- புனிதர்கள்
- தொகுப்பு
- டிசம்பர்
டிசம்பர் மாதப் புனிதர்கள்
- டிசம்பர் 1
- டிசம்பர் 2
- டிசம்பர் 3
- டிசம்பர் 4
- டிசம்பர் 5
- டிசம்பர் 6
- டிசம்பர் 7
- டிசம்பர் 8
- டிசம்பர் 9
- டிசம்பர் 10
- டிசம்பர் 11
- டிசம்பர் 12
- டிசம்பர் 13
- டிசம்பர் 14
- டிசம்பர் 15
- டிசம்பர் 16
- டிசம்பர் 17
- டிசம்பர் 18
- டிசம்பர் 19
- டிசம்பர் 20
- டிசம்பர் 21
- டிசம்பர் 22
- டிசம்பர் 23
- டிசம்பர் 24
- டிசம்பர் 25
- டிசம்பர் 26
- டிசம்பர் 27
- டிசம்பர் 28
- டிசம்பர் 29
- டிசம்பர் 30
- டிசம்பர் 31
டிசம்பர் 1
✠ புனித எட்மண்ட் கேம்பியன் ✠
(Edmund Campion)
மறைசாட்சியின் இரத்தத் துளிகளால் மற்றொரு மறைசாட்சி/ ஆங்கிலேய இயேசு சபை கத்தோலிக்க குரு :
பிறப்பு : ஜனவரி 24, 1540
லண்டன்
இறப்பு : டிசம்பர் 1, 1581 (அகவை 41)
லண்டன்
முத்திப்பேறு பட்டம் : டிசம்பர் 9, 1886
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
புனிதர் பட்டம் : அக்டோபர் 25, 1970
திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பால்
நினைவுத் திருநாள் : டிசம்பர் 1
இங்கிலாந்து நாட்டில், 1581ம் ஆண்டு, டிசம்பர் முதல் தேதி, 41 வயது நிறைந்த இயேசு சபை அருள் பணியாளர் ஒருவர் தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். Tyburn எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டு, அவரது உடல் நான்கு கூறுகளாக வெட்டப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரது உடல் நான்கு கூறுகளாக வெட்டப்பட்டபோது, அருகில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஓர் இளையவரின் உடையில், கொல்லப்பட்ட அருள் பணியாளரின் இரத்தத் துளிகள் விழுந்தன. அந்த இளையவர் இந்தக் காட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டு, அந்த உடையை ஒரு புனிதப் பொருளாகக் காத்ததோடு, அவரும் ஒரு சில ஆண்டுகள் சென்று, இயேசு சபையில் இணைந்து, மறைசாட்சியாக மரணம் அடைந்தார். அந்த இளையவரின் பெயர், வணக்கத்திற்குரிய Henry Walpole. அவரது உடையில் சிந்திய இரத்தத்திற்குச் சொந்தக் காரர், புனித எட்மண்ட் கேம்பியன் (Edmund Campion).
1540ம் ஆண்டு பிறந்த எட்மண்ட், பள்ளியிலும், கல்லூரியிலும் தன் அறிவுத்திறனால் பெரும், புகழும் பெற்றார். பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, இங்கிலாந்து அரசி மேரி அவர்களுக்கு வரவேற்புரை வழங்கத் தெரிவு செய்யப்பட்டார். கல்லூரியில் பயின்றபோது, அரசி எலிசபெத் அவர்கள் முன்னிலையில் சொற்பொழிவாற்றினார். தன் வாழ்வை, ஆங்கிலிக்கன் சபையில் ஆரம்பித்த எட்மண்ட், பின்னர், கத்தோலிக்க மறையைத் தழுவினார். இயேசு சபையில் சேரவிழைந்த இவர், தன் 33வது வயதில், உரோம் நகர் நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
இயேசு சபையின் பயிற்சிகளை முடித்து, அருட்பணியாளரான எட்மண்ட் அவர்கள், மீண்டும் 1580ம் ஆண்டு, ஒரு வைர வர்த்தகரைப் போல வேடமணிந்து இங்கிலாந்துக்குள் நுழைந்தார்.
இங்கிலாந்து நாட்டில், கத்தோலிக்க மறைக்கு எதிராக எழுந்த கலவரங்களால் மக்கள் மறைந்து வாழ்ந்தனர். அவர்கள் மத்தியில் எட்மண்ட் அவர்கள் கடினமாக உழைத்து, அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். 1581ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் மிகக் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானார். டிசம்பர் 1ம் தேதி, மறைசாட்சியாக மரணம் அடைந்தார்.
திருத்தந்தை 13ம் லியோ அவர்களால், 1886ம் ஆண்டு முத்திப்பேறு பெற்றவராகவும், 1970ம் ஆண்டு, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பால் அவர்களால் புனிதராகவும் அறிவிக்கப்பட்ட புனித எட்மண்ட் கேம்பியன் (St Edmund Campion) அவர்களின் திருநாள் டிசம்பர் முதல் தேதி கொண்டாடப்படுகிறது.
Back to top
✠ புனித எட்மண்ட் கேம்பியன் ✠
(Edmund Campion)
மறைசாட்சியின் இரத்தத் துளிகளால் மற்றொரு மறைசாட்சி/ ஆங்கிலேய இயேசு சபை கத்தோலிக்க குரு :
பிறப்பு : ஜனவரி 24, 1540
லண்டன்
இறப்பு : டிசம்பர் 1, 1581 (அகவை 41)
லண்டன்
முத்திப்பேறு பட்டம் : டிசம்பர் 9, 1886
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
புனிதர் பட்டம் : அக்டோபர் 25, 1970
திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பால்
நினைவுத் திருநாள் : டிசம்பர் 1
இங்கிலாந்து நாட்டில், 1581ம் ஆண்டு, டிசம்பர் முதல் தேதி, 41 வயது நிறைந்த இயேசு சபை அருள் பணியாளர் ஒருவர் தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். Tyburn எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டு, அவரது உடல் நான்கு கூறுகளாக வெட்டப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரது உடல் நான்கு கூறுகளாக வெட்டப்பட்டபோது, அருகில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஓர் இளையவரின் உடையில், கொல்லப்பட்ட அருள் பணியாளரின் இரத்தத் துளிகள் விழுந்தன. அந்த இளையவர் இந்தக் காட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டு, அந்த உடையை ஒரு புனிதப் பொருளாகக் காத்ததோடு, அவரும் ஒரு சில ஆண்டுகள் சென்று, இயேசு சபையில் இணைந்து, மறைசாட்சியாக மரணம் அடைந்தார். அந்த இளையவரின் பெயர், வணக்கத்திற்குரிய Henry Walpole. அவரது உடையில் சிந்திய இரத்தத்திற்குச் சொந்தக் காரர், புனித எட்மண்ட் கேம்பியன் (Edmund Campion).
1540ம் ஆண்டு பிறந்த எட்மண்ட், பள்ளியிலும், கல்லூரியிலும் தன் அறிவுத்திறனால் பெரும், புகழும் பெற்றார். பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, இங்கிலாந்து அரசி மேரி அவர்களுக்கு வரவேற்புரை வழங்கத் தெரிவு செய்யப்பட்டார். கல்லூரியில் பயின்றபோது, அரசி எலிசபெத் அவர்கள் முன்னிலையில் சொற்பொழிவாற்றினார். தன் வாழ்வை, ஆங்கிலிக்கன் சபையில் ஆரம்பித்த எட்மண்ட், பின்னர், கத்தோலிக்க மறையைத் தழுவினார். இயேசு சபையில் சேரவிழைந்த இவர், தன் 33வது வயதில், உரோம் நகர் நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
இயேசு சபையின் பயிற்சிகளை முடித்து, அருட்பணியாளரான எட்மண்ட் அவர்கள், மீண்டும் 1580ம் ஆண்டு, ஒரு வைர வர்த்தகரைப் போல வேடமணிந்து இங்கிலாந்துக்குள் நுழைந்தார்.
இங்கிலாந்து நாட்டில், கத்தோலிக்க மறைக்கு எதிராக எழுந்த கலவரங்களால் மக்கள் மறைந்து வாழ்ந்தனர். அவர்கள் மத்தியில் எட்மண்ட் அவர்கள் கடினமாக உழைத்து, அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். 1581ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் மிகக் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானார். டிசம்பர் 1ம் தேதி, மறைசாட்சியாக மரணம் அடைந்தார்.
திருத்தந்தை 13ம் லியோ அவர்களால், 1886ம் ஆண்டு முத்திப்பேறு பெற்றவராகவும், 1970ம் ஆண்டு, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பால் அவர்களால் புனிதராகவும் அறிவிக்கப்பட்ட புனித எட்மண்ட் கேம்பியன் (St Edmund Campion) அவர்களின் திருநாள் டிசம்பர் முதல் தேதி கொண்டாடப்படுகிறது.
Back to top
டிசம்பர் 2
துறவி ஆஞ்சலா அஸ்டோர்க் Angela Astorch
பிறப்பு
01 செப்டம்பர் 1592,
பார்சிலோனா Barcelona, ஸ்பெயின்
இறப்பு
02 டிசம்பர் 1665,
முர்சியா Murcia, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 25 மே 1982, திருத்தந்தை 2 ஆம் ஜான்பவுல்
இவர் பார்சிலோனாவில் இருந்த புனித கப்புச்சின் துறவற சபையில் தனது 17 ஆம் வயதில் துறவற வார்த்தைப்பாடுகளைப் பெற்றார். தான் துறவியான 8 ஆண்டுகள் கழித்து, சரகோசா (Saragossa) என்ற ஊரில் துறவற மடம் ஒன்றைக்கட்டினார். அதன்பிறகு அவ்வில்லத்திற்கு தானே தலைமை பொறுப்பையும் ஏற்றார். ஞானத்தாலும், அறிவாலும் சிறந்து விளங்கி தன் மடத்தை வழிநடத்தினார். அதன்பின் அச்சபையை ஸ்பெயின் நாட்டில் முர்சியா (Murcia) என்ற இடத்திலும் நிறுவினார். இவர் அம்மடத்திலிருந்தபோது எண்ணிலடங்கா இயேசுவின் திருக்காட்சிகளை பெற்றார். அவைகளை தானே தன் கைப்பட எழுதியும் வைத்தார். இவர் முர்சியா ஊரிலிருந்த ஆலயங்களில் செப வழிபாட்டை நடத்தி, அவைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
செபம்:
புதுமைகளை செய்பவரே எம் கடவுளே! புனித கப்புச்சின் சபை துறவிகளையும், குருக்களையும் ஆசீர்வதித்தருளும். அவர்களோடு எச்சூழலிலும் உடனிருந்து காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
துறவி ஆஞ்சலா அஸ்டோர்க் Angela Astorch
பிறப்பு
01 செப்டம்பர் 1592,
பார்சிலோனா Barcelona, ஸ்பெயின்
இறப்பு
02 டிசம்பர் 1665,
முர்சியா Murcia, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 25 மே 1982, திருத்தந்தை 2 ஆம் ஜான்பவுல்
இவர் பார்சிலோனாவில் இருந்த புனித கப்புச்சின் துறவற சபையில் தனது 17 ஆம் வயதில் துறவற வார்த்தைப்பாடுகளைப் பெற்றார். தான் துறவியான 8 ஆண்டுகள் கழித்து, சரகோசா (Saragossa) என்ற ஊரில் துறவற மடம் ஒன்றைக்கட்டினார். அதன்பிறகு அவ்வில்லத்திற்கு தானே தலைமை பொறுப்பையும் ஏற்றார். ஞானத்தாலும், அறிவாலும் சிறந்து விளங்கி தன் மடத்தை வழிநடத்தினார். அதன்பின் அச்சபையை ஸ்பெயின் நாட்டில் முர்சியா (Murcia) என்ற இடத்திலும் நிறுவினார். இவர் அம்மடத்திலிருந்தபோது எண்ணிலடங்கா இயேசுவின் திருக்காட்சிகளை பெற்றார். அவைகளை தானே தன் கைப்பட எழுதியும் வைத்தார். இவர் முர்சியா ஊரிலிருந்த ஆலயங்களில் செப வழிபாட்டை நடத்தி, அவைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
செபம்:
புதுமைகளை செய்பவரே எம் கடவுளே! புனித கப்புச்சின் சபை துறவிகளையும், குருக்களையும் ஆசீர்வதித்தருளும். அவர்களோடு எச்சூழலிலும் உடனிருந்து காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 3
புனித பிரான்சிஸ் சவேரியார்
( Saint Francis Xavier )
மறைப்பணியாளர் :
தொலை கிழக்கு நாடுகளின் திருத்தூதர் :
பிறப்பு : ஏப்ரல் 7, 1506
சவேரி, நவார் இராச்சியம், (எசுப்பானியா)
இறப்பு : டிசம்பர் 3, 1552 (அகவை 46)
சாங்சோங் தீவு, சீனா
ஏற்கும் சபை/ சமயம் : ரோமன் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம்
அருளாளர் பட்டம் : 25 அக்டோபர் 1619
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
புனிதர் பட்டம் : 12 மார்ச் 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
திருவிழா : டிசம்பர் 3
சித்தரிக்கப்படும் வகை :
நண்டு, சிலுவை; லீலி மலர், நெருப்பு, போதகர்,
எரியும் இதயம்
பாதுகாவல் :
இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியாலூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்;
புனித பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே எசுப்பானியம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.இந்தியாவில் கிறித்துவத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
கல்வி :
1525ம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
மீண்டும் 1534 முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்.
"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார், சவேரியாருக்கு எடுத்துரைக்க, சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.
குருத்துவமும் இந்திய வருகையும் :
சவேரியாரின் பயணங்கள் :
இதை தொடர்ந்து 1537ம் வருடம் ஜூன் மாதம் 24ம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
புனித சவேரியார் 1540ல் உரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்.
மறைப்பணி :
1543ல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார்.
திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம்.
கி.பி. 1544ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமற் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை நாடினார். விசய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் படித்து வடுகர்ப்படைகளளைபின்வாங்கும்படி கர்ச்சித்தார்.
புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஊதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.
“They called me great king, but hereafter for ever they will call you the Great Father” என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன்பாரட்டினர். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது.
ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.
மரணம் :
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ம் வருடம் டிசம்பர் 3ம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.
அழியா உடல் :
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( ஃபெப்ரவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553ல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.
புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு :
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்தபோது, அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் இருந்த இடத்தில் கி.பி. 1600ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் இன்றளவும் உள்ளது.
Back to top
புனித பிரான்சிஸ் சவேரியார்
( Saint Francis Xavier )
மறைப்பணியாளர் :
தொலை கிழக்கு நாடுகளின் திருத்தூதர் :
பிறப்பு : ஏப்ரல் 7, 1506
சவேரி, நவார் இராச்சியம், (எசுப்பானியா)
இறப்பு : டிசம்பர் 3, 1552 (அகவை 46)
சாங்சோங் தீவு, சீனா
ஏற்கும் சபை/ சமயம் : ரோமன் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம்
அருளாளர் பட்டம் : 25 அக்டோபர் 1619
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
புனிதர் பட்டம் : 12 மார்ச் 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
திருவிழா : டிசம்பர் 3
சித்தரிக்கப்படும் வகை :
நண்டு, சிலுவை; லீலி மலர், நெருப்பு, போதகர்,
எரியும் இதயம்
பாதுகாவல் :
இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியாலூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்;
புனித பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே எசுப்பானியம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.இந்தியாவில் கிறித்துவத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
கல்வி :
1525ம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
மீண்டும் 1534 முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்.
"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார், சவேரியாருக்கு எடுத்துரைக்க, சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.
குருத்துவமும் இந்திய வருகையும் :
சவேரியாரின் பயணங்கள் :
இதை தொடர்ந்து 1537ம் வருடம் ஜூன் மாதம் 24ம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
புனித சவேரியார் 1540ல் உரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்.
மறைப்பணி :
1543ல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார்.
திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம்.
கி.பி. 1544ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமற் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை நாடினார். விசய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் படித்து வடுகர்ப்படைகளளைபின்வாங்கும்படி கர்ச்சித்தார்.
புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஊதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.
“They called me great king, but hereafter for ever they will call you the Great Father” என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன்பாரட்டினர். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது.
ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.
மரணம் :
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ம் வருடம் டிசம்பர் 3ம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.
அழியா உடல் :
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( ஃபெப்ரவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553ல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.
புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு :
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்தபோது, அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் இருந்த இடத்தில் கி.பி. 1600ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் இன்றளவும் உள்ளது.
Back to top
டிசம்பர் 4
தமாஸ்கஸ் நகர புனித யோவான்
( St. John of Damascus )
மறைவல்லுநர் :
பிறப்பு : சுமார் 676 கி.பி.
தமாஸ்கு
இறப்பு : டிசம்பர் 4, 749
மார் சாபா, எருசலேம்
ஏற்கும் சபை/ சமயம் :
கிழக்கு மரபுவழி திருச்சபை,
கத்தோலிக்க திருச்சபை,
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்,
லூதரனியம், ஆங்கிலிக்க ஒன்றியம்
நினைவுத் திருவிழா : டிசம்பர் 4
தமாஸ்கஸ் நகர புனித யோவான் ஒரு சிரியன் கிறிஸ்தவ துறவியும் குருவும் ஆவார். தமாஸ்கு நகரில் பிறந்த இவர், எருசலேம் நகருக்கு அருகில் உள்ள மார் சாபா என்னும் மடத்தில் மரித்தார்.
பல்துறை வல்லுநர் :
பல்துறை வல்லுநராகிய இவர், சட்டம், இறையியல், மெய்யியல், இசை முதலியவற்றில் வல்லுனராக திகழ்ந்தார். இவர் தமாஸ்கு நகரின் காலிபாவிடம் தலைமை பொறுப்பாளராகப் முதலில் பணியாற்றினார். பின்னர் அவ்வேலையை விடுத்து துறவியானார். இவர் கிறித்தவ இறையியல் குறித்த பல நூல்களை இயற்றி உள்ளார்.திருவோவியங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்கள் பலவும் இன்றளவும் கிழக்கு திருச்சபையினரால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.
இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர். இவர் மரியாவின் விண்ணேற்பை குறித்து விரிவாக எழுதியதால் இவர் விண்ணேற்பின் மறைவல்லுநர் (Doctor of the Assumption) எனப்படுகின்றார்.
இவருடைய திருவிழா நாள் திசம்பர் 4 ஆகும்.
இவர் கிரேக்கம் தவிர அரபு மொழியிலும் புலமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. மேலும், இசுலாமிய கலீபக ஆளுநரின் அவையில் புனித யோவானின் தந்தை பணிபுரிந்ததால் யோவானும் சிறிதுகாலம் அங்கு பணியாற்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
கடைசி திருச்சபைத் தந்தை :
சில உரோமன் கத்தோலிக்க அறிஞர்கள் கருத்துப்படி, புனித தமாஸ்கஸ் யோவான் திருச்சபைத் தந்தையர் வரிசையில் காலத்தால் இறுதியில் வந்தவர்.
திருவோவியங்களுக்கு வணக்கம் பற்றி :
திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையல்ல என்று பிசான்சிய மன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமாஸ்கஸ் யோவான் அந்த அரசு கட்டளைக்குக் கடினமான எதிர்ப்புத் தெரிவித்து நூல்கள் எழுதினார். அவர் எழுதிய நூல்கள் பின்னர் நிகழ்ந்த இரண்டாம் நீசேன் பொதுச்சங்கத்தின்போது திருவோவிய வணக்கம் பற்றிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டன.
Back to top
தமாஸ்கஸ் நகர புனித யோவான்
( St. John of Damascus )
மறைவல்லுநர் :
பிறப்பு : சுமார் 676 கி.பி.
தமாஸ்கு
இறப்பு : டிசம்பர் 4, 749
மார் சாபா, எருசலேம்
ஏற்கும் சபை/ சமயம் :
கிழக்கு மரபுவழி திருச்சபை,
கத்தோலிக்க திருச்சபை,
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்,
லூதரனியம், ஆங்கிலிக்க ஒன்றியம்
நினைவுத் திருவிழா : டிசம்பர் 4
தமாஸ்கஸ் நகர புனித யோவான் ஒரு சிரியன் கிறிஸ்தவ துறவியும் குருவும் ஆவார். தமாஸ்கு நகரில் பிறந்த இவர், எருசலேம் நகருக்கு அருகில் உள்ள மார் சாபா என்னும் மடத்தில் மரித்தார்.
பல்துறை வல்லுநர் :
பல்துறை வல்லுநராகிய இவர், சட்டம், இறையியல், மெய்யியல், இசை முதலியவற்றில் வல்லுனராக திகழ்ந்தார். இவர் தமாஸ்கு நகரின் காலிபாவிடம் தலைமை பொறுப்பாளராகப் முதலில் பணியாற்றினார். பின்னர் அவ்வேலையை விடுத்து துறவியானார். இவர் கிறித்தவ இறையியல் குறித்த பல நூல்களை இயற்றி உள்ளார்.திருவோவியங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்கள் பலவும் இன்றளவும் கிழக்கு திருச்சபையினரால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.
இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர். இவர் மரியாவின் விண்ணேற்பை குறித்து விரிவாக எழுதியதால் இவர் விண்ணேற்பின் மறைவல்லுநர் (Doctor of the Assumption) எனப்படுகின்றார்.
இவருடைய திருவிழா நாள் திசம்பர் 4 ஆகும்.
இவர் கிரேக்கம் தவிர அரபு மொழியிலும் புலமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. மேலும், இசுலாமிய கலீபக ஆளுநரின் அவையில் புனித யோவானின் தந்தை பணிபுரிந்ததால் யோவானும் சிறிதுகாலம் அங்கு பணியாற்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
கடைசி திருச்சபைத் தந்தை :
சில உரோமன் கத்தோலிக்க அறிஞர்கள் கருத்துப்படி, புனித தமாஸ்கஸ் யோவான் திருச்சபைத் தந்தையர் வரிசையில் காலத்தால் இறுதியில் வந்தவர்.
திருவோவியங்களுக்கு வணக்கம் பற்றி :
திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையல்ல என்று பிசான்சிய மன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமாஸ்கஸ் யோவான் அந்த அரசு கட்டளைக்குக் கடினமான எதிர்ப்புத் தெரிவித்து நூல்கள் எழுதினார். அவர் எழுதிய நூல்கள் பின்னர் நிகழ்ந்த இரண்டாம் நீசேன் பொதுச்சங்கத்தின்போது திருவோவிய வணக்கம் பற்றிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டன.
