- புனிதர்கள்
- தொகுப்பு
- அக்டோபர்
அக்டோபர் மாதப் புனிதர்கள்
- அக்டோபர் 1
- அக்டோபர் 2
- அக்டோபர் 3
- அக்டோபர் 4
- அக்டோபர் 5
- அக்டோபர் 6
- அக்டோபர் 7
- அக்டோபர் 8
- அக்டோபர் 9
- அக்டோபர் 10
- அக்டோபர் 11
- அக்டோபர் 12
- அக்டோபர் 13
- அக்டோபர் 14
- அக்டோபர் 15
- அக்டோபர் 16
- அக்டோபர் 17
- அக்டோபர் 18
- அக்டோபர் 19
- அக்டோபர் 20
- அக்டோபர் 21
- அக்டோபர் 22
- அக்டோபர் 23
- அக்டோபர் 24
- அக்டோபர் 25
- அக்டோபர் 26
- அக்டோபர் 27
- அக்டோபர் 28
- அக்டோபர் 29
- அக்டோபர் 30
- அக்டோபர் 31
அக்டோபர் 1
லிசியே நகரின் தெரேசா
(கன்னியர் மற்றும் மறைவல்லுநர்)
நினைவுத் திருவிழா : அக்டோபர் 1, அக்டோபர் 3
பிறப்பு : ஜனவரி 2, 1873, அலேசான், பிரான்சு
இறப்பு : செப்டம்பர் 30 1897(அகவை 24) லிசியே, பிரான்சு
அருளாளர் பட்டம் : 29 ஏப்ரல், 1923, (பதினொன்றாம் பயஸ்)
புனிதர் பட்டம் : 17 மே 1925, (பதினொன்றாம் பயஸ்)
குறிப்பிடத்தகுந்த படைப்புகள்: ஓர் ஆன்மாவின்வரலாறு (தன்வரலாற்று நூல்)
முக்கிய திருத்தலங்கள் : புனித தெரேசா பேராலயம், லிசியே நகர், பிரான்சு
லிசியே நகரின் தெரேசா (Thérèse of Lisieux)(2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897) என்பவர் ஒரு பிரஞ்சு கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின் (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் துறவற சபையில் குழந்தை இயேசு மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். குழந்தை இயேசுவின் தெரேசா என்னும் பெயரும், இயேசுவின் சிறு மலர் என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, 1888 இல், பல்வேறு தடைகளையும் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (cloistered) கார்மேல் சபை மடம் பிரான்சு நாட்டில் நோர்மாண்டி மாநிலத்தில் லிசியே (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர்(sacristan), பயிற்சிநிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார். அவர்தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் அவர் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் காச நோயால் பீடிக்கப்பட்டு, தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார்.
இவரின் ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923இலும், புனிதர் பட்டம் 1925இலும் வழங்கப்பட்டது. பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.
குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு இன்று உலகம் முழுவதிலும் வணக்கம் செலுத்தப்படுகிறது.
தெரேசா ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து, அறியப்படாமல் இருக்க வேண்டும், என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் தன்வரலாற்று நூல் இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்னால் செய்யப்பட்டவை) இவரைப் பலரும் கண்டுணர வழிவகுத்தது.
இவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை கொள்வதும் அன்பு செய்வதும் தான்" என்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.
புதியதொரு "சிறு வழியில்" ("little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார். "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா குறிப்பிடுகின்றார்.
லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், பிரான்சு நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.
பிறப்பு
தெரசா பிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873-ம் ஆண்டு சனவரி திங்கள் 2-ம் நாள் லூயிஸ்-செலின் தம்பதியரின் 9-வது குழந்தையாக பிறந்தார். தனது சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார்.15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருதந்தையின் சிறப்பு அனுமதி பெற்று , 1888-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9-ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார்.
சிறு வழியைக் கண்டுபிடித்தல்
தெரேசா கார்மேல் மடம் புகுந்த வேளையில் ஒரு புனிதையாக மாறவேண்டும் என்னும் தீர்க்கமான முடிவோடுதான் சென்றார். ஆனால், ஆறு ஆண்டுகள் துறவியாக வாழ்ந்தபின்னும், 1894இல் தான் எத்துணை சிறியவள், வலுவற்றவள் என்பதை உணர்ந்தார். எவ்வளவுதான் முயன்றாலும் தன்னிடம் குறைபாடுகள் பல இருந்ததை அவர் கண்டார். அளவற்ற அன்பு காட்ட அவருக்கு விருப்பமாயிருந்தாலும் அவரது சிறுமை அவரை மேற்கொண்டது.
படிப்படியாகத் தன் சிறுமையே தன் வளர்ச்சிக்கு வழியாகும் என்றும், தன் சிறுமையில் கடவுளின் உதவியை நாடிச் செல்வதென்றும் முடிவுசெய்தார்.தெரேசாவின் சகோதரி செலின் கொண்டுவந்திருந்த பழைய ஏற்பாட்டை தெரேசா புரட்டினார். அங்கே, நீதிமொழிகள் என்னும் நூலின் ஒரு பகுதி (9:4) அவரைக் கவர்ந்தது.
“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது”
என்று கடவுளின் "ஞானம்" பற்றி அந்நூலில் வரும் பகுதி தெரேசாவின் கண்களைத் திறந்தது.
அதுபோலவே, எசாயா இறைவாக்கினர் நூலில் வரும் 66:12-13 பகுதி தெரேசாவுக்குப் புதியதொரு பொருளை விளக்குவதாக அமைந்தது. இதோ அப்பகுதி:
“ஆண்டவர் கூறுவது இதுவே; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்”
கடவுளின் வார்த்தையை விவிலியத்தில் கண்ட தெரேசா தனக்குக் கடவுள் தரும் செய்தி என்னவென்று உணர்ந்தார். தன் சிறுமையும் வலுவின்மையும் ஒரு குறையல்ல, மாறாக, அவற்றின் வழியாகவே இயேசு தன்னைப் புனித நிலையின் உச்சிக்கு இட்டுச் செல்வார் என்று அறிந்தார். எனவே, உள்ளம் தளர்வதற்கு மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும். இது தெரேசாவுக்கு ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக அமைந்தது.
இதையே அவர் "சிறு வழி" (little way; பிரஞ்சு மூலத்தில் petite voie) என்று அழைத்தார். 1895 பெப்ருவரி மாதத்திலிருந்து தான் எழுதிய மடல்களில் எல்லாம் தெரேசா தன் பெயருக்கு முன்னால் "மிகச் சிறிய" (toute petite) என்னும் அடைமொழியை இடத் தொடங்கினார்.
தன் குறைகளை வெல்வதற்குத் தன் சொந்த சக்தி போதும் என்று தெரேசா எண்ணவில்லை. மாறாக, கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து, தன் கடமைகளைப் பொறுப்போடு ஆற்றி, நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தால் அதுவே கடவுளின் விருப்பம் என்னும் உறுதிப்பாடு அவரிடம் இருந்தது.
"ஆண்டவர் ஒரு தாயை விடவும் பாசம் கொண்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன் குழந்தை அறியாத்தன்மையால் தவறு செய்யும்போது அதைத் தாய் மன்னித்துவிடுவார். குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனம் செய்வார்கள், கீழே விழுவதும், அழுக்கில் புரள்வதும், பொருள்களை உடைப்பதும் அவர்கள் வேலை. ஆனால் இதெல்லாம் நிகழ்ந்தபிறகும் பெற்றோர் தம் குழந்தைகளை அன்புசெய்வதில் குறைபடுவதில்லை"
தன்வரலாற்று நூல் – ஓர் ஆன்மாவின் வரலாறு
தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் தன்வரலாற்று நூல் – ஓர் ஆன்மாவின் வரலாறு (L'histoire d'une âme) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்குப் பணிந்து எழுதினார். இதை 1985-இல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 1986-இல் தன் சகோதரியும், அம்மடத்திலேயே கன்னியராகவும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பும் சேர்த்து ஓர் ஆன்மாவின் வரலாறுஎன வெளியிடப்பட்டது.
இந்நூல் மறைத்திரு. பி.பி. சேவியரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1998-இல் வெளியிடப்பட்டது.
இறப்பு
தெரசா இறக்கும் தருவாயில் இருந்த போதும் அவர் முகத்தில் புன்னகை குறையவே இல்லை.அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு,1897-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30-ம் நாள் தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார். இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ம் நாள் வழங்கப்பட்டது.புனிதர் பட்டம் 1925-ம் ஆண்டு மே திங்கள் 17-ம் நாள் திருதந்தை பதினொன்றாம் பயஸால் வழங்கப்பட்டது. 1927-இல் குழந்தை இயேசுவின் புனித தெரேசா மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக பிரான்சிஸ் சவேரியாருடன் அறிவிக்கப்பட்டார். 1944-இல் பிரான்சு நாட்டின் பாதுகாவலியாக ஜோன் ஆஃப் ஆர்கோடு அறிவிக்கப்பட்டார். 19 அக்டோபர் 1997-இல் இரண்டாம் யோவான் பவுல் இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33-ஆம் மறைவல்லுநராக அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், மூன்றாவது பெண்ணும் ஆவார்.
புனித தெரேசாவின் பெற்றோருக்கு முத்திபேறுபட்டம்
தெரேசாவின் பெற்றோருக்கு புனிதர்பட்ட செயல்கள் துவங்கி உள்ளன. இவர்கள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால், 1994-இல் வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்பட்டனர். 2004-இல் மிலான் நகர பேராயர், நுரையீரலில் நோய் உள்ள ஒரு குழந்தைக்கு ஏற்பட்ட குணத்தை ஏற்றுக்கொண்டு, 12 ஜூலை 2008 அன்று, கார்தினால் சரைவா மார்டின்ஸ் முயற்சியால் இவர்களின் 150-ஆவது திருமண நாளன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால்முத்திபேறுபட்டம் அளிக்கப்பட்டது.
2011-இல் இவர்களின் கடிதங்கள் A Call to a Deeper Love: The Family Correspondence of the Parents of Saint Thérèse of the Child Jesus, 1863-1885 என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.
Back to top
அக்டோபர் 02
புனித லெகார்
( St. Legar )
நினைவுத்திருநாள்: அக்டோபர் 02
பிறப்பு : 615 / 616
இறப்பு : 679
சார்சிங் Sarcing, பிரான்ஸ்
பாதுகாவல் : அவுடூன் நகர், கண் நோயிலிருந்து
புனித லெகார், 651 ஆம் ஆண்டு புனித ஆசீர்வாதப்பர் சபையில் குருவானார். அப்போது அரசியாக இருந்த புனித பாடில்டிஸ் ( St. Bathildis) என்பவருக்கு, அரசியலில் மாற்றங்கள் கொண்டுவர உதவினார். 656 ஆம் ஆண்டு அரசி பாடில்டிஸ் இறந்து விட்டார். இதனால் லெகார் அவரின் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெருமளவில் உதவினார். பிறகு 663 ஆம் ஆண்டில் அவுடூன் (Autun) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன் மாவட்டத்தில் இருந்த, ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகள் செய்து, அன்பு காட்டி வந்தார்.
அரசி பாடில்டிஸ்சிற்குப் பிறகு, அரசர் 3 ஆம் குளோடேயர் (Clodarire III) என்பவர் ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் சில குழப்பங்கள் ஏற்படவே, அவருக்கு எதிராக அரசின் உடன் பிறந்த சகோதரரே பிரச்சினைகள் செய்தார். இதனால் அரசர் 3 ஆம் குளோடேயரும் இறந்தார்.
இதனால் அரண்மனை ஆட்சியை தொடர்ந்தாற்ற அவரின் சகோதரர் தியரி (Thierry) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 2 ஆம் சில்டேரிக் (Childreic II) என்பவரும் லெகாரும் உடனிருந்து உதவினார். இதனை அறிந்த சில்டேரிக்கின் நண்பர் ஆத்திரமடைந்தார். இந்த சில்டேரிக்கின் நண்பர் எப்ரோயின் (Ebroin) லெகாரை எதிரியாகக் கருதினார். லெகார் அரச குடும்பத்திற்கு ஆலோசகராக இருந்ததை எப்ரோயின் விரும்பவில்லை. இதனால் 675 ல் அவர் லெகாரை அவுடூன் மறைமாவட்டத்திலிருந்து நாடு கடத்தினார். அங்கு அவரை மிகக் கொடுமையாக துன்புறுத்தினான். அவரின் உதடுகளை துண்டித்தான். அவர் மறைப்பணியாற்றாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, அவரின் நாக்கை அறுத்தான்.
அவனின் ஆத்திரம் அடங்காததால், லெகாரின் சகோதரர் கெரினஸ் (Gerinus) என்பவரையும் எப்ரோயின் கொன்றான். பின்பு லெகாரை சிறையிலடைத்தான். இரண்டாண்டுகளுக்குப் பிறகு லெகாரை, எப்ரோயின் மேர்லி (Marly) என்ற நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தான். இறுதியில் லெகாரின் மேல் எத்தவறும் இல்லை என்று கூறி, நீதிமன்றம் விடுதலை செய்தது. தொடர்ந்து இவர் இறைவேண்டல் செய்து, இறுதியில் உடல் நலம் குன்றி இறந்தார்.
செபம் :
விடுதலை அளிப்பவரே எம் தந்தையே!
நீதியோடும், நேர்மையோடும் வாழ்ந்த காரணத்திற்காகவே புனித லெகார், தன் உடல் உறுப்புகளை இழந்தார். உம்மை இவ்வுலகில் பறைசாற்றிய புனித லெகாரை எம் முன்னோர்களுக்கு பரிசாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்றும் நற்செய்தியின்படி வாழ விரும்பும் ஒவ்வொரு உள்ளங்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்தும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம், ஆமென்!
October 2- Feast of our guardian angel
அக்டோபர் 03
புனித மதர் தியோடர் குரீன் (சபைத் தலைவர்)
St. Mother Theodore Guerin
நினைவுத்திருவிழா : அக்டோபர் 03
பிறப்பு : 1798 பிரான்ஸ்
இறப்பு : 14 மே 1856 அமெரிக்கா
முத்திபேறுபட்டம் : அக்டோபர் 1998
திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்
புனிதர்பட்டம் : 15 அக்டோபர் 2006
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
புனித மதர் தியோடர் குரீன், "புனித மேரி ஆஃப் வூட்ஸ்" (Saint Mary of Woods) என்ற சபையை நிறுவினார்.
இவர் நல்லொழுக்கத்தால், மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். நம்பிக்கையின் மறு உருவமாக திகழ்ந்தார். இவர் தனது செப வாழ்வினால் மிகவும் வலிமைப் பெற்று வாழ்ந்தார். தனது எளிமையான வாழ்வால், இவ்வுலக துன்பங்களை எதிர்த்தார். ஏராளமான துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். அமைதியின் சிகரமாய் இருந்தார்.
இவர் 1825 ஆம் ஆண்டு, செப்டம்பர் 8 ஆம் நாள் துறவியானார். 1840-1856 ஆம் ஆண்டு வரை "புனித வூட்ஸ் மேரி" (Sisters of Providence of Saint Mary of the Woods) என்ற சபையை நிறுவி, அச்சபையின் தலைவியாக பொறுப்பேற்றார். சபையை நிறுவி, பொறுப்பேற்ற நாளிலிருந்து, தன்னை இறைவனிடம் கையளித்து, இறைவன் மட்டுமே சபையை வழிநடத்த வேண்டுமென்று இடைவிடாமல் செபித்தார். இறைவனின் வழிநடத்துதலாலும், பராமரிப்பினாலும் பல வழிகளில், பலமுறை வெற்றியும் கண்டார்.
Back to top
அக்டோபர் 4
அசிசி நகர் புனித பிரான்சிஸ்(சபைத் தலைவர்)
St. Francis of Assisi
நினைவுத்திருநாள் : அக்டோபர் 4
பிறப்பு : 1182, அசிசி, இத்தாலி
இறப்பு : 1226, அசிசி, இத்தாலி
புனிதர்பட்டம்: 16 ஜூலை 1228, திருத்தந்தை 9 ஆம் கிரகோரி
பாதுகாவல்: விலங்குகள், இயற்கை பாதுகாப்பு, பறவைகள், தலைவலியிலிருந்து, தொற்றுநோயிலிருந்து
இவர் ஒரு பெரிய பணக்காரரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதை பொறுப்பேற்ற முறையில் கழித்தார். தன் நண்பர்களுடன் சேர்ந்து, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். தான் விரும்பியவாறெல்லாம் வாழ்க்கையை அனுபவித்தார். பின்னர் ஒருநாள் சான் தமியானோ என்ற ஆலயத்திற்கு சென்றார். அப்போது இடிந்துபோன ஆலயத்திலிருந்த, சிலுவையானது அசிசியாரின் வாழ்வை மாற்றியது. அச்சிலுவையின் குரல் கேட்டு, பிரான்சிஸ் மனம் உடைந்தார். தான் வாழ்ந்த ஆடம்பர வாழ்வை நினைத்துப்பார்த்தார். மிகவும் வேதனையடைந்து அழுதார். தன்னுடைய பழைய வாழ்விலிருந்து விடுபட்டு, புதிய வாழ்வை வாழ முடிவெடுத்தார். தன்னுடைய தந்தையின் செல்வங்களை வெறுத்து ஒதுக்கினார். தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, தொழுநோயாளிகளின் மத்தியில் வாழ்ந்தார்.
தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் தொழுநோயாளர்களை கட்டித் தழுவி அரவணைத்து முத்தமிட்டார். மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். உடுத்துவதற்குக் கூட மாற்றுத் துணியின்றி வாழ்ந்தார். பிச்சை எடுத்து உண்டார். தான் பெற்ற உணவுப் பொருட்களை தன்னுடன் வாழ்ந்த தொழுநோயாளர்களுக்கும் கொடுத்து, அவர்களின் அன்பைப் பெற்றார். இவற்றைக் கண்ட பிரான்சிஸின் தந்தை மனமுடைந்து அழுது, பிரான்சிசை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் பிரான்சிசோ அதனை வெறுத்தார். இறைவனை விடாப்பிடியாக பற்றிக்கொண்டார். இறைவனைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். தான் கண்ட ஏழை மக்களிலும், கடவுளின் ஒவ்வொரு படைக்களிலும் இறைவனைக் கண்டார். படைப்புகள் அனைத்தையும் சகோதர, சகோதரியாகக் கொண்டார்.
தான் கண்ட அனைத்திலும் இறைவனை இறுகப் பற்றினார். கடினமான ஏழ்மையை தழுவி, நற்செய்தியின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்தார். அனைவருக்கும் இறைவனின் அன்பை போதித்தார். இவரின் வாழ்வால் ஏராளமான மக்கள் ஈர்க்கப்பட்டு, இவரை தொடர்ந்தார்கள். இவர்களை கொண்டு ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் துறவற சபையைத் தொடங்கினார். தன்னை பின்பற்றியவர்களுக்கு சிறந்த ஒழுங்கைக் கொடுத்து, இறைவனைப் பின்பற்ற செய்தார். பின்னர் திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று, அவ்வொழுக்கங்குகளை தன் சபையில் நிரந்தரமாக்கினார். இவர் இறைவன் மேல் கொண்ட அன்பாலும், பக்தியாலும் அல்வேர்னா என்றழைக்கப்பட்ட மலையில் இயேசுவின் 5 காய வரம் பெற்றார். கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளின் வழியாகத் தான் "மறு கிறிஸ்து" என்றே அழைக்கப்பட்டார்.
இவர் ஏற்படுத்திய துறவற சபையில் ஏராளமானோர் வந்து சேர்ந்தனர். இச்சபை உலகம் முழுவதிலும் பரவியது. துறவிகள் அல்லாத, பொதுமக்களுக்கென்றும், இவர் 3 ஆம் சபையை தோற்றுவித்தார். இவர் மனந்திரும்பிய நாளிலிருந்து, இறக்கும்வரை கடுந்துயருற்றார். ஆனால் சிறிதளவும் சோர்வடையாமல் இருந்தார். "என் உடலில் உள்ள தழும்புகள், நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்" என்று, இவர் தன்னுடன் வாழ்ந்த சகோதர, சகோதரிகளுக்கு அடிக்கடி கூறி, எப்போதும் இயேசுவின் ஊழியனாகவே வாழ்ந்து இறந்தார்.
செபம்:
ஆண்டவராகிய கடவுளே! அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஏழ்மையிலும், தாழ்ச்சியிலும், கிறிஸ்துவின் சாயலில் விளங்கச் செய்தீர். இப்புனிதரின் வழியில் நடந்து, மகிழ்விலும், அன்பிலும், உம் மகனைப் பின்பற்றி, உம்மோடு ஒன்றித்திருக்க வரம் தாரும்.
Back to top
அசிசி நகர் புனித பிரான்சிஸ்(சபைத் தலைவர்)
St. Francis of Assisi
நினைவுத்திருநாள் : அக்டோபர் 4
பிறப்பு : 1182, அசிசி, இத்தாலி
இறப்பு : 1226, அசிசி, இத்தாலி
புனிதர்பட்டம்: 16 ஜூலை 1228, திருத்தந்தை 9 ஆம் கிரகோரி
பாதுகாவல்: விலங்குகள், இயற்கை பாதுகாப்பு, பறவைகள், தலைவலியிலிருந்து, தொற்றுநோயிலிருந்து
இவர் ஒரு பெரிய பணக்காரரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதை பொறுப்பேற்ற முறையில் கழித்தார். தன் நண்பர்களுடன் சேர்ந்து, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். தான் விரும்பியவாறெல்லாம் வாழ்க்கையை அனுபவித்தார். பின்னர் ஒருநாள் சான் தமியானோ என்ற ஆலயத்திற்கு சென்றார். அப்போது இடிந்துபோன ஆலயத்திலிருந்த, சிலுவையானது அசிசியாரின் வாழ்வை மாற்றியது. அச்சிலுவையின் குரல் கேட்டு, பிரான்சிஸ் மனம் உடைந்தார். தான் வாழ்ந்த ஆடம்பர வாழ்வை நினைத்துப்பார்த்தார். மிகவும் வேதனையடைந்து அழுதார். தன்னுடைய பழைய வாழ்விலிருந்து விடுபட்டு, புதிய வாழ்வை வாழ முடிவெடுத்தார். தன்னுடைய தந்தையின் செல்வங்களை வெறுத்து ஒதுக்கினார். தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, தொழுநோயாளிகளின் மத்தியில் வாழ்ந்தார்.
தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் தொழுநோயாளர்களை கட்டித் தழுவி அரவணைத்து முத்தமிட்டார். மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். உடுத்துவதற்குக் கூட மாற்றுத் துணியின்றி வாழ்ந்தார். பிச்சை எடுத்து உண்டார். தான் பெற்ற உணவுப் பொருட்களை தன்னுடன் வாழ்ந்த தொழுநோயாளர்களுக்கும் கொடுத்து, அவர்களின் அன்பைப் பெற்றார். இவற்றைக் கண்ட பிரான்சிஸின் தந்தை மனமுடைந்து அழுது, பிரான்சிசை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் பிரான்சிசோ அதனை வெறுத்தார். இறைவனை விடாப்பிடியாக பற்றிக்கொண்டார். இறைவனைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். தான் கண்ட ஏழை மக்களிலும், கடவுளின் ஒவ்வொரு படைக்களிலும் இறைவனைக் கண்டார். படைப்புகள் அனைத்தையும் சகோதர, சகோதரியாகக் கொண்டார்.
தான் கண்ட அனைத்திலும் இறைவனை இறுகப் பற்றினார். கடினமான ஏழ்மையை தழுவி, நற்செய்தியின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்தார். அனைவருக்கும் இறைவனின் அன்பை போதித்தார். இவரின் வாழ்வால் ஏராளமான மக்கள் ஈர்க்கப்பட்டு, இவரை தொடர்ந்தார்கள். இவர்களை கொண்டு ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் துறவற சபையைத் தொடங்கினார். தன்னை பின்பற்றியவர்களுக்கு சிறந்த ஒழுங்கைக் கொடுத்து, இறைவனைப் பின்பற்ற செய்தார். பின்னர் திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று, அவ்வொழுக்கங்குகளை தன் சபையில் நிரந்தரமாக்கினார். இவர் இறைவன் மேல் கொண்ட அன்பாலும், பக்தியாலும் அல்வேர்னா என்றழைக்கப்பட்ட மலையில் இயேசுவின் 5 காய வரம் பெற்றார். கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளின் வழியாகத் தான் "மறு கிறிஸ்து" என்றே அழைக்கப்பட்டார்.
இவர் ஏற்படுத்திய துறவற சபையில் ஏராளமானோர் வந்து சேர்ந்தனர். இச்சபை உலகம் முழுவதிலும் பரவியது. துறவிகள் அல்லாத, பொதுமக்களுக்கென்றும், இவர் 3 ஆம் சபையை தோற்றுவித்தார். இவர் மனந்திரும்பிய நாளிலிருந்து, இறக்கும்வரை கடுந்துயருற்றார். ஆனால் சிறிதளவும் சோர்வடையாமல் இருந்தார். "என் உடலில் உள்ள தழும்புகள், நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்" என்று, இவர் தன்னுடன் வாழ்ந்த சகோதர, சகோதரிகளுக்கு அடிக்கடி கூறி, எப்போதும் இயேசுவின் ஊழியனாகவே வாழ்ந்து இறந்தார்.
செபம்:
ஆண்டவராகிய கடவுளே! அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஏழ்மையிலும், தாழ்ச்சியிலும், கிறிஸ்துவின் சாயலில் விளங்கச் செய்தீர். இப்புனிதரின் வழியில் நடந்து, மகிழ்விலும், அன்பிலும், உம் மகனைப் பின்பற்றி, உம்மோடு ஒன்றித்திருக்க வரம் தாரும்.
