- புனிதர்கள்
- தொகுப்பு
- நவம்பர்
நவம்பர் மாதப் புனிதர்கள்
நவம்பர் 1
வாழ்த்தப்பட்ட ரூபர்ட் மாயர்(யேசு சபை குரு)
BLESSED RUPERT MAYER SJ
நினைவுத் திருநாள் : நவம்பர் 1
பிறப்பு : 23, ஜனவரி 1876, ஸ்டுட்கார்டு Stuttgart, ஜெர்மனி
இறப்பு : 1 நவம்பர் 1945, மியூனிக் München, ஜெர்மனி
முத்திபேறுபட்டம்: 3 மே 1987, (திருத்தந்தை 2 ஆம் ஜான்பவுல்)
இவர் தனது இளம் வயது கல்வியை ஸ்டுட்கார்டில் கற்றார். பின்னர் தனது தத்துவயியல் ஃப்ரைபூர்கிலும்(Freiburg), இறையியலை மியூனிக்கிலும், 5 ஆம் செமஸ்டர் இறையியலை தூபிங்கனிலும்(Tübingen) கற்றார். தன் குருத்துவப்பயிற்சியை ரோட்டன்பூர்க்கில்(Rottenburg) மேற்கொண்டார். மே மாதம் 2 ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் தனது மறைப்பணியைத் தொடங்கினார். தனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வதில் இவர் வல்லவராய் திகழ்ந்தார்.
இவர் 1906 ஆம் ஆண்டில் தனது மறைபரப்புப் பணியை சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஜெர்மனி முழுவதிலும் ஆற்றினார். பிறகு 1912 ஆம் ஆண்டு பெட்டிங்கர் நகர் கர்தினால் (Kardinal von Bettinger) இவரை மியூனிக் திரும்பி வரும்படி அழைத்தார். 1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் மூண்டது. அப்போது ரூபர்ட் மாயர், அனைவருக்கும் ஆறுதலாகவும், நம்பிக்கை அளிப்பவராகவும் திகழ்ந்தார். இவர் பல முறை போரில் ஈடுபட்ட படைவீரர்களை காப்பாற்றினார். இதனால் இவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். இருப்பினும் தனது மறையுரையால் மக்களை காத்தார். இவர் தன்னுயிரை ஈந்து மற்றவர்களுக்கு பலமுறை வாழ்வளித்தார். 1921ஆம் ஆண்டு முதல் உலகப்போர் முடிவுற்றபோது, ஏறக்குறைய ஒரு மாதத்தில் 70 முறை மறையுரை ஆற்றி, மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டி நம்பிக்கை வழங்கினார். இவர் மக்களுக்கெதிராகநடத்தப்பட்ட பல அநீதிகளை எதிர்த்தார். இதனால் 1937 ஆம் ஆண்டு சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்.
இவருக்கு மறையுரை ஆற்ற தடைவிதிக்கப்பட்டது. ஏறக்குறைய ஆறு மாதங்கள் தண்டனையை அனுபவித்தார். அதன்பிறகு மீண்டும் மறைபணியை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். மறைப்பணியை ஆற்றத் தொடங்கிய சில நாட்களில் மீண்டும் சாக்ஸஹவுசன் (Sachsenhausen) என்ற இடத்திலிருந்து வதை முகாமிற்கு(Concentration Camp) பிடித்துச் செல்லப்பட்டார்.அங்கு அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோயால் தாக்கப்பட்டார். அதன்பிறகு 5 ஆண்டு காலம் பவேரியாவில் இருந்த எட்டல் துறவறமடத்தில் வாழ்ந்தார். அங்கு 5 மாதங்கள் மட்டுமே அவரால் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றமுடிந்தது. மியூனிக்கில் உள்ள ஆலயத்தில் திருப்பீடத்தின் முன் சிலுவையை நோக்கி செபிக்கும்போது இறைவனடி சேர்ந்தார். இன்று மியூனிக்கில் இவரின் கல்லறை மேல் ஆலயம் கட்டப்பெற்று புகழ்வாய்ந்த ஆலயமாக திகழ்கின்றது.
செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! முதல் உலகப்போரில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் இவ்வுலகில் செய்த சிறுசிறு பாவங்களையும் மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
வாழ்த்தப்பட்ட ரூபர்ட் மாயர்(யேசு சபை குரு)
BLESSED RUPERT MAYER SJ
நினைவுத் திருநாள் : நவம்பர் 1
பிறப்பு : 23, ஜனவரி 1876, ஸ்டுட்கார்டு Stuttgart, ஜெர்மனி
இறப்பு : 1 நவம்பர் 1945, மியூனிக் München, ஜெர்மனி
முத்திபேறுபட்டம்: 3 மே 1987, (திருத்தந்தை 2 ஆம் ஜான்பவுல்)
இவர் தனது இளம் வயது கல்வியை ஸ்டுட்கார்டில் கற்றார். பின்னர் தனது தத்துவயியல் ஃப்ரைபூர்கிலும்(Freiburg), இறையியலை மியூனிக்கிலும், 5 ஆம் செமஸ்டர் இறையியலை தூபிங்கனிலும்(Tübingen) கற்றார். தன் குருத்துவப்பயிற்சியை ரோட்டன்பூர்க்கில்(Rottenburg) மேற்கொண்டார். மே மாதம் 2 ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் தனது மறைப்பணியைத் தொடங்கினார். தனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வதில் இவர் வல்லவராய் திகழ்ந்தார்.
இவர் 1906 ஆம் ஆண்டில் தனது மறைபரப்புப் பணியை சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஜெர்மனி முழுவதிலும் ஆற்றினார். பிறகு 1912 ஆம் ஆண்டு பெட்டிங்கர் நகர் கர்தினால் (Kardinal von Bettinger) இவரை மியூனிக் திரும்பி வரும்படி அழைத்தார். 1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் மூண்டது. அப்போது ரூபர்ட் மாயர், அனைவருக்கும் ஆறுதலாகவும், நம்பிக்கை அளிப்பவராகவும் திகழ்ந்தார். இவர் பல முறை போரில் ஈடுபட்ட படைவீரர்களை காப்பாற்றினார். இதனால் இவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். இருப்பினும் தனது மறையுரையால் மக்களை காத்தார். இவர் தன்னுயிரை ஈந்து மற்றவர்களுக்கு பலமுறை வாழ்வளித்தார். 1921ஆம் ஆண்டு முதல் உலகப்போர் முடிவுற்றபோது, ஏறக்குறைய ஒரு மாதத்தில் 70 முறை மறையுரை ஆற்றி, மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டி நம்பிக்கை வழங்கினார். இவர் மக்களுக்கெதிராகநடத்தப்பட்ட பல அநீதிகளை எதிர்த்தார். இதனால் 1937 ஆம் ஆண்டு சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்.
இவருக்கு மறையுரை ஆற்ற தடைவிதிக்கப்பட்டது. ஏறக்குறைய ஆறு மாதங்கள் தண்டனையை அனுபவித்தார். அதன்பிறகு மீண்டும் மறைபணியை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். மறைப்பணியை ஆற்றத் தொடங்கிய சில நாட்களில் மீண்டும் சாக்ஸஹவுசன் (Sachsenhausen) என்ற இடத்திலிருந்து வதை முகாமிற்கு(Concentration Camp) பிடித்துச் செல்லப்பட்டார்.அங்கு அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோயால் தாக்கப்பட்டார். அதன்பிறகு 5 ஆண்டு காலம் பவேரியாவில் இருந்த எட்டல் துறவறமடத்தில் வாழ்ந்தார். அங்கு 5 மாதங்கள் மட்டுமே அவரால் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றமுடிந்தது. மியூனிக்கில் உள்ள ஆலயத்தில் திருப்பீடத்தின் முன் சிலுவையை நோக்கி செபிக்கும்போது இறைவனடி சேர்ந்தார். இன்று மியூனிக்கில் இவரின் கல்லறை மேல் ஆலயம் கட்டப்பெற்று புகழ்வாய்ந்த ஆலயமாக திகழ்கின்றது.
செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! முதல் உலகப்போரில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் இவ்வுலகில் செய்த சிறுசிறு பாவங்களையும் மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
நவம்பர் 2
புனித லோட்ரிங்கன் நகர் துறவி மர்கரீத்தா
St. Margareta von Lothringen
நினைவுத் திருநாள்: நவம்பர் 2
பிறப்பு : 1463, லோட்ரிங்கன், பிரான்சு
இறப்பு : 2 நவம்பர் 1521, அர்கெண்டான் Argentan, பிரான்சு
இவர் லோட்ரிங்கன் அரசன் பிரட்ரிக் என்பவரின் மகள். இவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே தூரிங்கன் நாட்டு(Thüringen) புனித எலிசபெத்தைப்போல வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டார். எலிசபெத் மர்கரீத்தாவின் தூரத்து உறவினர் ஆவர். மர்கரீத்தா ஏழைகளின் வாழ்வில் அக்கறைக் கொண்டு வாழ்ந்தார். துறவியாக வேண்டுமென்றும் அதன் வழியாக பல ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்றும் விரும்பினார். ஆனால் அவரின் தந்தை, அவரின் 25 ஆம் வயதில் ரெனே டி அலேங்கோன் (Rene d’ Alencon) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். 4 ஆண்டுகள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் தன் கணவர் இறந்துவிடவே, தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கிறிஸ்துவ விசுவாசத்தில் வளர்த்தார். பின்னர் தன் கணவரின் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். பல கிறிஸ்துவ ஆலயங்கள் கட்டவும், கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் உதவிகளை செய்தார். பின்னர் தன்னுடைய 3 பிள்ளைகளும் வளர்ந்து இவரைவிட்டுப் பிரிந்து செல்லவே, கார்மேல் கிளரீசியன் மடத்திற்கு சென்றார். அங்கு மற்ற துறவிகளுடன் சேர்ந்து, அர்கெண்டானில் துறவற இல்லம் ஒன்றைக் கட்டினார். அங்குதான் இவர் துறவற பயிற்சிகளைப் பெற்று, வார்த்தைப்பாடுகளைப் பெற்றார். ஆன்மீக வாழ்வில் சிறந்து வாழ்ந்த இவர் துறவியான சில ஆண்டுகளிலேயே இறந்தார். இன்று இவரின் கல்லறைமேல் பங்கு ஆலயம் ஒன்று கட்டுப்பட்டுள்ளது.
செபம்:
எளியோரின் நண்பனே எம் தலைவா! ஏழைகள்பால் அக்கறைக்கொண்டு வாழ புனித மர்கரீத்துக்கு உதவி செய்தீர். தன்னிடம் உள்ளதையெல்லாம் மற்றவர்க்கு கொடுத்து வாழ, நல் மனதை அருளினீர். அவரின் பரிந்துரையால், எங்களின் அயலாரை நேசித்து, பகிர்ந்து வாழ நல்மனம் தர தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
புனித லோட்ரிங்கன் நகர் துறவி மர்கரீத்தா
St. Margareta von Lothringen
நினைவுத் திருநாள்: நவம்பர் 2
பிறப்பு : 1463, லோட்ரிங்கன், பிரான்சு
இறப்பு : 2 நவம்பர் 1521, அர்கெண்டான் Argentan, பிரான்சு
இவர் லோட்ரிங்கன் அரசன் பிரட்ரிக் என்பவரின் மகள். இவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே தூரிங்கன் நாட்டு(Thüringen) புனித எலிசபெத்தைப்போல வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டார். எலிசபெத் மர்கரீத்தாவின் தூரத்து உறவினர் ஆவர். மர்கரீத்தா ஏழைகளின் வாழ்வில் அக்கறைக் கொண்டு வாழ்ந்தார். துறவியாக வேண்டுமென்றும் அதன் வழியாக பல ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்றும் விரும்பினார். ஆனால் அவரின் தந்தை, அவரின் 25 ஆம் வயதில் ரெனே டி அலேங்கோன் (Rene d’ Alencon) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். 4 ஆண்டுகள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் தன் கணவர் இறந்துவிடவே, தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கிறிஸ்துவ விசுவாசத்தில் வளர்த்தார். பின்னர் தன் கணவரின் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். பல கிறிஸ்துவ ஆலயங்கள் கட்டவும், கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் உதவிகளை செய்தார். பின்னர் தன்னுடைய 3 பிள்ளைகளும் வளர்ந்து இவரைவிட்டுப் பிரிந்து செல்லவே, கார்மேல் கிளரீசியன் மடத்திற்கு சென்றார். அங்கு மற்ற துறவிகளுடன் சேர்ந்து, அர்கெண்டானில் துறவற இல்லம் ஒன்றைக் கட்டினார். அங்குதான் இவர் துறவற பயிற்சிகளைப் பெற்று, வார்த்தைப்பாடுகளைப் பெற்றார். ஆன்மீக வாழ்வில் சிறந்து வாழ்ந்த இவர் துறவியான சில ஆண்டுகளிலேயே இறந்தார். இன்று இவரின் கல்லறைமேல் பங்கு ஆலயம் ஒன்று கட்டுப்பட்டுள்ளது.
செபம்:
எளியோரின் நண்பனே எம் தலைவா! ஏழைகள்பால் அக்கறைக்கொண்டு வாழ புனித மர்கரீத்துக்கு உதவி செய்தீர். தன்னிடம் உள்ளதையெல்லாம் மற்றவர்க்கு கொடுத்து வாழ, நல் மனதை அருளினீர். அவரின் பரிந்துரையால், எங்களின் அயலாரை நேசித்து, பகிர்ந்து வாழ நல்மனம் தர தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
நவம்பர் 3
புனித அர்மாக் நகர் மலாக்கியஸ் (பேராயர்)
St. Malachy’s von Armagh
நினைவுத் திருநாள் : நவம்பர் 3
பிறப்பு : 1095, அர்மாக் Armagh, அயர்லாந்து
இறப்பு : 1 அல்லது 2 நவம்பர் 1148, கிளேர்வாக்ஸ் Clairvaux, பிரான்சு
புனிதர்பட்டம்: 6 ஜூலை 1190, திருத்தந்தை 3 ஆம் கிளமெண்ட்
இவர் பேராசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை துறவற மடத்திற்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரிந்ததால், மலாக்கியுசும் அங்கே படித்தார். பின்னர் தனது கல்வியை முடித்தபின் 1119 ஆம் ஆண்டு, குருத்துவப்பட்டம் பெற்றார். பிறகு 1123 ஆம் ஆண்டு கொனோர் (Conor) நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு மீண்டும் 1129 ஆம் ஆண்டு அர்மாக் நகருக்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பேராயர் பதவியில் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இதனால் பல இன்னல்களை சந்தித்தார். தனது பணியை சரியாக செய்ய இயலாததால் 1136 ஆம் ஆண்டு மீண்டும் டவுன் (Down) என்ற நகருக்கு ஆயராக அனுப்பப்பட்டார். பல ஆண்டுகள் தன் ஆயர் பதவியில் சிறப்பாக பணியாற்றியப்பின் சிஸ்டர்சீயன் துறவற சபையை சார்ந்த பெர்னார்டு என்பவருடன் இணைந்து சில துறவற மடங்களைக் கட்டினார்.
பின்னர் மலாக்கியஸ் துறவற கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் உரோம் நகர் சென்று திருத்தந்தையை சந்திக்க எண்ணினார். அப்போதுதான் கடினமான நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.
செபம்:
நல்ல ஆயனாம் எம் இறைவா! ஆயர் மலாக்கியஸ் அடைந்த துயரைப்போலவே, இன்றும் பல ஆயர்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். எம் திருச்சபையில் உமக்காகத் துன்பப்படும் ஒவ்வொரு ஆயர்களுக்கும் எதையும் தாங்கும் இதயத்தைத் தாரும். நீரே அவர்களின் துன்பநேரங்களில் உடனிருந்து வழிநடத்தி, திடப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
புனித அர்மாக் நகர் மலாக்கியஸ் (பேராயர்)
St. Malachy’s von Armagh
நினைவுத் திருநாள் : நவம்பர் 3
பிறப்பு : 1095, அர்மாக் Armagh, அயர்லாந்து
இறப்பு : 1 அல்லது 2 நவம்பர் 1148, கிளேர்வாக்ஸ் Clairvaux, பிரான்சு
புனிதர்பட்டம்: 6 ஜூலை 1190, திருத்தந்தை 3 ஆம் கிளமெண்ட்
இவர் பேராசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை துறவற மடத்திற்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரிந்ததால், மலாக்கியுசும் அங்கே படித்தார். பின்னர் தனது கல்வியை முடித்தபின் 1119 ஆம் ஆண்டு, குருத்துவப்பட்டம் பெற்றார். பிறகு 1123 ஆம் ஆண்டு கொனோர் (Conor) நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு மீண்டும் 1129 ஆம் ஆண்டு அர்மாக் நகருக்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பேராயர் பதவியில் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இதனால் பல இன்னல்களை சந்தித்தார். தனது பணியை சரியாக செய்ய இயலாததால் 1136 ஆம் ஆண்டு மீண்டும் டவுன் (Down) என்ற நகருக்கு ஆயராக அனுப்பப்பட்டார். பல ஆண்டுகள் தன் ஆயர் பதவியில் சிறப்பாக பணியாற்றியப்பின் சிஸ்டர்சீயன் துறவற சபையை சார்ந்த பெர்னார்டு என்பவருடன் இணைந்து சில துறவற மடங்களைக் கட்டினார்.
பின்னர் மலாக்கியஸ் துறவற கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் உரோம் நகர் சென்று திருத்தந்தையை சந்திக்க எண்ணினார். அப்போதுதான் கடினமான நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.
செபம்:
நல்ல ஆயனாம் எம் இறைவா! ஆயர் மலாக்கியஸ் அடைந்த துயரைப்போலவே, இன்றும் பல ஆயர்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். எம் திருச்சபையில் உமக்காகத் துன்பப்படும் ஒவ்வொரு ஆயர்களுக்கும் எதையும் தாங்கும் இதயத்தைத் தாரும். நீரே அவர்களின் துன்பநேரங்களில் உடனிருந்து வழிநடத்தி, திடப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
நவம்பர் 4
கர்தினால் கார்ல் பொரோமேயோ
பிறப்பு
2 அக்டோபர் 1538,
அரோனா Arona, இத்தாலி
இறப்பு
3 நவம்பர் 1584
மிலான் Milan, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1602, திருத்தந்தை 5 ஆம் பவுல்
புனிதர்பட்டம்: 1610, திருத்தந்தை 5 ஆம் பவுல்
பாதுகாவல்: லூகானே மறைமாவட்டம், சால்ஸ்பூர்க் கல்லூரிகள், கொள்ளை நோயிலிருந்து
கில்பர்ட் பொரோமேயோ (Gilbert Borromeo) என்பவர் இவரின் தந்தை. இவர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது 12 வயது வரை அடிக்கடி தன் ஊரிலிருந்த துறவற இல்லத்திற்கு சென்று வந்தார். இவர் தனது 14 ஆம் வயதில் 1552 ல் கல்லூரிப் படிப்பிற்காக பாவியா(Pavia) என்ற நகருக்கு சென்றார். கல்லூரியில் படிக்கும்போது மிக மகிழ்ச்சியானவராக திகழ்ந்து, தன்னுடன் படித்த மற்ற ஏழை மாணவர்களுக்கும் உதவினார். இவர் படிக்கும்போதே, அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவ்வப்போது தன் கல்வியை கற்க முடியாமல் போனது.
இவர் 1559 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெறவிருக்கும்போது, இவரின் மாமா கர்தினால் ஜியோவானி ஆன்ஜலோ மெடீசி (Kardinal Giovanni Angelo Medici) 4ஆம் பயஸ் என்ற பெயர் கொண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கார்ல் தன் குழந்தைப் பருவத்திலிருந்தே அவரிடம்தான் வளர்ந்தார். கார்ல் தனது டாக்டர் பட்டத்தைப் பெற்றபின், உரோம் சென்று சிலகாலம் அங்கே திறமையுடன் பணியாற்றினார்.
1562 ஆம் ஆண்டு இவரின் 24 ஆம் வயதில் அவரின் அன்பு சகோதரர் ஃபெடரிகோ (Federigo) இறந்துவிடவே, தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவுசெய்து, 1563 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். குருவாகிய சில மாதங்களிலேயே மிலான் கர்தினால் கார்லை பேராயராக அறிவித்தார். பின்னர் தன் பணியை ஆற்றுவதற்கு கார்ல் பல இன்னல்களை அடைய வேண்டியதாக இருந்தது. இவர் பல நோன்புகளை மேற்கொண்டு, இரவும் பகலும் இடைவிடாமல் செபித்து, தன் கடமைகளை சிறப்பாக ஆற்றினார். இவர் தன் மறைமாவட்டத்தில் விசுவாசத்தைப் பரப்ப பெரிதும் உழைத்தார். குருத்துவம் வளர, மறைமாவட்டம் முழுவதும் சென்று, இறையழைத்தலை ஊக்குவித்தார். கைவிடப்பட்ட பெண்களை ஒன்று திரட்டி, அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டினார். பல கருத்தரங்குகளை வைத்து மக்களை இறைவன்பால் ஈர்த்தார். பேராயர் கார்ல் பொரோமேயோ 27 வயது கொண்ட இளைஞராய் இருந்ததால், பல பணிகளை திறம்பட ஆற்றி மக்களின் மனதில் இடம்பிடித்தார். ஏழைமக்கள் அனைவரும் கார்லை இதயத்தில் ஏற்றனர். 1576 ஆம் ஆண்டிலிருந்து, இவர் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களையும் கவனித்து, அவர்களுக்கு பணிவிடை புரிந்தார். கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள் அனைத்தையும் கொடுத்து, அவர்களை அன்போடு பராமரித்தார். பல பணிகளையும் ஒரே நேரத்தில் செய்த இவர் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் தண்ணீரும், ஒரு துண்டு ரொட்டி மட்டுமே உணவாக உட்கொண்டு, தனக்கு தேவையான சக்தியை கடவுளிடமிருந்து பெற்றார்.
பல பணிகளை செய்ய ஆண்டவரிடமிருந்து பலம் பெற்ற இவர், திடீரென்று காய்ச்சலால் தாக்கப்பட்டார். உடல் மிகவும் நலிவுற்றது. தன் பலம் அனைத்தையும் இழந்தவராய் காணப்பட்டார். இருப்பினும் இவரின் உதடுகள் மட்டும், கடவுளைப் புகழ்ந்த வண்ணமாகவே இருந்தது. இறுதியாக "கடவுளே இதே நான் வருகிறேன்" என்ற வார்த்தையைக் கூறி தனது 46 ஆம் வயதில் உயிர்நீத்தார்.
செபம்:
பலமளிப்பவரே எம் கடவுளே! மிக திறமையான கர்தினால் கார்ல் பொரோமேயோவை எம் திருச்சபைக்கு நீர் கொடையாகத் தந்ததை நினைத்து உம்மை போற்றி புகழ்கின்றோம். மிக சிறிய வயதில் உமது ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல பணிகளை ஆர்வமுடன் ஆற்ற அவருக்கு நீர் சக்தியை தந்தீர். அவரின் பரிந்துரையால் நாங்களும் உம்மிடமிருந்து பலம் பெற்று, எங்களுக்கென்று குறிக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட ஆற்றி, அவற்றின் வழியாக உம்மை புகழ்ந்திட வரம் தாரும்.
