- கேள்வி பதில்
- கத்தோலிக்கத்தின் புனிதம் காப்போம்
Shared from Jabamum Jabamalium Facebook Page
பகுதி -1 (தெய்வீக திருப்பலி)
அதிமிக உன்னதமானது திருப்பலி. திவ்ய திருப்பலியில் நடப்பது கல்வாரிப்பலி. அந்த திருப்பலியில் மிகவும் பக்தியோடு கலந்துகொள்ளவேண்டும். ஆண்டவராகிய இயேசு பிரசன்னமாகும் உன்னதமான பலி திருப்பலி. அனைத்து ஜெபங்களுக்கும் முதலிடம் வகிப்பது திருப்பலியே. செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதும், ஆண்டவரோடு நம் உறவை புதுப்பிப்பது நடப்பது திருப்பலியில். உடல் நலமும், ஆன்ம நலமும் கொடுப்பது திருப்பலியே. உத்தரிக்கும் ஆத்மாக்கள் விண்ணகம் செல்லுவதும் இந்த தெய்வீக திருப்பலியாலே ! நம்முடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் அதை இந்த தெய்வீக பலி மூலமாக பெறமுடியும்.
அப்பேற்பட்ட தெய்வீகதிருப்பலியை நாசமாக்க சாத்தான் துணிந்துவிட்டான். அவனுக்கு நிறைய இடங்களில் வெற்றியை நாமே பெற்றுத்தருகிறோம்.
அதிமிகபக்தியோடு ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலிகள், அநேகமாக நிறைய இடங்களில் ஒரு நாடக மேடைபோல் ஆகிவருவது மிகவும் வருத்தம் தரக்கூடிய செயல். அது ஆண்டவர் இயேசுவுக்கு செய்யும் அவசங்கை.
நாங்கள் திருப்பலியை பிரமாண்டமாக ஒப்புக்கொடுக்கிறோம் என்று சொல்லி திருப்பலி ஆரம்பிக்கும் முன் இளம்பெண்களை பரத நாட்டியமோ இல்லை கும்ப நாட்டியமோ ஆட வைப்பது முறையா ? ( பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை, அண்ணண்மார்களே ! உங்கள் தங்கைகளை இந்த பாவமான காரியத்தை செய்ய அனுமதிக்காதீர்கள்)
ஆடம்பர திருப்பலி அவசங்கை திருப்பலியாக ஆகலாமா?
நடுப்பூசையில் ஆரத்தி தேவையில்லை. அப்படியே தேவையென்றாலும் குழந்தைகள், சிறுவர்கள் செய்யலாம் இளம்பெண்கள் அல்ல.
எல்லாவற்றிற்கும் மேலாக நற்கருணை உட்கொண்ட பின் நம் இதயத்தில் இருக்கும் இயேசுவிடம் பேசுவதை விட்டுவிட்டு பாராட்டு விழாவை துவங்கிவிடுகிறோம்.
அவர் நன்றாக பிரசங்கம் வைத்தார். அந்த அதிபருக்கு வாழ்த்துக்கள், பொன்னாடை போர்த்துதல், பரிசு கொடுத்தல் இத்தனைகளும் கைத்தட்டல்களுக்கு மத்தியில் நிகழ்கிறது. அது திருப்பலி பீடமா அல்லது பாராட்டுவிழாக்கள் நடத்தப்படும் மேடையா?
மத்தியில், நடு நாயகமாக, போற்றத்தக்க, வாழ்த்ததக்க, வேண்டத்தக்க கடவுள் ஓரங்கட்டப்படுகிறார். நற்கருணை நாதர் ஒதுக்கப்படுகிறார். யார் யாரோ முன்னினை பெறுகின்றனர். ஆண்டவரைத்தவிர்த்து.
திருப்பலி முடிந்தபிறகு யாரையும் வாழ்த்துங்களேன் யார் வேண்டாம் என்கிறார்கள். எல்லாரும் நமக்கு பெரியவர்கள் ஆண்டவராகிய இயேசுவைத் தவிர. நாமே நம் கத்தொலிக்கத்தை அழித்துவருகிறோம்.
அன்பார்ந்த கத்தொலிக்க சொந்தங்களே ! திருப்பலி நாடக மேடையாக மாறிக்கொண்டிருப்பதை உடனே தடுத்து நிறுத்துவோம், அருட்தந்தையர்கள் மற்றும் ஆயர்களின் ஆதரவுடன்.
பகுதி-2 ( ஜெபமாலை )
அன்னை மரியாள் அருள் நிறைந்தவளா? அருள் மிகப்பெற்றவளா?
அருள் நிறைந்தவள் என்பதற்கும் அருள் மிக பெற்றவள் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. அருள் நிறைந்தவள் என்றால் அருள் மட்டுமே நிறைந்தவள் அருளால் நிறைந்தவள் என்று பொருள். அருள் மிகப்பெற்றவளே என்றால் மற்றவரைவிட கொஞ்சம் அதிகமாக அருள் பெற்றவள். இதில் வெற்றடம் இருக்க வாய்ப்புள்ளது.
அப்படியென்றால் பிதாவாகிய கடவுள் சொன்னது பொய்யா? கபரியேல் தூதரிடம் மரியாளைப்பார்த்து “ அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே என்று சொல்லச்சொன்னது கடவுள் சொன்ன வார்த்தைதானே? அப்படியென்றால் கடவுள் குடிகொள்ளும் இடம் அருள் நிறைந்த்தாக இருக்குமா ? அல்ல அருள் கொஞ்சம் அதிகமான அருள் உள்ள இடமாக இருக்குமா?
அடுத்து பரிசுத்த ஆவியானவரின் வாழ்த்தான “ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ! என்றால் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீர் ஒருவரே என்று பொருள்.
“ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே !” அப்படியானால். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு எலிசபெத்தம்மாள் சொன்னதற்கு அர்த்தம் அன்னைக்கு மற்ற எல்லாரையும்விட கொஞ்சம் அருள் ஜாஸ்தி என்றா அர்த்தம்.
நாம் எப்படி இப்படி சொல்ல துணிகிறோம்? யார் சொல்லச்சொன்னால்தான் என்ன ? நாம் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும். அன்னையின் மகிமையை குறைக்கலாமா? அந்த ஆண்டவரின் மகிமையை குறைக்கும் செயல் அல்லவா?
எங்கெல்லாம் அன்னையின் மரியாதையும், மகிமையும் குறைக்கப்படுகிறதோ அங்கே நம் பிதாவாகிய ஆண்டவர், சுதனாகிய ஆண்டவரின் மகிமையும் குறைக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
யார் எதைச் சொன்னாலும் சொல்லிவிடுகிறோம். யார் எதை செய்யச்சொன்னாலும் செய்து விடுகிறோம். நாமே நம் அன்னையின் பெருமையைக் குறைக்கலாமா? அப்படிச் சொல்லும்போது நம் நாவு கூசவில்லையா?
தயவு செய்து அன்னையின் மகிமையை யாரும் குறைக்காதீர்கள்.
சாத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நம் கத்தொலிக்கத்தை அழிக்கப்பார்க்கிறான். ஆனால் அன்னை விட மாட்டார்கள். நாம் அன்னையின் கரத்தை வலுப்படுத்த ஜெபமாலை சொல்லுவோம். தூய தமிழ் என்ற போர்வையில் வந்தாலும் பொருள் மாறினால் அந்த வார்த்தை நமக்குத் தேவையில்லை.
ஆகவே நண்பர்களே தயவு செய்து போராடுங்கள்.
ஒவ்வொரு முறை அருள் நிறைந்த மந்திரம் சொல்லும்போது சாத்தான் தலை சுத்தியலால் அடிக்கப்படுகிறது ஆகவே அவ்வளவு சக்திவாய்ந்த மந்திரத்தின் சக்தியை குறைக்காதீர்கள்.குறைக்கவும் விடாதீர்கள்.
ஜெபமாலை சொல்வோம். சாத்தானை வெல்வோம்.
பகுதி-3
(திவ்ய திருப்பலி-2)
திருப்பலி பற்றி புனிதர்கள் என்ன சொல்கிறார்கள்?
அர்ச்.லாரென்ஸ் யுஸ்தீனியன் : பூசையைப் போல மிக மேலான, கடவுளுக்கு மிகப்பிரியமான, நமக்கு மிகப் பயனுள்ள ஜெபமோ, நற்செயலோ உலகில் வேறு எதுவுமில்லை.
அர்ச்.அல்போண்ஸ் லிகோரியார் : பூசையைவிட அதிக பரிசுத்தமானதும், அதிக நல்லதும், அதிக மேலானதுமான எதையும் கடவுளால் கூட செய்யமுடியாது.
அர்ச். அக்குவினாஸ் தோமையார் : பூசை என்பது கல்வாரிப் பலியை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்றும், அது பீடத்தின் மீது புதுப்பக்கப்டும் கல்வாரிப்பலியே என்றும், ஒவ்வொரு பூசையும் சிலுவைப் பலி தருகின்ற அதே நன்மைகளை மனிதர்களுக்கு கொண்டு வருகின்றது என்றும் நமக்கு கற்பிக்கிறார்.
புனித தந்தை பியோ: இந்த உலகம் சூரியன் இல்லாமல் கூட இருக்கும். ஆனால் திருப்பலி இல்லை என்றால் இந்த உலகமே இருக்காது.
அன்னை தெரசா: ஒரு முறை அன்னை தெரசா கடவுளில் ஆழ்தியானத்தில் இருக்கும்போது“ ஆண்டவரே உம்முடைய அளவில்லாத நன்மைத்தனத்திற்காக உமக்கு நன்றி சொல்ல வேண்டும்? எப்படி சொல்வது?” என்று கேட்ட்தற்கு ஆண்டவர் அளித்த பதில், “ ஒரு திருப்பலியில் பங்குகொள்”
ஒரு புனிதரின் அனுபவம் : கொலோனின் மேற்றிராணியாரான அர்ச். ஹேனான் என்பவர் ஒரு முறை பூசையின் தேவ வசீகரத்தின்போது வார்த்தைக்கெட்டாத பேரழகுள்ள ஒரு ஒளி உருண்டையையும், திரு இரத்தப் பார்த்திரத்தைச் சுற்றி ஒரு மிகப்பெரிய பிரகாசமான ஒளி வட்டத்தையும் கண்டார். அதன் பின் அவை திருப்பாத்திரத்தினுள் நுழைவதையும் கண்டார். இது அவரை எந்த அளவிற்கு ஒரு பரிசுத்தமான அச்சத்தால் நிரப்பியது என்றால், தொடர்ந்து பூசை வைக்க முடியாமல் அவர் பயத்தால் தடுமாறிப்போனார்.ஆனால் நம் மனித கண்களுக்கு தெறியாவிட்டாலும், இது ஒவ்வொரு உண்மையான பூசையிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று கடவுள் அவருக்கு வெளிப்படுத்தினார்.
( சங்.பவுல் ஓ சலைவன், O.P அவர்கள் எழுதிய “ திவ்விய பலிபூசையின் அதிசயங்கள் “ என்ற நூலிலிருந்து )
ஆகவே, எவ்வளவு மேன்மைமிக்கது திருப்பலி. இறைவன் இயேசு நமக்காக பிரசன்னமாகும் இந்த தெய்வீக திருப்பலியில், ஒரு இதய தாகத்தோடு, விசுவாசத்தோடு, இயேசுவின் மீது முழு நம்பிக்கை வைத்து முழு பக்தியோடு பங்கு கொள்வாமா?
“ இயேசுவுக்கே புகழ் “ “ மரியே வாழ்க “
பகுதி-4 ( நற்கருணையின் புனிதம்-1)
எத்தனை பேர் திவ்ய நற்கருணையை கரங்களில் வாங்குகிறீர்கள்?. என்ன காரணம் என்ன என்று உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.
எனக்கு முன்னால் வாங்குபவர் கரங்களில் வாங்குகிறார். அதுதான் டீசண்ட் அதனால் நானும் வாங்குகிறேன். என்று நினைக்கிறீர்களா?
நாவில் வாங்கினால் பக்கத்தில் இருப்பவர் என்னை ஒரு மாதிரியாக நினைப்பார். அதனால் கரங்களில் வாங்கிவிடுவோம். என்று நினைக்கீறீர்களா?
கரங்களில் வாங்குவதுதான் சுத்தம். ஃபாதர் எத்தனைபேருக்கு நாவில் கொடுக்கிறார். அதனால் நான் கரங்களில்தான் வாங்குவேன் என்று நினைக்கிறீர்களா?
அடுத்தவர் முக்கியமா? ஆண்டவர் முக்கியமா ? நீங்கள் இயேசுவை வாங்குவதில் வெட்கப்பட்டால் ஆண்டவர் இயேசு உங்களை குறித்து வெட்கப்பட மாட்டாரா?
தூய்மையின், சுத்தத்தின் முழுமையான ஆண்டவர் அதே பரிசுத்தத்தோடும், தூய்மையோடும்தான் வருவார் என்ற விசுவாசம் நம்மிடம் இல்லையா?
ஆண்டவர் நம்மைபார்த்து என்னை வாங்க வந்துள்ளாயே உன் ஆன்மா சுத்தமாக இருக்கிறதா? என்று கேட்டால் நாம் என்ன சொல்வோம் ?
நாவில் கேட்டால் கொடுப்பதற்கு எந்த அருட்தந்தையர்களும் தடை சொல்வதில்லை. அதே போல் பெரும் கொடுமை என்னவென்றால் புதிதாக நற்கருணை வாங்க இருக்கும் சிறுவர்களுக்கு நற்கருணையை கரங்களில் எப்படி வாங்க வேண்டும் என்று டிரெயினிங்க் கொடுக்கிறார்கள் கடவுள் பற்றிய வகுப்பில் அருட்சகோதரிகளோ ? அல்லது அந்த வகுப்பை நடத்துபவர்கள்.
