- பொது ஜெபங்கள்
- பொது ஜெபங்கள் 2
காலைச்செபம்
என்னை அன்பு செய்யும் வானகத்தந்தையே! உமது அன்பின் பொருட்டு எனக்கு இந்த நாளைத்
தந்துள்ளீர். இன்று நான் சந்திக்கப்போகும் எல்லாமனிதர்களையும் உம்மிடம்
ஒப்படைக்கின்றேன். இன்று எனக்கு நிகழ இருப்பவை அனைத்தும் உமது எண்ணப்படி
நடக்கட்டும். இன்று நீர் எனக்குதரப்போகும் அனைத்திற்கும் இப்பொழுதே நன்றி கூறுகின்றேன்.
அன்பான இயேசுவே உம்மைப்போன்று நானும் வானகத்தந்தையின்
விருப்பப்படிவாழ எனக்கு உதவி செய்யும். அன்பான ஆவியானவரே இன்று
நீர் என்னுள்ளத்தில் நல்லெண்ணங்களைத் தூண்டிவிடும் போது அவற்றை
நான்விழிப்புடன் அவதானித்து அன்புச் செயல்கள் செய்ய எனக்கு உதவி செய்யும்.
ஆமென்.
மாலைச்செபம்
என்னை நேசிக்கின்ற பரலோக தந்தையே! இந்த நாளின் முடிவில் உமக்கு நன்றி கூறுகின்றேன்.
நீர் என்னோடு இருந்ததை நான் உணர்ந்தேன். நான்உம்மை நினையாத போது
நீர் என்னை நினைத்தீர் இப்போது உமக்கு மீண்டும் நன்றி கூறுகின்றேன்.
என்னுடைய அம்மாவிற்காக நன்றிகூறுகின்றேன்
என்னுடைய அப்பாவிற்காக நன்றி கூறுகின்றேன்.
என்னுடைய சகோதரர்களுக்காக நன்றி கூறுகின்றேன்.
என்னுடையநண்பர்களுக்காக நன்றி கூறுகின்றேன்.
என்னை நேசிக்கின்ற அன்பான இயேசுவே! நான் நித்திரை செய்யும் போது என்னோடு இரும்.
எனக்கு நல்லஓய்வைத் தந்து என்னை இந்த இரவில் பாதுகாரும்.
என்னை நேசிக்கும் பரிசுத்த ஆவியானவரே!
இந்த நாள் முழுவதும் நீர் எனக்குத் தந்த நல்லசிந்தனைக்கு நன்றி கூறுகின்றேன்.
இந்த இரவு முழுவதும் நீர் என்னோடு இருந்து நாளைக் காலையில்
என்னை உம்நினைவால் எழுப்பிவிடும்ஆமென்.
பரிபூரண பலனுள்ள செபம்
மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே! அடியேன் தேவரீருடைய சமூகத்தில்
முழந்தாளிலிருந்து சாஷ்டாங்கமாக விழுந்து
“என் கைகளையும்கால்களையும் துளைத்தார்கள் என்
எலும்புகளையெல்லாம் எண்ணினார்கள்” என்று தேவரீரைப்பற்றி
முன்னர் தாவீதென்ற தீர்க்கதரிசி உமது திருவாயின்
வாக்கியமாக வசனித்ததை என் கண் முன்பாகக் கண்டு
தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மனவுருக்கத்தோடும்
துக்கத்தோடும்என்னுள்ளத்தில் தியானிக்கின்ற இந்நேரத்தில்.
திடனான விசுவாசம். நம்பிக்கை. இறையன்பு. என்ற புண்ணியங்களையும்
என் அக்கிரமங்களின்மேல் மெய்யான மனஸ்தாபத்தையும் அவைகளைத்
திருத்த மெத்த உறுதியான பிரதிக்கனையையும் என் இதயத்தில்
பதியச் செய்தருளவேண்டுமென்று என் நல்ல இயேசுவே தேவரீரை
என் ஆத்துமத்தின் மேலான ஆசை ஆவலோடு இரந்து மன்றாடி
பிரார்த்திக்கின்றேன் சுவாமி.ஆமென்.
சமாதானத்திற்காக செபம்.
ஆண்டவரே! என்னை உமது சமாதானத்தின் கருவியாக்கும்.
வெறுப்புள்ள இடத்தில் அன்பையும்
மனவருத்தம் உள்ள இடத்தில் மன்னிப்பையும்.
ஐயமுள்ள இடத்தில் விசுவாசத்தையும்.
அவநம்பிக்கை உள்ள இடத்தில் நம்பிக்கையையும்
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்.
துன்பம் உள்ள இடத்தில் இன்பத்தையும்
நான் விதைத்திட அருள் தாரும்.
நான் ஆறுதல் தேடுவதை விட ஆறுதல் அளிக்கவும்
பிறரால் புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரைப் புரிந்து கொள்ளவும்.
அன்பு செய்யப்படுவதைவிட அன்பு செய்யவும் எனக்கு அருள் தாரும்.
ஏனெனில் கொடுப்பதன் மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும்.
மன்னிப்பதன் மூலம்தான்மன்னிப்படைய முடியும்.
மடிவதன் மூலம்தான் முடிவில்லாத வாழ்வுக்குப் பிறக்க முடியும்.
ஆமென்.
