- புனிதர்கள்
- தொகுப்பு
- பெப்ருவரி
பெப்ருவரி மாதம் 1-ம் தேதி
அர்ச்.இஞ்ஞாசியார் - வேதசாட்சி (கி.பி.107)
இவர் அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று, அவருக்கு சீஷனாகி, அந்தியோக்கியா நகரின் மேற்றிராணியாராக நியமிக்கப் பட்டார். சக்கரவர்த்தியான தொமீஷியன் காலத்தில் நடந்த பயங்கரமான வேத கலாபனையில், இவருடைய மேற்றிராசணக் கிறீஸ்தவர்கள் இவர் புரிந்த ஜெபதபத்தால் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் திராஜான் என்பவன் சக்கர- வர்த்தியானபின் அந்தியோக்கியாக்குச் சென்று, கிறீஸ்தவர்களை வேதத்தின் நிமித்தம் உபாதிக்கையில், அவன் அர்ச். இஞ்ஞாசியாரைப் பார்த்து ~~நீ யார்? பேயனே|| என்றதற்கு, ~~சர்வேசுரனை என்னில் கொண்டிருக்கும் என்னைப் பேயன் என்று அழைக்க வேண்டாம்|| என்றார். இவர் கிறீஸ்தவ வேதத்தை மறுதலித்து, பொய்த் தேவர்களை ஆராதியாததைக் கண்ட இராயன் இவரைத் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடும்படி தீர்ப்பு கூறினான். அவ்வாறே, இவர் காவல் சேவகருடன் உரோமைக்குக் கொண்டுபோகும் வழியில் ஆங்காங்கு சிதறிப்போயிருந்த கிறீஸ்தவர்கள் இவருடைய புத்திமதிகளைக் கேட்கவும், இவர் ஆசீர் பெறவும் கூட்டங்கூட்டமாய் இவரிடம் போவார்கள். இவர் உரோமையை அடைந்து அரங்கத்தில் நிறுத்தப்படவே, ~~சர்வேசுரனுடைய கோதுமையாகிய நான் அவருக்கு உகந்த அப்பமாகச் சமர்ப்பிக்கப்பட சிங்கங்களின் பற்களால் அரைக்கப்படப் போகிறேன்|| என்றார். உடனே அவர் மேல் விடப்பட்ட சிங்கங்கள் அவரைக் கடித்துக் குதறி விழுங்கின. அங்கு மீதமிருந்த அவருடைய சில எலும்புகளை விசுவாசிகள் பக்தியோடு எடுத்துக்கொண்டுப் போனார்கள்.
யோசனை
இவர் எழுதிய நிருபங்களில் திருச்சபைக்கும், கிறீஸ்தவர்களுக்கும் ஐக்கியம் இருக்க வேண்டுமென்று உணர்த்தியதுபோல், நாம் திருச்சபைக்கு உகந்த பிள்ளைகளாய் நடப்போமாக.
பெப்ருவரி மாதம் 2-ம் தேதி
அர்ச்.கன்னிமரியாயின் சுத்திகரத் திருநாள்
பூர்வ வேத காலத்தில் குழந்தை பெற்ற தாயானவள் அசுத்தமுள்ள வளாக எண்ணப்பட்டு, சில காலம் வீட்டில் தங்கி, குறிக்கப்பட்ட நாளில் தேவாலயத்திற்குச் சென்று மோயீசனால் ஏற்படுத்தப்பட்ட காணிக்;கையைச் செலுத்தி, தன் குழந்தையை மீட்டுக்கொள்வாள். ஆனால் அர்ச். கன்னிமரியாய்; இஸ்பிரீத்துசாந்துவின் அநுக்கிரகத்தால் கர்ப்பந்தரித்து சேசுநாதரை அற்புத மாய்ப் பெற்றெடுத்ததினால், முன் கூறப்பட்ட சடங்கை அநுசரிக்க அவர்களுக்கு கடமையில்லை. ஆயினும் தேவமாதா தாழ்ச்சியினிமித்தமும், மற்றவர்களுக்கு நன்மாதிரியைப் படிப்பிக்கவும் தாழ்ச்சிக்குரிய இச்சடங்கை நிறைவேற்றினார்கள். ஏழைகளுக்கு நியமிக்கப்பட்ட காணிக்கையாகிய இரண்டு மாடப்புறாக்களை ஒப்புக்கொடுத்து, தமது தேவ பாலனை மீட்டுக்கொண்டார்கள். மகாத்துமா வாகிய சிமையோன் திருப்பாலனான சேசுநாதரைத் தமது கரங்களில் ஏந்திய வுடனே, இவர்தான் உலக இரட்சகர் என்று சர்வேசுரனால் அறிந்து, அவரை ஆராதித்து, ~~ஆண்டவரே நீர் வாக்குத்தத்தம் செய்த உலக இரட்சகரை நான் பார்க்கப் பாக்கியம் பெற்றதால் இக்கணமே அடியேனை உம்மிடத்தில் அழைத்துக்கொள்ளும்|| என்னும் கீர்த்தனையைப் பாடினார். பிறகு குழந்தையின் தாய்ப் பக்கமாகத் திரும்பி, இப்பாலன் இனி படவிருக்கும் பாடுகளால் உமது இருதயம் வியாகுல வாளால் ஊடுருவப்படுமென்றார். கிறீஸ்தவப் பெண்கள் தேவமாதாவின் மாதிரிகையைப் பின்பற்றி, குழந்தையைப் பெற்ற 40-ம் நாள் கோவிலுக்குச் சென்று குருவானவரால் மந்திரிக்கப்பட்டு, ஒரு மெழுகுவர்த்தி யைக் காணிக்கையாகக் கொடுப்பது நல்ல வழக்கம்.
