- வணக்க மாதம்
- புனித சூசையப்பர்
- நாள் 11-15
பதினோராம் நாள்
புனித சூசையப்பரும், கன்னிமரியாவும் குழந்தை இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானிப்போம்
தியானம்
குழந்தை இயேசு பிறந்த நாற்பதாவது நாளில் மறைநூலில் கற்பித்த சடங்குபடி புனித சூசையப்பரும் மரியன்னையும் திருக்குழந்தையை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர். குழந்தை பிறந்த நாற்பதாவது நாளில் அவரது பெற்றோர் குழந்தையை காணிக்கை அளித்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது மதக் கோட்பாடாக இருந்தது. ஆண்பிள்ளையைப் பெற்ற தாய் நாற்பது நாட்களும், பெண் பிள்ளையைப் பெற்ற தாய் எண்பது நாட்களும் வீட்டிலே ஒதுங்கி இருந்து விரதத்தோடு காணிக்கையாக ஒரு ஆட்டுக்குட்டி அல்லது இரண்டு மாடப்புறாக்களை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று மறைநூலில் கூறப்பட்டுள்ளது.
புனித சூசையப்பரும் மரியன்னையும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள். மரியன்னை மற்றப் பெண்களைப்போலல்ல. இருப்பினும் உலக நியதிக்கு கட்டுப்பட்டு சடங்குகளை கடைப்பிடித்தார்கள். சில காசுகளையும் இரண்டு மாடப்புறாக்களையும் காணிக்கை அளித்து இயேசுவை மீட்டனர். அவரோ உலக மக்கள் அனைவரையும் தன் மரணத்தால் மீட்டு இரட்சிக்க வந்தவர். எனினும் மறைநூல் ஒழுங்குகளை கடைப்பிடித்தார்.
இத்தருணத்தில் தீர்க்கத்தரிசியான சிமியோனென்கிறவர் ஆலயத்திற்கு வந்து பாசத்துடன் குழந்தையை கையிலெடுத்து மகிழ்ந்து மரியன்னையிடம் இக்குழந்தை இவ்வுலகில் படப்போகும் துன்பங்களால் உமது இதயம் வாளால் ஊடுருவும் அளவு வேதனை அடையும் என்றார். புனித சூசையப்பரும் மரியன்னையும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இதயம் கலக்கமுற்று சொல்ல முடியாத அளவு வேதனை அடைந்தனர்.
புனித சூசையப்பரும் மரியன்னையும், குழந்தை இயேசுவும் வேத கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டியதில்லை என்றாலும் சாதாரண மனிதர்களைப்போல் கடைப்பிடித்தார்கள். கடைபிடிக்க வேண்டிய நாம் அசட்டையாக இருக்கிறோம். இனிமேல் அவ்வாறு இல்லாமல் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்போம். மரியன்னை மற்ற பெண்களைப் போல் அல்லாமல் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருந்தபோதும் தாழ்ச்சி, கீழ்ப்படிதல், தூய்மைப்படுத்துதல் இவற்றிற்கு தன்னை உட்படுத்தினார்கள். நாம் அவ்வாறு இல்லாவிட்டாலும் பரிசுத்தவானைப் போல் அகங்காரம் கொள்கிறோம். நமக்கு தாழ்ச்சியைத் தர மரியன்னையிடம் கேட்போம்.
இயேசு, மரி, சூசை மூவரும் நமக்காக வரங்களை அருளும்போது நாம் மகிழ்ந்து அவர்களைப் போற்றிப் புகழ வேண்டும். திவ்விய நற்கருணை மூலமாக நம்மிடையே இயேசு வரும்போது அவரை புகழ்ந்து நன்றி கூறி திருப்பலியை பக்தியோடு அடிக்கடி ஒப்புக்கொடுக்க வேண்டும்.
புதுமை
தூய நோர் பேர்த்துஸ் என்பவர் ஏற்படுத்திய துறவற சபையில் ஏர்மான் என்ற குரு இருந்தார். இவர் புனித சூசையப்பர்மேல் மிகுந்த பக்தியோடு இருந்து நற்செயல்களை செய்து, இடைவிடாது புனித சூசையப்பரின் புகழ் பரப்பினார், வெகுவிரைவில் தூய குரு என்ற பெயர் பெற்றார். புனித சூசையப்பர் மரியன்னையிடம் பக்தியும் வணக்கமும் வைத்திருந்ததுபோல் இவரும் மரியன்னையிடம் ஈடுபாடும் பக்தியும் வைத்திருந்தார். மரியன்னையும் தன்னுடைய பிரியமுள்ள மகனாக ஏற்றுக் கொண்டு சகல வரங்களையும் நிறைவாக அளித்தார். ஒருதடவை மரியன்னை இவருக்குத் தோன்றி எனது கணவராகிய சூசையப்பரிடம் நீர் அளவிடமுடியாத பக்தி வைத்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தோம். இனி உம்முடைய பெயரின் பின்னே சூசை என்றப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் என்றார்.
இதன்படி அவர் எழுதிய திருமுகங்களில் எல்லாம் ஏர்மான் சூசை என்றே கையெழுத்திட்டார். இன்னொரு தடவை தோன்றி கையில் இருந்த குழந்தை இயேசுவை இவரிடம் கொடுத்தார். இவர் அக்குழந்தையை அரவணைத்து மகிழ்ந்தார். இவர் இயேசு மரி சூசையிடம் பக்தியை கொண்டு அதனை உலகெங்கும் பரப்பியும், பெரும் ஆவல் கொண்டும் இருந்தார். அவரது மரணத்திற்கு முன் இயேசு மரி சூசை அவருக்குத் தோன்றி அவரைத் தேற்றி அவரை விண்ணக இன்பத்தை அனுபவிக்க செய்தனர். அம்மகிழ்ச்சியை அவரால் தாங்கிக்கொள்ள இயலாமல் அவர்களுடைய திருக்கரங்களிலே தன்னுடைய ஆத்மாவை ஒப்படைத்து நன்மரணம் அடைந்தார்.
நாம் புனித சூசையப்பரை பின்பற்றுவதால் நமக்கு சகல ஞானமும் அருளும் கிடைக்கிறது என்ற நம்பிக்கையோடு செபிப்போம்.
(3 பர, அரு, பிதா)
செபம்
இயேசுபாலன் பிறந்த நாற்பதாம் நாள் மரியன்னையோடு பாலனையும் கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த புனித சூசையப்பரே! உம்மை பக்தியோடு வணங்கி புகழ்கிறோம். இயேசுநாதரை சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்ததால் எங்களுக்கு மீட்பு கிடைத்ததை எண்ணி உமக்கு நன்றி கூறுகிறோம். இயேசுகிறிஸ்து எங்களுக்கு முடிவில்லா வாழ்வு அளிக்கும்படி எங்களுக்காக மன்றாடும். சிமியோன் தீர்க்கதரிசி, இந்த குழந்தை பலருக்கு எழுச்சியாகவோ, வீழ்ச்சியாகவோ கருதப்படுவார், மரியன்னையின் இதயத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று கூறியபோது புனித சூசையப்பர் மிகுந்த மனத்துயர் அடைந்தார். உமது மனத்துயரை உமது பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் எங்களுக்குரியதான நித்திய வாழ்வை அளிக்க வேண்டுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
எல்லா புண்ணியங்களுக்கும் நன்மாதிரிகையாயிருக்கிற புனித சூசையப்பரே! உமக்கு புகழ் உண்டாவதாக.
இயேசு கிறிஸ்துவை மனிதர்களுக்காக ஒப்புக்கொடுத்த புனித சூசையப்பரே! உமக்கு புகழ் உண்டாவதாக.
மனக்கஷ்டம் / மனச்சுமை நிறைந்த புனித சூசையப்பரே உமக்கு வாழ்த்துதல் உண்டாவதாக.
செய்ய வேண்டிய நற்செயல்
ஏதாவது ஒரு ஆலயத்தில் காணிக்கை அளிப்பது.
புனித சூசையப்பரும், கன்னிமரியாவும் குழந்தை இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானிப்போம்
தியானம்
குழந்தை இயேசு பிறந்த நாற்பதாவது நாளில் மறைநூலில் கற்பித்த சடங்குபடி புனித சூசையப்பரும் மரியன்னையும் திருக்குழந்தையை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர். குழந்தை பிறந்த நாற்பதாவது நாளில் அவரது பெற்றோர் குழந்தையை காணிக்கை அளித்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது மதக் கோட்பாடாக இருந்தது. ஆண்பிள்ளையைப் பெற்ற தாய் நாற்பது நாட்களும், பெண் பிள்ளையைப் பெற்ற தாய் எண்பது நாட்களும் வீட்டிலே ஒதுங்கி இருந்து விரதத்தோடு காணிக்கையாக ஒரு ஆட்டுக்குட்டி அல்லது இரண்டு மாடப்புறாக்களை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று மறைநூலில் கூறப்பட்டுள்ளது.
புனித சூசையப்பரும் மரியன்னையும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள். மரியன்னை மற்றப் பெண்களைப்போலல்ல. இருப்பினும் உலக நியதிக்கு கட்டுப்பட்டு சடங்குகளை கடைப்பிடித்தார்கள். சில காசுகளையும் இரண்டு மாடப்புறாக்களையும் காணிக்கை அளித்து இயேசுவை மீட்டனர். அவரோ உலக மக்கள் அனைவரையும் தன் மரணத்தால் மீட்டு இரட்சிக்க வந்தவர். எனினும் மறைநூல் ஒழுங்குகளை கடைப்பிடித்தார்.
இத்தருணத்தில் தீர்க்கத்தரிசியான சிமியோனென்கிறவர் ஆலயத்திற்கு வந்து பாசத்துடன் குழந்தையை கையிலெடுத்து மகிழ்ந்து மரியன்னையிடம் இக்குழந்தை இவ்வுலகில் படப்போகும் துன்பங்களால் உமது இதயம் வாளால் ஊடுருவும் அளவு வேதனை அடையும் என்றார். புனித சூசையப்பரும் மரியன்னையும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இதயம் கலக்கமுற்று சொல்ல முடியாத அளவு வேதனை அடைந்தனர்.
புனித சூசையப்பரும் மரியன்னையும், குழந்தை இயேசுவும் வேத கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டியதில்லை என்றாலும் சாதாரண மனிதர்களைப்போல் கடைப்பிடித்தார்கள். கடைபிடிக்க வேண்டிய நாம் அசட்டையாக இருக்கிறோம். இனிமேல் அவ்வாறு இல்லாமல் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்போம். மரியன்னை மற்ற பெண்களைப் போல் அல்லாமல் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருந்தபோதும் தாழ்ச்சி, கீழ்ப்படிதல், தூய்மைப்படுத்துதல் இவற்றிற்கு தன்னை உட்படுத்தினார்கள். நாம் அவ்வாறு இல்லாவிட்டாலும் பரிசுத்தவானைப் போல் அகங்காரம் கொள்கிறோம். நமக்கு தாழ்ச்சியைத் தர மரியன்னையிடம் கேட்போம்.