Back to top
கர்தினால் கார்ல் பொரோமேயோ
பிறப்பு
2 அக்டோபர் 1538,
அரோனா Arona, இத்தாலி
இறப்பு
3 நவம்பர் 1584
மிலான் Milan, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1602, திருத்தந்தை 5 ஆம் பவுல்
புனிதர்பட்டம்: 1610, திருத்தந்தை 5 ஆம் பவுல்
பாதுகாவல்: லூகானே மறைமாவட்டம், சால்ஸ்பூர்க் கல்லூரிகள், கொள்ளை நோயிலிருந்து
கில்பர்ட் பொரோமேயோ (Gilbert Borromeo) என்பவர் இவரின் தந்தை. இவர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது 12 வயது வரை அடிக்கடி தன் ஊரிலிருந்த துறவற இல்லத்திற்கு சென்று வந்தார். இவர் தனது 14 ஆம் வயதில் 1552 ல் கல்லூரிப் படிப்பிற்காக பாவியா(Pavia) என்ற நகருக்கு சென்றார். கல்லூரியில் படிக்கும்போது மிக மகிழ்ச்சியானவராக திகழ்ந்து, தன்னுடன் படித்த மற்ற ஏழை மாணவர்களுக்கும் உதவினார். இவர் படிக்கும்போதே, அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவ்வப்போது தன் கல்வியை கற்க முடியாமல் போனது.
இவர் 1559 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெறவிருக்கும்போது, இவரின் மாமா கர்தினால் ஜியோவானி ஆன்ஜலோ மெடீசி (Kardinal Giovanni Angelo Medici) 4ஆம் பயஸ் என்ற பெயர் கொண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கார்ல் தன் குழந்தைப் பருவத்திலிருந்தே அவரிடம்தான் வளர்ந்தார். கார்ல் தனது டாக்டர் பட்டத்தைப் பெற்றபின், உரோம் சென்று சிலகாலம் அங்கே திறமையுடன் பணியாற்றினார்.
1562 ஆம் ஆண்டு இவரின் 24 ஆம் வயதில் அவரின் அன்பு சகோதரர் ஃபெடரிகோ (Federigo) இறந்துவிடவே, தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவுசெய்து, 1563 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். குருவாகிய சில மாதங்களிலேயே மிலான் கர்தினால் கார்லை பேராயராக அறிவித்தார். பின்னர் தன் பணியை ஆற்றுவதற்கு கார்ல் பல இன்னல்களை அடைய வேண்டியதாக இருந்தது. இவர் பல நோன்புகளை மேற்கொண்டு, இரவும் பகலும் இடைவிடாமல் செபித்து, தன் கடமைகளை சிறப்பாக ஆற்றினார். இவர் தன் மறைமாவட்டத்தில் விசுவாசத்தைப் பரப்ப பெரிதும் உழைத்தார். குருத்துவம் வளர, மறைமாவட்டம் முழுவதும் சென்று, இறையழைத்தலை ஊக்குவித்தார். கைவிடப்பட்ட பெண்களை ஒன்று திரட்டி, அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டினார். பல கருத்தரங்குகளை வைத்து மக்களை இறைவன்பால் ஈர்த்தார். பேராயர் கார்ல் பொரோமேயோ 27 வயது கொண்ட இளைஞராய் இருந்ததால், பல பணிகளை திறம்பட ஆற்றி மக்களின் மனதில் இடம்பிடித்தார். ஏழைமக்கள் அனைவரும் கார்லை இதயத்தில் ஏற்றனர். 1576 ஆம் ஆண்டிலிருந்து, இவர் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களையும் கவனித்து, அவர்களுக்கு பணிவிடை புரிந்தார். கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள் அனைத்தையும் கொடுத்து, அவர்களை அன்போடு பராமரித்தார். பல பணிகளையும் ஒரே நேரத்தில் செய்த இவர் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் தண்ணீரும், ஒரு துண்டு ரொட்டி மட்டுமே உணவாக உட்கொண்டு, தனக்கு தேவையான சக்தியை கடவுளிடமிருந்து பெற்றார்.
பல பணிகளை செய்ய ஆண்டவரிடமிருந்து பலம் பெற்ற இவர், திடீரென்று காய்ச்சலால் தாக்கப்பட்டார். உடல் மிகவும் நலிவுற்றது. தன் பலம் அனைத்தையும் இழந்தவராய் காணப்பட்டார். இருப்பினும் இவரின் உதடுகள் மட்டும், கடவுளைப் புகழ்ந்த வண்ணமாகவே இருந்தது. இறுதியாக "கடவுளே இதே நான் வருகிறேன்" என்ற வார்த்தையைக் கூறி தனது 46 ஆம் வயதில் உயிர்நீத்தார்.
செபம்:
பலமளிப்பவரே எம் கடவுளே! மிக திறமையான கர்தினால் கார்ல் பொரோமேயோவை எம் திருச்சபைக்கு நீர் கொடையாகத் தந்ததை நினைத்து உம்மை போற்றி புகழ்கின்றோம். மிக சிறிய வயதில் உமது ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல பணிகளை ஆர்வமுடன் ஆற்ற அவருக்கு நீர் சக்தியை தந்தீர். அவரின் பரிந்துரையால் நாங்களும் உம்மிடமிருந்து பலம் பெற்று, எங்களுக்கென்று குறிக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட ஆற்றி, அவற்றின் வழியாக உம்மை புகழ்ந்திட வரம் தாரும்.
Back to top
நவம்பர் 5
குரு பெர்னார்டு லிஸ்டன்பெர்க் Bernhard Lichtenberg
பிறப்பு
3 டிசம்பர் 1875,
ஓலாவ் Ohlau, போலந்த்
இறப்பு
5 நவம்பர் 1943,
ஹோஃப் Hof, ஜெர்மனி
முத்திபேறுபட்டம்: 1964
இவர் மிக தைரியத்துடன் யூதர்களிடையே கிறிஸ்துவ விசுவாசத்தைப் பற்றி போதித்தார். 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1928 ஆம் ஆண்டு பெர்லினில் யூதர் கூட்டம் ஒன்றில் கிறிஸ்துவ மறையைப் பற்றி பேசினார். இவர் மற்ற குருக்களுக்கு முன்மாதிரிகையாக திகழ்ந்தார். இவர் ஓர் சிறந்த ஆன்ம குரு என்ற பெயர் பெற்றார். இவர் 1941-1942 ஆம் ஆண்டுவரை கிறிஸ்துவ மறையைப் பற்றி பொது இடத்தில் பேசினார் என்பதற்காக சிறைபிடித்து செல்லப்பட்டார். அப்போது இவர் மீது சாட்டப்பட்ட அனைத்து பழிகளையும் மிகப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார். சாகும் வரை இவர் சிறையில் பல விதங்களில் கொடுமைப்படுத்தப்பட்டார். கசப்பான மற்றும் புளிப்பற்ற காடியை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார். கெட்டுப்போன அழுகிய உணவுப்பொருட்களை உண்ண வற்புறுத்தப்பட்டார். இதனால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார்.
அப்போது இவர் ஏறக்குறைய 70 ஆம் வயதை அடைந்தார். முதியவரான இவரை அச்சிறையிலிருந்து, டாஹவ்(Dachau) வதை முகாமிற்கு மாற்றினர். அங்கு அவர் மிக மோசமாக நோய்வாய்ப்படவே, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்ற சில நாட்களில் மருத்துவப் பலனின்றி உயிர் இழந்தார்.
செபம்:
அன்பின் இறைவா! உமது இறை விசுவாசத்தைப்பரப்பி, இறுதிவரை உம்மில் வாழ்ந்து இறந்த பெர்னார்டைப்போல, ஒவ்வொரு குருக்களும் தங்களின் குருத்துவ மேன்மையை உணர்ந்து, உண்மையுள்ள ஊழியர்களாக வாழ்ந்து, சாட்சியம் புரிந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
குரு பெர்னார்டு லிஸ்டன்பெர்க் Bernhard Lichtenberg
பிறப்பு
3 டிசம்பர் 1875,
ஓலாவ் Ohlau, போலந்த்
இறப்பு
5 நவம்பர் 1943,
ஹோஃப் Hof, ஜெர்மனி
முத்திபேறுபட்டம்: 1964
இவர் மிக தைரியத்துடன் யூதர்களிடையே கிறிஸ்துவ விசுவாசத்தைப் பற்றி போதித்தார். 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1928 ஆம் ஆண்டு பெர்லினில் யூதர் கூட்டம் ஒன்றில் கிறிஸ்துவ மறையைப் பற்றி பேசினார். இவர் மற்ற குருக்களுக்கு முன்மாதிரிகையாக திகழ்ந்தார். இவர் ஓர் சிறந்த ஆன்ம குரு என்ற பெயர் பெற்றார். இவர் 1941-1942 ஆம் ஆண்டுவரை கிறிஸ்துவ மறையைப் பற்றி பொது இடத்தில் பேசினார் என்பதற்காக சிறைபிடித்து செல்லப்பட்டார். அப்போது இவர் மீது சாட்டப்பட்ட அனைத்து பழிகளையும் மிகப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார். சாகும் வரை இவர் சிறையில் பல விதங்களில் கொடுமைப்படுத்தப்பட்டார். கசப்பான மற்றும் புளிப்பற்ற காடியை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார். கெட்டுப்போன அழுகிய உணவுப்பொருட்களை உண்ண வற்புறுத்தப்பட்டார். இதனால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார்.
அப்போது இவர் ஏறக்குறைய 70 ஆம் வயதை அடைந்தார். முதியவரான இவரை அச்சிறையிலிருந்து, டாஹவ்(Dachau) வதை முகாமிற்கு மாற்றினர். அங்கு அவர் மிக மோசமாக நோய்வாய்ப்படவே, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்ற சில நாட்களில் மருத்துவப் பலனின்றி உயிர் இழந்தார்.
செபம்:
அன்பின் இறைவா! உமது இறை விசுவாசத்தைப்பரப்பி, இறுதிவரை உம்மில் வாழ்ந்து இறந்த பெர்னார்டைப்போல, ஒவ்வொரு குருக்களும் தங்களின் குருத்துவ மேன்மையை உணர்ந்து, உண்மையுள்ள ஊழியர்களாக வாழ்ந்து, சாட்சியம் புரிந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
நவம்பர் 6
லிமோகெஸ் நகர் துறவி லியோனார்ட் Leonhard von Limoges
பிறப்பு
5 ஆம் நூற்றாண்டு,
பிரான்சு
இறப்பு
559 (?)
லிமோகெஸ் Limoges, பிரான்சு
பாதுகாவல்: விவசாயிகள், வீட்டு விலங்குகள், குதிரைகள், சிறைக்காப்பாளர்கள், பழ வியாபாரிகள், மலைவாழ் மக்கள்
இவரின் வரலாற்றைப் படிக்கும்போது, இவர் ஓர் உயர்தர குடும்பத்தைச் சார்ந்தவர் என்று அறியப்படுகின்றது. இவர் ஆயர் ரெமிஜியுஸ் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தான் குழந்தையாக இருக்கும் போதும், இளமைப்பருவத்திலிருக்கும்போதும், தன்னை துறவி என்று கூறி வந்துள்ளார். இவர் தனிமையாக காட்டில் வாழ்ந்துள்ளார். காட்டை சுற்றி வாழ்ந்த மக்களால் இவர் புனிதர் என்று போற்றப்பட்டுள்ளார்.
இவர் அரசாங்கத்தால் சிறைபிடித்து செல்லப்பட்ட மக்களிடத்தில் தனி அன்பு கொண்டு வாழ்ந்துள்ளார். சிறைவாழ் மக்கள் இவரை "தங்களின் அரசர்" என்று கூறியுள்ளனர். இவர் காட்டில் தன்னுடைய சிறிய குகையில் வாழ்ந்துக்கொண்டே துறவற மடம் ஒன்றையும் கட்டியுள்ளார். இவரின் புனிதமான வாழ்வைக் கண்ட சிலரும், இவரை பின்பற்றியுள்ளனர். இவர் தன்னை பின்பற்றிய மக்களுக்கென்று சபை ஒன்றை நிறுவி, அச்சபையின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையானது, இன்று திருயாத்திரை தலமாக காட்சியளிக்கின்றது.
செபம்:
படைப்பின் பரம்பொருளே! இன்று காட்டில் வாழும் மக்கள் அனைவரையும் உம் கரத்தில் அர்ப்பணிக்கின்றோம். உமது இயற்கையை நேசித்து, அன்பு செய்து இயற்கையின் வழியாக உம்மைக் காணும் அம்மக்களை எல்லாவித ஆபத்துக்கள் இயற்கையின் சீற்றங்கள் அனைத்திலிருந்தும் காத்து, நல்வாழ்வை வாழ வரம் தந்து காத்திட வேண்டுமென்று மூவொரு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
நவம்பர் 7
அருளாளர் வின்செண்ட் குரோசி (குரு)
Blessed Vinzenz Grossi
நினைவுத்திருநாள் : நவம்பர் 7
பிறப்பு : 9 மார்ச் 1845, பிச்சிக்ஹெட்டோனே Pizzighettone, இத்தாலி
இறப்பு : 7 நவம்பர் 1917, விகோபெல்லிக்னானோ Vicobellignano, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1 நவம்பர் 1975, திருத்தந்தை 6 ஆம் பவுல்
வின்செண்ட் குரோசி தன்னுடைய இளம் வயதிலேயே, பள்ளியில் கற்கும்போது, தன்னுடன் படித்த சக மாணவர்கள் வியக்கும் வகையில் அனைவரையும் சிரிக்கவைப்பார். தினமும் தவறாமல் ஆலயத்திற்கு சென்று, பங்குத்தந்தைக்கு உதவி செய்து வந்தார். தன் கல்வியை முடித்தப்பிறகு, 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் நிறைந்த பங்கிற்கு அனுப்பப்பட்டார். அப்பங்கில் பல துன்பங்களை அனுபவித்தார். தகாத சொற்களால் அவமானப்படுத்தப்பட்டார். இருப்பினும் இவர் தன்னம்பிக்கையை இழக்காமல் அம்மக்களின் ஒற்றுமைக்காகவும், நலமான வாழ்வை சுமூகமான உறவை கொண்டு வருவதற்காகவும் அயராது உழைத்தார். இவரின் செயல்களை கண்டு அப்பங்கு மக்கள் அருட்தந்தைக்கு உதவினர். தங்களிடையே இருந்த எல்லாப் பிரச்சனைகளையும் அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொண்டனர். பின்னர் வின்செண்ட் அம்மக்களின் ஒற்றுமையை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்காக காரிதாஸ் அமைப்பு ஒன்று ஏற்படுத்தினார். அவ்வமைப்பின் வழியாக சமூகப்பணிகளிலும் ஈடுபடவைத்தார். அதன்பிறகு இளைஞர்களுக்காக பல மன்றங்களையும் நிறுவி சிறப்பாக தன் மறைப்பணியை ஆற்றினார்.
செபம்:
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய இயேசுவே! இன்றைய உலகில் வாழும் இளைஞர்களை ஆசீர்வதியும். வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் சாதித்து வாழ நினைக்கும் மனதைத் தாரும். தான் பிறந்த வீட்டிற்கும், நாட்டிற்கும் தாயாம் திருச்சபைக்கும், நல்ல பிள்ளைகளாக வாழ வாழ்ந்திட ஆசீர்வதியும், சமுதாயத்தை அழிப்பவர்களாக வளராமல், வாழ வைப்பவர்களாக மாறி வாழ வரம் தந்திட வேண்டுமென்று அருட்தந்தை வின்செண்ட் குரோசி வழியாக உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
அருளாளர் வின்செண்ட் குரோசி (குரு)
Blessed Vinzenz Grossi
நினைவுத்திருநாள் : நவம்பர் 7
பிறப்பு : 9 மார்ச் 1845, பிச்சிக்ஹெட்டோனே Pizzighettone, இத்தாலி
இறப்பு : 7 நவம்பர் 1917, விகோபெல்லிக்னானோ Vicobellignano, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1 நவம்பர் 1975, திருத்தந்தை 6 ஆம் பவுல்
வின்செண்ட் குரோசி தன்னுடைய இளம் வயதிலேயே, பள்ளியில் கற்கும்போது, தன்னுடன் படித்த சக மாணவர்கள் வியக்கும் வகையில் அனைவரையும் சிரிக்கவைப்பார். தினமும் தவறாமல் ஆலயத்திற்கு சென்று, பங்குத்தந்தைக்கு உதவி செய்து வந்தார். தன் கல்வியை முடித்தப்பிறகு, 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் நிறைந்த பங்கிற்கு அனுப்பப்பட்டார். அப்பங்கில் பல துன்பங்களை அனுபவித்தார். தகாத சொற்களால் அவமானப்படுத்தப்பட்டார். இருப்பினும் இவர் தன்னம்பிக்கையை இழக்காமல் அம்மக்களின் ஒற்றுமைக்காகவும், நலமான வாழ்வை சுமூகமான உறவை கொண்டு வருவதற்காகவும் அயராது உழைத்தார். இவரின் செயல்களை கண்டு அப்பங்கு மக்கள் அருட்தந்தைக்கு உதவினர். தங்களிடையே இருந்த எல்லாப் பிரச்சனைகளையும் அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொண்டனர். பின்னர் வின்செண்ட் அம்மக்களின் ஒற்றுமையை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்காக காரிதாஸ் அமைப்பு ஒன்று ஏற்படுத்தினார். அவ்வமைப்பின் வழியாக சமூகப்பணிகளிலும் ஈடுபடவைத்தார். அதன்பிறகு இளைஞர்களுக்காக பல மன்றங்களையும் நிறுவி சிறப்பாக தன் மறைப்பணியை ஆற்றினார்.
செபம்:
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய இயேசுவே! இன்றைய உலகில் வாழும் இளைஞர்களை ஆசீர்வதியும். வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் சாதித்து வாழ நினைக்கும் மனதைத் தாரும். தான் பிறந்த வீட்டிற்கும், நாட்டிற்கும் தாயாம் திருச்சபைக்கும், நல்ல பிள்ளைகளாக வாழ வாழ்ந்திட ஆசீர்வதியும், சமுதாயத்தை அழிப்பவர்களாக வளராமல், வாழ வைப்பவர்களாக மாறி வாழ வரம் தந்திட வேண்டுமென்று அருட்தந்தை வின்செண்ட் குரோசி வழியாக உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
நவம்பர் 8
அருளாளர் யோஹான்னஸ் துன்ஸ் ஸ்கோட்டஸ்
(இறையியலாளர் & துறவி)
Blessed Johannes Duns Scotus
நினைவுத்திருநாள் : நவம்பர் 8
பிறப்பு : 1265 அல்லது 1266, துன்ஸ் Duns, ஸ்காட்லாந்து
இறப்பு : 8 நவம்பர் 1308, கொலோன் Köln, ஜெர்மனி
அருளாளர் பட்டம் : 20 March 1993, Vatican City (Pope John Paul II)
இவர் ஓர் புகழ்வாய்ந்த இறையியலாளர். இவர் தான் பிறந்த ஊரிலேயே கல்லூரிவரைப் படித்தார். தன்னுடைய இளமைப்பருவத்திலிருந்தே பிரான்சிஸ்கன் சபை குருக்களிடம் உறவு கொண்டிருந்தார். அவர்களின்மேல் கொண்ட அன்பால், தான் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். இதனால் இறையியல் படிப்பை பாரிஸில் உள்ள ஆக்ஸ்போர்டு கல்லூரியில் கற்றார். பின்னர் அங்கிருந்து கொலோன் வந்தடைந்தார். அங்கு துறவற சபைத்தலைவர் ஒருவருக்கு உதவி செய்து அச்சபையை வளர்த்தெடுத்தார். பின்னர் அங்கிருந்து ரைன்(Rhein) என்ற நகருக்கு சென்று அங்கு பணியாற்றினார். இவர் தனது 43 ஆம் வயதில் இறந்தார்.
செபம்:
கலைகளை கற்றுத் தருபவரே எம் தலைவா! இன்றைய உலகில் வாழும் இறையியல் அறிஞர்கலை ஆசீர்வதியும். அறிவையும் ஞானத்தையும் தந்து, சிறந்த இறையியலாளர்களை உருவாக்கிட வரம் தர வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
அருளாளர் யோஹான்னஸ் துன்ஸ் ஸ்கோட்டஸ்
(இறையியலாளர் & துறவி)
Blessed Johannes Duns Scotus
நினைவுத்திருநாள் : நவம்பர் 8
பிறப்பு : 1265 அல்லது 1266, துன்ஸ் Duns, ஸ்காட்லாந்து
இறப்பு : 8 நவம்பர் 1308, கொலோன் Köln, ஜெர்மனி
அருளாளர் பட்டம் : 20 March 1993, Vatican City (Pope John Paul II)
இவர் ஓர் புகழ்வாய்ந்த இறையியலாளர். இவர் தான் பிறந்த ஊரிலேயே கல்லூரிவரைப் படித்தார். தன்னுடைய இளமைப்பருவத்திலிருந்தே பிரான்சிஸ்கன் சபை குருக்களிடம் உறவு கொண்டிருந்தார். அவர்களின்மேல் கொண்ட அன்பால், தான் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். இதனால் இறையியல் படிப்பை பாரிஸில் உள்ள ஆக்ஸ்போர்டு கல்லூரியில் கற்றார். பின்னர் அங்கிருந்து கொலோன் வந்தடைந்தார். அங்கு துறவற சபைத்தலைவர் ஒருவருக்கு உதவி செய்து அச்சபையை வளர்த்தெடுத்தார். பின்னர் அங்கிருந்து ரைன்(Rhein) என்ற நகருக்கு சென்று அங்கு பணியாற்றினார். இவர் தனது 43 ஆம் வயதில் இறந்தார்.