யோசனை
தேவ கற்பனையை அநுசரிப்பதில் வீண் சாக்குபோக்குகளைத் தேடாது இருப்பாயாக.
பெப்ருவரி மாதம் 3-ம் தேதி
அர்ச்.ப்ளாஸியார் - மேற்றிரானியார்,வேதசாட்சி (கி.பி.316)
இவருடைய அரிதான புண்ணியங்களினிமித்தம் செபாஸ்த் என்னும் நகருக்கு மேற்றிராணியாரானார். அக்காலத்திலுண்டான பயங்கரமான வேத கலாபனையினிமித்தம் இவர் ஒரு மலைக் கெபிக்குச் சென்று அவ்விடத்தில் ஜெபதபம் புரிந்துவந்தார். பல பிணிகளால் வருந்திய சிங்கம், புலி முதலிய காட்டு மிருகங்கள் அக்குகைக்குள் சென்று, அர்ச்சியசிஷ்டவரால் குணமடைந்து வருவதுண்டு. ஓரு நாள் அந்நாட்டு அதிபதியின் ஊழியர் அந்;தக் காட்டில் வேட்டையாடுகையில், காட்டு மிருகங்கள் மேற்படி குகையில் ஜெபஞ் செய்யும் ப்ளாஸியருக்காகக் காத்திருப்பதைக் கண்டு, அதைத் தங்கள் எஜமானுக்கு அறிவித்தார்கள். அதிகாரியின் உத்தரவுப்படி சேவகர் ப்ளாஸியாரைப் பிடித்துக ;கொண்டு வருகையில், இறந்துபோன ஒரு குழந்தையை உயிர்ப்பித்ததைக் கண்ட சேவகரில் சிலர் கிறீஸ்தவர்களானார்கள். ப்ளாஸியார் வேதத்தை மறுதலித்துப் பொய் தேவர்களை வணங்கும்படி அதிகாரி செய்த முயற்சிகள் எல்லாம் வீணானதால், அவரை கொடூரமாய் அடிப்பித்து, சிறையிலடைத்தான். சிறையிலும் அநேக நோயாளிகள் அவரால் குணப்படுத்தப்பட்டார்கள். இவரது காயங்களிலிருந்து வடியும் இரத்தத்தை சில ஸ்திரீகள் பக்;தியோடு தொட்டு தங்கள் மேல் பூசிக்கொண்டதினால், அதிபதி அவர்களை நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் நெருப்பு அவர்களைச் சுடாததினால் சிரச்சேதம் செய்வித்தான். வேதசாட்சியை அதிபதியின் கட்டளைப்படி ஆழமான ஜலத்தில் அமிழ்த்தியும் அவர் சாகாததினால், அவர் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
நாம் பக்தியோடு ஜெபிப்பதுடன், பக்திமான்களைப் பழித்துப் பரிகாசம் செய்யாமலும் இருப்போமாக.
பெப்ருவரி மாதம் 4-ம் தேதிp
.
அர்ச்.தெபிரித்தோஅருளானந்தர் - வேதசாட்சி (கி.பி.1663)
பிரபு வமிசத்தைச் சேர்ந்த அருளானந்தர் சிறு வயதில் போர்ச்சுகல் தேசத்து இராஜாவின் குமாரனுக்குத் தோழனாக நியமிக்கப்பட்டு, இராஜ அரண்மனையில் வளர்ந்துவந்தார். அவ்விடத்தில் அவருக்குண்டான தந்திர சோதனைகளை ஜெயித்து புண்ணியவாளராய் நடந்துவந்தார். இவர் கடின வியாதியில் விழுந்து, அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் வேண்டுதலால் குணம் அடைந்து, அவருடைய மாதிரிகையைப் பின்பற்றி, சேசு சபையில் சேர்ந்தார். அஞ்ஞானிகளை மனந்திருப்ப ஆவல்கொண்டு, அதற்குத் தன் உறவினர் களாலும் விசேஷமாய்த் தன் தாயாராலும் உண்டான தடைகளையெல்லாம் வெற்றிகொண்டு இந்திய தேசத்திற்கு பயணம் செய்தார். பல இடங்களில் வேதம் போதித்து, மதுரை நாட்டில் வேதத்திற்காக உழைத்தார். இவ்விடத்தில் அஞ்ஞானிகளால் உண்டான துன்பதுரிதங்களுக்கு அஞ்சாமல், அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். கடின வியாதியால் வருந்தின ஒரு இராஜ பிரபு அருளானந்தருடைய வேண்டுதலால் குணமடைந்து, ஞானஸ்நானம் பெற்றான். இவனுக்கிருந்த ஐந்து மனைவிகளில் ஒருத்தியை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்றவர்களை நீக்கிவிட்டான். மீதமிருந்த நான்கு ஸ்திரீகளில் அரசனுடைய பேத்தியான ஒருவள் அருளானந்தர்மேல் அதிக கோபாவேசங்கொண்டு அவரைக் கொல்லக் கட்டளையிடும்படி அரசனை மன்றாடினாள். அரசன் தன் பேத்தியின் பேச்சை மறுக்க முடியாதவனாய், அருளானந்தரைச் சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டான். அவ்வாறே அர்ச். அருளானந்தர் ஓரியூரில் வேதசாட்சியாக மரணமடைந்தார்.
யோசனை
தேவ பணிவிடைக்கு சர்வேசுரனால் அழைக்கப்படுகிறவர்களுக்கு உண்டாகும் தடைகளை தைரியத்துடன் வெல்லவேண்டும்.
