- தேவன்னை
- குவாடலூப் மாதா
"வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன்." - குவாடலூப்பே அன்னை
வரலாறு
யுவான் தியாகோ (Juan Diego) என்னும் மெக்சிக்க நாட்டு விவசாயிக்கும் அவரது மாமனாருக்கும் நமது அன்னை தந்த காட்சிகளின் அடிப்படையிலேயே குவாடலூப் அன்னையின் பக்தி பெருகியது. 1531 ம் ஆண்டில் டிசம்பர் 9 ஆம் தேதி யுவான் தியாகோ வுக்கு குவாடலூப் கிராமத்தில் Hill of Tepeyac என்னும் சிறிய குன்றில் அன்னை காட்சியளித்தார். அந்த பிராந்திய மொழியான Nahuatl மொழியில் அவரோடு பேசிய அன்னை தன்னை உண்மைக் கடவுளின் தாயாரென்று பிரகடனம் செய்து அவ்விடத்தில் தமக்கு ஒரு ஆலயம் எழுப்ப ஆயரைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்க சொன்னார் . எனவே யுவான் மெக்சிகோ நகர பேராயரைச் சந்தித்து அன்னையின் காட்சியைப் பற்றிக் கூறினார் .ஆனால் ஆயர் இவரை நம்பவில்லை . அதே நாளில் மீண்டும் அன்னை யுவானுக்குத் தோன்றி மீண்டும் ஆயரைச் சந்திக்க சொன்னார் .
மீண்டும் யுவான் ஆயரைச் சந்தித்துச் சொல்ல , ஆயர் அவரிடம் அன்னையிடம் இருந்து ஒரு அடையாளத்தைப் பெற்று வரும்படி சொன்னார் . அன்றே மீண்டும் அன்னை அவருக்குத் தோன்ற அவர் அன்னையிடம் ஆயர் கேட்ட அடையாளத்தைப் பற்றி சொன்னார் . அன்னை அவரை மறு நாள் வரும்படி சொன்னார்
ஆனால் மறு நாளில் யுவானின் மாமனார் , யுவான் பெர்னார்டினோ ,( Juan Bernardino ) உடல் நிலை சரி இல்லாமல் போகவே அவரால் வர இயலாமல் போனது . மறுநாள் , டிசம்பர் 12 ம் தேதி , யுவான் பெர்னார்டினோ வின் உடல் நிலை இன்னும் மோசமானது . சாகும் தருவாயில் இருந்தார் . எனவே யுவான் தியகோ பாவசங்கீர்த்தனம் மற்றும் அவஸ்தை கொடுக்கும் பொருட்டு குருவானவரை அழைக்கச் சென்றார் . அன்னையைக் காண வர இயலாமல் போனதால் அதே வழியில் செல்ல தயங்கி வேறோர் வழியில் சென்றார் . ஆனால் அவ்வழியிலும் அன்னை அவருக்குக் காட்சி தந்து யுவான் செல்வது எங்கே என்று வினவினார் . யுவான் தனது மாமாவைக் குறித்து சொல்ல , அன்னை அவரிடம் , தன்னிடம் வராதது ஏன் என வினவினார் . அவர் கேட்ட கேள்வி இன்று குவாடலூப் ஆலயத்தில் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது . "உன் அன்னையான நான் இருக்கையில் நீ ஏன் கலங்குகிறாய் ?"(Am I not here, I who am your mother?).அவரது மாமாவிற்கு குணமாகி இருக்கும் என்றும் அந்தக் குன்றில் பூத்திருக்கும் ரோஜா மலர்களை ஆயரிடம் கொண்டு சேர்க்கும்படியும் அன்னை கூறினார் .அன்னை கூறிய குன்றை யுவான் சென்று பார்த்தபோது , அங்கே தரிசாகிக் கிடந்த பூமியில் அந்த பிராந்தியத்திலயே மலராத அரிய ரோஜா மலர்கள் ஏராளமாய்ப் பூத்து நிற்கக் கண்டார் . அவற்றைத் தன் மேலங்கியில் சேகரித்து ஆயரிடம் கொண்டு சென்றார் . ஆயர் முன் அந்த அங்கியை அவர் விரிக்கவே , மலர்கள் தரையெங்கும் விழ , மேலங்கியில் அன்னையின் உருவமும் பதிந்திருந்தது .
மறுநாள் யுவானின் மாமனார் குணமடைந்திருந்தார் .அவருக்கும் அன்னை காட்சி தந்து நோயை நீக்கியதாகக் கூறினார் . மரணப்படுக்கையில் இருந்து அவர் மீண்ட அற்புதம் சுற்றுப்புறம் எங்கும் பரவியது . மரியன்னை குவாடலூப் அன்னை என்று அழைக்கப்பட்டார் . யுவானின் மேலங்கி இன்றும் அன்னையின் ஆலயத்தில் உள்ளது . சிறிதும் மங்காமல் இத்தனை நூற்றாண்டுகளாய் இருப்பது எப்படி என்று விஞ்ஞானிகளால் கண்டறிய இயலவில்லை.
