- புனிதர்கள்
- புனித லூசியா
Courtesy : Source of this article
St.Lucy's Feast - Dec 13 - celebrated as festival of lights
பிரகாசியம்மாள் என்று அழைக்கப்படும் கன்னி மறைசாட்சியான லூசியா சிசிலி என்னும் நாட்டில் சிராக்கூஸ் என்ற நகரில் கி பி 283 இல் பிறந்தார்.இவரது பெற்றோர் கிரேக்க நாட்டு உயர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . தாயின் பெயர் யுற்றிக்கியா . குழைந்தைப்பருவ முதலே கிறிஸ்தவ மறையில் வளர்க்கப்பட்டு வந்தார் . இவரது சிறு வயதிலேயே இவரது தந்தை மரித்துப் போகவே , தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் .உரிய காலம் வந்த போது இவரது தாயார் இவருக்கு திருமணம் செய்விக்க எண்ணினார் . லூசியாவோ சிறு வயது முதலே தன் கன்னிமையை இறைவனுக்கு இரகசியமாக அர்பணித்திருந்தார் . எனவே திருமணத்திற்கு மறுத்து வந்தார்
இந்நிலையில் இவரது தாயார் கடுமையான இரத்தப்போக்கு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் . அன்னையின் துயரைக் கண்ட லூசியா , "அம்மா . நாம் புனித ஆகத்தம்மாவின் (St .Agatha ) கல்லறைக்குத் திருப்பயணம் சென்று வரலாமா ? என்று கேட்டார். அவரது தாயும் அதற்கு இசைந்து , இருவரும் புனித ஆகத்தமாவின் கல்லறை இருக்கும் நகரான கட்டோனியாவிற்கு திருப்பயணம் மேற்கொண்டனர்.அங்கு சென்று மிக உருக்கமாக மன்றாடினார். அன்று இரவு புனித ஆகத்தம்மாவின் கோவிலில் களைப்போடு தூங்கிக் கொண்டிருந்த லூசியாவின் கனவில் புனித ஆகத்தம்மாள் தோன்றி "உன் தாய்க்குத் தேவையான உடல் நலத்தைப் பெற்றுக் கொடுக்க , உன்னுடைய மன்றாட்டே போதுமானதாக இருக்கும் பட்சத்தில் , நீ என்னிடம் ஏன் கேட்கின்றாய் ?உன் கற்பென்னும் லீலி மலரைக் கொண்டு இறைவனுக்கு ஏற்ற இல்லிடம் தரித்துள்ளாய். உனது விசுவாசமே உனது தாய் குணமடையப் போதுமானது "என்றார் . மேலும் "உன் தாயை இறைவன் குணமாக்குவார் . கட்டோனியாவில் எனக்கு உள்ளது போல் சிராக்கூசில் உனக்கு ஒரு இடம் கிடைக்கும் "என்றார்.
லூசியா இந்தக் கனவின் மூலம் திடன் பெற்றார் .அதன் படியே அவரது தாயார் நலமானார் .தன் தாய் பெற்ற அற்புத சுகத்தைக் கண்ட லூசியா , இனி திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை என்றும், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார் . தன் கன்னிமையை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்ததை தன் தாய்க்குத் தெரிவித்தார் . தாயாரோ , ஒரு வாலிப பிரபுவுக்கு இவரை மணமுடிக்க வாக்குறுதி கொடுத்திருந்தார் .புதுமையாகச் சுகம் பெற்ற தாய் தன் நன்றிக்கடனைக் காட்ட மகளுக்குச் சம்மதம் தெரிவித்தார் . அதே வேளை "எனது இறப்பிற்குப் பின் நீ உன் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் செய்து கொள் என்று கூறினார் . லூசியா அதில் திருப்தி அடையவில்லை . உடனடியாக நிறைவேற்ற எண்ணி , சிரக்கூசிர்க்கு வந்து தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார் .
இதை அறிந்த வாலிப பிரபு கடுங்கோபம் கொண்டான் . அவன் பல விதங்களில் எதிர்த்த போதும் லூசியா பின் வாங்கவில்லை .இறுதி முயற்சியாய்'இவள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள் 'என்று உயர் அதிகாரியான பிரிபெக்ட் பஸ்காசியூசிடம் தெரிவிப்பேன் என்றான் . காரணம் அப்போது கொடுங்கோலாட்சி நடத்தி வந்த தியோக்கிலேசியான் பேரரசன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாய்க் கொன்று குவித்தான் . எங்கும் இரத்த ஆறு ஓடியது . "உன்னை அடித்து நொறுக்கும்போது , உனக்கு பேசுவதற்குக் கூட நா எழாது "என்றான் . "இறையடியாள் நான் . சரியான சொற்களை சரியான நேரத்தில் சொல்ல தூய ஆவியார் துணை நிற்பார் .ஏனெனில் தூய வாழ்வு வாழ்வோர் யாவரும் தூய ஆவியின் ஆலயங்கள் " என்றார் . "விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள் . அப்போது தூய ஆவியார் பறந்து விடுவார் "என்றான் . "எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எனக்கு இரு மடங்கு வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொள் "என்றார் , லூசியா .
