- புனிதர்கள்
- தொகுப்பு
- ஜனவரி
ஜனவரி மாதப் புனிதர்கள் & திருநாட்கள்
Jan. 1
விருத்தசேதனத் திருநாள்
திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு நிறைவேற்றப்படுகிறது.
விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களி னின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு. மோயீசன் பத்துக் கற்பனை யைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுரனால் ஏற்படுத்தப்பட்டது. இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள். இச்சடங்கை நிறைவேற்றும்போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும். நமது திவ்விய கர்த்தர் இந்தச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டு மென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார். நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளை யையும் பக்தியோடு அநுசரிப்போமாக. மேலும் நமது இருதயத்தில் எழும் ஆசாபாச முதலிய ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தஞ் சிந்தப் பழகவேண்டும். கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.
யோசனை
இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது ஜீவியத்தில் வாழ்வ தற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.
ஜனவரி மாதம் 2-ம் தேதி
அர்ச்.மக்காரியுஸ் - மடாதிபதி (கி.பி.394).
அலெக்ஸாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்துவந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்யத் தீர்மானித்து, நாட்டைவிட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் அரிதான ஜெப தபங்களை செய்துவந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம மாதிரியைப் பின்பற்றி, புண்ணியவான்களாய் வாழ்ந்தார்கள்.
மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார். கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடவை மாத்திரம் உண்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒரு நாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குலையை உண்ணாமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை உண்ணாமல மக்காரியுஸ_க்கு அனுப்பிவிட்டார்கள். தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அநுசரிப்பதையறிந்து சந்தோஷமடைந்தார். வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடை களை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு மரித்த படியால், அந்த பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச்.மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகள் உண்டாக அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர், வயோதிகரான அர்ச்.மக்காரியுஸை பல விதமாயத் துன்பப்படுத்தினார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து 394-ம் வருடம் மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப- பிரியத்துக்கு இடம் கொடுக்காமல் மட்டசனம் என்னும் புண்ணியத்தை அனுசரிப்போமாக.
ருஸ்பே நகர் ஆயர் பல்கெண்டியஸ் Fulgentius von Ruspe
பிறப்பு
467,
டேலேப்டே Telepte, நார்த் ஆப்ரிக்கா
இறப்பு
1 ஜனவரி,
532 ருஸ்பே Ruspe, நார்த் ஆப்ரிக்கா
இவர் ஓர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த முறையில் தனது கல்வியை முடித்தார். அதன்பிறகு கிரேக்கம் மற்றும் இத்தாலி மொழியைக் கற்றுக்கொள்ளும் பயிற்சியில் இருக்கும்போது துறவற மடத்தில் சேர்ந்து, விரைவில் குருப்பட்டம் பெற்றார். இவரை ஆயராக தேர்ந்தெடுக்க பலமுறை கூறியபோதும், ஒவ்வொரு முறையும் அதற்கிணங்காமல் மறுத்தார். இறுதியாக 508 ஆம் ஆண்டு வலுக்காட்டாயமாக ருஸ்பே நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர், இருமுறை சர்தீனியன் தீவிற்கு Sardinien Inselநாடு கடத்தப்பட்டார்.
இவர் மீண்டும் 523 ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். பிறகு தொடர்ந்து ருஸ்பே நகரில் தனது ஆயர் பணியை ஆற்றினார். இறைப்பணியில் சிறந்து விளங்கிய இவர் தனது செப நேரத்தில் இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! உம் மந்தையின் மக்களை பராமரிக்க, ஆயர் பல்கெண்டியஸை எம் முன்னோர்களுக்குக் கொடையாகத் தந்தீர். அவரின் அரும்பெரும் செயல்களை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நீர்தாமே தொடர்ந்து ருஸ்பே நகரில் வாழும் மக்களை வழிநடத்திக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஜனவரி மாதம் 2 ம் தேதி
ஆயர் மறைவல்லுநர் நசியான்ஸ் நகர் கிரகோரியர் Gregor von Nazianz
பிறப்பு
330,
நெசினி Nenisi, துருக்கி

இறப்பு
390,
நெசினி நகர்
பாதுகாவல்: கவிதை எழுதுபவர், நல்ல அறுவடை
இவர் தனது 10 ம் வயதில் தன்னுடன் பயின்ற பசிலியுஸ் Basilius என்ற மாணவருடன் நண்பரானார். இவர்கள் இருவரும் சிறந்ததொரு எடுத்துக்காட்டான நெருக்கமான நண்பர்களானார்கள். இவர் 360 ஆம் ஆண்டு திருமுழுக்குப் பெற்று சிறந்த கிறிஸ்தவராய் வாழ்ந்தார். பின்னர் 372 ஆம் ஆண்டு குருத்துவப்பட்டம் பெற்றார். பின்னர் ஆயராகப் பொறுப்பேற்று மறைப்பணியாற்றினார். அவரின் தந்தை 374 ஆம் தந்தையின் சொத்துக்கள் அனைத்தையும் மறைமாவட்டத்திற்குப் பரிசாகக் கொடுத்தார். பின்னர்381 ஆம் ஆண்டு தனது இருப்பிடத்தை கான்ஸ்டாண்டிநோபிளுக்கு மாற்றினார்.
இவர் அங்கு பல கருத்தரங்குகளை ஏற்படுத்தி திருச்சபையை வளர்த்தெடுத்தார். இவர் கல்வி செல்வங்களை திரட்டும் பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். ஆழ்ந்த இறை நம்பிக்கையும் பேச்சுத்திறனும் கொண்டு திருச்சபைக்காக பெரிதும் உழைத்தார். இவர் தனது மறைமாவட்டத்தில் தோன்றிய பிளவுகளின் காரணமாக தம் சொந்த நகராகிய நெசினிக்கு திரும்பி இறைவனில் வேரூன்றி வாழ்ந்து அவ்வூரிலேயே இறந்தார்.
செபம்:
அன்பே உருவான இறைவா! புனித கிரிகோரியாரின் வாழ்வால் நீர் உமது திருச்சபையை வளமுற செய்தீர். அவரை எங்களுக்கு வழிகாட்டியாகவும் தந்தீர். நாங்கள் தாழ்மையுடன் உமது அன்பைப் பெற்று நம்பிக்கையுடனும் அன்புடனும் வாழ எங்களுக்கு அருள்புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஜனவரி மாதம் 3-ம் தேதி
அர்ச்.ஜெனோவியேவ் அம்மாள் - கன்னிகை (கி.பி.422).
அர்ச்.ஜெனோவியேவ் அம்மாள் 422-ம் வருஷம் பிரான்சு தேசத்தில் பிறந்தாள். அவள் ஏழு வயதில் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தாள். தன் 15-ம் வயதில் கன்னியர் உடுப்பு தரித்துக்கொண்டாள். நாளுக்கு நாள் புண்ணியத்தில் வளர்ந்து 50 வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சிறிது ரொட்டியும், பருப்பும் புசிப்பாள். மயிரொட்டியாணம் தரித்து கடுந் தவம் புரிவாள். மகா பக்தியுருக்கத்துடன் இடைவிடாமல் ஜெபத தியானஞ் செய்வாள். பிறர் சிநேக வேலைகளினிமித்தம் பெரிய பட்டணங் களுக்குக் கடும் பிரயாணமாய் போய் அநேக புதுமைகளைச் செய்து, தீர்க்கத்தரிசனங்களைச் சொல்லி, சகலராலும் வெகுவாய் மதிக்கப்பட்டாள். இந்தப் புண்ணியவதியின் மீது காய்மகாரங் கொண்டவர்கள் இவளைப் பலவிதத்திலும் துன்பப்படுத்தினபோதிலும், இந்த அர்ச்சியசிஷ்டவள் சற்றுங் கலங்காமல் தன் நம்பிக்கையை சர்வேசுரன் மீது வைத்து, ஜெபதபத்தால் தன் சத்துருக்களை வென்றாள். அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பாரிஸ் நகரைக் கொள்ளையடிக்க வந்தபோது அவள் உரைத்த தீர்க்கத்தரிசனத்தின் படி அந்தப் பெரும் பொல்லாப்பு நீங்கியது. ஜெனோவியேவ் அம்மாள் தன் 89-ம் வயதில அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.
யோசனை
நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவளைக் கண்டுபாவித்து, துன்ப துரிதத் தாலும் பொல்லாதவர்களுடைய தூற்றுதலாலும் மனஞ் சோர்ந்துபோகாமலும் உலக உதவியை ஆசியாமலும் ஜெபத்தால் தேவ உதவியை மன்றாடு வோமாக.
ஜனவரி மாதம் 4-ம் தேதி
அர்ச்.தீத்துஸ் - மேற்றிராணியார்.
அஞ்ஞானியாயிருந்த இவர் அர்ச்.சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று அவருக்கு சீஷனாகி அவர் வேதம் போதிக்கச் சென்ற ஊர்களுக்கெல்லாம் இவரும் கூடவே சென்றார். பிறகு இவர் விசுவாசிகளை விசாரித்து வரும்படி அர்ச்.சின்னப்பரால் பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டார். வேதத்தில் தத்தளித்து துர்மாதிரிகையாய் வாழ்ந்த கொரிந்தியரை திருத்தும் பொருட்டு தீத்துஸ் அவர்களிடம் அனுப்பப்பட்டபோது, அவர் அவர்களுக்கு எவ்வளவு சிறப்போடும், அன்போடும் புத்திமதி சொல்லி அவர்களை நல்வழிக்கு திருப்பினாரெனில், இந்த நல்ல செய்தியைப்பற்றி கேள்விப்பட்ட அப்போஸ்தலர் சந்தோஷத்தால் பூரித்து ஆறுதல் கொண்டார். தீத்துஸ் அர்ச்.சின்னப்பரின் உத்தரவின்படி ஆங்காங்கு தர்மம் எடுத்து ஜெருசலேமிலுள்ள ஏழைகளுக்கு அனுப்பிவந்தார். சில காலத்துக்குப் பின் அர்ச்.சின்னப்பர் தீத்துஸ_க்கு மேற்றிராணியார் பட்டம் கொடுத்து கிரேத் என்னும் தீவில் வேதம் போதிக்கும்படி அனுப்பினார். மேற்றிராணிமாரின் மேலான கடமைகளைப்பற்றியும், விசுவாசிகளை நடப்பிக்கத் தக்க ஒழுங்கு திட்டங்களைப்பற்றியும் ஒரு நிருபத்தை அர்ச்.சின்னப்பர் எழுதி இவருக்கு அனுப்பினார். தம் குருவும் ஆசிரியருமான அப்போஸ்தலருடைய போதனைக்குத் தீத்துஸ் இணங்கி புண்ணிய வழியில் நடந்து, மிக்க ஊக்கத் துடன் வேதம் போதித்து மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நாம் யாதொரு காரியத்தில் தவறியிருப்பதை அறிந்த நமது ஞானப் போதகர்கள் நமக்கு புத்தி சொல்லும்போது, நமது தவறுகளை விட்டொழித்து அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்.
ஜனவரி மாதம் 5-ம் தேதி
தூணில் நின்று தவம் புரிந்த அர்ச்.சிமெயோன் - துதியர்.
இவர் சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துவந்தார். தமது 13-ம் வயதில், இவர் நமது கர்த்தர் மலையின் மேல் எட்டு வாக்கியங்களை வாசிக்கக் கேட்டு, அவைகளின்படி நடக்க விருப்பம்கொண்டு, இடைவிடாமல் ஜெபத் தியானஞ் செய்து கண்ணீர் சிந்தி அருந் தவம் புரியத் தொடங்கினார். இதில் திருப்திகொள்ளாமல் ஒரு மலையின் மேல் ஒதுங்கி கடின தவஞ் செய்து வந்தபடியால் இவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஏராளமான ஜனங்கள் அவ்விடம் சென்று இவருடையப் புண்ணியங்களையும் புதுமைகளையுங் கண்டு அதிசயித்தார்கள். இவர் கடின தவம் புரிய தீர்மானித்து 60 அடி உயரமுள்ள தூண் ஒன்றின்மேல் ஏறித் தவம் புரிந்துவந்தார். ஆட்டுத் தோலை ஆடையாகத் தரித்துக் கடும் ஓருசந்தி பிடிப்பார். ஓரு நாளைக்கு அநேகத் தடவை முழந்தாற்படியிட்டு சர்வேசுரனை ஆராதிப்பார். ஒவ்வொரு நாளும் இருமுறை தூணைச் சுற்றிக் கூடியிருக்கும் திரளான ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்வார். இவருடையப் புண்ணியத்தை பரிசோதிக்குங் கருத்துடன் அருகாமையிலிருந்த மேற்றிராணிமார் சிலர் இவரைத் தூணிலிருந்து இறங்கி வரும்படி கட்டளையிட்டார்கள். உடனே சிமெயோன் இறங்க முயலுவதை அவர்கள் கண்டு, அவர் தேவசித்தப் பிரகாரம் நடக்கிறாரென்று அறிந்து கொண்டு அவரைத் தூணிலேயே இருக்கும்படி சொன்னார்கள். இவர் செய்து வந்த கடின தபசையும் பல புதுமைகளையுங் கண்ட அரசர்கள் அவரைச் சந்தித்து, அவர் ஆலோசனையைக் கேட்பார்கள். அவர் ஒருநாள் தூணில் அசைவற்றிருந்தபடியால் சிலர் அதன்மேல் ஏறிப் பார்த்தபோது அவர் மரித்து விட்டார் என்று கண்டுகொண்டார்கள். அர்ச்.சிமெயோன் தமது 69-ம் வயதில் இப்படியாக மரித்து வெகு ஆடம்பரமாக அடக்கஞ் செய்யப்பட்டார்.
யோசனை
நாம் கடினத் தவஞ் செய்யாவிடினும் ஐம்புலன்களையும், உணர்ச்சி களையும் அடக்கி ஒறுக்கப் பழகுவோமாக.
ஜனவரி மாதம் 6-ம் தேதி
கர்த்தர் மூன்று இராஜாக்களுக்குத் தம்மைக் காட்டியத் திருநாள்.
நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் பிறந்தபோது நடந்த பல அற்புத அதிசயங்களை தீர்க்கதரிசிகள் அவர் பிறப்பதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். அவைகளுள் ஒன்று புது நட்சத்திரம். கர்த்தர் பிறந்தபோது அற்புதமாய்க் காணப்பட்ட புது நட்சத்திரத்தை சகல மனிதருங் கண்டபோதிலும், சோதிட சாஸ்திரிகளான மூன்று இராஜாக்கள் மாத்திரம், பிறந்த உலக இரட்சகரை உடனே சந்திக்கத் தீர்மானித்தார்கள். இவர்கள் இந்த நெடும் பிரயாணத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல், நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து பெத்லகேம் என்னும் ஊருக்குச் சென்று, சிறு குடிசையில் சேசு பாலனைக் கண்டு மகிழ்ந்தார்கள். அங்கு காணப்பட்ட வறுமையையும், தரித்திரத்தையும் பார்த்து சற்றும் மனம் சோர்ந்து சந்தேகியாமல் அந்த பாலனே பரலோக பூலோக இராஜாவென்றும், மெய்யான தேவனென்றும் நம்பி விசுவசித்து, பொன், தூபம், மீறை முதலியவைகளை அவர் பாதத்தில் சமர்ப்பித்து அவரை ஆராதித்தார்கள். கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் அப்போஸ்தலரான அர்ச். தோமையாரால் இவர்கள் ஞானஸ்நானமும், பிறகு மேற்றிராணியார் பட்டமும் பெற்று, வேதத்தைப் போதித்து, வேதத்துக்காக இரத்தம் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.
யோசனை
நமக்கு சர்வேசுரன் பலவிதமாய் அருளும் ஞானப்பிரகாசத்தில் பிரமாணிக்கமாய் நடப்போமாக.
ஜனவரி மாதம் 7-ம் தேதி
அர்ச்.லூசியான் - குரு,வேதசாட்சி (கி.பி.312).
