச்சியசிஷ்ட திருச்சபையை உண்டு பண்ணினாராமே . அத்திருச்சபையை அவரே ஆண்டு நடப்பித்து அலங்கரித்து மோட்ச பேரின்ப இராச்சியத்தில் தம்முடன் ஒன்றித்திருக்குமளவும் அதை சீர்படுத்திக் கொண்டு வருகிறார் . சுவாமிக்கு உடலும் பத்தினியுமாயிருக்கிற திருச்சபையானது இவ்வுலகத்தில் நிற்கும் திருச்சபை மாத்திரமல்ல . அத்திருச்சபை மோட்சத்திலே வாழும் திருச்சபையும் , உத்தரிக்குஞ் சபையும், இவ்வுலகத்தில் உலகம் பசாசு சரீரமென்கிற மூன்று சத்துருக்களோடு யுத்தம் செய்யும் திருச்சபையுமாகிய மூன்று சபையாம் . ஆயினும் இம்மூன்று சபைகள் பிரியாத ஐக்கியத்தாலும், முறியடிக்கப்படாத பந்தத்தாலும் , அன்னியோன்னிய நேசத்தாலும் தங்களை ஆளும் ஏக இரட்சகராலும் , தாங்கள் என்றென்றைக்கும் இருக்கப் போகிற ஒரே மோட்ச இராஜ்ஜியத்தாலும் ஏக சபையேயல்லாமல் வெவ்வேறு சபைகள் அல்ல
அத்திருச்சபையானது மோட்சத்தில் மாத்திரமே எவ்வகையிலும் சீர்ப்படுத்தப்பட்டு யாதோர் பழுதுமின்றி , கறையுமின்றி, குறைவுமின்றி , மங்கா ஒளியோடு இலங்கி மட்டற்ற செல்வ பாக்கியத்தை நுகர்ந்து சேசுக் கிறிஸ்து நாதருடன் ஒன்றித்து என்றென்றைக்கும் வாழாநிற்கும் . அதில் மாத்திரமே கண்ணாலே காணாததுமாய் , காதாலே கேளாததுமாய் , புத்தியினாலே எட்டாதிருக்கிறதுமாயிருக்கிற பேரின்பத்தைத் சுகித்து சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து , ஏக திருத்துவமாகிய கடவுளாகிய சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து அவருடைய பிரதாபத்திலே ,அவருடைய பிரதாபத்தைப் பார்த்து இராஜாக்களாகவும் தேவர்களாகவும் மோட்சவாசிகள் என்றென்றைக்கும் கர்த்தாவை ஸ்துதித்து நேசித்து வாழ்வார்களாமே. அதுவே மனுஷனுக்கு கதியும் அவதியும் ,அதுவே அவனுக்கு சம்பூரண பூரிப்பும் தீர்ந்த இரம்மியமுமாம் . அதற்குத்தான் சேர்ந்தார்கள் மோட்சவாசிகள் எல்லோரும் ; அதிலேயும் நாம் ஒரு நாள் சேருவோமென்று உறுதியாய் நம்பி இருக்கிறோம்
மகிமைப்படுத்தப்பட்ட அத்திருச்சபையில் யாதோர் பழுதும் ,யாதோர் கறையும், யாதோர் குறையும் இருக்கக்கூடாதென்கிறதைப்பற்றி அதில் சேருமுன்னே எந்தக் குற்றமுள்ளவர்களும் செம்பொன் உலையில் சுத்தமாய் இருக்கிறார்போல் ஒரே இடத்தில் சுத்திகரிக்கப்பட்டு தங்களிலுள்ள கன்மசமெல்லாம் சுட்டழித்து செஞ்சுடருக்கு ஒப்பாய் ஒளிர்ந்து முழுமையும் பரிசுத்தராகவேணும். இப்பேர்பட்டவர்களைச் சுத்தமாக்கி மோட்சசபைக்குத் தகுந்தவர்களாக்குகிற ஸ்தலம் உத்தரிக்கிற ஸ்தலம் எனப்படுகிறது . அந்த ஸ்தலத்திலே உத்தரிப்பு நிறைவேற்றுகிறவர்கள் உத்தரிக்கும் சபையாரென்று கூறப்படுகிறார்கள்
