- வணக்க மாதம்
- ஜெபமாலை அன்னை
- நாள் 21-25
இருபத்தோராம் நாள் -
கர்த்தர் உயிர்த்தெழுந்தார்
கர்த்தர் உயிர்த்தெழுந்ததை நேரில் கண்டவர்கள் கல்லறைக் காவலர்களே . "மோயீசனையும் தீர்க்கதரிசிகளையும் அவர்கள் நம்பாவிட்டால் , மரித்தவர்களிடத்திலிருந்து ஒருவர் உயிர்த்து வந்தாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள் " என்று இயேசு சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மையானது .
அப்போஸ்தலர்களுக்குப் பயம். இயேசுநாதர் உயிர்த்ததைக் கேட்டு பயம் , உயிர்த்த இயேசுவைக் கண்டு பயம் . விசுவாசம் எவ்வளவு மெதுவாய் அவர்கள் உள்ளத்தில் ஊர்ந்தூர்ந்து உதித்தது . தாம் உயிர்த்து வரப் போவதாக இயேசுநாதர் தீர்க்கதரிசனமாக அறிவித்திருந்தார் . இயேசு உயிர்த்தெழுந்ததாக சம்மனசுக்கள் கூறியும் , தரிசனை கண்ட பெண்கள் கூறியும் , தாங்களே இயேசுவை முகமுகமாய்க் கண்ட பின்னும் உடனே அவர்கள் விசுவசிக்கவில்லை.
அப்போஸ்தலர்களின் பயத்துக்குக் காரணம் என்ன ?மரித்தவர் உயிர்த்து வந்தால் யாவருக்கும் பயம் தான் . ஆண்டவர் உயிர்க்க வேண்டும் என்னும் வேத வாசகத்தை விசுவாசிக்கததால் வந்த பயம் . உயிர்த்த இயேசுவின் மகிமையையும் பிரகாசத்தையும் கண்டு கலங்கினார்கள் . இந்நிலையில் அவரைப் பார்த்தும் அறிந்து கொள்ளவில்லையே . அவரை விட்டு ஓடி ஒளிந்து அவரை அவர்கள் மறுதலித்து விட்டபடியால் இப்போது பயம்
எனினும் அச்சம் ஒரு பக்கம் , மகிழ்ச்சி மறு பக்கம் . சந்தோசம் ,பயத்தை முற்றும் விரட்டிவிடவில்லை . அவர்கள் பயந்தார்கள் , மகிழ்ந்தார்கள் . சமயத்துக்குச் சமயம் குறுகிய நேரம் ஒன்றாய் வாழ்ந்தனர் . ஏரிக்கரையில் நிற்கிறார் . அவர்களோடு உண்கிறார் ,அவர்களுக்குப் போதிக்கிறார் . தேற்றரவானவரை அனுப்புவதாக வாக்களிக்கிறார் அவரது மனித சுபாவம் பூண்ட தேவ ஆளின் பரம இரகசியத்தை , அவர் கொண்டு வந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கக் கற்பித்தபின் மறைந்தார்
அவரது உத்தானத்தால் நம்மில் நம்பிக்கையை வளர்க்கிறார் . அவர் எழாதிருந்தால் மரித்தவர்களில் ஒருவரும் உயிர்த்து எழுந்திரார். அவரது உத்தானம் நமது உத்தானத்தின் அச்சாரம், அடையாளம் , அவர் ஜெயித்தார் . நம்மையும் ஜெயம் பெறச் செய்வார் . கிறிஸ்துவோடு நாம் உயிர்த்த வாழ்க்கை நடத்த வேண்டும் . "இயேசுவோடு உயிர்த்திருப்பீர்களேயாகில் மேலிருக்கும் காரியங்களை நாடிச் செல்லுங்கள் "
உத்தானத்தினால் வந்த புது வாழ்க்கையைத் திருச்சபை தன் சடங்கு முறையில் துலங்க வைக்கிறது . புது நெருப்பு மந்திரிக்கப்படுகிறது . ' கிறிஸ்துவின் ஒளி' என்ற கீதத்தில் திரி அர்ச்சிக்கப்படுகிறது . மக்கள் உள்ளத்தை கழுவி இயேசுவின் திரு இரத்தத்தில் வெண்மையாக்க குளிர்ந்த நீர் மந்திரிக்கப்படுகிறது . மகிழ்ச்சியின் அடையாளமாக மணிகள் ஒலிக்கப்படுகின்றன . பிரார்த்தனை பாடப்படுகிறது . அதில் உயிர்த்த ஆண்டவர் பாதம் நம் குறைகள் யாவையும் சமர்ப்பிக்கிறோம் . அவருக்கு நம் மேல் கவலை உண்டல்லவா? புதிதாய் மந்திரித்த தூபமும் வான் நோக்கிப் பறக்கிறது
இயேசுவின் உத்தானம் அவரது தெய்வீகத்திற்கு அசையாத சாட்சி , பூமியில் அவர் கொண்டு வந்த போதனையின் பிணை ; அவரோடு வர இருக்கும் மகிமையின் அச்சாரம் . இயேசுவின் உத்தானம் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஞான ஜீவியத்தில் வாழவும் வளரவும் மனிதனுக்கு வல்லமை அளித்தது
அவர் ஒரே தரம் மரித்து நித்திய ஜீவியத்தில் சேர்ந்தார் . நாம் ஒவ்வொரு நாளும் சாக வேண்டும். திரும்பத் திரும்ப எழ வேண்டும் . அதாவது நம்மில் பழைய மனிதனை , பழைய ஆதாமைக் களைந்து விடுவது , இயேசுவோடு முற்றிலும் மரிப்பது , பாவத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் அடியோடு சாவது . இவை யாவும் வாழ்நாள் முழுதும் நாம் செய்ய வேண்டிய அலுவல் . சுய ஒறுத்தலாலும் தபத்தாலும் நாம் தினம் தினம் மரிப்போமேயாகில் மாமிச இச்சையின் குழியிலிருந்து கல்லறையிலிருந்து ஒவ்வொரு நாளும் எழுந்து கடவுளின் வளர்ப்புப் பிள்ளைகளின் மகிமையில் சேருவோம்
உயிர்த்த இயேசு தன் தாய்க்குத் தானே முதலில் தோன்றி இருப்பார் ? சொல்லொணா மகிமை பூண்டு வந்த மகனைக் கண்டார் . அவரது அதிசயத்தையும் ஆனந்தத்தையும் அன்பு வளர்ச்சியையும் அறிகிறவர் யார் ?
செபம்
களிமண் சகதியாகிய எங்கள் உள்ளத்தில் அன்பில் மலர்ந்த அலரினால் வழங்கப் பெற்ற நித்திய வாழ்வின் வித்தே , எங்களில் முளைத்து எழுவாய் . மெல்லிய புல்லின் மேல் நடந்த இயேசுவின் உயிர்த்த பாதங்களைக் கொண்டும் , மலர்ந்த மணம் வீசும் இதழ்களைத் தீண்டிய கிறிஸ்துவின் புத்துயிர் பெற்ற கரங்களைக் கொண்டும் , எல்லாச் சிருஷ்டிகளையும் இனிய பார்வையோடு நோக்கும் இயேசுவின் விரிந்த கண்களைக் கொண்டும் , நாங்கள் கேட்பது என்னவெனில் , அதிசயத்தினால் உளம் பூரிக்கவும் , பூலோக அழகை மிதித்து அதை உதாசீனம் செய்யவும் எல்லாவற்றிலும் இருக்கும் தேவ சந்நிதானத்தை நினைவு கூரவும், உயிர்த்த இயேசுவே எங்களுக்குக் கற்றுத் தந்தருளும் . செபமாலை இராக்கினியே இக்கிருபையை எங்களுக்குப் பெற்றுத் தாரும் ஆமென்
சரிதை
செபமாலைப் பக்தியை பரப்புகிறவர்களுக்கு தேவ தாய் பற்பல கிருபைகளைப் பொழிகிறார் . அர்ச் சாமிநாதருக்குப் பின் , முத் ஆலன் ரோச் செபமாலைப் பக்தியைப் புதுப்பித்தார் . தேவ தாயிடமிருந்து பெரும் கிருபைகளைப் பெற்றார் . செபமாலை இராக்கினி அடிக்கடி அவருக்குத் தரிசனையாகி எவ்விதம் அவருடைய ஈடேற்றத்திற்காக உழைப்பது எனவும் எவ்விதம் உத்தம துறவியாகவும் குருவாகவும் மலர வேண்டுமெனவும் இயேசுவின் வாழ்க்கையை எவ்விதம் கண்டுபிடிப்பதெனவும் கற்றுக் கொடுத்தார் .
பேய்கள் அகோரமாய் அவரைச் சோதித்து வாட்டும். அப்போது ஆழ்ந்த விசனம் அவரைப் பீடிக்கும் . நம்பிக்கையை இழக்கும் தருணத்தில் இருப்பார் . ஆனால் கன்னித் தாய் தம்முடைய மதுரமான பிரசன்னத்தால் அவரைத் தேற்றி விசனத்தின் பனி மூட்டத்தைப் போக்குவார்
செபமாலையினால் வரும் லாபத்தை விளக்கி எவ்விதம் சரியான விதம் செபமாலையை செபிப்பது என்பதையும் கற்றுக் கொடுப்பார் . அவர் மட்டில் அவருக்குள்ள பரிசுத்த அன்பிற்கு அடையாளமாக ஒரு மோதிரம் அணிவித்தார் .கழுத்தில் ஒரு விலையுயர்ந்த ஆரத்தையும் அணிவித்தார் ;ஒரு செபமாலையையும் கொடுத்தார் .
அவர் பெரிய புண்ணியவாளர் என்று பற்பல புனிதர்களும் அறிஞர்களும் சொல்லிப் போயிருக்கிறார்கள் . அவர் 1475 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி மரித்தார் . மரிக்கும் முன் ஒரு லட்சம் பேரை மாதா சபையில் சேர்த்து விட்டார்
கர்த்தர் உயிர்த்தெழுந்தார்
கர்த்தர் உயிர்த்தெழுந்ததை நேரில் கண்டவர்கள் கல்லறைக் காவலர்களே . "மோயீசனையும் தீர்க்கதரிசிகளையும் அவர்கள் நம்பாவிட்டால் , மரித்தவர்களிடத்திலிருந்து ஒருவர் உயிர்த்து வந்தாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள் " என்று இயேசு சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மையானது .
அப்போஸ்தலர்களுக்குப் பயம். இயேசுநாதர் உயிர்த்ததைக் கேட்டு பயம் , உயிர்த்த இயேசுவைக் கண்டு பயம் . விசுவாசம் எவ்வளவு மெதுவாய் அவர்கள் உள்ளத்தில் ஊர்ந்தூர்ந்து உதித்தது . தாம் உயிர்த்து வரப் போவதாக இயேசுநாதர் தீர்க்கதரிசனமாக அறிவித்திருந்தார் . இயேசு உயிர்த்தெழுந்ததாக சம்மனசுக்கள் கூறியும் , தரிசனை கண்ட பெண்கள் கூறியும் , தாங்களே இயேசுவை முகமுகமாய்க் கண்ட பின்னும் உடனே அவர்கள் விசுவசிக்கவில்லை.
அப்போஸ்தலர்களின் பயத்துக்குக் காரணம் என்ன ?மரித்தவர் உயிர்த்து வந்தால் யாவருக்கும் பயம் தான் . ஆண்டவர் உயிர்க்க வேண்டும் என்னும் வேத வாசகத்தை விசுவாசிக்கததால் வந்த பயம் . உயிர்த்த இயேசுவின் மகிமையையும் பிரகாசத்தையும் கண்டு கலங்கினார்கள் . இந்நிலையில் அவரைப் பார்த்தும் அறிந்து கொள்ளவில்லையே . அவரை விட்டு ஓடி ஒளிந்து அவரை அவர்கள் மறுதலித்து விட்டபடியால் இப்போது பயம்
எனினும் அச்சம் ஒரு பக்கம் , மகிழ்ச்சி மறு பக்கம் . சந்தோசம் ,பயத்தை முற்றும் விரட்டிவிடவில்லை . அவர்கள் பயந்தார்கள் , மகிழ்ந்தார்கள் . சமயத்துக்குச் சமயம் குறுகிய நேரம் ஒன்றாய் வாழ்ந்தனர் . ஏரிக்கரையில் நிற்கிறார் . அவர்களோடு உண்கிறார் ,அவர்களுக்குப் போதிக்கிறார் . தேற்றரவானவரை அனுப்புவதாக வாக்களிக்கிறார் அவரது மனித சுபாவம் பூண்ட தேவ ஆளின் பரம இரகசியத்தை , அவர் கொண்டு வந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கக் கற்பித்தபின் மறைந்தார்
அவரது உத்தானத்தால் நம்மில் நம்பிக்கையை வளர்க்கிறார் . அவர் எழாதிருந்தால் மரித்தவர்களில் ஒருவரும் உயிர்த்து எழுந்திரார். அவரது உத்தானம் நமது உத்தானத்தின் அச்சாரம், அடையாளம் , அவர் ஜெயித்தார் . நம்மையும் ஜெயம் பெறச் செய்வார் . கிறிஸ்துவோடு நாம் உயிர்த்த வாழ்க்கை நடத்த வேண்டும் . "இயேசுவோடு உயிர்த்திருப்பீர்களேயாகில் மேலிருக்கும் காரியங்களை நாடிச் செல்லுங்கள் "
உத்தானத்தினால் வந்த புது வாழ்க்கையைத் திருச்சபை தன் சடங்கு முறையில் துலங்க வைக்கிறது . புது நெருப்பு மந்திரிக்கப்படுகிறது . ' கிறிஸ்துவின் ஒளி' என்ற கீதத்தில் திரி அர்ச்சிக்கப்படுகிறது . மக்கள் உள்ளத்தை கழுவி இயேசுவின் திரு இரத்தத்தில் வெண்மையாக்க குளிர்ந்த நீர் மந்திரிக்கப்படுகிறது . மகிழ்ச்சியின் அடையாளமாக மணிகள் ஒலிக்கப்படுகின்றன . பிரார்த்தனை பாடப்படுகிறது . அதில் உயிர்த்த ஆண்டவர் பாதம் நம் குறைகள் யாவையும் சமர்ப்பிக்கிறோம் . அவருக்கு நம் மேல் கவலை உண்டல்லவா? புதிதாய் மந்திரித்த தூபமும் வான் நோக்கிப் பறக்கிறது
இயேசுவின் உத்தானம் அவரது தெய்வீகத்திற்கு அசையாத சாட்சி , பூமியில் அவர் கொண்டு வந்த போதனையின் பிணை ; அவரோடு வர இருக்கும் மகிமையின் அச்சாரம் . இயேசுவின் உத்தானம் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஞான ஜீவியத்தில் வாழவும் வளரவும் மனிதனுக்கு வல்லமை அளித்தது
அவர் ஒரே தரம் மரித்து நித்திய ஜீவியத்தில் சேர்ந்தார் . நாம் ஒவ்வொரு நாளும் சாக வேண்டும். திரும்பத் திரும்ப எழ வேண்டும் . அதாவது நம்மில் பழைய மனிதனை , பழைய ஆதாமைக் களைந்து விடுவது , இயேசுவோடு முற்றிலும் மரிப்பது , பாவத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் அடியோடு சாவது . இவை யாவும் வாழ்நாள் முழுதும் நாம் செய்ய வேண்டிய அலுவல் . சுய ஒறுத்தலாலும் தபத்தாலும் நாம் தினம் தினம் மரிப்போமேயாகில் மாமிச இச்சையின் குழியிலிருந்து கல்லறையிலிருந்து ஒவ்வொரு நாளும் எழுந்து கடவுளின் வளர்ப்புப் பிள்ளைகளின் மகிமையில் சேருவோம்
உயிர்த்த இயேசு தன் தாய்க்குத் தானே முதலில் தோன்றி இருப்பார் ? சொல்லொணா மகிமை பூண்டு வந்த மகனைக் கண்டார் . அவரது அதிசயத்தையும் ஆனந்தத்தையும் அன்பு வளர்ச்சியையும் அறிகிறவர் யார் ?