இதையெல்லாம் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பஸ்காசியூஸ் , லூசியாவை விலை மகளிர் இருக்குமிடத்தில் தள்ள சொன்னான் .. அவனது உத்தரவுக்கு இணங்கி அவரைக் கடத்திக் கொண்டு போக வந்தவர்களால் அவரை அசைக்க முடியவில்லை . கற்பாறை போல் அவர் அசையாது நின்றார் . ஆத்திரமடைந்த அரசன் , அவர் மீது கொதிக்கும் தாரை ஊற்றச் சொன்னான் . அது அவரை எதுவும் செய்ய முடியவில்லை .. அவரை அடித்துத் துன்புறுத்தி அவர் கண்களைப் பிடுங்கச் சொன்னான் .காவலர்கள் அவர் கண்களைப் பிடுங்கவே , ஆண்டவர் அற்புதமாய் அவரது கண்களைச் சரி செய்து மீண்டும் பார்வை தந்தார் . [எனவே தான் இன்று வரை கண் நோய்களில் இருந்து விடுதலை பெற புனித லூசியாவிடம் மன்றாடுகின்றனர் . லூசியா என்னும் சொல்லுக்கு ஒளி / வெளிச்சம் என்று பொருள் . எனவே தான் புனித லூசியாவை பிரகாசியம்மாள் என்றும் அழைக்கின்றனர்].இறுதியில் மன்னன் அவரை உயிருடன் தீயில் இடக் கட்டளை இட்டான் . அவருக்கு எந்த ஆபத்தும் நேரிடாவிட்டால் , கத்தியால் குத்திக் கொல்ல ஆணை பிறப்பித்தான் . அவர் பிழைத்தால் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவக் கூடும் என்று அஞ்சினான் . லூசியாவைச் சுற்றி தீ வளர்த்த போதும் , அவருக்கு ஏதும் நேரிடவில்லை . பின் இறுதியாக , கத்தியால் தொண்டையில் குத்தப்பட்டு இறந்தார் . கி பி 1204 இல் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது .
புனித லூசியம்மாளுக்கு நவநாள் ஜெபம்
உயிருள்ள பக்தியும் ,
பரலோக பேரின்ப பேறும் பெற்ற கன்னியுமான புனித லூசியம்மாளே,
நீர் இறைவனால் அடைந்த அருட்கொடையின் வல்லமையினால்
சிறிது காலமே குறையற்ற முழுமை அழகு பெற்று,
உமது அன்புப் பர்த்தாவாகிய இயேசுநாதருக்கு கன்னிமையைக் கையளித்து,
அவருக்காக மிகுந்த வேதனைப்பட்டு ,
அசையாத தூணாய் கன்னிமையைக் கறையின்றிக் காத்து ,
ஆன்மாவைக் கையளித்தீரே !
நீர் சீர்க்கூசா நகரத்தின் நல் பரிசாகவும்,
கன்னிமைக்கு அடைக்கலமாகவும்
உம்முடைய பக்தி அதிகரித்த யாவருக்கும்
நித்தம் உமது உபகார நன்மையைச் செய்து வருகிறீரே !
ஆகையால் புனித கன்னிகையே !
நீர் எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி,
இவ்வுலகில் படர்ந்துள்ள இருள் நீங்க,
நாங்கள் ஞான ஒளி பெற ,அருள் பொழிந்தருளும் .
அதனால் நாங்கள், இறைவன் பேரிலும்,
உமது பேரிலும் பயபக்தியாய் இருந்து ,
பாவத்தை வெறுத்து உமது தயை மிகு மன்றாட்டினால் பரலோக பேரின்பம் அடைவோமாக ஆமென்
பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!
பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!
புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வேதசாட்சிகளுக்கு இராக்கினியாய் இருக்கிற அர்சிஷ்ட மரியாயே
புனித லூசியம்மாளே ,
சிசிலி என்ற தீவில் சீர்கூசா நகரத்தின் ஞான நட்சத்திரமாகிய புனித லூசியம்மாளே ,
உயர்ந்த கோத்திரத்தில் யுற்றிக்கியாளிடம் பிறந்த புனித லூசியம்மாளே ,
உமக்கு ஐந்து வயதாகும்போது உமது தாயாரால் சிறந்த நேசத்தோடு அரவணைக்கப்பட்ட புனித லூசியம்மாளே ,
சிறிய வயதில் தன்னைப் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தவரான புனித லூசியம்மாளே ,
எப்பொழுதும் கண்ணிமையாய் இருப்பேனென்று வாக்குக் கொடுத்தவரான புனித லூசியம்மாளே ,
மிகவும் அழகுள்ள அலங்காரமிக்க புனித லூசியம்மாளே ,
உமது அன்னைக்கு இருந்த பெரும்பாடான வியாதியை உமது வேண்டுதலினால் குணப்படுத்தியவரான புனித லூசியம்மாளே ,
உமக்கு தகுந்த வயது வந்தவுடன் திருமணம் முடித்து வைக்க வேண்டுமென்ற உமது தாயின் எண்ணத்தை முழுவதும் வெறுத்துத் தள்ளின புனித லூசியம்மாளே ,
உமது திருமனத்திர்க்காக வைத்திருந்த செல்வத்தையெல்லாம் பிச்சைக்காரர்களுக்கு பகிர்ந்து கொடுத்த
தருமக்கண்ணாடியான புனித லூசியம்மாளே ,
தான் இறைவனுடைய வேதத்தைக் கடைப்பிடிக்கிறவள் என்று புற மதத்தவரான கொடூர அரசனுக்கு அறிவிக்கப்பட்ட புனித லூசியம்மாளே ,
வேதத்தை விட்டு விடும்படி அந்தக் கொடூர அரசனால் வெகு துன்பப்படுத்தப்பட் புனித லூசியம்மாளே ,
அரசன் சொன்ன துர்புத்திகளை எல்லாம் உத்தம நியாயத்தோடு மறுத்த புனித லூசியம்மாளே ,
உமது கற்புக்கு விரோதமாக துன்புறுத்தப்பட்ட புனித லூசியம்மாளே ,
இறைவனுடைய புதுமையால் நீர் நின்ற நிலை தவறாமல் அற்புதமாகக் காப்பாற்றப்பட்ட புனித லூசியம்மாளே ,
கற்பின் ஆபரணப் பொக்கிஷம் எனப்பட்ட புனித லூசியம்மாளே ,
கோபம் கொண்ட அரசனால் எரிகின்ற தீச் சுவாலையில் தள்ளப்பட்ட புனித லூசியம்மாளே
அந்தத் தீச் சுவாலையில் நீர் சாகவேண்டி இருந்தாலும் உமது ஆடைகள் முதலாய் கருகாமல் காப்பாற்றப்பட்ட
புனித லூசியம்மாளே ,
எண்ணிறைந்த அற்புதங்களில் விளங்கியவரான புனித லூசியம்மாளே ,
உமது திருக்கண்கள் பிடுங்கப்பட்ட புனித லூசியம்மாளே ,
குருடருக்குப் பார்வை கொடுப்பதில் அற்புத வரம் பெற்றவரான புனித லூசியம்மாளே ,
கண் நோயால் கண்ணீர் சிந்தி கையேந்தி நின்று பரிதவிக்கும் நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் புனித லூசியம்மாளே ,
விசுவாசத்தில் ஒரு போதும் தத்தளியாத உத்தம வேத சாட்சியான புனித லூசியம்மாளே ,
வேதத்திற்க்காக உயிரைக்கொடுத்து பரலோக அரசில் மகிமைக்குரிய இடம் பெற்றவரான புனித லூசியம்மாளே ,
உம்மைப் பார்த்து வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு தவறாமல் வரம் கொடுக்கிறவரான புனித லூசியம்மாளே ,
உம்மைப்பார்த்து வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு மிகவும் அன்புள்ள தாயான புனித லூசியம்மாளே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
செபிப்போமாக
எல்லாம் வல்ல இறைவா!
புனித லூசியம்மாளின் கன்னிமையாலும், வேத சாட்சி மகிமையாலும்
விண்ணகத்திற்கு எழுந்தருளி பேரின்ப பாக்கியத்தை அடையப் பெற்றாரே ,
அந்த அம்மாளுடைய இரக்கமான மன்றாட்டினால்
எங்களுக்கு இவ்வுலகில் வருகிற எல்லா துன்பங்களையும்
பொறுமையுடனே சகித்து நாங்களும் அவர்களைப் போல் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
விண்ணகமடைய வரமருளும் .
இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்
புனித லூசியாள் நவநாள் குழுவினர் வேண்டுதல்
முதல்: ஒ இரக்க மிகுந்த புனித லூசியம்மாளே!