Back to top
5 அக்டோபர்
மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா (கன்னியர்)
நினைவுத் திருநாள் : 5 அக்டோபர்
பிறப்பு: 25 ஆகஸ்ட், 1905, குலோகோவிச், உருசிய பேரரசு
இறப்பு : 5 அக்டோபர், 1938(அகவை 33)கார்க்கோ, போலந்து
அருளாளர் பட்டம் : 18 ஏப்ரல் 1993
(திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்)
புனிதர் பட்டம் : 30 ஏப்ரல் 2000,வத்திக்கான்
(திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்)
பாதுகாவல் : உலக இளையோர் நாள்
மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா (ஆகஸ்ட் 25 1905 - அக்டோபர் 5 1938), போலந்து நாட்டில் பிறந்த கத்தோலிக்க அருட்சகோதரியும், இறைக்காட்சியாளரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இக்காட்சிகளை இவர் தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார்.
இக்குறிப்புகள் பின்னாளில்Diary: Divine Mercy in My Soul என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
தனது 20ஆம் அகவையில் வார்சாவிலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாளில் ப்லாக் நகருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு மிக்கேல் ஸ்போகோ என்பவர் ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். இவரின் துணையாலேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் படம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் (உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு)
திருப்பலியில் இவரால் அப்படம் பயன்படுத்தப்பட்டது.
இவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரின் செய்தி சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது.
அவ்வன்னமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின் இவரின் பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபையினால் தடைசெய்யப்பட்டது. 1978ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் பொதுவுடமை வாதம் தழைக்க துவங்கியதாலும் வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும் போது பிழை ஏற்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும் அது கண்டு பிடிக்கப்பட்டதினால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இவருக்கு 30 ஏப்ரல் 2000 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரின் விழா நாள் அக்டோபர் 5 ஆகும்.
*********************
புனித புளோரா St.Flora, Virgin
பிறப்பு
1309,
பிரான்ஸ்
இறப்பு
1347
பாதுகாவல்: தனிமையில் வாழும் பெண்கள்,கைவிடப்பட்டவர்கள்
இவர் பெற்றோர் இவரை, சிறு வயதிலிருந்தே பக்தியில் வளர்த்தனர். இவர் வளர்ந்த பின்னர், இவரின் பெற்றோர், இவரை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த புளோரா பெற்றோரை எதிர்த்தார். தான் பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி, தாதியர் படிப்பைப் படிக்க சென்றார். 1324 ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனித ஜான் மருத்துவ பள்ளியில் தனது படிப்பை முடித்தார். பிறகு அவர் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டார். மன
அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார். பிறகு துறவறத்தைச் சார்ந்த அருட்சகோதரிகளால் கவனிக்கப்பட்டு, கடவுளின் அருளால் குணம் பெற்றார்.
புளோரா பலமுறை இறைவனிடமிருந்து காட்சிகளைப் பெற்றார். ஒருமுறை அனைத்துப் புனிதர்களின் விழாவன்று, சுவையான உணவுகளை உண்ணமாட்டேனென்றும், கடவுளின் அருளை மேலும் பெற, உண்ணா நோன்பு
இருப்பேனென்றும், தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டார். பின்னர் ஒருமுறை செபித்துக்கொண்டிருக்கும்போது, தூய
ஆவியால் தூண்டப்பட்டு, தரையிலிருந்து நான்கு அடி உயரத்திற்கு பறந்தார். என்று, அங்கு கூடியிருந்தோர் தெரிவித்தனர்.
இயேசுவின் திருக்காயங்களிலிருந்து வழிந்தோடிய, திரு இரத்தத்தைப்போலவே, இவரின் கைகளிலிருந்தும், வழிந்தோடியது என்று கூறப்படுகின்றது. இறைவனிடமிருந்து பெற்ற தீர்க்கதரிசனத்தால் எதிர் காலத்தில், என்ன
நடக்க உள்ளது என்பதை, முன்னதாகவே அறிவித்தார். இவர் மிகவும் எளிமையானவாழ்வை வாழ்ந்தார். இயேசுவின் திருவுடலைப் பெற்றபின், தாழ்ச்சியோடு, தன்னை அவரிடம் அர்ப்பணித்தார். இறைவனிடம் இவர் கொண்டிருந்த
பக்தியையும், விசுவாசத்தையும் கண்டு, இவரை பலர், தங்களது ஆன்மீக வழிகாட்டியாகத் தேர்த்தெடுத்தனர். இவர் வாழ்ந்தபோதும், இறந்தபின்பும் பல அற்புதங்களை செய்தார்.
செபம்:
வழிநடத்தும் தெய்வமே! எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றை, முங்கூட்டியே அறிவிக்கும் பேற்றை புனித புளோராவிற்கு அருளினீர். பலரின் வாழ்வில், ஆன்மாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த இப்புனிதரைப்போல இன்றும் ஆன்மீக
வழிகாட்டிகளாக திகழும். உம் சீடர்களை, உம் பாதுகாப்பில் வைத்து வழிநடத்தும் தூய ஆவியின் அருளையும், வரங்களையும், கொடையையும் பொழிந்து, வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா (கன்னியர்)
நினைவுத் திருநாள் : 5 அக்டோபர்
பிறப்பு: 25 ஆகஸ்ட், 1905, குலோகோவிச், உருசிய பேரரசு
இறப்பு : 5 அக்டோபர், 1938(அகவை 33)கார்க்கோ, போலந்து
அருளாளர் பட்டம் : 18 ஏப்ரல் 1993
(திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்)
புனிதர் பட்டம் : 30 ஏப்ரல் 2000,வத்திக்கான்
(திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்)
பாதுகாவல் : உலக இளையோர் நாள்
மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா (ஆகஸ்ட் 25 1905 - அக்டோபர் 5 1938), போலந்து நாட்டில் பிறந்த கத்தோலிக்க அருட்சகோதரியும், இறைக்காட்சியாளரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இக்காட்சிகளை இவர் தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார்.
இக்குறிப்புகள் பின்னாளில்Diary: Divine Mercy in My Soul என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
தனது 20ஆம் அகவையில் வார்சாவிலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாளில் ப்லாக் நகருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு மிக்கேல் ஸ்போகோ என்பவர் ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். இவரின் துணையாலேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் படம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் (உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு)
திருப்பலியில் இவரால் அப்படம் பயன்படுத்தப்பட்டது.
இவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரின் செய்தி சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது.
அவ்வன்னமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின் இவரின் பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபையினால் தடைசெய்யப்பட்டது. 1978ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் பொதுவுடமை வாதம் தழைக்க துவங்கியதாலும் வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும் போது பிழை ஏற்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும் அது கண்டு பிடிக்கப்பட்டதினால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இவருக்கு 30 ஏப்ரல் 2000 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரின் விழா நாள் அக்டோபர் 5 ஆகும்.
*********************
புனித புளோரா St.Flora, Virgin
பிறப்பு
1309,
பிரான்ஸ்
இறப்பு
1347
பாதுகாவல்: தனிமையில் வாழும் பெண்கள்,கைவிடப்பட்டவர்கள்
இவர் பெற்றோர் இவரை, சிறு வயதிலிருந்தே பக்தியில் வளர்த்தனர். இவர் வளர்ந்த பின்னர், இவரின் பெற்றோர், இவரை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த புளோரா பெற்றோரை எதிர்த்தார். தான் பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி, தாதியர் படிப்பைப் படிக்க சென்றார். 1324 ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனித ஜான் மருத்துவ பள்ளியில் தனது படிப்பை முடித்தார். பிறகு அவர் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டார். மன
அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார். பிறகு துறவறத்தைச் சார்ந்த அருட்சகோதரிகளால் கவனிக்கப்பட்டு, கடவுளின் அருளால் குணம் பெற்றார்.
புளோரா பலமுறை இறைவனிடமிருந்து காட்சிகளைப் பெற்றார். ஒருமுறை அனைத்துப் புனிதர்களின் விழாவன்று, சுவையான உணவுகளை உண்ணமாட்டேனென்றும், கடவுளின் அருளை மேலும் பெற, உண்ணா நோன்பு
இருப்பேனென்றும், தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டார். பின்னர் ஒருமுறை செபித்துக்கொண்டிருக்கும்போது, தூய
ஆவியால் தூண்டப்பட்டு, தரையிலிருந்து நான்கு அடி உயரத்திற்கு பறந்தார். என்று, அங்கு கூடியிருந்தோர் தெரிவித்தனர்.
இயேசுவின் திருக்காயங்களிலிருந்து வழிந்தோடிய, திரு இரத்தத்தைப்போலவே, இவரின் கைகளிலிருந்தும், வழிந்தோடியது என்று கூறப்படுகின்றது. இறைவனிடமிருந்து பெற்ற தீர்க்கதரிசனத்தால் எதிர் காலத்தில், என்ன
நடக்க உள்ளது என்பதை, முன்னதாகவே அறிவித்தார். இவர் மிகவும் எளிமையானவாழ்வை வாழ்ந்தார். இயேசுவின் திருவுடலைப் பெற்றபின், தாழ்ச்சியோடு, தன்னை அவரிடம் அர்ப்பணித்தார். இறைவனிடம் இவர் கொண்டிருந்த
பக்தியையும், விசுவாசத்தையும் கண்டு, இவரை பலர், தங்களது ஆன்மீக வழிகாட்டியாகத் தேர்த்தெடுத்தனர். இவர் வாழ்ந்தபோதும், இறந்தபின்பும் பல அற்புதங்களை செய்தார்.
செபம்:
வழிநடத்தும் தெய்வமே! எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றை, முங்கூட்டியே அறிவிக்கும் பேற்றை புனித புளோராவிற்கு அருளினீர். பலரின் வாழ்வில், ஆன்மாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த இப்புனிதரைப்போல இன்றும் ஆன்மீக
வழிகாட்டிகளாக திகழும். உம் சீடர்களை, உம் பாதுகாப்பில் வைத்து வழிநடத்தும் தூய ஆவியின் அருளையும், வரங்களையும், கொடையையும் பொழிந்து, வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
அக்டோபர் 6
புனித புரூனோ
St. Bruno
நினைவுத் திருநாள் : அக்டோபர் 6
பிறப்பு : 1030, கொலோன் Köln, ஜெர்மனி
இறப்பு : 6 அக்டோபர், செர்ரா சான் புரூனோ Serra San Bruno
புனிதர்பட்டம்: 17 பிப்ரவரி 1623, திருத்தந்தை 15 ஆம் கிரகோரி
பாதுகாவல்: கலாப்ரியா நகர்(Calabria)
இவர் தனது கல்வியை பிரான்சிலுள்ள ரைம்ஸ் (Rheims) நகரில் முடித்தார். 1056 ஆம் ஆண்டு ரைம்சில் இறையியல் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது அக்கல்லூரியின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பையும் ஏற்றார். பின்னர் 1075 ஆம் ஆண்டில் ரைம்சில் ஆலய நிர்வாகியாக (Chancellor) நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 1088 ல் திருத்தந்தை 2 ஆம் ஊர்பான் (Urban II) அவர்களுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இவர் மிக தைரியத்துடன் விசுவாசத்தை அறிவித்தார். திருச்சபையில் சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். பல புத்தகங்களை எழுதினார். இவரின் இளமைப் பருவ வாழ்வைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவர் புனித பவுலைப் பற்றியும், திருப்பாடல்களைப் பற்றியும் Commentary on St. Paul and Psalms) எழுதிய புத்தகம் புகழ்பெற்றது.
திருச்சபையில் திருத்தந்தைக்கு எதிராக நடக்கும் அநீதிகளை அகற்ற, திருத்தந்தை 7 ஆம் கிரகோரிக்கு பெரிதளவில் உதவினார். இறைவனின் மேல் கொண்ட பற்றால், கர்த்தூசியன் (Carthusian) சபையை தொடங்கினார். இச்சபை தொடங்கிய காலத்தில், திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1514 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தை 10 ஆம் லியோ மீண்டும் அச்சபையை ஊக்கமூட்டி வளர்த்தெடுத்தார்.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! சிறந்த அறிவாளியான புனித புரூனோவை, எம் திருச்சபைக்கு, கொடையாகத் தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அற்புதமான முறைய்ல் பணியை ஆற்றிய புரூனோவைப்போல, நீர் எமக்குத் தந்த அறிவை பயன்படுத்தி, சிறப்பாக செயல்பட உம் ஆசீரைத் தாரும்.
Back to top
அக்டோபர் 7
ஜெபமாலை மாதாவின் திருநாள்.
ஜெபமாலை செபிப்பது மற்றும் செபமாலையின் வகைகளைக் குறித்து அறிய, இங்கே சொடுக்கவும்
ஜெபமாலை மாதாவின் திருப்புகழ்மாலை மற்றும் வரலாற்றைக் குறித்து அறிய, இங்கே சொடுக்கவும்
ஜெபமாலை மாதாவின் வணக்க மாதம் குறித்த தியானங்களுக்கு, இங்கே சொடுக்கவும்
புனிதர்
மறைசாட்சி எர்னஸ்ட்
Ernst von Neresheim OSB
நினைவுத் திருநாள் : அக்டோபர் 7
பிறப்பு : 11 ஆம் நூற்றாண்டு, ஜெர்மனி
இறப்பு : 7 அக்டோபர் 1148, மெக்கா, சவுதி அரேபியா
இவர் ஜெர்மனியிலுள்ள அவுக்ஸ்பூர்க்கில் (Augsburg) 1119 ஆம் ஆண்டு பெனடிக்டின் துறவற மடத்தில் சேர்ந்தார். இவர் நேரஸ்ஹைம் என்ற ஊரில் பெனடிக்டின் துறவற இல்லம் ஒன்றையும் துவங்கினார்.
நாளடைவில் இத்துறவற இல்லத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் புனித நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அவ்வேளையில் இவர் சிறைபிடித்து செல்லப்பட்டார். பின்னர் மெக்காவில் வைத்து சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். அச்சமயத்தில் பல துன்பங்களின் மத்தியில் கொலை செய்யப்பட்டார்.
செபம்:
இரக்கமே உருவான இறைவா! புனித பெனடிக்டின் சபையில் உழைத்து மரித்த ஒவ்வொரு துறவிகளையும், உமது வான் வீட்டில் சேர்த்தருளும். இவர்களின் இறைவேண்டலால் அச்சபையை தொடர்ந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித பெலாகியா
St. Pelagia
நினைவுத் திருநாள் : அக்டோபர் 8
பிறப்பு :14 ஆம் நூற்றாண்டு(?)
இறப்பு : 14 ஆம் நூற்றாண்டு, அந்தியோக்கியா
இவர் மார்கரேட் என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். இவர் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணாக திகழ்ந்தார். இவர் அந்தியோக்கியாவில் சிறந்த நடிகையாக இருந்தார். அப்போது பெலாகியா தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்தார். அச்சமயத்தில் ஒருநாள் அந்தியோக்கியாவில் நடித்து கொண்டிருக்கும் போது குருவாக இருந்த புனித நானூஸ் (St. Nannus) அவரைக் கடந்து சென்றார். அவரைப் பார்த்த பெலாகியாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டது. உடனே நடிக்கும் பணியை விட்டு விட்டு , நானூஸ் போதித்து கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்று, அவரின் மறையுரையை கேட்டார்.
அம்மறையுரையானது இவரின் மனதை மிகவும் பாதித்தது. அவர் மனமுடைந்து, நானூஸ் அவர்களிடம் மனம் நொந்து அழுது, தனது வேதனைகளை பகிர்ந்தார். பின்னர் மனமாற்றம் பெற்று, திருமுழுக்குப் பெற்று, தனது நடிகைப் பணியை விட்டு விட்டு, கடவுளுக்காக வாழ முடிவெடுத்தார்.தன்னிடமிருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்கு கொடுத்தார். அந்தியோக்கியாவிலிருந்து வெளியேறி, ஆண்கள் உடுத்தும் துறவற உடையை அணிந்து வாழ்ந்தார்.
பின்னர் எருசலேமிலிருந்த ஒலிவியட் (Olivette) என்றழைக்கப்பட்ட மலையில் குகையில் வாழ்ந்த துறவிகளுடன் சேர்ந்து, தானும் ஓர் துறவியாக வாழ்ந்தார். மிகக் கடினமான ஏழ்மையை தன் வாழ்வின் மனமாற்றத்திற்குப்பின் வாழ்ந்தார். இவர் அங்கிருந்தவர்களால் " தாடியில்லா துறவி" (Beardless Monk)என்றழைக்கப்பட்டார். இவர் தன்னுடன், தன்னைப் போன்று வாழ்ந்த, சில இளம்பெண்களின் வாழ்வையும் மாற்றி, அவர்களையும் துறவற வாழ்வை வாழ அழைத்தார். இறுதியில் ஏறக்குறைய 15 இளம் பெண்களும் இவருடன் சேர்ந்து, துறவிகளாக வாழ்ந்து, தங்களின் வாழ்வின் இறுதிவரை, கடவுளுக்காக வாழ்ந்தார். தங்களின் பேச்சிலும், செயல்களிலும் இறைவனை மட்டுமே முன்வைத்து வாழ்ந்தனர்.
செபம்:
வாழ்வை மாற்றுபவரே எம் இறைவா! தன்னுடைய அழகு, பணம், பொருள் அனைத்தையும் குப்பையென கருதி உம்மை பற்றிக்கொண்டு, மனமாற்றம் பெற்று, வாழ்ந்த, புனித பெலாகியாவைப்போல, நாங்களும் எங்களின் தீயச் செயல்களிலிருந்து மனமாற்றம் பெற்று, எம்மால் இயன்றவரை, மற்றவர்களுக்காகநாங்கள் வாழ, எம்மை மாற்றியருளும்.
Back to top
St. Pelagia
நினைவுத் திருநாள் : அக்டோபர் 8
பிறப்பு :14 ஆம் நூற்றாண்டு(?)
இறப்பு : 14 ஆம் நூற்றாண்டு, அந்தியோக்கியா
இவர் மார்கரேட் என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். இவர் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணாக திகழ்ந்தார். இவர் அந்தியோக்கியாவில் சிறந்த நடிகையாக இருந்தார். அப்போது பெலாகியா தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்தார். அச்சமயத்தில் ஒருநாள் அந்தியோக்கியாவில் நடித்து கொண்டிருக்கும் போது குருவாக இருந்த புனித நானூஸ் (St. Nannus) அவரைக் கடந்து சென்றார். அவரைப் பார்த்த பெலாகியாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டது. உடனே நடிக்கும் பணியை விட்டு விட்டு , நானூஸ் போதித்து கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்று, அவரின் மறையுரையை கேட்டார்.
அம்மறையுரையானது இவரின் மனதை மிகவும் பாதித்தது. அவர் மனமுடைந்து, நானூஸ் அவர்களிடம் மனம் நொந்து அழுது, தனது வேதனைகளை பகிர்ந்தார். பின்னர் மனமாற்றம் பெற்று, திருமுழுக்குப் பெற்று, தனது நடிகைப் பணியை விட்டு விட்டு, கடவுளுக்காக வாழ முடிவெடுத்தார்.தன்னிடமிருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்கு கொடுத்தார். அந்தியோக்கியாவிலிருந்து வெளியேறி, ஆண்கள் உடுத்தும் துறவற உடையை அணிந்து வாழ்ந்தார்.
பின்னர் எருசலேமிலிருந்த ஒலிவியட் (Olivette) என்றழைக்கப்பட்ட மலையில் குகையில் வாழ்ந்த துறவிகளுடன் சேர்ந்து, தானும் ஓர் துறவியாக வாழ்ந்தார். மிகக் கடினமான ஏழ்மையை தன் வாழ்வின் மனமாற்றத்திற்குப்பின் வாழ்ந்தார். இவர் அங்கிருந்தவர்களால் " தாடியில்லா துறவி" (Beardless Monk)என்றழைக்கப்பட்டார். இவர் தன்னுடன், தன்னைப் போன்று வாழ்ந்த, சில இளம்பெண்களின் வாழ்வையும் மாற்றி, அவர்களையும் துறவற வாழ்வை வாழ அழைத்தார். இறுதியில் ஏறக்குறைய 15 இளம் பெண்களும் இவருடன் சேர்ந்து, துறவிகளாக வாழ்ந்து, தங்களின் வாழ்வின் இறுதிவரை, கடவுளுக்காக வாழ்ந்தார். தங்களின் பேச்சிலும், செயல்களிலும் இறைவனை மட்டுமே முன்வைத்து வாழ்ந்தனர்.
செபம்:
வாழ்வை மாற்றுபவரே எம் இறைவா! தன்னுடைய அழகு, பணம், பொருள் அனைத்தையும் குப்பையென கருதி உம்மை பற்றிக்கொண்டு, மனமாற்றம் பெற்று, வாழ்ந்த, புனித பெலாகியாவைப்போல, நாங்களும் எங்களின் தீயச் செயல்களிலிருந்து மனமாற்றம் பெற்று, எம்மால் இயன்றவரை, மற்றவர்களுக்காகநாங்கள் வாழ, எம்மை மாற்றியருளும்.
Back to top
அக்டோபர் 9
புனித ஜான் லியோனார்டி, சபை நிறுவுனர்
St. John Leonardi SP
நினைவுத்திருநாள் : அக்டோபர் 9
பிறப்பு : 1541, டஸ்கனி Tuscany, இத்தாலி
இறப்பு : 9 அக்டோபர் 1609, உரோம்
முத்திபேறுபட்டம்: 1861, திருத்தந்தை 9 ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 1938, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: மருந்தகங்கள்
இவர் மருந்து தயாரித்து விற்கும் கலையை கற்றார். ஆனால் அப்பணியை செய்ய விருப்பமில்லாமல் இருந்தார். இவரின் மனம் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டது. எனவே அப்பணியை விட்டுவிட்டு, 1572 ஆம் ஆண்டு குருவானார். பிறகு மறைப்பணியை ஆற்றினார். முக்கியமாக இவர் தானாகவே முன்வந்து சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தார். இவர் 1574 ஆம் ஆண்டில் இறையன்னையின் பெயரால், துறவற சபை ஒன்றை நிறுவினார். இதனால் பல இன்னல்களை மேற்கொண்டார். இடையூறுகளால் மிகவும் பாதிக்கப்பட்டார். இருப்பினும், திருமறையை பரப்புவதற்கென்று, மீண்டும் மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தினார். உரோம் நகரிலுள்ள "திருமுறைப் பரப்புதலின் பேராயம்" என்ற நிறுவனத்திற்கும் அடித்தளம் இட்டார்.
திருத்தந்தையர்கள் பலரின் முயற்சியால் இச்சபைகள் அனைத்தும், இன்று சிறப்பாக செயல்படுகின்றது. திருச்சபையில் உள்ள பல சபைகள் மீண்டும் தங்களின் ஒழுங்குமுறைப்படி செயல்பட, இவர் பரிவன்புடனும், முன்மதியுடனும் செயல்பட்டார். இவையனைத்தையும் நிறைவேற்றி வெற்றி பெற பல துன்பங்களையும் பொறுமையோடு ஏற்று, எளிமையாக வாழ்ந்தார். 1614 ஆம் ஆண்டு திருத்தந்தை 5 ஆம் பவுல் இச்சபைகள் முழுமையாக செயல்பட அதிகாரம் வழங்கினார்.
செபம்:
மூவொரு கடவுளே! மனிதனின் நோய்கலை குணமாக்கும் மருந்து தயாரிப்பவர்களை நீர் கண்ணோக்கியருளும். தங்களின் பணியில் கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்பட, உம் சக்தியை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித ஜான் லியோனார்டி, சபை நிறுவுனர்
St. John Leonardi SP
நினைவுத்திருநாள் : அக்டோபர் 9
பிறப்பு : 1541, டஸ்கனி Tuscany, இத்தாலி
இறப்பு : 9 அக்டோபர் 1609, உரோம்
முத்திபேறுபட்டம்: 1861, திருத்தந்தை 9 ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 1938, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: மருந்தகங்கள்
இவர் மருந்து தயாரித்து விற்கும் கலையை கற்றார். ஆனால் அப்பணியை செய்ய விருப்பமில்லாமல் இருந்தார். இவரின் மனம் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டது. எனவே அப்பணியை விட்டுவிட்டு, 1572 ஆம் ஆண்டு குருவானார். பிறகு மறைப்பணியை ஆற்றினார். முக்கியமாக இவர் தானாகவே முன்வந்து சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தார். இவர் 1574 ஆம் ஆண்டில் இறையன்னையின் பெயரால், துறவற சபை ஒன்றை நிறுவினார். இதனால் பல இன்னல்களை மேற்கொண்டார். இடையூறுகளால் மிகவும் பாதிக்கப்பட்டார். இருப்பினும், திருமறையை பரப்புவதற்கென்று, மீண்டும் மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தினார். உரோம் நகரிலுள்ள "திருமுறைப் பரப்புதலின் பேராயம்" என்ற நிறுவனத்திற்கும் அடித்தளம் இட்டார்.
திருத்தந்தையர்கள் பலரின் முயற்சியால் இச்சபைகள் அனைத்தும், இன்று சிறப்பாக செயல்படுகின்றது. திருச்சபையில் உள்ள பல சபைகள் மீண்டும் தங்களின் ஒழுங்குமுறைப்படி செயல்பட, இவர் பரிவன்புடனும், முன்மதியுடனும் செயல்பட்டார். இவையனைத்தையும் நிறைவேற்றி வெற்றி பெற பல துன்பங்களையும் பொறுமையோடு ஏற்று, எளிமையாக வாழ்ந்தார். 1614 ஆம் ஆண்டு திருத்தந்தை 5 ஆம் பவுல் இச்சபைகள் முழுமையாக செயல்பட அதிகாரம் வழங்கினார்.