இவர் சீரியா தேசத்தில் பிறந்தார். இவர் வாலிபனாயிருந்தபோதே இவருடைய தாய் தந்தையர் இறந்து போனபடியால், தனக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, புண்ணிய வாளனான மக்காரியுஸ் என்பவருக்கு சீஷனாகி, வேதாகமங்களை வாசிப்பதிலும் புண்ணியக் கிரிகைகளைச் செய்வதிலும் காலத்தைச் செலவிட்டார். இவர் சாஸ்திரங்களைப் படித்தபின், குருப்பட்டம் பெற்று வேதம் போதித்துவந்தார். அக்காலத்தில் எழும்பிய வேத கலகத்தில் அர்ச்.லூசியான் பிடிபட்டு, சிறை- படுத்தப்பட்டு, வெகு கொடூரமாய் உபாதிக்கப்பட்டார். அநேக நாட்களாய் அவருக்கு உணவு கொடுக்கப்படாததால், அவர் இளைத்து, களைத்துக் குற்றுயிராயிருக்குந் தருணத்தில், பேய்க்குப் படைக்கப்பட்ட பண்டங்களை அவருக்குக் கொடுக்க, அவர் அவைகளை உண்ணாமல் தள்ளிவைத்தார். மேலும் இவர் சங்கிலியால் கட்டப்பட்டு சிறையிலிருந்தபடியால், கிறீஸ்தவர்கள் கொண்டு வந்த அப்பத்தையும் இரசத்தையும் தமது நெஞ்சின்மேல் வைத்து தேவ வசீகரஞ் செய்து கிறீஸ்தவர்களுக்கு கொடுத்துவந்தார். மறுபடியும் அவர் நடுவனுக்குமுன் நிறுத்தப்பட்டு, வேதத்தை மறுதலிக்கும்படி பயமுறுத்தி உபாதிக்கப்பட்டபோது இவர் எதற்கும் அஞ்சாமல் தாம் கிறீஸ்தவனென்று தைரியத்துடன் சாட்சி கூறினார். இவரை சித்திரவதை செய்துக் கொலை செய்யும்படி நடுவன் தீர்ப்பிட்டான் அதன்படியே சேவகர் இவரை வதைத்துக் கொல்லும்போது, தான் கிறீஸ்தவனென்று சொல்லிக்கொண்டே உயிர்விட்டு வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
நமது சத்திய வேதத்தை சாக்குபோக்குச் சொல்லி ஒருபோதும் மறைக்காதிருப்போமாக.
ஜனவரி மாதம் 8-ம் தேதி
அர்ச்.அப்போலினார் - மேற்றிராணியார் (கி.பி.175).
ஆதியில் வேதக் கலாபனைக் கொடுமையாய் நடந்தேறி வந்தது. அப்போலினார் காலத்தில் அரசரும் பிரஜைகளும் சத்திய கிறீஸ்தவர்களை வேதத்தினிமித்தம் கொடூரமாய் வதைத்துக் கொன்றார்கள். அக்காலத்தில் உரோமை இராயனான மார்க்குஸ் அவ்ரேலியஸ் ஜெர்மன் தேசத்தின்மேல் படையெடுத்துப் போனான். அவனுடைய படைகள் தங்கியிருந்த இடம் மலைகளால் சு10ழப்பட்டு பின்னடைவதற்கு வசதியற்ற இடமாயிருந்த படியால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள சாத்தியப்படாமலிருந்ததுடன், தண்ணீர் பற்றாக் குறையினாலும் இராணுவம் வருந்தித் தவித்தது. அந்நேரத்தில் எதிரிகள் போரைத் தொடங்க, கிறீஸ்தவர்களாயிருந்த இவனுடைய சேனையின் ஓர் பகுதியார் முழந்தாளிலிருந்து சர்வேசுரனைப் பார்த்துப் பிரார்த்திக்கவே, இடி முழக்கத்துடன் ஓரு பெரும் மழை பெய்தது. மழைத் தண்ணீரால் உரோமையர் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள். இந்த மழையால் எதிரிகளுக்கு மிகுந்த சேதமுண்டாக, அவர்கள் புறங்காட்டி ஓட்டம் பிடித்தார்கள். இந்த அற்புதத்தைக் கண்ட உரோமை இராயன் அதிசயித்து அந்தக் கிறீஸ்தவ படைக்கு இடி முழக்கப் படை என்று பெயர் கொடுத்தான். அர்ச்.அப்போலினார் இராயனுக்கு ஓரு விண்ணப்பம் எழுதி, அதில் கிறீஸ்தவ வேதத்தின் படிப்பினையை விவரித்துக் காட்டினதுடன், கிறீஸ்தவ சேவகர்களுடைய வேண்டுதலால் அவனுடைய கண்ணுக்குமுன் நடந்த அற்புதத்தையும் எடுத்துக்காட்டி, வேத கலாபனையை நிறுத்தும்படி அவனைக் கேட்டுக் கொண்டார். இதனால் இராயனுடைய மனம் இளகி, வேதத்தினிமித்தம் எந்த கிறீஸ்தவர்களையும் கொலை செய்யக்கூடாதென்று ஓரு சட்டத்தை வெளியிட்டான். அர்ச்.அப்போலினார் பல நூல்களைப் பிரசுரஞ் செய்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.
யோசனை
சத்திய வேதத்தைப்பற்றிப் பேச நமக்கு சமயம் வாய்க்கும்போது, விமரிசையுடன் பேசுவோமாக.
ஜனவரி மாதம் 9-ம் தேதி
அர்ச்.ஜூலியானும், பஸிலிஸம்மாளும் - வேதசாட்சிகள் (கி.பி.313).
ஜுலியான் என்பவர் எஜிப்து தேசத்தில் தனவான்களான தாய் தந்தைய ரிடமிருந்து பிறந்தார். தன் பெற்றோருடைய நன் மாதிரிகையைப் பின்பற்றி, இளம் வயதில் உத்தம கிறீஸ்தவனாய் வாழ்ந்து தன் ஜீவிய காலம் முழுவதும் விரத்தராயிருக்க விரும்பினார். ஆனால் தாய் தகப்பனுடைய கட்டாயத்தினால் இவர் பஸிலிஸா என்பவளை மணமுடித்துக்கொண்டு தன் கருத்தை அவளுக்கு வெளியிட்டபோது, அவளும் அதற்குச் சம்மதித்து, இருவரும் கூடப்பிறந்தவர் களைப்போல் விரத்தராய் வாழ்ந்துவந்தார்கள். இவர்களுடைய நல்ல படிப்பினையால் அநேக கெட்ட கிறீஸ்தவர்கள் நல்லவர்களாகி திரளான அஞ்ஞானிகளும் சத்திய வேதத்தில் சேர்ந்து வேதசாட்சிகளாய் மரித்தார்கள். இவ்விருவரும் தங்கள் மாளிகையை மருத்துவமனையாக மாற்றி அதில் ஏழைகளையும் நோயாளிகளையும் சேர்த்து அன்புடன் ஆதரித்து வந்தார்கள். சில சமயங்களில் 1000 பேர் வரையில் அவ்விடத்தில் உதவி பெற்றுவந்தார்கள். ஜூலியான் ஆண் பிள்ளைகளையும் பஸிலிஸா பெண் பிள்ளைகளையும் கவனித்து வந்தார்கள். பஸிலிஸா 7 வேதக் கலாபனைகளில் உறுதியாய் நின்று புண்ணியவதியாக மரித்தாள். ஜூலியானும் வேதத்திற்காகப் பிடிபட்டு ஸெல்ஸஸ், அந்தோணி, அனஸ்தாஸியா, மார்சியனில்லா முதலியவர்களுடன் வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
நமது தகுதிக்கேற்றபடி ஏழைகளுக்கு உதவி புரிவதுடன், சத்திய வேதத்தில் சேர விரும்பும் அஞ்ஞானிகளுக்கு நற்புத்தி சொல்லி, தேவைப் பட்டால் பொருளுதவியும் செய்யவேண்டும்.
ஜனவரி மாதம் 10-ம் தேதி
அர்ச்.வில்லியம் - மடாதிபதி, மேற்றிராணியார் (கி.பி.1209).
இவர் பிரான்சு தேசத்தில் உத்தம கோத்திரத்தில் பிறந்து புண்ணிய வாளரான ஒரு குருவானவரிடத்தில் கல்விப் பயின்றார். இவர் சிறு வயதிலேயே பெயர் பெருமையையும், சுக செல்வத்தையும் புறக்கணித்துத் தள்ளிவிட்டு, குருப்பட்டம் பெற்றபின் தமக்கு அளிக்கப்பட்ட மேலான அலுவலுக்குச் சம்மதியாமல் சன்னியாச மடத்தில் சேர்ந்து வெகு உருக்கத்துடன் நெடு நேரம் ஜெபம் செய்துவருவார். ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஒறுத்து, கடின தபஞ்செய்து இடைவிடாமல் மரணத்தைப்பற்றி தியானிப்பார். இவருடை புண்ணியங்களைக் கண்ட அரசரும் பிரபுக்களும் அதிசயித்து அவருக்கு மரியாதை செலுத்திவந்தார்கள். மேலும் இரண்டு மடங்களுக்கு சிரேஷ்டராகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அவைகளைத் திறமையுடன் நடத்தி வந்தார். இவர் பூர்ஜெஸ் நகரின் மேற்றிராணியாராகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அர்ச்.பாப்பானவருடைய கட்டாயத்தின்பேரில் அதற்குச் சம்மதித்து, மேற்றிரா ணியார் அபிஷேகம் பெற்றபின் முன்னிலும் அரும்பெரும் புண்ணியங்களைச் செய்துவந்தார். மயிர்ச்சட்டையைத் தரித்துக்கொண்டு, மாமிசத்தை அறவே வெறுத்து, கடுந்தவம் செய்து தமது மேற்றிராசனக் கிறீஸ்தவர்களை வெகு அன்புடனும், தயவுடனும் நடத்தி, தமது புத்தி ஆலோசனையால் கணக்கற்ற பாவிகளை மனந்திருப்பி, அநேக பதிதரை வேதத்தில் சேர்த்துவந்தார். தமக்கு மரணம் கிட்டியிருப்பதை அறிந்து, வெகு பக்தி விசுவாசத்துடன் கடைசி தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று, சாம்பல்மேல் படுத்துக்கொண்டே அர்ச்சியசிஷ்டவராக உயிர் விட்டார்.
யோசனை
நாம் புண்ணிய வழியில் வாழ வேண்டுமானால் அகத்திலும் புறத்திலும் ஒறுத்தலை அனுசரித்து நமது அந்திய காலத்தைப்பற்றி யோசிக்கக்கடவோம்.
ஜனவரி மாதம் 11-ம் தேதி
அர்ச்.எயுஜினுஸ் - பாப்பரசர், வேதசாட்சி (கி.பி.139).
எயுஜினுஸ் என்பவர் அர்ச். இராயப்பர் சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நான்கு வருடங்கள் ஆண்டு வந்தார். அக்காலங்களில் வேத கலகம் நடக்காமலிருந்தாலும் சில பதிதரால் திருச்சபையில் குழப்பம் உண்டாயிற்று. அதெப்படியெனில், செத்ரோ என்பவன் ஆட்டுத்தோலை அணிந்துகொண்ட ஓநாயைப்போல் உரோமையில் பிரவேசித்து, கடவுள் இருவர் என்றும், சேசுநாதர் தேவமாதாவிடத்தினின்று பிறந்த மெய்யான மனிதனாயிராமல் ஓர் நிழலைப்போல் காணப்பட்டவரென்றும் தப்பறையான போதனை களைப் போதித்துவந்தான். இதையறிந்த பாப்பாண்டவர் எயுஜினுஸ் அந்த பதிதனைச் சபித்தார். அந்த கள்ளப் பதிதன், தன் தப்பறைக்காக மனஸ்தாபப் படுவதாக பாசாங்கு காட்டினதின்பேரில் சாபத்தினின்று நீக்கப்பட்டான். மறுபடியும் அவன் மேற்கூரிய பதித போதனைகளைப் போதித்தபடியால், இரண்டாம் முறையும் திருச்சபை சாபத்துக்குள்ளானான். வலந்தீன் என்னும் வேறொருவன், தான் விரும்பிய மேற்றிராணியார் பட்டம் தனக்கு மறுக்கப்பட்ட தினால் கோபமும் அகந்தையும் கொண்டு, உரோமைக்குச் சென்று தப்பறை யான பல பதிதப் படிப்பினைகளைப் போதிக்க முயற்சித்தபோது, மிகவும் சாந்தகுணமுள்ள இந்தப் பாப்பரசர் அவனுக்கு சாபமிட்டுத் தண்டியாமல் அவனுக்கு அன்பு காட்டி புத்தி சொல்லி, அவனை மனந்திருப்ப முயற்சிக்குங் காலத்தில் அவர் மரணமானார். இவர் வேதசாட்சியாகக் கொல்;லப்படாவிடினும் பலமுறை வேதத்தினிமித்தம் உபாதிக்கப்பட்டபடியால் வேதசாட்சி என்றும் அழைக்கப்படுகிறார்.
யோசனை
தொத்து வியாதிக்காரருடன் பழகுகிறவர்களுக்கு நோய் தொத்துவது போல், குருக்கள், மேற்றிராணியார் முதலிய ஞானப் போதகர்களை இகழ்ந்து பேசும் கிறீஸ்தவர்களுடைய கூட்டத்தைவிட்டு நாம் விலகாவிட்டால் நமது ஆத்துமத்திற்கு சேதமுண்டாகும்.
ஜனவரி மாதம் 12-ம் தேதி
அர்ச்.அர்க்காதியுஸ் - வேதசாட்சி (கி.பி.301).
இவர் தியோக்கிளிஸியன் காலத்தில் வேதசாட்சியானாரென்று தெரிய வருகிறது. அக்காலத்தில் வேத கலாபனை வெகு குரூரமாய் நடந்தபடியால் அரசாங்க அதிகாரிகளும் ஊர் ஜனங்களும் தங்களிஷ்டப்படி கிறீஸ்தவர் களை வீடு வீடாய் நுழைந்து பிடித்து தங்களுடன் கொண்டு வந்திருக்கும் சிலைகளுக்குப் படைக்கும்படி கற்பிப்பார்கள். அப்படிச் செய்யாதவர்களை அங்கேயே வதைப்பார்கள். இந்த அநியாயத்தைக் கண்ட அர்க்காதியுஸ் நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று ஜெபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார். ஒரு நாள் அரசாங்க அதிகாரிகள் இவருடைய வீட்டில் நுழைந்த போது, அவரை அங்குக் காணாதபடியால், அவர் பிடிபடும் வரையில் அவருடைய உறவினனான ஒருவனை சிறையிலடைத்தார்கள். இதைப்பற்றி அர்க்காதியுஸ் கேள்விப்படவே, நாட்டு அதிகாரியிடம் சென்று “நான்தான் அர்க்காதியுஸ். சிறையிலடைக்கப்பட்ட இந்த மனிதனை விட்டுவிடும்” என்றார். “நல்லது, தேவர்களுக்கு பலியிட்டால், உன்னையும் விடுதலை செய்வேன்” என்றதற்கு, “சிரஞ்சீவியரான கடவுளைத் தவிர, உங்கள் பொய்த் தேவர்களைக் கும்பிட மாட்டேன” என்றார் அர்க்காதியுஸ். “அப்படியானால் நீ சாகவே சாவாய்” என்றான் அதிகாரி. அதற்கு அவர் “சேசு கிறீஸ்துநாதரே என் உயிரும், மரணமும், நித்திய சம்பாவனையுமாய் இருக்கிறார்” என்றார். அதைக் கேட்ட நடுவன் சினம்கொண்டு, அவருடைய அவயவங்களைத் துண்டு துண்டாய் நறுக்கி சித்திரவதைப்படுத்தக் கட்டளையிட்டான். கொலைஞரும் அவ்வாறே செய்தார்கள். அர்க்காதியுஸ் தமக்குமுன் குவிக்கப்பட்டிருக்கும் அவயவங் களின் குவியலை கண்ணோக்கி, “என் அவயவங்களே நீங்கள் ஒருநாள் நித்திய சம்பாவணையைப் பெறப்போவதால், நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள்” என்று கூறி உயிர் விட்டார்.
யோசனை
நம்மால் யாதொருவருக்குத் தீமை உண்டாகும்போது அதைத் தடுப்பது நமது கடமை.
ஜனவரி மாதம் 13-ம் தேதி
அர்ச்.வெரோணிக்கம்மாள் - கன்னிகை (கி.பி.1497).