செபம்:
கலைகளை கற்றுத் தருபவரே எம் தலைவா! இன்றைய உலகில் வாழும் இறையியல் அறிஞர்கலை ஆசீர்வதியும். அறிவையும் ஞானத்தையும் தந்து, சிறந்த இறையியலாளர்களை உருவாக்கிட வரம் தர வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
நவம்பர் 9
ஹைஸைட்டா நகர் மறைசாட்சி தெயோடர் Theodor von Euchiata
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு,
அர்மேனியன் அல்லது சிரியா
இறப்பு
306,
சிறிய ஆசியா
பாதுகாவல்: படைவீரர்கள், போரிலிருந்து
இவர் தன்னுடைய இளமைப்பருவத்திலேயே உரோமைத்திருச்சபையோடு இணைந்தார். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றக்கூடாது என்பதற்காக இவருக்கு தடைவிதிக்கப்பட்டது. அத்தடையை அவர் மீறியதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். பின்னர் இவர் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தீர்ப்பிடப்பட்டார். தீர்ப்பின் இறுதியில் இவர் இறக்கவேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இவர் சாகும்முன் ஒருநாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த ஒரு நாளிற்குள் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இவர் அந்த ஒருநாளில் ஊருக்குள் சென்று அவ்வூரிலிருந்த ஆலயத்திற்குள் சென்று செபித்தார். பின்னர் மரியன்னை கெபியின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடினார். அதன்பிறகு மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! எங்கள் வேண்டுதல்களுக்கு தயவுடன் செவிசாய்த்தருளும். உம் மகன் இறந்தோரிடமிருந்து உயிர்பெற்றதைப்போல, இறந்த உம் அடியார்களும் உயிர்பெறுவார்கள் என்ற நம்பிக்கையை உம் மக்கல் கொண்டு வாழ செய்தருளும்படியாக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
ஹைஸைட்டா நகர் மறைசாட்சி தெயோடர் Theodor von Euchiata
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு,
அர்மேனியன் அல்லது சிரியா
இறப்பு
306,
சிறிய ஆசியா
பாதுகாவல்: படைவீரர்கள், போரிலிருந்து
இவர் தன்னுடைய இளமைப்பருவத்திலேயே உரோமைத்திருச்சபையோடு இணைந்தார். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றக்கூடாது என்பதற்காக இவருக்கு தடைவிதிக்கப்பட்டது. அத்தடையை அவர் மீறியதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். பின்னர் இவர் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தீர்ப்பிடப்பட்டார். தீர்ப்பின் இறுதியில் இவர் இறக்கவேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இவர் சாகும்முன் ஒருநாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த ஒரு நாளிற்குள் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இவர் அந்த ஒருநாளில் ஊருக்குள் சென்று அவ்வூரிலிருந்த ஆலயத்திற்குள் சென்று செபித்தார். பின்னர் மரியன்னை கெபியின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடினார். அதன்பிறகு மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! எங்கள் வேண்டுதல்களுக்கு தயவுடன் செவிசாய்த்தருளும். உம் மகன் இறந்தோரிடமிருந்து உயிர்பெற்றதைப்போல, இறந்த உம் அடியார்களும் உயிர்பெறுவார்கள் என்ற நம்பிக்கையை உம் மக்கல் கொண்டு வாழ செய்தருளும்படியாக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
நவம்பர் 10
மறைப்பணியாளர் அந்திரேயாஸ் அவேலினோ Andreas Avellino
பிறப்பு
1521,
சிசிலி Sizilien, இத்தாலி
இறப்பு
10 நவம்பர் 1608,
நேயாப்பல் Neapel, இத்தாலி
புனிதர்பட்டம்: 1712, திருத்தந்தை 11 ஆம் கிளமெண்ட்
இவர் தனது குருத்துவப்பட்டம் பெற்றபின், சிசிலி சென்று சட்டக்கலையை பயின்றார். பின்னர் திருச்சபை சட்ட வல்லுநராக பணியாற்றினார். ஆனால் அப்பணியில் அவரின் மனம் நிறைவடையவில்லை. ஆன்ம குருவாக பணியாற்ற வேண்டுமென்பதையே பெரிதும் விரும்பினார். அதனால் 1556 ஆம் ஆண்டு, சிசிலியிலிருந்த துறவற சபை ஒன்றில் சேர்ந்து மறைப்பணியாளராக பணியாற்றினார். பலருக்கு ஆன்ம வழிகாட்டியாக திகழ்ந்தார். அழகிய எளிமையான மறையுரையால் பல ஆன்மாக்களை பாவ வாழ்விலிருந்து மீட்டார். பின்னர் இவர் அத்துறவற சபையினை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றார். தன் பணியில் மகிழ்ச்சியடைந்த அந்திரேயாஸ் தனது 87 ஆம் வயதில் இறந்தார்.
செபம்:
"வாழும் கடவுளின் கோவில் நாமே" என்றுரைத்த இறைவா! சிறந்த ஆன்ம குருவாய் திகழ்ந்த அந்திரேயாசைப் போல, சிறப்பான முறையில் உம் அருளைப்பெற்று பணியாற்ற குருக்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும். தங்களின் எளிமையான வாழ்வாலும் மறைப்பணியாலும் மக்களை உம்பால் ஈர்க்க வரம் அருளும்.
Back to top
மறைப்பணியாளர் அந்திரேயாஸ் அவேலினோ Andreas Avellino
பிறப்பு
1521,
சிசிலி Sizilien, இத்தாலி
இறப்பு
10 நவம்பர் 1608,
நேயாப்பல் Neapel, இத்தாலி
புனிதர்பட்டம்: 1712, திருத்தந்தை 11 ஆம் கிளமெண்ட்
இவர் தனது குருத்துவப்பட்டம் பெற்றபின், சிசிலி சென்று சட்டக்கலையை பயின்றார். பின்னர் திருச்சபை சட்ட வல்லுநராக பணியாற்றினார். ஆனால் அப்பணியில் அவரின் மனம் நிறைவடையவில்லை. ஆன்ம குருவாக பணியாற்ற வேண்டுமென்பதையே பெரிதும் விரும்பினார். அதனால் 1556 ஆம் ஆண்டு, சிசிலியிலிருந்த துறவற சபை ஒன்றில் சேர்ந்து மறைப்பணியாளராக பணியாற்றினார். பலருக்கு ஆன்ம வழிகாட்டியாக திகழ்ந்தார். அழகிய எளிமையான மறையுரையால் பல ஆன்மாக்களை பாவ வாழ்விலிருந்து மீட்டார். பின்னர் இவர் அத்துறவற சபையினை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றார். தன் பணியில் மகிழ்ச்சியடைந்த அந்திரேயாஸ் தனது 87 ஆம் வயதில் இறந்தார்.
செபம்:
"வாழும் கடவுளின் கோவில் நாமே" என்றுரைத்த இறைவா! சிறந்த ஆன்ம குருவாய் திகழ்ந்த அந்திரேயாசைப் போல, சிறப்பான முறையில் உம் அருளைப்பெற்று பணியாற்ற குருக்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும். தங்களின் எளிமையான வாழ்வாலும் மறைப்பணியாலும் மக்களை உம்பால் ஈர்க்க வரம் அருளும்.
Back to top
நவம்பர் 11
தூர்ஸ் நகர் ஆயர் மார்ட்டின் Martin von Tours
பிறப்பு
316,
ஸ்டைனமாங்கர் Steinamanger, ஹங்கேரி
இறப்பு
8 நவம்பர் 397,
தூர்ஸ்,பிரான்ஸ்
பாதுகாவல்: ரோட்டன்பூர்க், மைன்ஸ் நகர், படைவீரர்கள், குதிரைகள், துப்பாக்கி தயாரிப்பவர்கள், தையல்காரர்கள், கையுறை மற்றும் தொப்பி தயாரிப்பவர்கள், கைதிகள், வீட்டுவிலங்குகள், ஆடு, விவசாய நிலங்கள்
மார்ட்டின் தந்தை இத்தாலி நாட்டை சார்ந்தவர். எனவே தன் தந்தை பிறந்த நாட்டில் கிறிஸ்தவ பக்தியோடு வளர்க்கப்பட்டார். மார்ட்டின் தனது 10 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்றார். அன்றிலிருந்து தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். ஆனால் இவரின் ஆசை நிறைவேற தாமதம் ஆனது. இவரின் தந்தை மார்ட்டின் படைவீரர்களின் தலைவனாக்க விரும்பினார். இதனால் இவரின் 15 ஆம் வயதிலேயே காலிஷன்(Gallischen) என்ற பெயர் கொண்ட படையில் சேர்க்கப்பட்டார். இதனை விரும்பாமல் மார்ட்டின் வேதனை அடைந்தாலும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முயன்றார். போரில் பங்கெடுப்பதற்கான தைரியத்தை வளர்த்துக்கொண்டார்.
ஒருமுறை மார்ட்டின் மிக குளிரில் போரிட நேரிட்டது. குளிரை தாங்க முடியாமல் தவித்தார். அவ்வேளையில் இறைவனிடம் உருக்கமாக மன்றாடினார். இவரின் மன்றாட்டை கேட்டு பதிலளிக்கும் விதத்தில் இவருக்கு குளிர்தாங்கும் ஆடைகளை பரிசாக தந்தார். இவ்வற்புதத்தை பெற்ற மார்ட்டின் படைவீரர்களின் மத்தியில் மறைப்பணியை ஆற்றினார். பிறகு தான் பிறந்த ஊருக்கு திரும்பி சென்று மறைப்பரப்பு பணியில் ஈடுபட்டார். குருப்பட்டம் பெற்றபின் ஆலயங்கலையும் துறவற மடங்களையும் கட்டி எழுப்பினார். 371 அல்லது 372 ஆம் ஆண்டு தூர்ஸ் நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயர் பொறுப்பை ஏற்றபின், பல துறவற சபைகளை தன் மறைமாவட்டத்திற்கு வரவழைத்தான். துறவிகள் தங்குவதற்கென துறவற மடங்கலை கட்டி எழுப்பினார். ஆனால் ஆயர் மார்ட்டின் மிக ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்தார். தனது 30 வருட ஆயர் பதவியில் பல இன்னல்கள் அடைந்து நற்செய்தியை பறைசாற்றினார். அதன்பிறகு மறைப்பணியாளராகப் பணியாற்ற பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டார். சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடத்தில் அன்பு காட்டி சிறந்ததோர் நண்பராக செயல்பட்டார். குருக்களுக்கும், துறவிகளுக்கும் ஆன்ம வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
இவர் துறவறமடம் ஒன்றையும் நிறுவியுள்ளார். இவர் எல்லா மக்களுக்கும் நல்ல ஆயனாக விளங்கினார். பல மறைப்பணியாளர்களைப் பேணி பயிற்றுவித்தார்.
செபம்:
எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுளே, ஆயரான புனித மார்ட்டினுடைய வாழ்வினாலும், இறப்பினாலும் மாட்சி அடைந்தீரே. எங்கள் உள்ளங்களிலும் உமது அருளின் வியத்தகு செயல்களை புதுப்பித்து நாங்கள் வாழ்விலும் இறப்பினும் உமது இறை அன்பிலிருந்து பிரிந்திருக்க விடாதேயும்.
Back to top
தூர்ஸ் நகர் ஆயர் மார்ட்டின் Martin von Tours
பிறப்பு
316,
ஸ்டைனமாங்கர் Steinamanger, ஹங்கேரி
இறப்பு
8 நவம்பர் 397,
தூர்ஸ்,பிரான்ஸ்
பாதுகாவல்: ரோட்டன்பூர்க், மைன்ஸ் நகர், படைவீரர்கள், குதிரைகள், துப்பாக்கி தயாரிப்பவர்கள், தையல்காரர்கள், கையுறை மற்றும் தொப்பி தயாரிப்பவர்கள், கைதிகள், வீட்டுவிலங்குகள், ஆடு, விவசாய நிலங்கள்
மார்ட்டின் தந்தை இத்தாலி நாட்டை சார்ந்தவர். எனவே தன் தந்தை பிறந்த நாட்டில் கிறிஸ்தவ பக்தியோடு வளர்க்கப்பட்டார். மார்ட்டின் தனது 10 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்றார். அன்றிலிருந்து தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். ஆனால் இவரின் ஆசை நிறைவேற தாமதம் ஆனது. இவரின் தந்தை மார்ட்டின் படைவீரர்களின் தலைவனாக்க விரும்பினார். இதனால் இவரின் 15 ஆம் வயதிலேயே காலிஷன்(Gallischen) என்ற பெயர் கொண்ட படையில் சேர்க்கப்பட்டார். இதனை விரும்பாமல் மார்ட்டின் வேதனை அடைந்தாலும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முயன்றார். போரில் பங்கெடுப்பதற்கான தைரியத்தை வளர்த்துக்கொண்டார்.
ஒருமுறை மார்ட்டின் மிக குளிரில் போரிட நேரிட்டது. குளிரை தாங்க முடியாமல் தவித்தார். அவ்வேளையில் இறைவனிடம் உருக்கமாக மன்றாடினார். இவரின் மன்றாட்டை கேட்டு பதிலளிக்கும் விதத்தில் இவருக்கு குளிர்தாங்கும் ஆடைகளை பரிசாக தந்தார். இவ்வற்புதத்தை பெற்ற மார்ட்டின் படைவீரர்களின் மத்தியில் மறைப்பணியை ஆற்றினார். பிறகு தான் பிறந்த ஊருக்கு திரும்பி சென்று மறைப்பரப்பு பணியில் ஈடுபட்டார். குருப்பட்டம் பெற்றபின் ஆலயங்கலையும் துறவற மடங்களையும் கட்டி எழுப்பினார். 371 அல்லது 372 ஆம் ஆண்டு தூர்ஸ் நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயர் பொறுப்பை ஏற்றபின், பல துறவற சபைகளை தன் மறைமாவட்டத்திற்கு வரவழைத்தான். துறவிகள் தங்குவதற்கென துறவற மடங்கலை கட்டி எழுப்பினார். ஆனால் ஆயர் மார்ட்டின் மிக ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்தார். தனது 30 வருட ஆயர் பதவியில் பல இன்னல்கள் அடைந்து நற்செய்தியை பறைசாற்றினார். அதன்பிறகு மறைப்பணியாளராகப் பணியாற்ற பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டார். சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடத்தில் அன்பு காட்டி சிறந்ததோர் நண்பராக செயல்பட்டார். குருக்களுக்கும், துறவிகளுக்கும் ஆன்ம வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
இவர் துறவறமடம் ஒன்றையும் நிறுவியுள்ளார். இவர் எல்லா மக்களுக்கும் நல்ல ஆயனாக விளங்கினார். பல மறைப்பணியாளர்களைப் பேணி பயிற்றுவித்தார்.
செபம்:
எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுளே, ஆயரான புனித மார்ட்டினுடைய வாழ்வினாலும், இறப்பினாலும் மாட்சி அடைந்தீரே. எங்கள் உள்ளங்களிலும் உமது அருளின் வியத்தகு செயல்களை புதுப்பித்து நாங்கள் வாழ்விலும் இறப்பினும் உமது இறை அன்பிலிருந்து பிரிந்திருக்க விடாதேயும்.
Back to top
நவம்பர் 12
ஆயர் யோசபாத் குன்ஸ்விட்ஷ் Josaphat Kunzewitsch
பிறப்பு
1580,
வுலோட்சிமீர்ச் Wlodzimierz, ரஷ்யா
இறப்பு
12 நவம்பர்1623,
விட்டேப்ஸ்க்Witebsk, வைஸ்ரூஸ்லாண்ட்Weißrussland (இன்றைய போலந்து)
முத்திபேறுபட்டம்: 1643
புனிதர்பட்டம்: 1867, திருத்தந்தை 9 ஆம் பயஸ்
இவர் பிரிவினையை சபையை சார்ந்த பெற்றோரின் மகனாகப் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து, திருமுழுக்கு பெற்று, கிறிஸ்துவமறையை தழுவினார். 1604 ஆம் ஆண்டு "பசிலியின் துறவற சபையில்" (Basilianer) சேர்ந்து குருவானார். தனது 38 ஆம் வயதில் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வியப்புக்குரிய முறையில் திருச்சபையின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இவர் விட்டேப்ஸ்க் (Witebsk) என்ற நகருக்கு பார்வையிட சென்றபோது, பகைவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செபம்:
ஆற்றலின் ஊற்றே எம் இறைவா! புனித யோசபாத் தூய ஆவியாரால் நிறைந்தவராய், தன் மந்தைக்காக தம் உயிரைக்கொடுத்தார். அத்தூய ஆவியை எம் திருச்சபையின் மீது பொழிந்தருளும். இப்புனிதரின் வேண்டுதலால், நாங்களும் உமதருளால் திடமடைந்து, எங்கள் சகோதர சகோதரிகளுக்காக உயிர் துறக்க தயங்கா மனம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
ஆயர் யோசபாத் குன்ஸ்விட்ஷ் Josaphat Kunzewitsch
பிறப்பு
1580,
வுலோட்சிமீர்ச் Wlodzimierz, ரஷ்யா
இறப்பு
12 நவம்பர்1623,
விட்டேப்ஸ்க்Witebsk, வைஸ்ரூஸ்லாண்ட்Weißrussland (இன்றைய போலந்து)
முத்திபேறுபட்டம்: 1643
புனிதர்பட்டம்: 1867, திருத்தந்தை 9 ஆம் பயஸ்
இவர் பிரிவினையை சபையை சார்ந்த பெற்றோரின் மகனாகப் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து, திருமுழுக்கு பெற்று, கிறிஸ்துவமறையை தழுவினார். 1604 ஆம் ஆண்டு "பசிலியின் துறவற சபையில்" (Basilianer) சேர்ந்து குருவானார். தனது 38 ஆம் வயதில் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வியப்புக்குரிய முறையில் திருச்சபையின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இவர் விட்டேப்ஸ்க் (Witebsk) என்ற நகருக்கு பார்வையிட சென்றபோது, பகைவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செபம்:
ஆற்றலின் ஊற்றே எம் இறைவா! புனித யோசபாத் தூய ஆவியாரால் நிறைந்தவராய், தன் மந்தைக்காக தம் உயிரைக்கொடுத்தார். அத்தூய ஆவியை எம் திருச்சபையின் மீது பொழிந்தருளும். இப்புனிதரின் வேண்டுதலால், நாங்களும் உமதருளால் திடமடைந்து, எங்கள் சகோதர சகோதரிகளுக்காக உயிர் துறக்க தயங்கா மனம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Back to top
நவம்பர் 13
ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா, சேசு சபை Stanislaus Kostka SJ
பிறப்பு
28 அக்டோபர் 1550,
மசோவீன் Masovien, போலந்து
இறப்பு
15 ஆகஸ்ட் 1568,
உரோம், இத்தாலி
பாதுகாவல்: போலந்து, இயேசு சபை குருமாணவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்கள், கண் நோயிலிருந்து, காய்ச்சலிலிருந்து
இவர் தனது பெற்றோரால் சரியான முறையில் கவனிக்கப்படாமல் இருந்தார். இவர் தன்னுடைய உடன் பிறந்த சகோதரருடன் 1564 ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவில் கல்லூரியில் படிப்பதற்காக அனுப்பப்பட்டார். அப்போது அவரின் வயது 14. தனது இளம்வயதிலேயே இயேசு தன்னுடன் உரையாடுவதை உணர்ந்தார். இயேசு தன்னை துறவற வாழ்வை வாழ அழைப்பதாக உணர்ந்ததால் துறவற இல்லம் ஒன்றை நாடி சென்றார். இதனால் அவரின் தந்தை கடுங்கோபம் கொண்டு, அவரை கண்டித்தார். இருப்பினும் இயேசுவின் குரலுக்கு மட்டுமே ஸ்தனிஸ்லாஸ் செவிமடுத்தார்.
இவர் 14 ஆம் வயதில் முதன்முறையாக பெற்ற திருக்காட்சியில் பிச்சைக்காரனைப்போல் உடை உடுத்தி, வியன்னாவைவிட்டு, ஆக்ஸ்பூர்க் வருமாறு கூறிய குரலைக்கேட்டார். அக்குரல் கூறியதை செய்ததின் பேரில் டில்லிங்கன் (Dillingen) வந்து சேர்ந்தார் ஸ்தனிஸ்லாஸ். அப்போது அவர் அங்கிருந்து உரோமில் உள்ள இயேசு சபை மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போர்ஜிய நகர் பிரான்சு (Franz von Borjia) அச்சபையின் தலைவராக இருந்தார். அவர் ஸ்தனிஸ்லாசை அவரின் 17 ஆம் பிறந்தநாளன்று தன் சபையில் நவத்துறவகத்தில் சேர்த்தார்.
ஸ்தனிஸ்லாஸ் மிகக் குறைந்த நாட்களிலேயே நவத்துறவக மாணவர்களாலும், குருக்களாலும் கவரப்பட்டு அன்புச் செய்யப்பட்டார். இவர் எப்போதும் மகிழ்ச்சியானவராகவும், உடனடியாக எதையும் எதிர்பாராமல் தேவையில் இருப்போருக்கு குறிப்பறிந்து உதவி செய்பவராகவும் இருந்தார். இவருக்கு மிக அருமையான எதிர்காலம் இருக்கும் என்று உடன் இருந்தவர்கள் அனைவரும் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால் அனைத்தும் அதற்கு எதிர்மாறாக நடைப்பெற்றது. இவர் இயேசு சபையில் சேர்ந்த பத்தே மாதங்களில், கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்டார். அக்காய்ச்சலை குணப்படுத்தமுடியாமல் இறந்து போனார். இவர் இறப்பதற்கு முந்தின நாள், நாளை நான் இறந்துவிடுவேன் என்பதை தன்னுடன் இருந்தவர்களை நோக்கி கூறினார். அவர் சொன்னவாறே ஆண்டவரிடத்தில் சேர்ந்தார்.
செபம்:
அருள் ஒவ்வொன்றின் ஊற்றாகிய இறைவா! புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்காவை, வியத்தகு முறையில் வளர்த்தெடுத்தீர். அவரின் நற்குணங்களை ஒவ்வொரு நவத்துறவு மாணவ மாணவிகளும் முன்மாதிரியாக கொண்டு வாழ உதவி செய்யும். நாங்கள் அவரின் தூய வாழ்வை பின்பற்ற தவறினாலும், அவரின் குணநலன்களையேனும் கண்டுபாவிக்க அவருடைய பரிந்துரை வழியாக எங்களுக்கு வரம் அருள்வீராக!
Back to top
ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா, சேசு சபை Stanislaus Kostka SJ
பிறப்பு
28 அக்டோபர் 1550,
மசோவீன் Masovien, போலந்து
இறப்பு
15 ஆகஸ்ட் 1568,
உரோம், இத்தாலி
பாதுகாவல்: போலந்து, இயேசு சபை குருமாணவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்கள், கண் நோயிலிருந்து, காய்ச்சலிலிருந்து
இவர் தனது பெற்றோரால் சரியான முறையில் கவனிக்கப்படாமல் இருந்தார். இவர் தன்னுடைய உடன் பிறந்த சகோதரருடன் 1564 ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவில் கல்லூரியில் படிப்பதற்காக அனுப்பப்பட்டார். அப்போது அவரின் வயது 14. தனது இளம்வயதிலேயே இயேசு தன்னுடன் உரையாடுவதை உணர்ந்தார். இயேசு தன்னை துறவற வாழ்வை வாழ அழைப்பதாக உணர்ந்ததால் துறவற இல்லம் ஒன்றை நாடி சென்றார். இதனால் அவரின் தந்தை கடுங்கோபம் கொண்டு, அவரை கண்டித்தார். இருப்பினும் இயேசுவின் குரலுக்கு மட்டுமே ஸ்தனிஸ்லாஸ் செவிமடுத்தார்.
இவர் 14 ஆம் வயதில் முதன்முறையாக பெற்ற திருக்காட்சியில் பிச்சைக்காரனைப்போல் உடை உடுத்தி, வியன்னாவைவிட்டு, ஆக்ஸ்பூர்க் வருமாறு கூறிய குரலைக்கேட்டார். அக்குரல் கூறியதை செய்ததின் பேரில் டில்லிங்கன் (Dillingen) வந்து சேர்ந்தார் ஸ்தனிஸ்லாஸ். அப்போது அவர் அங்கிருந்து உரோமில் உள்ள இயேசு சபை மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போர்ஜிய நகர் பிரான்சு (Franz von Borjia) அச்சபையின் தலைவராக இருந்தார். அவர் ஸ்தனிஸ்லாசை அவரின் 17 ஆம் பிறந்தநாளன்று தன் சபையில் நவத்துறவகத்தில் சேர்த்தார்.
