- புனிதர்கள்
- தொகுப்பு
- ஜூலை
ஜூலை மாதப் புனிதர்கள்
1. ஜூலை 1
2. ஜூலை 2
3. ஜூலை 3
4. ஜூலை 4
5. ஜூலை 5
6. ஜூலை 6
7. ஜூலை 7
8. ஜூலை 8
9. ஜூலை 9
10. ஜூலை 10
11. ஜூலை 11
12. ஜூலை 12
13. ஜூலை 13
14. ஜூலை 14
15. ஜூலை 15
16. ஜூலை 16
17. ஜூலை 17
18. ஜூலை 18
19. ஜூலை 19
20. ஜூலை 20
21. ஜூலை 21
22. ஜூலை 22
23. ஜூலை 23
24. ஜூலை 24
25. ஜூலை 25
26. ஜூலை 26
27. ஜூலை 27
28. ஜூலை 28
29. ஜூலை 29
30. ஜூலை 30
31. ஜூலை 31
2. ஜூலை 2
3. ஜூலை 3
4. ஜூலை 4
5. ஜூலை 5
6. ஜூலை 6
7. ஜூலை 7
8. ஜூலை 8
9. ஜூலை 9
10. ஜூலை 10
11. ஜூலை 11
12. ஜூலை 12
13. ஜூலை 13
14. ஜூலை 14
15. ஜூலை 15
16. ஜூலை 16
17. ஜூலை 17
18. ஜூலை 18
19. ஜூலை 19
20. ஜூலை 20
21. ஜூலை 21
22. ஜூலை 22
23. ஜூலை 23
24. ஜூலை 24
25. ஜூலை 25
26. ஜூலை 26
27. ஜூலை 27
28. ஜூலை 28
29. ஜூலை 29
30. ஜூலை 30
31. ஜூலை 31
ஜூலை 1
புனித இக்னேசியஸ் பால்சோன் (St.Ignatius Falzon)
திருத்தொண்டர்
பிறப்பு
1813
மால்டா
இறப்பு
01 ஜூலை 1875
புனிதர்பட்டம்: 1905, திருத்தந்தை 10ஆம் பயஸ்
இவர் குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் பக்தியானவராக வளர்ந்தார். தினமும் ஜெபமாலை செபிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். இவர் தனது உயர் கல்வியை முடித்தபின் குருமடத்திற்கு சென்றார். ஆனால் குருவாவதற்கான வயதையும், தகுதியும் இவரிடம் இல்லாமல் இருந்தது. இதனால் தன் வாழ்நாள் முழுவதும் இவர் ஓர் ஆன்ம வழிகாட்டியாக பணிபுரிந்தார். இவர் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஞான உபதேசம் கற்றுக்கொடுப்பதிலும், அடிக்கடி மால்டா தீவிற்கு சென்று, அங்கிருந்து ஆங்கிலேயே படைவீரர்களுக்கு திருவருட்சாதனங்களைப் பற்றி கற்றுக்கொடுப்பதிலும் தன் நாட்களை கழித்தார். போர் வீரர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தில் வளர வழிகாட்டினார். இவர்களின் உதவியினாலும், 600 படைவீரர்களைக்கொண்டு, வாலெட்டாவில் ஓர் சபையை தொடங்கினார்.
காலைமுதல் மாலைவரை உழைத்து முடித்துபின், நாளுக்கு நன்றி கூறியும், அந்நாளில் செய்த பாவத்திற்கு பாவமன்னிப்பும் வேண்டி ஒவ்வொரு நாள் மாலையும் வழிபாடு நடத்தப்பட்டது. உலகின் பாவங்களுக்காக அனைவரும் சேர்ந்து செபித்துக்கொண்டிருக்கும்போது, தன் கைகளைவிரித்து, கண்களை மேலே உயர்த்தியவாறு, தன் ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.
செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! குருத்துவ வாழ்வில் தன்னை அர்ப்பணிக்க விரும்பி, தகுதியின்மையால் குருவாகாமல், வாழ்நாள் முழுவதும் திருத்தொண்டரைப் போலவே வாழ்ந்த இக்னேசியசை நினைத்து நன்றி கூறுகின்றோம். அவரைப்போல வாழும் இளைஞர்களை நீர் ஆசீர்வதியும். இவர்களின் வழியாக உம் மக்களுக்கு தேவையானவற்றை கற்றுக்கொடுக்க, நீர் வரம் தர வேண்டுமாய் உம்மை இறைஞ்சுகின்றோம்
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ரைம்ஸ் நகர் துறவி தெயோடரிக் Theoderich von Reims
பிறப்பு: 5 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு: 1 ஜூலை 533, ரைம்ஸ் Reims, பிரான்சு
பாதுகாவல்: ரைம்ஸ் நகர், காய்ச்சல் மற்றும் எலும்பு நோயிலிருந்து
ஜூலை 02
✠ புனித பெர்னார்டின் ரியலினோ ✠
( St. Bernardin Riyalyno )
இயேசு சபை குரு :
பிறப்பு : 1530
கார்ப்பி, இத்தாலி
இறப்பு : 2 ஜூலை 1616
நினைவுத் திருநாள் : ஜூலை 02
புனித பெர்னார்டின் ரியலினோ, லெச்சே ( Letche ) என்ற ஊரில் படித்தார். இதே நகரில் 42 ஆண்டுகள் இயேசு சபைக் குருவாக பணிபுரிந்தார். இரு நகரத்தாரும் "எங்கள் புனிதர்" என்றே இவரை அழைக்கின்றார்.
பொலோஞ்ஞா பல்கலைக்கழகத்தில் படிப்புகளை முடித்தார். வெளியுலகில் பெரிய பதவிகள் காத்திருந்தன. இவர்தன் இளம் வயதில் துலிண்ட்ரா என்ற அழகி ஒருத்தியை விரும்பினார். ஆனால் அவள் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டாள். இவர் ஓர் முன்கோபியாக இருந்தார்.
ஒருநாள் நேம்பினஸ் (Nepinas) வீதி வழியாக இரு துறவிகள் நடந்து செல்வதை இவர் பார்த்தார். புதிதாக தோன்றிய இயேசு சபையை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதை அறிந்தார். அவர்களுடன் தொடர்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் பலிபூசையிலும், சிறப்பாக மறையுரையிலும் பங்குபெற்றார். இவைகளே இவரது தேவ அழைத்தலுக்கு நல்ல வித்தாக திகழ்ந்தன.
அந்நாட்களில் இவரின் மனதில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. தம் அறையில் தனிமையில் செபமாலை ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது மரியன்னை குழந்தை இயேசுவுடன் வந்து காட்சி தந்தார். அவரின் குழப்பம் நீங்கியது. அவருக்குள் பேரமைதி நிலவியது.
பின்னர் இயேசு சபையில் சேர உறுதி பூண்டார். 1541ம் ஆண்டு அச்சபையில் சேர்ந்தார். 52 ஆண்டுகள் அச்சபையில் வாழ்ந்தார். உயர்ந்த படிப்புகள் படித்து பெரிய பட்டங்கள் பெற்றிருந்தும், தாழ்ச்சியின் பொருட்டு துணை சகோதரராகவே இருக்க விரும்பினார். ஆனால் இவரை குருத்துவத்திற்கு சபை தெரிந்து கொண்டது. குருவாக ஆனபின் லெச்சே என்ற இடத்திற்கு வந்தார். இங்கு "எல்லாருக்கும் எல்லாமாக" நடந்து அனைவரின் மதிப்பையும் அடைந்தார். இவர் ஏழைகளை பேணுவதில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். இவர் மரணப் படுக்கையில் இருந்ததை கேட்ட மக்கள் கல்லூரிக்கு படையெடுத்து சென்றனர். கல்லூரியின் நுழைவாயிலையே அடைக்க வேண்டியதாயிற்று. நகரின் தலைவரே தந்தையின் இறுதி ஆசி பெற வந்துவிட்டார். இவர் "ஓ மிகுந்த வணக்கத்துக்குரிய ஆண்டவளே" என்று மரியின் பெயரை உச்சரித்தவாறு தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.
செபம் :
தாழ்ச்சியின் மறு உருவே எம் இறைவா!
உம் சாவிலும் கூட நீர் உம்மையே தாழ்த்தினீர்.
உமக்கு சான்று பகரும் விதமாக புனித பெர்னார்டினும், தம்மையே தாழ்த்தி, உமக்குரியவராக வாழ்ந்தார்.
பல திறமைகள் இருந்தபோதும், ஒன்றுமில்லாமை போல், உம்மோடு ஒன்றித்திருந்தார். அவரை முன்மாதிரியாக கொண்டு நாங்களும் வாழ்ந்திட உம் அருள் தந்து, எம்மை ஆசீர்வதித்து வழிநடத்தும். ஆமென் †
ஜூலை 3
புனித தோமா
( St. Thomas )
திருத்தூதர்
பிறப்பு : கி. பி 1 (முற்பகுதி)
கலிலேயா
இறப்பு : டிசம்பர் 21, 72 கி. பி
சென்னை, இந்தியா (நம்பப்படுகிறது)
ஏற்கும் சபை/ சமயம் : எல்லா கிறிஸ்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள் :
சாந்தோம் தேவாலயம், சென்னை
நினைவுத் திருவிழா :
ஜூலை 3 - கத்தோலிக்கம்
அக்டோபர் 6 அல்லது ஜூன் 30 - கிழக்கு மரபு
உயிர்ப்பு விழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை - பொது
சித்தரிக்கப்படும் வகை : இயேசுவின் விலாவில் கையை இடுபவராக, வேல்
பாதுகாவல் : கட்டட கலைஞர், இந்தியா, மற்றும் பல
திருத்தூதர் புனித தோமா (அல்லது) புனித தோமையார், 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கிறிஸ்தவ புனிதராவார். இவர் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர்.
"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" (யோவான் 20:28) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை.
திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.
இயேசு உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் 'சந்தேக தோமா' (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.
இந்தியாவில் இயேசுவின் நற்செய்தியை முதன்முதலில் அறிவித்தவர் இவரே என்று பழங்கால கிறிஸ்தவ மரபும், ஏடுகளும் சான்று பகர்கின்றன. கேரளாவில் வாழும் தோமையார் கிறிஸ்தவர்களும் இதற்கு சான்றாக உள்ளனர்.
பெயரும் அடையாளமும் :
பெயர் மரபு :
இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான இவரை நற்செய்தி நூல்கள் தோமா என்ற பெயருடனேயே அடையாளப்படுத்துகின்றன. 'தோமா' என்னும் அரமேய மொழிச் சொல்லுக்கு இரட்டையர் என்பது பொருள். இதற்கு இணையான திதைமுஸ் (Didymus, தமிழ் ஒலிப்பெயர்ப்பு: திதிம்) என்ற கிரேக்க மொழிச் சொல் யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்த பெயரின் அடிப்படையில் இவருடன் இரட்டையராகப் பிறந்த ஒரு சகோதரரோ, சகோதரியோ இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பழங்கால சிரிய மரபின்படி, திருத்தூதரின் முழுப்பெயர் யூதா தோமா என்று அறியப்படுகிறது.
இந்தியாவில் கிறிஸ்தவப் பணி :
இந்தியாவில் தோமையார் முதன் முதலில் பண்டைய சேர துறைமுகமான முசிறியில் (தற்போது கேரளாவிலுள்ள) கி.பி. 52-ல் பாதம் பதித்தார். தென் இந்தியாவின் கடற்கறை ஓரமாக நற்செய்தி பணியாற்றிய இவர், ஏழரை ஆலயங்களை நிறுவினார். அவை கொடுங்கல்லூர், பழவூர், கொட்டகாவு, கொக்கமங்கலம், நிரனம், நிலக்கல், கொல்லம் மற்றும் திருவிதாங்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
இறப்பு :
தோமையார் கி.பி 72-ல் சென்னை மயிலாப்பூரில் மரித்தார் என நம்பப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த மார்கோ-போலோ குறிப்புப்படி சென்னை அருகே அம்புகளால் குத்தப்பட்டு இறந்தார். அவரது மீப்பொருட்கள் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் உள்ளன.
விழா நாட்கள் :
9ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரோமன் நாள்காட்டியில், புனித தோமாவின் விழா நாளாக டிசம்பர் 21ம் தேதி குறிக்கப்பட்டிருந்தது.
