- தேவன்னை
- சலேத் மாதா
Feast of our Lady of Salette - Sep 19
வரலாறு
(La Salette ) சலேத் என்பது பிரான்ஸின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் நகர். இந்த நகரில் இருந்து 15 கி மீ தொலைவில் உள்ள ஒரு கோர்ப் (corps ) சிற்றூரில் மெலானி கால்வத் மேத்யூ ( Melanie Mathieuஎன்னும் சிறுமி தன் பெற்றோரின் பத்து குழந்தைகளில் நான்காவது குழந்தையாக 1831 நவம்பர் 7 இல் பிறந்தாள். கல்வி, கலை , மறைக்கல்வி , திருவருட்சாதனம் எதுவுமே அறியாத ஏழைக் குடும்பம் அவளது குடும்பம் . சிறு வயதிலேயே , கல்வி மறுக்கப்பட்டு , மாடு மேய்க்கச் சென்றாள்; அதே ஊரில் உள்ள மேக்சிமின் ஜெரார்ட் என்பவனும் அவள் ஆடு மேய்க்கும் அதே பகுதியில் தன் முதலாளியின் மாடுகளை மேய்க்க வந்தான் . இருவரும் ஆடு, மாடு மேய்க்க வந்த இடத்தில்நண்பர்களாயினர். மாதா காட்சி கொடுத்த அந்த ஆண்டில், மெலானிக்கு வயது 15. மேக்சிமின்னுக்கு 11.
மெலானி மாதாவின் காட்சி குறித்துக் கூறியவற்றை அவரது வார்த்தையிலே வாசிப்போம்
1846 செப் 19 மாதாவின் காட்சி
செப் 19 ம் தேதி என்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு வந்தேன். அதே நேரத்தில் மேக்சிமினும் வந்தான் . இருவரும் சேர்ந்தே மலையை நோக்கி நடந்தோம். மேக்சிமின் மிக நல்லவன். ரொம்ப எளிமையானவன். அவனிடம் பழக ஆரம்பித்தவுடன் நானே அவனிடம் வலிந்து பேச ஆரம்பித்தேன். மேக்சிமின் இயல்பிலேயே அனைவருடைய கருத்துக்கும் வளைந்து கொடுக்கக் கூடியவன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற சிந்தனை இல்லாதவன் . எல்லா கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவன்.
அவன் ஒரு விளையாட்டை என்னிடம் கற்றுத் தரும்படி கேட்டான் அப்போது ஏற்கனவே நண்பகல் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் அவனிடம் பாரடைஸ் விளையாட்டு விளையாட சில பூக்களைப் பறிக்கச் சொன்னேன். அங்கு பல வண்ணங்களில் பல வகையான பூக்கள் இருந்தன . பாரடைஸ் விளையாட்டிற்காக கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க ஆரம்பித்தோம் . அப்படிக் கற்களை அடுக்கிக் கோபுரமாகக் கட்டிய பிறகு ,அதனை ஆல்ப்ஸ் மலையில் பூத்துக் குலுங்கும் பலவித பூக்களால் அழகு செய்தோம்
அப்போது சரியாக நண்பகல் வேளை. கோயிலில் மூவேளை செபத்திற்காக மணி அடிப்பதைக் கேட்க முடிந்தது.அன்றைய பொழுதில் தட்ப வெப்பம் சீராக இருந்தது. வானத்தில் ஒரு மேகம் கூட இல்லை . மூவேளை செபத்திற்காக மணி அடித்தவுடன் முழந்தாளிட்டு எங்களுக்குத் தெரிந்த ஜெபத்தை ஆண்டவரை நோக்கி செபித்தோம்
மூவேளை செபத்திற்கு மணி அடித்தவுடன் எங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்ட வேண்டும் .இதனை ஒரு வாய் வழிச் சட்டமாகவே மேக்சிமின்னுக்கு அவனுடைய முதலாளி கொடுத்திருந்தார் . எனவே ஜெபம் முடிந்தவுடன் மாடுகளை ஓட்டிக் கொண்டு நீரூற்றுக்குப் புறப்பட்டோம்
அங்கே எல்லா நீரூற்றுகளும் வறண்டு போய் இருந்தன .பின்பு அங்கேயே அமர்ந்து மதிய உணவை உண்டு முடித்தவுடன் கற்களைப் பொறுக்கி சிறிய விளையாட்டு வீடு ஒன்று கட்டினோம் . கீழ்தளத்தில் நாங்கள் இருப்பதற்கான வீடாகவும் மேல்தளத்தைப் பாரடைஸ் என்றும் சொல்லிக் கொண்டு கற்களை அடுக்கினோம் .பாரடைசைக் கட்டி முடித்தவுடன் தூங்கி விட்டோம் . நண்பகல் 2.30 க்கு நான் தான் முதலில் கண் விழித்தேன் . என்னுடைய மாடுகளைக் காணவில்லை . மேக்சிமின்னை எழுப்பி இருவரும் சேர்ந்து தேடினோம் . அவை வீட்டிற்க்குச் செல்லும் வழியில் மலைச்சரிவில் அமைதியாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன
மாடுகளைக் கண்ட மகிழ்ச்சியில் நான் திரும்புகையில் ஒரு மாபெரும் ஒளி வெள்ளம் அந்த மலை , பள்ளத்தாக்கு, சமவெளி எங்கும் பரவியது . சூரியனை விட மிகப்பெரிய உருண்டை வடிவிலான ஒளி வெள்ளத்தைக் கண்ட நான் சப்தமாகக் கத்தி அழ ஆரம்பித்தேன் . அருகில் நின்று கொண்டிருந்த மேக்சிமின் ஓடி வந்து என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டான் . பயத்தில் என்னுடைய கரங்கள் நடுங்குவதையும் , உடல் அதிர்வதையும் கண்டு அவன் அஞ்சினான் . பயத்தில் என்னுடைய கையில் இருந்த மாட்டை விரட்டும் குச்சி கை நழுவி கீழே விழுந்தது
அதைப் பார்த்த மேக்சிமின் " குச்சியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் . அது நமக்கு ஏதாவது தீங்கு செய்தது என்றால் நான் அதனைக் கடுமையாக அடிப்பேன் " என்றான்
ஒளி வெள்ளத்தைக் கண்டு " மேக்சிமின் .. அங்கே என்ன இருக்கிறது என்று உனக்கு ஏதாவது தெரிகிறதா ? ஐயோ .. என் கடவுளே " என்று கத்தினேன் . அந்த நேரம் என்னுள்ளத்தை இனம் புரியாத அற்புதமான ஏதோ ஒன்று கடந்து சென்றது. ஏதோ ஒரு அற்புத சக்தி என்னைக் கவர்ந்து இழுப்பதாக உணர்ந்தேன். என் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது . அந்தப் பேரொளியை நான் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன் . அது நிலையாய் அசைவற்று நின்றது . அந்த ஒளி வெள்ளம் திறந்தது . அதிலிருந்து அதை விட உன்னதமான பிரம்மிக்கத்தக்க மிக அற்புதமான ஒளி புறப்பட்டு வந்தது . அந்த ஒளியில் ஓர் அழகிய இளம்பெண் நாங்கள் கற்களால் செய்த பாரடைஸ் மீது அமர்ந்திருந்தார்