செபம்
களிமண் சகதியாகிய எங்கள் உள்ளத்தில் அன்பில் மலர்ந்த அலரினால் வழங்கப் பெற்ற நித்திய வாழ்வின் வித்தே , எங்களில் முளைத்து எழுவாய் . மெல்லிய புல்லின் மேல் நடந்த இயேசுவின் உயிர்த்த பாதங்களைக் கொண்டும் , மலர்ந்த மணம் வீசும் இதழ்களைத் தீண்டிய கிறிஸ்துவின் புத்துயிர் பெற்ற கரங்களைக் கொண்டும் , எல்லாச் சிருஷ்டிகளையும் இனிய பார்வையோடு நோக்கும் இயேசுவின் விரிந்த கண்களைக் கொண்டும் , நாங்கள் கேட்பது என்னவெனில் , அதிசயத்தினால் உளம் பூரிக்கவும் , பூலோக அழகை மிதித்து அதை உதாசீனம் செய்யவும் எல்லாவற்றிலும் இருக்கும் தேவ சந்நிதானத்தை நினைவு கூரவும், உயிர்த்த இயேசுவே எங்களுக்குக் கற்றுத் தந்தருளும் . செபமாலை இராக்கினியே இக்கிருபையை எங்களுக்குப் பெற்றுத் தாரும் ஆமென்
சரிதை
செபமாலைப் பக்தியை பரப்புகிறவர்களுக்கு தேவ தாய் பற்பல கிருபைகளைப் பொழிகிறார் . அர்ச் சாமிநாதருக்குப் பின் , முத் ஆலன் ரோச் செபமாலைப் பக்தியைப் புதுப்பித்தார் . தேவ தாயிடமிருந்து பெரும் கிருபைகளைப் பெற்றார் . செபமாலை இராக்கினி அடிக்கடி அவருக்குத் தரிசனையாகி எவ்விதம் அவருடைய ஈடேற்றத்திற்காக உழைப்பது எனவும் எவ்விதம் உத்தம துறவியாகவும் குருவாகவும் மலர வேண்டுமெனவும் இயேசுவின் வாழ்க்கையை எவ்விதம் கண்டுபிடிப்பதெனவும் கற்றுக் கொடுத்தார் .
பேய்கள் அகோரமாய் அவரைச் சோதித்து வாட்டும். அப்போது ஆழ்ந்த விசனம் அவரைப் பீடிக்கும் . நம்பிக்கையை இழக்கும் தருணத்தில் இருப்பார் . ஆனால் கன்னித் தாய் தம்முடைய மதுரமான பிரசன்னத்தால் அவரைத் தேற்றி விசனத்தின் பனி மூட்டத்தைப் போக்குவார்
செபமாலையினால் வரும் லாபத்தை விளக்கி எவ்விதம் சரியான விதம் செபமாலையை செபிப்பது என்பதையும் கற்றுக் கொடுப்பார் . அவர் மட்டில் அவருக்குள்ள பரிசுத்த அன்பிற்கு அடையாளமாக ஒரு மோதிரம் அணிவித்தார் .கழுத்தில் ஒரு விலையுயர்ந்த ஆரத்தையும் அணிவித்தார் ;ஒரு செபமாலையையும் கொடுத்தார் .
அவர் பெரிய புண்ணியவாளர் என்று பற்பல புனிதர்களும் அறிஞர்களும் சொல்லிப் போயிருக்கிறார்கள் . அவர் 1475 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி மரித்தார் . மரிக்கும் முன் ஒரு லட்சம் பேரை மாதா சபையில் சேர்த்து விட்டார்
இருபத்து இரண்டாம் நாள்
கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமாகிறார்
இயேசுநாதர் தம் அலுவலை முடித்து விட்டார் . திருச்சபையின் அமைப்பை வகுத்து விட்டார் . அவர் மோட்சத்துக்குப் போவதனால் நமக்குப் பெரும் பயன் உண்டு . தமது மோட்ச ஆரோகணத்தால் நம்மில் விசுவாசத்தின் வாழ்வை உறுதிப்படுத்தினார் . நமக்காக ஏற்கனவே அவர் மோட்சத்தை சுதந்திரித்திருந்தபடியால் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார் . பரலோகத்திலிருந்து நமக்கு அனுப்பும் மகிமையான கொடைகளினால் விசேசமாய்த் திவ்விய பரிசுத்த ஆவியை அனுப்புவதினால் நம்மில் தேவ சிநேகத்தையும் அதிகரித்தார் . அவர் மோட்சத்திற்கு ஏகியிராவிடில் பரிசுத்த ஆவி நம்மேல் இறங்கி வந்திருக்க மாட்டார். மோட்சமும் நமக்குத் திறந்திராது
இதைப் பற்றி அர்ச் அகுஸ்தீன் சொல்லுகிறார் "இயேசுவின் உத்தானம் நமது நம்பிக்கை . அவருடைய ஆரோகணம் நமக்கு மகிமை . இயேசுவின் மோட்ச ஆரோகணத் திருநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம் . சரியான விதமாக விசுவாசத்தோடும் , பக்தியோடும் , பரிசுத்தமாகவும் அன்போடும் ஆண்டவரின் ஆரோகணத்தைக் கொண்டாடுவோமேயாகில் நாம் அவரோடு மேலே ஏற வேண்டும் . அங்கு நம் இதயம் உயர வேண்டும் . மேலேறுகையில் கர்வம் மேலே ஏறக் கூடாது . நமது பேறுபலன்களைக் கொண்டே நாம் மேலே போகிறோம் என்ற மதி மோசம் இருத்தலாகாது . ஆண்டவருக்காக என்பதை மறந்து உயரப் பறப்பது அகங்காரம் . ஆண்டவரோடு நம் உள்ளம் மேலே போகுமேயாகில் அது நமது சொந்த வீடேகுவதாம்
கவனியுங்கள் சகோதரர்களே என்ன அதிசயம் ! கடவுள் மேலே இருக்கிறார் . நீ மேலே ஏறப்பார். அவர் உன்னை விட்டுப் பறந்து விடுகிறார் . தரைமட்டம் உன்னைத் தாழ்த்து . அவர் உன்னிடம் கீழே வருகிறார் . இது ஏன் ? ஆண்டவர் உயர்ந்தவர் . தாழ்ச்சியுள்ளவர்கள் மேல் தன் கண்ணைத் திருப்புகிறார் . உயர்ந்தவர்களை எட்டி நின்று பார்க்கிறார் . தங்களைத் தாழ்த்துகிறவர்களை அருகிலிருந்து இரக்கத்தோடு எழுப்பி விடுகிறார் . அகங்காரமுள்ள பெரியோரை எட்டி நின்று பார்த்துக் கீழே உருட்டி விடுகிறார்
ஆண்டவரின் ஆரோகணம் மனித சுபாவத்தின் ஆடம்பர வெற்றி . என்றென்றுக்கும் கடவுளும் மனிதனுமான இரண்டாம் தேவ ஆளோடு ஒன்றித்து மோட்சம் கொண்டு போகப்படுகிறோம் . இயேசுநாதருடைய பாடுகளாலும் மரணத்தாலும் அவருடைய மனித சுபாவம் மோட்சத்தில் எல்லா சிருஷ்டிகள் மேல் அரசுரிமை பெற்றது . தேவ சுபாவத்தில் அவர் பிதாவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் சமம் . மனித சுபாவத்திலும் தேவ வல்லமையிலும் சுதந்திரம் பெற்று மனுக்குலத்திற்கே நீதிபதியும் அதிபதியும் ஆனார் . முள்முடி தான் அவரது ஆட்சியின் சுதந்திரத்தின் சின்னம் . அவர் கரத்தின் மூங்கில் கோல் நீதி செலுத்த அவருக்குள்ள அதிகாரத்தின் சாட்சி . அவரது கரங்களிலும் கால்களிலும் உள்ள காயங்கள் பேயின் மேலும் உலகின் மேலும் உடலின் மேலும் அவர் கொண்ட வெற்றியைப் பறையடிக்கின்றன
இயேசுவின் ஆரோகணம் அப்போஸ்தலர்கள் உள்ளத்தில் அதிசயத்தையும் அக்களிப்பையும் ஊட்டின . இயேசுநாதர் தம் அலுவலை முடித்து ஆனந்தத்தில் மகிமையில் பிரவேசித்து விட்டார் . அவருக்கு இனிமேல் மகிழ்ச்சியும் மகிமையுமே . அவரது அரசுக்கு முடிவில்லை . ஆதலால் நாம் இயேசுவுக்காக மகிழ்வோம் . மோட்சம் இனிமேல் நமதே . நம்மைக் குறித்தும் அகமகிழலாம் . பாவத்தை எந்நாளும் தவிர்த்து நடப்பது சங்கட அலுவல் . எனினும் பாவமின்றி வாழ்ந்தால் போதுமென்ற தாழ்ந்த மனப்பான்மை நம்மிடம் தாமதிக்கலாகாது . புண்ணியத்தின் ஏணியில் மேலும் மேலும் ஏற வேண்டும் .இயேசுவோடு பந்திக்கும் ஐக்கியத்தில் நாளுக்கு நாள் அதிகம் நெருங்க வேண்டும் எனும் தீர்மானம் உறுதிப்பட வேண்டும்
செபம்
மோட்சத்திற்கு ஆரோகணமான இயேசுவே , உமது கரங்களிலும் காலிலும் அகில உலகின் காயங்களை நீர் தரித்திருக்கிறீர் . கடவுளின் காணா முகத்தின் முன் விண்மீன்களைப் போல பிரகாசித்து எங்களுக்காக அவை பரிந்து பேசுகின்றன .உமது ஐந்து திருக்காயங்களால் எங்களை ஐம்புலங்களைச் சுத்திகரித்து எங்கள் உள்ளங்களை மோட்சத்திற்கு எழுப்பியருளும் . உமது மகிமை பிரகாசிக்கும் உடலில் உள்ள காயங்களைக் காண்பித்து எங்கள் மேல் இறைவனின் இறக்கம் இறங்கச் செய்கிறீரே , உமது அன்பின் பெருக்கம் நீர் அடைந்த காயங்களை உலக மக்களுக்குக் காட்டி அவர்களை உம்மிடம் மேலே இழுக்க எங்களுக்கு வரம் தாரும்
இயேசுவின் ஆரோகணத்தை அருகில் நின்று கவனித்த செபமாலை இராக்கினியே , எங்கள் உள்ளம் அவரோடு பரகதியில் என்றும் வாழக் கிருபை செய்தருளும் ஆமென்
சரிதை
அர்ச் சாமினாதருக்கு பேதுரோ என்ற பேர் கொண்ட ஒரு அத்தை மகன் இருந்தான் . இவன் பாவ வழியில் ஈடுபட்டு அலைந்தான் . தன் உறவினர் செபமாலையின் வல்லமையைப் பற்றி பிரசங்கம் செய்துகொண்டிருக்கிறார் எனவும் அப்பிரசங்கங்களைக் கேட்டு பலர் மனந்திரும்பி தங்கள் பாவ வழியை விட்டு திருத்தி அமைத்துக் கொண்டார்கள் எனவும் கேள்விப்பட்டான்
"நான் நல்வழிக்குத் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையை இதுவரை இழந்திருந்தேன் . இப்பொழுது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது . இப்பக்திமானின் பிரசங்கத்தை நான் கேட்பேன் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் . ஒரு நாள் பிரசங்கம் கேட்கச் சென்றான் . கூட்டத்தில் இவன் நிற்பதை சாமிநாதர் கண்டு கொண்டார் . மகா உக்கிரத்தோடு பாவத்தின் மோச நிலையையும் , பாவத்தின் அக்கிரமத்தைப் பற்றியும் சாமிநாதர் அழுத்தமாகப் பேசினார் . தன் உறவினன் தன் பாவாக்கிரமத்தைக் கண்டுணர்ந்து மனஸ்தாபப்பட வேண்டுமென்று உள்ளத்தில் இறைவனிடம் கெஞ்சினார்
அந்த நேரம் பேதுரோ பயந்தான் . ஆனால் மறு நிமிடம் அதை மறந்தான் . தன் வாழ்க்கை வழியைத் திருத்தி அமைத்துக் கொள்ளவில்லை . வேறொரு நாளும் பிரசங்கம் கேட்கப் போனான் . சுவாமிநாதர் அவனுடைய கல்நெஞ்சத்தைக் கண்டு உரத்த சத்தமாய்ச் சொன்னார் " ஆண்டவரே , உமதாலயத்துக்குள் சற்று முன் வந்தவனுடைய ஆத்தும நிலையை இங்கு கூடியிருக்கும் மக்கள் யாவரும் காணக் கிருபை செய்யும் " என்றார் . சனங்கள் என்ன கண்டார்கள் ? பயங்கரமான கொடிய மிருகங்களைப் போல பேய்கள் பேதுரோவைச் சூழ்ந்து நிற்பதையும் , பெரும் இருப்புச் சங்கிலிகளால் அவைகள் அவனைப் பிணைத்திருப்பதையும் கண்டனர் . மக்கள் பயந்து அரண்டு நாலா பக்கமும் சிதறி ஓடினர் . இவ்விதம் மக்கள் தன்னை விட்டு பயந்து ஓடுவதைக் கண்ட அவனை கலக்கமும் பீதியும் பிடித்தன
சாமிநாதர் யாவர் மத்தியிலும் அமைதியை நிறுத்தி , பின் பாவியை பார்த்துப் பேசுவார் :" நிர்பாக்கிய மனிதனே , உன் கேவலமான நிலையை உணர்ந்து தேவ தாயின் பாதத்தில் விழு . இதோ இச்செபமாலையை எடுத்து உன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பக்தியாய்ச் சொல் . உன் வாழ்க்கையைத் திருத்தி அமைக்க நல்ல பிரதிக்கினை செய் " என்றார் . பேதுரோ முழந்தாளில் விழுந்து முழுச் செபமாலை சொல்லி மெய்யான மனஸ்தாபத்தோடு பாவசங்கீர்த்தனம் செய்தான் . தினந்தோறும் செபமாலை சொல்லவும் செபமாலை மாதா சபையில் சேரவும் புனிதர் புத்திமதி சொன்னார் . அவன் அப்படியே நடப்பதாகச் சொன்னான் . ஆலயத்தை விட்டு வெளியேறும்போது அவனது முகம் சம்மனசின் வதனத்தைப் போல் பிரகாசித்தது . செபமாலையை அடிக்கடி சொல்லி கிறிஸ்தவ சீவியம் சீவித்து பாக்கியமாய் மரித்தான்
கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமாகிறார்
இயேசுநாதர் தம் அலுவலை முடித்து விட்டார் . திருச்சபையின் அமைப்பை வகுத்து விட்டார் . அவர் மோட்சத்துக்குப் போவதனால் நமக்குப் பெரும் பயன் உண்டு . தமது மோட்ச ஆரோகணத்தால் நம்மில் விசுவாசத்தின் வாழ்வை உறுதிப்படுத்தினார் . நமக்காக ஏற்கனவே அவர் மோட்சத்தை சுதந்திரித்திருந்தபடியால் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார் . பரலோகத்திலிருந்து நமக்கு அனுப்பும் மகிமையான கொடைகளினால் விசேசமாய்த் திவ்விய பரிசுத்த ஆவியை அனுப்புவதினால் நம்மில் தேவ சிநேகத்தையும் அதிகரித்தார் . அவர் மோட்சத்திற்கு ஏகியிராவிடில் பரிசுத்த ஆவி நம்மேல் இறங்கி வந்திருக்க மாட்டார். மோட்சமும் நமக்குத் திறந்திராது