நிறைய பேர் இடது கரங்களில் வாங்குகிறார்கள். என்ன கொடுமை எல்லாம் வல்ல சர்வேசுவரனுக்கு எத்தனை அவமானத்தைக் கொடுக்கிறோம்?
நம் அன்புத்தாய் பாத்திமாவில் அந்த மூன்று சிறுவர்களுக்கு ( புனித லூசியா, புனித பிரான்சிஸ், புனித ஜெசிந்தா ) காட்சி கொடுக்கும் முன்பு வானதூதர் மூன்று முறை அந்த சிறுவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
(கீலே உள்ள பகுதி மாதா அப்போஸ்தலர்கள் சபையின் “ மாதா பரிகார மலரிலிருந்து எடுக்கப்பட்டது )
அவர் மூன்றாவது காட்சியில் நற்கருணையோடு வந்தார். நற்கருணை சேசுவுக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்திற்குப் பரிகார ஜெபத்தை சொல்லிக்கொடுத்து அவரும் ஜெபித்தார்.
குழந்தைகளுக்கு நற்கருணை வழங்கும் போது: “ நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாய் அவசங்கைப்படுத்தபடுகின்ற சேசு கிறிஸ்துவின் திருச்சரீரத்தையும், திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்கு பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல் படுத்துங்கள். என்றார்.
பின்பு லூசியாவுக்கு திவ்ய அப்பத்தை உட்கொள்ள கொடுத்தார். பிரான்சிஸுக்கும், ஜெசிந்தாவிற்கும் திருரத்தத்தை பானம் செய்யக் கொடுத்தார். இரண்டு குணங்களிலும் இயேசு முழுவதும் உட்கொள்ளப்படுகிறார் என்பது இதனால் தெளியாகிறது; ஆகவே அப்ப வடிவில் மட்டும் நற்கருணை வழங்கும் திருச்சபையின் பாரம்பரியம் சரியானதே.
சம்மனசானவர் கூறிய வார்த்தையிலிருந்து நற்கருணையில் நமதாண்டவர் “ சகிக்கக்கூடாத விதமாய் நிந்திக்கப்படுகிறார் என அறிகிறோம். இது எங்கும் பரவலாக நடக்கிறது.
இந்த செய்தி வான தூதரால் வழங்கப்பட்ட ஆண்டு 1916. ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அப்படி சொல்லியிருக்கிறார்.அதே வானதூதர் இப்போது வந்தால் என்ன சொல்லுவார்.
வானதூதர் முதல் காட்சியில் அந்த குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து தெண்டனிட்டு வணங்கி வானதூதரும் அக்குழந்தைகளோடு மூன்று முறையும் ஜெபித்த ஜெபம் என்னவென்று தெறியுமா?
“ என் தேவனே! உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதிக்காதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்காகவும் உம்மை நேசியாதவர்க்காகவும் மன்னிப்பு கேட்கிறேன் “
என்ற திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்தில் நற்கருணை ஆண்டவர் முன் ‘நான்’ சேர்த்து ஜெபிக்கப்படும் ஜெபம்தான். இந்த ஜெபம் இன்றும் அனைத்து ஆலயங்களிலும் சொல்லப்படுகிறதா என்பதும் கேள்விக்குறி.
பகுதி-5 ( நற்கருணையின் புனிதம்-2)
பாத்திமாவில் வானதூதனின் மூன்றாம் வருகையின் சிறு பகுதி :
1916-ம் ஆண்டு செப்டம்பர் பிற்பகுதி அல்லது அக்டோபர் முற்பகுதியாக இருக்கலாம். அன்று குழந்தைகள் மூவரும் கபேசோ மலைச்சரிவின் குகையில் விளையாடிக்கொண்டிருந்தனர். ஆடுகள் அங்குமிங்கும் சிதறி மேய்ந்தன.
வழக்கம்போல் ஜெபமாலை சொல்லி முடித்த்தும், மூவரும் தலை தரையில் பட கவிழ்ந்து, சேர்ந்த குரலில், “ என் தேவனே உம்மை விசுவசிக்கிறேன் என்ற ஜெபத்தை ஜெபித்தார்கள். இப்படி பல தடவைகள் சொல்வதற்குள் திடீரென்று ஒரு ஒளி அவர்களைச் சூழ்ந்த்து. அவர்கள் நிமிர்ந்து பார்க்கையில் அதே வானதூதன் அங்கு நின்றார்.
அவரது இடது கரத்தில் பூசைப்பாத்திரத்தைப் பிடித்திருந்தார். அப்பாத்திரத்தின் மேலே திரு அப்பத்தை வலது கையில் ஏந்தியிருந்தார். திரு அப்பத்திலிருந்து இரத்தம் துளிர்த்து, துளித்துளியாய் பாத்திரத்தினுள் வடிந்தது. வானவன் அப்பாத்திரத்தையும், அப்பத்தையும் அப்படியே ஆகாயத்தில் நிற்க விட்டுவிட்டு குழந்தைகளுடன் முழந்தாளிட்டு சாஷ்டாங்கமாய் விழுந்து:
“ மகா பரிசுத்த தமத்திரித்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரிஸ்துசாந்துவே (பரிசுத்த ஆவி) உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகமெல்லாம் திவ்ய நற்கருணைப்பேழையில் இருக்கும் சேசுகிறிஸ்துநாதருடைய விலை மதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்த்த்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திவ்ய இருதயத்தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடயவும் அளவற்ற பேறு பலன்களைப்பார்த்து, நிர்ப்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேண் “ என்று கூறி மும்முறை ஜெபித்தார்.
பின் எழுந்து ஆகாயத்தில் நின்ற பாத்திரத்தையும், திவ்ய நற்கருணை அப்பத்தையும் கரங்களில் முன்போல் ஏந்திக்கொண்டு தட்டையான பாறையில் முழங்காலிட்டு, “ நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாய் அவசங்கைப்படுத்தபடுகின்ற சேசு கிறிஸ்துவின் திருச்சரீரத்தையும், திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்கு பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல் படுத்துங்கள். என்றார்.
( இதன் பின் நடந்த்து நேற்றைய பகுதியில் (4) படிக்க.)
மகா பரிசுத்த தமத்திரித்துவமே என்ற ஜெபத்தை திருப்பி ஒருமுறை படியுங்கள். நாமெல்லாம் நற்கருணையில் இயேசு மட்டும்தான் இருக்கிறார் என்று நினைத்திருப்போம். பிதா, சுதன் , பரிசுத்தஆவி மூவரும் அடங்கிய தமத்திருத்துவமே நற்கருணை என்று வானதூதர் விளக்கியிருக்கிறார் அந்த குழந்தைகளுக்கு.
அப்பேற்பட்ட திவ்ய நற்கருணையை நாம் தகுதியுடனும், பக்தியுடனும் உட்கொள்கிறோமா?
( மாதாபரிகார மலரின் தொடர்ச்சி)
சம்மனசானவர் கூறிய வார்த்தையிலிருந்து நமதாண்டவர் “ சகிக்க கூடாதவிதமாய்” நிந்திக்கப்படுகிறார் என அறிகிறோம், இன்று எங்கும் பரவலாக நடக்கிறது ! அபிசேகம் செய்யப்பட்ட விரல்களே நற்கருணையைத் தொடவேண்டும். நற்கருணையைத் தொடுவதற்கு குறைந்தபட்சம் குருத்துவத்தின் இரண்டாவது பெரிய பட்டமாகிய ‘ தியாக்கோன் ‘ பட்டமாவது பெற்றிருக்க வேண்டும். ஆனால் இப்போது கண்டவர்களும் நன்மை கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆத்தும சரீர ஆயத்தங்களோடுதான் நற்கருணை வாங்கவேண்டும். ஆனால் இன்று பாவசங்கீர்த்தனம் செய்யாமலே கோவிலுக்கு வருகிற எல்லாரும் நன்மை வாங்குகிறார்கள். ( கொஞ்சம் யோசித்துப்பார்ப்போம் நான் பாவசங்கீர்த்தனம் செய்து எத்தனை நாட்களாகிறது)
நாவிலே நன்மை வாங்குவதே திருச்சபையின் வழக்கமாக இருக்கிறது. இப்பொழுது கரங்களில் வாங்கி அவசங்கைப்படுத்துகிறார்கள். புது நன்மைச்சிறுவர்களுக்கும் கையில் வாங்கபயிற்சி கொடுத்து அவர்களுக்கும் நற்கருணை ஆண்டவர் மேல் மறியாதை அற்று போக்ச்செய்கிறார்கள்.
( பெற்றோர்களே! யார் சொல்லிக்கொடுத்தாலும் நீங்கள் உங்கள் பிள்ளைகள் கரங்களில் வாங்குவதை அனுமதிக்காதீர்கள் )
இதற்கெல்லாம் நாம் பரிகாரம் செய்வதெப்படி?
தகுந்த ஆயத்தத்தோடும், மிகுந்த வணக்கத்தோடும் முழங்காலில் நின்று பயபக்தியுடனும் அன்புடனும் நற்கருணை உட்கொள்வதாலேயே..
பரிகார நன்மை : மகா பரிசுத்த திவ்விய நற்கருணைக்குச் செய்யப்படுகிற " சகிக்க முடியாத " அவசங்கைகளை நாம் எப்படி பரிகரிக்க முடியும்? நற்கருணை சேசுவை முழு இருதயத்துடன் நேசித்து அந்த அன்பினால் தூண்டப்பட்டு, அந்த அவசங்கைகளை பரிகரிக்கும் கருத்துடன் நற்கருணையை உட்கொண்டு, தகுந்த ஆராதனை, நன்றி செலுத்த வேண்டும்.
பகுதி-6 (முதல் சனி பக்தி-1)
1925-ம் ஆண்டு போன்றவேட்ரா என்ற பட்டணத்தில் மாதாவும், பால சேசுவும் லூசியாவுக்கு காட்சியருளி, பரிகார பக்தியாகிய 5 முதல் சனி பக்தியைக் கடைபிடிக்கிறவர்களுக்கு இரட்சண்யத்தை வாக்களித்துள்ளார்கள்.
பரிகாரப் பக்தியின் பரிசு நம் இரட்சண்யம். எப்படிப்பட்ட உயர்ந்த பரிசு. நம் இரட்சண்யமே சேசு மரிய இருதயங்களின் ஆறுதலும், மகிமையுமாயிருக்கிறது.
மாதா புனித லூசியாவிடம் கூறிய வார்த்தைகள் : “ என் மகளே ! நன்றியற்ற மனிதர்கள் தங்கள் தூஷனங்களாலும், நன்றிக்கேட்டினாலும் ஒவ்வொரு கணமும் குத்துகிற முட்களால் சூழப்பட்டுள்ள இருதயத்தைப்பார். நீயாவது எனக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு. இதை நீ அறிவி "
தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில் :
1. எனக்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் கருத்துடன்
2. பாவசங்கீர்த்தனம் செய்து
3. 53 மணி ஜெபமாலை சொல்லி
4. பரிகார நன்மை உட்கொண்டு
5. தேவ இரகசியங்களை தியானித்தபடி கால் மணி நேரம் என்னுடன் செலவிடுகிறவர்களுக்கு, அவர்களுடைய மரண சமையத்தில் ஈடேற்றத்திற்கு தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும் தந்து உதவி செய்கிறேன் என்று வாக்களிக்கிறேன் “
முதல் சனிக்கிழமை பக்தியை அனுசரிக்கும்போது நாம் விஷேசமாய் கவனிக்கவேண்டியது, அதை எதற்காக யாருக்காக செய்கிறோம் கருத்தாகும். நம் மரண வேளைகளில் மோட்சத்திற்கு செல்ல தேவைப்படும் சகல வரப்பிரசாதங்களையும் தந்து உதவுவதாக மாதா கூறியிருக்கிறார்கள். பரிகாரப்பக்தியை பக்தியுடன் செய்யத்தூண்டுவதற்காக அப்படி வாக்களித்திருக்கிறார்கள்.
ஆகவே இந்த ஆத்தும லாபத்திற்காக முதல் சனி பக்தியை நாம் அனுசரிப்பது நியாயமானதே. ஆயினும் நல்ல மரணத்தை நாம் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் இதை அனுசரிப்பதைவிட, நம் அன்பு அன்னைக்கு ஏற்பட்டுள்ள நிந்தை அவமான துரோகங்களுக்கு நம் அன்பினால் ஈடு செய்யும் நோக்கத்துடன் அனுசரிப்பதே மேலானது.
நம் லாபத்தைக் கருதி மாதாவுக்கு பரிகாரம் செய்வதைவிட மாதாவின் ஆறுதலுக்காக முதல் முக்கியமாக அதைச் செய்யவேண்டும் நம்மையல்ல நம் தாயை நினைத்துச் செய்யும் பரிகாரமே உத்தமமான பரிகாரம்.
முதல் சனி பரிகாரப் பக்திக்கென நாம் செய்யும் பாவசங்கீர்த்தனம், ஜெபமாலை, நற்கருணை உட்கொள்ளுதல், கால்மணி நேரம் மாதாவுடன் தங்கியிருத்தல் ஆகியவற்றை நிறைவேற்றும்போது நம் நோக்கமும், கருத்தும் : “ மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தை பரிகாரமாக அத்திரு இருதயத்தை நேசித்து அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக என்றபடி இருக்க வேண்டும்.