ஸ்தனிஸ்லாஸ் மிகக் குறைந்த நாட்களிலேயே நவத்துறவக மாணவர்களாலும், குருக்களாலும் கவரப்பட்டு அன்புச் செய்யப்பட்டார். இவர் எப்போதும் மகிழ்ச்சியானவராகவும், உடனடியாக எதையும் எதிர்பாராமல் தேவையில் இருப்போருக்கு குறிப்பறிந்து உதவி செய்பவராகவும் இருந்தார். இவருக்கு மிக அருமையான எதிர்காலம் இருக்கும் என்று உடன் இருந்தவர்கள் அனைவரும் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால் அனைத்தும் அதற்கு எதிர்மாறாக நடைப்பெற்றது. இவர் இயேசு சபையில் சேர்ந்த பத்தே மாதங்களில், கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்டார். அக்காய்ச்சலை குணப்படுத்தமுடியாமல் இறந்து போனார். இவர் இறப்பதற்கு முந்தின நாள், நாளை நான் இறந்துவிடுவேன் என்பதை தன்னுடன் இருந்தவர்களை நோக்கி கூறினார். அவர் சொன்னவாறே ஆண்டவரிடத்தில் சேர்ந்தார்.
செபம்:
அருள் ஒவ்வொன்றின் ஊற்றாகிய இறைவா! புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்காவை, வியத்தகு முறையில் வளர்த்தெடுத்தீர். அவரின் நற்குணங்களை ஒவ்வொரு நவத்துறவு மாணவ மாணவிகளும் முன்மாதிரியாக கொண்டு வாழ உதவி செய்யும். நாங்கள் அவரின் தூய வாழ்வை பின்பற்ற தவறினாலும், அவரின் குணநலன்களையேனும் கண்டுபாவிக்க அவருடைய பரிந்துரை வழியாக எங்களுக்கு வரம் அருள்வீராக!
Back to top
நவம்பர் 14
✠ புனித நிக்கோலாஸ் டாவெலிக் மற்றும் அவரின் தோழர்கள் ✠
( St. Nicholas Tavelic and Companions )
மறைசாட்சி :
நினைவுத்திருநாள் : நவம்பர் 14
பிறப்பு : c. 1340
டால்மியா Dalmatien
இறப்பு : 14 நவம்பர் 1391
எருசலேம்
புனித நிக்கோலாஸ் டாவெலிக், நவம்பர் 11ம் நாள் 1970ம் ஆண்டு தன் தோழர்களுடன், முகமதியர்களின் திருவிழாவின்போது அவர்களிடையே மறையுரையை ஆற்றினர். அச்சமயத்தில் சில யூதர்களால் இவர்கள் தாக்கப்பட்டார்கள். இவர்களுக்கு எவரும் பாதுகாப்பு கொடுப்பதற்கு முன் வராததால் எதிரிகளால் வதைக்கப்பட்டனர். இதையறிந்த அவர்களின் துறவற சபை சகோதரர்கள், அவர்களை காப்பாற்ற சென்றனர். இருப்பினும் அவர்களால் மறைசாட்சியர்களை காப்பாற்ற இயலவில்லை. எதிரிகள் நிக்கோலசையும் அவரின் தோழர்களையும் கைது செய்தனர். அவர்களின் கைகளில் விலங்குகளை மாட்டி தெருத்தெருவாக இழுத்து சென்று அடித்தனர்.
இவர்கள் 4 பேரையும் எதிரிகள் உணவின்றி பட்டினி போட்டனர். இருப்பினும் நான்கு பேரும், எதற்கும் அஞ்சாமல் கடவுளை போற்றி புகழ்ந்தனர். இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இதனைக் கண்ட எதிரிகள் 4 பேரையும் கொல்லத் திட்டமிட்டனர். பின்னர் இவர்கள் நால்வரும் ஆழ்ந்த இறைவேண்டலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் பிடித்துக்கொண்டு போகப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் சுட்டெரித்த உடலின் சாம்பலை எருசலேம் முழுவதிலும் தூவினர்.
✠ புனித நிக்கோலாஸ் டாவெலிக் மற்றும் அவரின் தோழர்கள் ✠
( St. Nicholas Tavelic and Companions )
மறைசாட்சி :
நினைவுத்திருநாள் : நவம்பர் 14
பிறப்பு : c. 1340
டால்மியா Dalmatien
இறப்பு : 14 நவம்பர் 1391
எருசலேம்
புனித நிக்கோலாஸ் டாவெலிக், நவம்பர் 11ம் நாள் 1970ம் ஆண்டு தன் தோழர்களுடன், முகமதியர்களின் திருவிழாவின்போது அவர்களிடையே மறையுரையை ஆற்றினர். அச்சமயத்தில் சில யூதர்களால் இவர்கள் தாக்கப்பட்டார்கள். இவர்களுக்கு எவரும் பாதுகாப்பு கொடுப்பதற்கு முன் வராததால் எதிரிகளால் வதைக்கப்பட்டனர். இதையறிந்த அவர்களின் துறவற சபை சகோதரர்கள், அவர்களை காப்பாற்ற சென்றனர். இருப்பினும் அவர்களால் மறைசாட்சியர்களை காப்பாற்ற இயலவில்லை. எதிரிகள் நிக்கோலசையும் அவரின் தோழர்களையும் கைது செய்தனர். அவர்களின் கைகளில் விலங்குகளை மாட்டி தெருத்தெருவாக இழுத்து சென்று அடித்தனர்.
இவர்கள் 4 பேரையும் எதிரிகள் உணவின்றி பட்டினி போட்டனர். இருப்பினும் நான்கு பேரும், எதற்கும் அஞ்சாமல் கடவுளை போற்றி புகழ்ந்தனர். இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இதனைக் கண்ட எதிரிகள் 4 பேரையும் கொல்லத் திட்டமிட்டனர். பின்னர் இவர்கள் நால்வரும் ஆழ்ந்த இறைவேண்டலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் பிடித்துக்கொண்டு போகப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் சுட்டெரித்த உடலின் சாம்பலை எருசலேம் முழுவதிலும் தூவினர்.
நவம்பர் 15
✠ புனித பெரிய ஆல்பர்ட் ✠
( St. Albert the Great )
ஆயர், மறைவல்லுநர் :
பிறப்பு : 1193/ 1206
லவீசன், பவேரியா
இறப்பு : நவம்பர் 15, 1280
கோல்ன், புனித உரோமைப் பேரரசு
ஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம் : 1622
உரோமை நகரம்
புனிதர் பட்டம் : 1931
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ், உரோமை நகரம்
முக்கிய திருத்தலங்கள் :
புனித ஆன்டிரியாஸ் கோவில், கோல்ன்
நினைவுத் திருவிழா : நவம்பர் 15
பாதுகாவல் :
சின்சினாட்டி; உலக இளையோர் நாள்;
மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள்;
இயற்கை அறிவியல், தத்துவ; விஞ்ஞானிகள்; மாணவர்கள்
புனித பெரிய ஆல்பர்ட், ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார். இவர் ஜெர்மானிய தோமினிக்கன் சபைத் துறவியும் ஆயரும் ஆவார். இவர் தம் வாழ்நாளில் 'அகற்பொது முனைவர்' என்றும் 'புலவாண்மை முனைவர்' என்றும் பாராட்டப்பட்டவர். வாழ்நாள் இறுதியில் தன்பெயருக்கு முன் புனித என்பது மட்டுமன்றி பெரியவர் என்ற பெருமையையும் பெற்றவர்.
ஜேம்சு ஏ.விஷீப்பிள், ஜோச்சிம் ஆர்.சோடர் போன்ற புலமையாளர்கள் இவரை இடைக்காலத்தின் மாபெரும் மெய்யியலாளராகவும் இறையியலாளராகவும் மதித்தனர். கத்தோலிக்கத் திருச்சபை இவரை 'திருச்சபை (மறையியல்) முனைவராக' தகைமையீந்து பெருமதிப்பு தந்தது. இதுபோல திருச்சபையின் தகைமை பெற்றவர் 36 பேரே என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
உலக அளவில் பெரிய மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது. ஆர்சனிக் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் இவரே. அத்துடன் வெள்ளி நைத்திரேட்டு போன்ற ஒளியுணர் வேதிப் பொருட்களையும் ஆராய்ந்தவர்.
கிறிஸ்தவ நம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல என்றும், இவ்வுலகப் படைப்பானது, இறைவனால் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக நோக்கப்பட்டு, வெவ்வேறு அறிவியல்களால் அதனதன் வகையில் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார் இப்புனிதர். அரிஸ்டாட்டில் குறித்த இப்புனிதரின் எழுத்துக்கள் மெய்யியல் மற்றும் இறையியல் எனும் அறிவியல்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் காட்டுகின்றது.
வாழ்க்கை வரலாறு :
ஆல்பெர்ட், போலிசுதாத் என்பவரின் மகனாகப் பிறந்தார். 1280ல் இவர் இறந்தபோது இவருக்கு 80 அகவை எனக்கூறப்படுவதால், இவர் 1200க்கு முன்பே பிறந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தக்க சான்றுகளின்படி இறக்கும்போது 87 அகவை முடிந்திருந்ததாக அறியப்படுவதால், இவர் 1193ல் பிறந்ததாகப் பொதுவாக ஏற்கப்படுகிறது. ஆல்பெர்ட், (இப்போது பவாரியா எனப்படும்) இலௌவிங்கெனில் பிறந்திருக்கலாம். ஏனெனில் இவர் தன்னை இலௌவிங்கெனின் ஆல்பெர்ட் என அழைத்துக்கொண்டார். அல்லது அது வெறுமனே அவர் குடும்பப் பெயராகவும் இருக்கலாம்.
தொமினிகன் சபையில் சேர்ந்தார். இறையியலில் மாபெரும் தேர்ச்சி பெற்ற இவர், பாரீசில் தன் படிப்பை முடித்தபின் கோல்னில் கல்வி கற்பிக்கும் பணியைத் துவக்கினார். தியுதோனிச் மாவட்ட சபை அதிபராக தேர்வுச் செய்யப்பட்ட இவர், இரெயின்ஸ்பர்க் ஆயராக நான்கு ஆண்டு பணியாற்றிய பின், கற்பிப்பதற்கும் எழுதுவதற்கும் என திரும்பினார். இவர் பல பல்கலை கழகங்களில் இறையியல் ஆசிரியராக பணிபுரிந்தார். இவரது வகுப்புகள் மிகவும் சிறந்த முறையில் இருந்ததால், மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இவரது வகுப்புகளுக்கு வந்தனர். இதனால், இவரது பாடங்களை வகுப்புகளில் நடத்த முடியாமல், திறந்த வெளிகளில் நடத்தினார். இவரது மாணவர்களில் புனித தாமஸ் அக்குவைனஸ் ஒருவர். இவரும் அக்வினாஸும் அறிவு சார்ந்த விசுவாசத்தை தங்கள் இறையியல் விளக்கங்களில் பறைசாற்றினர். லியோன் பொதுச்சங்கத்தில் முக்கியப் பங்காற்றி, தன் மாணவரான தாமஸ் அக்குவினாஸின் எழுத்துக்களையும் படிப்பினைகளையும் விளக்கி அதற்கு ஆதரவாகப் பேசினார்.
1280ம் ஆண்டு நவம்பர் 15ல் இறந்த ஆல்பர்ட், 1931ம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸினால் புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இவரை இவ்வுலகு சார்ந்த அறிவியல்களின் பாதுகாவலராக அறிவித்தார்.
Back to top
✠ புனித பெரிய ஆல்பர்ட் ✠
( St. Albert the Great )
ஆயர், மறைவல்லுநர் :
பிறப்பு : 1193/ 1206
லவீசன், பவேரியா
இறப்பு : நவம்பர் 15, 1280
கோல்ன், புனித உரோமைப் பேரரசு
ஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம் : 1622
உரோமை நகரம்
புனிதர் பட்டம் : 1931
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ், உரோமை நகரம்
முக்கிய திருத்தலங்கள் :
புனித ஆன்டிரியாஸ் கோவில், கோல்ன்
நினைவுத் திருவிழா : நவம்பர் 15
பாதுகாவல் :
சின்சினாட்டி; உலக இளையோர் நாள்;
மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள்;
இயற்கை அறிவியல், தத்துவ; விஞ்ஞானிகள்; மாணவர்கள்
புனித பெரிய ஆல்பர்ட், ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார். இவர் ஜெர்மானிய தோமினிக்கன் சபைத் துறவியும் ஆயரும் ஆவார். இவர் தம் வாழ்நாளில் 'அகற்பொது முனைவர்' என்றும் 'புலவாண்மை முனைவர்' என்றும் பாராட்டப்பட்டவர். வாழ்நாள் இறுதியில் தன்பெயருக்கு முன் புனித என்பது மட்டுமன்றி பெரியவர் என்ற பெருமையையும் பெற்றவர்.
ஜேம்சு ஏ.விஷீப்பிள், ஜோச்சிம் ஆர்.சோடர் போன்ற புலமையாளர்கள் இவரை இடைக்காலத்தின் மாபெரும் மெய்யியலாளராகவும் இறையியலாளராகவும் மதித்தனர். கத்தோலிக்கத் திருச்சபை இவரை 'திருச்சபை (மறையியல்) முனைவராக' தகைமையீந்து பெருமதிப்பு தந்தது. இதுபோல திருச்சபையின் தகைமை பெற்றவர் 36 பேரே என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
உலக அளவில் பெரிய மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது. ஆர்சனிக் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் இவரே. அத்துடன் வெள்ளி நைத்திரேட்டு போன்ற ஒளியுணர் வேதிப் பொருட்களையும் ஆராய்ந்தவர்.
கிறிஸ்தவ நம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல என்றும், இவ்வுலகப் படைப்பானது, இறைவனால் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக நோக்கப்பட்டு, வெவ்வேறு அறிவியல்களால் அதனதன் வகையில் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார் இப்புனிதர். அரிஸ்டாட்டில் குறித்த இப்புனிதரின் எழுத்துக்கள் மெய்யியல் மற்றும் இறையியல் எனும் அறிவியல்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் காட்டுகின்றது.
வாழ்க்கை வரலாறு :
ஆல்பெர்ட், போலிசுதாத் என்பவரின் மகனாகப் பிறந்தார். 1280ல் இவர் இறந்தபோது இவருக்கு 80 அகவை எனக்கூறப்படுவதால், இவர் 1200க்கு முன்பே பிறந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தக்க சான்றுகளின்படி இறக்கும்போது 87 அகவை முடிந்திருந்ததாக அறியப்படுவதால், இவர் 1193ல் பிறந்ததாகப் பொதுவாக ஏற்கப்படுகிறது. ஆல்பெர்ட், (இப்போது பவாரியா எனப்படும்) இலௌவிங்கெனில் பிறந்திருக்கலாம். ஏனெனில் இவர் தன்னை இலௌவிங்கெனின் ஆல்பெர்ட் என அழைத்துக்கொண்டார். அல்லது அது வெறுமனே அவர் குடும்பப் பெயராகவும் இருக்கலாம்.
தொமினிகன் சபையில் சேர்ந்தார். இறையியலில் மாபெரும் தேர்ச்சி பெற்ற இவர், பாரீசில் தன் படிப்பை முடித்தபின் கோல்னில் கல்வி கற்பிக்கும் பணியைத் துவக்கினார். தியுதோனிச் மாவட்ட சபை அதிபராக தேர்வுச் செய்யப்பட்ட இவர், இரெயின்ஸ்பர்க் ஆயராக நான்கு ஆண்டு பணியாற்றிய பின், கற்பிப்பதற்கும் எழுதுவதற்கும் என திரும்பினார். இவர் பல பல்கலை கழகங்களில் இறையியல் ஆசிரியராக பணிபுரிந்தார். இவரது வகுப்புகள் மிகவும் சிறந்த முறையில் இருந்ததால், மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இவரது வகுப்புகளுக்கு வந்தனர். இதனால், இவரது பாடங்களை வகுப்புகளில் நடத்த முடியாமல், திறந்த வெளிகளில் நடத்தினார். இவரது மாணவர்களில் புனித தாமஸ் அக்குவைனஸ் ஒருவர். இவரும் அக்வினாஸும் அறிவு சார்ந்த விசுவாசத்தை தங்கள் இறையியல் விளக்கங்களில் பறைசாற்றினர். லியோன் பொதுச்சங்கத்தில் முக்கியப் பங்காற்றி, தன் மாணவரான தாமஸ் அக்குவினாஸின் எழுத்துக்களையும் படிப்பினைகளையும் விளக்கி அதற்கு ஆதரவாகப் பேசினார்.
1280ம் ஆண்டு நவம்பர் 15ல் இறந்த ஆல்பர்ட், 1931ம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸினால் புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இவரை இவ்வுலகு சார்ந்த அறிவியல்களின் பாதுகாவலராக அறிவித்தார்.
Back to top
நவம்பர் 16
✠ புனித மார்கரெட் ✠
( St. Margaret of Scotland )
ஸ்காட்லாந்து அரசி :
நினைவுத் திருவிழா : நவம்பர் 16
பிறப்பு : 1045
ரேஸ்கா Reska, ஹங்கேரி
இறப்பு : 16 நவம்பர் 1093
எடின்பர்க் (Edinburgh), ஸ்காட்லாந்து
பாதுகாவல் : ஸ்காட்லாந்து
புனிதர் பட்டம் : 1250
திருத்தந்தை நான்காம் இன்னொசென்ட்
புனித மார்கரெட், இங்கிலாந்து நாட்டு அரசர் எட்வர்ட் அவர்களின் மகள். இவரின் தாய் ஆகத்தா (Agatha). ஹங்கேரி நாட்டு அரசி மார்கரெட் 1057ம் ஆண்டிலிருந்து தன் மாமாவின் கண்காணிப்பில் இங்கிலாந்தில் வளர்ந்தார். 1066ம் ஆண்டு இவரின் 20ம் வயதில் ஸ்காட்லாந்திற்கு சென்றார். அங்குதான் அரசர் 3ம் மால்கோம் (Malcolm) என்பவரிடம் பழகி, பின்னர் அவரையே திருமணம் செய்தார். அவருடைய கணவர், அவரை கிறிஸ்தவ மறையை தழுவக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் அவர் தன் கணவரின் பேச்சை மறுத்து, மேலும் தன் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்.
அரசி ஏழை மக்களின் வாழ்வில் அதிக அக்கறை கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்கு பலவிதங்களில் உதவினார். ஏழைகளை தன் இதயத்தில் சுமந்து உதவினார். ஏழை மக்களின் நலனிற்கென்று, நிறுவனம் ஒன்றையும் நிறுவி வேலை வாய்ப்புகளை வழங்கினார். தான் ஓர் அரசியாக இருந்தபோதும், துறவிகளைப் போலவே, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். தவறாமல் நோன்பிருந்து செபித்து பல நலன்களை பெற்றார். பலவிதங்களிலும் ஒறுத்தல் செய்து வாழ்ந்தார்.
செபம் :
எல்லாம் வல்ல இறைவா!
நீரே ஒளி. இருள் என்பது உம்மிடம் இல்லை. உமது பேரொளியினால் எங்கள் உள்ளங்களை நிரப்பியருளும்.ஏழைமக்களின் மீது அன்பு கொண்டு, அரசி மார்கரெட் வாழ்ந்த வழியில் சென்று, நாங்கள் மகிழ்வுடன் உமது முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்து வாழ செய்தருளும். ஆமென் †
Back to top
நவம்பர் 17
✠ புனித ஹங்கேரி எலிசபெத் ✠
( St. Elizabeth of Hungary )
பிறப்பு : ஜூலை 7, 1207
ஹங்கேரி அரசு
இறப்பு : நவம்பர் 17, 1231 (அகவை 24)
ஜெர்மனி
சார்ந்துள்ள சமயம்/ சபை :
கத்தோலிக்க திருச்சபை
ஆங்கிலிக்கன் திருச்சபை
லூதரன் திருச்சபை
புனிதர் பட்டம் : மே 27, 1235
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
நினைவுத் திருவிழா : நவம்பர் 17
பாதுகாவல் : மருத்துவமனைகள், செவிலியர், விதவையர்,
ரொட்டி தயாரிப்பாளர், வீடற்ற மக்கள்.
ஹங்கேரி நாட்டின் அரசனின் மகளான புனித எலிசபெத், ஓய்வு, ஆடம்பரம் மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ இயன்ற போதும், தவம் மற்றும் சந்நியாச வாழ்க்கையையே தேர்ந்தெடுத்தார்.
இவரது இந்த தேர்வு, ஐரோப்பா முழுவதுமுள்ள சாதாரண பொதுமக்கள் இதயத்தில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுத் தந்தது.
புனித ஹங்கேரி எலிசபெத், தமது குறுகிய கால வாழ்க்கையிலேயே, ஏழைகள் மற்றும் நோயுற்றோர் மீது அளவற்ற அன்பினை வெளிப்படுத்தினார். மதச்சார்பற்ற பிரான்சிஸ்கன் ஆணையத்தின்படி, கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களின் பாதுகாவலரானார். எலிசபெத், தனது பதினான்காவது வயதில், ஜெர்மானிய நாட்டின் துரிங்கியா எனும் ஒரு குட்டி ராஜ்ஜியத்தின் அரசன் லூயிஸ் என்பவரை மணம் செய்தார். எலிசபெத், தன் கணவரை மிகவும் அன்பு செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆறு வருட திருமண வாழ்வுக்கு பின்னர், இவரது கணவர் லூயிஸ் சிலுவை மரணமடைந்தார்.
எலிசபெத்துக்கு வயது ஆக ஆக, பக்தியும் வளர்ந்து கொண்டிருந்தது. 1228ல், ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஃபிரான்சிஸ்கன் சபை துறவிகளின் வழிகாட்டுதலின் பேரில், செப வாழ்வில் ஈடுபட்டார். ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவ தொடங்கினார். தினமும் தன் வாசலுக்கு வந்த நூற்றுக் கணக்கான ஏழைகளுக்கு உணவளித்தார். இதனால் அநேகர் இவருக்கு எதிரிகள் ஆயினர். இவருடைய கணவரது சகோதரி அக்னேஸ் இவரை முழு மூச்சுடன் வெறுத்தாள். அவளுடைய தாய் மிகுந்த உலகப் பற்றுக் கொண்டவள். அவளும் இவரை வெறுத்து அரண்மனையில் இருந்தவர்களுடன் சேர்ந்துகொண்டு எலிசபெத்தை நிந்தித்து வந்தார்கள். அவரை அரண்மனையிலிருந்தே துரத்தினார்கள்.
இவரது உள்ளத்தை கடவுளிடமிருந்து அகற்றவில்லை. ஏழைகள் மீது இவள் எல்லையற்ற இரக்கம் கொண்டிருந்தார்கள். "ஏழைகளின் அன்னை" என்றும் "நோயாளிகளின் ஊழியக்காரி" என்றும் இவளை அழைப்பார்கள். உலக மக்களின் அபிப்பிராயங்களை இவள் சட்டை செய்யவில்லை. தனக்கு இயல்பாய் உள்ள பொறுப்புகளை மேற்கொண்டு ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கிறிஸ்துநாதரையே கண்டு அவர்களுக்கு சேவை செய்து வந்தாள்.