இதைப் பற்றி அர்ச் அகுஸ்தீன் சொல்லுகிறார் "இயேசுவின் உத்தானம் நமது நம்பிக்கை . அவருடைய ஆரோகணம் நமக்கு மகிமை . இயேசுவின் மோட்ச ஆரோகணத் திருநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம் . சரியான விதமாக விசுவாசத்தோடும் , பக்தியோடும் , பரிசுத்தமாகவும் அன்போடும் ஆண்டவரின் ஆரோகணத்தைக் கொண்டாடுவோமேயாகில் நாம் அவரோடு மேலே ஏற வேண்டும் . அங்கு நம் இதயம் உயர வேண்டும் . மேலேறுகையில் கர்வம் மேலே ஏறக் கூடாது . நமது பேறுபலன்களைக் கொண்டே நாம் மேலே போகிறோம் என்ற மதி மோசம் இருத்தலாகாது . ஆண்டவருக்காக என்பதை மறந்து உயரப் பறப்பது அகங்காரம் . ஆண்டவரோடு நம் உள்ளம் மேலே போகுமேயாகில் அது நமது சொந்த வீடேகுவதாம்
கவனியுங்கள் சகோதரர்களே என்ன அதிசயம் ! கடவுள் மேலே இருக்கிறார் . நீ மேலே ஏறப்பார். அவர் உன்னை விட்டுப் பறந்து விடுகிறார் . தரைமட்டம் உன்னைத் தாழ்த்து . அவர் உன்னிடம் கீழே வருகிறார் . இது ஏன் ? ஆண்டவர் உயர்ந்தவர் . தாழ்ச்சியுள்ளவர்கள் மேல் தன் கண்ணைத் திருப்புகிறார் . உயர்ந்தவர்களை எட்டி நின்று பார்க்கிறார் . தங்களைத் தாழ்த்துகிறவர்களை அருகிலிருந்து இரக்கத்தோடு எழுப்பி விடுகிறார் . அகங்காரமுள்ள பெரியோரை எட்டி நின்று பார்த்துக் கீழே உருட்டி விடுகிறார்
ஆண்டவரின் ஆரோகணம் மனித சுபாவத்தின் ஆடம்பர வெற்றி . என்றென்றுக்கும் கடவுளும் மனிதனுமான இரண்டாம் தேவ ஆளோடு ஒன்றித்து மோட்சம் கொண்டு போகப்படுகிறோம் . இயேசுநாதருடைய பாடுகளாலும் மரணத்தாலும் அவருடைய மனித சுபாவம் மோட்சத்தில் எல்லா சிருஷ்டிகள் மேல் அரசுரிமை பெற்றது . தேவ சுபாவத்தில் அவர் பிதாவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் சமம் . மனித சுபாவத்திலும் தேவ வல்லமையிலும் சுதந்திரம் பெற்று மனுக்குலத்திற்கே நீதிபதியும் அதிபதியும் ஆனார் . முள்முடி தான் அவரது ஆட்சியின் சுதந்திரத்தின் சின்னம் . அவர் கரத்தின் மூங்கில் கோல் நீதி செலுத்த அவருக்குள்ள அதிகாரத்தின் சாட்சி . அவரது கரங்களிலும் கால்களிலும் உள்ள காயங்கள் பேயின் மேலும் உலகின் மேலும் உடலின் மேலும் அவர் கொண்ட வெற்றியைப் பறையடிக்கின்றன
இயேசுவின் ஆரோகணம் அப்போஸ்தலர்கள் உள்ளத்தில் அதிசயத்தையும் அக்களிப்பையும் ஊட்டின . இயேசுநாதர் தம் அலுவலை முடித்து ஆனந்தத்தில் மகிமையில் பிரவேசித்து விட்டார் . அவருக்கு இனிமேல் மகிழ்ச்சியும் மகிமையுமே . அவரது அரசுக்கு முடிவில்லை . ஆதலால் நாம் இயேசுவுக்காக மகிழ்வோம் . மோட்சம் இனிமேல் நமதே . நம்மைக் குறித்தும் அகமகிழலாம் . பாவத்தை எந்நாளும் தவிர்த்து நடப்பது சங்கட அலுவல் . எனினும் பாவமின்றி வாழ்ந்தால் போதுமென்ற தாழ்ந்த மனப்பான்மை நம்மிடம் தாமதிக்கலாகாது . புண்ணியத்தின் ஏணியில் மேலும் மேலும் ஏற வேண்டும் .இயேசுவோடு பந்திக்கும் ஐக்கியத்தில் நாளுக்கு நாள் அதிகம் நெருங்க வேண்டும் எனும் தீர்மானம் உறுதிப்பட வேண்டும்
செபம்
மோட்சத்திற்கு ஆரோகணமான இயேசுவே , உமது கரங்களிலும் காலிலும் அகில உலகின் காயங்களை நீர் தரித்திருக்கிறீர் . கடவுளின் காணா முகத்தின் முன் விண்மீன்களைப் போல பிரகாசித்து எங்களுக்காக அவை பரிந்து பேசுகின்றன .உமது ஐந்து திருக்காயங்களால் எங்களை ஐம்புலங்களைச் சுத்திகரித்து எங்கள் உள்ளங்களை மோட்சத்திற்கு எழுப்பியருளும் . உமது மகிமை பிரகாசிக்கும் உடலில் உள்ள காயங்களைக் காண்பித்து எங்கள் மேல் இறைவனின் இறக்கம் இறங்கச் செய்கிறீரே , உமது அன்பின் பெருக்கம் நீர் அடைந்த காயங்களை உலக மக்களுக்குக் காட்டி அவர்களை உம்மிடம் மேலே இழுக்க எங்களுக்கு வரம் தாரும்
இயேசுவின் ஆரோகணத்தை அருகில் நின்று கவனித்த செபமாலை இராக்கினியே , எங்கள் உள்ளம் அவரோடு பரகதியில் என்றும் வாழக் கிருபை செய்தருளும் ஆமென்
சரிதை
அர்ச் சாமினாதருக்கு பேதுரோ என்ற பேர் கொண்ட ஒரு அத்தை மகன் இருந்தான் . இவன் பாவ வழியில் ஈடுபட்டு அலைந்தான் . தன் உறவினர் செபமாலையின் வல்லமையைப் பற்றி பிரசங்கம் செய்துகொண்டிருக்கிறார் எனவும் அப்பிரசங்கங்களைக் கேட்டு பலர் மனந்திரும்பி தங்கள் பாவ வழியை விட்டு திருத்தி அமைத்துக் கொண்டார்கள் எனவும் கேள்விப்பட்டான்
"நான் நல்வழிக்குத் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையை இதுவரை இழந்திருந்தேன் . இப்பொழுது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது . இப்பக்திமானின் பிரசங்கத்தை நான் கேட்பேன் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் . ஒரு நாள் பிரசங்கம் கேட்கச் சென்றான் . கூட்டத்தில் இவன் நிற்பதை சாமிநாதர் கண்டு கொண்டார் . மகா உக்கிரத்தோடு பாவத்தின் மோச நிலையையும் , பாவத்தின் அக்கிரமத்தைப் பற்றியும் சாமிநாதர் அழுத்தமாகப் பேசினார் . தன் உறவினன் தன் பாவாக்கிரமத்தைக் கண்டுணர்ந்து மனஸ்தாபப்பட வேண்டுமென்று உள்ளத்தில் இறைவனிடம் கெஞ்சினார்
அந்த நேரம் பேதுரோ பயந்தான் . ஆனால் மறு நிமிடம் அதை மறந்தான் . தன் வாழ்க்கை வழியைத் திருத்தி அமைத்துக் கொள்ளவில்லை . வேறொரு நாளும் பிரசங்கம் கேட்கப் போனான் . சுவாமிநாதர் அவனுடைய கல்நெஞ்சத்தைக் கண்டு உரத்த சத்தமாய்ச் சொன்னார் " ஆண்டவரே , உமதாலயத்துக்குள் சற்று முன் வந்தவனுடைய ஆத்தும நிலையை இங்கு கூடியிருக்கும் மக்கள் யாவரும் காணக் கிருபை செய்யும் " என்றார் . சனங்கள் என்ன கண்டார்கள் ? பயங்கரமான கொடிய மிருகங்களைப் போல பேய்கள் பேதுரோவைச் சூழ்ந்து நிற்பதையும் , பெரும் இருப்புச் சங்கிலிகளால் அவைகள் அவனைப் பிணைத்திருப்பதையும் கண்டனர் . மக்கள் பயந்து அரண்டு நாலா பக்கமும் சிதறி ஓடினர் . இவ்விதம் மக்கள் தன்னை விட்டு பயந்து ஓடுவதைக் கண்ட அவனை கலக்கமும் பீதியும் பிடித்தன
சாமிநாதர் யாவர் மத்தியிலும் அமைதியை நிறுத்தி , பின் பாவியை பார்த்துப் பேசுவார் :" நிர்பாக்கிய மனிதனே , உன் கேவலமான நிலையை உணர்ந்து தேவ தாயின் பாதத்தில் விழு . இதோ இச்செபமாலையை எடுத்து உன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பக்தியாய்ச் சொல் . உன் வாழ்க்கையைத் திருத்தி அமைக்க நல்ல பிரதிக்கினை செய் " என்றார் . பேதுரோ முழந்தாளில் விழுந்து முழுச் செபமாலை சொல்லி மெய்யான மனஸ்தாபத்தோடு பாவசங்கீர்த்தனம் செய்தான் . தினந்தோறும் செபமாலை சொல்லவும் செபமாலை மாதா சபையில் சேரவும் புனிதர் புத்திமதி சொன்னார் . அவன் அப்படியே நடப்பதாகச் சொன்னான் . ஆலயத்தை விட்டு வெளியேறும்போது அவனது முகம் சம்மனசின் வதனத்தைப் போல் பிரகாசித்தது . செபமாலையை அடிக்கடி சொல்லி கிறிஸ்தவ சீவியம் சீவித்து பாக்கியமாய் மரித்தான்
இருபத்து மூன்றாம் நாள்
பரிசுத்த ஆவியின் வருகை
திருச்சபையின் முதல் நவநாள் ஆரம்பித்தது . இயேசுநாதர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின் தேவ தாயும் அப்போஸ்தலர்களும் கூடி பரிசுத்த ஆவியின் வருகைக்காக செபத்தில் நிலைத்திருந்தனர். பத்தாம் நாள் பெரும் புயல் காற்று வீசியது . தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் பரிசுத்த ஆவி அக்கினி ரூபமாய் இறங்கி வந்தார் .
மனுதாவதாரத்தின் அலுவல் அன்பின் அலுவல் . ஒவ்வொரு மனிதனின் ஆத்துமத்திலும் - ஒவ்வொருவனும் அந்த அன்பில் பங்கு பெற்று , அதைத் திருப்பிக் கொடுப்பதால் - அந்த அலுவல் முற்றுப் பெற வேண்டும் . தம் தயாளத்திற்கு அளவேயில்லா மோட்ச பிதாவானவர் தமத்திருத்துவத்தின் மூன்றாம் ஆளை , தேவ சிநேகத்தின் ஆவியை அனுப்பி வைத்தார் . ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் விருந்தினரைப் போலும் , வழிகாட்டியாகவும் ,ஆலோசனை தருகிறவராகவும் தைரியம் ஊட்டுகிறவராகவும் வசிப்பார். அன்பின் ஆண்டவர் நமக்களித்த எல்லாக் கொடைகளிலும் அவர் தான் பெருங் கொடை. அவர் தேவ சிநேகத்தின் ஆளல்லவா ? இரண்டாம் தேவ ஆள் உலகத்திற்கு வந்து யாவருக்கும் சம்பாதித்த ஈடேற்றத்தை இரட்சணியத்தை ஒவ்வொருவரிடமும் உத்தமமாக்க வேண்டியவர்
பார்வைக்குரிய அளவில் தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் வந்த வரைக்கும் , உறுதிப்பூசுதலில் காணக்கூடாத விதமாய் ஒவ்வொருவர் மேலும் வருவதற்கு அது சான்று . கிறிஸ்தவ வாழ்வில் அன்பின் முக்கியத்துவத்தை அந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது . இறைவனுடைய அன்பு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இறங்கி அதில் ஊன்றிப் போய் - உண்பதும் , குடிப்பதும் ,ஓடுவதும் , ஆடுவதுமான - நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஞான மதிப்பளித்து அது அன்பின் ஒளியாகத் திகழ வேண்டும்
பரிசுத்த ஆவியின் வரவு திருச்சபையின் பரம இரகசியம் . பலவீனர்களான அப்போஸ்தலர்கள் பலசாலி ஆனார்கள் . விவேகமற்ற அப்போஸ்தலர்கள் ஞானி ஆனார்கள் . தன் ஊர் தன் கிராமம் என்று ஒடுங்கிய அற்ப புத்தியுள்ளவர்கள் பரந்த உலகின் மக்களாயினர். பாடுகளின் காலத்தில் பயந்து ஓடி ஒளிந்து - இயேசுவின் உத்தானத்திற்குப் பின் உயரிய நோக்கமின்றி - இந்நேரமாவது இஸ்ராயேலரின் அரசியலைத் திரும்ப எழுப்புவாரா என்று கேட்டார்கள் அல்லவா ? இப்பொழுது ஞானோதயம் பிறந்தது , பலம் வந்தது , உலகமெங்கும் போய் போதித்து தங்கள் போதனையின் உண்மைக்குச் சான்றாக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்
பிரகாசத்தின் பிரவாகத்தை - வெள்ளத்தை - புனித இராயப்பரின் முதல் பிரசங்கத்தில் காணலாம் . உலகின் பற்பல கோடியிலிருந்து பற்பல மொழிகள் பேசுகிறவர்கள் , இராயப்பர் அரமேயிக் மொழியில் போதித்தாலும் அதை ஒவ்வொருவனும் தத்தம் மொழியில் கேட்டான் . வேதாகமம் விளங்கியது ; உத்தானம் , ஈடேற்றம் முதலியவற்றின் பொருள் விளங்கியது . தடுமாற்றம் இல்லை . அந்நாளே மூவாயிரம் பேருக்கு மேல் மனந்திரும்பினர் . மற்ற ஒவ்வொரு பிரசங்கத்திலும் ஆயிரமாயிரம் பேர் மனந்திரும்பினர் . இயேசுவின் பேரால் நோயாளிகளுக்குச் சுகத்தை கொடுத்தார் .