1969ம் ஆண்டு ரோமன் நாள்காட்டி திருத்தி அமைக்கப்பட்டபோது, புனித ஜெரோமின் மறைசாட்சிகள் நினைவுநாள் குறிப்பின் அடிப்படையில் திருத்தூதர் தோமாவின் விழா ஜூலை 3ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான ஆங்கிலிக்கத் திருச்சபைகள் டிசம்பர் 21ம் தேதியே புனிதரின் விழாவை சிறப்பிக்கின்றன. கிழக்கு மரபு வழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள் புனித தோமாவின் விழாவை அக்டோபர் 19ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 6ம் தேதி) கொண்டாடுகின்றனர்.
ஜூலை 4
✠ புனித எலிசபெத் ✠
( St. Elizabeth of Portugal )
அரசி/ விதவை/ 3ம் சபை உறுப்பினர் :
பிறப்பு : 1271
அராகன் அரசு
இறப்பு : ஜூலை 4, 1336
போர்ச்சுகீசிய அரசு
புனிதர் பட்டம் : மே 25, 1625
திருத்தந்தை எட்டாம் உர்பன் - ரோம்
நினைவுத் திருநாள் : ஜூலை 4
புனித எலிசபெத், ஸ்பெயின் நாட்டு மன்னன் 3ம் பீட்டரின் மகள். ஸ்பெயின் மொழியில் எலிசபெத்தின் பெயர் இசபெல்லா. ஹங்கேரி நாட்டு அரசி புனித எலிசபெத்தின் பேத்தி. இவர் இளமை முதல் ஆழமான பக்தியிலும் தவமுயற்சிகளிலும் வளர்ந்தார்.
12ம் வயதில் போர்த்துக்கல் மன்னன் டென்னிசுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். மன்னன் தன் வாழ்வை கீழ்த்தரமாக வாழ்ந்தார். இவருக்கு கான்ஸ்டன்ஸ் (Constance) என்ற பெயரில் ஒரு மகள் இருந்தார். அவர், காஸ்டினால் அரசன் நான்காம் ஃபெர்டினான் (Ferdinand IV of Castile) என்பவரை மணந்தார்.
அஃபோன்சோ (Afonso) என்ற பெயரில் ஒரு மகன் இருந்தார். இவர், பின்னாளில் போர்ச்சுகல் நாட்டின் நான்காம் அஃபோன்சோ மன்னராக வந்தார். (King Afonso IV of Portugal)
எலிசபெத் இத்தகைய சூழ்நிலையிலும் தன் ஆன்மீக வாழ்வில் மிகுந்த உறுதியும் ஆர்வமும் காட்டினார். அதிகாலையில் தினந்தோறும் கட்டளை செபத்தில் உள்ள செபத்தை செபித்து வந்தார். உண்ணா நோன்பையும், ஒறுத்தல் முயற்சிகளையும் பெருக்கிக் கொண்டே போனார். தம்முடைய கணவர் முன்கோபியாகவும், முரடராகவும் நடந்து கொண்டாலும், தன்னுடைய விசுவாசம் நிறைந்த செபத்தின் மூலம் தன்னுடைய 40 ஆண்டு காலத் திருமண வாழ்வில் இவர் வெற்றி கண்டார்.
கணவனை முற்றிலும் இறைவன் பக்கம் மனம் மாறிட வழிவகுத்தார். மனமாறிய கணவர் 12 ஆண்டுகள் இறை விசுவாசத்தில் வாழ்ந்து இறந்தார்.
எலிசபெத் தன் கணவரின் இறப்பிற்குப் பின் கிளாரம்மாள் துறவு மடம் சென்று அசிசியாரின் 3ம் சபை உறுப்பினராக வாழ்ந்தார். ஏழைகளை பேணுவதில் தன் நேரத்தையும், மிகுந்த பணத்தையும் செலவழித்தார். நோயுற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றினார். இவரின் கணவர் உயிருடன் வாழ்ந்தபோது, முரடாக இருந்தபோது ஒரு முறை வயிற்று பசியுடன் இருந்த ஏழை ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவருக்கு ரொட்டி கொடுக்க கூடை நிறைய எடுத்து சென்றார். இதைக் கண்ட முரட்டுக் கணவர், அவரை வழிமறித்து, கூடையை பார்த்தார். அப்போது கூடையிலிருந்த 2 ரொட்டித்துண்டுகள் ரோஜா மலர்களாக மாறி காட்சியளித்தது.
அனைத்திற்கும் மேலாக இவர் ஓர் "அமைதி விரும்பி" என்றே அழைக்கப்பட்டார். 5 முறை மிகக் கடுமையான சூழலில் அமைதியை நாட்டில் நிலைநாட்டினார். அமைதியை நிலைநாட்ட கருதி முறையாக எடுத்த நீண்ட அரிய பயணம், அவரது உயிரை வாங்கியது. 1323 ல் தன் மகன் அல்போன்சோ தன் தந்தையின் வப்பாட்டியின் மகனுடன் போர் தொடுத்தபோது, எலிசபெத்தின் குறுக்கீட்டால் அமைதி ஏற்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பின்னர், தாம் தங்கியிருந்த மடத்திலிருந்து வெளியேறி, ஸ்பெயினுக்கு பயணமாகி, அல்போன்சோவுக்கு அவரின் மைத்துனர் காஸ்டில் நாட்டு மன்னருக்கும் இடையே அமைதியை நிலைநாட்டினர். தம் உடன்பிறந்தவரும், ஆரம்கான் நாட்டு மன்னனுமான 2 ஆம் ஜேம்சுக்கும் தம் இன்னோரு உறவினரும் காஸ்டில் மன்னனுமான 4 ஆம் பெர்னாண்டுக்கும் இடையிலும் அமைதியை உண்டு பண்ணினார்.
தன் கணவரை இறைவன் பக்கம் திருப்பியதும் இறைவனுடன் ஒப்புரவு செய்து வைத்ததும், எலிசபெத்தின் மிகப் பெரிய சாதனை. கணவர் சாவு படுக்கையிலிருக்கும் போதுதான். அவரை மனந்திருப்பினார். கடைசிவரை கணவரை அருமை பெருமையாக கவனித்துக் கொண்டார். "அமைதியை ஆண்டவனின் கட்டளையாக கருதி நிலைநாட்ட வேண்டும். நான் அமைதியை விட்டு செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்றார் நம் ஆண்டவர். அதாவது நான் உங்களைவிட்டு பிரியும்போது அமைதியில்தான் உங்களைக் காணவேண்டும் என்பது பொருள். ஆண்டவர் வரும்போது விரும்பி எதிர்பார்ப்பேன் என்று சொல்லி சென்றதும் அமைதியே, அமைதி விரும்பியாக இரு; அப்போது எங்கும் அமைதி மயமாக திகழும், கடவுளின் திருச்சபை அமைதியில்தான் நிறுவப்பட்டது" என்ற புனித கிளிசொலொகு அருளப்பரின் (Chrisologu John) வார்த்தையை தன் வாழ்வாக வாழ்ந்தார்.
செபம் :
ஏழைகளின் நண்பனே எம் இறைவா!
ஏழைகளின் மேல் பாசம் வைத்து, தன் வாழ்வையே அவர்களுக்காக கொடுத்து, உம்மில் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு வாழ்ந்து, பலரின் வாழ்வில் ஒளியேற்றிய புனித எலிசபெத்தைபோல, நாங்களும் ஏழைகளின் நண்பர்களாக வாழ வரம் தாரும்.
ஆமென் †
ஜூலை 5
புனித அந்தோனி மரிய சக்கரியா
குரு
பிறப்பு
1503
இறப்பு
1539
மார்ட்டின் லூத்தர் ஓர் கத்தோலிக்க, துறவற சபை குருவாக இருக்கும்போது திருச்சபையில் நிலவிய பலவித தீமைகளை சுட்டிக்காட்டி திருச்சபையை விட்டு வெளியேறினார். புனித அந்தோனி மரிய சக்கரியா, திருச்சபைக்குள் இருந்துகொண்டே தம் ஈகை இரக்க செயல்களாலும், தமது புனித வாழ்க்கையாலும் பலரை மனந்திருப்பினார். அத்தோடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் துறவற சபைகளை நிறுவினார். அப்போது அச்சபையின் அவலங்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு மாபெரும் வெற்றியும் கண்டார்.
இவரின் தாய் இவருக்கு 18 வயது நடக்கும்போது விதவையானார். அதிலிருந்து அவர், மகனின் ஆன்மீக வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். நோயினால் தாக்கப்பட்ட ஏழை எளியோரை குணப்படுத்தும் நோக்குடன் சக்கரியா, பதுவை பல்கலைகழகத்தில் மருத்துவக்கலை பயின்று பட்டம்பெற்றார். மக்களின் உடல்நிலையை மட்டுமல்லாது, உள்ளத்து நோய்களையும் குணமாக்க வேண்டுமென எண்ணி, வேத கலையையும் கற்றார். இவர் 1530 ஆம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றார். பிறகு "பர்ணபைட்ஸ்" (Barnabites) என்ற பெயர் கொண்ட ஒரு துறவற சபையை நிறுவினார். மிலான் நகரில் புனித பர்னபாஸ் ஆலயத்தில் இவர் தமது அலுவலகத்தை அமைத்துக் கொண்டதால் அப்பெயரை தமது சபைக்கு கொடுத்தார். இவரது தூண்டுதலின் பேரில், லூயிசா டொரெல்லா என்ற ஒரு செல்வந்தர் "ஏஞ்சலிக்கல்ஸ்"(Engelicals) என்ற பெயர் கொண்ட பெண்களுக்கான துறவற சபையை நிறுவினார். இச்சபையின் சிறப்பு நோக்கம், தவறிச் சென்று, பள்ளத்தில் விழுந்து கிடக்கும் பெண்களை மீட்பதும், அவர்களுக்கு புதிய சிந்தனைகளையும் உயரிய கண்ணோட்டங்களை கொடுப்பதுமாக இருந்தது. இத்தகைய அரும்பணி மக்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றபின், சக்கரியா தமது 36 ஆம் வயதில் விண்ணக வாழ்வை அடைந்தார். அடிக்கடி திவ்விய நன்மை வாங்குவது, 40 மணி நேரம் திவ்விய நற்கருணை திருமணி ஆராதனை போன்ற ஆன்மீக முயற்சிகளையும் முதலில் இவரே தோற்றுவித்தார்.
"நமக்கு கிடைத்த தேவ அழைத்தலின் வழியாக இறைவன் எவ்வளவு நம்மிடம் எதிர்பார்க்கின்றார் பாருங்கள்; திருத்தூதர்களையும், மறைசாட்சிகளையும் பின்பற்ற நாம் முன்வந்துள்ளோம்; ஆனால் அவர்களுக்கும், நமக்கும் உள்ள இடைவெளியை பாருங்கள்; அவர்களடைந்த வேதனைகளை நாம் ஒதுக்கிவிட கூடாது" என்பதை இப்புனிதர் தம் சபையினருக்கு அறிவுரையாக தந்தார்.
செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! இன்று மருத்துவ துறையில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். உடல் அளவில் மட்டுமில்லாமல், மனதளவிலும் பங்குபெற்று, நோயாளிக்கு பணிபுரிய உம் ஆசீர் தாரும். நோய்களை குணமாக்கக்கூடிய வல்லமையை நீர் தந்து, எம் பணிகளின் வழியாக உம்மை பறைசாற்றிட வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஹிர்சாவ் நகர் துறவி வில்ஹெல்ம் Wilhelm von Hirsau
பிறப்பு: 11 ஆம் நூற்றாண்டு, ரேகன்ஸ்பூர்க், பவேரியா
இறப்பு: 5 ஜூலை 1091, ஹிர்சாவ் Hirsau, ஜெர்மனி
ஜூலை 6
புனித மரிய கொரற்றி (St.Maria Goretti)
மறைசாட்சி
பிறப்பு
1890
அங்கோனா (Ankona), இத்தாலி
இறப்பு
1902
புனிதர்பட்டம்: திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்
இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகைத் தந்தனர். கல்வி கற்குமளவுக்கு இவர் வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது. 12 வயதில் இவருக்கு புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட ஏழையாக, எளிமையாக இருந்தார். ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞான சத்துணவு மிக உயர்ந்தது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள்கூட ஆகவில்லை. அலெக்சான்ரோ வெரைனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான். மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் அவன் மரியாவை மாசற்ற மலர் போன்ற உடலை பலமுறை கத்தியால் குத்தி கிழித்தான்.
