- வணக்க மாதம்
- ஜெபமாலை அன்னை
- நாள் 11-15
பதினோராம் நாள்
கபிரியேல் மங்கள வார்த்தை சொல்லுதல்
"ஆறாம் மாதத்தில் .. தேவதூதன் அவரை விட்டகன்றார் " (லூக் 1: 26 - 33)
இறைவனுடைய கட்டளையைத் தாங்கி கபிரியேல் சம்மனசு நாசரேத்தை நாடுகிறார். தோற்றத்தில் அழகு மின்னும் அரசகுல ஆண் மகன் ; அவரது வதனத்திலிருந்து நாலா பக்கமும் பிரகாசக்கதிர்கள் சிதறுகின்றன . கம்பீரமான தோற்றம் அச்சத்தையன்று , அதிசயக் கவர்ச்சியை அளித்தன . மேலோக தூதர் தனிமையாய்ச் செல்வாரா ? அவரைச் சூழ்ந்து அவருக்கு முன்னும் பின்னும் கணக்கற்ற சம்மனசுக்கள் ஏகினர்
நசரேத்தூர் சிற்றில்லம் சுத்தத்தினால் பளிங்கு போல் இலங்குகிறது . பொருட்கள் அதிகம் இல்லை . வீட்டில் உள்ள சில பொருட்களும் இருக்கவேண்டிய இடத்தில் ஒழுங்காய் இருப்பதால் , காலியான பளிங்கறை என்றே முதல் நிமிஷம் தோற்றமளிக்கிறது . பதினான்காண்டு பெண்மகள் , வயதுக்கு மேலே வளர்த்தியுள்ளவள், சித்திரப்பாவை போல் முக்காலியில் அமர்ந்து நூற்றுக் கொண்டிருக்கிறாள் . இப்பூவுலகில் இத்தகைய அழகுள்ள பெண்மணியும் உண்டா என்று தான் எவரும் மயங்க வேண்டும் .கண்ணும் கருத்தும் ஆண்டவர் மேல் பதிந்திருக்கிறது "வார்த்தையானவர் பிறந்து மக்களோடு வசிக்கும் நாள் வந்து விட்டதா ? மனுமக்கள் மனித உருவில் அவரைப் பார்ப்பார்களா ? அவரைப் பார்த்தறிய பாக்கியம் பெற்றவர் யார் ? அவர் பாத மலர் பதிந்த தரையை முத்தி செய்யத் தவம் புரிந்தோர் யார் ?
" இசையாஸ் குறிக்கும் அவரது அன்னையின் அடிமையாய் இருக்கும் செல்வ பாக்கியவதி யார் ? மோட்சவாசலைத் திறக்கும் தாவீதனின் திறவுகோலே , நித்திய ஞானமே , புதுச்சபைக்குச் சட்டங்கள் வகுப்பவரே வாரும் . உமது மக்களின் அடிமைத்தனத்தைப் போக்கும் . எல்லாச் சரீரமும் உமது ஈடேற்றத்தைக் காண்பதாக " என்று அவளது உள்ளம் செபித்துக் கொண்டிருக்கிறது
திடீரெனக் கண்களைத் திறக்க , வான தூதரைக் காண்கிறார் . அவருக்கு வணக்கம் செலுத்த முக்காலியை விட்டு எழ எத்தனிக்கிறார். " வேண்டாம் ,வேண்டாம் , அது சரியல்ல " என்று கபிரியேல் தூதர் அதைத் தடுத்து , தானே கீழே விழுந்து அவரை நமஸ்கரிக்கிறார். பின்னர் பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து தான் கொண்டு வந்த வாசகத்தைக் கூறுகிறார். " அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே ! பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே !" இப்புகழ்ச்சிமணியின் ஒலியைக் கேட்ட தாழ்மை நிறைந்த மங்கை அம்மொழிகளைக் காதில் வாங்கிக் கலங்குகிறார் ."அரசி அஞ்ச வேண்டாம் . மூவுலகும் ஆளும் தேவன் உமது உத்தரத்தில் அவதரித்துப் பிறக்கப் போகிறார் "
" நான் கன்னிமையென்னும் வார்த்தைப்பாட்டைக் கொடுத்தவள் . ஆணின் காற்றண்டாதவள் . இது எவ்வாறாகும் ? "
"மேலான அரசியே , உமது கன்னிமைக்கு பங்கமில்லாமலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் இது நடக்கும். இதோ , மலடியெனப்பட்ட உமது உறவினளாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் . கடவுளால் ஆகாத காரியம் ஒன்று உண்டோ ? "
தாயே எமது ஈடேற்றம் , மனுக்குலத்தின் இரட்சணியம் , உம கரத்தில் இருக்கிறது. இறைவனுடைய தாயாக சம்மதியும் அன்னையே , மனுக்குலத்தின் நிர்பாக்கியத்தைக் கண்டு சற்று முன் தானே நீர் மனங்கலங்கிக் கொண்டிருந்தீர் "
தாய் தலை குனிந்தார். பொற் பேழையில் பொதிந்து வைக்க வேண்டிய வார்த்தையை வழங்கினார் . "இதோ நான் ஆண்டவருடைய அடிமை . உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக் கடவது "
அந்நேரமே வானலோகத்தவர் மகிழ்ச்சிக் கீதம் இசைத்தனர் . திரியேக இறைவன் கன்னியின் இரத்தத்திலிருந்து ஓர் உயிரை உருவாக்கினார். ஓர் ஆத்துமத்தைச் சிருஷ்டித்தார் . இரண்டாம் ஆளான வார்த்தையானவர் அந்த மனுஷீகத்தை எடுத்துக் கொண்டார். மனித அவதாரம் நிறைவேறியது . வானமே , பூமியே மகிழுங்கள் . திரியேக தேவனைப் புகழுங்கள் .
இரண்டாம் தேவ ஆள் மனித அவதாரம் எடுத்து மனுக்குலத்தைப் பழைய உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டுமென்று தீர்மானித்த ஞானமானவர் தமது அன்பின் வழியின் பிரகாரம் செய்வார் . அது அவருக்குத் தாயாக வேண்டியவளின் சம்மதத்தின்மேல் நிறைவேற வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார். மரியும் அன்பின் வழியே நடந்து யாதொரு கட்டாயமுமின்றி அதற்குச் சம்மதித்தார். அதனால் வர இருக்கும் துக்கம் துயரம் எல்லாம் தெரிந்தும் தாயாகச் சம்மதித்தது அவரது பெருந்தன்மையையும் , தாராள சிந்தையையும் துலக்குகிறது . அதேபோல நாமும் அன்பின் வழியைப் பின்பற்றி நமது ஈடேற்றத்திற்காக உழைக்க வேண்டியவர்கள்
கன்னித்தாய் தனிப்பட்ட முறையில் மட்டும் தம் சம்மதத்தை அளிக்கவில்லை . மனுக்குலத்தின் பேரால் சம்மதம் அளித்தார். ஆதாமின் பாவத்திற்கு ஏவை காரணமாயிருந்தது போல, இயேசு உலகை ஈடேற்றும் பணிக்கு கன்னிமரி காரணமாயிருக்க வேண்டியவர்.
வார்த்தையானவர் மாம்சமானார் . கன்னிமரி தன உதரத்தில் குழந்தையைத் தாங்கிச் சென்றவர். இறைவனை மனித உருவில் தாங்கிச் சென்றார் . பரிசுத்த சூசை அர்ச் கன்னிமரியாளின் மெய்யான பத்தா. எனினும் இந்த இரகசியத்தை அவருக்கு அறிவிக்கவில்லை . ஆதலால் அவருக்கு எவ்வளவு வாதனை ! சூசையப்பருக்கும் எவ்வளவு கலக்கம் . இரகசியமாய் இறைவனைச் சுமந்து செல்லுகிறவர்களைக் கண்டுபிடிக்கிறவர்கள் அபூர்வம் . அவர்கள் நண்பர்கள் முதலாய் , கடவுளை நேசிக்கும் நண்பர்கள் முதலாய்க் கண்டுபிடிக்காமல் அவர்களைக் கலங்கடித்துத் தானும் கலங்குகிறார்கள் . இதற்கு இறைவன் சம்மதிக்கிறார்
செபம்
உயிரளிக்கும் பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். நாங்கள் வாழும் வண்ணம் எங்கள் உள்ளத்தில் இறங்கி வாரும் . வெறுமை நிறையும் வண்ணம் வெறுமையில் இறங்கி வாரும் . தூசி பூத்துக் குலுங்கும்படி தூசிக்குள் இறங்கி வாரும் . இருளில் ஒளி பிரகாசிக்கும்வண்ணம் இருளுக்குள் இறங்கி வாரும் . செபமாலையை நாங்கள் பக்தியாய்ச் செய்து முடிக்க எங்கள் மேல் இறங்கியருளும் ஆமென்
சரிதை
ஆலன்லான்வாலி , ஆல்பிஜென்சியர் என்னும் அசத்தியத்தைக் கக்கும் விரோதிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த பெரெத்தொன் படை வீரன் . ஒரு நாள் பகைவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள் . செபமாளைப் பக்தியுள்ள அவர் செபமாலை அன்னையிடம் வேண்டிக் கொண்டார் . திடீரென்று நூற்று ஐம்பது கற்கள் அவரது எதிரிகள் மேல் விழவே ,அவர்கள் ஓடிப் போயினர் . அவர் தப்பிப் பிழைத்தார் . வேறொரு சமயம் அவர் பயணித்த கப்பல் தண்ணீரில் மூழ்கி அமிழும் தருவாயில் இருந்தது . தேவதாயின் கிருபையால் நூற்று ஐம்பது சிறு சிறு குன்றுகள் தண்ணீருக்கு மேல் தோன்றின . அவைகளின் உதவியால் அவர் பேரேத்தனி சுகமாய்ப் போய் சேர்ந்தார்
இப்புதுமைகளுக்கு நன்றியறிதலாக தீனான் என்னும் நகரில் சாமிநாதர் சபைத் துறவிகளுக்கு ஓர் ஆசிரமம் எழுப்பினார். அவர் ஒவ்வொரு நாளும் செபமாலை செபித்து வந்தார் . இறுதியில் அவர் துறவறத்தில் சேர்ந்து ஆர்லீன்ஸ் நகரில் பாக்கியமாய் மரித்து ஆண்டவரின் பாதம் சேர்ந்தார்
கபிரியேல் மங்கள வார்த்தை சொல்லுதல்
"ஆறாம் மாதத்தில் .. தேவதூதன் அவரை விட்டகன்றார் " (லூக் 1: 26 - 33)
இறைவனுடைய கட்டளையைத் தாங்கி கபிரியேல் சம்மனசு நாசரேத்தை நாடுகிறார். தோற்றத்தில் அழகு மின்னும் அரசகுல ஆண் மகன் ; அவரது வதனத்திலிருந்து நாலா பக்கமும் பிரகாசக்கதிர்கள் சிதறுகின்றன . கம்பீரமான தோற்றம் அச்சத்தையன்று , அதிசயக் கவர்ச்சியை அளித்தன . மேலோக தூதர் தனிமையாய்ச் செல்வாரா ? அவரைச் சூழ்ந்து அவருக்கு முன்னும் பின்னும் கணக்கற்ற சம்மனசுக்கள் ஏகினர்
நசரேத்தூர் சிற்றில்லம் சுத்தத்தினால் பளிங்கு போல் இலங்குகிறது . பொருட்கள் அதிகம் இல்லை . வீட்டில் உள்ள சில பொருட்களும் இருக்கவேண்டிய இடத்தில் ஒழுங்காய் இருப்பதால் , காலியான பளிங்கறை என்றே முதல் நிமிஷம் தோற்றமளிக்கிறது . பதினான்காண்டு பெண்மகள் , வயதுக்கு மேலே வளர்த்தியுள்ளவள், சித்திரப்பாவை போல் முக்காலியில் அமர்ந்து நூற்றுக் கொண்டிருக்கிறாள் . இப்பூவுலகில் இத்தகைய அழகுள்ள பெண்மணியும் உண்டா என்று தான் எவரும் மயங்க வேண்டும் .கண்ணும் கருத்தும் ஆண்டவர் மேல் பதிந்திருக்கிறது "வார்த்தையானவர் பிறந்து மக்களோடு வசிக்கும் நாள் வந்து விட்டதா ? மனுமக்கள் மனித உருவில் அவரைப் பார்ப்பார்களா ? அவரைப் பார்த்தறிய பாக்கியம் பெற்றவர் யார் ? அவர் பாத மலர் பதிந்த தரையை முத்தி செய்யத் தவம் புரிந்தோர் யார் ?
" இசையாஸ் குறிக்கும் அவரது அன்னையின் அடிமையாய் இருக்கும் செல்வ பாக்கியவதி யார் ? மோட்சவாசலைத் திறக்கும் தாவீதனின் திறவுகோலே , நித்திய ஞானமே , புதுச்சபைக்குச் சட்டங்கள் வகுப்பவரே வாரும் . உமது மக்களின் அடிமைத்தனத்தைப் போக்கும் . எல்லாச் சரீரமும் உமது ஈடேற்றத்தைக் காண்பதாக " என்று அவளது உள்ளம் செபித்துக் கொண்டிருக்கிறது
திடீரெனக் கண்களைத் திறக்க , வான தூதரைக் காண்கிறார் . அவருக்கு வணக்கம் செலுத்த முக்காலியை விட்டு எழ எத்தனிக்கிறார். " வேண்டாம் ,வேண்டாம் , அது சரியல்ல " என்று கபிரியேல் தூதர் அதைத் தடுத்து , தானே கீழே விழுந்து அவரை நமஸ்கரிக்கிறார். பின்னர் பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து தான் கொண்டு வந்த வாசகத்தைக் கூறுகிறார். " அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே ! பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே !" இப்புகழ்ச்சிமணியின் ஒலியைக் கேட்ட தாழ்மை நிறைந்த மங்கை அம்மொழிகளைக் காதில் வாங்கிக் கலங்குகிறார் ."அரசி அஞ்ச வேண்டாம் . மூவுலகும் ஆளும் தேவன் உமது உத்தரத்தில் அவதரித்துப் பிறக்கப் போகிறார் "
" நான் கன்னிமையென்னும் வார்த்தைப்பாட்டைக் கொடுத்தவள் . ஆணின் காற்றண்டாதவள் . இது எவ்வாறாகும் ? "
"மேலான அரசியே , உமது கன்னிமைக்கு பங்கமில்லாமலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் இது நடக்கும். இதோ , மலடியெனப்பட்ட உமது உறவினளாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் . கடவுளால் ஆகாத காரியம் ஒன்று உண்டோ ? "
தாயே எமது ஈடேற்றம் , மனுக்குலத்தின் இரட்சணியம் , உம கரத்தில் இருக்கிறது. இறைவனுடைய தாயாக சம்மதியும் அன்னையே , மனுக்குலத்தின் நிர்பாக்கியத்தைக் கண்டு சற்று முன் தானே நீர் மனங்கலங்கிக் கொண்டிருந்தீர் "
தாய் தலை குனிந்தார். பொற் பேழையில் பொதிந்து வைக்க வேண்டிய வார்த்தையை வழங்கினார் . "இதோ நான் ஆண்டவருடைய அடிமை . உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக் கடவது "
அந்நேரமே வானலோகத்தவர் மகிழ்ச்சிக் கீதம் இசைத்தனர் . திரியேக இறைவன் கன்னியின் இரத்தத்திலிருந்து ஓர் உயிரை உருவாக்கினார். ஓர் ஆத்துமத்தைச் சிருஷ்டித்தார் . இரண்டாம் ஆளான வார்த்தையானவர் அந்த மனுஷீகத்தை எடுத்துக் கொண்டார். மனித அவதாரம் நிறைவேறியது . வானமே , பூமியே மகிழுங்கள் . திரியேக தேவனைப் புகழுங்கள் .
