- கேள்வி பதில்
- திருச்சுரூபங்கள்
கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் புனிதர்களின் சுருபங்களை தொட்டு கும்பிடுகின்றார்களே, அது சரி தானா ?
இதை தான் பிற சபையினர் பெரிதாக கிளப்பி கத்தோலிக்கர்களை குறை சொல்லிய வண்ணம் இருக்கின்றார்கள். நம் கத்தொலிக்க்க மக்களும் அவர்களுக்கு சரியான பதிலை கொடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதற்கு திருமறை நூலில் ஏதாவது ஆதாரம் உண்டா என்று தேடுவோரும் உண்டு. நம் மக்களுக்கு உதவி செய்யும் விதமாக நம் துனையாளன் பரிசுத்த ஆவியானவரின் துணை கொண்டு உதவ முன் வருகின்றேன்.
பொதுவாக ஆலயங்களில் புனிதர்கள் சிலையை வைக்கும் முன்பு அவைகளை ஆயரோ அல்லது பங்கு தந்தையரோ (அபிஷேகம் செய்யப் பட்டவர்கள்) ஜெபித்து எண்ணெய் பூசியோ அல்லது தீர்த்தம் தெளித்தோ அபிஷேகம் செய்கின்றனர். எனவே அது புனிதம் பெறுகின்றது. அதை தொட்டு ஜெபிக்கும் போது இறை பிரசன்னம் இறை வாக்கிற்கு ஏற்ப தொடுபவர்களை ஆட்கொள்கின்றது . எனவே அவர்கள் நலம் பெறுகின்றனர். இதற்கு திருமறை நூல் ஆதாரம் வேண்டுமா? இதோ
21 பலிபீடத்தின் மீதுள்ள இரத்தத்திலும் திருப்பொழிவு எண்ணெயிலும் சிறிது எடுத்து, அவற்றை ஆரோன், அவன் உடைகள், அவன் புதல்வர்கள், அவர்களின் உடைகள் மீது தெளிப்பாய். இதனால் அவன், அவனுடைய உடைகளோடும், அவன் புதல்வர்கள், அவர்களுடைய உடைகளோடும் புனிதம் பெறுவர்.( விப 29 : 21 )
37ஏழு நாள்கள் பலிபீடத்திற்கென்று பாவக்கழுவாய் செய்து, அதனை அர்ப்பணம் செய். பலிபீடம் தூய்மைமிக்கதாகும். பலிபீடத்தைத் தொடுவதெல்லாம் புனிதம் பெறும். ( விப 29 : 37 ) 43நான் அங்கு இஸ்ரயேல் மக்களைச் சந்திப்பேன். அந்த இடம் என் மாட்சியால்புனிதம் பெறும் 44நான் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் புனிதப்படுத்துவேன். எனக்குக் குருத்துவப்பணி புரிய நான் ஆரோனையும் அவன் புதல்வரையும் புனிதப்படுத்துவேன். ( விப 29 : 43,44 )
26இதைக்கொண்டு சந்திப்புக் கூடாரம். உடன்படிக்கைப் பேழை, 27மேசை, அதன் அனைத்துத் துணைக் கலன்கள், விளக்குத் தண்டு, அதன் துணைக் கலன்கள், தூபப்பீடம், 28எரிபலிபீடம், அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த்தொட்டி, அதன் ஆதாரம் ஆகியவற்றைத் திருப்பொழிவு செய்வாய். 29நீ அவற்றை அர்ப்பணம் செய்வதால் அவை புனிதமானவையாகும். மேலும் அவற்றைத் தொடுபவை அனைத்தும் புனிதம் பெறும். ( விப : 30 : 26 - 29 )
இறை ஊழியர்களால் ஒரு சுருபம் அல்லது வீடு கட்டிங்கள் பொருள் அல்லது பிடம் அல்லது உடைகள் , தண்ணிர் தொட்டிகள், பாத்திரங்கள் எவை அபிஷேகம் பண்ணப் பட்டாலும் அவைகள் புனிதம் பெறுகின்றது. யார் ஒருவர் அந்த புனிதமான பொருட்களை தொடுகின்றனரோ அவர்களும் புனிதம் பெறுகின்றனர் என்று திரு மறை நூல் நமக்கு கூறுகின்றது. இன்று நாம் சுருபமாக செய்து வைத்து இருக்கும் அன்னை மரியாள் நம் மீட்பிற்காக எந்த அளவு தன்னை ஈடுபடுத்தி இருப்பார் என்று நமக்கு தெரியும். அவரின் உருவம் தாங்கி நிற்கும் சுருபம் பழைய ஏற்பாடு காலத்தில் பலியிட உபயோகிக்கப்பட்ட பாத்திரங்களை விட மேலானவையே. ஆகவே அன்னையின் சுருபம் அபிஷேகம் செய்யபடும் போது அந்த சுருபம் புனிதம் பெறுகின்றது. அந்த சுருபத்தை தொடுபவர்கள் அனைவரும் புனிதம் பெறுகின்றனர். ஆக அன்னை மரியாளின் சுருபத்தை தொடும்போது அங்கே அதிசயம் நடகின்றது. இதைப் போலவே புனிதர்கள் சுருபமும். இவையெல்லாம் இறைவனின் இரக்க செயலே. யாரும் கத்தோலிக்கரை இனி குறை கூறமுடியாது.
13‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? 14உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 15எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார். 16இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார். ( மத் : 20 : 13 - 16 )
எனவே பிரிவினைகளே நீங்கள் உங்களை முதன்மையானவர்கள் என்று நீங்கள் நினைத்துகொண்டு இருந்தால் அது தவறு, நீங்கள் கடைசியாக அல்லது புறம்பாக தள்ளப்படுவிர்கள் என்பது திண்ணம்
Source : Church of Jesus இயேசு உருவாக்கிய திருச்சபை Facebook Page
இதை தான் பிற சபையினர் பெரிதாக கிளப்பி கத்தோலிக்கர்களை குறை சொல்லிய வண்ணம் இருக்கின்றார்கள். நம் கத்தொலிக்க்க மக்களும் அவர்களுக்கு சரியான பதிலை கொடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதற்கு திருமறை நூலில் ஏதாவது ஆதாரம் உண்டா என்று தேடுவோரும் உண்டு. நம் மக்களுக்கு உதவி செய்யும் விதமாக நம் துனையாளன் பரிசுத்த ஆவியானவரின் துணை கொண்டு உதவ முன் வருகின்றேன்.
பொதுவாக ஆலயங்களில் புனிதர்கள் சிலையை வைக்கும் முன்பு அவைகளை ஆயரோ அல்லது பங்கு தந்தையரோ (அபிஷேகம் செய்யப் பட்டவர்கள்) ஜெபித்து எண்ணெய் பூசியோ அல்லது தீர்த்தம் தெளித்தோ அபிஷேகம் செய்கின்றனர். எனவே அது புனிதம் பெறுகின்றது. அதை தொட்டு ஜெபிக்கும் போது இறை பிரசன்னம் இறை வாக்கிற்கு ஏற்ப தொடுபவர்களை ஆட்கொள்கின்றது . எனவே அவர்கள் நலம் பெறுகின்றனர். இதற்கு திருமறை நூல் ஆதாரம் வேண்டுமா? இதோ
21 பலிபீடத்தின் மீதுள்ள இரத்தத்திலும் திருப்பொழிவு எண்ணெயிலும் சிறிது எடுத்து, அவற்றை ஆரோன், அவன் உடைகள், அவன் புதல்வர்கள், அவர்களின் உடைகள் மீது தெளிப்பாய். இதனால் அவன், அவனுடைய உடைகளோடும், அவன் புதல்வர்கள், அவர்களுடைய உடைகளோடும் புனிதம் பெறுவர்.( விப 29 : 21 )
37ஏழு நாள்கள் பலிபீடத்திற்கென்று பாவக்கழுவாய் செய்து, அதனை அர்ப்பணம் செய். பலிபீடம் தூய்மைமிக்கதாகும். பலிபீடத்தைத் தொடுவதெல்லாம் புனிதம் பெறும். ( விப 29 : 37 ) 43நான் அங்கு இஸ்ரயேல் மக்களைச் சந்திப்பேன். அந்த இடம் என் மாட்சியால்புனிதம் பெறும் 44நான் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் புனிதப்படுத்துவேன். எனக்குக் குருத்துவப்பணி புரிய நான் ஆரோனையும் அவன் புதல்வரையும் புனிதப்படுத்துவேன். ( விப 29 : 43,44 )
26இதைக்கொண்டு சந்திப்புக் கூடாரம். உடன்படிக்கைப் பேழை, 27மேசை, அதன் அனைத்துத் துணைக் கலன்கள், விளக்குத் தண்டு, அதன் துணைக் கலன்கள், தூபப்பீடம், 28எரிபலிபீடம், அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த்தொட்டி, அதன் ஆதாரம் ஆகியவற்றைத் திருப்பொழிவு செய்வாய். 29நீ அவற்றை அர்ப்பணம் செய்வதால் அவை புனிதமானவையாகும். மேலும் அவற்றைத் தொடுபவை அனைத்தும் புனிதம் பெறும். ( விப : 30 : 26 - 29 )
இறை ஊழியர்களால் ஒரு சுருபம் அல்லது வீடு கட்டிங்கள் பொருள் அல்லது பிடம் அல்லது உடைகள் , தண்ணிர் தொட்டிகள், பாத்திரங்கள் எவை அபிஷேகம் பண்ணப் பட்டாலும் அவைகள் புனிதம் பெறுகின்றது. யார் ஒருவர் அந்த புனிதமான பொருட்களை தொடுகின்றனரோ அவர்களும் புனிதம் பெறுகின்றனர் என்று திரு மறை நூல் நமக்கு கூறுகின்றது. இன்று நாம் சுருபமாக செய்து வைத்து இருக்கும் அன்னை மரியாள் நம் மீட்பிற்காக எந்த அளவு தன்னை ஈடுபடுத்தி இருப்பார் என்று நமக்கு தெரியும். அவரின் உருவம் தாங்கி நிற்கும் சுருபம் பழைய ஏற்பாடு காலத்தில் பலியிட உபயோகிக்கப்பட்ட பாத்திரங்களை விட மேலானவையே. ஆகவே அன்னையின் சுருபம் அபிஷேகம் செய்யபடும் போது அந்த சுருபம் புனிதம் பெறுகின்றது. அந்த சுருபத்தை தொடுபவர்கள் அனைவரும் புனிதம் பெறுகின்றனர். ஆக அன்னை மரியாளின் சுருபத்தை தொடும்போது அங்கே அதிசயம் நடகின்றது. இதைப் போலவே புனிதர்கள் சுருபமும். இவையெல்லாம் இறைவனின் இரக்க செயலே. யாரும் கத்தோலிக்கரை இனி குறை கூறமுடியாது.
13‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? 14உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 15எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார். 16இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார். ( மத் : 20 : 13 - 16 )
எனவே பிரிவினைகளே நீங்கள் உங்களை முதன்மையானவர்கள் என்று நீங்கள் நினைத்துகொண்டு இருந்தால் அது தவறு, நீங்கள் கடைசியாக அல்லது புறம்பாக தள்ளப்படுவிர்கள் என்பது திண்ணம்
Source : Church of Jesus இயேசு உருவாக்கிய திருச்சபை Facebook Page