குருக்களுக்காக வேண்டும் செபம்
அன்பான ஆண்டவரே! குருக்களைக் காப்பாற்றும்படியாக உம்மை மன்றாடுகிறேன்.
அவர்கள் உம்முடையவர்கள். அவர்களுடைய வாழ்க்கைதிருப்பலிப் பீடத்தில்
பணிபுரிவது என்பதனால், அவர்களைச் சிறப்பாக காப்பாற்ற வேண்டுகிறேன்.
அவர்கள் உலகைவிட்டுப் பிரிந்தாலும், உலகின்நடுவில் வாழ்கிறார்கள்.
பல்வேறு உலக இன்பங்களும் நாட்டங்களும் அவர்களைச் சோதிக்கின்றன.
எனவே அவர்களை உமது இதயத்தில்வைத்துப் பேணிட மன்றாடுகிறேன்.
அவர்கள் தனிமையில் தவிக்கும்போது, துன்பங்களினால் வாடும்போது,
அவர்களுடைய தியாக வாழவே வீண்எனத் தோன்றும்போது
அவர்களைஅருகிருந்து காப்பாற்றும்.
அவர்களின் அருட்பணிகள் பலன் தருமாறு அவர்களை ஆசீர்வதியும்.
சிறப்பாக நீர் எங்களுக்கு வழங்கியுள்ள குருக்களுக்காக மன்றாடுகிறோம்
அவர்களை நீர் உமது அன்பில் என்றும் நிலைத்திருக்கச் செய்து,
உமக்கும்மக்களுக்கும் அவர்கள் பணிவுடனும் பயனுடனும்
தொண்டாற்றச் செய்தருளும்.
என்றென்றும் வாழும் குருவாம் கிறிஸ்து வழியாகமன்றாடுகிறோம். -ஆமென்.
இறை அழைத்தல் பெருக வேண்டுதல்
இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே !
அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே !
இன்று ஆர்வமும் தாராளமனமும் கொண்டுள்ள இளைஞரை
உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும்.
அனைத்துலக மக்களின்மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில்
அவர்களும் பங்குபெறச் செய்தருளும்.
இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில்
திருப்பலியைநீர் புதுப்பித்து வருகின்றீர்.
இயேசுவே ! எங்கள் ஆண்டவரே !
எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர்.
உண்மையின் ஒளிக்காக, அன்பின்அனலுக்காக ஏங்கும் அனைத்து
மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும்.
இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்றுஉமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும்
உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும்,
உலகின் உப்பாகவும், ஒளியாகவும்விளங்கவும் அருள் செய்யும்.
ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும்,
தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும்.
நன்னெறியில் வளர அவர்கள்கற்றுக் கொள்வார்களாக.
அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும் ,
ஆண்டவரே. -ஆமென்.
கழுவாய் வேண்டுதல் (திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் இயற்றியது)
மனுக்குலத்தின்மட்டில் உமக்குள்ள அணைகடந்த அன்புக்குக் கைம்மாறாக,
மிகுந்த மறதியையும் அசட்டைத்தனத்தையும் நிந்தையையும் பெறுகிறஇனிய இயேசுவே!
உமது அன்பு இதயம் எல்லாவிடங்களிலும் அனுபவிக்கிற மறதி,
நிந்தைகளுக்கொல்லாம் சிறப்பான தொழுகையால் கழுவாய்புரிய ஆவல் கொண்டு,
உமது பீடத்தின் முன்பாக இதோ, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கிடக்கிறோம்.
அத்தகைய பெரிய அவமானங்களுக்கு, ஐயையோ,
நாங்களும் உடந்தையாய் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து,
எங்கள் முழு உள்ளத்தோடுஅவைகளை வெறுத்து, எங்களை மன்னிக்கும்படி
உம்மைத் தாழ்மையாய் மன்றாடுகிறோம். எங்கள் துரோகங்களுக்காக மட்டுமல்ல,
மீட்புப்பாதையை விட்டுத் தொலைவில் விலகிப் போய், தங்கள் பிடிவாதம்
பற்றுறுதிக்குறைவை முன்னிட்டு, மேய்ப்பரும் வழிகாட்டியுமான
உம்மைப்பின்பற்ற மாட்டோம். என்பவர்களின் பாவங்களுக்காகவும்,
திருமுழுக்கு வாக்குறுதிகளை மீறி, உமது சட்டத்தின் இனிய நுகத்தடியை
உதறிவிட்டவர்களின் பாவங்களுக்காகவும் மனதார
கழுவாய் தேடிட தயாராயிருக்கிறோம் என்று உறுதி கூறுகிறோம்.
உமக்கு விரோதமாய்ச் செய்த அருவருப்புக்குரிய நிந்தை ஒவ்வொன்றுக்கும்
கழுவாய் புரிந்திட இப்போது தீர்மானித்திருக்கிறோம். மரியாதையற்றஉடையாலும்,
நடத்தையாலும் கிறிஸ்துவத் தன்னடக்கத்துக்கு விரோதமாய்ச் செய்த கணக்கற்ற
துரோகங்களுக்காகவும், மாசற்றவர்களை மயக்கிவலையிலிட்ட அசுத்த
துர்மாதிரிகைகளுக்காகவும், ஞாயிறு ஓய்வு நாள் கடமைகளை அடிக்கடி
மீறியதற்காகவும், உமக்கும் உம் புனிதர்களுக்கும்விரோதமாகச் சொன்ன
வெட்கமற்ற பழித்துரைகளுக்காகவும் கழுவாய் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்.