இயேசு, மரி, சூசை மூவரும் நமக்காக வரங்களை அருளும்போது நாம் மகிழ்ந்து அவர்களைப் போற்றிப் புகழ வேண்டும். திவ்விய நற்கருணை மூலமாக நம்மிடையே இயேசு வரும்போது அவரை புகழ்ந்து நன்றி கூறி திருப்பலியை பக்தியோடு அடிக்கடி ஒப்புக்கொடுக்க வேண்டும்.
புதுமை
தூய நோர் பேர்த்துஸ் என்பவர் ஏற்படுத்திய துறவற சபையில் ஏர்மான் என்ற குரு இருந்தார். இவர் புனித சூசையப்பர்மேல் மிகுந்த பக்தியோடு இருந்து நற்செயல்களை செய்து, இடைவிடாது புனித சூசையப்பரின் புகழ் பரப்பினார், வெகுவிரைவில் தூய குரு என்ற பெயர் பெற்றார். புனித சூசையப்பர் மரியன்னையிடம் பக்தியும் வணக்கமும் வைத்திருந்ததுபோல் இவரும் மரியன்னையிடம் ஈடுபாடும் பக்தியும் வைத்திருந்தார். மரியன்னையும் தன்னுடைய பிரியமுள்ள மகனாக ஏற்றுக் கொண்டு சகல வரங்களையும் நிறைவாக அளித்தார். ஒருதடவை மரியன்னை இவருக்குத் தோன்றி எனது கணவராகிய சூசையப்பரிடம் நீர் அளவிடமுடியாத பக்தி வைத்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தோம். இனி உம்முடைய பெயரின் பின்னே சூசை என்றப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் என்றார்.
இதன்படி அவர் எழுதிய திருமுகங்களில் எல்லாம் ஏர்மான் சூசை என்றே கையெழுத்திட்டார். இன்னொரு தடவை தோன்றி கையில் இருந்த குழந்தை இயேசுவை இவரிடம் கொடுத்தார். இவர் அக்குழந்தையை அரவணைத்து மகிழ்ந்தார். இவர் இயேசு மரி சூசையிடம் பக்தியை கொண்டு அதனை உலகெங்கும் பரப்பியும், பெரும் ஆவல் கொண்டும் இருந்தார். அவரது மரணத்திற்கு முன் இயேசு மரி சூசை அவருக்குத் தோன்றி அவரைத் தேற்றி அவரை விண்ணக இன்பத்தை அனுபவிக்க செய்தனர். அம்மகிழ்ச்சியை அவரால் தாங்கிக்கொள்ள இயலாமல் அவர்களுடைய திருக்கரங்களிலே தன்னுடைய ஆத்மாவை ஒப்படைத்து நன்மரணம் அடைந்தார்.
நாம் புனித சூசையப்பரை பின்பற்றுவதால் நமக்கு சகல ஞானமும் அருளும் கிடைக்கிறது என்ற நம்பிக்கையோடு செபிப்போம்.
(3 பர, அரு, பிதா)
செபம்
இயேசுபாலன் பிறந்த நாற்பதாம் நாள் மரியன்னையோடு பாலனையும் கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த புனித சூசையப்பரே! உம்மை பக்தியோடு வணங்கி புகழ்கிறோம். இயேசுநாதரை சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்ததால் எங்களுக்கு மீட்பு கிடைத்ததை எண்ணி உமக்கு நன்றி கூறுகிறோம். இயேசுகிறிஸ்து எங்களுக்கு முடிவில்லா வாழ்வு அளிக்கும்படி எங்களுக்காக மன்றாடும். சிமியோன் தீர்க்கதரிசி, இந்த குழந்தை பலருக்கு எழுச்சியாகவோ, வீழ்ச்சியாகவோ கருதப்படுவார், மரியன்னையின் இதயத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று கூறியபோது புனித சூசையப்பர் மிகுந்த மனத்துயர் அடைந்தார். உமது மனத்துயரை உமது பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் எங்களுக்குரியதான நித்திய வாழ்வை அளிக்க வேண்டுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
எல்லா புண்ணியங்களுக்கும் நன்மாதிரிகையாயிருக்கிற புனித சூசையப்பரே! உமக்கு புகழ் உண்டாவதாக.
இயேசு கிறிஸ்துவை மனிதர்களுக்காக ஒப்புக்கொடுத்த புனித சூசையப்பரே! உமக்கு புகழ் உண்டாவதாக.
மனக்கஷ்டம் / மனச்சுமை நிறைந்த புனித சூசையப்பரே உமக்கு வாழ்த்துதல் உண்டாவதாக.
செய்ய வேண்டிய நற்செயல்
ஏதாவது ஒரு ஆலயத்தில் காணிக்கை அளிப்பது.
பன்னிரண்டாம் நாள்
புனித சூசையப்பர் அளவில்லாத துன்பங்கள் அனுபவித்ததை தியானிப்போம்
தியானம்
சிமியோன் என்ற புண்ணியவான் திருக்குழந்தையை கையிலெடுத்து, இவர் பலருக்கு பகையாளியாகவும் பலருக்கு மீட்பராகவும் இருப்பார்; இவர் துன்பப்படப்போவது அவமானம், மரணம் சம்பந்தப்பட்டதாக உமது இதயத்தினை அத்துன்ப வாள் ஊடுருவும் என்றார். அப்போது இவ்வார்த்தைகளைக் கேட்டு மனத்துயர் அடைந்ததோடு தம் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டார்.
மற்ற பெற்றோர் குழந்தைகளை அன்பு செய்வதைக் காட்டிலும் மிக அதிகமாக அன்பு செய்தார். அதனால் தன் சொந்த மக்களாகிய யூதர்களால் புறக்கணிக்கப்பட்டு, ஆதரவின்றியும், ஆறுதல் சொல்ல எவருமின்றி துன்பங்களை அனுபவிக்கப்போகிறார் என்ற செய்தியைக் கேட்டபோதும், நினைவு வந்த போதெல்லாம் அவர் இதயம் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தது. அப்போது மனம் தளர்ந்து, ஏங்கி கண்ணிர் விட்டு அழுதார். இறைவா! உம்முடைய மகனுக்கு துன்ப சாவு வந்தாலும் அதனை மக்கள் புரிந்துகொண்டாலாவது பரவாயில்லை. ஆனால் இவர் துன்பப்பட்டு மரித்தாலும் மக்கள் நன்றியற்றவர்களாக கெட்டுப்போவது அவருக்கு மரணத்தைவிட அதிக துன்பம் அளிப்பதாக இருக்கும்.
அதை நினைத்து நினைத்து புனித சூசையப்பர் சாகும்வரை வருந்தினார். உமது சித்தத்தின்படி நடக்கட்டும் என்று செபித்துக் கொண்டார். தனக்கு அவமானம் என்றால் தாங்கிக்கொள்ளும் சக்தியுள்ள புனித சூசையப்பர் தன் மனைவியின் வேதனையை தாங்க முடியாமல் தத்தளித்தார். அவருடைய பக்தியும் பாசமும் உள்ள மனைவியின் இதயம் துன்பத்தால் நொறுக்கப்படும் என்பதை அவரால் தாங்க முடியவில்லை. தனக்குப் பிறகு மரியன்னை அனைத்து துன்பங்களையும் தனியே தாங்கிக்கொள்ள வேண்டும் என நினைத்து உள்ளம் உருகி வேதனைப்பட்டு அழுது புலம்பினார்.
தனது மகனால் மீட்பளித்த மக்களைப் பார்த்து புனித சூசையப்பர் வேதனை அடைந்தார். அவரால் மீட்கப்பட்ட மக்கள் நன்றியோடு
வணங்காமல், அவரது அன்பு கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் பலர் அவரை நிந்தித்து, விரோதித்து , அலட்சியம் செய்தவர்களைப் பார்க்கும் போது அவர் மனம் சொல்லமுடியாத வேதனை அனுபவித்தது. அவர்கள் வான் வீட்டை இழந்து கொண்டிருக்கிறார்களே என்ற எண்ணம் மேலும் மேலும் வெகுவாக அவரை பாதித்தது.
நாம் புனித சூசையப்பர் அனுபவித்த வேதனையை கேட்கும் போது நாமும் வேதனைப்பட வேண்டும். மரியன்னையின் மனவேதனைக்கும் புனித சூசையப்பரின் மன வேதனைக்கும் பாவமே காரணம் என்பதை உணர்ந்து நாம் பாவத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டும். நல்ல குழந்தையானது தன்னுடைய பெற்றோர் கவலை, துன்பப்படும்போது மனம் வருந்தி அவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்வார்கள். அதுபோல நமது தந்தையாக தூய சூசையப்பர் மனம் துயரப்படும்போது நாம் ஆறுதலளிக்க வேண்டுமாயின் அவரை வணங்கி, அன்பு செய்து, பரிகாரம் செய்ய பக்தி முயற்சிகளில் ஈடுபடுவோம்.
இயேசுகிறிஸ்து நம்மை பாவத்திலிருந்து மீட்கவே சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். எனவே பாவத்திலிருந்து விடுபட்டு, பாவிகளை மனம் திருப்பி, நல்லவர்களை புண்ணிய வழியில் நிலை |றுத்தி நல்ல வாழ்வு வாழ புனித சூசையப்பரிடம் வேண்டுவோமாக!
புதுமை
இயேசு மரி சூசை வாழ்ந்த வீடு யூதேயா நாட்டில் உள்ள நாசரேத் என்னும் ஊரில் இருந்தது. பழையகால கிறிஸ்தவர்கள் அதை திருத்தலமாக கருதி வணங்கியதோடல்லாமல் பிறநாடுகளிலிருந்தும் மக்கள் திரளாக வணங்கி சென்றனர். 1250-இல் 5-ஆம் செலஸ்டின் என்னும் யாப்பரசரின் காலத்தில் நாசரேத்தில் இருந்த திருத்தல வீட்டினை இத்தாலியிலுள்ள லொரேத் என்னும் நகரத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு அவ்வில்லத்தை தரிசித்து வருவோர் மகத்தான நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.
சேசுசபை துறவியரில் பல்த்தசார் அல்வாரேஸ் என்ற குருவும் இருந்தார். அவர் இஸ்பானியா நாட்டிலிருந்து ரோம் நகருக்குச் சென்று அங்குள்ள திரு இல்லத்தினை தரிசிக்கச் சென்றார். அத்திரு இல்லத்தைக் கண்டு பேருவுவகை கொண்டார். தாங்கமுடியாத அளவு இன்பத்தில் திளைத்தபோது மரியன்னை அவருக்குத் தோன்றி அவருக்கு பல இரகசியங்களைத் தெரிவித்தார். அவர் மேலும் பக்தியில் வளர அவருக்கு ஆசிரியராகவும், நன்மாதிரிகையாகவும் தூய சூசையப்பரை தெரிந்து கொண்டு செபித்து வர வேண்டும். அவர் எப்போதும் ஆறுதலும் அடைக்கலமுமாய் இருப்பார் என்றார். அவர் தன் மரணம் வரை மரியன்னை கூறியதற்கு கட்டுப்பட்டு அவ்வாறே நடந்தார். அந்த இல்லத்தில் இருந்த பிற துறவிகளும் புனித சூசையப்பர் வழியைப் பின்பற்ற அரும்பாடுபட்டார். அவர் தூயவர்களுள் ஒருவராக உயர்த்தப்பட்டார் என புனித தெரேசம்மாள் உறுதி செய்தார். புனித சூசையப்பர் அவரை எல்லா வழிகளிலும் ஆசீர்வதித்தார்.