பெப்ருவரி மாதம் 5-ம் தேதிp
அர்ச்.ஆகத்தம்மாள் - கன்னிகை,வேதசாட்சி (கி.பி.251)
செல்வந்தர் கோத்திரத்தில் பிறந்த ஆகத்தம்மாள் தன்னுடைய பெற்றோரால் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டாள். இப்பெண் பசாசாலும் துஷ்டராலும் உண்டான தந்திர சோதனைகளை ஜெயித்து தன் ஆத்துமமும் சரீரமும் பாவத்தால் கறைப்படாதபடிக்கு வெகு கவனமாய் இருந்தாள். ஆகத்தம்மாளின் உத்தம கோத்திரத்தையும், அழகையும், திரண்ட சொத்துக் களையும்பற்றி கேள்வி;ப்பட்ட குயிந்தானுஸ் என்னும் நாட்டதிகாரி அவளை மணமுடித்துக்கொள்ள செய்த முயற்சிகளெல்லாம் வீணானதால், அவள் கிறீஸ்தவளென்று அவள்மேல் குற்றஞ்சாட்டி அவளது கற்பைப் பறிக்கும்படி ஒரு விபச்சார ஸ்திரீயிடம் அவளைக் கையளித்தான். இப்புண்ணியவதி பாவத்திற்கு சம்மதியாததை அதிபதியறிந்து, அவளைக் கொடூரமாய் அடித்தும் நயமாகப் பேசியும,; பயமுறுத்தியும்;, அவள் அஞ்சாததினால், அவளுடைய மார்பை அறுத்து சிறையிலடைக்கும்படி கட்டளையிட்டான். அன்று இரவு அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் ஆகத்தம்மாளுக்குத் தோன்றி, அவளைத் தைரியப்படுத்தி, அவள் காயம் முழுவதையும் குணமாக்கினார். இதைக் கண்ட அதிகாரி கோபத்தால் பொங்கியெழுந்து, தரையில் பரப்பப்பட்ட நெருப்பில் அவளைப் புரட்டச் சொன்னான். அந்நேரத்தில் அந்நகரம் அதிர்ந்ததைக் கண்ட அதிபதி, ஜனங்கள் தன்னை எதிர்த்துக் குழப்பம் செய்வார்களென்று பயந்து, அப்புண்ணியவதியை சிறைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். வேத- சாட்சி தான் பட்ட காயங்களால் சிறையில் உயிர் துறந்தாள்.
யோசனை
கற்பென்னும் புண்ணியம் ஒரு தேவ கொடை. அதை கவனமாக ஜெபத்தாலும் ஐம்புலன்களின் அடக்கத்தாலும் பழுதின்றிக் காப்பாற்றுவோமாக.
பெப்ருவரி மாதம் 6-ம் தேதி
அர்ச்.தொரோத்தியம்மாள் - கன்னிகை,வேதசாட்சி (கி.பி.208)
இக்கன்னிகையின் தாய் தந்தையர் சேசுநாதருக்காக வேதசாட்சிகளாக மரித்தபின் தொரோத்தியம்மாள் சகல புண்ணியங்களையும் விசேஷமாக கற்பென்னும் புண்ணியத்தையும் பிரமாணிக்கமாக அநுசரித்துவந்தாள். இவள் வேதத்திற்காகப் பிடிபட்டு பயங்கரமான ஆயுதங்களால் துன்புறுத்தப்பட்டும், அஞ்சாததினால், வேதத்தை ஏற்கனவே மறுதலித்த இரு ஸ்திரீகளிடம் ஒப்படைக்கப்பட்டாள். தொரோத்தியம்மாளின் நற்புத்தியால் மனந்திரும்பின அவ்விரு துஷ்ட ஸ்திரீகளும் நெருப்பில் போட்டு சுட்டெரிக்கப்பட்டார்கள். தொரோத்தியம்மாள் மறுபடியும் அதி;பதியின் உத்தரவுப்படி சித்திரவதை செய்யப்பட்டும் அவள் வேதத்தில் தைரியமாயிருப்பதைக் கொடுங்கோலன் அறிந்து, சினங்கொண்டு, அவளைச் சிரச்சேதம் செய்யும்படி தீர்ப்பளித்தான். சேவகர் வேதசாட்சியைக் கொலைக் களத்திற்கு நடத்திக்கொண்டுபோகையில், வேத விரோதியான தெயோபிலிஸ் என்பவன் அப்புண்ணிய மாதைப் பார்த்து, ~~நீ பிதற்றும் வேத பத்தாவினிடத்தினி;ன்று இந்தக் குளிர்காலத்தில் அகப்படாத நேர்த்தியான புஷ்பங்களையும் கனிகளையும் எனக்கு அனுப்பு|| என்று பரிகாசமாகச் சொன்னான். அப்படியே ஆகட்டுமென்று வேதசாட்சி சொல்லி;, கொலைக்களம் போய்ச் சேரவே, ஒரு சம்மனசு ஒரு சிறு பிள்ளையாகக் காணப் பட்டு, நேர்த்தியான புஷ்பங்களையும் கனிகளையும் அவளுக்குக் கொடுத்தது. அவைகளைத் தெயோபிலிஸ{க்குக் கொடுக்கும்படி அவள் சொல்லிவிட்டு, தலை வெட்டுண்டு மரித்தாள். அவள் சொன்னது போல சம்மனசு அவனுக்கு அவைகளைக் கொடுத்தது. இதை அவன் கண்டு, அதிசயித்து கிறீஸ்தவனாகி வேதசாட்சி முடி பெற்றான்.
யோசனை
நமது நல்ல ஒழுக்கத்தால் பிறரை மனந்திருப்புவோமாக.