"இது பாவம்", இதற்காக நீ நரகத்திற்கு செல்வாய் என்று மரியா அவனை எச்சரித்து பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவமனையில் 24 மணிநேரம் கழித்து உயிர் நீத்தார். "மன்னித்துவிட்டேன் அவரை" என்று சொல்லிவிட்டு மடிந்தார். கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்பி மனமில்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான். "மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறைய கொடுத்தததாக கனவு கண்டேன்" என அறிவித்தான். 27 ஆண்டுகளுக்கு பின்னர் அவனது சிறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.
இந்த அலெக்சான்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்தார். இவர் இறந்த 50 ஆண்டுகளுக்குள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மரியாவின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதை பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சான்ரோவும் கண்ணீர் சிந்தி பங்குபெற்றார்.
செபம்:
இந்நாட்களில் கற்பு என்றால் என்ன என்று அக்கறையின்றி கேட்கும் போதும், திரைப்படங்களிலும், சுவரொட்டிகளிலும் ஆபாசக் காட்சிகளை தெய்வாக்கும் சூழலில், நாங்கள் தூய ஆவியின் ஆலயமாக திகழ்ந்து, எம்மையும் பிறரையும் மதிக்கும் வரம் தாரும் இறைவா.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
குரு கோவார் Goar
பிறப்பு: 495, பிரான்சு
இறப்பு: 6 ஜூலை 575, ஜெர்மனி
பாதுகாவல்: கோவார் நகர், செங்கல் தொழிலாளிகள், கப்பலில் பணிபுரிவோர்
மறைசாட்சி கோடெலேவா Godeleva
பிறப்பு: 11 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு: 6 ஜூலை 1070, கிஸ்டல் Gistel, பெல்ஜியம்
பாதுகாவல்: காய்ச்சல், தொண்டை மற்றும் கழுத்து வலியிருந்து
துறவி செக்ஸ்பூர்கா Sexburga OSB
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, எஸ்செக்ஸ் Essex, இங்கிலாந்து
இறப்பு: 699, ஏலி Ely, இங்கிலாந்து
ஜூலை 7
புனித.வில்லிபால்டு (St.Willibald)
ஆயர்
பிறப்பு
22 அக்டோபர் 700
தென் இங்கிலாந்து
இறப்பு
7 ஜூலை 787
ஐஷ்டாட்(Eichstatt) , ஜெர்மனி
பாதுகாவல்: ஐஷ்டாட் நகரின் பாதுகாவலர்
வில்லிபால்டு தென் இங்கிலாந்து நாட்டில் ரிச்சர்டு என்பவரின் மகனாக பிறந்தார். 720 ஆம் ஆண்டு தந்தை ரிச்சர்டு, உடன் பிறந்த சகோதரர் உன்னிபால்டும்(Wunibald) உரோம் நகரை நோக்கி திருப்பயணம் மேற்கொண்டனர். அப்போதுதான் இவரின் தந்தை லக்கா(Lucca) என்னுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது வில்லிபால்டு உரோம் நகரிலேயே தங்கினார். இரண்டரை ஆண்டுகள் கழித்து இவர் பாலஸ்தீன மற்றும் கொன்ஸ்டாண்டீனோபிள் நோக்கி பயணம் மேற்கொண்டார். 729 ஆம் ஆண்டு அங்கிருந்து மீண்டும் இத்தாலி நாட்டிற்கு வந்தடைந்தார். அப்போதுதான் இவர் புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார்.
739 ஆம் ஆண்டு திருத்தந்தை 3ஆம் கிரகோரி அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் தன்னுடன் குருப்பட்டம் பெற்ற போனிபாஸ் என்பவருடன் சேர்ந்து ஜெர்மனி நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அப்போஸ்தலர் பணியை சிறப்பாக செய்தபின் 741 ல் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயரான பிறகும் கூட தனது மிஷனரி பணியை பவேரியா மறைமாநிலம் முழுவதிலும் சிறப்பாக செய்தார். 741- 787 ஆம் ஆண்டு வரை ஐஷ்டாட் என்ற மறைமாநிலத்தில் ஆயராக பணியாற்றினார். இவர் ஐஷ்டாட் மறைமாநிலத்தின் முதல் ஆயர் என்ற பெருமையை பெற்றார். இவர் 8 ஆம் நூற்றாண்டில் இவரின் பெயரால் ஐஷ்டாட்டில் பேராலயம் ஒன்றை எழுப்பினார். இவ்வாலயத்தில்தான் வில்லிபால்டு அவர்களின் கால்கள் வைக்கப்பட்டுள்ளது. உரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
1745 ஆம் ஆண்டு இவரின் 1000 ஆம் வருட ஜூபிலியை முன்னிட்டு, இவரது கல்லறையை பேதுரு பேராலயத்திலிருந்து ஐஷ்டாட்டிற்கு மாற்றப்பட்டது. இவர் வாழும்போதே ஆலயத்தில் பாடப்படும் பாடற்குழுவிற்கென ஓர் அழகிய மேடையை அமைத்தார். அவர் திருப்பலி ஆற்றும் போதெல்லாம், ஐஷ்டாட்டில் வாழும் ஒவ்வொருவரும் புனிதர்களே" என்று தவறாமல் கூறிவருவார்.
செபம்:
திருச்சபையை வழிநடத்துபவரே எம் இறைவா! திருச்சபையின் மீது கொண்ட ஆர்வத்தால், நாடு விட்டு நாடு வந்து உம் பணியை ஆற்றினார் புனித வில்லிபால்டு. இன்றும் அவரை போல உம் பணியை ஆற்றிவரும். ஒவ்வொரு உள்ளங்களையும் ஆசீர்வதியும். திறம்பட பணிபுரிய நல்ல உடல் உள்ள நலன்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி எத்தல்பூர்கா Ethelburga
பிறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, எஸ்செக்ஸ் Essex, இங்கிலாந்து
இறப்பு: 645, பாரேமவ்டியர்ஸ் Faremoutiers, பிரான்சு
பாதுகாவல்: கர்ப்பிணிப் பெண்கள்
ஜூலை 8
புனித. கிளியன் (St.Kilian)
ஆயர், மறைசாட்சி
பிறப்பு
640
வூர்ட்ஸ்பூர்க் ( Wurzburg )
இறப்பு
ஜூலை 8, 689
வூர்ட்ஸ்பூர்க் (Würzburg)
முத்திபேறுபட்டம்: 788
இவர் பெயரில் வூர்ட்ஸ்பூர்க்கில் ஓர் ஆலயம் உள்ளது. பல வருடங்களாக இவ்வாலயம் புனித தலமாக இருந்தது. அங்குள்ள கிரிப்தா (Krypta)என்ற சிற்றாலயத்தில் உள்ள கல்லறையில் இப்புனிதரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் ஆயராக இருந்தபோது பயன்படுத்திய, தலையில் வைக்கும் தொப்பியும்,கையில் பிடிக்கும் நீண்ட பெரிய சிலுவையும் பாதுகாக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டது. மற்றும் சில பொருட்களும், திருவிவிலியம் மைன்ஸ்(Mainz) என்ற மறைமாவட்டத்திற்கு சொந்தமான நூலகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. இவரின் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட அளவில் இருப்பதால் வரலாறாக வடிவமைக்கப்பட்டது.
இவர் 687 ஆம் ஆண்டில் மிக சிறந்த ஆயர் என்ற பெருமையை பெற்றார். வூர்ட்ஸ்பூர்க் மக்களிடையே இவரின் பெயரில் தனிப்பட்ட நம்பிக்கை வளர்ந்தது. 689 ஆம் ஆண்டு கெய்லானா (Gailana) என்ற நாட்டை சார்ந்த ஓர் அரசன், இனத்தின் பெயரால், ஆயர் கிளியன் கொலைசெய்ய திட்டமிட்டான். அவருடன் இணைந்து பணிபுரிந்த குருக்கள் கோலோண்ட்(Kolont) மற்றும் டோப்னான்(Tofnan) இருவரும் முதலில் கொல்லப்பட்டார்கள். நற்செய்திக்கு சான்று பகரும் விதமாக இருவரும் மறைசாட்சியானார்கள். பிறகு கிளியன் அவர்களின் செப வாழ்வினால் அரசர் குடும்பத்தினர் தூண்டப்பட்டு, வூர்ட்ஸ்பூர்க் வந்து ஆயரிடம் ஞானஸ்நானம் பெற்று மனந்திரும்பினர். பாவமன்னிப்பு பெற்று இறைவனை நம்பினர். ஆனால் அரசனின் படையை சேர்ந்தவர்கள், அரசருக்கு தெரியாமலேயே ஆயரை கொன்றார்கள். இவர்கள் மூவருக்குமே (கிளியன், கோலோண்ட், டோப்னான்) வூர்ட்ஸ்பூர்க் பேராலயத்தில் கல்லறைகள் உள்ளது. உலகப் போரில் இப்பேராலயமானது அழிவுக்குள்ளாக்கப்பட்டதால், 1910 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நொய்முன்ஸ்ரர் பேராலயம்(Neumünsterkirche) என்று இன்றும் அழைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பலியில் பங்கெடுக்கப்படுகின்றது.
செபம்:
புதுமைகள் செய்பவரே இறைவா! மறைசாட்சிகளாக மரித்த ஆயர்களையும், குருக்களையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்களின் வழியாக உம் இறையாட்சியை இம்மண்ணில் பரப்பினர். இன்றும் திருச்சபைக்கு எதிராக, பல அநீதிகள் நடக்கின்றது. நீரே இவைகளை கண்ணோக்கி நல்லதோர் தீர்ப்பை வழங்கி உம் திருச்சபையை வழிநடத்தியருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
திருத்தூதர் பவுலின் உதவியாளர்கள் அக்குய்லா மற்றும் பிரிஸ்கா Aquila und Prisca
பிறப்பு: 1 ஆம் நூற்றாண்டு, சிறிய ஆசியா Kleinasien
இறப்பு: 1 ஆம் நூற்றாண்டு, எபேசு அல்லது உரோம்
அரசர் எட்கார் Edgar
பிறப்பு: 944, வேசெக்ஸ் Wessex, இங்கிலாந்து
இறப்பு: 8 ஜூலை 975, இங்கிலாந்து
திருத்தந்தை 3 ஆம் ஹாய்கெனியஸ் Eugenius III
பிறப்பு: 11 ஆம் நூற்றாண்டு, இத்தாலி
இறப்பு: 8 ஜூலை 1153, டிவோலி Tivolli, இத்தாலி
திருத்தந்தையாக: 1145-1153
முன்ஸ்டர் நகர் முதல் துறவி லன்ராடா Landrada von Münster
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 690, முன்ஸ்டர்-பில்சென் Münster-Bilsen, பெல்ஜியம்
மறைசாட்சி சன்னிவா Sunniva
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, அயர்லாந்து
இறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, செல்யே Selje, நார்வே
ஜூலை 9
✠ புனித அகஸ்டின் ஸாவோ ரோங் ✠
( St. Augustine Zhao Rong )
மறைசாட்சி :
பிறப்பு : ----
இறப்பு : 1648–1930
கிங் டைனாஸ்டி மற்றும் சீனப் பேரரசு
(Qing dynasty and Republic of China)
முத்திபேறு பட்டம் : நவம்பர் 24, 1946
திருத்தந்தை 12ம் பயஸ்
புனிதர் பட்டம் : அக்டோபர் 1, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
நினைவுத் திருநாள் : ஜூலை 9
சீன நாட்டில் கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே கிறிஸ்துவின் நற்செய்திக்கு வித்திடப்பட்டிருக்கிறது. 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது.
618-907 வரை டாங் வம்சத்தினர் அரசுரிமை ஏற்று ஆட்சி செய்த காலத்தில் 2 நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். 13ம் நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து நற்செய்தி பரப்ப சென்ற ஜியோனித மோன்றோ கோர் வீனோ ( Gionitha Mondro Gor vino) போன்றோர் சீன மக்களின் முன் கூறப்பட்ட கலாச்சாரத்தை ஆழமாக புரிந்து வைத்திருந்தார்கள்.
இதனால் பெய்ஜிங் தலைநகரிலேயே ஆயர் தங்குவதற்கு ஆயர் இல்லம் அமைந்திருந்தது. இதனால் மறைபரப்பு பணியாளர் தங்கள் பணியில் முழுவீச்சில் இறங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.