நமக்கு புனித சூசையப்பர் நல்லாசிரியராக விளங்குகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு கடைபிடிக்க முயலுவோம்.
(3 பர, அரு பிதா)
செபம்
பெருந்துன்பங்களை அனுபவித்த தந்தையாகிய புனித சூசையப்பரே உம்மை வணங்கி புகழ்கிறோம். தன்னுடைய மரணம் வரையில் இயேசுநாதரை பின்பற்றினிர், நாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை பொறுமையோடு ஏற்றுக் கொள்ள எங்களுக்கு நன்மாதிரிகையும் ஆறுதலுமானவரே. நாங்கள் இவ்வுலக செல்வங்கள், இன்பங்களில் அதிக ஈடுபாடு காட்டாமல் துன்பங்களில் ஆர்வமாய் இருக்கச் செய்ய உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
வேதனை நிறைந்த புனித சூசையப்பரே! துன்பப்படுகிற எங்கள் மேல் இரக்கமாயிரும்!
வேதனை நிறைந்த புனித சூசையப்பரே! எங்கள் துன்பங்களை நீக்கியருளும்.
வேதனை நிறைந்த புனித சூசையப்பரே! எம்மை உம்மோடு மோட்சத்தில் சேர்த்துக்கொள்ளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
நோயாளி ஒருவருக்கு ஆறுதல் கூறுவது.
புனித சூசையப்பர் அளவில்லாத துன்பங்கள் அனுபவித்ததை தியானிப்போம்
தியானம்
சிமியோன் என்ற புண்ணியவான் திருக்குழந்தையை கையிலெடுத்து, இவர் பலருக்கு பகையாளியாகவும் பலருக்கு மீட்பராகவும் இருப்பார்; இவர் துன்பப்படப்போவது அவமானம், மரணம் சம்பந்தப்பட்டதாக உமது இதயத்தினை அத்துன்ப வாள் ஊடுருவும் என்றார். அப்போது இவ்வார்த்தைகளைக் கேட்டு மனத்துயர் அடைந்ததோடு தம் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டார்.
மற்ற பெற்றோர் குழந்தைகளை அன்பு செய்வதைக் காட்டிலும் மிக அதிகமாக அன்பு செய்தார். அதனால் தன் சொந்த மக்களாகிய யூதர்களால் புறக்கணிக்கப்பட்டு, ஆதரவின்றியும், ஆறுதல் சொல்ல எவருமின்றி துன்பங்களை அனுபவிக்கப்போகிறார் என்ற செய்தியைக் கேட்டபோதும், நினைவு வந்த போதெல்லாம் அவர் இதயம் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தது. அப்போது மனம் தளர்ந்து, ஏங்கி கண்ணிர் விட்டு அழுதார். இறைவா! உம்முடைய மகனுக்கு துன்ப சாவு வந்தாலும் அதனை மக்கள் புரிந்துகொண்டாலாவது பரவாயில்லை. ஆனால் இவர் துன்பப்பட்டு மரித்தாலும் மக்கள் நன்றியற்றவர்களாக கெட்டுப்போவது அவருக்கு மரணத்தைவிட அதிக துன்பம் அளிப்பதாக இருக்கும்.
அதை நினைத்து நினைத்து புனித சூசையப்பர் சாகும்வரை வருந்தினார். உமது சித்தத்தின்படி நடக்கட்டும் என்று செபித்துக் கொண்டார். தனக்கு அவமானம் என்றால் தாங்கிக்கொள்ளும் சக்தியுள்ள புனித சூசையப்பர் தன் மனைவியின் வேதனையை தாங்க முடியாமல் தத்தளித்தார். அவருடைய பக்தியும் பாசமும் உள்ள மனைவியின் இதயம் துன்பத்தால் நொறுக்கப்படும் என்பதை அவரால் தாங்க முடியவில்லை. தனக்குப் பிறகு மரியன்னை அனைத்து துன்பங்களையும் தனியே தாங்கிக்கொள்ள வேண்டும் என நினைத்து உள்ளம் உருகி வேதனைப்பட்டு அழுது புலம்பினார்.
தனது மகனால் மீட்பளித்த மக்களைப் பார்த்து புனித சூசையப்பர் வேதனை அடைந்தார். அவரால் மீட்கப்பட்ட மக்கள் நன்றியோடு
வணங்காமல், அவரது அன்பு கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் பலர் அவரை நிந்தித்து, விரோதித்து , அலட்சியம் செய்தவர்களைப் பார்க்கும் போது அவர் மனம் சொல்லமுடியாத வேதனை அனுபவித்தது. அவர்கள் வான் வீட்டை இழந்து கொண்டிருக்கிறார்களே என்ற எண்ணம் மேலும் மேலும் வெகுவாக அவரை பாதித்தது.
நாம் புனித சூசையப்பர் அனுபவித்த வேதனையை கேட்கும் போது நாமும் வேதனைப்பட வேண்டும். மரியன்னையின் மனவேதனைக்கும் புனித சூசையப்பரின் மன வேதனைக்கும் பாவமே காரணம் என்பதை உணர்ந்து நாம் பாவத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டும். நல்ல குழந்தையானது தன்னுடைய பெற்றோர் கவலை, துன்பப்படும்போது மனம் வருந்தி அவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்வார்கள். அதுபோல நமது தந்தையாக தூய சூசையப்பர் மனம் துயரப்படும்போது நாம் ஆறுதலளிக்க வேண்டுமாயின் அவரை வணங்கி, அன்பு செய்து, பரிகாரம் செய்ய பக்தி முயற்சிகளில் ஈடுபடுவோம்.
இயேசுகிறிஸ்து நம்மை பாவத்திலிருந்து மீட்கவே சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். எனவே பாவத்திலிருந்து விடுபட்டு, பாவிகளை மனம் திருப்பி, நல்லவர்களை புண்ணிய வழியில் நிலை |றுத்தி நல்ல வாழ்வு வாழ புனித சூசையப்பரிடம் வேண்டுவோமாக!
புதுமை
இயேசு மரி சூசை வாழ்ந்த வீடு யூதேயா நாட்டில் உள்ள நாசரேத் என்னும் ஊரில் இருந்தது. பழையகால கிறிஸ்தவர்கள் அதை திருத்தலமாக கருதி வணங்கியதோடல்லாமல் பிறநாடுகளிலிருந்தும் மக்கள் திரளாக வணங்கி சென்றனர். 1250-இல் 5-ஆம் செலஸ்டின் என்னும் யாப்பரசரின் காலத்தில் நாசரேத்தில் இருந்த திருத்தல வீட்டினை இத்தாலியிலுள்ள லொரேத் என்னும் நகரத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு அவ்வில்லத்தை தரிசித்து வருவோர் மகத்தான நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.
சேசுசபை துறவியரில் பல்த்தசார் அல்வாரேஸ் என்ற குருவும் இருந்தார். அவர் இஸ்பானியா நாட்டிலிருந்து ரோம் நகருக்குச் சென்று அங்குள்ள திரு இல்லத்தினை தரிசிக்கச் சென்றார். அத்திரு இல்லத்தைக் கண்டு பேருவுவகை கொண்டார். தாங்கமுடியாத அளவு இன்பத்தில் திளைத்தபோது மரியன்னை அவருக்குத் தோன்றி அவருக்கு பல இரகசியங்களைத் தெரிவித்தார். அவர் மேலும் பக்தியில் வளர அவருக்கு ஆசிரியராகவும், நன்மாதிரிகையாகவும் தூய சூசையப்பரை தெரிந்து கொண்டு செபித்து வர வேண்டும். அவர் எப்போதும் ஆறுதலும் அடைக்கலமுமாய் இருப்பார் என்றார். அவர் தன் மரணம் வரை மரியன்னை கூறியதற்கு கட்டுப்பட்டு அவ்வாறே நடந்தார். அந்த இல்லத்தில் இருந்த பிற துறவிகளும் புனித சூசையப்பர் வழியைப் பின்பற்ற அரும்பாடுபட்டார். அவர் தூயவர்களுள் ஒருவராக உயர்த்தப்பட்டார் என புனித தெரேசம்மாள் உறுதி செய்தார். புனித சூசையப்பர் அவரை எல்லா வழிகளிலும் ஆசீர்வதித்தார்.
நமக்கு புனித சூசையப்பர் நல்லாசிரியராக விளங்குகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு கடைபிடிக்க முயலுவோம்.
(3 பர, அரு பிதா)
செபம்
பெருந்துன்பங்களை அனுபவித்த தந்தையாகிய புனித சூசையப்பரே உம்மை வணங்கி புகழ்கிறோம். தன்னுடைய மரணம் வரையில் இயேசுநாதரை பின்பற்றினிர், நாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை பொறுமையோடு ஏற்றுக் கொள்ள எங்களுக்கு நன்மாதிரிகையும் ஆறுதலுமானவரே. நாங்கள் இவ்வுலக செல்வங்கள், இன்பங்களில் அதிக ஈடுபாடு காட்டாமல் துன்பங்களில் ஆர்வமாய் இருக்கச் செய்ய உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
வேதனை நிறைந்த புனித சூசையப்பரே! துன்பப்படுகிற எங்கள் மேல் இரக்கமாயிரும்!
வேதனை நிறைந்த புனித சூசையப்பரே! எங்கள் துன்பங்களை நீக்கியருளும்.
வேதனை நிறைந்த புனித சூசையப்பரே! எம்மை உம்மோடு மோட்சத்தில் சேர்த்துக்கொள்ளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
நோயாளி ஒருவருக்கு ஆறுதல் கூறுவது.
பதின்மூன்றாம் நாள்
புனித சூசையப்பர் எகிப்து நாட்டிற்கு போனதை தியானிப்போம்
தியானம்
சிமியோன் தீர்க்கதரிசி இயேசுவை குறித்து முன்னறிவித்ததற்கு பின் கொடுங்கோலனான ஏரோது அரசன் இயேசுவைக் கொல்ல திட்டமிட்டு மூன்று அரசர்களிடமும் பாலனை வணங்கியபின் தன்னை வந்து சந்திக்கும்படிக் கேட்டுக்கொண்டான் . அவர்களுக்கு கிடைத்த இறைவனின் அறிவுறுத்தலால் அவர்கள் ஜெருசலேமுக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு வழியில் தங்கள் ஊர்போய் சேர்ந்தார்கள். மூன்று அரசர்களும் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை அறிந்த ஏரோது பெத்லேகம் மற்றும் அதைச் சுற்றி உள்ள ஊர்களில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்குழந்தைகளை எல்லாம் வெட்டிக் கொல்ல ஆணையிட்டான். ஆணை அமுலுக்கு வருமுன்னே வானதுதர் தூய சூசையப்பரின் கனவில் தோன்றி "தாயையும் குழந்தையையும் எகிப்து நாட்டிற்கு அழைத்து செல்லும், மீண்டும் நான் அறிவிக்கும்வரை அங்கேயே தங்கியிருங்கள். ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகிறான்" என்றார். தூர நாட்டில் போய் எப்படி பிழைப்போம்? யார் ஆதரவு தருவார்? பயணம் எப்படியிருக்கும்? எத்தனை வருடம் அங்கு தங்க வேண்டி யிருக்கும்? இதை ஒன்றும் வானதுதர் தெரிவிக்கவில்லை. தூய சூசையப்பர் தனது வறுமை நிலையையோ, பச்சிளம் குழந்தையையோ பற்றிக் கேட்காமல் வானதுதருக்கு கீழ்ப்படிந்தார்.