பெப்ருவரி மாதம் 7-ம் தேதி
அர்ச்.ரோமுவால்ட் - மடாதிபதி (கி.பி.1027)
உயர்ந்த வம்சத்தவரான ரோமுவால்ட் என்பவர் வாலிபப் பிராயத்தில் ஆடல் பாடல்களிலும், வேடிக்கை விநோதங்களிலும், வேட்டையாடுவதிலும் காலத்தைச் செலவழித்து தன் ஆசாபாசத்துக்கு அடிமையாய் ஜீவித்து வந்தார். ஓர் வழக்கின் நிமித்தம் ரோமுவால்டின் தந்தை வேறொருவனைக் கொலை செய்துவிட்டார். இறந்தவனுடைய ஆத்தும இளைப்பாற்றிக்காக ரோமுவால்ட் ஒரு மடத்தில் சேர்ந்து, 40 நாள் கடின தபம் புரிந்துவந்தார். இதற்குப்பின் அவர் அச்சபையில் சேர்ந்து சந்நியாசியாகி சில காலத்துக்குப்பின் வேறொரு தபோதனரிடம் போய் புண்ணிய வாழ்வைக் கடைபிடித்து அதில் பூரண தேர்ச்சியடைந்தார். பசாசால் இவருக்குண்டான தந்திர சோதனைகளை ஜெபத் தாலும் ஒருசந்தியாலும் ஜெயித்தார். இவர் இராயப்பர் என்னும் வேறொரு பிரபுவுடன் சேர்ந்து கடின தபங்களைச் செய்து அநேக சந்நியாச மடங்களை ஸ்தாபித்து அவைகளுக்கு அதிசிரேஷ்டரானார். இம்மடத்திலிருந்தவர்களில் அநேகர் சிறந்த புண்ணியவாளரும் வேதசாட்சிகளுமானார்கள். இவர் ஏழு வருட காலம் ஒரு வனத்தில் தனிமையாய் ஒதுங்கிப் புண்ணிய தவச் செயல்களை கடைப்பிடித்து, தாம் தீர்க்கதரிசனமாகக் கூறிய நாளிலே பாக்கியமான மரணமடைந்து, நித்திய இளைப்பாற்றியை அடைந்தார்.
யோசனை
நமது துர்மாதிரிகையால் கெட்டுப்போனவர்களுக்காக வேண்டிக் கொள்ள மறக்கலாகாது.
பெப்ருவரி மாதம் 8-ம் தேதி
அர்ச்.மாத்தா அருளப்பர் - துதியர் (கி.பி.1213)
ஓரு பிரபுவின் மகனான இவர் சிறு வயதில் அன்னிய தேசங்களில் படிக்கும்போதும்கூட ஏழைகள் மட்டில் எவ்வளவு அன்பு செலுத்தினாரெனி;ல், தமக்கு அனுப்பப்பட்ட பணத்தை எளியவர்களுக்கு பகிர்ந்துக் கொடுப்பார். பிறருக்கு நன்மை செய்யும் பொருட்டு அருளப்பர் தமது மகிமையையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு குருப்பட்டம் பெற்றார். இவர் முதல் பூசை செய்யும்போது, வெள்ளை உடை அணிந்து சிவப்பும் நீல வர்ணமுமான சிலுவையை மார்பில் தரித்த வண்ணமாக ஒரு சம்மனசு கிறீஸ்தவனான ஒரு அடிமையின் தலைமேல் தமது கையை வைத்த பிரகாரம் அருளப்பருக்குத் தோன்றினார். அருகாமையிலிருந்த பெலிக்ஸ் என்னும் வனவாசியிடஞ் சென்று, தமக்குக் காணப்பட்ட தரிசனத்;தை அவருக்கு அறிவித்து அதன் அர்த்தத்தைக் கேட்டார். இது அடிமைகளை மீட்பதைப்பற்றிய காட்சியென்று அவருக்கு அறிவித்து, இருவரும் உரோமைக்குப் போய், அடிமைகளை மீட்பதற்கான சபையை ஸ்தாபிக்க அர்ச். பாப்பரசரிடம் உத்தரவு கேட்டார்கள். அவருடைய அனுமதியுடன், தமதிரித்துவத்தின் சபையை ஸ்தாபித்து, அருளப்பர் அதற்கு முதல் அதிசிரேஷ்டரானார். இந்த சபையில் சேர்ந்தவர்கள் அரிதான புண்ணியங் களையும் தவங்களையும் புரிந்து, தர்மம் எடுத்து அடிமைகளை மீட்பார்கள். அருளப்பர் ஒரு நாள் 120 அடிமைகளை மீட்டு, கப்பல் யாத்திரை செய்கையில் முகமதியர் அந்த கப்பலின் சுக்கானையும் பாயையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள். அருளப்பர் தமது மேல்போர்வையைக் கப்பலுக்குப் பாயாக விரித்து, தமது பாடுபட்ட சுரூபத்தைக் கையில் பிடித்து விசுவாசத்துடன், வேண்டிக்கொண்டார். கப்பல்; ஆபத்தின்;றி துறைமுகம் போய் சேரவே, சகலரும் காப்பாற்றப்பட்டார்கள். இந்தச் சபை சீக்கிரத்தில் சகல தேசங்களிலும் பரவியது. அருளப்பர் இக்கட்டு இடையூறுகளால் வருந்தி, தமது சபைக்காக உழைத்தபின் பாக்கியமான மரணமடைந்தார்.
யோசனை
அவசர நேரத்தில் நாமும் நமது அயலாருக்கு உதவி செய்வோமாக.