நீர் இம்மண்ணுலகில் வாழ்ந்தபோது கடவுள் மீது கொண்டிருந்த பக்தி பற்றுதலும்
மனிதர்கள் மீது நீர் வைத்த அன்பும் இறைவனிடம் உன்மை சக்தி வாய்ந்வராகச் செய்தது.
நீர் எமக்காக ஒரு வார்த்தை கூறினால் போதும்,
இறைவன் அருள் வரங்களை என்மீது பொழிவார்.
உம் சகோதரராகிய எங்களை கண்ணோக்கியருளும்,
எங்கள் குறைகளையும் தேவைகளையும் கவலைகளையும் இறைவனிடம் எடுத்துகூறும்.
எல்: உமது உதவியைக் கூவி அழைப்போருக்கு இரங்கும் புனித லூசியம்மாளே/
நாங்கள் பாவத்திற்கு அடிமையாகி/
சாத்தானின் வலையில் சிக்குன்டு தவிக்கின்றோம்
வறுமை எங்களை வாட்டுகின்றது/
நோய் எங்களை வருத்துகின்றது.
உமது வேண்டுதலால் இக்கண்ணீர் கணவாயிலிருந்து எங்களை காத்தருளும்/
எங்கள் அழுகையின் கண்ணிரை துடைத்தருளும்/
தஞ்சமென்று ஒடிவரும் எங்களைத் தேற்றும்/
நோயாளிகளை குணமாக்கும் புனித லூசியம்மாளே/
உம்மை நேசித்து இயேசுவின் மீது உமக்கு இருந்த அன்பைக் குறித்து/
உன்முடைய உதவியை நாங்கள் கேட்கிறோம்/
துன்புறுவோர்க்கு ஆறுதலே எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை பாதுகாத்தருளும்.
ஆனால் நாங்கள் இன்னும் துன்புறுவது இறைவனின் சித்தமானால்/
நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்க்கும் சகிப்பு தன்மையை எங்களுக்கு அளித்தருளும்.
இந்த வரங்களை எல்லாம்/ எங்கள் பேறு பலன்களைக் குறித்து அல்ல.
ஆனால் உமது அன்பிலும்/வல்லமையிலும் நம்பிக்கை வைத்து/ கெஞ்சி மன்றாடுகின்றோம்.
முதல்:எண்ணில்லா அற்புதங்களை புரிகின்ற புனித லூசியம்மாளே!
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் -
புனித லூசியாவை நோக்கி ஜெபம்
ஓ ! எங்கள் இறைவா !
எங்களைப் படைத்துக் காத்து மீட்டவரே !
கருணையோடு எங்கள் ஜெபத்தைக் கேட்பவரே !
உமது உத்தம புனிதையாக நாங்கள் வணங்கும்
எங்கள் பாதுகாவலி புனித லூசியாளுக்கு
உமது விசுவாச ஒளியை கொடையாகத் தந்தீரே
அதே விசுவாச ஒளி எங்கள் ஆன்மாவில் நிலைத்திருந்து
எங்களை ஆட்கொள்ள மனமிரங்கி அருள் புரியும்.
அந்த அருளைப் பெறுகின்ற நாங்கள் அனைவரும்
தீமையிலிருந்து விலகி நன்மை செய்யவும்
உலக மாய இருளாகிய பாவத்தை என்றும் வெறுத்து வாழவும் அருள் புரியும் .
இறைவா !
உமது நன்மைத்தனத்தில் நம்பிக்கை வைத்து
மிகுந்த தாழ்ச்சியுடன் உம் திருமுன் வேண்டுகிற
உம் அடியவர்க்கு புனித லூசியாவின் பரிந்து பேசுதலால்
நல்ல விசுவாச பார்வையும் ,
அப்பார்வையால் விசுவாச வாழ்வு வாழ்ந்து
நாங்கள் என்றும் உமது பெயரை மேன்மைப்படுத்தவும் ,
மகத்துவப்படுத்தவும் ,
எங்கள் ஆன்மா இவ்வுலகில் இருந்து மீட்பு பெற்று விண்ணுலகில் கடவுளின் செம்மறியோடு என்றும் மகிழ்ந்திருக்கவும் கிருபை செய்தருளும் .
கன்னியும் வேதசாட்சியுமான புனித லூசியாளே !
எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டுஇறையேசுவிடமிருந்து இந்த வரங்களைப் பெற்றுத்தாரும். ஆமென்
லூசியாவின் திருநாள் அன்று சிறுமியர் வெண் அங்கி தரித்து , இடையில் சிவப்பு கச்சை கட்டி (வேதசாட்சி என்று குறிப்பது) எரியும் மெழுகுதிரிகளால் ஆன கிரீடம் அணிந்து பாடல்கள் பாடி பவனி வருவர் (காண்க : படம் )
பிரகாசியம்மாள் என்று அழைக்கப்படும் கன்னி மறைசாட்சியான லூசியா சிசிலி என்னும் நாட்டில் சிராக்கூஸ் என்ற நகரில் கி பி 283 இல் பிறந்தார்.இவரது பெற்றோர் கிரேக்க நாட்டு உயர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . தாயின் பெயர் யுற்றிக்கியா . குழைந்தைப்பருவ முதலே கிறிஸ்தவ மறையில் வளர்க்கப்பட்டு வந்தார் . இவரது சிறு வயதிலேயே இவரது தந்தை மரித்துப் போகவே , தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் .உரிய காலம் வந்த போது இவரது தாயார் இவருக்கு திருமணம் செய்விக்க எண்ணினார் . லூசியாவோ சிறு வயது முதலே தன் கன்னிமையை இறைவனுக்கு இரகசியமாக அர்பணித்திருந்தார் . எனவே திருமணத்திற்கு மறுத்து வந்தார்
இந்நிலையில் இவரது தாயார் கடுமையான இரத்தப்போக்கு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் . அன்னையின் துயரைக் கண்ட லூசியா , "அம்மா . நாம் புனித ஆகத்தம்மாவின் (St .Agatha ) கல்லறைக்குத் திருப்பயணம் சென்று வரலாமா ? என்று கேட்டார். அவரது தாயும் அதற்கு இசைந்து , இருவரும் புனித ஆகத்தமாவின் கல்லறை இருக்கும் நகரான கட்டோனியாவிற்கு திருப்பயணம் மேற்கொண்டனர்.அங்கு சென்று மிக உருக்கமாக மன்றாடினார். அன்று இரவு புனித ஆகத்தம்மாவின் கோவிலில் களைப்போடு தூங்கிக் கொண்டிருந்த லூசியாவின் கனவில் புனித ஆகத்தம்மாள் தோன்றி "உன் தாய்க்குத் தேவையான உடல் நலத்தைப் பெற்றுக் கொடுக்க , உன்னுடைய மன்றாட்டே போதுமானதாக இருக்கும் பட்சத்தில் , நீ என்னிடம் ஏன் கேட்கின்றாய் ?உன் கற்பென்னும் லீலி மலரைக் கொண்டு இறைவனுக்கு ஏற்ற இல்லிடம் தரித்துள்ளாய். உனது விசுவாசமே உனது தாய் குணமடையப் போதுமானது "என்றார் . மேலும் "உன் தாயை இறைவன் குணமாக்குவார் . கட்டோனியாவில் எனக்கு உள்ளது போல் சிராக்கூசில் உனக்கு ஒரு இடம் கிடைக்கும் "என்றார்.
லூசியா இந்தக் கனவின் மூலம் திடன் பெற்றார் .அதன் படியே அவரது தாயார் நலமானார் .தன் தாய் பெற்ற அற்புத சுகத்தைக் கண்ட லூசியா , இனி திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை என்றும், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார் . தன் கன்னிமையை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்ததை தன் தாய்க்குத் தெரிவித்தார் . தாயாரோ , ஒரு வாலிப பிரபுவுக்கு இவரை மணமுடிக்க வாக்குறுதி கொடுத்திருந்தார் .புதுமையாகச் சுகம் பெற்ற தாய் தன் நன்றிக்கடனைக் காட்ட மகளுக்குச் சம்மதம் தெரிவித்தார் . அதே வேளை "எனது இறப்பிற்குப் பின் நீ உன் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் செய்து கொள் என்று கூறினார் . லூசியா அதில் திருப்தி அடையவில்லை . உடனடியாக நிறைவேற்ற எண்ணி , சிரக்கூசிர்க்கு வந்து தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார் .
இதை அறிந்த வாலிப பிரபு கடுங்கோபம் கொண்டான் . அவன் பல விதங்களில் எதிர்த்த போதும் லூசியா பின் வாங்கவில்லை .இறுதி முயற்சியாய்'இவள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள் 'என்று உயர் அதிகாரியான பிரிபெக்ட் பஸ்காசியூசிடம் தெரிவிப்பேன் என்றான் . காரணம் அப்போது கொடுங்கோலாட்சி நடத்தி வந்த தியோக்கிலேசியான் பேரரசன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாய்க் கொன்று குவித்தான் . எங்கும் இரத்த ஆறு ஓடியது . "உன்னை அடித்து நொறுக்கும்போது , உனக்கு பேசுவதற்குக் கூட நா எழாது "என்றான் . "இறையடியாள் நான் . சரியான சொற்களை சரியான நேரத்தில் சொல்ல தூய ஆவியார் துணை நிற்பார் .ஏனெனில் தூய வாழ்வு வாழ்வோர் யாவரும் தூய ஆவியின் ஆலயங்கள் " என்றார் . "விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள் . அப்போது தூய ஆவியார் பறந்து விடுவார் "என்றான் . "எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எனக்கு இரு மடங்கு வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொள் "என்றார் , லூசியா .