போர் செய்யும் ஸ்தலமும் , சொதனைப்படும் ஸ்தலமும் , பாவ புண்ணியமுள்ள ஸ்தலமும் இப்பூலோகந்தான் . இதிலே தான் ஞான சத்துருக்களை வென்றொழித்து மோட்ச கிரீடத்துக்கு சுதந்திரத்தை அடையலாம் . இதிலே தான் சோதனையிலே தத்தளிக்காமல் தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமாய் நடந்து பரம இராஜாவிடத்தில் ஊழியுள்ள காலம் வாழப் பேறுபலனைப் பெற்றுக் கொள்ளலாம் . இதிலே தான் பாவ அழிவை வெறுத்து துர் இச்சைகளை அடக்கும் தவத்தை வெற்றிக் கொடியாகத் தெரிந்து மோட்ச பேரின்பத்துக்கு பிராப்தியை அடையலாம் . ஜெயம் கொண்டவர்களுக்கு மாத்திரமே இராஜமுடி சூட்டப்படும் . உறுதியாய் நடந்தவர்களுக்கு மாத்திரமே மோட்ச சம்பாவனை அளிக்கப்படும் . புண்ணியம் செய்தவர்களுக்கு மாத்திரமே மோட்ச பேரின்பம் கொடுக்கப்படும் . அப்படிப் பூமண்டலத்தில் வருத்தப்பட்டு போராடி சேசுவின் திருநாமதேயத்தை தரித்து திருச்சிளுவையின் மகிமையான வெற்றிக் கொடியின் கீழ் யுத்தம் பண்ணுகிறவர்கள் யுத்த சபை எனப்படுகிறார்களாம். ஆயினும் ஒட்டோலோகச் சபை என்றும் உத்தரிக்கிற சபை என்றும் யுத்த சபைஎன்றும் சொன்னாலும் , மூன்று சபையல்ல , ஒரே சபை தான்
இவ்வுலகத்திலுள்ள யுத்த சபையானது தனக்குப் பேறுபலனையும் மோட்சத்துக்கு சுதந்திரத்தையும் நித்திய பிரதாபத்துக்கு பிராப்தியையும் அடைவதுமன்றியே வானோர்களை வாழ்த்தி ஸ்துதித்து மகிமைப்படுத்தும் உத்தரிக்கிற சபையில் உபாதிக்கப்படுகிரவர்களுக்காக மன்றாடும் , அவர்களுக்கு உதவி சகாயம் பண்ணும் ,அவர்களை பரம வீட்டுக்கு சேர்த்துக் கொள்ளும் .
உத்தரிக்கிற சபையொவெனில் தனக்கு யாதொன்றையும் பெறக்கூடாமல் தனக்கு உதவி சகாயம் செய்யும் யுத்த சபைக்கு ஆண்டவருடைய அனுக்கிரகம் வர மன்றாடும் . ஒட்டோலோகச் சபை இடத்திலே சேர விரும்பி தேவ சித்தத்துக்கு அமைந்து சுத்திகரிக்கப்படும் .
மோட்சத்தில் வாழும் ஒட்டோலோகச் சபையானது யுத்த சபையைக் கிருபையாய்ப் பார்த்து இடைவிடாமல் ஆண்டவரை மன்றாடி அதற்க்கு வேண்டிய தேவ வரங்களைப் பொழியப் பண்ணும் . யுத்தம் பண்ணுகிறவர்களை ஏவி எங்களிடத்திலே வாருங்கள் என்று மோட்சானந்தத்தை அவர்களுக்குக் காண்பிக்கும் . உத்தரிக்கிற சபைக்கு உதவியாக நெருப்பை அவிக்கும் தர்மங்களையும் பரிகாரத்தை செலுத்தும் தவக்கிரியைகளையும் ,கட்டுகளை அவிழ்க்கும் செபங்களையும் , எல்லா வேதனைகளையும் அவியச் செய்யும் திவ்விய பூசைகளையும் நடப்பிக்கச் செய்யும்
கடைசியிலே இச்சபையாறேல்லாம் மோட்சத்திலே கூடி சுவாமியுடன் ஏகோபித்து சொல்லிலும் நினைவிலும் அடங்காத சகலமான பேரின்ப பாக்கியங்களை அனுபவித்து சர்வேசுரனைப் புகழ்ந்து ஸ்துதித்து நேசித்து வாழ்வார்கள் , வாழ்வார்களாமே
கிறிஸ்தவர்களே இம்மாதத் துவக்கத்திலே சகலமான மோட்சவாசிகளுடைய திருநாள் கொண்டாடப்படுகிறதினாலே மோட்சத்தை நினைத்து அவ்விடத்திற்குச் சேர வேண்டியதற்காக பிரயாசைப்படுவோமென்று உறுதியாய்த் தீர்மானிக்கக் கடவீர்கள் . ஆயினும் அவ்விடத்திற்கு உடனே சேர்வது வெகு அருமையாயிருப்பதால் ஏறக்குறைய எல்லோரும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வழியாய் ஈடெறுவோம் என்கிறதற்குச் சந்தேகமே இல்லை .அதனாலே இந்த மாதம் முழுமையும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களை குறித்து சில தியானங்களையும் ஜெபங்களையும் செய்து அவர்களுக்கு உதவி சகாயம் வருவிக்கப் பிரயாசைப்படுவோமாக .
சகல மோட்சவாசிகளுக்குத் தோத்திரமாக 3 பர 3 பிரி 3 முறை திரித்துவ மந்திரமும் வேண்டிக் கொள்ளுவோம்