இரண்டாம் தேவ ஆள் மனித அவதாரம் எடுத்து மனுக்குலத்தைப் பழைய உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டுமென்று தீர்மானித்த ஞானமானவர் தமது அன்பின் வழியின் பிரகாரம் செய்வார் . அது அவருக்குத் தாயாக வேண்டியவளின் சம்மதத்தின்மேல் நிறைவேற வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார். மரியும் அன்பின் வழியே நடந்து யாதொரு கட்டாயமுமின்றி அதற்குச் சம்மதித்தார். அதனால் வர இருக்கும் துக்கம் துயரம் எல்லாம் தெரிந்தும் தாயாகச் சம்மதித்தது அவரது பெருந்தன்மையையும் , தாராள சிந்தையையும் துலக்குகிறது . அதேபோல நாமும் அன்பின் வழியைப் பின்பற்றி நமது ஈடேற்றத்திற்காக உழைக்க வேண்டியவர்கள்
கன்னித்தாய் தனிப்பட்ட முறையில் மட்டும் தம் சம்மதத்தை அளிக்கவில்லை . மனுக்குலத்தின் பேரால் சம்மதம் அளித்தார். ஆதாமின் பாவத்திற்கு ஏவை காரணமாயிருந்தது போல, இயேசு உலகை ஈடேற்றும் பணிக்கு கன்னிமரி காரணமாயிருக்க வேண்டியவர்.
வார்த்தையானவர் மாம்சமானார் . கன்னிமரி தன உதரத்தில் குழந்தையைத் தாங்கிச் சென்றவர். இறைவனை மனித உருவில் தாங்கிச் சென்றார் . பரிசுத்த சூசை அர்ச் கன்னிமரியாளின் மெய்யான பத்தா. எனினும் இந்த இரகசியத்தை அவருக்கு அறிவிக்கவில்லை . ஆதலால் அவருக்கு எவ்வளவு வாதனை ! சூசையப்பருக்கும் எவ்வளவு கலக்கம் . இரகசியமாய் இறைவனைச் சுமந்து செல்லுகிறவர்களைக் கண்டுபிடிக்கிறவர்கள் அபூர்வம் . அவர்கள் நண்பர்கள் முதலாய் , கடவுளை நேசிக்கும் நண்பர்கள் முதலாய்க் கண்டுபிடிக்காமல் அவர்களைக் கலங்கடித்துத் தானும் கலங்குகிறார்கள் . இதற்கு இறைவன் சம்மதிக்கிறார்
செபம்
உயிரளிக்கும் பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். நாங்கள் வாழும் வண்ணம் எங்கள் உள்ளத்தில் இறங்கி வாரும் . வெறுமை நிறையும் வண்ணம் வெறுமையில் இறங்கி வாரும் . தூசி பூத்துக் குலுங்கும்படி தூசிக்குள் இறங்கி வாரும் . இருளில் ஒளி பிரகாசிக்கும்வண்ணம் இருளுக்குள் இறங்கி வாரும் . செபமாலையை நாங்கள் பக்தியாய்ச் செய்து முடிக்க எங்கள் மேல் இறங்கியருளும் ஆமென்
சரிதை
ஆலன்லான்வாலி , ஆல்பிஜென்சியர் என்னும் அசத்தியத்தைக் கக்கும் விரோதிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த பெரெத்தொன் படை வீரன் . ஒரு நாள் பகைவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள் . செபமாளைப் பக்தியுள்ள அவர் செபமாலை அன்னையிடம் வேண்டிக் கொண்டார் . திடீரென்று நூற்று ஐம்பது கற்கள் அவரது எதிரிகள் மேல் விழவே ,அவர்கள் ஓடிப் போயினர் . அவர் தப்பிப் பிழைத்தார் . வேறொரு சமயம் அவர் பயணித்த கப்பல் தண்ணீரில் மூழ்கி அமிழும் தருவாயில் இருந்தது . தேவதாயின் கிருபையால் நூற்று ஐம்பது சிறு சிறு குன்றுகள் தண்ணீருக்கு மேல் தோன்றின . அவைகளின் உதவியால் அவர் பேரேத்தனி சுகமாய்ப் போய் சேர்ந்தார்
இப்புதுமைகளுக்கு நன்றியறிதலாக தீனான் என்னும் நகரில் சாமிநாதர் சபைத் துறவிகளுக்கு ஓர் ஆசிரமம் எழுப்பினார். அவர் ஒவ்வொரு நாளும் செபமாலை செபித்து வந்தார் . இறுதியில் அவர் துறவறத்தில் சேர்ந்து ஆர்லீன்ஸ் நகரில் பாக்கியமாய் மரித்து ஆண்டவரின் பாதம் சேர்ந்தார்
பன்னிரண்டாம் நாள்
கன்னிமரி எலிசபெத்தம்மாளை வினவுகிறார்
வயது முதிர்ந்த உறவினளின் இரகசியத்தை அறிந்த உடனே அவளைக் காண வேண்டும் என்று மரியின் மனம் தவிக்கின்றது . " அந்நாளில் மரி எழுந்து மலைப் பிரதேசத்தில் உள்ள யூதாவின் நகரை நோக்கி விரைந்து சென்றார் " லூக் 1:39 -59
-
மரியிடம் இருந்து மனுரூபம் எடுத்து ,அவரது இருண்ட உதரத்தில் வல்லமையற்றவராகப் பலவீனராகப் படுத்த நாதர் , அவர் பிரியம் போல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல இணங்குகிறார். குழந்தையின் கைப்பொம்மை போல . ஈடேற்ற அருள் வழியில் முதல் அடி எடுத்து வைத்தல் இப்பிரயாணம் . மனுமக்களை ஈடேற்றக் கடவுள் செய்ததென்ன ? மக்களின் கரங்களில் , அதிகாரத்தில் , தம்மைக் கையளித்து விடுகிறார் . மாமரி இந்தப் பதவிக்கு ஏற்றவர் . இந்நாள் முதல் அவர் எங்கு சென்றாலும் ஏசுவைக் கொண்டுவருவார் . திருச்சபைச் சரிதையும் இதை விளக்குகிறது. எங்காவது தேவதாய்க்கு விஷேஷ வணக்கம் வளருமேயாகில் , அது தேவ நற்கருணைப்பக்தியில் மலர்ந்து பழுக்கும் . லூர்துநகர் காட்சியிலும் , அற்புத நீரூற்றிலும் தோன்றியது லூர்துமாதாவின் பக்தி . இப்போது தேவ நற்கருணைச் சுற்றுப் பிரகாரத்தில் தானே பெரும் புதுமைகள் பூக்கின்றன .
பெருந்தன்மையும் தாராள சிந்தையும் உள்ள அன்னையின் அன்பை இங்கு காணலாம் . மலைக்காடு- பாதையோ கஷ்டம் - ஐந்து நாள் பிரயாணமா - அதற்கும் மேலா - உண்ண , உறைய எவ்வளவு சிரமம் ! குளிரும் , பனியும், வெயிலும் இலேசா? அன்பு சிரமம் அறியாது . உறவினளின் மகிழ்ச்சியை இரசித்தவளாய் புள்ளி மானைப் போல் துள்ளி ஓடுகிறார் இக்குழந்தை . (பதினான்கு வயதானாலும் குழந்தை தானே ) இந்த இளமங்கை விருந்தாடும் நோக்கோடு போகவில்லை . வயது முதிர்ந்த எலிசபெத்துக்கு பனி புரியும் கருத்தோடு செல்கிறார். வழியில் வயிற்றிலிருக்கும் தெய்வக் குழந்தை என்ன ஞான மகிழ்ச்சித் தேனைத் தாயின் உள்ளத்தில் பொழிந்திருக்க வேண்டும் ! தாய்க்குத் தம் மகனின் காட்சி , சிந்தை , செபம் , இது அன்னையின் அலுவல் . நம் பிரயாணங்களில் இயேசுவைத் தங்க வைத்து நாம் மட்டும் போகலாகாது . இயேசுவின் சிந்தையையாவது தாங்கிச் செல்ல வேண்டும் .
கன்னிமரி எலிசபெத்தின் இல்லம் இறங்கியவுடனே குதூகலத்தோடு உறவினளை வாழ்த்தி நலம் விசாரிக்கிறார் . மாமரியின் பிரசன்னத்தினால் எலிசபெத் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறாள் . வந்திருப்பவர் சாதாரண உறவினர் அல்ல , இறைவனின் தாய் என்று முதியவளுக்குத் தெரிய வருகிறது . கன்னித்தாயின் சுயநலமற்ற அன்பு மனிதாவதாரத்திற்கு பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட முதல் சாட்சியைப் பிறப்பிக்கின்றது
'மாக்னிஃபிக்காத் '- என் ஆத்துமமானது ஆண்டவரை போற்றுகின்றது " என்று உன்னத கீதம் முழங்குகிறது . இக்கீதத்தை ஆழ்ந்து அலசிப் பார்க்கிறவர்கள் சமூகப் பிரச்சனைகளுக்கு முடிவையும் , வழியையும் , மெய்யான மானிட வாழ்வுக்கு வழியையும் காண்பர். மாமரி தம் ஒன்றும் இல்லாமையை உணர்ந்தார் , கடவுளைப் புகழ்ந்தார் , அவரிடத்தில் மெய்யான தாழ்ச்சி ஆழ்ந்து ஓடுகிறது . ஆதலால் இறைவன் தம் அரிய கொடைகளையும் அவரிடம் ஒப்படைக்கலாம் . அவரைச் சந்ததி சந்ததியாய் எல்லாத் தலைமுறைகளும் வாழ்த்தலாம் . " வல்லபமுள்ளவர்களை உயர்ந்த அரியணையினின்று தள்ளி, தாழ்ந்தவர்களை உயர்த்தினார் ". வருங்காலத்தில் இயேசுபிரான் நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களையும் ஆசீர்வதிப்பார் . அதைக் கன்னித்தாய் இப்பொழுதே கற்றுக் கொண்டார் . " பசித்தவர்களை நன்மைகளால் நிரப்பித் தனவந்தர்களை வெறுமையாய் அலைய விட்டார் " என்றார் . இக்கீதத்தை ஊன்றிப் பார்ப்போமாக .
இருவரும் தங்கள் சுகக்ஷேம விசாரணை முடிந்தபின் நடையைக் கடந்து உள்ளே சென்றனர் .கன்னிமரி சக்கரியாசின் முன் முழந்தாள்படியிட்டு ஆசீரைப் பெறுகிறார் . அவர் குருவல்லவா ? அவருக்கு நிகழ்ந்த குறையைக் காண மாமரிக்கு உள்ளத்தில் வருத்தம்
எலிசபெத் தன சொந்தமான உள் அறையை , மாமரி ஒதுங்கி செபிக்க ஒழித்துக் கொடுக்கிறாள். இரவும் பகலும் எத்தனையோ மணிநேரம் கன்னித்தாய் செபத்தில் ஈடுபட்டிருந்தார். நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கே எழுந்து கன்னித்தாய் செபிப்பார் என்று சில தரிசனிகளும் பக்தியுள்ளோரும் சொல்லிப் போயிருக்கின்றனர்
எலிசபெத் வயது முதிர்ந்தவள் . மேலும் இந்த உடல் நிலையில் அவளால் என்ன வேலை செய்ய முடியும் ? வீட்டைப் பெருக்குவதும் , பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவுவதும் , துணிகளைத் துவைத்துக் காய வைப்பதும் , தானியத்தைத் திருகையில் வைத்து அரைப்பதும் , சமையல் செய்வதும் , குடும்பத்தில் எவ்வளவோ சிறு சிறு அலுவல்கள் உள என்று பெண்களுக்குத் தெரியும் . எல்லாவற்றையும் கன்னித்தாய் செய்திருப்பாள் . முதல் துவக்கத்தில் எலிசபெத் சம்மதிக்காமல் வாதாடினாள் . ஆனால் அன்புப் போட்டியில் , தாழ்ந்த சேவைப் போட்டியில் , மாமரிக்கே வெற்றி . எலிசபெத் அடுத்த தினத்தில் இருந்து சும்மா இருந்து விட்டாள். மலர்கொத்துக்களையும் அங்கும் இங்கும் மனையில் வைத்து சிற்றில்லத்தின் அழகை சௌந்தரவதியான கன்னிகை பெருக்கினாள்.
சிறிது நேரம் ஒவ்வொரு நாளும் இரு பெண்களும் சல்லாபித்திருக்கலாம் . தனக்குப் பிறக்கப் போகும் பிள்ளை தீர்க்கதரிசி என்று எலிசபெத் அறிவாள்; தம் குழந்தை உலக இரட்சகர் என்று தேவதாய்க்குத் தெரியும் . இவைகளைப் பற்றி பெரும் அதிசயத்தோடு பேசி இருவரும் ஆண்டவரைப் புகழ்ந்தார்கள்
சேவிகைகளுக்கு , பொதுவில் பெண் மக்களுக்கு , கன்னித்தாய் எடுத்துக்காட்டு
செபம்
முட்கள் காற்றில் பறப்பது போல் கிறிஸ்துவின் சிநேக ஓட்டத்தில் எங்களைத் தூக்கிச் செல்லும் மோட்ச ஆவியே , எங்கள் ஆத்துமம் துளிர் விடும் காலம் , கிறிஸ்து எங்களில் இரகசியமாக மௌனத்தால் உருவாகும்போது சிருஷ்டிகளின் கரங்களில் சிருஷ்டிகரைப் போலவும் , குருவானவரின் கரங்களில் ஒச்தியைப் போலவும் நாங்கள் சுமந்து செல்லக் கிருபை செய்யும் . எலிசபத்தின் இல்லத்திற்கு சிநேக அலுவலின் நிமித்தம் மலைகளின் மேல் மாமரி அவரைக் கொண்டுபோனது போல , நாங்களும் அவரைத் தாங்கிச் செல்ல கிருபை செய்தருளும் ஆமென்
சரிதை
13 ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் ஒரு பெண் இருந்தாள். மகா புத்தியுள்ளவள். பெரும் புண்ணியவதி. ஆனால் தான் என்ற மமதை கொண்டவள் . அர்ச் சாமினாதரின் ஆலோசனையைக் கேட்க எண்ணி அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யப் போனாள். பரிகாரமாக ஒரு முழுச் செபமாலை செய்யச் சொன்னதோடு , தினந்தோறும் செபமாலை செய்து வர புத்தி சொன்னார். தான் நாள்தோறும் ரோமாபுரியிலுள்ள பல கோவில்களைச் சந்தித்து வருவதாகவும் , இது முடியாத காரியம் என்றும் , மேலும் உரோம ஆடை தரித்திருப்பதாகவும் , ஆதலால் இப்புது வழக்கம் தனக்குத் தேவையில்லை என்றும் சொன்னாள்.
செபமாலைப் பக்தியின் மேன்மையை புனிதர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியும் அவளுக்கு அது உரைக்கவில்லை. தனக்குப் பிரியமில்லா வழக்கத்தைத் தன் தலையிலே கட்டிவிடத் தேடிய புது ஆத்தும குருவின் புத்திமதிக்குப் பயந்தவளாய் வீடு திரும்பினாள். எனினும் ஒரு செபமாலை மட்டும் சொல்லி முடித்தாள்
பின்னொரு நாள் செபம் செய்து கொண்டிருக்கும்போது அவள் பரவசமானாள் . நீதி சிம்மாசனத்தில் வீற்றிருந்த இயேசுவிடம் அவள் ஆத்துமம் சென்றது . மிக்கேல் சம்மனசு அவள் செபதவங்களை ஒரு தராசுத் தட்டில் வைத்து மற்றொன்றில் அவளது குற்றங்குறைகளை எல்லாம் வைத்தார் . குற்றம் குறையுள்ள தட்டு கீழே சென்றது (அகங்காரி இப்போதாவது உன் அகங்காரத்தைக் கண்டுணர்ந்தாயா?)
பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சைப் போல் அவள் பயந்து போய் தனக்கு அடைக்கலமாகத் தேவதையை அழைத்துத் தன்மேல் இரக்கமாயிருக்கும்படி கெஞ்சினாள். அபராதமாக அவள் ஒரு செபமாலை சொல்லி இருந்தாள் அல்லவா ? அவள் சொன்ன ஒரே செபமாலையை நற்கிரியைகள் உள்ள தட்டில் தேவதாய் வைத்தார் . அவளுடைய பாவங்களை எல்லாம் விட இச்செபமாலை அதிக நிறையாய் இருந்தது . சாமினாதரின் புத்தியை கேளாததற்கு தேவதாய் அவளை இலேசாகக் கண்டித்தார்
தன் நினைவுக்கு வந்த உடனே அவள் ஓடி , சாமிநாதர் பாதத்தில் விழுந்து நடந்தவை எல்லாவற்றையும் சொல்லி, அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டாள். தினந்தோறும் செபமாலை சொல்லி வர போவதாக ஒப்புக் கொண்டாள். இவ்வழக்கத்தால் புண்ணிய பாதையில் விரைந்து நடந்தாள்
கன்னிமரி எலிசபெத்தம்மாளை வினவுகிறார்
வயது முதிர்ந்த உறவினளின் இரகசியத்தை அறிந்த உடனே அவளைக் காண வேண்டும் என்று மரியின் மனம் தவிக்கின்றது . " அந்நாளில் மரி எழுந்து மலைப் பிரதேசத்தில் உள்ள யூதாவின் நகரை நோக்கி விரைந்து சென்றார் " லூக் 1:39 -59
-
மரியிடம் இருந்து மனுரூபம் எடுத்து ,அவரது இருண்ட உதரத்தில் வல்லமையற்றவராகப் பலவீனராகப் படுத்த நாதர் , அவர் பிரியம் போல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல இணங்குகிறார். குழந்தையின் கைப்பொம்மை போல . ஈடேற்ற அருள் வழியில் முதல் அடி எடுத்து வைத்தல் இப்பிரயாணம் . மனுமக்களை ஈடேற்றக் கடவுள் செய்ததென்ன ? மக்களின் கரங்களில் , அதிகாரத்தில் , தம்மைக் கையளித்து விடுகிறார் . மாமரி இந்தப் பதவிக்கு ஏற்றவர் . இந்நாள் முதல் அவர் எங்கு சென்றாலும் ஏசுவைக் கொண்டுவருவார் . திருச்சபைச் சரிதையும் இதை விளக்குகிறது. எங்காவது தேவதாய்க்கு விஷேஷ வணக்கம் வளருமேயாகில் , அது தேவ நற்கருணைப்பக்தியில் மலர்ந்து பழுக்கும் . லூர்துநகர் காட்சியிலும் , அற்புத நீரூற்றிலும் தோன்றியது லூர்துமாதாவின் பக்தி . இப்போது தேவ நற்கருணைச் சுற்றுப் பிரகாரத்தில் தானே பெரும் புதுமைகள் பூக்கின்றன .
பெருந்தன்மையும் தாராள சிந்தையும் உள்ள அன்னையின் அன்பை இங்கு காணலாம் . மலைக்காடு- பாதையோ கஷ்டம் - ஐந்து நாள் பிரயாணமா - அதற்கும் மேலா - உண்ண , உறைய எவ்வளவு சிரமம் ! குளிரும் , பனியும், வெயிலும் இலேசா? அன்பு சிரமம் அறியாது . உறவினளின் மகிழ்ச்சியை இரசித்தவளாய் புள்ளி மானைப் போல் துள்ளி ஓடுகிறார் இக்குழந்தை . (பதினான்கு வயதானாலும் குழந்தை தானே ) இந்த இளமங்கை விருந்தாடும் நோக்கோடு போகவில்லை . வயது முதிர்ந்த எலிசபெத்துக்கு பனி புரியும் கருத்தோடு செல்கிறார். வழியில் வயிற்றிலிருக்கும் தெய்வக் குழந்தை என்ன ஞான மகிழ்ச்சித் தேனைத் தாயின் உள்ளத்தில் பொழிந்திருக்க வேண்டும் ! தாய்க்குத் தம் மகனின் காட்சி , சிந்தை , செபம் , இது அன்னையின் அலுவல் . நம் பிரயாணங்களில் இயேசுவைத் தங்க வைத்து நாம் மட்டும் போகலாகாது . இயேசுவின் சிந்தையையாவது தாங்கிச் செல்ல வேண்டும் .
கன்னிமரி எலிசபெத்தின் இல்லம் இறங்கியவுடனே குதூகலத்தோடு உறவினளை வாழ்த்தி நலம் விசாரிக்கிறார் . மாமரியின் பிரசன்னத்தினால் எலிசபெத் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறாள் . வந்திருப்பவர் சாதாரண உறவினர் அல்ல , இறைவனின் தாய் என்று முதியவளுக்குத் தெரிய வருகிறது . கன்னித்தாயின் சுயநலமற்ற அன்பு மனிதாவதாரத்திற்கு பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட முதல் சாட்சியைப் பிறப்பிக்கின்றது
'மாக்னிஃபிக்காத் '- என் ஆத்துமமானது ஆண்டவரை போற்றுகின்றது " என்று உன்னத கீதம் முழங்குகிறது . இக்கீதத்தை ஆழ்ந்து அலசிப் பார்க்கிறவர்கள் சமூகப் பிரச்சனைகளுக்கு முடிவையும் , வழியையும் , மெய்யான மானிட வாழ்வுக்கு வழியையும் காண்பர். மாமரி தம் ஒன்றும் இல்லாமையை உணர்ந்தார் , கடவுளைப் புகழ்ந்தார் , அவரிடத்தில் மெய்யான தாழ்ச்சி ஆழ்ந்து ஓடுகிறது . ஆதலால் இறைவன் தம் அரிய கொடைகளையும் அவரிடம் ஒப்படைக்கலாம் . அவரைச் சந்ததி சந்ததியாய் எல்லாத் தலைமுறைகளும் வாழ்த்தலாம் . " வல்லபமுள்ளவர்களை உயர்ந்த அரியணையினின்று தள்ளி, தாழ்ந்தவர்களை உயர்த்தினார் ". வருங்காலத்தில் இயேசுபிரான் நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களையும் ஆசீர்வதிப்பார் . அதைக் கன்னித்தாய் இப்பொழுதே கற்றுக் கொண்டார் . " பசித்தவர்களை நன்மைகளால் நிரப்பித் தனவந்தர்களை வெறுமையாய் அலைய விட்டார் " என்றார் . இக்கீதத்தை ஊன்றிப் பார்ப்போமாக .
இருவரும் தங்கள் சுகக்ஷேம விசாரணை முடிந்தபின் நடையைக் கடந்து உள்ளே சென்றனர் .கன்னிமரி சக்கரியாசின் முன் முழந்தாள்படியிட்டு ஆசீரைப் பெறுகிறார் . அவர் குருவல்லவா ? அவருக்கு நிகழ்ந்த குறையைக் காண மாமரிக்கு உள்ளத்தில் வருத்தம்
எலிசபெத் தன சொந்தமான உள் அறையை , மாமரி ஒதுங்கி செபிக்க ஒழித்துக் கொடுக்கிறாள். இரவும் பகலும் எத்தனையோ மணிநேரம் கன்னித்தாய் செபத்தில் ஈடுபட்டிருந்தார். நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கே எழுந்து கன்னித்தாய் செபிப்பார் என்று சில தரிசனிகளும் பக்தியுள்ளோரும் சொல்லிப் போயிருக்கின்றனர்
எலிசபெத் வயது முதிர்ந்தவள் . மேலும் இந்த உடல் நிலையில் அவளால் என்ன வேலை செய்ய முடியும் ? வீட்டைப் பெருக்குவதும் , பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவுவதும் , துணிகளைத் துவைத்துக் காய வைப்பதும் , தானியத்தைத் திருகையில் வைத்து அரைப்பதும் , சமையல் செய்வதும் , குடும்பத்தில் எவ்வளவோ சிறு சிறு அலுவல்கள் உள என்று பெண்களுக்குத் தெரியும் . எல்லாவற்றையும் கன்னித்தாய் செய்திருப்பாள் . முதல் துவக்கத்தில் எலிசபெத் சம்மதிக்காமல் வாதாடினாள் . ஆனால் அன்புப் போட்டியில் , தாழ்ந்த சேவைப் போட்டியில் , மாமரிக்கே வெற்றி . எலிசபெத் அடுத்த தினத்தில் இருந்து சும்மா இருந்து விட்டாள். மலர்கொத்துக்களையும் அங்கும் இங்கும் மனையில் வைத்து சிற்றில்லத்தின் அழகை சௌந்தரவதியான கன்னிகை பெருக்கினாள்.
சிறிது நேரம் ஒவ்வொரு நாளும் இரு பெண்களும் சல்லாபித்திருக்கலாம் . தனக்குப் பிறக்கப் போகும் பிள்ளை தீர்க்கதரிசி என்று எலிசபெத் அறிவாள்; தம் குழந்தை உலக இரட்சகர் என்று தேவதாய்க்குத் தெரியும் . இவைகளைப் பற்றி பெரும் அதிசயத்தோடு பேசி இருவரும் ஆண்டவரைப் புகழ்ந்தார்கள்
சேவிகைகளுக்கு , பொதுவில் பெண் மக்களுக்கு , கன்னித்தாய் எடுத்துக்காட்டு
செபம்
முட்கள் காற்றில் பறப்பது போல் கிறிஸ்துவின் சிநேக ஓட்டத்தில் எங்களைத் தூக்கிச் செல்லும் மோட்ச ஆவியே , எங்கள் ஆத்துமம் துளிர் விடும் காலம் , கிறிஸ்து எங்களில் இரகசியமாக மௌனத்தால் உருவாகும்போது சிருஷ்டிகளின் கரங்களில் சிருஷ்டிகரைப் போலவும் , குருவானவரின் கரங்களில் ஒச்தியைப் போலவும் நாங்கள் சுமந்து செல்லக் கிருபை செய்யும் . எலிசபத்தின் இல்லத்திற்கு சிநேக அலுவலின் நிமித்தம் மலைகளின் மேல் மாமரி அவரைக் கொண்டுபோனது போல , நாங்களும் அவரைத் தாங்கிச் செல்ல கிருபை செய்தருளும் ஆமென்
சரிதை
13 ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் ஒரு பெண் இருந்தாள். மகா புத்தியுள்ளவள். பெரும் புண்ணியவதி. ஆனால் தான் என்ற மமதை கொண்டவள் . அர்ச் சாமினாதரின் ஆலோசனையைக் கேட்க எண்ணி அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யப் போனாள். பரிகாரமாக ஒரு முழுச் செபமாலை செய்யச் சொன்னதோடு , தினந்தோறும் செபமாலை செய்து வர புத்தி சொன்னார். தான் நாள்தோறும் ரோமாபுரியிலுள்ள பல கோவில்களைச் சந்தித்து வருவதாகவும் , இது முடியாத காரியம் என்றும் , மேலும் உரோம ஆடை தரித்திருப்பதாகவும் , ஆதலால் இப்புது வழக்கம் தனக்குத் தேவையில்லை என்றும் சொன்னாள்.
செபமாலைப் பக்தியின் மேன்மையை புனிதர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியும் அவளுக்கு அது உரைக்கவில்லை. தனக்குப் பிரியமில்லா வழக்கத்தைத் தன் தலையிலே கட்டிவிடத் தேடிய புது ஆத்தும குருவின் புத்திமதிக்குப் பயந்தவளாய் வீடு திரும்பினாள். எனினும் ஒரு செபமாலை மட்டும் சொல்லி முடித்தாள்
பின்னொரு நாள் செபம் செய்து கொண்டிருக்கும்போது அவள் பரவசமானாள் . நீதி சிம்மாசனத்தில் வீற்றிருந்த இயேசுவிடம் அவள் ஆத்துமம் சென்றது . மிக்கேல் சம்மனசு அவள் செபதவங்களை ஒரு தராசுத் தட்டில் வைத்து மற்றொன்றில் அவளது குற்றங்குறைகளை எல்லாம் வைத்தார் . குற்றம் குறையுள்ள தட்டு கீழே சென்றது (அகங்காரி இப்போதாவது உன் அகங்காரத்தைக் கண்டுணர்ந்தாயா?)
பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சைப் போல் அவள் பயந்து போய் தனக்கு அடைக்கலமாகத் தேவதையை அழைத்துத் தன்மேல் இரக்கமாயிருக்கும்படி கெஞ்சினாள். அபராதமாக அவள் ஒரு செபமாலை சொல்லி இருந்தாள் அல்லவா ? அவள் சொன்ன ஒரே செபமாலையை நற்கிரியைகள் உள்ள தட்டில் தேவதாய் வைத்தார் . அவளுடைய பாவங்களை எல்லாம் விட இச்செபமாலை அதிக நிறையாய் இருந்தது . சாமினாதரின் புத்தியை கேளாததற்கு தேவதாய் அவளை இலேசாகக் கண்டித்தார்
தன் நினைவுக்கு வந்த உடனே அவள் ஓடி , சாமிநாதர் பாதத்தில் விழுந்து நடந்தவை எல்லாவற்றையும் சொல்லி, அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டாள். தினந்தோறும் செபமாலை சொல்லி வர போவதாக ஒப்புக் கொண்டாள். இவ்வழக்கத்தால் புண்ணிய பாதையில் விரைந்து நடந்தாள்
பதின்மூன்றாம் நாள்
கர்த்தர் பிறக்கிறார்
பெத்லகேம் ஊருக்கு வெளியே மாட்டுக் குடிலில் யாரைக் காண்கிறோம் ? பலவீனமான சிறு குழந்தை ; பரிதாபமான சூழலில், தனக்கு உதவி செய்ய முடியாத நிலையில் , மாட்டைக் குகையில் , எளிய மிருகங்களின் சுவாசமே , குளிரைப் போக்கும் தணலாகத் தாயிடம் பிறந்து தவிக்கிறார். இவர்தாம் நித்தியமானவர்; சர்வ வல்லபமுல்லவர் ; உலகத்தைச் சிருஷ்டித்தவர் ; ஆதியிலிருந்தே கடவுளோடிருந்த வார்த்தையான இறைவன் . இவர் மோட்ச மாட்சியிலும் மகிமையிலும் வந்திருக்கலாம் ; தெய்வீக கம்பீரமாய் உதித்திருக்கலாம்.
தாம் தெரிந்து கொண்ட அன்பின் பாதையை ஆதி முதலில் இருந்தே காட்டுகிறார் . ஈடேற்றமளிக்க வெற்றி மாலை சூட வந்தார் . மானிட இரட்சகர்களெனப் பெருமையடித்துக் கொள்ளும் வெற்றியாளர்களைப் போலல்ல , இவருக்கு ஆயுதங்கள் சாந்தம், தாழ்ச்சி , கெஞ்சும் நேசம் . கடவுள் , சிருஷ்டிகர் , நீதிபதி என்ற தம் கௌரவத்தையும், பெருமையையும் பிறப்பிலிருந்தே மறைத்து வைத்தார் ,மனிதர்களுடைய உள்ளத்தை வசீகரிக்க .