பின்னர் 16ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மறைப்பணியாளர் பல துறவு சபைகளிலிருந்தும் மிக கவனமாக தேர்வுசெய்யப்பட்டு சீனா சென்றடைந்தனர்.
அவர்களில் ஒருவர் புகழ்பெற்ற சேசு சபைக் குரு மத்தேயுரிச்சி. இவ்வாறு சென்றவர்கள் முதலில் சீன நாட்டின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்திருந்தனர். அதோடு கணிதம், விஞ்ஞானம் போன்ற கலைகளிலும் சிறந்தவர்களாய் இருந்தனர். இதனால் சீன மக்களிடம் எளிதாக தொடர்புகொண்டனர். அவர்களின் மனதில் இடம்பிடித்து அவர்களுக்கேற்ப நற்செய்தி பணியை பரப்பினர். 16, 17ம் நூற்றாண்டுகளில் ஏராளமானோர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திருமுழுக்கு பெற்றனர். இவ்வாறு கிறிஸ்தவர்களானவர்கள் மெய்மறை கற்று, தங்களை உயர்ந்தவர்களாக கருதினர்.
அப்போது சீன நாட்டு மன்னன் 1692ல் நாடு தழுவிய மறை சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினர். இதன்மூலம் விரும்புபவர்கள் மெய்மறையில் சேரலாம். கிறிஸ்துவை பின்பற்றலாம் என்றும் கூறினான். இதன் பலனாக ஏராளமான மக்கள் திரண்டுவந்து ஞானஸ்நானம் பெற்றனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவரின் பிரதிநிதி டூர்னோனின் (Durnon) அறிவின்மையால் "திருவழிபாட்டில் சீன ரீதி" என்பதை அறிமுகப்படுத்தினார். இதனால் மன்னன் ஆத்திரமடைந்து கிறிஸ்தவர்களை தாக்கினான். அண்டை நாடான ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள், சீனாவிற்கு வந்து கிறிஸ்தவர்களை கொன்று குவித்தார்கள். 19ம் நூற்றாண்டின் பாதி வரை இக்கொடுமை நடந்தவண்ணமாய் இருந்தது. பல ஆலயங்களும் தாக்கப்பட்டது.
1648ல் "மஞ்ச் டார்டர்" (Manj Dardar) இனத்தை சேர்ந்த கொடியவர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஊர் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அத்தோடு புனித சாமிநாதர் சபையை சார்ந்த தந்தை பிரான்சிஸ் பெர்னாண்டசைக் கொன்றனர். வியாகுல அன்னை மறையுண்மைகளை கூறி செபமாலை செபிக்கும்போது, அவரின் உடனிருந்த தோழர்களையும் கொன்றனர். இவர்களே சீன மண்ணில் முதல் மறைசாட்சிகள் ஆவர்.
மீண்டும் 1715-1747 வரை நற்செய்தி பரப்பிய ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்களையும் கொன்றனர். இன்னும் பல மறைப்பணியாளர்களையும் கொன்றனர். 1796-1821 முடிய ஆட்சி செய்த மன்னன் கியா கின் (Kiya Kin) கிறிஸ்தவ மறைக்கு எதிராக பல சட்டங்களை விதித்தான். சட்டங்களை மீறியவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை கொடுத்தான். பல கிறிஸ்தவர்கள் கழுத்து நெறிக்கப்பட்டும், தலை வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 5ம் நூற்றாண்டிலிருந்து 1862ம் ஆண்டு வரை கொல்லப்பட்டவர்களில் 119 பேர் முத்திபேறுபட்டம் பெற்றவர்கள்
செபம் :
அன்பே உருவான இறைவா!
உம்மை இவ்வுலகில் பரப்புவதற்காக பாடுபட்ட பலர், உம் பெயரால் உயிரழந்தனர். இன்றும் எம் நாட்டில் மறை பணியாளர்களுக்கு பல கொடுமைகள் நேருகின்றது. உம் மக்களுக்கு எதிராக செயல் படுகிறவர்களை நீர் கருணை கூர்ந்து காத்தருளும்.
அவர்கள் மனந்திரும்பி உம்மை ஏற்று, வாழ்வில் இன்பம் கண்டு, மற்றவர்களையும் வாழ வைக்க உம் அருள் தாரும், ஆமென்
ஜூலை 11
புனித பெனடிக்ட்(St.Benedict)
துறவி
பிறப்பு
480
நார்சியா(Norcia), உம்பிரியா(Umbria)
இறப்பு
21 மார்ச் 547
இவர் ஓர் உயர்குலத்தில் பிறந்தவர். இவர் உரோம் நகரில் கல்வி பயின்றார். அங்கு படித்தபோது இளைஞரிடையே நிலவிய தீமைகள் இவரை அதிரவைத்தது. இதனால் உடனே உரோமையை விட்டு ஓடினார். அப்போதுதான் தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்கத் திட்டமிட்டார். ஒரு மலை உச்சிக்கு தனியாக சென்றார். அங்கே எம்மானூஸ் என்ற தவ முனிவரை சந்தித்தார். இம்முனிவர் காட்டிய வழியில் 3 ஆண்டுகள் இவருக்கு சற்று அப்பால் சென்று தாமும் முனிவராக வாழ்ந்து வந்தார். இவர் தவ வாழ்க்கை மேற்கொண்டதை அறிந்த பலரும் அங்கு இவரை சூழ்ந்து கொண்டனர். இதன் விளைவாக தோன்றியதுதான் "புனித பெனடிக்ட் துறவற சபை".
இவர் தன் சபைத் துறவிகளுக்கு கிறிஸ்துவிடம், மாறாத எவராலும் பிரிக்க முடியாத உறவு கொண்டிருக்கக் கற்றுத் தந்தார். அத்தோடு அனைத்திலும் ஞானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கட்டளையிட்டார். கூட்டு வாழ்வு வழியாக, ஒற்றுமையை உணரவைத்தார். ஜெபமும், உழைப்பும் என்பதை இச்சபையின் குறிக்கோளாகக்கொண்டனர். பெனடிக்ட் தனிமையை நாடினாலும், அடிக்கடி மக்களை சந்தித்து வந்தார். நோயாளிகளை குணமாக்கினார். வறுமையில் வாடியோர்க்கு பொருளுதவி அளித்தார். ஏழைகளுக்கு தவறாமல் உணவு வழங்கினார். பலமுறை, இறந்தோரை உயிர்த்தெழச் செய்தார். தனது இறப்பை 6 நாட்களுக்கு முன்னறிவித்தார். தனக்கென்று கல்லறை குழி ஒன்றைத் தோண்டினார். ஒருநாள் திருப்பலியில் திருவுணவு உண்டபின், சிற்றாலயத்தில் நின்று செபித்துக் கொண்டிருக்கும்போது, தனது கைகளை, இவர் மேலே உயர்த்தி செபிக்கும்போது உயிர் பிரிந்தது.
புனித பெனடிக்ட்தான் திருவழிபாட்டு முறைக்கு அடித்தளமிட்டார். தினந்தோறும் ஆராதனை என்ற முறையையும் இவர்தான் அறிமுகப்படுத்தினார். 12 ஆம் பத்திநாதர் இவருக்கு "ஐரோப்பாவின் தந்தை" என்று பட்டம் சூட்டினார்.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உம்மீது கொண்ட அளவில்லா அன்பினால் புனித பெனடிக்ட் தன் பெயரில் ஓர் சபையை தோற்றுவித்தார். உலகெங்கும் இச்சபையியனர் சென்று உம் நற்செய்தியை பரப்புவதுடன், பல ஏழைகளுக்கு வழிகாட்டி, வாழ்வை அளித்துள்ளனர். நாங்கள் எங்களின் பொருட்களில் ஒரு சிலவற்றையாவது ஏழைகளுக்கு கொடுத்து, பகிர்தலில் வளரவும், வாழவும் உம் வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
டிரியர் நகர் ஆயர் ஹில்டூல்ஃப் Hildulf von Trier
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, பவேரியா
இறப்பு: 11 ஜூலை 700, எல்சாஸ் Elsaß, பிரான்சு
ஓல்கா Olga
பிறப்பு: 890, ரஷ்யா
இறப்பு: 970, ரஷ்யா
பேராயர் மறைசாட்சி ஒலிவர் புளுங்கெட் Oliver Plunket
பிறப்பு: 1629, அயர்லாந்து,
இறப்பு: 11 ஜூலை 1681, லண்டன்
மறைசாட்சி பிளாசிடஸ் Placidus
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு சுவிஸ்
இறப்பு: 720, டிசெண்டிஸ் Disentis, சுவிஸ்
டிசெண்டிஸ் நகர் துறவி சிகிஸ்பெர்ட் Sigisbert von Disentis
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, டிசெண்டிஸ், சுவிஸ்
ஜூலை 12
புனித யோவான் குவால்பெர்டூஸ்(St.Johannes Cualbertu)
சபை நிறுவுனர்
பிறப்பு
995
புளோரன்ஸ், Florence
இறப்பு
1073, 12 ஜூன்
டோஸ்கானா, Toscana
புனிதர் பட்டம்: 1193, திருத்தந்தை 3 ஆம் செலஸ்டின், Pope Cholestin III
இவர் ஓர் உயர் குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலிருந்தே ஆன்மீக காரியங்களில் அக்கறை காட்டி வளர்க்கப்பட்டார். தான் ஓர் துறவியாக வேண்டுமென்று இளம் வயதிலிருந்தே ஆசைப்பட்டார். தன் உறவினர் ஒருவரின் துணைகொண்டு, ஆன்மீக வாழ்வில் முன்னேறினார். அவரின் உதவியினால் துறவற சபைக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் உதவி செய்தவரை குடும்பத்தில் உள்ளவர்கள் கொன்று போட்டார்கள். அவரோடு சேர்த்து யோவானின் உடன்பிறந்த சகோதரரையும் கொன்றார்கள். ஆனால் யோவான் கொலைக்காரர் யார் என்று கண்டுபிடித்தார். கொலை செய்தவர் யோவானிற்கு பயந்தார். ஆனால் அவரோ கொலைகாரரை மன்னித்து, பாவமன்னிப்பு பெறச்செய்து, தினமும் திருப்பலியில் பங்குபெறுமாறு மனமாற்றினார். அதன்பிறகுதான் துறவியாகும் முடிவை கைவிடாமல் புனித பெனடிக்ட் துறவற இல்லம் சென்று 1013 ஆம் ஆண்டில் துறவியானார்.
யோவான் பல ஆண்டுகள் துறவறமடத்தில் வாழ்ந்த பிறகு 1080 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி, புதிதாக ஒரு துறவற சபையை ஆரம்பித்தார். புனித பெனடிக்ட் துறவற சபை ஒழுங்குகளையே, புதிய சபையிலும் கைபிடித்தார். இப்புதிய சபைக்கு “Vallombrosanerorden” என்று பெயர் சூட்டினார். பெனடிக்ட் துறவற சபையிலிருந்து பிரிந்தாலும் கூட அந்த கடினமான வாழ்வை தானும் வாழ்ந்து, தன் சபையில் இருந்தவர்களையும் வாழவைத்தார். துறவற இல்லத்தைவிட்டு யாரும் வெளியில் போகக்கூடாது என்ற சட்டத்தையும், இவ்வுலக வாழ்வை துறவற வாழ்வில் துறவிகள் ஒருபோதும் வாழக்கூடாது என்ற ஒழுங்கையும் கடினமாக கடைபிடிக்கக்கூறினார். பல துறவற இல்லங்களை தொடங்கிய யோவான் அவ்வப்போது இல்லங்களை தவறாமல் சந்தித்து, உற்சாகத்துடன் இறைவனின் பணியில் பங்குபெற துறவிகளை ஊக்கமூட்டினார். அவ்வாறு பார்வையிட டோஸ்கானாவில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக இறந்தார். இவரின் உடல் டோஸ்கானாவிலுள்ள இவரால் தொடங்கப்பட்ட துறவற இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! ஏழுமுறை அல்ல மாறாக ஏழு எழுபதுமுறை மன்னிக்க வேண்டுபவரே! கொலைக்காரனை மன்னித்து, அன்பு செய்து உம்பால் ஈர்த்த புனித யோவானைப்போல, நாங்களும் பிறரை மனதார மன்னித்து, அன்பு செய்து உம் மகிழ்ச்சியில் நிலையான பங்கு வகிக்க, உம் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ரின் நகர் குழந்தை அந்திரேயாஸ் Andreas von Rinn
பிறப்பு: 26 நவம்பர் 1459, இன்ஸ்பூர்க் Innsbruck, ஆஸ்திரியா
இறப்பு: 12 ஜூலை 1462, ரின் Rinn
ஐசன் Jason
பிறப்பு: 1 ஆம் நூற்றாண்டு, தெசலோனிக்கா Thessalonika, கிரின்லாந்து
இறப்பு: 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டு, சிப்பெர்ன் Zypern
டிரியண்ட் நகர் ஆயர் ஜோவினுஸ் Jovinus von Trient
பிறப்பு: 4 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 4 ஆம் நூற்றாண்டு, டிரியண்ட், இத்தாலி
ஜூலை 13
புனித இரண்டாம் ஹென்றி(St.Henry)
அரசர்
பிறப்பு
973
பவேரியா (Bavaria), ஜெர்மனி
இறப்பு
1024
பாம்பர்க்(Bamberg), ஜெர்மனி
புனிதர்பட்டம்: 1146, திருத்தந்தை 3 ஆம் யூஜின்
இவர் பவேரியா நாட்டு அரசராக 995 ல் உரோம் பேரரசின் மன்னராக 1002 ல் உயர்வுப்பெற்றார். திருச்சபையின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் போர்களில் ஈடுபடத் தயங்காதவர். இவர் துறவற மடத் தலைவர்களையும், ஆயர்களையும் நியமனம் செய்யும் அதிகாரத்தை பெற்றிருந்தார். இவரின் துணைவியாரும் புனித வாழ்க்கை வாழ்ந்து புனிதர் பட்டம் பெற்றார். உரோம் நகரில் ஏற்பட்ட கலகத்தை நசுக்க திருத்தந்தை 8ஆம் ஆசீர்வதிப்பருக்கு மன்னர் உறுதுணையாயிருந்தார். இவர் மற்ற நாடுகளில் அமைதி நிலவ அரும்பாடுபட்டார்.