உலகில் உம் பதிலாளியானதிருத்தந்தைக்கும், உம்முடைய குருக்களுக்கும்
செய்யும அவமானங்களுக்காகவும், உம் அன்பின் திருவருட் சாதனத்தையே
மனம்பொருந்திஅலட்சியத்தால் அல்லது கனமான தேவதுரோகங்களால்
பங்கப் படுத்தியதற்காகவும், இறுதியாக நீர் நிறுவிய திருச்சபையின்
உரிமைகளையும்போதக அதிகாரத்தையும் எதிர்க்கிற மக்களின் பகிரங்க
அக்கிரமங்களுக்காகவும் கழுவாய் செய்ய விரும்புகிறோம்.
ஒ, இறைவனாகிய இயேசுவே, இத்தகைய அக்கிரமங்களையெல்லாம் எங்கள்
இரத்தத்தினாலே தூய்மைப் படுத்த இயலும் என்றால், எவ்வளவோபாவிகளை!
உமது இறைமகிமைக்கு நேர்ந்த இந்த இழிவுகளுக்ககெல்லாம் கழுவாயாக,
நீர் சிலுவையில் உம் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்துநாள்தோறும் எங்கள்
பீடங்களில் புதுப்பித்துக் கொண்டு வருகிற பலியை ஒப்புக் கொடுக்கிறோம்.
உம்முடைய கன்னித்தாயும், புனிதர்கள் அனைவரும், பக்தியுள்ள எல்லா
பற்றுறுதியாளர்களும்; செய்கிற கழுவாய் முயற்சிகளோடு ஒன்றித்து,
அவற்றை ஒப்புக் கொடுக்கிறோம். உமது அணை கடந்த அன்பை அலட்சியம்
செய்ததற்காகவும், கடந்த காலத்தில் நாங்களும் பிறரும் செய்தபாவங்களுக்காகவும்
உமது அருள்துணையால் எங்களால் இயன்ற மட்டும் கழுவாய் தேட முழுமனத்துடன்
வாக்களிக்கிறோம். இனிமேலாக,நாங்கள் பற்றுறுதியின் தளராமல்
தூய நடத்தையுள்ளவர்களாய் வாழ்ந்து, நற்செய்திக் கட்டளைகளையும்
சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும்சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும்
அனுசரித்து வருவோம். பிறர் உமக்குத் துரோகம் செய்யாதபடி எங்களால்
ஆனமட்டும் தடுப்போம். பலர்உம்மைப் பின்பற்றும்படி எங்களால் இயன்ற
அளவு முயலுவோம் என வாக்களிக்கிறோம்.
ஒ, அன்பு இயேசுவே! கழுவாய் புரிவதற்கு எங்கள் மாதிரியாய் இருக்கிற
புனித கன்னிமரியாவின் வழியாக, நாங்கள் செய்யும் கழுவாய் முயற்சிஎனும்
முழுமனக் காணிக்கையை ஏற்றருளும். நீர் தந்தையோடும் தூய ஆவியாரோடும்
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் புனித வீட்டுக்குநாங்கள் எல்லோருக்கும்
ஒரு நாள் வந்து சேரும்படி, எங்களுக்கு இறுதி வரை உமதருளில் நிலைத்திருக்கும்
வரம் ஈந்து, எங்கள் கடமையிலும்உமக்குப் புரிய வேண்டிய பணியிலும்
சாவு மட்டும் பிரமாணிக்கமாய் இருக்கச் செய்தருளும் - ஆமென்.
புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்
வானுலக சேனை தளங்களின் அதிபதியே, என்றும் வாழும் அரூபிகளில்
மகிமை பிரதாபம் நிறைந்த வானதூதரே, அவர்களிலும் உத்தமமானவரே!உன்னத கடவுளின் மந்திராலோதனையின் நிர்ணய பெட்டகமே,
தேவ சிம்மாசனத்தின் அருகே நிற்கப் பேறுபெற்ற பிரபுவே, தேவ கட்டளைபடி
விண்ணுலக வாசலைத் திறக்கவும், பூட்டவும், அதிகாரம் உள்ள வானவரே,
தேவ நீதியின் அரியணையின் முன் எங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதிதூதரே,
மரண அவஸ்தை படுகிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் உபகாரியே,
மரித்தவர்களை அழைத்து கொண்டுபோய் திவ்வியகர்தரின்
சன்னதியில் சேர்க்கும் காவலரே, பலவீனனும் நிர்ப்பாக்கியனுமாகிய
அடியேனை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து என் வாழ்நாள்முழுவதிலும்
சிறப்பாக எனது மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச
உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். -ஆமென்
காவல் தூதரை நோக்கிச் செபம்
அதிமிக பிரமாணிக்கம் அமைந்த காவலரே !
அடியேனுக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு
எப்போதும் என் அருகிலிருந்துஎன்னை ஆண்டு நடத்தி வரும் வான தூதரே!