வெரோணிக்கம்மாளுக்கு உலக நன்மைகள் இல்லாவிடினும் ஞான நன்மைகள் ஏராளமாயிருந்தன. இவளுடைய பெற்றோரின் தரித்திரத்தால் இவள் எழுதப்படிக்கத் தெரியாதவளாயிருந்தாள். இவள் தோட்டத்தில் வேலை செய்யும்போது மற்றவர்களுடன் சேராமல் தனித்து சர்வேசுரனைப்பற்றித் தியானித்துக்கொண்டு வேலை செய்வாள். வீட்டிலும் வேலை செய்துகொண்டே ஜெபம் செய்வாள். தனக்குப் படிப்பறிவு இல்லாததினால், இந்தப் புண்ணிய மாது மனவருத்தப்பட்டு இரவிலாகிலும் படிக்க முயற்சிக்கையில் தேவதாயார் அவளுக்குத் தரிசனையாகி அவளுக்குப் படிப்பு தேவையில்லை என்றும், ஆனால் (1) பரிசுத்தக் கருத்துள்ளவளாயும் (2) பிறர் சிநேகமுடையவளாயும் (3) நாள்தோறும் சேசுநாதருடைய திருப்பாடுகளைத் தியானிக்கிறவளாயும் ஜீவித்து வந்தால், அதுவே அவளுக்குப் போதுமென்று அறியச்செய்தார்கள். இந்தப் புண்ணியவதி பலமுறை பரவசமாகி நம்முடைய கர்த்தருடைய ஜீவியத்தைப்பற்றிய அநேக தரிசனங்களைக் கண்டாள். சில வருஷங்களுக்குப் பின் இவள் அர்ச்.மார்த்தம்மாள் மடத்தில் தவக் கன்னியாஸ்திரீயாக ஏற்றுக் கொள்ளப்பட்டாள். அந்த மடம் வெகு கஷ்டநிலையிலிருந்தபடியால், வெரோணிக்கா சகோதரி நாள்தோறும் வீடு வீடாய்ச் சென்று தர்மம் கேட்க நேரிட்டது. இந்த வேலையையும் மடத்திலுள்ள மற்ற தாழ்மையான வேலை களையும் அக்கறையுடனும், ஆசையுடனும் செய்வாள். இந்தப் புண்ணிய- வதிக்கு அடிக்கடி கடின வியாதி உண்டான போதிலும், அதனால் அவள் தன் வேலையை விடாமலும், சபையின் ஒழுங்கை மீறாமலும், சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய்ப் பிரகாசித்து அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.
யோசனை
சாதாரணமான காரியங்களைத் திருத்தமாய்ச் செய்வதே உத்தமதன மாகையால், உன் ஞானக் காரியங்களை ஆசையுடனும், அக்கறையுடனும்; செய்வாயாக.
ஜனவரி மாதம் 14-ம் தேதி
அர்ச்.ஹிலாரியார் - மேற்றிராணியார் (கி.பி.368).
இவர் பிரான்சு தேசத்தில் உயர்ந்த கோத்திரத்தில் பிறந்தவர். இவர் புத்தி கூர்மையுள்ளவரானதால் பல தேசங்களுக்குச் சென்று, உயர்ந்த கலைகளைக் கற்று, சிறந்த அறிஞரானார். இவர் அஞ்ஞானியாயிருந்தும், வேதாகமங்களை வாசித்து கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று நிச்சயித்துத் தன் குடும்பத்துடன் அதில் சேர்ந்தார். இவருடைய மேலான பக்தியையும் ஞானத்தையும் கண்டு பூவாசியர் என்னும் நகரத்தின் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். இவர் இந்த உந்நத அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டதால் பிரான்சு தேசத்திற்கு மாத்திரமல்ல, திருச்சபை முழுமைக்கும் ஞானப் பிரயோசனமுண்டாயிற்று. சேசு கிறீஸ்துநாதருடைய தெய்வீகத்தை மறுத்த ஆரிய பதிதரை ஹிலாரி மேற்றிராணியார் தமது வாக்கு சாதுர்யத்தினாலும், தேர்ந்த ஞானத்தாலும் எப்படி எதிர்த்தாரெனில், அந்த துஷ்டர் அவருக்கு முன் நிற்க முதலாய்ப்; பயந்து அஞ்சுவார்கள். இந்தக் கள்ளப் பதிதருடைய கபட தந்திரத்தால் வேத துரோகியான ஜுலியான் அர்ச். ஹிலாரியை நாடுகடத்திவிட்டான். அவ்விடத்தில் தமதிரித்துவத்தைப் பற்றி பல சிறந்த நூல்களை எழுதினார். ஜுலியானுடைய குமாரத்தி இல்லற வாழ்க்கை வாழ விரும்புவதைக் கேள்வியுற்ற இவர் அவளுக்கு கன்னிமையின் சிறப்பைப்பற்றி கடிதம் மூலமாய் அறிவித்ததின் பேரில், அவள் உலகத்தைத் துறந்து கன்னியாஸ்திரீயானாள். அர்ச். ஹிலாரியார் பரதேசத்திலிருந்து விடுதலையானபின் ஊர் ஊராய்த் திரிந்து பதித மதத்தாலுண்டான அலங்கோலங்களைச் சீர்படுத்தி பாக்கியமான மரணத்தையடைந்து நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நாமும் அர்ச். ஹிலாரியாரைக் கண்டுபாவித்து, நாள்தோறும் ஏதாவது ஒரு ஞானப் புத்தகத்தை வாசிப்போமாக.
ஜனவரி மாதம் 15-ம் தேதி
அர்ச்.சின்னப்பர் - முதல் வனவாசி (கி.பி.342).
இவர் எஜிப்து தேசத்தில் பிறந்து, சிறுவராயிருக்கும்போதே இவருடைய தாய் தந்தையர் இறந்துபோனார்கள். 250-ம் வருடத்தில் நடந்த பெரும் வேதக் கலாபனையில் தேவ பக்தரான இவர் நாட்டைவிட்டு காட்டுக்குச் சென்று ஜெப தபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார். இவர் தாம் வசித்த குகையின் அருகிலிருந்த ஒரு ஈச்ச மரத்தின் கனியைத் தின்று சுனை ஜலத்தைக் குடித்துவந்தார். மேலும் நாள்தோறும் ஒரு காகம் இவருக்குக் கொண்டுவந்த பாதி ரொட்டியைப் புசித்துவந்தார். அக்காலத்தில் வேறொரு காட்டில் தவஞ்செய்த அந்தோணியார், சின்னப்பருடைய சிறந்த புண்ணியங் களைப்பற்றி சர்வேசுரனால் அறிந்து, அவரைச் சந்திக்கும்படி சில நாட்கள் பிரயாணஞ் செய்து சின்னப்பர் இருந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தவுடனே, இவர்கள் ஒருவர் ஒருவரை அறியாதிருந்தும் ஒருவர் ஒருவரை அவருடைய பெயரால் அழைத்து மினவிக்கொண்டார்கள். அன்று இருவரும் மோட்சத்தைப் பற்றி சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், ஒரு காகம் ஒரு முழு ரொட்டியை தன் அலகினால் கொத்திக்கொண்டு வந்து அங்கே போட்டுவிட்டுப் போயிற்று. சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, கடந்த 60 வருஷங்களாக சர்வேசுரன் இந்தக் காகம் மூலமாக அரை ரொட்டியை அனுப்பினார். இப்போது நீர் வந்து இருப்பதால் முழு ரொட்டியை அனுப்பச் சித்தமானார் என்று சொல்லி சர்வேசுரனுக்கு நன்றி கூறி, இருவரும் அதைப் புசித்தார்கள். பிறகு சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, எனக்கு மரணம் கிட்டி யிருக்கிறது. நீர் உமது மடத்துக்குப் போய் உமக்கு அர்ச். அத்தனாசியார் கொடுத்த போர்வையைக் கொண்டுவந்து அதனால் என்;னைப் பொதிந்து அடக்கஞ் செய்வீராக என்றார். அவ்வாறே அந்தோணியார் போர்வையை எடுத்துக்கொண்டு வரும்போது, சின்னப்பருடைய ஆத்துமம் சம்மனசுக்களால் சு10ழப்பட்டு மோட்சத்திற்குப் போவதைக் கண்டு அதிசயித்து, குகைக்குச்சென்று பார்த்தார். அங்கு முழந்தாளிலிருந்து ஜெபஞ் செய்வதுபோல் காணப்பட்ட சின்னப்பருடைய பிரேதத்தை தாம் கொண்டுவந்த போர்வையால் பொதியுந் தருணத்தில், இரு சிங்கங்கள் காட்டிலிருந்து புறப்பட்டு வந்து, ஒரு குழியைத் தோண்டவே, அவர் அக்குழியில் அத்திருச் சடலத்தை அடக்கஞ் செய்தார். சின்னப்பர் தரித்திருந்த ஈச்சம் ஓலை ஆடையை தன்னுடன் எடுத்துச் சென்று, பெரும்; திருநாட் காலங்களில் அதைத் தரித்துக்கொண்டு வந்தார்.
யோசனை பாவச் சந்தர்ப்பத்திற்கு ஏதுவானவற்றை விட்டு விலகுவாயாக.
ஜனவரி மாதம் 16-ம் தேதி
அர்ச்.பெரிய மக்காரியார் - வனவாசி (கி.பி.390).
மக்காரியார் சிறு வயதில் ஆடு மாடுகளை மேய்க்கும்போது சிறுவருடன் சேர்ந்து சில அத்திக் கனிகளைத் திருடினதற்காகச் சாகும் வரையில் தபஞ் செய்து கண்ணீர் சொரிந்துவந்தார். இவர் இளம் பிராயத்தில் உலகத்தைத் துறந்து, சிறு குடிசையில் தனித்திருந்து ஜெபஞ் செய்வதிலும், பாய் முடைவதிலும் அலுவலாயிருந்தார். ஒரு துஷ்ட ஸ்திரீ, மக்காரியார் தன்னைக் கெடுத்துப்போட்டதாக ஊராருக்குச் சொன்னபோது, அவர்கள் அதை நம்பி, அவரை அவமானமாய் வீதி வீதியாய் இழுத்தடித்து, குரூரமாய் வதைத்தார்கள். மக்காரியார் இவைகளைப் பொறுமையுடன் சகித்து சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார். அந்த கெட்ட ஸ்திரீ பிரசவ வேதனையால் வேதனைப்படும்போது தேவ பயத்தால் தூண்டப்பட்டு, மக்காரியார் மாசற்றவரென்றும், தன்னைக் கெடுத்தவன் இன்னானென்றும் அறிவித்ததைக் கேட்ட ஊரார் அவரைப் பெரும் புண்ணியவானென்று கொண்டாடினார்கள். இந்த வீண் புகழ்ச்சிக்குத் தப்பித்துf; கொள்ளும்படி மக்காரியார் வனத்துக்குச் சென்று ஜெபதபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்துவந்தார். அந்த வனாந்தரத்தில் இவர் அநேக கோவில்களைக் கட்டி வைத்ததினால் ஏராளமான துறவிகள் அங்கு வந்து கூடினார்கள். மக்காரியார் குருப்பட்டம் பெற்று சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். வாரத்தில் ஒரு தடவை மாத்திரம் புசிப்பார். கடினமான கோடைக் காலத்திலும் ஜலம் குடிக்கமாட்டார். சற்று நேரம் தலை சாய்த்து இளைப் பாறுவார். மரித்தவர்கள் உயிர்க்க மாட்டார்களென்று பிதற்றிய பதிதருக்கு வெட்கமுண்டாகும் பொருட்டு மரித்த ஒருவனை உயிர்ப்பித்;தார். ஆரிய பதிதர் எஜிப்திலுள்ள வனவாசிகளை சிதறடிக்கும்படி ஒரு பட்டாளத்தை அனுப்பி னார்கள். அநேக வனவாசிகள் அவர்கள் கையால் வேதசாட்சிகளானார்கள். பிறகு மக்காரியார், இசிதோர், பாம்போ முதலிய முனிவர்கள் நாடுகடத்தப் பட்டார்கள். அர்ச். மக்காரியார் அரிய பல புண்ணியங்களைப் புரிந்து 390-ம் ஆண்டில் மோட்ச சம்பாவனையை அடைந்தார்.
யோசனை
நமக்கு உண்டாகும் துன்பங்கள் எவ்வளவு பெரிதாயினும் சர்வேசுரனை நம்பி பொறுமையைக் கைவிடாதிருப்போமாக.
ஜனவரி மாதம் 17-ம் தேதி
அர்ச்.பெரிய அந்தோணியார் - மடாதிபதி (கி.பி.356).
இவர் எஜிப்தில் தேசத்தில் செல்வந்தரான தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து புண்ணியவாளராய் வாழ்ந்து வந்தார். இவருடைய பெற்றோர் இறந்த பின் “நீ உத்தமனாக வேண்டுமானால் உனக்குள்ளதை விற்று கேட்பவருக்கு கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்” என்னும் சுவிசேஷ வாக்கியத்தைக் கேட்டு, தனக்கிருந்த மிகுந்த செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டு, வனாந்தரத்துக்குச் சென்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்தார். துர்மனப் பசாசோவெனில் இவருடைய அரிதான புண்ணியங்களைக் கண்டு காய்மகாரப்பட்டு பலவிதத்திலும் அவரைத் துன்பப்படுத்தியது. பயங்கரமும் அவலட்சணமுமுள்ள ரூபங்கள் எடுத்து அவரைப் பயமுறுத்தும். பெண்போல் வடிவமெடுத்து அவரைப் பாவத்தில் விழத்தாட்ட முயலும். அந்தோணியார் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும், விசேஷமாக சிலுவை அடையாளத்தாலும் துஷ்டப் பேயைத் துரத்துவார். இந்த சோதனைகளுக்கு அவர் உட்படாததைக் கண்ட பசாசு அவரை ஒரு நாள் கடுமையாக அடித்துவிட்டு ஓடிப்போனது. அப்போது நமது கர்த்தர் அவருக்குத் தரிசனையாகி, அவருக்கு சந்தோஷ ஆறுதல் வருவித்தார். அந்தோணியார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு விசை கொஞ்சம் அப்பமும் தண்ணீரும் புசிப்பார். ஆட்டுத் தோலை ஆடையாகத் தரிப்பார். வெகு நேரம் ஜெபம் செய்வார். பலமுறை அஸ்தமன காலம் தொடங்கி உதயம் வரைக்கும் முழந்தாளிலிருந்து ஜெபிப்பார். இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்ட அநேக மக்கள் அவரது ஆசீர்வாதத்தைப் பெறும்படி அவரிடம் போவார்கள். அர்ச். அந்தோணியார் சகல புண்ணியங் களையும் ஒழுங்காய் அநுசரித்து 105-ம் வயதில் உயிர் துறந்து மோட்ச சம்பாவனையை அடைந்தார்.
யோசனை
பசாசால் நமக்கு உண்டாகும் சோதனைகளை ஜெபத்தாலும் ஒருத்த லாலும் ஜெயிப்போமாக.
ஜனவரி மாதம் 18-ம் தேதி
உரோமையில் அர்ச்.இராயப்பருடைய பத்திராசனத் திருநாள்.
நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் அர்ச்.இராயப்பரை திருச்சபைக்கு காணப்படும் தலைவராக ஸ்தாபித்தார். ஆகையால் அப்போஸ்தலர்களும், விசுவாசிகளும அர்ச். இராயப்பரை சேசுநாதருக்குப் பதிலாகப் பாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்து வந்தார்கள். இவர் தமது சிம்மாசனத்தை அந்தியோக்- கியா நகரில் ஸ்தாபித்து, அங்கிருந்து திருச்சபையை நடத்திக்கொண்டு வந்தார். ஆனால் அக்காலத்தில் உலகத்தின் முக்கிய பாகத்தை அரசாண்ட உரோமைச் சக்கரவர்த்திகள் உரோமையைத் தங்களுக்குத் தலைநகரமாக ஸ்தாபித்ததி னாலும், உலகத்தின் நான்கு திசைகளிலுமிருந்து சகல ஜாதி ஜனங்கள் அவ்விடத்திற்கு அடிக்கடி வந்து போயிருந்ததினாலும், அவ்விடத்தில் தமது பத்திராசனத்தையும் ஸ்தாபித்தால் திருச்சபைக்கு அதித நன்மையுண்டாகு மென்று அர்ச்.இராயப்பர் கருதி, உரோமையில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தார். இவர் அவ்விடத்தில் அநேகரை மனந்திருப்பி, அர்ச். சின்னப்பருடன் அவ்விடத்தில் வேதசாட்சியாக மரணமடைந்தார். அது முதற்கொண்டு சகல பாப்புமாரும் அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நடத்தி வருகிறார்கள்.
யோசனை
திருச்சபைப் போதகர்களாகிய மேற்றிராணிமார், குருக்கள் இவர்களை நாம் சங்கித்து அவர்களுக்குக் கீழ்படியவேண்டும்.
ஜனவரி மாதம் 19-ம் தேதி
அர்ச்.கனூத்துஸ் - இராஜா, வேதசாட்சி; (கி.பி.1086).