அவருடைய தலை அவரது உள்ளங்கைகளில் பொதிந்திருந்தது . அவர் மீளாத துயரில் இருப்பது போல , ஆற்ற இயலாத வருத்தம் அவரை ஆட்கொண்டு இருப்பது போல எனக்குத் தோன்றியது . முகத்தை உள்ளங்கைகளில் பொதிந்திருந்த அவர் , அவருடைய இரண்டு முழங்கைகளையும் அவரது முட்டியில் வைத்திருந்தார்
உடனே அந்தக் கற்களாலான இருக்கையிலிருந்து எழுந்து என்னையும் மேக்சிமின்னையும் கை நீட்டி அழைத்து , எங்களைப் பார்த்து
"வாருங்கள் குழந்தைகளே , பயப்படாதீர்கள் .. உங்களுக்கு மாபெரும் நற்செய்தியை அறிவிக்கவே நான் இங்கு வந்தேன் " என்றார்
மாதா சுமார் 50 அடி தூரத்தில் நின்று எங்களைக் கை நீட்டி அழைத்தார். அவருடைய குரல் ஒரு மெல்லிய இசையைப் போல அவ்வளவு இனிமையாக இருந்தது . அவருடைய ஆடை அவ்வளவு வெண்மையாக இருந்தது .அவருடைய முகம் தெய்வீக அம்சமாக இருந்தது . ஆகவே நாங்கள் அவருக்கு அருகில் சென்றோம் . மாதா மிக உயரமாக இருந்தார் . அவர் இடையில் இன்னொரு மேலாடையைக் கட்டி இருந்தார் அந்த ஆடையின் நூலிழைகள் பூமியைச் சார்ந்ததாகத் தெரியவில்லை . அவருடைய தோள், கரங்களைச் சுற்றி மேலாடை இருந்தது . அது அவர் கழுத்துப் பக்கம் முடிச்சு போடப்பட்டு இருந்தது
அவருடைய கழுத்தில் சிலுவையுடன் கூடிய சங்கிலி ஒன்றும் தொங்கியது . அந்தச் சிலுவையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கருவிகள் இருந்தன . ஒரு பக்கம் சுத்தியலும் இன்னொரு பக்கம் குறடும் இருந்தன. அவருடைய தோளை இறுக்குவது போல் ஒரு சங்கிலியும் இருந்தது . அது நம்முடைய பாவங்களின் சுமையால் அவருடைய தோளை நெருக்குவது போல் இருந்தது . ஏறக்குறைய அப்பகுதி சாமானியப் பெண்ணின் ஆடையைப் போலவே அவரது ஆடை இருந்தது
ஆனால் அவருடைய கண்களில் இருந்து அழுகை வந்து கொண்டே இருந்தது .அது அருவி போல் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தது .மேக்சிமினின் வார்த்தைகளில் கூறுவது என்றால் " மாதா ஒரு தாயைப் போல இருந்தார் . சொந்தக் குழந்தைகளே அடித்ததால் அவர்களிடமிருந்து தப்பித்து மலைக்கு வந்து கதறி அழும் ஒரு எளிய தாயைப் போல இருந்தார் "
மூன்று இடங்களில் அவர் ரோஜா மாலையை அணிந்திருந்தார் . தலை மேல் சாதாரண விவசாய பெண்களைப் போல ஒரு இறுக்கமான தொப்பியும் , அதன் மேல் கிரீடமும் இருந்தது . அந்தக் கிரீடத்தைச் சுற்றி ஒரு ரோஜா மாலையும் அவருடைய தோள் மார்பு இவற்றை மறைத்திருந்த மேலாடையின் விளிம்பைச் சுற்றி பலவண்ணத்தில் ரோஜா மாலையும் அவரது கால் பூட்சுகளில் இன்னொரு ரோஜா மாலையும் சுற்றப்பட்டிருந்தது
அரசிகள் அணிவது போன்ற தங்க , வைரங்களால் ஆன கிரீடம் அவர் தலையில் அணிந்திருந்தார் . அது ஒளி வெள்ளத்தில் கண்களைக் கூசியது .அதுவும் ரோஜாப்பூக்களால் அழகு செய்யப்பட்டு இருந்தது . அவருடைய தலையும் காதுகளும் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருந்தன
ஆனால் அவர் அழுது கொண்டே இருந்தார் . அவர் முகம் தெய்வீக அழகில் ஒளிர்ந்தது . ஆனால் மீளாத துயரம் அவர் முகத்தில் தெரிந்தது . மாதாவின் காட்சியால் மேலானியும் மேக்சிமினும் அதிர்ந்து போய் நின்றார்கள் . "வாருங்கள் குழந்தைகளே ! உங்களுக்கு மாபெரும் செய்தியை அறிவிக்கவே வந்திருக்கிறேன் என்று கூறிய அவரது மென்மையான சொற்கள் மெலானியை மிகவும் ஈர்த்தது மாதாவுக்கு அருகில் சென்றவுடன் மெலானி அவர் முன்பாக வலது பக்கம் நின்று கொண்டாள். அவர் முதலில் பிரெஞ்சு மொழியிலும் பின் உள்ளூர் மொழியிலும் பேச ஆரம்பித்தார்
"என்னுடைய மக்கள் மனம் மாறி தங்களையே கடவுளிடம் ஒப்புவிக்காவிடில், நான் சிலுவையில் தொங்கும் என்னுடைய மகனின் கரங்களை இறக்கிக் கொள்ளச் செய்வேன். அது மிகப் பாரமாகவும், சுமையாகவும் எனக்கு இருக்கிறது. இனி ஒரு போதும் அதைத் தாங்கிக் கொள்ள இயலாது
உங்களுக்காகவே நான் காலம் முழுதும் துன்பப்படுகிறேன் . என்னுடைய மகன் உங்களைக் கைவிட்டுவிட நான் விரும்பவில்லை எனில், அந்தச் சுமையை நான் சுமக்க வேண்டும். அதற்காக நீங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். உங்களில் ஒரு சிலரே இதைப் பற்றி சிந்திக்கிறீர்கள். நீங்கள் ஜெபிப்பது வீண். நீங்கள் செயல்படுவது வீண், உங்கள் அனைவருக்காகவும் நான் படும் துயரங்களை நீங்கள் ஒரு போதும் ஈடு செய்ய இயலாது .
வேலை செய்ய உங்களுக்கு ஆறு நாட்களைக் கொடுத்துள்ளேன். ஏழாம் நாளை நானே வைத்துக் கொண்டேன். ஆனால் அதனை என்னிடம் கொடுக்க யாருக்கும் விருப்பம் இல்லை. மேலும் வண்டி ஓட்டுபவர்கள் என் மகனுடைய பெயரை வீணாக உச்சரிக்காமல் இருப்பதில்லை . அவர்கள் சத்தியம் செய்கையில் அவருடைய பெயரை வீணாக்குகிறார்கள் . இவை இரண்டுமே என் மகனின் துயரத்தை அதிகப்படுத்துகின்றன.