செபம்:
மூவொரு கடவுளே! மனிதனின் நோய்கலை குணமாக்கும் மருந்து தயாரிப்பவர்களை நீர் கண்ணோக்கியருளும். தங்களின் பணியில் கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்பட, உம் சக்தியை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
அக்டோபர் 10
புனித பிரான்சிஸ் போர்ஜியா
St. Francis Borgia, Confessor & Priest
நினைவுத் திருநாள் : அக்டோபர் 10
பிறப்பு : 1510, வாலென்சியா Valencia, ஸ்பெயின்
இறப்பு : 1573, உரோம்
முத்திபேறுபட்டம்: 23 நவம்பர் 1624, திருத்தந்தை 8 ஆம் ஊர்பான்
புனிதர்பட்டம்: 20 ஜூன் 1670, திருத்தந்தை 10 கிளமெண்ட்
பாதுகாவல்: போர்த்துக்கல் நாடு, பூகம்பத்திலிருந்து
பிரான்சிஸ் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தார். இவர் திருமணமானவர். இவரின் மனைவி எலியானோர் (Eleanor) என்பவர். இவருக்கு எட்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தனர். இவர் தனது குடும்பத்துடன் இணைந்து, தவறாமல் திருப்பலிக்கு சென்றார். ஒவ்வொரு முறையும் திவ்விய நற்கருணையை மிக பக்தியோடு பெற்றார். இவர் அடக்கமான, அன்பான வாழ்வை வாழ்ந்தார். ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக தனது சொத்துக்களையும், பதவியையும், தன் மகன் சார்லஸ்சிடம் ஒப்படைத்துவிட்டு, இயேசு சபையில் சேர்ந்து குருவானார்.
இவர் குருப்பட்டம் பெற்றபின், முதல் திருப்பலியை மிக ஆடம்பரமாக சிறப்பித்தார். இவரின் இயேசு சபை தலைவர் பிரான்சிசை சோதிக்கும் நோக்குடனும் அவரின் ஆன்மீக வாழ்வை அறியவும், சபை தலைவர் இவ்வாறு சிறப்பித்தார். ஆனால் பிரான்சிசின் எளிமையையும், தாழ்ச்சியையும் கண்டு, சபைத் தலைவரே தனது செயலை நினைத்து தலைக்குனிந்தார். பிரான்சிஸ் குருவாக இருந்தபோதும், காடுகளுக்குச் சென்று, விறகு பொறுக்கி கொண்டுவந்து, கொடுத்து, சமைப்பதற்கு எப்போதும் உதவினார். உணவு பந்தியில் தாழ்ச்சியோடு தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதன்பின்னர் மண்டியிட்டு மற்ற குருக்களிடம் உணவு தருமாறு கெஞ்சிகேட்டு வாங்கி உண்டார்.
இவருடன் இருந்த குருக்கள், பல வழிகளில் இவரை கோபமூட்டினர். ஆனால் பிரான்சிஸ் கோபம் கொள்ளாமல், அனைவரிடத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பாகவே நடந்துக்கொண்டார். அவர் தனது குருத்து வாழ்வில் ஒரு முறை மட்டும் பிறர் தனக்கு மரியாதை கொடுத்த காரணத்திற்காக கோபப்பட்டுள்ளார். இவர் தனது வாழ்வு முறையால் இயேசு சபை ஸ்பெயின், மற்றும் போர்த்துக்கல் நாடு முழுவதிலும் பரப்பியது. இவரின் அற்புதமான, அழகான வேலையைக் கண்டு, அந்நாட்டு இளைஞர்கள் பலபேர். அச்சபையில் சேர்ந்து குருவாகி பிரான்சிசைப் போலவே வாழ்ந்தனர். இவரின் எளிமையான வாழ்வால், பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், இயேசு சபை உலகம் முழுவதிலும் பரவியது. இயேசுவின் இறைப்பணியை இக்குருக்கள் திருச்சபையில் சிறப்பாக ஆற்றினர். இவ்வெற்றியனைத்தும் அருள்தந்தை பிரான்சிசைச் சார்ந்தது.
செபம்:
விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் ஒருபோதும், பெற்றுக் கொள்ளாதவரே தெய்வமே! இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தையும் துறந்து, தாழ்ச்சியோடும், எளிமையோடும் வாழ்ந்த புனித பிரான்சிஸ் போர்ஜியாவின், முன்மாதிரியான வாழ்வை, நாங்களும் பின்பற்றி ஏழ்மையை ஆடையாக உடுத்தி வாழ, வரம் தர இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
Back to top
புனித பிரான்சிஸ் போர்ஜியா
St. Francis Borgia, Confessor & Priest
நினைவுத் திருநாள் : அக்டோபர் 10
பிறப்பு : 1510, வாலென்சியா Valencia, ஸ்பெயின்
இறப்பு : 1573, உரோம்
முத்திபேறுபட்டம்: 23 நவம்பர் 1624, திருத்தந்தை 8 ஆம் ஊர்பான்
புனிதர்பட்டம்: 20 ஜூன் 1670, திருத்தந்தை 10 கிளமெண்ட்
பாதுகாவல்: போர்த்துக்கல் நாடு, பூகம்பத்திலிருந்து
பிரான்சிஸ் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தார். இவர் திருமணமானவர். இவரின் மனைவி எலியானோர் (Eleanor) என்பவர். இவருக்கு எட்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தனர். இவர் தனது குடும்பத்துடன் இணைந்து, தவறாமல் திருப்பலிக்கு சென்றார். ஒவ்வொரு முறையும் திவ்விய நற்கருணையை மிக பக்தியோடு பெற்றார். இவர் அடக்கமான, அன்பான வாழ்வை வாழ்ந்தார். ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக தனது சொத்துக்களையும், பதவியையும், தன் மகன் சார்லஸ்சிடம் ஒப்படைத்துவிட்டு, இயேசு சபையில் சேர்ந்து குருவானார்.
இவர் குருப்பட்டம் பெற்றபின், முதல் திருப்பலியை மிக ஆடம்பரமாக சிறப்பித்தார். இவரின் இயேசு சபை தலைவர் பிரான்சிசை சோதிக்கும் நோக்குடனும் அவரின் ஆன்மீக வாழ்வை அறியவும், சபை தலைவர் இவ்வாறு சிறப்பித்தார். ஆனால் பிரான்சிசின் எளிமையையும், தாழ்ச்சியையும் கண்டு, சபைத் தலைவரே தனது செயலை நினைத்து தலைக்குனிந்தார். பிரான்சிஸ் குருவாக இருந்தபோதும், காடுகளுக்குச் சென்று, விறகு பொறுக்கி கொண்டுவந்து, கொடுத்து, சமைப்பதற்கு எப்போதும் உதவினார். உணவு பந்தியில் தாழ்ச்சியோடு தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதன்பின்னர் மண்டியிட்டு மற்ற குருக்களிடம் உணவு தருமாறு கெஞ்சிகேட்டு வாங்கி உண்டார்.
இவருடன் இருந்த குருக்கள், பல வழிகளில் இவரை கோபமூட்டினர். ஆனால் பிரான்சிஸ் கோபம் கொள்ளாமல், அனைவரிடத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பாகவே நடந்துக்கொண்டார். அவர் தனது குருத்து வாழ்வில் ஒரு முறை மட்டும் பிறர் தனக்கு மரியாதை கொடுத்த காரணத்திற்காக கோபப்பட்டுள்ளார். இவர் தனது வாழ்வு முறையால் இயேசு சபை ஸ்பெயின், மற்றும் போர்த்துக்கல் நாடு முழுவதிலும் பரப்பியது. இவரின் அற்புதமான, அழகான வேலையைக் கண்டு, அந்நாட்டு இளைஞர்கள் பலபேர். அச்சபையில் சேர்ந்து குருவாகி பிரான்சிசைப் போலவே வாழ்ந்தனர். இவரின் எளிமையான வாழ்வால், பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், இயேசு சபை உலகம் முழுவதிலும் பரவியது. இயேசுவின் இறைப்பணியை இக்குருக்கள் திருச்சபையில் சிறப்பாக ஆற்றினர். இவ்வெற்றியனைத்தும் அருள்தந்தை பிரான்சிசைச் சார்ந்தது.
செபம்:
விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் ஒருபோதும், பெற்றுக் கொள்ளாதவரே தெய்வமே! இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தையும் துறந்து, தாழ்ச்சியோடும், எளிமையோடும் வாழ்ந்த புனித பிரான்சிஸ் போர்ஜியாவின், முன்மாதிரியான வாழ்வை, நாங்களும் பின்பற்றி ஏழ்மையை ஆடையாக உடுத்தி வாழ, வரம் தர இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
Back to top
அக்டோபர் 11
புனித இருபத்தி மூன்றாம் அருளப்பர்
St. John 23rd
நினைவுத்திருநாள் : அக்டோபர் 11
பிறப்பு: 25நவம்பர், 1881, சோத்தோ இல் மோந்தே, இத்தாலியா
இறப்பு: 3ஜூன்,1963(அகவை 81) வத்திக்கான் நகரம்
குருத்துவத் திருநிலைப்பாடு: 10 ஆகஸ்ட், 1904 ஜூசேப்பே செப்பெத்தெல்லி
ஆயர்நிலை திருப்பொழிவு: 19 மார்ச்,1925, ஜோவான்னி தாச்சி போர்ச்செல்லி
கர்தினாலாக உயர்த்தப்பட்டது: 12 ஜனவரி,1953
திருத்தந்தையாக இருந்த காலம்: 28 அக்டோபர் 1958 முதல் 3 ஜூன் 1963 வரை
முத்திப்பேறு: 3 செப்டம்பர், 2000(இரண்டாம் யோவான் பவுல்)
புனிதர் பட்டம்: 27 ஏப்ரல், 2014 புனித பேதுரு பேராலயம்,வத்திக்கான் (திருத்தந்தை பிரான்சிசு)
திருத்தந்தை புனித இருபத்தி மூன்றாம் யோவான் அல்லது இருபத்தி மூன்றாம் அருளப்பர் (Pope John XXIII) கத்தோலிக்க திருச்சபையின் 261ஆம் திருத்தந்தையாக 1958-1963 காலக்கட்டத்தில் திருப்பணிச் செய்தவர்.
இவர் 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகள் மட்டுமே திருப்பணிச் செய்தார். அக்குறுகிய பணிக்காலத்தில் இவர் 20ஆம் நூற்றாண்டுத் திருச்சபையில் நடந்த மிக முக்கிய நிகழ்வாகிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை (1962-1965) கூட்டினார். ஆனால் அச்சங்கம் நிறைவுறுவதற்கு முன்னரே, 1963ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் நாள் இறந்தார்.
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கும் திருத்தந்தை ஒன்பதாம் பயசுக்கும் 2000ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3ஆம் நாள் முத்திப்பேறு பட்டம் அளித்தார்.திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலோடு இவருக்கும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் புனிதர்பட்டமளிக்கப்பட்டது.
ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி இத்தாலி நாட்டைச் சேர்ந்த லொம்பார்டி மாநிலத்தில் பெர்கமோ என்னும் பகுதியைச் சார்ந்த சோத்தோ இல் மோந்தே (Sotto il Monte) என்னும் சிற்றூரில் பிறந்தார். அவருடைய தந்தை ஜோவான்னி பத்தீஸ்தா ரொங்கால்லி (1854-1935), தாயார் மரியான்னா ஜூலியா (1854-1939). அவர்களுக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளுள் ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி நான்காமவர். அவருடைய உடன்பிறப்புகள்:
• அல்ஃப்ரேடோ (பிறப்பு: 1889)
• மரியா கத்தரீனா (1877-1883)
• தெரேசா (1879-1954)
• அன்சீல்லா (1880-1953)
• தொமேனிக்கோ ஜூசேப்பே (பெப்ருவரி 22, 1888 - மார்ச் 14, 1888)
• பிரான்செஸ்கோ சவேரியோ (1883-1976)
• மரியா எலீசா (1884-1955)
• அஸ்ஸூந்தா கசீல்தா (பிறப்பு: 1886)
• ஜோவான்னி பிரான்செஸ்கோ (1891-1956)
• என்றீக்கா (1893-1918)
• ஜூசேப்பே லூயிஜி (பிறப்பு: 1894)
• லூயிஜி (1896-1898).
ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்த ஊரிலிருந்த பெரும்பான்மையான மக்களைப் போலவே அவரது குடும்பத்தினரும் குத்தகை நிலத்தில் வேலை செய்தனர்.
சிறுவயதிலேயே குருவாகப் பணிபுரிய ஆர்வம் கொண்ட ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி, தம் உறவினர் ஒருவர் அளித்த நிதி உதவியோடு பெர்கமோ சிறு குருமடத்தில் கல்விபயின்றார். கல்வி உதவித் தொகை பெற்று உரோமையில் புனித அப்போல்லினார் குருமடத்தில் (இன்றைய "உரோமைத் திருத்தந்தை பெரிய குருமடம்") கல்விகற்றார். இறையியல் படிப்பை முடித்து, 1904ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3ஆம் நாள் குருப்பட்டம் பெற்றார். உரோமை நகரில் "மோந்தே சாந்தோ அன்னை மரியா" கோவிலில் குருப்பட்டம் நிகழ்ந்தது.
ரொங்கால்லி சிறுவயதிலிருந்தே அன்னை மரியா மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.மிலான் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இம்பெர்சாகோ என்னும் ஊரில் அமைந்திருந்த அன்னை மரியா திருத்தலத்துக்கு அவர் பல முறை திருப்பயணமாகச் சென்றுவந்தார்.
1901ஆம் ஆண்டு லொம்பார்டி பட்டாளத்தில் கட்டாய இராணுவ சேவை செய்தார்.
பெர்கமோ மறைமாவட்டத்தின் ஆயர் ஜாக்கொமோ ரதீனி-தெதேஸ்கி என்பவர் தம் செயலராக ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லியை 1905இல் நியமித்தார். அப்பணியை மிக்க விசுவாசத்தோடும்திறமையோடும் ஆற்றினார். 1914, ஆகத்து 22ஆம் நாள் ஆயர் ரதீன்-தெதேஸ்கி இறந்தார். அதுவரையிலும் ரொங்கால்லி தம் ஆயரின் செயலராகப் பணிபுரிந்தார். அதே சமயம் பெர்கமோ குருமடத்தில் திருச்சபை வரலாறு கற்பித்தார்.
முதலாம் உலகப் போர் தொடங்கியபோது ரொங்கால்லி இத்தாலிய இராணுவத்தின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றினார். அவருக்கு இராணுவ ஆன்ம ஆலோசகர் என்னும் பதவியும் வழங்கப்பட்டது.
1921ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் ரொங்கால்லிக்கு மொன்சிஞ்ஞோர் பட்டம் கொடுத்து, அவரை இத்தாலியின் நற்செய்தி அறிவிப்புப் பணி தேசிய அமைப்புக்கும் தலைவராக நியமித்தார். அக்காலத்தில் ரொங்கால்லி திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் வெளியிட்ட மறையறிவிப்புப் பணி மடலாகிய "Romanum Pontificum" என்பதை உருவாக்குவதில் ஒத்துழைத்தார்
திருத்தந்தை பிரான்சிசு 2014, ஏப்பிரல் 27ஆம் நாள் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு "புனிதர்" பட்டம் வழங்கினார். புனிதர் பட்டம் அளித்த அதே சடங்கின்போது திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கும் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் கலந்துகொண்டார்.
திருச்சபையின் 2000 ஆண்டு வரலாற்றில் இரண்டு திருத்தந்தையர் ஒரே நேரத்தில் இணைந்து பொதுமக்கள் முன்னிலையில் திருப்பலி நிறைவேற்றியது இதுவே முதல் தடவை ஆகும்.
புனிதர் பட்டம் வழங்கிய சடங்கில் சுமார் 8,00,000 பேர் கலந்துகொண்டனர். மிகப்பலர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பிறந்த நாடாகிய போலந்திலிருந்துதிருப்பயணிகளாக வந்திருந்தனர். வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் திருப்பயணிகள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. அங்கிருந்து டைபர் நதியின் பாலங்களுக்கு அப்பால் கூட மக்கள் கூடியிருந்தனர். பலர் மிகப்பெரிய திரைகளில் நிகழ்ச்சியைக் காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.
இருபத்திமூன்றாம் யோவான் 1958இலிருந்து 1963 வரை கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகப் பணியாற்றினார். அவர்தான் 1962இல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்றொரு உலகளாவிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். அவருடைய பணிக் காலத்திலும் அதன் பிறகும் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மறுமலர்ச்சியைக் கொணர்வதற்கு வழிகோலிற்று.
இருபத்திமூன்றாம் யோவான் உலக அமைதிக்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார். அமைதி பற்றி அவர் எழுதிய "அவனியில் அமைதி" (Pacem in Terris) என்ற சுற்றுமடல் பன்னாட்டு சமூகத்தில் ஆழ்ந்த தாக்கம் கொணர்ந்தது. மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவிய "பனிப்போர்" 1963இல் அணு ஆயுதப் போராக உருவெடுக்கும் பேராபத்து எழுந்தபோது திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் அமெரிக்க அதிபர் ஜாண் எஃப். கென்னடியையும் அந்நாளைய சோவியத் யூனியனின் அதிபர் குருஷோவையும் தொடர்புகொண்டு போர் எண்ணங்களைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். அணு ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டது.
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2000ஆம் ஆண்டில் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார். புனிதர் பட்டம் பெறுவதற்குக் குறிக்கப்பட்டவர் இரு புதுமைகளை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பது ஒழுங்குமுறை. திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானை நோக்கி வேண்டிக்கொண்டதால் அதிசயமான விதத்தில் ஒருவர் குணமார் என்பதை வத்திக்கான் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆயினும் புனிதர் பட்டம் கொடுப்பதற்கு மேலும் இரண்டாவது ஒரு புதுமை தேவைப்பட்டது.
நிலைமை இவ்வாறிருக்க, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு புனிதர் பட்டம் அளிக்க இரண்டாவது புதுமை தேவையில்லை என திருத்தந்தை பிரான்சிசு தீர்மானித்து, சட்டத்திற்கு விதிவிலக்கு கொடுத்தார்.
இரு திருத்தந்தையர்களைப் புனிதர்கள் என்று திருத்தந்தை பிரான்சிசு அறிக்கையிடுகையில், ஓய்வுபெற்ற திருத்தந்தையான பெனடிக்டும் உடனிருந்தார். இது வரலாற்றில் இவ்வகையில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு நிகழ்ச்சி.
அரசர்கள், அரசிகள், அதிபர்கள், பிரதம அமைச்சர்கள் போன்ற பல தலைவர்கள் பல நாடுகளிலிருந்து வந்து மேற்கூறிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். 90க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளாக அவர்கள் வந்திருந்தனர். ஐக்கிய அமெரிக்கா, இசுரயேல், அர்ஜென்டீனா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்து சுமர் 20 யூத தலைவர்களும் வந்திருந்தார்கள்.
Back to top
புனித இருபத்தி மூன்றாம் அருளப்பர்
St. John 23rd
நினைவுத்திருநாள் : அக்டோபர் 11
பிறப்பு: 25நவம்பர், 1881, சோத்தோ இல் மோந்தே, இத்தாலியா
இறப்பு: 3ஜூன்,1963(அகவை 81) வத்திக்கான் நகரம்
குருத்துவத் திருநிலைப்பாடு: 10 ஆகஸ்ட், 1904 ஜூசேப்பே செப்பெத்தெல்லி
ஆயர்நிலை திருப்பொழிவு: 19 மார்ச்,1925, ஜோவான்னி தாச்சி போர்ச்செல்லி
கர்தினாலாக உயர்த்தப்பட்டது: 12 ஜனவரி,1953
திருத்தந்தையாக இருந்த காலம்: 28 அக்டோபர் 1958 முதல் 3 ஜூன் 1963 வரை
முத்திப்பேறு: 3 செப்டம்பர், 2000(இரண்டாம் யோவான் பவுல்)
புனிதர் பட்டம்: 27 ஏப்ரல், 2014 புனித பேதுரு பேராலயம்,வத்திக்கான் (திருத்தந்தை பிரான்சிசு)
திருத்தந்தை புனித இருபத்தி மூன்றாம் யோவான் அல்லது இருபத்தி மூன்றாம் அருளப்பர் (Pope John XXIII) கத்தோலிக்க திருச்சபையின் 261ஆம் திருத்தந்தையாக 1958-1963 காலக்கட்டத்தில் திருப்பணிச் செய்தவர்.
இவர் 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகள் மட்டுமே திருப்பணிச் செய்தார். அக்குறுகிய பணிக்காலத்தில் இவர் 20ஆம் நூற்றாண்டுத் திருச்சபையில் நடந்த மிக முக்கிய நிகழ்வாகிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை (1962-1965) கூட்டினார். ஆனால் அச்சங்கம் நிறைவுறுவதற்கு முன்னரே, 1963ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் நாள் இறந்தார்.
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கும் திருத்தந்தை ஒன்பதாம் பயசுக்கும் 2000ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3ஆம் நாள் முத்திப்பேறு பட்டம் அளித்தார்.திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலோடு இவருக்கும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் புனிதர்பட்டமளிக்கப்பட்டது.
ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி இத்தாலி நாட்டைச் சேர்ந்த லொம்பார்டி மாநிலத்தில் பெர்கமோ என்னும் பகுதியைச் சார்ந்த சோத்தோ இல் மோந்தே (Sotto il Monte) என்னும் சிற்றூரில் பிறந்தார். அவருடைய தந்தை ஜோவான்னி பத்தீஸ்தா ரொங்கால்லி (1854-1935), தாயார் மரியான்னா ஜூலியா (1854-1939). அவர்களுக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளுள் ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி நான்காமவர். அவருடைய உடன்பிறப்புகள்:
• அல்ஃப்ரேடோ (பிறப்பு: 1889)
• மரியா கத்தரீனா (1877-1883)
• தெரேசா (1879-1954)
• அன்சீல்லா (1880-1953)
• தொமேனிக்கோ ஜூசேப்பே (பெப்ருவரி 22, 1888 - மார்ச் 14, 1888)
• பிரான்செஸ்கோ சவேரியோ (1883-1976)
• மரியா எலீசா (1884-1955)
• அஸ்ஸூந்தா கசீல்தா (பிறப்பு: 1886)
• ஜோவான்னி பிரான்செஸ்கோ (1891-1956)
• என்றீக்கா (1893-1918)
• ஜூசேப்பே லூயிஜி (பிறப்பு: 1894)
• லூயிஜி (1896-1898).
ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்த ஊரிலிருந்த பெரும்பான்மையான மக்களைப் போலவே அவரது குடும்பத்தினரும் குத்தகை நிலத்தில் வேலை செய்தனர்.
சிறுவயதிலேயே குருவாகப் பணிபுரிய ஆர்வம் கொண்ட ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி, தம் உறவினர் ஒருவர் அளித்த நிதி உதவியோடு பெர்கமோ சிறு குருமடத்தில் கல்விபயின்றார். கல்வி உதவித் தொகை பெற்று உரோமையில் புனித அப்போல்லினார் குருமடத்தில் (இன்றைய "உரோமைத் திருத்தந்தை பெரிய குருமடம்") கல்விகற்றார். இறையியல் படிப்பை முடித்து, 1904ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3ஆம் நாள் குருப்பட்டம் பெற்றார். உரோமை நகரில் "மோந்தே சாந்தோ அன்னை மரியா" கோவிலில் குருப்பட்டம் நிகழ்ந்தது.
ரொங்கால்லி சிறுவயதிலிருந்தே அன்னை மரியா மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.மிலான் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இம்பெர்சாகோ என்னும் ஊரில் அமைந்திருந்த அன்னை மரியா திருத்தலத்துக்கு அவர் பல முறை திருப்பயணமாகச் சென்றுவந்தார்.
1901ஆம் ஆண்டு லொம்பார்டி பட்டாளத்தில் கட்டாய இராணுவ சேவை செய்தார்.
பெர்கமோ மறைமாவட்டத்தின் ஆயர் ஜாக்கொமோ ரதீனி-தெதேஸ்கி என்பவர் தம் செயலராக ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லியை 1905இல் நியமித்தார். அப்பணியை மிக்க விசுவாசத்தோடும்திறமையோடும் ஆற்றினார். 1914, ஆகத்து 22ஆம் நாள் ஆயர் ரதீன்-தெதேஸ்கி இறந்தார். அதுவரையிலும் ரொங்கால்லி தம் ஆயரின் செயலராகப் பணிபுரிந்தார். அதே சமயம் பெர்கமோ குருமடத்தில் திருச்சபை வரலாறு கற்பித்தார்.
முதலாம் உலகப் போர் தொடங்கியபோது ரொங்கால்லி இத்தாலிய இராணுவத்தின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றினார். அவருக்கு இராணுவ ஆன்ம ஆலோசகர் என்னும் பதவியும் வழங்கப்பட்டது.
1921ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் ரொங்கால்லிக்கு மொன்சிஞ்ஞோர் பட்டம் கொடுத்து, அவரை இத்தாலியின் நற்செய்தி அறிவிப்புப் பணி தேசிய அமைப்புக்கும் தலைவராக நியமித்தார். அக்காலத்தில் ரொங்கால்லி திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் வெளியிட்ட மறையறிவிப்புப் பணி மடலாகிய "Romanum Pontificum" என்பதை உருவாக்குவதில் ஒத்துழைத்தார்
திருத்தந்தை பிரான்சிசு 2014, ஏப்பிரல் 27ஆம் நாள் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு "புனிதர்" பட்டம் வழங்கினார். புனிதர் பட்டம் அளித்த அதே சடங்கின்போது திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கும் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் கலந்துகொண்டார்.
திருச்சபையின் 2000 ஆண்டு வரலாற்றில் இரண்டு திருத்தந்தையர் ஒரே நேரத்தில் இணைந்து பொதுமக்கள் முன்னிலையில் திருப்பலி நிறைவேற்றியது இதுவே முதல் தடவை ஆகும்.