இவர் தன் நாட்டு மக்களுக்கு பின்வரும் இறைவசனத்தை அடிக்கடி கூறிவந்தார். "அழிந்து போகும் செல்வத்தை துறந்துவிட்டு என்றும் அழியா, நிலையான செல்வத்தை வான்வீட்டில் சேர்த்து இடத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டும்" என்பதை மறக்கக்கூடாது என்பார். இவ்வுலகில் நாம் பெறும் புகழ் புகையாக மறைந்துவிடும். எனவே நிலையான பேரின்பத்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். தன் நாட்டில் கடவுளின் இரக்கத்தைப் பெற, பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டினார். அவற்றின் பராமரிப்பிற்காக செல்வங்களை வாரி வழங்கினார். பாக்பெர்கில்லிருந்து பணத்தை செலவிட்டார். இறுதிவரை இறைப்பணியாற்றி அவ்வாலய பணியின்போதே உயிர் துறந்தார்.
செபம்:
எல்லாம் வல்லவரே! அரசரான போதும் கூட, இவ்வுலக காரியங்களின் மேல் அக்கறை கொள்ளாமல், உம் மேல் அக்கறைகொண்டு வாழ்ந்தார் அரசன் ஹென்றி. தன் நாட்டு மக்களையும், விண்ணகத்தில் செல்வம் சேர்க்க தூண்டினார். இவரால் பவேரியா முழுவதும் இறைபக்தி பரவிற்று. இப்பக்தியானது அம்மக்களிடையே எப்போதும் நிலைக்க, அவர்களை வழிநடத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
வூர்ட்ஸ்பூர்க் ஆயர் அர்னோ Arno von Würzburg
பிறப்பு: 9 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 13 ஜூலை 892, கேம்னிட்ஸ் Chemnitz, சாக்சன்
சபைநிறுவுநர் யோஹான்னஸ் ஹோபெர் Johannes Höver
பிறப்பு: 10 நவம்பர் 1816, நார்ட்ரைன்-வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி
இறப்பு: 13 ஜூலை 1864, ஆஹன் Aachen, ஜெர்மனி
அரசி குனிகுண்டே Kunigunde
பிறப்பு: 980, லுக்சம்பூர்க் Luxumburg
இறப்பு: 3 மார்ச் 1033 அல்லது 1039, கவ்புங்கன் kaufungen, ஹெசன் Hessen
பாதுகாவல்: பாம்பெர்க் மறைமாவட்டம், கர்ப்பிணிபெண்கள், குழந்தைகள்
ஜூலை 14
புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis)
குரு
பிறப்பு
1550
ஷீட்டி(Chieti), அப்ருட்சி(Abruzzi)
இறப்பு
1614
உரோம்
பாதுகாவல்: மருத்துவர்களின் பாதுகாவலர்
இவர் தன்னுடைய குழந்தை பருவத்தில் தாயை இழந்தார். தந்தை இவரைவிட்டு அகன்று போனார். இதனால் யாரும் கவனிப்பாரற்று, ஆதரவற்றிருந்தார். இளமையிலேயே சூதாட்டத்திற்கு அடிமையானார். 17 வயதில் துருக்கியருடன் போரிட வெனிஸ் நகரிலிருந்த படைப்பிரிவில் சேர்ந்தார். அங்கு அவரின் காலில் புண் ஏற்பட்டு , ஆறாமல் இருந்தது. இதனால் உரோமையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவமனையில் நடைபெற்ற திருப்பலியில் பங்கெடுக்க ஒரு நாள் சென்றார். அப்போது கப்புச்சின் சபை குரு ஆற்றிய மறையுரை இவரை மறுமனிதனாக்கியது.
அதன்பின் தானும் ஓர் குருவாக வேண்டுமென்று விருப்பம் கொண்டு, ஓரளவு புண் குணமடைந்த உடன் கப்புச்சின் துறவற சபை ஒன்றை நாடி தன் விருப்பத்தை தெரிவித்தார். அங்கு அவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டாலும் புண் முழுமையாக குணமாகாததால் வெளியே அனுப்பப்பட்டார். மீண்டும் சென்று குருத்துவ பயிற்சிகள் அனைத்தையும் பெற்று, தனது 34 ஆம் வயதில் குருவானார். அதன்பிறகு ஒரு சபையை நிறுவினார். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயாளிகளுக்குக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளை தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும் , தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைகளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இச்சபையின் பணியாக இருந்தது. இறுதியாக தனது 64ஆம் வயதில் இவரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! நோயுற்றோர் மீது தனியன்பு கொண்டு கமில்லஸ் பணிபுரிந்தார். அவருடைய பரிந்துரையால் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மை அன்பு செய்து, எங்கள் இறப்பு வேளையில் நம்பிக்கையோடு உம் திருமுன் வந்து சேர அருள்புரியும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
மார்சியானோ நகர் சபைநிறுவுநர் ஆஞ்சலீனோ Angelina von Marsciano
பிறப்பு: 1377, ஓர்விட்டோ Orvieto, இத்தாலி
இறப்பு: 14 ஜூலை 1435, போலிக்னோ Foligno, இத்தாலி
டெண்டெலின் ( குழந்தை) Dentelin
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, ஹென்னேகாவ் Hennegau, பெல்ஜியம்
இறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, பெல்ஜியம்
பாதுகாவல்: நோர்ட்ரைன்-வெஸ்ட்ஃபாலன் நகர் Nordrhein Westfalen
கோமோ நகரின் முதல் ஆயர் பெலிக்ஸ் Felix von Como
பிறப்பு: 4 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 14 ஜூலை 391, கோமோ, இத்தாலி
ஜூலை 15
புனித பொனவந்தூர் (St. Bonaventure)
ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)
பிறப்பு
1218
தஸ்கனி ( Tuscany), இத்தாலி
இறப்பு
1274
லயனஸ்(Lyons), பிரான்ஸ்
இவரின் திருமுழுக்கு பெயர் ஜான். இவர் 4 வயது இருக்கும்போது கொடிய நோயால் தாக்கப்பட்டார். புனித அசிசியாரிடம் வேண்டிய பிறகு அவரின் நோய் அவரைவிட்டு விலகியது. இதனால் இவர் தன் இளம் வயதிலிருந்தே அசிசியாரிடம் அளவு கடந்த பக்திக்கொண்டிருந்தார். தன் படிப்பை முடித்த பின், தன்னை புனித அசிசி சபையில் அர்ப்பணிக்க விரும்பினார். துறவற சபையில் தன்னை அர்ப்பணித்தபின், இவரின் 36 ஆம் வயதில், சபைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 16 ஆண்டுகள் சபையை நன்கு வளர்த்தெடுத்தார். இவர் அச்சபைக்கு ஆற்றியத்தொண்டால், இவர் இரண்டாம் பிரான்சிஸ் என்றழைக்கப்பட்டார்.
இவர்தான் மூவேளை செபத்தை முதன்முதலில் தன் சபையில் அறிமுகப்படுத்தினார். இன்று இச்செபம் திருச்சபையிலும் வேரூன்றியுள்ளது. இவர் பலரின் கட்டாயத்தினால் அல்பேனிய நாட்டின் ஆயராகவும், கர்தினாலாகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 2 ஆம் லியோன் பொதுச் சங்கத்தில், சில கருத்துக்களை நுணுக்கமாய் ஆராய தயாரித்துக்கொடுத்தார். அப்போதுதான் கிழக்கு, மேற்கத்திய திருச்சபைகளையும் ஒன்று சேர்த்தார். லியோன் பொதுசங்கம் நடக்கும்போது, இவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். திருத்தந்தையிடமிருந்து நோயில் பூசுதலை பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் இறையன்பு, செபம், காட்சி தியானம் இவைகளில் தன் நேரங்களை செலவிட்டார்.
இவர் ஒருநாள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அப்போதுதான் திருத்தந்தை 10 ஆம் கிரகோரியார் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இதை அறிவிக்க, கர்தினாலின் தொப்பியையும் எடுத்து சென்று, செய்தியை அவரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் தன் வேலையை முடித்து வரும்வரை அத்தொப்பியை அருகிலிருக்கும் மரக்கிளையில் தொங்கவிட சொன்னார். இதிலிருந்து அவரின் தாழ்ச்சி எத்தமையது என்பது வெளிப்பட்டது.
செபம்:
என்றும் வாழும் கடவுளே! அசிசியாரை போலவே தன் வாழ்வை வாழ்ந்த புனித பொனவெந்தூரை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். ஏழை மக்களின்மேல், அளவில்லா அன்பு கொண்டு நோயால் தாக்கப்பட்டவர்களுக்காக தன்னையே அர்ப்பணம் செய்து நோய்களை அன்பின் வழியாக குணமாக்கிய இப்புனிதரை போல, இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மருத்துவரும், தங்களிடம் வருகின்ற நோயாளிகளிடம் அன்புகாட்டி வழிநடத்த தேவையான வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
பாடன் நகர் பெர்ன்ஹார்டு Bernhard von Baden
பிறப்பு: 1428, பாடன் வூர்ட்டம்பர்க், ஜெர்மனி
இறப்பு: 15 ஜூலை 1458, மோங்காலிரீ Moncalieri, இத்தாலி
பாதுகாவல்: ஃப்ரைபூர்க் மறைமாவட்டம், இளைஞர்கள்.
பிரேஸ்லவ் மாநிலத்தலைவர் சேஸ்லவ்ஸ் Ceslaus von Breslau OP
பிறப்பு: 1180, சிலேசியன் Schlesien, போலந்து
இறப்பு: 15 ஜூலை 1242, பிரேஸ்லவ் Breslau, போலந்து
துறவி டொனால்டு Donald, Einsiedler
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, ஸ்காட்லாந்து
இறப்பு: 716, ஃபோர்ட்ஃபாசிரே Fortfarshire, ஸ்காட்லாந்து
பலேர்மோ நகர் துறவி ரோசாலியா Rosalia von Palermo
பிறப்பு: 1100, செசிலியன் Sizilien, இத்தாலி
இறப்பு: 1160, செசிலியன் Sizilien, இத்தாலி
பாதுகாவல்: பலேர்மோ மறைமாவட்டம், கொள்ளை நோயிலிருந்து
ஜூலை 16
✠ தூய கார்மேல் அன்னை ✠
( Our Lady of Mount Carmel )
"தூய கார்மேல் அன்னை" அல்லது "தூய கார்மேல் மலை அன்னை" அல்லது "புனித உத்தரிய மாதா" என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயர்களாகும்.
கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை அன்னை மரியாளின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே அன்னை மரியாளுக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.
15ம் நூற்றாண்டில், அன்னை மரியாளின் உத்தரியம் என்னும் அருளிக்கத்தின் பக்தியானது பரவ துவங்கியது. அன்னை மரியாளே உத்தரியத்தை புனித சைமன் ஸ்டாக் என்னும் கார்மேல் சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக விசுவசிக்கப்படுகின்றது. 16 ஜூலை கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழா நாள் மற்றும் கார்மேல் உத்தரிய திருவிழாவாகும்.
தூய கார்மேல் அன்னை, சிலி நாட்டின் பாதுகாவலி ஆவார்.
இவ்விழாவானது, கார்மேல் சபையினரின் அதிமுக்கியமான விழாவாகும். கார்மேல் சபையினர் இந்த பெயரைத் தெரிந்து கொள்ள முக்கியமான ஒரு காரணம் உண்டு. கார்மேல் மலையிலே அன்னை புனித கன்னி மரியாளுக்குத் தோத்திரமாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கபட்டது. அன்னை பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னரே அந்த ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.
எபிரேய மொழியில் "கார்மேல்" என்ற சொல்லுக்கு "தோட்டம்" என்பது பொருள். பாலஸ்தீன நாட்டில் ஹைபா வளைகுடாவில், 1800 அடி உயரத்திலிருக்கும் தோட்டத்தில்தான் பழைய ஆகமத்தில் இறைவாக்கினர் எலியா தங்கி தன் செபத்தில் நாட்களை கழித்தார். 12ம் நூற்றாண்டில் வனத்துறவியர் சிலர் இதே மலைக்கு சென்று அங்கு வாழ்ந்து வந்தனர். பின்பு இவர்கள் ஒரு சபையை நிறுவினர்.
ஜூலை 16, 1251ல் கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித சீமோன்ஸ்தோக் என்பவருக்கு இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் தேவதாய் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இவருக்கு, அன்னை மரியாள் உத்தரியம் அணிந்து கொண்டு வந்து காட்சி கொடுத்து, உத்தரிய பக்தியை இவ்வுலகில் பரப்பும்படியாக கேட்டுக் கொண்டதன் பேரில், இன்றும் அப்பக்தி பரப்பப்பட்டு பலன் அடையப்படுகின்றது.
நம் பரலோக அன்னை உத்தரியத்தைக் கண்பித்தாள்.
அந்த உத்தரியத்தைத் தரித்திருக்கும் அனைவருக்கும் பரலோக கொடைகளையும் தனது பாதுகாவலையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினார். வெறுமனே உத்தரியத்தைத் தரித்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும். உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க அதிகாரம் பெற்ற ஒரு குரு, உத்தரியத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
சிந்தனை :
உத்தரியத்தையோ, உத்தரிய சுரூபத்தையோ தரித்திருந்தால் மட்டும் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ பெருமுயற்சி செய்ய வேண்டும்.
செபம் :
இறைவனின் தாயே, உம்முடைய உத்தரிய திருஉருவத்தை தரித்திருப்பவர்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ எங்கள் கரம் பிடித்து வழி நடத்துமம்மா!
ஆமென் †
ஜூலை 18
புனித அன்ஸ்வெர் (St.Answer of Ratzeburg)
மறைசாட்சி
பிறப்பு
--
இறப்பு
1066
அன்ஸ்வெர் 11 ஆம் நூற்றாண்டில் ராட்சபெர்க் என்ற ஊரிலிருந்த புனித பெனடிக்ட் துறவற சபையில் துறவியாக வாழ்ந்தார். இவர் துறவியான பிறகு மிஷினரியாக சலேசியன் நாட்டிற்கு வந்தார். மறைபரப்பு பணியின்போது, ஒரு சில முரடர்களால் இவர் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்த ராட்சபெர்க் மக்கள், இவரின் உடலை கொண்டு வந்து ராட்சபெர்கில் அடக்கம் செய்தனர். அன்றிலிருந்து இவரின் கல்லறையில் ஏராளமான மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர். இவரின் பெயரில் அவ்வூரில் பெரிய சிலுவை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அச்சிலுவையின் முன் செபிக்கும்போது, பல்வேறு பலன்களை மக்கள் பெற்றுவருகின்றனர்.
செபம்:
அன்பான இறைவா! மறைபரப்பு பணியை செய்ததால் மறைசாட்சியாக தன் உயிரை நீத்தார் அன்ஸ்வெர். இவரைப்போல இன்று மரிக்கும் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
இசையமைப்பாளர் அர்னால்டு Arnold von Arnoldsweiler
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, கிரின்லாந்து
இறப்பு: 800, அர்னால்டுஸ்வைலர், ஜெர்மனி
பாதுகாவல்: இசைக்கருவிகள் தயாரிப்போர், இசையமைப்பாளர்கள், நல்மரணம்
மெட்ஸ் நகர் ஆயர் அர்னூல்ப் Arnulf von Metz
பிறப்பு: 570, நான்சி Nancy, பிரான்சு
இறப்பு: 18 ஜூலை 640 ரேமிரேமொண்ட் Remiremont, பிரான்சு
பாதுகாவல்: பீர் தயாரிப்போர், பொருட்களை இழந்தோர்
செக்னி நகர் ஆயர் புரூனோ Bruno von Segni
பிறப்பு: 1047, செலேரோ Sodero, இத்தாலி
இறப்பு: 18 ஜூலை 1123, செக்னி Segni, இத்தாலி
ஆயர், மறைசாட்சி ஃப்ரீட்ரிக் Friedrich von Utrecht
பிறப்பு: 780, ஃப்ரீஸ்லாந்து Friesland
இறப்பு: 18 ஜூலை 835, ஊட்ரெக்ட் Utrecht, நெதர்லாந்து
லிப்னிக்கா நகர் துறவி, மறைபோதகர் சீமோன் Simon von Liphica OFM
பிறப்பு: 1438, லிப்னிக்கா Lipnica, போலந்து
இறப்பு: 18 ஜூலை 1482, போலந்து
ஜூலை 18
புனித அன்ஸ்வெர் (St.Answer of Ratzeburg)
மறைசாட்சி
பிறப்பு
--
இறப்பு
1066
அன்ஸ்வெர் 11 ஆம் நூற்றாண்டில் ராட்சபெர்க் என்ற ஊரிலிருந்த புனித பெனடிக்ட் துறவற சபையில் துறவியாக வாழ்ந்தார். இவர் துறவியான பிறகு மிஷினரியாக சலேசியன் நாட்டிற்கு வந்தார். மறைபரப்பு பணியின்போது, ஒரு சில முரடர்களால் இவர் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்த ராட்சபெர்க் மக்கள், இவரின் உடலை கொண்டு வந்து ராட்சபெர்கில் அடக்கம் செய்தனர். அன்றிலிருந்து இவரின் கல்லறையில் ஏராளமான மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர். இவரின் பெயரில் அவ்வூரில் பெரிய சிலுவை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அச்சிலுவையின் முன் செபிக்கும்போது, பல்வேறு பலன்களை மக்கள் பெற்றுவருகின்றனர்.
செபம்:
அன்பான இறைவா! மறைபரப்பு பணியை செய்ததால் மறைசாட்சியாக தன் உயிரை நீத்தார் அன்ஸ்வெர். இவரைப்போல இன்று மரிக்கும் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
இசையமைப்பாளர் அர்னால்டு Arnold von Arnoldsweiler
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, கிரின்லாந்து
இறப்பு: 800, அர்னால்டுஸ்வைலர், ஜெர்மனி
பாதுகாவல்: இசைக்கருவிகள் தயாரிப்போர், இசையமைப்பாளர்கள், நல்மரணம்
மெட்ஸ் நகர் ஆயர் அர்னூல்ப் Arnulf von Metz
பிறப்பு: 570, நான்சி Nancy, பிரான்சு
இறப்பு: 18 ஜூலை 640 ரேமிரேமொண்ட் Remiremont, பிரான்சு
பாதுகாவல்: பீர் தயாரிப்போர், பொருட்களை இழந்தோர்
செக்னி நகர் ஆயர் புரூனோ Bruno von Segni
பிறப்பு: 1047, செலேரோ Sodero, இத்தாலி
இறப்பு: 18 ஜூலை 1123, செக்னி Segni, இத்தாலி
ஆயர், மறைசாட்சி ஃப்ரீட்ரிக் Friedrich von Utrecht
பிறப்பு: 780, ஃப்ரீஸ்லாந்து Friesland
இறப்பு: 18 ஜூலை 835, ஊட்ரெக்ட் Utrecht, நெதர்லாந்து
லிப்னிக்கா நகர் துறவி, மறைபோதகர் சீமோன் Simon von Liphica OFM
பிறப்பு: 1438, லிப்னிக்கா Lipnica, போலந்து
இறப்பு: 18 ஜூலை 1482, போலந்து
ஜூலை 19
புனித.சிம்போரோசா (St.Symphorosa)
பிறப்பு
--
இறப்பு
120
உரோம்
இவர் தனது ஏழு குழந்தைகளுடன் உரோம் நகரில் வசித்து வந்தார். கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டதால் தன் கணவரால் கைவிடப்பட்டார். நாளடைவில் இவர் கணவரும், இவரின் பொருட்டு கொலை செய்யப்பட்டார். இருப்பினும் தன் குழந்தைகளையும், கிறிஸ்துவ நெறிக்கு சான்றுபகரும் முறையில் வளர்த்தார். தானும் அவ்வாழ்வை வாழ்ந்தார். அப்போது அரசர் அட்ரியான்(Hadrien), தான் எழுப்பிய ஆலயம் ஒன்றை மிக ஆடம்பரமாக திறந்துவைத்தான். சிம்போரோசாவும் தன் குழந்தைகளும் தவறாமல் அவ்வாலயத்திற்கு சென்று ஆராதனை வைத்து செபித்தனர். இதை கவனித்த அரசன் அவர்களை ஏளனம் செய்தான். உம் மன்றாட்டை கடவுள் கேட்பாரா, இல்லையா என்று பார்க்க உம் பிள்ளைகளை கொன்று அவர்களின் வழியாக எனக்காக செபம் செய் என்று கூறினான். ஆனால் சிம்போரோசா அரசனிடம், உனக்காக என் பிள்ளைகளை நான் கொல்லமாட்டேன் என்று தைரியமுடன் அரசனிடம் கூறினார். இதனால் அரசன் அதிர்ச்சி அடைந்து கோபம் கொண்டு ஹெர்குலஸ்(Herkules) என்றழைக்கப்படும் ஆலயத்திற்கு கொண்டு சென்றான். அவ்வாலயத்தில் வைத்து, அவர் குழந்தைகளின் கண்ணெதிரில் முகத்தை கிழித்து, தலைமுடியை தன் கையால் பிடுங்கி எரிந்தான். பின்னர் ஆணிகளால் அறைந்து கொன்றான். தாயில்லா ஏழு குழந்தைகளையும் தன் விருப்பப்படி ஒன்றன்பின் ஒன்றாக கொன்று எரிந்தான். இதைக்கண்ட சில கிறிஸ்துவர்கள் அவர்கள் அனைவரின் உடலையும் ஒன்று சேர்த்து, உரோம் நகரில் புதைத்தனர். சில வருடங்கள் கழித்து அவர்களின் கல்லறை மேல் "ஏழு சகோதரர்கள்" என்ற பெயரில் ஆலயம் எழுப்பப்பட்டது.
செபம்:
இரக்கமே உருவான இறைவா! உம்மீது விசுவாசம்கொண்டு வாழ்ந்து, உயிர் நீத்த சிம்போரோசாவையும் அவரின் குழந்தைகளையும் நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்களைப்போல உமக்காக இன்று உயிர் துறக்கும் அனைவரையும் நீர் கண்ணோக்கியருளும். தன் உறவுகளை இழந்து வாடும் அனைவருக்கும் நீர்தாமே ஆறுதலும், தேறுதலுமாய் இருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஆயர் பெர்னூல்ப் Bernulf von Utrecht
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, நெதர்லாந்து
இறப்பு: 19 ஜூலை 1054, ஊட்ரெக்ட், நெதர்லாந்து
பாதுகாவல்: நோயுள்ள குழந்தைகள், குழந்தைப்பேறு இல்லாதோர், திருமணமான பெண்கள்
செலிலா நகர் ஜிஸ்டா மற்றும் ருப்பினா Justa und Rufina
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, செவிலா, ஸ்பெயின்
இறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, செவிலா,ஸ்பெயின்
பாதுகாவல்: செவிலா நகர், புர்கோஸ் நகர்
ஜூலை 20
புனித அப்போலினாரிஸ் (St.Apollinaris)
ஆயர் (Bishop)
பிறப்பு
--
இறப்பு
2 ஆம் நூற்றாண்டு
இவர் துருக்கி நாட்டில் பிரிஜியா(Brijiya) மாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்ப பெரும்பாடுபட்டார். இதனால் அந்நாட்டு அரசன் மார்க்ஸ் அவுரேலியஸ்(Markus Aurelias) என்பவரால் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் ஆயர் தன்னுடைய செபத்தால் அரசனை வென்றார். ஆயரின் சொல்படி நடந்த அரசன், திருச்சபைக்காக பல உதவிகளை செய்தான். அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தான்.