Back to top
டிசம்பர் 5
✠ அருளாளர் நிகோலஸ் ஸ்டெனோ (நீல்ஸ் ஸ்டென்சன்) ✠
( Blessed Nicolas Steno (Niels Stensen) )
மருத்துவர், ஆயர் :
பிறப்பு : ஜனவரி 11, 1638
கோப்பென்ஹாகன் Kopenhagen, டென்மார்க்
இறப்பு : நவம்பர் 25, 1686
ஸ்வேரின் Schwerin, மெக்லன்பூர்க் Mecklenburg-Vorpommern
முத்திபேறு பட்டம்: அக்டோபர் 23, 1988
திருத்தந்தை 2ம் ஜான்பவுல்
நினைவுத் திருநாள் : டிசம்பர் 5
லூதரன் குடும்பத்தில் பிறந்த அருளாளர் நீல்ஸ் ஸ்டென்சன், 1667ம் ஆண்டு கத்தொயல்க்க கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்று கத்தோலிக்க கிறிஸ்தவ மறையை தழுவினார். புளோரன்ஸ் (Florenz) நகரில் மருத்துவம் பயின்றார். 1675ம் ஆண்டில் புளோரன்ஸில் குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு பல ஆண்டுகள் ஆன்மீக குருவாக பணியாற்றினார். 1677ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். 1680ம் ஆண்டு முன்ஸ்டர் (Münster) மறைமாவட்டத்திற்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பல கத்தோலிக்க ஆலயங்களை கட்டினார். இவர் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆலயங்கள் பலவற்றிற்கு சென்று மறைப்பணியாற்றி பல ஆன்மாக்களை இறைவன்பால் ஈர்த்துள்ளார்.
செபம் :
மருத்துவர் நோயற்றவர்க்கு அல்ல; மாறாக நோயுற்றவர்க்கே என்று மொழிந்த எம் இறைவா! மருத்துவப் பணியாற்றும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். அவர்களின் வழியாக நீர் தாமே நோயாளிகளை அற்புதமாக குணமாக்கியருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்
Back to top
✠ அருளாளர் நிகோலஸ் ஸ்டெனோ (நீல்ஸ் ஸ்டென்சன்) ✠
( Blessed Nicolas Steno (Niels Stensen) )
மருத்துவர், ஆயர் :
பிறப்பு : ஜனவரி 11, 1638
கோப்பென்ஹாகன் Kopenhagen, டென்மார்க்
இறப்பு : நவம்பர் 25, 1686
ஸ்வேரின் Schwerin, மெக்லன்பூர்க் Mecklenburg-Vorpommern
முத்திபேறு பட்டம்: அக்டோபர் 23, 1988
திருத்தந்தை 2ம் ஜான்பவுல்
நினைவுத் திருநாள் : டிசம்பர் 5
லூதரன் குடும்பத்தில் பிறந்த அருளாளர் நீல்ஸ் ஸ்டென்சன், 1667ம் ஆண்டு கத்தொயல்க்க கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்று கத்தோலிக்க கிறிஸ்தவ மறையை தழுவினார். புளோரன்ஸ் (Florenz) நகரில் மருத்துவம் பயின்றார். 1675ம் ஆண்டில் புளோரன்ஸில் குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு பல ஆண்டுகள் ஆன்மீக குருவாக பணியாற்றினார். 1677ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். 1680ம் ஆண்டு முன்ஸ்டர் (Münster) மறைமாவட்டத்திற்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பல கத்தோலிக்க ஆலயங்களை கட்டினார். இவர் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆலயங்கள் பலவற்றிற்கு சென்று மறைப்பணியாற்றி பல ஆன்மாக்களை இறைவன்பால் ஈர்த்துள்ளார்.
செபம் :
மருத்துவர் நோயற்றவர்க்கு அல்ல; மாறாக நோயுற்றவர்க்கே என்று மொழிந்த எம் இறைவா! மருத்துவப் பணியாற்றும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். அவர்களின் வழியாக நீர் தாமே நோயாளிகளை அற்புதமாக குணமாக்கியருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்
Back to top
டிசம்பர் 6
மீரா நகர் ஆயர் நிக்கோலஸ் Nikolaus von Myra
பிறப்பு
280/286,
பாட்ரஸ் Patras, கிரேக்கம்
இறப்பு
6 டிசம்பர் 345/351,
மீரா (இன்றைய டெம்ரே Demre), துருக்கி
பாதுகாவல்: ரஷ்யா, பீடச்சிறுவர்கள், குழந்தைகள், நீதியரசர்கள், வழக்கறிஞர், மருந்தகம், மீனவர்கள், தீயணைப்பு வீரர்கள்
இவர் ஏறக்குறைய 300 ஆம் ஆண்டு லிக்கீன் (Lykien) ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. 310 ஆம் ஆண்டு கிறிஸ்துவை பின்பற்றியதால் கைதியாக பிடித்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் 325ல் நிசேயாவில் (Nicäa) பொதுசங்கம் ஒன்றையும் நடத்தியுள்ளார். இவர் சிலுவைப்போர்களை நடத்தினார் என்று கூறப்படுகின்றது. கிறிஸ்துவிற்காக இவர் இயேசுவைப் போலவே பாடுகள் பட்டார் என்றும் கூறப்படுகின்றது. இவரைப்பற்றிய செய்திகள் அதிகம் கொடுக்கப்படவில்லை.
செபம்:
என் பொருட்டு நீங்கள் வாழ்வடைவீர்கள் என்றுரைத்த இறைவா! உம் பொருட்டு இன்னலுற்று மரித்த மறைசாட்சிகளை உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் உமக்கு சாட்சியம் புரிந்ததைப்போல எங்களையும் மாற்றி உம் மக்களாக வாழ வரம் தாரும்.
Back to top
மீரா நகர் ஆயர் நிக்கோலஸ் Nikolaus von Myra
பிறப்பு
280/286,
பாட்ரஸ் Patras, கிரேக்கம்
இறப்பு
6 டிசம்பர் 345/351,
மீரா (இன்றைய டெம்ரே Demre), துருக்கி
பாதுகாவல்: ரஷ்யா, பீடச்சிறுவர்கள், குழந்தைகள், நீதியரசர்கள், வழக்கறிஞர், மருந்தகம், மீனவர்கள், தீயணைப்பு வீரர்கள்
இவர் ஏறக்குறைய 300 ஆம் ஆண்டு லிக்கீன் (Lykien) ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. 310 ஆம் ஆண்டு கிறிஸ்துவை பின்பற்றியதால் கைதியாக பிடித்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் 325ல் நிசேயாவில் (Nicäa) பொதுசங்கம் ஒன்றையும் நடத்தியுள்ளார். இவர் சிலுவைப்போர்களை நடத்தினார் என்று கூறப்படுகின்றது. கிறிஸ்துவிற்காக இவர் இயேசுவைப் போலவே பாடுகள் பட்டார் என்றும் கூறப்படுகின்றது. இவரைப்பற்றிய செய்திகள் அதிகம் கொடுக்கப்படவில்லை.
செபம்:
என் பொருட்டு நீங்கள் வாழ்வடைவீர்கள் என்றுரைத்த இறைவா! உம் பொருட்டு இன்னலுற்று மரித்த மறைசாட்சிகளை உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் உமக்கு சாட்சியம் புரிந்ததைப்போல எங்களையும் மாற்றி உம் மக்களாக வாழ வரம் தாரும்.
Back to top
டிசம்பர் 7
✠ புனித அம்புரோஸ் ✠
( St. Ambrose )
மிலன் நகரின் கத்தோலிக்க பேராயர் :
ஆட்சி பீடம் : மேதியோலானும், மிலன் மறைமாவட்டம்
ஆயர்நிலை திருப்பொழிவு : டிசம்பர் 7, 374
பிறப்பு : சுமார். 340 கி.பி
ஆகஸ்ட்a Treverorum,
Gallia Belgica, உரோமைப் பேரரசு
(தற்கால செருமனி)
இறப்பு : ஏப்ரல் 4, 397
Mediolanum,
Italia annonaria, உரோமைப் பேரரசு
(தற்கால இத்தாலி)
நினைவுத் திருவிழா : டிசம்பர் 7
ஏற்கும் சபை :
கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
லூதரனியம்
பகுப்பு : ஆயர் மற்றும் திருச்சபையின் மறைவல்லுநர்
சித்தரிப்பு வகை :
தேன் கூடு, பிள்ளைகள், சாட்டை, எலும்புகள்
பாதுகாவல் :
தேனீ வளர்ப்பு; தேனீக்கள்; மெழுகுவர்த்தி செய்பவர்கள்; வீட்டு விலங்குகள்; கல்வி; மிலன்; மாணவர்கள்;
திருத்தலங்கள் : அம்புரோசு பேராலயம்
( Basilica of Sant'Ambrogio )
ஆரேலியுஸ் அம்புரோசியுஸ் என்னும் பெயருடைய புனித அம்புரோசு மிலன் நகரின் கத்தோலிக்க பேராயரும் 4ம் நூற்றாண்டின் குறிக்கத்தக்க திருச்சபை தலைவர்களுள் ஒருவரும் ஆவார். முதல் நான்கு திருச்சபையின் மறைவல்லுநர்களுள் இவரும் ஒருவர். இவர் மிலன் நகரின் பாதுகாவலர் ஆவார். அகுஸ்தீனுக்கு இவரால் ஏற்பட்ட தாக்கத்துக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.
இவர் பல விவிலிய விளக்க உரைகளை எழுதியுள்ளார். இவற்றில் இவரின் வாழ்வு குறித்த செய்திகள் பல காணக்கிடைக்கின்றன. இவரின் முன்னோர்கள் உரோமைக்குடிமக்களாகவும், துவக்கத்திலேயே கிறித்தவ மறையினை தழுவியவர்களாகவும், அரசின் உயர் அதிகாரிகளாகவும் கிறித்தவ மறைசாட்சிகளாகவும் இருந்துள்ளனர். இவரின் பிறப்பின் போது இவரின் தந்தை பிரான்சு, பிரித்தானியா, எசுப்பானியா, ஆப்பிரிக்காவின் டிங்கித்தான (Tingitana) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய காலியாவின் ஆளுநராக இருந்தார். இப்பதவி உரோமைக்குடிமக்கள் வகிக்கக்கூடிய மிக உயரிய பதவி ஆகும்.
மார்சிலினா என்ற ஒரு மூத்த சகோதரியும், சாடிருஸ் என்னும் மூத்த சகோதரரும் இவருக்கு உண்டு. 354ல் இவரின் தந்தையின் இறப்புக்கு பின்பு இவரின் குடும்பம் உரோமையில் குடியேறியது. கைம்பெணான இவரின் தாயும் மூத்த சகோதரியும் இவருக்கு சிறந்த எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தனர். திருத்தந்தை லிபேரியஸின் கைகளால் இவரின் சகோதரி துறவறத்துகிலினைப்பெற்று அக்கால வழக்கப்படி தன் வீட்டிலேயே துறவியாக வாழ்ந்துவந்தார்.
கல்வி கற்றப்பின்பு இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். இவரின் அறிவாற்றலால் இவர் லிகூரியா மற்றும் எமிலியாவின் ஆளுநரின் ஆலோசகராக மிலன் நகரில் பணியமர்த்தப்பட்டார். இப்பணியில் இவர் மக்களின் நன்மதிப்பை பெற்றார்.
374ல் மிலன் நகரின் அப்போதைய ஆயர் இறந்தார். அப்போது அடுத்து அப்பதிவியினை ஏற்கப்போவது யார் என்பது குறித்து ஆரியனிச கொள்கையுடையவர்களுக்கும் பிற கிறித்தவர்களுக்கும் இடையே பெரும் சிக்கல் உருவானது. அரச ஆலோசகராக அம்புரோசு கலகம் ஏற்படாதிருக்க இரு தரப்பினருக்கிடையே அமைதி ஏற்படுத்த முனைந்தார். ஆனால் இப்பேச்சுவார்த்தையின் போது அனைவராலும் அம்புரோசு ஆயராக தேர்வு செய்யப்பட்டார். ஆயராக விரும்பாததால் ஓடி ஒளிந்த அம்புரோசு அரச ஆணையினால் ஆயர்பதவியினை ஏற்றார். அப்போது அவர் திருமுழுக்குகூடபெற்றிருக்கவில்லை என்பதும் திருமுழுக்கு பெற ஆயத்த செய்துகொண்டிருந்தார் என்பது குறிக்கத்தக்கது. திருமுழுக்கு பெற்று எட்டு நாட்களுக்குப்பின் 7 டிசம்பர் 374ல் ஆயர்நிலை திருப்பொழிவு பெற்றார். இன்னாளிலேயே கிழக்கு மற்றும் மேற்கு கிறித்தவ பிரிவுகள் இவரின் விழா நாளை கொண்டாடுகின்றனர்.
இவர் ஆயராக அரும்பணிகள் பல செய்துள்ளார். இவரின் மறையுரைகள் மற்றும் விவிலிய விளகக்க உரைகள் இன்றளவும் பயன்படுகின்றன. இவர் புனித அகுஸ்தீனுக்கு திருமுழுக்கு அளித்தவர். இவரை அகுஸ்தீன் தன்வரலாற்று நூலில் போற்றி குறிப்பிட்டுள்ளார். ஆரியனிச பதித்தக்கொள்கையினை இவர் சீராக்க பாடுபட்டார்.
ஏப்ரல் 4, 397ல் இவர் இறந்தார். இவரின் மீப்பொருட்கள் அம்புரோசு பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
Back to top
டிசம்பர் 08
அமல உற்பவி அன்னை மரியா
பூமிப்பந்தின் அனைத்துப் பாகங்களிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் வாழ்விலும், வரலாற்றிலும் தனக்கென ஒரு தனியிடத்தை, தூய கன்னி அன்னை மரியாள் பெற்றிருக்கிறாள். அமல உற்பவி அன்னை மரியாள், நசரேத்தூரில் “இதோ உமது அடிமை“ என இறை சித்தத்திற்கு தன்னைத் தாழ்த்தி, இறை மகனுக்கே தாயானதால் காலமெல்லாம் போற்றப்படுகின்றாள்.
தூய கன்னி மரியாள் மாசற்றவர், “அமல உற்பவி‘ என்ற பேருண்மையை திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் கடந்த 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள் இவ்வுலகிற்கு அறிவித்தார். இந்தப் பேருண்மை 1858ம் ஆண்டு மார்ச் 23ல் லூர்து நகரில் மசபியேல் குகையில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு “நானே அமல உற்பவம்“ என்று கன்னி மரி அன்னை கூறியதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
கத்தோலிக்க விசுவாசிகளது பல்லாயிரம் வருடகால நம்பிக்கையை, 1854ம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பத்திநாதர், "மரியா உற்பவித்த நொடியில் இருந்தே வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், இயேசுக்கிறிஸ்துவின் பேறுபலன்களினாலும் பிறப்பு நிலைப் (சென்ம) பாவத்தின் கறைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார்" என்ற விசுவாசக் கோட்பாடாக வெளியிட் டதாக திருச்சபையின் வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
கன்னி மரியாள், தூய்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். மாசற்றவர், “அமல உற்பவி“ இறை மகனின் தாயாகும் பேறு பெற்றவர். எல்லாம் வல்ல இறைவனின் மீட்புத் திட்டத்தில் சிறப்பிடம் வகிப்பவர் என்று, திருச்சீடர்கள் காலத்திலிருந்தே கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசிகள் காலங் காலமாக நம்பிய விசுவாச உண்மையென அன்னையாம் திருச்சபை சான்று பகருகின்றது.
பாவ மாசுமறுவற்று கருவுறும் நிலையை “அமல உற்பவம்“ என்கிறார்கள். தூயகன்னி அன்னை மரியாள் கருவுற்றபோது அவர் ஜென்ம பாவத்தின் பிடியில் சிக்கவில்லையென திருச்சபை படிப்பிப்பதனையே அன்று நசரேத்தூரில் “அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்“ என்று (லூக்கா1:28) கபிரியேல் தூதர் வாழ்த்தியதாக நற்செய்தி சான்றளிக்கின்றது.
எல்லாம் வல்லவர் பாவத்தை வெறுப்பதனால் கன்னி மரியாளை ஜென்ம பாவத்திலிருந்து பாதுகாத்து மீட்பின் திட்டத்தை நிறைவேற்றத் தயார்படுத்தினார் என்பது எமது விசுவாச அறிக்கையாகும். கன்னி மரியாள் ஜென்ம பாவத்தின் பிடியில் சிக்காத, பாவக்கறை படியாத நிலையில், அமல உற்பவியாக மனுக்குலத்தை மீட்கும் இறை திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டாள்.
தந்தையாம் கடவுள் தனது படைப்பான மனிதனோடு கொண்டுள்ள உறவைச் சீர்செய்ய கன்னி மரியாளைக் கருவியாகவும், பாலமாகவும் பயன்படுத்தினார். எல்லாம் வல்ல பரலோக தகப்பனால் சிறப்புரிமை பெற்றவளாக அன்னை மரியா தெரிந்தெடுக்கப்பட தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரதும் பங்குண்டென்பதே எமது நம்பிக்கையான விசுவாசம்.
மனிதன் பாவம் செய்தபோது இறை மனித உறவு பாதிக்கப்பட்டது. முறிந்த உறவைப் புதுப்பிக்க, புதிய ஆதாமாக இறை மகன் கன்னி மரியாவின் வயிற்றில் கருத்தரித்ததால், இறைவனது மீட்புத் திட்டத்தை கன்னி மரியாளும், இறைமகன் இயேசுவும் பற்றுறுதியோடு செய்து முடித்ததாக நாம் விசுவசிப்பது எமது பெரிய பாக்கியமாகும்.
தூய கன்னி அன்னை மரியாளைப் போல நாமனைவரும் அமல உற்பவிகளாகப் பிறக்காவிடினும். எங்களாலும் மாசற்றவர்களாக வாழமுடியுமான ஆற்றலை, நாம் பெற்றுள்ள திருமுழுக்கால் பரிசுத்த ஆவியாரின் வழியாக உரிமைப் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளோம் (கலாத்தியர்(4:4-7) என்பதனை புனித பவுலடிகள் தெரிவிக்கின்றார்.
நாம் ஜென்ம பாவத்திலிருந்து விடுதலை பெற்றாலும், “நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் நம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்“ என (எபேசியர் 1:4) புனித பவுல் அடிகளார் குறிப்பிடுகிறார்.
இற்றைக்கு இரண்டாயிரத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நசரேத்தூரில் வாழ்ந்த அதே மாசில்லா அன்னையின் வாழ்க்கையை நாம் எமது வாழ்க்கையோடு ஒப்பிட மட்டுமல்ல். நாமும் மாசற்றவர்களாக வாழ முயற்சி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம் என்பது உண்மை.
மனிதப் பெண்ணான கன்னி மரியாள். கடவுள் அவருக்குக் கொடுத்த தூய உடலையும், உள்ளத்தையும் பாவத்திலிருந்து தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தார். தாழ்ச்சியோடு இறைதிட்டத்தை நிறைவேற்றத் தன்னையே அர்ப்பணித்தார். நாமும் அவளை “அமல உற்பவியே அருள்நிறை தாயே“ என வாழ்த்துவோமாக.
“அமல உற்பவி“ அன்னை மரியா எல்லாம் வல்ல இறையருளால் உயர்த்தப்பட்டு, நமதாண்டவர் இயேசுவின் மறை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த எம்மனைவரதும் தூய்மை மிகு தாய் ஆவார். அருள் நிறைந்தவரான அன்னையில் நம்பிக்கை கொண்ட நாமனைவரும் அவரை இறைவனின் தாய் என்று மட்டுமல்ல, எம்மனைவரதும் தாய் என்றழைத்து மகிழ்வது தகுதியானதே.
எனவே, எமது தாயின் கருவறையில் நாம் கருவாகி உருவாகு முன்னரே ஆண்டவர் இயேசுவின் மறு வருகைக்காக தயாராகுமாறு இன்றைய நற்செய்தி வேறுவிதமாக எமக்குப் படிப்பிக்கின்றது என்பதனை அன்னை மரியாவின் மாசில்லாத உற்பவத்தின் வழியாக எல்லாம் வல்ல இறைவன் எமக்கு உணர்த்துகின்றார் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.
மார்கழிக் கடுங்குளிரில் மாபரன் வந்துதிக்க - மாசில்லாது உற்பவித்த மாமரியே! அம்மையே! நானும்மை ஆராதிக்கின்றேன் – ஆமென்
Courtesy : Source of this article
Back to top
டிசம்பர் 9
புனித பேதுரு ஃபோரியர்
St. Petrus Fourier
நினைவுத்திருநாள் : டிசம்பர் 9
பிறப்பு : 30 நவம்பர் 1565, லோத்ரிங்கன் Lothringen, பிரான்ஸ்
இறப்பு : 9 டிசம்பர் 1640, கிரே Gray, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 1730
புனிதர்பட்டம்: 7 மே 1897, திருத்தந்தை 13 ஆம் லியோ
இவர் தனது 20 வயதில் 1589 ஆம் ஆண்டு டிரியரிலுள்ள சிமியோன் ஆலயத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு தான் பிறந்த ஊரின் பக்கத்து ஊரிலேயே மறைப்பணிக்காக அனுப்பப்பட்டார். இவர் அவ்வூரில் முதல் திருப்பலி நிறைவேற்றிய போது ஆற்றிய மறையுரையால் பலர் மனந்திரும்பி, உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக மாறினர். இவர் ஊர் ஊராக கால்நடையாகவே சென்று மறைப்பணியாற்றினார். இவர் குருவான சில ஆண்டுகளிலேயே பல பங்குகளை உருவாக்கினார். ஒவ்வொரு ஊர்களிலும் தவறாமல் திருப்பலியை நிறைவேற்றினார்.
இவர் இளைஞர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் மனதில் இடம்பிடித்தார். இளைஞர்களை பராமரிப்பதற்கென்று 1597 ஆம் ஆண்டு சபை ஒன்றை தொடங்கினார். இச்சபையானது தொடங்கிய 25ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவியது. இச்சபையை திருத்தந்தை 5 ஆம் பவுல் துறவற சபையாக அறிவித்து அங்கீகாரம் அளித்தார். மிக சிறப்பாக பணியாற்றிய இவர் சிறந்த குரு என்றழைக்கப்பட்டு புகழப்பட்டார்.
செபம்:
நன்மைகளின் ஊற்றே எம் இறைவா! பேதுரு ஃபோரியர் சிறந்த குருவாக பணியாற்றி இளைஞர்கலை வளர்த்தெடுத்ததைப்போல எம் குருக்களும் இளைஞர்களின்பால் அக்கறைக்கொண்டு வாழ உதவி செய்தருளும். சிறந்த குருக்களாக வாழ்ந்து என்றும் உமக்கு சான்று பகர்ந்திட செய்தருளும்.
Back to top
புனித பேதுரு ஃபோரியர்
St. Petrus Fourier
நினைவுத்திருநாள் : டிசம்பர் 9
பிறப்பு : 30 நவம்பர் 1565, லோத்ரிங்கன் Lothringen, பிரான்ஸ்
இறப்பு : 9 டிசம்பர் 1640, கிரே Gray, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 1730
புனிதர்பட்டம்: 7 மே 1897, திருத்தந்தை 13 ஆம் லியோ
இவர் தனது 20 வயதில் 1589 ஆம் ஆண்டு டிரியரிலுள்ள சிமியோன் ஆலயத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு தான் பிறந்த ஊரின் பக்கத்து ஊரிலேயே மறைப்பணிக்காக அனுப்பப்பட்டார். இவர் அவ்வூரில் முதல் திருப்பலி நிறைவேற்றிய போது ஆற்றிய மறையுரையால் பலர் மனந்திரும்பி, உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக மாறினர். இவர் ஊர் ஊராக கால்நடையாகவே சென்று மறைப்பணியாற்றினார். இவர் குருவான சில ஆண்டுகளிலேயே பல பங்குகளை உருவாக்கினார். ஒவ்வொரு ஊர்களிலும் தவறாமல் திருப்பலியை நிறைவேற்றினார்.