நாட்டில் பெருவெள்ளம் வந்து பயிரை அளித்தது. இதனால் பஞ்சமும் கொள்ளைநோயும் வந்தன. ஒரு மருத்தவமனையைக் கட்டி அங்குபோய் தொழு நோயாளிகளுக்கு இவரே சிகிச்சை செய்வார். அப்பமும் இரசமும் இவரது மன்றாட்டால் பலுகியது. ஏழைகளுக்கு உதவி செய்ய அரச ஆடைகளையும், ஆபரணங்களையும் விற்றார். இவருடைய கணவன் இறந்தபின் முன்போல தொல்லைகள் தொடங்கின. இவருடைய கணவரின் சகோதர்கள் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டு இவரை விரட்டி விட்டனர். இவர் பிரான்சிஸ்கன் சந்நியாசிகளின் கோவிலுக்கு சென்று, இந்த துன்பத்திற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி "தேதேயும்" என்னும் நன்றியறிதல் கீதத்தைப் பாட செய்தார்.
சிந்தனை :
சிலுவைக்காக நாம் நன்றி செலுத்தாவிட்டாலும் நாம் அதை பொறுமையுடன் சுமப்போம்.
செபம் :
ஆண்டவரே, நீர் எனக்கு அனுப்பும் சிலுவைகளுக்காகவும் நான் உமக்கு நன்றி சொல்லுகிறேன். ஆமென் †
Back to top
✠ புனித ஹங்கேரி எலிசபெத் ✠
( St. Elizabeth of Hungary )
பிறப்பு : ஜூலை 7, 1207
ஹங்கேரி அரசு
இறப்பு : நவம்பர் 17, 1231 (அகவை 24)
ஜெர்மனி
சார்ந்துள்ள சமயம்/ சபை :
கத்தோலிக்க திருச்சபை
ஆங்கிலிக்கன் திருச்சபை
லூதரன் திருச்சபை
புனிதர் பட்டம் : மே 27, 1235
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
நினைவுத் திருவிழா : நவம்பர் 17
பாதுகாவல் : மருத்துவமனைகள், செவிலியர், விதவையர்,
ரொட்டி தயாரிப்பாளர், வீடற்ற மக்கள்.
ஹங்கேரி நாட்டின் அரசனின் மகளான புனித எலிசபெத், ஓய்வு, ஆடம்பரம் மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ இயன்ற போதும், தவம் மற்றும் சந்நியாச வாழ்க்கையையே தேர்ந்தெடுத்தார்.
இவரது இந்த தேர்வு, ஐரோப்பா முழுவதுமுள்ள சாதாரண பொதுமக்கள் இதயத்தில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுத் தந்தது.
புனித ஹங்கேரி எலிசபெத், தமது குறுகிய கால வாழ்க்கையிலேயே, ஏழைகள் மற்றும் நோயுற்றோர் மீது அளவற்ற அன்பினை வெளிப்படுத்தினார். மதச்சார்பற்ற பிரான்சிஸ்கன் ஆணையத்தின்படி, கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களின் பாதுகாவலரானார். எலிசபெத், தனது பதினான்காவது வயதில், ஜெர்மானிய நாட்டின் துரிங்கியா எனும் ஒரு குட்டி ராஜ்ஜியத்தின் அரசன் லூயிஸ் என்பவரை மணம் செய்தார். எலிசபெத், தன் கணவரை மிகவும் அன்பு செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆறு வருட திருமண வாழ்வுக்கு பின்னர், இவரது கணவர் லூயிஸ் சிலுவை மரணமடைந்தார்.
எலிசபெத்துக்கு வயது ஆக ஆக, பக்தியும் வளர்ந்து கொண்டிருந்தது. 1228ல், ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஃபிரான்சிஸ்கன் சபை துறவிகளின் வழிகாட்டுதலின் பேரில், செப வாழ்வில் ஈடுபட்டார். ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவ தொடங்கினார். தினமும் தன் வாசலுக்கு வந்த நூற்றுக் கணக்கான ஏழைகளுக்கு உணவளித்தார். இதனால் அநேகர் இவருக்கு எதிரிகள் ஆயினர். இவருடைய கணவரது சகோதரி அக்னேஸ் இவரை முழு மூச்சுடன் வெறுத்தாள். அவளுடைய தாய் மிகுந்த உலகப் பற்றுக் கொண்டவள். அவளும் இவரை வெறுத்து அரண்மனையில் இருந்தவர்களுடன் சேர்ந்துகொண்டு எலிசபெத்தை நிந்தித்து வந்தார்கள். அவரை அரண்மனையிலிருந்தே துரத்தினார்கள்.
இவரது உள்ளத்தை கடவுளிடமிருந்து அகற்றவில்லை. ஏழைகள் மீது இவள் எல்லையற்ற இரக்கம் கொண்டிருந்தார்கள். "ஏழைகளின் அன்னை" என்றும் "நோயாளிகளின் ஊழியக்காரி" என்றும் இவளை அழைப்பார்கள். உலக மக்களின் அபிப்பிராயங்களை இவள் சட்டை செய்யவில்லை. தனக்கு இயல்பாய் உள்ள பொறுப்புகளை மேற்கொண்டு ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கிறிஸ்துநாதரையே கண்டு அவர்களுக்கு சேவை செய்து வந்தாள்.
நாட்டில் பெருவெள்ளம் வந்து பயிரை அளித்தது. இதனால் பஞ்சமும் கொள்ளைநோயும் வந்தன. ஒரு மருத்தவமனையைக் கட்டி அங்குபோய் தொழு நோயாளிகளுக்கு இவரே சிகிச்சை செய்வார். அப்பமும் இரசமும் இவரது மன்றாட்டால் பலுகியது. ஏழைகளுக்கு உதவி செய்ய அரச ஆடைகளையும், ஆபரணங்களையும் விற்றார். இவருடைய கணவன் இறந்தபின் முன்போல தொல்லைகள் தொடங்கின. இவருடைய கணவரின் சகோதர்கள் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டு இவரை விரட்டி விட்டனர். இவர் பிரான்சிஸ்கன் சந்நியாசிகளின் கோவிலுக்கு சென்று, இந்த துன்பத்திற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி "தேதேயும்" என்னும் நன்றியறிதல் கீதத்தைப் பாட செய்தார்.
சிந்தனை :
சிலுவைக்காக நாம் நன்றி செலுத்தாவிட்டாலும் நாம் அதை பொறுமையுடன் சுமப்போம்.
செபம் :
ஆண்டவரே, நீர் எனக்கு அனுப்பும் சிலுவைகளுக்காகவும் நான் உமக்கு நன்றி சொல்லுகிறேன். ஆமென் †
Back to top
நவம்பர் 18
✠ புனித ஓடோ ✠
( St. Odo of Cluny )
குளுனி நகர துறவி :
நினைவுத் திருநாள் : நவம்பர் 18
பிறப்பு : 878
அக்குயிடானியன் Aquitanien, பிரான்சு
இறப்பு : 18 நவம்பர் 942
தூர்ஸ் Tours, பிரான்சு
பாதுகாவல் : மழைக்காக, பாடகர்கள்
புனித ஓடோ, ஓர் படைவீரரின் குடும்பத்தில் பிறந்தார். குளுனி சபையில் சேர்ந்து குருவானார். அச்சபையைத் தொடங்கிய பெர்னோ (Berno) என்பவரின் இறப்பிற்குப் பிறகு ஓடோ அச்சபையை பொறுப்பேற்று வழிநடத்தினார். இவர் சபைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், ஏராளமானோர் அச்சபையில் சேர்ந்தனர். இவர் தன் பதவிகாலத்தில் 17 துறவற மடங்களைக் கட்டினார். தன் சபை குருக்கள் அனைவரும் இவரை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டனர். அந்தளவிற்கு இவர் மிக எளிமையான வாழ்வை செயல்பட்டனர்.
இவர் ஆலய இசைகளில் அன்புக்கொண்டிருந்தார். திருப்பலிப் பாடல்கள் பலவற்றை இவரே உருவாக்கினார். இவரால் உருவாக்கப்பட்ட பாடல்கள் இன்றுவரை திருச்சபையில் பாடப்பட்டு வருகின்றது. இவர் பிரான்சு நாட்டு மக்களால் "புகழ்பெற்ற இசைக்கலைஞர்" என்ற பட்டம் பெற்றார்.
இவர் இறந்தபிறகு இவரின் உடல் புனித ஜூலியன் கல்லறை அருகில் புதைக்கப்பட்டார்.
செபம் :
கலைகளின் கலைஞரே!
பாடும் திறமையை ஓடோ அவர்களுக்குக் கொடுத்து தன் அழகிய குரலால் உம்மை போற்றி புகழ்ந்து வாழ்த்த வாய்ப்பளித்தீர். இன்றும் தான் பெற்ற அழகிய குரலைக்கொண்டு, உம்மை போற்றத் துடிக்கும் நண்பர்களை ஆசீர்வதியும். அவர்களின் திறமையை மேன்மேலும் வளர்த்து உம்மை மகிமைப்படுத்த செய்தருளும். ஆமென்
Back to top
✠ புனித ஓடோ ✠
( St. Odo of Cluny )
குளுனி நகர துறவி :
நினைவுத் திருநாள் : நவம்பர் 18
பிறப்பு : 878
அக்குயிடானியன் Aquitanien, பிரான்சு
இறப்பு : 18 நவம்பர் 942
தூர்ஸ் Tours, பிரான்சு
பாதுகாவல் : மழைக்காக, பாடகர்கள்
புனித ஓடோ, ஓர் படைவீரரின் குடும்பத்தில் பிறந்தார். குளுனி சபையில் சேர்ந்து குருவானார். அச்சபையைத் தொடங்கிய பெர்னோ (Berno) என்பவரின் இறப்பிற்குப் பிறகு ஓடோ அச்சபையை பொறுப்பேற்று வழிநடத்தினார். இவர் சபைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், ஏராளமானோர் அச்சபையில் சேர்ந்தனர். இவர் தன் பதவிகாலத்தில் 17 துறவற மடங்களைக் கட்டினார். தன் சபை குருக்கள் அனைவரும் இவரை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டனர். அந்தளவிற்கு இவர் மிக எளிமையான வாழ்வை செயல்பட்டனர்.
இவர் ஆலய இசைகளில் அன்புக்கொண்டிருந்தார். திருப்பலிப் பாடல்கள் பலவற்றை இவரே உருவாக்கினார். இவரால் உருவாக்கப்பட்ட பாடல்கள் இன்றுவரை திருச்சபையில் பாடப்பட்டு வருகின்றது. இவர் பிரான்சு நாட்டு மக்களால் "புகழ்பெற்ற இசைக்கலைஞர்" என்ற பட்டம் பெற்றார்.
இவர் இறந்தபிறகு இவரின் உடல் புனித ஜூலியன் கல்லறை அருகில் புதைக்கப்பட்டார்.
செபம் :
கலைகளின் கலைஞரே!
பாடும் திறமையை ஓடோ அவர்களுக்குக் கொடுத்து தன் அழகிய குரலால் உம்மை போற்றி புகழ்ந்து வாழ்த்த வாய்ப்பளித்தீர். இன்றும் தான் பெற்ற அழகிய குரலைக்கொண்டு, உம்மை போற்றத் துடிக்கும் நண்பர்களை ஆசீர்வதியும். அவர்களின் திறமையை மேன்மேலும் வளர்த்து உம்மை மகிமைப்படுத்த செய்தருளும். ஆமென்
Back to top
நவம்பர் 19
✠ புனித பாற்லாமும் யோசபாத்தும் ✠
( Sts. Barlaam and Josaphat )
பாற்லாமும் யோசபாத்தும் (Barlaam and Josaphat) கிறிஸ்தவ மரபின்படி நடுக்காலத்தில் இரு புனிதர்களாகக் கருதப்பட்டவர்கள். அவர்களைப் பற்றிய வரலாறு இந்தியாவில் கவுதம புத்தரைப் பற்றி உருவான வரலாற்றைத் தழுவி எழுந்தது என்றும், புத்தரின் வரலாறே இவ்வாறு கிறிஸ்தவப் பார்வையில் புத்துரு பெற்றது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
கிரேக்க புனைவு :
பாற்லாமும் யோசபாத்தும் என்னும் தலைப்பில் ஒரு கிறிஸ்தவம் தழுவிய வரலாற்றுக் கதையை கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதியவர் ஆத்தோஸ் நகர யூத்திமியுஸ் (Euthymius of Athos) என்னும் துறவி ஆவார். அத்துறவி மேற்கு ஆசியாவின் தென்பகுதியில் துருக்கிக்கு வடக்கே உள்ள ஜோர்ஜியா நாட்டைச் சார்ந்தவர். "பாலவரியானி" (Balavariani) என்னும் பெயரில் ஏற்கெனவே முதன்முறையாக கிறிஸ்தவம் தழுவிய விதத்தில் ஜோர்ஜிய மொழியில் இருந்த 10ம் நூற்றாண்டுக் கதையையே யூத்திமியுஸ் துறவி கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதினார். அத்துறவி ஆத்தோஸ் நகர மடத்தை விட்டு காண்ஸ்டான்டிநோபுள் நகருக்குச் சென்றபோது 1028ல் கொல்லப்பட்டார். அதற்கும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அவர் "பாற்லாமும் யோசபாத்தும்" கதையை கிரேக்கத்தில் பெயர்த்திருக்க வேண்டும்.
"பாற்லாமும் யோசபாத்தும்" கதை கிரேக்கத்திலிருந்து 1048ல் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது. பின்னர் அக்கதை மேற்கு ஐரோப்பா முழுவதும் மக்களிடையே சென்று சேரலாயிற்று.
இக்கதையை எழுதியவர் 7ம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவில் வாழ்ந்த புனித தமாஸ்கு யோவான் என்றொரு மரபு உண்டு. ஆனால் அவர் இதை எழுதவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
புத்தர் கதையின் வரலாற்றுத் தழுவல் :
"பாற்லாமும் யோசபாத்தும்" கதை உண்மையில் புத்தரின் வரலாற்றுத் தழுவலே என்பது வரலாற்றாசிரியர் கருத்து. சமய வரலாற்றறிஞர் வில்பிரட் கான்ட்வெல் ஸ்மித் (Wilfred Cantwell Smith) என்பவர் ஆய்வுப்படி, இக்கதையின் மூலக் கரு வடமொழியில் எழுதப்பட்ட மகாயான பவுத்த ஏடு (2-4 நூற்றாண்டு). அக்கதை மனிக்கேயர் என்னும் கிறிஸ்தவம் தழுவிய பிரிவினைக் குழுவின் தாக்கத்தைப் பெற்று, புத்தரின் வரலாற்றிலிருந்து இரு கிறிஸ்தவப் புனிதர்களின் வரலாறு ஆனது. அவ்வடிவத்தில் இசுலாம் கலாச்சாரத்தை அரபி மொழிபெயர்ப்பின் வழி சென்றடைந்தது. அரபியில் அதன் பெயர் "கித்தாப் பிலாவாற் வா-யூட்சாப்" (Kitab Bilawhar wa-Yudasaf). அதிலிருந்து ஜோர்ஜிய மொழிபெயர்ப்பு எழுந்தது. பின்னர் கிரேக்கப் பெயர்ப்பும் இலத்தீன் பெயர்ப்பும் தொடர்ந்தன.
பெயர்த் தோற்றம் :
"யோசபாத்" என்னும் பெயரின் மூல வடிவம் "போதிசத்துவ" என்னும் வடமொழிப் பெயரே. அறிவொளி பெற்றவர் என்ற பொருளில் புத்தர் அவ்வாறு அழைக்கப்பட்டார். அப்பெயர் அரபியில் Būdhasaf என்று மாறியது. அரபியில் "b" என்னும் எழுத்தின் புள்ளி இரட்டிக்கும்போது "y" என்றாகும். அப்படியே Būdhasaf என்பது Yūdhasaf ஆனது. அதிலிருந்து ஜோர்ஜிய மொழியில் Iodasaph என்னும் பெயர் வந்தது.
பின்னர் Iodasaph என்னும் ஜோர்ஜியப் பெயர் வடிவம் கிரேக்கத்தில் Ioasaph என்றும் இலத்தீனிலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் Josaphat என்றும் மாறியது.
இப்பெயரையே திருச்செல்வர் காவியத்தில் "சூசேப்பா" என்னும் வடிவத்தில் காண்கிறோம்.
Bilawhar என்று அரபியில் வரும் பெயர் கிரேக்க மொழிபெயர்ப்பிலும் பிற பெயர்ப்புகளிலும் "பாற்லாம்" (Barlaam) என்னும் வடிவம் பெற்றது.
இப்பெயரைத் திருச்செல்வர் காவியம் "வறலாம்" என்று தழுவியமைக்கிறது.
திருச்செல்வர் காவியம் :
முதன்மைக் கட்டுரை : திருச்செல்வர் காவியம்
பூலோகசிங்க அருளப்ப நாவலர் என்னும் யாழ்ப்பாண அறிஞர் "பாற்லாமும் யோசபாத்தும்" என்னும் கதையைத் தமிழில் காப்பியமாகப் பாடி 1896ல் வெளியிட்டார். அக்காப்பியத்தில் அவர் "யோசபாத்" என்னும் பெயரைத் தமிழில் "சூசேப்பா" என்று தழுவியமைக்கிறார். அதுபோலவே "பாற்லாம்" என்னும் பெயர் "வறலாம்" என்று தமிழ் வடிவம் பெறுகிறது.
சூசேப்பா என்னும் பெயர் "திருச்செல்வன்" என்னும் பொருள்படுவதால் அதையே காப்பியத்திற்கும் தலைப்பாக ஆசிரியர் கொண்டுள்ளார்.
திருச்செல்வன் சிந்து நாட்டு இளவரசனாக இருந்து, உலக நாட்டங்களைத் துறந்து துறவியாக மாறுகிறார். அவருடைய தந்தை அவினேர் (Avennir) தம் மகன் கிறித்தவ மதத்தைத் தழுவியதை முதலில் எதிர்க்கிறார். பின்னர் அவரும் கிறித்தவராகி, நாட்டுப் பொறுப்பை விட்டு துறவியாகிறார்.
இக்காவியத்தில் வரும் வேறு சில பெயர்கள்: நக்கோர் (Nachor); தேவுதன் ("Theodosius"); பராக்கி (Barachius).
புனிதர்கள் பட்டியலில் இடம் :
இவர்கள் இருவரும் கத்தோலிக்க முறைப்படி புனிதர்களாக அறிவிக்கப்படாவிடினும், கிரேக்க மரபுவழி திருச்சபையின் புனிதர் நாள்காட்டியில் பாற்லாமும் யோசபாத்தும் புனிதர்களாகச் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்த்து 26ம் நாள் விழாக் கொண்டாடப்படுகிறது.
உரோமன் கத்தோலிக்க புனிதர் நாள்காட்டியில் இவ்விருவரும் இடம் பெறாவிட்டாலும், அவர்களுடைய பெயர்கள் புனிதர் வரிசையில் "உரோமை மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் ஏட்டில் அண்மைக் காலம் வரை இருந்தது. விழா நாள் நவம்பர் 27.
ரஷிய கத்தோலிக்க வழிமுறைப்படி, இவர்களது திருநாள் நவம்பர் மாதம் 19ம் தேதியாகும்.
Back to top
✠ புனித பாற்லாமும் யோசபாத்தும் ✠
( Sts. Barlaam and Josaphat )
பாற்லாமும் யோசபாத்தும் (Barlaam and Josaphat) கிறிஸ்தவ மரபின்படி நடுக்காலத்தில் இரு புனிதர்களாகக் கருதப்பட்டவர்கள். அவர்களைப் பற்றிய வரலாறு இந்தியாவில் கவுதம புத்தரைப் பற்றி உருவான வரலாற்றைத் தழுவி எழுந்தது என்றும், புத்தரின் வரலாறே இவ்வாறு கிறிஸ்தவப் பார்வையில் புத்துரு பெற்றது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
கிரேக்க புனைவு :
பாற்லாமும் யோசபாத்தும் என்னும் தலைப்பில் ஒரு கிறிஸ்தவம் தழுவிய வரலாற்றுக் கதையை கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதியவர் ஆத்தோஸ் நகர யூத்திமியுஸ் (Euthymius of Athos) என்னும் துறவி ஆவார். அத்துறவி மேற்கு ஆசியாவின் தென்பகுதியில் துருக்கிக்கு வடக்கே உள்ள ஜோர்ஜியா நாட்டைச் சார்ந்தவர். "பாலவரியானி" (Balavariani) என்னும் பெயரில் ஏற்கெனவே முதன்முறையாக கிறிஸ்தவம் தழுவிய விதத்தில் ஜோர்ஜிய மொழியில் இருந்த 10ம் நூற்றாண்டுக் கதையையே யூத்திமியுஸ் துறவி கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதினார். அத்துறவி ஆத்தோஸ் நகர மடத்தை விட்டு காண்ஸ்டான்டிநோபுள் நகருக்குச் சென்றபோது 1028ல் கொல்லப்பட்டார். அதற்கும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அவர் "பாற்லாமும் யோசபாத்தும்" கதையை கிரேக்கத்தில் பெயர்த்திருக்க வேண்டும்.
"பாற்லாமும் யோசபாத்தும்" கதை கிரேக்கத்திலிருந்து 1048ல் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது. பின்னர் அக்கதை மேற்கு ஐரோப்பா முழுவதும் மக்களிடையே சென்று சேரலாயிற்று.
இக்கதையை எழுதியவர் 7ம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவில் வாழ்ந்த புனித தமாஸ்கு யோவான் என்றொரு மரபு உண்டு. ஆனால் அவர் இதை எழுதவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
புத்தர் கதையின் வரலாற்றுத் தழுவல் :
"பாற்லாமும் யோசபாத்தும்" கதை உண்மையில் புத்தரின் வரலாற்றுத் தழுவலே என்பது வரலாற்றாசிரியர் கருத்து. சமய வரலாற்றறிஞர் வில்பிரட் கான்ட்வெல் ஸ்மித் (Wilfred Cantwell Smith) என்பவர் ஆய்வுப்படி, இக்கதையின் மூலக் கரு வடமொழியில் எழுதப்பட்ட மகாயான பவுத்த ஏடு (2-4 நூற்றாண்டு). அக்கதை மனிக்கேயர் என்னும் கிறிஸ்தவம் தழுவிய பிரிவினைக் குழுவின் தாக்கத்தைப் பெற்று, புத்தரின் வரலாற்றிலிருந்து இரு கிறிஸ்தவப் புனிதர்களின் வரலாறு ஆனது. அவ்வடிவத்தில் இசுலாம் கலாச்சாரத்தை அரபி மொழிபெயர்ப்பின் வழி சென்றடைந்தது. அரபியில் அதன் பெயர் "கித்தாப் பிலாவாற் வா-யூட்சாப்" (Kitab Bilawhar wa-Yudasaf). அதிலிருந்து ஜோர்ஜிய மொழிபெயர்ப்பு எழுந்தது. பின்னர் கிரேக்கப் பெயர்ப்பும் இலத்தீன் பெயர்ப்பும் தொடர்ந்தன.