உங்கள் அறுவடை எதிர்காலத்தில் நாசமாகப் போகிறது என்றால் , அது இப்படிப்பட்டவர்களின் செயல்பாடுகளால் தான் . கடந்த ஆண்டே உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்து எச்சரித்தேன் . ஆனால் நீங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை . மேலும் நீங்கள் சத்தியம் செய்ததையோ என் மகனின் பெயரை வீணாகப் பயன்படுத்துவதையோ மாற்றிக்கொள்ளவில்லை . ஆகவே உங்கள் உருளைக்கிழங்கு விளைச்சல் அழிந்து கொண்டிருக்கிறது . கிறிஸ்துமஸ் வரை இது தொடரும் . அதன் பின் உருளைக்கிழங்கு விளைச்சலே இல்லாமல் போகும்
உங்களிடம் சோளம் இருந்தால் அதை நீங்கள் விதைக்க வேண்டாம் .அப்படி விதைத்தீர்கள் என்றால் பூச்சிகள் அதைத் தின்றுவிட்டு போகும் . மிச்சம் ஏதாவது இருந்தால் அதை நீங்கள் அடித்துத் தூற்றுகிற பொழுது அது வெறுமனே தூசாகத்தான் போகும் . ஒரு மாபெரும் பஞ்சம் வரப்போகிறது . அப்பொழுது ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பசியினால் நலிவுற ஆரம்பிப்பார்கள் . குழந்தைகளை யார் வைத்திருக்கிறார்களோ அவர்களுடைய கரங்களிலேயே இறந்து போய் விடுவார்கள் . மற்றவர்கள் பட்டினியின் மூலம் பரிகாரம் செய்வார்கள்.எல்லா விதைகளும் நாசமாகி விடும் . திராட்சைகள் எல்லாம் அழுகிப் போகும்
அவர்கள் மனம் மாறி விட்டார்கள் எனில் , கற்களும் , மலைப் பாறைகளும் கோதுமைக் குவியல்களாக அற்புதமாக மாறி விடும் . பூமியில் தானாகவே உருளைக் கிழங்குகள் விதைக்கப்பட்டு முளைத்து வரும்
என் குழந்தைகளே ,உங்கள் ஜெபங்களை அனுதினமும் நன்றாகச் சொல்லுகிறீர்களா?
என் குழந்தைகளே , காலையிலும் மாலையிலும் கண்டிப்பாக ஜெபங்களைச் சொல்ல வேண்டும் . உங்களால் செபம் செய்ய முடியாத சூழலில் , ஒரு 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே 'ஜெபத்தையும் ஒரு 'அருள் நிறைந்த மரியே'ஜெபத்தையுமாவது சொல்ல வேண்டும் . ஆனால் நேரம் கிடைக்கும் போது அதிகமாகச் ஜெபங்களைச் சொல்ல வேண்டும்
ஒரு சில வயதான பெண்களைத் தவிர வேறு யாரும் கோவிலுக்குச் செல்வதில்லை . எல்லா கோடை காலங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்கள் வேலைக்குச் செல்கிறார்கள் . குளிர்காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கோயிலுக்கு வந்து கிறிஸ்தவ மதத்தை எள்ளி நகையாடுகிறார்கள் . மிகப் பசியுற்ற நாய்கள் எலும்பு வெட்டுபவனிடம் நிற்பது போல் தவக்காலத்தில் கறிக்கடைகளுக்கு ஓடுகிறார்கள்
"நன்று .. என் குழந்தைகளே நான் சொன்ன இவற்றை எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள் ""
(புனித சலேத் மாதா - தமிழ் தாசன் எழுதிய நூலில் இருந்து )
புகழ் மாலை
சுவாமி கிருபையாயிரும் ( மற்றதும் )
ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அற்சிஷ்ட மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற புனித சலேத் மாதாவே *
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமான சலேத் மாதாவே
கச்திப்படுகிரவர்களுக்கு தேற்றரவான புனித சலேத் மாதாவே
எங்களுக்குச் சுகிர்த புத்திமதிகளை சொல்லத்தக்கதாக மோட்சத்தில் நின்றிறங்கி இரண்டு ஏழைப் பிள்ளைகளுக்குத் தரிசனையான புனித சலேத் மாதாவே
மனுஷர் செய்கிற பாவங்களைப் பற்றித் திரளான கண்ணீர் சொரிந்த புனித சலேத் மாதாவே
நாங்கள் பாவ வழியை விட்டு மனந்திரும்பத்தக்கதாக எங்களுக்கு வரப்போகிற பொல்லாப்புகளை முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
பாவிகளான எங்கள் பேரில் கோபமாயிருக்கிற சர்வேசுரனுடைய கோபாக்கினையை உம்முடைய மன்றாட்டினால் நிறுத்துகிற புனித சலேத் மாதாவே
நம்முடைய ஜனங்களாகிய கிறிஸ்தவர்கள் மனந்திரும்பாது போனால் நமது திவ்விய குமாரனுடைய திருப் புஜமானது அவர்களைத் தண்டிக்க விட வேண்டியதாயிருக்கும் என்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே
எங்களுடைய பாவங்களைப் பற்றி அதிக வருத்தமும் கவலையும் படுகிற புனித சலேத் மாதாவே
எங்களுடைய நன்றியறிந்த தோத்திரத்திற்கும் நம்பிக்கை நேசத்திற்கும் பாத்திரமான புனித சலேத் மாதாவே
சலேத் மலையில் இரண்டு சிறு பிள்ளைகளுக்கு புத்திமதிகளைச் சொன்ன பிற்பாடு இதெல்லாத்தையும் சகல ஜனங்களுக்கும் அறிவியுங்கள் என்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே
மனுஷர் மனதிரும்பாதே போனால் அவர்களுக்கு மிகவும் பயங்கரமான தண்டனைகள் நேரிடும் என்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே
அவர்கள் திரும்பாதே போனால் வெள்ளாண்மைகள் கெட்டு கடின பஞ்சம் வருமென்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
அவர்கள் மனந்திரும்பாதே போனால் உருளைக் கிழங்குகளும் முந்திரிகைக் குலைகளும் கோதுமை முதலான விளைவுகளும் அழிந்து போய்ச் சனங்களுக்கு மிகுந்த வருத்தமுண்டாகுமென்று அறிவித்த புனித சலேத் மாதாவே
அவர்கள் மனந்திரும்பாது போனால் ஏழு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் நடுக்கமேடுத்துச் சாவார்கள் என்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
அவர்கள் மனந்திரும்பினால் சர்வேசுரனுடைய கோபம் மாறி வெள்ளாண்மைகள் சரியாய் விளைந்து பஞ்சம் நீங்கி எங்கும் சவுக்கியமும் செழிப்பும் உண்டாகுமென்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே
சலேத் மலையில் தேவரீர் சொன்ன புத்திமதிகளினால் அநேக பாவிகளை மனந்திரும்பச் செய்த புனித சலேத் மாதாவே
மனுஷருடைய ஆங்காரம் அடங்காததைப் பற்றித் தேவரீர் முன்னறிவித்த பொல்லாப்புகள் எங்களுக்குச் சம்பவித்ததினாலே எங்கும் பேர் போன புனித சலேத் மாதாவே
சலேத் மலையில் தேவரீர் காண்பித்த அற்புதமானது பூலோகத்தின் எத்திசையிலும் பிரபல்லியமானதினாலே பேர் பெற்ற புனித சலேத் மாதாவே
சலேத் மாதாவின் பேராலே கட்டுவித்த நானூற்று சில்வான கோயில்களில் வணங்கப்படுகிற சலேத் மாதாவே
தேவரீருடைய உபகார சகாயங்களினால் நானாவித சனங்களை உம்மிடத்தில் வரச் செய்கிற புனித சலேத் மாதாவே
எத்திசையிலும் மேன்மேலும் அதிகமதிகமாய்த் துதிக்கப்படுகிற புனித சலேத் மாதாவே
தேவரீரை மன்றாடுகிறவர்களில் ஒருவரையும் வியர்த்தமாய்ப் போக விடாத சலேத் மாதாவே