இவர் இளைஞர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் மனதில் இடம்பிடித்தார். இளைஞர்களை பராமரிப்பதற்கென்று 1597 ஆம் ஆண்டு சபை ஒன்றை தொடங்கினார். இச்சபையானது தொடங்கிய 25ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவியது. இச்சபையை திருத்தந்தை 5 ஆம் பவுல் துறவற சபையாக அறிவித்து அங்கீகாரம் அளித்தார். மிக சிறப்பாக பணியாற்றிய இவர் சிறந்த குரு என்றழைக்கப்பட்டு புகழப்பட்டார்.
செபம்:
நன்மைகளின் ஊற்றே எம் இறைவா! பேதுரு ஃபோரியர் சிறந்த குருவாக பணியாற்றி இளைஞர்கலை வளர்த்தெடுத்ததைப்போல எம் குருக்களும் இளைஞர்களின்பால் அக்கறைக்கொண்டு வாழ உதவி செய்தருளும். சிறந்த குருக்களாக வாழ்ந்து என்றும் உமக்கு சான்று பகர்ந்திட செய்தருளும்.
Back to top
டிசம்பர் 10
மெரிடா நகர் மறைசாட்சி ஓய்லாலியா Eulalia von Merida
பிறப்பு
292,
மெரிடா Merida, ஸ்பெயின்
இறப்பு
10 டிசம்பர் 304,
மெரிடா
பாதுகாவல்: பயணிகள், விபத்துக்களிலிருந்து
இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் குழந்தையாக இருக்கும்போதே, சிறந்து வளர்ந்த பெண்ணைப்போல் காட்சியளித்தார். குழந்தையிலிருந்தே தனிமையாக சென்று செபித்து வந்தார். இப்பிள்ளையை கண்ட அரசன் தியோக்ளின் செபம் செய்யக்கூடாது என்று அவருக்கு கட்டளையிட்டான். ஆனால் அக்குழந்தை அவனின் தீச்செயலை வெறுத்து மீண்டும் மீண்டும் தனிமையை நாடி செபித்து வந்தது. அனைவரும் வியக்கும் விதத்தில் அவரின் செபம் இருந்தது.
இவர் தனது 12 ஆம் வயதில் கிறிஸ்துவ மறையை பின்பற்றக்கூடாது என்ற கட்டளையை பெற்றார். அவர் இதை மீறியதால் சிறைப்பிடித்து செல்லப்பட்டார். கொடியவர்கள் அவர்கள் அனைவரையும் விசாரிக்க வந்தபோது, அனைவர் முன்னிலையிலும் "நான் ஓர் கிறிஸ்தவள்" என்று மிக தைரியமாக கூறினாள். இதனால் படைவீரர்கள் இவரை கொண்டு சென்று தனிமையான சிறையில் அடைத்தனர். அவரின் உயிருள்ள உடலின்மேல் இரும்பை காய்ச்சி சூடாக ஊற்றினர். அப்போதும் கூட அவரின் நாவு இறைவனை புகழ்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த படைவீரர்கள் அவரை அடுப்பிலிட்டு உயிரோடு எரித்துக்கொன்றனர்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! குழந்தை பருவத்திலேயே உம்மை இறுகப்பற்றிக்கொண்டு உமக்காக மறைசாட்சியாக மரித்து ஓய்லாலியாப் போல் ஒவ்வொரு குழந்தையும் பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து வளர உம் தூய ஆவியின் வரம் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
மெரிடா நகர் மறைசாட்சி ஓய்லாலியா Eulalia von Merida
பிறப்பு
292,
மெரிடா Merida, ஸ்பெயின்
இறப்பு
10 டிசம்பர் 304,
மெரிடா
பாதுகாவல்: பயணிகள், விபத்துக்களிலிருந்து
இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் குழந்தையாக இருக்கும்போதே, சிறந்து வளர்ந்த பெண்ணைப்போல் காட்சியளித்தார். குழந்தையிலிருந்தே தனிமையாக சென்று செபித்து வந்தார். இப்பிள்ளையை கண்ட அரசன் தியோக்ளின் செபம் செய்யக்கூடாது என்று அவருக்கு கட்டளையிட்டான். ஆனால் அக்குழந்தை அவனின் தீச்செயலை வெறுத்து மீண்டும் மீண்டும் தனிமையை நாடி செபித்து வந்தது. அனைவரும் வியக்கும் விதத்தில் அவரின் செபம் இருந்தது.
இவர் தனது 12 ஆம் வயதில் கிறிஸ்துவ மறையை பின்பற்றக்கூடாது என்ற கட்டளையை பெற்றார். அவர் இதை மீறியதால் சிறைப்பிடித்து செல்லப்பட்டார். கொடியவர்கள் அவர்கள் அனைவரையும் விசாரிக்க வந்தபோது, அனைவர் முன்னிலையிலும் "நான் ஓர் கிறிஸ்தவள்" என்று மிக தைரியமாக கூறினாள். இதனால் படைவீரர்கள் இவரை கொண்டு சென்று தனிமையான சிறையில் அடைத்தனர். அவரின் உயிருள்ள உடலின்மேல் இரும்பை காய்ச்சி சூடாக ஊற்றினர். அப்போதும் கூட அவரின் நாவு இறைவனை புகழ்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த படைவீரர்கள் அவரை அடுப்பிலிட்டு உயிரோடு எரித்துக்கொன்றனர்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! குழந்தை பருவத்திலேயே உம்மை இறுகப்பற்றிக்கொண்டு உமக்காக மறைசாட்சியாக மரித்து ஓய்லாலியாப் போல் ஒவ்வொரு குழந்தையும் பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து வளர உம் தூய ஆவியின் வரம் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 11
பவேரியா அரசர் புனித 3 ஆம் டாசிலோ
St. Tassilo III, Herzog
நினைவுத்திருவிழா : டிசம்பர் 11
பிறப்பு : 730, பவேரியா
இறப்பு : 11 டிசம்பர் 800, லோர்ஷ் Lorsch, ஹெசன் Hessen, Germany
இவர் பவேரியாவிலும், டிரோலிலும்(Südtirol) இருந்த பல ஆலயங்களையும் துறவற மடங்களையும் புதுப்பித்தார். பின்னர் முன்ஸ்டர் மற்றும் ஆஸ்திரியாவிலும் பல துறவற மடங்களை கட்டினார். பின்னர் பவேரியாவிலும் பல துறவற மடங்களை எழுப்பினார். அதன்பின்பு பெனடிக்ட் துறவிகளுக்கென்று பவேரியாவில் முதல் துறவற இல்லம் ஒன்றை கட்டிக்கொடுத்தார். இவரின் அரசப் பதவிக்காலத்தில் பல்வேறு துறவறச் சபைகளை பவேரியாவிற்கு வரவழைத்து கிறிஸ்துவ மறையை தழைத்தோங்கச் செய்தார். இவர் தன் வாழ்நாளின் பாதி நாட்கள் துறவற சபைகளில் வாழ்ந்தார். துறவற இல்லங்களுக்கும், குருக்களுக்கும்தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, துறவிப்போலவே வாழ்ந்தார்.
செபம்:
நிலைவாழ்வு வழங்குபவரே! விண்ணுலகிற்குத் தேவையான செல்வங்களை, இம்மண்ணுலகில் சேர்த்து, கிறிஸ்துவ மறைக்கு மெருகூட்டிய அரசர் டாசிலோவைப்போல, நாங்களும் விண்ணக வாழ்விற்கு தேவையான செல்வங்களை சேமித்து, என்றென்றும் உம் மக்களாக வாழும் பேற்றை பெற அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
பவேரியா அரசர் புனித 3 ஆம் டாசிலோ
St. Tassilo III, Herzog
நினைவுத்திருவிழா : டிசம்பர் 11
பிறப்பு : 730, பவேரியா
இறப்பு : 11 டிசம்பர் 800, லோர்ஷ் Lorsch, ஹெசன் Hessen, Germany
இவர் பவேரியாவிலும், டிரோலிலும்(Südtirol) இருந்த பல ஆலயங்களையும் துறவற மடங்களையும் புதுப்பித்தார். பின்னர் முன்ஸ்டர் மற்றும் ஆஸ்திரியாவிலும் பல துறவற மடங்களை கட்டினார். பின்னர் பவேரியாவிலும் பல துறவற மடங்களை எழுப்பினார். அதன்பின்பு பெனடிக்ட் துறவிகளுக்கென்று பவேரியாவில் முதல் துறவற இல்லம் ஒன்றை கட்டிக்கொடுத்தார். இவரின் அரசப் பதவிக்காலத்தில் பல்வேறு துறவறச் சபைகளை பவேரியாவிற்கு வரவழைத்து கிறிஸ்துவ மறையை தழைத்தோங்கச் செய்தார். இவர் தன் வாழ்நாளின் பாதி நாட்கள் துறவற சபைகளில் வாழ்ந்தார். துறவற இல்லங்களுக்கும், குருக்களுக்கும்தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, துறவிப்போலவே வாழ்ந்தார்.
செபம்:
நிலைவாழ்வு வழங்குபவரே! விண்ணுலகிற்குத் தேவையான செல்வங்களை, இம்மண்ணுலகில் சேர்த்து, கிறிஸ்துவ மறைக்கு மெருகூட்டிய அரசர் டாசிலோவைப்போல, நாங்களும் விண்ணக வாழ்விற்கு தேவையான செல்வங்களை சேமித்து, என்றென்றும் உம் மக்களாக வாழும் பேற்றை பெற அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 12
ஒஃபிடா குரு கோன்ராட் Konrad von Offida
பிறப்பு
1237,
ஒஃபிடா, இத்தாலி
இறப்பு
12 டிசம்பர் 1306,
அசிசி, இத்தாலி
இவர் தன் 14 ஆம் வயதில் புனித பிரான்சிஸ் அசிசியின் சபையை அஸ்கோலி பிசேனோ (Ascoli Piceno) என்ற இடத்தில் நிறுவினார். இவர் மிக எளிமையான, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். குடும்ப வாழ்வில் தான் வாழ்ந்த எளிமையை விடாமல் தொடர்ந்து வாழ்ந்தார். இவர் ஊரெங்கும் சென்று வீட்டு வேலை செய்து தன் துறவற சபையை காத்து வந்தார். இவர் பிறந்த ஊரில் 2 ஆம் பிரான்சிஸ் என்றழைக்கப்பட்டார். இவர் சிறப்பாக மறையுரை ஆற்றும் திறமையை பெற்றிருந்தார். வீதியெங்கும் சென்று மறையுரை ஆற்றினார். அனைத்து மக்களாலும், "சகோதரர்" என்றே அழைக்கப்பட்டார்.
இவர் 1265 ஆம் ஆண்டு அசிசி நகர் சென்றார். அங்கு போர்சிங்குலா லியோ (Portiancula Leo) வாழ்ந்த ஒரு சிறிய அறையை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து 14 செப்டம்பர் 1224 ஆம் ஆண்டு, புனித பிரான்சிஸ் அசிசி ஐந்து காய வரம் பெற்ற இடத்திற்கு சென்றார். அங்கிருந்த துறவற இல்லத்தில் 15 ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் இளைஞராக இருந்த போதிலிருந்தே கிறிஸ்துவின் மீது அளவில்லா ஆர்வம் கொண்டு, அவர் பணியை ஆர்வமுடன் ஆற்றி இடைவிடாமல் இறைவேண்டல் செய்து இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
ஏழ்மையின் நண்பரே எம் இறைவா! மிக இளம் வயதில் ஏழ்மையான வாழ்வைத் தேடி, உமது சித்தம் ஒன்றையே தன் விருப்பமாகக் கொண்டு வாழ்ந்த கோன்ராடை நாங்கள் முன்மாதிரியாக கொண்டு, இறைவேண்டலில் ஈடுபட எமக்கு ஆர்வத்தை தாரும். அவர் உம்மை பற்றிக்கொண்டதைப்போல, நாங்களும் உம்மை பற்றி வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
ஒஃபிடா குரு கோன்ராட் Konrad von Offida
பிறப்பு
1237,
ஒஃபிடா, இத்தாலி
இறப்பு
12 டிசம்பர் 1306,
அசிசி, இத்தாலி
இவர் தன் 14 ஆம் வயதில் புனித பிரான்சிஸ் அசிசியின் சபையை அஸ்கோலி பிசேனோ (Ascoli Piceno) என்ற இடத்தில் நிறுவினார். இவர் மிக எளிமையான, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். குடும்ப வாழ்வில் தான் வாழ்ந்த எளிமையை விடாமல் தொடர்ந்து வாழ்ந்தார். இவர் ஊரெங்கும் சென்று வீட்டு வேலை செய்து தன் துறவற சபையை காத்து வந்தார். இவர் பிறந்த ஊரில் 2 ஆம் பிரான்சிஸ் என்றழைக்கப்பட்டார். இவர் சிறப்பாக மறையுரை ஆற்றும் திறமையை பெற்றிருந்தார். வீதியெங்கும் சென்று மறையுரை ஆற்றினார். அனைத்து மக்களாலும், "சகோதரர்" என்றே அழைக்கப்பட்டார்.
இவர் 1265 ஆம் ஆண்டு அசிசி நகர் சென்றார். அங்கு போர்சிங்குலா லியோ (Portiancula Leo) வாழ்ந்த ஒரு சிறிய அறையை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து 14 செப்டம்பர் 1224 ஆம் ஆண்டு, புனித பிரான்சிஸ் அசிசி ஐந்து காய வரம் பெற்ற இடத்திற்கு சென்றார். அங்கிருந்த துறவற இல்லத்தில் 15 ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் இளைஞராக இருந்த போதிலிருந்தே கிறிஸ்துவின் மீது அளவில்லா ஆர்வம் கொண்டு, அவர் பணியை ஆர்வமுடன் ஆற்றி இடைவிடாமல் இறைவேண்டல் செய்து இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
ஏழ்மையின் நண்பரே எம் இறைவா! மிக இளம் வயதில் ஏழ்மையான வாழ்வைத் தேடி, உமது சித்தம் ஒன்றையே தன் விருப்பமாகக் கொண்டு வாழ்ந்த கோன்ராடை நாங்கள் முன்மாதிரியாக கொண்டு, இறைவேண்டலில் ஈடுபட எமக்கு ஆர்வத்தை தாரும். அவர் உம்மை பற்றிக்கொண்டதைப்போல, நாங்களும் உம்மை பற்றி வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
டிசம்பர் 13
பிறப்பு : 286, சிசிலி Sizilien, இத்தாலி
இறப்பு : 304, சிராக்குஸ் Syrakus
பாதுகாவல்: பார்வையற்றோர், நோயுற்ற குழந்தைகள், விவசாயிகள், கண்ணாடி,இரும்பு,கத்தி,கதவு தயாரிப்போர், எழுத்தாளர்கள், வக்கீல், கண்நோயிலிருந்து, கழுத்து வலியிலிருந்து, இரத்தப்போக்கிலிருந்து
லூசியா என்ற புனிதர் இத்தாலியின் சிசிலித் தீவில் சிராக்குசா எனும் ஊரில் நான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது தாய் நீண்ட காலமாகத் தீராத நோயால் கஷ்டப்பட்டார். எனவே ஒருநாள் அவரது உடல்நலத்திற்காகப் புனித ஆக்னஸ் திருத்தலத்தில் உருக்கமாகச் செபித்தார் லூசியா. அன்றிரவு அவரது கனவில் புனிதர் ஆகத்தா தோன்றி, உன் தாய்க்குத் தேவையான உடல்நலனைப் பெற்றுக் கொடுக்க உன் மன்றாட்டே போதுமானதாக இருக்கும் போது என்னிடம் ஏ ன் வேண்டுகிறாய், உனது விசுவாசமே உனக்குப் போதும் என்றார். அதன்பின்னர் லூசியாவின் தாயும் முழுகுணம் அடைந்தார். இதனால் லூசியா பக்தியுள்ள கிறிஸ்தவளாக மாறினார். தனது கன்னிமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.
தனது தாயின் அனுமதியோடு தம் உடைமைகளை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார். லூசியாவை ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் இவரது புதிய தீர்மானத்தைக் கேட்டுக் கடும் கோபமடைந்தான். எனவே அவன், லூசியா ஒரு கிறிஸ்தவள் என்று சொல்லி உரோமை உயர் அதிகாரிகளிடம் அவரைக் கையளித்தான். இவர் கிறிஸ்தவத்தைப் புறக்கணிக்கவில்லையெனில் விலைமகளிர் விடுதிக்குத் தள்ளப்படுவார் என எச்சரிக்கப்பட்டாள். ஆயினும் இவர் தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்ததால் ஆயிரம் ஆண்களும் ஐம்பது காளைகளும் சேர்ந்து இவரைத் தள்ளினர். ஆனால் அவரை அசைக்க முடியவில்லை. எனவே அவரைச் சுற்றிப் பொருட்களை நிரப்பி தீ வைத்தனர். ஆயினும் அவர் அசையாமல் நின்றார்.
அவர் மேல் காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றினார்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. ஆனால் அவர் எதற்கும் அஞ்சாமல் தனது மரணம் பிற கிறிஸ்தவர்களுக்குப் பயத்தைக் குறைக்கும் மற்றும் விசுவாசமற்றவர்களுக்கு வருத்தத்தைக் கொண்டு வரும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இவர் இவ்வாறு பேசுவதைத் தடுக்க ஒரு வீரன் ஈட்டியால் அவள் தொண்டையைக் கிழித்தான். ஆனால் அந்த நேரத்தில் அங்கிருந்த ஓர் உரோமை அதிகாரி திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் உரோமைக்கு அழைக்கப்பட்டு தலை வெட்டப்பட்டு இறந்தான். லூசியா இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்று மறைசாட்சியாக இறந்தார். இவர் இறந்தது ஏறக்குறைய கி.பி.310ம் ஆண்டில் என்று சொல்லப்படுகிறது.
உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் காலத்தில் சுரங்கக் கல்லறைகளில் பயத்தினால் மறைந்திருந்த கிறிஸ்தவர்களுக்கு லூசியா உதவி செய்து வந்தார். அப்போது இவருக்கு இரண்டு கைகளிலும் நிறையப் பொருட்கள் இருந்ததால் பூமிக்கடியில் செல்ல வெளிச்சம் தேவைப்பட்டது. ஆதலால் தனது தலைக்கு மேல் ஒரு கீரிடம் செய்து அதில் மெழுகுதிரிகளை ஏற்றி இவர் சென்றதாகப் பாரம்பரியம் சொல்கிறது. எனவே இன்றும் லூசியாவின் விழாவான டிசம்பர் 13ம் தேதி ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒரு சிறுமி வெள்ளை அங்கி, சிவப்பு பெல்ட் அணிந்து தலையில் எரியும் மெழுகுதிரிகள் கிரீடத்துடன் பவனி செல்ல மற்ற சிறுமிகள் கைகளில் மெழுகுதிரிகளுடன் பவனி செல்கின்றனர்.
பெரியவர்கள் புனித லூசியாவுக்கென இயற்றப்பட்ட பாடலைப் பாடி இப்பவனியை வரவேற்று விழாக் கொண்டாடுகின்றனர். அன்று கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களும் இனிப்புகளும் வழங்கப்படுகின்றன. சுவீடன், நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், லாத்வியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, மால்ட்டா, இத்தாலியின் சில பகுதிகள், போஸ்னியா, பவேரியா, குரோவேஷியா, சுலோவாக்கியா போன்ற நாடுகளிலும், இன்னும் ஸ்காண்டிநேவியத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் வாழும் பிற நாடுகளிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாக்களில் புனித லூசியா ஓர் இளம் பெண்ணாக மெழுகுதிரிகள் மற்றும் இனிப்புகளுடன் பவனியில் வந்து மக்களை மகிழ்விக்கிறார்.
For prayers and novena to St.Lucia click here
Back to top
பிறப்பு : 286, சிசிலி Sizilien, இத்தாலி
இறப்பு : 304, சிராக்குஸ் Syrakus
பாதுகாவல்: பார்வையற்றோர், நோயுற்ற குழந்தைகள், விவசாயிகள், கண்ணாடி,இரும்பு,கத்தி,கதவு தயாரிப்போர், எழுத்தாளர்கள், வக்கீல், கண்நோயிலிருந்து, கழுத்து வலியிலிருந்து, இரத்தப்போக்கிலிருந்து
லூசியா என்ற புனிதர் இத்தாலியின் சிசிலித் தீவில் சிராக்குசா எனும் ஊரில் நான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது தாய் நீண்ட காலமாகத் தீராத நோயால் கஷ்டப்பட்டார். எனவே ஒருநாள் அவரது உடல்நலத்திற்காகப் புனித ஆக்னஸ் திருத்தலத்தில் உருக்கமாகச் செபித்தார் லூசியா. அன்றிரவு அவரது கனவில் புனிதர் ஆகத்தா தோன்றி, உன் தாய்க்குத் தேவையான உடல்நலனைப் பெற்றுக் கொடுக்க உன் மன்றாட்டே போதுமானதாக இருக்கும் போது என்னிடம் ஏ ன் வேண்டுகிறாய், உனது விசுவாசமே உனக்குப் போதும் என்றார். அதன்பின்னர் லூசியாவின் தாயும் முழுகுணம் அடைந்தார். இதனால் லூசியா பக்தியுள்ள கிறிஸ்தவளாக மாறினார். தனது கன்னிமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.
தனது தாயின் அனுமதியோடு தம் உடைமைகளை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார். லூசியாவை ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் இவரது புதிய தீர்மானத்தைக் கேட்டுக் கடும் கோபமடைந்தான். எனவே அவன், லூசியா ஒரு கிறிஸ்தவள் என்று சொல்லி உரோமை உயர் அதிகாரிகளிடம் அவரைக் கையளித்தான். இவர் கிறிஸ்தவத்தைப் புறக்கணிக்கவில்லையெனில் விலைமகளிர் விடுதிக்குத் தள்ளப்படுவார் என எச்சரிக்கப்பட்டாள். ஆயினும் இவர் தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்ததால் ஆயிரம் ஆண்களும் ஐம்பது காளைகளும் சேர்ந்து இவரைத் தள்ளினர். ஆனால் அவரை அசைக்க முடியவில்லை. எனவே அவரைச் சுற்றிப் பொருட்களை நிரப்பி தீ வைத்தனர். ஆயினும் அவர் அசையாமல் நின்றார்.