ஆண்டவரை மறுதலித்து மறைந்து பதுங்கியவர் கிறிஸ்துவின் பிரதிநிதியாக - முதல் பாப்பாண்டவராக - எல்லா உரிமையையும் கொண்டாடினார் .
அக்கினி ரூபமான நாவுகள் :
பழைய ஏற்பாட்டை வாசித்தவர்கள் கண்டு கொள்ளுவார்கள் . அக்கினி , ஆத்துமார்த்ததினுடையவும் பரிசுத்த தனத்தினுடையவும் அடையாளம் . சுத்தம் செய்து தெளிவைக் கொடுத்து நீதி செலுத்தும் கடவுளுடைய நிகரில்லா வல்லமையின் அடையாளம் . பரிசுத்த ஆவியின் மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் பார்த்தவர்களுக்கு விதவிதமான வரப்பிரசாதத்தைக் கொண்டு வந்தார் என்பது தெரியும் .நிறைந்த அருளைக் கொண்டு வந்தார் . பரிசுத்த ஆவியினால் அப்போஸ்தலர்கள் நிரப்பப் பெற்றார்கள் என்றது வேத வாசகம் . நிறைந்த இறை அருள் , அந்தஸ்துக்கு அவசியமான இறை அருள் , கேட்கிறவர்களுக்கும் போதிக்கிறவர்களுக்கும் அவசியமான நிறைந்த அருள் - இவைகளைக் கொணர்ந்தார்
பரிசுத்த ஆவி அன்பின் ,அருளின், இரக்கத்தின் , சமாதானத்தின் தேவன் . உலகை ஒரு புதிய பிரசன்னத்தால் மகிமைப்படுத்தவும் , அர்ச்சிக்கவும் , ஆறுதல் அளிக்கவும் அகமகிழச் செய்யவும் வந்தார்
பரிசுத்த ஆவி வந்தார் , போய்விடவில்லை; இருக்கிறார் . உலக முழுவதையும் நிரப்பினார் . திருச்சபையான அவரின் ஞான சரீரத்தின் அவயவங்கள் நாம் ; நம்முடைய அலுவல் அவரது பிரசன்னத்தை உலகம் அறியும்படி செய்வதாம்
செபம்
கடவுளின் ஆவியே , ஞானத்தின் ஆவியே , சந்தோஷ சமாதானத்தின் ஆவியே , எங்கள் மேல் எழுந்தருளி வாரும் . புயல் காற்று வீசினது போல் வாரும் . எங்கள் புத்தியை ஒளியின் வெள்ளத்தில் மூழ்கடியும். பிரகாசமுள்ள எரியும் நெருப்பை போல் எம்மிடத்தில் தங்கும். அச்சுவாலையில் எங்கள் மனதைப் பழுக்கக் காய்ச்சி மின்னும் வாளைப் போலாக்கும் . அன்பின் அக்கினிக் குழம்பால் எங்கள் இருதயத்தை சுத்தி செய்தருளும் . அசமந்தமான எங்கள் உள்ளத்தை கிறிஸ்துவின் கொதிக்கும் உடலாக மாற்றியருளும் - தண்ணீரை அவர் இரசமாக்கினது போல திராட்சைச் செடியில் ஓடும் ரசத்தைப் போல - எம்மில் உயிரின் நீரோட்டமாய் இருப்பீராக
செபமாலை இராக்கினியே பரிசுத்த ஆவியின் உதவியினால் நாங்கள் செபமாலையின் மதிப்பை அறிந்து அதைப் பக்தியாய் செய்யவும் நாலா பக்கமும் பரப்பவும் எங்களுக்கு உதவி செய்யும் ஆமென்
சரிதை
இயேசு சபையின் துணைச் சகோதரரான அர்ச் அல்போன்ஸ் ரொட்ரிகசை அறியாதவர்கள் இல்லை . செபமாலையைப் பக்தியால் சொல்லிவந்த படியினால் அவர் புனிதரானார் . ஞானத்திலும் தியானத்திலும் முதிர்ந்து விளைந்தார் . அவர் வெகு அடக்கமாகவும் பக்தியாகவும் செபமாலை சொல்லி வரும் போது சமயத்துக்கு சமயம் அவர் கண்டது ஏதெனில் 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே '' சொல்லி முடிக்கும் ஒவ்வொரு முறையும் அவர் வாயிலிருந்து ஒரு சிவந்த ரோஜா மலர் கீழே விழும் .'அருள் நிறைந்த மரியாயே 'சொல்லி முடிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு வெண் ரோசா மலர் கீழே விழும் . அவைகள் என்ன அழகு என்ன வாசனை நிறம் ஒன்றில் தான் வித்தியாசமே தவிர மணம் அழகில் அவைகளுக்குள் வித்தியாசம் இல்லை
இதையொத்த வேறொரு சம்பவம் : : அர்ச் பிரான்சிஸ் சபைத் துறவி ஒருவர் ஒவ்வொரு நாளும் பகற்போசனத்துக்கு முன் செபமாலை சொல்லி முடிப்பார் .ஒரு நாள் அசனத்திற்கு மணி அடித்தபோது அவர் செபமாலை சொல்லி முடிக்கவில்லை .பந்திக்கு வரும் முன் அதை முடித்து வருவதாக சிரேஷ்டரிடம் உத்தரவு பெற்றார் . வெகு நேரம் வரை பந்திக்கு அவர் வராததால் அவரை அழைத்து வர ஒரு துறவியை சிரேஷ்டர் அனுப்பி வைத்தார் . போனவர் நடந்ததைக் கண்டு மயங்கி நின்று விட்டார் . பக்தியுள்ள துறவி பிரகாச பிரவாகத்தில் மிதந்து நின்றார் . அவருக்கு எதிரில் இரு சம்மனசுக்களுடன் தேவ தாய் நின்றார் . அருள் நிறைந்த மரியே சொல்லி முடித்த ஒவ்வொரு முறையும் அவர் வாயிலிருந்து அழகிய ரோசா மலர்கள் வெளி வந்து கொண்டிருந்தன . சம்மனசுக்கள் அவற்றை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி தாயின் சிரசின் மேல் வைத்தனர் .அன்னையும் புன்னகையோடு அவைகளை ஏற்றுக் கொண்டார் . வேறு இரு சகோதரர்கள் அனுப்பப் பட்டனர் . அவர்கள் போன போதும் முன் சொன்ன காட்சியைக் கண்டு மெய் மறந்து நின்றனர் . செபமாலை முடிந்த பின் தேவ தாய் மறைந்தார்
ரோஜாமலர் பூக்களின் அரசி ; செபமாலை செபங்களின் அரசி . நாம் செபமாலை சொல்லும்போது மலர்முடி பின்னி மாமரியின் சிரசிலும் அவர் மைந்தன் இயேசுவின் சிரசிலும் வைக்கிறோம் . இதை அறிந்தால் எவ்வளவு பக்தியாகவும் பிரமாணிக்கமாகவும் செபமாலை சொல்லி வருவோம் !
பரிசுத்த ஆவியின் வருகை
திருச்சபையின் முதல் நவநாள் ஆரம்பித்தது . இயேசுநாதர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின் தேவ தாயும் அப்போஸ்தலர்களும் கூடி பரிசுத்த ஆவியின் வருகைக்காக செபத்தில் நிலைத்திருந்தனர். பத்தாம் நாள் பெரும் புயல் காற்று வீசியது . தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் பரிசுத்த ஆவி அக்கினி ரூபமாய் இறங்கி வந்தார் .
மனுதாவதாரத்தின் அலுவல் அன்பின் அலுவல் . ஒவ்வொரு மனிதனின் ஆத்துமத்திலும் - ஒவ்வொருவனும் அந்த அன்பில் பங்கு பெற்று , அதைத் திருப்பிக் கொடுப்பதால் - அந்த அலுவல் முற்றுப் பெற வேண்டும் . தம் தயாளத்திற்கு அளவேயில்லா மோட்ச பிதாவானவர் தமத்திருத்துவத்தின் மூன்றாம் ஆளை , தேவ சிநேகத்தின் ஆவியை அனுப்பி வைத்தார் . ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் விருந்தினரைப் போலும் , வழிகாட்டியாகவும் ,ஆலோசனை தருகிறவராகவும் தைரியம் ஊட்டுகிறவராகவும் வசிப்பார். அன்பின் ஆண்டவர் நமக்களித்த எல்லாக் கொடைகளிலும் அவர் தான் பெருங் கொடை. அவர் தேவ சிநேகத்தின் ஆளல்லவா ? இரண்டாம் தேவ ஆள் உலகத்திற்கு வந்து யாவருக்கும் சம்பாதித்த ஈடேற்றத்தை இரட்சணியத்தை ஒவ்வொருவரிடமும் உத்தமமாக்க வேண்டியவர்
பார்வைக்குரிய அளவில் தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் வந்த வரைக்கும் , உறுதிப்பூசுதலில் காணக்கூடாத விதமாய் ஒவ்வொருவர் மேலும் வருவதற்கு அது சான்று . கிறிஸ்தவ வாழ்வில் அன்பின் முக்கியத்துவத்தை அந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது . இறைவனுடைய அன்பு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இறங்கி அதில் ஊன்றிப் போய் - உண்பதும் , குடிப்பதும் ,ஓடுவதும் , ஆடுவதுமான - நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஞான மதிப்பளித்து அது அன்பின் ஒளியாகத் திகழ வேண்டும்
பரிசுத்த ஆவியின் வரவு திருச்சபையின் பரம இரகசியம் . பலவீனர்களான அப்போஸ்தலர்கள் பலசாலி ஆனார்கள் . விவேகமற்ற அப்போஸ்தலர்கள் ஞானி ஆனார்கள் . தன் ஊர் தன் கிராமம் என்று ஒடுங்கிய அற்ப புத்தியுள்ளவர்கள் பரந்த உலகின் மக்களாயினர். பாடுகளின் காலத்தில் பயந்து ஓடி ஒளிந்து - இயேசுவின் உத்தானத்திற்குப் பின் உயரிய நோக்கமின்றி - இந்நேரமாவது இஸ்ராயேலரின் அரசியலைத் திரும்ப எழுப்புவாரா என்று கேட்டார்கள் அல்லவா ? இப்பொழுது ஞானோதயம் பிறந்தது , பலம் வந்தது , உலகமெங்கும் போய் போதித்து தங்கள் போதனையின் உண்மைக்குச் சான்றாக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்
பிரகாசத்தின் பிரவாகத்தை - வெள்ளத்தை - புனித இராயப்பரின் முதல் பிரசங்கத்தில் காணலாம் . உலகின் பற்பல கோடியிலிருந்து பற்பல மொழிகள் பேசுகிறவர்கள் , இராயப்பர் அரமேயிக் மொழியில் போதித்தாலும் அதை ஒவ்வொருவனும் தத்தம் மொழியில் கேட்டான் . வேதாகமம் விளங்கியது ; உத்தானம் , ஈடேற்றம் முதலியவற்றின் பொருள் விளங்கியது . தடுமாற்றம் இல்லை . அந்நாளே மூவாயிரம் பேருக்கு மேல் மனந்திரும்பினர் . மற்ற ஒவ்வொரு பிரசங்கத்திலும் ஆயிரமாயிரம் பேர் மனந்திரும்பினர் . இயேசுவின் பேரால் நோயாளிகளுக்குச் சுகத்தை கொடுத்தார் .
ஆண்டவரை மறுதலித்து மறைந்து பதுங்கியவர் கிறிஸ்துவின் பிரதிநிதியாக - முதல் பாப்பாண்டவராக - எல்லா உரிமையையும் கொண்டாடினார் .