இன்று(பேர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும்
தெரிந்து கொண்டுஎன்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில்
வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமை பிரதாபத்துக்கு
விரோதமான எவ்விதசொல்லினாலும் செயலினாலும் உம்மை
விட்டுப் பிரியாமலிருப்பதும் அன்றி எனக்கு கீழ்ப்பட்ட மற்றவர்களும்
தேவரீருக்கு விரோதமாய் ஏதாவதுசொல்லவும் செய்யவும்
விடுகிறதில்லை என்றும் உறுதி செய்கிறேன். ஆதலால் இன்று முதல்
என் மரண பரியந்தம் உமது ஊழியனாக என்னைஏற்றுக் கொள்ளும்.
நான் செய்யும் செயல்களிலும் எனக்கு உதவி செய்து,
சிறப்பாக என் மரண நேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்தருளும்.ஆமென்.
நல்ல மரணத்துக்கு ஆயத்தம்
நல்ல மரணத்தினாலே நித்திய பேரின்பமும் துன்மரணத்தினாலே
நித்திய நரக நிர்பாந்த ஆக்கினையும் வருகிறபடியால்
நல்ல மரணத்துக்குஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும்
மகா அவசரமான காரியமாயிருக்கறது. நன்மரண ஆயத்தத்துக்கு
ஆத்தும சுத்திகரம் பிரதானமாய்இருக்கிறபடியினாலும்,
உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும்,
அப்போதைக்கப் போது பாவசங்கீர்த்தனத்தில் உன்ஆத்துமத்தைச்
சுத்தி செய்வதுமில்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி
தடுமாற்றங்கொள்ளும் போது குருவை அழைக்காமல், நல்ல
நினைவுஇருக்கும் போதே பாவசங்கீர்தனம் செய்து நோயில்
பூசுதலைப் பெற்று, அடிக்கடி விசுவாச நம்பிக்கை தேவசிநேக
முயற்சிகளையும், உத்தமமனஸ்தாப பரலோக, அருள் நிறைந்த,
மந்திரங்களையும் செபித்து இதன் அடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக.
நோயாளிகள் சொல்லத்தகும் செபம்
ஒரே சர்வேசுரன் உண்டு என்று விசுவசிக்கிறேன்.
அவர் நல்லவர்களுக்குச் சன்மானமும், கெட்டவர்களுக்குத் தண்டனையும்
கொடுப்பார் என்றுவிசுவசிக்கிறேன். ஒரே சர்வேசுரனில்
தந்தை இறைவன், மகன் இறைவன், பரிசுத்த ஆவியார் இறைவன்
ஆகிய மூன்று தெய்வீக ஆட்கள்இருக்கிறார்கள் என்று விசுவசிக்கிறேன்.
மகனாகிய இறைவன் தம் கடவுள் தன்மையை விட்டுவிடாமல்
மனிதனானார் என்று விசுவசிக்கிறேன். என் ஆண்டவர்,
என் இரட்சகர்மனுக்குலத்தின் மீட்பர் என்று விசுவசிக்கிறேன்.
அவர் எல்லா மனிதருடைய மீட்புக்காகவும் எனக்காகவும்
சிலுவையில் மரித்தார் என்றுவிசுவசிக்கிறேன்.
இறைவன் போதித்து வெளிப்படுத்திய அனைத்தையும்
அவருடைய ஆதாரத்தின் மேல் விசுவசிக்கிறேன்.
ஓ, என் தேவனே ! எனக்குத் திடமான விசுவாசத்தைத் தந்தருளும்.
ஓ, என் தேவனே ! நான் உயிருள்ள விசுவாசத்தோடு விசுவசிக்க எனக்கு உதவிசெய்யும்.
அளவற்ற நன்மையும் இரக்கமும் உள்ள இறைவா,
நான் இரட்சணியம் அடைவேன் என்று எதார்த்தமாய் நம்புகிறேன்.
எனது இரட்சணியத்துக்குவேண்டிய சகலத்தையும்
நான் செய்யும் படி எனக்கு உதவி செய்யும்.
என் வாழ்நாளில் நான் அநேக பாவங்களை செய்தேன்.
ஆனால் இப்பொழுது நான் அவைகளைப் புறக்கணிக்கிறேன்.
அவைகளை வெறுக்கிறேன்.அவைகள் எல்லாவற்றிற்காகவும்
மெய்யாகவே மனஸ்தாபமாயிருக்கிறேன். அனைத்து நலனும்,
நிறைவான தூய்மையும், பேரிரக்க தயாளமும்கொண்டுள்ள என்
இறைவனுக்கு விரோதமாகவும் சிலுவையில் எனக்காக மரித்த
என் தேவனுக்கு விரோதமாகவும் துரோகம் செய்தேன்என்கிறதினாலே
மனஸ்தாபமாயிருக்கிறேன்.
ஓ என் தேவனே ! என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்கிறேன்.
தேவரீரை மனநோகச் செய்ததற்க்காக என்னை மன்னிக்கும் படி
உம்மைகெஞ்சி மன்றாடுகிறேன்.
ஓ என் தேவனே ! உமது உதவியைக் கொண்டு இனிமேல்
ஒருக்காலும் உமக்கு விரோதமாக நடக்கமாட்டேன் என்று வாக்குக் கொடுக்கிறேன்.