புனித சலேத் மாதாவே
தேவரீர் திருப்பாதம் வைத்த இடத்தில் தண்ணீரூற்று அற்புதமாய்ப் புறப்படச் செய்த புனித சலேத் மாதாவே
இந்தப் புனிதமான ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு கணக்கில்லாத அற்புதங்களைச் செய்விக்கிற புனித சலேத் மாதாவே
குருடருக்குப் பார்வையும் , செவிடருக்குச் செவியும் , சப்பாணிகளுக்கு நடையும் மற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியமும் கட்டளையிடுகிற புனித சலேத் மாதாவே
எவ்வித துன்பக் கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலையும் தேற்றரவையும் கொடுக்கிற சலேத் மாதாவே புனித சலேத் மாதாவே
சூரியனை மங்கச் செய்கிற சோதிப் பிரகாசத்தோடு சலேத் மலையில் காண்பித்த புனித சலேத் மாதாவே
ரோசாப்பூ முடியும் நட்சத்திர கிரீடமும் காந்தியுள்ள மற்ற சோடிப்புகளும் அணிந்த வண்ணம் தரிசனையான சலேத் மாதாவே
இயேசுக்கிறிஸ்து நாதர் பாடுபட்ட திருச்சிலுவையையும் குறடு சுத்தியலும் மார்பில் அணியாக வைக்கப் பெற்று காண்பித்த சலேத் மாதாவே
சர்வேசுரனுடைய நாளான ஞாயிற்றுக் கிழமையை நாங்கள் அனுசரியாதே போனால் எங்களுக்குக் கடின ஆக்கினை நேரிடுமென்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
ஞாயிற்றுக் கிழமையை அனுசரியாத பாவமும் தேவ தூஷணம் சொல்லுகிற பாவமும் இவ்விரண்டு பாவங்களும் விசேஷமாய்த் தேவ கோபத்தை மூட்டுகிறதென்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
சுத்தபோசனக் கடனும் , கடனொருசந்தியும் சரியாய் அனுசரிக்க வேண்டுமென்று கட்டளையிட்ட புனித சலேத் மாதாவே
இராச்செபமும் காலைச் செபமும் தப்பாமல் கற்பிக்க வேண்டுமென்று கற்பித்த புனித சலேத் மாதாவே
பாவிகளான எங்களுக்குத் தாயும் அடைக்கலமும் நம்பிக்கையும் ஆதரவுமாயிருக்கிற புனித சலேத் மாதாவே
தயாபரியாயிருந்து எங்களைத் தாபரித்துக் கொள்ளும் மாதாவே
தயாபரியாயிருந்து எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே
எங்களுக்கு வரப்போகிற பொல்லாப்புகளை உமது வல்லபமுள்ள மன்றாட்டினால் அகற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் **
பஞ்சம் படை பெருவாரிக் காய்ச்சல் முதலான ஆக்கினைகளில் நின்று எங்களை இரட்சிக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
வேளாண்மைப் பயிர் விளைவுகள் சரியாய் விளைந்து எங்களுக்கு செழிப்பும் சௌக்கியமும் வரச் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்
சத்திய வேதம் எத்திசையிலும் பரப்பவும் திருச்சபை எங்கும் ஸ்தாபிக்கப்படவும் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்
இந்திய தேசத்திலுள்ள புறமஸ்தர் எல்லோரும் அஞஞானத்தை விட்டு விடவும் சத்திய வேதத்தைக் கைக்கொள்ளவும் செய்தருள வேண்டுமென்று
தேவரீரை மன்றாடுகிறோம்
பதிதருடைய தப்பறைகள் அழியவும் , பிரிவினைக்காரருடைய ஆங்காரம் நீங்கவும் , துஷ்டருடைய ஆலோசனைகள் தவிரவும் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
யூதர்களுடைய குருட்டாட்டம் நீங்கி, முகமதியர்களுடைய பிடிவாதம் ஒழிந்து அவர்களையும் இவர்களையும் சத்திய வேதத்திற்கு வரச் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
ஓ! மாதாவே , எங்கள் சந்தோசத்தில் திருப்தியும் , கஸ்திகளில் ஆறுதலும் புண்ணியங்களில் உறுதியும் எந்தக் கிரியைகளிலும் துணையுமாயிருக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்
எங்கள் மரணத் தருவாயில் எங்களைக் கைவிடாமல் நல்ல பாவசன்கீர்த்தனமும் அவஸ்தைப் பூசுதலும் கடைசி நன்மையையும் இஷ்டப்பிரசாதமும் கட்டளையிட வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
இயேசுக்கிறிஸ்து நாதருடைய வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
பாவிகளுக்கு அடைக்கலமாக இருக்கிற புனித சலேத் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
செபிப்போமாக
சர்வ சீவ தயாபர இயேசுவே , பாவிகளாயிருக்கிற அடியோர்களை மீட்டு இரட்சிக்கத்தக்கதாக உம்முடைய பரிசுத்த தாயாரான தேவமாதாவைக் கொண்டு உம்முடைய நீதிக் கோபத்தினால் எங்களுக்கு வரப்போகிற ஆக்கினைகளை சலேத் மலையிலே முன்னறிவிக்கச் சித்தமானீரே, நாங்கள் எல்லாரும் பயபக்தியோடு அஞ்சிப் பாவ வழிகளை விட்டு விட்டு மனந்திரும்பி உம்முடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் சுமுத்திரையாய் அனுசரிக்க அனுக்கிரகம் செய்தருளும் . எங்களுடைய பாவங்களின் நிமித்தமாக எங்களுக்கு நேரிட்ட பொல்லாப்புக்களை நீக்கி வரப்போகிற ஆக்கினைகளை அகற்றி வேண்டிய நன்மைகளைத் தந்து சந்தோஷமான மனதோடு நாங்கள் உமக்கு இவ்வுலகத்தில் ஊழியம் செய்யவும் மறுலோகத்தில் உம்மோடு கூட என்றென்றைக்கும் வாழவும் செய்ய வேண்டுமென்று மன்றாடுகின்றோம் . பிதாவோடேயும் .இஸ்பிரீத் சாந்துவோடேயும் ஒன்றாய் இருந்து சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்து கொண்டு வருகிற ஆண்டவரே ஆமென்
3 பர அரு திரி சொல்லவும்
--------------------------------------------------------------------
* எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
** எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே
வரலாறு
(La Salette ) சலேத் என்பது பிரான்ஸின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் நகர். இந்த நகரில் இருந்து 15 கி மீ தொலைவில் உள்ள ஒரு கோர்ப் (corps ) சிற்றூரில் மெலானி கால்வத் மேத்யூ ( Melanie Mathieuஎன்னும் சிறுமி தன் பெற்றோரின் பத்து குழந்தைகளில் நான்காவது குழந்தையாக 1831 நவம்பர் 7 இல் பிறந்தாள். கல்வி, கலை , மறைக்கல்வி , திருவருட்சாதனம் எதுவுமே அறியாத ஏழைக் குடும்பம் அவளது குடும்பம் . சிறு வயதிலேயே , கல்வி மறுக்கப்பட்டு , மாடு மேய்க்கச் சென்றாள்; அதே ஊரில் உள்ள மேக்சிமின் ஜெரார்ட் என்பவனும் அவள் ஆடு மேய்க்கும் அதே பகுதியில் தன் முதலாளியின் மாடுகளை மேய்க்க வந்தான் . இருவரும் ஆடு, மாடு மேய்க்க வந்த இடத்தில்நண்பர்களாயினர். மாதா காட்சி கொடுத்த அந்த ஆண்டில், மெலானிக்கு வயது 15. மேக்சிமின்னுக்கு 11.