புனிதர் பட்டம் வழங்கிய சடங்கில் சுமார் 8,00,000 பேர் கலந்துகொண்டனர். மிகப்பலர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பிறந்த நாடாகிய போலந்திலிருந்துதிருப்பயணிகளாக வந்திருந்தனர். வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் திருப்பயணிகள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. அங்கிருந்து டைபர் நதியின் பாலங்களுக்கு அப்பால் கூட மக்கள் கூடியிருந்தனர். பலர் மிகப்பெரிய திரைகளில் நிகழ்ச்சியைக் காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.
இருபத்திமூன்றாம் யோவான் 1958இலிருந்து 1963 வரை கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகப் பணியாற்றினார். அவர்தான் 1962இல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்றொரு உலகளாவிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். அவருடைய பணிக் காலத்திலும் அதன் பிறகும் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மறுமலர்ச்சியைக் கொணர்வதற்கு வழிகோலிற்று.
இருபத்திமூன்றாம் யோவான் உலக அமைதிக்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார். அமைதி பற்றி அவர் எழுதிய "அவனியில் அமைதி" (Pacem in Terris) என்ற சுற்றுமடல் பன்னாட்டு சமூகத்தில் ஆழ்ந்த தாக்கம் கொணர்ந்தது. மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவிய "பனிப்போர்" 1963இல் அணு ஆயுதப் போராக உருவெடுக்கும் பேராபத்து எழுந்தபோது திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் அமெரிக்க அதிபர் ஜாண் எஃப். கென்னடியையும் அந்நாளைய சோவியத் யூனியனின் அதிபர் குருஷோவையும் தொடர்புகொண்டு போர் எண்ணங்களைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். அணு ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டது.
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2000ஆம் ஆண்டில் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார். புனிதர் பட்டம் பெறுவதற்குக் குறிக்கப்பட்டவர் இரு புதுமைகளை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பது ஒழுங்குமுறை. திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானை நோக்கி வேண்டிக்கொண்டதால் அதிசயமான விதத்தில் ஒருவர் குணமார் என்பதை வத்திக்கான் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆயினும் புனிதர் பட்டம் கொடுப்பதற்கு மேலும் இரண்டாவது ஒரு புதுமை தேவைப்பட்டது.
நிலைமை இவ்வாறிருக்க, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு புனிதர் பட்டம் அளிக்க இரண்டாவது புதுமை தேவையில்லை என திருத்தந்தை பிரான்சிசு தீர்மானித்து, சட்டத்திற்கு விதிவிலக்கு கொடுத்தார்.
இரு திருத்தந்தையர்களைப் புனிதர்கள் என்று திருத்தந்தை பிரான்சிசு அறிக்கையிடுகையில், ஓய்வுபெற்ற திருத்தந்தையான பெனடிக்டும் உடனிருந்தார். இது வரலாற்றில் இவ்வகையில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு நிகழ்ச்சி.
அரசர்கள், அரசிகள், அதிபர்கள், பிரதம அமைச்சர்கள் போன்ற பல தலைவர்கள் பல நாடுகளிலிருந்து வந்து மேற்கூறிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். 90க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளாக அவர்கள் வந்திருந்தனர். ஐக்கிய அமெரிக்கா, இசுரயேல், அர்ஜென்டீனா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்து சுமர் 20 யூத தலைவர்களும் வந்திருந்தார்கள்.
Back to top
அக்டோபர் 12
புனித வில்பிரிட் St. Wilfrid
நினைவுத்திருநாள்: அக்டோபர் 12
பிறப்பு : 633, உம்பிரியன் (North Umbria)
இறப்பு : 710
பாதுகாவல்: ரிப்பன் மறைமாவட்டம் Ripon
இவர் லிண்டஸ்பார்னே (Lindesfarne) என்ற ஊரில் கல்வி கற்றார். பிறகு பிரான்ஸ் நாட்டிலுள்ள லியோன்ஸ் நகரிலும் (Lyons), உரோம் நகரிலும் தனது நேரத்தை கழித்தார். அங்கிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு திரும்பி, 658 ஆம் ஆண்டு ரிப்பனில் (Ripon) மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உரோம் நகர விதிகளை இங்கிலாந்து நாட்டில் அறிமுகப்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்த பயிற்சி கொடுத்தார்.
669 ல் யார்க்கிற்கு(York) ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அப்பணியை ஆர்வத்துடன் ஆற்றினார். தனது மறைமாநிலத்தில் புனித ஆசீர்வாதப்பர் சபைக்கென்று பல மடங்களை நிறுவினார். 686 ஆம் ஆண்டு கடினமாக உழைத்து, சாக்சனில்(Saxon) தீவிரமாக நற்செய்திப் பணியை ஆற்றினார். 691 ஆம் ஆண்டு உரோம் நகரிலிருந்து வந்த செய்தியின்படி, ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு 703 ஆம் ஆண்டு தனது மடாதிபதி பதவியையும் விட்டு விலகினார். பின்னர் ரிப்பன் மடத்திலேயே தங்கி, செப வாழ்வை ஆழமாக்கி, இறைவனோடு ஒன்றிணைந்திருந்தார். தான் இறக்கும் வரை, மிக திறமையாக செயல்பட்டார். தனது துறவற மடத்திற்கு, உள்நாட்டு அரசால் தொந்தரவு ஏற்பட்ட போது, அவர்களை அன்போடு அணுகி ரிப்பன் மடத்திற்கு வந்த தொல்லைகளை நீக்கினார்.
திருச்சபையின் ஒழுங்குகளை நிறைவேற்றி, மக்கள் அவற்றில் நிலையாக வாழவேண்டுமென்பதற்காக, இங்கிலாந்தில் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் அவை அனைத்தையும் மிக பொறுமையோடு ஏற்று, சிறந்த மறைப்போதகராக பணியாற்றினார். இவர் பல திறமையான மறைப்பணியாளர்களை உருவாக்கி அவர்களை ஜெர்மனி நாட்டில் மறைபரப்பு பணியை ஆற்ற அனுப்பினார்.
செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! தீவிரமாக நற்செய்திப் பணியை ஆற்றி, திருச்சபை ஒழுங்குகளை தானும் கடைபிடித்து, மற்றவர்களையும் அதன்பிடி வாழச் செய்த மனித வில்பிரட்டைப் போல திருச்சபையின் சட்டங்களை நாங்கள் கடைபிடித்து வாழ உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
புனித வில்பிரிட் St. Wilfrid
நினைவுத்திருநாள்: அக்டோபர் 12
பிறப்பு : 633, உம்பிரியன் (North Umbria)
இறப்பு : 710
பாதுகாவல்: ரிப்பன் மறைமாவட்டம் Ripon
இவர் லிண்டஸ்பார்னே (Lindesfarne) என்ற ஊரில் கல்வி கற்றார். பிறகு பிரான்ஸ் நாட்டிலுள்ள லியோன்ஸ் நகரிலும் (Lyons), உரோம் நகரிலும் தனது நேரத்தை கழித்தார். அங்கிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு திரும்பி, 658 ஆம் ஆண்டு ரிப்பனில் (Ripon) மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உரோம் நகர விதிகளை இங்கிலாந்து நாட்டில் அறிமுகப்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்த பயிற்சி கொடுத்தார்.
669 ல் யார்க்கிற்கு(York) ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அப்பணியை ஆர்வத்துடன் ஆற்றினார். தனது மறைமாநிலத்தில் புனித ஆசீர்வாதப்பர் சபைக்கென்று பல மடங்களை நிறுவினார். 686 ஆம் ஆண்டு கடினமாக உழைத்து, சாக்சனில்(Saxon) தீவிரமாக நற்செய்திப் பணியை ஆற்றினார். 691 ஆம் ஆண்டு உரோம் நகரிலிருந்து வந்த செய்தியின்படி, ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு 703 ஆம் ஆண்டு தனது மடாதிபதி பதவியையும் விட்டு விலகினார். பின்னர் ரிப்பன் மடத்திலேயே தங்கி, செப வாழ்வை ஆழமாக்கி, இறைவனோடு ஒன்றிணைந்திருந்தார். தான் இறக்கும் வரை, மிக திறமையாக செயல்பட்டார். தனது துறவற மடத்திற்கு, உள்நாட்டு அரசால் தொந்தரவு ஏற்பட்ட போது, அவர்களை அன்போடு அணுகி ரிப்பன் மடத்திற்கு வந்த தொல்லைகளை நீக்கினார்.
திருச்சபையின் ஒழுங்குகளை நிறைவேற்றி, மக்கள் அவற்றில் நிலையாக வாழவேண்டுமென்பதற்காக, இங்கிலாந்தில் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் அவை அனைத்தையும் மிக பொறுமையோடு ஏற்று, சிறந்த மறைப்போதகராக பணியாற்றினார். இவர் பல திறமையான மறைப்பணியாளர்களை உருவாக்கி அவர்களை ஜெர்மனி நாட்டில் மறைபரப்பு பணியை ஆற்ற அனுப்பினார்.
செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! தீவிரமாக நற்செய்திப் பணியை ஆற்றி, திருச்சபை ஒழுங்குகளை தானும் கடைபிடித்து, மற்றவர்களையும் அதன்பிடி வாழச் செய்த மனித வில்பிரட்டைப் போல திருச்சபையின் சட்டங்களை நாங்கள் கடைபிடித்து வாழ உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
அக்டோபர் 13
புனித ஆரிலேக் ஜெரால்டு
St. Gerald of Aurillac
நினைவுத்திருநாள்: அக்டோபர் 13
பிறப்பு : 855, அரிலேக், பிரான்ஸ்
இறப்பு : 13 அக்டோபர் 909, செனெசாக் Cenezac, பிரான்ஸ்
பாதுகாவல்: ஊனமுற்றோர், தனிமையில் வாழ்வோர்
இவர் ஓர் செல்வந்தராக வாழ்ந்துள்ளார் என்றும், துறவியாகாமலே, துறவியைப் போலவே தன் வாழ்நாள் முழுதும் வாழ்ந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இவரது முகத்தில் பெரிய முகப்பரு ஒன்று காணப்பட்டது. நாளடைவில் அம்முகப்பருவால் அவர் பார்வையை இழந்தார். இவர் ஏழைகளின் மேல் இரக்கமும், கருணையும் கொண்டு வாழ்ந்தார். குருவாக வேண்டுமென்று மிகவும் ஆசைக்கொண்டார். ஆனால் தன் உடல்குறை காரணமாக அவ்வாசை நிறைவேறாமல் போனது. ஜெரால்டு தனது நில புலன்களை விற்று, அவற்றை திருத்தந்தையிடம் கொடுத்து, ஏழை மக்களுக்கு உதவும்படியாக கூறினார். விசுவாசம் ஒன்றே போதுமென்று இறை நம்பிக்கையில் தன் வாழ்வை வாழ்ந்தார். தனிப்பட்ட முறையில் இறைப்பணியை செய்தார்.
சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். கற்பு என்ற வார்த்தைப்பாட்டை தானாகவே எடுத்துக்கொண்டார். திருமண வாழ்வில் ஈடுபடாமல், துறவி போலவே வாழ்ந்து மடங்களை நிறுவினார். அம்மடங்களில் இடைவிடாமல் வழிபாடு வைத்தும், ஆராதனை வைத்தும் செபித்தார். நாளடைவில் இவரின் மடமானது யாத்திரை தளமாக மாறியது. அதில் பெற்ற பணங்களைக் கொண்டு உரோம் நகர திருச்சபைக்கு உதவினார். பிறகு திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று தனது மடத்தை மதச்சார்பற்ற சபையாக (Secular) மாற்றினார். பலர் இம்மடத்தில் சேரவே, பல நாடுகளுக்கு சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் வாழ்நாள் முழுவதுமே பக்தியையும், நேர்மையையும் தன்னகத்தே கொண்டு வாழ்ந்தார்.
செபம்:
என்றும் வாழ்பவரே! சாதி மதம் இனம் கடந்து பணிபுரியும் மதச்சார்பற்ற துறவற சபையினரை வழிநடத்தும். இவர்களை காணும் மக்கள் அத்துறவிகள் உம்மைக் காண வரம் அருளும். உம்மீது நம்பிக்கையின்றி வாழும் மக்களை உம்பால் ஈர்ந்து, நம்பிக்கையில் வளரவும், வாழவும் உறுதிப்படுத்தியருளும்.
Back to top
அக்டோபர் 14
திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ்
Pope Saint Callixtus (Callixtus I)
நினைவுத் திருவிழா : அக்டோபர் 14
இறப்பு : 222
திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் (Pope Saint Callixtus I or Callistus I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கிபி 217இலிருந்து 222 வரை திருப்பணி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர்திருத்தந்தை செஃபரீனுஸ் ஆவார். கலிஸ்டசின் இறப்புக்குப் பின் அர்பன் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார். திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் 16ஆம் திருத்தந்தை ஆவார். இவரது திருவிழா அக்டோபர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இவர் கல்லறைத் தொழிலாளர்களின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார்.
கலிஸ்டஸ் (பண்டைக் கிரேக்கம்: Callixtus அல்லது Callistus; இலத்தீன்: Callixtus அல்லது Callistus) என்னும் பெயர் "அழகுமிக்கவர்","எழில் நிறைந்தவர்" என்னு பொருள்படும்.
வரலாறு
முதலாம் கலிஸ்டஸ் திருப்பணி புரிந்த காலத்தில் உரோமை மன்னர்களாக இருந்தோர் எலகாபலுஸ் (Elagabalus) என்பவரும் அவருக்குப் பின் அலக்சாண்டர் செவேருஸ் (Alexander Severus) என்பவருமாவர். கலிஸ்டஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார்.
கலிஸ்டசின் வரலாறு பற்றிய குறிப்புகள் அவருடைய எதிரிகளின் எழுத்துகளிலிருந்தே தெரிய வருகின்றன. உரோமை நகர் இப்போலித்து (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் கலிஸ்டசின் எதிரிகளுள் ஒருவர். அவர் தம் "Philosophumena" என்னும் நூலில் கலிஸ்டசைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
கலிஸ்டஸ் இளமைப் பருவத்தில் ஓர் அடிமையாக இருந்தார். அவரது தலைவர் கார்ப்போஃபொருஸ் (Carpophorus) என்பவர் கைம்பெண்களையும் கைவிடப்பட்ட குழந்தைகளையும் பராமரிப்பதற்காகக் கிறித்தவர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை கலிஸ்டசின் பொறுப்பில் கொடுத்திருந்தார். அந்நிதியைத் தொலைத்துவிட்ட கலிஸ்டஸ் உரோமையிலிருந்து தப்பியோடினார். ஆனால் போர்த்துஸ் என்னும் இடத்தில் பிடிபட்டார். தப்பிப்பதற்காகக் கடலில் குதித்த கலிஸ்டசை அவருடைய தலைவரிடம் ஒப்படைத்தனர்.
கலிஸ்டசிடம் தாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் அவரை விடுதலை செய்யுமாறு கோரினார்கள். அவர் உரோமையிலிருந்த சில யூதர்களிடம் பணம் கடன் வாங்கவோ திரும்பப் பெறவோ சென்றபோது எழுந்த தகராறில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
கலிஸ்டஸ் கிறித்தவர் என்று தெரிந்ததும் சார்தீனியா தீவில் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்டார். உரோமை அரசன் கோம்மொதுஸ் என்பவரை மார்சியா என்னும் பெண்மணி அணுகி, கிறித்தவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டார். எனவே ஹையசிந்த் என்னும் குரு சார்தீனியாவுக்குச் சென்று அங்கே கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்ட கலிஸ்டசுக்கும் பிறருக்கும் விடுதலை பெற்றுக் கொடுத்தார். அப்போது கலிஸ்டசின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் ஆன்சியும் என்னும் நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கே முதலாம் விக்டர் என்னும் திருத்தந்தையிடமிருந்து பெற்ற உதவித் தொகை கொண்டு வாழ்ந்துவந்தார்.
திருத்தந்தை செஃபிரீனுசின் உதவியாளர்
திருத்தந்தை முதலாம் விக்டர் இறந்ததும் செஃபிரீனுஸ் திருத்தந்தையாகப் பதவியேற்றார். இவர் திருத்தொண்டராக இருந்த கலிஸ்டசிடம் உரோமை ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தார்.
மேலும், கலிஸ்டஸ் திருத்தந்தை செஃஃபிரீனுசின் வலது கைபோல் செயல்பட்டு, அவரது ஆலோசனையாளராகவும் விளங்கினார்.
கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டம்
கலிஸ்டசின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டகல்லறைத் தோட்டம் இன்று "புனித கலிஸ்டஸ் கல்லறைப் புதைநிலம்" (Catacomb of St. Callixtus) என்று அழைக்கப்படுகின்றது. கிபி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒன்பது திருத்தந்தையர் அப்புதைநிலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் "திருத்தந்தையரின் சிறுகோவில்" என்று அழைக்கப்படுகிறது. திருத்தந்தை கலிஸ்டஸ் அவருடைய பெயர்கொண்ட கல்லறைத் தோட்டத்தில் அடக்கப்படவில்லை.
பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த அக்கல்லறைத் தோட்டப் பகுதி 1849இல் ஜொவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி (Giovanni Battista de Rossi) என்னும் அகழ்வாய்வு வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படல்
திருத்தந்தை செஃபிரீனுஸ் இறந்ததும் அவருக்கு நெருங்கிய துணையாளராகவிருந்த கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலை பெற்ற ஓர் அடிமை திருத்தந்தையாகப் பதவி ஏற்பதற்கு அக்காலத்தில் தடையிருக்கவில்லை. கிபி ஐந்தாம் நூற்றாண்டில்தான் திருத்தந்தை முதலாம் லியோ சட்டம் இயற்றி, விடுதலை பெற்ற அடிமை திருத்தந்தையாக முடியாது என்று வரையறுத்தார்.
கலிஸ்டசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
திருத்தந்தை கலிஸ்டசைப் பற்றி அவருடைய எதிரியாக இருந்த இப்போலித்து என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவற்றுள் சில:
• கலிஸ்டஸ் திருச்சபையின் உண்மையான போதனையைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கிறித்தவக் கொள்கையை கலிஸ்டஸ் "ஒரே கடவுள் மூன்று வடிவங்களில் தந்தை, மகன், தூய ஆவி என விளங்குகிறார்" என்று கலிஸ்டஸ் கூறியதாகக் குற்றம் சாட்டினார்.
• இருமுறை அல்லது மூன்றுமுறை திருமணம் செய்தவர்களையும் குருத்துவ நிலைபெற அனுமதித்தது தவறு என்னும் குற்றச்சாட்டு.
• அடிமைகளுக்கும் சுதந்திர மக்களுக்கும் இடையே நிகழும் திருமணம் செல்லுபடியாகாது என்று கலிஸ்டஸ் கூறவில்லை என்னும் குற்றச்சாட்டு.
• விபசாரத்தில் ஈடுபட்டோர் மனம் திரும்பி பாவப் பரிகாரம் செய்தபின் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தவறு என்னும் குற்றச்சாட்டு.
ஆக, இப்போலித்து கடுமையான ஒழுக்க நெறியைப் போதித்தார். கலிஸ்டசோ மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார். எனவே, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இப்போலித்துவின்ஆதரவாளர்கள் அவரை எதிர்-திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். இப்போலித்து தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு நாடுகடத்தப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். இறப்பதற்கு முன் அவர் திருச்சபையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டார். அவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகப் போற்றப்படுகிறார்.
மொந்தானியக் கொள்கைக்கு ஆதரவு அளித்த தெர்த்தூல்லியன் என்னும் பண்டைக் காலக் கிறித்தவ அறிஞரோடும் கலிஸ்டஸ் மோத வேண்டியதாயிற்று.
திருத்தந்தை கலிஸ்டசின் இறப்பு
"உரோமை மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் பழைய ஏட்டில், புனித பேதுருவுக்கு அடுத்த படியாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் புனித கலிஸ்டசுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அவுரேலியா நெடுஞ்சாலையில் (Via Aurelia) அமைந்திருந்த கலிஸ்டசின் கல்லறை 1960இல் கண்டெடுக்கப்பட்டது. அக்கல்லறை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் என்பவரால் கட்டியெழுப்பப்பட்டது. அதில் காணப்பட்ட குறிப்பின்படி, கலிஸ்டஸ் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். அவரைக் கம்புகளால் அடித்துக் கொன்றார்கள். அவரது உடல் ஒரு குழியில் வீசப்பட்டது. அதனருகே கலிஸ்டசே எழுப்பியிருந்த புனித மரியா கோவில் (Basilica of Santa Maria in Trastevere) உள்ளது.
Back to top
திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ்
Pope Saint Callixtus (Callixtus I)
நினைவுத் திருவிழா : அக்டோபர் 14
இறப்பு : 222
திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் (Pope Saint Callixtus I or Callistus I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கிபி 217இலிருந்து 222 வரை திருப்பணி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர்திருத்தந்தை செஃபரீனுஸ் ஆவார். கலிஸ்டசின் இறப்புக்குப் பின் அர்பன் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார். திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் 16ஆம் திருத்தந்தை ஆவார். இவரது திருவிழா அக்டோபர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இவர் கல்லறைத் தொழிலாளர்களின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார்.
கலிஸ்டஸ் (பண்டைக் கிரேக்கம்: Callixtus அல்லது Callistus; இலத்தீன்: Callixtus அல்லது Callistus) என்னும் பெயர் "அழகுமிக்கவர்","எழில் நிறைந்தவர்" என்னு பொருள்படும்.
வரலாறு
முதலாம் கலிஸ்டஸ் திருப்பணி புரிந்த காலத்தில் உரோமை மன்னர்களாக இருந்தோர் எலகாபலுஸ் (Elagabalus) என்பவரும் அவருக்குப் பின் அலக்சாண்டர் செவேருஸ் (Alexander Severus) என்பவருமாவர். கலிஸ்டஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார்.
கலிஸ்டசின் வரலாறு பற்றிய குறிப்புகள் அவருடைய எதிரிகளின் எழுத்துகளிலிருந்தே தெரிய வருகின்றன. உரோமை நகர் இப்போலித்து (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் கலிஸ்டசின் எதிரிகளுள் ஒருவர். அவர் தம் "Philosophumena" என்னும் நூலில் கலிஸ்டசைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
கலிஸ்டஸ் இளமைப் பருவத்தில் ஓர் அடிமையாக இருந்தார். அவரது தலைவர் கார்ப்போஃபொருஸ் (Carpophorus) என்பவர் கைம்பெண்களையும் கைவிடப்பட்ட குழந்தைகளையும் பராமரிப்பதற்காகக் கிறித்தவர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை கலிஸ்டசின் பொறுப்பில் கொடுத்திருந்தார். அந்நிதியைத் தொலைத்துவிட்ட கலிஸ்டஸ் உரோமையிலிருந்து தப்பியோடினார். ஆனால் போர்த்துஸ் என்னும் இடத்தில் பிடிபட்டார். தப்பிப்பதற்காகக் கடலில் குதித்த கலிஸ்டசை அவருடைய தலைவரிடம் ஒப்படைத்தனர்.
கலிஸ்டசிடம் தாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் அவரை விடுதலை செய்யுமாறு கோரினார்கள். அவர் உரோமையிலிருந்த சில யூதர்களிடம் பணம் கடன் வாங்கவோ திரும்பப் பெறவோ சென்றபோது எழுந்த தகராறில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
கலிஸ்டஸ் கிறித்தவர் என்று தெரிந்ததும் சார்தீனியா தீவில் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்டார். உரோமை அரசன் கோம்மொதுஸ் என்பவரை மார்சியா என்னும் பெண்மணி அணுகி, கிறித்தவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டார். எனவே ஹையசிந்த் என்னும் குரு சார்தீனியாவுக்குச் சென்று அங்கே கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்ட கலிஸ்டசுக்கும் பிறருக்கும் விடுதலை பெற்றுக் கொடுத்தார். அப்போது கலிஸ்டசின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் ஆன்சியும் என்னும் நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கே முதலாம் விக்டர் என்னும் திருத்தந்தையிடமிருந்து பெற்ற உதவித் தொகை கொண்டு வாழ்ந்துவந்தார்.
திருத்தந்தை செஃபிரீனுசின் உதவியாளர்
திருத்தந்தை முதலாம் விக்டர் இறந்ததும் செஃபிரீனுஸ் திருத்தந்தையாகப் பதவியேற்றார். இவர் திருத்தொண்டராக இருந்த கலிஸ்டசிடம் உரோமை ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தார்.
மேலும், கலிஸ்டஸ் திருத்தந்தை செஃஃபிரீனுசின் வலது கைபோல் செயல்பட்டு, அவரது ஆலோசனையாளராகவும் விளங்கினார்.
கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டம்
கலிஸ்டசின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டகல்லறைத் தோட்டம் இன்று "புனித கலிஸ்டஸ் கல்லறைப் புதைநிலம்" (Catacomb of St. Callixtus) என்று அழைக்கப்படுகின்றது. கிபி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒன்பது திருத்தந்தையர் அப்புதைநிலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் "திருத்தந்தையரின் சிறுகோவில்" என்று அழைக்கப்படுகிறது. திருத்தந்தை கலிஸ்டஸ் அவருடைய பெயர்கொண்ட கல்லறைத் தோட்டத்தில் அடக்கப்படவில்லை.
பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த அக்கல்லறைத் தோட்டப் பகுதி 1849இல் ஜொவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி (Giovanni Battista de Rossi) என்னும் அகழ்வாய்வு வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படல்
திருத்தந்தை செஃபிரீனுஸ் இறந்ததும் அவருக்கு நெருங்கிய துணையாளராகவிருந்த கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலை பெற்ற ஓர் அடிமை திருத்தந்தையாகப் பதவி ஏற்பதற்கு அக்காலத்தில் தடையிருக்கவில்லை. கிபி ஐந்தாம் நூற்றாண்டில்தான் திருத்தந்தை முதலாம் லியோ சட்டம் இயற்றி, விடுதலை பெற்ற அடிமை திருத்தந்தையாக முடியாது என்று வரையறுத்தார்.