இரவே எழுந்து மரியன்னையிடம் விவரம் கூறி எகிப்து நாட்டிற்கு மூவரும் பயணமானார்கள். கொடிய காட்டு வழியே சுமார் நாற்பத்தைந்து மைல் தூரம் எகிப்துக்குச் செல்ல வேண்டியதிருந்தது. கொடிய விலங்குகள், திருடர்கள் நிறைந்த பகுதி மட்டுமல்ல தங்குவதற்கு சத்திரங்களோ, தேவையானவற்றை வாங்குவதற்கு கடைகளோ, வேலைக்காரர்களோ இல்லை. ஆனால் பதினைந்து வயதான மரியன்னையையும் தோளில் பாலன் இயேசுவையும் தூக்கிக்கொண்டு மிக துயரத்தோடு பயணமாயினர். கொலைகாரனான ஏரோதிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற நீரின்றி, உணவின்றி உடல் சோர்வுற கால்கள் நடுநடுங்க சூசையப்பரும் மாதாவும் நடந்தனர். ஆனால் உலகை மீட்பவர் நம்மோடு இருக்கிறார் என்கிற சந்தோஷத்தால் எகிப்து நாட்டில் உள்ள எலியோப்பொலிஸ் என்ற நகரினை அடைந்து ஏழு ஆண்டுகள் அங்கே தங்கி இருந்தனர்.
இறைவன் ஏன் இவர்களை இங்ங்ணம் துன்பப்படுத்தி ஏரோதிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பே. இறைவனின் வழிகள் மனிதனின் வழிகளிலிருந்து மாறுபட்டவையே. ஏரோதிடமிருந்து குழந்தையை மறைக்கவோ அல்லது ஏரோதை அழிக்கவோ செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ய வில்லை. இவ்வுலகில் நமக்கு நடக்கும் செயல்களெல்லாம் இறைவனால் நடைபெறுகிறது என்பதை நாம் உணர்ந்து இறைவனின் கட்டளை களுக்கு கீழ்ப்படிந்து, நம்பிக்கையோடு எது நடந்தாலும் அது நன்மைக்கே இருக்கும் என உணர வேண்டும்.
இயேசு மரி சூசை மகிழ்ச்சியோடும் பொறுமையோடும், கீழ்ப்படிதலோடும் தங்கள் வழிப்பயணத்தை தொடர்ந்து இயேசுவை ஏரோதிடமிருந்து காப்பாற்றினார்கள். நாம் உலகில் எந்த மூலைக்கு ஓடினாலும் நமது சிலுவை, துன்பங்கள் நம்மை தொடர்ந்து வரும். ஒரு துன்பத்திலிருந்து விடுபட்டால் இன்னொரு துன்பம் தொடர்ந்து வரும். எனவே, சிலுவை சுமந்த இயேசுவை நாம் மகிழ்ச்சியோடு பின்பற்றவேண்டும். அதுபோல் நம்மில் இருக்கிற இயேசுவை புனித சூசையப்பர் வாழ் நாளெல்லாம் போற்றி புகழ்ந்ததுபோல் நாமும் போற்றி புகழ்வோம்.
நம்மில் ஆன்மாவில் இறைவன் வாழ்கிறார். நாம் சாவான பாவத்தைக் கட்டிக்கொள்ளும்போது இறைவனை விரட்டிவிட்டு சாத்தானை வாழ்வாக்குகிறோம். அதனால் நாம் பாவத்தை விட்டு விலக வேண்டும். இயேசுநாதர் தன் சீடர்களை நோக்கி உன் கையோ, காலோ உனக்கு பாவத்தை செய்ய தூண்டுவதாக இருந்தால் அவற்றினை வெட்டி எறிந்துவிடு. அனைத்து உறுப்புகளுடன் நரகத்தில் வேதனைப்படுவதைவிட உடல் ஊனமுற்றவனாய் மோட்சத்தில் நுழைவது நல்லது என்றார். இரு கண்களோடு நரகத்தில் இருப்பதைவிட ஒரு கண் உடையவனாய் மோட்ச வீட்டில் இருப்பது நமக்கு நல்லது என்றார். அதனால் நாம் பாவச்செயல்களையும், பாவஞ்செய்யத்தூண்டும் மனிதர்களையும் விலக்கி மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
புதுமை
இஸ்பானிய நாட்டில் பார்செலோனா என்ற நகருக்கருகில் மொன்சேராத்துஸ் என்ற மலையின்மேல் தூய ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்த பிரபலமான துறவற இல்லமும், மரியன்னை ஆலயமும் இருந்தது. துறவற இல்லத்தில் இயேசு மரி சூசை என்ற திருக்குடும் பக்தர் ஒருவர் இருந்தார். புனித சூசையப்பர் எகிப்து நாட்டில் ஏரோதரசருக்கு பயந்து பலவிதமான துன்பமடைந்ததால், அவரை வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டியாகவும், அடைக்கலமாகவும் அத்துறவி வணங்கினார்.
ஒருநாள் அத்துறவி அலுவல் காரணமாக நீண்ட தொலைவு சென்று விரும்பியபோது வழி தவறி பாறை, செடி, கொடி, குன்று, கால்வாய் எனச சுற்றித் திரிந்தார். அதனால் அவருக்கு பெரும் பயம் உண்டாயிற்று. அந்த கொடிய காட்டில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. இவர் தூய சூசையப்பரை கெஞ்சி மன்றாடினார். தொலைவில் முதியவர் ஒருவர் ஒரு சின்ன வாகனத்தில் ஒரு பெண்ணும், சிறு குழந்தையை கையில் ஏந்தி எதிரே வந்துகொண்டிருந்தனர். துறவியானவர் அந்த வlயவரிடம் துறவற இல்லம் செல்லும் வழி தங்களுக்குத் தெரியுமா * கெட்டார். அப்பெரியவர் ஆம் தெரியும். இங்கு வழி சிரமமாக இருப்பதால் கவனமுடன் எங்களுடன் வாருங்கள் என்றார். இவரும் பயம் தெளிந்து அவர்களுடன் சென்றார். வழியெல்லாம் புண்ணிய நெறிகளைப் பற்றி பேசிக்கொண்டேச் சென்றனர். அவர்கள் பேசிவந்ததால் விரைவில் சென்று சேர்ந்தார். இல்லத்தை அடைந்ததும் நீங்கள் மூவரும் இரவு நேரத்தில் தங்கிச் செல்லுங்கள் என்றதும் மூவரும் மறைந்துபோயின்ர். துறவிக்கு அவர்கள் இயேசு மரி சூசை எனத்தெரிந்து நீண்ட நேரம் முழங்கால்படி இருந்து செபித்தார்.
நாமும் வான் வீட்டிற்கு செல்லும் வழிகாட்டியாகவும், அடைக்கலம் அளிப்பவராகவும் புனித சூசையப்பரை தெரிந்து கொள்வோம்.
(3 பர அரு பிதா)
செபம்
ஏரோது அரசரிடமிருந்து இயேசுவைக் காப்பாற்ற எகிப்து நாட்டிற்கு நடந்துசென்ற தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். நீர் தேவனுடைய கட்டளைகளை மறுதலிக்காமல், முணுமுணுக்காமல் கீழ்ப்படிந்தீரே, நாங்கள் எல்லா செயல்களிலும் இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படிய செய்தருளும், நாங்கள் செய்த பாவத்தால் இயேசுவை இழந்து போகாதபடி செய்தருளும். ஆமென்.
அடிக்கடி சொல்ல வேண்டிய செபம்:
இறைவனின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்த புனித சூசையப்பரே நாங்களும் இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கச் செய்தருளும்.
எல்லாவித துன்ப துயரங்களையும் அனுபவித்த தூய சூசையப்பரே! எங்களுக்கு வருகிற துன்ப துயரங்களை நாங்கள் பொறுமையோடு சகித்துக்கொள்ள உதவி செய்யும். ஏரோது மன்னனின் கொடுமையிலிருந்து இயேசுவைக் காப்பாற்ற பெரிதும் அல்லலுற்ற புனித சூசையப்பரே! நாங்கள் எங்கள் பாவங்களால் இயேசுவை இழந்து போகாதபடி உதவி செய்தருளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
சில பிற மதத்தவருக்கு அறிவுரை கூறுவது.
புனித சூசையப்பர் எகிப்து நாட்டிற்கு போனதை தியானிப்போம்
தியானம்
சிமியோன் தீர்க்கதரிசி இயேசுவை குறித்து முன்னறிவித்ததற்கு பின் கொடுங்கோலனான ஏரோது அரசன் இயேசுவைக் கொல்ல திட்டமிட்டு மூன்று அரசர்களிடமும் பாலனை வணங்கியபின் தன்னை வந்து சந்திக்கும்படிக் கேட்டுக்கொண்டான் . அவர்களுக்கு கிடைத்த இறைவனின் அறிவுறுத்தலால் அவர்கள் ஜெருசலேமுக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு வழியில் தங்கள் ஊர்போய் சேர்ந்தார்கள். மூன்று அரசர்களும் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை அறிந்த ஏரோது பெத்லேகம் மற்றும் அதைச் சுற்றி உள்ள ஊர்களில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்குழந்தைகளை எல்லாம் வெட்டிக் கொல்ல ஆணையிட்டான். ஆணை அமுலுக்கு வருமுன்னே வானதுதர் தூய சூசையப்பரின் கனவில் தோன்றி "தாயையும் குழந்தையையும் எகிப்து நாட்டிற்கு அழைத்து செல்லும், மீண்டும் நான் அறிவிக்கும்வரை அங்கேயே தங்கியிருங்கள். ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகிறான்" என்றார். தூர நாட்டில் போய் எப்படி பிழைப்போம்? யார் ஆதரவு தருவார்? பயணம் எப்படியிருக்கும்? எத்தனை வருடம் அங்கு தங்க வேண்டி யிருக்கும்? இதை ஒன்றும் வானதுதர் தெரிவிக்கவில்லை. தூய சூசையப்பர் தனது வறுமை நிலையையோ, பச்சிளம் குழந்தையையோ பற்றிக் கேட்காமல் வானதுதருக்கு கீழ்ப்படிந்தார்.