என் அன்புள்ள இறைவா ! என் பேரில் இரக்கமாயிரும்.
என்னை அன்பு செய்யும் வானகத்தந்தையே! உமது அன்பின் பொருட்டு எனக்கு இந்த நாளைத்
தந்துள்ளீர். இன்று நான் சந்திக்கப்போகும் எல்லாமனிதர்களையும் உம்மிடம்
ஒப்படைக்கின்றேன். இன்று எனக்கு நிகழ இருப்பவை அனைத்தும் உமது எண்ணப்படி
நடக்கட்டும். இன்று நீர் எனக்குதரப்போகும் அனைத்திற்கும் இப்பொழுதே நன்றி கூறுகின்றேன்.
அன்பான இயேசுவே உம்மைப்போன்று நானும் வானகத்தந்தையின்
விருப்பப்படிவாழ எனக்கு உதவி செய்யும். அன்பான ஆவியானவரே இன்று
நீர் என்னுள்ளத்தில் நல்லெண்ணங்களைத் தூண்டிவிடும் போது அவற்றை
நான்விழிப்புடன் அவதானித்து அன்புச் செயல்கள் செய்ய எனக்கு உதவி செய்யும்.
ஆமென்.
மாலைச்செபம்
என்னை நேசிக்கின்ற பரலோக தந்தையே! இந்த நாளின் முடிவில் உமக்கு நன்றி கூறுகின்றேன்.
நீர் என்னோடு இருந்ததை நான் உணர்ந்தேன். நான்உம்மை நினையாத போது
நீர் என்னை நினைத்தீர் இப்போது உமக்கு மீண்டும் நன்றி கூறுகின்றேன்.
என்னுடைய அம்மாவிற்காக நன்றிகூறுகின்றேன்
என்னுடைய அப்பாவிற்காக நன்றி கூறுகின்றேன்.
என்னுடைய சகோதரர்களுக்காக நன்றி கூறுகின்றேன்.
என்னுடையநண்பர்களுக்காக நன்றி கூறுகின்றேன்.
என்னை நேசிக்கின்ற அன்பான இயேசுவே! நான் நித்திரை செய்யும் போது என்னோடு இரும்.
எனக்கு நல்லஓய்வைத் தந்து என்னை இந்த இரவில் பாதுகாரும்.
என்னை நேசிக்கும் பரிசுத்த ஆவியானவரே!
இந்த நாள் முழுவதும் நீர் எனக்குத் தந்த நல்லசிந்தனைக்கு நன்றி கூறுகின்றேன்.
இந்த இரவு முழுவதும் நீர் என்னோடு இருந்து நாளைக் காலையில்
என்னை உம்நினைவால் எழுப்பிவிடும்ஆமென்.
பரிபூரண பலனுள்ள செபம்
மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே! அடியேன் தேவரீருடைய சமூகத்தில்
முழந்தாளிலிருந்து சாஷ்டாங்கமாக விழுந்து
“என் கைகளையும்கால்களையும் துளைத்தார்கள் என்
எலும்புகளையெல்லாம் எண்ணினார்கள்” என்று தேவரீரைப்பற்றி
முன்னர் தாவீதென்ற தீர்க்கதரிசி உமது திருவாயின்
வாக்கியமாக வசனித்ததை என் கண் முன்பாகக் கண்டு
தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மனவுருக்கத்தோடும்
துக்கத்தோடும்என்னுள்ளத்தில் தியானிக்கின்ற இந்நேரத்தில்.
திடனான விசுவாசம். நம்பிக்கை. இறையன்பு. என்ற புண்ணியங்களையும்
என் அக்கிரமங்களின்மேல் மெய்யான மனஸ்தாபத்தையும் அவைகளைத்
திருத்த மெத்த உறுதியான பிரதிக்கனையையும் என் இதயத்தில்
பதியச் செய்தருளவேண்டுமென்று என் நல்ல இயேசுவே தேவரீரை
என் ஆத்துமத்தின் மேலான ஆசை ஆவலோடு இரந்து மன்றாடி
பிரார்த்திக்கின்றேன் சுவாமி.ஆமென்.
சமாதானத்திற்காக செபம்.
ஆண்டவரே! என்னை உமது சமாதானத்தின் கருவியாக்கும்.
வெறுப்புள்ள இடத்தில் அன்பையும்
மனவருத்தம் உள்ள இடத்தில் மன்னிப்பையும்.
ஐயமுள்ள இடத்தில் விசுவாசத்தையும்.
அவநம்பிக்கை உள்ள இடத்தில் நம்பிக்கையையும்
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்.
துன்பம் உள்ள இடத்தில் இன்பத்தையும்
நான் விதைத்திட அருள் தாரும்.
நான் ஆறுதல் தேடுவதை விட ஆறுதல் அளிக்கவும்
பிறரால் புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரைப் புரிந்து கொள்ளவும்.
அன்பு செய்யப்படுவதைவிட அன்பு செய்யவும் எனக்கு அருள் தாரும்.
ஏனெனில் கொடுப்பதன் மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும்.
மன்னிப்பதன் மூலம்தான்மன்னிப்படைய முடியும்.
மடிவதன் மூலம்தான் முடிவில்லாத வாழ்வுக்குப் பிறக்க முடியும்.
ஆமென்.