இவர் டென்மார்க் தேசத்தின் அரசனாகி, நற்குணசாலியும் தேவபக்தி உள்ளவருமாயிருந்தார். இவருடைய சகோதரர் சிம்மாசனம் ஏறி அரசு புரிந்த இரண்டாம் வருஷம் மரித்தபடியால் கனூத்துஸ் என்பவர் இராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டார். இவர் காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தார்மேல் படையெடுத்து அவர்களை ஜெயித்து, சத்திய வேதக் குருக்களை அவ்விடம் அனுப்பி அவர்களை கிறீஸ்தவர்களாக்கினார். தன் தேசத்திலுள்ள அநேக அலங்கோலங்களைத் திருத்தி பிரஜைகளுக்கு அவசியமான சட்டதிட்டங்களை ஏற்படுத்தி, எங்கும் சமாதானமும் திருப்தியுமுண்டாகும்படி செய்தார். மேலும் அநேக தேவாலயங்களைக் கட்டிவைத்து, குருக்களுடைய தேவைகளுக்கு வேண்டிய உதவிபுரியும்படி பிரஜைகளுக்கு சட்டம் ஏற்படுத்தினார். கடைசியாய் சகலமும் சர்வேசுரனால் உண்டாகிறதென்று தெளிவாய் அறிந்து தமது இராஜ முடியை பாடுபட்ட சுரூபத்தின் பாதத்தில் காணிக்கையாக சமர்ப்பித்தார். இந்த நல்ல இராஜா வேத அபிவிருத்திக்காகச் செய்த சட்டத்தால் சில துஷ்டர் இவர் மீது விரோதம் கொண்டு, ஒரு நாள் அவர் கோவிலிலிருக்கும்போது அவரை அம்பால் எய்து கொன்றார்கள். இவருடைய மரணத்துக்குப்பின், அவரை சர்வேசுரன் அநேக புதுமைகளால் மகிமைப்படுத்தி, அவரைக் கொலை செய்தவர்களைப் பலவாறான துன்பங்களால் தண்டித்தார்.
யோசனை
தேவ காரியங்களுக்கு வேண்டிய உதவி செய்யப் பின்வாங்காது இருப்போமாக.
ஜனவரி மாதம் 20-ம் தேதி
அர்ச்.செபஸ்தியார் - வேதசாட்சி (கி.பி.288).
செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார். இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச் சேவகரானார். அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான். ஓருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி துர் ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தம்முடைய நற்புத்தியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தவே, அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற அஞ்ஞானிகள் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக வியாதிக்காரரைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, சக்கரவர்த்தியின் கட்டளைப்படி அம்பால் எய்துக் கொல்;லப்பட்டார். கிறீஸ்தவர்கள் இவர் சரீரத்தை எடுத்து அடக்கஞ் செய்ய முயற்சிக்கும்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால்;, இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் புத்தி சொன்னதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து அவரைத் தடிகளால்; அடித்துக் கொல்லக் கற்பித்தான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.
யோசனை
நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்லக்கடவோம்.
ஜனவரி மாதம் 21-ம் தேதி
அர்ச்.ஆக்னேஸம்மாள் - கன்னிகை, வேதசாட்சி (கி.பி.304).
ஆக்னேஸம்மாள் உரோமையில் பிறந்து சிறுவயதிலேயே தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். இவளுடைய உயர்குலப் பிறப்பையும், அழகையும், மிகுந்த செல்வத்தையும் பார்த்து பிரபுக்களான அநேக வாலிபர் அவளை மணமுடித்துக்கொள்ள விரும்பியபோது “என் கன்னிமையை என் தேவ பத்தாவுக்கு ஒப்புக்கொடுத்தேன்” என்று அப்பெண் கூறியதை அவர்கள் கேட்டு சினங்கொண்டு அவள் கிறீஸ்தவளென்று நியாயாதிபதிக்கு அறிவித்தார்கள். நியாயாதிபதி ஆக்னேஸிடம் நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் கிறீஸ்தவ வேதத்தை அவள் மறுதலிக்கும்படி கட்டாயப்படுத்தினான். அந்தப் பெண்மணி அதற்கு சம்மதியாதிருப்பதை அவன் கண்டு, அவள் கண்ணுக்கு முன் நெருப்பை மூட்டி, ஆணி, குரடு முதலிய ஆயுதங்களைப் பழுக்கக் காய்ச்சும்படி கட்டளையிட்டான். வேதசாட்சியோ அவைகளைக் கண்டு சற்றும் கலங்காதிருப்பதை அவன் கண்டு அவளை அஞ்ஞான கோவிலுக்கு இழுத்துக்கொண்டு போய் பொய்த் தேவர்களுக்குச் சாம்பிராணி புகைக்கும்படி கட்டளையிட்டான். அவளோ தன்மேல் சிலுவை வரைந்துக் கொண்டாளேயன்றி, சாம்பிராணியை தொடவில்லை. இதனால் அதிகாரி கோபவெறி கொண்டு, அவளை ஒரு விலைமாதர் வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய் அங்கே அவள் கற்பையழிக்கும்படி உத்தரவிட்டான். அப்போது அநேக வாலிபர் அவளைப் பின்தொடர்ந்தும் ஒருவித பயத்தால் அவர்கள் பின்வாங்கினார்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் அவளை அணுகின மாத்திரத்தில் மின்னலைப் போன்ற ஒருவித பிரகாசமான சக்தியால் குருடனாகி, கீழே விழுந்தான். அவனுடைய தோழரின் மன்றாட்டின்பேரில் ஆக்னேஸ் அவனுக்குப் பார்வைத் தந்தாள். இதையெல்லாம் கண்ட அதிகாரி வெட்கமும் சினமுங் கொண்டு, அவளைச் சிரச்சேதம் பண்ணும்படி கட்டளையிட, ஆக்னேஸ் தலை வெட்டுண்டு, கன்னிமை முடியும் வேதசாட்சி முடியும் பெற்று தன் தேவ பத்தாவிடஞ் சென்றாள்.
யோசனை
தங்கள் கன்னிமையைத் தங்கள் தேவ பத்தாவுக்கு ஒப்புக் கொடுத்தவர்கள் அதை சாகும் வரையில் பழுதின்றிக் காப்பாற்றுவார்களாக.
ஜனவரி மாதம் 22-ம் தேதி
அர்ச்.வின்ஸென்ட் - வேதசாட்சி (கி.பி.304).
இவர் ஸ்பெயின் தேசத்தில் பிறந்து கல்வியில் தேர்ச்சியடைந்தபின் 6-ம் பட்டம் பெற்று, மேற்றிராணியாரின் உத்தரவின் பேரில் பிரசங்கஞ் செய்து வந்தார். வேதக் கலாபனையில் இவரும், இவருடைய மேற்றிராணியாரும் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். நடுவனுடைய உத்தரவின்படி, இருவரும் குரூரமாய் உபாதிக்கப்பட்டும் வேதத்தை மறுதலியாததினால், மேற்றிராணியார் நாடுகடத்தப்பட்டும், வின்ஸென்ட் சிறையிலும்; அடைக்கப்பட்டார். வின்ஸென்டை கொடூரமாய் உபாதித்தபின் கொலைஞர் அவரைக் கீழேக கிடத்தி அவர் கை, கால்களைக்; கட்டியிருந்த கயிறுகளில் கம்பிகளை மாட்டியிழுத்தபோது, அவர் கைகால் மூட்டுகள் பிசகி, வெகுவாக வேதனைப்பட்டார். பிறகு அவர்கள் அவரை கொடூரமாய் அடித்ததினால் சரீரம் முழுவதும் காயமாகி இரத்தம் வெள்ளமாகத் தரையில் ஓடியது. மேலும் அவரை ஒரு இரும்பு கட்டிலில் கிடத்தி அடியில் நெருப்பு மூட்டியபோது, அவர் சற்றேனும் அஞ்சாமல் வேதத்தில் தைரியமாயிருப்பதை அதிகாரி கண்டு, அவரை அதிகக் கடுமையாய் உபாதிக்கும் கருத்துடன் அவருடைய காயங்கள் ஆறும் வரையில் அவரைச் சிறையில் அடைத்தான். அங்கு காணப்பட்ட அதிசயப் பிரகாசத்தைக் கண்ட காவல் சேவகன் உடனே மனந்திரும்பினான். கிறீஸ்தவர்கள் வேதசாட்சியை சந்தித்து அவருடைய இரத்தத்தை வஸ்திரங்களில் நனைத்து பக்தியோடு கொண்டுபோனார்கள். அர்ச்.வின்ஸென்ட் சிறையில் உயிர் விட்டு மோட்சம் போய் சேர்ந்தார்.
யோசனை
நமக்கு வரும் துன்ப துயரத்தால் மனங் கலங்காமல் ஜெபத்தால் தேவ உதவியைத் தேடுவோமானால், அவை நமக்கு நித்திய சம்பாவனையைப் பெற வைக்கும்.
ஜனவரி மாதம் 23-ம் தேதி
அர்ச்.ரேயிமுந்தப்பர் - துதியர் (கி.பி.1275).
இவர் ஸ்பெயின் தேசத்தில் உயர்ந்த கோத்திரத்தில் பிறந்து மேலான சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்று, தம்முடைய 20-ம் வயதில் கல்லூரியில் பல கலைகளைக் கற்றுப் பெயர் பெற்றார். இவர் குருப்பட்டம் பெற்று, தமது உத்தம அலுவலை அதிக ஊக்கத்துடன் செய்து வந்ததினால் சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். இவருடைய அரிதான ஞானத்தையும் பக்தியையும் அறிந்த அர்ச். பாப்பானவர் இவரை உரோமைக்கு அழைப்பித்து, இவருக்கு உயர்ந்த வேலைகளைக் கொடுத்தார். பாப்பானவரால் தமக்கு அளிக்கப்படவிருந்த அதிமேற்றிராணியார் பட்டத்தைத் தடுக்க அவர் பட்ட பிரயாசையின் பலனாக வியாதியாய் விழுந்தார். இதைப் பாப்பானவர் அறிந்து, தமது விருப்பத்தை மாற்றி, ரேயிமுந்தப்பர் தம்முடைய சுய தேசத்துக்குப் போகலாமென்று உத்தரவளித்தார். சுய தேசத்தில் அவர் பூரண சுகமடைந்து, வேதத்திற்காக வெகு ஆவல் உற்சாகத்துடன் பிரயாசைப்பட்டதினால் கணக்கற்றப் பாவிகள் மனந்திரும்பினார்கள். மேலும் 20,000 சரசேனருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இவர் அர்ச். டொமினிக் சபையில் உட்பட்டு, உத்தம சந்நியாசியாய் வாழ்ந்ததால் அநேக அரசரும் பிரபுக்களும் இவரைத் தம் ஆத்தும குருவாக தெரிந்துகொண்டார்கள். அத்தேசத்து அரசன் அவரை மஜோர்க்கா என்னும் தீவுக்கு அனுப்பினபோது, அவ்விடத்தில் அவரால் அநேக ஞான நன்மைகள் உண்டாயின. ஆனால் முன் சொன்ன அரசன் தன் பாவ நடத்தையை விடாததினால் அவர் அவ்விடத்தை விட்டுப் புறப்படத் தீர்மானித்தார். அதை அரசன் அறிந்து, எவரும் அர்ச்சியசிஷ்டவரை கப்பலில் ஏற்றாதபடிக்கு உத்தரவு பிறப்பித்தான். ரேயிமுந்தப்பர் தமது மேற்போர்வை யைக் கடலில் விரித்து, அதில் ஏறி 150 மைல் தூரம் கடலில் பிரயாணம் செய்து, தமது மடம் போய்ச் சேர்ந்தார். அதையறிந்த அரசன் அதிசயித்து தன் துர் நடத்தையை முற்றிலும் ஒழித்துவிட்டு சாகும் வரையில் புண்ணியவாளனாய் நடந்துவந்தான். அர்ச்சியசிஷ்டவர் சகல புண்ணியங்களிலும் உத்தமமாய்ப் பிரகாசித்து, தமது 100-ம் வயதில் மரணமாகி மோட்சமடைந்தார்.
யோசனை
யாரொருவர் தங்களைத் தாழ்த்தி, தங்களுக்கும் உலகத்திற்கும் மரித்தவர்களாகிறார்களோ அவர்களே அர்ச்சியசிஷ்டவர்கள் ஆவார்கள்.
ஜனவரி மாதம் 24-ம் தேதி
அர்ச்.திமோத்தி - மேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி.97).
திமோத்தியின் தந்தை அஞ்ஞானியும், தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர் களுமாயிருந்தார்கள். அர்ச். சின்னப்பர் காடு காடாய்ச் சென்று பிரசங்கித்தபோது திமோத்தியும் அவருடைய தாயும், பாட்டியும் அவ்விடத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள். திமோத்தியின் பக்தி, புத்தியை அறிந்த அப்போஸ்தலர் அவருக்கு குருப்பட்டம் கொடுத்து தமது பிரயாணங்களில் அவரைத் தமது துணைவராகத் தெரிந்துகொண்டார். அர்ச்.சின்னப்பர் அவரை துன்பப்படும் கிறீஸ்தவர்களிடம் அனுப்புவார். சில சமயங்களில் வேதத்தில் தத்தளிக்கும் விசுவாசிகளிடம் அவரை அனுப்புவார். தமது குருவும் ஆசிரியருமானவருடைய புத்தி ஆலோசனைப்படி திமோத்தி நடந்துகொண்டபடியால் எபேசு நகருக்கு மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். அர்ச். சின்னப்பர் வேதத்தினிமித்தம் சிறையிலிருந்த காலத்தில் தமது சீஷனாகிய திமோத்திக்கு வேத விஷயமாக இரு நிருபங்களை எழுதி அனுப்பினார். இவர் அநேக புண்ணியங்களையும் தவச்; செயல்களையுஞ் செய்து, அஞ்ஞானிகளால் வேதத்திற்காக தடிகளால் அடிக் கப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
அர்ச். திமோத்தியைப் போல நாமும் குருக்கள் முதலிய பெரியோர்க ளுடைய புத்திமதிகளைக் கேட்டு நடப்போமாக.
ஜனவரி மாதம் 25-ம் தேதி
அர்ச்.சின்னப்பர் மனந்திரும்பின திருநாள்.
அர்ச். சின்னப்பர் யூத தாய் தகப்பனிடத்தினின்று பிறந்தார். இளமையில்; கல்வி பயிற்சி பெறும்படி இவருடைய பெற்றோர் இவரை ஜெருசலேம் நகருக்கு அனுப்பிவைத்தார்கள். அவ்விடத்தில் அவர் உலக படிப்புடன் வேதாகமங்களையும் வாசித்து வந்தார். இவர் பரிசேய வகுப்பைச் சேர்ந்து, மோயீசனின் ஒழுங்கு ஆசாரங்களை வெகு கவனமாய் அநுசரித்து வந்தார். கிறீஸ்தவ வேதத்தினிமித்தம் யூதர் அர்ச். முடியப்பரை கல்லால் எறிந்து கொன்றபோது, சின்னப்பர் அவர்களுடைய வஸ்திரங்களைப் பத்திரமாய் பார்த்துக்கொண்டு இருந்தார். மேலும் இவர் விசுவாசிகளைத் தேடிப் பிடித்து, அவர்களை யூத சங்கத்தாரிடம் இழுத்துக்கொண்டுபோய் விடுவார். ஆகையால் கிறீஸ்தவர்கள் அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில்; அஞ்சி நடுங்குவார்கள். தமாஸ்கு நகருக்குச் சென்று, அங்குள்ள சகல கிறீஸ்தவர்களையும் பிடித்துக் கட்டின கட்டுடன் ஜெருசலேமுக்கு கொண்டுபோகும்படி யூத சங்கத்தின் உத்தரவு பெற்று, சின்னப்பர் அவ்விடத்திற்கு புறப்பட்டார். இவர் மத்தியான வேளையில் தமாஸ்கு நகரைச் சமீபித்தபோது சு10ரியப் பிரகாசத்திலும் அதிக காந்தியான பிரகாசம் இவர்மேல் படவே கீழே விழுந்தார். “சவுலே, சவுலே! என்னை ஏன் உபாதிக்கிறாய்?”என்னும் சத்தத்தை இவர் கேட்டு, “நீர் யார் ஆண்டவரே?” என்று வினவியபோது, “நீ உபாதிக்கும் சேசு நானே. என்னை ஏன் உபாதிக் கிறாய்?”என்றார். அதற்கு சின்னப்பர், “ஆண்டவரே! உமது சித்தத்தை அறிவித்தால் அதன்படி செய்கிறேன்” என்றார். இவருக்கு கண் பார்வையற்று போக தேவ உத்தரவின்படி தமாஸ்குக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டு, அங்கு மூன்று தினங்களாக உண்ணாமலும் குடியாமலும் தன் பாவங்களுக்கு அழுது துக்கப்பட்டுகொண்டிருந்தார். அனனியாஸ் என்பவர் தேவ கட்டளைப்படி சின்னப்பர் சிரசின்மேல் தமது கரங்களை நீட்டவே, அவர் கண்பார்வை அடைந்தார். அது முதற்கொண்டு, சின்னப்பர் கிறீஸ்து வேதத்திற்காக சகல வித கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, சத்திய வேதத்தை தேசமெங்கும் போய் போதித்து அதற்கு சாட்சியாகத் தமது இரத்தத்தைச் சிந்தி மரணமானார்.