அவர் மேல் காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றினார்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. ஆனால் அவர் எதற்கும் அஞ்சாமல் தனது மரணம் பிற கிறிஸ்தவர்களுக்குப் பயத்தைக் குறைக்கும் மற்றும் விசுவாசமற்றவர்களுக்கு வருத்தத்தைக் கொண்டு வரும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இவர் இவ்வாறு பேசுவதைத் தடுக்க ஒரு வீரன் ஈட்டியால் அவள் தொண்டையைக் கிழித்தான். ஆனால் அந்த நேரத்தில் அங்கிருந்த ஓர் உரோமை அதிகாரி திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் உரோமைக்கு அழைக்கப்பட்டு தலை வெட்டப்பட்டு இறந்தான். லூசியா இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்று மறைசாட்சியாக இறந்தார். இவர் இறந்தது ஏறக்குறைய கி.பி.310ம் ஆண்டில் என்று சொல்லப்படுகிறது.
உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் காலத்தில் சுரங்கக் கல்லறைகளில் பயத்தினால் மறைந்திருந்த கிறிஸ்தவர்களுக்கு லூசியா உதவி செய்து வந்தார். அப்போது இவருக்கு இரண்டு கைகளிலும் நிறையப் பொருட்கள் இருந்ததால் பூமிக்கடியில் செல்ல வெளிச்சம் தேவைப்பட்டது. ஆதலால் தனது தலைக்கு மேல் ஒரு கீரிடம் செய்து அதில் மெழுகுதிரிகளை ஏற்றி இவர் சென்றதாகப் பாரம்பரியம் சொல்கிறது. எனவே இன்றும் லூசியாவின் விழாவான டிசம்பர் 13ம் தேதி ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒரு சிறுமி வெள்ளை அங்கி, சிவப்பு பெல்ட் அணிந்து தலையில் எரியும் மெழுகுதிரிகள் கிரீடத்துடன் பவனி செல்ல மற்ற சிறுமிகள் கைகளில் மெழுகுதிரிகளுடன் பவனி செல்கின்றனர்.
பெரியவர்கள் புனித லூசியாவுக்கென இயற்றப்பட்ட பாடலைப் பாடி இப்பவனியை வரவேற்று விழாக் கொண்டாடுகின்றனர். அன்று கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களும் இனிப்புகளும் வழங்கப்படுகின்றன. சுவீடன், நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், லாத்வியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, மால்ட்டா, இத்தாலியின் சில பகுதிகள், போஸ்னியா, பவேரியா, குரோவேஷியா, சுலோவாக்கியா போன்ற நாடுகளிலும், இன்னும் ஸ்காண்டிநேவியத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் வாழும் பிற நாடுகளிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாக்களில் புனித லூசியா ஓர் இளம் பெண்ணாக மெழுகுதிரிகள் மற்றும் இனிப்புகளுடன் பவனியில் வந்து மக்களை மகிழ்விக்கிறார்.
For prayers and novena to St.Lucia click here
Back to top
டிசம்பர் 14
மறைவல்லுநர் திருக்காட்சியாளர் சிலுவை அருளப்பர் Johannes von Kreuz
பிறப்பு
24 ஜூன் 1542,
ஃபொண்டிவேரோஸ் Fontiveros, ஸ்பெயின்
இறப்பு
14 டிசம்பர் 1591,
உபேடா Ubeda, ஸ்பெயின்
புனிதர்பட்டம்: 26 டிசம்பர் 1726, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
மறைவல்லுநராக: 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
இவரின் தந்தை ஓர் அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால் அவரின் தாய் ஓர் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர். இதனால் தந்தையும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவராகவே வாழ்ந்தார். அருளப்பர், தன் தந்தை செய்து வந்த கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டு, தன் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அதன்பிறகு இவர் தாதியர் கல்வியைக் கற்றுக்கொண்டு மெடினா டெல் காம்போ (Medina del Campo) என்ற மருத்துவமனையில் பணியாற்றினார். இவர் தன் பணியின் போது நோயாளிகளின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டுப்பணியாற்றினார். தான் காட்டிய அன்பாலே பல நோயாளிகள் விரைவில் குணமடைந்தனர்.
இவர் தான் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே, இயேசு சபையில் தத்துவயியலைக் கற்றார். இவர் 1563 ஆம் ஆண்டின் இடையில் இவரின் 21 ஆம் வயதில் மெடினாவில் இருந்த கார்மேல் சபையில் சேர்ந்து புனித மத்தியாசிடமிருந்து சகோதரர் யோஹான்னஸ் என்ற பெயரைப் பெற்றார். இவர் தனது இறையியல் மற்றும் தத்துவயியல் படிப்பை முடித்தபின் சலமான்கா (Salamanca) என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்குதான் அவர் 1568 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு உடனே அவர் அச்சபையிலிருந்து வெளியேறி கர்தாய்சர் (Kartäuser) என்றழைக்கப்படும் துறவற சபையில் சேர்ந்தார். அங்கு அவர் பல விதங்களில் சோதனைக்குப்பட்டார்.
அச்சமயத்தில்தான் அருளப்பர் திருக்காட்சியாளர் அவிலா தெரசாவை சந்தித்தார். அவரின் உதவியாலும் வழிநடத்துதலாலும் தன் சோதனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, சபையின் வளர்ச்சிக்காக உழைத்தார். கடும் உழைப்பாலும் எண்ணற்ற நூல்களாலும் சபை சீர்திருத்தத்திற்கு ஆதரவு அளித்து வந்தார். அப்போது 1582 ல் அவிலா தெரசா இறந்து போனதால் சீர்திருத்தப்பணிகள் அனைத்தையும் தனி மனிதனாக இருந்து செய்துவந்தார். பின்னர் 1588 ஆம் ஆண்டு கார்மேல் மடத்தை தனியொரு மடமாக பிரித்து வழிநடத்தினார். அச்சமயத்தில் மிக நோய்வாய்ப்பட்டிருந்த சிலுவை அருளப்பர் தன் சக்தியை இழந்தவராய் இறந்தார்.
இவர் இறந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இவரின் உடல் செகோவியாவிற்கு (Segovia) எடுத்துச் செல்லப்பட்டது. இப்புனிதரின் உடல் இன்று கார்மேல் டெஸ்கால்சோஸ் (Carmelitas Descalzos) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் வைக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இவர் எழுதிய ஆன்மீக நூல்கள் புனித வாழ்விற்கும் அறிவாழத்திற்கும் இன்றும் சான்று பகர்ந்து விளங்குகின்றது
செபம்:
நிறைவாழ்வை வழங்கும் எம் தந்தையே! தம்மை முற்றிலும் ஒறுத்து சிலுவையை நேசித்து வாழும் பேற்றை குருவாகிய சிலுவையின் புனித அருளப்பருக்கு நீர் அளித்தீர். இவருடைய முன்மாதிரியை நாங்கள் கடைபிடித்து உமது முடிவில்லா மாட்சியை கண்டுகளிக்க வரம் தாரும்.
Back to top
மறைவல்லுநர் திருக்காட்சியாளர் சிலுவை அருளப்பர் Johannes von Kreuz
பிறப்பு
24 ஜூன் 1542,
ஃபொண்டிவேரோஸ் Fontiveros, ஸ்பெயின்
இறப்பு
14 டிசம்பர் 1591,
உபேடா Ubeda, ஸ்பெயின்
புனிதர்பட்டம்: 26 டிசம்பர் 1726, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
மறைவல்லுநராக: 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
இவரின் தந்தை ஓர் அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால் அவரின் தாய் ஓர் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர். இதனால் தந்தையும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவராகவே வாழ்ந்தார். அருளப்பர், தன் தந்தை செய்து வந்த கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டு, தன் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அதன்பிறகு இவர் தாதியர் கல்வியைக் கற்றுக்கொண்டு மெடினா டெல் காம்போ (Medina del Campo) என்ற மருத்துவமனையில் பணியாற்றினார். இவர் தன் பணியின் போது நோயாளிகளின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டுப்பணியாற்றினார். தான் காட்டிய அன்பாலே பல நோயாளிகள் விரைவில் குணமடைந்தனர்.
இவர் தான் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே, இயேசு சபையில் தத்துவயியலைக் கற்றார். இவர் 1563 ஆம் ஆண்டின் இடையில் இவரின் 21 ஆம் வயதில் மெடினாவில் இருந்த கார்மேல் சபையில் சேர்ந்து புனித மத்தியாசிடமிருந்து சகோதரர் யோஹான்னஸ் என்ற பெயரைப் பெற்றார். இவர் தனது இறையியல் மற்றும் தத்துவயியல் படிப்பை முடித்தபின் சலமான்கா (Salamanca) என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்குதான் அவர் 1568 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு உடனே அவர் அச்சபையிலிருந்து வெளியேறி கர்தாய்சர் (Kartäuser) என்றழைக்கப்படும் துறவற சபையில் சேர்ந்தார். அங்கு அவர் பல விதங்களில் சோதனைக்குப்பட்டார்.
அச்சமயத்தில்தான் அருளப்பர் திருக்காட்சியாளர் அவிலா தெரசாவை சந்தித்தார். அவரின் உதவியாலும் வழிநடத்துதலாலும் தன் சோதனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, சபையின் வளர்ச்சிக்காக உழைத்தார். கடும் உழைப்பாலும் எண்ணற்ற நூல்களாலும் சபை சீர்திருத்தத்திற்கு ஆதரவு அளித்து வந்தார். அப்போது 1582 ல் அவிலா தெரசா இறந்து போனதால் சீர்திருத்தப்பணிகள் அனைத்தையும் தனி மனிதனாக இருந்து செய்துவந்தார். பின்னர் 1588 ஆம் ஆண்டு கார்மேல் மடத்தை தனியொரு மடமாக பிரித்து வழிநடத்தினார். அச்சமயத்தில் மிக நோய்வாய்ப்பட்டிருந்த சிலுவை அருளப்பர் தன் சக்தியை இழந்தவராய் இறந்தார்.
இவர் இறந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இவரின் உடல் செகோவியாவிற்கு (Segovia) எடுத்துச் செல்லப்பட்டது. இப்புனிதரின் உடல் இன்று கார்மேல் டெஸ்கால்சோஸ் (Carmelitas Descalzos) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் வைக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இவர் எழுதிய ஆன்மீக நூல்கள் புனித வாழ்விற்கும் அறிவாழத்திற்கும் இன்றும் சான்று பகர்ந்து விளங்குகின்றது
செபம்:
நிறைவாழ்வை வழங்கும் எம் தந்தையே! தம்மை முற்றிலும் ஒறுத்து சிலுவையை நேசித்து வாழும் பேற்றை குருவாகிய சிலுவையின் புனித அருளப்பருக்கு நீர் அளித்தீர். இவருடைய முன்மாதிரியை நாங்கள் கடைபிடித்து உமது முடிவில்லா மாட்சியை கண்டுகளிக்க வரம் தாரும்.
Back to top
டிசம்பர் 15
சபை நிறுவுனர் யோஹானஸ் ஹைன்றி சார்லஸ் Johannes Heinrich Karl
பிறப்பு
18 டிசம்பர் 1773,
தூபிங்கன் Tübingen, ஜெர்மனி
இறப்பு
15 டிசம்பர் 1856,
வெரோனா Verona, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 6 ஜூலை 1975, திருத்தந்தை 6 ஆம் பவுல்
இவர் தனது 19 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவ மறையை தழுவினார். 1796 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் இவர் வெரோனாவில் இருந்த குருமட மாணவர்களுக்கு இறையியலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றினார். இருந்தபோதும் வெரோனா நகரின் ஆன்மீக குருவாகவும் இவர் பணியாற்றினார். இவர் வெரோனா நகரில் வசித்த ஏழை மக்களின் மேல் தனி அன்பு கொண்டிருந்தார். சிறை கைதிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்படுத்தும் பணியையும் ஆற்றினார்.
இவர் நாள்தோறும் மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து தைரியமூட்டினார். போரினால் பாதிக்கப்பட்ட வாழ்வில் நம்பிக்கையின்றி வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். படைவீரர்களுக்கு அறிவூட்டி தைரியப்படுத்தினார். இவர் வெரோனாவில் பல ஆன்மீக குருக்களை உருவாக்கினார். இவர் 1840 ஆம் ஆண்டு இரக்கத்தின் அருள்சகோதரிகள் என்ற சபையை வெரோனாவில் தொடங்கினார்.
செபம்:
இரக்கமும், கருணையும் நிறைந்த இறைவா! உம் இறைப்பணியை சிறப்புடன் ஆற்றி உம் ஊழியராக திகழ்ந்த இன்றைய புனிதரின் செயல்களை நாங்கள் பின்பற்ற உம் அருள் தாரும். இவரைப்போல நாங்களும் உண்மையுள்ள ஊழியராக வாழ்ந்து உம் பணியில் முழுமையுடன் பங்குகொள்ள உமதருள் தந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
சபை நிறுவுனர் யோஹானஸ் ஹைன்றி சார்லஸ் Johannes Heinrich Karl
பிறப்பு
18 டிசம்பர் 1773,
தூபிங்கன் Tübingen, ஜெர்மனி
இறப்பு
15 டிசம்பர் 1856,
வெரோனா Verona, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 6 ஜூலை 1975, திருத்தந்தை 6 ஆம் பவுல்
இவர் தனது 19 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவ மறையை தழுவினார். 1796 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் இவர் வெரோனாவில் இருந்த குருமட மாணவர்களுக்கு இறையியலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றினார். இருந்தபோதும் வெரோனா நகரின் ஆன்மீக குருவாகவும் இவர் பணியாற்றினார். இவர் வெரோனா நகரில் வசித்த ஏழை மக்களின் மேல் தனி அன்பு கொண்டிருந்தார். சிறை கைதிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்படுத்தும் பணியையும் ஆற்றினார்.
இவர் நாள்தோறும் மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து தைரியமூட்டினார். போரினால் பாதிக்கப்பட்ட வாழ்வில் நம்பிக்கையின்றி வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். படைவீரர்களுக்கு அறிவூட்டி தைரியப்படுத்தினார். இவர் வெரோனாவில் பல ஆன்மீக குருக்களை உருவாக்கினார். இவர் 1840 ஆம் ஆண்டு இரக்கத்தின் அருள்சகோதரிகள் என்ற சபையை வெரோனாவில் தொடங்கினார்.
செபம்:
இரக்கமும், கருணையும் நிறைந்த இறைவா! உம் இறைப்பணியை சிறப்புடன் ஆற்றி உம் ஊழியராக திகழ்ந்த இன்றைய புனிதரின் செயல்களை நாங்கள் பின்பற்ற உம் அருள் தாரும். இவரைப்போல நாங்களும் உண்மையுள்ள ஊழியராக வாழ்ந்து உம் பணியில் முழுமையுடன் பங்குகொள்ள உமதருள் தந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
டிசம்பர் 16
புனித ஆடெல்ஹைட் (அரசி)
St. Adelheid
நினைவுத்திருநாள் ; டிசம்பர் 16
பிறப்பு : 931, பூர்கண்ட் Burgund, பிரான்சு
இறப்பு : 16, டிசம்பர் 999, செல்ஸ் Selz, பிரான்சு
இவர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் 20 ஆம் வயதில் 951 ஆம் ஆண்டு அரசர் முதலாம் ஓட்டோ(Otto) என்பவரை மணந்தார். பின்னர் 962 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் அருளப்பரால் அரசியாக முடிசூட்டப்பட்டார். 973 ஆம் ஆண்டு கணவர் முதலாம் ஒட்டோ இறந்துவிட்டார். இதனால் மகன் 2 ஆம் ஓட்டோவும் அவரின் மனைவியும் அரசர் பொறுப்பை ஏற்றனர். இதனால் அரசி ஆடெல்ஹைட் குடும்ப வாழ்விலிருந்து, சற்று விலகி ஆன்மீக காரியங்களில் கவனம் செலுத்தினார்.
இவர் எண்ணிலடங்கா துறவற மடங்களைக் கட்டினார். குளுனி துறவற மட சட்ட ஒழுங்குகளை சீர்திருத்த தேவையான உதவிகளையும் தாராளமாக செய்து வந்தார். குளுனி மடத்தை (Cluny) பிரான்சு நாடு முழுவதும் பரப்பினார். இவர் திருமணம் செய்தவராக இருந்தபோதும்கூடதுறவியைப்போலவே வாழ்ந்தார். இவர் தனது வாழ்நாளின் இறுதிவரை துறவற இல்லத்திலேயே வாழ்ந்து இறந்தார்.
செபம்:
இரக்கமே உருவான இறைவா! அரசி ஆடெல்ஹைடை எமக்கு கொடையாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று துறவிகளுக்கெதிராக நடைபெறும் அநீதிகளை அகற்றி, உம் நீதியையும், விசுவாசத்தையும் இவ்வுலகில் நிலை நிறுத்திட நீர்தாமே அருள்புரிய வேண்டுமென்று அரசி ஆடெல்ஹைடின் வழியாக இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
Back to top
புனித ஆடெல்ஹைட் (அரசி)
St. Adelheid
நினைவுத்திருநாள் ; டிசம்பர் 16
பிறப்பு : 931, பூர்கண்ட் Burgund, பிரான்சு
இறப்பு : 16, டிசம்பர் 999, செல்ஸ் Selz, பிரான்சு
இவர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் 20 ஆம் வயதில் 951 ஆம் ஆண்டு அரசர் முதலாம் ஓட்டோ(Otto) என்பவரை மணந்தார். பின்னர் 962 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் அருளப்பரால் அரசியாக முடிசூட்டப்பட்டார். 973 ஆம் ஆண்டு கணவர் முதலாம் ஒட்டோ இறந்துவிட்டார். இதனால் மகன் 2 ஆம் ஓட்டோவும் அவரின் மனைவியும் அரசர் பொறுப்பை ஏற்றனர். இதனால் அரசி ஆடெல்ஹைட் குடும்ப வாழ்விலிருந்து, சற்று விலகி ஆன்மீக காரியங்களில் கவனம் செலுத்தினார்.
இவர் எண்ணிலடங்கா துறவற மடங்களைக் கட்டினார். குளுனி துறவற மட சட்ட ஒழுங்குகளை சீர்திருத்த தேவையான உதவிகளையும் தாராளமாக செய்து வந்தார். குளுனி மடத்தை (Cluny) பிரான்சு நாடு முழுவதும் பரப்பினார். இவர் திருமணம் செய்தவராக இருந்தபோதும்கூடதுறவியைப்போலவே வாழ்ந்தார். இவர் தனது வாழ்நாளின் இறுதிவரை துறவற இல்லத்திலேயே வாழ்ந்து இறந்தார்.
செபம்:
இரக்கமே உருவான இறைவா! அரசி ஆடெல்ஹைடை எமக்கு கொடையாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று துறவிகளுக்கெதிராக நடைபெறும் அநீதிகளை அகற்றி, உம் நீதியையும், விசுவாசத்தையும் இவ்வுலகில் நிலை நிறுத்திட நீர்தாமே அருள்புரிய வேண்டுமென்று அரசி ஆடெல்ஹைடின் வழியாக இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
Back to top
டிசம்பர் 17
புனித மாட்டா நகர் யோவான்
St. Johannes von Matha
நினைவுத்திருநாள் : டிசம்பர் 17
பிறப்பு : 23 ஜூன் 1160, பவ்கோன் Faucon, பிரான்சு
இறப்பு :17, டிசம்பர் 1213, உரோம், இத்தாலி
பாதுகாவல்: மூவொரு இறைவன் சபை
இவர் பாரிஸ் நகரில் இறையியல் படிப்பைப் பயின்றார். பின்னர் 1185 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஒரு சமயம் இவர் செபித்துக்கொண்டிருக்கும்போது மூவொரு இறைவனைப்பற்றி திருக்காட்சி ஒன்றைக் கண்டார். அத்திருக்காட்சியில் மூவொரு இறைவனுக்கென்று சபை ஒன்றை நிறுவும்படி கூறியதாக உணர்ந்தார். இதனால் 1198 ஆம் ஆண்டு டிசம்பர் தமத்திருத்துவ சபை (மூவொரு இறைவன் சபை) என்றதொரு சபையை மேயாக்ஸ் (Meaux) என்ற மறைமாவட்டத்தில்துவங்கினார். இச்சபையின் ஒழுங்குகளை தயாரித்து அதைப் பின்பற்றுவதற்குதிருத்தந்தை 3 ஆம் இன்னொசெண்ட் பெருமளவில் உதவினார்.
இப்புதிய சபையானது மிக வேகமாக பிரான்சு நாடு முழுவதும் பரவியது. பின்னர் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, போர்த்துக்கல் மற்றும் இங்கிலாந்திலும்அதிவேகமாக பரவியது. இச்சபை குருக்கள் உலகின் எப்பகுதியிலும் இருந்த சிறைக்கைதிகளின் விடுதலைக்காக உழைத்தனர். இப்பணியை செய்வதற்கு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைப்பெண்கள், அச்சபையில் பணியாளர்களாகச் சேர்ந்தனர். மேலும் அச்சபை சகோதரர்களை நோயாளிகளை கவனிக்கும் பணிக்கும், படைவீரர்களுக்குஆன்ம வாழ்வில் வளர்வதற்கு வழிகாட்டுவதற்கும் தயாரித்தார். இச்சபையினர் வெள்ளை அங்கி அணிந்து சிவப்பு நிற சிலுவையை அணிந்து, கருப்பு நிறத்தில் நீளமான உடை உடுத்த வேண்டுமென்று பணித்தார். பல்வேறு விதங்களில் தன் சபையை வளர்த்தெடுத்து,சபைக்கு அங்கீகாரம் பெற்றபின் இறந்தார்.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! தமத்திருத்துவ சபையை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அச்சபை சகோதர சகோதரிகளாக நீர் எந்நாளும், எச்சூழலிலும் உடனிருந்து வழிநடத்தும். அச்சபை தொடங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து காலத்தின் சூழ்நிலைக்கேற்பசெயல்பட்டு, உம் இறையாட்சியில் நிறைவு பெற, உம் அருளையும் ஆசிரையும் தந்து வழிநடத்தும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித மாட்டா நகர் யோவான்
St. Johannes von Matha
நினைவுத்திருநாள் : டிசம்பர் 17
பிறப்பு : 23 ஜூன் 1160, பவ்கோன் Faucon, பிரான்சு
இறப்பு :17, டிசம்பர் 1213, உரோம், இத்தாலி
பாதுகாவல்: மூவொரு இறைவன் சபை
இவர் பாரிஸ் நகரில் இறையியல் படிப்பைப் பயின்றார். பின்னர் 1185 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஒரு சமயம் இவர் செபித்துக்கொண்டிருக்கும்போது மூவொரு இறைவனைப்பற்றி திருக்காட்சி ஒன்றைக் கண்டார். அத்திருக்காட்சியில் மூவொரு இறைவனுக்கென்று சபை ஒன்றை நிறுவும்படி கூறியதாக உணர்ந்தார். இதனால் 1198 ஆம் ஆண்டு டிசம்பர் தமத்திருத்துவ சபை (மூவொரு இறைவன் சபை) என்றதொரு சபையை மேயாக்ஸ் (Meaux) என்ற மறைமாவட்டத்தில்துவங்கினார். இச்சபையின் ஒழுங்குகளை தயாரித்து அதைப் பின்பற்றுவதற்குதிருத்தந்தை 3 ஆம் இன்னொசெண்ட் பெருமளவில் உதவினார்.