Courtesy: http://tamilcatholicprayers.blogspot.com/
அர்ச்.இஞ்ஞாசியார் - வேதசாட்சி (கி.பி.107)
இவர் அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று, அவருக்கு சீஷனாகி, அந்தியோக்கியா நகரின் மேற்றிராணியாராக நியமிக்கப் பட்டார். சக்கரவர்த்தியான தொமீஷியன் காலத்தில் நடந்த பயங்கரமான வேத கலாபனையில், இவருடைய மேற்றிராசணக் கிறீஸ்தவர்கள் இவர் புரிந்த ஜெபதபத்தால் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் திராஜான் என்பவன் சக்கர- வர்த்தியானபின் அந்தியோக்கியாக்குச் சென்று, கிறீஸ்தவர்களை வேதத்தின் நிமித்தம் உபாதிக்கையில், அவன் அர்ச். இஞ்ஞாசியாரைப் பார்த்து ~~நீ யார்? பேயனே|| என்றதற்கு, ~~சர்வேசுரனை என்னில் கொண்டிருக்கும் என்னைப் பேயன் என்று அழைக்க வேண்டாம்|| என்றார். இவர் கிறீஸ்தவ வேதத்தை மறுதலித்து, பொய்த் தேவர்களை ஆராதியாததைக் கண்ட இராயன் இவரைத் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடும்படி தீர்ப்பு கூறினான். அவ்வாறே, இவர் காவல் சேவகருடன் உரோமைக்குக் கொண்டுபோகும் வழியில் ஆங்காங்கு சிதறிப்போயிருந்த கிறீஸ்தவர்கள் இவருடைய புத்திமதிகளைக் கேட்கவும், இவர் ஆசீர் பெறவும் கூட்டங்கூட்டமாய் இவரிடம் போவார்கள். இவர் உரோமையை அடைந்து அரங்கத்தில் நிறுத்தப்படவே, ~~சர்வேசுரனுடைய கோதுமையாகிய நான் அவருக்கு உகந்த அப்பமாகச் சமர்ப்பிக்கப்பட சிங்கங்களின் பற்களால் அரைக்கப்படப் போகிறேன்|| என்றார். உடனே அவர் மேல் விடப்பட்ட சிங்கங்கள் அவரைக் கடித்துக் குதறி விழுங்கின. அங்கு மீதமிருந்த அவருடைய சில எலும்புகளை விசுவாசிகள் பக்தியோடு எடுத்துக்கொண்டுப் போனார்கள்.
யோசனை
இவர் எழுதிய நிருபங்களில் திருச்சபைக்கும், கிறீஸ்தவர்களுக்கும் ஐக்கியம் இருக்க வேண்டுமென்று உணர்த்தியதுபோல், நாம் திருச்சபைக்கு உகந்த பிள்ளைகளாய் நடப்போமாக.
பெப்ருவரி மாதம் 2-ம் தேதி
அர்ச்.கன்னிமரியாயின் சுத்திகரத் திருநாள்
பூர்வ வேத காலத்தில் குழந்தை பெற்ற தாயானவள் அசுத்தமுள்ள வளாக எண்ணப்பட்டு, சில காலம் வீட்டில் தங்கி, குறிக்கப்பட்ட நாளில் தேவாலயத்திற்குச் சென்று மோயீசனால் ஏற்படுத்தப்பட்ட காணிக்;கையைச் செலுத்தி, தன் குழந்தையை மீட்டுக்கொள்வாள். ஆனால் அர்ச். கன்னிமரியாய்; இஸ்பிரீத்துசாந்துவின் அநுக்கிரகத்தால் கர்ப்பந்தரித்து சேசுநாதரை அற்புத மாய்ப் பெற்றெடுத்ததினால், முன் கூறப்பட்ட சடங்கை அநுசரிக்க அவர்களுக்கு கடமையில்லை. ஆயினும் தேவமாதா தாழ்ச்சியினிமித்தமும், மற்றவர்களுக்கு நன்மாதிரியைப் படிப்பிக்கவும் தாழ்ச்சிக்குரிய இச்சடங்கை நிறைவேற்றினார்கள். ஏழைகளுக்கு நியமிக்கப்பட்ட காணிக்கையாகிய இரண்டு மாடப்புறாக்களை ஒப்புக்கொடுத்து, தமது தேவ பாலனை மீட்டுக்கொண்டார்கள். மகாத்துமா வாகிய சிமையோன் திருப்பாலனான சேசுநாதரைத் தமது கரங்களில் ஏந்திய வுடனே, இவர்தான் உலக இரட்சகர் என்று சர்வேசுரனால் அறிந்து, அவரை ஆராதித்து, ~~ஆண்டவரே நீர் வாக்குத்தத்தம் செய்த உலக இரட்சகரை நான் பார்க்கப் பாக்கியம் பெற்றதால் இக்கணமே அடியேனை உம்மிடத்தில் அழைத்துக்கொள்ளும்|| என்னும் கீர்த்தனையைப் பாடினார். பிறகு குழந்தையின் தாய்ப் பக்கமாகத் திரும்பி, இப்பாலன் இனி படவிருக்கும் பாடுகளால் உமது இருதயம் வியாகுல வாளால் ஊடுருவப்படுமென்றார். கிறீஸ்தவப் பெண்கள் தேவமாதாவின் மாதிரிகையைப் பின்பற்றி, குழந்தையைப் பெற்ற 40-ம் நாள் கோவிலுக்குச் சென்று குருவானவரால் மந்திரிக்கப்பட்டு, ஒரு மெழுகுவர்த்தி யைக் காணிக்கையாகக் கொடுப்பது நல்ல வழக்கம்.