குருக்களுக்காக வேண்டும் செபம்
அன்பான ஆண்டவரே! குருக்களைக் காப்பாற்றும்படியாக உம்மை மன்றாடுகிறேன்.
அவர்கள் உம்முடையவர்கள். அவர்களுடைய வாழ்க்கைதிருப்பலிப் பீடத்தில்
பணிபுரிவது என்பதனால், அவர்களைச் சிறப்பாக காப்பாற்ற வேண்டுகிறேன்.
அவர்கள் உலகைவிட்டுப் பிரிந்தாலும், உலகின்நடுவில் வாழ்கிறார்கள்.
பல்வேறு உலக இன்பங்களும் நாட்டங்களும் அவர்களைச் சோதிக்கின்றன.
எனவே அவர்களை உமது இதயத்தில்வைத்துப் பேணிட மன்றாடுகிறேன்.
அவர்கள் தனிமையில் தவிக்கும்போது, துன்பங்களினால் வாடும்போது,
அவர்களுடைய தியாக வாழவே வீண்எனத் தோன்றும்போது
அவர்களைஅருகிருந்து காப்பாற்றும்.
அவர்களின் அருட்பணிகள் பலன் தருமாறு அவர்களை ஆசீர்வதியும்.
சிறப்பாக நீர் எங்களுக்கு வழங்கியுள்ள குருக்களுக்காக மன்றாடுகிறோம்
அவர்களை நீர் உமது அன்பில் என்றும் நிலைத்திருக்கச் செய்து,
உமக்கும்மக்களுக்கும் அவர்கள் பணிவுடனும் பயனுடனும்
தொண்டாற்றச் செய்தருளும்.
என்றென்றும் வாழும் குருவாம் கிறிஸ்து வழியாகமன்றாடுகிறோம். -ஆமென்.
இறை அழைத்தல் பெருக வேண்டுதல்
இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே !
அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே !
இன்று ஆர்வமும் தாராளமனமும் கொண்டுள்ள இளைஞரை
உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும்.
அனைத்துலக மக்களின்மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில்
அவர்களும் பங்குபெறச் செய்தருளும்.
இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில்
திருப்பலியைநீர் புதுப்பித்து வருகின்றீர்.
இயேசுவே ! எங்கள் ஆண்டவரே !
எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர்.
உண்மையின் ஒளிக்காக, அன்பின்அனலுக்காக ஏங்கும் அனைத்து
மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும்.
இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்றுஉமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும்
உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும்,
உலகின் உப்பாகவும், ஒளியாகவும்விளங்கவும் அருள் செய்யும்.
ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும்,
தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும்.
நன்னெறியில் வளர அவர்கள்கற்றுக் கொள்வார்களாக.
அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும் ,
ஆண்டவரே. -ஆமென்.
கழுவாய் வேண்டுதல் (திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் இயற்றியது)
மனுக்குலத்தின்மட்டில் உமக்குள்ள அணைகடந்த அன்புக்குக் கைம்மாறாக,
மிகுந்த மறதியையும் அசட்டைத்தனத்தையும் நிந்தையையும் பெறுகிறஇனிய இயேசுவே!
உமது அன்பு இதயம் எல்லாவிடங்களிலும் அனுபவிக்கிற மறதி,
நிந்தைகளுக்கொல்லாம் சிறப்பான தொழுகையால் கழுவாய்புரிய ஆவல் கொண்டு,
உமது பீடத்தின் முன்பாக இதோ, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கிடக்கிறோம்.
அத்தகைய பெரிய அவமானங்களுக்கு, ஐயையோ,
நாங்களும் உடந்தையாய் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து,
எங்கள் முழு உள்ளத்தோடுஅவைகளை வெறுத்து, எங்களை மன்னிக்கும்படி
உம்மைத் தாழ்மையாய் மன்றாடுகிறோம். எங்கள் துரோகங்களுக்காக மட்டுமல்ல,
மீட்புப்பாதையை விட்டுத் தொலைவில் விலகிப் போய், தங்கள் பிடிவாதம்
பற்றுறுதிக்குறைவை முன்னிட்டு, மேய்ப்பரும் வழிகாட்டியுமான
உம்மைப்பின்பற்ற மாட்டோம். என்பவர்களின் பாவங்களுக்காகவும்,
திருமுழுக்கு வாக்குறுதிகளை மீறி, உமது சட்டத்தின் இனிய நுகத்தடியை
உதறிவிட்டவர்களின் பாவங்களுக்காகவும் மனதார
கழுவாய் தேடிட தயாராயிருக்கிறோம் என்று உறுதி கூறுகிறோம்.
உமக்கு விரோதமாய்ச் செய்த அருவருப்புக்குரிய நிந்தை ஒவ்வொன்றுக்கும்
கழுவாய் புரிந்திட இப்போது தீர்மானித்திருக்கிறோம். மரியாதையற்றஉடையாலும்,
நடத்தையாலும் கிறிஸ்துவத் தன்னடக்கத்துக்கு விரோதமாய்ச் செய்த கணக்கற்ற
துரோகங்களுக்காகவும், மாசற்றவர்களை மயக்கிவலையிலிட்ட அசுத்த
துர்மாதிரிகைகளுக்காகவும், ஞாயிறு ஓய்வு நாள் கடமைகளை அடிக்கடி
மீறியதற்காகவும், உமக்கும் உம் புனிதர்களுக்கும்விரோதமாகச் சொன்ன
வெட்கமற்ற பழித்துரைகளுக்காகவும் கழுவாய் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்.