இப்புதிய சபையானது மிக வேகமாக பிரான்சு நாடு முழுவதும் பரவியது. பின்னர் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, போர்த்துக்கல் மற்றும் இங்கிலாந்திலும்அதிவேகமாக பரவியது. இச்சபை குருக்கள் உலகின் எப்பகுதியிலும் இருந்த சிறைக்கைதிகளின் விடுதலைக்காக உழைத்தனர். இப்பணியை செய்வதற்கு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைப்பெண்கள், அச்சபையில் பணியாளர்களாகச் சேர்ந்தனர். மேலும் அச்சபை சகோதரர்களை நோயாளிகளை கவனிக்கும் பணிக்கும், படைவீரர்களுக்குஆன்ம வாழ்வில் வளர்வதற்கு வழிகாட்டுவதற்கும் தயாரித்தார். இச்சபையினர் வெள்ளை அங்கி அணிந்து சிவப்பு நிற சிலுவையை அணிந்து, கருப்பு நிறத்தில் நீளமான உடை உடுத்த வேண்டுமென்று பணித்தார். பல்வேறு விதங்களில் தன் சபையை வளர்த்தெடுத்து,சபைக்கு அங்கீகாரம் பெற்றபின் இறந்தார்.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! தமத்திருத்துவ சபையை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அச்சபை சகோதர சகோதரிகளாக நீர் எந்நாளும், எச்சூழலிலும் உடனிருந்து வழிநடத்தும். அச்சபை தொடங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து காலத்தின் சூழ்நிலைக்கேற்பசெயல்பட்டு, உம் இறையாட்சியில் நிறைவு பெற, உம் அருளையும் ஆசிரையும் தந்து வழிநடத்தும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 18
குரு உன்னிபால்டு Wunibald OSB
பிறப்பு
701,
வேசெக்ஸ் Wessex, இங்கிலாந்து
இறப்பு
18 டிசம்பர் 761,
ஹைடன்ஹைம் Heidenheim, ஜெர்மனி
பாதுகாவல்: கட்டிடத்தொழிலாளிகள், திருமண இணையர்
இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் ஒரு சிலர் புனிதர்பட்டம் பெற்றுள்ளனர். இவர் ஏறக்குறைய 720 ஆம் ஆண்டு தன் தந்தையுடனும், சகோதரருடனும் உரோம் நகருக்கு திருயாத்திரை சென்றார். பின்னர் அங்கிருந்து புனித நாட்டிற்கு சென்றார். அங்கிருந்து திரும்பி இத்தாலி வந்தடைந்தபோதுதான், தான் ஒரு குருவாக வேண்டுமென்று தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்து, இத்தாலி நாட்டிலுள்ள மோண்டேகசினோவிலிருந்த புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் அவரின் மாமா, ஜெர்மனி நாட்டின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்ட போனிபாஸ் விடுத்த அழைப்பின்பேரில் ஜெர்மனி நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
இவர் ஜெர்மனியில் 738 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று, மறைபரப்பு பணிக்காக பவேரியாவிற்கும் தூரிங்கன் Thüringen நாட்டிற்கும் அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பின் அங்கிருந்து மைன்ஸ் Mainz நகருக்கு திரும்பிவந்து 4 ஆண்டுகள் மறைப்பணியை ஆற்றினார். அதன்பிறகு 751 அல்லது 752 ஆம் ஆண்டின் இறுதியில் ஐஷ்டாட்டில் Eichstatt இருந்த ஹைடன்ஹைம் என்ற மறைமாவட்டத்தை நிறுவினார். அதன்பிறகு 741 ஆம் ஆண்டு தன் சகோதரர் வில்லிபால்டு Wiilibald ஆயராக இருந்தார். அவர்தான் சில ஆண்டுகள் கழித்து பெனடிக்ட் துறவற சபையை வழிநடத்தினார். பின்னர் அவரின் உதவியுடன் உன்னிபால்டு பெண்களுக்கான பெனடிக்ட் துறவற சபையை வழிநடத்தினார். பிறகு மிகப்பெரிய கலாச்சார மறைபரப்பு பணியகம் ஒன்றை நிறுவி அதையும் தொடர்ந்து வழிநடத்தினார். இவ்வாறு பல்வேறு வழிகளில் மறைபரப்புப்பணியை ஆற்றிய இவர், பெனடிக்ட் துறவற சபையிலேயே இறந்தார். சில ஆண்டுகள் கழித்து இவரின் கல்லறை மேல் ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. இவ்வாலயம் 1483 ஆம் ஆண்டிற்குப் பின் பிறஇன சபைச்சகோதரர்களின் ஆலயமாக மாற்றப்பட்டது.
செபம்:
அனைவருக்கும் இரக்கம் காட்டும் அன்புத்தந்தையே! அருள்தந்தை உன்னிபால்டை நீர் இவ்வுலகில் படைத்து எமக்கு கொடையாக தந்தீர். இவரின் வழியாக உம் கைவேலைப்பாட்டை மெருகூட்டினீர். புனித பெனடிக்ட் சபையை மேன்மேலும் வளர்த்தெடுத்தீர். இச்சபையின் மூலம், உம் இறைப்பணியை இவ்வுலகில் வாழ வைத்தீர். தொடர்ந்து உமது இரக்கத்தை அச்சபையினர் மீது பொழிந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
டிசம்பர் 19
திருத்தந்தை புனித 5 ஆம் உர்பான்
St. Pope Urban V OSB
நினைவுத்திருநாள் : டிசம்பர் 19
பிறப்பு : 1310, கிரிசாக் Grisac, பிரான்சு
இறப்பு : 19 டிசம்பர் 1370, அவிஞான் Avignon, பிரான்சு
இவர் குயிலாமே கிரிமோவார்ட் Guillaume Grimoard பெயரால் என்றழைக்கப்பட்டார். இவர் அவிஞான் நகர் திருத்தந்தை என்றும் அழைக்கப்பட்டார். இவர் தன் 52 ஆம் வயதில் அவிஞான் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகக் கடுமையான செப தவ வாழ்வை வாழ்ந்தார். தன் மறைமாவட்ட மக்களையும் சிறந்த எடுத்துக்காட்டான செப வாழ்வை வாழத் தூண்டினார். பல காரணங்களால் இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசர் 4 ஆம் கார்ல் ஸ்வேபன் நாட்டு பிர்ஜிட்டா Birgitta von Schweben இவர்களுக்கு பல விதங்களில் ஆலோசனை வழங்குபவராகவும் இருந்தார். இவர் தன் இருப்பிடத்தை அவிஞான் நகரில் கொண்டு செயல்பட்டார். இதனால் பலரின் அதிருப்திக்கு ஆளானார். அதன் காரணமாக தன் இருப்பிடத்தை உரோம் நகருக்கு மாற்றினார். 16 அக்டோபர் 1367 ஆம் ஆண்டில்தான் தனது திருத்தந்தை பணியை ரோமில் தொடங்கினார். அதுவரையிலும் அவிஞான் நகரில் இருந்தவாறே திருச்சபைப் பணிகள் அனைத்தையும் ஆற்றினார்.
இவர் உரோம் நகருக்கு வந்த பிறகு பலவிதமான வித்தியாசமான பிரச்சனைகளை சந்தித்தார். மக்களிடையே அமைதி சீர்குலைந்தது. பல பிரிவினைகள் ஏற்பட்டது. இதனால் திருத்தந்தை மிகவும் வருத்தத்திற்குள்ளாகி வேதனை அடைந்தார். அதன்பின் 1370 ஆம் ஆண்டு, பிரான்சுக்கும் இங்கிலாந்துக்குமிடையே போர் மூண்டது. அச்சமயத்தில் திருத்தந்தை 5 ஆம் உர்பான் மீண்டும் அவிஞான் சென்றார். இவர் அவிஞான் செல்லக்கூடாது என்று ஸ்வேபன் நாட்டு சபை நிறுவினர் பிர்கிட்டா தடுத்தார். இருப்பினும் அனைத்து தடைகளையும் தாண்டி திருத்தந்தை அவிஞான் சென்றவுடன் அங்கேயே மறைசாட்சியாக மடிந்தார். இவர் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை மேல் இன்று, புனித விக்டர் என்ற பெயரில் பேராலயம் உள்ளது.
செபம்:
நலன்களை தருபவரே எம் தலைவா! திருத்தந்தை 5 ஆம் உர்பான் வழியாக அவிஞான் என்ற மறைமாவட்டத்தை விசுவாசத்தை விதைத்தீர். உம் அருளால் தொடர்ந்து அம்மக்களை நிரப்பும். அன்று அவர்கள் பெற்ற இறை நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தொடர்ந்து அவர்களுடையதாக்கி என்றென்றும் உம்முடைய மக்களாக வாழும் பேற்றை அளித்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
திருத்தந்தை புனித 5 ஆம் உர்பான்
St. Pope Urban V OSB
நினைவுத்திருநாள் : டிசம்பர் 19
பிறப்பு : 1310, கிரிசாக் Grisac, பிரான்சு
இறப்பு : 19 டிசம்பர் 1370, அவிஞான் Avignon, பிரான்சு
இவர் குயிலாமே கிரிமோவார்ட் Guillaume Grimoard பெயரால் என்றழைக்கப்பட்டார். இவர் அவிஞான் நகர் திருத்தந்தை என்றும் அழைக்கப்பட்டார். இவர் தன் 52 ஆம் வயதில் அவிஞான் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகக் கடுமையான செப தவ வாழ்வை வாழ்ந்தார். தன் மறைமாவட்ட மக்களையும் சிறந்த எடுத்துக்காட்டான செப வாழ்வை வாழத் தூண்டினார். பல காரணங்களால் இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசர் 4 ஆம் கார்ல் ஸ்வேபன் நாட்டு பிர்ஜிட்டா Birgitta von Schweben இவர்களுக்கு பல விதங்களில் ஆலோசனை வழங்குபவராகவும் இருந்தார். இவர் தன் இருப்பிடத்தை அவிஞான் நகரில் கொண்டு செயல்பட்டார். இதனால் பலரின் அதிருப்திக்கு ஆளானார். அதன் காரணமாக தன் இருப்பிடத்தை உரோம் நகருக்கு மாற்றினார். 16 அக்டோபர் 1367 ஆம் ஆண்டில்தான் தனது திருத்தந்தை பணியை ரோமில் தொடங்கினார். அதுவரையிலும் அவிஞான் நகரில் இருந்தவாறே திருச்சபைப் பணிகள் அனைத்தையும் ஆற்றினார்.
இவர் உரோம் நகருக்கு வந்த பிறகு பலவிதமான வித்தியாசமான பிரச்சனைகளை சந்தித்தார். மக்களிடையே அமைதி சீர்குலைந்தது. பல பிரிவினைகள் ஏற்பட்டது. இதனால் திருத்தந்தை மிகவும் வருத்தத்திற்குள்ளாகி வேதனை அடைந்தார். அதன்பின் 1370 ஆம் ஆண்டு, பிரான்சுக்கும் இங்கிலாந்துக்குமிடையே போர் மூண்டது. அச்சமயத்தில் திருத்தந்தை 5 ஆம் உர்பான் மீண்டும் அவிஞான் சென்றார். இவர் அவிஞான் செல்லக்கூடாது என்று ஸ்வேபன் நாட்டு சபை நிறுவினர் பிர்கிட்டா தடுத்தார். இருப்பினும் அனைத்து தடைகளையும் தாண்டி திருத்தந்தை அவிஞான் சென்றவுடன் அங்கேயே மறைசாட்சியாக மடிந்தார். இவர் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை மேல் இன்று, புனித விக்டர் என்ற பெயரில் பேராலயம் உள்ளது.
செபம்:
நலன்களை தருபவரே எம் தலைவா! திருத்தந்தை 5 ஆம் உர்பான் வழியாக அவிஞான் என்ற மறைமாவட்டத்தை விசுவாசத்தை விதைத்தீர். உம் அருளால் தொடர்ந்து அம்மக்களை நிரப்பும். அன்று அவர்கள் பெற்ற இறை நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தொடர்ந்து அவர்களுடையதாக்கி என்றென்றும் உம்முடைய மக்களாக வாழும் பேற்றை அளித்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
டிசம்பர் 20
புனித சிலோஸ் நகர் தொமினிக் (குரு)
St. Dominikus von Silos OSB
நினைவுத்திருநாள் : டிசம்பர் 20
பிறப்பு : 1010, கானாஸ் Canas, ஸ்பெயின்
இறப்பு : 20 டிசம்பர் 1073, சிலோஸ் Silos, ஸ்பெயின்
பாதுகாவல்: கைதிகள், ஆயர்கள்
இவர் 1030 ஆம் ஆண்டு பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார். அப்போது அச்சபை குருக்கள் பலர் மறைசாட்சிகளாக மடிந்து கொண்டிருந்தனர். இதனால் இவர் அத்துறவற மடத்தின் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டார். 4 வருடங்கள் கானாசில் பணியாற்றியப் பின் தொமினிக் சான் மில்லான் டி லா கொகோலாSan Millan de la cogola என்றழைக்கப்பட்ட ஊருக்கு திரும்பினார். அங்கு அரசர் கார்சியா Garcia பேராலயம் ஒன்றையும் கட்டினார். தொமினிக் அப்பேராலயத்தில்மறைப்பணிக்காக அமர்த்தப்பட்டார். இவர் எப்போதும் நன்றி நிறை மனதுடன் அவ்வூர் மக்களிடையே பணியாற்றினார். அதன்பின் 1041 ஆம் ஆண்டு சிலோஸ் சென்று அங்கிருந்த தன் துறவற இல்லத்தில் தங்கி மறைப்பணியாற்றினார். அங்கு கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பினார். இவர் பாழடைந்துகிடந்த தன் துறவற இல்லத்தையும் புதுப்பித்தார். இதனால் மக்கள் வெகுண்டெழுந்து வெறிக்கொண்டு அம்மடத்துறவிகள் அனைவரையும் தாக்கினர். இருப்பினும் அவைகளைக் கண்டு அஞ்சாமல் இறைவனின் மகிமைக்காக "ஆராதனை மையம்" என்ற பெயரில் மற்றும் ஒரு இல்லத்தை கட்டினார். அவ்வில்லத்தில் தொமினிக் 30 ஆண்டுகள் தங்கி பணியாற்றினார். வீழ்ச்சியடைந்துகாணப்பட்ட விசுவாச வாழ்விற்கு உரமூட்டி இறை விசுவாசத்தை அம்மண்ணில் தழைக்கச் செய்தார். இதற்காக பல முறை இரத்தம் சிந்தி அடிபட்டு போராடினார். இவர் இறந்தபிறகு அவ்வூர் மக்களாலும் அவர் சபை துறவிகளாலும் ஒரு புனிதருக்கு செய்யப்படும் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
செபம்:
நீதியின் மன்னரே எம் கிறிஸ்துவே! இன்னல்கள் பல அடைந்தாலும் சோர்வுறாமல் உம்மில் நம்பிக்கைக்கொண்டு உம் சக்தியை பெற்று விசுவாசத்தை நிலைநாட்டிய இன்றைய புனிதரைப்போல, எங்கல் மீதும் உம் தூய ஆவியை பொழிந்து திடப்படுத்தியருளும். எந்தப் பணியிலும் துணிந்து உழைத்து எழுச்சியை ஏற்படுத்த நீர் துணையாய் உடன் வந்து எம்மை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித சிலோஸ் நகர் தொமினிக் (குரு)
St. Dominikus von Silos OSB
நினைவுத்திருநாள் : டிசம்பர் 20
பிறப்பு : 1010, கானாஸ் Canas, ஸ்பெயின்
இறப்பு : 20 டிசம்பர் 1073, சிலோஸ் Silos, ஸ்பெயின்
பாதுகாவல்: கைதிகள், ஆயர்கள்
இவர் 1030 ஆம் ஆண்டு பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார். அப்போது அச்சபை குருக்கள் பலர் மறைசாட்சிகளாக மடிந்து கொண்டிருந்தனர். இதனால் இவர் அத்துறவற மடத்தின் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டார். 4 வருடங்கள் கானாசில் பணியாற்றியப் பின் தொமினிக் சான் மில்லான் டி லா கொகோலாSan Millan de la cogola என்றழைக்கப்பட்ட ஊருக்கு திரும்பினார். அங்கு அரசர் கார்சியா Garcia பேராலயம் ஒன்றையும் கட்டினார். தொமினிக் அப்பேராலயத்தில்மறைப்பணிக்காக அமர்த்தப்பட்டார். இவர் எப்போதும் நன்றி நிறை மனதுடன் அவ்வூர் மக்களிடையே பணியாற்றினார். அதன்பின் 1041 ஆம் ஆண்டு சிலோஸ் சென்று அங்கிருந்த தன் துறவற இல்லத்தில் தங்கி மறைப்பணியாற்றினார். அங்கு கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பினார். இவர் பாழடைந்துகிடந்த தன் துறவற இல்லத்தையும் புதுப்பித்தார். இதனால் மக்கள் வெகுண்டெழுந்து வெறிக்கொண்டு அம்மடத்துறவிகள் அனைவரையும் தாக்கினர். இருப்பினும் அவைகளைக் கண்டு அஞ்சாமல் இறைவனின் மகிமைக்காக "ஆராதனை மையம்" என்ற பெயரில் மற்றும் ஒரு இல்லத்தை கட்டினார். அவ்வில்லத்தில் தொமினிக் 30 ஆண்டுகள் தங்கி பணியாற்றினார். வீழ்ச்சியடைந்துகாணப்பட்ட விசுவாச வாழ்விற்கு உரமூட்டி இறை விசுவாசத்தை அம்மண்ணில் தழைக்கச் செய்தார். இதற்காக பல முறை இரத்தம் சிந்தி அடிபட்டு போராடினார். இவர் இறந்தபிறகு அவ்வூர் மக்களாலும் அவர் சபை துறவிகளாலும் ஒரு புனிதருக்கு செய்யப்படும் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
செபம்:
நீதியின் மன்னரே எம் கிறிஸ்துவே! இன்னல்கள் பல அடைந்தாலும் சோர்வுறாமல் உம்மில் நம்பிக்கைக்கொண்டு உம் சக்தியை பெற்று விசுவாசத்தை நிலைநாட்டிய இன்றைய புனிதரைப்போல, எங்கல் மீதும் உம் தூய ஆவியை பொழிந்து திடப்படுத்தியருளும். எந்தப் பணியிலும் துணிந்து உழைத்து எழுச்சியை ஏற்படுத்த நீர் துணையாய் உடன் வந்து எம்மை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 21
சபை நிறுவுனர் பீட்டர் ஃபிரீட்ஹோஃபன் Peter Friedhofen
பிறப்பு
25 பிப்ரவரி 1819,
வாலெண்டர் Vallendar, Germany
இறப்பு
21 டிசம்பர் 1860,
கோப்லென்ஸ் Koblenz, Germany
முத்திபேறுபட்டம்: 23 ஜூன் 1985 திருத்தந்தை 2 ஆம் ஜான்பால்
இவர் வாலண்டர் Vallendar என்ற நகரிலுள்ள வைட்டர்ஸ்பூர்க்கில் Weitersburg புகைப்போக்கியை தூய்மை செய்யும் தொழிலை Schornsteinfeger செய்தார். தினமும் அதிகாலையில் எழுந்து பணியை தொடங்கிச் சென்று பல புதிய மனிதர்களையும், வாழ்க்கை என்றால் என்ன? என்பதையும் தன் அனுபவத்தின் வழியாக கற்றுக்கொண்டார். இவரின் உடன் பிறந்த சகோதரர் இளம் வயதிலேயே இறந்துவிட்டதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகலை கவனித்துக்கொண்டு அவர்களின் வாழ்விற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இவர் இளமையாக இருந்தாலும் கூட கிறிஸ்துவின் அப்போஸ்தலிக்க பணியை ஆர்வமுடன் ஆற்றினார். இவர்தான் வாழ்ந்த கிறிஸ்துவ வாழ்வை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
இவர் பல கத்தோலிக்க பங்குத்தளங்களை உருவாக்கினார். இவர் பல கைவிடப்பட்டவர்களையும், தேவையிலிருப்போரையும், நோயாளிகளையும் இனங்கண்டு முன்வந்து உதவினார். அத்துடன் தன்னுடன் இறை இரக்க சபை சகோதரர்களையும் Barmherzige Brüder இணைத்துக்கொண்டு புதிய சபை ஒன்றை நிறுவினார். 21 ஜூன் 1850 ஆம் ஆண்டு டிரியர் ஆயர் இச்சபையை ஏற்றுக்கொண்டு, ஆசீர்வதித்து அங்கீகாரம் அளித்தார். பிறகு பல இடர்பாடுகளை சந்தித்தப்பிறகு 1851 ஆம் ஆண்டு கோப்லென்சிலும் அச்சபையை நிறுவினார்.
இச்சபையினர் மருத்துவர்களையும் தாதியர்களையும் உருவாக்கி நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இச்சபையின் பணியானது மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, வளர்ந்து வந்ததால் பல வெளிநாடுகளுக்கு சென்று அச்சபையை வளர்த்தெடுத்தார். பல நாடுகளில் பயணம் செய்த போது, இவர் எலும்புறுக்கி என்ற நோயால் தாக்கப்பட்டார். இதனால் தன் உடலிலிருந்த சக்தியனைத்தையும் இழந்து, மிக மெல்லிய உடலுடன் இறந்தார். இன்று இவர் ஏற்படுத்திய சபையை இறை இரக்க சகோதரர்கள் வழிநடத்தி வருகின்றார்கள். 1888 ஆம் ஆண்டிலிருந்து டிரியர் நகரிலுள்ள சபையே தலைமை இல்லமாக செயல்படுகின்றது.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! தனது உழைப்பால் உயர்ந்து புதிய சபையை உருவாக்கி உம் புகழுக்காகவும் உம் மாட்சியில் பங்கு பெறவும் தன்னை அர்ப்பணித்த பீட்டர் ஃபிரீட்ஹோஃபனை நினைத்து நன்றி கூறுகின்றோம். இவரின் பரிந்துரையால் அவரால் நிறுவப்பட்ட சபையை இனிவரும் நாளிலும் உடனிருந்து காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
சபை நிறுவுனர் பீட்டர் ஃபிரீட்ஹோஃபன் Peter Friedhofen
பிறப்பு
25 பிப்ரவரி 1819,
வாலெண்டர் Vallendar, Germany
இறப்பு
21 டிசம்பர் 1860,
கோப்லென்ஸ் Koblenz, Germany
முத்திபேறுபட்டம்: 23 ஜூன் 1985 திருத்தந்தை 2 ஆம் ஜான்பால்
இவர் வாலண்டர் Vallendar என்ற நகரிலுள்ள வைட்டர்ஸ்பூர்க்கில் Weitersburg புகைப்போக்கியை தூய்மை செய்யும் தொழிலை Schornsteinfeger செய்தார். தினமும் அதிகாலையில் எழுந்து பணியை தொடங்கிச் சென்று பல புதிய மனிதர்களையும், வாழ்க்கை என்றால் என்ன? என்பதையும் தன் அனுபவத்தின் வழியாக கற்றுக்கொண்டார். இவரின் உடன் பிறந்த சகோதரர் இளம் வயதிலேயே இறந்துவிட்டதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகலை கவனித்துக்கொண்டு அவர்களின் வாழ்விற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இவர் இளமையாக இருந்தாலும் கூட கிறிஸ்துவின் அப்போஸ்தலிக்க பணியை ஆர்வமுடன் ஆற்றினார். இவர்தான் வாழ்ந்த கிறிஸ்துவ வாழ்வை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
இவர் பல கத்தோலிக்க பங்குத்தளங்களை உருவாக்கினார். இவர் பல கைவிடப்பட்டவர்களையும், தேவையிலிருப்போரையும், நோயாளிகளையும் இனங்கண்டு முன்வந்து உதவினார். அத்துடன் தன்னுடன் இறை இரக்க சபை சகோதரர்களையும் Barmherzige Brüder இணைத்துக்கொண்டு புதிய சபை ஒன்றை நிறுவினார். 21 ஜூன் 1850 ஆம் ஆண்டு டிரியர் ஆயர் இச்சபையை ஏற்றுக்கொண்டு, ஆசீர்வதித்து அங்கீகாரம் அளித்தார். பிறகு பல இடர்பாடுகளை சந்தித்தப்பிறகு 1851 ஆம் ஆண்டு கோப்லென்சிலும் அச்சபையை நிறுவினார்.