யோசனை
தேவ கற்பனையை அநுசரிப்பதில் வீண் சாக்குபோக்குகளைத் தேடாது இருப்பாயாக.
பெப்ருவரி மாதம் 3-ம் தேதி
அர்ச்.ப்ளாஸியார் - மேற்றிரானியார்,வேதசாட்சி (கி.பி.316)
இவருடைய அரிதான புண்ணியங்களினிமித்தம் செபாஸ்த் என்னும் நகருக்கு மேற்றிராணியாரானார். அக்காலத்திலுண்டான பயங்கரமான வேத கலாபனையினிமித்தம் இவர் ஒரு மலைக் கெபிக்குச் சென்று அவ்விடத்தில் ஜெபதபம் புரிந்துவந்தார். பல பிணிகளால் வருந்திய சிங்கம், புலி முதலிய காட்டு மிருகங்கள் அக்குகைக்குள் சென்று, அர்ச்சியசிஷ்டவரால் குணமடைந்து வருவதுண்டு. ஓரு நாள் அந்நாட்டு அதிபதியின் ஊழியர் அந்;தக் காட்டில் வேட்டையாடுகையில், காட்டு மிருகங்கள் மேற்படி குகையில் ஜெபஞ் செய்யும் ப்ளாஸியருக்காகக் காத்திருப்பதைக் கண்டு, அதைத் தங்கள் எஜமானுக்கு அறிவித்தார்கள். அதிகாரியின் உத்தரவுப்படி சேவகர் ப்ளாஸியாரைப் பிடித்துக ;கொண்டு வருகையில், இறந்துபோன ஒரு குழந்தையை உயிர்ப்பித்ததைக் கண்ட சேவகரில் சிலர் கிறீஸ்தவர்களானார்கள். ப்ளாஸியார் வேதத்தை மறுதலித்துப் பொய் தேவர்களை வணங்கும்படி அதிகாரி செய்த முயற்சிகள் எல்லாம் வீணானதால், அவரை கொடூரமாய் அடிப்பித்து, சிறையிலடைத்தான். சிறையிலும் அநேக நோயாளிகள் அவரால் குணப்படுத்தப்பட்டார்கள். இவரது காயங்களிலிருந்து வடியும் இரத்தத்தை சில ஸ்திரீகள் பக்;தியோடு தொட்டு தங்கள் மேல் பூசிக்கொண்டதினால், அதிபதி அவர்களை நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் நெருப்பு அவர்களைச் சுடாததினால் சிரச்சேதம் செய்வித்தான். வேதசாட்சியை அதிபதியின் கட்டளைப்படி ஆழமான ஜலத்தில் அமிழ்த்தியும் அவர் சாகாததினால், அவர் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
நாம் பக்தியோடு ஜெபிப்பதுடன், பக்திமான்களைப் பழித்துப் பரிகாசம் செய்யாமலும் இருப்போமாக.
பெப்ருவரி மாதம் 4-ம் தேதிp
.
அர்ச்.தெபிரித்தோஅருளானந்தர் - வேதசாட்சி (கி.பி.1663)
பிரபு வமிசத்தைச் சேர்ந்த அருளானந்தர் சிறு வயதில் போர்ச்சுகல் தேசத்து இராஜாவின் குமாரனுக்குத் தோழனாக நியமிக்கப்பட்டு, இராஜ அரண்மனையில் வளர்ந்துவந்தார். அவ்விடத்தில் அவருக்குண்டான தந்திர சோதனைகளை ஜெயித்து புண்ணியவாளராய் நடந்துவந்தார். இவர் கடின வியாதியில் விழுந்து, அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் வேண்டுதலால் குணம் அடைந்து, அவருடைய மாதிரிகையைப் பின்பற்றி, சேசு சபையில் சேர்ந்தார். அஞ்ஞானிகளை மனந்திருப்ப ஆவல்கொண்டு, அதற்குத் தன் உறவினர் களாலும் விசேஷமாய்த் தன் தாயாராலும் உண்டான தடைகளையெல்லாம் வெற்றிகொண்டு இந்திய தேசத்திற்கு பயணம் செய்தார். பல இடங்களில் வேதம் போதித்து, மதுரை நாட்டில் வேதத்திற்காக உழைத்தார். இவ்விடத்தில் அஞ்ஞானிகளால் உண்டான துன்பதுரிதங்களுக்கு அஞ்சாமல், அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். கடின வியாதியால் வருந்தின ஒரு இராஜ பிரபு அருளானந்தருடைய வேண்டுதலால் குணமடைந்து, ஞானஸ்நானம் பெற்றான். இவனுக்கிருந்த ஐந்து மனைவிகளில் ஒருத்தியை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்றவர்களை நீக்கிவிட்டான். மீதமிருந்த நான்கு ஸ்திரீகளில் அரசனுடைய பேத்தியான ஒருவள் அருளானந்தர்மேல் அதிக கோபாவேசங்கொண்டு அவரைக் கொல்லக் கட்டளையிடும்படி அரசனை மன்றாடினாள். அரசன் தன் பேத்தியின் பேச்சை மறுக்க முடியாதவனாய், அருளானந்தரைச் சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டான். அவ்வாறே அர்ச். அருளானந்தர் ஓரியூரில் வேதசாட்சியாக மரணமடைந்தார்.
யோசனை
தேவ பணிவிடைக்கு சர்வேசுரனால் அழைக்கப்படுகிறவர்களுக்கு உண்டாகும் தடைகளை தைரியத்துடன் வெல்லவேண்டும்.
