- புனிதர்கள்
- புனித செபஸ்தியார்
புனித செபஸ்தியாரின் வரலாறு
விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணக் பேரின்ப வாழ்வை தன் உடமையாக்கிக் கொண்ட புனித செபஸ்தியார் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் என்ற நகரில் பிறந்து இத்தாலியில் உள்ள மிலான் நகரில் வளர்ந்து, திறமைமிக்க வாலிபனாகத் திகழ்ந்தார்.
உரோமை பேரரசர் கறினுசின் படையில் செபஸ்தியார் கி.பி. 283ல் சேர்ந்து, சிறந்த படைவீரன் ஆனார். வேதத்திற்காக சிறைக் கூடங்களிலே அடைப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்த விசுவாசிகளை சந்தித்து, அன்பாக அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கிறிஸ்துவின் அன்பைக் காட்டி விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கச் செய்தார். இந்த பணியை செய்வதற்காக அவர் தனது உயர் பதவியையும், செல்வத்தையும் பெரிதென எண்ணவில்லை.
சிறையில் துன்பப்பட்ட மார்க்குஸ், மார்செல்லியானுஸ் என்ற சகொதர்களைச் சந்தித்து, அவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தினார். அப்போது அங்கு வந்த ஆறு வருடங்களாக பேச முடியாமல் இருந்த சோயே என்ற பெண், தனக்கு பேசும் வரம் வேண்டும் என புனிதரின் காலைப் பிடித்து மன்றாடினார். புனிதரும் மனமிறங்கி, அவளது வாயின்மேல் சிலுவை அடையாளம் வரைந்து அவளைப் பேச வைத்தார். அவள் தன் கணவருடன் மனம் மாறி கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்தார். அவ்வாறே மார்க்குஸ், மார்செல்லியானுஸ், அவர்களின் மனைவிகள், பெற்றோர், சிறைக்காவலர் மற்றும் பலர் உண்மை வேதத்தில் சேர்ந்தனர். போலிகார்ப் என்ற குறு அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.
உரோமை பேரரசன் கிரோமாசியுஸின் நோயைப் புனித செபஸ்தியார் நீக்கியதால், அவரும் அவரது மகனும் கத்தோலிக்கத் திருச்சபையைச் தழுவ எண்ணங் கொண்டு, திருமுழுக்கு வாங்கினர். அதுமட்டும் அல்லாமல், தனக்கு அடிமையாக இருந்த 1400 கிறிஸ்தவர்களையும் விடுவித்தான்.
புனித செபஸ்தியாரின் நற் பண்புகளையும், நெஞ்சுறுதியையும் கண்டு, கி.பி. 283-ல் உரோமை பேரரசன் இவரை தனது மெய்க்காப்பாளன் ஆக்கினார். உரோமை எங்கும் வேதகலாபனை தொடர்ந்து வண்ணம் இருந்தது. கிறிஸ்தவர்களை மீட்க அதிகாரம் தரும்படி செபஸ்தியார் திருத்தந்தை காய்யுஸ் என்பவரிடம் வேண்டினார். ஆனால் திருத்தந்தை போலிஸர்ப் என்ற குருமூலம் மெய்காப்பாளராக இருந்து கொண்டே பணிபுரிய அதிகாரம் கொடுத்தார்.
கி.பி. 286-ம் ஆண்டு வரை வேத கலாபனை தொடர்ந்தது. புனித செபஸ்தியாரும் கிறிஸ்தவன் என்பது அரசரின் காதை எட்டியது. ‘நன்றி மறந்தவன்’ எனச் சொல்லி அரசன் கண்டித்தான், இறைவனை வாழ்த்தி வணங்குவதாகவும், அரசனுக்காக செபிப்பைதாகவும் சொன்னார். இதைக்கேட்டு வெகுண்டெழுந்த அரசன், அவரைக் கம்பத்தில் கட்டி அம்பால் எய்ய ஆணைப் பிறப்பித்தான். காவலர் அவரை கம்பத்தில் கட்டி, இரக்கமின்றி அவர்மீது அம்பால் எய்து, அவர் இறந்தவிட்டார் என தவறாக நினைத்து சென்று விட்டனர். இரேனாள் என்ற பெண் சென்று, அவர் உயிரோடிருப்பதைக் கண்டு, தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கே குணமடைந்தார். அவரை மறைவாயிருக்கும் படி கிறிஸ்தவர்கள் மன்றாடினார். ஆனால் அவர் அரசன் கோவிலுக்குச் செல்லும் வழியில் நின்று “பேரரசரே! கிறிஸ்தவர்கள் மீது கோள் சொல்லும் பொய்யர்களின் வார்த்தைகளைக் கேட்டு நீர் மதியை இழக்கலாமா? கிறிஸ்தவர்களை விட நல்லவர் இல்லை என்றும், அவர்கள் மூலம் உமக்கு நன்மையே அதிகம் என் அறிவீர்” என்றார்.