அக்கினி ரூபமான நாவுகள் :
பழைய ஏற்பாட்டை வாசித்தவர்கள் கண்டு கொள்ளுவார்கள் . அக்கினி , ஆத்துமார்த்ததினுடையவும் பரிசுத்த தனத்தினுடையவும் அடையாளம் . சுத்தம் செய்து தெளிவைக் கொடுத்து நீதி செலுத்தும் கடவுளுடைய நிகரில்லா வல்லமையின் அடையாளம் . பரிசுத்த ஆவியின் மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் பார்த்தவர்களுக்கு விதவிதமான வரப்பிரசாதத்தைக் கொண்டு வந்தார் என்பது தெரியும் .நிறைந்த அருளைக் கொண்டு வந்தார் . பரிசுத்த ஆவியினால் அப்போஸ்தலர்கள் நிரப்பப் பெற்றார்கள் என்றது வேத வாசகம் . நிறைந்த இறை அருள் , அந்தஸ்துக்கு அவசியமான இறை அருள் , கேட்கிறவர்களுக்கும் போதிக்கிறவர்களுக்கும் அவசியமான நிறைந்த அருள் - இவைகளைக் கொணர்ந்தார்
பரிசுத்த ஆவி அன்பின் ,அருளின், இரக்கத்தின் , சமாதானத்தின் தேவன் . உலகை ஒரு புதிய பிரசன்னத்தால் மகிமைப்படுத்தவும் , அர்ச்சிக்கவும் , ஆறுதல் அளிக்கவும் அகமகிழச் செய்யவும் வந்தார்
பரிசுத்த ஆவி வந்தார் , போய்விடவில்லை; இருக்கிறார் . உலக முழுவதையும் நிரப்பினார் . திருச்சபையான அவரின் ஞான சரீரத்தின் அவயவங்கள் நாம் ; நம்முடைய அலுவல் அவரது பிரசன்னத்தை உலகம் அறியும்படி செய்வதாம்
செபம்
கடவுளின் ஆவியே , ஞானத்தின் ஆவியே , சந்தோஷ சமாதானத்தின் ஆவியே , எங்கள் மேல் எழுந்தருளி வாரும் . புயல் காற்று வீசினது போல் வாரும் . எங்கள் புத்தியை ஒளியின் வெள்ளத்தில் மூழ்கடியும். பிரகாசமுள்ள எரியும் நெருப்பை போல் எம்மிடத்தில் தங்கும். அச்சுவாலையில் எங்கள் மனதைப் பழுக்கக் காய்ச்சி மின்னும் வாளைப் போலாக்கும் . அன்பின் அக்கினிக் குழம்பால் எங்கள் இருதயத்தை சுத்தி செய்தருளும் . அசமந்தமான எங்கள் உள்ளத்தை கிறிஸ்துவின் கொதிக்கும் உடலாக மாற்றியருளும் - தண்ணீரை அவர் இரசமாக்கினது போல திராட்சைச் செடியில் ஓடும் ரசத்தைப் போல - எம்மில் உயிரின் நீரோட்டமாய் இருப்பீராக
செபமாலை இராக்கினியே பரிசுத்த ஆவியின் உதவியினால் நாங்கள் செபமாலையின் மதிப்பை அறிந்து அதைப் பக்தியாய் செய்யவும் நாலா பக்கமும் பரப்பவும் எங்களுக்கு உதவி செய்யும் ஆமென்
சரிதை
இயேசு சபையின் துணைச் சகோதரரான அர்ச் அல்போன்ஸ் ரொட்ரிகசை அறியாதவர்கள் இல்லை . செபமாலையைப் பக்தியால் சொல்லிவந்த படியினால் அவர் புனிதரானார் . ஞானத்திலும் தியானத்திலும் முதிர்ந்து விளைந்தார் . அவர் வெகு அடக்கமாகவும் பக்தியாகவும் செபமாலை சொல்லி வரும் போது சமயத்துக்கு சமயம் அவர் கண்டது ஏதெனில் 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே '' சொல்லி முடிக்கும் ஒவ்வொரு முறையும் அவர் வாயிலிருந்து ஒரு சிவந்த ரோஜா மலர் கீழே விழும் .'அருள் நிறைந்த மரியாயே 'சொல்லி முடிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு வெண் ரோசா மலர் கீழே விழும் . அவைகள் என்ன அழகு என்ன வாசனை நிறம் ஒன்றில் தான் வித்தியாசமே தவிர மணம் அழகில் அவைகளுக்குள் வித்தியாசம் இல்லை
இதையொத்த வேறொரு சம்பவம் : : அர்ச் பிரான்சிஸ் சபைத் துறவி ஒருவர் ஒவ்வொரு நாளும் பகற்போசனத்துக்கு முன் செபமாலை சொல்லி முடிப்பார் .ஒரு நாள் அசனத்திற்கு மணி அடித்தபோது அவர் செபமாலை சொல்லி முடிக்கவில்லை .பந்திக்கு வரும் முன் அதை முடித்து வருவதாக சிரேஷ்டரிடம் உத்தரவு பெற்றார் . வெகு நேரம் வரை பந்திக்கு அவர் வராததால் அவரை அழைத்து வர ஒரு துறவியை சிரேஷ்டர் அனுப்பி வைத்தார் . போனவர் நடந்ததைக் கண்டு மயங்கி நின்று விட்டார் . பக்தியுள்ள துறவி பிரகாச பிரவாகத்தில் மிதந்து நின்றார் . அவருக்கு எதிரில் இரு சம்மனசுக்களுடன் தேவ தாய் நின்றார் . அருள் நிறைந்த மரியே சொல்லி முடித்த ஒவ்வொரு முறையும் அவர் வாயிலிருந்து அழகிய ரோசா மலர்கள் வெளி வந்து கொண்டிருந்தன . சம்மனசுக்கள் அவற்றை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி தாயின் சிரசின் மேல் வைத்தனர் .அன்னையும் புன்னகையோடு அவைகளை ஏற்றுக் கொண்டார் . வேறு இரு சகோதரர்கள் அனுப்பப் பட்டனர் . அவர்கள் போன போதும் முன் சொன்ன காட்சியைக் கண்டு மெய் மறந்து நின்றனர் . செபமாலை முடிந்த பின் தேவ தாய் மறைந்தார்
ரோஜாமலர் பூக்களின் அரசி ; செபமாலை செபங்களின் அரசி . நாம் செபமாலை சொல்லும்போது மலர்முடி பின்னி மாமரியின் சிரசிலும் அவர் மைந்தன் இயேசுவின் சிரசிலும் வைக்கிறோம் . இதை அறிந்தால் எவ்வளவு பக்தியாகவும் பிரமாணிக்கமாகவும் செபமாலை சொல்லி வருவோம் !
இருபத்து நான்காம் நாள்
தேவ தாயின் மோட்ச ஆரோபணம்
தேவ நற்கருணையைத் தாங்கும் பாத்திரத்தை பொன்னால் செய்தோ , பொன்முலாம் பூசியோ , அபிஷேகம் செய்யப்பட்ட கரங்களைத் தவிர வேறொன்றும் தொடா வண்ணம் எவ்வளவு பதனமாய் வைத்திருக்கிறோம் ? பத்துமாதம் இயேசுவைச் சுமந்த பாத்திரத்தை இயேசுவின் சதையின் சதையும் ரத்தத்தின் ரத்தமுமாகிய தேவ தாயின் உடலைக் கல்லறையின் அழிவு அண்டத் திருமகன் சம்மதிப்பாரா ? மரிக்கக் கடன் இல்லாவிட்டாலும் மகனைக் கண்டு பாவித்து மரித்த மாமரியைச் சில தினங்களுக்குள் நேச குமாரன் ஆடம்பரத்தோடு மோட்ச மாளிகைக்கு ஏந்திச் செல்லுகிறார் . சூரியர்களை விட அதிகப் பிரகாசம் வீசி சோதி முகில்களிடை மாதா மெதுவாய் மிதந்து செல்லுகிறார் . அவரைச் சுற்றி எத்தனை வானதூதர்களின் கணங்கள் ! அவர்கள் அசையும்போது அவர்களுடைய வெண் நெற்றியில் தணல் கொழுந்துகள் தாவுகின்றன . அவர்களது ரோசா சிறகுகளிலிருந்து அனல் பொறிகள் , இரையுங் கடலில் பல சூரியன் மின்னுவது போல தங்கக் கதிர்கள் போல் பறக்கின்றன . என்ன இனிமையான கீதங்கள் இசைக்கின்றனர் !
கன்னித்தாய் மனுக்குலத்திற்கு மாதிரிகை . மனுக்குலத்தின் பிரதிநிதியாக மேலோகம் செல்லுகிறார் . ஒரு நாள் அவரது மக்களாகிய நாமெல்லோரும் அவரோடு அவருடைய ஆனந்தத்தில் இருக்க வேண்டும் என்பது ஆண்டவரின் ஆசையல்லவா ? இந்நோக்கத்தின் அறிகுறி ,அச்சாரம் தேவதையின் மோட்ச ஆரோபணம் . இறைவனின் தாளத்தின் பெருக்கம் இது தான் !
ஏழாம் நூற்றாண்டில் அர்ச். தமாசின் அருளப்பர் நிகழ்த்திய சொற்பொழிவின் இரண்டொரு மொழிகளைக் கேட்பீர்களா ? உயிருள்ள தேவனின் பரிசுத்த பேழை , தம் உத்தரத்தில் தமது இரட்சகரைத் தாங்கிய பேழை , கரங்களால் ஆகாத ஆண்டவரின் ஆலயத்தில் இளைப்பாறுகிறது . அவரது முன்னோரான தாவீது மகிழ்கிறார் . அவரோடு சம்மனசுக்கள் நர்த்தனம் செய்கின்றனர் . அதிதூதர்கள் தோத்திரம் பாடுகின்றனர் . பரிசுத்தர் மரியின் மகிமையைப் புகழ்ந்து கானம் இசைக்கின்றனர் . சத்துவர்கள் மாற்றி மாற்றி பண் இசைக்கின்றனர் . ஞானாதிக்கர்கள் பல புகழ்கள் சமர்ப்பிக்கின்றனர் . பக்தி சுவாலகர்கள் அவர் புகழைச் சாற்றுகின்றனர்
இன்று புதிய ஆதாம் உயிருள்ள பூங்காவை ஏற்றுக் கொள்ளுகிறார் . சாபம் நீக்கபெற்றது . சீவிய விருட்சம் நடப்பட்டது . ஆதாமுக்கு வந்த சாபத்தால் தேவ அருளின் ஆடையை இழந்தோம் , நமது ஆடையில்லா கோலம் அலங்கரிக்கப்பட்டது
இன்று உலக நாட்டத்தால் கறைபடாக் கன்னிகை மோட்ச எண்ணங்களால் ஊட்டம் பெற்றவள் - அவளே சீவிய மோட்சமானபடியினால் - மண்ணுக்குத் திரும்பவில்லை . மோட்ச கூடாரங்களுக்குள் வரவேற்கப்பட்டார். அவரிடம் இருந்து அல்லவா யாவருக்கும் சீவியம் வழிந்தது . அவர் எவ்விதம் சாவை ருசிக்கலாம் ? உயிருள்ள தேவனின் தாய் அவரிடம் தூக்கிச் செல்லப்படுவது எவ்வளவு நியாயம் ! பாம்பின் சோதனைக்கு உட்பட்ட ஏவை குழந்தைப் பேற்றில் துன்பப்பட சபிக்கப்பட்டாள் ; சாவின் தண்டனை விதிக்கப்பட்டாள். அதல பாதாளத்தில் ஆழ்த்தப்பட்டாள். ஆனால் இறைவனுடைய குரலுக்குச் செவிசாய்த்தவர், பரிசுத்த ஆவியால் நிரப்பப் பெற்றவர் மானிட உதவியின்றி தன் மகனைக் கர்ப்பம் தரித்தார் , யாதொரு வாதனையின்றி ஈன்றெடுத்தார் . அவரை இறைவனுக்கு முழுமையும் நேர்ந்து கொண்டார் . அவரைச் சாவு அழிக்க முடியுமா ? சீவியம் உருவெடுத்த உடலில் நாச நாற்றம் நுழைய முடியுமா ? மோட்சத்துக்குச் செல்லும் நேர் பாதை அவருக்கு வகுத்திருக்கிறது . " நான் இருக்கும் இடத்தில் என் ஊழியன் இருப்பான் " என்று உண்மையும் உயிருமான கிறிஸ்து சொல்லி இருக்கும் போது அவர் தாய் அவரோடு இருக்க வேண்டாமா ?
தேவதை ஆரோபணமான திருநாளில் வாசிக்கும் நற்செய்தி மரியா மார்த்தா வீட்டில் இயேசு தங்கி இருந்த நாளைப் பற்றியதல்லவா ?ஏன் ? அர்ச் அகுஸ்தீன் பதில் இறுப்பார்: மார்த்தா விருந்து தயார் செய்தார் . மார்த்தா மாசற்றவள் , நமதாண்டவருக்கு உணவளிப்பதிலேயே கவனமாக இருக்கிறாள் மரியா ஆண்டவர் வார்த்தையைக் கேட்ட வண்ணமே இருக்கிறாள் . மரியா ஆண்டவரிடமிருந்து உணவு பெறுகிறாள் . மார்த்தாளின் உயிர் உலகின் உயிர் . மரியாளது உயிர் மோட்சத்திற்கு உரியது
இந்நற்செய்தி கன்னித் தாய்க்கும் பொருந்தும் . அவர் மார்த்தாளும் மரியாளும் சேர்ந்தவர் . நாசரேத்தூர் வாழ்நாள் முழுவதும் நம் ஆண்டவருக்கு உணவு ஊட்டினார் . நம் ஆண்டவரால் உணவு ஊட்டப்பட்டார். அவர் உழைத்தார் , இளைப்பாற்றினார் .மோட்ச வாழ்க்கையைப் பூமியில் நடத்தினார். இயேசுவின் மறைந்த மகிமையை இயேசு மறுரூபமானபோது அப்போஸ்தலர் கண்டனர் . தாயின் மறைந்த மகிமையை பரலோக ஆரோபணத்தில் கண்டனர் . பூலோக வாழ்வில் தாயின் மகிமை திரையிடப்பட்டு இருந்தது.
இயேசுவின் ஆரோகணத்துக்குப் பின்னும் மார்த்தாளின் அலுவலை அன்னை விட்டுவிடவில்லை. அருளப்பரைப் போஷித்தார் . அவர் எப்போதும் தியானத்தில் புதைந்தவர். இரு சகோதரிகளும் வசித்த இல்லம் எது ? ஆண்டவரின் தாயாருடைய கன்னி உதரமாம். அங்கு அவர் தன் குழந்தையைப் போஷித்தார் . தன் குழந்தையிடம் உணவைப் பெற்றார். என்ன உணவை ? வார்த்தையையும் ஆண்டவரின் ஞானத்தையும்.
செபம்
சீவிய அப்பத்திற்குக் கோதுமையாகச் சிருஷ்டிக்கப்பட்டவரே , கிறிஸ்துவின் தாயே, நாங்கள் உம்மில் அகமகிழ்கிறோம் . கதிர் முற்றிய காட்டை , காற்றும் மழையும் தங்க மணிகள் நிரம்பிய தளமாக்கியது போல அவரது அன்பில் அடங்கினீர். என்னிக்கையில்லாக் கோதுமை மணிகளைப் போர்த்தது போல ஒப்புயர்வுற்றீர். ஓஸ்திக்கேற்ற தானியமாக நீர் நேர்ந்து கொள்ளப் பட்டீரே ,இப்போது கோதுமை அப்பத்தில் இருக்கிறது . புயல் காற்றில் உம்மைப் பாதுகாத்த கரங்கள் மோட்சத்திலிருந்த தெளிந்த ஆகாயத்தினூடே நீண்டு நித்திய பிரகாசத்திற்கு உம்மை எடுத்துச் செல்லுகின்றன .