பெப்ருவரி மாதம் 5-ம் தேதிp
அர்ச்.ஆகத்தம்மாள் - கன்னிகை,வேதசாட்சி (கி.பி.251)
செல்வந்தர் கோத்திரத்தில் பிறந்த ஆகத்தம்மாள் தன்னுடைய பெற்றோரால் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டாள். இப்பெண் பசாசாலும் துஷ்டராலும் உண்டான தந்திர சோதனைகளை ஜெயித்து தன் ஆத்துமமும் சரீரமும் பாவத்தால் கறைப்படாதபடிக்கு வெகு கவனமாய் இருந்தாள். ஆகத்தம்மாளின் உத்தம கோத்திரத்தையும், அழகையும், திரண்ட சொத்துக் களையும்பற்றி கேள்வி;ப்பட்ட குயிந்தானுஸ் என்னும் நாட்டதிகாரி அவளை மணமுடித்துக்கொள்ள செய்த முயற்சிகளெல்லாம் வீணானதால், அவள் கிறீஸ்தவளென்று அவள்மேல் குற்றஞ்சாட்டி அவளது கற்பைப் பறிக்கும்படி ஒரு விபச்சார ஸ்திரீயிடம் அவளைக் கையளித்தான். இப்புண்ணியவதி பாவத்திற்கு சம்மதியாததை அதிபதியறிந்து, அவளைக் கொடூரமாய் அடித்தும் நயமாகப் பேசியும,; பயமுறுத்தியும்;, அவள் அஞ்சாததினால், அவளுடைய மார்பை அறுத்து சிறையிலடைக்கும்படி கட்டளையிட்டான். அன்று இரவு அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் ஆகத்தம்மாளுக்குத் தோன்றி, அவளைத் தைரியப்படுத்தி, அவள் காயம் முழுவதையும் குணமாக்கினார். இதைக் கண்ட அதிகாரி கோபத்தால் பொங்கியெழுந்து, தரையில் பரப்பப்பட்ட நெருப்பில் அவளைப் புரட்டச் சொன்னான். அந்நேரத்தில் அந்நகரம் அதிர்ந்ததைக் கண்ட அதிபதி, ஜனங்கள் தன்னை எதிர்த்துக் குழப்பம் செய்வார்களென்று பயந்து, அப்புண்ணியவதியை சிறைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். வேத- சாட்சி தான் பட்ட காயங்களால் சிறையில் உயிர் துறந்தாள்.
யோசனை
கற்பென்னும் புண்ணியம் ஒரு தேவ கொடை. அதை கவனமாக ஜெபத்தாலும் ஐம்புலன்களின் அடக்கத்தாலும் பழுதின்றிக் காப்பாற்றுவோமாக.
பெப்ருவரி மாதம் 6-ம் தேதி
அர்ச்.தொரோத்தியம்மாள் - கன்னிகை,வேதசாட்சி (கி.பி.208)
இக்கன்னிகையின் தாய் தந்தையர் சேசுநாதருக்காக வேதசாட்சிகளாக மரித்தபின் தொரோத்தியம்மாள் சகல புண்ணியங்களையும் விசேஷமாக கற்பென்னும் புண்ணியத்தையும் பிரமாணிக்கமாக அநுசரித்துவந்தாள். இவள் வேதத்திற்காகப் பிடிபட்டு பயங்கரமான ஆயுதங்களால் துன்புறுத்தப்பட்டும், அஞ்சாததினால், வேதத்தை ஏற்கனவே மறுதலித்த இரு ஸ்திரீகளிடம் ஒப்படைக்கப்பட்டாள். தொரோத்தியம்மாளின் நற்புத்தியால் மனந்திரும்பின அவ்விரு துஷ்ட ஸ்திரீகளும் நெருப்பில் போட்டு சுட்டெரிக்கப்பட்டார்கள். தொரோத்தியம்மாள் மறுபடியும் அதி;பதியின் உத்தரவுப்படி சித்திரவதை செய்யப்பட்டும் அவள் வேதத்தில் தைரியமாயிருப்பதைக் கொடுங்கோலன் அறிந்து, சினங்கொண்டு, அவளைச் சிரச்சேதம் செய்யும்படி தீர்ப்பளித்தான். சேவகர் வேதசாட்சியைக் கொலைக் களத்திற்கு நடத்திக்கொண்டுபோகையில், வேத விரோதியான தெயோபிலிஸ் என்பவன் அப்புண்ணிய மாதைப் பார்த்து, ~~நீ பிதற்றும் வேத பத்தாவினிடத்தினி;ன்று இந்தக் குளிர்காலத்தில் அகப்படாத நேர்த்தியான புஷ்பங்களையும் கனிகளையும் எனக்கு அனுப்பு|| என்று பரிகாசமாகச் சொன்னான். அப்படியே ஆகட்டுமென்று வேதசாட்சி சொல்லி;, கொலைக்களம் போய்ச் சேரவே, ஒரு சம்மனசு ஒரு சிறு பிள்ளையாகக் காணப் பட்டு, நேர்த்தியான புஷ்பங்களையும் கனிகளையும் அவளுக்குக் கொடுத்தது. அவைகளைத் தெயோபிலிஸ{க்குக் கொடுக்கும்படி அவள் சொல்லிவிட்டு, தலை வெட்டுண்டு மரித்தாள். அவள் சொன்னது போல சம்மனசு அவனுக்கு அவைகளைக் கொடுத்தது. இதை அவன் கண்டு, அதிசயித்து கிறீஸ்தவனாகி வேதசாட்சி முடி பெற்றான்.
யோசனை
நமது நல்ல ஒழுக்கத்தால் பிறரை மனந்திருப்புவோமாக.