இச்சபையினர் மருத்துவர்களையும் தாதியர்களையும் உருவாக்கி நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இச்சபையின் பணியானது மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, வளர்ந்து வந்ததால் பல வெளிநாடுகளுக்கு சென்று அச்சபையை வளர்த்தெடுத்தார். பல நாடுகளில் பயணம் செய்த போது, இவர் எலும்புறுக்கி என்ற நோயால் தாக்கப்பட்டார். இதனால் தன் உடலிலிருந்த சக்தியனைத்தையும் இழந்து, மிக மெல்லிய உடலுடன் இறந்தார். இன்று இவர் ஏற்படுத்திய சபையை இறை இரக்க சகோதரர்கள் வழிநடத்தி வருகின்றார்கள். 1888 ஆம் ஆண்டிலிருந்து டிரியர் நகரிலுள்ள சபையே தலைமை இல்லமாக செயல்படுகின்றது.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! தனது உழைப்பால் உயர்ந்து புதிய சபையை உருவாக்கி உம் புகழுக்காகவும் உம் மாட்சியில் பங்கு பெறவும் தன்னை அர்ப்பணித்த பீட்டர் ஃபிரீட்ஹோஃபனை நினைத்து நன்றி கூறுகின்றோம். இவரின் பரிந்துரையால் அவரால் நிறுவப்பட்ட சபையை இனிவரும் நாளிலும் உடனிருந்து காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 22
புனித பிரான்சிஸ்கா சவேரியா கப்ரீனி
St.Franziska Xaviera Cabrini
நினைவுத்திருநாள் : டிசம்பர் 22
பிறப்பு : 15 ஜூலை 1850, சான் ஆஞ்சலோ லோடிகியனோ Sant Angelo Lodigiano, இத்தாலி
இறப்பு : 22 டிசம்பர் 1917, சிகாகோ
முத்திபேறுபட்டம்: 1938
புனிதர்பட்டம்: 7 ஜூலை 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
பாதுகாவல்: வீட்டு வேலை செய்பவர்கள்
இவர் தனது 24 ஆம் வயதிலேயே பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். நோயாளிகளை கவனித்து வந்துள்ளார். பெற்றோரை இழந்த பிள்ளைகளை பராமரித்து வளர்த்துள்ளார். வழிதவறி அலைந்த இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியுள்ளார். விதவை பெண்களை ஒன்று சேர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியுள்ளார். இவ்வாறு பல பணிகளை செய்த இவர் நீண்ட நாள் தன் மனதில் இருந்த சபை ஒன்றை நிறுவும் ஆசையையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இறுதியாக 1880 ஆம் ஆண்டு புனித இதயத்தின் மறைப்பணியாளர்கள் Missionarinnen vom Heiligsten Herzen என்ற சபையை நிறுவினார். இவரே அச்சபையின் முதல் சபைத்தலைவியாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.
இவர் இச்சபையை துவங்கிய ஒரு வருடம் கழித்து, திருத்தந்தை 13 ஆம் லியோ துறவற சபை என்று அறிவித்து, அங்கீகாரம் அளித்தார். மிகப் புகழ் வாய்ந்த மறைப்பரப்பாளர் புனித பிரான்சிஸ் சவேரியாவின் பெயரையும் தன் சபையின் துணைப் பெயராக வைத்தார். இவர் சபையை தொடங்கியப்பின்பும், சபை தனித்து இயங்குவதற்கு தேவையான சில பணிகளை நிறைவேற்றாமல் இருந்தார். இருப்பினும் அமெரிக்கா சென்று1888 ல் நியூயார்க்கில் பெரிய துறவற இல்லம் ஒன்றை எழுப்பினார். அங்கு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தனித்து செயல்படும் நிறுவனங்கள் பலவற்றையும் நிறுவினார்.
சிறப்பாக இவர் தாய்நாட்டை விட்டுவிட்டு நில புலன்களை இழந்து உறவென்று சொல்ல யாருமின்றிருந்த மக்களை தன் இதயத்தில் சுமந்து, அம்மக்களுக்கென்று தனி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். இதனால் அந்நாட்டு மக்கள் பலர் இவரின் நற்பணிகளுக்கு உதவ முன் வந்தனர். பின்னர் அவ்வுதவியாளர்கள் பலரின் நட்பைக்கொண்டு, மீண்டும் சிகாகோவில் சபை ஒன்றை நிறுவினார். தற்போது இத்துறவற இல்லமே, அச்சபையின் தலைமையகமாக Generalate செயல்பட்டு வருகின்றது. அதன்பிறகு இச்சபையின் பணிகளால் பல இளம் பெண்கள் கவரப்பட்டு அச்சபைக்கு வந்து சேர்ந்தனர்.
பிரான்சிஸ்கா சவேரியா அத்துறவற மடத்தில் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்தார். ஒருநாளில் 20 மணிநேரம் இயேசுவின் நற்செய்திப்பணியை ஆற்றினார். மீதமுள்ள நேரங்களில் திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து நற்கருணை நாதரிடம் செபித்து வந்தார். இதன் பயனாக ஏராளமான பணிகளைச் செய்தார்.
செபம்:
எல்லோர்க்கும் எல்லாமுமானவரே! உம்மிடமிருந்து சக்தியை பெற்று, பல பணிகளை ஆற்றி முழுமையாக உம் நற்செய்திப் பணியில் பங்குகொண்ட புனித பிரான்சிஸ்கா சவேரியாவை நீர் இவ்வுலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகின்றோம். அவரின் அருட்துணையால் அச்சபைத் துறவிகள் மேன்மேலும் வளர்ந்து உம்மை போற்றிப் புகழ்ந்து வாழ வரமருளும்.
Back to top
புனித பிரான்சிஸ்கா சவேரியா கப்ரீனி
St.Franziska Xaviera Cabrini
நினைவுத்திருநாள் : டிசம்பர் 22
பிறப்பு : 15 ஜூலை 1850, சான் ஆஞ்சலோ லோடிகியனோ Sant Angelo Lodigiano, இத்தாலி
இறப்பு : 22 டிசம்பர் 1917, சிகாகோ
முத்திபேறுபட்டம்: 1938
புனிதர்பட்டம்: 7 ஜூலை 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
பாதுகாவல்: வீட்டு வேலை செய்பவர்கள்
இவர் தனது 24 ஆம் வயதிலேயே பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். நோயாளிகளை கவனித்து வந்துள்ளார். பெற்றோரை இழந்த பிள்ளைகளை பராமரித்து வளர்த்துள்ளார். வழிதவறி அலைந்த இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியுள்ளார். விதவை பெண்களை ஒன்று சேர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியுள்ளார். இவ்வாறு பல பணிகளை செய்த இவர் நீண்ட நாள் தன் மனதில் இருந்த சபை ஒன்றை நிறுவும் ஆசையையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இறுதியாக 1880 ஆம் ஆண்டு புனித இதயத்தின் மறைப்பணியாளர்கள் Missionarinnen vom Heiligsten Herzen என்ற சபையை நிறுவினார். இவரே அச்சபையின் முதல் சபைத்தலைவியாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.
இவர் இச்சபையை துவங்கிய ஒரு வருடம் கழித்து, திருத்தந்தை 13 ஆம் லியோ துறவற சபை என்று அறிவித்து, அங்கீகாரம் அளித்தார். மிகப் புகழ் வாய்ந்த மறைப்பரப்பாளர் புனித பிரான்சிஸ் சவேரியாவின் பெயரையும் தன் சபையின் துணைப் பெயராக வைத்தார். இவர் சபையை தொடங்கியப்பின்பும், சபை தனித்து இயங்குவதற்கு தேவையான சில பணிகளை நிறைவேற்றாமல் இருந்தார். இருப்பினும் அமெரிக்கா சென்று1888 ல் நியூயார்க்கில் பெரிய துறவற இல்லம் ஒன்றை எழுப்பினார். அங்கு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தனித்து செயல்படும் நிறுவனங்கள் பலவற்றையும் நிறுவினார்.
சிறப்பாக இவர் தாய்நாட்டை விட்டுவிட்டு நில புலன்களை இழந்து உறவென்று சொல்ல யாருமின்றிருந்த மக்களை தன் இதயத்தில் சுமந்து, அம்மக்களுக்கென்று தனி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். இதனால் அந்நாட்டு மக்கள் பலர் இவரின் நற்பணிகளுக்கு உதவ முன் வந்தனர். பின்னர் அவ்வுதவியாளர்கள் பலரின் நட்பைக்கொண்டு, மீண்டும் சிகாகோவில் சபை ஒன்றை நிறுவினார். தற்போது இத்துறவற இல்லமே, அச்சபையின் தலைமையகமாக Generalate செயல்பட்டு வருகின்றது. அதன்பிறகு இச்சபையின் பணிகளால் பல இளம் பெண்கள் கவரப்பட்டு அச்சபைக்கு வந்து சேர்ந்தனர்.
பிரான்சிஸ்கா சவேரியா அத்துறவற மடத்தில் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்தார். ஒருநாளில் 20 மணிநேரம் இயேசுவின் நற்செய்திப்பணியை ஆற்றினார். மீதமுள்ள நேரங்களில் திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து நற்கருணை நாதரிடம் செபித்து வந்தார். இதன் பயனாக ஏராளமான பணிகளைச் செய்தார்.
செபம்:
எல்லோர்க்கும் எல்லாமுமானவரே! உம்மிடமிருந்து சக்தியை பெற்று, பல பணிகளை ஆற்றி முழுமையாக உம் நற்செய்திப் பணியில் பங்குகொண்ட புனித பிரான்சிஸ்கா சவேரியாவை நீர் இவ்வுலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகின்றோம். அவரின் அருட்துணையால் அச்சபைத் துறவிகள் மேன்மேலும் வளர்ந்து உம்மை போற்றிப் புகழ்ந்து வாழ வரமருளும்.
Back to top
டிசம்பர் 23
புனித ஆஞ்சலா அவுட்ஷ் (துறவி)
St. Angela Autsch
நினைவுத்திருநாள் : டிசம்பர் 23
பிறப்பு : 26 மார்ச் 1900, ரோலக்கன் Röllecken, ஜெர்மனி
இறப்பு : 23 டிசம்பர் 1944, அவுஷ்விட்ஸ் வதை முகாம் Auschwitz, போலந்து
இவர் 27 செப்டம்பர் 1933 ஆம் ஆண்டு தமத்திருத்துவ சபையில் சேர்ந்தார். தனது துறவற வாழ்விற்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளைப் பெற்று 28 செப்டம்பர் 1938 ஆம் ஆண்டு தனது நிரந்தர வார்த்தைப்பாடுகளை பெற்று துறவியானார். திரு இருதய இயேசுவின் ஆஞ்சலா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். இவர் அத்துறவற சபையில் இருந்த வயது முதிர்ந்த துறவிகளை கவனித்துக் கொண்டும் இன்னும் பணிகளில் உதவி தேவைப்படுவோர்க்கும் உடனடியாக சென்று உதவி செய்தும் வந்தார். இவர் ஹிட்லரின் நாசிக்கொள்கையை கடைபிடிக்கும்படி வற்புறுத்தப்பட்டார். ஹிட்லர் தோழர்கள் சிலரால் 12ஆகஸ்ட் 1940 ஆம் ஆண்டு கைதியாகப்பிடிக்கப்பட்டார். பிறகு ராவென்ஸ்பூர்க் Ravensbrück என்ற நகருக்கு நாடு கடத்தப்பட்டது.
இவர் வதைமுகாமில் இருந்தபோதும் கூட தன்னுடன் இருந்தவர்களுக்கு இயேசுவின் பெயரால் உதவினார். இறை நம்பிக்கையிலிருந்து சிறிதும் தளராமல் நாளுக்குநாள் விசுவாசத்தில் வளர்ந்துக்கொண்டே சென்றார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அவரின் துறவற மடத்திற்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டார். பின்னர் மீண்டும் அவுட்ஷ் Autsch என்ற நகருக்கு பிடித்து செல்லப்பட்டார். 26 மார்ச் 1942 ஆம் ஆண்டு தனது42 ஆம் ஆண்டு பிறந்தநாளை வதைமுகாமில் சிறப்பித்தார்.
அதன்பிறகு அங்கேயே உணவு தயாரிப்பதற்கும் துணிகளையும் துவைப்பதற்கும் வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்றார். இவர் தன்னுடன் இருந்த பெண்களுக்கு தன்னால் இயன்ற வரை பலவிதமான உதவிகளை செய்தார். பெண்கள் குளிப்பதற்கான சோப்பையும், சூடான நீரையும் தயாரித்துக்கொடுத்து உதவினார். பசியில் வாடியோர்க்கும் போதுமான உணவை எவரும் அறியாதவண்ணம் கொடுத்து பசியாற்றினார். அதேப்போல் ஹிட்லருக்கு தெரியாமல் உடைகளை சேகரித்து தந்தார். நோயுற்றிருந்த மக்களை வேலை செய்ய விடாமல் தானே அனைத்து பணிகளையும் செய்து நோயாளிகளை காத்தார். இதனால் தான் சிறிதும் ஓய்வு எடுக்காமல் எப்போதும் மற்றவர்களின் நலனையே கருத்தாக கொண்டார்.
இவர் வதைமுகாமில் ஹிட்லரின் பிடியிலிருந்து அனைத்து மக்களாலும் அனைவரையும் காக்க வந்த ஏஞ்சல்(Angel) என்றே புகழப்பட்டார். எப்போதும் புன்முறுவலுடன் உடனிருந்தவர்களின் துன்பங்களைப் போக்கினார். இவ்வாறு எல்லோரின் இதயங்களிலும் இடம்பிடித்த ஏஞ்சல் குண்டுமழை வீசப்பட்டதில் சிக்கி இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
உயிருள்ள இறைவா! நீர் இவ்வுலகில் வாழ்கின்றீர் என்பதை துறவி ஆஞ்சலாவின் வழியாக வெளிப்படுத்தினீர். இத்துறவின் கள்ளங்கபடமற்ற தாராள மனதினை நாங்களும் பெற்று எங்களை சுற்றி உள்ளவர்களுக்கு மனமுவந்து உதவி என்றென்றும் உம்மை இவ்வுலகில் நிலைநாட்டி உம் துணையுடன் செயல்பட உமதருள் தந்திடுமாறு தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
புனித ஆஞ்சலா அவுட்ஷ் (துறவி)
St. Angela Autsch
நினைவுத்திருநாள் : டிசம்பர் 23
பிறப்பு : 26 மார்ச் 1900, ரோலக்கன் Röllecken, ஜெர்மனி
இறப்பு : 23 டிசம்பர் 1944, அவுஷ்விட்ஸ் வதை முகாம் Auschwitz, போலந்து
இவர் 27 செப்டம்பர் 1933 ஆம் ஆண்டு தமத்திருத்துவ சபையில் சேர்ந்தார். தனது துறவற வாழ்விற்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளைப் பெற்று 28 செப்டம்பர் 1938 ஆம் ஆண்டு தனது நிரந்தர வார்த்தைப்பாடுகளை பெற்று துறவியானார். திரு இருதய இயேசுவின் ஆஞ்சலா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். இவர் அத்துறவற சபையில் இருந்த வயது முதிர்ந்த துறவிகளை கவனித்துக் கொண்டும் இன்னும் பணிகளில் உதவி தேவைப்படுவோர்க்கும் உடனடியாக சென்று உதவி செய்தும் வந்தார். இவர் ஹிட்லரின் நாசிக்கொள்கையை கடைபிடிக்கும்படி வற்புறுத்தப்பட்டார். ஹிட்லர் தோழர்கள் சிலரால் 12ஆகஸ்ட் 1940 ஆம் ஆண்டு கைதியாகப்பிடிக்கப்பட்டார். பிறகு ராவென்ஸ்பூர்க் Ravensbrück என்ற நகருக்கு நாடு கடத்தப்பட்டது.
இவர் வதைமுகாமில் இருந்தபோதும் கூட தன்னுடன் இருந்தவர்களுக்கு இயேசுவின் பெயரால் உதவினார். இறை நம்பிக்கையிலிருந்து சிறிதும் தளராமல் நாளுக்குநாள் விசுவாசத்தில் வளர்ந்துக்கொண்டே சென்றார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அவரின் துறவற மடத்திற்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டார். பின்னர் மீண்டும் அவுட்ஷ் Autsch என்ற நகருக்கு பிடித்து செல்லப்பட்டார். 26 மார்ச் 1942 ஆம் ஆண்டு தனது42 ஆம் ஆண்டு பிறந்தநாளை வதைமுகாமில் சிறப்பித்தார்.
அதன்பிறகு அங்கேயே உணவு தயாரிப்பதற்கும் துணிகளையும் துவைப்பதற்கும் வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்றார். இவர் தன்னுடன் இருந்த பெண்களுக்கு தன்னால் இயன்ற வரை பலவிதமான உதவிகளை செய்தார். பெண்கள் குளிப்பதற்கான சோப்பையும், சூடான நீரையும் தயாரித்துக்கொடுத்து உதவினார். பசியில் வாடியோர்க்கும் போதுமான உணவை எவரும் அறியாதவண்ணம் கொடுத்து பசியாற்றினார். அதேப்போல் ஹிட்லருக்கு தெரியாமல் உடைகளை சேகரித்து தந்தார். நோயுற்றிருந்த மக்களை வேலை செய்ய விடாமல் தானே அனைத்து பணிகளையும் செய்து நோயாளிகளை காத்தார். இதனால் தான் சிறிதும் ஓய்வு எடுக்காமல் எப்போதும் மற்றவர்களின் நலனையே கருத்தாக கொண்டார்.
இவர் வதைமுகாமில் ஹிட்லரின் பிடியிலிருந்து அனைத்து மக்களாலும் அனைவரையும் காக்க வந்த ஏஞ்சல்(Angel) என்றே புகழப்பட்டார். எப்போதும் புன்முறுவலுடன் உடனிருந்தவர்களின் துன்பங்களைப் போக்கினார். இவ்வாறு எல்லோரின் இதயங்களிலும் இடம்பிடித்த ஏஞ்சல் குண்டுமழை வீசப்பட்டதில் சிக்கி இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
உயிருள்ள இறைவா! நீர் இவ்வுலகில் வாழ்கின்றீர் என்பதை துறவி ஆஞ்சலாவின் வழியாக வெளிப்படுத்தினீர். இத்துறவின் கள்ளங்கபடமற்ற தாராள மனதினை நாங்களும் பெற்று எங்களை சுற்றி உள்ளவர்களுக்கு மனமுவந்து உதவி என்றென்றும் உம்மை இவ்வுலகில் நிலைநாட்டி உம் துணையுடன் செயல்பட உமதருள் தந்திடுமாறு தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
டிசம்பர் 24
சபை நிறுவுனர் பவுலா எலிசபெத்து செரியோலி Paula Elisabeth Cerioli
பிறப்பு
16 ஜனவரி 1816,
சோன்சினோ Soncino, இத்தாலி
இறப்பு
24 டிசம்பர் 1865,
கோமோண்டேComonte, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 19 மார்ச் 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
இவர் ஓர் புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்தார். 20 ஆம் வயதில் பணக்காரரின் மகன் ஒருவரை திருமனம் செய்தார். பிறகு மூன்று குழந்தைகளுக்கு தாயாரானார். ஆனால் குழந்தைகள் ஒவ்வொன்றும் பிறந்த உடனேயே மரணத்தைத் தழுவியது, அதன்பிறகு இவரின் கணவரும் தீவிர நோயால் தாக்கப்பட்டு இறந்து போனார். இதனால் தன் உடமைகளில் பாதியை தன்னுடைய உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். மீதமிருந்தவற்றைக் கொண்டு 1856 ஆம் ஆண்டில் அனாதை மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கென்று ஓர் சபையை உருவாக்கினார்.
இவர் அச்சபையின் முதல் சபைத்தலைவியாக இருந்து வழிநடத்தினார். அச்சபை ஊரைவிட்டு தள்ளி வெளிப்புறமாக மிகுந்த இயற்கை வளத்தோடு இருந்ததால் குழந்தைகள் பள்ளி செல்ல இயலாமல் இருந்தது. இருப்பினும் அங்கேயே பள்ளிக்கூடம் ஒன்றையும் நிறுவி, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் கல்விக்கற்க வைத்தார். இவர் தொடங்கிய அச்சபை திருக்குடும்ப சகோதர சகோதரர்கள் Schwestern und Brüdern von der Heiligen Familie என்று பெயரிடப்பட்டு, 1901 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
செபம்:
தாவீதின் குமாரனே எம் இயேசுவே! நீர் குழந்தைகளை நேசித்ததுபோல, பவுலா எலிசபெத்துக்கும் அவ்வுணர்வுகளை கொடுத்துள்ளீர். இவ்வுலகில் நடக்கும் அநீதிகள் அனைத்திலும் பெருமளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதை நன்கு அறிவீர். குழந்தைகளுக்கெதிராக செயல்படும் அனைத்து அநீதிகளையும் நீர் தயைகூர்ந்து அகற்றி விடுதலைத் தாரும். ஒவ்வொருவரும் குழந்தைகளின் நலனில் அக்கறைக்கொண்டு செயல்பட்டு, அவர்களின் வழியாக உமது இறையாட்சியை இம்மண்ணில் விதைத்திட ஆசீர் வழங்கி காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
சபை நிறுவுனர் பவுலா எலிசபெத்து செரியோலி Paula Elisabeth Cerioli
பிறப்பு
16 ஜனவரி 1816,
சோன்சினோ Soncino, இத்தாலி
இறப்பு
24 டிசம்பர் 1865,
கோமோண்டேComonte, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 19 மார்ச் 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
இவர் ஓர் புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்தார். 20 ஆம் வயதில் பணக்காரரின் மகன் ஒருவரை திருமனம் செய்தார். பிறகு மூன்று குழந்தைகளுக்கு தாயாரானார். ஆனால் குழந்தைகள் ஒவ்வொன்றும் பிறந்த உடனேயே மரணத்தைத் தழுவியது, அதன்பிறகு இவரின் கணவரும் தீவிர நோயால் தாக்கப்பட்டு இறந்து போனார். இதனால் தன் உடமைகளில் பாதியை தன்னுடைய உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். மீதமிருந்தவற்றைக் கொண்டு 1856 ஆம் ஆண்டில் அனாதை மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கென்று ஓர் சபையை உருவாக்கினார்.