பெத்லகேமின் குழந்தை மனித சுபாவத்தை வானுற உயர்த்தினார் . தேவ சுபாவத்தில் வாதனைப் பட முடியாத கடவுளின் வாதனையைக் காட்டினார் . குளிரினால் குழந்தை நடுங்குகிறதா , கடவுள் தாம் நடுங்குகிறார் . தாயின் அமுதை குழந்தை பருகுகிறதா , கடவுள் தாம் பருகுகிறார். தாயும் சேயும் இருப்பது எவ்வளவு எளிய நிலை . இது முதல் ஏழைகள் மட்டில் மரியாதையும் , தரித்திரத்தின் மேல் அன்பும் , அபிமானமும் உலகில் உதித்தன
அம்மா, தாயே ,உம் பெருமையை எவ்விதம் வருணிப்பேன் ? தரையும், நுரையும், தாரகையும் , பூமியும் , கடலும், நட்சத்திரங்களும் தாழ்ந்து வணங்கி ஆராதிக்கும் ஆண்டவரைப் பெற்றெடுத்தீர் . மகிமையுள்ள ஆண்டவளே , வானிற்கு மேல் உயர்ந்தவளே, உன்னைச் சிருஷ்டித்தவருக்கே அமுதூட்டி ஆராதித்தவளே! வாழ்க !
"நமக்கு ஒரு பாலகன் பிறந்திருக்கிறார் ! ". நமக்கு ஒரு மகன் வந்திருக்கிறார் . அவர் நம்முடையவர். முழுவதும் அவர் நமக்குச் சொந்தமானவர் . எல்லாரை விட எல்லாவற்றையும் விட அவர் நமக்கு அதிக சொந்தம் . நல்லெண்ணத்தாலும் ஆசையாலும் தேவ நற்கருணை வழியாகவும் ஓயாமல் எப்பொழுதும் நம்மில் பிறக்கிறார் .
"உம்மை உண்டாக்கியவரை நீர் பிறப்பித்தீரே" அவரை ஆராதிப்போம் . நமக்குள்ளதைப் போன்ற சதையையும் , இரத்தத்தையும் , மனித சுபாவத்தை , மாமரி அவருக்களித்துள்ளார் . தேவ குமாரன் நமக்குச் சகோதரர் ஆனார் . அவர் நம் சகோதரர் . மகிழ்ச்சியால் துள்ளுவோம்.
வானரம் தான் எங்கள் கொள்ளுப்பாட்டன் ; குரங்கு தான் எங்கள் சகோதரன் என்று கூத்தாடும் மதி இழந்தோர் ," மரி, உம்மை உண்டாக்கினவரை நீர் பெற்றெடுத்தீரா? இதை நாங்கள் நம்புவோம் என்று கருதுகிறீரா ? உலக முழுவதையுமே உண்டாக்கிய பெருமான் ஒரு பெண்ணின் கையில் தங்கி எங்களுக்குச் சகோதரர் ஆனார் என்ற கதையை நாங்கள் நம்ப முடியுமா? யுக யுகமாய் கோடி சூரியன்களை நாட்டுவித்த வல்லாளர் நாசரேத் கன்னிகையின் கரத்தில் குழந்தையாய்த் தவழ்கிறார் என்ற செய்தி நம்பத் தக்கதா? " என்று கேட்கலாம்
நித்திய காலமுள்ளவர் இன்று ஒரு நாளையக் குழந்தையாய் , மாமரி , உம் பரிசுத்த கரங்களில் தவழ்கிறார். தம் ஒரு மூச்சால் கோடானு கோடி கோளங்களை ஆட்டி அசைத்து , அவை தவறான வழியில் அணுவளவும் பிசகாமல் அனந்த காலம் நடத்திவரும் வல்லாளர் உம் அமுதை நாடி அழுகிறார் என்று ஆனந்தத்தோடு விசுவசித்து உம்மடியிலுள்ள பாலனின் அடி பணிந்து ஆராதிக்கிறோம்
" மகாப் பரிசுத்த பழுதற்ற கன்னிகையே , உம்மை எவ்விதம் புகழ்ந்தேத்துவது என்று எனக்கு தெரியவில்லை . ஏனெனில் , வானலோகங்களைத் தாங்கொணாதவரை உமது திரு உதரத்தில் தாங்கப் பெற்றீர் ."
கடவுளை மறந்த மனிதனின் புத்தி தான் எவ்வளவு கோணல் ! கன்னிப் பிறப்பு முடியாதென்ற சாஸ்திரிகள் தற்சமயம் தங்கள் ஆராய்ச்சிசாலையில் கன்னிப்பிறப்பைக் காட்டப் போவதாக தங்கள் அரிய புத்தியைக் கடன் கொடுத்து , தங்கள் பொன்னான காலத்தை இழந்து மண்டையை உடைத்துக் கொள்ளுகிறார்கள் . அவர்கள் பிரயாசை வீண் - ஒரே கன்னித்தாய் , ஒரே கன்னிப் பிறப்பு
இச்செயல் தேவனின் அரிய செயல். ஓ மாமரி , உமது திருமகனை உயர்த்தியருளும் . நாங்கள் அவரை நோக்கும் வண்ணம் அவரை உயர்த்தியருளும். அவருடைய தாழ்மையைக் கண்டு - நாங்கள் தற்பெருமையால் புத்தி மயங்கி மாளாவண்ணம், அவரைப் பார்த்து தாழ்ச்சியைக் கற்றுக் கொள்ளுவோம் .
நாங்கள் அற்பத் தூசி . எங்களுக்குள்ள புத்திக் கூர்மையோ , அறிவுத் தேர்ச்சியோ , உடல் நலமோ எல்லாம் அவர் தந்த கொடை.அவரது பரிசுத்த பார்வை எங்கள் உள்ளங்களில் பாய்ந்து , அங்குள்ள ஈன பாவ நாட்டங்களையும் , இழிவான இச்சைகளையும் , அங்குள்ள நோயையும் , குஷ்டத்தையும் , அசங்கிதத்தையும் அவலட்சணத்தையும் கண்டு எங்கள் மேல் இரங்கி எங்கள் புத்தியைத் தெளிவித்து அக்குற்றக் குறை குப்பைகளைச் சுட்டெரிப்பதாக.
சூசையும் குழந்தையோடு கொஞ்சினார் . அவருக்கெல்லா சேவையையும் கடவுளுக்குச் செய்வது போலச் செய்தார் . அவருடைய அச்சய பிரமிப்பில் " உன்னதமானவரின் குமாரனை எனக்கு மகனாகக் கொடுத்தது யார் ? உமது தாயின் மேல் எனக்கு சந்தேகம் . அவளைத் தள்ளி வைக்க நினைத்தேன் - அவளுடைய உதரத்தில் விலையில்லாத மாணிக்கம் , என் நிலையைத் திடீரென உயர்த்தும் கருவூலம் இருந்ததை நான் அன்று அறிந்திலேன் "
"திவ்விய குழந்தாய், இயேசு குழந்தாய் " என்று கெஞ்சினார் , கொஞ்சினார்
செபம்
மனித அவதாரம் எடுத்த அன்பே , எங்களிடத்தில் பிறந்தருளும் . எங்களுடைய சதையையும் , இரத்தத்தையும் எடுத்துக் கொண்டு , உமது மனுஷீகத்தை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் கண்களை எடுத்துக் கொண்டு உமது பார்வையை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் புத்தியை எடுத்துக் கொள்ளும் . உமது பரிசுத்த எண்ணங்களை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் பாதங்களைத் தூக்கி , உமது பாதையில் திருப்பியருளும் . எங்கள் கரங்களை ஏந்தி உமது செபத்துக்காக குவித்தருளும்
எங்கள் உள்ளங்களைக் கவர்ந்து அவைகள் நேசிக்க உமது நாட்டத்தை தந்தருளும், செபமாலை இராக்கினியே எங்களை மற்றொரு இயேசு ஆக்கும் ஆமென் .
கர்த்தர் பிறக்கிறார்
பெத்லகேம் ஊருக்கு வெளியே மாட்டுக் குடிலில் யாரைக் காண்கிறோம் ? பலவீனமான சிறு குழந்தை ; பரிதாபமான சூழலில், தனக்கு உதவி செய்ய முடியாத நிலையில் , மாட்டைக் குகையில் , எளிய மிருகங்களின் சுவாசமே , குளிரைப் போக்கும் தணலாகத் தாயிடம் பிறந்து தவிக்கிறார். இவர்தாம் நித்தியமானவர்; சர்வ வல்லபமுல்லவர் ; உலகத்தைச் சிருஷ்டித்தவர் ; ஆதியிலிருந்தே கடவுளோடிருந்த வார்த்தையான இறைவன் . இவர் மோட்ச மாட்சியிலும் மகிமையிலும் வந்திருக்கலாம் ; தெய்வீக கம்பீரமாய் உதித்திருக்கலாம்.
தாம் தெரிந்து கொண்ட அன்பின் பாதையை ஆதி முதலில் இருந்தே காட்டுகிறார் . ஈடேற்றமளிக்க வெற்றி மாலை சூட வந்தார் . மானிட இரட்சகர்களெனப் பெருமையடித்துக் கொள்ளும் வெற்றியாளர்களைப் போலல்ல , இவருக்கு ஆயுதங்கள் சாந்தம், தாழ்ச்சி , கெஞ்சும் நேசம் . கடவுள் , சிருஷ்டிகர் , நீதிபதி என்ற தம் கௌரவத்தையும், பெருமையையும் பிறப்பிலிருந்தே மறைத்து வைத்தார் ,மனிதர்களுடைய உள்ளத்தை வசீகரிக்க .
பெத்லகேமின் குழந்தை மனித சுபாவத்தை வானுற உயர்த்தினார் . தேவ சுபாவத்தில் வாதனைப் பட முடியாத கடவுளின் வாதனையைக் காட்டினார் . குளிரினால் குழந்தை நடுங்குகிறதா , கடவுள் தாம் நடுங்குகிறார் . தாயின் அமுதை குழந்தை பருகுகிறதா , கடவுள் தாம் பருகுகிறார். தாயும் சேயும் இருப்பது எவ்வளவு எளிய நிலை . இது முதல் ஏழைகள் மட்டில் மரியாதையும் , தரித்திரத்தின் மேல் அன்பும் , அபிமானமும் உலகில் உதித்தன
அம்மா, தாயே ,உம் பெருமையை எவ்விதம் வருணிப்பேன் ? தரையும், நுரையும், தாரகையும் , பூமியும் , கடலும், நட்சத்திரங்களும் தாழ்ந்து வணங்கி ஆராதிக்கும் ஆண்டவரைப் பெற்றெடுத்தீர் . மகிமையுள்ள ஆண்டவளே , வானிற்கு மேல் உயர்ந்தவளே, உன்னைச் சிருஷ்டித்தவருக்கே அமுதூட்டி ஆராதித்தவளே! வாழ்க !
"நமக்கு ஒரு பாலகன் பிறந்திருக்கிறார் ! ". நமக்கு ஒரு மகன் வந்திருக்கிறார் . அவர் நம்முடையவர். முழுவதும் அவர் நமக்குச் சொந்தமானவர் . எல்லாரை விட எல்லாவற்றையும் விட அவர் நமக்கு அதிக சொந்தம் . நல்லெண்ணத்தாலும் ஆசையாலும் தேவ நற்கருணை வழியாகவும் ஓயாமல் எப்பொழுதும் நம்மில் பிறக்கிறார் .
"உம்மை உண்டாக்கியவரை நீர் பிறப்பித்தீரே" அவரை ஆராதிப்போம் . நமக்குள்ளதைப் போன்ற சதையையும் , இரத்தத்தையும் , மனித சுபாவத்தை , மாமரி அவருக்களித்துள்ளார் . தேவ குமாரன் நமக்குச் சகோதரர் ஆனார் . அவர் நம் சகோதரர் . மகிழ்ச்சியால் துள்ளுவோம்.
வானரம் தான் எங்கள் கொள்ளுப்பாட்டன் ; குரங்கு தான் எங்கள் சகோதரன் என்று கூத்தாடும் மதி இழந்தோர் ," மரி, உம்மை உண்டாக்கினவரை நீர் பெற்றெடுத்தீரா? இதை நாங்கள் நம்புவோம் என்று கருதுகிறீரா ? உலக முழுவதையுமே உண்டாக்கிய பெருமான் ஒரு பெண்ணின் கையில் தங்கி எங்களுக்குச் சகோதரர் ஆனார் என்ற கதையை நாங்கள் நம்ப முடியுமா? யுக யுகமாய் கோடி சூரியன்களை நாட்டுவித்த வல்லாளர் நாசரேத் கன்னிகையின் கரத்தில் குழந்தையாய்த் தவழ்கிறார் என்ற செய்தி நம்பத் தக்கதா? " என்று கேட்கலாம்
நித்திய காலமுள்ளவர் இன்று ஒரு நாளையக் குழந்தையாய் , மாமரி , உம் பரிசுத்த கரங்களில் தவழ்கிறார். தம் ஒரு மூச்சால் கோடானு கோடி கோளங்களை ஆட்டி அசைத்து , அவை தவறான வழியில் அணுவளவும் பிசகாமல் அனந்த காலம் நடத்திவரும் வல்லாளர் உம் அமுதை நாடி அழுகிறார் என்று ஆனந்தத்தோடு விசுவசித்து உம்மடியிலுள்ள பாலனின் அடி பணிந்து ஆராதிக்கிறோம்
" மகாப் பரிசுத்த பழுதற்ற கன்னிகையே , உம்மை எவ்விதம் புகழ்ந்தேத்துவது என்று எனக்கு தெரியவில்லை . ஏனெனில் , வானலோகங்களைத் தாங்கொணாதவரை உமது திரு உதரத்தில் தாங்கப் பெற்றீர் ."
கடவுளை மறந்த மனிதனின் புத்தி தான் எவ்வளவு கோணல் ! கன்னிப் பிறப்பு முடியாதென்ற சாஸ்திரிகள் தற்சமயம் தங்கள் ஆராய்ச்சிசாலையில் கன்னிப்பிறப்பைக் காட்டப் போவதாக தங்கள் அரிய புத்தியைக் கடன் கொடுத்து , தங்கள் பொன்னான காலத்தை இழந்து மண்டையை உடைத்துக் கொள்ளுகிறார்கள் . அவர்கள் பிரயாசை வீண் - ஒரே கன்னித்தாய் , ஒரே கன்னிப் பிறப்பு
இச்செயல் தேவனின் அரிய செயல். ஓ மாமரி , உமது திருமகனை உயர்த்தியருளும் . நாங்கள் அவரை நோக்கும் வண்ணம் அவரை உயர்த்தியருளும். அவருடைய தாழ்மையைக் கண்டு - நாங்கள் தற்பெருமையால் புத்தி மயங்கி மாளாவண்ணம், அவரைப் பார்த்து தாழ்ச்சியைக் கற்றுக் கொள்ளுவோம் .
நாங்கள் அற்பத் தூசி . எங்களுக்குள்ள புத்திக் கூர்மையோ , அறிவுத் தேர்ச்சியோ , உடல் நலமோ எல்லாம் அவர் தந்த கொடை.அவரது பரிசுத்த பார்வை எங்கள் உள்ளங்களில் பாய்ந்து , அங்குள்ள ஈன பாவ நாட்டங்களையும் , இழிவான இச்சைகளையும் , அங்குள்ள நோயையும் , குஷ்டத்தையும் , அசங்கிதத்தையும் அவலட்சணத்தையும் கண்டு எங்கள் மேல் இரங்கி எங்கள் புத்தியைத் தெளிவித்து அக்குற்றக் குறை குப்பைகளைச் சுட்டெரிப்பதாக.