யோசனை
தேவ ஏவுதலுக்கு நமது இருதய வாசலைத் திறப்போமாக.
Jan. 1
விருத்தசேதனத் திருநாள்
திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு நிறைவேற்றப்படுகிறது.
விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களி னின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு. மோயீசன் பத்துக் கற்பனை யைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுரனால் ஏற்படுத்தப்பட்டது. இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள். இச்சடங்கை நிறைவேற்றும்போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும். நமது திவ்விய கர்த்தர் இந்தச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டு மென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார். நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளை யையும் பக்தியோடு அநுசரிப்போமாக. மேலும் நமது இருதயத்தில் எழும் ஆசாபாச முதலிய ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தஞ் சிந்தப் பழகவேண்டும். கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.
யோசனை
இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது ஜீவியத்தில் வாழ்வ தற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.
ஜனவரி மாதம் 2-ம் தேதி
அர்ச்.மக்காரியுஸ் - மடாதிபதி (கி.பி.394).
அலெக்ஸாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்துவந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்யத் தீர்மானித்து, நாட்டைவிட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் அரிதான ஜெப தபங்களை செய்துவந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம மாதிரியைப் பின்பற்றி, புண்ணியவான்களாய் வாழ்ந்தார்கள்.
மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார். கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடவை மாத்திரம் உண்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒரு நாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குலையை உண்ணாமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை உண்ணாமல மக்காரியுஸ_க்கு அனுப்பிவிட்டார்கள். தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அநுசரிப்பதையறிந்து சந்தோஷமடைந்தார். வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடை களை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு மரித்த படியால், அந்த பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச்.மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகள் உண்டாக அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர், வயோதிகரான அர்ச்.மக்காரியுஸை பல விதமாயத் துன்பப்படுத்தினார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து 394-ம் வருடம் மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப- பிரியத்துக்கு இடம் கொடுக்காமல் மட்டசனம் என்னும் புண்ணியத்தை அனுசரிப்போமாக.
ருஸ்பே நகர் ஆயர் பல்கெண்டியஸ் Fulgentius von Ruspe
பிறப்பு
467,
டேலேப்டே Telepte, நார்த் ஆப்ரிக்கா
இறப்பு
1 ஜனவரி,
532 ருஸ்பே Ruspe, நார்த் ஆப்ரிக்கா
இவர் ஓர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த முறையில் தனது கல்வியை முடித்தார். அதன்பிறகு கிரேக்கம் மற்றும் இத்தாலி மொழியைக் கற்றுக்கொள்ளும் பயிற்சியில் இருக்கும்போது துறவற மடத்தில் சேர்ந்து, விரைவில் குருப்பட்டம் பெற்றார். இவரை ஆயராக தேர்ந்தெடுக்க பலமுறை கூறியபோதும், ஒவ்வொரு முறையும் அதற்கிணங்காமல் மறுத்தார். இறுதியாக 508 ஆம் ஆண்டு வலுக்காட்டாயமாக ருஸ்பே நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர், இருமுறை சர்தீனியன் தீவிற்கு Sardinien Inselநாடு கடத்தப்பட்டார்.
இவர் மீண்டும் 523 ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். பிறகு தொடர்ந்து ருஸ்பே நகரில் தனது ஆயர் பணியை ஆற்றினார். இறைப்பணியில் சிறந்து விளங்கிய இவர் தனது செப நேரத்தில் இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! உம் மந்தையின் மக்களை பராமரிக்க, ஆயர் பல்கெண்டியஸை எம் முன்னோர்களுக்குக் கொடையாகத் தந்தீர். அவரின் அரும்பெரும் செயல்களை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நீர்தாமே தொடர்ந்து ருஸ்பே நகரில் வாழும் மக்களை வழிநடத்திக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஜனவரி மாதம் 2 ம் தேதி
ஆயர் மறைவல்லுநர் நசியான்ஸ் நகர் கிரகோரியர் Gregor von Nazianz
பிறப்பு
330,
நெசினி Nenisi, துருக்கி

இறப்பு
390,
நெசினி நகர்
பாதுகாவல்: கவிதை எழுதுபவர், நல்ல அறுவடை
இவர் தனது 10 ம் வயதில் தன்னுடன் பயின்ற பசிலியுஸ் Basilius என்ற மாணவருடன் நண்பரானார். இவர்கள் இருவரும் சிறந்ததொரு எடுத்துக்காட்டான நெருக்கமான நண்பர்களானார்கள். இவர் 360 ஆம் ஆண்டு திருமுழுக்குப் பெற்று சிறந்த கிறிஸ்தவராய் வாழ்ந்தார். பின்னர் 372 ஆம் ஆண்டு குருத்துவப்பட்டம் பெற்றார். பின்னர் ஆயராகப் பொறுப்பேற்று மறைப்பணியாற்றினார். அவரின் தந்தை 374 ஆம் தந்தையின் சொத்துக்கள் அனைத்தையும் மறைமாவட்டத்திற்குப் பரிசாகக் கொடுத்தார். பின்னர்381 ஆம் ஆண்டு தனது இருப்பிடத்தை கான்ஸ்டாண்டிநோபிளுக்கு மாற்றினார்.
இவர் அங்கு பல கருத்தரங்குகளை ஏற்படுத்தி திருச்சபையை வளர்த்தெடுத்தார். இவர் கல்வி செல்வங்களை திரட்டும் பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். ஆழ்ந்த இறை நம்பிக்கையும் பேச்சுத்திறனும் கொண்டு திருச்சபைக்காக பெரிதும் உழைத்தார். இவர் தனது மறைமாவட்டத்தில் தோன்றிய பிளவுகளின் காரணமாக தம் சொந்த நகராகிய நெசினிக்கு திரும்பி இறைவனில் வேரூன்றி வாழ்ந்து அவ்வூரிலேயே இறந்தார்.
செபம்:
அன்பே உருவான இறைவா! புனித கிரிகோரியாரின் வாழ்வால் நீர் உமது திருச்சபையை வளமுற செய்தீர். அவரை எங்களுக்கு வழிகாட்டியாகவும் தந்தீர். நாங்கள் தாழ்மையுடன் உமது அன்பைப் பெற்று நம்பிக்கையுடனும் அன்புடனும் வாழ எங்களுக்கு அருள்புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஜனவரி மாதம் 3-ம் தேதி
அர்ச்.ஜெனோவியேவ் அம்மாள் - கன்னிகை (கி.பி.422).
அர்ச்.ஜெனோவியேவ் அம்மாள் 422-ம் வருஷம் பிரான்சு தேசத்தில் பிறந்தாள். அவள் ஏழு வயதில் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தாள். தன் 15-ம் வயதில் கன்னியர் உடுப்பு தரித்துக்கொண்டாள். நாளுக்கு நாள் புண்ணியத்தில் வளர்ந்து 50 வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சிறிது ரொட்டியும், பருப்பும் புசிப்பாள். மயிரொட்டியாணம் தரித்து கடுந் தவம் புரிவாள். மகா பக்தியுருக்கத்துடன் இடைவிடாமல் ஜெபத தியானஞ் செய்வாள். பிறர் சிநேக வேலைகளினிமித்தம் பெரிய பட்டணங் களுக்குக் கடும் பிரயாணமாய் போய் அநேக புதுமைகளைச் செய்து, தீர்க்கத்தரிசனங்களைச் சொல்லி, சகலராலும் வெகுவாய் மதிக்கப்பட்டாள். இந்தப் புண்ணியவதியின் மீது காய்மகாரங் கொண்டவர்கள் இவளைப் பலவிதத்திலும் துன்பப்படுத்தினபோதிலும், இந்த அர்ச்சியசிஷ்டவள் சற்றுங் கலங்காமல் தன் நம்பிக்கையை சர்வேசுரன் மீது வைத்து, ஜெபதபத்தால் தன் சத்துருக்களை வென்றாள். அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பாரிஸ் நகரைக் கொள்ளையடிக்க வந்தபோது அவள் உரைத்த தீர்க்கத்தரிசனத்தின் படி அந்தப் பெரும் பொல்லாப்பு நீங்கியது. ஜெனோவியேவ் அம்மாள் தன் 89-ம் வயதில அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.
யோசனை
நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவளைக் கண்டுபாவித்து, துன்ப துரிதத் தாலும் பொல்லாதவர்களுடைய தூற்றுதலாலும் மனஞ் சோர்ந்துபோகாமலும் உலக உதவியை ஆசியாமலும் ஜெபத்தால் தேவ உதவியை மன்றாடு வோமாக.
ஜனவரி மாதம் 4-ம் தேதி
அர்ச்.தீத்துஸ் - மேற்றிராணியார்.
அஞ்ஞானியாயிருந்த இவர் அர்ச்.சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று அவருக்கு சீஷனாகி அவர் வேதம் போதிக்கச் சென்ற ஊர்களுக்கெல்லாம் இவரும் கூடவே சென்றார். பிறகு இவர் விசுவாசிகளை விசாரித்து வரும்படி அர்ச்.சின்னப்பரால் பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டார். வேதத்தில் தத்தளித்து துர்மாதிரிகையாய் வாழ்ந்த கொரிந்தியரை திருத்தும் பொருட்டு தீத்துஸ் அவர்களிடம் அனுப்பப்பட்டபோது, அவர் அவர்களுக்கு எவ்வளவு சிறப்போடும், அன்போடும் புத்திமதி சொல்லி அவர்களை நல்வழிக்கு திருப்பினாரெனில், இந்த நல்ல செய்தியைப்பற்றி கேள்விப்பட்ட அப்போஸ்தலர் சந்தோஷத்தால் பூரித்து ஆறுதல் கொண்டார். தீத்துஸ் அர்ச்.சின்னப்பரின் உத்தரவின்படி ஆங்காங்கு தர்மம் எடுத்து ஜெருசலேமிலுள்ள ஏழைகளுக்கு அனுப்பிவந்தார். சில காலத்துக்குப் பின் அர்ச்.சின்னப்பர் தீத்துஸ_க்கு மேற்றிராணியார் பட்டம் கொடுத்து கிரேத் என்னும் தீவில் வேதம் போதிக்கும்படி அனுப்பினார். மேற்றிராணிமாரின் மேலான கடமைகளைப்பற்றியும், விசுவாசிகளை நடப்பிக்கத் தக்க ஒழுங்கு திட்டங்களைப்பற்றியும் ஒரு நிருபத்தை அர்ச்.சின்னப்பர் எழுதி இவருக்கு அனுப்பினார். தம் குருவும் ஆசிரியருமான அப்போஸ்தலருடைய போதனைக்குத் தீத்துஸ் இணங்கி புண்ணிய வழியில் நடந்து, மிக்க ஊக்கத் துடன் வேதம் போதித்து மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நாம் யாதொரு காரியத்தில் தவறியிருப்பதை அறிந்த நமது ஞானப் போதகர்கள் நமக்கு புத்தி சொல்லும்போது, நமது தவறுகளை விட்டொழித்து அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்.
ஜனவரி மாதம் 5-ம் தேதி
தூணில் நின்று தவம் புரிந்த அர்ச்.சிமெயோன் - துதியர்.
இவர் சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துவந்தார். தமது 13-ம் வயதில், இவர் நமது கர்த்தர் மலையின் மேல் எட்டு வாக்கியங்களை வாசிக்கக் கேட்டு, அவைகளின்படி நடக்க விருப்பம்கொண்டு, இடைவிடாமல் ஜெபத் தியானஞ் செய்து கண்ணீர் சிந்தி அருந் தவம் புரியத் தொடங்கினார். இதில் திருப்திகொள்ளாமல் ஒரு மலையின் மேல் ஒதுங்கி கடின தவஞ் செய்து வந்தபடியால் இவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஏராளமான ஜனங்கள் அவ்விடம் சென்று இவருடையப் புண்ணியங்களையும் புதுமைகளையுங் கண்டு அதிசயித்தார்கள். இவர் கடின தவம் புரிய தீர்மானித்து 60 அடி உயரமுள்ள தூண் ஒன்றின்மேல் ஏறித் தவம் புரிந்துவந்தார். ஆட்டுத் தோலை ஆடையாகத் தரித்துக் கடும் ஓருசந்தி பிடிப்பார். ஓரு நாளைக்கு அநேகத் தடவை முழந்தாற்படியிட்டு சர்வேசுரனை ஆராதிப்பார். ஒவ்வொரு நாளும் இருமுறை தூணைச் சுற்றிக் கூடியிருக்கும் திரளான ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்வார். இவருடையப் புண்ணியத்தை பரிசோதிக்குங் கருத்துடன் அருகாமையிலிருந்த மேற்றிராணிமார் சிலர் இவரைத் தூணிலிருந்து இறங்கி வரும்படி கட்டளையிட்டார்கள். உடனே சிமெயோன் இறங்க முயலுவதை அவர்கள் கண்டு, அவர் தேவசித்தப் பிரகாரம் நடக்கிறாரென்று அறிந்து கொண்டு அவரைத் தூணிலேயே இருக்கும்படி சொன்னார்கள். இவர் செய்து வந்த கடின தபசையும் பல புதுமைகளையுங் கண்ட அரசர்கள் அவரைச் சந்தித்து, அவர் ஆலோசனையைக் கேட்பார்கள். அவர் ஒருநாள் தூணில் அசைவற்றிருந்தபடியால் சிலர் அதன்மேல் ஏறிப் பார்த்தபோது அவர் மரித்து விட்டார் என்று கண்டுகொண்டார்கள். அர்ச்.சிமெயோன் தமது 69-ம் வயதில் இப்படியாக மரித்து வெகு ஆடம்பரமாக அடக்கஞ் செய்யப்பட்டார்.
யோசனை
நாம் கடினத் தவஞ் செய்யாவிடினும் ஐம்புலன்களையும், உணர்ச்சி களையும் அடக்கி ஒறுக்கப் பழகுவோமாக.
ஜனவரி மாதம் 6-ம் தேதி
கர்த்தர் மூன்று இராஜாக்களுக்குத் தம்மைக் காட்டியத் திருநாள்.
நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் பிறந்தபோது நடந்த பல அற்புத அதிசயங்களை தீர்க்கதரிசிகள் அவர் பிறப்பதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். அவைகளுள் ஒன்று புது நட்சத்திரம். கர்த்தர் பிறந்தபோது அற்புதமாய்க் காணப்பட்ட புது நட்சத்திரத்தை சகல மனிதருங் கண்டபோதிலும், சோதிட சாஸ்திரிகளான மூன்று இராஜாக்கள் மாத்திரம், பிறந்த உலக இரட்சகரை உடனே சந்திக்கத் தீர்மானித்தார்கள். இவர்கள் இந்த நெடும் பிரயாணத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல், நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து பெத்லகேம் என்னும் ஊருக்குச் சென்று, சிறு குடிசையில் சேசு பாலனைக் கண்டு மகிழ்ந்தார்கள். அங்கு காணப்பட்ட வறுமையையும், தரித்திரத்தையும் பார்த்து சற்றும் மனம் சோர்ந்து சந்தேகியாமல் அந்த பாலனே பரலோக பூலோக இராஜாவென்றும், மெய்யான தேவனென்றும் நம்பி விசுவசித்து, பொன், தூபம், மீறை முதலியவைகளை அவர் பாதத்தில் சமர்ப்பித்து அவரை ஆராதித்தார்கள். கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் அப்போஸ்தலரான அர்ச். தோமையாரால் இவர்கள் ஞானஸ்நானமும், பிறகு மேற்றிராணியார் பட்டமும் பெற்று, வேதத்தைப் போதித்து, வேதத்துக்காக இரத்தம் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.
யோசனை
நமக்கு சர்வேசுரன் பலவிதமாய் அருளும் ஞானப்பிரகாசத்தில் பிரமாணிக்கமாய் நடப்போமாக.
ஜனவரி மாதம் 7-ம் தேதி
அர்ச்.லூசியான் - குரு,வேதசாட்சி (கி.பி.312).