உலகில் உம் பதிலாளியானதிருத்தந்தைக்கும், உம்முடைய குருக்களுக்கும்
செய்யும அவமானங்களுக்காகவும், உம் அன்பின் திருவருட் சாதனத்தையே
மனம்பொருந்திஅலட்சியத்தால் அல்லது கனமான தேவதுரோகங்களால்
பங்கப் படுத்தியதற்காகவும், இறுதியாக நீர் நிறுவிய திருச்சபையின்
உரிமைகளையும்போதக அதிகாரத்தையும் எதிர்க்கிற மக்களின் பகிரங்க
அக்கிரமங்களுக்காகவும் கழுவாய் செய்ய விரும்புகிறோம்.
ஒ, இறைவனாகிய இயேசுவே, இத்தகைய அக்கிரமங்களையெல்லாம் எங்கள்
இரத்தத்தினாலே தூய்மைப் படுத்த இயலும் என்றால், எவ்வளவோபாவிகளை!
உமது இறைமகிமைக்கு நேர்ந்த இந்த இழிவுகளுக்ககெல்லாம் கழுவாயாக,
நீர் சிலுவையில் உம் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்துநாள்தோறும் எங்கள்
பீடங்களில் புதுப்பித்துக் கொண்டு வருகிற பலியை ஒப்புக் கொடுக்கிறோம்.
உம்முடைய கன்னித்தாயும், புனிதர்கள் அனைவரும், பக்தியுள்ள எல்லா
பற்றுறுதியாளர்களும்; செய்கிற கழுவாய் முயற்சிகளோடு ஒன்றித்து,
அவற்றை ஒப்புக் கொடுக்கிறோம். உமது அணை கடந்த அன்பை அலட்சியம்
செய்ததற்காகவும், கடந்த காலத்தில் நாங்களும் பிறரும் செய்தபாவங்களுக்காகவும்
உமது அருள்துணையால் எங்களால் இயன்ற மட்டும் கழுவாய் தேட முழுமனத்துடன்
வாக்களிக்கிறோம். இனிமேலாக,நாங்கள் பற்றுறுதியின் தளராமல்
தூய நடத்தையுள்ளவர்களாய் வாழ்ந்து, நற்செய்திக் கட்டளைகளையும்
சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும்சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும்
அனுசரித்து வருவோம். பிறர் உமக்குத் துரோகம் செய்யாதபடி எங்களால்
ஆனமட்டும் தடுப்போம். பலர்உம்மைப் பின்பற்றும்படி எங்களால் இயன்ற
அளவு முயலுவோம் என வாக்களிக்கிறோம்.
ஒ, அன்பு இயேசுவே! கழுவாய் புரிவதற்கு எங்கள் மாதிரியாய் இருக்கிற
புனித கன்னிமரியாவின் வழியாக, நாங்கள் செய்யும் கழுவாய் முயற்சிஎனும்
முழுமனக் காணிக்கையை ஏற்றருளும். நீர் தந்தையோடும் தூய ஆவியாரோடும்
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் புனித வீட்டுக்குநாங்கள் எல்லோருக்கும்
ஒரு நாள் வந்து சேரும்படி, எங்களுக்கு இறுதி வரை உமதருளில் நிலைத்திருக்கும்
வரம் ஈந்து, எங்கள் கடமையிலும்உமக்குப் புரிய வேண்டிய பணியிலும்
சாவு மட்டும் பிரமாணிக்கமாய் இருக்கச் செய்தருளும் - ஆமென்.
புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்
வானுலக சேனை தளங்களின் அதிபதியே, என்றும் வாழும் அரூபிகளில்
மகிமை பிரதாபம் நிறைந்த வானதூதரே, அவர்களிலும் உத்தமமானவரே!உன்னத கடவுளின் மந்திராலோதனையின் நிர்ணய பெட்டகமே,
தேவ சிம்மாசனத்தின் அருகே நிற்கப் பேறுபெற்ற பிரபுவே, தேவ கட்டளைபடி
விண்ணுலக வாசலைத் திறக்கவும், பூட்டவும், அதிகாரம் உள்ள வானவரே,
தேவ நீதியின் அரியணையின் முன் எங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதிதூதரே,
மரண அவஸ்தை படுகிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் உபகாரியே,
மரித்தவர்களை அழைத்து கொண்டுபோய் திவ்வியகர்தரின்
சன்னதியில் சேர்க்கும் காவலரே, பலவீனனும் நிர்ப்பாக்கியனுமாகிய
அடியேனை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து என் வாழ்நாள்முழுவதிலும்
சிறப்பாக எனது மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச
உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். -ஆமென்
காவல் தூதரை நோக்கிச் செபம்
அதிமிக பிரமாணிக்கம் அமைந்த காவலரே !
அடியேனுக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு
எப்போதும் என் அருகிலிருந்துஎன்னை ஆண்டு நடத்தி வரும் வான தூதரே!