கலிஸ்டசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
திருத்தந்தை கலிஸ்டசைப் பற்றி அவருடைய எதிரியாக இருந்த இப்போலித்து என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவற்றுள் சில:
• கலிஸ்டஸ் திருச்சபையின் உண்மையான போதனையைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கிறித்தவக் கொள்கையை கலிஸ்டஸ் "ஒரே கடவுள் மூன்று வடிவங்களில் தந்தை, மகன், தூய ஆவி என விளங்குகிறார்" என்று கலிஸ்டஸ் கூறியதாகக் குற்றம் சாட்டினார்.
• இருமுறை அல்லது மூன்றுமுறை திருமணம் செய்தவர்களையும் குருத்துவ நிலைபெற அனுமதித்தது தவறு என்னும் குற்றச்சாட்டு.
• அடிமைகளுக்கும் சுதந்திர மக்களுக்கும் இடையே நிகழும் திருமணம் செல்லுபடியாகாது என்று கலிஸ்டஸ் கூறவில்லை என்னும் குற்றச்சாட்டு.
• விபசாரத்தில் ஈடுபட்டோர் மனம் திரும்பி பாவப் பரிகாரம் செய்தபின் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தவறு என்னும் குற்றச்சாட்டு.
ஆக, இப்போலித்து கடுமையான ஒழுக்க நெறியைப் போதித்தார். கலிஸ்டசோ மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார். எனவே, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இப்போலித்துவின்ஆதரவாளர்கள் அவரை எதிர்-திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். இப்போலித்து தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு நாடுகடத்தப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். இறப்பதற்கு முன் அவர் திருச்சபையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டார். அவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகப் போற்றப்படுகிறார்.
மொந்தானியக் கொள்கைக்கு ஆதரவு அளித்த தெர்த்தூல்லியன் என்னும் பண்டைக் காலக் கிறித்தவ அறிஞரோடும் கலிஸ்டஸ் மோத வேண்டியதாயிற்று.
திருத்தந்தை கலிஸ்டசின் இறப்பு
"உரோமை மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் பழைய ஏட்டில், புனித பேதுருவுக்கு அடுத்த படியாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் புனித கலிஸ்டசுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அவுரேலியா நெடுஞ்சாலையில் (Via Aurelia) அமைந்திருந்த கலிஸ்டசின் கல்லறை 1960இல் கண்டெடுக்கப்பட்டது. அக்கல்லறை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் என்பவரால் கட்டியெழுப்பப்பட்டது. அதில் காணப்பட்ட குறிப்பின்படி, கலிஸ்டஸ் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். அவரைக் கம்புகளால் அடித்துக் கொன்றார்கள். அவரது உடல் ஒரு குழியில் வீசப்பட்டது. அதனருகே கலிஸ்டசே எழுப்பியிருந்த புனித மரியா கோவில் (Basilica of Santa Maria in Trastevere) உள்ளது.
Back to top
அக்டோபர் 15
அவிலாவின் புனித தெரேசா
(கன்னியர், மறைவல்லுநர்)
St. TERESA OF AVILA (St. TERESA OF JESUS)
நினைவுத் திருவிழா : அக்டோபர் 15
பிறப்பு : 28 மார்ச், 1515 கோடரெண்டுரா, அவிலா, எசுப்பானியா
இறப்பு: 4 அக்டோபர், 1582(அகவை 67) அல்பாதே தொர்மஸ்,எசுப்பானியா
அருளாளர் பட்டம்: 24 ஏப்ரல்,1614, ரோம்(திருத்தந்தை ஐந்தாம் பவுல்)
புனிதர் பட்டம்: 12 மார்ச் ,1622, ரோம்(திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி)
முக்கிய திருத்தலங்கள்: எசுப்பானியா நாட்டில் உள்ள மங்கள வார்த்தை மடம்.
பாதுகாவல் : எசுப்பானியா, உடல் நோய், தலைவலி, துறவிகள்
அவிலாவின் புனித தெரேசா, அல்லது Saint Teresa of Jesus, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். எசுப்பானியா நாட்டினரான இவர் கார்மேல் சபைத்துறவி ஆவார். இவர் ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். சிலுவையின் புனித யோவானோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்கினார். இவரின் ஆழ் நிலைத் தியானம் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுனர்களுள் ஒருவர். இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண் எனும் பெருமை இவரை சேரும்.
தெரசா, அல்போன்சோ சான்சேஸ் டீ சேப்பேடா ( Alfonso Sanchez de Cepeda) மற்றும் பெயாட்ரிஸ் டீ அகுமதா (Beatrix de Ahumada) ஆகியோரின் மகளாக பிறந்தார்.
சான் ஜூவான் (San Juan) என்ற ஆலயத்தில் ஞானஸ்நானத்தையும், புதுநன்மையையும்பெற்றார். இவரின் உடன் பிறந்தவர்கள் 11 பேர்கள். இவர்களில் தெரசாவே பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இவர் சிறுபிள்ளையாக இருந்தபோதே, திருக்காட்சியின் வழியாக, தான் துன்பப்பட்டுதான் இறப்பேன் என்பதை அறிந்து, அதை மற்றவர்களிடமும்கூறினார்.
இவர் தனது 7ம் வயதிலேயே, தன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி கடவுளுக்காக வாழ வேண்டுமென்று முடிவுசெய்தார். பின்னர் அவர் விரும்பியவாறே 1527ல் அவரின் 12ம் வயதில் விட்டு வெளியேறினார். இதையறிந்த அவரின் தந்தை மீண்டும் தெரசாவை கண்டுபிடித்து, இல்லத்திற்கு அழைத்து வந்தார். தெரசாவின் செயலால் கோபம் கொண்ட தந்தை, அவரை வன்மையாக கண்டித்தார். இதனால் அவர் மனமுடைந்து, மிகுந்த வேதனையை அனுபவித்தார். இவைகளை கண்ட அவரின் தந்தை 1531ல் தெரசாவை, அவிலாவில் இருந்த அகுஸ்தீன் சபையில் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் 1535ம் ஆண்டில் துறவியாக முடிவு செய்து கார்மேல் துறவற மடத்திற்கு சென்றார்.
அப்போது தெரசா நோய்வாய்பட்டு 4 நாட்கள் சுயநினைவை இழந்து, கோமாவில் இருந்தார். அதன்பிறகு பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில் 1539ம் ஆண்டு, இயேசு சிலுவையில் துன்பப்படுவதை திருக்காட்சியாகக் கண்டார். இவைகளை உடனிருந்த அருட்சகோதரிகள் நம்பிக்கை கொள்ளாமல், அவருக்கு எதிராக செயல்பட்டனர்.
அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கினர்.
1560ல் தனது 45ம் வயதில் மீண்டும் தான் மிக துன்பப்பட்டு உயிர்விடப்போவதாக மீண்டும் திருக்காட்சியை கண்டார். இதனால் 1562ல் தெரசா அம்மடத்தை விட்டு வெளியேறி, தனியாக மற்றொரு மடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். இவர் அம்மடத்தில் மிக கடுமையான ஒழுங்குகளோடு தன் வாழ்வை வாழ்ந்தார். செபம் ஒன்றையே தன் மூச்சாகக் கொண்டார். இவரின் செப வாழ்வால் 1568ல் மற்றொரு துறவற மடத்தையும் நிறுவினார். பின்னர் 1577ம் ஆண்டில் 17 பெண்கள் துறவற இல்லமும், 15 ஆண்டுகளுக்கான துறவற இல்லமும் காணப்பட்டது. இவ்வில்லங்கள் அனைத்துமே மௌனத்தையும் கடுமையான எளிமையையும், காலணிகள் அணியாமலும், மிக எளிமையான உணவையும் உண்டு, செபவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தும் வாழ்ந்தனர்.
தெரசா பல முறை திருக்காட்சியைக் கண்டார். இவைகளை 400 க்கும் மேற்பட்ட கடிதங்களில் எழுதினார். இவர் ஸ்பெயின் நாட்டு மக்களால் திருக்காட்சியின் மறைவல்லுநர் என்றழைக்கப்பட்டார். தனது திருக்காட்சிகளின் வழியாக திருச்சபைக்கு பலவிதங்களில் உதவி செய்த தெரசா தனது 65ம் வயதில் உடல்நிலை குன்றி இறைவனடி சேர்ந்தார்.
செபம் :
அனைத்தையும் கடந்து, அருஞ்செயல் ஆற்றும் எம் இறைவா! புனித அவிலாவின் தெரசாவை எம் திருச்சபைக்கு நீர் கொடுமையாக தந்தமைக்காக நன்றி கூறுகின்றோம். அவரின் ஆன்மீக போதனைகளின்படி நாங்கள் வாழ்ந்து, அவரின் உதவியால், உம்மீது பற்றுக்கொண்டு வாழ வரம் அருள, இறைவா உம்மை மன்றாடுகின்றோம் ~ ஆமென்
Back to top
அவிலாவின் புனித தெரேசா
(கன்னியர், மறைவல்லுநர்)
St. TERESA OF AVILA (St. TERESA OF JESUS)
நினைவுத் திருவிழா : அக்டோபர் 15
பிறப்பு : 28 மார்ச், 1515 கோடரெண்டுரா, அவிலா, எசுப்பானியா
இறப்பு: 4 அக்டோபர், 1582(அகவை 67) அல்பாதே தொர்மஸ்,எசுப்பானியா
அருளாளர் பட்டம்: 24 ஏப்ரல்,1614, ரோம்(திருத்தந்தை ஐந்தாம் பவுல்)
புனிதர் பட்டம்: 12 மார்ச் ,1622, ரோம்(திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி)
முக்கிய திருத்தலங்கள்: எசுப்பானியா நாட்டில் உள்ள மங்கள வார்த்தை மடம்.
பாதுகாவல் : எசுப்பானியா, உடல் நோய், தலைவலி, துறவிகள்
அவிலாவின் புனித தெரேசா, அல்லது Saint Teresa of Jesus, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். எசுப்பானியா நாட்டினரான இவர் கார்மேல் சபைத்துறவி ஆவார். இவர் ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். சிலுவையின் புனித யோவானோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்கினார். இவரின் ஆழ் நிலைத் தியானம் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுனர்களுள் ஒருவர். இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண் எனும் பெருமை இவரை சேரும்.
தெரசா, அல்போன்சோ சான்சேஸ் டீ சேப்பேடா ( Alfonso Sanchez de Cepeda) மற்றும் பெயாட்ரிஸ் டீ அகுமதா (Beatrix de Ahumada) ஆகியோரின் மகளாக பிறந்தார்.
சான் ஜூவான் (San Juan) என்ற ஆலயத்தில் ஞானஸ்நானத்தையும், புதுநன்மையையும்பெற்றார். இவரின் உடன் பிறந்தவர்கள் 11 பேர்கள். இவர்களில் தெரசாவே பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இவர் சிறுபிள்ளையாக இருந்தபோதே, திருக்காட்சியின் வழியாக, தான் துன்பப்பட்டுதான் இறப்பேன் என்பதை அறிந்து, அதை மற்றவர்களிடமும்கூறினார்.
இவர் தனது 7ம் வயதிலேயே, தன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி கடவுளுக்காக வாழ வேண்டுமென்று முடிவுசெய்தார். பின்னர் அவர் விரும்பியவாறே 1527ல் அவரின் 12ம் வயதில் விட்டு வெளியேறினார். இதையறிந்த அவரின் தந்தை மீண்டும் தெரசாவை கண்டுபிடித்து, இல்லத்திற்கு அழைத்து வந்தார். தெரசாவின் செயலால் கோபம் கொண்ட தந்தை, அவரை வன்மையாக கண்டித்தார். இதனால் அவர் மனமுடைந்து, மிகுந்த வேதனையை அனுபவித்தார். இவைகளை கண்ட அவரின் தந்தை 1531ல் தெரசாவை, அவிலாவில் இருந்த அகுஸ்தீன் சபையில் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் 1535ம் ஆண்டில் துறவியாக முடிவு செய்து கார்மேல் துறவற மடத்திற்கு சென்றார்.
அப்போது தெரசா நோய்வாய்பட்டு 4 நாட்கள் சுயநினைவை இழந்து, கோமாவில் இருந்தார். அதன்பிறகு பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில் 1539ம் ஆண்டு, இயேசு சிலுவையில் துன்பப்படுவதை திருக்காட்சியாகக் கண்டார். இவைகளை உடனிருந்த அருட்சகோதரிகள் நம்பிக்கை கொள்ளாமல், அவருக்கு எதிராக செயல்பட்டனர்.
அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கினர்.
1560ல் தனது 45ம் வயதில் மீண்டும் தான் மிக துன்பப்பட்டு உயிர்விடப்போவதாக மீண்டும் திருக்காட்சியை கண்டார். இதனால் 1562ல் தெரசா அம்மடத்தை விட்டு வெளியேறி, தனியாக மற்றொரு மடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். இவர் அம்மடத்தில் மிக கடுமையான ஒழுங்குகளோடு தன் வாழ்வை வாழ்ந்தார். செபம் ஒன்றையே தன் மூச்சாகக் கொண்டார். இவரின் செப வாழ்வால் 1568ல் மற்றொரு துறவற மடத்தையும் நிறுவினார். பின்னர் 1577ம் ஆண்டில் 17 பெண்கள் துறவற இல்லமும், 15 ஆண்டுகளுக்கான துறவற இல்லமும் காணப்பட்டது. இவ்வில்லங்கள் அனைத்துமே மௌனத்தையும் கடுமையான எளிமையையும், காலணிகள் அணியாமலும், மிக எளிமையான உணவையும் உண்டு, செபவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தும் வாழ்ந்தனர்.
தெரசா பல முறை திருக்காட்சியைக் கண்டார். இவைகளை 400 க்கும் மேற்பட்ட கடிதங்களில் எழுதினார். இவர் ஸ்பெயின் நாட்டு மக்களால் திருக்காட்சியின் மறைவல்லுநர் என்றழைக்கப்பட்டார். தனது திருக்காட்சிகளின் வழியாக திருச்சபைக்கு பலவிதங்களில் உதவி செய்த தெரசா தனது 65ம் வயதில் உடல்நிலை குன்றி இறைவனடி சேர்ந்தார்.
செபம் :
அனைத்தையும் கடந்து, அருஞ்செயல் ஆற்றும் எம் இறைவா! புனித அவிலாவின் தெரசாவை எம் திருச்சபைக்கு நீர் கொடுமையாக தந்தமைக்காக நன்றி கூறுகின்றோம். அவரின் ஆன்மீக போதனைகளின்படி நாங்கள் வாழ்ந்து, அவரின் உதவியால், உம்மீது பற்றுக்கொண்டு வாழ வரம் அருள, இறைவா உம்மை மன்றாடுகின்றோம் ~ ஆமென்
Back to top
புனித மார்கரெட் மரி அலக்கோக்
(Saint Margaret Mary Alacoque)
திருவிழா : அக்டோபர் 16, 17
பிறப்பு : 22 ஜூலை, 1647, லாட்டகொர், பர்கன்டி,பிரான்சு
இறப்பு : 17அக்டோபர், 1690(அகவை 43) பரே-லீ-மொனியல், பர்கன்டி, பிரான்சு
அருளாளர் பட்டம் : 18 செப்டம்பர் 1864,ரோம் (திருத்தந்தை 9ம் பயஸ்)
புனிதர் பட்டம் : 13 மே 1920,ரோம் (திருத்தந்தை 15ம் பெனடிக்ட்)
பாதுகாவல் : போலியோ பாதித்தோர், திருஇதய பக்தர்கள், பெற்றோரை இழந்தோர்
புனித மார்கரெட் மரி அலக்கோக் (Saint Margaret Mary Alacoque) அல்லது புனித மார்கரெட் மரியா (22 ஜூலை 1647 – 17 அக்டோபர் 1690), பிரான்சு நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரி (கன்னியர்) மற்றும் மறைபொருளாளர் ஆவார். இயேசுவின் திருஇதய பக்திக்கு தற்போதைய வடிவம் கொடுத்தவர் இவரே.
தொடக்க காலம்
மார்கரெட் மரியா, 1647ஆம் ஆண்டு ஜூலை 22ந்தேதி பிரான்ஸ் நாட்டின் பர்கன்டியில் உள்ள லாட்டகொர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கியவர்கள். மார்கரெட் சிறு வயது முதலே, திவ்விய நற்கருணையில் இருக்கும் ஆண்டவர் இயேசுவின்மீது அதிக பக்தி கொண்டிருந்தார்; இயேசுவோடு அமைதியில் பேசுவது இவரது வழக்கமாக இருந்தது. இவர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டபோது, மரியன்னையின் உதவியால் குணமடைந்தார். இதற்கு நன்றியாகத் துறவற சபை ஒன்றில் சேர்ந்து கன்னியராக விரும்பினார்.
இயேசுவின் காட்சிகள்
1671 மே 25ந்தேதி, மார்கரெட் தனது 24ஆம் வயதில் பரே நகரிலுள்ள விசிட்டேசன் (மினவுதல் அல்லது சந்திப்பு) துறவற சபையில் இணைந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது துறவற உடைகளைப் பெற்றுக்கொண்டார். 1672ஆம் ஆண்டு, இவர் கன்னியருக்கான இறுதி வாக்குறுதிகளை உச்சரித்தார்.
அந்த துறவற மடத்தில் மார்கரெட் திவ்விய நற்கருணை முன்பாக அதிக நேரம் செலவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பல காட்சிகளை காணும் பேறு மார்கரெட் மரியாவுக்கு கிடைத்தது. பலமுறை இயேசுவின் வேதனையுற்ற உருவத்தை இவர் காட்சியாக கண்டுள்ளார்.
1673 டிசம்பர் 27ந்தேதி, இயேசு கிறிஸ்து அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் முதல்முறை மார்கரெட்டுக்கு காட்சி அளித்து, தனது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக இவரைத் தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார்.
மார்கரெட் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார். மாதத்தின் முதல் வியாழக்கிழமை இரவு 11மணி முதல் 12மணி வரை நற்கருணை ஆராதனை செய்தல், முதல் வெள்ளிக்கிழமை திருப்பலியில் பங்கேற்று திவ்விய நற்கருணை உட்கொள்தல் போன்ற பக்தி முயற்சிகளையும் இயேசு இவர் வழியாகக் கற்றுக்கொடுத்தார். இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார்.
தொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனித கிளாட் தெ லா கொலம்பியர், இவரது காட்சிகளின் உண்மைத்தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். 1686ஆம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்டவிதத்தில் முதல்முறையாக இயேசுவின் திருஇதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திருஇதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.
புனிதர் பட்டம்
புனித மார்கரெட் மரியாவின் மெழுகு உருவம் இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவைப் பலமுறைக் காணப் பேறுபெற்ற மார்கரெட் மரியா, அவரை நிரந்தரமாகக் காண 1690 அக்டோபர் 17ந்தேதி விண்ணகம் சென்றார். திருஇதய பத்தி பற்றி மார்கரெட் எழுதிய குறிப்புகள், 1698ல் ஜெ. க்ரோய்செட் என்பவரால் இயேசுவின் திருஇதய பக்தி (La Devotion au Sacré-Coeur de Jesus) என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன.1824ல் திருத்தந்தை 12ம் லியோ இவரை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார்.
மார்கரெட் இறந்து 140 ஆண்டுகள் கழித்து 1830ல் இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில், அழியாத நிலையில் இருந்த மார்கரெட் மரியாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு அதிசயங்களும் நடைபெற்றன. 1864ல் திருத்தந்தை 9ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம்வழங்கினார்.
1920ஆம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். 1929ல் மார்கரெட் இறந்த அக்டோபர் 17ந்தேதியில் இவரது நினைவைக் கொண்டாடும் வகையில் இவரது விழா யில் இணைக்கப்பட்டது.1969ல் இவரது விழா அக்டோபர் 16ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
1928ல் திருத்தந்தை 11ம் பயஸ் இரக்கமுள்ள மீட்பர் (Miserentissimus Redemptor) என்ற தனது சுற்றுமடலில் மார்கரெட் மரியா கண்ட காட்சிகளை உறுதிசெய்யும் விதத்தில், இயேசு தன்னை மார்கரெட் மரிக்கு வெளிப்படுத்தி, அவரது இதயத்துக்கு மரியாதை செலுத்துவோருக்கு விண்ணக அருள்வரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிந்தனை
"மேலும் அவர் [இயேசு கிறிஸ்து] மனிதரால் அன்புசெய்யப்பட வேண்டுமென்ற தனது பேராவலையும், அவர்களை அழிவின் பாதையிலிருந்து வெளியேற்றி, அன்பின், அமைதியின், அருளின், புனிதத்தின் புதையலோடு தனது இதயத்தை மனிதருக்கு வெளிப்படுத்தி, ஆவலோடு அவரை மதித்து, அன்பு செய்வோர் தனது இதயத்தின் தெய்வீகப் புதையல்களால் வளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மீட்பையும் காண்பித்தார்." — புனித மார்கரெட் அலக்கோக்குக்கு நம் ஆண்டவரின் வெளிப்பாடுகள் (Revelations of Our Lord to St. Mary Margaret Alacoque)
Back to top
(Saint Margaret Mary Alacoque)
திருவிழா : அக்டோபர் 16, 17
பிறப்பு : 22 ஜூலை, 1647, லாட்டகொர், பர்கன்டி,பிரான்சு
இறப்பு : 17அக்டோபர், 1690(அகவை 43) பரே-லீ-மொனியல், பர்கன்டி, பிரான்சு
அருளாளர் பட்டம் : 18 செப்டம்பர் 1864,ரோம் (திருத்தந்தை 9ம் பயஸ்)
புனிதர் பட்டம் : 13 மே 1920,ரோம் (திருத்தந்தை 15ம் பெனடிக்ட்)
பாதுகாவல் : போலியோ பாதித்தோர், திருஇதய பக்தர்கள், பெற்றோரை இழந்தோர்
புனித மார்கரெட் மரி அலக்கோக் (Saint Margaret Mary Alacoque) அல்லது புனித மார்கரெட் மரியா (22 ஜூலை 1647 – 17 அக்டோபர் 1690), பிரான்சு நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரி (கன்னியர்) மற்றும் மறைபொருளாளர் ஆவார். இயேசுவின் திருஇதய பக்திக்கு தற்போதைய வடிவம் கொடுத்தவர் இவரே.
தொடக்க காலம்
மார்கரெட் மரியா, 1647ஆம் ஆண்டு ஜூலை 22ந்தேதி பிரான்ஸ் நாட்டின் பர்கன்டியில் உள்ள லாட்டகொர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கியவர்கள். மார்கரெட் சிறு வயது முதலே, திவ்விய நற்கருணையில் இருக்கும் ஆண்டவர் இயேசுவின்மீது அதிக பக்தி கொண்டிருந்தார்; இயேசுவோடு அமைதியில் பேசுவது இவரது வழக்கமாக இருந்தது. இவர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டபோது, மரியன்னையின் உதவியால் குணமடைந்தார். இதற்கு நன்றியாகத் துறவற சபை ஒன்றில் சேர்ந்து கன்னியராக விரும்பினார்.
இயேசுவின் காட்சிகள்
1671 மே 25ந்தேதி, மார்கரெட் தனது 24ஆம் வயதில் பரே நகரிலுள்ள விசிட்டேசன் (மினவுதல் அல்லது சந்திப்பு) துறவற சபையில் இணைந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது துறவற உடைகளைப் பெற்றுக்கொண்டார். 1672ஆம் ஆண்டு, இவர் கன்னியருக்கான இறுதி வாக்குறுதிகளை உச்சரித்தார்.
அந்த துறவற மடத்தில் மார்கரெட் திவ்விய நற்கருணை முன்பாக அதிக நேரம் செலவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பல காட்சிகளை காணும் பேறு மார்கரெட் மரியாவுக்கு கிடைத்தது. பலமுறை இயேசுவின் வேதனையுற்ற உருவத்தை இவர் காட்சியாக கண்டுள்ளார்.
1673 டிசம்பர் 27ந்தேதி, இயேசு கிறிஸ்து அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் முதல்முறை மார்கரெட்டுக்கு காட்சி அளித்து, தனது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக இவரைத் தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார்.
மார்கரெட் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார். மாதத்தின் முதல் வியாழக்கிழமை இரவு 11மணி முதல் 12மணி வரை நற்கருணை ஆராதனை செய்தல், முதல் வெள்ளிக்கிழமை திருப்பலியில் பங்கேற்று திவ்விய நற்கருணை உட்கொள்தல் போன்ற பக்தி முயற்சிகளையும் இயேசு இவர் வழியாகக் கற்றுக்கொடுத்தார். இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார்.
தொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனித கிளாட் தெ லா கொலம்பியர், இவரது காட்சிகளின் உண்மைத்தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். 1686ஆம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்டவிதத்தில் முதல்முறையாக இயேசுவின் திருஇதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திருஇதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.
புனிதர் பட்டம்
புனித மார்கரெட் மரியாவின் மெழுகு உருவம் இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவைப் பலமுறைக் காணப் பேறுபெற்ற மார்கரெட் மரியா, அவரை நிரந்தரமாகக் காண 1690 அக்டோபர் 17ந்தேதி விண்ணகம் சென்றார். திருஇதய பத்தி பற்றி மார்கரெட் எழுதிய குறிப்புகள், 1698ல் ஜெ. க்ரோய்செட் என்பவரால் இயேசுவின் திருஇதய பக்தி (La Devotion au Sacré-Coeur de Jesus) என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன.1824ல் திருத்தந்தை 12ம் லியோ இவரை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார்.
மார்கரெட் இறந்து 140 ஆண்டுகள் கழித்து 1830ல் இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில், அழியாத நிலையில் இருந்த மார்கரெட் மரியாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு அதிசயங்களும் நடைபெற்றன. 1864ல் திருத்தந்தை 9ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம்வழங்கினார்.