மெலானி மாதாவின் காட்சி குறித்துக் கூறியவற்றை அவரது வார்த்தையிலே வாசிப்போம்
1846 செப் 19 மாதாவின் காட்சி
செப் 19 ம் தேதி என்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு வந்தேன். அதே நேரத்தில் மேக்சிமினும் வந்தான் . இருவரும் சேர்ந்தே மலையை நோக்கி நடந்தோம். மேக்சிமின் மிக நல்லவன். ரொம்ப எளிமையானவன். அவனிடம் பழக ஆரம்பித்தவுடன் நானே அவனிடம் வலிந்து பேச ஆரம்பித்தேன். மேக்சிமின் இயல்பிலேயே அனைவருடைய கருத்துக்கும் வளைந்து கொடுக்கக் கூடியவன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற சிந்தனை இல்லாதவன் . எல்லா கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவன்.
அவன் ஒரு விளையாட்டை என்னிடம் கற்றுத் தரும்படி கேட்டான் அப்போது ஏற்கனவே நண்பகல் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் அவனிடம் பாரடைஸ் விளையாட்டு விளையாட சில பூக்களைப் பறிக்கச் சொன்னேன். அங்கு பல வண்ணங்களில் பல வகையான பூக்கள் இருந்தன . பாரடைஸ் விளையாட்டிற்காக கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க ஆரம்பித்தோம் . அப்படிக் கற்களை அடுக்கிக் கோபுரமாகக் கட்டிய பிறகு ,அதனை ஆல்ப்ஸ் மலையில் பூத்துக் குலுங்கும் பலவித பூக்களால் அழகு செய்தோம்
அப்போது சரியாக நண்பகல் வேளை. கோயிலில் மூவேளை செபத்திற்காக மணி அடிப்பதைக் கேட்க முடிந்தது.அன்றைய பொழுதில் தட்ப வெப்பம் சீராக இருந்தது. வானத்தில் ஒரு மேகம் கூட இல்லை . மூவேளை செபத்திற்காக மணி அடித்தவுடன் முழந்தாளிட்டு எங்களுக்குத் தெரிந்த ஜெபத்தை ஆண்டவரை நோக்கி செபித்தோம்
மூவேளை செபத்திற்கு மணி அடித்தவுடன் எங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்ட வேண்டும் .இதனை ஒரு வாய் வழிச் சட்டமாகவே மேக்சிமின்னுக்கு அவனுடைய முதலாளி கொடுத்திருந்தார் . எனவே ஜெபம் முடிந்தவுடன் மாடுகளை ஓட்டிக் கொண்டு நீரூற்றுக்குப் புறப்பட்டோம்
அங்கே எல்லா நீரூற்றுகளும் வறண்டு போய் இருந்தன .பின்பு அங்கேயே அமர்ந்து மதிய உணவை உண்டு முடித்தவுடன் கற்களைப் பொறுக்கி சிறிய விளையாட்டு வீடு ஒன்று கட்டினோம் . கீழ்தளத்தில் நாங்கள் இருப்பதற்கான வீடாகவும் மேல்தளத்தைப் பாரடைஸ் என்றும் சொல்லிக் கொண்டு கற்களை அடுக்கினோம் .பாரடைசைக் கட்டி முடித்தவுடன் தூங்கி விட்டோம் . நண்பகல் 2.30 க்கு நான் தான் முதலில் கண் விழித்தேன் . என்னுடைய மாடுகளைக் காணவில்லை . மேக்சிமின்னை எழுப்பி இருவரும் சேர்ந்து தேடினோம் . அவை வீட்டிற்க்குச் செல்லும் வழியில் மலைச்சரிவில் அமைதியாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன
மாடுகளைக் கண்ட மகிழ்ச்சியில் நான் திரும்புகையில் ஒரு மாபெரும் ஒளி வெள்ளம் அந்த மலை , பள்ளத்தாக்கு, சமவெளி எங்கும் பரவியது . சூரியனை விட மிகப்பெரிய உருண்டை வடிவிலான ஒளி வெள்ளத்தைக் கண்ட நான் சப்தமாகக் கத்தி அழ ஆரம்பித்தேன் . அருகில் நின்று கொண்டிருந்த மேக்சிமின் ஓடி வந்து என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டான் . பயத்தில் என்னுடைய கரங்கள் நடுங்குவதையும் , உடல் அதிர்வதையும் கண்டு அவன் அஞ்சினான் . பயத்தில் என்னுடைய கையில் இருந்த மாட்டை விரட்டும் குச்சி கை நழுவி கீழே விழுந்தது
அதைப் பார்த்த மேக்சிமின் " குச்சியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் . அது நமக்கு ஏதாவது தீங்கு செய்தது என்றால் நான் அதனைக் கடுமையாக அடிப்பேன் " என்றான்
ஒளி வெள்ளத்தைக் கண்டு " மேக்சிமின் .. அங்கே என்ன இருக்கிறது என்று உனக்கு ஏதாவது தெரிகிறதா ? ஐயோ .. என் கடவுளே " என்று கத்தினேன் . அந்த நேரம் என்னுள்ளத்தை இனம் புரியாத அற்புதமான ஏதோ ஒன்று கடந்து சென்றது. ஏதோ ஒரு அற்புத சக்தி என்னைக் கவர்ந்து இழுப்பதாக உணர்ந்தேன். என் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது . அந்தப் பேரொளியை நான் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன் . அது நிலையாய் அசைவற்று நின்றது . அந்த ஒளி வெள்ளம் திறந்தது . அதிலிருந்து அதை விட உன்னதமான பிரம்மிக்கத்தக்க மிக அற்புதமான ஒளி புறப்பட்டு வந்தது . அந்த ஒளியில் ஓர் அழகிய இளம்பெண் நாங்கள் கற்களால் செய்த பாரடைஸ் மீது அமர்ந்திருந்தார்
அவருடைய தலை அவரது உள்ளங்கைகளில் பொதிந்திருந்தது . அவர் மீளாத துயரில் இருப்பது போல , ஆற்ற இயலாத வருத்தம் அவரை ஆட்கொண்டு இருப்பது போல எனக்குத் தோன்றியது . முகத்தை உள்ளங்கைகளில் பொதிந்திருந்த அவர் , அவருடைய இரண்டு முழங்கைகளையும் அவரது முட்டியில் வைத்திருந்தார்