இன்று(பேர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும்
தெரிந்து கொண்டுஎன்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில்
வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமை பிரதாபத்துக்கு
விரோதமான எவ்விதசொல்லினாலும் செயலினாலும் உம்மை
விட்டுப் பிரியாமலிருப்பதும் அன்றி எனக்கு கீழ்ப்பட்ட மற்றவர்களும்
தேவரீருக்கு விரோதமாய் ஏதாவதுசொல்லவும் செய்யவும்
விடுகிறதில்லை என்றும் உறுதி செய்கிறேன். ஆதலால் இன்று முதல்
என் மரண பரியந்தம் உமது ஊழியனாக என்னைஏற்றுக் கொள்ளும்.
நான் செய்யும் செயல்களிலும் எனக்கு உதவி செய்து,
சிறப்பாக என் மரண நேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்தருளும்.ஆமென்.
நல்ல மரணத்துக்கு ஆயத்தம்
நல்ல மரணத்தினாலே நித்திய பேரின்பமும் துன்மரணத்தினாலே
நித்திய நரக நிர்பாந்த ஆக்கினையும் வருகிறபடியால்
நல்ல மரணத்துக்குஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும்
மகா அவசரமான காரியமாயிருக்கறது. நன்மரண ஆயத்தத்துக்கு
ஆத்தும சுத்திகரம் பிரதானமாய்இருக்கிறபடியினாலும்,
உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும்,
அப்போதைக்கப் போது பாவசங்கீர்த்தனத்தில் உன்ஆத்துமத்தைச்
சுத்தி செய்வதுமில்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி
தடுமாற்றங்கொள்ளும் போது குருவை அழைக்காமல், நல்ல
நினைவுஇருக்கும் போதே பாவசங்கீர்தனம் செய்து நோயில்
பூசுதலைப் பெற்று, அடிக்கடி விசுவாச நம்பிக்கை தேவசிநேக
முயற்சிகளையும், உத்தமமனஸ்தாப பரலோக, அருள் நிறைந்த,
மந்திரங்களையும் செபித்து இதன் அடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக.
நோயாளிகள் சொல்லத்தகும் செபம்
ஒரே சர்வேசுரன் உண்டு என்று விசுவசிக்கிறேன்.
அவர் நல்லவர்களுக்குச் சன்மானமும், கெட்டவர்களுக்குத் தண்டனையும்
கொடுப்பார் என்றுவிசுவசிக்கிறேன். ஒரே சர்வேசுரனில்
தந்தை இறைவன், மகன் இறைவன், பரிசுத்த ஆவியார் இறைவன்
ஆகிய மூன்று தெய்வீக ஆட்கள்இருக்கிறார்கள் என்று விசுவசிக்கிறேன்.
மகனாகிய இறைவன் தம் கடவுள் தன்மையை விட்டுவிடாமல்
மனிதனானார் என்று விசுவசிக்கிறேன். என் ஆண்டவர்,
என் இரட்சகர்மனுக்குலத்தின் மீட்பர் என்று விசுவசிக்கிறேன்.
அவர் எல்லா மனிதருடைய மீட்புக்காகவும் எனக்காகவும்
சிலுவையில் மரித்தார் என்றுவிசுவசிக்கிறேன்.
இறைவன் போதித்து வெளிப்படுத்திய அனைத்தையும்
அவருடைய ஆதாரத்தின் மேல் விசுவசிக்கிறேன்.
ஓ, என் தேவனே ! எனக்குத் திடமான விசுவாசத்தைத் தந்தருளும்.
ஓ, என் தேவனே ! நான் உயிருள்ள விசுவாசத்தோடு விசுவசிக்க எனக்கு உதவிசெய்யும்.
அளவற்ற நன்மையும் இரக்கமும் உள்ள இறைவா,
நான் இரட்சணியம் அடைவேன் என்று எதார்த்தமாய் நம்புகிறேன்.
எனது இரட்சணியத்துக்குவேண்டிய சகலத்தையும்
நான் செய்யும் படி எனக்கு உதவி செய்யும்.
என் வாழ்நாளில் நான் அநேக பாவங்களை செய்தேன்.
ஆனால் இப்பொழுது நான் அவைகளைப் புறக்கணிக்கிறேன்.
அவைகளை வெறுக்கிறேன்.அவைகள் எல்லாவற்றிற்காகவும்
மெய்யாகவே மனஸ்தாபமாயிருக்கிறேன். அனைத்து நலனும்,
நிறைவான தூய்மையும், பேரிரக்க தயாளமும்கொண்டுள்ள என்
இறைவனுக்கு விரோதமாகவும் சிலுவையில் எனக்காக மரித்த
என் தேவனுக்கு விரோதமாகவும் துரோகம் செய்தேன்என்கிறதினாலே
மனஸ்தாபமாயிருக்கிறேன்.
ஓ என் தேவனே ! என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்கிறேன்.
தேவரீரை மனநோகச் செய்ததற்க்காக என்னை மன்னிக்கும் படி
உம்மைகெஞ்சி மன்றாடுகிறேன்.
ஓ என் தேவனே ! உமது உதவியைக் கொண்டு இனிமேல்
ஒருக்காலும் உமக்கு விரோதமாக நடக்கமாட்டேன் என்று வாக்குக் கொடுக்கிறேன்.
என் அன்புள்ள இறைவா ! என் பேரில் இரக்கமாயிரும்.