- வணக்க மாதம்
- ஜெபமாலை அன்னை- முந்தின நாள்
தொகுப்பு :
நூல் : செபமாலை மாதாவின் வணக்க மாதம் .
ஆசிரியர் : சுவாமி ஜே .ம . ஞானாதிக்கம் . சே. ச
முந்தின தினம்
செபமாலையின் 15 வாக்குறுதிகள்.
1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரே மகன் இயேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர்.
2. செபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.
3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்று மீட்பேன்.
4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர்.இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்கு பெறுவர்.
5. மறை உண்மைகளை சிந்தித்துப் பக்திப் பற்றுடன் செபமாலை செபிப்பவன் அகால மரணத்திற்கு ஆளாக மாட்டான். இறைவன் அவனைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவான்.
6. செபமாலை செபிப்பவர் தூய வாழ்விலும், நற்செயல்களிலும் வளர்வர். செபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன் நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவித்து விண்ணகத்தை நோக்கி அதனை உயர்த்துகிறது.
7.செபமாலை செபிப்போர்க்குச் சிறப்பான பாதுகாப்பையும், மாபெரும் அருள் வரங்களையும் வாக்களிங்கிறேன்.
8. செபமாலை நரகத்திற்க்கு எதிரான கவசம் இது தீமைகளை அழிக்கிறது.
9. செபமாலையின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவன் திருச்சபையின் திருவருட் சாதனங்களை பெறாமல் சாகான்.
10. செபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் என்னிடமிருந்து தங்கள் தேவைகளில் உதவி பெறுவர்.
11. செபமாலை பரப்புகிறவர்களுக்கு அவர்கள் வாழ்நாளிலும், இறக்கும் வேளையிலும் விண்ணக நீதிமன்றம் முழுவதும் அவர்களுக்காக பரிந்து பேச எனது இறைமகனிடமிருந்து அனுமதி பெற்றுள்ளேன்.
12. செபமாலையை விடாமல் தொடர்ந்து செபிப்பவர்கள் சில விசேச வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
13. செபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள்.
14. என் செபமாலையின் உண்மை புதல்வர்களாய் இருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமை அடைவார்கள்.
15. என் செபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது மோட்சம் செல்வதற்க்கு ஒரு பெரிய உறுதிப்பாடாகும்.
இத்தகைய நன்மைகளை அடைய எம்மனிதன் ஆசைப்படாமலிருப்பான் ? செபமாலை செய்ய வேறு காரணங்களும் உள. திருச்சபைக்கும், நாடுகளுக்கும் ஆபத்து சூழ்ந்திருக்கின்றது. இச்சூழ்நிலையில் ஜெபமாலை மாதாவின் பாதம் ஓடிச் செபமாலை மூலம் இப்பிரச்சனைகளுக்கு வழி காண வேண்டும் என்று பதின்மூன்றாம் சிங்கராயர் நிருபம் அனுப்பினார் . இந்நாளிலோ துன்பங்கள் மலிந்து கிடக்கின்றன . சமாதானப்புறாவைக் கிழித்தெறிந்து கபளீகரம் செய்ய பல்வேறு தீய சக்திகள் அலைகின்றன . கீழ் ஐரோப்பிய நாடுகளிலும் , சீன , கொரியா முதலிய இடங்களிலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள் . தங்கள் வலையில் சிக்க வைத்து வாட்டி வதைக்க கம்யூனிசத் தலைவர்கள் சூழ்ச்சி செய்து அலைந்தார்கள்.