சேசு மரி இருதயங்களைப் பிரித்துப்பார்க்க கூடாது. இதற்கும் விரிவான விளக்கம் உண்டு அதை பின்வரும் பகுதியில் தெறிவிப்போம். பாத்திமா காட்சியில் வானதூதர் , “ என் தேவனே என்கிற ஜெபத்தை சொல்லிமுடித்த பின், “ இப்படி ஜெபியுங்கள். சேசு-மரிய இருதயங்கள் உங்கள் மன்றாட்டை செவியுற்று கேட்கிறார்கள்.
இன்னொரு முறை குழந்தைகளை ஜெபிக்க சொல்லிவிட்டு வானவர் கூறிய வார்த்தை, “ சேசு மரிய இருதயங்கள் இரக்கமுள்ள திட்டங்களை உங்கெளுக்கென வைத்துள்ளார்கள் “ என்ற செய்தி.
நன்றி : பாத்திமா செய்திகள், மாதா பரிகார மலர்
ஆகவே முதல் சனி பக்தியை பக்தியுடன் கடைப்பிடிப்போம் இன்று முதல். முதல் வெள்ளி பக்தியை பற்றியும் விளக்குவோம். பாவசங்கீர்தனம், திவ்ய நற்கருணை வாங்க முடியாதவர்கள். அட்லீஸ்ட் பக்தியுடன் பரிகார ஜெபமாலை செய்து தேவரகசியங்களை தியானித்து அன்னையுடன் கால்மணி நேரமாவது செலவிடுங்கள்.
பகுதி-8 ( திருப்பலியும் சம்மனசுக்களும்)
தெய்வீக திருப்பலி பற்றி மேலும் புனிதர்கள் பேசுகிறார்கள்:
அர்ச்.கிரகோரியார் : “ பூசைப்பலியில் பங்குபெறும்படி வானமண்டலங்கள் திறக்கப்பட்டு சம்மனசுக்களின் படையணிகள் இறங்கி வருகின்றன “
அர்ச். அகுஸ்தினார் : “ குருவானவர் பூசை நிறைவேற்றும்போது, தேவ தூதர்கள் அவரைச் சூழ்ந்து நின்று அவருக்கு உதவி செய்கிறார்கள்.
அர்ச். கிரீசோஸ்தோம் அருளப்பர் : “ திவ்ய பலி நிறைவேறும்போது, தேவாலய பீடபகுதி என்னற்ற சம்மனசுக்களால் நிரப்பப்படுகிறது. இவர்கள் பீடத்தின் மீது பலியிடப்படும் தேவப் பலிபொருளானவரை ஆராதிக்கிறார்கள்.
பூசையால் விளையும் நன்மை மிக அற்புதமானது. கடவுளின் இரக்கமும், தாராளமும் அப்போது எவ்வளவு அளவுக்கு உட்படாத்தாக இருக்கிறது என்றால், நமக்கு தேவையான நன்மைகளை கேட்க பீடத்தின்மீது சேசு பாலன் பிறக்கும் நேரத்தைவிட மிகச்சிறந்த நேரம் வேறு எதுவுமில்லை. அப்போது நாம் கேட்கும் எதையும் நாம் ஏறக்குறைய நிச்சயமாக பெற்றுக்கொள்வோம். பூசையில் நாம் பெற்றுக்கொள்ளாத்தை மற்ற ஜெபங்கள், தவ முயற்சிகள் அல்லது திருயாத்திரைகளின்மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புவது மிக அரிது.
சம்மனசுக்கள் இதை முழுமையாக அறிந்துள்ளனர். ஆகவே அவர்கள் இரக்கத்தின் வேளையில் கடவுளை ஆராதிக்கவும், தங்கள் விண்ணப்பங்களை கடவுளின் முன் சமர்பிக்கவும் பெருங்கூட்டமாக இறங்கி வருகிறார்கள்.
அர்ச். விர்ஜித்தம்மாளின் வெளிப்பாடுகளிலிருந்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம் :
“ ஒருநாள் நான் திவ்வியபலி பூசையில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும்போது பெருந்திரளான சம்மனசுக்கள் இறங்கி வந்து, பீடத்தைச் சுற்றி நின்று குருவானவர் செய்யும் காரியங்களை தியானித்துக் கொண்டிருந்த்தைக் கண்டேன். என் இருதயத்தைக் கொள்ளை கொண்டு பரவசத்தில் ஆழ்த்திய பரலோக கீதங்களை அவர்கள் பாடினார்கள். பரலோகம் முழுவதுமே அந்த மாபெரும் தேவபலியைக் கண்டு தியானித்துக் கொண்டிருந்த்து போலிருந்தது. ஆனால் ஏழைகளும் ( ஆன்மீகத்தில்), குருடர்களும், பரிதாபத்திற்குறிய சிருஷ்டிகளுமான நாம் எவ்வளவோ குறைவான நேசத்தோடும், ஆசையோடும், வணக்கத்தோடும் அதில் பங்கு பெறுகிறோம் “
“ஓ கடவுள் மட்டும் நம் கண்களைத் திறப்பார் என்றால் எத்தகைய அதிசயங்களைத்தான் நாம் பூசையில் காண மாட்டோம் “
அர்ச். ஆசீர்வாதப்பர் சபையின் பரிசுத்த துறவற குருவாகிய முத்.ஹென்றி சூசோ ஒரு நாள் பூசை வைத்துக்கொண்டிருந்த போது, சம்மனசுக்கள் காணக்கூடிய விதத்தில் பீட்த்தைச் சுற்றி ஒன்று கூடினார்கள். அவர்களில் சிலர் நேசப்பரவசங்களில் அவர்கள் அருகில் வந்தார்கள்.
நாம் காண்பதில்லை என்றாலும் ஒவ்வொரு திருப்பலி பூசையிலும் நடப்பது இதுதான்.
இந்த அதிசயத்திற்குறிய உண்மையைக் கத்தொலிக்கர்கள் எப்போதாவது நினைக்கிறார்களா? பூசையின்போது ஆயிரக்கணக்கான தேவதூதர்களுக்கு மத்தியில் ஜெபித்துக்கொண்டிருக்க்கிறார்கள் என்பதை.
- திவ்விய பலி பூசையின் அதிசயங்கள் என்ற நூலிலிருந்து, ஆசிரியர் : சங். பவுல் ஓ சலைவன், O.P
திவ்விய பலிபூசையின் மகத்துவம் தெறிந்து தகுந்த முறையில் பங்கெடுத்து திருப்பலியின் பரிபூரண பலங்களை பெற்ற நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.
பகுதி-9 ( பாத்திமாவின் சிறுமி ஜசிந்தாவின் அறிவுரைகள் )
லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா இந்த மூன்று சிறுமிகளுடைய வாழ்க்கையில் அன்னையின் காட்சிக்கு பிறகு நிறைய மாற்றங்கள். அதுவும் நரகத்தின் கொடூரத்தை அன்னை காட்டியதை பார்த்தபின்பு அந்த பிஞ்சு குழந்தைகள் பாவிகள் மனந்திரும்ப நிறைய ஒருத்தல்கள், பரிகாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். தங்களுக்கு ( ஜசிந்தா, பிரான்சிஸ்) வந்த விஷகாய்ச்சலின் வேதனைகளையும் மரணம் வரை ஒப்புக்கொடுத்தது அவர்கள் பரித்தியாகங்களின் உச்சம். லூசியாவும் அநேக ஒறுத்தல்கள் பரித்தியாகங்கள் செய்திருக்கிறார்கள்.
இதோ ஜெசிந்தா தன்னைப்போன்ற குழந்தைகளுக்கு கோடினோ என்ற அருட்சகோதரியின் முன்னால் வழங்கிய அறிவுரையிலிருந்து சில பகுதிகள் : ( அனைத்தையும் படியுங்கள் மிகவும் பயனுள்ளது)
1. உலகில் நிறைய யுத்தங்களும், பிரிவுகளும் இருக்கின்றன; பாவத்திற்கு தண்டனைதான் யுத்தம் என்று நம் அம்மா என்னிடம் சொன்னார்கள்
2. உலகத்தைத் தண்டிக்கவிருக்கும் தன் திருக்குமாரனின் கரத்தை நம் அம்மாவால் தாங்கி நிறுத்தக்கூடவில்லை. தபசு செய்வது மிகவும் அவசியம் மக்கள் தங்கள் வாழ்வைத் திருத்தினால், இப்போது கூட ஆண்டவர் உலகத்தைக்காப்பாற்றுவார். இல்லாவிட்டால் தண்டனை வரத்தான் செய்யும்.
3. உலகத்தின் பாவங்கள் மிக மிக அதிகம். நித்தியம் என்றால் என்ன என்று மனிதர்கள் அறிந்தால் அவர்கள் தங்கள் வாழ்வை கட்டாயம் மாற்றிக்கொள்வார்கள்.
4. பாவிகளுக்காகவும், குருக்களுக்காகவும் சந்நியாசத்தில் உள்ளவர்களுக்காகவும் அதிகமாக வேண்டிக்கொள்வது அவசியம்.
5. அரசாங்கங்கள் திருச்சபையை எதுவும் செய்யாமல் சமாதானமாக விட்டு, அதற்கு முழு சுதந்திரம் கொடுப்பார்களானால், கடவுளின் ஆசீரைப் பெறுவார்கள்.
6. செல்வத்தையும், சவுகரீகமான வாழ்வையும் விட்டு ஓடுங்கள். வறுமையையும் மவுனத்தையும் விரும்புங்கள். தீயவர்கள் மீதும் அன்பாயிருங்கள். யாரைப்பற்றியும் குறைவாக பேசவேண்டாம். அப்படிப்பேசுகிறவர்களை விட்டுப் போய்விடுங்கள்.
7. மிகவும் பொறுமையோடிருங்கள். ஏனென்றால் பொறுமை நம்மை மோட்சத்திற்கு கொண்டு செல்கிறது. பரித்தியாகங்களும் நமதாண்டவருக்குப் பிரியமானவை.
8. பாவசங்கீர்த்தனம் இரக்கத்தின் தேவத்திரவிய அனுமானம். மகிழ்வோடும், நம்பிக்கையோடும் பாவசங்கீர்தனத்திற்கு செல்ல வேண்டும்.
9. குருக்கள் மிகவும் தூயவர்களாக இருக்க வேண்டும். குருக்கள், துறவியர் தங்கள் அதிகாரிகளுக்கு கீழ்ப்படியாமலிருப்பது நமதாண்டவருக்கு மிகவும் வெறுப்பாயிருக்கிறது. அதிகாரிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
10. மாதாவுக்குத் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாதவர்கள் தங்கள் காரியங்களில் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.
11. நோயாளிகளைக் குணமாக்கக் கூடிய ஒளி டாக்டர்களுக்கு இல்லை ஏனென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு இல்லை.
12. சில நாகரீக பாணிகள் புகுத்தப்படும். அவை நமதாண்டவரை மிகவும் நோகச்செய்யும். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவர்கள் இப்பாணிகளைப் பின்பற்றக் கூடாது. திருச்சபையில் நாகரீகப் பாணிகள் கிடையாது. நமதாண்டவர் மாற்றமடைவதில்லை.
13. பல திருமணங்கள் கடவுளால் ஆனவை அல்ல. அவை நமதாண்டவருக்கு விருப்ப்ம் இல்லாதவை. அதீகப்படியானவர்கள் நரகத்திற்கு செல்லக் காரணம் சரீர பாவங்களே.
14. கற்பென்னும் வார்த்தைப்பாடு கொடுத்து கன்னிமை விரதம் பூண்ட ஆன்மாக்கள் வரவேண்டுமென தேவதாய் அதிகம் விரும்புகிறார்கள்.
15. எனக்கு மடத்தில் சேர மிக ஆசை. ஆனால் அதைவிட மோட்சம் செல்ல விரும்புகிறேன்.
16. தேவ ஊழியர்காக இருப்பதற்கு மனதிலும், உடலிலும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.
தூய்மையாயிருத்தல் என்றால் என்ன என்று உனக்குத் தெறியுமா? என்று கேட்டதற்கு,
“ ஆம் தெறியும். உடலில் தூய்மையாயிருத்தல் என்றால் கற்பை அனுசரிப்பதாகும். மனதில் தூய்மையாயிருப்பதென்னவென்றால் எந்த பாவமும் செய்யாதிருப்பது. பார்க்கத் தகாவற்றை பார்ப்பது கூடாது. களவாடல், பொய் கூறல் தகாது.
கஷ்ட்டமாக இருந்தாலும் எப்போதும் உண்மையே பேசவேண்டும் “
என்று சொல்லியிருக்கிறாள் அந்த சிறுமி. இதனால்தான் நம் ஆண்டவர் இயேசு சொன்னாரோ, “ நீங்கள் குழந்தைகளாய் மாறாவிடில் விண்ணரசில் நூழைய மாட்டீர்கள் “ என்று.
நாம் புனித சிறுமி ஜெசிந்தாவின் அறிவுரையை கேட்டு, அந்த மூன்று சிறுமிகள் அடிக்கடி ஜெபித்த ஜெபமாலை, வானவர் ஜெபம் ( என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன்..) ஜெபித்து அவர்களைப்போல ஒருத்தல் முயற்சிகள், பரித்தியாகங்கள் செய்து நாமும் அவர்கள் போல் மோட்சத்திற்க்கு செல்ல நம்மை இப்போதிலிருந்தே தயாரிப்போமா?.