சூசையும் குழந்தையோடு கொஞ்சினார் . அவருக்கெல்லா சேவையையும் கடவுளுக்குச் செய்வது போலச் செய்தார் . அவருடைய அச்சய பிரமிப்பில் " உன்னதமானவரின் குமாரனை எனக்கு மகனாகக் கொடுத்தது யார் ? உமது தாயின் மேல் எனக்கு சந்தேகம் . அவளைத் தள்ளி வைக்க நினைத்தேன் - அவளுடைய உதரத்தில் விலையில்லாத மாணிக்கம் , என் நிலையைத் திடீரென உயர்த்தும் கருவூலம் இருந்ததை நான் அன்று அறிந்திலேன் "
"திவ்விய குழந்தாய், இயேசு குழந்தாய் " என்று கெஞ்சினார் , கொஞ்சினார்
செபம்
மனித அவதாரம் எடுத்த அன்பே , எங்களிடத்தில் பிறந்தருளும் . எங்களுடைய சதையையும் , இரத்தத்தையும் எடுத்துக் கொண்டு , உமது மனுஷீகத்தை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் கண்களை எடுத்துக் கொண்டு உமது பார்வையை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் புத்தியை எடுத்துக் கொள்ளும் . உமது பரிசுத்த எண்ணங்களை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் பாதங்களைத் தூக்கி , உமது பாதையில் திருப்பியருளும் . எங்கள் கரங்களை ஏந்தி உமது செபத்துக்காக குவித்தருளும்
எங்கள் உள்ளங்களைக் கவர்ந்து அவைகள் நேசிக்க உமது நாட்டத்தை தந்தருளும், செபமாலை இராக்கினியே எங்களை மற்றொரு இயேசு ஆக்கும் ஆமென் .
பதினான்காம் நாள்
கர்த்தரை தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கிறார்கள்
இஸ்ராயேல் மக்கள் எகிப்தை விட்டு ஓடிவரும் நாள் கர்த்தர் அவர்களுக்குக் கற்பித்திருந்ததாவது: இஸ்ராயேல் குடும்பத்தார் ஒவ்வொருவரும் ஓர் ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் இரத்தத்தை வெளிக் கதவில் தடவ வேண்டும். அன்றிரவு தேவதூதர் இரத்தம் பூசப்பட்ட இல்லங்களில் ஏகாமல் இல்லாத இல்லங்களில், எகிப்தியர் வீடுகளில் இறங்கி தலைச்சனான ஆண் மகவைக் கொன்று விட்டனர் . இவ்விதம் இஸ்ராயேலர் காப்பற்றப்பட்டதால் இவர்களுடைய தலைச்சன் ஆண் குழந்தைகள் இறைவனுக்கு விசேஷ விதமாய்ச் சொந்தமானார்கள். அவர்களை ஆண்டவருடைய ஊழியத்திற்கு நேர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் ஆலய ஊழியத்திற்கு லேவி வம்சத்தார் தேர்ந்து கொள்ளப்பட்டதால் கடவுளுக்கு நேர்ந்து கொள்ளலாம் . வேறொரு சம்பவம் என்னவெனில் குழந்தையை பெற்றெடுத்த தாய் சட்டரீதியில் அசுத்தமானவளாகக் கருதப்பட்டாள். பேறு காலத்திற்குப் பின் நாற்பதாம் நாள் ஆலயத்தில் காணிக்கை செலுத்தி சுத்திகரம் செய்யப்படுவாள்.
யூதர்களுக்குப் பற்பல ஊர்களில் செபக்கூடங்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரே தேவாலயம் . அது எருசலேமில் இருந்தது. நாற்பதாம் நாள் குழந்தை சேசுவை கைத்தாதை சூசையும் கன்னித்தாயும் இங்கு கொண்டு வந்தனர். சாலமன் எழுப்பிய ஆலயத்தை விட இது மதிப்பில் குறைந்தது . எனினும் தீர்க்கதரிசிகள் இதை " அதைவிட மகிமை பொருந்தியது . ஏனெனில் தேவாதி தேவன் மெசியா அங்கு வருவார் " என்று சொல்லிப் போயினர்
இதோ ஆண்டவர் வருகிறார் . சிறு குழந்தையாக பெற்றோரால் தூக்கிக் கொண்டு வரப்படுகிறார் . கோவிலில் நேர்ந்து கொள்ளப்பட " அழிக்கவல்ல , நிறைவேற்றவே வந்தேன் " என்ற வாக்குக்கு இணங்கச் சட்டத்தை ஏற்படுத்தியவரே அதற்குப் பணிந்து நடந்து அதை நிறைவேற்றுகிறார் . எனினும் சட்டம் அவரைக் கட்டுப்படுத்தாது . அதே போல் சுத்திகரச் சடங்கு உட்படக் கன்னித் தாய்க்குத் தேவையில்லை . அசுத்தம் அல்லது குறை என்பது எந்த வழியிலும் அவளிடம் சிறிதளவும் இல்லை . ஆதலால் தம் மகனைப் பின்பற்றி அவரும் சட்டத்துக்குப் பணிந்து நடக்கிறார்.
அதனால்தானா முதல் கிறிஸ்தவர்களுக்குக் கீழ்ப்படிதலின் மேல் விசேச ஆர்வம் ? புண்ணிய சிகரத்தில் ஏறுவதற்கு ஏற்ற புத்திமதி கீழ்ப்படிவதாம் . பெற்றோர்கள் தங்கள் மக்களுக்கு கீழ்ப்படிதலின் கண்ணாடியாக இருக்க வேண்டும் . தாய் தகப்பனுக்கு மக்கள் எல்லா விதத்திலும் பணிந்து நடக்க வேண்டும். இருவரும் திருச்சபைச் சட்டங்களையும் , இறைவனின் கற்பனைகளையும் பிரமாணிக்கமாய்க் காப்பாற்ற வேண்டும் . ஊரில் பெரியவர்கள் , தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் பங்கு சுவாமியார் , ஆயருடைய திட்டங்களுக்கு செவிசாய்த்து நடக்க வேண்டும் . துறவற மடங்களில் தலைவர்களும் , தாய்மார்களும் ஒழுங்குகளை நுணுநுணுக்கமாய் அனுசரிப்பதில் முதலில் நிற்க வேண்டும்
சிமியோனும் அன்னாளும் குரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் . இக்காலத்திலும் சில ஆலயங்களில் பார்க்கலாம், சில வயோதிகர்கள் கோவிலிலேயே கதியாய்க் கிடந்து செபமாலை சொல்லிக் கொண்டோ , தேவ நற்கருணைப் பேழையை நோக்கிக் கொண்டோ இருப்பார்கள். இவர்களைப் போலத்தான் சிமியோனும் அன்னாளும் தேவாலயத்தை ஓயாமல் தரிசனம் செய்து வந்தனர். அவர்களது பிரமாநிக்கமுள்ள உண்மையான வைரம் பாய்ந்த பக்திக்கு கடவுள் சன்மானம் அளிக்கச் சித்தமானார் . உலக இரட்சகரைக் கண்டு களித்தனர் . அந்நாளில் வேறு யாருக்கு இப்பாக்கியம் கிட்டியது ?
அர்ச் சூசையப்பர் எங்கே ? என்ன மறைந்த வாழ்க்கை , எவரும் அவரைச் சட்டை செய்ததாகத் தெரியவில்லை . தேவாதி தேவனுடையவும் , மேலுலக அரசியினுடையவும் , பிரமாணிக்கமுள்ள அன்பும் , கீழ்ப்படிதலும் அவருக்கு இருந்தன . இயேசுவைக் கையில் ஏந்தி நெஞ்சோடணைத்துக் கொஞ்சி விளையாடும் செல்வாக்கு அவருடையது . வேறென்ன வேண்டும் ? உன் ஜீவியத்தின் ,அக வாழ்வின் பேரின்பம் எவ்வளவு பெரியது ?
கர்த்தரைக் காணிக்கையாகக் கொடுத்த இலாபம் , பொருள் மாமரிக்கு எது ? 'உம் ஆத்துமத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும் .' சிறிது நாளில் எகிப்திற்கு ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் . அப்பிரயாணத்தில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் என்ன பயம் ! என்ன கிலேசம் !
தம் மகனைப் பிதாவுக்கு நேர்ந்துகொண்டபோது அவரோடு அவரிலும் மனுக்குலம் முழுவதையுமே பிதாவுக்கு அன்னை நேர்ந்து கொண்டார். அவரது சித்தத்தை ,அவர் நோக்கப் பிரகாரம் நிறைவேற்றுவதற்காக .
இயேசு தாமே உண்மையும் , உயிரும் , வழியும் . அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் கற்றுக் கொடுத்த சத்தியத்தை ஏற்றுக் கொண்டு ,அவர் சீவியத்தை சீவித்து உலகின் எதிர்ப்பையும் , பழிச் சொல்லையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் . ஒவ்வொருவரும் தம் சொந்த எண்ணத்தையும் , நேர்மையற்ற நாட்டங்களையும் , வீட்டையும், வாசலையும் , உற்றார் பெற்றோரையும் விட்டு விட்டு சேசுவோடு சிலுவை மட்டும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
செபம்
நித்திய பிதாவே ! இயேசு மரி சூசையின் தாழ்ச்சியின் நிமித்தம் எங்களுக்குத் தாழ்ச்சியின் மகிமையைத் தந்தருளும். பாவிகள் மேல் சுமத்திய சட்டத்திற்கு பரிசுத்ததனம் கீழ்ப்படிந்த இரகசியத்தை நினைத்து எங்களிடம் தரித்திரத்தின் சிந்தையை ஊட்டியருளும்
செபமாலை இராக்கினியே , மகா பரிசுத்த கன்னித் தாயே , நாங்கள் வாழ்வின் சட்ட திட்டங்களுக்கும் , உத்தியோகத்தின் வகை வழிக்கும் , எங்கள் வாழ்வு நிலையின் ஒழுங்குக் கிராமத்திற்குக் கீழ்ப்படிய கிருபை செய்தருளும். எங்கள் நாட்டிலுள்ள துறவிகள் , கன்னியர்கள் தத்தம் சபையின் ஒழுங்குகளை அனுசரிப்பதால் புண்ணிய சிகரத்தில் ஏறும்படி கிருபை கூர்ந்தருளும் . செபமாலை மாதாவே ஆமென்
சரிதை
கார்க்காசோன் என்னும் இடத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் டொமினிக் . அல்பிஜென்சியன் அபத்தத்தைத் தழுவிய ஒருவன் , பேய் பிடித்த அவனை அவரிடம் கொண்டு வந்தனர் . பன்னீராயிரம் பேருக்கு மேல் பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் பேயோட்டும் சடங்கை நிறைவேற்றினார் . அர்ச் டோமினிக் கேட்ட கேள்விகளுக்குப் பேய்கள் பதில் சொல்லி வந்தன
" இவன் செபமாலையின் 15 தேவ இரகசியங்களுக்கு விரோதமாய்ப் பேசியவன் . நாங்கள் 15000 பேர் இவன் உடலில் வசிக்கிறோம் . நீர் செபமாலையைப் பற்றி போதிப்பதால் நரகம் அடித்தளம் வரை கிடுகிடுத்து நடுங்குகிறது . உலகில் உம்மை விட வேறு எவரையும் நாங்கள் அவ்வளவாக விரோதிப்பதில்லை. . செபமாலை வழியாக நீர் எத்தனையோ ஆத்துமங்களை எங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளுகிறீர்"
இன்னும் பற்பல கேள்விகளுக்குப் பதில் சொல்லின
அர்ச் டோமினிக் தன் செபமாலையை பேய் பிடித்தவனின் கழுத்தில் அணிவித்து " மோட்சத்தில் இருக்கும் அற்சிஷ்டவர்களில் யார் மட்டில் உங்களுக்குப் பயம் அதிகம் ? யாரை உலகத்து மக்கள் அதிகம் நேசித்து வணங்க வேண்டும் என்று சொல்லுங்கள் ." என்றார் . இதைக் கேட்டவுடன் அவைகள் அலறின . அருகில் நின்ற மக்கள் பயந்து கீழே விழுந்தனர் . அந்த பேய்கள் ஒப்பாரி வைத்து அழுதன . இதைக் கண்ட மனிதரும் கண்ணீர் சிந்தினர் . அந்த அல்பிஜென்சியன் வாயால் அந்த பேய்கள் சொன்னது "
டோமினிக், டோமினிக் , எங்கள் மேல் இரக்கம் வையும் . எங்களில் ஒருவரும் உமக்குத் தீமை வருத்துவிக்க மாட்டோம் . எங்கள் வாதனை எவ்வளவென்று உமக்குத் தெரியாதா ? இன்னும் அவ்வாதனைகளை அதிகரிப்பதில் உமக்கு சந்தோசமா ? "
புனிதர் இதைக் கேட்டு அசைந்து கொடுத்து விடுவாரா? " பதில் சொல்லாமல் போக விட மாட்டேன் " என்றார். " இரகசியமாய் உமக்கு மட்டும் சொல்வோம் " என்றன . " கூடாது , கூடாது . யாவரும் கேட்கும் வண்ணம் சொல்ல வேண்டும் " என்றார்
பேய்கள் ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஊமையாய் இருந்தன . புனிதர் முழந்தாளில் இருந்து தாயைப் பார்த்து வேண்டிக் கொண்டார் . " மகா வல்லமையுள்ள கன்னிகையே , அதிசயத்துக்குரிய மாதாவே , மகா பரிசுத்த செபமாலையின் மூலமாய் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன் , எனக்குப் பதில் சொல்லும்படி மனுக்குலத்தின் பகைவர்களாகிய இவைகளுக்குக் கட்டளையிடும் "
இச்செபம் முடிந்தும் முடியாமுன் பேய் பிடித்தவன் வாய் , காதுகளில் இருந்து கொழுந்து விட்டு எரியும் நெருப்புச் சுவாலை வீசும் தணல்கள் தாவின . யாவருக்கும் நடுக்கம் எனினும் ஒருவருக்கும் ஆபத்தில்லை ." டோமினிக் எங்களை சும்மா விட்டு விடும் , நாங்கள் இவனை விட்டு ஓடி விடுகிறோம் . இக்கேள்விக்கு சம்மனசுக்கள் உமக்குப் பிரியமானபோது பதில் சொல்லுவார்களே . நங்கள் பொய்யர்கள் தானே . எங்களை ஏன் கேட்க வேண்டும் ? எங்கள் மேல் இரங்கி எங்களைப் போக விடும் " என்று அலறின
"ஞானத்தின் தாயே , எனக்குமுன் இருக்கும் இந்த சபையோருக்காகத்தான் உம்மை மன்றாடுகிறேன் . அவர்கள் செபமாலை சொல்லப் பழகி இருக்கின்றனர் . நான் கேட்ட கேள்விக்கு பேய்கள் உண்மையான பதில் சொல்ல வேண்டும் " உடனே அர்ச்சிஷ்டவர் மட்டும் பார்க்கும் வண்ணம் எண்ணிக்கையில்லா சம்மனசுக்கள் சூழ தேவதாய் தோன்றி தன் கையில் வைத்திருந்த பொற்கோலால் பேய் பிடித்தவனைத் தட்டி , " என் தாசன் தொமினிக்கிற்கு உடனே பதில் சொல்லுங்கள் " என்றார்
அப்போதுதான் அடிபட்ட நாய் குரைப்பது போல " நீர் தான் எங்கள் சத்துராதி , எங்கள் வீழ்ச்சிக்கும் நாசத்துக்கும் காரணம் . எங்களை இவ்விதம் வாதிக்கவா மோட்சத்திலிருந்து இங்கு வந்தீர். ? பாவிகளின் பாதுகாவலியே, நரகத்திற்கு விழவேண்டியவர்களை எங்கள் கையினின்று பறித்துக் கொண்டு போகிறவரே , மோட்சத்துக்கு நிச்சயமான பாதையாகிய நீர் எங்களை ஏன் வற்புறுத்துகிறீர் ? எங்களுக்குப் பிரியம் இல்லாவிடினும் எங்கள் வெட்கத்துக்கும் , நாசத்துக்கும் மெய்யான காரணம் யாரென்று யாவருக்கும் முன்னால் சொல்ல வேண்டுமா ? இருளின் அரக்கர்களாகிய எங்களுக்கு ஐயோ கேடு !