செபமாலை இராக்கினியே , இயேசுவின் ஞான சரீரத்துக்கு ஆத்தும சரீர சேவை செய்து உணவளிக்கவும் , அவ்விதம் பிறருக்களிக்க அவசியமான உணவை உம்முடைய வல்லமையுள்ள மன்றாட்டால் இயேசுவிடமிருந்து நாங்கள் பெறவும் உதவி செய்வீராக ஆமென்
சரிதை
அர்ச். ராபர்ட் பெல்லார்மின் ஒரு சரிதை சொல்லுகிறார். மூன்று சகோதரிகள் ஒரு குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்து புத்திமதி கேட்டுவந்தனர் . அக்குருவானவர் ஓர் ஆண்டு முழுதும் ஒவ்வொரு நாளும் தவறாமல் செபமாலை செய்து வர ஆலோசனை சொன்னார் . அவர்கள் சொல்லும் செபமாலையைக் கண்டு நமதாண்டவளுக்கு அழகிய மகிமையின் ஆடைகளைப் புனைவர் என்றார் குருவானவர் . மோட்சத்திலிருந்து அக்குருவானவர் தெரிந்து கொண்ட இரகசியம் இது
அவ்வாறே அம்மூன்று சகோதரிகளும் ஓராண்டு முழுதும் தவறாமல் செபமாலை செய்து வந்தனர் . சுத்திகரத் திருநாளன்று இரவு ஆண்டவள் அவர்களுக்கு தரிசனை தந்தார் . அர்ச் கத்தரீனம்மாளும் அர்ச் அஞ்ஞேசம்மாளும் தேவ தாய் கூட வந்திருந்தனர் . தேவ தாய் மகா மகிமையுள்ள ஆடைகளை அணிந்திருந்தார் . அவைகள் எங்கும் பிரகாசம் வீசின ."அருள் நிறைந்த மரியே "என்னும் மொழிகள் அவ்வாடைகளில் பொன்னால் இழைத்திருந்தன . கன்னித்தாய் மூத்த சகோதரியை நெருங்கி "என் மகளே நீ வாழ்க ! நீ எத்தனையோ முறை வெகு நேர்த்தியாய் எனக்கு வாழி சொன்னாய் . நீ எனக்குச் செய்திருக்கும் இந்த என் ஆடைகளுக்கு நன்றி !" என்று தேவ தாய் வீணை நாதத்தினும் இனிய நாதத்தில் இசைந்தார் . கூட இருந்த இரு கன்னியரும் அவருக்கு வந்தனை புரிந்தனர் . பின் மூவரும் மறைந்தனர்
ஒரு மணி நேரம் சென்று நமதாண்டவளும் அந்த இரு அர்சிஷ்டவர்களும் இரண்டாம் முறை தோன்றினர் . இம்முறை தேவ தாய் ஒரு பச்சை ஆடை சூடி இருந்தார் . அதில் தங்க இழையோ பிரகாசமமோ இல்லை . நடுச் சகோதரியை அண்டிச் சென்று செபமாலை செய்து இந்த ஆடைகளை தனக்குப் புனைந்ததற்காக அவளைப் பாராட்டினார் . தன் அக்காளிடம் வந்த போது பொன்னாகத் துலங்கும் ஆடைகளோடு வந்ததற்குக் காரணம் ஏதென்று இரண்டாவது சகோதரி வினவினாள் .தேவ தாய் பதில் சொல்லுவார் "உன் அக்காள் உன்னை விட உத்தமமான விதமாய்ச் செபமாலை செய்து வந்த படியினால் வெகு அழகிய ஆடைகளை எனக்கு நெய்தாள் "
மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து அழுக்குப் படிந்த கிழிந்த கந்தைகளைக் கட்டிக் கொண்டு கடைக்குட்டிக்கு தேவ தாய் தோன்றி "மகளே , நீ எனக்கு நெய்திருக்கும் இந்த ஆடைகளுக்கு நன்றி செலுத்துகிறேன் " என்றார் . "ஓ என் அரசியே , இவ்வளவு அசங்கிதமாய் நான் உமக்கு எவ்விதம் உடுத்தி விடக் கூடும் ? தயவு செய்து என்னை மன்னியும் . செபமாலையை நன்றாய்ச் செய்வதினால் அழகிய ஆடைகளைச் செய்ய எனக்கு இன்னும் சிறிது அவகாசம் கொடும் " என்று கெஞ்சினாள் இளையவள் . மனம் உடைந்த அப்பெண்ணை விட்டு தேவ தாயும் இரு கன்னியர்களும் மறைந்தனர் . நடந்த யாவற்றையும் தன் ஆத்தும குருவானவரிடம் அப்பெண் சொன்னாள் . இன்னும் ஓர் ஆண்டு பிரமாணிக்கமாய் செபமாலை சொல்லவும் , நன்றாய்ச் சொல்லவும் அக்குருவானவர் அவளை எச்சரித்து அனுப்பினார் .
மறு ஆண்டு முடிந்தவுடன் சுத்திகரத் திருநாளன்று வெகு ஆடம்பரமாகவும் , அலங்காரமாகவும் உடுத்தி அர்ச் கத்தரீன் , அர்ச் அஞ்ஞேசம்மாள் கூடத் தேவ தாய் தோன்றினார். அவர் சிரசில் மணிமுடிகள் துலங்கின . "என் நேச குமாரத்திகளே ! நீங்கள் மூவரும் மோட்சத்தைச் சம்பாதித்து விட்டீர்கள் . அங்கு போகும் பெரும் பாக்கியமே உங்களுக்கு நாளைக்கு வரும் "என்றார் . "ஆண்டவளே , எங்கள் இதயம் ஏற்கனவே தயார் "என்று மூவரும் இசைந்தனர் . அன்றிரவே , அம்மூவரும் வியாதியை வீழ்ந்தனர் . தங்கள் ஆத்தும குருவை அழைத்தனர் . அவர் அவர்களுக்கு கடைசி தேவ திரவிய அனுமானங்களை வழங்கிய பின் , தங்களுக்குக் கற்றுக் கொடுத்த செபமாலை சொல்லும் வழக்கத்திற்காக அவருக்கு தோத்திரம் புரிந்தனர் . சிறிது நேரத்தில் எண்ணிக்கையில்லா கன்னியர்களோடு தேவ அன்னை தோன்றி பால் போன்ற வெண் அங்கியால் மூவரையும் உடுத்தி விட்டார் . "இயேசுக் கிறிஸ்துவின் பத்தினிகளே வாருங்கள் , நித்தியத்திற்கும் உங்களுக்குத் தயார் செய்து வைத்திருக்கும் மோட்சத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் "என்று சம்மனசுக்கள் பாடி முடித்ததும் அவர்கள் பரலோகம் சென்றனர்
நல்ல ஆத்தும குருவைத் தெரிந்து கொண்டு அவர் சொன்னபடி கேட்டு பக்தியாய் கவனமாய் செபமாலை செய்து வருகிறவர்கள் பாக்கியவான்கள் அல்லவா ?
தேவ தாயின் மோட்ச ஆரோபணம்
தேவ நற்கருணையைத் தாங்கும் பாத்திரத்தை பொன்னால் செய்தோ , பொன்முலாம் பூசியோ , அபிஷேகம் செய்யப்பட்ட கரங்களைத் தவிர வேறொன்றும் தொடா வண்ணம் எவ்வளவு பதனமாய் வைத்திருக்கிறோம் ? பத்துமாதம் இயேசுவைச் சுமந்த பாத்திரத்தை இயேசுவின் சதையின் சதையும் ரத்தத்தின் ரத்தமுமாகிய தேவ தாயின் உடலைக் கல்லறையின் அழிவு அண்டத் திருமகன் சம்மதிப்பாரா ? மரிக்கக் கடன் இல்லாவிட்டாலும் மகனைக் கண்டு பாவித்து மரித்த மாமரியைச் சில தினங்களுக்குள் நேச குமாரன் ஆடம்பரத்தோடு மோட்ச மாளிகைக்கு ஏந்திச் செல்லுகிறார் . சூரியர்களை விட அதிகப் பிரகாசம் வீசி சோதி முகில்களிடை மாதா மெதுவாய் மிதந்து செல்லுகிறார் . அவரைச் சுற்றி எத்தனை வானதூதர்களின் கணங்கள் ! அவர்கள் அசையும்போது அவர்களுடைய வெண் நெற்றியில் தணல் கொழுந்துகள் தாவுகின்றன . அவர்களது ரோசா சிறகுகளிலிருந்து அனல் பொறிகள் , இரையுங் கடலில் பல சூரியன் மின்னுவது போல தங்கக் கதிர்கள் போல் பறக்கின்றன . என்ன இனிமையான கீதங்கள் இசைக்கின்றனர் !
கன்னித்தாய் மனுக்குலத்திற்கு மாதிரிகை . மனுக்குலத்தின் பிரதிநிதியாக மேலோகம் செல்லுகிறார் . ஒரு நாள் அவரது மக்களாகிய நாமெல்லோரும் அவரோடு அவருடைய ஆனந்தத்தில் இருக்க வேண்டும் என்பது ஆண்டவரின் ஆசையல்லவா ? இந்நோக்கத்தின் அறிகுறி ,அச்சாரம் தேவதையின் மோட்ச ஆரோபணம் . இறைவனின் தாளத்தின் பெருக்கம் இது தான் !
ஏழாம் நூற்றாண்டில் அர்ச். தமாசின் அருளப்பர் நிகழ்த்திய சொற்பொழிவின் இரண்டொரு மொழிகளைக் கேட்பீர்களா ? உயிருள்ள தேவனின் பரிசுத்த பேழை , தம் உத்தரத்தில் தமது இரட்சகரைத் தாங்கிய பேழை , கரங்களால் ஆகாத ஆண்டவரின் ஆலயத்தில் இளைப்பாறுகிறது . அவரது முன்னோரான தாவீது மகிழ்கிறார் . அவரோடு சம்மனசுக்கள் நர்த்தனம் செய்கின்றனர் . அதிதூதர்கள் தோத்திரம் பாடுகின்றனர் . பரிசுத்தர் மரியின் மகிமையைப் புகழ்ந்து கானம் இசைக்கின்றனர் . சத்துவர்கள் மாற்றி மாற்றி பண் இசைக்கின்றனர் . ஞானாதிக்கர்கள் பல புகழ்கள் சமர்ப்பிக்கின்றனர் . பக்தி சுவாலகர்கள் அவர் புகழைச் சாற்றுகின்றனர்
இன்று புதிய ஆதாம் உயிருள்ள பூங்காவை ஏற்றுக் கொள்ளுகிறார் . சாபம் நீக்கபெற்றது . சீவிய விருட்சம் நடப்பட்டது . ஆதாமுக்கு வந்த சாபத்தால் தேவ அருளின் ஆடையை இழந்தோம் , நமது ஆடையில்லா கோலம் அலங்கரிக்கப்பட்டது
இன்று உலக நாட்டத்தால் கறைபடாக் கன்னிகை மோட்ச எண்ணங்களால் ஊட்டம் பெற்றவள் - அவளே சீவிய மோட்சமானபடியினால் - மண்ணுக்குத் திரும்பவில்லை . மோட்ச கூடாரங்களுக்குள் வரவேற்கப்பட்டார். அவரிடம் இருந்து அல்லவா யாவருக்கும் சீவியம் வழிந்தது . அவர் எவ்விதம் சாவை ருசிக்கலாம் ? உயிருள்ள தேவனின் தாய் அவரிடம் தூக்கிச் செல்லப்படுவது எவ்வளவு நியாயம் ! பாம்பின் சோதனைக்கு உட்பட்ட ஏவை குழந்தைப் பேற்றில் துன்பப்பட சபிக்கப்பட்டாள் ; சாவின் தண்டனை விதிக்கப்பட்டாள். அதல பாதாளத்தில் ஆழ்த்தப்பட்டாள். ஆனால் இறைவனுடைய குரலுக்குச் செவிசாய்த்தவர், பரிசுத்த ஆவியால் நிரப்பப் பெற்றவர் மானிட உதவியின்றி தன் மகனைக் கர்ப்பம் தரித்தார் , யாதொரு வாதனையின்றி ஈன்றெடுத்தார் . அவரை இறைவனுக்கு முழுமையும் நேர்ந்து கொண்டார் . அவரைச் சாவு அழிக்க முடியுமா ? சீவியம் உருவெடுத்த உடலில் நாச நாற்றம் நுழைய முடியுமா ? மோட்சத்துக்குச் செல்லும் நேர் பாதை அவருக்கு வகுத்திருக்கிறது . " நான் இருக்கும் இடத்தில் என் ஊழியன் இருப்பான் " என்று உண்மையும் உயிருமான கிறிஸ்து சொல்லி இருக்கும் போது அவர் தாய் அவரோடு இருக்க வேண்டாமா ?
தேவதை ஆரோபணமான திருநாளில் வாசிக்கும் நற்செய்தி மரியா மார்த்தா வீட்டில் இயேசு தங்கி இருந்த நாளைப் பற்றியதல்லவா ?ஏன் ? அர்ச் அகுஸ்தீன் பதில் இறுப்பார்: மார்த்தா விருந்து தயார் செய்தார் . மார்த்தா மாசற்றவள் , நமதாண்டவருக்கு உணவளிப்பதிலேயே கவனமாக இருக்கிறாள் மரியா ஆண்டவர் வார்த்தையைக் கேட்ட வண்ணமே இருக்கிறாள் . மரியா ஆண்டவரிடமிருந்து உணவு பெறுகிறாள் . மார்த்தாளின் உயிர் உலகின் உயிர் . மரியாளது உயிர் மோட்சத்திற்கு உரியது
இந்நற்செய்தி கன்னித் தாய்க்கும் பொருந்தும் . அவர் மார்த்தாளும் மரியாளும் சேர்ந்தவர் . நாசரேத்தூர் வாழ்நாள் முழுவதும் நம் ஆண்டவருக்கு உணவு ஊட்டினார் . நம் ஆண்டவரால் உணவு ஊட்டப்பட்டார். அவர் உழைத்தார் , இளைப்பாற்றினார் .மோட்ச வாழ்க்கையைப் பூமியில் நடத்தினார். இயேசுவின் மறைந்த மகிமையை இயேசு மறுரூபமானபோது அப்போஸ்தலர் கண்டனர் . தாயின் மறைந்த மகிமையை பரலோக ஆரோபணத்தில் கண்டனர் . பூலோக வாழ்வில் தாயின் மகிமை திரையிடப்பட்டு இருந்தது.
இயேசுவின் ஆரோகணத்துக்குப் பின்னும் மார்த்தாளின் அலுவலை அன்னை விட்டுவிடவில்லை. அருளப்பரைப் போஷித்தார் . அவர் எப்போதும் தியானத்தில் புதைந்தவர். இரு சகோதரிகளும் வசித்த இல்லம் எது ? ஆண்டவரின் தாயாருடைய கன்னி உதரமாம். அங்கு அவர் தன் குழந்தையைப் போஷித்தார் . தன் குழந்தையிடம் உணவைப் பெற்றார். என்ன உணவை ? வார்த்தையையும் ஆண்டவரின் ஞானத்தையும்.