பகுதி-10
( பாத்திமாவில் மூன்று சிறுவர்களுக்கு அன்னை காட்டிய நரகக்காட்சி)
( மிக மிக முக்கியமானது. நரகச்காட்சியில் பயம் கொள்ள வேண்டாம்.எப்பேற்பட்ட பாவியையும் ஆண்டவர் இயேசு மன்னிக்கத் தயாராக இருக்கிறார். (இசையாஸ் 59:1). பாவத்திற்காக மனம் வருந்தி மன்னிப்பு ( நல்ல பாவசங்கீர்த்தனம்) கேட்டு பரிகாரம் செய்தால் எப்பேற்பட்ட பாவியும் மோட்சம் செல்ல முடியும்.
அன்று நல்ல கல்வன் தன் சிலுவையை பரிகாரமாக ஏற்றுக்கொண்டதால் நம் நாதர் இயேசுவிடம் வேண்டியதற்கு இயேசு தந்த பரிசு “ நீ இன்றே என்னோடு வான வீட்டில் இருப்பாய் “ என்பதுதான். எத்தனையோ எளிய பக்தி முயற்சிகள் உள்ளன. கவலை வேண்டாம். ஆனால் கடவுள் என்னை மன்னிக்கவே மாட்டார் என்று யாரும் நினைக்க வேண்டாம் யூதாசைப்போன்று. தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்டு இயேசுவில் வாழ்வோம் புனித ராயப்பரைப்போன்று.
நாம் அனைவரும் மனம் திரும்ப வேண்டும். மற்றவர்களையும் நம் தவ ஜெபத்தால் மனதிருப்ப வேண்டும் என்பதற்காகவே கீழே உள்ள பகுதியை வெளியிடுகிறோம்.
1917-ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி பாத்திமாவில் அன்னையின் மூன்றாம் காட்சி நடைபெற்ற நாள்.
( முக்கியமான பகுதிகளை மட்டும் எடுத்து தருகிறோம். பாத்திமா காட்சிகள் முழுவதையும் தொடராக பின்பு தருகிறோம்)
மூன்று குழந்தைகளும் உலகத்தை விட்டு பிரிக்கப்பட்டவர்கள்போல் பரவச நிலையை அடைந்தார்கள். தேவ அன்னையின் காட்சியைக் கண்டார்கள்.வழக்கம்போல் , “ உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள் லூசியா.
“ அடுத்த மாதம் 13-ம் நாளில் இங்கு வர வேண்டும். உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும், யுத்தம் முடிவடையவும், தேவதாயின் மகிமைக்காக ஜெபமாலையைத் தினமும் தொடர்ந்து சொல்லி வாருங்கள். எனென்றால் தேவ தாய் மட்டுமே இவற்றைப் பெற்றுத் தர முடியும் “ என்றார்கள் தேவ அன்னை.
“ அம்மா நீங்கள் யார் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள் எங்களுக்கு காணப்படுகிறீர்கள் என்று எல்லோரும் நம்பும்படியாக ஒரு புதுமையைச் செய்யுங்கள் “ என்றால் லூசியா.
“ இங்கு மாததோறும் தொடர்ந்து வாருங்கள். அக்டோபர் மாதம் நான் யார் என்றும் என்ன விரும்புகிறேன் என்றும் என்றும் சொல்வேன். எல்லோரும் நம்பும்படி ஒரு புதுமையையும் செய்வேன் “ என்று கூறினார்கள் அன்னை.
இக்காட்சியில் மிக முக்கியமாக லூசியாவுக்கு உணர்த்தப்பட்டது யாதெனில், ஆண்டு முழுவதும் கடவுளின் அருள் வரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு தினமும் ஜெபமாலை செய்யவேண்டும் என்பதே.
மீண்டும் நம் அன்னை அம்மூன்று குழந்தைகளையும் பார்த்து : “ பாவிகளுக்காக உங்களைப் பலியாக்குங்கள். அடிக்கடி, குறிப்பாக நீங்கள் ஏதாவது ஒரு பரித்தியாகம் செய்யும் போது,
“ ஓ சேசுவே உமது அன்பிற்காகவும், பாவிகள் மனதிரும்புவதற்காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் பாவங்களுக்கு பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன் என்று சொல்லுங்கள் “ என்றார்கள்.
இந்தக் கடைசி வார்த்தைகளைச் கூறியபடி நமதன்னை முந்தைய இரண்டு மாதங்களிலும் செய்ததுபோல தன் கரங்களை விரித்தார்கள். அவற்றிலிருந்து பாய்ந்த ஒளி பூமியை பிளந்ததுபோல் காணப்பட்டது. அங்கே ஒரு நெருப்புக்கடலை நாங்கள் கண்டோம். அந்நெருப்பினுள் பசாசுக்களும், ஆன்மாக்களும் அமிழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் பழுக்கச்சிவ ந்து ஊடுறுவிப் பார்க்கக்கூடிய தணல்போல் இருந்தனர். மானிட வடிவத்தில் சிலர் கறுப்பாக அல்லது பித்தளை நிறமாக இருந்தனர்.
மேகம்போல் புகையுடன் அவர்கள் உள்ளிருந்தே பீறிட்டு வந்த நெருப்புச் சுவாலைகளால் அங்குமிங்குமாக வீசப்பட்டனர். பெருந்தீயிலிருந்து சிதறும் நெறுப்புப் பொறிகளைப் போல பாரமோ நடு நிலையோ இல்லாமல் எப்பக்கமும் விழுந்தனர். வேதனையாலும் எல்லாவற்றையும் இழந்துவிட்ட துயரத்தாலும் அவர்கள் அழுத சத்தம் எங்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கியதால் நாங்கள் அச்சத்தால் நடுங்கினோம். ( இந்தக் காட்சிதான், ஜனங்கள் கேட்டதாக சொல்லுகிறபடி என்னைச் சத்தமாக கத்தும்படி செய்திருக்க வேண்டும்).
பசாசுகள் அகோர, அரோசிகமான இனந்தெறியாத மிருகங்கள் போலிம் ஊடுறுவிப்பார்க்கக் கூடிய எரியும் நிலக்கரி போலும் மற்றவர்களிடமிருந்து பிரித்தறியக்கூடியவர்களாகயிருந்தன. பயம் மேலிட்டு உதவி தேடுவது போல் நாங்கள் நம் அன்னையை நோக்கி கண்களை உயர்த்தினோம். அவர்கள் எங்களைப் பார்த்து அன்புடனும் ஆனால் துயரத்தோடு இவ்வாறு கூறினார்கள்.
“ பரிதாபத்திற்குறிய பாவிகளின் ஆன்மாக்கள் செல்லும் நரகத்தை நீங்கள் கண்டீர்கள். அவர்களைக் காப்பாற்ற உலகில் என் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார். நான் உங்களிடம் கூறுவதை நீங்கள் செய்தால் அநேக ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவார்கள். சமாதானமும் நிலவும் இந்த யுத்தமும் முடிவடையும். ஆனால் மனிதர்கள் சர்வேசுவரனை நோகச்செய்வதை நிறுத்தாவிட்டால் இன்னொரு இதைவிட கொடிய யுத்தம் 11-ம் பத்திநாதர் காலத்தில் ஆரம்பிக்கும்.
இனந்தெறியாத ஒரு ஒளியால் ஓர் இரவு வெளிச்சம் பெறுவதை நீங்கள் காணும்போது, உலகத்தின் பழிபாவங்களுக்காக யுத்தத்தாலும், பசியாலும், திருச்சபைக்கும், பாப்பரசருக்கும் எதிரான கலாபனையாலும், உலகைக் கடவுள் தண்டிக்கப்போகிறார் என்பதற்கு அவர் கொடுக்கும் அடையாளம் அதுவே என அறிந்து கொள்ளுங்கள்.
இதைத் தடுத்து நிறுத்த, ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்திற்க்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும் , முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்கவேண்டுமென்றும் கேட்க வருவேன். என் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டால் ரஷ்யா மனதிரும்பும். சமாதானம் நிலவும். இல்லாவிட்டால் ரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும். யுத்தங்களையும், திருச்சபைக்கெதிரான கலாபங்களையும் எழுப்பி விடும். நல்லவர்கள் கொல்லப்படுவார்கள். பாப்பரசர் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும். பல நாடுகள் இல்லாமல் அழிக்கப்படும்.
ஆனால் இறுதியில் என் மாசில்லா இருதயம் வெற்றி பெறும். பாப்பரசர் ரஷ்யாவை எனக்கு ஒப்புக்கொடுப்பார். அது மனதிரும்பும். உலகிற்கு சமாதன காலம் கொடுக்கப்படும்.
போர்த்துக்கல்லில் விசுவாச சத்தியம் எப்போதும் காப்பாற்றப்படும்…… இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். பிரான்சிஸிடம் சொல்லலாம்.
நீங்கள் ஜெபமாலை சொல்லும்போது,
“ ஓ என் சேசுவே, எங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆன்மாக்களையும், விசேசமாய் யார் அதிக தேவையிலிருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும் “ என்று சொலுங்கள்.
இத்துடன் நம் அன்னை இன்னொரு இரகசியத்தையும் கூறினார்கள். அது இன்றுவரை யாருக்கும் வெளியிடப்படவில்லை.
மாமரி அன்னை இவ்வளவும் பேசி முடிய அங்கு தனியான அமைதி நிலவியது. குழந்தைகளும் சற்று நேரம் எதையும் பேசவில்லை. மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு சிறு சத்தம் முதலாய் கேட்கவில்லை. காற்றின் ஓசை கூட இல்லாதிருதது.
“ உங்களுக்கு வேறு ஏதாவது நான் செய்ய விரும்புகிறீர்களா? “ என்று லூசியா கேட்டாள். இறுதியாக “ இன்று இதற்கு மேல் நான் ஒன்றும் விரும்பவில்லை “ என்று கூறிய மாமரி, அக்குழ ந்தைகளை மிகவும் அன்புடன் நோக்கியபின் வழக்கம்போல “ கீழ்த்திசை நோக்கிச்சென்று, அளப்பறிய விண்வெளியின் தொலைவில் மறைந்தார்கள்.
நம் ஜெப தவத்தால் மனம் திருந்துவோம்-மனம் திருப்புவோம்.
பகுதி-11 (மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றி)
பரிகார பக்தியின் பிரகடனம் : பரிகாரம் என்னும் வேத உண்மை எக்காலமும் உள்ளதுதான். அது “ பாத்திமா போதனையாக “ இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக மாதாவால் போதிக்கப்படுகிறது. அதன் முதல் பாத்திமா பரிகாரப் பிரகடனம் பாத்திமா சம்மனசானவரால் முதன்முதலில் செய்யப்பட்டது. அதன்படி முதன்முதலில் பரிகாரம் செய்யப்படவேண்டியவர்: எல்லாம் வல்ல சர்வேசுரனேயாம்!
பாத்திமா சம்மனசானவர் இரண்டாம் காட்சியில்: “ உங்களால் முடிந்த அளவு அனைத்தையும் பரித்தியாகமாக்குங்கள். கடவுளை நோகச் செய்கிற பாவங்களுக்குப் பரிகாரமாக அவைகளை ஒப்புக்கொடுங்கள். பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் ஒப்புக்கொடுங்கள். யாவற்றிற்கும் மேலாக கடவுள் உங்களுக்கு அனுப்புகிற துன்பங்களை அமைந்த மனதுடன் தாங்கிக் கொள்ளுங்கள் “ என்றார். இவைதான் பாத்திமா தூதரின் முதல் பரிகார பிரகடன வார்த்தைகள்.
“ தூதரின் இந்த வார்த்தைகள் எங்கள் மனதில் அழியாதவிதமாய் பதிக்கப்பட்டன “ என்று சகோதரி லூசியா எழுதியிருக்கிறாள். பரிகார பக்தியின் முதல் அம்சம்: கடவுளுக்குப் பாவபரிகாரம் செய்யவேண்டும் என்ற கருத்து. இது நம் மனதில் ஆழமாக பதிக்கப்பட வேண்டும்.
“ தூதரின் வார்த்தைகள் ஓர் ஒளி போல் இருந்தன. அவ்வொளி கடவுள் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்றும். நம்மால் நேசிக்கப்பட எவ்வளவு ஆசிக்கிறார் என்றும் அதிலே நாங்கள் கண்டுபிடித்தோம். பரித்தியாகங்களின் விலை எவ்வளவு அதிகமானது, அவற்றின் பொருட்டு கடவுள் பாவிகளை மனதிருப்புவதற்கு எப்படி வரப்பிரசாதங்களைக் கொடுக்கிறார் என்று அறிந்து கொண்டோம் “ என்றும் லூசியா கூறியிருக்கிறாள்.
இக்குழந்தைகள் கடவுளை உணர்ந்தார்கள். தம்மால் நேசிக்கப்பட அவர் எவ்வளவு ஆசிக்கிறார் என்றும் கண்டுபிடித்தார்கள். இவைகளை நாமும் உணர்ந்து கண்டுபிடிக்கும்படி மாதாவிடம் வேண்டினால் நமக்கும் அந்த வரப்பிரசாதம் கொடுக்கப்படும்.
நன்றி : மாதா பரிகார மலர்
பரிகாரம், பரித்தியாகங்கள், ஒறுத்தல்கள், நமக்கு வரும் சிலுவைகளை ஏற்பது ( நோய் வந்தால் வைத்தியம் செய்யனும் அதுவரை உள்ள வேதனையை ஒப்புக்கொடுக்கனும்) திருப்பலியில் பக்தியோடு கலந்து கொண்டு திவ்ய நற்கருணை உட்கொள்வது ( மாதத்தின் முதல் வெள்ளி, முதல் சனி பக்தியை அனுசரிப்பது. ( பரிகார நற்கருணை உட்கொள்வது, ஜெபமாலை ஜெபிப்பது இவைகள் மூலமாக இயேசுவின் திருதயத்திற்கும், மாதாவின் மாசில்லா இருதயத்திற்கும் ஆறுதல் அளிப்பது மற்றும் வெற்றியை தேடித்தருவது.