கிறிஸ்தவ மக்களே ! கவனமாய்க் கேளுங்கள் . இயேசுவின் தாய் எல்லா வல்லமையும் உள்ளவர் . பாவிகள் நரகில் விழாமல் காப்பாற்றக் கூடியவர் . எங்கள் தந்திர மந்திரங்களை எல்லாம் வெளியாக்கும் சூரிய ஒளி அவர் . எங்கள் கண்ணிகளையும் வலைகளையும் அறுத்தெறிந்து எங்கள் சோதனைகள் பயனற்றுப் போகச் செய்கிறவர் அவர். அன்னையின் சேவையில் பிரமாணிக்கமாயிருந்த ஓர் ஆத்துமமாவது நித்திய தண்டனைக்கு ஆளாகவில்லை என்றும் , எல்லா அற்சிஷ்டவர்களுடைய வேண்டுதலை விட அவருடைய ( அந்த தாயினுடைய ) பெருமூச்சு ஒன்றே அதிக வல்லமையுள்ளது என்றும் , நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டியது எங்கள் துர்பாக்கியம் . எங்களுக்கு விரோதமாக மரியாயினுடைய செல்வாக்கை உபயோகிக்காமல் இருந்திருந்தால் , திருச்சபையை முன்னரே அழித்திருப்போம். திருச்சபையிலுள்ள எல்லா துறவற சபைகளும் பெரும் ஆபத்திற்கு உட்பட்டு நாசமாய்ப் போயிருக்கும் .
ஐயோ ! இதையும் சொல்ல வேண்டுமா? செபமாலை செய்வதில் நிலைத்திருக்கும் எவனும் நித்திய ஆக்கினைக்கு உள்ளாக மாட்டான் . பாவங்களுக்கு மெய்யாகவே மனஸ்தாபப்படும் வரத்தை அவர் அப்பக்தியுள்ளோருக்குப் பெற்றுக் கொடுத்து , இறைவனிடமிருந்து இரக்கத்தையும் மன்னிப்பையும் அடையச் செய்கிறார் "
அங்குள்ள எல்லோரையும் புனிதர் செபமாலை செய்யச் சொன்னார் . "அருள் நிறைந்த மரியே " சொல்லி முடித்த ஒவ்வொரு முறையும் சிறு தீக்குழம்புகள் போன்ற கனல் போன்ற பலப்பல பேய்கள் அவனுடைய உடலிலிருந்து வெளியேறின . எல்லாப் பேய்களும் போய் அந்தப் பதிதன் முற்றும் விடுதலையானபின் சாதாரண மக்கள் கண்ணுக்கு இன்னும் மறைந்திருந்த தேவ தாய் கூடியிருந்த எல்லா மக்களுக்கும் ஆசீர் அளித்து மறைந்து போனார். மக்கள் உள்ளத்தில் காரணம் அறியா மகிழ்ச்சி பொங்கியது
அநேக பதிதர்கள் மனந்திரும்பி செபமாலை மாதா சபையில் சேர்ந்தனர்
கர்த்தரை தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கிறார்கள்
இஸ்ராயேல் மக்கள் எகிப்தை விட்டு ஓடிவரும் நாள் கர்த்தர் அவர்களுக்குக் கற்பித்திருந்ததாவது: இஸ்ராயேல் குடும்பத்தார் ஒவ்வொருவரும் ஓர் ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் இரத்தத்தை வெளிக் கதவில் தடவ வேண்டும். அன்றிரவு தேவதூதர் இரத்தம் பூசப்பட்ட இல்லங்களில் ஏகாமல் இல்லாத இல்லங்களில், எகிப்தியர் வீடுகளில் இறங்கி தலைச்சனான ஆண் மகவைக் கொன்று விட்டனர் . இவ்விதம் இஸ்ராயேலர் காப்பற்றப்பட்டதால் இவர்களுடைய தலைச்சன் ஆண் குழந்தைகள் இறைவனுக்கு விசேஷ விதமாய்ச் சொந்தமானார்கள். அவர்களை ஆண்டவருடைய ஊழியத்திற்கு நேர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் ஆலய ஊழியத்திற்கு லேவி வம்சத்தார் தேர்ந்து கொள்ளப்பட்டதால் கடவுளுக்கு நேர்ந்து கொள்ளலாம் . வேறொரு சம்பவம் என்னவெனில் குழந்தையை பெற்றெடுத்த தாய் சட்டரீதியில் அசுத்தமானவளாகக் கருதப்பட்டாள். பேறு காலத்திற்குப் பின் நாற்பதாம் நாள் ஆலயத்தில் காணிக்கை செலுத்தி சுத்திகரம் செய்யப்படுவாள்.
யூதர்களுக்குப் பற்பல ஊர்களில் செபக்கூடங்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரே தேவாலயம் . அது எருசலேமில் இருந்தது. நாற்பதாம் நாள் குழந்தை சேசுவை கைத்தாதை சூசையும் கன்னித்தாயும் இங்கு கொண்டு வந்தனர். சாலமன் எழுப்பிய ஆலயத்தை விட இது மதிப்பில் குறைந்தது . எனினும் தீர்க்கதரிசிகள் இதை " அதைவிட மகிமை பொருந்தியது . ஏனெனில் தேவாதி தேவன் மெசியா அங்கு வருவார் " என்று சொல்லிப் போயினர்
இதோ ஆண்டவர் வருகிறார் . சிறு குழந்தையாக பெற்றோரால் தூக்கிக் கொண்டு வரப்படுகிறார் . கோவிலில் நேர்ந்து கொள்ளப்பட " அழிக்கவல்ல , நிறைவேற்றவே வந்தேன் " என்ற வாக்குக்கு இணங்கச் சட்டத்தை ஏற்படுத்தியவரே அதற்குப் பணிந்து நடந்து அதை நிறைவேற்றுகிறார் . எனினும் சட்டம் அவரைக் கட்டுப்படுத்தாது . அதே போல் சுத்திகரச் சடங்கு உட்படக் கன்னித் தாய்க்குத் தேவையில்லை . அசுத்தம் அல்லது குறை என்பது எந்த வழியிலும் அவளிடம் சிறிதளவும் இல்லை . ஆதலால் தம் மகனைப் பின்பற்றி அவரும் சட்டத்துக்குப் பணிந்து நடக்கிறார்.
அதனால்தானா முதல் கிறிஸ்தவர்களுக்குக் கீழ்ப்படிதலின் மேல் விசேச ஆர்வம் ? புண்ணிய சிகரத்தில் ஏறுவதற்கு ஏற்ற புத்திமதி கீழ்ப்படிவதாம் . பெற்றோர்கள் தங்கள் மக்களுக்கு கீழ்ப்படிதலின் கண்ணாடியாக இருக்க வேண்டும் . தாய் தகப்பனுக்கு மக்கள் எல்லா விதத்திலும் பணிந்து நடக்க வேண்டும். இருவரும் திருச்சபைச் சட்டங்களையும் , இறைவனின் கற்பனைகளையும் பிரமாணிக்கமாய்க் காப்பாற்ற வேண்டும் . ஊரில் பெரியவர்கள் , தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் பங்கு சுவாமியார் , ஆயருடைய திட்டங்களுக்கு செவிசாய்த்து நடக்க வேண்டும் . துறவற மடங்களில் தலைவர்களும் , தாய்மார்களும் ஒழுங்குகளை நுணுநுணுக்கமாய் அனுசரிப்பதில் முதலில் நிற்க வேண்டும்
சிமியோனும் அன்னாளும் குரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் . இக்காலத்திலும் சில ஆலயங்களில் பார்க்கலாம், சில வயோதிகர்கள் கோவிலிலேயே கதியாய்க் கிடந்து செபமாலை சொல்லிக் கொண்டோ , தேவ நற்கருணைப் பேழையை நோக்கிக் கொண்டோ இருப்பார்கள். இவர்களைப் போலத்தான் சிமியோனும் அன்னாளும் தேவாலயத்தை ஓயாமல் தரிசனம் செய்து வந்தனர். அவர்களது பிரமாநிக்கமுள்ள உண்மையான வைரம் பாய்ந்த பக்திக்கு கடவுள் சன்மானம் அளிக்கச் சித்தமானார் . உலக இரட்சகரைக் கண்டு களித்தனர் . அந்நாளில் வேறு யாருக்கு இப்பாக்கியம் கிட்டியது ?
அர்ச் சூசையப்பர் எங்கே ? என்ன மறைந்த வாழ்க்கை , எவரும் அவரைச் சட்டை செய்ததாகத் தெரியவில்லை . தேவாதி தேவனுடையவும் , மேலுலக அரசியினுடையவும் , பிரமாணிக்கமுள்ள அன்பும் , கீழ்ப்படிதலும் அவருக்கு இருந்தன . இயேசுவைக் கையில் ஏந்தி நெஞ்சோடணைத்துக் கொஞ்சி விளையாடும் செல்வாக்கு அவருடையது . வேறென்ன வேண்டும் ? உன் ஜீவியத்தின் ,அக வாழ்வின் பேரின்பம் எவ்வளவு பெரியது ?
கர்த்தரைக் காணிக்கையாகக் கொடுத்த இலாபம் , பொருள் மாமரிக்கு எது ? 'உம் ஆத்துமத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும் .' சிறிது நாளில் எகிப்திற்கு ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் . அப்பிரயாணத்தில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் என்ன பயம் ! என்ன கிலேசம் !
தம் மகனைப் பிதாவுக்கு நேர்ந்துகொண்டபோது அவரோடு அவரிலும் மனுக்குலம் முழுவதையுமே பிதாவுக்கு அன்னை நேர்ந்து கொண்டார். அவரது சித்தத்தை ,அவர் நோக்கப் பிரகாரம் நிறைவேற்றுவதற்காக .
இயேசு தாமே உண்மையும் , உயிரும் , வழியும் . அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் கற்றுக் கொடுத்த சத்தியத்தை ஏற்றுக் கொண்டு ,அவர் சீவியத்தை சீவித்து உலகின் எதிர்ப்பையும் , பழிச் சொல்லையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் . ஒவ்வொருவரும் தம் சொந்த எண்ணத்தையும் , நேர்மையற்ற நாட்டங்களையும் , வீட்டையும், வாசலையும் , உற்றார் பெற்றோரையும் விட்டு விட்டு சேசுவோடு சிலுவை மட்டும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
செபம்
நித்திய பிதாவே ! இயேசு மரி சூசையின் தாழ்ச்சியின் நிமித்தம் எங்களுக்குத் தாழ்ச்சியின் மகிமையைத் தந்தருளும். பாவிகள் மேல் சுமத்திய சட்டத்திற்கு பரிசுத்ததனம் கீழ்ப்படிந்த இரகசியத்தை நினைத்து எங்களிடம் தரித்திரத்தின் சிந்தையை ஊட்டியருளும்
செபமாலை இராக்கினியே , மகா பரிசுத்த கன்னித் தாயே , நாங்கள் வாழ்வின் சட்ட திட்டங்களுக்கும் , உத்தியோகத்தின் வகை வழிக்கும் , எங்கள் வாழ்வு நிலையின் ஒழுங்குக் கிராமத்திற்குக் கீழ்ப்படிய கிருபை செய்தருளும். எங்கள் நாட்டிலுள்ள துறவிகள் , கன்னியர்கள் தத்தம் சபையின் ஒழுங்குகளை அனுசரிப்பதால் புண்ணிய சிகரத்தில் ஏறும்படி கிருபை கூர்ந்தருளும் . செபமாலை மாதாவே ஆமென்
சரிதை
கார்க்காசோன் என்னும் இடத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் டொமினிக் . அல்பிஜென்சியன் அபத்தத்தைத் தழுவிய ஒருவன் , பேய் பிடித்த அவனை அவரிடம் கொண்டு வந்தனர் . பன்னீராயிரம் பேருக்கு மேல் பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் பேயோட்டும் சடங்கை நிறைவேற்றினார் . அர்ச் டோமினிக் கேட்ட கேள்விகளுக்குப் பேய்கள் பதில் சொல்லி வந்தன
" இவன் செபமாலையின் 15 தேவ இரகசியங்களுக்கு விரோதமாய்ப் பேசியவன் . நாங்கள் 15000 பேர் இவன் உடலில் வசிக்கிறோம் . நீர் செபமாலையைப் பற்றி போதிப்பதால் நரகம் அடித்தளம் வரை கிடுகிடுத்து நடுங்குகிறது . உலகில் உம்மை விட வேறு எவரையும் நாங்கள் அவ்வளவாக விரோதிப்பதில்லை. . செபமாலை வழியாக நீர் எத்தனையோ ஆத்துமங்களை எங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளுகிறீர்"
இன்னும் பற்பல கேள்விகளுக்குப் பதில் சொல்லின
அர்ச் டோமினிக் தன் செபமாலையை பேய் பிடித்தவனின் கழுத்தில் அணிவித்து " மோட்சத்தில் இருக்கும் அற்சிஷ்டவர்களில் யார் மட்டில் உங்களுக்குப் பயம் அதிகம் ? யாரை உலகத்து மக்கள் அதிகம் நேசித்து வணங்க வேண்டும் என்று சொல்லுங்கள் ." என்றார் . இதைக் கேட்டவுடன் அவைகள் அலறின . அருகில் நின்ற மக்கள் பயந்து கீழே விழுந்தனர் . அந்த பேய்கள் ஒப்பாரி வைத்து அழுதன . இதைக் கண்ட மனிதரும் கண்ணீர் சிந்தினர் . அந்த அல்பிஜென்சியன் வாயால் அந்த பேய்கள் சொன்னது "
டோமினிக், டோமினிக் , எங்கள் மேல் இரக்கம் வையும் . எங்களில் ஒருவரும் உமக்குத் தீமை வருத்துவிக்க மாட்டோம் . எங்கள் வாதனை எவ்வளவென்று உமக்குத் தெரியாதா ? இன்னும் அவ்வாதனைகளை அதிகரிப்பதில் உமக்கு சந்தோசமா ? "
புனிதர் இதைக் கேட்டு அசைந்து கொடுத்து விடுவாரா? " பதில் சொல்லாமல் போக விட மாட்டேன் " என்றார். " இரகசியமாய் உமக்கு மட்டும் சொல்வோம் " என்றன . " கூடாது , கூடாது . யாவரும் கேட்கும் வண்ணம் சொல்ல வேண்டும் " என்றார்
பேய்கள் ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஊமையாய் இருந்தன . புனிதர் முழந்தாளில் இருந்து தாயைப் பார்த்து வேண்டிக் கொண்டார் . " மகா வல்லமையுள்ள கன்னிகையே , அதிசயத்துக்குரிய மாதாவே , மகா பரிசுத்த செபமாலையின் மூலமாய் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன் , எனக்குப் பதில் சொல்லும்படி மனுக்குலத்தின் பகைவர்களாகிய இவைகளுக்குக் கட்டளையிடும் "
இச்செபம் முடிந்தும் முடியாமுன் பேய் பிடித்தவன் வாய் , காதுகளில் இருந்து கொழுந்து விட்டு எரியும் நெருப்புச் சுவாலை வீசும் தணல்கள் தாவின . யாவருக்கும் நடுக்கம் எனினும் ஒருவருக்கும் ஆபத்தில்லை ." டோமினிக் எங்களை சும்மா விட்டு விடும் , நாங்கள் இவனை விட்டு ஓடி விடுகிறோம் . இக்கேள்விக்கு சம்மனசுக்கள் உமக்குப் பிரியமானபோது பதில் சொல்லுவார்களே . நங்கள் பொய்யர்கள் தானே . எங்களை ஏன் கேட்க வேண்டும் ? எங்கள் மேல் இரங்கி எங்களைப் போக விடும் " என்று அலறின
"ஞானத்தின் தாயே , எனக்குமுன் இருக்கும் இந்த சபையோருக்காகத்தான் உம்மை மன்றாடுகிறேன் . அவர்கள் செபமாலை சொல்லப் பழகி இருக்கின்றனர் . நான் கேட்ட கேள்விக்கு பேய்கள் உண்மையான பதில் சொல்ல வேண்டும் " உடனே அர்ச்சிஷ்டவர் மட்டும் பார்க்கும் வண்ணம் எண்ணிக்கையில்லா சம்மனசுக்கள் சூழ தேவதாய் தோன்றி தன் கையில் வைத்திருந்த பொற்கோலால் பேய் பிடித்தவனைத் தட்டி , " என் தாசன் தொமினிக்கிற்கு உடனே பதில் சொல்லுங்கள் " என்றார்
அப்போதுதான் அடிபட்ட நாய் குரைப்பது போல " நீர் தான் எங்கள் சத்துராதி , எங்கள் வீழ்ச்சிக்கும் நாசத்துக்கும் காரணம் . எங்களை இவ்விதம் வாதிக்கவா மோட்சத்திலிருந்து இங்கு வந்தீர். ? பாவிகளின் பாதுகாவலியே, நரகத்திற்கு விழவேண்டியவர்களை எங்கள் கையினின்று பறித்துக் கொண்டு போகிறவரே , மோட்சத்துக்கு நிச்சயமான பாதையாகிய நீர் எங்களை ஏன் வற்புறுத்துகிறீர் ? எங்களுக்குப் பிரியம் இல்லாவிடினும் எங்கள் வெட்கத்துக்கும் , நாசத்துக்கும் மெய்யான காரணம் யாரென்று யாவருக்கும் முன்னால் சொல்ல வேண்டுமா ? இருளின் அரக்கர்களாகிய எங்களுக்கு ஐயோ கேடு !