மார்க்ஸ் நாளடைவில் "கிறிஸ்துவர்களின் நண்பன்" என்ற பெயரை பெற்றான். அப்போலினாரிஸிடமிருந்து, பல விசுவாச போதனைகளை கற்றுக் கொண்டான். ஆயர் மன்னனின் மனதை கவர்ந்து விசுவாசத்தை அம்மண்ணில் நிலைநாட்டியதால் "வீரம் கொண்ட விசுவாச தந்தை" என்ற பெயரை பெற்றார். கிறிஸ்துவர்களின் முன்னேற்றத்திற்காக ஆயருக்கு, அரசர் உதவியதால் , அரசனின் எதிரிகளால் ஆயர் தாக்கப்பட்டார். அரசன் நிறைவேற்றிய சட்டங்கள் பல கிறிஸ்துவர்களுக்கு சாதகமாக இருந்ததால் அரசனும் அவமானத்திற்குள்ளாக்கப்பட்டான். இந்நிலையில் எழுந்த போராட்டங்களில், ஆயர் அப்போலினாரிஸ் எதிரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். துருக்கி நாட்டில், 2 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயர்களில் "சிறந்தவர்" என்ற பெயர் பெற்றார்.
செபம்:
இரக்கமே உருவான இறைவா! தன்னுடைய செப வாழ்வினால் மன்னனை கவர்ந்து, உம் மக்களுக்கு தேவையான எல்லா நலன்களையும் செய்த இன்றைய புனிதரைப்போல, நாங்களும் எம் செப வாழ்வில் இன்னும் ஆழப்பட உம் அருள் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஹில்டஸ்ஹைம் ஆயர் பெர்ன்ஹார்டு Bernhard von Hildesheim
பிறப்பு: 1090, சாக்சன் Sachsen
இறப்பு: 20 ஜூலை 1153, ஹில்டஸ்ஹைம் HIldesheim. நீடர்சாக்சன், Niedersachsen
இறைவாக்கினர் எலியாஸ் Elias
பிறப்பு: கி.மு. 9 ஆம் நூற்றாண்டு
இறப்பு: கி.மு. 9 ஆம் நூற்றாண்டு
பாதுகாவல்: கார்மேல் சபைகள், விமானங்கள், இடி, மின்னல், நெருப்பிலிருந்து
ஜூலை 21
பிரிந்திசி நகர் புனித லாரன்ஸ்(St.Lawrence of Brindisi)
மறைவல்லுநர் (Doctor of the Church)
பிறப்பு
1559
பிரிந்திசி(Brindisi), இத்தாலி
இறப்பு
1619
லிஸ்பன்(Lisbon)
இவர் பிரிந்திசி நகரிலிருந்த கப்புச்சின் சபைத் துறவிகளிடம் கல்வி பயின்றார். வெனிஸ் நகரிலிருந்த புனித மார்க் கல்லூரியில் தனது மேற்படிப்பை முடித்தபின், தனது 16 ஆம் வயதில் கப்புச்சின் சபையில் சேர்ந்து குருத்துவப் பயிற்சி பெற்றார். பதுவை நகரில் தத்துவக்கலையை முடித்தபின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பல மொழிகளை கற்றுத் தேர்ந்த இவர், பல நாடுகளுக்கு சென்று நற்செய்தியை போதித்தார். பின்னர் திருத்தந்தையின் வேண்டுதலின்படி ஜெர்மனி நாட்டிற்கு யூதர்களிடம் அனுப்பப்பட்டார். யூத மக்களிடையே லாரன்சின் பணி செழிப்படைந்தது. மார்ட்டின் லூத்தரின் தவறான போதனைகளை நம்பிய மக்கள், தற்போது லாரன்ஸ் கூறிய போதனைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றினர்.
லாரன்ஸ் மறைபரப்பு பணியோடு சேர்ந்து, தொற்று நோய் கொண்ட மக்களிடமும், பிளேக் நோயாளிகளிடையேயும் தொண்டாற்றினார். அம்மக்களுக்கும் கிறிஸ்துவை யார் என்று அறிவித்து, அன்பு பணியாற்றினார். பின்னர் இம்மக்களுக்காக 3 துறவற இல்லங்களை தொடங்கினார். 1602 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அப்பதவியில் அவர் மனம் நாட்டங்கொள்ளாததால் 3 ஆண்டுகளில் அப்பதவியிலிருந்து விலகினார். இவர் கிறிஸ்துவுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு, நன்மை செய்ய, தன்னையும் போர் படைகளில் இணைத்துக்கொண்டு கையில் சிலுவையை ஏந்தி போர்புரிந்தார். அப்போது பல்வேறு பணிகளை ஆற்றி, சிறப்பாக பல விசுவாச நூல்களையும் எழுதினார். ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து திருமுறையைப்பரப்பினார். தன் இறப்புவரை மிக எளிமையான கப்புச்சின் குருவாக வாழ்ந்து இறந்தார்.
செபம்:
மகிமையின் மன்னரே எம் இறைவா! ஞானத்தையும், அறிவையும் பெற்று, இளம் வயதிலிருந்தே தன்னை மறைபரப்புப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, உம் பணி இவ்வுலகில் மேலும் சிறப்படைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
இறைவாக்கினர் தானியேல்
பிறப்பு: கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
இறப்பு: கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
பாதுகாவல்: மலைவாழ்மக்கள்
ஆபென்பெர்க் நகர் ஸ்டில்லா Stilla von Abenberg
பிறப்பு: 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டு, ஆபென்பெர்க், பவேரியா
இறப்பு: 12 ஆம் நூற்றாண்டு, பவேரியா
ஜூலை 22
புனித மகதலா மரியா (St. Mary Magdalene)
பிறப்பு
--
இறப்பு
--
இவர் கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். இயேசுவின் சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசு பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை மரியா அவரோடு உடனிருந்தார். உயிர்த்த இயேசுவை முதன்முதலில் கண்டவர். இவரிடமிருந்துதான் இயேசு ஏழு பேய்களை ஓட்டினார். தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் ஆண்டவரின் பாதங்களை கழுவிய மரியா இவர்தான். இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஆண்டவரின் கல்லறை, வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவின் சீடர்களிடம் அறிவித்தவரும் இவரேதான். இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர்.
மரியா ஓர் பெரும்பாவி என்று மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபோது, தன் நிலையை உணர்ந்து அழுது, ஓடிச்சென்று இயேசுவிடம் சென்றார். தன் பாவங்களின் பரிகாரமாய் செய்த செயலினால் இயேசுவின் ஆழ்மனதில் இடம்பிடித்தார். அன்னை மரியாளுக்குபிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர். " என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப்பற்றி கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார்.
செபம்:
அதிசயம் செய்பவரே எம் இறைவா! பாஸ்கா மகிழ்ச்சியின் முதல் நற்செய்தியை நீர் மரியா மகதலாவிற்கு தந்து எம்மை மகிழ்ச்சிபடுத்தினீர். நாங்களும் மரியாவைப்போல இயேசுவைப்பற்றி கொண்டு, உம் நற்செய்தியை இவ்வுலகில் பரப்ப, தேவையான திடம் தந்து காத்திடுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
பெத்தானியா மரியா Maria von Bethanien
பிறப்பு: முதல் நூற்றாண்டு
இறப்பு: முதல் நூற்றாண்டு
சபைநிறுவுநர் வான்ரகீசல் Wandregisel
பிறப்பு: 600, வேர்டூன் Verdun, பிரான்சு
இறப்பு: 22 ஜூலை 665, ஃபோண்டென்னெல்லே Fontenelle, பிரான்சு
ஜூலை 25
புனித யாக்கோபு (St. James)
திருத்தூதர் (Apostle)
பிறப்பு
பெத்சாயிதா(Bethsaida)
இறப்பு
42 ஆம் ஆண்டு
இவர் செபதேயுவின் மகன். திருத்தூதரான யோவானின் சகோதரர். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து ஆற்றிய முக்கிய புதுமைகளின்போது உடனிருந்தவர். இவர் ஏரோது அரசனால் கொல்லப்பட்டார். இவர் பயன்படுத்திய சில பொருட்களும், திருப்பண்டமும் ஸ்பெயின் நாட்டிலுள்ள கம்போஸ்தெல்லா என்ற இடத்தில் வைக்கப்பட்டது. ஸ்பெயின் நாடு முழுவதும் இவரின் பக்தியால் பரப்பப்பட்டது. அந்நாட்டில் இப்புனிதரின் பெயரில் பெரிய பேராலயம் கட்டப்பட்டுள்ளது. யாக்கோபின் உடன்பிறந்த சகோதரர் ஒருவர் இவரின் பெயரில் திருவிவிலியத்தில் "யாக்கோபு" என்னும் திருமுகம் ஒன்றை எழுதியுள்ளார். இயேசுவின் இடப்புறத்திலும், வலப்புறத்திலும் இருக்க வேண்டுமென்று ஆசை கொண்டவர் இவர். இதனால் மற்ற சீடர்களின் கோபத்திற்கும் ஆளாக்கப்பட்டார். ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆண்டவர் மேல் அளவில்லா அன்பு கொண்டதால்தான், இயேசு தன்னை அழைத்தவுடனே அவரை பின் தொடர்ந்துச் சென்றார். இயேசுவின் திருத்தூதர்களில் மிக இளம்வயதில் முதலாவதாக இறந்தவர் புனித யாக்கோபு.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! உம்மை முன்னிட்டு தன் வாழ்வை அர்ப்பணித்தார் புனித யாக்கோபு. இவரின் மறைசாட்சி இறப்பால், மற்ற திருத்தூதர்களை திடப்படுத்தினீர். உம் பணி இவ்வுலகில் நிறைவேற முதன்முதலாக தன் வாழ்வை இழந்த புனித யாக்கோபை போல, உமக்கும், உம் வார்த்தைகளும் நாங்கள் என்றும், சான்று பகர்ந்து வாழ உம் வரம் தாரும் தந்தையே.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
யோஹான்னஸ் சோரேத் Johannes Soreth
பிறப்பு: 1394, காயேன் Caen, பிரான்சு
இறப்பு: 25 ஜூலை 1471, ஆங்கர்ஸ் Angers, பிரான்சு
முத்திபேறுபட்டம்: 1866
கெம்பன் நகர் தோமாஸ் ஹெமெர்கன் Thomas Hemerken von Kempen
பிறப்பு: 1380, கெம்பன் Kempen, ஜெர்மனி
இறப்பு: 25 ஜூலை 1471, செயிண்ட் அக்னெடென்பெர்க் ST.Agnetenberg, நெதர்லாந்து
வில்லிபோல்டு Willibold
பிறப்பு: 12 ஆம் நூற்றாண்டு, கால்வ் Calw, ஜெர்மனி
இறப்பு: 1230, பெர்க்ஹைம் Berkheim, ஜெர்மனி
புனித சுவக்கின், அன்னம்மாள் (St. Joachim and St. Anna)
அன்னை மரியாவின் பெற்றோர்
கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் மரபு வழி செய்தியின்படி அன்னாவும், சுவக்கின் என்பவர்களும் அன்னை மரியின் பெற்றோர்கள் என்று கூறப்படுகின்றது. 6 ஆம் நூற்றாண்டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது. 10 ஆம் நூற்றாண்டில் இப்பக்தி மிகுதியாக பரவியது. 15 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் புனித அன்னா ஜூலை மாதம் 25 ஆம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தியைக் கொண்டு, 550 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சி செய்த அரசன் புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான். 12 ஆம் நூற்றாண்டிலிருந்து அன்னை மரியின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜூலை 26ஆம் நாள் இப்புனிதர்களின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 1568 ஆம் ஆண்டு புனித 5 ஆம் பயஸ் இவ்விழாவை, திருச்சபை பட்டியலிலிருந்து நீக்கினார். ஆனால் 1584 ஆம் ஆண்டு மீண்டும் உரோமை திருச்சபை புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அன்னை மரியின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். செப, தவ, ஒறுத்தல்கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர்.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! உம் திருமகனின் தாயை ஈன்றெடுக்கும் பேற்றை புனித சுவக்கின், அன்னம்மாளுக்கு தந்தீர். இவர்களின் வளர்ப்பால் திருமகனுக்கு தாயானார். அன்னை மரியா. எம் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை, ஆன்ம வாழ்வில் வளர்க்க தேவையான அருள் வரங்களை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