பாத்திமா காட்சிகள் “ “ ஜெபமாலை ரகசியங்கள் “ “ என்னைப்படி அல்லது வருத்தப்படு“(உத்தரிக்கும் ஸ்தலம் பற்றியது), “ திருப்பலி பூசையின் அதிசயங்கள்” “ இயேசுவின் திரு நாமத்தின் அதிசயங்கள் “ “கத்தொலிக்க வேத சத்தியங்கள் “ " மாதா பரிகார மலர் " " கத்தொலிக்கம் நம் பெருமை " இன்னும் நமக்குத் தேவையானஅத்தனை நூல்கள் சென்னையிலும் கிடைக்கும். ( விலைகள் அதிகமல்ல)
முகவரி : M. தனராஜ் ரொட்ரிகஸ்,
4, பவனந்தியார் 5-வது குறுக்குத் தெரு, காமராஜபுரம், சென்னை-600 073. Ph: 9790919203/9094059059
குறிப்பு : சகோதரர் தனராஜ் மற்றும் அவரோடு பணியாற்றும் சகோதர்கள். உலகலாவிய வாழும் ஜெபமாலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அழைக்கும் பங்குகளில் ( அருட்தந்தையர்களால்) சென்று " திவ்ய நற்கருணை, ஜெபமாலை,உத்தரிக்கும் ஸ்தலம் இன்னும் கத்தொலிக்க மறை பற்றி சிறப்பாக எடுத்துக்கூறி வருகிறார்கள். மாதாவில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் தியானம் நடத்துகிறார்கள். இது வரை பல வருடங்களாக, பல ஊர்களில் பல தியானங்கள் பங்குத்தந்தையினரின் அனுமதியோடு நடத்தியிருக்கிறார்கள்.
இவர்கள் சென்னை பிஷப்பின் அனுமதி பெற்றவர்கள். கத்தொலிக்கத்தின் சிறப்பு, மாதா வழி பக்திமுயற்சி இவர்களின் சிறப்பு
விருப்பமுள்ளவர்கள் அவர்களோடு தொடர்பு கொண்டு உங்கள் பங்குத்தந்தையின் அனுமதி பெற்று ( பங்குத்தந்தையே ஏற்பாடு செய்வார்) அவர்களை அழையுங்கள. கத்தொலிக்கத்தில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா என்று மலைக்க வைக்கிறது. இவர்கள் போக்குவரத்து செலவு மட்டும் ( T.A) பெற்றுக்கொள்கிறார்கள்.
பகுதி-12 ( சேசு மரிய இருதயங்களைப் பிரித்துப்பார்க்கக் கூடாது)
பாத்திமா தூதரின் மூன்று காட்சிகளிலும் அவர் சேசு-மரிய இருதயம் ஒரே மத்தியஸ்தராக இருப்பதை மிகத்தெளிவாக கூறுகிறார். முதல் காட்சியில், என் தேவனே நான் உன்னை விசுவசிக்கிறேன் “ என்ற ஜெபத்தை மும்முறை சொல்லி அனைவருக்காகவும் பரிகாரம் செய்தபின், “ இப்படி ஜெபியுங்கள் சேசி-மரிய இருதயங்கள் உங்கள் மன்றாட்டை செவியுற்றுக் கேட்கிறார்கள் “ என்று கூறினார்.
இரண்டாம் காட்சியில் : “ என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஜெபியுங்கள். மிக அதிகமாக ஜெபியுங்கள் “ என்று கூறியபின். “ சேசு மரிய இருதயங்கள் இரக்கமுள்ள திடங்களை உங்களுக்கென வைத்திருக்கிறார்கள் “ என அதே தூதர் கூறினார்.
மூன்றாம் காட்சியில், “ மகா பரிசுத்த தமதிரித்துவமே பிதாவே சுதனே இஸ்பிரித்துசாந்துவே (பரிசுத்த ஆவி) …” என்ற ஜெபத்தில், “ சேசுவின் திருஇருதயத்துனுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்துடனுடயவும் அளவற்ற பேறுபலங்களைப் பார்த்து நிர்பாக்கிய பாவிகளை மனதிருப்பும்படி மன்றாடுகிறேன் “ என்று கூறினார்.
தூதரின் இம்மூன்று காட்சிகளிலும் சேசுவும் மாதாவும் கடவுளுக்கும், மனிதருக்குமிடையில் மத்தியஸ்தராக இருக்கிற உண்மையை எடுத்துக்காட்டினார். சேசுவையும், மாதாவையும் பிரித்துப்பார்க்க கூடாது என்பதை தெளிவாக்கினார். நாம் கடவுளைப் பார்த்து ஜெபிக்கும்போது, சேசு-மரிய இருதயங்களே அதை ஏற்றுக்கொண்டு நமக்கு வரப்பிராதங்களாக பொழிகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். அதே போல் நாம் கடவுளிடம் செல்லும் வழியாக இருப்பதும் சேசு-மரிய இருதயங்களே என்பதையும் விளக்கிக்காட்டினார்.
நன்றி : மாதா பரிகார மலர்
விவிலியத்தில் உள்ள உதாரணத்தைப் பார்ப்போம். இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுக்க சென்ற போது அன்னை மரியாயைப் பார்த்து சொன்ன வார்த்தையான “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ (லூக்காஸ் 2 : 35) என்றாரே அது எப்போது நிகழ்ந்தது ?.
இயேசுவின் பாடுகளை அவரோடு இனைந்து கல்வாரிவரை அவரின் அத்தனைப் பாடுகளையும் உள்ளத்தில் சுமந்தார்களே அப்போதும் இருவரின் உள்ளங்களும் ஒன்று பட்டது. இயேசு கல்வாரி மலையில் உயிர்விட்டபின்பு தானே அவர் இருதயம் ஒரு படைவீரனால் குத்தப்பட்டது. அப்போது யார் இருதயம் வலியால் துடித்தது. அந்த வலி இயேசுவுக்கு அல்ல எனென்றால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அந்த வலியை முழுவதும் அனுபவவித்தவள் இயேசுவின் தாயும், நம் தாயுமான அன்னை மரியாள். இதுவே சிமியோன் முன்னுரைத்துக் கூறிய வாக்கு “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ என்பது நிறைவேறியது.
ஆகவே இயேசுவின் இருதயம் துன்பப்பட்டால் அன்னை மரியாயின் உள்ளம் துன்பப்படும். அதே போல் அன்னை மரியாயின் இருதயம் துன்பப்பட்டால் இயேசுவின் இருதயம் துன்பப்படும்.
இதை உணராத எத்தனையோ பேர் இயேசுவின் பெயரை சொல்லிக்கொண்டு அன்னை மரியாளை ஒதுக்குவதும், அவமானப்படுத்துவதும், அவசங்கைப்பத்துவதையே அன்றாட கடமையாக வைத்துள்ளார்கள். அப்படிச் செய்தால் இயேசு மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறார்கள்.
மாறாக இயேசு எவ்வளவு வேதனைப்படுகிறார் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. இயேசு வேதனையில் இருக்கும்போது அன்னையும் அதிகமாக வேதனைப்படுகிறார்கள்.
சேசு-மரிய இருதயங்களைப் பற்றி யார் கவலைப்பட்டாலும் படாவிடாலும் நாம் கவலைப்படுவோம் அந்த இருதயங்களுக்கு நாம் ஆறுதல் தருவோம் என்பதைவிட நாமாவது ஆறுதல் தருவோம்.
திருப்பலியில் அதிக பக்தியோடு பங்கேற்போம். எவ்வளவு ஜெபமாலை சொல்ல முடியுமோ அவ்வளவு ஜெபமாலை ஜெபிப்போம்.
இயேசுவுக்கே புகழ் ! இயேசுவுக்கே நன்றி ! மரியே வாழ்க!
பகுதி-13 ( சேசுவின் திருநாமத்தின் அதிசயங்கள் )
சிறு வயது முதலே நாம் சேசுவின் திரு நாமத்தை பல தடவை உச்சரித்துள்ளோம்.அந்தோ ! மிகவும் சொற்ப பேர்கள் கூட சேசுவின் திரு நாமத்தின் அதியங்களை பற்றிய போதுமான அளவு அறிவைப்கூடப்பெறவில்லை. சேசுவின் திரு நாமத்தை பற்றி நாம் என்ன அறிந்திருக்கிறோம் ? சேசுவின் திரு நாமத்தை உச்சரிக்கும் போது, மரியாதையுடன் நம் தலையை வணங்க வேண்டும் என்பது தெறியும்.
அதைத் தவிர.இது மூடியிருக்கும் ஒரு புத்தகத்தை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அதன் மீதுள்ள தலைப்பை வாசிப்பது போன்றதுதான் அது. அந்த புத்தகத்தில் உள்ள அழகிய, அற்புத விசயங்களை தெறிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.
இந்த திவ்ய நாமமானது சத்தியமாக பொக்கிசங்ளின் சுரங்கமாகும். எந்த ஒரு மனிதனும் இவ்வுலகில் அனுபவித்து மகிழ முடியும் என்று நம்பக்கூடிய மிகவும் உயர்ந்த அர்ச்சிஷ்ட்ட தனமாகவும், மிகவும் உன்னதமான சந்தோசத்தினுடைய இரகசியமாகும் அந்த நாமம் உள்ளது.
இந்த நாமம் எவ்வளவு வல்லமையும் உறுதியுமானது வாய்ந்தது என்றால், அது மிகவும் உன்னதமான அற்புத விளைவுகளை நமது ஆத்துமங்களில் ஏற்படுத்த தவறுவதில்லை. இ ந்த நாமம் மிகவும் கவலை தோய்ந்த இருதயத்தை ஆறுதலால் நிரப்புகிறது. மேலும் மிகவும் பலவீனமான பாவிகளை வலிமையுள்ளவர்களாக மாற்றுகிறது. இந்த நாமம் நம் எல்லோருக்கும் லவுகீகமானதும், ஞானரீதியானதுமாகிய அனைத்துவிதமான கொடைகளையும், வரப்பிரசாதங்களையும் பெற்றுத்தருகிறது.
இரண்டு காரியங்களை மட்டும் நாம் செய்ய வேண்டும். முதலில் நாம் சரியாக சேசுவின் நாமத்தினுடைய அர்த்தத்தையும் அதனுடைய மதிப்பையும் புரிதல் அவசியம்.
இரண்டாவதாக, இந்த நாமத்தை பக்தியாக அடிக்கடி உச்சரிக்கும் பழக்கத்தை, ஏன் பல நூறு தடவை கூட தினமும் உச்சரிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். இது ஒரு சுமையாக இருப்பதற்குப் பதிலாக, நமக்கு மிகவும் ஆழமான சந்தோசமாகவும், ஆறுதலாகவும் இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சேசுவின் திருநாமம் ஒரு எல்லாம் வல்ல ஜெபமாக உள்ளது. நமது ஆண்டவரே நமக்கு இவ்வாறு அதிகார பூர்வமான வாக்குறுதி கொடுத்துள்ளார். அவரது நாமத்தில் பிதாவை எதுவெல்லாம் நாம் கேட்கிறோமோ, அதை நாம் பெறுவோம் என்று. தமது வார்த்தையை நிறைவேற்றுவதில் சர்வேசுவரன் ஒரு போதும் தவறுவதில்லை.
ஆகவே, நாம் “ சேசு “ என்று சொல்லும்போது, நம் ஜெபம் கேட்கப்படும் என்ற முழுமையான நம்பிக்கையோடு நமக்கு தேவையான எல்லாவற்றையும் சர்வேசுரனிடம் கேட்போமாக.
நன்றி : இயேசுவின் திருநாமத்தின் அதிசயங்கள், மாதா அப்போஸ்தலர்கள் சபை
குறிப்பு : இயேசு என்றும் சொல்லலாம். சேசு என்றும் சொல்லலாம்.
பகுதி-14 (உத்தரிக்கிற ஸ்தலம் )
“ என் மீது இரக்கமாயிருங்கள். நண்பர்களே, நீங்களாவது என் மீது இரக்கமாயிருங்கள். எனெனில் ஆண்டவரின் கரம் என்மீது பாரமாக உள்ளது “
இதுதான் உத்தரிக்கிற ஆன்மாக்கள் இப்பூவுலகில் வாழும் தங்களது சகோதர்களிடம் உதவியை வேண்டி மன்றாடும் உள்ளத்தை நொறுக்கும் செபமாக உள்ளது. அந்தோ! பலரும் இச்செபத்திற்கு செவிமடுப்பதில்லை.
சில பக்தியான கிறிஸ்தவர்களே, இரக்கமின்றி உத்தரிக்கிற ஆன்மாக்களை புறக்கனிப்பது புதிராக உள்ளது. இது இவர்கள் உத்தரிக்கிற ஸ்தலம் இருப்பது பற்றி ஏறக்குறைய நம்பிக்கையின்றிஇருப்பதையும் முழுமையாக இக்கருத்தில் தெளிவில்லாமல் இருப்பதையும் காட்டுகிறது.
உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக இவர்கள் பலி பூசை ஒப்புக்கொடுக்காமல், நாட்கள், வாரங்கள், ஏன் பல மாதங்கள் கூட கடந்து போகிறது. அரிதாக இவர்களுக்காக ஜெபிக்கிறார்கள். அரிதாகத்தான் நினைக்கின்றார்கள். பரிதாபமான உத்தரிப்பு நிலையில் ஆன்மாக்கள் அக்னிபடுக்கையில் சொல்லொண்ணா வாதைகளில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது இவர்கள் இங்கு பூரண நலத்துடன் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இந்த கடின மனப்பான்மை நிலைக்கு எது காரணம் ? அறியாமை, மதியீனம் மற்றும் அசட்டைத்தனம்தாம்.
உத்தரிக்கிற ஸ்தலம் பற்றி மக்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை. அங்கு கொடிய அக்னியில் ஆன்மாக்கள்படும் அகோரவனை குறித்தும், அவ்வேதனை பல ஆண்டுகளாக நீடிக்கிறது என்பதைக் குறித்தும் அறியாமல் இருக்கின்றார்கள். இதன்பலனாக உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்வதில் சிறிய அளவே அக்கறை எடுக்கின்றனர் அல்லது முற்றிலுமாகவே அக்கறை காட்ட தவறிவிடுகின்றனர்.
மிகவும் வேதனையான செயல் என்னவென்றால் ஏற்கனவே உத்தரிக்கிற ஸ்தலத்தில் இவர்களுடைய உதவியை மட்டுமே நம்மியிருக்கின்ற ஆன்மாக்களை முற்றிலுமாக புறக்கனித்துவிடுவதுதான்.
உத்தரிக்கிற ஸ்தலம் என்றால் என்ன?
உத்தரிப்பு ஸ்தலம் என்பது மரணத்திற்கு பின் ஏறக்குறைய அனைத்து ஆன்மாக்களுமே, பாவத்தின் நிமித்தம், வேதனை அனுபவிக்கும் பொருட்டு தள்ளப்படுகின்ற ஓர் அக்னிச் சிறையாகும்.
இதோ உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஸ்தலத்தைப்பற்றி திருச்சபையின் வேதபண்டிதர்கள் கூறும் சில உண்மைகள்.
“ வேதனையின் கொடுமை எவ்வளவு என்றால் ஒரு நிமிடம் இந்த பயங்கர நெருப்பில் இருப்பது நூறாண்டுகாலம் இருப்பதுபோல் இருக்கும் “
இறையியல் வல்லுநர்களின் இளவரசராக கருதப்படும் புனித தாமஸ் அக்வினாஸ், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள நெருப்பின் அனல், நரக நெருப்பின் அளவை ஒத்தே உள்ளது என்றும், இலேசாகப்பட்டால் கூட அது உலகத்தில் அனுபவிக்கக்கூடிய அனைத்து வேதனைகளையும்விடகொடியதாக உள்ளது என்றும் கூறுகிறார்.
மேலும் உத்தரிகிற ஸ்தலத்தைப்பற்றி வரும் தொடர்களில் பார்ப்போம். நாம் இப்போது உடனடியாக செய்ய வேண்டியது, நம்மிடையே வாழ்ந்து மரித்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக அடிக்கடி திருப்பலி பூசை ஒப்புக்கொடுப்பதும், திருப்பலியில் பங்கேற்பதும், அவர்களுக்காக ஜெபமாலை ஜெபிப்பதும், பரித்தியாகங்களைஒப்புக்கொடுப்பதுமேயாகும்.
நன்றி : “ என்னைப்படி அல்லது வருத்தப்படு “ நூல், ஆசிரியர் : சங்.பவுல் ஓ சலைவன் சுவாமி
பகுதி-15: ( ஜெபமாலை-3)
12-ம் நூற்றாண்டில் “ நன்மைக்கொரு கடவுள், தீமைக்கொரு கடவுள் உண்டென்றும் சேசு வெறும் மனிதனென்றும் இன்னும் பல தவறுகளைக்கொண்ட ஆல்பிஜென்ஸியன் என்ற பதிதம் பரவிய காலம். மக்களுடைய பாவங்களே “ ஆல்பிஜென்ஸியன் “ என்ற பதிதர்கள் மனந்திரும்பாதத்தற்கு காரணம் என்பதை உண்ரந்த அர்ச்.சாமி நாதர், ஒரு காட்டுக்குள் சென்று மூன்று நாட்கள் இடைவிடாமல் ஜெபித்து தேவ கோபத்தை அமர்த்துவதற்கு கடினமான தவ முயற்சிகளை செய்து மன்றாடினார். அவர் எவ்வளவிற்கு தன்னையே அடித்துக்கொண்டாரானால் ( சாட்டையால்) அவருடைய உடல் புண்ணாகி இறுதியில் மயக்கமுற்றார்.
அப்போது தேவ அன்னை மூன்று சம்மனசுக்களுடன் அவருக்குத்தோன்றி , “ சாமி நாதா, எந்த ஆயுதத்தைக் கொண்டு உலகை சீர்திருத்த தமத்திருத்துவம் விரும்புகிறது என்பதை அறிவாயா? “ என்று கேட்டார்கள். அதற்கு அவர் , “ ஓ என் அன்னையே, என்னைவிட உங்களுகே அது நன்றாக தெறியும். ஏனென்றால், உம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவிற்குப் பின் எங்கள் இரட்சன்ய கருவியாய் நீங்களல்லவா இருக்கின்றீர்கள் “ என்றார். அதற்கு மாதா : “ இந்த வகையான போராட்டத்தில் கபரியேல் தூதன் கூறிய மங்கள வார்த்தைதான் வெற்றிதரும் கருவியாக உள்ளது. புதிய ஏற்பாட்டின் அடித்தளக்கல் அதுவே. எனவே கடினப்பட்ட ஆன்மாக்களை அனுகி அவர்களை கடவுள் பக்கம் திருப்ப வேண்டுமானால் என் ஜெபமாலையை பிரசங்கி “ என்று கூறினார்கள்.
அர்ச்.சாமி நாதர் எழுந்தார். ஆறுதல் பெற்றார். அந்த பிரதேசத்திலுள்ள மக்களை மனந்திருப்பும் ஆவலால் பற்றியெரிந்தவராய் நேரே பட்டணத்திலுள்ள மேற்றிராசன ஆலயத்திற்கு சென்றார். உடனே கண்காணா தேவதூதர்கள் மக்களைக் கூட்டுவதற்காக ஆலய மணிகளை ஒலிக்கச் செய்தார்கள். மக்கள் திரண்டனர். ஆர்ச்.சாமி நாதர் பிரசிங்கிக்க ஆரம்பித்தார்.
அவர் பிரசங்கம் ஆரம்பித்ததும் ஒரு பயங்கர புயல் காற்று எழுப்பியது. பூமி குலுங்கியது.. கதிரவன் மங்கியது. பெரிய இடிமுழக்கமும் மின்னலும் கானப்பட்டன. எல்லோரும் மிகவும் அஞ்சினார்கள்.
அவ்வாலயத்தில் ஒரு முக்கிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் பெரிய படத்தைப் பார்த்த அம்மக்கள் முன்னைவிட அதிகமாகப் பயந்தார்கள். மாதாவின் அந்தப்படம் தன் கரத்தை வான் நோக்கி மும்முறை உயர்த்தி, அவர்கள் மனந்திருந்தி தேவ அன்னையின் பாதுகாப்பைத் தேடாவிட்டால் அவர்களை தண்டிக்குமாறு தேவ நீதியைக் அழைத்தது. இயற்கைக்கு மேலான இந்நிகழ்ச்சியின் மூலமாய் ஜெபமாலை என்னும் புதிய பக்தி முயற்சியை பரப்பவும், அதைப் பரவலாக அறியச் செய்யவும் கடவுள் சித்தங்க்கொண்டார்.
அர்ச்.சாமி நாதர் ஜெபமாலைப் பக்தியை ஏற்படுத்தியதிலிருந்து 1450-ம் ஆண்டில் முத்.ஆலன் ரோச் அதைப்புதுப்பித்த நாள் வரையிலும், ஜெபமாலை சேசு மரியாயின் சங்கீத மாலை என்றே அழைக்கப்பட்டது. அதன் காரணம் தாவீது அரசனின் சங்கீதங்கள் 150 இருப்பது போல ஜெபமாலையிலும் 150 அருள் நிறை மந்திரங்கள் உள்ளன. எழுத்தறிவில்லா பாமர மக்கள் தாவீதின் சங்கீதங்களை சொல்ல முடியாததால் அவர்களுக்கு அதே பலன்களை தரக்கூடியது ஜெபமாலை என்று திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜெபமாலையானது நம் சத்துருக்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நமது பாவத்தை நீக்கி நம்மைத் துப்புரவுபடுத்துகிறது. நமது ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் மிகுந்த பாதுகாப்பளிகிறது. ஏனென்றால் அது நமதாண்டவரின் மனித அவதாரம், பாடுகள் மற்றும் உயிர்பு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளை வாழ்த்தி மகிமைப்படுத்துகிறது.
“சகல வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தி “ யாக இருக்கிற நம் தேவமாதாவின் மிகச்சிறந்த பாதுகாப்பை நாம் பெறுகிறோம். துன்புறும் குழந்தையை ஆற்றித்தேற்றும் தாயைப்போல நம் தாயும் இவ்வுலகில் காட்சி கொடுத்தபோதெல்லாம் ஜெபமாலையைத் தினமும் சொல்லும்படி கேட்டார்கள். லூர்து நகரில் அர்ச். பெர்னதெத்திற்கு காட்சி கொடுத்த 18 முறையும் ஜெபமாலையை ஏந்தியபடி காட்சியளித்தார்கள். பாத்திமாவிலே நம் மாதா முதல் நாளிலேயே, “ ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லி வாருங்கள் “ என்று மூன்று சிறு குழந்தைகளிடம் கேட்டார்கள். ஒவ்வொரு காட்சியிலும் அதை மீண்டும் மீண்டும் கேட்டார்கள்.
ஜெபமாலையின் பலன்களையும், ஜெபமாலையின் மீது பக்தி உள்ளவர்களுக்கு அனுகூலமாக தேவமாதா அர்ச். சாமிநாதருக்கும், முத்.ஆலன் என்பவருக்கும் அளித்த 15 வாக்குறுதிகள் அடுத்துவரும் தொடர்களில் பார்ப்போம்.
எனவே ஒவ்வொரு நாளும் 53 மணியாவது ஜெபமாலை சொல்வோம். அந்த தெய்வீக ஜெபமாலையில் நம்மையும், பிறரையும் ஒப்புக்கொடுப்போம்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகாயமாதாப்பட்டணம், தூத்துக்குடி
பகுதி-17 : ( திருவிவிலியம்- பொது மொழிபெயற்பில் உள்ள பிரச்சனைகள்- பகுதி: 1 )
வேதாகமத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன் – புனித ஜெரோம்
“ மறைநூலில் உள்ளதெல்லாம் கடவுளால் ஏவப்பட்டுள்ளது. போதிக்கவும், கண்டிக்கவும், சீர்திருத்தவும், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வில் மக்களைப் பயிற்றவும் பயன்படும் ” ( 2 தீமோ.3:16 )
“ நான் நடக்க வேண்டிய பாதையைக் காட்டும் விளக்கு உம் வார்த்தை ; செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே “ ( சங்.118:105)
இத்தகு பெருமைமிகு வேத வசனங்கள் மக்களின் வாசிப்பிற்கு வழங்கப்படும்போது உண்மையானதாக, சத்தியத்தை சொல்வதாக அதிகாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும். ஒரு வேத புத்தகம் பல்வேறு அர்த்தங்களை கொடுக்கும் பல்வேறு மொழி பெயற்புகளைக் கொண்டதாக இருக்கும் என்றால், எதை உண்மை என்று நம்புவது? எது உண்மையான அர்த்தம் என்று எடுத்துக்கொள்வது ? நிச்சயமாக ஒரு மொழிபெயற்பிலிருந்து மற்றொன்று மாறுபடும். அப்போது அர்த்தங்களும் மாறுபடும்.
வேதபுத்தகம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. இதில் கத்தொலிக்கர்களின் நிலை பரிதாபத்திற்குரியது.
குட்நியூஸ் பைபிள் என்று ஓர் ஆங்கிலப்பதிப்பை பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது பைபிளே அல்ல; பைபிளின் பொழிப்புரை மட்டுமே என்று அந்த பைபிளின் முன்னுரையிலேயே இருப்பதை எத்தனைபேர் அறிவார்கள் ?
இன்று தமிழ் பைபிள் என்று சொல்லி “ திருவிவிலியத்தை மார்போடு அனைத்துக்கொண்டு பைபிள் பக்தர்களாகச்செல்லும் கத்தொலிக்கரில் 99 சதவீதத்தினர், அது கத்தொலிக்கப் பைபிள் என்று நினைக்கிறார்கள். இதில் ஆயர்களும், குருக்களும் அடக்கம். ஆனால் அந்த பைபிளே தன் நெற்றியில், “ நான் ஒரு பொது மொழி பெயற்பு மட்டும்தான் என்று எழுதிக்கொண்டிருப்பதை எத்தனை பேர் அறிவர்?
பொது மொழிபெயற்பு என்றால் அது யாரோ இரு குழுவினர்களுக்கு பொதுவானது என்று பொருள். அந்த விவிலியத்தின் முன்னுரையின் முதல் பத்தியிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கத்தொலிக்கரும், பிரிந்த சபையினரும் சேர்த்து செய்த கலவைதான் பொதுவிவிலியம் என்று அதுவே சொல்கிறது.