1920ஆம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். 1929ல் மார்கரெட் இறந்த அக்டோபர் 17ந்தேதியில் இவரது நினைவைக் கொண்டாடும் வகையில் இவரது விழா யில் இணைக்கப்பட்டது.1969ல் இவரது விழா அக்டோபர் 16ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
1928ல் திருத்தந்தை 11ம் பயஸ் இரக்கமுள்ள மீட்பர் (Miserentissimus Redemptor) என்ற தனது சுற்றுமடலில் மார்கரெட் மரியா கண்ட காட்சிகளை உறுதிசெய்யும் விதத்தில், இயேசு தன்னை மார்கரெட் மரிக்கு வெளிப்படுத்தி, அவரது இதயத்துக்கு மரியாதை செலுத்துவோருக்கு விண்ணக அருள்வரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிந்தனை
"மேலும் அவர் [இயேசு கிறிஸ்து] மனிதரால் அன்புசெய்யப்பட வேண்டுமென்ற தனது பேராவலையும், அவர்களை அழிவின் பாதையிலிருந்து வெளியேற்றி, அன்பின், அமைதியின், அருளின், புனிதத்தின் புதையலோடு தனது இதயத்தை மனிதருக்கு வெளிப்படுத்தி, ஆவலோடு அவரை மதித்து, அன்பு செய்வோர் தனது இதயத்தின் தெய்வீகப் புதையல்களால் வளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மீட்பையும் காண்பித்தார்." — புனித மார்கரெட் அலக்கோக்குக்கு நம் ஆண்டவரின் வெளிப்பாடுகள் (Revelations of Our Lord to St. Mary Margaret Alacoque)
Back to top
அக்டோபர் 17
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (ஆயர், இரத்த சாட்சி மற்றும் திருச்சபையின் தந்தையர்)
St. IGNATIUS OF ANTIOCH
நினைவுத்திருநாள் : அக்டோபர் 17
பிறப்பு: சுமார், கி.பி 35
இறப்பு: சுமார் கி.பி 108 உரோமை
புனிதர் பட்டம்: சட்ட உறுவாக்கத்துக்கு முன்
முக்கிய திருத்தலங்கள்: சான் கிலெமான்தே, உரோமை
திருவிழா: கிழக்கு மற்றும் சிரியன் கிறித்தவம்: அக்டோபர் 17 General Roman Calendar, 12th century to 1969: February 1 கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும்காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை: டிசம்பர் 20
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (சுமார் கிபி 35 - கிபி 108), அல்லது தியோபோரஸ் அதாவது கடவுளை தாங்குபவர்) என கிரேக்க மொழியில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், திருத்தூதர் யோவானின் சீடரும் ஆவார்.
இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை என்னும் சொல்முறையை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழா நாள் திசம்பர் 20.கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.
Back to top
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (ஆயர், இரத்த சாட்சி மற்றும் திருச்சபையின் தந்தையர்)
St. IGNATIUS OF ANTIOCH
நினைவுத்திருநாள் : அக்டோபர் 17
பிறப்பு: சுமார், கி.பி 35
இறப்பு: சுமார் கி.பி 108 உரோமை
புனிதர் பட்டம்: சட்ட உறுவாக்கத்துக்கு முன்
முக்கிய திருத்தலங்கள்: சான் கிலெமான்தே, உரோமை
திருவிழா: கிழக்கு மற்றும் சிரியன் கிறித்தவம்: அக்டோபர் 17 General Roman Calendar, 12th century to 1969: February 1 கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும்காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை: டிசம்பர் 20
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (சுமார் கிபி 35 - கிபி 108), அல்லது தியோபோரஸ் அதாவது கடவுளை தாங்குபவர்) என கிரேக்க மொழியில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், திருத்தூதர் யோவானின் சீடரும் ஆவார்.
இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை என்னும் சொல்முறையை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழா நாள் திசம்பர் 20.கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.
Back to top
அக்டோபர் 18
புனித லூக்கா (திருத்தூதர், நற்செய்தியாளர், இரத்தசாட்சி)
திருவிழா: அக்டோபர் 18
பிறப்பு: அந்தியோக்கியா, சிரியா,உரோமைப் பேரரசு
இறப்பு: சுமார் 84, கிரேக்க நாடு
ஏற்கும் சபை/சமயம்: கத்தோலிக்க திருச்சபை,கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கு கத்தோலிக்க திருச்சபை,ஆங்கிலிக்க ஒன்றியம்,லூதரனியம் மற்றும் சிலசீர்திருத்தத் திருச்சபைகள்
பாதுகாவல்: கலைஞர்கள்,மருத்துவர்கள், அறுவை மருத்துவர்கள் மற்றும் பலர்
குறிப்பிடத்தகுந்த படைப்புகள்: லூக்கா நற்செய்தி,
அப்போஸ்தலர் பணி
நற்செய்தியாளரான புனித லூக்கா ஒரு ஆதி கிறித்தவ எழுத்தாளரும், திருச்சபை தந்தையரும், புனித ஜெரோம் மற்றும் யோசிபஸின் படி விவிலியத்தின் லூக்கா நற்செய்தி மற்றும்அப்போஸ்தலர் பணி என்னும் நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் நான்கு நற்செய்தியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் எழுத்து நடை, இவர் நன்கு கற்றறிந்தவர் என்பதனை எடுத்தியம்புகின்றது.
இவர் அந்தியோக்கியா நகரில் வாழ்ந்த மருத்துவர் ஆவார். இவரைப்பற்றிய மிகப்பழைய குறிப்புதிருத்தூதர் பவுல் எழுதிய பிலமோன் வசனம் 24, கொலோசையர் 4:14 மற்றும் திமொத்தேயு 4:11இல் காணக்கிடைக்கின்றது.
இவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் அல்ல. மாறாக அவரின் 70 சீடருள் ஒருவராக இருக்கலாம் எனவும், குறிப்பாக உயிர்த்த இயேசுவோடு எமாவுசுக்கு சென்ற இரு சீடர்களுள் ஒருவராக இருக்கலாம் எனவும் விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
இவர் தனது 84ஆம் அகவையில் மரித்தார் என்பர். இவரின் மீ பொருட்கள் கான்ஸ்டண்டினோப்பிளுக்கு கி.பி 357இல் கொண்டுவரப்பட்டன. இவரின் விழாநாள் 18 அக்டோபர் ஆகும்.
Back to top
புனித லூக்கா (திருத்தூதர், நற்செய்தியாளர், இரத்தசாட்சி)
திருவிழா: அக்டோபர் 18
பிறப்பு: அந்தியோக்கியா, சிரியா,உரோமைப் பேரரசு
இறப்பு: சுமார் 84, கிரேக்க நாடு
ஏற்கும் சபை/சமயம்: கத்தோலிக்க திருச்சபை,கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கு கத்தோலிக்க திருச்சபை,ஆங்கிலிக்க ஒன்றியம்,லூதரனியம் மற்றும் சிலசீர்திருத்தத் திருச்சபைகள்
பாதுகாவல்: கலைஞர்கள்,மருத்துவர்கள், அறுவை மருத்துவர்கள் மற்றும் பலர்
குறிப்பிடத்தகுந்த படைப்புகள்: லூக்கா நற்செய்தி,
அப்போஸ்தலர் பணி
நற்செய்தியாளரான புனித லூக்கா ஒரு ஆதி கிறித்தவ எழுத்தாளரும், திருச்சபை தந்தையரும், புனித ஜெரோம் மற்றும் யோசிபஸின் படி விவிலியத்தின் லூக்கா நற்செய்தி மற்றும்அப்போஸ்தலர் பணி என்னும் நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் நான்கு நற்செய்தியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் எழுத்து நடை, இவர் நன்கு கற்றறிந்தவர் என்பதனை எடுத்தியம்புகின்றது.
இவர் அந்தியோக்கியா நகரில் வாழ்ந்த மருத்துவர் ஆவார். இவரைப்பற்றிய மிகப்பழைய குறிப்புதிருத்தூதர் பவுல் எழுதிய பிலமோன் வசனம் 24, கொலோசையர் 4:14 மற்றும் திமொத்தேயு 4:11இல் காணக்கிடைக்கின்றது.
இவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் அல்ல. மாறாக அவரின் 70 சீடருள் ஒருவராக இருக்கலாம் எனவும், குறிப்பாக உயிர்த்த இயேசுவோடு எமாவுசுக்கு சென்ற இரு சீடர்களுள் ஒருவராக இருக்கலாம் எனவும் விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
இவர் தனது 84ஆம் அகவையில் மரித்தார் என்பர். இவரின் மீ பொருட்கள் கான்ஸ்டண்டினோப்பிளுக்கு கி.பி 357இல் கொண்டுவரப்பட்டன. இவரின் விழாநாள் 18 அக்டோபர் ஆகும்.
Back to top
அக்டோபர் 19
சிலுவையின் புனித பவுல் (ஆதீன தலைவர், குரு)
("கடவுள் சேவை புரிய நல்ல சொற்களும், நல்ல எண்ணங்களும் மட்டும் போதாது. இதனோடு, உழைப்பு, உற்சாகம் மற்றும் தைரியம் தேவை" - சிலுவையின் புனித பவுல்)
நினைவுத் திருவிழா : 19 அக்டோபர் (விறுப்ப நிணைவு)
இயற்பெயர்: பவுலோ பிரான்செஸ்கோ தேனி
பிறப்பு: ஜனவரி 3, 1694 ஒ, டாவா, பியத்மாந்து,இத்தாலி
இறப்பு: அக்டோபர் 18, 1775(அகவை 81) சான்தா கோவானி இ பாலோ பசிலிக்கா, உரோமை
அருளாளர் பட்டம்: 1 மே 1853, உரோமை(ஒன்பதாம் பயஸ்)
புனிதர் பட்டம்: 29 ஜூன் 1867, உரோமை(ஒன்பதாம் பயஸ்)
சிலுவையின் புனித பவுல் (சனவரி 03 1694 - அக்டோபர் 18 1775) ஒரு இத்தாலிய கிறித்தவ புனிதரும், திருப்பாடுகள் சபையின் நிறுவனரும் ஆவார்.
சிலுவையின் புனித பவுலின் இயற்பெயர் பவுலோ பிரான்செஸ்கோ தேனி ஆகும். இவர் சனவரி 03, 1694அன்று பியத்மாந்து, இத்தாலியில் பிறந்தார். ஒரு பணக்கார வியபாரியின் மகனான இவர் தனது 19ஆம் அகவையில் மனம்மாற்றம் பெற்று பக்தி நிறைந்த வாழ்க்கை வாழலானார். பிரான்சிசு டி சேல்சின்புத்தகங்களும், கப்புச்சின் சபைக் குருக்களின் அன்பு குறித்தான போதனைகளும் இவரிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இவர் தனது வாழ்நாளெல்லாம் கடவுளை இயேசுவின் பாடுகளின் மூலம் எளிதில் காணலாம் என்று நம்பினார்.
தனது 26ஆம் வயதில் தொடர்ச்சியான செப அனுபவங்களின் மூலம் ஒரு புதிய துறவற சபையினைத் துவங்க இறை அழைத்தலை உணர்ந்தார். இவ்வாறு இவர் ஆரம்பித்ததே திருப்பாடுகள் சபை. இச்சபையினரின் அங்கியின் மேல் இயேசுவின் இருதயமும், "இயேசு கிறித்துவின் பாடுகள்" என்னும் வசனமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த சபைக்கு இவர் அளித்த பெயர், இயேசுவின் வறியோர், ஆனாலும் திருப்பாடுகளுக்கு இச்சபை அளித்த முக்கியத்துவத்தினால் இவர்கள் பின் நாட்களில் திருப்பாடுகளின் சபையோர் என அறியப்பட்டனர்.
இவரின் ஆயரின் தூண்டுதலால், இவர் மட்டுமே இச்சபையில் இருக்கும் போதே இவர் இச்சபையின் சட்ட நூலினை நாற்பது நாள் தியானத்துக்குப் பின் 1720இல் இயற்றினார். இச்சபையில் இவரின் சகோதரரே இவருக்குப் பின் சேர்ந்த முதல் உறுப்பினர் ஆவார். இதற்குப் பின் இச்சபை மெதுவாக வளரத்துவங்கியது. இவர் தனது வாழ்நாளில் பிறரின் ஆன்ம வழிகாட்டலுக்கு எழுதிய இரண்டாயிரத்துக்கும் மேலான கடிதங்கள் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவர் 18 அக்டோபர் 1775இல் இறந்தார். அச்சமயத்தில் இவரின் சபையில் 180 குருக்கள் மற்றும் அருட்சகோதரர்கள் இருந்தனர்.
இவருக்கு 1 அக்டோபர் 1852இல் முக்திபேறு பட்டமும், 29 ஜூன் 1867இல் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் இறந்தநாளான 18 அக்டோபர், நற்செய்தியாளர் லூக்காவின் விழாவாக இருப்பதால் இவரின் விழாநாள் 19 அக்டோபர் ஆகும்.
Back to top
சிலுவையின் புனித பவுல் (ஆதீன தலைவர், குரு)
("கடவுள் சேவை புரிய நல்ல சொற்களும், நல்ல எண்ணங்களும் மட்டும் போதாது. இதனோடு, உழைப்பு, உற்சாகம் மற்றும் தைரியம் தேவை" - சிலுவையின் புனித பவுல்)
நினைவுத் திருவிழா : 19 அக்டோபர் (விறுப்ப நிணைவு)
இயற்பெயர்: பவுலோ பிரான்செஸ்கோ தேனி
பிறப்பு: ஜனவரி 3, 1694 ஒ, டாவா, பியத்மாந்து,இத்தாலி
இறப்பு: அக்டோபர் 18, 1775(அகவை 81) சான்தா கோவானி இ பாலோ பசிலிக்கா, உரோமை
அருளாளர் பட்டம்: 1 மே 1853, உரோமை(ஒன்பதாம் பயஸ்)
புனிதர் பட்டம்: 29 ஜூன் 1867, உரோமை(ஒன்பதாம் பயஸ்)
சிலுவையின் புனித பவுல் (சனவரி 03 1694 - அக்டோபர் 18 1775) ஒரு இத்தாலிய கிறித்தவ புனிதரும், திருப்பாடுகள் சபையின் நிறுவனரும் ஆவார்.
சிலுவையின் புனித பவுலின் இயற்பெயர் பவுலோ பிரான்செஸ்கோ தேனி ஆகும். இவர் சனவரி 03, 1694அன்று பியத்மாந்து, இத்தாலியில் பிறந்தார். ஒரு பணக்கார வியபாரியின் மகனான இவர் தனது 19ஆம் அகவையில் மனம்மாற்றம் பெற்று பக்தி நிறைந்த வாழ்க்கை வாழலானார். பிரான்சிசு டி சேல்சின்புத்தகங்களும், கப்புச்சின் சபைக் குருக்களின் அன்பு குறித்தான போதனைகளும் இவரிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இவர் தனது வாழ்நாளெல்லாம் கடவுளை இயேசுவின் பாடுகளின் மூலம் எளிதில் காணலாம் என்று நம்பினார்.
தனது 26ஆம் வயதில் தொடர்ச்சியான செப அனுபவங்களின் மூலம் ஒரு புதிய துறவற சபையினைத் துவங்க இறை அழைத்தலை உணர்ந்தார். இவ்வாறு இவர் ஆரம்பித்ததே திருப்பாடுகள் சபை. இச்சபையினரின் அங்கியின் மேல் இயேசுவின் இருதயமும், "இயேசு கிறித்துவின் பாடுகள்" என்னும் வசனமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த சபைக்கு இவர் அளித்த பெயர், இயேசுவின் வறியோர், ஆனாலும் திருப்பாடுகளுக்கு இச்சபை அளித்த முக்கியத்துவத்தினால் இவர்கள் பின் நாட்களில் திருப்பாடுகளின் சபையோர் என அறியப்பட்டனர்.
இவரின் ஆயரின் தூண்டுதலால், இவர் மட்டுமே இச்சபையில் இருக்கும் போதே இவர் இச்சபையின் சட்ட நூலினை நாற்பது நாள் தியானத்துக்குப் பின் 1720இல் இயற்றினார். இச்சபையில் இவரின் சகோதரரே இவருக்குப் பின் சேர்ந்த முதல் உறுப்பினர் ஆவார். இதற்குப் பின் இச்சபை மெதுவாக வளரத்துவங்கியது. இவர் தனது வாழ்நாளில் பிறரின் ஆன்ம வழிகாட்டலுக்கு எழுதிய இரண்டாயிரத்துக்கும் மேலான கடிதங்கள் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவர் 18 அக்டோபர் 1775இல் இறந்தார். அச்சமயத்தில் இவரின் சபையில் 180 குருக்கள் மற்றும் அருட்சகோதரர்கள் இருந்தனர்.
இவருக்கு 1 அக்டோபர் 1852இல் முக்திபேறு பட்டமும், 29 ஜூன் 1867இல் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் இறந்தநாளான 18 அக்டோபர், நற்செய்தியாளர் லூக்காவின் விழாவாக இருப்பதால் இவரின் விழாநாள் 19 அக்டோபர் ஆகும்.
Back to top
அக்டோபர் 20
புனித விட்டாலிஸ்
( St. Vitalis of Salzburg )
நினைவுத்திருநாள்; அக்டோபர் 20
சால்ஸ்பூர்க் நகர் ஆயர் :
பிறப்பு : 7ம் நூற்றாண்டு
இறப்பு : 20 அக்டோபர் 730 சால்ஸ்பூர்க் Salzburg, ஆஸ்திரியா
பாதுகாவல் : குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்
புனித விட்டாலிஸ், தனது இளம் வயதிலிருந்தே மறைப்பணியாளராக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். இவர் சால்ஸ்பூர்க் ஆயர் ரூபர்ட் (Rubert) என்பவரிடம் கல்வி கற்றார். பிறகு ஆயர் ரூபர்ட் 27ம் நாள் மார்ச் 718ம் ஆண்டு இறந்துவிடவே, அவருக்கு பிறகு, அவரின் ஆசிரியர் பதவியை விட்டாலிஸ் (Vitalis) ஏற்றார்.
12 ஆண்டுகள் தொடர்ந்து அப்பணியை செய்தார். அதன்பிறகு விட்டாலிஸ் சால்ஸ்பூர்க்கில் ஆயர் பதவியை ஏற்றார். ஆயர் ரூபர்ட் பெரிய மறைபரப்பு பணியாளராக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். ஆனால் விட்டாலிஸ் அவ்விருப்பத்தை தன் பணியின் வழியாக நிறைவேற்றினார். இவர் சால்ஸ்பூர்க்கில் புகழ் வாய்ந்த மறைபரப்பு பணியாளராக திகழ்ந்தார்.
செபம் :
ஆற்றல் மிக்க இறைவா!
குழந்தை பருவத்திலிருந்தே உம்மீது ஆர்வம் கொண்டு வாழ புனித விட்டாலிசை தூண்டினீர். உமது இறைத்திட்டத்தை அவரில் நிறைவேற்றினீர். இன்று எம்மை நீர் தயையுடன் கண்ணோக்கியருளும். உமது அன்பால் நாங்கள் தூண்டப்பட்டு என்றும் உம்பணியில் ஆர்வம் கொண்டு செயல்பட நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்
Back to top
அக்டோபர் 21
மறைசாட்சி ஊர்சுலா
St.Ursula
நினைவுத்திருநாள் : அக்டோபர் 21
பிறப்பு : இங்கிலாந்து (?)
இறப்பு : 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு, கொலோன்
பாதுகாவல்: கொலோன் மறைமாவட்டம், இளைஞர்கள், ஆசிரியர்கள், அமைதியான மரணம்
ஊர்சுலா ஆங்கிலேயர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். சிறுபிள்ளையாக இருக்கும்போதே, துறவிகளுக்குரிய வார்த்தைப்பாடுகளை எடுத்தார். ஆனால் இவரின் தந்தை, செல்வந்தர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தார். ஆனால் ஊர்சுலாவின் இதயம் இறைவனையே நாடியது.
இவர் ஒருமுறை கடலில் பயணம் செய்யும்போது, பலத்த காற்று ஏற்பட்டது. அப்போது தான் சென்ற கப்பலை, கொலோன் நகரை நோக்கி செல்ல ஊர்சுலா கூறவே கப்பலானது கொலோன் நகரை வந்தடைந்தது. அப்போது அழகு வாய்ந்த ஊர்சுலா ஹீனன்கொனிஷ் (Hunnenkönig) என்பவரால் கவரப்பட்டார்.
ஆனால் அவ்வரசனின் விருப்பத்திற்கிணங்க ஊர்சுலா மறுத்தார். இதனால் அவனால் கொலை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. 1106 ஆம் ஆண்டில் இவரின் புனிதப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இவரின் பெயரில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! ஊர்சுலா என்ற பெயரை தாங்கியுள்ள அனைவரையும் ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள நலன்களை கொடுத்து, வாழ்வை ஆசீர்வதித்து இப்புனிதரின் வழியாக உம் ஆசீர்வாதங்களை நீர் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
அக்டோபர் 22
✠ திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் ✠
( யோவான் பவுல் )
( Pope St. John Paul II )
264ம் திருத்தந்தை :
திருப்பட்டங்கள் :
குருத்துவத் திருநிலைப்பாடு : 1 நவம்பர் 1946
ஆடேம் ஸ்தேபான் சபியா-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு : 28 செப்டெம்பர் 1958
இகுனுஸ் பாசிக்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது : 26 ஜூன் 1967
பிற தகவல்கள் :
இயற்பெயர் : கரோல் யோசேப் வொய்த்திவா
பிறப்பு : மே 18, 1920
இறப்பு : ஏப்ரல் 2, 2005 (அகவை 84)
குடியுரிமை : போலந்து நாட்டவர்
புனிதர் பட்டமளிப்பு :
நினைவுத் திருவிழா : 22 அக்டோபர்
ஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்க திருச்சபை
பகுப்பு : திருத்தந்தை
முத்திப்பேறு : 1 மே 2011
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
புனிதர் பட்டம் : 27 ஏப்ரல் 2014
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிசு
பாதுகாவல் : உலக இளையோர் நாள்
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர், கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவியில் இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் இவராவார்.
இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். இவர் 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.
வாழ்க்கைக் குறிப்பு :
1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929இல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932இல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941இல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939இல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும்பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946இல் குருவானார். 1964இல் கிராக்கோவ் பேராயராகவும் 1967இல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
1978ஆம் ஆண்டு அக்டோபர் 16இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ஆம் நாள் காலமானார்.
அருளாளர் பட்டம் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஆகும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு தாமதக் காலம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர், இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வத்திக்கான் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலைஅருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.
புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தாரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால்விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது. இந்த நிகழ்வை ஆய்ந்த வத்திக்கான் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது.
2014, ஏப்பிரல் 27ம் நாள் திருத்தந்தை பிரான்சிசு அவர்களால், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.
Back to top
✠ திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் ✠
( யோவான் பவுல் )
( Pope St. John Paul II )
264ம் திருத்தந்தை :
திருப்பட்டங்கள் :
குருத்துவத் திருநிலைப்பாடு : 1 நவம்பர் 1946
ஆடேம் ஸ்தேபான் சபியா-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு : 28 செப்டெம்பர் 1958
இகுனுஸ் பாசிக்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது : 26 ஜூன் 1967
பிற தகவல்கள் :
இயற்பெயர் : கரோல் யோசேப் வொய்த்திவா
பிறப்பு : மே 18, 1920
இறப்பு : ஏப்ரல் 2, 2005 (அகவை 84)
குடியுரிமை : போலந்து நாட்டவர்
புனிதர் பட்டமளிப்பு :
நினைவுத் திருவிழா : 22 அக்டோபர்
ஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்க திருச்சபை
பகுப்பு : திருத்தந்தை
முத்திப்பேறு : 1 மே 2011
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
புனிதர் பட்டம் : 27 ஏப்ரல் 2014
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிசு
பாதுகாவல் : உலக இளையோர் நாள்
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர், கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவியில் இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் இவராவார்.
இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். இவர் 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.
வாழ்க்கைக் குறிப்பு :
1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929இல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932இல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941இல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939இல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும்பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946இல் குருவானார். 1964இல் கிராக்கோவ் பேராயராகவும் 1967இல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
1978ஆம் ஆண்டு அக்டோபர் 16இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ஆம் நாள் காலமானார்.
அருளாளர் பட்டம் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஆகும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு தாமதக் காலம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர், இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வத்திக்கான் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலைஅருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.
புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தாரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால்விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது. இந்த நிகழ்வை ஆய்ந்த வத்திக்கான் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது.
2014, ஏப்பிரல் 27ம் நாள் திருத்தந்தை பிரான்சிசு அவர்களால், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.
Back to top
அக்டோபர் 23
புனித கப்பெஸ்ட்ரானோ நகர் ஜான்(துறவி)
St. Johannes von Capestrano
நினைவுத் திருநாள் : அக்டோபர் 23
பிறப்பு : 24 ஜூன் 1386, கப்பெஸ்ட்ரானோ, இத்தாலி
இறப்பு : 23 அக்டோபர் 1456, இலோக் Ilok, ஹங்கேரி
இவர் அக்குயிலா (Aquila) என்பவரின் மகன். இவர் பெருஜியாவில்(Perugia) தன் கல்வியை பயின்றார். தன்னுடைய 26 ஆம் வயதிலேயே, அந்நகரின் மேயர் பதவியை ஏற்றார். அப்போது இந்நகரை கைப்பற்ற போர் ஏற்பட்டது. இப்போருக்குப்பின் இவர் மனமாறினார். திருமணம் செய்த இவர், தன் இல்லற வாழ்வை துறந்து, 1415 ல் புனித பிரான்சிஸ்குவின் சபையில் சேர்ந்தார். பின்னர் இவர் சியென்னா நகர் பெர்னார்டின் Bernhardinஎன்பவரின் நண்பரானார். இவர் தன்னுடைய குருப்பட்டம் பெற்றபின் தானாகவே முன்வந்து பல்வேறு மறையுரைகளை ஆற்றினார்.