செபம்
சீவிய அப்பத்திற்குக் கோதுமையாகச் சிருஷ்டிக்கப்பட்டவரே , கிறிஸ்துவின் தாயே, நாங்கள் உம்மில் அகமகிழ்கிறோம் . கதிர் முற்றிய காட்டை , காற்றும் மழையும் தங்க மணிகள் நிரம்பிய தளமாக்கியது போல அவரது அன்பில் அடங்கினீர். என்னிக்கையில்லாக் கோதுமை மணிகளைப் போர்த்தது போல ஒப்புயர்வுற்றீர். ஓஸ்திக்கேற்ற தானியமாக நீர் நேர்ந்து கொள்ளப் பட்டீரே ,இப்போது கோதுமை அப்பத்தில் இருக்கிறது . புயல் காற்றில் உம்மைப் பாதுகாத்த கரங்கள் மோட்சத்திலிருந்த தெளிந்த ஆகாயத்தினூடே நீண்டு நித்திய பிரகாசத்திற்கு உம்மை எடுத்துச் செல்லுகின்றன .
செபமாலை இராக்கினியே , இயேசுவின் ஞான சரீரத்துக்கு ஆத்தும சரீர சேவை செய்து உணவளிக்கவும் , அவ்விதம் பிறருக்களிக்க அவசியமான உணவை உம்முடைய வல்லமையுள்ள மன்றாட்டால் இயேசுவிடமிருந்து நாங்கள் பெறவும் உதவி செய்வீராக ஆமென்
சரிதை
அர்ச். ராபர்ட் பெல்லார்மின் ஒரு சரிதை சொல்லுகிறார். மூன்று சகோதரிகள் ஒரு குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்து புத்திமதி கேட்டுவந்தனர் . அக்குருவானவர் ஓர் ஆண்டு முழுதும் ஒவ்வொரு நாளும் தவறாமல் செபமாலை செய்து வர ஆலோசனை சொன்னார் . அவர்கள் சொல்லும் செபமாலையைக் கண்டு நமதாண்டவளுக்கு அழகிய மகிமையின் ஆடைகளைப் புனைவர் என்றார் குருவானவர் . மோட்சத்திலிருந்து அக்குருவானவர் தெரிந்து கொண்ட இரகசியம் இது
அவ்வாறே அம்மூன்று சகோதரிகளும் ஓராண்டு முழுதும் தவறாமல் செபமாலை செய்து வந்தனர் . சுத்திகரத் திருநாளன்று இரவு ஆண்டவள் அவர்களுக்கு தரிசனை தந்தார் . அர்ச் கத்தரீனம்மாளும் அர்ச் அஞ்ஞேசம்மாளும் தேவ தாய் கூட வந்திருந்தனர் . தேவ தாய் மகா மகிமையுள்ள ஆடைகளை அணிந்திருந்தார் . அவைகள் எங்கும் பிரகாசம் வீசின ."அருள் நிறைந்த மரியே "என்னும் மொழிகள் அவ்வாடைகளில் பொன்னால் இழைத்திருந்தன . கன்னித்தாய் மூத்த சகோதரியை நெருங்கி "என் மகளே நீ வாழ்க ! நீ எத்தனையோ முறை வெகு நேர்த்தியாய் எனக்கு வாழி சொன்னாய் . நீ எனக்குச் செய்திருக்கும் இந்த என் ஆடைகளுக்கு நன்றி !" என்று தேவ தாய் வீணை நாதத்தினும் இனிய நாதத்தில் இசைந்தார் . கூட இருந்த இரு கன்னியரும் அவருக்கு வந்தனை புரிந்தனர் . பின் மூவரும் மறைந்தனர்
ஒரு மணி நேரம் சென்று நமதாண்டவளும் அந்த இரு அர்சிஷ்டவர்களும் இரண்டாம் முறை தோன்றினர் . இம்முறை தேவ தாய் ஒரு பச்சை ஆடை சூடி இருந்தார் . அதில் தங்க இழையோ பிரகாசமமோ இல்லை . நடுச் சகோதரியை அண்டிச் சென்று செபமாலை செய்து இந்த ஆடைகளை தனக்குப் புனைந்ததற்காக அவளைப் பாராட்டினார் . தன் அக்காளிடம் வந்த போது பொன்னாகத் துலங்கும் ஆடைகளோடு வந்ததற்குக் காரணம் ஏதென்று இரண்டாவது சகோதரி வினவினாள் .தேவ தாய் பதில் சொல்லுவார் "உன் அக்காள் உன்னை விட உத்தமமான விதமாய்ச் செபமாலை செய்து வந்த படியினால் வெகு அழகிய ஆடைகளை எனக்கு நெய்தாள் "
மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து அழுக்குப் படிந்த கிழிந்த கந்தைகளைக் கட்டிக் கொண்டு கடைக்குட்டிக்கு தேவ தாய் தோன்றி "மகளே , நீ எனக்கு நெய்திருக்கும் இந்த ஆடைகளுக்கு நன்றி செலுத்துகிறேன் " என்றார் . "ஓ என் அரசியே , இவ்வளவு அசங்கிதமாய் நான் உமக்கு எவ்விதம் உடுத்தி விடக் கூடும் ? தயவு செய்து என்னை மன்னியும் . செபமாலையை நன்றாய்ச் செய்வதினால் அழகிய ஆடைகளைச் செய்ய எனக்கு இன்னும் சிறிது அவகாசம் கொடும் " என்று கெஞ்சினாள் இளையவள் . மனம் உடைந்த அப்பெண்ணை விட்டு தேவ தாயும் இரு கன்னியர்களும் மறைந்தனர் . நடந்த யாவற்றையும் தன் ஆத்தும குருவானவரிடம் அப்பெண் சொன்னாள் . இன்னும் ஓர் ஆண்டு பிரமாணிக்கமாய் செபமாலை சொல்லவும் , நன்றாய்ச் சொல்லவும் அக்குருவானவர் அவளை எச்சரித்து அனுப்பினார் .
மறு ஆண்டு முடிந்தவுடன் சுத்திகரத் திருநாளன்று வெகு ஆடம்பரமாகவும் , அலங்காரமாகவும் உடுத்தி அர்ச் கத்தரீன் , அர்ச் அஞ்ஞேசம்மாள் கூடத் தேவ தாய் தோன்றினார். அவர் சிரசில் மணிமுடிகள் துலங்கின . "என் நேச குமாரத்திகளே ! நீங்கள் மூவரும் மோட்சத்தைச் சம்பாதித்து விட்டீர்கள் . அங்கு போகும் பெரும் பாக்கியமே உங்களுக்கு நாளைக்கு வரும் "என்றார் . "ஆண்டவளே , எங்கள் இதயம் ஏற்கனவே தயார் "என்று மூவரும் இசைந்தனர் . அன்றிரவே , அம்மூவரும் வியாதியை வீழ்ந்தனர் . தங்கள் ஆத்தும குருவை அழைத்தனர் . அவர் அவர்களுக்கு கடைசி தேவ திரவிய அனுமானங்களை வழங்கிய பின் , தங்களுக்குக் கற்றுக் கொடுத்த செபமாலை சொல்லும் வழக்கத்திற்காக அவருக்கு தோத்திரம் புரிந்தனர் . சிறிது நேரத்தில் எண்ணிக்கையில்லா கன்னியர்களோடு தேவ அன்னை தோன்றி பால் போன்ற வெண் அங்கியால் மூவரையும் உடுத்தி விட்டார் . "இயேசுக் கிறிஸ்துவின் பத்தினிகளே வாருங்கள் , நித்தியத்திற்கும் உங்களுக்குத் தயார் செய்து வைத்திருக்கும் மோட்சத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் "என்று சம்மனசுக்கள் பாடி முடித்ததும் அவர்கள் பரலோகம் சென்றனர்
நல்ல ஆத்தும குருவைத் தெரிந்து கொண்டு அவர் சொன்னபடி கேட்டு பக்தியாய் கவனமாய் செபமாலை செய்து வருகிறவர்கள் பாக்கியவான்கள் அல்லவா ?
இருபத்தைந்தாம் நாள்
மாமரி பரலோக பூலோக அரசியாக முடிசூட்டப்படுகிறார்
எபேசு நகர் பொதுச்சங்க நாளில் இருந்து தாயின் மட்டில் பக்தியுள்ளவர்கள் எவ்விதம் அவரைச் சித்தரித்தார்கள் ? அரசியாக , சக்கரவர்த்தினியாக ராஜரீக சின்னங்களால் அலங்கரிக்கப்பட்ட அரியணையில் ஆடம்பரமாக வீற்றிருக்கிறார் . அவரது சிரசை ராஜரீக கிரீடம் ஜோடிக்கிறது. புனிதர்களும் சம்மனசுக்களும் அவரைச் சுற்றி நின்று வணக்கம் செலுத்துகின்றனர் . இயற்கை வளங்கள் வல்லமைகள் மேல் மட்டுமல்ல அவரது அதிகாரம் , சாத்தானின் பொல்லாத தாக்குதலை அடக்குவதிலும் அவர் செல்வாக்கு செல்கின்றது . ஏன்? நான்காம் நூற்றாண்டில் இருந்து தானா தாய்க்குச் செல்வாக்கு ?
கபிரியேல் சம்மனசு மங்கள வார்த்தை சொன்ன சமயமே அவரை அரசியென்று குறிக்கவில்லையா? "உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார் . அவர் தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய தேவன் அவருக்கு அளிப்பார் . யாக்கோபின் கோத்திரத்தில் அவர் என்றென்றும் அரசு புரிவார் . அவரது அரசுக்கு முடிவு இராது " என்று பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி அரசியான அன்னையிடம் தானே சொல்ல முடியும் ?
தேவ தாயைப் புகழ்வதில் கீழ்நாடுகள் தான் முன் நின்றன . கீழ் நாட்டில் சூசையப்பருக்குச் சொன்ன செபம் ஒன்று "மகாப் பாக்கியம் பெற்ற நீதிமானான சூசையப்பரே , நீர் அரச குலத்தில் பிறந்ததனாலே பழுதற்ற அரசியின் பர்த்தாவாயிருக்க மற்ற யாவருக்குள்ளும் நீர் தெரிந்து கொள்ளப்பட்டீர். அவர் சொற்கடந்த சுந்தரியாய் அரசனான இயேசுவைப் பெற்றெடுப்பார் " பின் மரியின் பக்கம் திரும்பி "அரசியான மரிக்கு நான் கவி பாடுவேன் . அவருக்கு மகிமையும் வணக்கமும் செலுத்த போகும்பொழுது மகிழ்ச்சியினால் துள்ளி அவரில் நிறைவேறிய அதிசயங்களை ஆனந்தமாய் பாடுவேன் . ஓ ஆண்டவளே ! அரசியே ! என் நாவானது தகுதியான விதமாய் உம்மைப் புகழ்ந்தேற்ற ஆற்றல் அற்றது . கிறிஸ்து அரசரைத் தாங்கிய நீர் பக்தி சுவாலகர்களுக்கு மேல் உயர்த்தப் பட்டுள்ளீர் . அகில உலக அரசியே வாழ்க எங்களுக்கெல்லாம் ஆண்டவளான அரசியே அன்னையே வாழ்க ".
முதல் நூற்றாண்டில் இருந்து புனிதர்களும் எழுத்தாளர்களும் பாப்புமார்களும் வேத அறிஞர்களும் ஆராதனை சடங்கு முறைகளும் நம் அன்னையை அரசிஎனப் பாவித்தனர் , பா இசைத்தனர் , பிரார்த்தனை கோர்த்தனர் . ஏனெனில் அவர் தேவ தாய் , கடவுளின் தாய் , பரலோக அரசரின் அன்னை .இரட்சணிய அலுவலில் அவர் பெரும் பங்கு கொள்ள தேவன் சித்தமானார் . பேயோடு யுத்தம் தொடுத்து அவனை வீழ்த்தி அவன் கையில் இருந்த மக்களை மீட்டு அவர்களுக்கு இரட்சணியம் கொண்டு வந்ததனால் இயேசு நம் அரசர் அல்லவா ? இயேசு சபை பெரிய அறிஞரான சுவாரஸ் சொன்னார் : "கிறிஸ்துநாதர் நம்மை இரட்சித்தபடியினால் எவ்விதம் விசேச உரிமையில் நமக்கு அதிபதியும் அரசரும் ஆனாரோ அதே போல் கன்னி மரியும் நமக்கு அரசி . தம்முடைய சதையிலிருந்து இயேசுவை ஆக்கினபடியாலும் நமக்கு மனம் பொருந்தி அவரை நேர்ந்து கொண்டபடியாலும் நம் ஈடேற்றத்தை ஆசித்து அதற்காக மன்றாடி அதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறபடியாலும் விசேச விதமாய் நமது இரட்சணிய அலுவலில் அவர் பங்கு பெற்றவர் ஆனதாலும் அவர் நமக்கு அரசி ". இயேசுவோடு அவருக்கு உரிய - எவருக்கும் கிட்டாத சொல்லரிய - ஐக்கியத்தினால் அவர் இயேசு அரசரின் மகிமையைப் பகிர்ந்து கொண்டார் . இயேசுநாதர் மனிதர்களின் மனதிலும் , புத்தியிலும் ஆளுகிறார் அல்லவா ? அந்த ஆட்சியில் தேவ தாய்க்குப் பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா ? மெய்யாகவே நம் அன்னை பரலோக பூலோக அரசி . அவர் மோட்ச ஆரோபணமான நாள் பிதா சுதன் பரிசுத்த ஆவியால் முடி சூட்டப் பட்டார்
இந்த வைபவத்தை மாபெரும் திருநாளாக கொண்டாடச் சொன்ன நம் அன்புள்ள தந்தை 12ஆம் பத்திநாதருக்கு நாம் என்ன கைம்மாறு செலுத்துவோம் ?