இதற்கு சாட்சியாக 1995-ல், திண்டிவனம் TNBCLC – யால் வெளியிடப்பட்ட திருவிவிலியம் பொதுமொழிபெயற்பு நினைவு மலரில் தமிழக ஆயர்கள், குருக்கள் மட்டுமின்றி பிரிவினை சபையை சேர்ந்த பலர் வாழ்த்துமடல் எழுதியுள்ளார்கள்.
சரி….பொதுமொழிபெயற்பு கத்தொலிக்கரின் கையில் உள்ளது. ஆனால் பிரிந்த சபையினர் இதைப் பயன்படுத்துவது இல்லையே! ஏன்?. ஆக ஏமாந்தவர்கள் கத்தொலிக்கர்கள் மட்டும்தானே? கத்தொலிக்கர்கள் தலையில்தானே யாரும் மிளகாய் அரைக்க முடியும்.
பிரிந்தவர்கள் அவர்கள் தங்கள் பழைய பைபிளை பயன்படுத்துகிறார்கள். கத்தொலிக்கர் பொது மொழி பெயற்பை பயன்படுத்துகிறார்கள். அப்படியானால் இடையில் ஏதோ ஒன்று கானாமல் போய்விட்டதே அது என்ன?. அதுதான் அனைத்து கத்தொலிக்கர்கர்களும் முன்பு பயன்படுத்திய திருச்சபையின் அதிகாரப்பூர்வ பரிசுத்த வேதாகமம். பொது மொழிபெயற்பு வந்து கத்தொலிக்கரின் பரிசுத்த வேதாகமத்தைக் கொலை செய்திருக்கிறது. இதுவே அதன் சாதனை.
சரி பொதுமொழிபெயற்பில் உள்ள தப்பரைகள் சிலவற்றைக் காணலாம்
.
ஆண்டவர் இயேசுவின் கன்னிமைப் பிறப்பைக் குறித்த தீர்க்க தரிசனங்களுள் மிகப் பிரபலமானது இசையாஸ் 7:14,
“ ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்; இதோ கன்னிப்பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் ; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்”
இதில் கன்னிப்பெண் என்னும் வேதாகம வார்த்தை திருவிவிலியத்தில் இளம்பெண் என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றப்பட்டிருப்பது கூட அநேகர்களுக்குத் தெறியாது. கத்தொலிக்க மற்றும் பிரிந்த சபையாரின் மொழிபெயற்புகள் அனைத்திலிலும் கன்னிகை என்றே இருக்கிறது. யார் இளம்பெண் என்று கண்டுபிடித்தார்கள் என்று தெறியவில்லை. இவர்களின் உள் நோக்கம் ஆண்டவரின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பதுதான்.
இவர்களுக்கு ஓர் அடிப்படை உண்மை கூடவா தெறியாது ? இளம்பெண் கருத்தாங்குவது எங்கும் நடக்கும் செயல். இதில் கடவுளின் அற்புத அடையாளம் எங்குள்ளது. ஆனால் கன்னியானவள் கருத்தாங்குவது கடவுளால் மட்டுமே முடிந்த செயல். எனவே ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அற்புத அடையாளம் தருவார் என்றால், அது கன்னியானவள் கருத்தாங்கி என்றுதானே இருக்க வேண்டும்.
மேலும் இதுபற்றி அர்ச்.மத்தேயு தமது சுவிசேசத்தில் 1:26 (பொதுமொழிபெயற்பு) வசனத்தில் மாதாவை கன்னிகை என்று குறிப்பிடுகிறார். ஒரு நல்ல கிறிஸ்தவன் மத்தேயு எழுதியுள்ளதை நம்பவேண்டுமா? அல்லது இசையாசை நம்பவேண்டுமா? ஒரே பைபிளில் ஏன் இந்த முரண்பாடு.
எனவே புரிந்துகொள்ளுங்கள் பொது மொழிபெயற்பில் உள்ள பிரச்சனைகளை.
மேலும் அர்ச்.லூக்காஸ் தமது சுவிசேசம் 1:42 –ல் (பரிசுத்த வேதாகமத்தில்) மாதாவின் திருவயிற்றில் உள்ள ஆண்டவரை “ உம் வயிற்றின் கனி “ என்று குறிப்பிடுகிறார். ஆனால் பொதுமொழிபெயற்போ (திருவிவிலியம்) வயிற்றில் உள்ள குழந்தை என்று குறிப்பிடுகின்றது. லூக்காஸ் கனி என்றுதான் எழுதினாரே தவிர குழந்தை என்று குறிப்பிடவில்லை. இதற்கு ஒரு காரணம் உண்டு. ஒரு கனியைக்கொடுத்து, ஏவாள் உலகைக்கெடுத்தாள்; மாதாவோ தம் திருவயிற்றின் கனியைக் கொடுத்து உலகைக் காக்கிறார்கள் என்று பொருள். திருவிவிலியம் இந்த அற்புதமான விசுவாசத்தை அறிந்துகொள்ள முடியாதபடி செய்துவிட்டது.
ஆதியாகமம் 3:15 –ல் மாதாவை ஓரம் கட்டியது திருவிவிலியம் ( பொது மொழிபெயற்பு). வேதாகமத்தில் மாதாவைக் குறித்து “அவள் உன் தலையை நசுக்குவாள் “என்றுதான் இருக்கிறது. இசையாஸ் 7:14 இல் மாதாவின் கன்னிமைக்கு பங்கம். லூக்காஸ் 1:28 –ல் பாரம்பரிய போதனையை மாற்றி மாதாவின் அமல உற்பவத்தை மறுத்து ஜெபமாலை பக்தியை பாழாக்குகிறது. “ அருள் நிறைந்தவளே வாழ்க ! “ “ அருள் மிகப்பெற்றவளே “ ஆக்கப்பட்டாள்.
லூக்காஸ் 1:42-ல் புதிய ஏவாள் மாதா என்னும் வேத சத்தியம் மக்களுக்குப் போய்ச்சேராமல் தடுக்கிறது திருவிவிலியம்.
பகுதி-18 : ( திருவிவிலியம்- பொது மொழிபெயற்பில் உள்ள பிரச்சனைகள்- பகுதி: 2 )
மாதாவை யாருக்குப் பிடிக்காது? ஆதி 3:15 சொல்கிறது, மாதாவுக்கும் சாத்தானுக்கும் பகை என்று. அப்படியானால் திருவிவிலியம் என்பது என்ன ?
மேலும் சுபாவத்திற்கு மேலான எல்லாக் காரியங்களையும், விசேசமாக ஆத்துமம், நரகம் என்பன போன்ற சத்தியங்களையும் திருவிவிலியம் (பொதுமொழிபெயற்பு) விசுவாசிகளிடமிருந்து மறைத்துவிட முயல்கிறது.
மத்தேயு 16:26 “ ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டலும் அவன் ஆன்மாவிற்கு கேடு விளைந்தால் அவனுக்கு வரும் பயன் என்ன ? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக்கொடுப்பான் ? என்ற இந்த தெய்வீக வசனம், புனித பிரான்சிஸ் சவேரியார் மனமாற காரணமாக இருந்த வசனம் திருவிவிலியத்தில் “ தன் வாழ்வை இழப்பாராகில் “ என்று மாற்றப்பட்டுள்ளது.
மத்தேயு 16:18 –வேதாகமத்தில்“ உன் பெயர் பாறை. இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்; நரகத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா,”
என்பது திருவிலியத்தில், “ உன் பெயர் பேதுரு. இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தில் வாசல்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா என்று மாற்றப்பட்டுள்ளது.
உதாரணமாக ஆதி 1:2 “ பாதாளத்தின் முகத்தே இருள் பரவியிருந்தது ” என்பதை “ ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது “ என்று திருவிவிலியத்தில் மேலோட்டமாக சொல்கிறது.
1995-ல் மாதாவை ஓரங்கட்டி புழக்கத்திற்கு வந்த திருவிவிலியம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் பல படிகள் முன்னேறி, ஆண்டவரை ஓரங்கட்டுவதற்காக “ திருவிவிலியம்- விளக்கவுரைகளுடன் ” என்று ஒரு பதிப்பு வெளியாகி விசுவாசத்தைக் கொல்லும் நஞ்சாக இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதன் அடிக்குறிப்பில் செங்கடல் பிளந்தததையும், இயேசு 5 அப்பங்களை 5000 பேருக்கு பலுகிக்கொடுத்த அற்புதம், கானாவூர் திராட்சை ரசபுதுமை போன்றவகளை இல்லை என்பது போல் விவரிக்கிறது.
அதே சமையத்தில் அடிக்குறிப்பிற்கு மேலே உள்ள இறைவார்த்தையை வாசித்தால் இயேசு செய்த புதுமை தெளிவாக விளக்குகிறது. அப்படி வேதாகமத்திலிலேயே தெளிவு இருக்க எதற்க்காக யாரோ விளக்கவுரை எழுத வேண்டும். அதை பெரியவர்கள் யாரோ பாராட்ட வேண்டும். ஏன் ? ஏன் ? இவையெல்லாம் யாருடைய செயலாக இருக்க வேண்டும்? இருக்க முடியும்? மேய்ப்பர்களின் சிலரின் அறியாமையை பயன்படுத்தி சாத்தான் செய்யும் செயலன்றி வேறேது ?
நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை
இது போன்ற செயல்களுக்கு நண்பர்களே உங்களது ஆதரவை 0.00001% கூட கொடுக்காதீர்கள் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். தீமைகளுக்கு துணைபோனால் நாமும் ஆண்டவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.
திருவிலிய பொதுமொழி பெயற்பில் உள்ள தீமைகளை கண்டுபிடிக்க நமக்கே இவ்வளவு சிரமங்கள் இருக்கிறதே, அப்படியென்றால் வருங்கால தலைமுறை பைபிளை எப்படி படிப்பார்கள் ? எப்படி புரிந்து கொள்வார்கள் ?. இப்படித்தான் நிகழும் முதலில் மாதாவை மறுதலிப்பார்கள்; பின்பு இயேசுவை மறுதலிப்பார்கள். இதுதானே நடக்கும். இது சாத்தானுக்கு அல்லவா வெற்றி கொடுக்கும்.
யார் வெற்றி பெற வேண்டும் ? தேவாதி தேவன் அல்லவா வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெற வேண்டுமானால் சாத்தானை எதிர்த்து போரிடும் அவருடைய பிரதிநிதியாகிய நம்முடைய பரிசுத்த தாயல்லவா வெற்றி பெற வேண்டும். நம் மாதா வெற்றி பெற நம்முடைய பங்களிப்பு என்ன? நம் பணி என்ன ? சேவையோ, போராட்டமோ அது எப்படி நடக்க வேண்டும் ?
சிந்திப்போம் ! உடனடியாக செயல்படுவோம். பொதுமொழிபெயற்பை உதறித்தள்ளுவோம். நம் பாரம்பரிய பரிசுத்த வேதாகமத்தை கையில் எடுப்போம். மற்றவரையும் எடுக்க வைப்போம்.பிறருக்கும் பொதுமொழிபெயற்பில் உள்ள தீமைகளை எடுத்துரைப்போம்.
சரி அப்படியானால் நம் கத்தொலிக்க வேதாகமம் எங்கு கிடைக்கும்?
திரு சுந்தர், கிரேஸ் ஹாஸ்பிட்டல், திருவண்ணாமலை, தொலைபேசி எண்: 07418271814, 09626518446
உண்மையான இறைவார்த்தைகள் அடங்கிய பரிசுத்த வேதாகமத்தை நாமும் வாங்குவோம், பிறரையும் வாங்க வைப்போம்.
இயேசுவுக்கே புகழ் ! இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க !
பகுதி-19 : (உத்தரிக்கிற ஸ்தலம் -2 )
போலந்து நாட்டு இளவரசர் ஒருவர் சில அரசியல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு பிரான்சு தேசத்தில் அழகிய கோட்டை உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கி வசித்து வந்தார்.
இச்சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் துரதிஷ்ட்டவசமாக, தனது இளமைக்கால விசுவாசத்தை இழந்து, கடவுளுக்கு விரோதமாகவும், இறப்பிற்குப் பின் வாழ்க்கை இல்லை எனவும் புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் மாலையில் தனது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்த போது, மனமுடைந்து அழுதுகொண்டிருந்த ஒரு ஏழைப் பெண்மணியை கண்டு அவருடைய துக்கத்திற்காண காரணத்தை விசாரித்தார். அப்பெண், “ இளவரசரே, நான் இரண்டு நாட்களுக்கு முன் மரித்துப்போன உம்முடைய ஊழியரான ஜோன் மேரி என்பவரது மனைவி. அவர் எனக்கு நல்ல கணவராகவும், தங்களுக்கு உண்மையுள்ள ஊழியராகவும் இருந்தார். அவர் வெகுநாட்கள் உடல் நலமின்றி இருந்ததால் எங்களது சேமிப்பு முழுவதையும் அவரது சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டேன்.தற்போது அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை “ என்றார்.
அவளது துயரத்தைக் கேட்டு மனமிரங்கிய இளவரசர் ஆறுதலாக சில வார்த்தைகள் கூறிவிட்டு, மறுவாழ்வு பற்றி நம்பிக்கையின்றி இருந்தாலும், அவளது கணவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலிகள் ஒப்புக்கொடுக்க சில தங்க நாணயங்களை வழங்கினார்.
சிலகாலம் கழித்து, மற்றுமொரு மாலை வேளையில் தமது வாசக அறையில், இளவரசர் ஆர்வமாக புத்தகம் எழுதிக்கொண்டிருந்த போது அறையின் கதவை அவசரமாக யாரோ தட்டும் நுண்ணிய சத்தம் கேட்டு, தலையை நிமிர்த்தாமலேயே. உள்ளே வரப்பணித்தார்.