இவர் சீரியா தேசத்தில் பிறந்தார். இவர் வாலிபனாயிருந்தபோதே இவருடைய தாய் தந்தையர் இறந்து போனபடியால், தனக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, புண்ணிய வாளனான மக்காரியுஸ் என்பவருக்கு சீஷனாகி, வேதாகமங்களை வாசிப்பதிலும் புண்ணியக் கிரிகைகளைச் செய்வதிலும் காலத்தைச் செலவிட்டார். இவர் சாஸ்திரங்களைப் படித்தபின், குருப்பட்டம் பெற்று வேதம் போதித்துவந்தார். அக்காலத்தில் எழும்பிய வேத கலகத்தில் அர்ச்.லூசியான் பிடிபட்டு, சிறை- படுத்தப்பட்டு, வெகு கொடூரமாய் உபாதிக்கப்பட்டார். அநேக நாட்களாய் அவருக்கு உணவு கொடுக்கப்படாததால், அவர் இளைத்து, களைத்துக் குற்றுயிராயிருக்குந் தருணத்தில், பேய்க்குப் படைக்கப்பட்ட பண்டங்களை அவருக்குக் கொடுக்க, அவர் அவைகளை உண்ணாமல் தள்ளிவைத்தார். மேலும் இவர் சங்கிலியால் கட்டப்பட்டு சிறையிலிருந்தபடியால், கிறீஸ்தவர்கள் கொண்டு வந்த அப்பத்தையும் இரசத்தையும் தமது நெஞ்சின்மேல் வைத்து தேவ வசீகரஞ் செய்து கிறீஸ்தவர்களுக்கு கொடுத்துவந்தார். மறுபடியும் அவர் நடுவனுக்குமுன் நிறுத்தப்பட்டு, வேதத்தை மறுதலிக்கும்படி பயமுறுத்தி உபாதிக்கப்பட்டபோது இவர் எதற்கும் அஞ்சாமல் தாம் கிறீஸ்தவனென்று தைரியத்துடன் சாட்சி கூறினார். இவரை சித்திரவதை செய்துக் கொலை செய்யும்படி நடுவன் தீர்ப்பிட்டான் அதன்படியே சேவகர் இவரை வதைத்துக் கொல்லும்போது, தான் கிறீஸ்தவனென்று சொல்லிக்கொண்டே உயிர்விட்டு வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
நமது சத்திய வேதத்தை சாக்குபோக்குச் சொல்லி ஒருபோதும் மறைக்காதிருப்போமாக.
ஜனவரி மாதம் 8-ம் தேதி
அர்ச்.அப்போலினார் - மேற்றிராணியார் (கி.பி.175).
ஆதியில் வேதக் கலாபனைக் கொடுமையாய் நடந்தேறி வந்தது. அப்போலினார் காலத்தில் அரசரும் பிரஜைகளும் சத்திய கிறீஸ்தவர்களை வேதத்தினிமித்தம் கொடூரமாய் வதைத்துக் கொன்றார்கள். அக்காலத்தில் உரோமை இராயனான மார்க்குஸ் அவ்ரேலியஸ் ஜெர்மன் தேசத்தின்மேல் படையெடுத்துப் போனான். அவனுடைய படைகள் தங்கியிருந்த இடம் மலைகளால் சு10ழப்பட்டு பின்னடைவதற்கு வசதியற்ற இடமாயிருந்த படியால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள சாத்தியப்படாமலிருந்ததுடன், தண்ணீர் பற்றாக் குறையினாலும் இராணுவம் வருந்தித் தவித்தது. அந்நேரத்தில் எதிரிகள் போரைத் தொடங்க, கிறீஸ்தவர்களாயிருந்த இவனுடைய சேனையின் ஓர் பகுதியார் முழந்தாளிலிருந்து சர்வேசுரனைப் பார்த்துப் பிரார்த்திக்கவே, இடி முழக்கத்துடன் ஓரு பெரும் மழை பெய்தது. மழைத் தண்ணீரால் உரோமையர் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள். இந்த மழையால் எதிரிகளுக்கு மிகுந்த சேதமுண்டாக, அவர்கள் புறங்காட்டி ஓட்டம் பிடித்தார்கள். இந்த அற்புதத்தைக் கண்ட உரோமை இராயன் அதிசயித்து அந்தக் கிறீஸ்தவ படைக்கு இடி முழக்கப் படை என்று பெயர் கொடுத்தான். அர்ச்.அப்போலினார் இராயனுக்கு ஓரு விண்ணப்பம் எழுதி, அதில் கிறீஸ்தவ வேதத்தின் படிப்பினையை விவரித்துக் காட்டினதுடன், கிறீஸ்தவ சேவகர்களுடைய வேண்டுதலால் அவனுடைய கண்ணுக்குமுன் நடந்த அற்புதத்தையும் எடுத்துக்காட்டி, வேத கலாபனையை நிறுத்தும்படி அவனைக் கேட்டுக் கொண்டார். இதனால் இராயனுடைய மனம் இளகி, வேதத்தினிமித்தம் எந்த கிறீஸ்தவர்களையும் கொலை செய்யக்கூடாதென்று ஓரு சட்டத்தை வெளியிட்டான். அர்ச்.அப்போலினார் பல நூல்களைப் பிரசுரஞ் செய்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.
யோசனை
சத்திய வேதத்தைப்பற்றிப் பேச நமக்கு சமயம் வாய்க்கும்போது, விமரிசையுடன் பேசுவோமாக.
ஜனவரி மாதம் 9-ம் தேதி
அர்ச்.ஜூலியானும், பஸிலிஸம்மாளும் - வேதசாட்சிகள் (கி.பி.313).
ஜுலியான் என்பவர் எஜிப்து தேசத்தில் தனவான்களான தாய் தந்தைய ரிடமிருந்து பிறந்தார். தன் பெற்றோருடைய நன் மாதிரிகையைப் பின்பற்றி, இளம் வயதில் உத்தம கிறீஸ்தவனாய் வாழ்ந்து தன் ஜீவிய காலம் முழுவதும் விரத்தராயிருக்க விரும்பினார். ஆனால் தாய் தகப்பனுடைய கட்டாயத்தினால் இவர் பஸிலிஸா என்பவளை மணமுடித்துக்கொண்டு தன் கருத்தை அவளுக்கு வெளியிட்டபோது, அவளும் அதற்குச் சம்மதித்து, இருவரும் கூடப்பிறந்தவர் களைப்போல் விரத்தராய் வாழ்ந்துவந்தார்கள். இவர்களுடைய நல்ல படிப்பினையால் அநேக கெட்ட கிறீஸ்தவர்கள் நல்லவர்களாகி திரளான அஞ்ஞானிகளும் சத்திய வேதத்தில் சேர்ந்து வேதசாட்சிகளாய் மரித்தார்கள். இவ்விருவரும் தங்கள் மாளிகையை மருத்துவமனையாக மாற்றி அதில் ஏழைகளையும் நோயாளிகளையும் சேர்த்து அன்புடன் ஆதரித்து வந்தார்கள். சில சமயங்களில் 1000 பேர் வரையில் அவ்விடத்தில் உதவி பெற்றுவந்தார்கள். ஜூலியான் ஆண் பிள்ளைகளையும் பஸிலிஸா பெண் பிள்ளைகளையும் கவனித்து வந்தார்கள். பஸிலிஸா 7 வேதக் கலாபனைகளில் உறுதியாய் நின்று புண்ணியவதியாக மரித்தாள். ஜூலியானும் வேதத்திற்காகப் பிடிபட்டு ஸெல்ஸஸ், அந்தோணி, அனஸ்தாஸியா, மார்சியனில்லா முதலியவர்களுடன் வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
நமது தகுதிக்கேற்றபடி ஏழைகளுக்கு உதவி புரிவதுடன், சத்திய வேதத்தில் சேர விரும்பும் அஞ்ஞானிகளுக்கு நற்புத்தி சொல்லி, தேவைப் பட்டால் பொருளுதவியும் செய்யவேண்டும்.
ஜனவரி மாதம் 10-ம் தேதி
அர்ச்.வில்லியம் - மடாதிபதி, மேற்றிராணியார் (கி.பி.1209).
இவர் பிரான்சு தேசத்தில் உத்தம கோத்திரத்தில் பிறந்து புண்ணிய வாளரான ஒரு குருவானவரிடத்தில் கல்விப் பயின்றார். இவர் சிறு வயதிலேயே பெயர் பெருமையையும், சுக செல்வத்தையும் புறக்கணித்துத் தள்ளிவிட்டு, குருப்பட்டம் பெற்றபின் தமக்கு அளிக்கப்பட்ட மேலான அலுவலுக்குச் சம்மதியாமல் சன்னியாச மடத்தில் சேர்ந்து வெகு உருக்கத்துடன் நெடு நேரம் ஜெபம் செய்துவருவார். ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஒறுத்து, கடின தபஞ்செய்து இடைவிடாமல் மரணத்தைப்பற்றி தியானிப்பார். இவருடை புண்ணியங்களைக் கண்ட அரசரும் பிரபுக்களும் அதிசயித்து அவருக்கு மரியாதை செலுத்திவந்தார்கள். மேலும் இரண்டு மடங்களுக்கு சிரேஷ்டராகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அவைகளைத் திறமையுடன் நடத்தி வந்தார். இவர் பூர்ஜெஸ் நகரின் மேற்றிராணியாராகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அர்ச்.பாப்பானவருடைய கட்டாயத்தின்பேரில் அதற்குச் சம்மதித்து, மேற்றிரா ணியார் அபிஷேகம் பெற்றபின் முன்னிலும் அரும்பெரும் புண்ணியங்களைச் செய்துவந்தார். மயிர்ச்சட்டையைத் தரித்துக்கொண்டு, மாமிசத்தை அறவே வெறுத்து, கடுந்தவம் செய்து தமது மேற்றிராசனக் கிறீஸ்தவர்களை வெகு அன்புடனும், தயவுடனும் நடத்தி, தமது புத்தி ஆலோசனையால் கணக்கற்ற பாவிகளை மனந்திருப்பி, அநேக பதிதரை வேதத்தில் சேர்த்துவந்தார். தமக்கு மரணம் கிட்டியிருப்பதை அறிந்து, வெகு பக்தி விசுவாசத்துடன் கடைசி தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று, சாம்பல்மேல் படுத்துக்கொண்டே அர்ச்சியசிஷ்டவராக உயிர் விட்டார்.
யோசனை
நாம் புண்ணிய வழியில் வாழ வேண்டுமானால் அகத்திலும் புறத்திலும் ஒறுத்தலை அனுசரித்து நமது அந்திய காலத்தைப்பற்றி யோசிக்கக்கடவோம்.
ஜனவரி மாதம் 11-ம் தேதி
அர்ச்.எயுஜினுஸ் - பாப்பரசர், வேதசாட்சி (கி.பி.139).
எயுஜினுஸ் என்பவர் அர்ச். இராயப்பர் சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நான்கு வருடங்கள் ஆண்டு வந்தார். அக்காலங்களில் வேத கலகம் நடக்காமலிருந்தாலும் சில பதிதரால் திருச்சபையில் குழப்பம் உண்டாயிற்று. அதெப்படியெனில், செத்ரோ என்பவன் ஆட்டுத்தோலை அணிந்துகொண்ட ஓநாயைப்போல் உரோமையில் பிரவேசித்து, கடவுள் இருவர் என்றும், சேசுநாதர் தேவமாதாவிடத்தினின்று பிறந்த மெய்யான மனிதனாயிராமல் ஓர் நிழலைப்போல் காணப்பட்டவரென்றும் தப்பறையான போதனை களைப் போதித்துவந்தான். இதையறிந்த பாப்பாண்டவர் எயுஜினுஸ் அந்த பதிதனைச் சபித்தார். அந்த கள்ளப் பதிதன், தன் தப்பறைக்காக மனஸ்தாபப் படுவதாக பாசாங்கு காட்டினதின்பேரில் சாபத்தினின்று நீக்கப்பட்டான். மறுபடியும் அவன் மேற்கூரிய பதித போதனைகளைப் போதித்தபடியால், இரண்டாம் முறையும் திருச்சபை சாபத்துக்குள்ளானான். வலந்தீன் என்னும் வேறொருவன், தான் விரும்பிய மேற்றிராணியார் பட்டம் தனக்கு மறுக்கப்பட்ட தினால் கோபமும் அகந்தையும் கொண்டு, உரோமைக்குச் சென்று தப்பறை யான பல பதிதப் படிப்பினைகளைப் போதிக்க முயற்சித்தபோது, மிகவும் சாந்தகுணமுள்ள இந்தப் பாப்பரசர் அவனுக்கு சாபமிட்டுத் தண்டியாமல் அவனுக்கு அன்பு காட்டி புத்தி சொல்லி, அவனை மனந்திருப்ப முயற்சிக்குங் காலத்தில் அவர் மரணமானார். இவர் வேதசாட்சியாகக் கொல்;லப்படாவிடினும் பலமுறை வேதத்தினிமித்தம் உபாதிக்கப்பட்டபடியால் வேதசாட்சி என்றும் அழைக்கப்படுகிறார்.
யோசனை
தொத்து வியாதிக்காரருடன் பழகுகிறவர்களுக்கு நோய் தொத்துவது போல், குருக்கள், மேற்றிராணியார் முதலிய ஞானப் போதகர்களை இகழ்ந்து பேசும் கிறீஸ்தவர்களுடைய கூட்டத்தைவிட்டு நாம் விலகாவிட்டால் நமது ஆத்துமத்திற்கு சேதமுண்டாகும்.
ஜனவரி மாதம் 12-ம் தேதி
அர்ச்.அர்க்காதியுஸ் - வேதசாட்சி (கி.பி.301).
இவர் தியோக்கிளிஸியன் காலத்தில் வேதசாட்சியானாரென்று தெரிய வருகிறது. அக்காலத்தில் வேத கலாபனை வெகு குரூரமாய் நடந்தபடியால் அரசாங்க அதிகாரிகளும் ஊர் ஜனங்களும் தங்களிஷ்டப்படி கிறீஸ்தவர் களை வீடு வீடாய் நுழைந்து பிடித்து தங்களுடன் கொண்டு வந்திருக்கும் சிலைகளுக்குப் படைக்கும்படி கற்பிப்பார்கள். அப்படிச் செய்யாதவர்களை அங்கேயே வதைப்பார்கள். இந்த அநியாயத்தைக் கண்ட அர்க்காதியுஸ் நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று ஜெபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார். ஒரு நாள் அரசாங்க அதிகாரிகள் இவருடைய வீட்டில் நுழைந்த போது, அவரை அங்குக் காணாதபடியால், அவர் பிடிபடும் வரையில் அவருடைய உறவினனான ஒருவனை சிறையிலடைத்தார்கள். இதைப்பற்றி அர்க்காதியுஸ் கேள்விப்படவே, நாட்டு அதிகாரியிடம் சென்று “நான்தான் அர்க்காதியுஸ். சிறையிலடைக்கப்பட்ட இந்த மனிதனை விட்டுவிடும்” என்றார். “நல்லது, தேவர்களுக்கு பலியிட்டால், உன்னையும் விடுதலை செய்வேன்” என்றதற்கு, “சிரஞ்சீவியரான கடவுளைத் தவிர, உங்கள் பொய்த் தேவர்களைக் கும்பிட மாட்டேன” என்றார் அர்க்காதியுஸ். “அப்படியானால் நீ சாகவே சாவாய்” என்றான் அதிகாரி. அதற்கு அவர் “சேசு கிறீஸ்துநாதரே என் உயிரும், மரணமும், நித்திய சம்பாவனையுமாய் இருக்கிறார்” என்றார். அதைக் கேட்ட நடுவன் சினம்கொண்டு, அவருடைய அவயவங்களைத் துண்டு துண்டாய் நறுக்கி சித்திரவதைப்படுத்தக் கட்டளையிட்டான். கொலைஞரும் அவ்வாறே செய்தார்கள். அர்க்காதியுஸ் தமக்குமுன் குவிக்கப்பட்டிருக்கும் அவயவங் களின் குவியலை கண்ணோக்கி, “என் அவயவங்களே நீங்கள் ஒருநாள் நித்திய சம்பாவணையைப் பெறப்போவதால், நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள்” என்று கூறி உயிர் விட்டார்.
யோசனை
நம்மால் யாதொருவருக்குத் தீமை உண்டாகும்போது அதைத் தடுப்பது நமது கடமை.
ஜனவரி மாதம் 13-ம் தேதி
அர்ச்.வெரோணிக்கம்மாள் - கன்னிகை (கி.பி.1497).