இரவே எழுந்து மரியன்னையிடம் விவரம் கூறி எகிப்து நாட்டிற்கு மூவரும் பயணமானார்கள். கொடிய காட்டு வழியே சுமார் நாற்பத்தைந்து மைல் தூரம் எகிப்துக்குச் செல்ல வேண்டியதிருந்தது. கொடிய விலங்குகள், திருடர்கள் நிறைந்த பகுதி மட்டுமல்ல தங்குவதற்கு சத்திரங்களோ, தேவையானவற்றை வாங்குவதற்கு கடைகளோ, வேலைக்காரர்களோ இல்லை. ஆனால் பதினைந்து வயதான மரியன்னையையும் தோளில் பாலன் இயேசுவையும் தூக்கிக்கொண்டு மிக துயரத்தோடு பயணமாயினர். கொலைகாரனான ஏரோதிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற நீரின்றி, உணவின்றி உடல் சோர்வுற கால்கள் நடுநடுங்க சூசையப்பரும் மாதாவும் நடந்தனர். ஆனால் உலகை மீட்பவர் நம்மோடு இருக்கிறார் என்கிற சந்தோஷத்தால் எகிப்து நாட்டில் உள்ள எலியோப்பொலிஸ் என்ற நகரினை அடைந்து ஏழு ஆண்டுகள் அங்கே தங்கி இருந்தனர்.
இறைவன் ஏன் இவர்களை இங்ங்ணம் துன்பப்படுத்தி ஏரோதிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பே. இறைவனின் வழிகள் மனிதனின் வழிகளிலிருந்து மாறுபட்டவையே. ஏரோதிடமிருந்து குழந்தையை மறைக்கவோ அல்லது ஏரோதை அழிக்கவோ செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ய வில்லை. இவ்வுலகில் நமக்கு நடக்கும் செயல்களெல்லாம் இறைவனால் நடைபெறுகிறது என்பதை நாம் உணர்ந்து இறைவனின் கட்டளை களுக்கு கீழ்ப்படிந்து, நம்பிக்கையோடு எது நடந்தாலும் அது நன்மைக்கே இருக்கும் என உணர வேண்டும்.
இயேசு மரி சூசை மகிழ்ச்சியோடும் பொறுமையோடும், கீழ்ப்படிதலோடும் தங்கள் வழிப்பயணத்தை தொடர்ந்து இயேசுவை ஏரோதிடமிருந்து காப்பாற்றினார்கள். நாம் உலகில் எந்த மூலைக்கு ஓடினாலும் நமது சிலுவை, துன்பங்கள் நம்மை தொடர்ந்து வரும். ஒரு துன்பத்திலிருந்து விடுபட்டால் இன்னொரு துன்பம் தொடர்ந்து வரும். எனவே, சிலுவை சுமந்த இயேசுவை நாம் மகிழ்ச்சியோடு பின்பற்றவேண்டும். அதுபோல் நம்மில் இருக்கிற இயேசுவை புனித சூசையப்பர் வாழ் நாளெல்லாம் போற்றி புகழ்ந்ததுபோல் நாமும் போற்றி புகழ்வோம்.
நம்மில் ஆன்மாவில் இறைவன் வாழ்கிறார். நாம் சாவான பாவத்தைக் கட்டிக்கொள்ளும்போது இறைவனை விரட்டிவிட்டு சாத்தானை வாழ்வாக்குகிறோம். அதனால் நாம் பாவத்தை விட்டு விலக வேண்டும். இயேசுநாதர் தன் சீடர்களை நோக்கி உன் கையோ, காலோ உனக்கு பாவத்தை செய்ய தூண்டுவதாக இருந்தால் அவற்றினை வெட்டி எறிந்துவிடு. அனைத்து உறுப்புகளுடன் நரகத்தில் வேதனைப்படுவதைவிட உடல் ஊனமுற்றவனாய் மோட்சத்தில் நுழைவது நல்லது என்றார். இரு கண்களோடு நரகத்தில் இருப்பதைவிட ஒரு கண் உடையவனாய் மோட்ச வீட்டில் இருப்பது நமக்கு நல்லது என்றார். அதனால் நாம் பாவச்செயல்களையும், பாவஞ்செய்யத்தூண்டும் மனிதர்களையும் விலக்கி மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
புதுமை
இஸ்பானிய நாட்டில் பார்செலோனா என்ற நகருக்கருகில் மொன்சேராத்துஸ் என்ற மலையின்மேல் தூய ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்த பிரபலமான துறவற இல்லமும், மரியன்னை ஆலயமும் இருந்தது. துறவற இல்லத்தில் இயேசு மரி சூசை என்ற திருக்குடும் பக்தர் ஒருவர் இருந்தார். புனித சூசையப்பர் எகிப்து நாட்டில் ஏரோதரசருக்கு பயந்து பலவிதமான துன்பமடைந்ததால், அவரை வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டியாகவும், அடைக்கலமாகவும் அத்துறவி வணங்கினார்.
ஒருநாள் அத்துறவி அலுவல் காரணமாக நீண்ட தொலைவு சென்று விரும்பியபோது வழி தவறி பாறை, செடி, கொடி, குன்று, கால்வாய் எனச சுற்றித் திரிந்தார். அதனால் அவருக்கு பெரும் பயம் உண்டாயிற்று. அந்த கொடிய காட்டில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. இவர் தூய சூசையப்பரை கெஞ்சி மன்றாடினார். தொலைவில் முதியவர் ஒருவர் ஒரு சின்ன வாகனத்தில் ஒரு பெண்ணும், சிறு குழந்தையை கையில் ஏந்தி எதிரே வந்துகொண்டிருந்தனர். துறவியானவர் அந்த வlயவரிடம் துறவற இல்லம் செல்லும் வழி தங்களுக்குத் தெரியுமா * கெட்டார். அப்பெரியவர் ஆம் தெரியும். இங்கு வழி சிரமமாக இருப்பதால் கவனமுடன் எங்களுடன் வாருங்கள் என்றார். இவரும் பயம் தெளிந்து அவர்களுடன் சென்றார். வழியெல்லாம் புண்ணிய நெறிகளைப் பற்றி பேசிக்கொண்டேச் சென்றனர். அவர்கள் பேசிவந்ததால் விரைவில் சென்று சேர்ந்தார். இல்லத்தை அடைந்ததும் நீங்கள் மூவரும் இரவு நேரத்தில் தங்கிச் செல்லுங்கள் என்றதும் மூவரும் மறைந்துபோயின்ர். துறவிக்கு அவர்கள் இயேசு மரி சூசை எனத்தெரிந்து நீண்ட நேரம் முழங்கால்படி இருந்து செபித்தார்.
நாமும் வான் வீட்டிற்கு செல்லும் வழிகாட்டியாகவும், அடைக்கலம் அளிப்பவராகவும் புனித சூசையப்பரை தெரிந்து கொள்வோம்.
(3 பர அரு பிதா)
செபம்
ஏரோது அரசரிடமிருந்து இயேசுவைக் காப்பாற்ற எகிப்து நாட்டிற்கு நடந்துசென்ற தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். நீர் தேவனுடைய கட்டளைகளை மறுதலிக்காமல், முணுமுணுக்காமல் கீழ்ப்படிந்தீரே, நாங்கள் எல்லா செயல்களிலும் இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படிய செய்தருளும், நாங்கள் செய்த பாவத்தால் இயேசுவை இழந்து போகாதபடி செய்தருளும். ஆமென்.
அடிக்கடி சொல்ல வேண்டிய செபம்:
இறைவனின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்த புனித சூசையப்பரே நாங்களும் இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கச் செய்தருளும்.
எல்லாவித துன்ப துயரங்களையும் அனுபவித்த தூய சூசையப்பரே! எங்களுக்கு வருகிற துன்ப துயரங்களை நாங்கள் பொறுமையோடு சகித்துக்கொள்ள உதவி செய்யும். ஏரோது மன்னனின் கொடுமையிலிருந்து இயேசுவைக் காப்பாற்ற பெரிதும் அல்லலுற்ற புனித சூசையப்பரே! நாங்கள் எங்கள் பாவங்களால் இயேசுவை இழந்து போகாதபடி உதவி செய்தருளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
சில பிற மதத்தவருக்கு அறிவுரை கூறுவது.
பதினான்காம் நாள்
புனித சூசையப்பர் எகிப்து நாட்டில் வசித்ததை தியானிப்போம்
தியானம்
இயேசுமரி சூசை எகிப்து நாட்டிற்குள் நுழைந்தபோது பல அசுத்த அரூபிகளில் கோவில்கள் இடிந்து விழுந்ததென்றும், அவைகளின் பீடங்கள் தகர்ந்ததுமல்லாமல், அவைகளுக்குச் செலுத்தப்பட்டு வந்த ஆராதனைகள் நின்றதாகவும், வேதவாக்கு என தவறுதலாக கூறி வந்தவர்கள் ஊமையாக மாறியதாகவும் அலெக்சாந்திரினுாஸ் கிளமென்ஸ் என்பவர் எழுதியுள்ளார்.
இயேசுமரி சூசை அந்த நாட்டுக்குக் கொடுத்த வல்லமைமித்த ஆசீர்வாதத்தால் இயேசுகிறிஸ்து மரித்த பின்னர் பிற மதங்களைவிட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மக்கள் மனம்மாறி வநதனர் . இயேசு கிறிஸ்துவின் தவ வாழ்வையும் பணிவையும் பார்த்து மக்கள் மனம்மாறினர். பலர் மறைசாட்சிகளாக தங்கள் இன்னுயிரைத் துறந்தனர். இயேசுமரி சூசை கால்நடையாக நடந்து சென்ற இடங்களில் எல்லாம் செடிகள் பூத்து குலுங்கியது. அங்கு புனித வனத்து சின்னப்பரும், பெரிய அந்தோனியார், இரண்டு துறவிகளும் எண்ணில்லா மக்களும் தவம் செய்து வானதூதர்களுக்கு சமமானார்கள்.
திருக்குடும்பத்தை காப்பாற்றுவதற்காக புனித சூசையப்பர் இரவும் பகலும் உழைத்து வந்தார். அதோடு மட்டுமல்லாது தம்மிடம் வருகிறவர்களுக்கு நல் ஆலோசனை வழங்கியும் வந்தார்.
நம்மிடையே நற்கருணை வடிவில் இயேசுகிறிஸ்து வருவதற்காக நாம் தக்க முறையில் தவமும், செபமுமாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு நற்கருணை பெற வேண்டும். புனித சூசையப்பர் எகிப்தில் வாழ்ந்த ஏழு வருடங்களும் எளிமையையும், ஏழ்மையையும் அனுபவித்து வந்தார். மனைவி கணவனை விட்டு விலகாதவள் போல். கிறிஸ்துநாதரும் வறுமையை விட்டுப் பிரியாதவராக இருந்தார். "நரிகளுக்கு வளை உண்டு, பறவைகளுக்கு கூடு, உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" என இயேசு குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்களே, நீங்கள் ஏழையாக இருந்தால் இறைவனுக்கு பிரியமானவர்கள், நீங்கள் செல்வந்தர்களாக இருந்து தங்கள் செல்வங்கள் மேல் பற்று கொண்டு ஏழ்மையை உணராதிருந்தால் விண்ணரசை அடைவது கடினம். நாம் இயேசு மரி சூசையைப் பார்த்து சிந்தித்து மனதில் ஏழைகளாக வாழ வேண்டும்.