இவர் அச்சபையின் முதல் சபைத்தலைவியாக இருந்து வழிநடத்தினார். அச்சபை ஊரைவிட்டு தள்ளி வெளிப்புறமாக மிகுந்த இயற்கை வளத்தோடு இருந்ததால் குழந்தைகள் பள்ளி செல்ல இயலாமல் இருந்தது. இருப்பினும் அங்கேயே பள்ளிக்கூடம் ஒன்றையும் நிறுவி, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் கல்விக்கற்க வைத்தார். இவர் தொடங்கிய அச்சபை திருக்குடும்ப சகோதர சகோதரர்கள் Schwestern und Brüdern von der Heiligen Familie என்று பெயரிடப்பட்டு, 1901 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
செபம்:
தாவீதின் குமாரனே எம் இயேசுவே! நீர் குழந்தைகளை நேசித்ததுபோல, பவுலா எலிசபெத்துக்கும் அவ்வுணர்வுகளை கொடுத்துள்ளீர். இவ்வுலகில் நடக்கும் அநீதிகள் அனைத்திலும் பெருமளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதை நன்கு அறிவீர். குழந்தைகளுக்கெதிராக செயல்படும் அனைத்து அநீதிகளையும் நீர் தயைகூர்ந்து அகற்றி விடுதலைத் தாரும். ஒவ்வொருவரும் குழந்தைகளின் நலனில் அக்கறைக்கொண்டு செயல்பட்டு, அவர்களின் வழியாக உமது இறையாட்சியை இம்மண்ணில் விதைத்திட ஆசீர் வழங்கி காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 25
சிர்மியும் மறைசாட்சி அனஸ்தாஸியா Anastasia von Sirmium
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு,
உரோம், இத்தாலி
இறப்பு
304,
சிர்மியும் Sirmium, குரோஷியா Kroatien
பாதுகாவல்: தலைவலி, மார்பு நோயிலிருந்து
இவர் ஓர் மதிப்புமிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து விரைவில் தன் கணவரை இழந்தவர். கணவரின் இறப்பிற்கு பின் நரக வாழ்வை சந்தித்தார். பின்னர் இவர் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்ததால் பகைவர்கள் பெருகினர். இவர் அப்பகைவர்களால் சிறைபிடித்து செல்லப்பட்டார். சிறையிலும் மிகவும் கொடுமையாக நடத்தப்பட்டார். பலமுறை தீய ஆவியின் செயல்களுக்குட்படுத்தப்பட்டார்.
இவரை அரசன் தியோக்ளேசியன் Diokletians தன் பிடியில் வைத்து, கிறிஸ்துவை பின்பற்றக்கூடாது என்று கட்டளையிட்டான். அதனை எதிர்த்து கிறிஸ்துவை மட்டுமே தன் வாழ்வு என்று உரக்கக்கூறி, இடைவிடாமல் செபித்து வந்தார். இதனால் சினம் கொண்ட அரசன் இவரை உயிருடன் கொல்ல ஆணையிட்டான். இதனால் அனஸ்தாஸியாவை அரச படைவீரர்கள் வெடிமருந்தை வைத்து அவரை சுற்றி வெடிக்க வைத்து அவரையும் கொன்றனர்.
செபம்:
கருணையும் இரக்கமும் நிறைந்த எம் இறைவா! பணத்திற்காக கொடியவர்களால் சிறைபிடிக்கப்பட்டு, உம்மை பற்றிக்கொண்டதற்காக உயிருடன் கொல்லப்பட்ட அனஸ்தாசியாவை நினைவுகூறும் இந்நாளில் அவரின் நாமத்தை தாங்கி நாம விழாவைக் கொண்டாடும் உள்ளங்களை ஆசீர்வதியும். நல்ல உடல், உள்ள ஆன்ம நலன்களை தந்து அபரிவிதமாக உம் ஆசீரை பொழிந்து என்றும் உம் சிறகுகளின் நிழலில் வைத்துக் காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
சிர்மியும் மறைசாட்சி அனஸ்தாஸியா Anastasia von Sirmium
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு,
உரோம், இத்தாலி
இறப்பு
304,
சிர்மியும் Sirmium, குரோஷியா Kroatien
பாதுகாவல்: தலைவலி, மார்பு நோயிலிருந்து
இவர் ஓர் மதிப்புமிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து விரைவில் தன் கணவரை இழந்தவர். கணவரின் இறப்பிற்கு பின் நரக வாழ்வை சந்தித்தார். பின்னர் இவர் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்ததால் பகைவர்கள் பெருகினர். இவர் அப்பகைவர்களால் சிறைபிடித்து செல்லப்பட்டார். சிறையிலும் மிகவும் கொடுமையாக நடத்தப்பட்டார். பலமுறை தீய ஆவியின் செயல்களுக்குட்படுத்தப்பட்டார்.
இவரை அரசன் தியோக்ளேசியன் Diokletians தன் பிடியில் வைத்து, கிறிஸ்துவை பின்பற்றக்கூடாது என்று கட்டளையிட்டான். அதனை எதிர்த்து கிறிஸ்துவை மட்டுமே தன் வாழ்வு என்று உரக்கக்கூறி, இடைவிடாமல் செபித்து வந்தார். இதனால் சினம் கொண்ட அரசன் இவரை உயிருடன் கொல்ல ஆணையிட்டான். இதனால் அனஸ்தாஸியாவை அரச படைவீரர்கள் வெடிமருந்தை வைத்து அவரை சுற்றி வெடிக்க வைத்து அவரையும் கொன்றனர்.
செபம்:
கருணையும் இரக்கமும் நிறைந்த எம் இறைவா! பணத்திற்காக கொடியவர்களால் சிறைபிடிக்கப்பட்டு, உம்மை பற்றிக்கொண்டதற்காக உயிருடன் கொல்லப்பட்ட அனஸ்தாசியாவை நினைவுகூறும் இந்நாளில் அவரின் நாமத்தை தாங்கி நாம விழாவைக் கொண்டாடும் உள்ளங்களை ஆசீர்வதியும். நல்ல உடல், உள்ள ஆன்ம நலன்களை தந்து அபரிவிதமாக உம் ஆசீரை பொழிந்து என்றும் உம் சிறகுகளின் நிழலில் வைத்துக் காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 26
முதல் மறைசாட்சி புனித ஸ்டீபன் (ஸ்தேவான்) Stephen
பிறப்பு
எருசலேம்
இறப்பு
40(?),
எருசலேம்
பாதுகாவல்: குதிரைகள், குதிரை சவாரி பயிற்சியாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள், வீட்டு வேலை செய்வோர், நல்ல மரணம்
ஸ்டீபன் என்ற பெயரின் பொருள் கிரீடம் என்பதாகும். இவர் ஆதிகால திருச்சபையில் திருத்தொண்டராக இருந்தவர். இவர் ஏழைகள், தேவையில் இருப்போர், விதவைகள் அனைவருக்கும் உதவி செய்யும் திருத்தூதுவப் பணியை ஆற்றியுள்ளார். இவர் ஏழு புகழ்வாய்ந்த அப்போஸ்தல பணி செய்தவர்களில் மிகப்புகழ் வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றுள்ளார். இவர் மிக அற்புதமான முறையில் பணியாற்றி இயேசுவைப்பற்றி பறைசாற்றியுள்ளார். இவரின் ஞானமிக்க பணியை கண்டவர்கள் திருச்சபைக்கும் இவருக்கும் எதிராக செயல்பட்டனர். எதிரிகள் ஸ்டீபனிற்கு எதிராக பல சதி திட்டங்களை தீட்டினர்.
அவர் கடவுளுக்கு எதிராக பேசினார் எனவும் பொய் கூறினார் எனவும், எதிரிகளால் குற்றம் சாட்டப்பட்டார். இதனால் எதிரிகளால் நீதிமன்ற கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பயமின்றி மிக தைரியத்துடன் உண்மையையும் இறைவாக்கையும் அக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். இயேசுவை கடவுளின் இறைமகன் என்றும், அவரே விடுதலை வாழ்வு வழங்குபவர் என்ற உண்மையும் எடுத்துக் கூறினார். இதனால் எதிரிகள் கோபத்தால் வெகுண்டெழுந்தனர். இருப்பினும் எதிரிகளைப் பற்றி நேருக்கு நேராக ஸ்டீபன் எதிர்கொண்டார். வானத்தை ஸ்டீபன் அண்ணாந்துப்பார்த்து வானம் திறந்திருப்பதையும் இறைமகன் இயேசு கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும் காண்கிறேன் என்று கூறினார். இவ்வார்த்தைகள் அனைத்தையும் காதுகளில் வாங்க மறுத்த எதிரிகள் அவரை எருசலேம் நகரின் வெளிப்புறத்திற்கு கொண்டு சென்று கற்களால் எரிந்து கொன்றனர். பின்னர் ஸ்டீபன் முழந்தாள்படியிட்டு " ஆண்டவராகிய கடவுளே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும், என்னை கொன்ற இவ்வெதிரிகளை தண்டியாமல் மன்னியும்" என்று அக்கொடியவர்களுக்காக பரிந்து பேசி தன் உயிரை ஈந்தார்.
செபம்:
தாராள மனம் கொண்டவரே! தன்னை துன்புறுத்தியவர்களுக்காகவும் மன்றாடின புனித ஸ்டீபனின் மன்னிக்கும் மனதை நினைத்து உம் திருமுன் தலைகுனிந்து உம்மை வணங்கி போற்றுகின்றோம். இறைவா நீர் கற்றுக்கொடுத்த மன்னிப்பு என்னும் குணத்தை நாங்கள் பெற்று ஒருவரையொருவர் மனதார மன்னித்து அன்பு செய்து சகோதர சகோதரிகளாக வாழ்ந்து, உம்மோடு வந்து சேர அருள் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்
Back to top
முதல் மறைசாட்சி புனித ஸ்டீபன் (ஸ்தேவான்) Stephen
பிறப்பு
எருசலேம்
இறப்பு
40(?),
எருசலேம்
பாதுகாவல்: குதிரைகள், குதிரை சவாரி பயிற்சியாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள், வீட்டு வேலை செய்வோர், நல்ல மரணம்
ஸ்டீபன் என்ற பெயரின் பொருள் கிரீடம் என்பதாகும். இவர் ஆதிகால திருச்சபையில் திருத்தொண்டராக இருந்தவர். இவர் ஏழைகள், தேவையில் இருப்போர், விதவைகள் அனைவருக்கும் உதவி செய்யும் திருத்தூதுவப் பணியை ஆற்றியுள்ளார். இவர் ஏழு புகழ்வாய்ந்த அப்போஸ்தல பணி செய்தவர்களில் மிகப்புகழ் வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றுள்ளார். இவர் மிக அற்புதமான முறையில் பணியாற்றி இயேசுவைப்பற்றி பறைசாற்றியுள்ளார். இவரின் ஞானமிக்க பணியை கண்டவர்கள் திருச்சபைக்கும் இவருக்கும் எதிராக செயல்பட்டனர். எதிரிகள் ஸ்டீபனிற்கு எதிராக பல சதி திட்டங்களை தீட்டினர்.
அவர் கடவுளுக்கு எதிராக பேசினார் எனவும் பொய் கூறினார் எனவும், எதிரிகளால் குற்றம் சாட்டப்பட்டார். இதனால் எதிரிகளால் நீதிமன்ற கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பயமின்றி மிக தைரியத்துடன் உண்மையையும் இறைவாக்கையும் அக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். இயேசுவை கடவுளின் இறைமகன் என்றும், அவரே விடுதலை வாழ்வு வழங்குபவர் என்ற உண்மையும் எடுத்துக் கூறினார். இதனால் எதிரிகள் கோபத்தால் வெகுண்டெழுந்தனர். இருப்பினும் எதிரிகளைப் பற்றி நேருக்கு நேராக ஸ்டீபன் எதிர்கொண்டார். வானத்தை ஸ்டீபன் அண்ணாந்துப்பார்த்து வானம் திறந்திருப்பதையும் இறைமகன் இயேசு கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும் காண்கிறேன் என்று கூறினார். இவ்வார்த்தைகள் அனைத்தையும் காதுகளில் வாங்க மறுத்த எதிரிகள் அவரை எருசலேம் நகரின் வெளிப்புறத்திற்கு கொண்டு சென்று கற்களால் எரிந்து கொன்றனர். பின்னர் ஸ்டீபன் முழந்தாள்படியிட்டு " ஆண்டவராகிய கடவுளே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும், என்னை கொன்ற இவ்வெதிரிகளை தண்டியாமல் மன்னியும்" என்று அக்கொடியவர்களுக்காக பரிந்து பேசி தன் உயிரை ஈந்தார்.
செபம்:
தாராள மனம் கொண்டவரே! தன்னை துன்புறுத்தியவர்களுக்காகவும் மன்றாடின புனித ஸ்டீபனின் மன்னிக்கும் மனதை நினைத்து உம் திருமுன் தலைகுனிந்து உம்மை வணங்கி போற்றுகின்றோம். இறைவா நீர் கற்றுக்கொடுத்த மன்னிப்பு என்னும் குணத்தை நாங்கள் பெற்று ஒருவரையொருவர் மனதார மன்னித்து அன்பு செய்து சகோதர சகோதரிகளாக வாழ்ந்து, உம்மோடு வந்து சேர அருள் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்
Back to top
டிசம்பர் 27
அப்போஸ்தலர், நற்செய்தியாளர் யோவான் Apostel Johannes, Evangelist
பிறப்பு
முதல் நூற்றாண்டு,
பெத்சாயிதா Bethsaida
இறப்பு
101,
எபேசு Ephesus, துருக்கி
பாதுகாவல்: இறையியலாளர்கள், எழுத்தாளர்கள், நூலகங்கள், அச்சகத்தார், வலிப்பு நோயிலிருந்து
இவர் செபதேயுவின் மகன். சலோமி என்பவர் இவரின் தாய். இவர்கள் கலிலேயா கடற்கரையில் வாழ்ந்தார்கள். இவர் தன் பெற்றோரால் வறுமை தெரியாத அளவிற்கு வளர்க்கப்பட்டார். இவரும் சகோதரர் ஜேம்சும் James, ஜோர்டான் Jordan நதியில் திருமுழுக்கு கொடுத்து, இயேசுவைப்பற்றி பறைசாற்றிக் கொண்டிருக்கும்போது, இயேசு அப்பக்கமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அதை கூர்ந்து கவனித்து "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். சீடர்கள் இருவரும் இயேசுவை பின் தொடர்ந்தனர். இயேசு அவர்களை திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மை பின்தொடர்வதைக்கண்டு, என்ன தேடுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ரபி, நீர் எங்கே தங்கி இருக்கிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் "வந்து பாருங்கள்" என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப்பார்த்து அவரோடு தங்கியிருந்தனர்.
யோவான், இயேசு சென்ற இடமெல்லாம் தானும் உடன் சென்றார். இயேசுவிடமிருந்து நோய்களை குணமாக்கும் வல்லமையை பெற்றார். நாளடைவில் இயேசுவின் அன்பு நண்பரானார். இவர் இயேசுவோடு கெத்சமனி தோட்டத்திலும் உடனிருந்தார். பின்னர் இயேசுவின் சாவின்போது அவரின் தாயை தன் தாயாக ஏற்கும் பேற்றை பெற்றார். இயேசு உயிர்த்தெழுந்து கலிலேயா கடற்கரைகளுக்கு சென்று உரையாடியபோது, முதலில் யோவான்தான் இயேசுவை அடையாளம் கண்டார்.
இவர் தனது 69 ஆம் வயதில் எபேசு நகர் சென்று அனைத்து ஆலயங்களையும் கண்காணித்து வந்துள்ளார். 95 ஆம் வயதில் அரசன் தொமிசியன் Domitian என்பவரால் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்ததற்காக பிடிக்கப்பட்டார். அவ்வரசன் அவரை கொதிக்கும் எண்ணெய் பானைக்குள் விட்டு வதைத்துள்ளான். இருப்பினும் யோவான் தன் விசுவாசத்திலிருந்து சிறிதும் மனந்தளரவில்லை, இறக்கவுமில்லை. இதனால் அரசன் பயமுற்று கிரேக்க நாட்டு பாட்மோஸ் Patmos என்ற நதியோரத்திற்கு அழைத்துச் சென்று சுட்டெரித்தான். ஆனால் யோவானின் இறைவிசுவாசம் அவரை அழிக்கவிடவில்லை. பின்னர் எபேசு நகரத்திற்கு திரும்பி அழைத்துவரப்பட்டார். அரசன் தொமிசியனின் இறப்பிற்கு பிறகு யோவான் எபேசு முழுவதும் நற்செய்தியை பறைசாற்றி அதை எழுதினார். அதன்பின் தனது முதிர்ந்த வயதில் இறந்தார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! திருத்தூதரான புனித யோவான் வழியாக உம்முடைய வார்த்தையின் ஆழ்ந்த மறையுண்மைகளை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினீர். இவர் எமக்கு சிறந்த முறையில் போதித்த உண்மைகளை நாங்கள் போதிய அறிவுத்திறனுடன் புரிந்துகொண்டு உம் வழியில் எம் வாழ்வை வாழச் செய்தருளும்.
Back to top
அப்போஸ்தலர், நற்செய்தியாளர் யோவான் Apostel Johannes, Evangelist
பிறப்பு
முதல் நூற்றாண்டு,
பெத்சாயிதா Bethsaida
இறப்பு
101,
எபேசு Ephesus, துருக்கி
பாதுகாவல்: இறையியலாளர்கள், எழுத்தாளர்கள், நூலகங்கள், அச்சகத்தார், வலிப்பு நோயிலிருந்து
இவர் செபதேயுவின் மகன். சலோமி என்பவர் இவரின் தாய். இவர்கள் கலிலேயா கடற்கரையில் வாழ்ந்தார்கள். இவர் தன் பெற்றோரால் வறுமை தெரியாத அளவிற்கு வளர்க்கப்பட்டார். இவரும் சகோதரர் ஜேம்சும் James, ஜோர்டான் Jordan நதியில் திருமுழுக்கு கொடுத்து, இயேசுவைப்பற்றி பறைசாற்றிக் கொண்டிருக்கும்போது, இயேசு அப்பக்கமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அதை கூர்ந்து கவனித்து "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். சீடர்கள் இருவரும் இயேசுவை பின் தொடர்ந்தனர். இயேசு அவர்களை திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மை பின்தொடர்வதைக்கண்டு, என்ன தேடுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ரபி, நீர் எங்கே தங்கி இருக்கிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் "வந்து பாருங்கள்" என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப்பார்த்து அவரோடு தங்கியிருந்தனர்.
யோவான், இயேசு சென்ற இடமெல்லாம் தானும் உடன் சென்றார். இயேசுவிடமிருந்து நோய்களை குணமாக்கும் வல்லமையை பெற்றார். நாளடைவில் இயேசுவின் அன்பு நண்பரானார். இவர் இயேசுவோடு கெத்சமனி தோட்டத்திலும் உடனிருந்தார். பின்னர் இயேசுவின் சாவின்போது அவரின் தாயை தன் தாயாக ஏற்கும் பேற்றை பெற்றார். இயேசு உயிர்த்தெழுந்து கலிலேயா கடற்கரைகளுக்கு சென்று உரையாடியபோது, முதலில் யோவான்தான் இயேசுவை அடையாளம் கண்டார்.
இவர் தனது 69 ஆம் வயதில் எபேசு நகர் சென்று அனைத்து ஆலயங்களையும் கண்காணித்து வந்துள்ளார். 95 ஆம் வயதில் அரசன் தொமிசியன் Domitian என்பவரால் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்ததற்காக பிடிக்கப்பட்டார். அவ்வரசன் அவரை கொதிக்கும் எண்ணெய் பானைக்குள் விட்டு வதைத்துள்ளான். இருப்பினும் யோவான் தன் விசுவாசத்திலிருந்து சிறிதும் மனந்தளரவில்லை, இறக்கவுமில்லை. இதனால் அரசன் பயமுற்று கிரேக்க நாட்டு பாட்மோஸ் Patmos என்ற நதியோரத்திற்கு அழைத்துச் சென்று சுட்டெரித்தான். ஆனால் யோவானின் இறைவிசுவாசம் அவரை அழிக்கவிடவில்லை. பின்னர் எபேசு நகரத்திற்கு திரும்பி அழைத்துவரப்பட்டார். அரசன் தொமிசியனின் இறப்பிற்கு பிறகு யோவான் எபேசு முழுவதும் நற்செய்தியை பறைசாற்றி அதை எழுதினார். அதன்பின் தனது முதிர்ந்த வயதில் இறந்தார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! திருத்தூதரான புனித யோவான் வழியாக உம்முடைய வார்த்தையின் ஆழ்ந்த மறையுண்மைகளை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினீர். இவர் எமக்கு சிறந்த முறையில் போதித்த உண்மைகளை நாங்கள் போதிய அறிவுத்திறனுடன் புரிந்துகொண்டு உம் வழியில் எம் வாழ்வை வாழச் செய்தருளும்.
Back to top
டிசம்பர் 28
கஸ்பார் டெல் பூஃப்லோ Kaspar del Buflo
பிறப்பு
6 ஜனவரி 1786,
உரோம், இத்தாலி
இறப்பு
28 டிசம்பர் 1837,
உரோம்
முத்திபேறுபட்டம்: 1905, திருத்தந்தை 10 ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 12 ஜூன் 1954, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
இவர் உரோம் அரசர் மாளிகையில் பிறந்தார். இவரின் தந்தை அரசர் குடும்பத்தில் சமையல் கலையை ஆற்றிவந்தார். இவரின் தாய் குழந்தைகளை கவனித்து அவர்களை சிறந்ததோர் கிறிஸ்துவ நெறியில் வளர்த்தெடுத்தார். கஸ்பார் குழந்தைப்பருவத்திலேயே நோயால் தாக்கப்பட்டார். இதனால் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதிலும், பழகுவதிலும் விருப்பமின்றி வாழ்ந்தார். ஆனால் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் உரோமில் உள்ள ஆலயங்களுக்கு சென்று செபித்து வந்தார். புனிதர்களின் படத்தை பார்க்கும்போது அவர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். இவர் புனிதர்படங்களை பார்க்கும்போது புனித அலோசியஸ் கொன்சாகா மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியாரால் ஈர்க்கப்பட்டார். அவர்களை போலவே வாழ வேண்டுமென்று விருப்பம் கொண்டார். அவர்களின் வரலாற்றைப் படித்து தன் வாழ்வை அவர்களை போலவே மாற்றினார். நாளடைவில் இவர் "சிறிய அலோசியஸ்" என்றழைக்கப்பட்டார்.