தேவமாதாவுக்குப் புகழ்மாலை
Courtesy: source in English
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
குவாடலூப் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நற்செய்தியின் விடிவெள்ளியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பூரண நித்திய கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இறைவனின் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மகா வணக்கத்திற்குரிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இரக்கம் நிறை அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உம்மை நம்பும் அடியவர்களின் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உம்மைத் தேடுவோரின் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் வேதனைகளையும் வியாகுலங்களையும் குணமாக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் துன்பங்களைப் போக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
கிருபாகடாட்ச கண்களால் எங்களை நோக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அன்பையும் ஆறுதலையும் தரும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தாழ்ச்சியுள்ளோரைத் தேர்ந்து கொள்ளும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அடியோர்களைக் கருணையால் உயர்த்தும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்களைப் பாதுகாக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்களை ஆதரிக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் சந்தோசத்தின் ஊற்றே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அர்ச் சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அர்ச் யுவான் தியாகோ வே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சகல புனிதர்களே ,தூதர்களே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
எங்கள் மன்றாட்டுக்களைக் கேட்டருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
குவாடலூப் அன்னையே , விண்ணக ரோஜா மலரே , இயேசுவின் திருச்சபைக்காகப் பரிந்து பேசும் அம்மா .திருத்தந்தையையும் உம்மைத் தேடி வரும் திருச்சபையையும் பாதுகாத்தருளும். இறைவனின் அன்னையே , நித்திய கன்னிகையே , விசுவாசத்தையும் , நம்பிக்கையையும் , துன்பத்தில் தளரா மனத்தையும் உமது திருமகனிடமிருந்து எங்களுக்குப் பெற்றுத் தாரும். எங்கள் இரட்சகரும் மீட்பருமான உமது திருமகனின் திருமுக தரிசனத்தை உமது பரிந்துரையால் நாங்கள் காணும் வரை எங்கள் இருதயங்களை அன்பினால் பற்றி எரியச் செய்தருளும் ஆமென்
ஏசுக்கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
சர்வேசுரனுடைய அற்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
யுவான் தியாகோ (Juan Diego) என்னும் மெக்சிக்க நாட்டு விவசாயிக்கும் அவரது மாமனாருக்கும் நமது அன்னை தந்த காட்சிகளின் அடிப்படையிலேயே குவாடலூப் அன்னையின் பக்தி பெருகியது. 1531 ம் ஆண்டில் டிசம்பர் 9 ஆம் தேதி யுவான் தியாகோ வுக்கு குவாடலூப் கிராமத்தில் Hill of Tepeyac என்னும் சிறிய குன்றில் அன்னை காட்சியளித்தார். அந்த பிராந்திய மொழியான Nahuatl மொழியில் அவரோடு பேசிய அன்னை தன்னை உண்மைக் கடவுளின் தாயாரென்று பிரகடனம் செய்து அவ்விடத்தில் தமக்கு ஒரு ஆலயம் எழுப்ப ஆயரைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்க சொன்னார் . எனவே யுவான் மெக்சிகோ நகர பேராயரைச் சந்தித்து அன்னையின் காட்சியைப் பற்றிக் கூறினார் .ஆனால் ஆயர் இவரை நம்பவில்லை . அதே நாளில் மீண்டும் அன்னை யுவானுக்குத் தோன்றி மீண்டும் ஆயரைச் சந்திக்க சொன்னார் .