சபைநிறுவுநர் பர்த்தலோமேயா மரியா கப்பிடானியோ Bartholomäa Maria Capitanio
பிறப்பு: 13 பிப்ரவரி 1807, லோவேரே Lovere, இத்தாலி
இறப்பு: 26 ஜூலை 1833, இத்தாலி
புனிதர்பட்டம்: 18 மே 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
அன்னை மரியாவின் பெற்றோர்
கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் மரபு வழி செய்தியின்படி அன்னாவும், சுவக்கின் என்பவர்களும் அன்னை மரியின் பெற்றோர்கள் என்று கூறப்படுகின்றது. 6 ஆம் நூற்றாண்டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது. 10 ஆம் நூற்றாண்டில் இப்பக்தி மிகுதியாக பரவியது. 15 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் புனித அன்னா ஜூலை மாதம் 25 ஆம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தியைக் கொண்டு, 550 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சி செய்த அரசன் புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான். 12 ஆம் நூற்றாண்டிலிருந்து அன்னை மரியின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜூலை 26ஆம் நாள் இப்புனிதர்களின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 1568 ஆம் ஆண்டு புனித 5 ஆம் பயஸ் இவ்விழாவை, திருச்சபை பட்டியலிலிருந்து நீக்கினார். ஆனால் 1584 ஆம் ஆண்டு மீண்டும் உரோமை திருச்சபை புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அன்னை மரியின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். செப, தவ, ஒறுத்தல்கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர்.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! உம் திருமகனின் தாயை ஈன்றெடுக்கும் பேற்றை புனித சுவக்கின், அன்னம்மாளுக்கு தந்தீர். இவர்களின் வளர்ப்பால் திருமகனுக்கு தாயானார். அன்னை மரியா. எம் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை, ஆன்ம வாழ்வில் வளர்க்க தேவையான அருள் வரங்களை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
சபைநிறுவுநர் பர்த்தலோமேயா மரியா கப்பிடானியோ Bartholomäa Maria Capitanio
பிறப்பு: 13 பிப்ரவரி 1807, லோவேரே Lovere, இத்தாலி
இறப்பு: 26 ஜூலை 1833, இத்தாலி
புனிதர்பட்டம்: 18 மே 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
ஜூலை 27
முத்திபேறுபெற்ற ரூடோல்ப் அக்வாவிவா (St.Rudolf Akvaviva)
குரு
பிறப்பு
1550
இத்தாலி
இறப்பு
25 ஜூலை 1583
சால்சட் தீவு(Salset), இந்தியா
முத்திபேறுபட்டம்: 03 ஏப்ரல் 1803 திருத்தந்தை 13ஆம் சிங்கராயர்(Leo XIII)
இவர் ஓர் பிரபு குலத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர்கள் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் ஏராளமான உதவிகளை செய்தனர். இதனால் ரூடோல்ப்பும் அப்பணியில் கவரப்பட்டு, ஏழைகளுக்கென்று தன் வாழ்வை அர்ப்பணித்தார். சமூகப்பணிகளிலும், ஆலயப்பணிகளிலும் தன் நேரங்களைக் கழித்தார். சிறுவயதிலிருந்தே பூசைஉதவி செய்வதற்கு தவறமாட்டார். ஞானக்காரியங்களில் அக்கறையோடு ஈடுபட்டார். தான் ஓர் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டு, இயேசு சபையில் சேர்ந்தார். 1578 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். சில நாட்கள் இத்தாலியில் பணிசெய்தபின் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஓரளவு மக்களை தெரிந்துகொண்டபின், இந்திய கலாச்சாரத்தால் கவரப்பட்டார். இதனால் அம்மக்களுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டுமென்று ஆசைகொண்டார். அப்போது கோவாவில் இருந்த புனித பவுல் கல்லூரியில் கற்று கொடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
இவர் சாதி, மதம் பாராமல் அனைத்து தர மக்களையும் ஒன்றிணைத்து கிறிஸ்துவைப்பற்றி போதித்தார். அப்போது இந்தியாவை ஆட்சி செய்த முகமதிய அரசனிடம் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். அரசனின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்று, தொடர்ந்து அரசவையிலும், நாடு முழுவதிலும் நற்செய்தியை போதித்தார். பின்னர் இயேசு சபை குருக்களால் சால்செட் தீவுக்கு அனுப்பப்பட்டார். அத்தீவில் பணிசெய்யும்போது இந்து மக்களிடமிருந்து பலவிதமான எதிர்ப்புகளை சந்தித்தார். பல இந்துக்களும் ஒன்று சேர்ந்து ஆலயங்களையும் பள்ளிக்கூடங்களையும் இடித்து தரைமட்டமாக்கினார்கள். அச்சமயத்தில் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றிகொண்டிருக்கும் வேளையில் ஆலயம் இடிக்கப்பட்டு அம்மக்களோடு சேர்ந்து ரூடோல்ப் அவர்களும் இறந்து போனார்.
செபம்:
இரக்கமே உருவான எம் தலைவா! இன்றும் இந்திய மண்ணில் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக விளைவிக்கப்படும் துன்பங்களை நீர் கண்ணோக்கியருளும். நீரே அம்மக்களின் பாதுகாப்பாகவும், அவர்களுக்கு அரணும், கோட்டையுமாய் இருந்து, காத்து வழிநடத்தியருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
கார்ஸ்டன் நகர் துறவி பெர்ட்ஹோல்டு Berthold von Garsten
பிறப்பு: 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 27 ஜூலை 1142, கார்ஸ்டன், ஆஸ்திரியா
ஓட்டோபாய்ரென் நகர் துறவி கொன்ராட் Konrad von Ottobeuren
பிறப்பு: 12 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 27 ஜூலை 1227, ஓட்டோபாய்ரென், பவேரியா
டிரியர் நகர் ஆயர் மக்னேரிக் Magnerich von Trier
பிறப்பு: 520
இறப்பு: 27 ஜூலை 596, டிரியர், ஜெர்மனி
கோர்டோபா நகர் மறைசாட்சி நட்டாலியா Natalia von Cordoba
பிறப்பு: 9 ஆம் நூற்றாண்டு, கோர்டொபா Cordoba, ஸ்பெயின்
இறப்பு: 27 ஜூலை 853, கோர்டோபா
மருத்துவர் மறைசாட்சி பாண்டாலேயோன் Pantaleon
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, இஸ்மிர் Izmir, துருக்கி
இறப்பு: 305, துருக்கி
பாதுகாவல்: கொலோன் நகர், மருத்துவர், தலைவலியிலிருந்து, ஆபத்திலிருந்து
ஜூலை 28
புனித.நாசரியஸ், புனித. செல்சஸ் (St. Nazarius and St.Celsus)
மறைசாட்சிகள்
இறப்பு
304
மிலான் ( Milan, Italy)
பாதுகாவல்: குழந்தைகளின் பாதுகாவலர்கள்
இவர் கிறிஸ்துவ மறையை பரப்பிய காரணத்திற்காகவே அரசர் தியோக்லேசியன் என்பவரால், இத்தாலி நாட்டில் வைத்து வதைக்கப்பட்டார். இவர் இத்தாலி, காலியன்(Gallien), டிரியர்(Trier) போன்ற இடங்களிலெல்லாம் மறைபரப்பு பணியை செய்தார். இவரை வழிநடத்தியவர் செல்சஸ். இவரும் மறைபரப்புப்பணியில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து பல இடங்களில் போதித்தனர். பலரை கிறிஸ்துவர்களாக மனந்திருப்பினார். அப்போதுதான் கள்வர்கள் சிலர் இருவரையும் ஒன்றாக கொண்டு வந்து கொன்றனர். இவர்கள் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டபிறகு 395ஆம் ஆண்டு மிலான் ஆயர் அம்புரோஸ் இவர்களின் கல்லறையின் மேல் பேராலயம் ஒன்றை எழுப்பினார். இவர்களின் உடல்களை அப்பேராலயத்தில் வைக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து இருவரின் உடல்களும் மெழுகு போடப்பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
செபம்:
அன்பே உருவான இறைவா! உம் பொருட்டு தன் உயிரை இழந்தனர். இன்றைய மறைசாட்சிகள் இவர்களைப் போல, தைரியத்துடன் நாங்களும் உம் பணியில் பங்கு பெற உமதருளை தந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி அல்போன்சா அன்னா முட்டத்துபண்டத்து Alphonsa Anna Muttathupandathu
பிறப்பு: 19 ஆகஸ்ட் 1910, அர்புக்காரா Arpukara, இந்தியா
இறப்பு: 28 ஜூலை 1946, பரன்னஞானம் Bharanangnanam, இந்தியா
ஓஸ்னாபுரூக் ஆயர் 2 ஆம் பெனோ Benno II von Osnabrück
பிறப்பு: 1020, பியோனிங்கன் Böhningen, ஜெர்மனி
இறப்பு: 28, ஜூலை 1088, ஒஸ்னாபுரூக், நீடர் சாக்சன், ஜெர்மனி
திருத்தந்தை முதலாம் விக்டர் Viktor I
பிறப்பு: 2 ஆம் நூற்றாண்டு, ஆப்ரிக்கா
இறப்பு: 199, உரோம், இத்தாலி
திருத்தந்தையாக: 189-199
ஜூலை 29
புனித மார்த்தா (St.Martha)
பிறப்பு
பெத்தானியா
இறப்பு
--
இவர் மரியா, லாசர் இவர்களின் உடன்பிறந்தவர். இவர் ஆண்டவரின் மேல் அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டவர். இதனால் ஆண்டவரை தன் வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கு பணிவிடையும் புரிந்தார். இலாசர் இறந்த வேளையில், ஆண்டவர் இயேசு அங்கு இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். இதையறிந்த இயேசு விரைந்து மார்த்தாவின் இல்லத்தை அடைந்தார். அப்போது மார்த்தா ஆண்டவரிடம் "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்", என்று முறையிட்டார். ஆண்டவர் ஒருவரே மெசியா, இறைமகன் என்பதை முழுமையாக நம்பினார். இயேசு மார்த்தாவின் நம்பிக்கையை பார்த்து, அவர் தன் சகோதரனின் இறப்பினால் அடைந்த துயரைக்கண்டு மன்றாட்டை ஏற்று, சகோதரர் இலாசரை உயிர்த்தெழ செய்தார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம் திருமகன் இயேசு, புனித மார்த்தாவின் வீட்டில் விருந்தினராக தங்கியிருக்கத் திருவுளமானார். அவருடைய வேண்டுதலால் நாங்கள் எங்கள் சகோதர, சகோதரிகளில் கிறிஸ்துவைக் கண்டு, அவர்களுக்கு உண்மையுடன் பணிபுரியவும், உமது விண்ணக வீட்டில் எங்களை கொண்டுவந்து சேர்க்கவும் அருள்புரிவீராக. இவற்றையெல்லாம் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஹங்கேரி நாட்டு அரசர் லாடிஸ்லவ்ஸ் Ladislaus von Ungarn
பிறப்பு: 1040, ஹங்கேரி
இறப்பு: 29 ஜூலை 1095, நொய்ரா Neutra, ஸ்லோவாக்காய் Slowakei
ஆயர் லூபுஸ் Lupus
பிறப்பு: 383, ட்டூல் Toul, பிரான்சு
இறப்பு: 479, ட்ரோயஸ் Troyes, பிரான்சு
திருத்தந்தை 3 ஆம் உர்பான் Urban II
பிறப்பு: 1035, பிரான்சு
இறப்பு: 29 ஜூலை 1099, உரோம்