இவர் தனது கல்வியை உரோமையர்களின் அரசப்பள்ளியில் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது மிகத் திறமையுடன் முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெற்று வந்தார். அப்போது தான் ஒரு மறைபரப்பு பணியாளராக வேண்டுமென்று விரும்பினார். இதனால் பங்கு ஆலயத்திற்கு சென்று மறையுரை ஆற்றினார். இவரின் மறையுரை மக்கள் மனதில் நெருப்பு பற்றி எரிந்தது. சிறிய அலோசியஸ் அனைவரின் இதயத்தையும் இறைவன்பால் திருப்பினார். இவரின் மறையுரையை கேட்டவர்கள் எவராக இருந்தாலும் மனமாறி இறைவனை பின்செல்லாமல் போகவில்லை. அந்த அளவிற்கு வலிமையான மறையுரைகளை ஆற்றினார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இவரின் மறையுரையை எளிதாகப் புரிந்தனர். இவ்வாறு மறையுரையின் வழியாக அனைவரின் இதயங்களிலும் நீங்கா இடம்பிடித்தார்.
அச்சமயத்தில் 1808 ஆம் ஆண்டு நெப்போலியன் அதிகாரம் உரோமையில் நுழைந்தது. பிரான்சு நாட்டு அரசரால் அப்போதைய திருத்தந்தை எரித்துக்கொல்லப்பட்டார். குருக்களையும் பிடித்து சிறையிலடைத்தனர். அப்போதுதான் இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆனால் இவரும் பிரெஞ்சுக்காரர்களால் சிறைபிடித்து செல்லப்பட்டார். பின்னர் பொலோஞ்யா கொண்டுச் செல்லப்பட்டு வெடி பட்டாசின் நடுவே அமர்த்தப்பட்டு வதைக்கப்பட்டார். பிறகு 1814 ஆம் ஆண்டு நெப்போலியனிடமிருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு மறைபரப்பு பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் திருத்தந்தை அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் இத்தாலி முழுவதும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார்.
பின்னர் 1815 ஆம் ஆண்டு திருஇரத்த சபை Missionare vom Kostbaren Blut என்றதோர் சபையை நிறுவினார். இச்சபையினர் ஆரம்ப காலத்தில் மறைபரப்பு பணியையும் ஆன்மீக வழிகாட்டுதலையும் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்ப்பணிகளையும் செய்தனர். பின்னர் உரோம் திரும்பி மீண்டும் மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இறந்தபிறகு இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்தேறிய வண்ணமாக இருந்தது.
செபம்:
வரங்களை பொழிபவரே எம் இறைவா! சிறிய அலோசியஸ் என்றழைக்கப்பட்ட புனித கஸ்பாரை எம் முன்னோர்களுக்கு கொடையாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவரை போல இறைபணியில் ஆர்வம் கொண்டு செயல்பட ஒவ்வொரு மறைப்பணியாளர்களுக்கும் ஊக்கமூட்டும். சிறப்பாக குருக்களை நீர் உமது ஆவியின் வரங்களால் நிரப்பும். நீர்தாமே அவர்களின் மறையுரையின் வழியாக மக்களிடம் உம்மை அறிவிக்கச் செய்தருளும். உலக சோதனைகளிலிருந்து விடுபட்டு, உம்மை மட்டுமே பற்றிக்கொண்டு வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று, தந்தை இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.
Back to top
கஸ்பார் டெல் பூஃப்லோ Kaspar del Buflo
பிறப்பு
6 ஜனவரி 1786,
உரோம், இத்தாலி
இறப்பு
28 டிசம்பர் 1837,
உரோம்
முத்திபேறுபட்டம்: 1905, திருத்தந்தை 10 ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 12 ஜூன் 1954, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
இவர் உரோம் அரசர் மாளிகையில் பிறந்தார். இவரின் தந்தை அரசர் குடும்பத்தில் சமையல் கலையை ஆற்றிவந்தார். இவரின் தாய் குழந்தைகளை கவனித்து அவர்களை சிறந்ததோர் கிறிஸ்துவ நெறியில் வளர்த்தெடுத்தார். கஸ்பார் குழந்தைப்பருவத்திலேயே நோயால் தாக்கப்பட்டார். இதனால் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதிலும், பழகுவதிலும் விருப்பமின்றி வாழ்ந்தார். ஆனால் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் உரோமில் உள்ள ஆலயங்களுக்கு சென்று செபித்து வந்தார். புனிதர்களின் படத்தை பார்க்கும்போது அவர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். இவர் புனிதர்படங்களை பார்க்கும்போது புனித அலோசியஸ் கொன்சாகா மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியாரால் ஈர்க்கப்பட்டார். அவர்களை போலவே வாழ வேண்டுமென்று விருப்பம் கொண்டார். அவர்களின் வரலாற்றைப் படித்து தன் வாழ்வை அவர்களை போலவே மாற்றினார். நாளடைவில் இவர் "சிறிய அலோசியஸ்" என்றழைக்கப்பட்டார்.
இவர் தனது கல்வியை உரோமையர்களின் அரசப்பள்ளியில் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது மிகத் திறமையுடன் முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெற்று வந்தார். அப்போது தான் ஒரு மறைபரப்பு பணியாளராக வேண்டுமென்று விரும்பினார். இதனால் பங்கு ஆலயத்திற்கு சென்று மறையுரை ஆற்றினார். இவரின் மறையுரை மக்கள் மனதில் நெருப்பு பற்றி எரிந்தது. சிறிய அலோசியஸ் அனைவரின் இதயத்தையும் இறைவன்பால் திருப்பினார். இவரின் மறையுரையை கேட்டவர்கள் எவராக இருந்தாலும் மனமாறி இறைவனை பின்செல்லாமல் போகவில்லை. அந்த அளவிற்கு வலிமையான மறையுரைகளை ஆற்றினார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இவரின் மறையுரையை எளிதாகப் புரிந்தனர். இவ்வாறு மறையுரையின் வழியாக அனைவரின் இதயங்களிலும் நீங்கா இடம்பிடித்தார்.
அச்சமயத்தில் 1808 ஆம் ஆண்டு நெப்போலியன் அதிகாரம் உரோமையில் நுழைந்தது. பிரான்சு நாட்டு அரசரால் அப்போதைய திருத்தந்தை எரித்துக்கொல்லப்பட்டார். குருக்களையும் பிடித்து சிறையிலடைத்தனர். அப்போதுதான் இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆனால் இவரும் பிரெஞ்சுக்காரர்களால் சிறைபிடித்து செல்லப்பட்டார். பின்னர் பொலோஞ்யா கொண்டுச் செல்லப்பட்டு வெடி பட்டாசின் நடுவே அமர்த்தப்பட்டு வதைக்கப்பட்டார். பிறகு 1814 ஆம் ஆண்டு நெப்போலியனிடமிருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு மறைபரப்பு பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் திருத்தந்தை அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் இத்தாலி முழுவதும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார்.
பின்னர் 1815 ஆம் ஆண்டு திருஇரத்த சபை Missionare vom Kostbaren Blut என்றதோர் சபையை நிறுவினார். இச்சபையினர் ஆரம்ப காலத்தில் மறைபரப்பு பணியையும் ஆன்மீக வழிகாட்டுதலையும் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்ப்பணிகளையும் செய்தனர். பின்னர் உரோம் திரும்பி மீண்டும் மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இறந்தபிறகு இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்தேறிய வண்ணமாக இருந்தது.
செபம்:
வரங்களை பொழிபவரே எம் இறைவா! சிறிய அலோசியஸ் என்றழைக்கப்பட்ட புனித கஸ்பாரை எம் முன்னோர்களுக்கு கொடையாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவரை போல இறைபணியில் ஆர்வம் கொண்டு செயல்பட ஒவ்வொரு மறைப்பணியாளர்களுக்கும் ஊக்கமூட்டும். சிறப்பாக குருக்களை நீர் உமது ஆவியின் வரங்களால் நிரப்பும். நீர்தாமே அவர்களின் மறையுரையின் வழியாக மக்களிடம் உம்மை அறிவிக்கச் செய்தருளும். உலக சோதனைகளிலிருந்து விடுபட்டு, உம்மை மட்டுமே பற்றிக்கொண்டு வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று, தந்தை இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 29
பேராயர் மறைசாட்சி தோமாஸ் பெக்கெட் Thomas Becket
பிறப்பு
1118,
லண்டன், இங்கிலாந்து
இறப்பு
29 டிசம்பர் 1170,
காண்டர்பரி , இங்கிலாந்து
புனிதர்பட்டம்: 21 பிப்ரவரி 1173, திருத்தந்தை 3 ஆம் அலெக்சாண்டர்
இவர் ஓர் வியாபாரிகள் மகனாகப் பிறந்தார். பாரிஸ் மற்றும் போலோஞ்யாவில் தனது ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை பயின்றார். பின்னர் காண்டர்பரியில் தேயோபால்டு என்ற பெயர் கொண்டு பேராயர் பதவி ஏற்றார். இவரின் 37 ஆம் வயதில் அரசர் 2 ஆம் ஹைன்ரிக் Heinrich என்பவரின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். இருவருக்குமிடையே நாளடைவில் மிகுந்த நெருக்கம் உண்டானது. அரசர், அரசியல் சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு ஆயர் தோமாஸ் பெருமளவில் உதவினார். பின்பு அரசர் ஆயர் தோமாஸிடம் காண்டர்பரி நகர் முழுவதையும் கண்காணிக்கும்படி வேண்டினார். அதன்பேரில், ஆயர் கிறிஸ்துவ விசுவாசத்தை நாடு முழுவதிலும் பரப்பினார். அரசரின் உதவியுடன் நாடு முழுவதிலுமிருந்த ஏழைகளை ஒன்றாகக் கூட்டி அவர்களுடன் கலந்துரையாடி வேலை வாய்ப்பை வழங்கினார்.
இவர் ஏழை மக்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்வை முன்னேற்ற அம்மக்களை கொண்டு ஆலயங்களை எழுப்பினார். மக்கள் எவ்வித பயமின்றி சுதந்திரமாக வாழ ஏற்பாடு செய்தார். இதனால் அரசன் ஆயரின் நற்செயல்கள் பலவற்றைக் கண்டு பொறாமைக்கொண்டான். மக்கள் தனக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கமாட்டார்கள் என்று உணர்ந்தான். இதனால் ஆயரின் மேல் பொய்க்குற்றம் சுமத்தி தண்டனையாக பணம் செலுத்தும்படி கூறினான். இதனை ஆயர் மறுத்ததால் அவரை அரசன் நாடு கடத்தினான். அவரை ஆயர் பதவியிலிருந்து விலக்குவதற்கு முயன்றார். மக்கள் அரசனின் மூட செயல்களை கண்டு, அரசனுக்கெதிராக எழுந்தனர். இதனால் அரசன் கோபங்கொண்டு போர் தொடர்ந்தான். அரசன் ஆயரை நாடு கடத்தினான். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசன் ஆயரை இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு வந்து, கொலைசெய்தான். இவர் இறந்த உடனேயே மக்களால் அவர் புனிதர் என்று புகழப்பட்டார். இறந்த மூன்றே ஆண்டுகளில் ஆயர் தோமாஸ் பெக்கெட் புனிதர்பட்டம் பெற்றார். தான் இறந்த பிறகும் காண்டர்பரி நகர் மக்களுக்கு பல புதுமைகளை செய்து அவர்களை காத்து வழிநடத்தினார். இவைகளை பார்த்த அரசன் 2 ஆம் ஹைன்ரிக்கும் தன் தவற்றை உணர்ந்து மனமாறி முழுமையாக கிறிஸ்துவை பின்பற்றினான்
செபம்:
நாளும் நன்மை செய்பவரே! எம் நண்பரே! காண்டர்பரி மக்கள் விசுவாசத்தில் ஆழப்பட்டு உம்மை ஏற்றுக்கொள்ள ஆயர் தோமாசை இவ்வுலகிற்கு கொடையாக தந்தீர். அந்நகர் மக்களை தொடர்ந்து இவரின் பரிந்துரையால் காத்து வழிநடத்தி நலமான வாழ்வை வழங்கும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
பேராயர் மறைசாட்சி தோமாஸ் பெக்கெட் Thomas Becket
பிறப்பு
1118,
லண்டன், இங்கிலாந்து
இறப்பு
29 டிசம்பர் 1170,
காண்டர்பரி , இங்கிலாந்து
புனிதர்பட்டம்: 21 பிப்ரவரி 1173, திருத்தந்தை 3 ஆம் அலெக்சாண்டர்
இவர் ஓர் வியாபாரிகள் மகனாகப் பிறந்தார். பாரிஸ் மற்றும் போலோஞ்யாவில் தனது ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை பயின்றார். பின்னர் காண்டர்பரியில் தேயோபால்டு என்ற பெயர் கொண்டு பேராயர் பதவி ஏற்றார். இவரின் 37 ஆம் வயதில் அரசர் 2 ஆம் ஹைன்ரிக் Heinrich என்பவரின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். இருவருக்குமிடையே நாளடைவில் மிகுந்த நெருக்கம் உண்டானது. அரசர், அரசியல் சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு ஆயர் தோமாஸ் பெருமளவில் உதவினார். பின்பு அரசர் ஆயர் தோமாஸிடம் காண்டர்பரி நகர் முழுவதையும் கண்காணிக்கும்படி வேண்டினார். அதன்பேரில், ஆயர் கிறிஸ்துவ விசுவாசத்தை நாடு முழுவதிலும் பரப்பினார். அரசரின் உதவியுடன் நாடு முழுவதிலுமிருந்த ஏழைகளை ஒன்றாகக் கூட்டி அவர்களுடன் கலந்துரையாடி வேலை வாய்ப்பை வழங்கினார்.
இவர் ஏழை மக்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்வை முன்னேற்ற அம்மக்களை கொண்டு ஆலயங்களை எழுப்பினார். மக்கள் எவ்வித பயமின்றி சுதந்திரமாக வாழ ஏற்பாடு செய்தார். இதனால் அரசன் ஆயரின் நற்செயல்கள் பலவற்றைக் கண்டு பொறாமைக்கொண்டான். மக்கள் தனக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கமாட்டார்கள் என்று உணர்ந்தான். இதனால் ஆயரின் மேல் பொய்க்குற்றம் சுமத்தி தண்டனையாக பணம் செலுத்தும்படி கூறினான். இதனை ஆயர் மறுத்ததால் அவரை அரசன் நாடு கடத்தினான். அவரை ஆயர் பதவியிலிருந்து விலக்குவதற்கு முயன்றார். மக்கள் அரசனின் மூட செயல்களை கண்டு, அரசனுக்கெதிராக எழுந்தனர். இதனால் அரசன் கோபங்கொண்டு போர் தொடர்ந்தான். அரசன் ஆயரை நாடு கடத்தினான். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசன் ஆயரை இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு வந்து, கொலைசெய்தான். இவர் இறந்த உடனேயே மக்களால் அவர் புனிதர் என்று புகழப்பட்டார். இறந்த மூன்றே ஆண்டுகளில் ஆயர் தோமாஸ் பெக்கெட் புனிதர்பட்டம் பெற்றார். தான் இறந்த பிறகும் காண்டர்பரி நகர் மக்களுக்கு பல புதுமைகளை செய்து அவர்களை காத்து வழிநடத்தினார். இவைகளை பார்த்த அரசன் 2 ஆம் ஹைன்ரிக்கும் தன் தவற்றை உணர்ந்து மனமாறி முழுமையாக கிறிஸ்துவை பின்பற்றினான்
செபம்:
நாளும் நன்மை செய்பவரே! எம் நண்பரே! காண்டர்பரி மக்கள் விசுவாசத்தில் ஆழப்பட்டு உம்மை ஏற்றுக்கொள்ள ஆயர் தோமாசை இவ்வுலகிற்கு கொடையாக தந்தீர். அந்நகர் மக்களை தொடர்ந்து இவரின் பரிந்துரையால் காத்து வழிநடத்தி நலமான வாழ்வை வழங்கும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 30
மறைசாட்சி ஸ்போலேட்டோ நகர் சபினுஸ் Sabinus von Spoleto
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு,
இத்தாலி
இறப்பு
303,
ஸ்போலேட்டோ, இத்தாலி
பாதுகாவல்: சியென்னா, அசிசி, ஃபெர்மோ Fermo
இவர் மிகச் சிறந்த முறையில் கிறிஸ்துவை பின்பற்றினார். கிறிஸ்துவை பற்றி பல நாடுகளில் போதித்தார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள அசிசி ஸ்போலேட்டோவில் ஆயராக இருந்தார் என்று கூறப்படுகின்றது. வரலாற்றில் பேசப்படும் அளவிற்கு மிகப் பெரிய அரும் பணிகளை புரிந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இவரைப்பற்றிய செய்திகள் அதிகம் அறியப்படாத நிலையில் கிறிஸ்துவை பின்பற்றியதற்காக இவர் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. ஏறக்குறைய 5 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஸ்போலேட்டோவில் பேராலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பின்னர் ராவென்னா நகரிலும் இவருக்கு பேராலயம் கட்டப்பட்டுள்ளது.
செபம்:
இயேசுவே இறைமகனே! நீர் உம் மக்களை அற்புதமான முறையில் படைத்துள்ளீர். நீர் என்றும் மாறாதவர், உம் அன்பு என்றும் மறையாதது என்பதை இன்றைய புனிதரின் வழியாக வெளிப்படுத்துகின்றீர். உம்மை நாங்கள் எங்கள் வாழ்வின் எச்சூழலிலும் ஏற்று, உமது சாட்சிகளாக வாழ வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
மறைசாட்சி ஸ்போலேட்டோ நகர் சபினுஸ் Sabinus von Spoleto
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு,
இத்தாலி
இறப்பு
303,
ஸ்போலேட்டோ, இத்தாலி
பாதுகாவல்: சியென்னா, அசிசி, ஃபெர்மோ Fermo
இவர் மிகச் சிறந்த முறையில் கிறிஸ்துவை பின்பற்றினார். கிறிஸ்துவை பற்றி பல நாடுகளில் போதித்தார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள அசிசி ஸ்போலேட்டோவில் ஆயராக இருந்தார் என்று கூறப்படுகின்றது. வரலாற்றில் பேசப்படும் அளவிற்கு மிகப் பெரிய அரும் பணிகளை புரிந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இவரைப்பற்றிய செய்திகள் அதிகம் அறியப்படாத நிலையில் கிறிஸ்துவை பின்பற்றியதற்காக இவர் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. ஏறக்குறைய 5 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஸ்போலேட்டோவில் பேராலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பின்னர் ராவென்னா நகரிலும் இவருக்கு பேராலயம் கட்டப்பட்டுள்ளது.
செபம்:
இயேசுவே இறைமகனே! நீர் உம் மக்களை அற்புதமான முறையில் படைத்துள்ளீர். நீர் என்றும் மாறாதவர், உம் அன்பு என்றும் மறையாதது என்பதை இன்றைய புனிதரின் வழியாக வெளிப்படுத்துகின்றீர். உம்மை நாங்கள் எங்கள் வாழ்வின் எச்சூழலிலும் ஏற்று, உமது சாட்சிகளாக வாழ வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
டிசம்பர் 31
குளுனி சபை துறவி ஒடில்லோ Odilo von Cluny OSB
பிறப்பு
962,
அவேர்ஜினே Auvergne, பிரான்சு
இறப்பு
31 டிசம்பர் 1048,
சேவிஜ்னி Souvigny, பிரான்சு
பாதுகாவல்: ஏழைகள், மஞ்சள் காமாலை நோயிலிருந்து
இவர் தனது 30 ஆம் வயதில் 991 ஆம் ஆண்டு குளுனி துறவற மடத்தில் சேர்ந்தார். இவர் மிகச் சிறந்த முறையில் பயிற்சி பெற்று மூன்றே ஆண்டுகளில் தலைமைபொறுப்பை ஏற்று அத்துறவற சபையை வழிநடத்தினார். இவர் எப்போதும் தூய ஆவியின் குரலுக்கு செவிசாய்த்து செயல்பட்டார். இவர் தனது சபையை சிறந்த விதத்தில் வளர்த்தெடுத்தார். பல விதங்களில் முயற்சி செய்து பல்வேறு வழிகளில் தன் சபைக் குருக்களை பணியாற்ற ஊக்கமூட்டினார். இவர் பல ஆயர்களையும், திருத்தந்தையர்களையும் வழிநடத்தினார். பல குருக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவர் தனது பதவிகாலத்தில் ஏறக்குறைய 60 துறவற இல்லங்களை நிறுவினார். அனைத்து குருக்களையும் இறைப்பணியில் வேரூன்றி வாழ வழிகாட்டினார்.
செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! குளுனி சபையின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்து மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய ஒடில்லோவை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம், அச்சபையை தொடர்ந்து ஆசீர்வதித்து வழிநடத்தியருளும். அச்சபையிலுள்ள ஒவ்வொருவரும் உமது மகிமைக்காக செயல்பட்டு உம்மை முன்னிறுத்தி பணியாற்றிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
குளுனி சபை துறவி ஒடில்லோ Odilo von Cluny OSB
பிறப்பு
962,
அவேர்ஜினே Auvergne, பிரான்சு
இறப்பு
31 டிசம்பர் 1048,
சேவிஜ்னி Souvigny, பிரான்சு
பாதுகாவல்: ஏழைகள், மஞ்சள் காமாலை நோயிலிருந்து
இவர் தனது 30 ஆம் வயதில் 991 ஆம் ஆண்டு குளுனி துறவற மடத்தில் சேர்ந்தார். இவர் மிகச் சிறந்த முறையில் பயிற்சி பெற்று மூன்றே ஆண்டுகளில் தலைமைபொறுப்பை ஏற்று அத்துறவற சபையை வழிநடத்தினார். இவர் எப்போதும் தூய ஆவியின் குரலுக்கு செவிசாய்த்து செயல்பட்டார். இவர் தனது சபையை சிறந்த விதத்தில் வளர்த்தெடுத்தார். பல விதங்களில் முயற்சி செய்து பல்வேறு வழிகளில் தன் சபைக் குருக்களை பணியாற்ற ஊக்கமூட்டினார். இவர் பல ஆயர்களையும், திருத்தந்தையர்களையும் வழிநடத்தினார். பல குருக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவர் தனது பதவிகாலத்தில் ஏறக்குறைய 60 துறவற இல்லங்களை நிறுவினார். அனைத்து குருக்களையும் இறைப்பணியில் வேரூன்றி வாழ வழிகாட்டினார்.
செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! குளுனி சபையின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்து மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய ஒடில்லோவை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம், அச்சபையை தொடர்ந்து ஆசீர்வதித்து வழிநடத்தியருளும். அச்சபையிலுள்ள ஒவ்வொருவரும் உமது மகிமைக்காக செயல்பட்டு உம்மை முன்னிறுத்தி பணியாற்றிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top