புனித சூசையப்பர் எவ்வளவு கடினமாக உழைத்தார், பாவிகளான நாம் உடல் வருந்தி உழைக்க வேண்டாமா? சோம்பல் பல பாவங்களுக்குக் காரணமாக இருப்பதால் நாம் நமது வயது, தகுதிக்கேற்ப பொழுதை வீணாக்காமல் நேர்மையாக உழைக்க வேண்டும்.
புதுமை
சத்திய வேதத்தின் மகிமையால் பல கன்னியர் இல்லங்களும் - துறவற இல்லங்களும் - சபைகளும் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றன. அதைத் தோற்றுவித்த தூயவர்களின் பெயர்கள் அந்தந்த சபைகளுக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் புனித சூசையப்பரின் பெயரால் ஐந்து சபைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை அவர் நிறுவவில்லை. அச்சபைகளில் உள்ள கன்னியர்கள் எப்போதும் ஏழ்மையாய், கன்னியர்களாய், கீழ்ப்படிந்து வாழ்வோம் என உறுதிமொழி எடுத்துள்ளார்கள். அவர்கள் புனித சூசையப்பரிடம் அதிக பக்தி, நம்பிக்கை வைத்து பல நன்மையால் புண்ணியங்களை செய்து வருகிறார்கள். அவர்கள் புனித சூசையப்பரை தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருக்கவும் பணிவோடு செபிக்கிறார்கள்.
கன்னியர்கள் தங்கள் இல்லத்தில் தையல், நூல் நூற்றல், சரிகை வேலை , எழுத்து கற்பித்தல், மறைநூல் கற்பித்தல் போன்று பல கைத்தொழில் போன்றவற்றை பெண்களுக்கு கற்றுக்கொடுத்து பக்தியையும் வளர்த்துவருகிறார்கள். சிலர் தகப்பன், தாய் இல்லாத குழந்தைகளை சேகரித்து மனம் தளர்ந்துவிடாமல் இல்லத்தில் வைத்து காத்து ஞானப் பெற்றோர்களாக இருந்து அவர்களுக்குரிய பணிவிடை புரிகிறார்கள்.
சிலரோ வயோதிக வியாதிக்காரர்களை ஒரு கூடத்தில் சேர்த்து வந்து அவர்களுக்கு மருந்துகளையும், உணவுகளையும், உடைகளையும் அளித்து பணிவிடை செய்வர். மற்றும் சிலரோ அவஸ்தையாய் இருக்கிறவர்களுக்கு நோயில் பூசுதல் அருட்சாதனத்தைப் பெறச் செய்து நல்மரணம் அடைய உதவுகிறார்கள். தங்களுக்கும் ஒருவித சுகவீனம் வரும என்ற எண்ணம் சிறிதும் இன்றி சேவை செய்து வருகிறார்கள். இப்படி சேவை செய்து வருகிறவர்களை - பெண்களை பயனற்றவர்கள் என்று கூறலாமா? இவர்கள் ஆற்றிவரும் சேவைகளை கண்டு எத்தனையோ துஷ்டர்கள் உணர்ந்து மனம் மாறி உதவியுள்ளனர்.
கன்னியர்களில் சிலர் தன் சொந்த நாட்டை விட்டு கப்பலேறி பொல்லாதவர்களிடமும், பிற மதத்தவரிடமும் தங்கி இருந்து பயப்படாமல் மறைப்பணியும், அம்மக்களுக்கு மருத்துவம், உறைவிடம், உணவு, உடை சேவையும் செய்வதைப் பார்த்து எத்தனையோ பேர் உணர்ந்து மனந்திரும்பி சுத்த வேதத்திற்கு மாறியுள்ளனர். பெண்கள் முதலாய் புண்ணிய வழியில் சென்று கிறிஸ்துவுக்காய் உழைத்ததைப்போல் நாமும் உழைக்க ஆவலாய் இருப்போம். (3 பர, அரு, பிதா)
செபம்
எகிப்து நாட்டில் வசித்தபோது அதிக துன்பங்களை அனுபவித்த தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். திருக்குடும்பம் அங்கு நுழையும் முன்பாக அசுத்த ஆவிகளுடைய ஆலயங்களும், பீடங்களும், சிலைகளும் இடிந்து விழுந்ததுபோல் இந்திய நாட்டில் பொய்யான கடவுளர்களுடைய ஆராதனைகள் நீங்கவும் அனைவரும் உம்மை அறிந்து வணங்கவும் செய்தருளும். அவர்களிடமிருக்கும் ஆங்காரம், கோபம், மோகம், சோம்பல், துர்போதனையை விலக செய்தருளும். நீர் பட்ட துன்ப துயரங்களை நினைத்து நாங்கள் புண்ணிய நெறியில் தவறாது வாழ வரம் அருள உம்மை மன்றாடுகிறோம்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இயேசுமரி சூசை என்கிற திருக்குடும்பமே! பிற மதத்தவரை மனந்திருப்பியருளும்.
இயேசுமரி சூசை என்கிற திருக்குடும்பமே! சத்திய வேதத்தில் கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தியருளும்.
இயேசுமரி சூசை என்கிற திருக்குடும்பமே!
உமக்குரிய தொண்டர்களாகவும் பக்தர்களாகவும் இருக்கிற எங்களை ஆசீர்வதித்தருளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
அசுத்த ஆவிகளுக்கு ஆராதனை செய்வதை விட்டுவிடவும். தேவனை அறிந்து விசுவசித்து சேவிக்கவும் செய்தருளும்.
புனித சூசையப்பர் எகிப்து நாட்டில் வசித்ததை தியானிப்போம்
தியானம்
இயேசுமரி சூசை எகிப்து நாட்டிற்குள் நுழைந்தபோது பல அசுத்த அரூபிகளில் கோவில்கள் இடிந்து விழுந்ததென்றும், அவைகளின் பீடங்கள் தகர்ந்ததுமல்லாமல், அவைகளுக்குச் செலுத்தப்பட்டு வந்த ஆராதனைகள் நின்றதாகவும், வேதவாக்கு என தவறுதலாக கூறி வந்தவர்கள் ஊமையாக மாறியதாகவும் அலெக்சாந்திரினுாஸ் கிளமென்ஸ் என்பவர் எழுதியுள்ளார்.
இயேசுமரி சூசை அந்த நாட்டுக்குக் கொடுத்த வல்லமைமித்த ஆசீர்வாதத்தால் இயேசுகிறிஸ்து மரித்த பின்னர் பிற மதங்களைவிட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மக்கள் மனம்மாறி வநதனர் . இயேசு கிறிஸ்துவின் தவ வாழ்வையும் பணிவையும் பார்த்து மக்கள் மனம்மாறினர். பலர் மறைசாட்சிகளாக தங்கள் இன்னுயிரைத் துறந்தனர். இயேசுமரி சூசை கால்நடையாக நடந்து சென்ற இடங்களில் எல்லாம் செடிகள் பூத்து குலுங்கியது. அங்கு புனித வனத்து சின்னப்பரும், பெரிய அந்தோனியார், இரண்டு துறவிகளும் எண்ணில்லா மக்களும் தவம் செய்து வானதூதர்களுக்கு சமமானார்கள்.
திருக்குடும்பத்தை காப்பாற்றுவதற்காக புனித சூசையப்பர் இரவும் பகலும் உழைத்து வந்தார். அதோடு மட்டுமல்லாது தம்மிடம் வருகிறவர்களுக்கு நல் ஆலோசனை வழங்கியும் வந்தார்.
நம்மிடையே நற்கருணை வடிவில் இயேசுகிறிஸ்து வருவதற்காக நாம் தக்க முறையில் தவமும், செபமுமாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு நற்கருணை பெற வேண்டும். புனித சூசையப்பர் எகிப்தில் வாழ்ந்த ஏழு வருடங்களும் எளிமையையும், ஏழ்மையையும் அனுபவித்து வந்தார். மனைவி கணவனை விட்டு விலகாதவள் போல். கிறிஸ்துநாதரும் வறுமையை விட்டுப் பிரியாதவராக இருந்தார். "நரிகளுக்கு வளை உண்டு, பறவைகளுக்கு கூடு, உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" என இயேசு குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்களே, நீங்கள் ஏழையாக இருந்தால் இறைவனுக்கு பிரியமானவர்கள், நீங்கள் செல்வந்தர்களாக இருந்து தங்கள் செல்வங்கள் மேல் பற்று கொண்டு ஏழ்மையை உணராதிருந்தால் விண்ணரசை அடைவது கடினம். நாம் இயேசு மரி சூசையைப் பார்த்து சிந்தித்து மனதில் ஏழைகளாக வாழ வேண்டும்.
புனித சூசையப்பர் எவ்வளவு கடினமாக உழைத்தார், பாவிகளான நாம் உடல் வருந்தி உழைக்க வேண்டாமா? சோம்பல் பல பாவங்களுக்குக் காரணமாக இருப்பதால் நாம் நமது வயது, தகுதிக்கேற்ப பொழுதை வீணாக்காமல் நேர்மையாக உழைக்க வேண்டும்.
புதுமை
சத்திய வேதத்தின் மகிமையால் பல கன்னியர் இல்லங்களும் - துறவற இல்லங்களும் - சபைகளும் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றன. அதைத் தோற்றுவித்த தூயவர்களின் பெயர்கள் அந்தந்த சபைகளுக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் புனித சூசையப்பரின் பெயரால் ஐந்து சபைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை அவர் நிறுவவில்லை. அச்சபைகளில் உள்ள கன்னியர்கள் எப்போதும் ஏழ்மையாய், கன்னியர்களாய், கீழ்ப்படிந்து வாழ்வோம் என உறுதிமொழி எடுத்துள்ளார்கள். அவர்கள் புனித சூசையப்பரிடம் அதிக பக்தி, நம்பிக்கை வைத்து பல நன்மையால் புண்ணியங்களை செய்து வருகிறார்கள். அவர்கள் புனித சூசையப்பரை தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருக்கவும் பணிவோடு செபிக்கிறார்கள்.
கன்னியர்கள் தங்கள் இல்லத்தில் தையல், நூல் நூற்றல், சரிகை வேலை , எழுத்து கற்பித்தல், மறைநூல் கற்பித்தல் போன்று பல கைத்தொழில் போன்றவற்றை பெண்களுக்கு கற்றுக்கொடுத்து பக்தியையும் வளர்த்துவருகிறார்கள். சிலர் தகப்பன், தாய் இல்லாத குழந்தைகளை சேகரித்து மனம் தளர்ந்துவிடாமல் இல்லத்தில் வைத்து காத்து ஞானப் பெற்றோர்களாக இருந்து அவர்களுக்குரிய பணிவிடை புரிகிறார்கள்.