உடனே அந்தக் கற்களாலான இருக்கையிலிருந்து எழுந்து என்னையும் மேக்சிமின்னையும் கை நீட்டி அழைத்து , எங்களைப் பார்த்து
"வாருங்கள் குழந்தைகளே , பயப்படாதீர்கள் .. உங்களுக்கு மாபெரும் நற்செய்தியை அறிவிக்கவே நான் இங்கு வந்தேன் " என்றார்
மாதா சுமார் 50 அடி தூரத்தில் நின்று எங்களைக் கை நீட்டி அழைத்தார். அவருடைய குரல் ஒரு மெல்லிய இசையைப் போல அவ்வளவு இனிமையாக இருந்தது . அவருடைய ஆடை அவ்வளவு வெண்மையாக இருந்தது .அவருடைய முகம் தெய்வீக அம்சமாக இருந்தது . ஆகவே நாங்கள் அவருக்கு அருகில் சென்றோம் . மாதா மிக உயரமாக இருந்தார் . அவர் இடையில் இன்னொரு மேலாடையைக் கட்டி இருந்தார் அந்த ஆடையின் நூலிழைகள் பூமியைச் சார்ந்ததாகத் தெரியவில்லை . அவருடைய தோள், கரங்களைச் சுற்றி மேலாடை இருந்தது . அது அவர் கழுத்துப் பக்கம் முடிச்சு போடப்பட்டு இருந்தது
அவருடைய கழுத்தில் சிலுவையுடன் கூடிய சங்கிலி ஒன்றும் தொங்கியது . அந்தச் சிலுவையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கருவிகள் இருந்தன . ஒரு பக்கம் சுத்தியலும் இன்னொரு பக்கம் குறடும் இருந்தன. அவருடைய தோளை இறுக்குவது போல் ஒரு சங்கிலியும் இருந்தது . அது நம்முடைய பாவங்களின் சுமையால் அவருடைய தோளை நெருக்குவது போல் இருந்தது . ஏறக்குறைய அப்பகுதி சாமானியப் பெண்ணின் ஆடையைப் போலவே அவரது ஆடை இருந்தது
ஆனால் அவருடைய கண்களில் இருந்து அழுகை வந்து கொண்டே இருந்தது .அது அருவி போல் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தது .மேக்சிமினின் வார்த்தைகளில் கூறுவது என்றால் " மாதா ஒரு தாயைப் போல இருந்தார் . சொந்தக் குழந்தைகளே அடித்ததால் அவர்களிடமிருந்து தப்பித்து மலைக்கு வந்து கதறி அழும் ஒரு எளிய தாயைப் போல இருந்தார் "
மூன்று இடங்களில் அவர் ரோஜா மாலையை அணிந்திருந்தார் . தலை மேல் சாதாரண விவசாய பெண்களைப் போல ஒரு இறுக்கமான தொப்பியும் , அதன் மேல் கிரீடமும் இருந்தது . அந்தக் கிரீடத்தைச் சுற்றி ஒரு ரோஜா மாலையும் அவருடைய தோள் மார்பு இவற்றை மறைத்திருந்த மேலாடையின் விளிம்பைச் சுற்றி பலவண்ணத்தில் ரோஜா மாலையும் அவரது கால் பூட்சுகளில் இன்னொரு ரோஜா மாலையும் சுற்றப்பட்டிருந்தது
அரசிகள் அணிவது போன்ற தங்க , வைரங்களால் ஆன கிரீடம் அவர் தலையில் அணிந்திருந்தார் . அது ஒளி வெள்ளத்தில் கண்களைக் கூசியது .அதுவும் ரோஜாப்பூக்களால் அழகு செய்யப்பட்டு இருந்தது . அவருடைய தலையும் காதுகளும் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருந்தன
ஆனால் அவர் அழுது கொண்டே இருந்தார் . அவர் முகம் தெய்வீக அழகில் ஒளிர்ந்தது . ஆனால் மீளாத துயரம் அவர் முகத்தில் தெரிந்தது . மாதாவின் காட்சியால் மேலானியும் மேக்சிமினும் அதிர்ந்து போய் நின்றார்கள் . "வாருங்கள் குழந்தைகளே ! உங்களுக்கு மாபெரும் செய்தியை அறிவிக்கவே வந்திருக்கிறேன் என்று கூறிய அவரது மென்மையான சொற்கள் மெலானியை மிகவும் ஈர்த்தது மாதாவுக்கு அருகில் சென்றவுடன் மெலானி அவர் முன்பாக வலது பக்கம் நின்று கொண்டாள். அவர் முதலில் பிரெஞ்சு மொழியிலும் பின் உள்ளூர் மொழியிலும் பேச ஆரம்பித்தார்
"என்னுடைய மக்கள் மனம் மாறி தங்களையே கடவுளிடம் ஒப்புவிக்காவிடில், நான் சிலுவையில் தொங்கும் என்னுடைய மகனின் கரங்களை இறக்கிக் கொள்ளச் செய்வேன். அது மிகப் பாரமாகவும், சுமையாகவும் எனக்கு இருக்கிறது. இனி ஒரு போதும் அதைத் தாங்கிக் கொள்ள இயலாது
உங்களுக்காகவே நான் காலம் முழுதும் துன்பப்படுகிறேன் . என்னுடைய மகன் உங்களைக் கைவிட்டுவிட நான் விரும்பவில்லை எனில், அந்தச் சுமையை நான் சுமக்க வேண்டும். அதற்காக நீங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். உங்களில் ஒரு சிலரே இதைப் பற்றி சிந்திக்கிறீர்கள். நீங்கள் ஜெபிப்பது வீண். நீங்கள் செயல்படுவது வீண், உங்கள் அனைவருக்காகவும் நான் படும் துயரங்களை நீங்கள் ஒரு போதும் ஈடு செய்ய இயலாது .
வேலை செய்ய உங்களுக்கு ஆறு நாட்களைக் கொடுத்துள்ளேன். ஏழாம் நாளை நானே வைத்துக் கொண்டேன். ஆனால் அதனை என்னிடம் கொடுக்க யாருக்கும் விருப்பம் இல்லை. மேலும் வண்டி ஓட்டுபவர்கள் என் மகனுடைய பெயரை வீணாக உச்சரிக்காமல் இருப்பதில்லை . அவர்கள் சத்தியம் செய்கையில் அவருடைய பெயரை வீணாக்குகிறார்கள் . இவை இரண்டுமே என் மகனின் துயரத்தை அதிகப்படுத்துகின்றன.