பெயர்த் தோற்றம் :
"யோசபாத்" என்னும் பெயரின் மூல வடிவம் "போதிசத்துவ" என்னும் வடமொழிப் பெயரே. அறிவொளி பெற்றவர் என்ற பொருளில் புத்தர் அவ்வாறு அழைக்கப்பட்டார். அப்பெயர் அரபியில் Būdhasaf என்று மாறியது. அரபியில் "b" என்னும் எழுத்தின் புள்ளி இரட்டிக்கும்போது "y" என்றாகும். அப்படியே Būdhasaf என்பது Yūdhasaf ஆனது. அதிலிருந்து ஜோர்ஜிய மொழியில் Iodasaph என்னும் பெயர் வந்தது.
பின்னர் Iodasaph என்னும் ஜோர்ஜியப் பெயர் வடிவம் கிரேக்கத்தில் Ioasaph என்றும் இலத்தீனிலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் Josaphat என்றும் மாறியது.
இப்பெயரையே திருச்செல்வர் காவியத்தில் "சூசேப்பா" என்னும் வடிவத்தில் காண்கிறோம்.
Bilawhar என்று அரபியில் வரும் பெயர் கிரேக்க மொழிபெயர்ப்பிலும் பிற பெயர்ப்புகளிலும் "பாற்லாம்" (Barlaam) என்னும் வடிவம் பெற்றது.
இப்பெயரைத் திருச்செல்வர் காவியம் "வறலாம்" என்று தழுவியமைக்கிறது.
திருச்செல்வர் காவியம் :
முதன்மைக் கட்டுரை : திருச்செல்வர் காவியம்
பூலோகசிங்க அருளப்ப நாவலர் என்னும் யாழ்ப்பாண அறிஞர் "பாற்லாமும் யோசபாத்தும்" என்னும் கதையைத் தமிழில் காப்பியமாகப் பாடி 1896ல் வெளியிட்டார். அக்காப்பியத்தில் அவர் "யோசபாத்" என்னும் பெயரைத் தமிழில் "சூசேப்பா" என்று தழுவியமைக்கிறார். அதுபோலவே "பாற்லாம்" என்னும் பெயர் "வறலாம்" என்று தமிழ் வடிவம் பெறுகிறது.
சூசேப்பா என்னும் பெயர் "திருச்செல்வன்" என்னும் பொருள்படுவதால் அதையே காப்பியத்திற்கும் தலைப்பாக ஆசிரியர் கொண்டுள்ளார்.
திருச்செல்வன் சிந்து நாட்டு இளவரசனாக இருந்து, உலக நாட்டங்களைத் துறந்து துறவியாக மாறுகிறார். அவருடைய தந்தை அவினேர் (Avennir) தம் மகன் கிறித்தவ மதத்தைத் தழுவியதை முதலில் எதிர்க்கிறார். பின்னர் அவரும் கிறித்தவராகி, நாட்டுப் பொறுப்பை விட்டு துறவியாகிறார்.
இக்காவியத்தில் வரும் வேறு சில பெயர்கள்: நக்கோர் (Nachor); தேவுதன் ("Theodosius"); பராக்கி (Barachius).
புனிதர்கள் பட்டியலில் இடம் :
இவர்கள் இருவரும் கத்தோலிக்க முறைப்படி புனிதர்களாக அறிவிக்கப்படாவிடினும், கிரேக்க மரபுவழி திருச்சபையின் புனிதர் நாள்காட்டியில் பாற்லாமும் யோசபாத்தும் புனிதர்களாகச் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்த்து 26ம் நாள் விழாக் கொண்டாடப்படுகிறது.
உரோமன் கத்தோலிக்க புனிதர் நாள்காட்டியில் இவ்விருவரும் இடம் பெறாவிட்டாலும், அவர்களுடைய பெயர்கள் புனிதர் வரிசையில் "உரோமை மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் ஏட்டில் அண்மைக் காலம் வரை இருந்தது. விழா நாள் நவம்பர் 27.
ரஷிய கத்தோலிக்க வழிமுறைப்படி, இவர்களது திருநாள் நவம்பர் மாதம் 19ம் தேதியாகும்.
Back to top
நவம்பர் 20
✠ புனித வாலோய்ஸ் நகர் ஃபெலிக்ஸ் ✠
( St. Felix of Valois )
பாவ மன்னிப்பாளர் :
( Confessor )
நினைவுத் திருநாள் : நவம்பர் 20
பிறப்பு : ஏப்ரல் 16, 1127
வாலோய்ஸ், பிரான்சு
இறப்பு : நவம்பர் 1212 ( அகவை 85 )
பாரிஸ், பிரான்சு
புனிதர் பட்டம் : மே 1, 1262
திருத்தந்தை: நான்காம் அர்பன்; உரோம்,
( Pope Urban IV )
மிக மதிப்புமிக்க அரசரின் குடும்பத்தில் பிறந்த புனித ஃபெலிக்ஸ், தனது கல்வியை முடித்தபிறகு குருப்பட்டம் பெற்றார். சிறுவயதிலே உலக செல்வங்களைத் துறந்து காட்டிற்கு சென்று செபத்திலும் தவத்திலும் அமைதியாக தனிவாழ்வு நடத்தி வந்தார்.
குருவான பிறகு தனிமையாக வாழ்ந்து கடுமையான ஏழ்மையை கடைபிடித்தார். இவர் காட்டில் வாழும் துறவிகளை போல, அனைத்தையும் துறந்து வாழ வேண்டுமென்பதை விரும்பினார். சில ஆண்டுகள் கழித்து இளமையான மருத்துவர் ஒருவர் பாரிசிலிருந்து சென்று பெலிக்சை சந்தித்தார். அவர் பெலிக்ஸ் வாழும் வாழ்வை தானும் வாழ விரும்பி குருப்பட்டம்பெற்றார்.
இவர்கள் இருவரும் தனிமையாக சென்று கடுந்தவம்புரிந்து இறைவேண்டலில் ஈடுபட்டனர். இவர்களிடையே நல்ல புரிதல் இருந்தது. இருவரும் ஒரே மனநிலை கொண்டவராக திகழ்ந்தனர். ஒன்று சேர்ந்து பல பெரிய பெரிய காரியங்களை செய்தனர். அச்சமயத்தில் விதவைகளும், கைவிடப்பட்டவர்களும் ஏராளமானோர் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களுக்கெல்லாம், இவர்கள் இருவரும் உதவி செய்தனர். தங்களின் முழு அன்பையும் அம்மக்களுடன் பகிர்ந்தனர். அம்மக்களுக்காக சபை ஒன்றையும் நிறுவினார். பல துன்பங்களை அனுபவித்தார். இருப்பினும் இறையருளால் தங்களின் பணியிலிருந்து சிறிதும் பின் வாங்காமல் தைரியமுடன் அச்சபையை வழிநடத்தினர். அச்சபையானது தொடங்கப்பட்ட மிக குறுகிய காலத்தில் பிரான்சு நாடு முழுவதும் பரவியது.
புனித ஃபெலிக்ஸின் 71வது வயதில் 'புனித மாத்தா அருளப்பர்' இவரைத் தேடி வந்தார். இவர், 'புனித மாத்தா அருளப்பரு'டன் (Saint John of Matha) இணைந்து, திரித்துவத்தைக் கண்டுபிடித்தவர். ஸ்பெயின் நாட்டிலும், வட ஆப்பிரிக்காவிலும் மகமதியர்களிடம் அடிமைகளாய் இருந்தவர்களை மீட்பதற்கென்று தொடங்க இருந்த சபைக்கு நம் புனிதரது உதவியை அருளப்பர் விரும்பிக்கேட்டார். இவர்கள் கண்ட காட்சிக்குக் கீழ்படிந்து இருவரும் உரோமைக்குக் சென்றனர். பாப்பானவர் இவர்களை அன்புடன் வரவேற்றார் சபையை அங்கீகரித்து அருளப்பரை சபையின் தலைவராக்கினார். சபை உறுதிப்படுத்தப்படவும் நம் புனிதர் உதவியாக இருந்தார்.
இவர் சிறந்ததோர் வரலாற்று மனிதராகப் புகழப்பட்டார். சிறிய மனிதராக இருந்தபோதும் ஆண்டவரின் பணியை பெருமளவில் சிறப்பாக ஆற்றினர்.
✠ புனித வாலோய்ஸ் நகர் ஃபெலிக்ஸ் ✠
( St. Felix of Valois )
பாவ மன்னிப்பாளர் :
( Confessor )
நினைவுத் திருநாள் : நவம்பர் 20
பிறப்பு : ஏப்ரல் 16, 1127
வாலோய்ஸ், பிரான்சு
இறப்பு : நவம்பர் 1212 ( அகவை 85 )
பாரிஸ், பிரான்சு
புனிதர் பட்டம் : மே 1, 1262
திருத்தந்தை: நான்காம் அர்பன்; உரோம்,
( Pope Urban IV )
மிக மதிப்புமிக்க அரசரின் குடும்பத்தில் பிறந்த புனித ஃபெலிக்ஸ், தனது கல்வியை முடித்தபிறகு குருப்பட்டம் பெற்றார். சிறுவயதிலே உலக செல்வங்களைத் துறந்து காட்டிற்கு சென்று செபத்திலும் தவத்திலும் அமைதியாக தனிவாழ்வு நடத்தி வந்தார்.
குருவான பிறகு தனிமையாக வாழ்ந்து கடுமையான ஏழ்மையை கடைபிடித்தார். இவர் காட்டில் வாழும் துறவிகளை போல, அனைத்தையும் துறந்து வாழ வேண்டுமென்பதை விரும்பினார். சில ஆண்டுகள் கழித்து இளமையான மருத்துவர் ஒருவர் பாரிசிலிருந்து சென்று பெலிக்சை சந்தித்தார். அவர் பெலிக்ஸ் வாழும் வாழ்வை தானும் வாழ விரும்பி குருப்பட்டம்பெற்றார்.
இவர்கள் இருவரும் தனிமையாக சென்று கடுந்தவம்புரிந்து இறைவேண்டலில் ஈடுபட்டனர். இவர்களிடையே நல்ல புரிதல் இருந்தது. இருவரும் ஒரே மனநிலை கொண்டவராக திகழ்ந்தனர். ஒன்று சேர்ந்து பல பெரிய பெரிய காரியங்களை செய்தனர். அச்சமயத்தில் விதவைகளும், கைவிடப்பட்டவர்களும் ஏராளமானோர் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களுக்கெல்லாம், இவர்கள் இருவரும் உதவி செய்தனர். தங்களின் முழு அன்பையும் அம்மக்களுடன் பகிர்ந்தனர். அம்மக்களுக்காக சபை ஒன்றையும் நிறுவினார். பல துன்பங்களை அனுபவித்தார். இருப்பினும் இறையருளால் தங்களின் பணியிலிருந்து சிறிதும் பின் வாங்காமல் தைரியமுடன் அச்சபையை வழிநடத்தினர். அச்சபையானது தொடங்கப்பட்ட மிக குறுகிய காலத்தில் பிரான்சு நாடு முழுவதும் பரவியது.
புனித ஃபெலிக்ஸின் 71வது வயதில் 'புனித மாத்தா அருளப்பர்' இவரைத் தேடி வந்தார். இவர், 'புனித மாத்தா அருளப்பரு'டன் (Saint John of Matha) இணைந்து, திரித்துவத்தைக் கண்டுபிடித்தவர். ஸ்பெயின் நாட்டிலும், வட ஆப்பிரிக்காவிலும் மகமதியர்களிடம் அடிமைகளாய் இருந்தவர்களை மீட்பதற்கென்று தொடங்க இருந்த சபைக்கு நம் புனிதரது உதவியை அருளப்பர் விரும்பிக்கேட்டார். இவர்கள் கண்ட காட்சிக்குக் கீழ்படிந்து இருவரும் உரோமைக்குக் சென்றனர். பாப்பானவர் இவர்களை அன்புடன் வரவேற்றார் சபையை அங்கீகரித்து அருளப்பரை சபையின் தலைவராக்கினார். சபை உறுதிப்படுத்தப்படவும் நம் புனிதர் உதவியாக இருந்தார்.
இவர் சிறந்ததோர் வரலாற்று மனிதராகப் புகழப்பட்டார். சிறிய மனிதராக இருந்தபோதும் ஆண்டவரின் பணியை பெருமளவில் சிறப்பாக ஆற்றினர்.
நவம்பர் 21
✠ புனித முதலாம் கெலாசியுஸ் ✠
( St. Gelasius I )
திருத்தந்தை :
Pope :
பிறப்பு : 5 ஆம் நூற்றாண்டு
ஆப்ரிக்கா
இறப்பு : 21 நவம்பர் 496
உரோம் இத்தாலி
நினைவுத் திருநாள் : நவம்பர் 21
புனித முதலாம் கெலாசியுஸ், ஆப்ரிக்கா நாட்டு கறுப்பினத்தைச் சார்ந்தவர். இவர் மிக சிறு வயதில் குருவானார் என்று கூறப்படுகின்றது. 483ம் ஆண்டிலிருந்து திருத்தந்தை 2ம் பெலிக்ஸ்சுக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் மிக சிறந்த விதத்தில் திருத்தந்தைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். திறமையான, அர்த்தமுள்ள முடிவுகள் எடுப்பதில் இவர் வல்லவராக திகழ்ந்தார். இறையியலாளர்கள் பலர் இவரின் ஆலோசனையை நாடி வந்தனர். திருத்தந்தை 2 ஆம் பெலிக்ஸ் 1 மார்ச் 492ம் ஆண்டு இறந்துவிடவே கெலாசியுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தழைத்தோங்கி இருந்த அரசர்களின் ஆட்சியை முறியடித்து திருச்சபையில் கடவுளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். கிறிஸ்துவின் நற்செய்திக்கு முதலிடம் கொடுத்தார். ஏழை மக்களின் வாழ்வுக்கென்று பல மையங்களை ஏற்படுத்தினார். திருச்சபை சொத்துகளில் நான்கில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பகிர்ந்துக் கொடுத்தார். இவர்தான் வாழ்ந்து வளர்ந்த ஏழ்மையை என்றும் மறவாமல் இறுதிவரை வாழ்ந்தார். ஏழைகளுக்கென்று தன் ஆட்சியில் தனி இடம் ஒதுக்கினார். அம்மக்களின் ஈடேற்றத்திற்காக இரவும் பகலும் அயராது செபித்தார். இயேசு வாழக்கூறிய அன்பான வாழ்வை வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இவர் திருச்சபையில் பல சீர்த்திருத்தங்கலை கொண்டுவந்தார். இவர் திருப்பலி பூசை புத்தகத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இவர் இறந்தபிறகு உடல் எங்கு புதைக்கப்பட்டது என்பதை கண்டறிய இயலவில்லை.
செபம் :
அனைவருக்கும் இரக்கம் காட்டும் அன்புத் தந்தையே!
திருச்சபையின் தலைசிறந்த மனிதராக திருத்தந்தை முதலாம் கெலாசியுஸை மாற்றினீர். இவரின் வேண்டுதலால் நாங்கள் எங்களுடைய திறமைகளை பயன்படுத்தி என்றும் எம் தாயாம் திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைத்திட வரமருள வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்
***********************************************************************************************************************
தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் ✞
(The Presentation of Our Lady)
☼ நினைவுதினம் ☼
( நவம்பர் 21 )
தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா என மேற்கிலும் ~ மிகவும் தூய இறையன்னை கோவிலுக்குள் நுழைந்தது என கிழக்கிலும் ~ அறியப்படுவது, நவம்பர் 21ல் கத்தோலிக்க திருச்சபை, மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் கொண்டாடப்படும் கிறிஸ்தவ விழாவாகும்.
அன்னைமரியாவை ஆலயத்தில் ஒப்புக்கொடுத்ததாக புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், திருமுறைப் பட்டியலைச் சேராத நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன.
குழந்தைப் பருவம் தொடர்பான யாக்கோபு நற்செய்தியில் (Gospel of James) இவ்வாறு வாசிக்கிறோம் :
"மரியாவின் பெற்றோராகிய சுவக்கீன், அன்னா ஆகிய இருவரும் முதிர் வயதுவரை குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். ஆயினும் அவர்கள் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மரியாவும் பிறந்தார். இதற்கு நன்றியாக, குழந்தை மரியாவை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கடவுளுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
அதன்பிறகு மரியா தனது 12வது வயதுவரை ஆலயத்தில் இருந்தார்" என்று யாக்கோபு எழுதியுள்ளார்.
மரியாவின் பிறப்பு நற்செய்தியில் (Gospel of the Nativity of Mary), மரியாவின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மரியா ஆலயத்திலேயே கல்வி கற்றார், இறைவனின் அன்னையாகும் நிலைக்கு தன்னைத் தயாரித்தார் எனவும் இக்குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
பைசாண்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டீனியன் சிதைவுற்றுக் கிடந்த எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஓர் ஆலயம் எழுப்பி, அதை கி.பி.543ம் ஆண்டில் தூய கன்னிமரியாவுக்கு அர்ப்பணித்தார். அதுமுதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
614ம் ஆண்டில் 2ம் Khosrau, எருசலேமை முற்றுகையிட்டபோது இவ்வாலயம் இடிக்கப்பட்டாலும், மக்கள் இவ்விழாவைத் தொடர்ந்து கொண்டாடி வந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இத்தாலியின் தென் பகுதியில் இவ்விழா சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை 1568ம் ஆண்டில் திருப்பலி புத்தகத்திலிருந்து திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் நீக்கினாலும், 1585ம் ஆண்டில் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் இதனை மீண்டும் உரோமைத் திருவழிபாடு நாள்காட்டியில் சேர்த்தார்.
தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா நவம்பர் 21 ஆகும்!
Back to top
✠ புனித முதலாம் கெலாசியுஸ் ✠
( St. Gelasius I )
திருத்தந்தை :
Pope :
பிறப்பு : 5 ஆம் நூற்றாண்டு
ஆப்ரிக்கா
இறப்பு : 21 நவம்பர் 496
உரோம் இத்தாலி
நினைவுத் திருநாள் : நவம்பர் 21
புனித முதலாம் கெலாசியுஸ், ஆப்ரிக்கா நாட்டு கறுப்பினத்தைச் சார்ந்தவர். இவர் மிக சிறு வயதில் குருவானார் என்று கூறப்படுகின்றது. 483ம் ஆண்டிலிருந்து திருத்தந்தை 2ம் பெலிக்ஸ்சுக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் மிக சிறந்த விதத்தில் திருத்தந்தைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். திறமையான, அர்த்தமுள்ள முடிவுகள் எடுப்பதில் இவர் வல்லவராக திகழ்ந்தார். இறையியலாளர்கள் பலர் இவரின் ஆலோசனையை நாடி வந்தனர். திருத்தந்தை 2 ஆம் பெலிக்ஸ் 1 மார்ச் 492ம் ஆண்டு இறந்துவிடவே கெலாசியுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தழைத்தோங்கி இருந்த அரசர்களின் ஆட்சியை முறியடித்து திருச்சபையில் கடவுளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். கிறிஸ்துவின் நற்செய்திக்கு முதலிடம் கொடுத்தார். ஏழை மக்களின் வாழ்வுக்கென்று பல மையங்களை ஏற்படுத்தினார். திருச்சபை சொத்துகளில் நான்கில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பகிர்ந்துக் கொடுத்தார். இவர்தான் வாழ்ந்து வளர்ந்த ஏழ்மையை என்றும் மறவாமல் இறுதிவரை வாழ்ந்தார். ஏழைகளுக்கென்று தன் ஆட்சியில் தனி இடம் ஒதுக்கினார். அம்மக்களின் ஈடேற்றத்திற்காக இரவும் பகலும் அயராது செபித்தார். இயேசு வாழக்கூறிய அன்பான வாழ்வை வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இவர் திருச்சபையில் பல சீர்த்திருத்தங்கலை கொண்டுவந்தார். இவர் திருப்பலி பூசை புத்தகத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இவர் இறந்தபிறகு உடல் எங்கு புதைக்கப்பட்டது என்பதை கண்டறிய இயலவில்லை.
செபம் :
அனைவருக்கும் இரக்கம் காட்டும் அன்புத் தந்தையே!
திருச்சபையின் தலைசிறந்த மனிதராக திருத்தந்தை முதலாம் கெலாசியுஸை மாற்றினீர். இவரின் வேண்டுதலால் நாங்கள் எங்களுடைய திறமைகளை பயன்படுத்தி என்றும் எம் தாயாம் திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைத்திட வரமருள வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்
***********************************************************************************************************************
தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் ✞
(The Presentation of Our Lady)
☼ நினைவுதினம் ☼
( நவம்பர் 21 )
தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா என மேற்கிலும் ~ மிகவும் தூய இறையன்னை கோவிலுக்குள் நுழைந்தது என கிழக்கிலும் ~ அறியப்படுவது, நவம்பர் 21ல் கத்தோலிக்க திருச்சபை, மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் கொண்டாடப்படும் கிறிஸ்தவ விழாவாகும்.
அன்னைமரியாவை ஆலயத்தில் ஒப்புக்கொடுத்ததாக புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், திருமுறைப் பட்டியலைச் சேராத நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன.
குழந்தைப் பருவம் தொடர்பான யாக்கோபு நற்செய்தியில் (Gospel of James) இவ்வாறு வாசிக்கிறோம் :
"மரியாவின் பெற்றோராகிய சுவக்கீன், அன்னா ஆகிய இருவரும் முதிர் வயதுவரை குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். ஆயினும் அவர்கள் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மரியாவும் பிறந்தார். இதற்கு நன்றியாக, குழந்தை மரியாவை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கடவுளுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
அதன்பிறகு மரியா தனது 12வது வயதுவரை ஆலயத்தில் இருந்தார்" என்று யாக்கோபு எழுதியுள்ளார்.
மரியாவின் பிறப்பு நற்செய்தியில் (Gospel of the Nativity of Mary), மரியாவின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மரியா ஆலயத்திலேயே கல்வி கற்றார், இறைவனின் அன்னையாகும் நிலைக்கு தன்னைத் தயாரித்தார் எனவும் இக்குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
பைசாண்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டீனியன் சிதைவுற்றுக் கிடந்த எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஓர் ஆலயம் எழுப்பி, அதை கி.பி.543ம் ஆண்டில் தூய கன்னிமரியாவுக்கு அர்ப்பணித்தார். அதுமுதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
614ம் ஆண்டில் 2ம் Khosrau, எருசலேமை முற்றுகையிட்டபோது இவ்வாலயம் இடிக்கப்பட்டாலும், மக்கள் இவ்விழாவைத் தொடர்ந்து கொண்டாடி வந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இத்தாலியின் தென் பகுதியில் இவ்விழா சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை 1568ம் ஆண்டில் திருப்பலி புத்தகத்திலிருந்து திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் நீக்கினாலும், 1585ம் ஆண்டில் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் இதனை மீண்டும் உரோமைத் திருவழிபாடு நாள்காட்டியில் சேர்த்தார்.
தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா நவம்பர் 21 ஆகும்!
Back to top
நவம்பர் 22
✠ புனித செசிலியா ✠
( St. Cecilia )
மறைசாட்சி/ கன்னியர் :
பிறப்பு : 200
உரோம், இத்தாலி
இறப்பு : 22 நவம்பர் 230
உரோம்
பாதுகாவல் :
இசைக்கருவி தயாரிப்பவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள்
புனித செசிலியா, ஓரு ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமென்று விரும்பியவர். இளம் வயதிலேயே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததால் மணமுடிக்க விரும்பவில்லை. ஆனால் இவரின் பெற்றோர் செசிலியாவை வலேரியானூஸ் என்ற இளைஞருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அவைகளை செசிலியா பெரியதாக கருதாமல் தன்னுடைய ஆன்மீக காரியங்களில் மட்டுமே கருத்தாக இருந்தார். வலேரியானூஸ்சுடன் திருமணம் செய்யவிருப்பதை வெறுத்தார். இருப்பினும் பெற்றோரை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தார்.
திருமண நாள் வந்தது. இவரின் பெற்றோர் இவருக்கு திருமண உடையை அணிவித்தபோது இதயம் வலித்தவராய், தன்னை முழுவதும் தன் மணவாளன் இயேசுவிடம் ஒப்படைத்து செபித்தார். கணவரிடம் பெற்றோர் இவரை ஒப்படைத்தபோது, தான் கடவுளிடம் கொடுத்த கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உன்னிடம் இழக்கமாட்டேன் என்று உறுதியாக தெளிவாக கூறினார். தான் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவள் என்பதை தைரியமாக எடுத்துக்கூறினார்.
அவள் தன் கணவனை நோக்கி, "கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்கு காவலராய் இருக்கிறார். எனவே கடவுளது கோபத்தை உம்மீது வரச்செய்யும்படியான எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது" என்றாள்.
வலேரியானூஸ், செசிலியா சொல்வது உண்மையா என்பதை சோதிக்கும் நோக்குடன், "கடவுளின் அந்தத் தூதரை நான் பார்ப்பேனானால் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பேன்" என்றார்.
செசிலியா அதை நிரூபிக்க வேண்டுமானால், வலேரியானூஸ் முதலில் திருத்தந்தையிடம் திருமுழுக்குப் பெறுமாறு கூறினார். செசிலியாவின் வார்த்தைகளுக்கு படிந்து அவரும் திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு பெற்ற நாளன்றே வானதூதர் ஒருவர் அவர் முன்னின்று ரோஜா மலர் ஒன்றை கொடுத்து அவரை வாழ்த்தினார். அதன்பின்னர் வலேரியானூஸ் செசிலியாவை அவரின் விருப்பப்படி வாழ விட்டுவிட்டார். செசிலியாவை நம்பினார். வலேரியானூஸ் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபைக்கு மனமாற்றினார். அவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்ற நாளிலிருந்து செசிலியாவிற்கு பணிந்து இரவும் பகலும் அவருக்கு பணிவிடை புரிந்தனர்.
செசிலியா, தான் மணந்த வலேரியானூசின் உதவியுடன் கடவுளின் அன்பை சுவைத்து வாழ்ந்தார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டி, அனைவரையும் சமமாக அன்பு செய்தார். இறைவனை இரவும் பகலும் பாடல்களால் போற்றிப் புகழ்ந்தார். இவரின் பக்தியைக் கண்ட எதிரிகள், கொதிக்கும் சூடான நீரில் அவரை மூழ்கடித்து, அக்கொடியவர்களின் ஆசைத் தீர அணுஅணுவாக கொன்றனர். கொதிக்கும் சூடான நீரில் இவர் மூன்று நாள் எத்தீக்காயமும் இல்லாமல் உயிருடனே இருந்தார்.
இவர் கிறிஸ்தவ பெண்கள் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புக்காக கன்னிமை காத்து வாழ்ந்தார். அவருக்காக மறைசாட்சியாகவும் மரித்தார்.
Back to top
✠ புனித செசிலியா ✠
( St. Cecilia )
மறைசாட்சி/ கன்னியர் :
பிறப்பு : 200
உரோம், இத்தாலி
இறப்பு : 22 நவம்பர் 230
உரோம்
பாதுகாவல் :
இசைக்கருவி தயாரிப்பவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள்
புனித செசிலியா, ஓரு ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமென்று விரும்பியவர். இளம் வயதிலேயே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததால் மணமுடிக்க விரும்பவில்லை. ஆனால் இவரின் பெற்றோர் செசிலியாவை வலேரியானூஸ் என்ற இளைஞருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அவைகளை செசிலியா பெரியதாக கருதாமல் தன்னுடைய ஆன்மீக காரியங்களில் மட்டுமே கருத்தாக இருந்தார். வலேரியானூஸ்சுடன் திருமணம் செய்யவிருப்பதை வெறுத்தார். இருப்பினும் பெற்றோரை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தார்.
திருமண நாள் வந்தது. இவரின் பெற்றோர் இவருக்கு திருமண உடையை அணிவித்தபோது இதயம் வலித்தவராய், தன்னை முழுவதும் தன் மணவாளன் இயேசுவிடம் ஒப்படைத்து செபித்தார். கணவரிடம் பெற்றோர் இவரை ஒப்படைத்தபோது, தான் கடவுளிடம் கொடுத்த கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உன்னிடம் இழக்கமாட்டேன் என்று உறுதியாக தெளிவாக கூறினார். தான் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவள் என்பதை தைரியமாக எடுத்துக்கூறினார்.
அவள் தன் கணவனை நோக்கி, "கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்கு காவலராய் இருக்கிறார். எனவே கடவுளது கோபத்தை உம்மீது வரச்செய்யும்படியான எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது" என்றாள்.
வலேரியானூஸ், செசிலியா சொல்வது உண்மையா என்பதை சோதிக்கும் நோக்குடன், "கடவுளின் அந்தத் தூதரை நான் பார்ப்பேனானால் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பேன்" என்றார்.
செசிலியா அதை நிரூபிக்க வேண்டுமானால், வலேரியானூஸ் முதலில் திருத்தந்தையிடம் திருமுழுக்குப் பெறுமாறு கூறினார். செசிலியாவின் வார்த்தைகளுக்கு படிந்து அவரும் திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு பெற்ற நாளன்றே வானதூதர் ஒருவர் அவர் முன்னின்று ரோஜா மலர் ஒன்றை கொடுத்து அவரை வாழ்த்தினார். அதன்பின்னர் வலேரியானூஸ் செசிலியாவை அவரின் விருப்பப்படி வாழ விட்டுவிட்டார். செசிலியாவை நம்பினார். வலேரியானூஸ் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபைக்கு மனமாற்றினார். அவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்ற நாளிலிருந்து செசிலியாவிற்கு பணிந்து இரவும் பகலும் அவருக்கு பணிவிடை புரிந்தனர்.
செசிலியா, தான் மணந்த வலேரியானூசின் உதவியுடன் கடவுளின் அன்பை சுவைத்து வாழ்ந்தார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டி, அனைவரையும் சமமாக அன்பு செய்தார். இறைவனை இரவும் பகலும் பாடல்களால் போற்றிப் புகழ்ந்தார். இவரின் பக்தியைக் கண்ட எதிரிகள், கொதிக்கும் சூடான நீரில் அவரை மூழ்கடித்து, அக்கொடியவர்களின் ஆசைத் தீர அணுஅணுவாக கொன்றனர். கொதிக்கும் சூடான நீரில் இவர் மூன்று நாள் எத்தீக்காயமும் இல்லாமல் உயிருடனே இருந்தார்.
இவர் கிறிஸ்தவ பெண்கள் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புக்காக கன்னிமை காத்து வாழ்ந்தார். அவருக்காக மறைசாட்சியாகவும் மரித்தார்.
Back to top
நவம்பர் 23
✠ முத்திப்பேறு. மிகுவேல் அகஸ்டின் ப்ரோ ✠
( Bl. Miguel Agustín Pro )
கிறிஸ்து அரசரின் பெயரைச் சொல்லியபடி உயிர்த் தியாகம் செய்த அருட்பணியாளர்/ மறைசாட்சி :
பிறப்பு : ஜனவரி 13, 1891
மெக்சிகோவின் குவாதலுபே
இறப்பு : நவம்பர் 23, 1927 ( அகவை 36 )
மெக்சிகோ
முக்திப்பேறு : செப்டம்ப 25, 1988
திருத்தந்தை புனித 2ம் ஜான்பால்
நினைவுத் திருநாள் : நவம்பர் 23
1891ம் ஆண்டு, மெக்சிகோவின் குவாதலுபே எனுமிடத்தில் பிறந்தவர் மிகுவேல், 1911ம் ஆண்டு, தன் 20வது வயதில் "இயேசு சபையில்" இணைந்தார். 1920களில் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக மெக்சிகோ நாட்டில் உருவான அடக்குமுறை அரசை எதிர்த்துப் போராடியவர்கள், "கிறிஸ்து அரசர் பல்லாண்டு வாழ்க!" என்ற விருது வாக்குடன் போராடிவந்தனர். இந்தப் போராட்டக் குழுவினர், 'Cristeros' என்று அழைக்கப்பட்டனர். 1925ம் ஆண்டு, தன் 34வது வயதில் அருட்பணியாளராகத் திருநிலைபடுத்தப்பட்ட மிகுவேல் ப்ரோ அவர்கள், 'Cristeros' குழுவில் இணைந்து, மிகுந்த துணிவுடனும், நுண்மதியுடனும் மக்களுக்குத் தேவையான அருள் பணிகள் பலவற்றை ஆற்றிவந்தார்.
1927ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி. மெக்சிகோ நாட்டில் இந்த இளம் இயேசு சபை அருட்பணியாளருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதுவும், ஒரு பொதுவான இடத்தில், காவல் துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்படவேண்டும் என்று மெக்சிகோ அரசுத் தலைவர் Plutarco Calles ஆணையிட்டார். காவல் துறையினர் அவரைச் சுடுவதற்கு துப்பாக்கிகளை உயர்த்தியதும், இந்த இளம் குரு அச்சமுற்று, தன் கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டு, மன்னிப்பு கேட்பார் என்று அரசுத் தலைவர் எதிர்பார்த்தார். இளம் குரு மன்னிப்பு வேண்டுவதை செய்தித்தாள் நிருபர்கள் காணவேண்டும் என்று எண்ணி, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அவர்களை அரசுத்தலைவர் அழைத்திருந்தார்.
இளம் குருவை ஒரு சுவருக்கருகே நிறுத்தினர் காவல் துறையினர். அவருடைய இறுதி ஆவல் என்ன என்று கேட்ட காவல் துறை அதிகாரியிடம், தான் சிறிது நேரம் செபிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, செபித்தார். தான் கொண்டுவந்திருந்த சிலுவையை எடுத்து, ஆழ்ந்த அன்புடன் அதை முத்தமிட்டார். பின்னர், அந்தச் சிலுவையைத் தன் வலது கரத்திலும், செபமாலையை இடது கரத்திலும் ஏந்தியபடி, இரு கரங்களையும் விரித்து நின்று, "கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!" என்று உரத்த குரலில் முழங்கினார். அந்நேரம், காவல் துறையினரின் குண்டுகள் அவர் மீது பாய 36 வயது நிறைந்த அந்த இளம் இயேசு சபை அருட்பணியாளர், மிகுவேல் அகஸ்டின் ப்ரோ (José Ramón Miguel Agustín Pro Juárez) தன் உயிரை கிறிஸ்து அரசர் பாதங்களில் அர்ப்பணம் செய்தார்.
கிறிஸ்து அரசரின் பெயரைச் சொல்லியபடி, தன் 36வது வயதில் இளம் இயேசு சபை அருட்பணியாளர் மிகுவேல், ஒரு மறைசாட்சியாக உயிர் துறந்தார். மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் பல கோணங்களில் புகைப்படங்களாய் எடுக்கப்பட்டன. அவற்றை, அரசுத்தலைவர் Calles, அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் அச்சிட கட்டளையிட்டார். மிகுவேல் அவர்களின் கோரமான மரணத்தைக் காணும் Cristeros குழுவினர், தங்கள் போராட்டத்தைக் கைவிடுவர் என்று அரசுத் தலைவர் எண்ணினார். ஆனால், மிகுவேல் அவர்களின் வீர மரணத்திற்குப் பிறகு, போராட்டம் இன்னும் வலுவடைந்தது. அவர்களில் பலர் தங்கள் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது, மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் அச்சிடப்பட்ட செய்தித்தாள் படங்களைத் தாங்கியபடி உயிர் துறந்தனர்.
1988ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், மறைசாட்சியாக உயிர் துறந்த மிகுவேல் ப்ரோ அவர்களை, முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
Back to top
✠ முத்திப்பேறு. மிகுவேல் அகஸ்டின் ப்ரோ ✠
( Bl. Miguel Agustín Pro )
கிறிஸ்து அரசரின் பெயரைச் சொல்லியபடி உயிர்த் தியாகம் செய்த அருட்பணியாளர்/ மறைசாட்சி :
பிறப்பு : ஜனவரி 13, 1891
மெக்சிகோவின் குவாதலுபே
இறப்பு : நவம்பர் 23, 1927 ( அகவை 36 )
மெக்சிகோ
முக்திப்பேறு : செப்டம்ப 25, 1988
திருத்தந்தை புனித 2ம் ஜான்பால்
நினைவுத் திருநாள் : நவம்பர் 23
1891ம் ஆண்டு, மெக்சிகோவின் குவாதலுபே எனுமிடத்தில் பிறந்தவர் மிகுவேல், 1911ம் ஆண்டு, தன் 20வது வயதில் "இயேசு சபையில்" இணைந்தார். 1920களில் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக மெக்சிகோ நாட்டில் உருவான அடக்குமுறை அரசை எதிர்த்துப் போராடியவர்கள், "கிறிஸ்து அரசர் பல்லாண்டு வாழ்க!" என்ற விருது வாக்குடன் போராடிவந்தனர். இந்தப் போராட்டக் குழுவினர், 'Cristeros' என்று அழைக்கப்பட்டனர். 1925ம் ஆண்டு, தன் 34வது வயதில் அருட்பணியாளராகத் திருநிலைபடுத்தப்பட்ட மிகுவேல் ப்ரோ அவர்கள், 'Cristeros' குழுவில் இணைந்து, மிகுந்த துணிவுடனும், நுண்மதியுடனும் மக்களுக்குத் தேவையான அருள் பணிகள் பலவற்றை ஆற்றிவந்தார்.
1927ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி. மெக்சிகோ நாட்டில் இந்த இளம் இயேசு சபை அருட்பணியாளருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதுவும், ஒரு பொதுவான இடத்தில், காவல் துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்படவேண்டும் என்று மெக்சிகோ அரசுத் தலைவர் Plutarco Calles ஆணையிட்டார். காவல் துறையினர் அவரைச் சுடுவதற்கு துப்பாக்கிகளை உயர்த்தியதும், இந்த இளம் குரு அச்சமுற்று, தன் கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டு, மன்னிப்பு கேட்பார் என்று அரசுத் தலைவர் எதிர்பார்த்தார். இளம் குரு மன்னிப்பு வேண்டுவதை செய்தித்தாள் நிருபர்கள் காணவேண்டும் என்று எண்ணி, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அவர்களை அரசுத்தலைவர் அழைத்திருந்தார்.
இளம் குருவை ஒரு சுவருக்கருகே நிறுத்தினர் காவல் துறையினர். அவருடைய இறுதி ஆவல் என்ன என்று கேட்ட காவல் துறை அதிகாரியிடம், தான் சிறிது நேரம் செபிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, செபித்தார். தான் கொண்டுவந்திருந்த சிலுவையை எடுத்து, ஆழ்ந்த அன்புடன் அதை முத்தமிட்டார். பின்னர், அந்தச் சிலுவையைத் தன் வலது கரத்திலும், செபமாலையை இடது கரத்திலும் ஏந்தியபடி, இரு கரங்களையும் விரித்து நின்று, "கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!" என்று உரத்த குரலில் முழங்கினார். அந்நேரம், காவல் துறையினரின் குண்டுகள் அவர் மீது பாய 36 வயது நிறைந்த அந்த இளம் இயேசு சபை அருட்பணியாளர், மிகுவேல் அகஸ்டின் ப்ரோ (José Ramón Miguel Agustín Pro Juárez) தன் உயிரை கிறிஸ்து அரசர் பாதங்களில் அர்ப்பணம் செய்தார்.
கிறிஸ்து அரசரின் பெயரைச் சொல்லியபடி, தன் 36வது வயதில் இளம் இயேசு சபை அருட்பணியாளர் மிகுவேல், ஒரு மறைசாட்சியாக உயிர் துறந்தார். மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் பல கோணங்களில் புகைப்படங்களாய் எடுக்கப்பட்டன. அவற்றை, அரசுத்தலைவர் Calles, அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் அச்சிட கட்டளையிட்டார். மிகுவேல் அவர்களின் கோரமான மரணத்தைக் காணும் Cristeros குழுவினர், தங்கள் போராட்டத்தைக் கைவிடுவர் என்று அரசுத் தலைவர் எண்ணினார். ஆனால், மிகுவேல் அவர்களின் வீர மரணத்திற்குப் பிறகு, போராட்டம் இன்னும் வலுவடைந்தது. அவர்களில் பலர் தங்கள் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது, மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் அச்சிடப்பட்ட செய்தித்தாள் படங்களைத் தாங்கியபடி உயிர் துறந்தனர்.
1988ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், மறைசாட்சியாக உயிர் துறந்த மிகுவேல் ப்ரோ அவர்களை, முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
Back to top
நவம்பர் 24
✠ புனித ஆண்ட்ரூ, டங்-லாக் மற்றும் குழுவினர் ✠
(St. Andrew Dung-Lac and Companions)
நினைவுத் திருநாள் : நவம்பர் 24
கம்யூனிச அடக்குமுறையிலும் தழைத்து வளர்ந்த கிறிஸ்தவம்!
வியட்னாமை, டான்கின், அன்னாம், கோகின் சினா ஆகிய மூன்று அரசுகள் ஆட்சி செய்துவந்த காலத்தில் போர்த்துக்கீசியர்கள் வழியாக அந்நாட்டில் கிறிஸ்தவம் பரவியது.
1615ம் ஆண்டில் Da Nang என்ற இடத்தில் இயேசு சபையினர் மறைப்பணித்தளத்தை ஆரம்பிதனர். ஜப்பானில் கிறிஸ்தவத்துக்கு எதிராக நடந்த அடக்குமுறைகளுக்குத் தப்பிவந்த ஜப்பானியர்களுக்கு இவர்கள் மறைப் பணியாற்றினார்கள். ஆனால் வியட்நாமை ஆட்சி செய்த அரசர்களில் ஒருவர் அனைத்து வெளிநாட்டு மறைபோதகர்களையும் தடை செய்தார்.
கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட வியட்நாம் நாட்டினர் அனைவரையும் விசுவாசத்தை மறுதலிக்குமாறு சிலுவையில் அறைந்து துன்புறுத்தினார்.
1820ம் ஆண்டுக்குப் பின்னர் அறுபது ஆண்டுகளுக்கு இக்கொடுமைகள் அதிகரித்தன. அச்சமயத்தில் ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சம் கத்தோலிக்கர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் மிகவும் கடினமான வேலைகள் கொடுக்கப்பட்டனர். இதில் பல வெளிநாட்டவரும் கொல்லப்பட்டனர். வியட்நாம் பேரரசர் மின்ங் மான்ங் என்பவரின் மகன்களில் ஒருவரால் வழிநடத்தப்பட்ட கிளர்ச்சிக்கு வியட்னாம் கிறிஸ்தவர்களும் வெளிநாட்டு மறைப்பணியாளர்களும் ஆதரவு தருகின்றார்கள் என்று சந்தேகப்பட்டு 1847ல் அடக்குமுறைகள் அதிகமாயின.
1862ம் ஆண்டில் ஒன்பது வயது சிறுவன் உட்பட 17 பொதுநிலையினர் கொல்லப்பட்டனர். 1839ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஹனோய்ப் பகுதியில் 117 பேர் தலைவெட்டி கொலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆன்ட்ரூ டுங் லாக். வியட்னாமின் வட பகுதியில் வாழ்ந்த இவரது ஏழைக் குடும்பம், பிழைப்பு தேடி ஹனோய்ப் பகுதிக்குச் சென்றது. அப்போது இவர் கிறிஸ்தவம் பற்றி அறிந்து அதை ஏற்றார். 1823ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி குருத்துவ அருள்பொழிவும் பெற்றார் ஆன்ட்ரூ. இவரது வாழ்வுமுறை மற்றும் போதனையினால் மக்கள் பெருமளவில் திருமுழுக்குப் பெற்றனர்.
கிறிஸ்தவர்களை வெறித்தனத்தோடு கொலைசெய்துவந்த பேரரசர், ஆன்ட்ரூவைக் கைது செய்தார். ஆயினும் துறவற சபை அருட்பணியாளர்கள் பணம் கொடுத்து இவரை மீட்டனர். இப்படி மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டார் ஆன்ட்ரூ. இறுதியில் கொலை செய்யப்பட்டார்.
Back to top
✠ புனித ஆண்ட்ரூ, டங்-லாக் மற்றும் குழுவினர் ✠
(St. Andrew Dung-Lac and Companions)
நினைவுத் திருநாள் : நவம்பர் 24
கம்யூனிச அடக்குமுறையிலும் தழைத்து வளர்ந்த கிறிஸ்தவம்!
வியட்னாமை, டான்கின், அன்னாம், கோகின் சினா ஆகிய மூன்று அரசுகள் ஆட்சி செய்துவந்த காலத்தில் போர்த்துக்கீசியர்கள் வழியாக அந்நாட்டில் கிறிஸ்தவம் பரவியது.
1615ம் ஆண்டில் Da Nang என்ற இடத்தில் இயேசு சபையினர் மறைப்பணித்தளத்தை ஆரம்பிதனர். ஜப்பானில் கிறிஸ்தவத்துக்கு எதிராக நடந்த அடக்குமுறைகளுக்குத் தப்பிவந்த ஜப்பானியர்களுக்கு இவர்கள் மறைப் பணியாற்றினார்கள். ஆனால் வியட்நாமை ஆட்சி செய்த அரசர்களில் ஒருவர் அனைத்து வெளிநாட்டு மறைபோதகர்களையும் தடை செய்தார்.
கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட வியட்நாம் நாட்டினர் அனைவரையும் விசுவாசத்தை மறுதலிக்குமாறு சிலுவையில் அறைந்து துன்புறுத்தினார்.
1820ம் ஆண்டுக்குப் பின்னர் அறுபது ஆண்டுகளுக்கு இக்கொடுமைகள் அதிகரித்தன. அச்சமயத்தில் ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சம் கத்தோலிக்கர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் மிகவும் கடினமான வேலைகள் கொடுக்கப்பட்டனர். இதில் பல வெளிநாட்டவரும் கொல்லப்பட்டனர். வியட்நாம் பேரரசர் மின்ங் மான்ங் என்பவரின் மகன்களில் ஒருவரால் வழிநடத்தப்பட்ட கிளர்ச்சிக்கு வியட்னாம் கிறிஸ்தவர்களும் வெளிநாட்டு மறைப்பணியாளர்களும் ஆதரவு தருகின்றார்கள் என்று சந்தேகப்பட்டு 1847ல் அடக்குமுறைகள் அதிகமாயின.
1862ம் ஆண்டில் ஒன்பது வயது சிறுவன் உட்பட 17 பொதுநிலையினர் கொல்லப்பட்டனர். 1839ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஹனோய்ப் பகுதியில் 117 பேர் தலைவெட்டி கொலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆன்ட்ரூ டுங் லாக். வியட்னாமின் வட பகுதியில் வாழ்ந்த இவரது ஏழைக் குடும்பம், பிழைப்பு தேடி ஹனோய்ப் பகுதிக்குச் சென்றது. அப்போது இவர் கிறிஸ்தவம் பற்றி அறிந்து அதை ஏற்றார். 1823ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி குருத்துவ அருள்பொழிவும் பெற்றார் ஆன்ட்ரூ. இவரது வாழ்வுமுறை மற்றும் போதனையினால் மக்கள் பெருமளவில் திருமுழுக்குப் பெற்றனர்.
கிறிஸ்தவர்களை வெறித்தனத்தோடு கொலைசெய்துவந்த பேரரசர், ஆன்ட்ரூவைக் கைது செய்தார். ஆயினும் துறவற சபை அருட்பணியாளர்கள் பணம் கொடுத்து இவரை மீட்டனர். இப்படி மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டார் ஆன்ட்ரூ. இறுதியில் கொலை செய்யப்பட்டார்.
Back to top
கர்தினால் சார்லஸ் மார்டியல் அல்லெமாண்ட் லவிகேரீ Charles-Martial-Allemand Lavigerie
பிறப்பு
31 அக்டோபர் 1825,
பயோன்னே Bayonne, பிரான்சு
இறப்பு
25 நவம்பர் 1892,
அல்ஜீரியா
இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பேராசிரியராக பணியாற்றினார். 1863 ஆம் ஆண்டு நான்சி (Nancy) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1867 ல் அல்ஜீரியாவிற்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1882 ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் ஆப்ரிக்காவில் மறைபரப்புப் பணியை ஆற்றச் சென்றார். பின்னர் 1886 ல் "வெள்ளை அருள்தந்தையர்" (Weißen Vater) என்ற பெயரிலும் "வெள்ளை அருள்சகோதரிகள்" (Weißen Schwestern) என்ற பெயரிலும் சபை ஒன்றை நிறுவினார்.
இவர் ஆப்ரிக்காவில் முஸ்லீம் இன மக்களிடையே தன் மறைபரப்பு பணியை ஆற்றினார். ஆப்ரிக்காவின் பல்வேறு நகரங்களில் மறைபரப்பு மையங்களை நிறுவினார். பின்னர் மால்டாவில் Malta மறைக்கல்வி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். பின்னர் 12 நவம்பர் 1890 ல் மறைப்பணீயை பரப்புவதற்காக அல்ஜீரியாவிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு இவர் கார்த்தாகோவில் Karthago இருந்த பேராலயத்தில் பணிபுரிந்துவந்தார். பல இளைய பெண்களுக்கு வழிகாட்டி துறவியாக்கினார்.
செபம்:
நிறைவாழ்வளிக்கும் இறைவா! கர்தினால் சார்லசை நீர் படிப்படியாக உயர்த்தினீர். திருச்சபையின் வளர்ச்சிக்காக பல வித்தியாசமான முறையில் மறைப்பணியாற்றிய இவரைப்போல, ஒவ்வொரு மறைப்பணியாளர்களும் சிறப்பாக உம் சேவையில் ஈடுபட வரம்தந்து காத்து ஆசீர்வதித்து, வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
பிறப்பு
31 அக்டோபர் 1825,
பயோன்னே Bayonne, பிரான்சு
இறப்பு
25 நவம்பர் 1892,
அல்ஜீரியா
இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பேராசிரியராக பணியாற்றினார். 1863 ஆம் ஆண்டு நான்சி (Nancy) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1867 ல் அல்ஜீரியாவிற்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1882 ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் ஆப்ரிக்காவில் மறைபரப்புப் பணியை ஆற்றச் சென்றார். பின்னர் 1886 ல் "வெள்ளை அருள்தந்தையர்" (Weißen Vater) என்ற பெயரிலும் "வெள்ளை அருள்சகோதரிகள்" (Weißen Schwestern) என்ற பெயரிலும் சபை ஒன்றை நிறுவினார்.
இவர் ஆப்ரிக்காவில் முஸ்லீம் இன மக்களிடையே தன் மறைபரப்பு பணியை ஆற்றினார். ஆப்ரிக்காவின் பல்வேறு நகரங்களில் மறைபரப்பு மையங்களை நிறுவினார். பின்னர் மால்டாவில் Malta மறைக்கல்வி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். பின்னர் 12 நவம்பர் 1890 ல் மறைப்பணீயை பரப்புவதற்காக அல்ஜீரியாவிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு இவர் கார்த்தாகோவில் Karthago இருந்த பேராலயத்தில் பணிபுரிந்துவந்தார். பல இளைய பெண்களுக்கு வழிகாட்டி துறவியாக்கினார்.
செபம்:
நிறைவாழ்வளிக்கும் இறைவா! கர்தினால் சார்லசை நீர் படிப்படியாக உயர்த்தினீர். திருச்சபையின் வளர்ச்சிக்காக பல வித்தியாசமான முறையில் மறைப்பணியாற்றிய இவரைப்போல, ஒவ்வொரு மறைப்பணியாளர்களும் சிறப்பாக உம் சேவையில் ஈடுபட வரம்தந்து காத்து ஆசீர்வதித்து, வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Back to top
நவம்பர் 26
✠ புனித லியோனார்டு ✠
( St. Leonard of Port Maurice )
இத்தாலிய மறைப்பணியாளர் :
நினைவுத்திருநாள் : நவம்பர் 26
பிறப்பு : 20 டிசம்பர் 1676
போர்டோ மவுரிஷியோ, (Porto Maurizio) இத்தாலி
இறப்பு : 26 நவம்பர் 1751
உரோம்
முத்திபேறுபட்டம் : ஜூன் 19, 1796
திருத்தந்தை ஆறாம் பயஸ்
புனிதர்பட்டம் : 29 ஜூன் 1867
திருத்தந்தை 9 ஆம் பயஸ்
பாதுகாவல் : மறைப்பணியாளர்கள்
புனித லியோனார்டு, இத்தாலி நாட்டின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். இவர் தான் குருப்பட்டம் பெற்றபின் மறைப்பரப்பு பணியாளராக செயல்பட்டார். பயணங்கள் பல மேற்கொண்டு, ஊர் ஊராக சென்று மறையுரையாற்றினார். இவரின் மறையுரையால் பலர் கவர்ந்து, இவரை தொடர்ந்தனர். அனைத்து வித மக்களும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் மறையுரை ஆற்றும் திறமையை பெற்றிருந்தார். இயேசுவின் நற்செய்தியை மிக எளிய முறையில் அறிவித்தார்.
இவர் 1697ம் ஆண்டு புனித பிரான்சு அசிசியின் சபையில் சேர்ந்து பணியாற்றினார். அன்னை மரியாளுக்கு வணக்கத்தையும், சிலுவைப்பாதை வழிபாடுகளையும், எளிமையான முறையில் வழிநடத்தி அனைத்து மக்களையும் இறையுணர்வை கொண்டு வாழ செய்தார். இவர் இத்தாலியில் மட்டுமே 600 முறை சிலுவைப்பாதையை வழிநடத்தியுள்ளார். இவர் மருத்துவப்படிப்பையும் தத்துவயியலையும் கற்றிருந்தபோதும் கூட எளிமையாக வாழ்ந்து நற்செய்திக்கு சான்று பகிர்ந்தார்.
செபம் :
இயேசுவே இதயத்தின் ஒளிவிளக்கே!
உம் வார்த்தைகளை நாங்கள் நாளும் படிக்கவும் வாசிப்பதோடு மட்டும் விட்டுவிடாமல் அவை காட்டும் வழியில் சென்று, உம்மில் எம் வாழ்வை செம்மையாக்கி, சீர்படுத்தி வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று தூய ஆவியின் வழியாக புனித லியோனார்டின் பரிந்துரையை பெற உதவியருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்
Back to top
✠ புனித லியோனார்டு ✠
( St. Leonard of Port Maurice )
இத்தாலிய மறைப்பணியாளர் :
நினைவுத்திருநாள் : நவம்பர் 26
பிறப்பு : 20 டிசம்பர் 1676
போர்டோ மவுரிஷியோ, (Porto Maurizio) இத்தாலி
இறப்பு : 26 நவம்பர் 1751
உரோம்
முத்திபேறுபட்டம் : ஜூன் 19, 1796
திருத்தந்தை ஆறாம் பயஸ்
புனிதர்பட்டம் : 29 ஜூன் 1867
திருத்தந்தை 9 ஆம் பயஸ்
பாதுகாவல் : மறைப்பணியாளர்கள்
புனித லியோனார்டு, இத்தாலி நாட்டின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். இவர் தான் குருப்பட்டம் பெற்றபின் மறைப்பரப்பு பணியாளராக செயல்பட்டார். பயணங்கள் பல மேற்கொண்டு, ஊர் ஊராக சென்று மறையுரையாற்றினார். இவரின் மறையுரையால் பலர் கவர்ந்து, இவரை தொடர்ந்தனர். அனைத்து வித மக்களும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் மறையுரை ஆற்றும் திறமையை பெற்றிருந்தார். இயேசுவின் நற்செய்தியை மிக எளிய முறையில் அறிவித்தார்.
இவர் 1697ம் ஆண்டு புனித பிரான்சு அசிசியின் சபையில் சேர்ந்து பணியாற்றினார். அன்னை மரியாளுக்கு வணக்கத்தையும், சிலுவைப்பாதை வழிபாடுகளையும், எளிமையான முறையில் வழிநடத்தி அனைத்து மக்களையும் இறையுணர்வை கொண்டு வாழ செய்தார். இவர் இத்தாலியில் மட்டுமே 600 முறை சிலுவைப்பாதையை வழிநடத்தியுள்ளார். இவர் மருத்துவப்படிப்பையும் தத்துவயியலையும் கற்றிருந்தபோதும் கூட எளிமையாக வாழ்ந்து நற்செய்திக்கு சான்று பகிர்ந்தார்.
செபம் :
இயேசுவே இதயத்தின் ஒளிவிளக்கே!
உம் வார்த்தைகளை நாங்கள் நாளும் படிக்கவும் வாசிப்பதோடு மட்டும் விட்டுவிடாமல் அவை காட்டும் வழியில் சென்று, உம்மில் எம் வாழ்வை செம்மையாக்கி, சீர்படுத்தி வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று தூய ஆவியின் வழியாக புனித லியோனார்டின் பரிந்துரையை பெற உதவியருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்
Back to top
நவம்பர் 27
ஆல்ட்முயூன்ஸ்டர் நகர் துறவி பில்ஹில்டிஸ் Bilhildis von Altmünster
பிறப்பு
7 ஆம் நூற்றாண்டு,
பவேரியா
இறப்பு
734,
மைன்ஸ் Mainz, Germany
இவரைப்பற்றிய வரலாறு அதிகம் அறியப்படவில்லை. இவர் இளம் வயதிலேயே திருமணம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகின்றது. தூரின் நாட்டு அரசர் முதல் ஹெட்டான் (Hetan I) என்பவர் இவரின் கணவர். பில்ஹில்டிஸ் தன் கணவரையும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மனந்திருப்பி, கிறிஸ்துவ மறையை பின்பற்றச் செய்தார். என்று சொல்லப்படுகின்றது. பில்ஹில்டிஸின் கணவர் இறந்தபிறகு விதவையான இவர் தன் மாமா பேராயராக இருந்ததால் பல விதங்களிலும் அவருக்கு உதவி செய்துள்ளார்.
பின்னர் ஆல்ட்முயூன்ஸ்டர் சென்று அங்கு ஒரு துறவற மடத்தில் சேர்ந்து பல நாட்கள் கழித்து துறவியானார் என்று கூறப்படுகின்றது. இவர் இறக்கும் வரை மிகப் பக்தியுள்ள சிறந்த துறவியாக வாழ்ந்துள்ளார். இவர் இறந்தபிறகு எங்கு புதைக்கப்பட்டார் என்று கண்டறிய இயலவில்லை.
செபம்:
உயிரளிக்கும் இறைவா! துறவியான பில்ஹில்டிஸின் வழியாக நீர் எம் திருச்சபைக்கு ஆற்றிய நன்மைக்களுக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். இன்றைய உலகில் வாழும் அரசர் குடும்பங்களை ஆசீர்வதித்து நீர் தொடர்ந்து வழிநடத்தியருள வேண்டுமென்று தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
ஆல்ட்முயூன்ஸ்டர் நகர் துறவி பில்ஹில்டிஸ் Bilhildis von Altmünster
பிறப்பு
7 ஆம் நூற்றாண்டு,
பவேரியா
இறப்பு
734,
மைன்ஸ் Mainz, Germany
இவரைப்பற்றிய வரலாறு அதிகம் அறியப்படவில்லை. இவர் இளம் வயதிலேயே திருமணம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகின்றது. தூரின் நாட்டு அரசர் முதல் ஹெட்டான் (Hetan I) என்பவர் இவரின் கணவர். பில்ஹில்டிஸ் தன் கணவரையும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மனந்திருப்பி, கிறிஸ்துவ மறையை பின்பற்றச் செய்தார். என்று சொல்லப்படுகின்றது. பில்ஹில்டிஸின் கணவர் இறந்தபிறகு விதவையான இவர் தன் மாமா பேராயராக இருந்ததால் பல விதங்களிலும் அவருக்கு உதவி செய்துள்ளார்.
பின்னர் ஆல்ட்முயூன்ஸ்டர் சென்று அங்கு ஒரு துறவற மடத்தில் சேர்ந்து பல நாட்கள் கழித்து துறவியானார் என்று கூறப்படுகின்றது. இவர் இறக்கும் வரை மிகப் பக்தியுள்ள சிறந்த துறவியாக வாழ்ந்துள்ளார். இவர் இறந்தபிறகு எங்கு புதைக்கப்பட்டார் என்று கண்டறிய இயலவில்லை.
செபம்:
உயிரளிக்கும் இறைவா! துறவியான பில்ஹில்டிஸின் வழியாக நீர் எம் திருச்சபைக்கு ஆற்றிய நன்மைக்களுக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். இன்றைய உலகில் வாழும் அரசர் குடும்பங்களை ஆசீர்வதித்து நீர் தொடர்ந்து வழிநடத்தியருள வேண்டுமென்று தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.
Back to top
நவம்பர் 28
✠ மார்ச்சிஸ் நகர் புனித ஜேம்ஸ் O.F.M. ✠
(St. James of the Marches, O.F.M.)
துறவி :
பிறப்பு : 1391
மோண்டே ப்ராண்டோனே Monte Prandone, இத்தாலி
இறப்பு : 28 நவம்பர் 1476
நேயாப்பல், இத்தாலி
அருளாளர் பட்டம் : 1624
திருத்தந்தை எட்டாவது ஊர்பன்
புனிதர் பட்டம் : 10 டிசம்பர் 1726
திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
புனித ஜேம்ஸ், சியென்னா நகர் (Siena) பெர்ன்ஹார்டின் Bernhardin மாணவர். இவர் திருச்சபையை பற்றி தவறாக போதித்தவர்களுக்கு எதிராக மிக அருமையாக சொற்பொழிவாற்றி மறைப்பணியாற்றினார். இத்தாலி முழுவதிலுமிருந்த பிற இனப் பிரிவினை சபைகளின் போதனைகளை எதிர்த்து கிறிஸ்தவ மறையை வளர்த்தார். 1437ம் ஆண்டு ஹங்கேரி மற்றும் போய்மன் (Böhmen) நாடுகளுக்கு சென்று மறைப்பணியாற்றினார். இவர் தான் போதித்தவைகளை பற்றி கடிதங்களை எழுதியுள்ளார். பிரான்சிஸ்கன் சபையில் சிறந்த மறைப்போதனையாளர்களில் இவரும் ஒருவராவார்.
செபம் :
படைப்புகளை பராமரித்தாளும் பரம்பொருளே எம் இறைவா! இன்றைய இப்புனிதரின் விழாவை சிறப்பிக்கும் ஒவ்வொரு உள்ளங்களையும் ஆசிர்வதியும். சிறப்பாக புனித பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளை ஆசீர்வதித்து, பாதுகாத்து பராமரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்
Back to top
நவம்பர் 29
✠ புனித சட்டுர்னினுஸ் ✠
( St. Saturninus )
தூலூஸ் நகர் ஆயர் :
நினைவுத் திருநாள் : நவம்பர் 29
பிறப்பு : 2 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 250
தூலூஸ், பிரான்சு
பாதுகாவல் :
தூலூஸ் நகர், தலைவலியிருந்து, சாவு பயத்திலிருந்து
புனித சட்டுர்னினுஸ் மிகப் பெரிய மரியாதைக்குரிய மனிதராக திகழ்ந்தார். இவர் 236-250ம் ஆண்டுவரை திருத்தந்தை ஃபபியான் Fabian அவர்களால் மறைப்பரப்பு பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர். இவர் ஓர் சிறந்த மறைபரப்பு பணியாளர்.
இவர் காலியன் Gallien என்ற நகருக்கு கைதியாக கொண்டு போகப்பட்டார். இவர் தனது மறைபரப்பு பணியின்போது பலரை மனந்திருப்பி, திருமுழுக்குக்கொடுத்து பணியாற்றியுள்ளார். நற்செய்தியை பரப்புவதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுள்ளார்.
கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தவர். இதனால் திருத்தந்தை ஃபபியான் இவரை தூலூஸ் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுத்தார். இவர் தூலூஸ் நகரின் "முதல் ஆயர்" என்ற பெருமைக்குரியவர். இவர் மறைப்பணிக்காக செல்லும்போது, காட்டுவிலங்கு ஒன்று இவரை கடித்துக்கொன்றது என்று கூறப்படுகின்றது.
செபம் :
இரக்கமே உருவான இறைவா!
தூலூஸ் நகர் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வாழ ஊக்கமூட்டியருளும். கிறிஸ்துவ மக்கள் ஒவ்வொருவரும் உமது நெறியில் வாழ்ந்து தொடர்ந்து உம் அன்பை சுவைக்க வரம் தாரும். ஆமென்
Back to top
✠ புனித சட்டுர்னினுஸ் ✠
( St. Saturninus )
தூலூஸ் நகர் ஆயர் :
நினைவுத் திருநாள் : நவம்பர் 29
பிறப்பு : 2 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 250
தூலூஸ், பிரான்சு
பாதுகாவல் :
தூலூஸ் நகர், தலைவலியிருந்து, சாவு பயத்திலிருந்து
புனித சட்டுர்னினுஸ் மிகப் பெரிய மரியாதைக்குரிய மனிதராக திகழ்ந்தார். இவர் 236-250ம் ஆண்டுவரை திருத்தந்தை ஃபபியான் Fabian அவர்களால் மறைப்பரப்பு பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர். இவர் ஓர் சிறந்த மறைபரப்பு பணியாளர்.
இவர் காலியன் Gallien என்ற நகருக்கு கைதியாக கொண்டு போகப்பட்டார். இவர் தனது மறைபரப்பு பணியின்போது பலரை மனந்திருப்பி, திருமுழுக்குக்கொடுத்து பணியாற்றியுள்ளார். நற்செய்தியை பரப்புவதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுள்ளார்.
கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தவர். இதனால் திருத்தந்தை ஃபபியான் இவரை தூலூஸ் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுத்தார். இவர் தூலூஸ் நகரின் "முதல் ஆயர்" என்ற பெருமைக்குரியவர். இவர் மறைப்பணிக்காக செல்லும்போது, காட்டுவிலங்கு ஒன்று இவரை கடித்துக்கொன்றது என்று கூறப்படுகின்றது.
செபம் :
இரக்கமே உருவான இறைவா!
தூலூஸ் நகர் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வாழ ஊக்கமூட்டியருளும். கிறிஸ்துவ மக்கள் ஒவ்வொருவரும் உமது நெறியில் வாழ்ந்து தொடர்ந்து உம் அன்பை சுவைக்க வரம் தாரும். ஆமென்
Back to top
நவம்பர் 30
✠ புனித அந்திரேயா ✠
( St. Andrew )
திருத்தூதர்/ முதல் அழைப்பு பெற்றவர்/
கிறிஸ்துவை அறிமுகம் செய்பவர் :
( Apostle )
பிறப்பு : கிபி 1 (முற்பகுதி)
பெத்சாயிதா
இறப்பு : கிபி 1 (பிற்பகுதி)
பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டார்
ஏற்கும் சபை/ சமயம் : எல்லா கிறிஸ்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள் : புனித அந்திரேயா ஆலயம், பத்ராஸ்
நினைவுத் திருவிழா : நவம்பர் 30
சித்தரிக்கப்படும் வகை :
'X' வடிவ சிலுவை, ஏட்டுச்சுறுள்
பாதுகாவல் :
இசுக்காட்லாந்து, உக்ரைன், உருசியா, சிசிலி, கிரேக்க நாடு, பிலிப்பைன்ஸ், உருமேனியா, மீனவர், கடற்படையினர், தரை படையினர், கையிறு நெய்பவர், பாடகர்.
புனித அந்திரேயா (அ) புனித பெலவேந்திரர் 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர்.
இவர் புனித பேதுருவின் சகோதரர். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர், மீன் பிடித்து வந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்தார். பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவான் 1:29-39).
அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே. கோவிலின் அழிவை முன்னறிவித்த போது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவர் இவரே.
தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டைன் பேரரசு மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார்.
பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றார். புனித அந்திரேயா ஆலயம், பத்ராசில் இவரது புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது
Back to top
✠ புனித அந்திரேயா ✠
( St. Andrew )
திருத்தூதர்/ முதல் அழைப்பு பெற்றவர்/
கிறிஸ்துவை அறிமுகம் செய்பவர் :
( Apostle )
பிறப்பு : கிபி 1 (முற்பகுதி)
பெத்சாயிதா
இறப்பு : கிபி 1 (பிற்பகுதி)
பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டார்
ஏற்கும் சபை/ சமயம் : எல்லா கிறிஸ்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள் : புனித அந்திரேயா ஆலயம், பத்ராஸ்
நினைவுத் திருவிழா : நவம்பர் 30
சித்தரிக்கப்படும் வகை :
'X' வடிவ சிலுவை, ஏட்டுச்சுறுள்
பாதுகாவல் :
இசுக்காட்லாந்து, உக்ரைன், உருசியா, சிசிலி, கிரேக்க நாடு, பிலிப்பைன்ஸ், உருமேனியா, மீனவர், கடற்படையினர், தரை படையினர், கையிறு நெய்பவர், பாடகர்.
புனித அந்திரேயா (அ) புனித பெலவேந்திரர் 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர்.
இவர் புனித பேதுருவின் சகோதரர். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர், மீன் பிடித்து வந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்தார். பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவான் 1:29-39).
அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே. கோவிலின் அழிவை முன்னறிவித்த போது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவர் இவரே.
தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டைன் பேரரசு மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார்.
பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றார். புனித அந்திரேயா ஆலயம், பத்ராசில் இவரது புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது
Back to top