புனித செபஸ்தியார் உயிரோடு இருப்பதையும், தன்னை எதிர்த்துப் பேசுவதையும் பேரரசென் தியோகிளேசியன் கண்டு வியந்தான். புனிதர் அந்த அரசனைப் பார்த்து, ‘அவர் நான் தான்’, நீர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துகிறீர் என்று உலகம் அறியும் பொருட்டு மீட்பராகிய இயேசுகிறிஸ்து என்னை உயிரோடு காப்பாற்றினார் என்றார்.
இதைக் கேட்ட அரசன் கோபங்கொண்டு தடிகளால் அடித்துக் கொல்ல ஆணையிட்டான். 288-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் நாள், செபஸ்தியார் அடித்துக் கொல்லப்பட்டார். லூசினாள் என்பவள் காட்சியில் கண்டு, அவரது உடலை எடுத்து புனித இராயப்பர், சின்னப்பர் கல்லறை வாயிற்படியின் அருகில் அடக்கம் செய்தார்.
புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
எங்களை. . . . .
இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை. . . .
வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . .
இத்தாலி தேசத்தில் அதிசயப்பண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரே. . . .
வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே. . . .
அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரே. . .
தரித்திரர்களுக்கு உதார தகப்பனாரே. . .
நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் பத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரே. . .
ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித்தவ்ேர,
அநேக அற்பதங்களால் இயேசு கிறிஸ்துவினுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணினவரே. . . .
வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவராயிருந்தவரே. . .
சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே. . . .
வேதசாட்சிகளுக்குத் தங்கள் சோதனைகளிலும் மரணவேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரே. . . .
திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையாயிருந்தவரே. . .
பக்தி நிறைந்த வாக்கியங்களாலும் அநேகர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே. . .
அஞ்ஞானிகளான அநேகருக்குச் சத்தியத்தை தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே. . . .
பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தர்களை முதலாய் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே. . . .
அதிசயமான சகல பண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரே. . .
விசுவாசிகளுக்கு உதவியாக, சக்கரவர்த்தி, உரோமாபரி இராயனிடத்தில் சேனை தலைவராக உயர்த்தப்பட்டவரே. . .
சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரே. . .
சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரே. . .
அர்ச். பாப்பானவருக்கு மிகவும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரே. . .
சிலுவை அடையாளத்தில் திமிர்வாதத்தை நீக்கினவரே. . .
ஊமையைப் பேசவைத்தவரே. . .
அநேக வியாதிகளை அதிசயமாகத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரே. . .
எண்ணப்படாத பண்ணிய நன்மை அற்பதங்களைச் செய்தவரே. . .
பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரே. . .
உலகம் பசாசு சாீரத்தின் தந்திரங்களையெல்லாம் ஜெயித்தவரே. .
பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங்கியவரே. . .
அத்தியந்த விசுவாசத்திடனை உடையவரே. . .
இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞானச்சூளையே. .
உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் பறக்கணித்தவரே. .
இயேசுநாதருடைய சிநேகத்துக்காக இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இழந்தவரே. . .
இயேசுநாதரைப்பற்றிப் பிராணனைத்தர மிகவும் அபேட்சித்தவரே. . .
சத்திய வேதத்தை அனுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத்தீர்வை இடப்பட்டவரே. . .
திரளான அம்பகளால் எய்யப்பட்டவரே. . .
அம்பகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரே. .
உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடன் இராயன் முன்னிலையில் போய் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூரத்தைக் கண்டித்தவரே. . .
குரூரம் மாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே. . .
எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத வேதசாட்சியே. . .
விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேதசாட்சியே. . .
உமது இரக்கத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்பித்த உத்தம வேதசாட்சியே. . .
மிக தைரிய சந்தோ;த்துடனே வேதத்துக்காக பிராணனைக் கொடுத்தவரே. . .
தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு பண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே. . .
மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேத சாட்சி முடி சூட்டப்பட்டவரே. . .
வேதசாட்சிகளுக்குள் விசே; மகிமைப்பிரதாபத்துடனே பிரகாசித்தவரே. . .
உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளைநோய் பெருவாரிக்காய்ச்சல் நீங்கினதால் மிகவும் பேறுபெற்றவரே. . .
பூலோகமெங்கும் சுகிர்தவாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே,
சகல கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாரே. . .
வைசூரி முதலிய வியாதி துன்பத்தில்ி ஆதரவும் அடைக்கலமுமாயிருந்தவரே. . .
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையாகிய இயேசுவே. . .
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் . . .எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப். . .எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மு; இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு
நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
து; புனித செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
செபிப்போமாக
சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி! எங்கள் இக்கட்டுகளையும் பலவீனங்களையும் கிருபையுடனே பார்த்து அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்ப துரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி புனித செபஸ்தியாருடைய வேண்டுதலினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படியாக கிருபை செய்தருள வேண்டுமென்று தேவாீரைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். - ஆமென்.
புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு
பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத பண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்பக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா.
ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து பத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபரி முதலிய இராச்சியங்களில் வி;நோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலான வியாதிகளில்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேணுமென்று, நீரே எங்களுக்காக பரம கர்த்தரை வேண்டிக்கொள்ளும் பொருட்டு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத்துக்காக துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும், வியாதிக்காரருக்கு தேவகிருபையால் ஆரோக்கியங்கொடுத்த புனித செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களுக்கு வி;பேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரமகர்த்தர் தற்காத்து இரட்சித்தருள வேணுமென்று தேவகிருபை சிம்மாசனத்தில் மன்றாட உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
பூலோகமெங்கும் சுகிர்த நாமம் உடைத்தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமுமாயிருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்ல மனதைக் கொடுத்தருளும். இந்த இராச்சியத்துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும் சர்வேசுரனை மன்றாடும் படிக்கு உம்மை பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் வெறுத்து இயேசுநாதரைப் பற்றிப் பிராணனைத்தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு மார்செல்லியனுக்கு பத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுகளுடன் இயேசுநாதர் வந்து உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாயென்று சொல்லக்கேட்டு சந்தோ;மடைந்த புனித செபஸ்தியாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் பண்ணிய வழியிலே காங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து கர்த்தரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா
உரோமாபரி தியோக்கிலேசியன் என்ற இராயனால் அநேகம் அம்பகளால் எய்யவும், சாட்டை, கசை பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருச்சாீரத்தை அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கஞ்செய்யப்பட்ட புனித செபஸ்தியாரே, திருச்சபையாரெல்லாம் சர்வேசுரனுடைய சித்தத்துக்கேற்ப நடக்கத்தக்கதாகவும் சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத்தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.- பர, அருள், பிதா.
முதல்; இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக.
துணை; புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக;
கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி! உமது அதி உன்னதமான மகிமை பெற்ற புனித செபஸ்தியார், உமக்காக பட்ட பிரயாசங்களை தேவாீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சாீர நோய்களுக்கு சரியான் ஒள;தமாகத் திருவுளமானீரே, அவரது பேறுபலன்களை பார்த்து எங்கள் ஆத்தும வியாதியிலும், சாீரத்திலும் உண்டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, வி;பேதி முதலிய தொத்து வியாதிகளிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணுமென்று இந்த ஏழு மன்றாட்டுக்களையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி -ஆமென்.
புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்
அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பம் சர்வேசுரன்ளூ பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி;க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.
தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்பபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும்.
ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சிய;்டவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், பண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவாீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். - ஆமென்.
விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணக் பேரின்ப வாழ்வை தன் உடமையாக்கிக் கொண்ட புனித செபஸ்தியார் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் என்ற நகரில் பிறந்து இத்தாலியில் உள்ள மிலான் நகரில் வளர்ந்து, திறமைமிக்க வாலிபனாகத் திகழ்ந்தார்.
உரோமை பேரரசர் கறினுசின் படையில் செபஸ்தியார் கி.பி. 283ல் சேர்ந்து, சிறந்த படைவீரன் ஆனார். வேதத்திற்காக சிறைக் கூடங்களிலே அடைப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்த விசுவாசிகளை சந்தித்து, அன்பாக அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கிறிஸ்துவின் அன்பைக் காட்டி விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கச் செய்தார். இந்த பணியை செய்வதற்காக அவர் தனது உயர் பதவியையும், செல்வத்தையும் பெரிதென எண்ணவில்லை.
சிறையில் துன்பப்பட்ட மார்க்குஸ், மார்செல்லியானுஸ் என்ற சகொதர்களைச் சந்தித்து, அவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தினார். அப்போது அங்கு வந்த ஆறு வருடங்களாக பேச முடியாமல் இருந்த சோயே என்ற பெண், தனக்கு பேசும் வரம் வேண்டும் என புனிதரின் காலைப் பிடித்து மன்றாடினார். புனிதரும் மனமிறங்கி, அவளது வாயின்மேல் சிலுவை அடையாளம் வரைந்து அவளைப் பேச வைத்தார். அவள் தன் கணவருடன் மனம் மாறி கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்தார். அவ்வாறே மார்க்குஸ், மார்செல்லியானுஸ், அவர்களின் மனைவிகள், பெற்றோர், சிறைக்காவலர் மற்றும் பலர் உண்மை வேதத்தில் சேர்ந்தனர். போலிகார்ப் என்ற குறு அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.
உரோமை பேரரசன் கிரோமாசியுஸின் நோயைப் புனித செபஸ்தியார் நீக்கியதால், அவரும் அவரது மகனும் கத்தோலிக்கத் திருச்சபையைச் தழுவ எண்ணங் கொண்டு, திருமுழுக்கு வாங்கினர். அதுமட்டும் அல்லாமல், தனக்கு அடிமையாக இருந்த 1400 கிறிஸ்தவர்களையும் விடுவித்தான்.
புனித செபஸ்தியாரின் நற் பண்புகளையும், நெஞ்சுறுதியையும் கண்டு, கி.பி. 283-ல் உரோமை பேரரசன் இவரை தனது மெய்க்காப்பாளன் ஆக்கினார். உரோமை எங்கும் வேதகலாபனை தொடர்ந்து வண்ணம் இருந்தது. கிறிஸ்தவர்களை மீட்க அதிகாரம் தரும்படி செபஸ்தியார் திருத்தந்தை காய்யுஸ் என்பவரிடம் வேண்டினார். ஆனால் திருத்தந்தை போலிஸர்ப் என்ற குருமூலம் மெய்காப்பாளராக இருந்து கொண்டே பணிபுரிய அதிகாரம் கொடுத்தார்.
கி.பி. 286-ம் ஆண்டு வரை வேத கலாபனை தொடர்ந்தது. புனித செபஸ்தியாரும் கிறிஸ்தவன் என்பது அரசரின் காதை எட்டியது. ‘நன்றி மறந்தவன்’ எனச் சொல்லி அரசன் கண்டித்தான், இறைவனை வாழ்த்தி வணங்குவதாகவும், அரசனுக்காக செபிப்பைதாகவும் சொன்னார். இதைக்கேட்டு வெகுண்டெழுந்த அரசன், அவரைக் கம்பத்தில் கட்டி அம்பால் எய்ய ஆணைப் பிறப்பித்தான். காவலர் அவரை கம்பத்தில் கட்டி, இரக்கமின்றி அவர்மீது அம்பால் எய்து, அவர் இறந்தவிட்டார் என தவறாக நினைத்து சென்று விட்டனர். இரேனாள் என்ற பெண் சென்று, அவர் உயிரோடிருப்பதைக் கண்டு, தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கே குணமடைந்தார். அவரை மறைவாயிருக்கும் படி கிறிஸ்தவர்கள் மன்றாடினார். ஆனால் அவர் அரசன் கோவிலுக்குச் செல்லும் வழியில் நின்று “பேரரசரே! கிறிஸ்தவர்கள் மீது கோள் சொல்லும் பொய்யர்களின் வார்த்தைகளைக் கேட்டு நீர் மதியை இழக்கலாமா? கிறிஸ்தவர்களை விட நல்லவர் இல்லை என்றும், அவர்கள் மூலம் உமக்கு நன்மையே அதிகம் என் அறிவீர்” என்றார்.