சிலரோ வயோதிக வியாதிக்காரர்களை ஒரு கூடத்தில் சேர்த்து வந்து அவர்களுக்கு மருந்துகளையும், உணவுகளையும், உடைகளையும் அளித்து பணிவிடை செய்வர். மற்றும் சிலரோ அவஸ்தையாய் இருக்கிறவர்களுக்கு நோயில் பூசுதல் அருட்சாதனத்தைப் பெறச் செய்து நல்மரணம் அடைய உதவுகிறார்கள். தங்களுக்கும் ஒருவித சுகவீனம் வரும என்ற எண்ணம் சிறிதும் இன்றி சேவை செய்து வருகிறார்கள். இப்படி சேவை செய்து வருகிறவர்களை - பெண்களை பயனற்றவர்கள் என்று கூறலாமா? இவர்கள் ஆற்றிவரும் சேவைகளை கண்டு எத்தனையோ துஷ்டர்கள் உணர்ந்து மனம் மாறி உதவியுள்ளனர்.
கன்னியர்களில் சிலர் தன் சொந்த நாட்டை விட்டு கப்பலேறி பொல்லாதவர்களிடமும், பிற மதத்தவரிடமும் தங்கி இருந்து பயப்படாமல் மறைப்பணியும், அம்மக்களுக்கு மருத்துவம், உறைவிடம், உணவு, உடை சேவையும் செய்வதைப் பார்த்து எத்தனையோ பேர் உணர்ந்து மனந்திரும்பி சுத்த வேதத்திற்கு மாறியுள்ளனர். பெண்கள் முதலாய் புண்ணிய வழியில் சென்று கிறிஸ்துவுக்காய் உழைத்ததைப்போல் நாமும் உழைக்க ஆவலாய் இருப்போம். (3 பர, அரு, பிதா)
செபம்
எகிப்து நாட்டில் வசித்தபோது அதிக துன்பங்களை அனுபவித்த தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். திருக்குடும்பம் அங்கு நுழையும் முன்பாக அசுத்த ஆவிகளுடைய ஆலயங்களும், பீடங்களும், சிலைகளும் இடிந்து விழுந்ததுபோல் இந்திய நாட்டில் பொய்யான கடவுளர்களுடைய ஆராதனைகள் நீங்கவும் அனைவரும் உம்மை அறிந்து வணங்கவும் செய்தருளும். அவர்களிடமிருக்கும் ஆங்காரம், கோபம், மோகம், சோம்பல், துர்போதனையை விலக செய்தருளும். நீர் பட்ட துன்ப துயரங்களை நினைத்து நாங்கள் புண்ணிய நெறியில் தவறாது வாழ வரம் அருள உம்மை மன்றாடுகிறோம்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இயேசுமரி சூசை என்கிற திருக்குடும்பமே! பிற மதத்தவரை மனந்திருப்பியருளும்.
இயேசுமரி சூசை என்கிற திருக்குடும்பமே! சத்திய வேதத்தில் கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தியருளும்.
இயேசுமரி சூசை என்கிற திருக்குடும்பமே!
உமக்குரிய தொண்டர்களாகவும் பக்தர்களாகவும் இருக்கிற எங்களை ஆசீர்வதித்தருளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
அசுத்த ஆவிகளுக்கு ஆராதனை செய்வதை விட்டுவிடவும். தேவனை அறிந்து விசுவசித்து சேவிக்கவும் செய்தருளும்.
பதினைந்தாம் நாள்
பரிசுத்த திருக்குடும்பம் எகிப்து நாட்டிலிருந்து திரும்பி வந்ததை தியானிப்போம்
தியானம்
கொடுங்கோல் மன்னனான ஏரோது இயேசுகிறிஸ்துவின் பிறப்பால் தனது நாட்டிற்கு கெடுதல்வரும் என்று எண்ணி மாசில்லாத குழந்தைகளை அநியாயமாய் வெட்டிக் கொல்ல கட்டளையிட்டான். ஆனால் இறையருளால் பாலன் இயேசு பத்திரமாக எகிப்து நாட்டில் இருந்தார். சில வருடங்களில் எல்லோராலும் கொடுமைப்படுத்தப்பட்டு இறந்தான் ஏரோது. எகிப்து நாட்டிற்கு இயேசுமரி சூசை சென்று ஏழு ஆண்டுகள் கடந்தபின் வானதுதர் புனித சூசையப்பரின் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார் (மத் 2:20).
மரியன்னையும் புனித சூசையப்பரும் தங்களை எகிப்து கொண்டு சேர்த்த இறைவன் மீண்டும் பத்திரமாக இஸ்ராயேல் நாட்டிற்கு கொண்டு சேர்ப்பார் என நம்பினர். கொடிய காட்டுப்பகுதி வழியே துன்பத்தோடு நடந்தனர். குழந்தை இயேசுவோ ஏழு வயது சிறுவனாக இருந்ததால் நடப்பதற்கு பெரிதும் சிரமப்பட்டார். நாற்பத்தைந்து மைல் துரத்தினை நின்று, நின்று இளைப்பாறி , என மிக, மிக துன்பத்துடன் கடந்து தனது சொந்த நாட்டை அடைந்தனர்.
ஏரோது அரசனுக்குப்பின் அவனது மகன் அற்கெலாவூஸ் யூதேயா நாட்டை ஆட்சி செய்கிறான் என்பதை கனவில் இறைவனால் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டிற்கு சென்றார். தாம் வாழ்ந்த நாசரேத்தில் இல்லாமல் சற்று தள்ளி குடியேறினர். மிக அதிக நாட்கள் வாழ்ந்த இடம் நாசரேத் என்பதால் நாசரேத்தார் என அழைக்கப்பட்டனர். அப்பெயர் இயேசுவின் சிலுவையில் பொறிக்கப்பட்டது. அவரது முப்பது வயதில் போதிக்க துவங்கும் வரை தமது பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார்.
எகிப்து நாட்டில் துன்பப்பட்ட திருக்குடும்பத்தை எவ்வித கெடுதலுமின்றி பாதுகாத்து அவர்களை ஏரோது அரசன் இறந்த பிறகு பாதுகாப்பாக மீண்டும் அவர்களது சொந்த ஊருக்கு இறைவன் கொண்டு வந்து சேர்த்தார். முழுமனதோடு இறைவனை நம்பினால் ஒருபோதும் நாம் கைவிடப்பட மாட்டோம். பறவைகளுக்கு உணவும் பூக்களுக்கு அழகையும் கொடுக்கிற இறைவன், இறைவனின் மக்களுக்கும் இயேசுகிறிஸ்துவின் சகோதரர்களுக்கும் உணவும் உடையும் உறைவிடமும் அளிக்காமல் இருப்பாரா?
பூவுலகில் இருப்பது ஒரு வாழ்க்கைப் பயணம். இப்பயணத்தில் நாம் முயற்சி, துன்பம், இடையூறு, மனப்பயம், ஏழ்மை, நோய், அவமானம், சிறுமை போன்றவை நமக்கு நேரிடும்போது மரியன்னையும், புனித சூசையப்பரும் ஏற்றுக்கொண்டதுபோல் நாமும் ஏற்றுக்கொண்டால் நாம் புண்ணியம் சேர்க்க உதவியாய் இருப்போம். நாம் செய்துகொண்டிருக்கிற பயணத்தை மோட்சம் சேருமட்டும் இறைவனுக்கு ஏற்புடையதாக செய்தால் இறைவன் தகுந்த பலனளிப்பார் என தாமஸ் அக்வினாஸ் கூறுகிறார்.
நம் பாவத்தால் இயேசுநாதரை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புலி ஒளிந்திருக்கிற இடத்திற்கு சென்றவன் சேதமடையாமல் வருவானா? பாம்பு புற்றில் கைவைத்தால் பாம்பு கொத்தாமல் விடுமா? வெறிநாயை தடவுகிறவன் கடிபடாமல் வருவானா? அதுபோலத்தான் பாவத்திற்கு காரணமானதெல்லாம் இருக்கிறது. எனவே, நாம் அவற்றிற்கு காரணமான வழிகளை விலக்கித் தள்ளவேண்டும்.
புதுமை
வாழ்வானது மனிதனுக்கு பல சோதனைகளை வெல்லும் போர்க்களமாக உள்ளது. இவற்றில் வெற்றிபெறுகிறவர்கள் அதிக மகிமையும் வல்லமையும் அடைவார்கள். தோல்வியடைகிறவர்கள் நித்திய நரகத்திற்கு செல்வார்கள். சோதனைகளை வெல்ல நம்பிக்கையோடு கேட்பவர்களுக்கு புனித சூசையப்பர் உதவுவார் என நாம் நம்பலாம். பக்தியுடன் கன்னியர் ஒருவர் கன்னியர் இல்லத்தில் ஒழுங்குகளை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார். பசாசானது சோதனைக் கொடுத்து அவரது மனதில் பயமும், சோர்வும் உண்டாக்கிற்று. அவநம்பிக்கைத் தோன்றி அவரை அலைக்கழித்தது. அதனால் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் அகல வேண்டுமென்று பயந்து செபத்தையும், தவத்தையும் தொடர்ந்து செய்தபோதும் இவைகள் அவரைவிட்டு நீங்கவில்லை.
ஒருநாள் மரியன்னையிடம், பசாசின் சோதனைகளை என்னால் தாங்க இயலவில்லை, என்னைக் காக்க மோட்சத்திலுள்ள யாரிடம் நான் செபிக்க வேண்டுமென எனக்கு அறிவுறுத்தும் என அன்னையிடம் செபித்தார். அந்த நேரத்தில் அவரது மனம் தெளிவடைந்ததுமல்லாமல் புனித சூசையப்பரால் தான் காப்பாற்றப்படலாம் என்பதை தனது செய வலிமையால் தெரிந்து கொண்டு தன்னை அவரது அடைக்கலத்தில் ஒப்படைத்தார். அதன்பின் அவரது மனப்பயம் எல்லாம் நீக்கி தனது வாழ்வில் சோதனைகளை வென்று இறுதியில் நன்மரணம் அடைந்தார்.
1844-ஆம் ஆண்டு பெண் ஒருத்தி கன்னியர் இல்லம் சேர்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்து தேர்வு எழுதும்போது பசாசின் சோதனையால் அவமானப்பட்டு தன் பெற்றோரிடமே திரும்பி விடலாம் என முடிவெடுத்தாள். இதனை அறிந்த சக கன்னியர் ஒருவர் இது பசாசின் வேலையா அல்லது இறைவனின் சித்தமா என்பதை அறிய நாம் புனித சூசையப்பரிடம் ஒன்பது நாள் செபிப்போம் என்றார். இருவரும் சேர்ந்து செபிக்கத் தொடங்கினார்கள். செபம் முடிவுற்றதும் இவருடைய சோதனையெல்லாம் நீங்கி நித்திய வார்த்தைப்பாட்டினை அளித்தாள். பாக்கியம் புனித சூசையப்பரால் தனக்கு கிடைத்தது எனக்கூறி புண்ணிய வாழ்வு வாழ்ந்து இறந்தார்.