இதையெல்லாம் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பஸ்காசியூஸ் , லூசியாவை விலை மகளிர் இருக்குமிடத்தில் தள்ள சொன்னான் .. அவனது உத்தரவுக்கு இணங்கி அவரைக் கடத்திக் கொண்டு போக வந்தவர்களால் அவரை அசைக்க முடியவில்லை . கற்பாறை போல் அவர் அசையாது நின்றார் . ஆத்திரமடைந்த அரசன் , அவர் மீது கொதிக்கும் தாரை ஊற்றச் சொன்னான் . அது அவரை எதுவும் செய்ய முடியவில்லை .. அவரை அடித்துத் துன்புறுத்தி அவர் கண்களைப் பிடுங்கச் சொன்னான் .காவலர்கள் அவர் கண்களைப் பிடுங்கவே , ஆண்டவர் அற்புதமாய் அவரது கண்களைச் சரி செய்து மீண்டும் பார்வை தந்தார் . [எனவே தான் இன்று வரை கண் நோய்களில் இருந்து விடுதலை பெற புனித லூசியாவிடம் மன்றாடுகின்றனர் . லூசியா என்னும் சொல்லுக்கு ஒளி / வெளிச்சம் என்று பொருள் . எனவே தான் புனித லூசியாவை பிரகாசியம்மாள் என்றும் அழைக்கின்றனர்].இறுதியில் மன்னன் அவரை உயிருடன் தீயில் இடக் கட்டளை இட்டான் . அவருக்கு எந்த ஆபத்தும் நேரிடாவிட்டால் , கத்தியால் குத்திக் கொல்ல ஆணை பிறப்பித்தான் . அவர் பிழைத்தால் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவக் கூடும் என்று அஞ்சினான் . லூசியாவைச் சுற்றி தீ வளர்த்த போதும் , அவருக்கு ஏதும் நேரிடவில்லை . பின் இறுதியாக , கத்தியால் தொண்டையில் குத்தப்பட்டு இறந்தார் . கி பி 1204 இல் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது .
புனித லூசியம்மாளுக்கு நவநாள் ஜெபம்
உயிருள்ள பக்தியும் ,
பரலோக பேரின்ப பேறும் பெற்ற கன்னியுமான புனித லூசியம்மாளே,
நீர் இறைவனால் அடைந்த அருட்கொடையின் வல்லமையினால்
சிறிது காலமே குறையற்ற முழுமை அழகு பெற்று,
உமது அன்புப் பர்த்தாவாகிய இயேசுநாதருக்கு கன்னிமையைக் கையளித்து,
அவருக்காக மிகுந்த வேதனைப்பட்டு ,
அசையாத தூணாய் கன்னிமையைக் கறையின்றிக் காத்து ,
ஆன்மாவைக் கையளித்தீரே !
நீர் சீர்க்கூசா நகரத்தின் நல் பரிசாகவும்,
கன்னிமைக்கு அடைக்கலமாகவும்
உம்முடைய பக்தி அதிகரித்த யாவருக்கும்
நித்தம் உமது உபகார நன்மையைச் செய்து வருகிறீரே !
ஆகையால் புனித கன்னிகையே !
நீர் எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி,
இவ்வுலகில் படர்ந்துள்ள இருள் நீங்க,
நாங்கள் ஞான ஒளி பெற ,அருள் பொழிந்தருளும் .
அதனால் நாங்கள், இறைவன் பேரிலும்,
உமது பேரிலும் பயபக்தியாய் இருந்து ,
பாவத்தை வெறுத்து உமது தயை மிகு மன்றாட்டினால் பரலோக பேரின்பம் அடைவோமாக ஆமென்
பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!
பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!
புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வேதசாட்சிகளுக்கு இராக்கினியாய் இருக்கிற அர்சிஷ்ட மரியாயே
புனித லூசியம்மாளே ,
சிசிலி என்ற தீவில் சீர்கூசா நகரத்தின் ஞான நட்சத்திரமாகிய புனித லூசியம்மாளே ,
உயர்ந்த கோத்திரத்தில் யுற்றிக்கியாளிடம் பிறந்த புனித லூசியம்மாளே ,
உமக்கு ஐந்து வயதாகும்போது உமது தாயாரால் சிறந்த நேசத்தோடு அரவணைக்கப்பட்ட புனித லூசியம்மாளே ,
சிறிய வயதில் தன்னைப் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தவரான புனித லூசியம்மாளே ,
எப்பொழுதும் கண்ணிமையாய் இருப்பேனென்று வாக்குக் கொடுத்தவரான புனித லூசியம்மாளே ,
மிகவும் அழகுள்ள அலங்காரமிக்க புனித லூசியம்மாளே ,
உமது அன்னைக்கு இருந்த பெரும்பாடான வியாதியை உமது வேண்டுதலினால் குணப்படுத்தியவரான புனித லூசியம்மாளே ,
உமக்கு தகுந்த வயது வந்தவுடன் திருமணம் முடித்து வைக்க வேண்டுமென்ற உமது தாயின் எண்ணத்தை முழுவதும் வெறுத்துத் தள்ளின புனித லூசியம்மாளே ,
உமது திருமனத்திர்க்காக வைத்திருந்த செல்வத்தையெல்லாம் பிச்சைக்காரர்களுக்கு பகிர்ந்து கொடுத்த
தருமக்கண்ணாடியான புனித லூசியம்மாளே ,
தான் இறைவனுடைய வேதத்தைக் கடைப்பிடிக்கிறவள் என்று புற மதத்தவரான கொடூர அரசனுக்கு அறிவிக்கப்பட்ட புனித லூசியம்மாளே ,
வேதத்தை விட்டு விடும்படி அந்தக் கொடூர அரசனால் வெகு துன்பப்படுத்தப்பட் புனித லூசியம்மாளே ,
அரசன் சொன்ன துர்புத்திகளை எல்லாம் உத்தம நியாயத்தோடு மறுத்த புனித லூசியம்மாளே ,
உமது கற்புக்கு விரோதமாக துன்புறுத்தப்பட்ட புனித லூசியம்மாளே ,
இறைவனுடைய புதுமையால் நீர் நின்ற நிலை தவறாமல் அற்புதமாகக் காப்பாற்றப்பட்ட புனித லூசியம்மாளே ,
கற்பின் ஆபரணப் பொக்கிஷம் எனப்பட்ட புனித லூசியம்மாளே ,
கோபம் கொண்ட அரசனால் எரிகின்ற தீச் சுவாலையில் தள்ளப்பட்ட புனித லூசியம்மாளே
அந்தத் தீச் சுவாலையில் நீர் சாகவேண்டி இருந்தாலும் உமது ஆடைகள் முதலாய் கருகாமல் காப்பாற்றப்பட்ட
புனித லூசியம்மாளே ,
எண்ணிறைந்த அற்புதங்களில் விளங்கியவரான புனித லூசியம்மாளே ,
உமது திருக்கண்கள் பிடுங்கப்பட்ட புனித லூசியம்மாளே ,
குருடருக்குப் பார்வை கொடுப்பதில் அற்புத வரம் பெற்றவரான புனித லூசியம்மாளே ,
கண் நோயால் கண்ணீர் சிந்தி கையேந்தி நின்று பரிதவிக்கும் நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் புனித லூசியம்மாளே ,
விசுவாசத்தில் ஒரு போதும் தத்தளியாத உத்தம வேத சாட்சியான புனித லூசியம்மாளே ,
வேதத்திற்க்காக உயிரைக்கொடுத்து பரலோக அரசில் மகிமைக்குரிய இடம் பெற்றவரான புனித லூசியம்மாளே ,
உம்மைப் பார்த்து வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு தவறாமல் வரம் கொடுக்கிறவரான புனித லூசியம்மாளே ,
உம்மைப்பார்த்து வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு மிகவும் அன்புள்ள தாயான புனித லூசியம்மாளே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
செபிப்போமாக
எல்லாம் வல்ல இறைவா!
புனித லூசியம்மாளின் கன்னிமையாலும், வேத சாட்சி மகிமையாலும்
விண்ணகத்திற்கு எழுந்தருளி பேரின்ப பாக்கியத்தை அடையப் பெற்றாரே ,
அந்த அம்மாளுடைய இரக்கமான மன்றாட்டினால்
எங்களுக்கு இவ்வுலகில் வருகிற எல்லா துன்பங்களையும்
பொறுமையுடனே சகித்து நாங்களும் அவர்களைப் போல் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
விண்ணகமடைய வரமருளும் .
இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்
புனித லூசியாள் நவநாள் குழுவினர் வேண்டுதல்
முதல்: ஒ இரக்க மிகுந்த புனித லூசியம்மாளே!