வெரோணிக்கம்மாளுக்கு உலக நன்மைகள் இல்லாவிடினும் ஞான நன்மைகள் ஏராளமாயிருந்தன. இவளுடைய பெற்றோரின் தரித்திரத்தால் இவள் எழுதப்படிக்கத் தெரியாதவளாயிருந்தாள். இவள் தோட்டத்தில் வேலை செய்யும்போது மற்றவர்களுடன் சேராமல் தனித்து சர்வேசுரனைப்பற்றித் தியானித்துக்கொண்டு வேலை செய்வாள். வீட்டிலும் வேலை செய்துகொண்டே ஜெபம் செய்வாள். தனக்குப் படிப்பறிவு இல்லாததினால், இந்தப் புண்ணிய மாது மனவருத்தப்பட்டு இரவிலாகிலும் படிக்க முயற்சிக்கையில் தேவதாயார் அவளுக்குத் தரிசனையாகி அவளுக்குப் படிப்பு தேவையில்லை என்றும், ஆனால் (1) பரிசுத்தக் கருத்துள்ளவளாயும் (2) பிறர் சிநேகமுடையவளாயும் (3) நாள்தோறும் சேசுநாதருடைய திருப்பாடுகளைத் தியானிக்கிறவளாயும் ஜீவித்து வந்தால், அதுவே அவளுக்குப் போதுமென்று அறியச்செய்தார்கள். இந்தப் புண்ணியவதி பலமுறை பரவசமாகி நம்முடைய கர்த்தருடைய ஜீவியத்தைப்பற்றிய அநேக தரிசனங்களைக் கண்டாள். சில வருஷங்களுக்குப் பின் இவள் அர்ச்.மார்த்தம்மாள் மடத்தில் தவக் கன்னியாஸ்திரீயாக ஏற்றுக் கொள்ளப்பட்டாள். அந்த மடம் வெகு கஷ்டநிலையிலிருந்தபடியால், வெரோணிக்கா சகோதரி நாள்தோறும் வீடு வீடாய்ச் சென்று தர்மம் கேட்க நேரிட்டது. இந்த வேலையையும் மடத்திலுள்ள மற்ற தாழ்மையான வேலை களையும் அக்கறையுடனும், ஆசையுடனும் செய்வாள். இந்தப் புண்ணிய- வதிக்கு அடிக்கடி கடின வியாதி உண்டான போதிலும், அதனால் அவள் தன் வேலையை விடாமலும், சபையின் ஒழுங்கை மீறாமலும், சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய்ப் பிரகாசித்து அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.
யோசனை
சாதாரணமான காரியங்களைத் திருத்தமாய்ச் செய்வதே உத்தமதன மாகையால், உன் ஞானக் காரியங்களை ஆசையுடனும், அக்கறையுடனும்; செய்வாயாக.
ஜனவரி மாதம் 14-ம் தேதி
அர்ச்.ஹிலாரியார் - மேற்றிராணியார் (கி.பி.368).
இவர் பிரான்சு தேசத்தில் உயர்ந்த கோத்திரத்தில் பிறந்தவர். இவர் புத்தி கூர்மையுள்ளவரானதால் பல தேசங்களுக்குச் சென்று, உயர்ந்த கலைகளைக் கற்று, சிறந்த அறிஞரானார். இவர் அஞ்ஞானியாயிருந்தும், வேதாகமங்களை வாசித்து கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று நிச்சயித்துத் தன் குடும்பத்துடன் அதில் சேர்ந்தார். இவருடைய மேலான பக்தியையும் ஞானத்தையும் கண்டு பூவாசியர் என்னும் நகரத்தின் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். இவர் இந்த உந்நத அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டதால் பிரான்சு தேசத்திற்கு மாத்திரமல்ல, திருச்சபை முழுமைக்கும் ஞானப் பிரயோசனமுண்டாயிற்று. சேசு கிறீஸ்துநாதருடைய தெய்வீகத்தை மறுத்த ஆரிய பதிதரை ஹிலாரி மேற்றிராணியார் தமது வாக்கு சாதுர்யத்தினாலும், தேர்ந்த ஞானத்தாலும் எப்படி எதிர்த்தாரெனில், அந்த துஷ்டர் அவருக்கு முன் நிற்க முதலாய்ப்; பயந்து அஞ்சுவார்கள். இந்தக் கள்ளப் பதிதருடைய கபட தந்திரத்தால் வேத துரோகியான ஜுலியான் அர்ச். ஹிலாரியை நாடுகடத்திவிட்டான். அவ்விடத்தில் தமதிரித்துவத்தைப் பற்றி பல சிறந்த நூல்களை எழுதினார். ஜுலியானுடைய குமாரத்தி இல்லற வாழ்க்கை வாழ விரும்புவதைக் கேள்வியுற்ற இவர் அவளுக்கு கன்னிமையின் சிறப்பைப்பற்றி கடிதம் மூலமாய் அறிவித்ததின் பேரில், அவள் உலகத்தைத் துறந்து கன்னியாஸ்திரீயானாள். அர்ச். ஹிலாரியார் பரதேசத்திலிருந்து விடுதலையானபின் ஊர் ஊராய்த் திரிந்து பதித மதத்தாலுண்டான அலங்கோலங்களைச் சீர்படுத்தி பாக்கியமான மரணத்தையடைந்து நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நாமும் அர்ச். ஹிலாரியாரைக் கண்டுபாவித்து, நாள்தோறும் ஏதாவது ஒரு ஞானப் புத்தகத்தை வாசிப்போமாக.
ஜனவரி மாதம் 15-ம் தேதி
அர்ச்.சின்னப்பர் - முதல் வனவாசி (கி.பி.342).
இவர் எஜிப்து தேசத்தில் பிறந்து, சிறுவராயிருக்கும்போதே இவருடைய தாய் தந்தையர் இறந்துபோனார்கள். 250-ம் வருடத்தில் நடந்த பெரும் வேதக் கலாபனையில் தேவ பக்தரான இவர் நாட்டைவிட்டு காட்டுக்குச் சென்று ஜெப தபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார். இவர் தாம் வசித்த குகையின் அருகிலிருந்த ஒரு ஈச்ச மரத்தின் கனியைத் தின்று சுனை ஜலத்தைக் குடித்துவந்தார். மேலும் நாள்தோறும் ஒரு காகம் இவருக்குக் கொண்டுவந்த பாதி ரொட்டியைப் புசித்துவந்தார். அக்காலத்தில் வேறொரு காட்டில் தவஞ்செய்த அந்தோணியார், சின்னப்பருடைய சிறந்த புண்ணியங் களைப்பற்றி சர்வேசுரனால் அறிந்து, அவரைச் சந்திக்கும்படி சில நாட்கள் பிரயாணஞ் செய்து சின்னப்பர் இருந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தவுடனே, இவர்கள் ஒருவர் ஒருவரை அறியாதிருந்தும் ஒருவர் ஒருவரை அவருடைய பெயரால் அழைத்து மினவிக்கொண்டார்கள். அன்று இருவரும் மோட்சத்தைப் பற்றி சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், ஒரு காகம் ஒரு முழு ரொட்டியை தன் அலகினால் கொத்திக்கொண்டு வந்து அங்கே போட்டுவிட்டுப் போயிற்று. சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, கடந்த 60 வருஷங்களாக சர்வேசுரன் இந்தக் காகம் மூலமாக அரை ரொட்டியை அனுப்பினார். இப்போது நீர் வந்து இருப்பதால் முழு ரொட்டியை அனுப்பச் சித்தமானார் என்று சொல்லி சர்வேசுரனுக்கு நன்றி கூறி, இருவரும் அதைப் புசித்தார்கள். பிறகு சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, எனக்கு மரணம் கிட்டி யிருக்கிறது. நீர் உமது மடத்துக்குப் போய் உமக்கு அர்ச். அத்தனாசியார் கொடுத்த போர்வையைக் கொண்டுவந்து அதனால் என்;னைப் பொதிந்து அடக்கஞ் செய்வீராக என்றார். அவ்வாறே அந்தோணியார் போர்வையை எடுத்துக்கொண்டு வரும்போது, சின்னப்பருடைய ஆத்துமம் சம்மனசுக்களால் சு10ழப்பட்டு மோட்சத்திற்குப் போவதைக் கண்டு அதிசயித்து, குகைக்குச்சென்று பார்த்தார். அங்கு முழந்தாளிலிருந்து ஜெபஞ் செய்வதுபோல் காணப்பட்ட சின்னப்பருடைய பிரேதத்தை தாம் கொண்டுவந்த போர்வையால் பொதியுந் தருணத்தில், இரு சிங்கங்கள் காட்டிலிருந்து புறப்பட்டு வந்து, ஒரு குழியைத் தோண்டவே, அவர் அக்குழியில் அத்திருச் சடலத்தை அடக்கஞ் செய்தார். சின்னப்பர் தரித்திருந்த ஈச்சம் ஓலை ஆடையை தன்னுடன் எடுத்துச் சென்று, பெரும்; திருநாட் காலங்களில் அதைத் தரித்துக்கொண்டு வந்தார்.
யோசனை பாவச் சந்தர்ப்பத்திற்கு ஏதுவானவற்றை விட்டு விலகுவாயாக.
ஜனவரி மாதம் 16-ம் தேதி
அர்ச்.பெரிய மக்காரியார் - வனவாசி (கி.பி.390).
மக்காரியார் சிறு வயதில் ஆடு மாடுகளை மேய்க்கும்போது சிறுவருடன் சேர்ந்து சில அத்திக் கனிகளைத் திருடினதற்காகச் சாகும் வரையில் தபஞ் செய்து கண்ணீர் சொரிந்துவந்தார். இவர் இளம் பிராயத்தில் உலகத்தைத் துறந்து, சிறு குடிசையில் தனித்திருந்து ஜெபஞ் செய்வதிலும், பாய் முடைவதிலும் அலுவலாயிருந்தார். ஒரு துஷ்ட ஸ்திரீ, மக்காரியார் தன்னைக் கெடுத்துப்போட்டதாக ஊராருக்குச் சொன்னபோது, அவர்கள் அதை நம்பி, அவரை அவமானமாய் வீதி வீதியாய் இழுத்தடித்து, குரூரமாய் வதைத்தார்கள். மக்காரியார் இவைகளைப் பொறுமையுடன் சகித்து சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார். அந்த கெட்ட ஸ்திரீ பிரசவ வேதனையால் வேதனைப்படும்போது தேவ பயத்தால் தூண்டப்பட்டு, மக்காரியார் மாசற்றவரென்றும், தன்னைக் கெடுத்தவன் இன்னானென்றும் அறிவித்ததைக் கேட்ட ஊரார் அவரைப் பெரும் புண்ணியவானென்று கொண்டாடினார்கள். இந்த வீண் புகழ்ச்சிக்குத் தப்பித்துf; கொள்ளும்படி மக்காரியார் வனத்துக்குச் சென்று ஜெபதபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்துவந்தார். அந்த வனாந்தரத்தில் இவர் அநேக கோவில்களைக் கட்டி வைத்ததினால் ஏராளமான துறவிகள் அங்கு வந்து கூடினார்கள். மக்காரியார் குருப்பட்டம் பெற்று சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். வாரத்தில் ஒரு தடவை மாத்திரம் புசிப்பார். கடினமான கோடைக் காலத்திலும் ஜலம் குடிக்கமாட்டார். சற்று நேரம் தலை சாய்த்து இளைப் பாறுவார். மரித்தவர்கள் உயிர்க்க மாட்டார்களென்று பிதற்றிய பதிதருக்கு வெட்கமுண்டாகும் பொருட்டு மரித்த ஒருவனை உயிர்ப்பித்;தார். ஆரிய பதிதர் எஜிப்திலுள்ள வனவாசிகளை சிதறடிக்கும்படி ஒரு பட்டாளத்தை அனுப்பி னார்கள். அநேக வனவாசிகள் அவர்கள் கையால் வேதசாட்சிகளானார்கள். பிறகு மக்காரியார், இசிதோர், பாம்போ முதலிய முனிவர்கள் நாடுகடத்தப் பட்டார்கள். அர்ச். மக்காரியார் அரிய பல புண்ணியங்களைப் புரிந்து 390-ம் ஆண்டில் மோட்ச சம்பாவனையை அடைந்தார்.
யோசனை
நமக்கு உண்டாகும் துன்பங்கள் எவ்வளவு பெரிதாயினும் சர்வேசுரனை நம்பி பொறுமையைக் கைவிடாதிருப்போமாக.
ஜனவரி மாதம் 17-ம் தேதி
அர்ச்.பெரிய அந்தோணியார் - மடாதிபதி (கி.பி.356).
இவர் எஜிப்தில் தேசத்தில் செல்வந்தரான தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து புண்ணியவாளராய் வாழ்ந்து வந்தார். இவருடைய பெற்றோர் இறந்த பின் “நீ உத்தமனாக வேண்டுமானால் உனக்குள்ளதை விற்று கேட்பவருக்கு கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்” என்னும் சுவிசேஷ வாக்கியத்தைக் கேட்டு, தனக்கிருந்த மிகுந்த செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டு, வனாந்தரத்துக்குச் சென்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்தார். துர்மனப் பசாசோவெனில் இவருடைய அரிதான புண்ணியங்களைக் கண்டு காய்மகாரப்பட்டு பலவிதத்திலும் அவரைத் துன்பப்படுத்தியது. பயங்கரமும் அவலட்சணமுமுள்ள ரூபங்கள் எடுத்து அவரைப் பயமுறுத்தும். பெண்போல் வடிவமெடுத்து அவரைப் பாவத்தில் விழத்தாட்ட முயலும். அந்தோணியார் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும், விசேஷமாக சிலுவை அடையாளத்தாலும் துஷ்டப் பேயைத் துரத்துவார். இந்த சோதனைகளுக்கு அவர் உட்படாததைக் கண்ட பசாசு அவரை ஒரு நாள் கடுமையாக அடித்துவிட்டு ஓடிப்போனது. அப்போது நமது கர்த்தர் அவருக்குத் தரிசனையாகி, அவருக்கு சந்தோஷ ஆறுதல் வருவித்தார். அந்தோணியார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு விசை கொஞ்சம் அப்பமும் தண்ணீரும் புசிப்பார். ஆட்டுத் தோலை ஆடையாகத் தரிப்பார். வெகு நேரம் ஜெபம் செய்வார். பலமுறை அஸ்தமன காலம் தொடங்கி உதயம் வரைக்கும் முழந்தாளிலிருந்து ஜெபிப்பார். இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்ட அநேக மக்கள் அவரது ஆசீர்வாதத்தைப் பெறும்படி அவரிடம் போவார்கள். அர்ச். அந்தோணியார் சகல புண்ணியங் களையும் ஒழுங்காய் அநுசரித்து 105-ம் வயதில் உயிர் துறந்து மோட்ச சம்பாவனையை அடைந்தார்.
யோசனை
பசாசால் நமக்கு உண்டாகும் சோதனைகளை ஜெபத்தாலும் ஒருத்த லாலும் ஜெயிப்போமாக.
ஜனவரி மாதம் 18-ம் தேதி
உரோமையில் அர்ச்.இராயப்பருடைய பத்திராசனத் திருநாள்.
நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் அர்ச்.இராயப்பரை திருச்சபைக்கு காணப்படும் தலைவராக ஸ்தாபித்தார். ஆகையால் அப்போஸ்தலர்களும், விசுவாசிகளும அர்ச். இராயப்பரை சேசுநாதருக்குப் பதிலாகப் பாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்து வந்தார்கள். இவர் தமது சிம்மாசனத்தை அந்தியோக்- கியா நகரில் ஸ்தாபித்து, அங்கிருந்து திருச்சபையை நடத்திக்கொண்டு வந்தார். ஆனால் அக்காலத்தில் உலகத்தின் முக்கிய பாகத்தை அரசாண்ட உரோமைச் சக்கரவர்த்திகள் உரோமையைத் தங்களுக்குத் தலைநகரமாக ஸ்தாபித்ததி னாலும், உலகத்தின் நான்கு திசைகளிலுமிருந்து சகல ஜாதி ஜனங்கள் அவ்விடத்திற்கு அடிக்கடி வந்து போயிருந்ததினாலும், அவ்விடத்தில் தமது பத்திராசனத்தையும் ஸ்தாபித்தால் திருச்சபைக்கு அதித நன்மையுண்டாகு மென்று அர்ச்.இராயப்பர் கருதி, உரோமையில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தார். இவர் அவ்விடத்தில் அநேகரை மனந்திருப்பி, அர்ச். சின்னப்பருடன் அவ்விடத்தில் வேதசாட்சியாக மரணமடைந்தார். அது முதற்கொண்டு சகல பாப்புமாரும் அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நடத்தி வருகிறார்கள்.
யோசனை
திருச்சபைப் போதகர்களாகிய மேற்றிராணிமார், குருக்கள் இவர்களை நாம் சங்கித்து அவர்களுக்குக் கீழ்படியவேண்டும்.
ஜனவரி மாதம் 19-ம் தேதி
அர்ச்.கனூத்துஸ் - இராஜா, வேதசாட்சி; (கி.பி.1086).