மீண்டும் யுவான் ஆயரைச் சந்தித்துச் சொல்ல , ஆயர் அவரிடம் அன்னையிடம் இருந்து ஒரு அடையாளத்தைப் பெற்று வரும்படி சொன்னார் . அன்றே மீண்டும் அன்னை அவருக்குத் தோன்ற அவர் அன்னையிடம் ஆயர் கேட்ட அடையாளத்தைப் பற்றி சொன்னார் . அன்னை அவரை மறு நாள் வரும்படி சொன்னார்
ஆனால் மறு நாளில் யுவானின் மாமனார் , யுவான் பெர்னார்டினோ ,( Juan Bernardino ) உடல் நிலை சரி இல்லாமல் போகவே அவரால் வர இயலாமல் போனது . மறுநாள் , டிசம்பர் 12 ம் தேதி , யுவான் பெர்னார்டினோ வின் உடல் நிலை இன்னும் மோசமானது . சாகும் தருவாயில் இருந்தார் . எனவே யுவான் தியகோ பாவசங்கீர்த்தனம் மற்றும் அவஸ்தை கொடுக்கும் பொருட்டு குருவானவரை அழைக்கச் சென்றார் . அன்னையைக் காண வர இயலாமல் போனதால் அதே வழியில் செல்ல தயங்கி வேறோர் வழியில் சென்றார் . ஆனால் அவ்வழியிலும் அன்னை அவருக்குக் காட்சி தந்து யுவான் செல்வது எங்கே என்று வினவினார் . யுவான் தனது மாமாவைக் குறித்து சொல்ல , அன்னை அவரிடம் , தன்னிடம் வராதது ஏன் என வினவினார் . அவர் கேட்ட கேள்வி இன்று குவாடலூப் ஆலயத்தில் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது . "உன் அன்னையான நான் இருக்கையில் நீ ஏன் கலங்குகிறாய் ?"(Am I not here, I who am your mother?).அவரது மாமாவிற்கு குணமாகி இருக்கும் என்றும் அந்தக் குன்றில் பூத்திருக்கும் ரோஜா மலர்களை ஆயரிடம் கொண்டு சேர்க்கும்படியும் அன்னை கூறினார் .அன்னை கூறிய குன்றை யுவான் சென்று பார்த்தபோது , அங்கே தரிசாகிக் கிடந்த பூமியில் அந்த பிராந்தியத்திலயே மலராத அரிய ரோஜா மலர்கள் ஏராளமாய்ப் பூத்து நிற்கக் கண்டார் . அவற்றைத் தன் மேலங்கியில் சேகரித்து ஆயரிடம் கொண்டு சென்றார் . ஆயர் முன் அந்த அங்கியை அவர் விரிக்கவே , மலர்கள் தரையெங்கும் விழ , மேலங்கியில் அன்னையின் உருவமும் பதிந்திருந்தது .
மறுநாள் யுவானின் மாமனார் குணமடைந்திருந்தார் .அவருக்கும் அன்னை காட்சி தந்து நோயை நீக்கியதாகக் கூறினார் . மரணப்படுக்கையில் இருந்து அவர் மீண்ட அற்புதம் சுற்றுப்புறம் எங்கும் பரவியது . மரியன்னை குவாடலூப் அன்னை என்று அழைக்கப்பட்டார் . யுவானின் மேலங்கி இன்றும் அன்னையின் ஆலயத்தில் உள்ளது . சிறிதும் மங்காமல் இத்தனை நூற்றாண்டுகளாய் இருப்பது எப்படி என்று விஞ்ஞானிகளால் கண்டறிய இயலவில்லை.
தேவமாதாவுக்குப் புகழ்மாலை
Courtesy: source in English
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
குவாடலூப் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நற்செய்தியின் விடிவெள்ளியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பூரண நித்திய கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இறைவனின் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மகா வணக்கத்திற்குரிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இரக்கம் நிறை அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உம்மை நம்பும் அடியவர்களின் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உம்மைத் தேடுவோரின் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் வேதனைகளையும் வியாகுலங்களையும் குணமாக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் துன்பங்களைப் போக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
கிருபாகடாட்ச கண்களால் எங்களை நோக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அன்பையும் ஆறுதலையும் தரும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தாழ்ச்சியுள்ளோரைத் தேர்ந்து கொள்ளும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அடியோர்களைக் கருணையால் உயர்த்தும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்களைப் பாதுகாக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்களை ஆதரிக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் சந்தோசத்தின் ஊற்றே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அர்ச் சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அர்ச் யுவான் தியாகோ வே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சகல புனிதர்களே ,தூதர்களே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
எங்கள் மன்றாட்டுக்களைக் கேட்டருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
குவாடலூப் அன்னையே , விண்ணக ரோஜா மலரே , இயேசுவின் திருச்சபைக்காகப் பரிந்து பேசும் அம்மா .திருத்தந்தையையும் உம்மைத் தேடி வரும் திருச்சபையையும் பாதுகாத்தருளும். இறைவனின் அன்னையே , நித்திய கன்னிகையே , விசுவாசத்தையும் , நம்பிக்கையையும் , துன்பத்தில் தளரா மனத்தையும் உமது திருமகனிடமிருந்து எங்களுக்குப் பெற்றுத் தாரும். எங்கள் இரட்சகரும் மீட்பருமான உமது திருமகனின் திருமுக தரிசனத்தை உமது பரிந்துரையால் நாங்கள் காணும் வரை எங்கள் இருதயங்களை அன்பினால் பற்றி எரியச் செய்தருளும் ஆமென்
ஏசுக்கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
சர்வேசுரனுடைய அற்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்