உங்கள் அறுவடை எதிர்காலத்தில் நாசமாகப் போகிறது என்றால் , அது இப்படிப்பட்டவர்களின் செயல்பாடுகளால் தான் . கடந்த ஆண்டே உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்து எச்சரித்தேன் . ஆனால் நீங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை . மேலும் நீங்கள் சத்தியம் செய்ததையோ என் மகனின் பெயரை வீணாகப் பயன்படுத்துவதையோ மாற்றிக்கொள்ளவில்லை . ஆகவே உங்கள் உருளைக்கிழங்கு விளைச்சல் அழிந்து கொண்டிருக்கிறது . கிறிஸ்துமஸ் வரை இது தொடரும் . அதன் பின் உருளைக்கிழங்கு விளைச்சலே இல்லாமல் போகும்
உங்களிடம் சோளம் இருந்தால் அதை நீங்கள் விதைக்க வேண்டாம் .அப்படி விதைத்தீர்கள் என்றால் பூச்சிகள் அதைத் தின்றுவிட்டு போகும் . மிச்சம் ஏதாவது இருந்தால் அதை நீங்கள் அடித்துத் தூற்றுகிற பொழுது அது வெறுமனே தூசாகத்தான் போகும் . ஒரு மாபெரும் பஞ்சம் வரப்போகிறது . அப்பொழுது ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பசியினால் நலிவுற ஆரம்பிப்பார்கள் . குழந்தைகளை யார் வைத்திருக்கிறார்களோ அவர்களுடைய கரங்களிலேயே இறந்து போய் விடுவார்கள் . மற்றவர்கள் பட்டினியின் மூலம் பரிகாரம் செய்வார்கள்.எல்லா விதைகளும் நாசமாகி விடும் . திராட்சைகள் எல்லாம் அழுகிப் போகும்
அவர்கள் மனம் மாறி விட்டார்கள் எனில் , கற்களும் , மலைப் பாறைகளும் கோதுமைக் குவியல்களாக அற்புதமாக மாறி விடும் . பூமியில் தானாகவே உருளைக் கிழங்குகள் விதைக்கப்பட்டு முளைத்து வரும்
என் குழந்தைகளே ,உங்கள் ஜெபங்களை அனுதினமும் நன்றாகச் சொல்லுகிறீர்களா?
என் குழந்தைகளே , காலையிலும் மாலையிலும் கண்டிப்பாக ஜெபங்களைச் சொல்ல வேண்டும் . உங்களால் செபம் செய்ய முடியாத சூழலில் , ஒரு 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே 'ஜெபத்தையும் ஒரு 'அருள் நிறைந்த மரியே'ஜெபத்தையுமாவது சொல்ல வேண்டும் . ஆனால் நேரம் கிடைக்கும் போது அதிகமாகச் ஜெபங்களைச் சொல்ல வேண்டும்
ஒரு சில வயதான பெண்களைத் தவிர வேறு யாரும் கோவிலுக்குச் செல்வதில்லை . எல்லா கோடை காலங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்கள் வேலைக்குச் செல்கிறார்கள் . குளிர்காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கோயிலுக்கு வந்து கிறிஸ்தவ மதத்தை எள்ளி நகையாடுகிறார்கள் . மிகப் பசியுற்ற நாய்கள் எலும்பு வெட்டுபவனிடம் நிற்பது போல் தவக்காலத்தில் கறிக்கடைகளுக்கு ஓடுகிறார்கள்
"நன்று .. என் குழந்தைகளே நான் சொன்ன இவற்றை எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள் ""
(புனித சலேத் மாதா - தமிழ் தாசன் எழுதிய நூலில் இருந்து )
புகழ் மாலை
சுவாமி கிருபையாயிரும் ( மற்றதும் )
ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அற்சிஷ்ட மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற புனித சலேத் மாதாவே *
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமான சலேத் மாதாவே
கச்திப்படுகிரவர்களுக்கு தேற்றரவான புனித சலேத் மாதாவே
எங்களுக்குச் சுகிர்த புத்திமதிகளை சொல்லத்தக்கதாக மோட்சத்தில் நின்றிறங்கி இரண்டு ஏழைப் பிள்ளைகளுக்குத் தரிசனையான புனித சலேத் மாதாவே
மனுஷர் செய்கிற பாவங்களைப் பற்றித் திரளான கண்ணீர் சொரிந்த புனித சலேத் மாதாவே
நாங்கள் பாவ வழியை விட்டு மனந்திரும்பத்தக்கதாக எங்களுக்கு வரப்போகிற பொல்லாப்புகளை முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
பாவிகளான எங்கள் பேரில் கோபமாயிருக்கிற சர்வேசுரனுடைய கோபாக்கினையை உம்முடைய மன்றாட்டினால் நிறுத்துகிற புனித சலேத் மாதாவே
நம்முடைய ஜனங்களாகிய கிறிஸ்தவர்கள் மனந்திரும்பாது போனால் நமது திவ்விய குமாரனுடைய திருப் புஜமானது அவர்களைத் தண்டிக்க விட வேண்டியதாயிருக்கும் என்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே
எங்களுடைய பாவங்களைப் பற்றி அதிக வருத்தமும் கவலையும் படுகிற புனித சலேத் மாதாவே
எங்களுடைய நன்றியறிந்த தோத்திரத்திற்கும் நம்பிக்கை நேசத்திற்கும் பாத்திரமான புனித சலேத் மாதாவே
சலேத் மலையில் இரண்டு சிறு பிள்ளைகளுக்கு புத்திமதிகளைச் சொன்ன பிற்பாடு இதெல்லாத்தையும் சகல ஜனங்களுக்கும் அறிவியுங்கள் என்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே
மனுஷர் மனதிரும்பாதே போனால் அவர்களுக்கு மிகவும் பயங்கரமான தண்டனைகள் நேரிடும் என்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே
அவர்கள் திரும்பாதே போனால் வெள்ளாண்மைகள் கெட்டு கடின பஞ்சம் வருமென்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
அவர்கள் மனந்திரும்பாதே போனால் உருளைக் கிழங்குகளும் முந்திரிகைக் குலைகளும் கோதுமை முதலான விளைவுகளும் அழிந்து போய்ச் சனங்களுக்கு மிகுந்த வருத்தமுண்டாகுமென்று அறிவித்த புனித சலேத் மாதாவே
அவர்கள் மனந்திரும்பாது போனால் ஏழு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் நடுக்கமேடுத்துச் சாவார்கள் என்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
அவர்கள் மனந்திரும்பினால் சர்வேசுரனுடைய கோபம் மாறி வெள்ளாண்மைகள் சரியாய் விளைந்து பஞ்சம் நீங்கி எங்கும் சவுக்கியமும் செழிப்பும் உண்டாகுமென்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே
சலேத் மலையில் தேவரீர் சொன்ன புத்திமதிகளினால் அநேக பாவிகளை மனந்திரும்பச் செய்த புனித சலேத் மாதாவே
மனுஷருடைய ஆங்காரம் அடங்காததைப் பற்றித் தேவரீர் முன்னறிவித்த பொல்லாப்புகள் எங்களுக்குச் சம்பவித்ததினாலே எங்கும் பேர் போன புனித சலேத் மாதாவே