நாமும் நமக்கு சோதனைகள் வரும்போது சோர்ந்துவிடாமல் மரியன்னையிடமும் புனித சூசையப்பரிடமும் அடைக்கலம் தேட வேண்டும். (3 பர, அரு, பிதா)
செபம்
எகிப்து நாட்டைவிட்டு நாசரேத் என்ற ஊரில் வாழ்ந்த புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். நீர் துன்பப்பட்டபோதெல்லாம் இறைவனை நம்பிக் கொண்டிருந்தீர். உமது நம்பிக்கை வீணாகவில்லை. வாழ்க்கைப் பயணத்தை நாங்கள் நம்பிக்கையோடு தொடர பலவீனர்களாகிய எங்களுக்கு உதவும். துன்பப்படுகிறவர்களுக்கு ஆதரவாயிருந்து அவர்களைத் தேற்றியருளும். உமது புண்ணியங்களை அறிந்து உமக்கு சீடராக இருக்கிற நாங்கள் எல்லோரும் இவ்வுலக பயணத்தில் இடறி விழாமல் மோட்ச வீட்டினை சென்று சேர உதவியருளும்படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
புனித சூசையப்பரே! நாங்கள் எல்லாவற்றிலும் இறைவனை நம்ப செய்தருளும்.
புனித சூசையப்பரே! நாங்கள் அனுபவிக்கிற துன்பங்களில் துவண்டுவிடாமல் உறுதியாக இருக்க செய்தருளும்.
புனித சூசையப்பரே! பாவத்திற்கு காரணமான, பார்வை, பகை, துற்போதனை போன்றவற்றையும் விலகச் செய்தருளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
வறுமையில் வாடும் ஏழையை வாழவைத்து உணவளித்தல்.
பரிசுத்த திருக்குடும்பம் எகிப்து நாட்டிலிருந்து திரும்பி வந்ததை தியானிப்போம்
தியானம்
கொடுங்கோல் மன்னனான ஏரோது இயேசுகிறிஸ்துவின் பிறப்பால் தனது நாட்டிற்கு கெடுதல்வரும் என்று எண்ணி மாசில்லாத குழந்தைகளை அநியாயமாய் வெட்டிக் கொல்ல கட்டளையிட்டான். ஆனால் இறையருளால் பாலன் இயேசு பத்திரமாக எகிப்து நாட்டில் இருந்தார். சில வருடங்களில் எல்லோராலும் கொடுமைப்படுத்தப்பட்டு இறந்தான் ஏரோது. எகிப்து நாட்டிற்கு இயேசுமரி சூசை சென்று ஏழு ஆண்டுகள் கடந்தபின் வானதுதர் புனித சூசையப்பரின் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார் (மத் 2:20).
மரியன்னையும் புனித சூசையப்பரும் தங்களை எகிப்து கொண்டு சேர்த்த இறைவன் மீண்டும் பத்திரமாக இஸ்ராயேல் நாட்டிற்கு கொண்டு சேர்ப்பார் என நம்பினர். கொடிய காட்டுப்பகுதி வழியே துன்பத்தோடு நடந்தனர். குழந்தை இயேசுவோ ஏழு வயது சிறுவனாக இருந்ததால் நடப்பதற்கு பெரிதும் சிரமப்பட்டார். நாற்பத்தைந்து மைல் துரத்தினை நின்று, நின்று இளைப்பாறி , என மிக, மிக துன்பத்துடன் கடந்து தனது சொந்த நாட்டை அடைந்தனர்.
ஏரோது அரசனுக்குப்பின் அவனது மகன் அற்கெலாவூஸ் யூதேயா நாட்டை ஆட்சி செய்கிறான் என்பதை கனவில் இறைவனால் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டிற்கு சென்றார். தாம் வாழ்ந்த நாசரேத்தில் இல்லாமல் சற்று தள்ளி குடியேறினர். மிக அதிக நாட்கள் வாழ்ந்த இடம் நாசரேத் என்பதால் நாசரேத்தார் என அழைக்கப்பட்டனர். அப்பெயர் இயேசுவின் சிலுவையில் பொறிக்கப்பட்டது. அவரது முப்பது வயதில் போதிக்க துவங்கும் வரை தமது பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார்.
எகிப்து நாட்டில் துன்பப்பட்ட திருக்குடும்பத்தை எவ்வித கெடுதலுமின்றி பாதுகாத்து அவர்களை ஏரோது அரசன் இறந்த பிறகு பாதுகாப்பாக மீண்டும் அவர்களது சொந்த ஊருக்கு இறைவன் கொண்டு வந்து சேர்த்தார். முழுமனதோடு இறைவனை நம்பினால் ஒருபோதும் நாம் கைவிடப்பட மாட்டோம். பறவைகளுக்கு உணவும் பூக்களுக்கு அழகையும் கொடுக்கிற இறைவன், இறைவனின் மக்களுக்கும் இயேசுகிறிஸ்துவின் சகோதரர்களுக்கும் உணவும் உடையும் உறைவிடமும் அளிக்காமல் இருப்பாரா?
பூவுலகில் இருப்பது ஒரு வாழ்க்கைப் பயணம். இப்பயணத்தில் நாம் முயற்சி, துன்பம், இடையூறு, மனப்பயம், ஏழ்மை, நோய், அவமானம், சிறுமை போன்றவை நமக்கு நேரிடும்போது மரியன்னையும், புனித சூசையப்பரும் ஏற்றுக்கொண்டதுபோல் நாமும் ஏற்றுக்கொண்டால் நாம் புண்ணியம் சேர்க்க உதவியாய் இருப்போம். நாம் செய்துகொண்டிருக்கிற பயணத்தை மோட்சம் சேருமட்டும் இறைவனுக்கு ஏற்புடையதாக செய்தால் இறைவன் தகுந்த பலனளிப்பார் என தாமஸ் அக்வினாஸ் கூறுகிறார்.
நம் பாவத்தால் இயேசுநாதரை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புலி ஒளிந்திருக்கிற இடத்திற்கு சென்றவன் சேதமடையாமல் வருவானா? பாம்பு புற்றில் கைவைத்தால் பாம்பு கொத்தாமல் விடுமா? வெறிநாயை தடவுகிறவன் கடிபடாமல் வருவானா? அதுபோலத்தான் பாவத்திற்கு காரணமானதெல்லாம் இருக்கிறது. எனவே, நாம் அவற்றிற்கு காரணமான வழிகளை விலக்கித் தள்ளவேண்டும்.
புதுமை
வாழ்வானது மனிதனுக்கு பல சோதனைகளை வெல்லும் போர்க்களமாக உள்ளது. இவற்றில் வெற்றிபெறுகிறவர்கள் அதிக மகிமையும் வல்லமையும் அடைவார்கள். தோல்வியடைகிறவர்கள் நித்திய நரகத்திற்கு செல்வார்கள். சோதனைகளை வெல்ல நம்பிக்கையோடு கேட்பவர்களுக்கு புனித சூசையப்பர் உதவுவார் என நாம் நம்பலாம். பக்தியுடன் கன்னியர் ஒருவர் கன்னியர் இல்லத்தில் ஒழுங்குகளை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார். பசாசானது சோதனைக் கொடுத்து அவரது மனதில் பயமும், சோர்வும் உண்டாக்கிற்று. அவநம்பிக்கைத் தோன்றி அவரை அலைக்கழித்தது. அதனால் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் அகல வேண்டுமென்று பயந்து செபத்தையும், தவத்தையும் தொடர்ந்து செய்தபோதும் இவைகள் அவரைவிட்டு நீங்கவில்லை.
ஒருநாள் மரியன்னையிடம், பசாசின் சோதனைகளை என்னால் தாங்க இயலவில்லை, என்னைக் காக்க மோட்சத்திலுள்ள யாரிடம் நான் செபிக்க வேண்டுமென எனக்கு அறிவுறுத்தும் என அன்னையிடம் செபித்தார். அந்த நேரத்தில் அவரது மனம் தெளிவடைந்ததுமல்லாமல் புனித சூசையப்பரால் தான் காப்பாற்றப்படலாம் என்பதை தனது செய வலிமையால் தெரிந்து கொண்டு தன்னை அவரது அடைக்கலத்தில் ஒப்படைத்தார். அதன்பின் அவரது மனப்பயம் எல்லாம் நீக்கி தனது வாழ்வில் சோதனைகளை வென்று இறுதியில் நன்மரணம் அடைந்தார்.
1844-ஆம் ஆண்டு பெண் ஒருத்தி கன்னியர் இல்லம் சேர்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்து தேர்வு எழுதும்போது பசாசின் சோதனையால் அவமானப்பட்டு தன் பெற்றோரிடமே திரும்பி விடலாம் என முடிவெடுத்தாள். இதனை அறிந்த சக கன்னியர் ஒருவர் இது பசாசின் வேலையா அல்லது இறைவனின் சித்தமா என்பதை அறிய நாம் புனித சூசையப்பரிடம் ஒன்பது நாள் செபிப்போம் என்றார். இருவரும் சேர்ந்து செபிக்கத் தொடங்கினார்கள். செபம் முடிவுற்றதும் இவருடைய சோதனையெல்லாம் நீங்கி நித்திய வார்த்தைப்பாட்டினை அளித்தாள். பாக்கியம் புனித சூசையப்பரால் தனக்கு கிடைத்தது எனக்கூறி புண்ணிய வாழ்வு வாழ்ந்து இறந்தார்.
நாமும் நமக்கு சோதனைகள் வரும்போது சோர்ந்துவிடாமல் மரியன்னையிடமும் புனித சூசையப்பரிடமும் அடைக்கலம் தேட வேண்டும். (3 பர, அரு, பிதா)
செபம்
எகிப்து நாட்டைவிட்டு நாசரேத் என்ற ஊரில் வாழ்ந்த புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். நீர் துன்பப்பட்டபோதெல்லாம் இறைவனை நம்பிக் கொண்டிருந்தீர். உமது நம்பிக்கை வீணாகவில்லை. வாழ்க்கைப் பயணத்தை நாங்கள் நம்பிக்கையோடு தொடர பலவீனர்களாகிய எங்களுக்கு உதவும். துன்பப்படுகிறவர்களுக்கு ஆதரவாயிருந்து அவர்களைத் தேற்றியருளும். உமது புண்ணியங்களை அறிந்து உமக்கு சீடராக இருக்கிற நாங்கள் எல்லோரும் இவ்வுலக பயணத்தில் இடறி விழாமல் மோட்ச வீட்டினை சென்று சேர உதவியருளும்படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
புனித சூசையப்பரே! நாங்கள் எல்லாவற்றிலும் இறைவனை நம்ப செய்தருளும்.
புனித சூசையப்பரே! நாங்கள் அனுபவிக்கிற துன்பங்களில் துவண்டுவிடாமல் உறுதியாக இருக்க செய்தருளும்.
புனித சூசையப்பரே! பாவத்திற்கு காரணமான, பார்வை, பகை, துற்போதனை போன்றவற்றையும் விலகச் செய்தருளும்.
செய்ய வேண்டிய நற்செயல்
வறுமையில் வாடும் ஏழையை வாழவைத்து உணவளித்தல்.