கிறிஸ்தவ மக்களே ! கவனமாய்க் கேளுங்கள் . இயேசுவின் தாய் எல்லா வல்லமையும் உள்ளவர் . பாவிகள் நரகில் விழாமல் காப்பாற்றக் கூடியவர் . எங்கள் தந்திர மந்திரங்களை எல்லாம் வெளியாக்கும் சூரிய ஒளி அவர் . எங்கள் கண்ணிகளையும் வலைகளையும் அறுத்தெறிந்து எங்கள் சோதனைகள் பயனற்றுப் போகச் செய்கிறவர் அவர். அன்னையின் சேவையில் பிரமாணிக்கமாயிருந்த ஓர் ஆத்துமமாவது நித்திய தண்டனைக்கு ஆளாகவில்லை என்றும் , எல்லா அற்சிஷ்டவர்களுடைய வேண்டுதலை விட அவருடைய ( அந்த தாயினுடைய ) பெருமூச்சு ஒன்றே அதிக வல்லமையுள்ளது என்றும் , நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டியது எங்கள் துர்பாக்கியம் . எங்களுக்கு விரோதமாக மரியாயினுடைய செல்வாக்கை உபயோகிக்காமல் இருந்திருந்தால் , திருச்சபையை முன்னரே அழித்திருப்போம். திருச்சபையிலுள்ள எல்லா துறவற சபைகளும் பெரும் ஆபத்திற்கு உட்பட்டு நாசமாய்ப் போயிருக்கும் .
ஐயோ ! இதையும் சொல்ல வேண்டுமா? செபமாலை செய்வதில் நிலைத்திருக்கும் எவனும் நித்திய ஆக்கினைக்கு உள்ளாக மாட்டான் . பாவங்களுக்கு மெய்யாகவே மனஸ்தாபப்படும் வரத்தை அவர் அப்பக்தியுள்ளோருக்குப் பெற்றுக் கொடுத்து , இறைவனிடமிருந்து இரக்கத்தையும் மன்னிப்பையும் அடையச் செய்கிறார் "
அங்குள்ள எல்லோரையும் புனிதர் செபமாலை செய்யச் சொன்னார் . "அருள் நிறைந்த மரியே " சொல்லி முடித்த ஒவ்வொரு முறையும் சிறு தீக்குழம்புகள் போன்ற கனல் போன்ற பலப்பல பேய்கள் அவனுடைய உடலிலிருந்து வெளியேறின . எல்லாப் பேய்களும் போய் அந்தப் பதிதன் முற்றும் விடுதலையானபின் சாதாரண மக்கள் கண்ணுக்கு இன்னும் மறைந்திருந்த தேவ தாய் கூடியிருந்த எல்லா மக்களுக்கும் ஆசீர் அளித்து மறைந்து போனார். மக்கள் உள்ளத்தில் காரணம் அறியா மகிழ்ச்சி பொங்கியது
அநேக பதிதர்கள் மனந்திரும்பி செபமாலை மாதா சபையில் சேர்ந்தனர்
பதினைந்தாம் நாள்
காணாமல் போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டடைதல்
எருசலேம் தேவாலயத்துக்கு - தேவாலயம் யூதர்களுக்கு ஒன்று தானே - வருடம் மும்முறை யூத ஆண்மக்கள் போக வேண்டியவர்கள் . தூர தேசங்களில் உள்ளவர்கள் சாதாரணமாய்ப் பாஸ்கா பண்டிகைக்குத் தான் போவார்கள் .
பெண்கள் போவது கட்டாயம் இல்லாவிடினும் பக்தியின் நிமித்தம் பலர் செல்வது வழக்கம் . இயேசுநாதருக்குப் பன்னிரண்டு வயதானபோது எவ்வாண்டும் போல் இவ்வாண்டும் சேசு மரி சூசை மூவரும் எருசலேம் சென்று ஏழு நாள் தங்கின பின் திரும்பினர். ஏராளமான கூட்டம். திரும்புகையில் பெண்கள் தனித்தும், ஆண்கள் தனித்தும் போவது மரபு . இரவு தங்கும் இடத்தில் குடும்பம் குடும்பமாய்ச் சந்திப்பர். இயேசுநாதர் வேண்டுமென்றே இச்சமயம் வீட்டிற்குத் திரும்பாமல் ஆலயத்தில் தங்கி விட்டார் . தாயோடு மகன் வழக்கம் போல் போயிருப்பான் என்று சூசையப்பர் நினைத்துக் கொண்டார் . இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாகி ' சட்டத்தின் குமாரன் ' ஆகி விட்டபடியால் தந்தையோடு போயிருப்பான் என்று கன்னித்தாய் கருதினாரா, அல்லது தன்னையும் தன் குடும்பத்தையும் மறந்து பக்திப் பரவசத்துடன் ஈடுபட்டவராய்ச் சென்றாரா ? என்னவானாலும் மாலை குடும்பம் குடும்பமாய்ச் சந்தித்த போது சூசையும் மரியும் இயேசுவைக் காணவில்லை அவர்கள் மன உலகில் வானமே இருண்டு உருண்டது ; கோரப் புயல் வீசியது ; கவலை , கலக்கம் , வேதனை அவர்கள் உள்ளத்தைப் பிழிந்தெடுத்தன. புலிவாய் பட்ட புருவையின் நெஞ்சம் நின்று விடுவது போல அவர்கள் இதயமும் நின்று விட்டதா ? சோகப் பெருக்கினால் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் சில நிமிடம் நின்றனர் . . தாயின் கண்ணீர் ஆறாய்ப் பிரவாகமெடுத்து ஓடியது . ' என் செய்வோம் ? என் செய்வோம் ? ' அங்கு தங்கிய கூட்டங்களில் எல்லாம் போய் தேடினர் . ஒவ்வொருவரையும் விசாரித்து வாடி வதங்கினர். எங்கு போய்த் தேடுவது என்று ஏங்கினர். தாம் பிறந்த பெத்லகேம் குகையைத் தேடிப் போயிருப்பாரோ ? தன் முன்னோடியான ஸ்நாபக அருளப்பரைத் தேடிப் போயிருப்பாரோ ? அங்கு போய்த் தேடலாம் என்று மாமரி நினைத்தாரா ?கொலைகார யூத அரசனான வஞ்சகன் பாலனைத் தூக்கிப் போய் விட்டானோ ? அவரை எவ்விதம் மீட்பது என்று அவர்கள் உள்ளம் அச்சத்தினால் அலைபாய்ந்தது . உள்ளத்தில் ஒலித்த சப்தத்துக்கிணங்கி எருசலேம் ஏகுகின்றனர் . இரவு , பயங்கரமான பாதை , தனியே இருவரும் துக்கமே உருவெடுத்து நடக்கின்றனர்
மறுநாள் முழுதும் எருசலேம் வீதிகளில் எல்லாம் சுற்றித் தேடி வருகின்றனர் . அன்று மாலை சங்கதி எட்டுகிறது. எங்கும் விசாரித்தார்கள் அல்லவா? ஒரு பெண் மகள் சொல்லுவாள் : "அம்மா ! உம் சாயலே தான் . அழகு சிந்தும் ஒரு பையன் , தேனினும் இனிய மொழியில் 'எனக்கு ஒரு வாய் அன்னம் கொடு' என்று நேற்று மதியம் கேட்டார். என் இல்லம் தங்கச் சொல்லி கெஞ்சினேன் . எனக்கு வேலை இருக்கிறதென்று போய் விட்டார் . அவர் என் இல்லம் வந்தபோது சூரியனே வந்தது போல் என் வீடு பிரகாசித்தது . அவர் போனவுடனே என் வீடு இருளடைந்தது " .
இன்னொரு நங்கை " அன்றலர்ந்த ரோஜா போல அழகு கொழிக்கும் சுந்தர வடிவன் நேற்று மாலை என் வீட்டு வாசல் வந்து அன்னம் இரந்தான். கல்லையும் கரைக்க்கக்கூடிய அவரது மலர் விழிப் பார்வையை என்னென்று இயம்புவது ? அந்தக் கண்ணின் சுந்தர சோதியை ஒரு முறை பார்க்க உலகையே விற்றுக் கொடுக்கலாம்" . தாயின் உள்ளத்தில் என்ன வேல் வீச்சு ! என் அருமைக் குழந்தை பசியால் நைந்து தெருத்தெருவாய் அலைந்து திரிந்திருக்கிறதே என்ற விசனம் ஒருபக்கம் . அவர் பெருமையைக் கேட்டு பூரிப்பு மறு பக்கம் . அனாதைசாலை ஒன்றில் உள்ள இரு சிறுவர்கள் " இன்று பகல் எங்களிடம் ஒரு செல்வன் வந்தான். அவன் கை நிறையப் பண்டம் . எங்களுடைய கண்ணில் தெரிந்த ஆசையைக் கண்டு , எங்களை அண்டி, எங்களுக்கு அவைகளைப் பரிமாறிப் போனார் . அவர் சம்மனசோ என்று நாங்கள் நினைத்தோம் " மகனின் பெருமையைக் கேட்கக் கேட்க துக்கத்தில் இருந்த மாமரிக்கும் சூசைக்கும் மகிழ்ச்சிக் கமலம் மலர்ந்தது .பக்திப் பரவசமான பலர் இவ்விதம் எழுதி வைத்தனர்
தேவாலயத்தை தரிசிக்க வேண்டும் என்பது மூன்றாம் நாள் இவர்கள் உள்ளத்தில் ஓர் எண்ணம் . ஒரு பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஒரு பெருங்கூட்டம் . அங்கு சென்றனர் . அறிஞர்களும் பெரியார்களும் சிறுவர்களும் நின்று கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தனர் . ஆசனத்தில் சில சட்ட நிபுணர்கள் ; அவர்கள் மத்தியில் திவ்விய இயேசு . அவர் வாயிலிருந்து வரும் அமுத வெள்ளத்தைத் தான் அனைவரும் பருகிக் கொண்டிருந்தனர் . " என்ன ஞானமுள்ள குழந்தை " , " இவர் யார் பெற்ற பிள்ளை " " வானமே வடித்தெடுத்தார்ப் போன்ற பிள்ளை " என்று பலர் சொல்லிக் கொண்டிருந்தனர் . கன்னித்தாய்க்கும் கைத்தாதைக்கும் என்ன ஆச்சரியம் ! எவ்விதம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போயிருக்க வேண்டும் .
முதிர்ந்த பலமுள்ள ஏலியாஸ் போற்றிய சிறுவன் சாமுவேலும் ,யூதத்திரளை நிறுத்தி வைத்த செல்வன் தானியேலும் , தாயே உம் ஞாபகத்திற்கு இச்சமயம் வந்தனரா ? புண்ணியவாளரான சூசை , சில நாட்களுக்கு முன் எலிசபெத்தும் , சம்மனசுக்களும் , சிமியோனும் , அந்நாளும் , மூவரசரும் உமது மகனுக்கு அளித்த சாட்சியைக் கேட்டு சூசை தந்தாய், பரவசமானீரே; இன்று இயேசுவே தமக்குச் சாட்சியம் சொல்லுகிறார் . மக்கள் திரளும் அவர் பாதம் மடிந்து கிடப்பதைக்காண உமக்கும் நேசத்தாய்க்கும் எத்தனை பூரிப்பு ! தெய்வீகத்தின் ஞானமல்லவா பிடிவாதங்கொண்ட கர்விகளான இப்பரிசேயரின் மனத்தையும் கவர்கிறது?
இயேசு பெற்றோரைக் கண்டார். தாயிடம் தாவி வந்தார். மூன்று நாள் அங்கலாய்த்த மனம் இவ்வளவு சீக்கிரம் ஆறி விடுமா ? " மகனே , ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தீர் ? இதோ நானும் உம்முடைய தந்தையும் துக்கித்து உம்மைத் தேடினோமே " என்று தேவதாய் குழைந்து மொழிந்தார் . பட்டென்று பதில் வந்தது . " நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் ? நான் என் பிதாவின் காரியங்களில் அலுவலாயிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? "
மெய்தான் , இரவும் பகலும் ஒவ்வொரு வினாடியும் இயேசுவின் அலுவல் தேவ பிதாவை மகிமைப்படுத்துவதும் மனிதர் ஈடேற்றத்தை நிறைவேற்றுவதுமாம் . நம்முடைய அலுவலும் அதுதான் என்பதை நாம் மறந்தே போகிறோம் . அர்ச் சூசையப்பர் வளர்ப்புத் தந்தை . தாம் தேவ குமாரன் என்று தெளிவாய் நமக்கெடுத்து ஓதுகிறார்.
சிலுவையில் "பிதாவே , பிதாவே ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர் " என்று இயேசு புலம்பியபோது அவரது உள்ளத்தில் எவ்வளவு துக்கம் நிறைந்ததோ , அவ்வளவு துக்கம் மரியின் உள்ளத்தில் "ஏன் என்னைத் தேடினீர்கள் ?" என்று இயேசு கேட்டபோது பாய்ந்தது .
எனினும் இயேசு அவர்கள் கூடச் சென்று இன்னும் பதினெட்டு ஆண்டுகள் அவர்களோடு வசித்தபோது ஒவ்வொரு நிமிடமும் மரிக்கு என்ன மகிழ்ச்சி ? இப்பூவுலகில் புனிதர்களுக்கும் இன்பமும், துன்பமும் உண்டு . எனினும் துன்பத்தில் தான் இன்பம் பூத்துக் குலுங்குகிறது
செபம்
இழந்த மகனைத் தேடிய மாமரியே , உம் வழியாய்க் குழந்தை இயேசுவை எப்பொழுதும் தேடிக் கண்டடையும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டுவதாக . எல்லாக் குழந்தைகளிடத்தும் , குழந்தைகளுக்குரிய தேவைகளாலான வயோதிகர் , வியாதிக்காரர் , நாதியற்றவர்கள் , கபடற்றவர்கள், தனிமையின் துன்பத்தில் மிதக்கிறவர்கள் ஏழை எளியவர்களிடத்திலும் இயேசுவைக் காண உதவி செய்யம்மா .