நீர் இம்மண்ணுலகில் வாழ்ந்தபோது கடவுள் மீது கொண்டிருந்த பக்தி பற்றுதலும்
மனிதர்கள் மீது நீர் வைத்த அன்பும் இறைவனிடம் உன்மை சக்தி வாய்ந்வராகச் செய்தது.
நீர் எமக்காக ஒரு வார்த்தை கூறினால் போதும்,
இறைவன் அருள் வரங்களை என்மீது பொழிவார்.
உம் சகோதரராகிய எங்களை கண்ணோக்கியருளும்,
எங்கள் குறைகளையும் தேவைகளையும் கவலைகளையும் இறைவனிடம் எடுத்துகூறும்.
எல்: உமது உதவியைக் கூவி அழைப்போருக்கு இரங்கும் புனித லூசியம்மாளே/
நாங்கள் பாவத்திற்கு அடிமையாகி/
சாத்தானின் வலையில் சிக்குன்டு தவிக்கின்றோம்
வறுமை எங்களை வாட்டுகின்றது/
நோய் எங்களை வருத்துகின்றது.
உமது வேண்டுதலால் இக்கண்ணீர் கணவாயிலிருந்து எங்களை காத்தருளும்/
எங்கள் அழுகையின் கண்ணிரை துடைத்தருளும்/
தஞ்சமென்று ஒடிவரும் எங்களைத் தேற்றும்/
நோயாளிகளை குணமாக்கும் புனித லூசியம்மாளே/
உம்மை நேசித்து இயேசுவின் மீது உமக்கு இருந்த அன்பைக் குறித்து/
உன்முடைய உதவியை நாங்கள் கேட்கிறோம்/
துன்புறுவோர்க்கு ஆறுதலே எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை பாதுகாத்தருளும்.
ஆனால் நாங்கள் இன்னும் துன்புறுவது இறைவனின் சித்தமானால்/
நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்க்கும் சகிப்பு தன்மையை எங்களுக்கு அளித்தருளும்.
இந்த வரங்களை எல்லாம்/ எங்கள் பேறு பலன்களைக் குறித்து அல்ல.
ஆனால் உமது அன்பிலும்/வல்லமையிலும் நம்பிக்கை வைத்து/ கெஞ்சி மன்றாடுகின்றோம்.
முதல்:எண்ணில்லா அற்புதங்களை புரிகின்ற புனித லூசியம்மாளே!
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் -
புனித லூசியாவை நோக்கி ஜெபம்
ஓ ! எங்கள் இறைவா !
எங்களைப் படைத்துக் காத்து மீட்டவரே !
கருணையோடு எங்கள் ஜெபத்தைக் கேட்பவரே !
உமது உத்தம புனிதையாக நாங்கள் வணங்கும்
எங்கள் பாதுகாவலி புனித லூசியாளுக்கு
உமது விசுவாச ஒளியை கொடையாகத் தந்தீரே
அதே விசுவாச ஒளி எங்கள் ஆன்மாவில் நிலைத்திருந்து
எங்களை ஆட்கொள்ள மனமிரங்கி அருள் புரியும்.
அந்த அருளைப் பெறுகின்ற நாங்கள் அனைவரும்
தீமையிலிருந்து விலகி நன்மை செய்யவும்
உலக மாய இருளாகிய பாவத்தை என்றும் வெறுத்து வாழவும் அருள் புரியும் .
இறைவா !
உமது நன்மைத்தனத்தில் நம்பிக்கை வைத்து
மிகுந்த தாழ்ச்சியுடன் உம் திருமுன் வேண்டுகிற
உம் அடியவர்க்கு புனித லூசியாவின் பரிந்து பேசுதலால்
நல்ல விசுவாச பார்வையும் ,
அப்பார்வையால் விசுவாச வாழ்வு வாழ்ந்து
நாங்கள் என்றும் உமது பெயரை மேன்மைப்படுத்தவும் ,
மகத்துவப்படுத்தவும் ,
எங்கள் ஆன்மா இவ்வுலகில் இருந்து மீட்பு பெற்று விண்ணுலகில் கடவுளின் செம்மறியோடு என்றும் மகிழ்ந்திருக்கவும் கிருபை செய்தருளும் .
கன்னியும் வேதசாட்சியுமான புனித லூசியாளே !
எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டுஇறையேசுவிடமிருந்து இந்த வரங்களைப் பெற்றுத்தாரும். ஆமென்
லூசியாவின் திருநாள் அன்று சிறுமியர் வெண் அங்கி தரித்து , இடையில் சிவப்பு கச்சை கட்டி (வேதசாட்சி என்று குறிப்பது) எரியும் மெழுகுதிரிகளால் ஆன கிரீடம் அணிந்து பாடல்கள் பாடி பவனி வருவர் (காண்க : படம் )