பெப்ருவரி மாதம் 7-ம் தேதி
அர்ச்.ரோமுவால்ட் - மடாதிபதி (கி.பி.1027)
உயர்ந்த வம்சத்தவரான ரோமுவால்ட் என்பவர் வாலிபப் பிராயத்தில் ஆடல் பாடல்களிலும், வேடிக்கை விநோதங்களிலும், வேட்டையாடுவதிலும் காலத்தைச் செலவழித்து தன் ஆசாபாசத்துக்கு அடிமையாய் ஜீவித்து வந்தார். ஓர் வழக்கின் நிமித்தம் ரோமுவால்டின் தந்தை வேறொருவனைக் கொலை செய்துவிட்டார். இறந்தவனுடைய ஆத்தும இளைப்பாற்றிக்காக ரோமுவால்ட் ஒரு மடத்தில் சேர்ந்து, 40 நாள் கடின தபம் புரிந்துவந்தார். இதற்குப்பின் அவர் அச்சபையில் சேர்ந்து சந்நியாசியாகி சில காலத்துக்குப்பின் வேறொரு தபோதனரிடம் போய் புண்ணிய வாழ்வைக் கடைபிடித்து அதில் பூரண தேர்ச்சியடைந்தார். பசாசால் இவருக்குண்டான தந்திர சோதனைகளை ஜெபத் தாலும் ஒருசந்தியாலும் ஜெயித்தார். இவர் இராயப்பர் என்னும் வேறொரு பிரபுவுடன் சேர்ந்து கடின தபங்களைச் செய்து அநேக சந்நியாச மடங்களை ஸ்தாபித்து அவைகளுக்கு அதிசிரேஷ்டரானார். இம்மடத்திலிருந்தவர்களில் அநேகர் சிறந்த புண்ணியவாளரும் வேதசாட்சிகளுமானார்கள். இவர் ஏழு வருட காலம் ஒரு வனத்தில் தனிமையாய் ஒதுங்கிப் புண்ணிய தவச் செயல்களை கடைப்பிடித்து, தாம் தீர்க்கதரிசனமாகக் கூறிய நாளிலே பாக்கியமான மரணமடைந்து, நித்திய இளைப்பாற்றியை அடைந்தார்.
யோசனை
நமது துர்மாதிரிகையால் கெட்டுப்போனவர்களுக்காக வேண்டிக் கொள்ள மறக்கலாகாது.
பெப்ருவரி மாதம் 8-ம் தேதி
அர்ச்.மாத்தா அருளப்பர் - துதியர் (கி.பி.1213)
ஓரு பிரபுவின் மகனான இவர் சிறு வயதில் அன்னிய தேசங்களில் படிக்கும்போதும்கூட ஏழைகள் மட்டில் எவ்வளவு அன்பு செலுத்தினாரெனி;ல், தமக்கு அனுப்பப்பட்ட பணத்தை எளியவர்களுக்கு பகிர்ந்துக் கொடுப்பார். பிறருக்கு நன்மை செய்யும் பொருட்டு அருளப்பர் தமது மகிமையையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு குருப்பட்டம் பெற்றார். இவர் முதல் பூசை செய்யும்போது, வெள்ளை உடை அணிந்து சிவப்பும் நீல வர்ணமுமான சிலுவையை மார்பில் தரித்த வண்ணமாக ஒரு சம்மனசு கிறீஸ்தவனான ஒரு அடிமையின் தலைமேல் தமது கையை வைத்த பிரகாரம் அருளப்பருக்குத் தோன்றினார். அருகாமையிலிருந்த பெலிக்ஸ் என்னும் வனவாசியிடஞ் சென்று, தமக்குக் காணப்பட்ட தரிசனத்;தை அவருக்கு அறிவித்து அதன் அர்த்தத்தைக் கேட்டார். இது அடிமைகளை மீட்பதைப்பற்றிய காட்சியென்று அவருக்கு அறிவித்து, இருவரும் உரோமைக்குப் போய், அடிமைகளை மீட்பதற்கான சபையை ஸ்தாபிக்க அர்ச். பாப்பரசரிடம் உத்தரவு கேட்டார்கள். அவருடைய அனுமதியுடன், தமதிரித்துவத்தின் சபையை ஸ்தாபித்து, அருளப்பர் அதற்கு முதல் அதிசிரேஷ்டரானார். இந்த சபையில் சேர்ந்தவர்கள் அரிதான புண்ணியங் களையும் தவங்களையும் புரிந்து, தர்மம் எடுத்து அடிமைகளை மீட்பார்கள். அருளப்பர் ஒரு நாள் 120 அடிமைகளை மீட்டு, கப்பல் யாத்திரை செய்கையில் முகமதியர் அந்த கப்பலின் சுக்கானையும் பாயையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள். அருளப்பர் தமது மேல்போர்வையைக் கப்பலுக்குப் பாயாக விரித்து, தமது பாடுபட்ட சுரூபத்தைக் கையில் பிடித்து விசுவாசத்துடன், வேண்டிக்கொண்டார். கப்பல்; ஆபத்தின்;றி துறைமுகம் போய் சேரவே, சகலரும் காப்பாற்றப்பட்டார்கள். இந்தச் சபை சீக்கிரத்தில் சகல தேசங்களிலும் பரவியது. அருளப்பர் இக்கட்டு இடையூறுகளால் வருந்தி, தமது சபைக்காக உழைத்தபின் பாக்கியமான மரணமடைந்தார்.
யோசனை
அவசர நேரத்தில் நாமும் நமது அயலாருக்கு உதவி செய்வோமாக.
Courtesy: http://tamilcatholicprayers.blogspot.com/