புனித செபஸ்தியார் உயிரோடு இருப்பதையும், தன்னை எதிர்த்துப் பேசுவதையும் பேரரசென் தியோகிளேசியன் கண்டு வியந்தான். புனிதர் அந்த அரசனைப் பார்த்து, ‘அவர் நான் தான்’, நீர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துகிறீர் என்று உலகம் அறியும் பொருட்டு மீட்பராகிய இயேசுகிறிஸ்து என்னை உயிரோடு காப்பாற்றினார் என்றார்.
இதைக் கேட்ட அரசன் கோபங்கொண்டு தடிகளால் அடித்துக் கொல்ல ஆணையிட்டான். 288-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் நாள், செபஸ்தியார் அடித்துக் கொல்லப்பட்டார். லூசினாள் என்பவள் காட்சியில் கண்டு, அவரது உடலை எடுத்து புனித இராயப்பர், சின்னப்பர் கல்லறை வாயிற்படியின் அருகில் அடக்கம் செய்தார்.
புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
எங்களை. . . . .
இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை. . . .
வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . .
இத்தாலி தேசத்தில் அதிசயப்பண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரே. . . .
வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே. . . .
அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரே. . .
தரித்திரர்களுக்கு உதார தகப்பனாரே. . .
நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் பத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரே. . .
ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித்தவ்ேர,
அநேக அற்பதங்களால் இயேசு கிறிஸ்துவினுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணினவரே. . . .
வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவராயிருந்தவரே. . .
சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே. . . .
வேதசாட்சிகளுக்குத் தங்கள் சோதனைகளிலும் மரணவேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரே. . . .
திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையாயிருந்தவரே. . .
பக்தி நிறைந்த வாக்கியங்களாலும் அநேகர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே. . .
அஞ்ஞானிகளான அநேகருக்குச் சத்தியத்தை தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே. . . .
பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தர்களை முதலாய் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே. . . .
அதிசயமான சகல பண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரே. . .
விசுவாசிகளுக்கு உதவியாக, சக்கரவர்த்தி, உரோமாபரி இராயனிடத்தில் சேனை தலைவராக உயர்த்தப்பட்டவரே. . .
சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரே. . .
சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரே. . .
அர்ச். பாப்பானவருக்கு மிகவும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரே. . .
சிலுவை அடையாளத்தில் திமிர்வாதத்தை நீக்கினவரே. . .
ஊமையைப் பேசவைத்தவரே. . .
அநேக வியாதிகளை அதிசயமாகத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரே. . .
எண்ணப்படாத பண்ணிய நன்மை அற்பதங்களைச் செய்தவரே. . .
பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரே. . .
உலகம் பசாசு சாீரத்தின் தந்திரங்களையெல்லாம் ஜெயித்தவரே. .
பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங்கியவரே. . .
அத்தியந்த விசுவாசத்திடனை உடையவரே. . .
இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞானச்சூளையே. .
உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் பறக்கணித்தவரே. .
இயேசுநாதருடைய சிநேகத்துக்காக இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இழந்தவரே. . .
இயேசுநாதரைப்பற்றிப் பிராணனைத்தர மிகவும் அபேட்சித்தவரே. . .
சத்திய வேதத்தை அனுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத்தீர்வை இடப்பட்டவரே. . .
திரளான அம்பகளால் எய்யப்பட்டவரே. . .
அம்பகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரே. .
உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடன் இராயன் முன்னிலையில் போய் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூரத்தைக் கண்டித்தவரே. . .
குரூரம் மாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே. . .
எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத வேதசாட்சியே. . .
விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேதசாட்சியே. . .
உமது இரக்கத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்பித்த உத்தம வேதசாட்சியே. . .
மிக தைரிய சந்தோ;த்துடனே வேதத்துக்காக பிராணனைக் கொடுத்தவரே. . .
தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு பண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே. . .
மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேத சாட்சி முடி சூட்டப்பட்டவரே. . .
வேதசாட்சிகளுக்குள் விசே; மகிமைப்பிரதாபத்துடனே பிரகாசித்தவரே. . .
உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளைநோய் பெருவாரிக்காய்ச்சல் நீங்கினதால் மிகவும் பேறுபெற்றவரே. . .
பூலோகமெங்கும் சுகிர்தவாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே,
சகல கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாரே. . .
வைசூரி முதலிய வியாதி துன்பத்தில்ி ஆதரவும் அடைக்கலமுமாயிருந்தவரே. . .
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையாகிய இயேசுவே. . .
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் . . .எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப். . .எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மு; இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு
நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
து; புனித செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
செபிப்போமாக
சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி! எங்கள் இக்கட்டுகளையும் பலவீனங்களையும் கிருபையுடனே பார்த்து அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்ப துரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி புனித செபஸ்தியாருடைய வேண்டுதலினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படியாக கிருபை செய்தருள வேண்டுமென்று தேவாீரைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். - ஆமென்.
புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு
பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத பண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்பக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா.
ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து பத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபரி முதலிய இராச்சியங்களில் வி;நோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலான வியாதிகளில்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேணுமென்று, நீரே எங்களுக்காக பரம கர்த்தரை வேண்டிக்கொள்ளும் பொருட்டு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத்துக்காக துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும், வியாதிக்காரருக்கு தேவகிருபையால் ஆரோக்கியங்கொடுத்த புனித செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களுக்கு வி;பேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரமகர்த்தர் தற்காத்து இரட்சித்தருள வேணுமென்று தேவகிருபை சிம்மாசனத்தில் மன்றாட உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
பூலோகமெங்கும் சுகிர்த நாமம் உடைத்தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமுமாயிருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்ல மனதைக் கொடுத்தருளும். இந்த இராச்சியத்துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும் சர்வேசுரனை மன்றாடும் படிக்கு உம்மை பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் வெறுத்து இயேசுநாதரைப் பற்றிப் பிராணனைத்தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு மார்செல்லியனுக்கு பத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுகளுடன் இயேசுநாதர் வந்து உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாயென்று சொல்லக்கேட்டு சந்தோ;மடைந்த புனித செபஸ்தியாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் பண்ணிய வழியிலே காங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து கர்த்தரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா
உரோமாபரி தியோக்கிலேசியன் என்ற இராயனால் அநேகம் அம்பகளால் எய்யவும், சாட்டை, கசை பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருச்சாீரத்தை அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கஞ்செய்யப்பட்ட புனித செபஸ்தியாரே, திருச்சபையாரெல்லாம் சர்வேசுரனுடைய சித்தத்துக்கேற்ப நடக்கத்தக்கதாகவும் சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத்தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.- பர, அருள், பிதா.
முதல்; இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக.
துணை; புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக;
கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி! உமது அதி உன்னதமான மகிமை பெற்ற புனித செபஸ்தியார், உமக்காக பட்ட பிரயாசங்களை தேவாீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சாீர நோய்களுக்கு சரியான் ஒள;தமாகத் திருவுளமானீரே, அவரது பேறுபலன்களை பார்த்து எங்கள் ஆத்தும வியாதியிலும், சாீரத்திலும் உண்டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, வி;பேதி முதலிய தொத்து வியாதிகளிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணுமென்று இந்த ஏழு மன்றாட்டுக்களையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி -ஆமென்.
புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்
அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பம் சர்வேசுரன்ளூ பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி;க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.
தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்பபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும்.
ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சிய;்டவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், பண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவாீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். - ஆமென்.