நமது அன்னையும் , அருளும் இரக்கமும் நிறைந்த அரசியுமான மாமரியிடம் முழு நம்பிக்கையோடு சென்று இக்கட்டில் உறுதியையும் , இருளில் ஒளியையும் , துக்கத்தில் ஆறுதலையும் கேட்போமாக . பாவத்தின் அடிமைத் தனத்தினின்று விலகப் பிரயாசைப்படுவோமாக . நமது அன்னையும் அரசியுமானவருக்கு குழந்தைக்குரிய வணக்கத்தைச் செலுத்துவோமாக . அவரது திருத்தலங்களும் ஆலயங்களும் செபமாலை தாங்கிய கரத்தோடு தாயின் தாசர்களால் நிறைவதாக . கோவில்களிலும் வீடுகளிலும் நோயாளி சாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் கிறிஸ்துவர்கள் குழுமி வந்து செபமாலை சொல்லி அவர் துதியை பாடுவார்களாக. மாமரியின் நாமம் போற்றப்படுவதாக . அந்நாமம் தேனை விட இனிமையானதல்லவா ? பொன் ஆபரணங்களை விட விலை உயர்ந்ததல்லவா ? ஒவ்வொருவரும் தத்தம் நிலைக்கேற்ற பிரகாரம் அவரது அதிசய புண்ணியங்களைக் கண்டு பாவிப்பார்களாக
செபம்
இக்கண்ணீர்க் கணவாயிலிருந்து , பற்பல துன்பம் என்னும் அலைகள் குமுறி எழும் துக்க கடலில் இருந்து உம்மை நோக்கி ஏறெடுத்துப் பார்க்கிறோம் . உமது மகிமையின் தரிசனத்தால் ஆறுதலை அடைந்து பரலோக பூலோக அரசியே , மனுக்குலத்தின் அன்னையும் அரசியுமான மாமரி , எங்களுக்குப் புண்ணியத்தின் பாதையைக் காட்டும் . அதை விட்டு விலகாமல் நடக்க எங்களுக்குத் துணையும் உதவியுமாக நின்று , அரசியான அன்னையே எங்களை ஆண்டருளும் . உமது மதுரமான அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும் திருச்சபையின் மேல் ஆதிக்கம் செலுத்தியருளும். இந்நாளின் இக்கட்டுகளில் நீர்தானே ஆதரவென்று அது உம்மை , உம் சலுகையைத் தேடி வருகிறது . வேத கலாபனைக்கு உட்பட்டிருக்கும் நாடுகள் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும் . மனிதர்கள் சத்தியம் ஒன்றையே தேடும்படி அவர்கள் புத்தியில் அரசாட்சி செய்தருளும் . நன்மையையே அவர்கள் என்றும் பின்பற்றும்படி அவர்கள் மனதை ஆண்டருளும் . தனிப்பட்ட ஆட்கள் மேலும் வல்லோருடைய கூட்டத்தின் மேலும் , ஞானிகளின் சங்கத்தின் மேலும் , எளியோருடைய ஆசைகளின் மேலும் , உம் அரசாட்சி செல்வதாக . உம்மோடு மோட்சம் சேர்ந்து இயேசு கடவுளை நாங்கள் யாவரும் ஆராதிக்கும்படி எங்களை ஆண்டு நடத்தியருளும் ஆமென்
சரிதை
பிரான்ஸ் தேசத்து அரசியான காஸ்திஸ் பிளான்சம்மாளுக்கு மணமுடித்து 12 ஆண்டுகளாகியும் பிள்ளைப் பேறில்லை. அர்ச் சாமிநாதர் அவளைச் சந்தித்த போது தினம் செபமாலை செய்து கன்னித்தாயை மகிமைப்படுத்தித் தாயாகும் பாக்கியத்தைக் கேட்கச் சொன்னார் . அன்று முதல் அரசியும் பிரமாணிக்கமாய் செபமாலை சொல்லி வந்தாள். 1213 ஆம் ஆண்டு ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்து பிலிப்பு என்று பெயரிட்டாள். இப்பாக்கியம் வெகு நாள் நீடிக்கவில்லை . குழந்தைப் பருவத்திலேயே அம்மகன் இறந்தான்.
பக்தியில் பிரசித்தி பெற்ற அந்த அரசி , நம்பிக்கையை இழக்காமல் தினம் செபமாலை சொல்லி வந்தாள். எண்ணிக்கையில்லா செபமாலையைக் கட்டி ஆஸ்தான சபையில் உள்ள யாவருக்கும் கொடுத்தாள். தன் நாட்டில் பற்பல பட்டணங்களில் உள்ள சங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்து தன்னோடு சேர்ந்து தன் கருத்துக்களுக்காக செபமாலை செய்து வர யாவரையும் கேட்டுக் கொண்டாள்.இத்தனை ஆயிரக்கணக்கான செபமாலைகள் பலனளிக்காமல் போகுமோ ? 1215 ஆம் ஆண்டில் உலகமே கொண்டாடப்போகும் அர்ச் லூயிஸ் பிறந்தார் (ஞானப் பிரகாசியார் ராஜா) .அவர் வளர்ந்து பிரான்ஸ் தேசத்துக்கு மகிமையாகவும் கிறிஸ்துவ அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மாதிரிகையாக விளங்கி அர்ச்சியசிஷ்டவராய் மரித்தார்
மாமரி பரலோக பூலோக அரசியாக முடிசூட்டப்படுகிறார்
எபேசு நகர் பொதுச்சங்க நாளில் இருந்து தாயின் மட்டில் பக்தியுள்ளவர்கள் எவ்விதம் அவரைச் சித்தரித்தார்கள் ? அரசியாக , சக்கரவர்த்தினியாக ராஜரீக சின்னங்களால் அலங்கரிக்கப்பட்ட அரியணையில் ஆடம்பரமாக வீற்றிருக்கிறார் . அவரது சிரசை ராஜரீக கிரீடம் ஜோடிக்கிறது. புனிதர்களும் சம்மனசுக்களும் அவரைச் சுற்றி நின்று வணக்கம் செலுத்துகின்றனர் . இயற்கை வளங்கள் வல்லமைகள் மேல் மட்டுமல்ல அவரது அதிகாரம் , சாத்தானின் பொல்லாத தாக்குதலை அடக்குவதிலும் அவர் செல்வாக்கு செல்கின்றது . ஏன்? நான்காம் நூற்றாண்டில் இருந்து தானா தாய்க்குச் செல்வாக்கு ?
கபிரியேல் சம்மனசு மங்கள வார்த்தை சொன்ன சமயமே அவரை அரசியென்று குறிக்கவில்லையா? "உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார் . அவர் தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய தேவன் அவருக்கு அளிப்பார் . யாக்கோபின் கோத்திரத்தில் அவர் என்றென்றும் அரசு புரிவார் . அவரது அரசுக்கு முடிவு இராது " என்று பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி அரசியான அன்னையிடம் தானே சொல்ல முடியும் ?
தேவ தாயைப் புகழ்வதில் கீழ்நாடுகள் தான் முன் நின்றன . கீழ் நாட்டில் சூசையப்பருக்குச் சொன்ன செபம் ஒன்று "மகாப் பாக்கியம் பெற்ற நீதிமானான சூசையப்பரே , நீர் அரச குலத்தில் பிறந்ததனாலே பழுதற்ற அரசியின் பர்த்தாவாயிருக்க மற்ற யாவருக்குள்ளும் நீர் தெரிந்து கொள்ளப்பட்டீர். அவர் சொற்கடந்த சுந்தரியாய் அரசனான இயேசுவைப் பெற்றெடுப்பார் " பின் மரியின் பக்கம் திரும்பி "அரசியான மரிக்கு நான் கவி பாடுவேன் . அவருக்கு மகிமையும் வணக்கமும் செலுத்த போகும்பொழுது மகிழ்ச்சியினால் துள்ளி அவரில் நிறைவேறிய அதிசயங்களை ஆனந்தமாய் பாடுவேன் . ஓ ஆண்டவளே ! அரசியே ! என் நாவானது தகுதியான விதமாய் உம்மைப் புகழ்ந்தேற்ற ஆற்றல் அற்றது . கிறிஸ்து அரசரைத் தாங்கிய நீர் பக்தி சுவாலகர்களுக்கு மேல் உயர்த்தப் பட்டுள்ளீர் . அகில உலக அரசியே வாழ்க எங்களுக்கெல்லாம் ஆண்டவளான அரசியே அன்னையே வாழ்க ".
முதல் நூற்றாண்டில் இருந்து புனிதர்களும் எழுத்தாளர்களும் பாப்புமார்களும் வேத அறிஞர்களும் ஆராதனை சடங்கு முறைகளும் நம் அன்னையை அரசிஎனப் பாவித்தனர் , பா இசைத்தனர் , பிரார்த்தனை கோர்த்தனர் . ஏனெனில் அவர் தேவ தாய் , கடவுளின் தாய் , பரலோக அரசரின் அன்னை .இரட்சணிய அலுவலில் அவர் பெரும் பங்கு கொள்ள தேவன் சித்தமானார் . பேயோடு யுத்தம் தொடுத்து அவனை வீழ்த்தி அவன் கையில் இருந்த மக்களை மீட்டு அவர்களுக்கு இரட்சணியம் கொண்டு வந்ததனால் இயேசு நம் அரசர் அல்லவா ? இயேசு சபை பெரிய அறிஞரான சுவாரஸ் சொன்னார் : "கிறிஸ்துநாதர் நம்மை இரட்சித்தபடியினால் எவ்விதம் விசேச உரிமையில் நமக்கு அதிபதியும் அரசரும் ஆனாரோ அதே போல் கன்னி மரியும் நமக்கு அரசி . தம்முடைய சதையிலிருந்து இயேசுவை ஆக்கினபடியாலும் நமக்கு மனம் பொருந்தி அவரை நேர்ந்து கொண்டபடியாலும் நம் ஈடேற்றத்தை ஆசித்து அதற்காக மன்றாடி அதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறபடியாலும் விசேச விதமாய் நமது இரட்சணிய அலுவலில் அவர் பங்கு பெற்றவர் ஆனதாலும் அவர் நமக்கு அரசி ". இயேசுவோடு அவருக்கு உரிய - எவருக்கும் கிட்டாத சொல்லரிய - ஐக்கியத்தினால் அவர் இயேசு அரசரின் மகிமையைப் பகிர்ந்து கொண்டார் . இயேசுநாதர் மனிதர்களின் மனதிலும் , புத்தியிலும் ஆளுகிறார் அல்லவா ? அந்த ஆட்சியில் தேவ தாய்க்குப் பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா ? மெய்யாகவே நம் அன்னை பரலோக பூலோக அரசி . அவர் மோட்ச ஆரோபணமான நாள் பிதா சுதன் பரிசுத்த ஆவியால் முடி சூட்டப் பட்டார்
இந்த வைபவத்தை மாபெரும் திருநாளாக கொண்டாடச் சொன்ன நம் அன்புள்ள தந்தை 12ஆம் பத்திநாதருக்கு நாம் என்ன கைம்மாறு செலுத்துவோம் ?
நமது அன்னையும் , அருளும் இரக்கமும் நிறைந்த அரசியுமான மாமரியிடம் முழு நம்பிக்கையோடு சென்று இக்கட்டில் உறுதியையும் , இருளில் ஒளியையும் , துக்கத்தில் ஆறுதலையும் கேட்போமாக . பாவத்தின் அடிமைத் தனத்தினின்று விலகப் பிரயாசைப்படுவோமாக . நமது அன்னையும் அரசியுமானவருக்கு குழந்தைக்குரிய வணக்கத்தைச் செலுத்துவோமாக . அவரது திருத்தலங்களும் ஆலயங்களும் செபமாலை தாங்கிய கரத்தோடு தாயின் தாசர்களால் நிறைவதாக . கோவில்களிலும் வீடுகளிலும் நோயாளி சாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் கிறிஸ்துவர்கள் குழுமி வந்து செபமாலை சொல்லி அவர் துதியை பாடுவார்களாக. மாமரியின் நாமம் போற்றப்படுவதாக . அந்நாமம் தேனை விட இனிமையானதல்லவா ? பொன் ஆபரணங்களை விட விலை உயர்ந்ததல்லவா ? ஒவ்வொருவரும் தத்தம் நிலைக்கேற்ற பிரகாரம் அவரது அதிசய புண்ணியங்களைக் கண்டு பாவிப்பார்களாக
செபம்
இக்கண்ணீர்க் கணவாயிலிருந்து , பற்பல துன்பம் என்னும் அலைகள் குமுறி எழும் துக்க கடலில் இருந்து உம்மை நோக்கி ஏறெடுத்துப் பார்க்கிறோம் . உமது மகிமையின் தரிசனத்தால் ஆறுதலை அடைந்து பரலோக பூலோக அரசியே , மனுக்குலத்தின் அன்னையும் அரசியுமான மாமரி , எங்களுக்குப் புண்ணியத்தின் பாதையைக் காட்டும் . அதை விட்டு விலகாமல் நடக்க எங்களுக்குத் துணையும் உதவியுமாக நின்று , அரசியான அன்னையே எங்களை ஆண்டருளும் . உமது மதுரமான அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும் திருச்சபையின் மேல் ஆதிக்கம் செலுத்தியருளும். இந்நாளின் இக்கட்டுகளில் நீர்தானே ஆதரவென்று அது உம்மை , உம் சலுகையைத் தேடி வருகிறது . வேத கலாபனைக்கு உட்பட்டிருக்கும் நாடுகள் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும் . மனிதர்கள் சத்தியம் ஒன்றையே தேடும்படி அவர்கள் புத்தியில் அரசாட்சி செய்தருளும் . நன்மையையே அவர்கள் என்றும் பின்பற்றும்படி அவர்கள் மனதை ஆண்டருளும் . தனிப்பட்ட ஆட்கள் மேலும் வல்லோருடைய கூட்டத்தின் மேலும் , ஞானிகளின் சங்கத்தின் மேலும் , எளியோருடைய ஆசைகளின் மேலும் , உம் அரசாட்சி செல்வதாக . உம்மோடு மோட்சம் சேர்ந்து இயேசு கடவுளை நாங்கள் யாவரும் ஆராதிக்கும்படி எங்களை ஆண்டு நடத்தியருளும் ஆமென்
சரிதை
பிரான்ஸ் தேசத்து அரசியான காஸ்திஸ் பிளான்சம்மாளுக்கு மணமுடித்து 12 ஆண்டுகளாகியும் பிள்ளைப் பேறில்லை. அர்ச் சாமிநாதர் அவளைச் சந்தித்த போது தினம் செபமாலை செய்து கன்னித்தாயை மகிமைப்படுத்தித் தாயாகும் பாக்கியத்தைக் கேட்கச் சொன்னார் . அன்று முதல் அரசியும் பிரமாணிக்கமாய் செபமாலை சொல்லி வந்தாள். 1213 ஆம் ஆண்டு ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்து பிலிப்பு என்று பெயரிட்டாள். இப்பாக்கியம் வெகு நாள் நீடிக்கவில்லை . குழந்தைப் பருவத்திலேயே அம்மகன் இறந்தான்.
பக்தியில் பிரசித்தி பெற்ற அந்த அரசி , நம்பிக்கையை இழக்காமல் தினம் செபமாலை சொல்லி வந்தாள். எண்ணிக்கையில்லா செபமாலையைக் கட்டி ஆஸ்தான சபையில் உள்ள யாவருக்கும் கொடுத்தாள். தன் நாட்டில் பற்பல பட்டணங்களில் உள்ள சங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்து தன்னோடு சேர்ந்து தன் கருத்துக்களுக்காக செபமாலை செய்து வர யாவரையும் கேட்டுக் கொண்டாள்.இத்தனை ஆயிரக்கணக்கான செபமாலைகள் பலனளிக்காமல் போகுமோ ? 1215 ஆம் ஆண்டில் உலகமே கொண்டாடப்போகும் அர்ச் லூயிஸ் பிறந்தார் (ஞானப் பிரகாசியார் ராஜா) .அவர் வளர்ந்து பிரான்ஸ் தேசத்துக்கு மகிமையாகவும் கிறிஸ்துவ அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மாதிரிகையாக விளங்கி அர்ச்சியசிஷ்டவராய் மரித்தார்