இவர் டென்மார்க் தேசத்தின் அரசனாகி, நற்குணசாலியும் தேவபக்தி உள்ளவருமாயிருந்தார். இவருடைய சகோதரர் சிம்மாசனம் ஏறி அரசு புரிந்த இரண்டாம் வருஷம் மரித்தபடியால் கனூத்துஸ் என்பவர் இராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டார். இவர் காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தார்மேல் படையெடுத்து அவர்களை ஜெயித்து, சத்திய வேதக் குருக்களை அவ்விடம் அனுப்பி அவர்களை கிறீஸ்தவர்களாக்கினார். தன் தேசத்திலுள்ள அநேக அலங்கோலங்களைத் திருத்தி பிரஜைகளுக்கு அவசியமான சட்டதிட்டங்களை ஏற்படுத்தி, எங்கும் சமாதானமும் திருப்தியுமுண்டாகும்படி செய்தார். மேலும் அநேக தேவாலயங்களைக் கட்டிவைத்து, குருக்களுடைய தேவைகளுக்கு வேண்டிய உதவிபுரியும்படி பிரஜைகளுக்கு சட்டம் ஏற்படுத்தினார். கடைசியாய் சகலமும் சர்வேசுரனால் உண்டாகிறதென்று தெளிவாய் அறிந்து தமது இராஜ முடியை பாடுபட்ட சுரூபத்தின் பாதத்தில் காணிக்கையாக சமர்ப்பித்தார். இந்த நல்ல இராஜா வேத அபிவிருத்திக்காகச் செய்த சட்டத்தால் சில துஷ்டர் இவர் மீது விரோதம் கொண்டு, ஒரு நாள் அவர் கோவிலிலிருக்கும்போது அவரை அம்பால் எய்து கொன்றார்கள். இவருடைய மரணத்துக்குப்பின், அவரை சர்வேசுரன் அநேக புதுமைகளால் மகிமைப்படுத்தி, அவரைக் கொலை செய்தவர்களைப் பலவாறான துன்பங்களால் தண்டித்தார்.
யோசனை
தேவ காரியங்களுக்கு வேண்டிய உதவி செய்யப் பின்வாங்காது இருப்போமாக.
ஜனவரி மாதம் 20-ம் தேதி
அர்ச்.செபஸ்தியார் - வேதசாட்சி (கி.பி.288).
செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார். இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச் சேவகரானார். அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான். ஓருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி துர் ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தம்முடைய நற்புத்தியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தவே, அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற அஞ்ஞானிகள் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக வியாதிக்காரரைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, சக்கரவர்த்தியின் கட்டளைப்படி அம்பால் எய்துக் கொல்;லப்பட்டார். கிறீஸ்தவர்கள் இவர் சரீரத்தை எடுத்து அடக்கஞ் செய்ய முயற்சிக்கும்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால்;, இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் புத்தி சொன்னதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து அவரைத் தடிகளால்; அடித்துக் கொல்லக் கற்பித்தான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.
யோசனை
நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்லக்கடவோம்.
ஜனவரி மாதம் 21-ம் தேதி
அர்ச்.ஆக்னேஸம்மாள் - கன்னிகை, வேதசாட்சி (கி.பி.304).
ஆக்னேஸம்மாள் உரோமையில் பிறந்து சிறுவயதிலேயே தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். இவளுடைய உயர்குலப் பிறப்பையும், அழகையும், மிகுந்த செல்வத்தையும் பார்த்து பிரபுக்களான அநேக வாலிபர் அவளை மணமுடித்துக்கொள்ள விரும்பியபோது “என் கன்னிமையை என் தேவ பத்தாவுக்கு ஒப்புக்கொடுத்தேன்” என்று அப்பெண் கூறியதை அவர்கள் கேட்டு சினங்கொண்டு அவள் கிறீஸ்தவளென்று நியாயாதிபதிக்கு அறிவித்தார்கள். நியாயாதிபதி ஆக்னேஸிடம் நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் கிறீஸ்தவ வேதத்தை அவள் மறுதலிக்கும்படி கட்டாயப்படுத்தினான். அந்தப் பெண்மணி அதற்கு சம்மதியாதிருப்பதை அவன் கண்டு, அவள் கண்ணுக்கு முன் நெருப்பை மூட்டி, ஆணி, குரடு முதலிய ஆயுதங்களைப் பழுக்கக் காய்ச்சும்படி கட்டளையிட்டான். வேதசாட்சியோ அவைகளைக் கண்டு சற்றும் கலங்காதிருப்பதை அவன் கண்டு அவளை அஞ்ஞான கோவிலுக்கு இழுத்துக்கொண்டு போய் பொய்த் தேவர்களுக்குச் சாம்பிராணி புகைக்கும்படி கட்டளையிட்டான். அவளோ தன்மேல் சிலுவை வரைந்துக் கொண்டாளேயன்றி, சாம்பிராணியை தொடவில்லை. இதனால் அதிகாரி கோபவெறி கொண்டு, அவளை ஒரு விலைமாதர் வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய் அங்கே அவள் கற்பையழிக்கும்படி உத்தரவிட்டான். அப்போது அநேக வாலிபர் அவளைப் பின்தொடர்ந்தும் ஒருவித பயத்தால் அவர்கள் பின்வாங்கினார்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் அவளை அணுகின மாத்திரத்தில் மின்னலைப் போன்ற ஒருவித பிரகாசமான சக்தியால் குருடனாகி, கீழே விழுந்தான். அவனுடைய தோழரின் மன்றாட்டின்பேரில் ஆக்னேஸ் அவனுக்குப் பார்வைத் தந்தாள். இதையெல்லாம் கண்ட அதிகாரி வெட்கமும் சினமுங் கொண்டு, அவளைச் சிரச்சேதம் பண்ணும்படி கட்டளையிட, ஆக்னேஸ் தலை வெட்டுண்டு, கன்னிமை முடியும் வேதசாட்சி முடியும் பெற்று தன் தேவ பத்தாவிடஞ் சென்றாள்.
யோசனை
தங்கள் கன்னிமையைத் தங்கள் தேவ பத்தாவுக்கு ஒப்புக் கொடுத்தவர்கள் அதை சாகும் வரையில் பழுதின்றிக் காப்பாற்றுவார்களாக.
ஜனவரி மாதம் 22-ம் தேதி
அர்ச்.வின்ஸென்ட் - வேதசாட்சி (கி.பி.304).
இவர் ஸ்பெயின் தேசத்தில் பிறந்து கல்வியில் தேர்ச்சியடைந்தபின் 6-ம் பட்டம் பெற்று, மேற்றிராணியாரின் உத்தரவின் பேரில் பிரசங்கஞ் செய்து வந்தார். வேதக் கலாபனையில் இவரும், இவருடைய மேற்றிராணியாரும் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். நடுவனுடைய உத்தரவின்படி, இருவரும் குரூரமாய் உபாதிக்கப்பட்டும் வேதத்தை மறுதலியாததினால், மேற்றிராணியார் நாடுகடத்தப்பட்டும், வின்ஸென்ட் சிறையிலும்; அடைக்கப்பட்டார். வின்ஸென்டை கொடூரமாய் உபாதித்தபின் கொலைஞர் அவரைக் கீழேக கிடத்தி அவர் கை, கால்களைக்; கட்டியிருந்த கயிறுகளில் கம்பிகளை மாட்டியிழுத்தபோது, அவர் கைகால் மூட்டுகள் பிசகி, வெகுவாக வேதனைப்பட்டார். பிறகு அவர்கள் அவரை கொடூரமாய் அடித்ததினால் சரீரம் முழுவதும் காயமாகி இரத்தம் வெள்ளமாகத் தரையில் ஓடியது. மேலும் அவரை ஒரு இரும்பு கட்டிலில் கிடத்தி அடியில் நெருப்பு மூட்டியபோது, அவர் சற்றேனும் அஞ்சாமல் வேதத்தில் தைரியமாயிருப்பதை அதிகாரி கண்டு, அவரை அதிகக் கடுமையாய் உபாதிக்கும் கருத்துடன் அவருடைய காயங்கள் ஆறும் வரையில் அவரைச் சிறையில் அடைத்தான். அங்கு காணப்பட்ட அதிசயப் பிரகாசத்தைக் கண்ட காவல் சேவகன் உடனே மனந்திரும்பினான். கிறீஸ்தவர்கள் வேதசாட்சியை சந்தித்து அவருடைய இரத்தத்தை வஸ்திரங்களில் நனைத்து பக்தியோடு கொண்டுபோனார்கள். அர்ச்.வின்ஸென்ட் சிறையில் உயிர் விட்டு மோட்சம் போய் சேர்ந்தார்.
யோசனை
நமக்கு வரும் துன்ப துயரத்தால் மனங் கலங்காமல் ஜெபத்தால் தேவ உதவியைத் தேடுவோமானால், அவை நமக்கு நித்திய சம்பாவனையைப் பெற வைக்கும்.
ஜனவரி மாதம் 23-ம் தேதி
அர்ச்.ரேயிமுந்தப்பர் - துதியர் (கி.பி.1275).
இவர் ஸ்பெயின் தேசத்தில் உயர்ந்த கோத்திரத்தில் பிறந்து மேலான சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்று, தம்முடைய 20-ம் வயதில் கல்லூரியில் பல கலைகளைக் கற்றுப் பெயர் பெற்றார். இவர் குருப்பட்டம் பெற்று, தமது உத்தம அலுவலை அதிக ஊக்கத்துடன் செய்து வந்ததினால் சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். இவருடைய அரிதான ஞானத்தையும் பக்தியையும் அறிந்த அர்ச். பாப்பானவர் இவரை உரோமைக்கு அழைப்பித்து, இவருக்கு உயர்ந்த வேலைகளைக் கொடுத்தார். பாப்பானவரால் தமக்கு அளிக்கப்படவிருந்த அதிமேற்றிராணியார் பட்டத்தைத் தடுக்க அவர் பட்ட பிரயாசையின் பலனாக வியாதியாய் விழுந்தார். இதைப் பாப்பானவர் அறிந்து, தமது விருப்பத்தை மாற்றி, ரேயிமுந்தப்பர் தம்முடைய சுய தேசத்துக்குப் போகலாமென்று உத்தரவளித்தார். சுய தேசத்தில் அவர் பூரண சுகமடைந்து, வேதத்திற்காக வெகு ஆவல் உற்சாகத்துடன் பிரயாசைப்பட்டதினால் கணக்கற்றப் பாவிகள் மனந்திரும்பினார்கள். மேலும் 20,000 சரசேனருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இவர் அர்ச். டொமினிக் சபையில் உட்பட்டு, உத்தம சந்நியாசியாய் வாழ்ந்ததால் அநேக அரசரும் பிரபுக்களும் இவரைத் தம் ஆத்தும குருவாக தெரிந்துகொண்டார்கள். அத்தேசத்து அரசன் அவரை மஜோர்க்கா என்னும் தீவுக்கு அனுப்பினபோது, அவ்விடத்தில் அவரால் அநேக ஞான நன்மைகள் உண்டாயின. ஆனால் முன் சொன்ன அரசன் தன் பாவ நடத்தையை விடாததினால் அவர் அவ்விடத்தை விட்டுப் புறப்படத் தீர்மானித்தார். அதை அரசன் அறிந்து, எவரும் அர்ச்சியசிஷ்டவரை கப்பலில் ஏற்றாதபடிக்கு உத்தரவு பிறப்பித்தான். ரேயிமுந்தப்பர் தமது மேற்போர்வை யைக் கடலில் விரித்து, அதில் ஏறி 150 மைல் தூரம் கடலில் பிரயாணம் செய்து, தமது மடம் போய்ச் சேர்ந்தார். அதையறிந்த அரசன் அதிசயித்து தன் துர் நடத்தையை முற்றிலும் ஒழித்துவிட்டு சாகும் வரையில் புண்ணியவாளனாய் நடந்துவந்தான். அர்ச்சியசிஷ்டவர் சகல புண்ணியங்களிலும் உத்தமமாய்ப் பிரகாசித்து, தமது 100-ம் வயதில் மரணமாகி மோட்சமடைந்தார்.
யோசனை
யாரொருவர் தங்களைத் தாழ்த்தி, தங்களுக்கும் உலகத்திற்கும் மரித்தவர்களாகிறார்களோ அவர்களே அர்ச்சியசிஷ்டவர்கள் ஆவார்கள்.
ஜனவரி மாதம் 24-ம் தேதி
அர்ச்.திமோத்தி - மேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி.97).
திமோத்தியின் தந்தை அஞ்ஞானியும், தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர் களுமாயிருந்தார்கள். அர்ச். சின்னப்பர் காடு காடாய்ச் சென்று பிரசங்கித்தபோது திமோத்தியும் அவருடைய தாயும், பாட்டியும் அவ்விடத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள். திமோத்தியின் பக்தி, புத்தியை அறிந்த அப்போஸ்தலர் அவருக்கு குருப்பட்டம் கொடுத்து தமது பிரயாணங்களில் அவரைத் தமது துணைவராகத் தெரிந்துகொண்டார். அர்ச்.சின்னப்பர் அவரை துன்பப்படும் கிறீஸ்தவர்களிடம் அனுப்புவார். சில சமயங்களில் வேதத்தில் தத்தளிக்கும் விசுவாசிகளிடம் அவரை அனுப்புவார். தமது குருவும் ஆசிரியருமானவருடைய புத்தி ஆலோசனைப்படி திமோத்தி நடந்துகொண்டபடியால் எபேசு நகருக்கு மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். அர்ச். சின்னப்பர் வேதத்தினிமித்தம் சிறையிலிருந்த காலத்தில் தமது சீஷனாகிய திமோத்திக்கு வேத விஷயமாக இரு நிருபங்களை எழுதி அனுப்பினார். இவர் அநேக புண்ணியங்களையும் தவச்; செயல்களையுஞ் செய்து, அஞ்ஞானிகளால் வேதத்திற்காக தடிகளால் அடிக் கப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
அர்ச். திமோத்தியைப் போல நாமும் குருக்கள் முதலிய பெரியோர்க ளுடைய புத்திமதிகளைக் கேட்டு நடப்போமாக.
ஜனவரி மாதம் 25-ம் தேதி
அர்ச்.சின்னப்பர் மனந்திரும்பின திருநாள்.
அர்ச். சின்னப்பர் யூத தாய் தகப்பனிடத்தினின்று பிறந்தார். இளமையில்; கல்வி பயிற்சி பெறும்படி இவருடைய பெற்றோர் இவரை ஜெருசலேம் நகருக்கு அனுப்பிவைத்தார்கள். அவ்விடத்தில் அவர் உலக படிப்புடன் வேதாகமங்களையும் வாசித்து வந்தார். இவர் பரிசேய வகுப்பைச் சேர்ந்து, மோயீசனின் ஒழுங்கு ஆசாரங்களை வெகு கவனமாய் அநுசரித்து வந்தார். கிறீஸ்தவ வேதத்தினிமித்தம் யூதர் அர்ச். முடியப்பரை கல்லால் எறிந்து கொன்றபோது, சின்னப்பர் அவர்களுடைய வஸ்திரங்களைப் பத்திரமாய் பார்த்துக்கொண்டு இருந்தார். மேலும் இவர் விசுவாசிகளைத் தேடிப் பிடித்து, அவர்களை யூத சங்கத்தாரிடம் இழுத்துக்கொண்டுபோய் விடுவார். ஆகையால் கிறீஸ்தவர்கள் அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில்; அஞ்சி நடுங்குவார்கள். தமாஸ்கு நகருக்குச் சென்று, அங்குள்ள சகல கிறீஸ்தவர்களையும் பிடித்துக் கட்டின கட்டுடன் ஜெருசலேமுக்கு கொண்டுபோகும்படி யூத சங்கத்தின் உத்தரவு பெற்று, சின்னப்பர் அவ்விடத்திற்கு புறப்பட்டார். இவர் மத்தியான வேளையில் தமாஸ்கு நகரைச் சமீபித்தபோது சு10ரியப் பிரகாசத்திலும் அதிக காந்தியான பிரகாசம் இவர்மேல் படவே கீழே விழுந்தார். “சவுலே, சவுலே! என்னை ஏன் உபாதிக்கிறாய்?”என்னும் சத்தத்தை இவர் கேட்டு, “நீர் யார் ஆண்டவரே?” என்று வினவியபோது, “நீ உபாதிக்கும் சேசு நானே. என்னை ஏன் உபாதிக் கிறாய்?”என்றார். அதற்கு சின்னப்பர், “ஆண்டவரே! உமது சித்தத்தை அறிவித்தால் அதன்படி செய்கிறேன்” என்றார். இவருக்கு கண் பார்வையற்று போக தேவ உத்தரவின்படி தமாஸ்குக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டு, அங்கு மூன்று தினங்களாக உண்ணாமலும் குடியாமலும் தன் பாவங்களுக்கு அழுது துக்கப்பட்டுகொண்டிருந்தார். அனனியாஸ் என்பவர் தேவ கட்டளைப்படி சின்னப்பர் சிரசின்மேல் தமது கரங்களை நீட்டவே, அவர் கண்பார்வை அடைந்தார். அது முதற்கொண்டு, சின்னப்பர் கிறீஸ்து வேதத்திற்காக சகல வித கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, சத்திய வேதத்தை தேசமெங்கும் போய் போதித்து அதற்கு சாட்சியாகத் தமது இரத்தத்தைச் சிந்தி மரணமானார்.
யோசனை
தேவ ஏவுதலுக்கு நமது இருதய வாசலைத் திறப்போமாக.