சலேத் மலையில் தேவரீர் காண்பித்த அற்புதமானது பூலோகத்தின் எத்திசையிலும் பிரபல்லியமானதினாலே பேர் பெற்ற புனித சலேத் மாதாவே
சலேத் மாதாவின் பேராலே கட்டுவித்த நானூற்று சில்வான கோயில்களில் வணங்கப்படுகிற சலேத் மாதாவே
தேவரீருடைய உபகார சகாயங்களினால் நானாவித சனங்களை உம்மிடத்தில் வரச் செய்கிற புனித சலேத் மாதாவே
எத்திசையிலும் மேன்மேலும் அதிகமதிகமாய்த் துதிக்கப்படுகிற புனித சலேத் மாதாவே
தேவரீரை மன்றாடுகிறவர்களில் ஒருவரையும் வியர்த்தமாய்ப் போக விடாத சலேத் மாதாவே
புனித சலேத் மாதாவே
தேவரீர் திருப்பாதம் வைத்த இடத்தில் தண்ணீரூற்று அற்புதமாய்ப் புறப்படச் செய்த புனித சலேத் மாதாவே
இந்தப் புனிதமான ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு கணக்கில்லாத அற்புதங்களைச் செய்விக்கிற புனித சலேத் மாதாவே
குருடருக்குப் பார்வையும் , செவிடருக்குச் செவியும் , சப்பாணிகளுக்கு நடையும் மற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியமும் கட்டளையிடுகிற புனித சலேத் மாதாவே
எவ்வித துன்பக் கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலையும் தேற்றரவையும் கொடுக்கிற சலேத் மாதாவே புனித சலேத் மாதாவே
சூரியனை மங்கச் செய்கிற சோதிப் பிரகாசத்தோடு சலேத் மலையில் காண்பித்த புனித சலேத் மாதாவே
ரோசாப்பூ முடியும் நட்சத்திர கிரீடமும் காந்தியுள்ள மற்ற சோடிப்புகளும் அணிந்த வண்ணம் தரிசனையான சலேத் மாதாவே
இயேசுக்கிறிஸ்து நாதர் பாடுபட்ட திருச்சிலுவையையும் குறடு சுத்தியலும் மார்பில் அணியாக வைக்கப் பெற்று காண்பித்த சலேத் மாதாவே
சர்வேசுரனுடைய நாளான ஞாயிற்றுக் கிழமையை நாங்கள் அனுசரியாதே போனால் எங்களுக்குக் கடின ஆக்கினை நேரிடுமென்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
ஞாயிற்றுக் கிழமையை அனுசரியாத பாவமும் தேவ தூஷணம் சொல்லுகிற பாவமும் இவ்விரண்டு பாவங்களும் விசேஷமாய்த் தேவ கோபத்தை மூட்டுகிறதென்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே
சுத்தபோசனக் கடனும் , கடனொருசந்தியும் சரியாய் அனுசரிக்க வேண்டுமென்று கட்டளையிட்ட புனித சலேத் மாதாவே
இராச்செபமும் காலைச் செபமும் தப்பாமல் கற்பிக்க வேண்டுமென்று கற்பித்த புனித சலேத் மாதாவே
பாவிகளான எங்களுக்குத் தாயும் அடைக்கலமும் நம்பிக்கையும் ஆதரவுமாயிருக்கிற புனித சலேத் மாதாவே
தயாபரியாயிருந்து எங்களைத் தாபரித்துக் கொள்ளும் மாதாவே
தயாபரியாயிருந்து எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே
எங்களுக்கு வரப்போகிற பொல்லாப்புகளை உமது வல்லபமுள்ள மன்றாட்டினால் அகற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் **
பஞ்சம் படை பெருவாரிக் காய்ச்சல் முதலான ஆக்கினைகளில் நின்று எங்களை இரட்சிக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
வேளாண்மைப் பயிர் விளைவுகள் சரியாய் விளைந்து எங்களுக்கு செழிப்பும் சௌக்கியமும் வரச் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்
சத்திய வேதம் எத்திசையிலும் பரப்பவும் திருச்சபை எங்கும் ஸ்தாபிக்கப்படவும் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்
இந்திய தேசத்திலுள்ள புறமஸ்தர் எல்லோரும் அஞஞானத்தை விட்டு விடவும் சத்திய வேதத்தைக் கைக்கொள்ளவும் செய்தருள வேண்டுமென்று
தேவரீரை மன்றாடுகிறோம்
பதிதருடைய தப்பறைகள் அழியவும் , பிரிவினைக்காரருடைய ஆங்காரம் நீங்கவும் , துஷ்டருடைய ஆலோசனைகள் தவிரவும் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
யூதர்களுடைய குருட்டாட்டம் நீங்கி, முகமதியர்களுடைய பிடிவாதம் ஒழிந்து அவர்களையும் இவர்களையும் சத்திய வேதத்திற்கு வரச் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
ஓ! மாதாவே , எங்கள் சந்தோசத்தில் திருப்தியும் , கஸ்திகளில் ஆறுதலும் புண்ணியங்களில் உறுதியும் எந்தக் கிரியைகளிலும் துணையுமாயிருக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்
எங்கள் மரணத் தருவாயில் எங்களைக் கைவிடாமல் நல்ல பாவசன்கீர்த்தனமும் அவஸ்தைப் பூசுதலும் கடைசி நன்மையையும் இஷ்டப்பிரசாதமும் கட்டளையிட வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
இயேசுக்கிறிஸ்து நாதருடைய வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
பாவிகளுக்கு அடைக்கலமாக இருக்கிற புனித சலேத் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
செபிப்போமாக
சர்வ சீவ தயாபர இயேசுவே , பாவிகளாயிருக்கிற அடியோர்களை மீட்டு இரட்சிக்கத்தக்கதாக உம்முடைய பரிசுத்த தாயாரான தேவமாதாவைக் கொண்டு உம்முடைய நீதிக் கோபத்தினால் எங்களுக்கு வரப்போகிற ஆக்கினைகளை சலேத் மலையிலே முன்னறிவிக்கச் சித்தமானீரே, நாங்கள் எல்லாரும் பயபக்தியோடு அஞ்சிப் பாவ வழிகளை விட்டு விட்டு மனந்திரும்பி உம்முடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் சுமுத்திரையாய் அனுசரிக்க அனுக்கிரகம் செய்தருளும் . எங்களுடைய பாவங்களின் நிமித்தமாக எங்களுக்கு நேரிட்ட பொல்லாப்புக்களை நீக்கி வரப்போகிற ஆக்கினைகளை அகற்றி வேண்டிய நன்மைகளைத் தந்து சந்தோஷமான மனதோடு நாங்கள் உமக்கு இவ்வுலகத்தில் ஊழியம் செய்யவும் மறுலோகத்தில் உம்மோடு கூட என்றென்றைக்கும் வாழவும் செய்ய வேண்டுமென்று மன்றாடுகின்றோம் . பிதாவோடேயும் .இஸ்பிரீத் சாந்துவோடேயும் ஒன்றாய் இருந்து சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்து கொண்டு வருகிற ஆண்டவரே ஆமென்
3 பர அரு திரி சொல்லவும்
--------------------------------------------------------------------
* எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
** எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே