- கேள்வி பதில்
- விவிலியப் புத்தகங்கள்
நன்றி : இக்கட்டுரையின் ஆங்கில மூலம்
http://www.catholicbible101.com/thebible73or66books.htm
ஏன் கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்களையும், பிரிவினை சபை வேதாகமங்கள் 66 புத்தகங்களையும் கொண்டுள்ளன ?
மார்டின் லூதரின் மறுமலர்ச்சிக்குப் பின் ட்ரென்ட் சங்கத்தினரால் கத்தோலிக்கத் திருச்சபை 7 புத்தகங்களைக் கூடுதலாகச் சேர்த்துக் கொண்டது என்ற கூற்று முற்றிலும் தவறானது .
பழைய ஏற்பாட்டைப் பற்றிப் பார்ப்போம். பழைய ஏற்பாட்டைப் பற்றிய எந்த ஒரு ஆதாரப்பூர்வமான அறிக்கையையும் யூதர்கள் வெளியிடவில்லை .சதுசேயர், மோயீசன் எழுதியதாகக் கூறும் பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களை மட்டுமே நம்புகின்றனர். பரிசேயரோ 34 புத்தகங்களை நம்புகின்றனர் .
ஆனால் டியாஸ்போரா நகரத்தில் உள்ள சில யூதர்கள் (அதாவது பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின் சிதறிய யூதர்) இந்த 7 புத்தகங்கள் உள்ளடக்கிய பழைய ஏற்பாடு நூலை ஏற்றுக் கொண்டுள்ளனர் . இந்த 7 நூல்களும் இறையாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை என்று நம்புகின்றனர் . டியாஸ்போரா யூதர்களைப் பற்றி யேசு பேசும்போது செப்டிஹின்ட் பதிப்பை மேற்கோள் காட்டுகிறார். எபிரேய மொழிபெயர்ப்பாளர்கள் 70 பேரால் மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாட்டுப் பதிப்பே செப்டிஹின்ட் பதிப்பு. வேதாகமம் என்று பிரிவினை சபையினரால் ஏற்றுக்கொள்ளப்படாத 7 புத்தகங்களும் இந்த செப்டிஹின்ட் பதிப்பில் அடக்கம் .
கி பி 367 இல் புனித அத்தனாசியார் 73 புத்தகங்களை தேவ ஆவியால் தூண்டப்பட்டு எழுதப்பட்டதாகக் கூறுகிறார் . கி பி 382 இல் திருத்தந்தை முதலாம் தமஸ்குஸ் என்பவரால் இறுதியாக அங்கீகரிக்கப்பட்டு அதே வருடம் உரோமையில் உள்ள திருச்சபை சங்கத்தினரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது .பின்பு ஹிப்போ (393 கிபி )மற்றும் கார்தேஜ் (கி பி 397 ) சங்கங்கள் 73 புத்தகங்களின் பட்டியலை உறுதி செய்தன . கி பி 405 இல் திருத்தந்தை முதலாம் இன்னொசென்ட் (Innocent I) டூலோஸ் ஆயருக்கு 73 புத்தகப் பட்டியலைப் பற்றி எழுதுகிறார் . கி பி 419ல் கார்த்தேஜ் சங்கம் பட்டியலை மீண்டும் உறுதிப்படுத்த , திருத்தந்தை போனிப்பாஸ் சம்மதிக்கிறார் . கி பி 1546ல், லூதரின் மறுமலர்ச்சிக்குப் பின் கூடிய டிரெண்ட் கவுன்சில், லூதரின் மறுமலர்ச்சியின் போது நீக்கப்பட்ட 7 புத்தகங்களை இணைத்து , புனித அத்தனாசியார் தந்த 73 புத்தகங்களின் பட்டியலை உறுதி செய்தது . (லூதரன் சபை உருவான ஆண்டு 1517 கிபி . லூதர் இந்த 7 புத்தகங்களை நீக்கியிருந்தார் )
என்ன நடந்தது ? பிரிவினை சபை விவிலியங்களான ஜேம்ஸ் மன்னன்(king james version ) மற்றும் லூத்தரன் பதிப்புக்களில் ஏன் 66 புத்தகங்களே உள்ளன ? மார்டின் லூதருக்குத் தனது சுய இறையியல் கருத்துக்கு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்த இந்த 7 புத்தகங்கள் பிடிக்கவே இல்லை . எனவே பழைய ஏற்பாட்டு நூலில் இருந்த இந்த 7 புத்தகங்களை அவர் நீக்கி விட்டார்.
அதோடு, ஜாம்னியாவில் கி பி 90 ஆம் ஆண்டில் இருந்த யூத சங்கம் இந்த நூல்களைத் தகுதியுள்ளவை என்று கருதாததால் லூதரும் இவற்றை தகுதியுள்ளவை என்று கருதவில்லை . இந்த ஜாம்னியா யூதச் சங்கம் என்பது என்ன? கி பி 70ஆம் நூற்றாண்டில் ஜெருசலேம் சித்திரவதைக்குப் பின் மீதமிருந்த பாலஸ்தீனிய யூதர்களின் கூட்டமே ஜாம்னியா யூத சங்கம் .
இந்த ஜாம்னியா யூத சங்கம் பற்றி பிறகு விவரிக்கிறோம் .
துவக்கத்தில் மார்டின் லூத்தர் இந்த 7 புத்தகங்களை மட்டும் அல்லாது சில புதிய ஏற்பாட்டு நூல்களான யாக்கோபு , யூதா, திருவெளிப்பாடு ,எபிரேயர் ஆகியவற்றையும் நீக்கவே விரும்பினார். "தீயில் இவற்றை எறிய இருப்பதாக " குறிப்பிட்டார் . யாக்கோபின் நிருபம் ஒரு வைக்கோல் துரும்பு என்றார். இறுதியில் கிபி 382 இல் திருத்தந்தை முதலாம் டமாஸ்கஸ் அங்கீகரித்த புதிய ஏற்பாட்டின் 27 நூல்களை விநோதமாக ஏற்றுக் கொண்டார் .
ஆனால் கிபி 90 ஆம் ஆண்டில் யூதர்கள் அங்கீகரித்திருந்த பழைய ஏற்பாட்டு நூல்களின் பட்டியலை மறுத்து விட்டார் . யூதர்களைப் பற்றிய அக்கறை அவருக்கு இல்லை . மாறாக அவர்களது சட்டத்தையே எரிக்க விரும்புவதாகக் கூறினார். ஒருவரை அவ்வளவு வெறுக்கும்போது அவர்கள் அங்கீகரித்த வேதாகமப் பட்டியல்களை மட்டும் ஏற்றுக் கொள்வது எப்படி ? "பாபிலோனிய வேசிகள் " என்று அவரால் அழைக்கப்பட்ட கத்தோலிக்கரின் புதிய ஏற்பாட்டுப் பட்டியலை அப்படியே ஏற்றுக் கொள்ள அவரால் எப்படி முடிந்தது ? (ஒருவேளை திருத்தந்தை விவிலியத்திலிருந்து புத்தகங்களை நீக்கினால் கத்தோலிக்கர் அல்லாதோர் எவ்வளவு கிளர்ச்சி செய்வர் ! ஆனால் விநோதமாக லூதர் இவற்றை செய்வதில் வெற்றியடைகிறார் )
யூதரிடமிருந்து இறையரசைப் பெற்ற இயேசுக்கிறிஸ்து (மத் 21:43) அதைப் பேதுருவுக்கும் அவரது புதிய திருச்சபைக்கும் கொடுக்கிறார் (மத் 16:18) .எனவே ஜாம்னியா யூத சங்கத்திற்கு எந்த ஒரு தேவ அதிகாரமும் இல்லை . எனினும் அவர்கள் வேத பட்டியலை வெளியிடுகின்றனர் . நான்கு அளவீடுகளைக் கொண்டு ஒரு புத்தகம் வேதாகமத்தில் சேர்க்கப்பட தகுதியுள்ளதா என்று அவர்கள் அறிந்தனர் . அவை:
1. பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை ஒத்திருக்க வேண்டும் ( ஆதியாகமம், விடுதலைப் பயணம் , லேவியர் , எண்ணிக்கை , இணைச் சட்டம் )
2. எஸ்ராவிற்குப் பிறகு எழுதப்பட்டிருக்கக் கூடாது (கி மு 400 )
3. எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்
4. பாலஸ்தீனியாவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்
கி பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யூதர்களின் இந்த அளவுகோல்களின்படி பார்த்தால், கிபி முதலாம் நூன்றாண்டில் எழுதப்பட்ட நற்செய்தி நூல்களையும் , நிருபங்களையும் அந்த யூதர்கள் நீக்கியிருக்க வேண்டும் .ஆனால் அப்படி நடக்கவில்லை.
அதோடு எஸ்ராவுக்குப் பின் , கிறிஸ்துவுக்கு முன் எழுதப்பட்ட 7 கிரேக்க நூல்கள் இருந்தன . இவையே இணைத்திருமுறை நூல்களான தோபித்து , யூதித்து , தானியேல், எஸ்தர் , சீராக்கின் ஞானம் , 1 மக்கபேயர் மற்றும் 2 மக்கபேயர் . பாலஸ்தீனில் இல்லாத டியாஸ்போரா யூதர்களால் இந்த 7 நூல்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன
ஜாம்னிய யூதர்கள் மட்டுமன்றி வேறு பலரும் இந்த 7 நூல்களை எதிர்த்தனர் .இந்த இணைத் திருமுறை நூல்களைப் பற்றி , புதிய ஏற்பாட்டில் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை என்பதே அந்த வாதம். இந்த வாதத்தின் படி பார்த்தால் சபை உரையாளர் மற்றும் எஸ்ரா நூல்களைப் பற்றி புதிய ஏற்பாட்டில் எந்தக் குறிப்பும் இல்லை . அப்படி என்றால் இந்த இரு நூல்களும் கூட இணைத் திருமுறை நூல்கள் என்று கூறி இவற்றையும் நீக்கியிருக்க வேண்டும் .
புதிய ஏற்பாட்டில் இணைத் திருமுறை நூல்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன .சாலமோனின் ஞானம் 2:12 முதல் 20 வரையுள்ள வசனங்கள் மத் 27 :41 முதல் 43 வரை யூதர்கள் இயேசுவுக்கு எதிராக சதியாலோசனை நடத்தும் நேரடி மேற்கோள்களைச் சொல்லலாம்
சாலமோனின் ஞானம் 2:12 முதல் 20
12‘நீதி மான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள். நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். 13கடவுளைப்பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்ளைகள்⁕ எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். 14அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது. அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. 15அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. 16இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள். 17அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். 18நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். 19அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். 20இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப் படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.
மத் 27 : 41 ,42, 43.
41அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். 42அவர்கள், “பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். 43கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘நான் இறைமகன்’ என்றானே!” என்று கூறினார்கள். 44அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
இதே போல் இன்னொரு எடுத்துக்காட்டு எபிரேயர் 11:35 மற்றும் 2 மக்கபேயர் 7 , தாயும் அவரது 7 புதல்வர்களும் யூத சட்டத்தை விட மறுப்பதால் கொல்லப்படுகிறார்கள்
எபிரேயர் 11:35
"35பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து வதையுண்டு மடிந்தனர். "
2 மக்கபேயர் 7:29
"இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்” என்று சொல்லி ஊக்கமூட்டினார்
இதே போல் உரோமர் 1:19 - 25 வசனங்களும் சாலமோனின் ஞானம் 12, 13 அதிகாரங்களை ஒத்திருக்கின்றன .
யோவான் 10 ஆம் அதிகாரத்தில் உள்ள நிகழ்வுகள் 1 மக்கபேயர் 4 ஆம் அதிகாரத்தில் உள்ளன
ஏனோக்கு , மோசேயின் ஆரோகணம் பற்றிய குறிப்புகள் புதிய ஏற்பாட்டில் உள்ளன . புதிய ஏற்பாட்டில் உள்ளவை அனைத்தும் சட்டப்பூர்வமானவை என்றால் ஏனோக்கு மோசேயின் விண்ணேற்பு பழைய ஏற்பாட்டில் இருக்க வேண்டும் . இல்லையே !
ஆதிதந்தையர் புனித ஜெரோம் போன்றோர் இந்த 7 நூல்கள் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்படவில்லை என்று கூறி இவைகளை ஏற்க மறுக்கின்றனர் . பல பிரிவினைச் சபையினர் ஆதித் தந்தயர்களைப் பற்றி , இவற்றை மட்டும் சொல்கின்றனர் . ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் மற்ற அம்சங்களான நற்கருணை , திருத்தந்தை , உரோமையின் அதிகாரம் போன்றவற்றை குறித்து ஆதித் தந்தையர்கள் சொல்வதைப் பற்றி சொல்லுவதில்லை . புனித ஜெரோம் முதலில் இவை சட்டப்பூர்வமானவை அல்ல என்றார் . பின் சட்டப்பூர்வமானவை என ஏற்றுக் கொண்டார் .
வரலாற்று மற்றும் புவியியல் கருத்துகள் முரண்பாடாக இருக்கின்றன என்று காரணம் காட்டி பலர் இந்த 7 நூல்களை மறுப்பது உண்டு . புதிய ஏற்பாட்டில் இயேசுக்கிறிஸ்து கூறிய உவமைகளில் பல கற்பனையே . உண்மையிலேயே பணக்காரனும் இலாசரும் இருந்தனரா ? பணக்காரன் இறந்து நரகத்தில் வதைபட்டானா ?இலாசர் ஆபிரகாம் மடியில் இருந்ததைக் கண்டானா ? உண்மையிலேயே ஊதாரி மைந்தன் என்றொருவன் தந்தையின் சொத்துக்களை அழித்து , பின் திரும்பி வந்தானா ? உண்மையிலேயே கொடிய குத்தகைதாரர் இருந்தனரா ? வரலாற்று சான்றுகள் என்பதை விட முக்கிய இறையியல் பாடங்கள் தரும் உவமைகள் தானே அவை ? எனவே அவை முக்கியமானவை தானே ?வேதாகம உண்மைகளைச் சொல்லும் கற்பனையான உவமைகள் தூய ஆவியால் ஏவப்பட்டவை தானே ?
சாக்கடல் சுருளில் கண்டெடுக்கப்பட்ட புத்தகங்களில் தோபித்து மற்றும் சீராக் நூல்கள் இருந்தன . இவை அக்காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்டிருந்தன . ஏனெனில் எசாயா மற்றும் பல பழைய ஏற்பாட்டு நூல்களில் குறிப்புகள் இவைகளில் இருந்தன
முதன் முதலாக அச்சடிக்கப்பட்ட பைபிள் , லூத்தரன் மறுமலர்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அச்சிடப்பட்டது . இந்த நூலில் இணைத் திருமுறை நூல்கள் உள்ளன . எனவே இவை கத்தோலிக்க விவிலியத்தில் துவக்கம் முதலே உள்ளவை என்றும் , பிரிவினை சபையினர் தான் இந்த 7 புத்தகங்களை நீக்கினர் என்பதும் புலனாகிறதா ?
வேதாகமம் என்பது தனக்குப் பிடித்த புத்தகங்களை வைத்துக் கொள்வதற்கும் , பிடிக்காதவைகளை விலக்குவதற்கும் நூலகம் அல்ல. ஏழு என்பது முழுமையைக் குறிப்பது . 7ஆம் நாளில் இறைவன் ஓய்வு எடுத்தார் ; 7 அருட்சாதனங்கள் ; 7 சம்மனசுக்கள் பணிவிடை புரிந்தன . 6 நிறைவின்மையைக் குறிக்கும் . எனவே அறுபத்து ஆறை விட 73 சிறந்தது
இணைத் திருமுறை நூல்களுக்கும் புதிய ஏற்பாட்டு நூல்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்த ஆராய்ச்சி , வேத வசனங்களின் தொகுப்பைக் காண
http://www.cin.org/users/james/files/deutero3.htm
முதன் முதலில் அச்சிடப்பட்ட ஜான் குட்டென்பர்க் பைபிளைக் காண
http://www.hrc.utexas.edu/exhibitions/permanent/gutenbergbible/pages/#top_