பிறகு பெர்னார்டினுடன் சேர்ந்து ஐரோப்பா முழுவதும் சென்று மறைபரப்புப் பணியை ஆற்றினார். சென்ற இடமெல்லாம் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றி, மக்களை கவரும் விதத்தில் மறையுரையாற்றி, விசுவாசத்தைப் பரப்பினார். தன்னுடைய 40 வயதிற்குள்ளே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து மறைபரப்பு பணியாற்றி கிறிஸ்துவ மதத்தை வளர்த்தார். பிறகு சிலுவைப்போர் புரிய போர் வீரர்கலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். போர் வீரர்களுடன், தானே போர்புரிய செல்லும்போது, உடல் நலக்குறைவால் உயிர்துறந்தார். இவர் ஐரோப்பாவின் தந்தை என்றழைக்கப்படுகின்றார்
செபம்:
நலமளிக்கும் வல்லவரே எம் இறைவா! உமது இறைஊழியத்தில் நிலைத்து நிற்க புனித யோவானை வலுப்படுத்தினீர். ஐரோப்பாவில் உம்மை பறைசாற்றிட அவரை தேர்ந்தெடுத்தீர். தொடர்ந்து இறைவிசுவாசம் நிலைத்திட உம்மருள் தாரும். உமது பாதுகாவலில் நாங்கள் நலமுடன் வாழவும், உமது திருச்சபை நிலையான அமைதியை பெறவும் செய்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித கப்பெஸ்ட்ரானோ நகர் ஜான்(துறவி)
St. Johannes von Capestrano
நினைவுத் திருநாள் : அக்டோபர் 23
பிறப்பு : 24 ஜூன் 1386, கப்பெஸ்ட்ரானோ, இத்தாலி
இறப்பு : 23 அக்டோபர் 1456, இலோக் Ilok, ஹங்கேரி
இவர் அக்குயிலா (Aquila) என்பவரின் மகன். இவர் பெருஜியாவில்(Perugia) தன் கல்வியை பயின்றார். தன்னுடைய 26 ஆம் வயதிலேயே, அந்நகரின் மேயர் பதவியை ஏற்றார். அப்போது இந்நகரை கைப்பற்ற போர் ஏற்பட்டது. இப்போருக்குப்பின் இவர் மனமாறினார். திருமணம் செய்த இவர், தன் இல்லற வாழ்வை துறந்து, 1415 ல் புனித பிரான்சிஸ்குவின் சபையில் சேர்ந்தார். பின்னர் இவர் சியென்னா நகர் பெர்னார்டின் Bernhardinஎன்பவரின் நண்பரானார். இவர் தன்னுடைய குருப்பட்டம் பெற்றபின் தானாகவே முன்வந்து பல்வேறு மறையுரைகளை ஆற்றினார்.
பிறகு பெர்னார்டினுடன் சேர்ந்து ஐரோப்பா முழுவதும் சென்று மறைபரப்புப் பணியை ஆற்றினார். சென்ற இடமெல்லாம் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றி, மக்களை கவரும் விதத்தில் மறையுரையாற்றி, விசுவாசத்தைப் பரப்பினார். தன்னுடைய 40 வயதிற்குள்ளே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து மறைபரப்பு பணியாற்றி கிறிஸ்துவ மதத்தை வளர்த்தார். பிறகு சிலுவைப்போர் புரிய போர் வீரர்கலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். போர் வீரர்களுடன், தானே போர்புரிய செல்லும்போது, உடல் நலக்குறைவால் உயிர்துறந்தார். இவர் ஐரோப்பாவின் தந்தை என்றழைக்கப்படுகின்றார்
செபம்:
நலமளிக்கும் வல்லவரே எம் இறைவா! உமது இறைஊழியத்தில் நிலைத்து நிற்க புனித யோவானை வலுப்படுத்தினீர். ஐரோப்பாவில் உம்மை பறைசாற்றிட அவரை தேர்ந்தெடுத்தீர். தொடர்ந்து இறைவிசுவாசம் நிலைத்திட உம்மருள் தாரும். உமது பாதுகாவலில் நாங்கள் நலமுடன் வாழவும், உமது திருச்சபை நிலையான அமைதியை பெறவும் செய்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
அக்டோபர் 24
✠ புனித அந்தோனி மரிய கிளாரட் ✠
( St. Anthony Mary Claret )
அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையின் நிறுவனர் :
பிறப்பு : திசம்பர் 23, 1807
ஸ்பெயின்
இறப்பு : அக்டோபர் 24, 1870 (அகவை 62)
பிரான்ஸ்
ஏற்கும் சபை/ சமயம் : ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை
அருளாளர் பட்டம் : பெப்ரவரி 25, 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்; ரோம்
புனிதர் பட்டம் : மே 7, 1950
திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்; ரோம்
முக்கிய திருத்தலங்கள் : விக், ஸ்பெயின்
நினைவுத் திருவிழா : அக்டோபர் 24
அக்டோபர் 23 (உள்ளூர் நாட்காட்டிகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கம்)
பாதுகாவல் :
நெசவுத் தொழிலாளி, மறைப்போதகர், நற்செய்தி பணியாளர்,
பேராயர், கிளரீசியர், அமல மரியின் மறைப்போத மைந்தர்.
புனித அந்தோனி மரிய கிளாரட், ஸ்பெயினின் கட்டலோனிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகரும், நற்செய்தி பணியாளரும், பேராயரும் ஆவார்.
இறையன்பை, முக்கியமாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வெளிப்படுத்தியவர். 1849, ஜூலை 16ம் நாள் அன்று கிளரீசியன் சபையாக விளங்கும் அமல மரியின் மறைபோதக மைந்தர்கள் என்ற சபையை நிறுவினார்.
வாழ்க்கைச் சுருக்கம் :
புனித அந்தோனி மரிய கிளாரட், ஸ்பெயினின் சல்லியந்து நகரில் ஒரு நெசவுத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். பிறந்த கிராமத்திலேயே ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர், தனது 12வது அகவையில் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொண்டார். அங்கிருந்து பார்சிலோனா நகருக்கு சென்றார். 20வது அகவை வரை அங்கேயே தங்கியிருந்து நெசவுத் தொழிலில் சிறப்புப் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரங்களில் இலத்தீன், மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கற்கலானார்.
சமய வாழ்க்கையில் இவர் பெரிதும் நாட்டம் கொண்டவராய், பார்சிலோனாவை விட்டுப் புறப்பட்டு, 1829ம் ஆண்டில் விக் என்ற இடத்தில் கிறிஸ்தவ சமயக் கல்விக்கூடம் ஒன்றில் சேர்ந்தார்.
1835ம் ஆண்டு ஜூன் 13ல் குருப்பட்டம் பெற்றார்.
தொடர்ந்து 1839 வரை வேதவியல் படித்துத் தேறினார். கட்டலோனியாவிலும் கனேரி தீவுகளிலும் மறைப்போதகப் பணிப்பயணங்களை கால்நடையாகவே மேற்கொண்டார்.
ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் 1847ம் ஆண்டு ஒரு சில குருக்களோடு சேர்ந்து கத்தோலிக்க அச்சகம் ஒன்றை நிறுவினார். அவர் எண்ணில்லாத புத்தகங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார்.
அக்கால கட்டத்தில் ஸ்பெயினில் அரசியல் வன்முறைகள் அதிகரிக்க அதிகரிக்க, கிளாரட்டின் வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் 14 மாதங்கள் கனேரிய தீவுகளில் அவர் பணிசெய்து வந்தார். கனேரிய தீவுகளில் அவரின் பணி சிறந்த பயனை அளித்தது. இருந்தும் அவர் ஸ்பெயினுக்கே மீண்டும் சென்று தனது பணியைத் தொடர விரும்பினார்.
மீண்டும் விக் திரும்பி 1949 ஜூலை 16ம் நாள் ஐந்து குருக்களோடு சேர்ந்து இன்று கிளரீசியன் சபையாக விளங்கும் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் (Congregation of the Missionary Sons of the Immaculate Heart of Mary) என்ற சபையை நிறுவினார்.
பார்சிலோனாவில் மிகப் பெரும் சமய நூலகம் ஒன்றை நிறுவினார். இது இன்று கிளாரட் நூலகம் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பழைய கத்தோலிக்க நூல்கள் பலவற்றை மிகக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிட்டார்.
பல ஆண்டுகள் கத்லோனியாப் பகுதி (Cathlonia) எங்கும் சென்று மறைப்பணியாளராக பணியாற்றினார்.
1850-1857ம் ஆண்டுவரை கியூபாவில் (Cuba) பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1857ம் ஆண்டு அரசி 2ஆம் இசபெல்லா (Königin Isabella II) அவர்களின் ஒப்புரவு அருட்சாதன குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களின் மீட்புக்காக மிக திறம்பட உழைத்தவர் என்னும் பாராட்டுக்கு உரியவரானார்.
ஸ்பெயின் நாட்டிற்கு திரும்ப வந்தபோது, தொடர்ந்து திருச்சபைக்காக பல துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். இவர் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்க கூட்டத்திற்கு செல்லும்போது இறந்தார். இவரின் உடல் ஸ்பெயின் நாட்டில் உள்ள விச் (Vich) என்ற ஊரிலுள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Back to top
✠ புனித அந்தோனி மரிய கிளாரட் ✠
( St. Anthony Mary Claret )
அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையின் நிறுவனர் :
பிறப்பு : திசம்பர் 23, 1807
ஸ்பெயின்
இறப்பு : அக்டோபர் 24, 1870 (அகவை 62)
பிரான்ஸ்
ஏற்கும் சபை/ சமயம் : ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை
அருளாளர் பட்டம் : பெப்ரவரி 25, 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்; ரோம்
புனிதர் பட்டம் : மே 7, 1950
திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்; ரோம்
முக்கிய திருத்தலங்கள் : விக், ஸ்பெயின்
நினைவுத் திருவிழா : அக்டோபர் 24
அக்டோபர் 23 (உள்ளூர் நாட்காட்டிகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கம்)
பாதுகாவல் :
நெசவுத் தொழிலாளி, மறைப்போதகர், நற்செய்தி பணியாளர்,
பேராயர், கிளரீசியர், அமல மரியின் மறைப்போத மைந்தர்.
புனித அந்தோனி மரிய கிளாரட், ஸ்பெயினின் கட்டலோனிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகரும், நற்செய்தி பணியாளரும், பேராயரும் ஆவார்.
இறையன்பை, முக்கியமாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வெளிப்படுத்தியவர். 1849, ஜூலை 16ம் நாள் அன்று கிளரீசியன் சபையாக விளங்கும் அமல மரியின் மறைபோதக மைந்தர்கள் என்ற சபையை நிறுவினார்.
வாழ்க்கைச் சுருக்கம் :
புனித அந்தோனி மரிய கிளாரட், ஸ்பெயினின் சல்லியந்து நகரில் ஒரு நெசவுத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். பிறந்த கிராமத்திலேயே ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர், தனது 12வது அகவையில் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொண்டார். அங்கிருந்து பார்சிலோனா நகருக்கு சென்றார். 20வது அகவை வரை அங்கேயே தங்கியிருந்து நெசவுத் தொழிலில் சிறப்புப் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரங்களில் இலத்தீன், மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கற்கலானார்.
சமய வாழ்க்கையில் இவர் பெரிதும் நாட்டம் கொண்டவராய், பார்சிலோனாவை விட்டுப் புறப்பட்டு, 1829ம் ஆண்டில் விக் என்ற இடத்தில் கிறிஸ்தவ சமயக் கல்விக்கூடம் ஒன்றில் சேர்ந்தார்.
1835ம் ஆண்டு ஜூன் 13ல் குருப்பட்டம் பெற்றார்.
தொடர்ந்து 1839 வரை வேதவியல் படித்துத் தேறினார். கட்டலோனியாவிலும் கனேரி தீவுகளிலும் மறைப்போதகப் பணிப்பயணங்களை கால்நடையாகவே மேற்கொண்டார்.
ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் 1847ம் ஆண்டு ஒரு சில குருக்களோடு சேர்ந்து கத்தோலிக்க அச்சகம் ஒன்றை நிறுவினார். அவர் எண்ணில்லாத புத்தகங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார்.
அக்கால கட்டத்தில் ஸ்பெயினில் அரசியல் வன்முறைகள் அதிகரிக்க அதிகரிக்க, கிளாரட்டின் வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் 14 மாதங்கள் கனேரிய தீவுகளில் அவர் பணிசெய்து வந்தார். கனேரிய தீவுகளில் அவரின் பணி சிறந்த பயனை அளித்தது. இருந்தும் அவர் ஸ்பெயினுக்கே மீண்டும் சென்று தனது பணியைத் தொடர விரும்பினார்.
மீண்டும் விக் திரும்பி 1949 ஜூலை 16ம் நாள் ஐந்து குருக்களோடு சேர்ந்து இன்று கிளரீசியன் சபையாக விளங்கும் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் (Congregation of the Missionary Sons of the Immaculate Heart of Mary) என்ற சபையை நிறுவினார்.
பார்சிலோனாவில் மிகப் பெரும் சமய நூலகம் ஒன்றை நிறுவினார். இது இன்று கிளாரட் நூலகம் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பழைய கத்தோலிக்க நூல்கள் பலவற்றை மிகக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிட்டார்.
பல ஆண்டுகள் கத்லோனியாப் பகுதி (Cathlonia) எங்கும் சென்று மறைப்பணியாளராக பணியாற்றினார்.
1850-1857ம் ஆண்டுவரை கியூபாவில் (Cuba) பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1857ம் ஆண்டு அரசி 2ஆம் இசபெல்லா (Königin Isabella II) அவர்களின் ஒப்புரவு அருட்சாதன குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களின் மீட்புக்காக மிக திறம்பட உழைத்தவர் என்னும் பாராட்டுக்கு உரியவரானார்.
ஸ்பெயின் நாட்டிற்கு திரும்ப வந்தபோது, தொடர்ந்து திருச்சபைக்காக பல துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். இவர் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்க கூட்டத்திற்கு செல்லும்போது இறந்தார். இவரின் உடல் ஸ்பெயின் நாட்டில் உள்ள விச் (Vich) என்ற ஊரிலுள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Back to top
அக்டோபர் 25
✠ புனிதர்கள் கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பினியன் ✠
( Saints Krispin and Krispinian )
பிறப்பு : 3ம் நூற்றாண்டு
உரோம், இத்தாலி
இறப்பு : 287
சோயிசோன்ஸ் Soissons, பிரான்சு
பாதுகாவல் :
ஒஸ்னாபூருக் Osnabrück, சோயிசோன்ஸ்,
காலணி தயாரிப்பவர்கள், தையல் தொழிலாளர்கள்
இவர்கள் இருவரும் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்கள் வட பிரான்ஸில் நற்செய்தியை போதித்தவர்கள். செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து ஏழை மக்களுக்கு உதவி செய்தார்கள். இடைவிடாமல் ஏழைகளுக்காக உழைத்தார்கள்.
இவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க மாக்சிமியான் (Maximian) என்பவன் தடைவிதித்தான். அதைமீறி இருவரும் கிறிஸ்துவை அறிவித்தனர். கிறிஸ்தவ நெறியில் வாழ அனைவரையும் தூண்டினர். இதனால் கோபவெறிக்கொண்ட மாக்சிமியான் இருவரையும் எரியும் மெழுகில் இறக்கினான். மிகக் குளிர்ந்த நீரில் நாள் கணக்கில் நிற்க வைத்தான். அப்போதும் இருவரும் சிறிதும் மனந்தளராமல் நற்செய்தியை அறிவித்தனர். இவர்களின் செயல்களை கண்ட மாக்சிமியான் இன்னும் வெறிக்கொண்டு தவறாக தீர்ப்பிட்டு கொன்றான்
செபம் :
உண்மையின் பரம்பொருளே எம் இறைவா!
நீர் இவ்வுலக மக்களின் மத்தியில் வாழ்கின்றீர் என்பதை தன் வாழ்வின் வழியாக பறைசாற்றிய இன்றைய புனிதர்களை எமக்கு முன்மாதிரியாக தந்தீர். இவர்களின் வேண்டுதலால், நாங்கள் உமது வார்த்தைக்கு செவிமடுத்து நீர் காட்டும் உம் வார்த்தையின் பாதையில் நடக்க எமக்கு உம் அருள் தாரும். ஆமென் †
✠ புனிதர்கள் கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பினியன் ✠
( Saints Krispin and Krispinian )
பிறப்பு : 3ம் நூற்றாண்டு
உரோம், இத்தாலி
இறப்பு : 287
சோயிசோன்ஸ் Soissons, பிரான்சு
பாதுகாவல் :
ஒஸ்னாபூருக் Osnabrück, சோயிசோன்ஸ்,
காலணி தயாரிப்பவர்கள், தையல் தொழிலாளர்கள்
இவர்கள் இருவரும் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்கள் வட பிரான்ஸில் நற்செய்தியை போதித்தவர்கள். செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து ஏழை மக்களுக்கு உதவி செய்தார்கள். இடைவிடாமல் ஏழைகளுக்காக உழைத்தார்கள்.
இவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க மாக்சிமியான் (Maximian) என்பவன் தடைவிதித்தான். அதைமீறி இருவரும் கிறிஸ்துவை அறிவித்தனர். கிறிஸ்தவ நெறியில் வாழ அனைவரையும் தூண்டினர். இதனால் கோபவெறிக்கொண்ட மாக்சிமியான் இருவரையும் எரியும் மெழுகில் இறக்கினான். மிகக் குளிர்ந்த நீரில் நாள் கணக்கில் நிற்க வைத்தான். அப்போதும் இருவரும் சிறிதும் மனந்தளராமல் நற்செய்தியை அறிவித்தனர். இவர்களின் செயல்களை கண்ட மாக்சிமியான் இன்னும் வெறிக்கொண்டு தவறாக தீர்ப்பிட்டு கொன்றான்
செபம் :
உண்மையின் பரம்பொருளே எம் இறைவா!
நீர் இவ்வுலக மக்களின் மத்தியில் வாழ்கின்றீர் என்பதை தன் வாழ்வின் வழியாக பறைசாற்றிய இன்றைய புனிதர்களை எமக்கு முன்மாதிரியாக தந்தீர். இவர்களின் வேண்டுதலால், நாங்கள் உமது வார்த்தைக்கு செவிமடுத்து நீர் காட்டும் உம் வார்த்தையின் பாதையில் நடக்க எமக்கு உம் அருள் தாரும். ஆமென் †
அக்டோபர் 26
பிறப்பு: கி.பி முதலாம் நூற்றாண்டு, பெத்லகேம், யூதேயா
இறப்பு: கிபி சுமார் 107, உரோமை, உரோமைப் பேரரசு
இயற்பெயர்: எவரிஸ்துஸ் (அ) அரிஸ்துஸ்
திருப்பணித் துவக்கம்: கிபி சுமார் 99
திருப்பணி முடிவு: கிபி சுமார் 107
முன்னிருந்தவர்: புனித முதலாம் கிளமெண்ட்
பின்வந்தவர்: முதலாம் அலெக்சாண்டர்
புனித எவரிஸ்துஸ் (Saint Evaristus) அல்லது அரிஸ்துஸ் (Aristus) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் ஐந்தாம் திருத்தந்தையாவும், புனித முதலாம் கிளமெண்ட் என்பவருக்குப் பின் திருத்தந்தையாகப் பதவி ஏற்றவராகவும் கருதப்படுகிறார். தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்களான இரனேயுஸ் மற்றும் செசரேயா யூசேபியஸ் இச்செய்தியைத் தருகின்றனர்.
எவரிஸ்துஸ் என்னும் பெயர் கிரேக்க மொழியில் "இனிமை மிக்கவர்" என்று பொருள்படும்.
வாழ்க்கைக் குறிப்புகள்
திருத்தந்தை எவரிஸ்து என்பவரின் திருப்பணிக் காலம் குறித்து ஒத்த கருத்து இல்லை. "திருச்சபை வரலாறு" என்னும் நூலில் யூசேபியஸ் அந்த திருப்பணிக் காலம் கி.பி. 99இலிருந்து 108 வரை நீடித்தது என்கிறார். "லிபேரியன் குறிப்பேடு" என்னும் நூல் எவரிஸ்தின் பெயரை "அரிஸ்துஸ்" என்று குறிப்பிடுவதோடு, அவரது திருப்பணிக் காலம் கி.பி. 96இலிருந்து 108 வரை தொடர்ந்ததாகக் கூறுகிறது.
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு தருகின்ற கீழ்வரும் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. அதன்படி, கிரேக்கப் பின்னணியைச் சார்ந்த எவரிஸ்துஸ், யூதத் தந்தைக்கு பெத்லகேமில் மகனாகப் பிறந்தார். மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். உரோமைத் திருச்சபையைப் பல பங்குகளாகப் பிரித்து குருக்களை நியமித்தார். 15 ஆயர்களையும் 17 குருக்களையும் 2 திருத்தொண்டர்களையும் ஏற்படுத்தினார்.
மேற்கூறிய ஏடு குறிப்பிடுவது போல, எவரிஸ்துஸ் புனித பேதுரு கல்லறையின் அருகே அடக்கம் செய்யப்பட்டார் என்று உறுதியாகத் தெரிகிறது. அவரது பணியிடம் 19 நாள்கள் வெறுமையாய் இருந்தது.
உரோமைத் திருச்சபையின் முதல் திருத்தந்தையர்களின் பெயர்கள் திருப்பலியின் நற்கருணை மன்றாட்டில் இருக்க, எவரிஸ்துசின் பெயர் மட்டும் அங்கு காணப்படவில்லை. இதிலிருந்து, இத்திருத்தந்தை பற்றிய உறுதியான வரலாற்றுச் செய்திகள் தெரியாத நிலை திருச்சபை வரலாற்றின் முதல் நூற்றாண்டுகளிலிருந்தே நிலவிவந்துள்ளது எனத் தெரிகிறது.
புனிதராகப் போற்றப்படுதல்
எவரிஸ்துஸ் எவ்வாறு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்பது பற்றியும் உறுதிப்பாடு இல்லை. கத்தோலிக்க திருச்சபை இவரை ஒரு புனிதராகப் போற்றுகிறது. இவர்தம் திருவிழா அக்டோபர் 26 ஆகும். 1969இலிருந்து இவரது பெயர் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் மறைச்சாட்சிகள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டு, இப்போது தனி நாள்காட்டியில் மட்டுமே உள்ளது.
பதவி வகித்த காலம்
"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (Annuario Pontificio) என்னும் நூல் இவரது திருப்பணிக் காலம் 96 (அல்லது 98) - 108 ஆகும் என்னும் தகவலைத் தருகிறது.
Back to top
பிறப்பு: கி.பி முதலாம் நூற்றாண்டு, பெத்லகேம், யூதேயா
இறப்பு: கிபி சுமார் 107, உரோமை, உரோமைப் பேரரசு
இயற்பெயர்: எவரிஸ்துஸ் (அ) அரிஸ்துஸ்
திருப்பணித் துவக்கம்: கிபி சுமார் 99
திருப்பணி முடிவு: கிபி சுமார் 107
முன்னிருந்தவர்: புனித முதலாம் கிளமெண்ட்
பின்வந்தவர்: முதலாம் அலெக்சாண்டர்
புனித எவரிஸ்துஸ் (Saint Evaristus) அல்லது அரிஸ்துஸ் (Aristus) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் ஐந்தாம் திருத்தந்தையாவும், புனித முதலாம் கிளமெண்ட் என்பவருக்குப் பின் திருத்தந்தையாகப் பதவி ஏற்றவராகவும் கருதப்படுகிறார். தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்களான இரனேயுஸ் மற்றும் செசரேயா யூசேபியஸ் இச்செய்தியைத் தருகின்றனர்.
எவரிஸ்துஸ் என்னும் பெயர் கிரேக்க மொழியில் "இனிமை மிக்கவர்" என்று பொருள்படும்.
வாழ்க்கைக் குறிப்புகள்
திருத்தந்தை எவரிஸ்து என்பவரின் திருப்பணிக் காலம் குறித்து ஒத்த கருத்து இல்லை. "திருச்சபை வரலாறு" என்னும் நூலில் யூசேபியஸ் அந்த திருப்பணிக் காலம் கி.பி. 99இலிருந்து 108 வரை நீடித்தது என்கிறார். "லிபேரியன் குறிப்பேடு" என்னும் நூல் எவரிஸ்தின் பெயரை "அரிஸ்துஸ்" என்று குறிப்பிடுவதோடு, அவரது திருப்பணிக் காலம் கி.பி. 96இலிருந்து 108 வரை தொடர்ந்ததாகக் கூறுகிறது.
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு தருகின்ற கீழ்வரும் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. அதன்படி, கிரேக்கப் பின்னணியைச் சார்ந்த எவரிஸ்துஸ், யூதத் தந்தைக்கு பெத்லகேமில் மகனாகப் பிறந்தார். மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். உரோமைத் திருச்சபையைப் பல பங்குகளாகப் பிரித்து குருக்களை நியமித்தார். 15 ஆயர்களையும் 17 குருக்களையும் 2 திருத்தொண்டர்களையும் ஏற்படுத்தினார்.
மேற்கூறிய ஏடு குறிப்பிடுவது போல, எவரிஸ்துஸ் புனித பேதுரு கல்லறையின் அருகே அடக்கம் செய்யப்பட்டார் என்று உறுதியாகத் தெரிகிறது. அவரது பணியிடம் 19 நாள்கள் வெறுமையாய் இருந்தது.
உரோமைத் திருச்சபையின் முதல் திருத்தந்தையர்களின் பெயர்கள் திருப்பலியின் நற்கருணை மன்றாட்டில் இருக்க, எவரிஸ்துசின் பெயர் மட்டும் அங்கு காணப்படவில்லை. இதிலிருந்து, இத்திருத்தந்தை பற்றிய உறுதியான வரலாற்றுச் செய்திகள் தெரியாத நிலை திருச்சபை வரலாற்றின் முதல் நூற்றாண்டுகளிலிருந்தே நிலவிவந்துள்ளது எனத் தெரிகிறது.
புனிதராகப் போற்றப்படுதல்
எவரிஸ்துஸ் எவ்வாறு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்பது பற்றியும் உறுதிப்பாடு இல்லை. கத்தோலிக்க திருச்சபை இவரை ஒரு புனிதராகப் போற்றுகிறது. இவர்தம் திருவிழா அக்டோபர் 26 ஆகும். 1969இலிருந்து இவரது பெயர் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் மறைச்சாட்சிகள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டு, இப்போது தனி நாள்காட்டியில் மட்டுமே உள்ளது.
பதவி வகித்த காலம்
"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (Annuario Pontificio) என்னும் நூல் இவரது திருப்பணிக் காலம் 96 (அல்லது 98) - 108 ஆகும் என்னும் தகவலைத் தருகிறது.
Back to top
அக்டோபர் 27
புனித வோல்ஃப்ஹார்டு
St. Wolfhard
நினைவுத் திருநாள் : அக்டோபர் 27
பிறப்பு : 1070, அவுக்ஸ்பூர்க் Augsburg, Germany
இறப்பு : 30 ஏப்ரல் 1127, வெரோனா Verona, இத்தாலி
பாதுகாவல்: ஊர்க்காவலர்கள், கூர்க்கா
இவர் ஊர்களில் பொதுப்பணி செய்யும் கலையைக் கற்றார். பிறகு பவேரியாவிலிருந்து, வெரோனா சென்று, அங்கு பணியாற்றினார். அங்கு ஊர்ப்பொதுப்பணிகள் அனைத்தையும் மிக சிறப்பாக ஆற்றினார். இவர் தான் செய்த பணியின் வழியாக பெற்ற பணத்தை கொண்டு, வெரோனா முழுவதிலும் இருந்த ஏழைகளுக்கு உதவினார். மிகக் குறுகிய நாட்களில் வெரோனா மக்களில் இனங்கண்டுக்கொள்ளப்பட்டார். ஏராளமான ஏழைகளின் வாழ்வை உயர்த்தினார். வெரோனா முழுவதிலும் வாழ்ந்த மக்களால் பெரிதும் புகழப்பட்டார். ஆனால் வோல்ஃப்ஹார்டு அப்புகழை விரும்பவில்லை. இவருக்கு வெரோனா மக்கள் உயர்பதவியை அளிக்க விரும்பினர்.
வொல்ஃப்ஹார்டு பெயரையும், புகழையும், பணத்தையும் சிறுதும் விரும்பாமல், காட்டிற்குச் சென்று தனிமையாக வாழ்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தன் செப வாழ்வில் திருப்தி அடைந்த வோல்ஃப்ஹார்டு மீண்டும் 1117 ல் வெரோனா திரும்பினார். பிறகு ஒரு துறவற மடத்திற்கு சென்று, அங்கும் தனிமையில் வாழ்ந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் துறவி போலவே வாழ்ந்தார். இவர் அத்துறவற மடத்தில் இருந்த துறவிகளுடன் இவர் இறந்த உடன் உடலை தெருவிலிருக்கும் சாலையோரத்தில் புதைக்கும்படி கூறியிருந்தார். அவர் இறந்தபோது அம்மடத்துறவிகள் அவ்வாறே செய்தனர். சில ஆண்டுகள் கழித்து இவரின் உடல் வெரோனாவில் உள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டது.
செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! தான் ஈன்ற பணம் பொருட்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்து, எளியோரில் உம்மைக்கண்ட வோல்ஃப்ஹார்டின் வாழ்வை, நாங்களும் வாழ, எமக்கு நல்ல உள்ளம் தாரும். தன்னலமின்றி பிறர் நலம் காண நாங்கள் முன்வர தூய ஆவியின் வழிநடத்துதலில் வழிநடக்க நீர் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித வோல்ஃப்ஹார்டு
St. Wolfhard
நினைவுத் திருநாள் : அக்டோபர் 27
பிறப்பு : 1070, அவுக்ஸ்பூர்க் Augsburg, Germany
இறப்பு : 30 ஏப்ரல் 1127, வெரோனா Verona, இத்தாலி
பாதுகாவல்: ஊர்க்காவலர்கள், கூர்க்கா
இவர் ஊர்களில் பொதுப்பணி செய்யும் கலையைக் கற்றார். பிறகு பவேரியாவிலிருந்து, வெரோனா சென்று, அங்கு பணியாற்றினார். அங்கு ஊர்ப்பொதுப்பணிகள் அனைத்தையும் மிக சிறப்பாக ஆற்றினார். இவர் தான் செய்த பணியின் வழியாக பெற்ற பணத்தை கொண்டு, வெரோனா முழுவதிலும் இருந்த ஏழைகளுக்கு உதவினார். மிகக் குறுகிய நாட்களில் வெரோனா மக்களில் இனங்கண்டுக்கொள்ளப்பட்டார். ஏராளமான ஏழைகளின் வாழ்வை உயர்த்தினார். வெரோனா முழுவதிலும் வாழ்ந்த மக்களால் பெரிதும் புகழப்பட்டார். ஆனால் வோல்ஃப்ஹார்டு அப்புகழை விரும்பவில்லை. இவருக்கு வெரோனா மக்கள் உயர்பதவியை அளிக்க விரும்பினர்.
வொல்ஃப்ஹார்டு பெயரையும், புகழையும், பணத்தையும் சிறுதும் விரும்பாமல், காட்டிற்குச் சென்று தனிமையாக வாழ்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தன் செப வாழ்வில் திருப்தி அடைந்த வோல்ஃப்ஹார்டு மீண்டும் 1117 ல் வெரோனா திரும்பினார். பிறகு ஒரு துறவற மடத்திற்கு சென்று, அங்கும் தனிமையில் வாழ்ந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் துறவி போலவே வாழ்ந்தார். இவர் அத்துறவற மடத்தில் இருந்த துறவிகளுடன் இவர் இறந்த உடன் உடலை தெருவிலிருக்கும் சாலையோரத்தில் புதைக்கும்படி கூறியிருந்தார். அவர் இறந்தபோது அம்மடத்துறவிகள் அவ்வாறே செய்தனர். சில ஆண்டுகள் கழித்து இவரின் உடல் வெரோனாவில் உள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டது.
செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! தான் ஈன்ற பணம் பொருட்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்து, எளியோரில் உம்மைக்கண்ட வோல்ஃப்ஹார்டின் வாழ்வை, நாங்களும் வாழ, எமக்கு நல்ல உள்ளம் தாரும். தன்னலமின்றி பிறர் நலம் காண நாங்கள் முன்வர தூய ஆவியின் வழிநடத்துதலில் வழிநடக்க நீர் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
அக்டோபர் 28
புனித யூதா ததேயு (திருத்தூதர், இரத்த சாட்சி)
திருவிழா: அக்டோபர் 28
பிறப்பு: ~ கிபி 1 (முற்பகுதி)கலிலேயா, பாலஸ்தீனம்
இறப்பு: ~ கிபி 67, ஈரான், கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார்
புனித யூதா ததேயு (Saint Jude (Apostle), முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். கிரேக்க சொல்லான Ιούδας -ஐ யூதா எனவும் அல்லது யுதாசு எனவும் மொழி பெயர்க்கலாம். எனவே இயேசுவை காட்டிக்கொடுத்த யுதாசுவிடமிருந்து வேறுபடுத்த இவரை ததேயு என்றோ லேபெசியுஸ் என்றோ யாக்கோபின் மகன் யூதா என்றோ அழைப்பர். யோவான் நற்செய்தியாளர்இவரை "யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார்.
இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார்.
தூய ஆவியின் வருகைக்குப் பிறகு இவர் யூதேயா, சமாரியா, சிரியா, மெசபடோமியா மற்றும் லிபியாவில் மறைபணி புரிந்தார். இவரும் பர்த்தலமேயுவுமே ஆர்மீனியா நாட்டிற்க்கு கிறித்தவத்தை கொண்டுவந்தனர் என்பர்.
சுமார் கிபி 67-ஆம் ஆண்டு, லெபனானில் இவர் கோடரியால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார். இவரது திருப்பண்டங்கள் (அருளிக்கங்கள்) பின்நாளில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.
இவரது விழா நாள் அக்டோபர் 28.
"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" என்னும் வாசனத்தின் அடிப்படையில் யூதா திருமுக ஆசிரியர் இவராக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். எனினும் அவ்வாறிருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர் மேலும் அத்திருமுகம் நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; ஆகவே அது முதலாம் நுற்றாண்டில் எழுதப்பட்டதாக ஏற்றுக் கொள்வது கடினம்.
Back to top
புனித யூதா ததேயு (திருத்தூதர், இரத்த சாட்சி)
திருவிழா: அக்டோபர் 28
பிறப்பு: ~ கிபி 1 (முற்பகுதி)கலிலேயா, பாலஸ்தீனம்
இறப்பு: ~ கிபி 67, ஈரான், கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார்
புனித யூதா ததேயு (Saint Jude (Apostle), முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். கிரேக்க சொல்லான Ιούδας -ஐ யூதா எனவும் அல்லது யுதாசு எனவும் மொழி பெயர்க்கலாம். எனவே இயேசுவை காட்டிக்கொடுத்த யுதாசுவிடமிருந்து வேறுபடுத்த இவரை ததேயு என்றோ லேபெசியுஸ் என்றோ யாக்கோபின் மகன் யூதா என்றோ அழைப்பர். யோவான் நற்செய்தியாளர்இவரை "யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார்.
இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார்.
தூய ஆவியின் வருகைக்குப் பிறகு இவர் யூதேயா, சமாரியா, சிரியா, மெசபடோமியா மற்றும் லிபியாவில் மறைபணி புரிந்தார். இவரும் பர்த்தலமேயுவுமே ஆர்மீனியா நாட்டிற்க்கு கிறித்தவத்தை கொண்டுவந்தனர் என்பர்.
சுமார் கிபி 67-ஆம் ஆண்டு, லெபனானில் இவர் கோடரியால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார். இவரது திருப்பண்டங்கள் (அருளிக்கங்கள்) பின்நாளில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.
இவரது விழா நாள் அக்டோபர் 28.
"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" என்னும் வாசனத்தின் அடிப்படையில் யூதா திருமுக ஆசிரியர் இவராக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். எனினும் அவ்வாறிருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர் மேலும் அத்திருமுகம் நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; ஆகவே அது முதலாம் நுற்றாண்டில் எழுதப்பட்டதாக ஏற்றுக் கொள்வது கடினம்.
Back to top
அக்டோபர் 29
புனித நார்சிசுஸ்
St. Narcissus of Jerusalem
இறப்பு : கி.பி. 216 (116 வயது)
நினைவுத் திருவிழா : அக்டோபர் 29
புனித நார்சிசுஸ் எண்பது வயதில் ஆயர் பணியேற்று அசத்தியவர்.
கி.பி.180ம் ஆண்டில், தனது எண்பதாவது வயதில் எருசலேமின் முப்பதாவது ஆயராகப் பொறுப்பேற்றவர் புனித நார்சிசுஸ். பணிக்கு வயது ஒரு தடையல்ல என்பதுபோல் இளமைத் துடிப்புடன் இறைப்பணியைத் தொடர்ந்த இவர், கி.பி.195ம் ஆண்டில், பாலஸ்தீனாவின் செசாரியா ஆயர் தியோஃபிலெஸ் அவர்களுடன் சேர்ந்து, செசாரியாவில் நடந்த ஆயர்கள் அவையில், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமையில் எப்போதும் கொண்டாடப்பட வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தார்.
ஆயர் நார்சிசுஸ் அவர்கள் வாழும்போதே பல புதுமைகள் செய்தவர். மின்விளக்குகள் இல்லாத அக்காலத்தில், ஒரு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருவழிபாடு தொடங்கவிருந்த நேரத்தில், ஆலய விளக்குகளுக்குப் போதுமான எண்ணெய் இல்லாமல் அணைந்துபோகும் நிலையில் இருந்தன. உடனே இவர் தியாக்கோன்களை அழைத்து அருகிலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து விளக்குகளில் ஊற்றச் சொன்னார். பின்னர் அந்தத் தண்ணீர்மீது உருக்கமாகச் செபித்தார். உடனே அந்தத் தண்ணீர் எண்ணெய்யாக மாறி விளக்குகள் சுடர்விட்டு எரிந்தன.
“புனித குரு” என எல்லாராலும் இவர் போற்றப்பட்டதைக் கண்டு பொறாமையடைந்த மூவர், இவர்மீது அபாண்டமாகப் பழி சுமத்தினர்.
முதலாமவன், அனைவர் முன்னிலையிலும் வந்து, நான் சொல்வதில் உண்மை இல்லையென்றால், கடவுள் என்னை நெருப்பில் சுட்டெரிப்பாராக என்றான்.
இரண்டாவது ஆள் வந்து, எனது குற்றச்சாட்டுப் பொய்யானால், நான் தொழுநோயால் தாக்கப்படுவேன் என்று சபதமிட்டான்.
மூன்றாவது ஆள் வந்து, நான் பார்வையிழப்பேன் என்று உறுதியாகச் சொன்னான்.
இது நடந்து ஒரு சில நாட்களிலே ஓர் இரவில் முதல் ஆளின் வீடு தானாகத் தீப்பிடித்து முழுக் குடும்பமும் சாம்பலானது.
அடுத்த ஆளும் அவர் கூறியதுபோலவே தொழுநோயால் தாக்கப்பட்டார்.
இவற்றைக் கண்டு பயந்த மூன்றாவது ஆள், ஆயர் மீது தாங்கள் மூவரும் சுமத்திய குற்றங்கள் அனைத்தும் பொய் என அனைவர் முன்னிலையில் அறிவித்து ஆயரிடம் மன்னிப்பு இறைஞ்சினான்.
ஆயரும் அவருக்கு மன்னிப்பளித்தார்.
பின்னர், பாலைநிலம் சென்று தனிமையில் செபத்தில் நாட்களைச் செலவழித்தார். சில காலம் கழித்து ஆயர் நார்சிசுஸ் அவர்கள், எருசலேம் திரும்பி வந்தபோது மக்கள் அவரை மீண்டும் ஆயராக்கினார்கள். ஆனால் முதிர்வயது காரணமாக, புனித அலெக்சாந்தரை துணை ஆயராக நியமித்தார் அவர்.
புனித வாழ்வு வாழ்ந்த ஆயர் நார்சிசுஸ் அவர்கள், தனது 116வது வயதில் கி.பி.216ம் ஆண்டில் காலமானார்.
Back to top
அக்டோபர் 30
புனித அல்போன்ஸ் ரோட்ரீக்கஸ் (திருக்காட்சியாளர்)
St. Alphonsus Rodriguez
நினைவுத்திருநாள் : அக்டோபர் 30
பிறப்பு : 25 ஜூலை 1532
செகோவியா Segovia, ஸ்பெயின்
இறப்பு : 31 அக்டோபர் 1617 ( அகவை 85 )
மலோர்கா Mallorca, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம் : 1825
திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ
புனிதர்பட்டம் : 15 ஜனவரி 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
புனித அல்போன்ஸ் ரோட்ரீக்கஸ், திருமணமானவர்.
இவர் ஸ்பெயின் நாட்டில் தோல் வியாபாரம் செய்து வந்தார். இவரின் மனைவியும், பிள்ளைகளும் இறந்தபின்னர், இயேசு சபையில் சேர்ந்து, செப, தவ வாழ்வு நடத்தினார்.
39ம் வயதில் மஜோர்க்கா தீவில் இயேசு சபையில் சேர்ந்து துணைச் சகோதரர் ஆனார். அதன்பிறகு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் மறைப்பணியாற்றினார். பின்னர் இவர், தான் தங்கியிருந்த துறவற இல்லத்தில், 35 வருடங்கள் வாயில் காப்பாளராக பணியாற்றினார். அச்சமயத்தில் பலமுறை திருக்காட்சியைக் கண்டார். இவர் மிக ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். எப்போதும் கீழ்படிதலுடன் இருந்தார். இவர் தான் பெற்ற திருக்காட்சிகளில் சிலவற்றை கடிதமாகவும் எழுதியுள்ளார்.
இவருக்குக் கேள்வி அறிவு கிடையாது. எனினும் அநேகர் இவரைக் கலந்து ஆலோசிக்க வருவார்கள். இவரது போதனைகள் மிகுந்த நன்மைகள் செய்தன. இவருக்கு மாதா மீது அதிக பக்தியுண்டு. மாதாவின் சிறிய மந்திரமாலையை இவர் தம் கைப்பட எழுதி பரப்பி வந்தார். வாயில் மணி (Door Bell) அடித்ததும் கிறிஸ்துநாதரே உள்நுழைய விரும்புவதாக இவர் உரூபிகரித்துக் கொள்வார். "ஆண்டவரே, இதோ வருகிறேன்" என்று மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு கதவை திறக்கச் செல்வார்.
வந்தவர்களை வரவேற்பார். இவர் தூயவர் என அங்குள்ள குருக்கள் அறிந்திருந்தனர். எனவே உணவு நேரத்தில் பிரசங்கம் செய்ய இவரை அழைப்பார்கள். ஒரு முறை சபையின் தலைவர் அங்கு வந்திருந்தார். நம் புனிதரைப் பார்த்து, கிரேக்க மொழியில் ஓர் உரை நிகழ்த்தும் என்றார். இவருக்கோ கிரேக்க மொழி தெரியாது. எனினும் தாழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து பிரசங்க பீடத்தில் ஏறினார். நிறுத்தி ஒரு நிமிட நேரமாக, "கீரியலெயிசொன், கிறிஸ்தெ எலேயிசொன், கீரியலெயிசொன்" என அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அடிமைகளின் தொண்டன் என அழைக்கப்படும் புனித கிளாவர் இராயப்பர் இவருடன் ஒவ்வொரு நாளும் பேசுவார். அதன் பயனாக இராயப்பர் தென் அமெரிக்காவுக்குப் போய் அபூர்வ சேவை செய்தார். பெரியவர்களுக்கு கீழ்ப்படிந்து நம் புனிதர் சில அரிய நூல்களை எழுதி வைத்திருக்கிறார்.
சிந்தனை :
இவர் சாதாரண துணைச் சகோதரர் என்றாலும், இவரைக் கலந்தாலோசிக்க பெரியவர்கள் பலர் வருவார்கள். ஞானத்தின் ஊற்றாகிய கடவுளுடன் இவர் அடிக்கடி பேசி, ஞானத்தைப் பெற்றார். நமக்கும் ஞானம் அவசியம். இவரைப் போல கடவுளைப் பயன்படுத்துவோம்.
செபம் :
திவ்விய நற்கருணையில் இருக்கிற இயேசுவே, நீர் சாலமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தீரே, எங்களுக்கும் ஞானத்தைக் கொடும். ஆமென்
Back to top
அக்டோபர் 31
புனித ரேகன்ஸ்பூர்க் ஆயர் வோல்ஃப்காங்க்
St.Wolfgang von Regensburg
நினைவுத் திருநாள் : அக்டோபர் 31
பிறப்பு : 924, புல்லிங்கன் Pfullingen, ஜெர்மனி
இறப்பு : 31 அக்டோபர் 994, புப்பிங் Pupping, ஆஸ்திரியா
பாதுகாவல்: ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டம், வீட்டு வேலை செய்பவர்கள், கப்பலோட்டிகள், வலிப்பு நோயிலிருந்து
இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். துறவற மடத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் தனது கல்வியை கற்றார். இவர் தான் படிக்கும்போது ஹென்றி என்பவரின் நண்பரானார். இவரே 956 ஆம் ஆண்டில் டிரியரில் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனால் அவரின் அழைப்பை ஏற்று டிரியரிலுள்ள பேராலயப்பள்ளிக்கு 964 ல் பேராசிரியராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றார். அச்சமயத்தில்தான், தானும் ஓர் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெனடிக்டின் துறவற இல்லம் நோக்கி சென்றார். அங்கு தனது விருப்பத்தை தெரிவித்து வார்த்தைப்பாடுகளை பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து ஆக்ஸ்பூர்க் ஆயர் உல்ரிஷ் (Ulrich) அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
பின்னர் இவர் ஆஸ்திரியா சென்று நற்செய்தியை பறைசாற்றினார். இவரின் மகத்துவமிக்க மறைப்பணி பாசாவ் ஆயராக (Passau) இருந்தவரை கவரவே, அவரை ரேகன்ஸ்பூர்கில் ஆயரில் பொறுப்பை ஏற்கும்படி கூறினார். இச்செய்தியை கேட்டவுடன் வோல்ஃப்காங்க் மிக அதிகமாக பயமுற்று, நோய்வாய்பட்டார். ஆனால் இறையருளால் மீண்டும் நலம்பெற்றார். இவ்வற்புதத்தை அறிந்த அப்போதைய அரசர் 2 ஆம் ஓட்டோ (Otto II)வோல்ஃப்காங்க் 972 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க் ஆயராக அறிவித்தார். இவர் ஏறக்குறைய 22 ஆண்டுகள் ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். தன்னுடைய பதவி காலத்தில் மறைமாவட்டத்திற்கு ஏராளமான பணிகளை செய்தார். பல துறவற இல்லங்களை கட்டினார். பெண்துறவிகள் கற்பதற்கென்று சில துறவற மடப்பள்ளிகளையும் கட்டினார். ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும்தேவையான வீடுகளையும், மருத்துவமனைகளையும் கட்டினார். இவர் வாழும்போதே மக்கள் இவரை புனிதர் என்று அழைத்தனர். இவர் ரேகன்ஸ்பூர்கிலிருந்து ஆஸ்திரியாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தார்.
இவரின் உடல் ரேகன்ஸ்பூர்க்கில் எம்மராம் (St.Emmeram) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் புதைக்கப்பட்டது. பிறகு இவரின் கல்லறைமேல் கெபி ஒன்றும் கட்டப்பட்டது. இக்கெபி இன்று மக்களால் புனிதத்தலமாக கருதப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்றது.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! இன்றைய நாளில் தங்களின் நாம விழாவை சிறப்பிக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள சுகம் தந்து காத்தருளும். உமது ஆவியின் அருள்கொடைகளால் நிரப்பி, உமது கண்ணின் கருவிழிக்குள் வைத்து காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித ரேகன்ஸ்பூர்க் ஆயர் வோல்ஃப்காங்க்
St.Wolfgang von Regensburg
நினைவுத் திருநாள் : அக்டோபர் 31
பிறப்பு : 924, புல்லிங்கன் Pfullingen, ஜெர்மனி
இறப்பு : 31 அக்டோபர் 994, புப்பிங் Pupping, ஆஸ்திரியா
பாதுகாவல்: ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டம், வீட்டு வேலை செய்பவர்கள், கப்பலோட்டிகள், வலிப்பு நோயிலிருந்து
இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். துறவற மடத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் தனது கல்வியை கற்றார். இவர் தான் படிக்கும்போது ஹென்றி என்பவரின் நண்பரானார். இவரே 956 ஆம் ஆண்டில் டிரியரில் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனால் அவரின் அழைப்பை ஏற்று டிரியரிலுள்ள பேராலயப்பள்ளிக்கு 964 ல் பேராசிரியராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றார். அச்சமயத்தில்தான், தானும் ஓர் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெனடிக்டின் துறவற இல்லம் நோக்கி சென்றார். அங்கு தனது விருப்பத்தை தெரிவித்து வார்த்தைப்பாடுகளை பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து ஆக்ஸ்பூர்க் ஆயர் உல்ரிஷ் (Ulrich) அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
பின்னர் இவர் ஆஸ்திரியா சென்று நற்செய்தியை பறைசாற்றினார். இவரின் மகத்துவமிக்க மறைப்பணி பாசாவ் ஆயராக (Passau) இருந்தவரை கவரவே, அவரை ரேகன்ஸ்பூர்கில் ஆயரில் பொறுப்பை ஏற்கும்படி கூறினார். இச்செய்தியை கேட்டவுடன் வோல்ஃப்காங்க் மிக அதிகமாக பயமுற்று, நோய்வாய்பட்டார். ஆனால் இறையருளால் மீண்டும் நலம்பெற்றார். இவ்வற்புதத்தை அறிந்த அப்போதைய அரசர் 2 ஆம் ஓட்டோ (Otto II)வோல்ஃப்காங்க் 972 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க் ஆயராக அறிவித்தார். இவர் ஏறக்குறைய 22 ஆண்டுகள் ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். தன்னுடைய பதவி காலத்தில் மறைமாவட்டத்திற்கு ஏராளமான பணிகளை செய்தார். பல துறவற இல்லங்களை கட்டினார். பெண்துறவிகள் கற்பதற்கென்று சில துறவற மடப்பள்ளிகளையும் கட்டினார். ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும்தேவையான வீடுகளையும், மருத்துவமனைகளையும் கட்டினார். இவர் வாழும்போதே மக்கள் இவரை புனிதர் என்று அழைத்தனர். இவர் ரேகன்ஸ்பூர்கிலிருந்து ஆஸ்திரியாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தார்.
இவரின் உடல் ரேகன்ஸ்பூர்க்கில் எம்மராம் (St.Emmeram) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் புதைக்கப்பட்டது. பிறகு இவரின் கல்லறைமேல் கெபி ஒன்றும் கட்டப்பட்டது. இக்கெபி இன்று மக்களால் புனிதத்தலமாக கருதப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்றது.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! இன்றைய நாளில் தங்களின் நாம விழாவை சிறப்பிக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள சுகம் தந்து காத்தருளும். உமது ஆவியின் அருள்கொடைகளால் நிரப்பி, உமது கண்ணின் கருவிழிக்குள் வைத்து காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top