எம் உள்ளத்திலே இயேசுவைக் காணும் வண்ணம் நாங்களும் சிறு குழந்தைகள் ஆவோமாக. செபமாலை இராக்கினியே , இயேசுவை எங்கு கண்டு பிடிப்போம் ? உம்மிடத்தில் தானே அவரைக் கண்டு பிடிக்க முடியும் . பிரமாணிக்கமாய்த் தேவ இரகசியங்களை தியானித்து செபமாலை செய்து வருவதனால் இயேசுவை உம்மிடம் எப்போதும் கண்டு மகிழ எங்களுக்கு உதவி செய்யும் ஆமென்
சரிதை
முன் கூறியது போல முத் ஆலன் ரோச் , செபமாலையைப் பேய் பிடித்தவர்கள் கழுத்தில் போடுவதனால் அநேகரிடமிருந்து பேயை ஓட்டியிருக்கிறார் . அதற்கு ஓர் எடுத்துக்காட்டு : பேய் பிடித்த ஒரு மனிதன் பற்பல பக்தி முயற்சிகள் வழியாக தன்னிடமிருந்த பேயைத் துரத்தப் பார்த்தான் . பேய் போனபாடில்லை . இறுதியில் செபமாலையைத் தரித்துப் பார்ப்போமே என்று அதைக் கழுத்திலிட்டான். அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது . ஆதலால் இரவும் பகலும் அதைத் தரித்திருந்தான் . பேய்க்கு இது பெரிய சங்கிலி போல இருந்தது . அதன் பாரத்தைத் தாங்க முடியாமல் ஓடி விட்டது
செபமாலையைச் செய்வதால் மட்டுமல்ல . செபமாலையை நம் கூடவே வைத்திருப்பதாலும் பேயின் சற்பனைகளுக்குத் தப்பித்துக் கொள்ளலாமே . வேறு பல ஆபத்துக்களிளிருந்தும் செபமாலை அன்னை நம்மைக் காப்பாற்றுகிறார். ஆதலால் தான் எங்கிருந்தாலும் எங்கு போனாலும் செபமாலையை தன் கூடவே வைத்திருப்பதற்கும் திருச்சபை பலன்களை அளித்திருக்கிறது . செபமாலை மாதா சபையில் சேர்ந்தவர்கள் செபமாலையைத் தங்கள் மேலே வைத்திருந்தால் ஒவ்வொரு நாளும் பலன் அடையலாம்
காணாமல் போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டடைதல்
எருசலேம் தேவாலயத்துக்கு - தேவாலயம் யூதர்களுக்கு ஒன்று தானே - வருடம் மும்முறை யூத ஆண்மக்கள் போக வேண்டியவர்கள் . தூர தேசங்களில் உள்ளவர்கள் சாதாரணமாய்ப் பாஸ்கா பண்டிகைக்குத் தான் போவார்கள் .
பெண்கள் போவது கட்டாயம் இல்லாவிடினும் பக்தியின் நிமித்தம் பலர் செல்வது வழக்கம் . இயேசுநாதருக்குப் பன்னிரண்டு வயதானபோது எவ்வாண்டும் போல் இவ்வாண்டும் சேசு மரி சூசை மூவரும் எருசலேம் சென்று ஏழு நாள் தங்கின பின் திரும்பினர். ஏராளமான கூட்டம். திரும்புகையில் பெண்கள் தனித்தும், ஆண்கள் தனித்தும் போவது மரபு . இரவு தங்கும் இடத்தில் குடும்பம் குடும்பமாய்ச் சந்திப்பர். இயேசுநாதர் வேண்டுமென்றே இச்சமயம் வீட்டிற்குத் திரும்பாமல் ஆலயத்தில் தங்கி விட்டார் . தாயோடு மகன் வழக்கம் போல் போயிருப்பான் என்று சூசையப்பர் நினைத்துக் கொண்டார் . இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாகி ' சட்டத்தின் குமாரன் ' ஆகி விட்டபடியால் தந்தையோடு போயிருப்பான் என்று கன்னித்தாய் கருதினாரா, அல்லது தன்னையும் தன் குடும்பத்தையும் மறந்து பக்திப் பரவசத்துடன் ஈடுபட்டவராய்ச் சென்றாரா ? என்னவானாலும் மாலை குடும்பம் குடும்பமாய்ச் சந்தித்த போது சூசையும் மரியும் இயேசுவைக் காணவில்லை அவர்கள் மன உலகில் வானமே இருண்டு உருண்டது ; கோரப் புயல் வீசியது ; கவலை , கலக்கம் , வேதனை அவர்கள் உள்ளத்தைப் பிழிந்தெடுத்தன. புலிவாய் பட்ட புருவையின் நெஞ்சம் நின்று விடுவது போல அவர்கள் இதயமும் நின்று விட்டதா ? சோகப் பெருக்கினால் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் சில நிமிடம் நின்றனர் . . தாயின் கண்ணீர் ஆறாய்ப் பிரவாகமெடுத்து ஓடியது . ' என் செய்வோம் ? என் செய்வோம் ? ' அங்கு தங்கிய கூட்டங்களில் எல்லாம் போய் தேடினர் . ஒவ்வொருவரையும் விசாரித்து வாடி வதங்கினர். எங்கு போய்த் தேடுவது என்று ஏங்கினர். தாம் பிறந்த பெத்லகேம் குகையைத் தேடிப் போயிருப்பாரோ ? தன் முன்னோடியான ஸ்நாபக அருளப்பரைத் தேடிப் போயிருப்பாரோ ? அங்கு போய்த் தேடலாம் என்று மாமரி நினைத்தாரா ?கொலைகார யூத அரசனான வஞ்சகன் பாலனைத் தூக்கிப் போய் விட்டானோ ? அவரை எவ்விதம் மீட்பது என்று அவர்கள் உள்ளம் அச்சத்தினால் அலைபாய்ந்தது . உள்ளத்தில் ஒலித்த சப்தத்துக்கிணங்கி எருசலேம் ஏகுகின்றனர் . இரவு , பயங்கரமான பாதை , தனியே இருவரும் துக்கமே உருவெடுத்து நடக்கின்றனர்
மறுநாள் முழுதும் எருசலேம் வீதிகளில் எல்லாம் சுற்றித் தேடி வருகின்றனர் . அன்று மாலை சங்கதி எட்டுகிறது. எங்கும் விசாரித்தார்கள் அல்லவா? ஒரு பெண் மகள் சொல்லுவாள் : "அம்மா ! உம் சாயலே தான் . அழகு சிந்தும் ஒரு பையன் , தேனினும் இனிய மொழியில் 'எனக்கு ஒரு வாய் அன்னம் கொடு' என்று நேற்று மதியம் கேட்டார். என் இல்லம் தங்கச் சொல்லி கெஞ்சினேன் . எனக்கு வேலை இருக்கிறதென்று போய் விட்டார் . அவர் என் இல்லம் வந்தபோது சூரியனே வந்தது போல் என் வீடு பிரகாசித்தது . அவர் போனவுடனே என் வீடு இருளடைந்தது " .
இன்னொரு நங்கை " அன்றலர்ந்த ரோஜா போல அழகு கொழிக்கும் சுந்தர வடிவன் நேற்று மாலை என் வீட்டு வாசல் வந்து அன்னம் இரந்தான். கல்லையும் கரைக்க்கக்கூடிய அவரது மலர் விழிப் பார்வையை என்னென்று இயம்புவது ? அந்தக் கண்ணின் சுந்தர சோதியை ஒரு முறை பார்க்க உலகையே விற்றுக் கொடுக்கலாம்" . தாயின் உள்ளத்தில் என்ன வேல் வீச்சு ! என் அருமைக் குழந்தை பசியால் நைந்து தெருத்தெருவாய் அலைந்து திரிந்திருக்கிறதே என்ற விசனம் ஒருபக்கம் . அவர் பெருமையைக் கேட்டு பூரிப்பு மறு பக்கம் . அனாதைசாலை ஒன்றில் உள்ள இரு சிறுவர்கள் " இன்று பகல் எங்களிடம் ஒரு செல்வன் வந்தான். அவன் கை நிறையப் பண்டம் . எங்களுடைய கண்ணில் தெரிந்த ஆசையைக் கண்டு , எங்களை அண்டி, எங்களுக்கு அவைகளைப் பரிமாறிப் போனார் . அவர் சம்மனசோ என்று நாங்கள் நினைத்தோம் " மகனின் பெருமையைக் கேட்கக் கேட்க துக்கத்தில் இருந்த மாமரிக்கும் சூசைக்கும் மகிழ்ச்சிக் கமலம் மலர்ந்தது .பக்திப் பரவசமான பலர் இவ்விதம் எழுதி வைத்தனர்
தேவாலயத்தை தரிசிக்க வேண்டும் என்பது மூன்றாம் நாள் இவர்கள் உள்ளத்தில் ஓர் எண்ணம் . ஒரு பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஒரு பெருங்கூட்டம் . அங்கு சென்றனர் . அறிஞர்களும் பெரியார்களும் சிறுவர்களும் நின்று கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தனர் . ஆசனத்தில் சில சட்ட நிபுணர்கள் ; அவர்கள் மத்தியில் திவ்விய இயேசு . அவர் வாயிலிருந்து வரும் அமுத வெள்ளத்தைத் தான் அனைவரும் பருகிக் கொண்டிருந்தனர் . " என்ன ஞானமுள்ள குழந்தை " , " இவர் யார் பெற்ற பிள்ளை " " வானமே வடித்தெடுத்தார்ப் போன்ற பிள்ளை " என்று பலர் சொல்லிக் கொண்டிருந்தனர் . கன்னித்தாய்க்கும் கைத்தாதைக்கும் என்ன ஆச்சரியம் ! எவ்விதம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போயிருக்க வேண்டும் .
முதிர்ந்த பலமுள்ள ஏலியாஸ் போற்றிய சிறுவன் சாமுவேலும் ,யூதத்திரளை நிறுத்தி வைத்த செல்வன் தானியேலும் , தாயே உம் ஞாபகத்திற்கு இச்சமயம் வந்தனரா ? புண்ணியவாளரான சூசை , சில நாட்களுக்கு முன் எலிசபெத்தும் , சம்மனசுக்களும் , சிமியோனும் , அந்நாளும் , மூவரசரும் உமது மகனுக்கு அளித்த சாட்சியைக் கேட்டு சூசை தந்தாய், பரவசமானீரே; இன்று இயேசுவே தமக்குச் சாட்சியம் சொல்லுகிறார் . மக்கள் திரளும் அவர் பாதம் மடிந்து கிடப்பதைக்காண உமக்கும் நேசத்தாய்க்கும் எத்தனை பூரிப்பு ! தெய்வீகத்தின் ஞானமல்லவா பிடிவாதங்கொண்ட கர்விகளான இப்பரிசேயரின் மனத்தையும் கவர்கிறது?
இயேசு பெற்றோரைக் கண்டார். தாயிடம் தாவி வந்தார். மூன்று நாள் அங்கலாய்த்த மனம் இவ்வளவு சீக்கிரம் ஆறி விடுமா ? " மகனே , ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தீர் ? இதோ நானும் உம்முடைய தந்தையும் துக்கித்து உம்மைத் தேடினோமே " என்று தேவதாய் குழைந்து மொழிந்தார் . பட்டென்று பதில் வந்தது . " நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் ? நான் என் பிதாவின் காரியங்களில் அலுவலாயிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? "
மெய்தான் , இரவும் பகலும் ஒவ்வொரு வினாடியும் இயேசுவின் அலுவல் தேவ பிதாவை மகிமைப்படுத்துவதும் மனிதர் ஈடேற்றத்தை நிறைவேற்றுவதுமாம் . நம்முடைய அலுவலும் அதுதான் என்பதை நாம் மறந்தே போகிறோம் . அர்ச் சூசையப்பர் வளர்ப்புத் தந்தை . தாம் தேவ குமாரன் என்று தெளிவாய் நமக்கெடுத்து ஓதுகிறார்.
சிலுவையில் "பிதாவே , பிதாவே ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர் " என்று இயேசு புலம்பியபோது அவரது உள்ளத்தில் எவ்வளவு துக்கம் நிறைந்ததோ , அவ்வளவு துக்கம் மரியின் உள்ளத்தில் "ஏன் என்னைத் தேடினீர்கள் ?" என்று இயேசு கேட்டபோது பாய்ந்தது .
எனினும் இயேசு அவர்கள் கூடச் சென்று இன்னும் பதினெட்டு ஆண்டுகள் அவர்களோடு வசித்தபோது ஒவ்வொரு நிமிடமும் மரிக்கு என்ன மகிழ்ச்சி ? இப்பூவுலகில் புனிதர்களுக்கும் இன்பமும், துன்பமும் உண்டு . எனினும் துன்பத்தில் தான் இன்பம் பூத்துக் குலுங்குகிறது
செபம்
இழந்த மகனைத் தேடிய மாமரியே , உம் வழியாய்க் குழந்தை இயேசுவை எப்பொழுதும் தேடிக் கண்டடையும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டுவதாக . எல்லாக் குழந்தைகளிடத்தும் , குழந்தைகளுக்குரிய தேவைகளாலான வயோதிகர் , வியாதிக்காரர் , நாதியற்றவர்கள் , கபடற்றவர்கள், தனிமையின் துன்பத்தில் மிதக்கிறவர்கள் ஏழை எளியவர்களிடத்திலும் இயேசுவைக் காண உதவி செய்யம்மா .
எம் உள்ளத்திலே இயேசுவைக் காணும் வண்ணம் நாங்களும் சிறு குழந்தைகள் ஆவோமாக. செபமாலை இராக்கினியே , இயேசுவை எங்கு கண்டு பிடிப்போம் ? உம்மிடத்தில் தானே அவரைக் கண்டு பிடிக்க முடியும் . பிரமாணிக்கமாய்த் தேவ இரகசியங்களை தியானித்து செபமாலை செய்து வருவதனால் இயேசுவை உம்மிடம் எப்போதும் கண்டு மகிழ எங்களுக்கு உதவி செய்யும் ஆமென்
சரிதை
முன் கூறியது போல முத் ஆலன் ரோச் , செபமாலையைப் பேய் பிடித்தவர்கள் கழுத்தில் போடுவதனால் அநேகரிடமிருந்து பேயை ஓட்டியிருக்கிறார் . அதற்கு ஓர் எடுத்துக்காட்டு : பேய் பிடித்த ஒரு மனிதன் பற்பல பக்தி முயற்சிகள் வழியாக தன்னிடமிருந்த பேயைத் துரத்தப் பார்த்தான் . பேய் போனபாடில்லை . இறுதியில் செபமாலையைத் தரித்துப் பார்ப்போமே என்று அதைக் கழுத்திலிட்டான். அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது . ஆதலால் இரவும் பகலும் அதைத் தரித்திருந்தான் . பேய்க்கு இது பெரிய சங்கிலி போல இருந்தது . அதன் பாரத்தைத் தாங்க முடியாமல் ஓடி விட்டது
செபமாலையைச் செய்வதால் மட்டுமல்ல . செபமாலையை நம் கூடவே வைத்திருப்பதாலும் பேயின் சற்பனைகளுக்குத் தப்பித்துக் கொள்ளலாமே . வேறு பல ஆபத்துக்களிளிருந்தும் செபமாலை அன்னை நம்மைக் காப்பாற்றுகிறார். ஆதலால் தான் எங்கிருந்தாலும் எங்கு போனாலும் செபமாலையை தன் கூடவே வைத்திருப்பதற்கும் திருச்சபை பலன்களை அளித்திருக்கிறது . செபமாலை மாதா சபையில் சேர்ந்தவர்கள் செபமாலையைத் தங்கள் மேலே வைத்திருந்தால் ஒவ்வொரு நாளும் பலன் அடையலாம்