செபமாலை மாதாவின் அடைக்கலம் சேர்ந்து இந்த மாதம் முழுவதும் செபமாலை செய்து திருச்சபையையும் நாடுகளையும் நெருங்கியுள்ள தீமைகளை அழிப்போம்
ஒரு தாயின் ஜெபம்
ஓ மரியே ! தாய்மார்களுக்கு மாதிரிகையே ! எனக்கு உதவியாக வாரும் . என் மக்களோடு நான் ஜெபமாலை சொல்லுகிறேன் . அதைச் செய்வதில் அவர்களுக்கோ நோக்கமில்லை . உம்மோடும் கர்த்தரோடும் பேசும் பாக்கியத்தை அவர்களுக்கு ஊட்டிவிட எனக்கு உதவி செய்யும் . நான் இறைவனுடைய கற்பனைக்குக் கீழ்ப்படிவதைக் கண்டால் , என் மக்களும் கீழ்ப்படிதல் உள்ளவர்கள் ஆவார்கள் . உடையிலும் நடையிலும் எனக்குள்ள அடக்கத்தைக் கண்டு என் பெண் மக்களும் அடக்கத்தைக் கற்றுக் கொள்ளுவார்கள் . நான் பிறர் குறைகளைப் பற்றிப் பேசாமல் இருப்பேனேயாகில் என் மக்கள் பிறர் சிநேகத்தில் வளருவார்கள் . சிறு உடல் வாதனைகளிலும் சிறு துன்பங்களிலும் நான் கொஞ்சம் அமைதியாய் இருப்பேனாகில் அவர்கள் தேவ சித்தத்திற்கு அமைந்து நடப்பார்கள் . செபமாலை மாதாவே , நானும் என் குடும்பத்தாரும் இம்மாதம் முழுவதும் கோவிலிலோ , குடும்பத்திலோ பக்தியாய்க் கவனமாய் செபமாலை சொல்ல எங்களுக்கு உதவி செய்யும் ஆமென்
சரிதை
தேவதாய் ஒரு நாள் முத்.ஆலன் ரோச்சுக்கு காட்சி கொடுத்துச் சொன்னதாவது :
"செபமாலையினால் கல் நெஞ்சரான பாவிகள் ஆண்களும் , பெண்களும் தங்கள் பாவங்களுக்காக அழுது கண்ணீர் சிந்தி மனம் மாறிப் புண்ணிய பாதையில் நடந்தார்கள் . குழந்தைகள் அதிசய தபங்களைச் செய்தார்கள் . என் மேலும் , என் மகன் மேலும் பக்தி வளர்ந்து சம்மனசுகள் என்று சொல்லும்படி நடந்தனர் . விசுவாசம் வளர்ந்தது . பல கிறிஸ்தவர்கள் வேதத்திற்காக உயிரை இழக்க ஆசித்தனர் .
செபமாலையின் வல்லமையினால் அக்கிரம போதனைகள் அழிந்தன . விசுவாசிகள் தாராளமாய் தர்மம் தந்தனர் . மருத்துவமனைகளும் ஆலயங்களும் எழுப்பப்பட்டன பரிசுத்தத்தனம் தழைத்து ஓங்கியது . குருக்கள் யாவருக்கும் மாதிரிகையாயினர் . அரசர்கள் நீதி தவறவில்லை . மக்கள் சமாதானமாய் வாழ்ந்தனர் . தொழிலாளர்கள் செபமாலை சொல்லாமல் வேலை தொடங்கவில்லை . முழந்தாளில் நின்று என்னைப் போற்றாமல் உறங்கப் போகவில்லை
எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்தன . கொள்ளை நோய்களையும் கொடிய யுத்தங்களையும் நிறுத்தினேன் . எனது செபமாலையினால் சோதனையை விட்டோட மக்களுக்குத் துணிவு பிறந்தது
கடந்த யுத்தத்தில் நாஸிகள் உரோமை நகருக்குள் நுழைந்து விட்டனர் . திரு இரத்தச் சபையைச் சேர்ந்த கனடா தேசத்துக் கன்னியர் சிலருக்குப் பயம் அதிகம் . இல்லாமல் இருக்குமா? நாள் முழுதும் 24 மணிநேரமும் இருவர் மாற்றி இருவர் ஜெபமாலை சொல்லத் தீர்மானித்தனர் . அது போல ஈராண்டளவாகத் தேவ நற்கருணைக்கு முன் இரு சகோதரிகள் செபமாளையைச் சொல்லத் துவங்கினர் .தாயின் சகாயம் வந்தது . நாஸிகள் மடத்தில் நுழைந்தனர் . தொல்லையில்லை . பரிசுத்த பொருட்களுக்குச் சேதமில்லை . ஐக்கிய சேனை ரோமையில் பிரவேசித்த போது ஆங்கிலேயரும் , கனடா போர் வீரர்களும் அக்கன்னிகைகளுக்கு உணவும் விறகும் கொண்டு வந்தனர் "