அந்த நபர் மெல்ல கதவைத்திறந்து உள்ளே இளவரசரின் முன் நின்றார். நிமிர்ந்து பார்த்த இளவரசர், புன்முறுவலோடு தம்மை நோக்கிக் கொண்டிருந்த ஜோன் மேரியைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
அவர், “ இளவரசே, எனது ஆன்மாவிற்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கும் பொருட்டு என் மனைவிக்கு நீர் செய்த உதவிக்கு நன்றி சொல்லிட்டு போகவே வந்தேன். என்னை மீட்ட கிறிஸ்துவின் திருரத்தத்திற்கு நன்றி. நீர் செய்த தாராள உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு வர கடவுள் எனக்கு அனுமதி அளித்தார் “ என்றார். தொடர்ந்து உருக்கமாக, “ கடவுள் ஒருவர் உள்ளார். மறுவாழ்வு உண்டு, மோட்சம் உள்ளது, நரகமும் உள்ளது “
எனக்கூறிவிட்டு மறைந்தார். இளவரசர் முழங்காலில் விழுந்து கடவுளிடம் மனமுருக மன்றாட ஆரம்பித்தார்.
இது போன்று நிறைய புனிதர்களின் வாழ்வில் உத்தரிக்கும் ஆன்மாக்களைக் நேரிடையாகக் கண்டதுண்டு தந்தை பியோ உட்பட. இதோ புனித. தாமஸ் அக்வினாஸ் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.
புனித தாமஸ் அக்வினாஸ்க்கு மாரோற்றா ( Marotta) என்ற சகோதரி உண்டு. அவள் 1253-ல் காப்புவா நகரில் சாந்தா மரியா என்ற கன்னியர் மடத்தில் தலைவியாக இருக்கும்போது மரணமடைந்தாள். அச்சமையத்தில் அவரது தமயனான அர்ச்.தாமஸ் பாரீஸ் நகரில் இருந்தார். ஒரு நாள் இரவில் அவருக்கு தன்னைக் காண்பித்த சகோதரி மாரோற்றோ, தாம் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருப்பதாகவும், தாம் விடுவிக்கப்பட தமக்கு சில திவ்ய பலி பூசைகள் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமது சகோதரியின் ஆன்ம நிலையைக்கண்டு வருந்திய புனித தாமஸ் தமது மாணவர்களையும் தமது இறந்துபோன சகோதரிக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். சில மாதங்களுக்குப்பின் அர்ச்.தாமஸ் ரோமையில் இருக்கும்போது அவரது சகோதரியின் ஆன்மா மீண்டும் காணப்பட்டு தாம் இப்போது மோட்சத்தில் இருப்பதாகவும், அவர் ஒப்புக்கொடுத்த திருப்பலி பூசைகளுக்காகவும், ஜெபங்களுக்காகவும் நன்றி கூறியது..
மிகுந்த மகிமை பிரகாசத்தோடு தோன்றிய சகோதரியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அர்ச்.தாமஸ் கடவுள் முன்பாக தனது ஆன்ம நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு மாரோற்றோ, “ நீர் மிகுந்த மகிழ்ச்சியான நிலையில் இருக்கிறீர்கள்.நீங்கள் விரைவில் எங்களிடம் வந்து சேர்வீர். ஆனால் எங்களைவிட மிக உன்னத மகிமை உமக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது “ என்று கூறினாள்.
பின்னர் அர்ச். தாமஸ் இறந்து போன தமது இரண்டு சகோதரிகளின் நிலை என்ன என்று கேட்க, அதற்கு, “ லாண்டுல்ஃபோ (Landulfo) உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கிறாள். ரெஜின்நால்டோ ( Reginaldo) மோட்சத்தில் இருக்கிறார் என்று கூறி மறைந்தாள்.
அன்பான நண்பர்களே ! மறித்த உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாரும் நினையாத ஆன்மாக்களை மறவாதீர்கள். அவர்களை நினைக்க அவர்களுக்காய் ஜெப தவங்கள் செய்ய நவம்பர் மாதம் மட்டுமல்ல வருடம் முழுவதும் அடிக்கடி ஜெபதவங்கள் செய்து திருப்பலி நிறைவேற்றுங்கள்.
நன்றி உள்ள உத்தரிக்கும் ஆன்மாக்கள் உங்களுக்காக மோட்சத்தில் எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுவார்கள். அதனால் உங்களுக்கும் ஞான, ஆன்ம பலன் நிறைவாக கிடைக்கும்.
நன்றி :“ என்னைப்படி அல்லது வருத்தப்படு “ நூல், ஆசிரியர் : சங்.பவுல் ஓ சலைவன் சுவாமி மற்றும் மாதா பரிகார மலர்
மரியே வாழ்க!
பகுதி-20 ( பொதுநிலையினருக்கு அழைப்பு, துறவறத்தாருக்கு வேண்டுகோள்)
அன்பான நண்பர்களே ! வாசகர்களே ! நாங்கள் சமீபகாலமாக வெளியிடும் போஸ்ட்களை பார்த்திருப்பீர்கள். பாத்திமா செய்திகள், திருப்பலிப்பூசையின் அற்புதங்கள், என்னைப்படி அல்லது வருத்தப்படு மற்றும் மாதா பரிகார மலரிலிருந்து எடுக்கப்பட்ட பல பகுதிகளைப் பார்த்திருப்பீர்கள். இப்போதைய கத்தொலிக்க்க திருச்சபையிடமும், கத்தொலிக்க கிறிஸ்தவர்களிடமும் மாதாவின் எதிர்பார்ப்பும், வேண்டுதலும் அதுவே ; தூய தமதிருத்துவத்தின், மூவொரு கடவுளின் எதிர்ப்பார்பும் அதுவே.
அன்று அன்னை, சலேத் காட்சியில் அழுதுகொண்டு கேட்டதும், பாத்திமாக் காட்சியில் மிகவருத்தத்துடன் கேட்டதையும் நிறைவேற்றுவதே மாதா பிள்ளைகள் ஒவ்வொருவரின் ( பொது நிலையினர் மற்றும் துறவறத்தோர் ) கடமையாகும். அப்படி செய்தால் மூவொரு கடவுளின் கோபாக்கினையிலிருந்து இந்த உலகம் தப்பும். ஏற்கனவே அங்கொன்றும், இங்கொன்றுமாக அழிவுகள் ஆரம்பாமாகிவிட்டன. அது மேலும் தொடராமல் தடுப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின், கிறிஸ்தவளின் கடமை.
இப்போதுதெல்லாம் நிறைய இடங்களில் சாத்தானின் சூழ்ச்சிகள் வெற்றி பெறுகின்றன. கத்தொலிக்கத்தை பலவீனப்படுத்தும் அவன் வெற்றியே இதற்கு காரணம். அவன் வெற்றி பெறக்காரணம் நம் அறியாமை.
அவம் சூழ்ச்சிகள், கன்னிகள் எங்கு, எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளமலோ அல்லது கண்டும் காணாமலோ இருப்பதுதான் காரணம்.
சாத்தானின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட நிறைய ஜெபங்கள் தவங்கள், பரிகாரங்கள் தேவை. அதைப்போல சாத்தானின் சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டால்தான் அதை முறியடிக்க முடியும். அதைக்கண்டுபிடிப்பதற்கு நமக்கு சில புத்தங்கள், மாத இதழ்கள் தேவைப்படுகின்றன.
பாத்திமா செய்திகள், சலேத் மாதா காட்சிகள் போன்ற புத்தகங்கள் எங்கு கிடைத்தாலும் வாங்கி படியுங்கள். படிப்பதோடு நிறுத்தாமல் உடனடியாக ஜெபிக்க ஆரம்பித்துவிடுங்கள். கிறிஸ்தவர்கள் விமர்சகர்கள் அல்ல. கேலி பேசுபவர்கள் அல்ல .மாறாக ஜெபிப்பவர்கள் இதைத்தான் இயேசுவின் திவ்ய இருதயமும், மாதாவின் மாசில்லா இருதயமும் நம்மிடம் எதிர்பார்க்கின்றன.
இவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதும் அதற்காக பாடுபடுவதும் கத்தொலிக்த்தின், கிறிஸ்தவர்களின் கடமை.
முதலில் நல்ல ஞான புத்தகங்களை வாசிப்போம். அதன் கருத்துக்களை மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லுவோம். இதன் மூலமாக சிறிய நற்செய்திப்பணி ஆற்றுவோம். ஞானப் புத்தங்கள் வாங்க விரும்பினால் கீழே கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
(கடவுள்- மனிதன் காவியம் (தமிழ்), மேலே குறிப்பிட்ட புத்தங்கள் முதல் தினசரி ஜெபப்புத்தகங்கள் வரை கிடைக்கும்; தபாலிலும் கிடைக்கும், மாதா பரிகார மலர் ஒவ்வொரு கத்தொலிக்கரும் படிக்க வேண்டிய இதழ்)
முகவரி :
“ மாதா அப்போஸ்தலர்கள் சபை “
ரோஸா மிஸ்திக்கா
9A/521-1, சகாயமாதாபட்டணம்,
2-வது தெரு, வி,வி.டி மேல் நிலைப்பள்ளி எதிரில்,
தூத்துக்குடி-628 002
தொலைபேசி : 09487609983
மேலும் விவரங்கள் தேவையென்றால் இந்த எண்ணையும் தொடர்புகொள்ளலாம், 07032740225
மாதாவின் மாசில்லா இருதயம் வெற்றி பெற உழைப்போம்; சாத்தானின் சதிகள் முறியடிக்கப்பட ஜெபமாலை சொல்வோம். அதன் மூலம் ஆண்டவர் இயேசுவின் ராஜ்ஜியம் உலகம் எங்கிலும் நிறுவப்படட்டும்.
இயேசுவுக்கே புகழ் ! இயேசுவுக்கே நன்றி ! மரியே வாழ்க !
பகுதி-21 (பரிகாரப் பக்தியின் சாரம்)
பரிகாரம் என்பது இழந்த ஒன்றுக்கு நஷ்ட ஈடு செய்வதாகும். பக்தி என்பது பற்று அல்லது அன்பு ஆகும். நிறைய பக்தி முயற்சிகள் இருக்கின்றன. அவைகளெல்லாம் ஒரு கருத்து நிறைவேற அல்லது உதவி பெறுவதற்காக மன்றாட்டுடன் செய்யப்படுகின்றன.
ஆனால் பரிகாரப் பக்தி என்பது பெற்றுக்கொள்வதில் அல்ல, கொடுப்பதில்தான் அடங்கியிருக்கிறது. யாருக்கு கொடுப்பதில்? கடவுளுக்கு கொடுப்பதில்!! கடவுளுக்கு என்ன குறை? உண்மைதான், கடவுள் இயல்பிலேயே நிறைவுடையவராய் இருக்கிறார். கடவுள் அன்பாயிருக்கிறார். அந்த அன்பிலே மனிதனை சிருஷ்ட்டித்தார். மனிதனின் அன்பை எதிர்பார்க்கிறார்.
ஆனால் மனிதனோ கடவுளுக்கெதிராக பாவம் செய்தான். இதனால் கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள அன்பில் விரிசல் ஏற்பட்டது. மனிதனுக்காக எல்லாவற்றையும் கொடுத்த கடவுளுக்கு மனிதன் காட்டவேண்டிய பிரதி அன்பு தடைபட்டுப்போனது. இதனால் தமரித்துவ ஆசனத்தைச் சுற்றி ஏமாற்றம் சூழ்ந்துவிட்டது.
கடவுளுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை நீக்கி மனிதனை கடவுளுடன் மறு உறுவாக்க வேண்டும். அதாவது பாவத்திற்கு பரிகாரம் செய்யப்பட வேண்டும். இதைச் செய்யவே இயேசு நாதர் சுவாமி உலகிற்கு வந்தார். தம் திருமாதாவின் உதரத்தில் கருவுற்றது முதல் சிலுவையில் தன் கடைசி மூச்சு வரை தன்னையே பாவப்பரிகாரப் பலியாக்க கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். பாவத்தினால் அடைபட்டிருந்த மோட்ச வாசலைத் திறந்து வைத்தார்.
ஆனால் மனிதன் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இப்போது உலகில் நடக்கும் பாவத்தைப் பற்றி யாருக்கும் சொல்லித்தெறிய அவசியமில்லை. இத்தகைய பாவங்களால் மனிதன் கடவுளைப் பகைக்கிறான், நிந்திக்கிறான், கடவுளுக்குத் துரோகம் செய்கிறான். இவற்றிற்கு பரிகாரம் செய்து கடவுளை ஆற்றுப்படுத்துதலே பரிகாரப்பக்தி. பாத்திமாவிலே மாதா கொடுத்த காட்சிகளின் உட்பொருளும் இதுதான். இதுதான் மற்ற பக்திக்கும், பரிகார பக்திக்கும் உள்ள தனித்தன்மை. பரிகார பக்தி தன்னை முழுவதும் கடவுளுக்கு கொடுக்கிறது. அற்ப சுய நலமும் அற்றது. முற்றிலும் கடவுளையே சார்ந்தது.
பரிகார பக்தி ஜெபங்களைச் சொல்வதிலும், ஜெபமாலை ஜெபிப்பதிலும், பிரசங்கம் கேட்பதிலும், பிரசங்கம், பவனிகள் நடத்துவதில் கூட அடங்கியிருக்கவில்லை. அது நேசிப்பதிலும், சேசு மரிய இருதயங்களுடஇரக்கமான அன்புடன் அந்நியோன்யத்தில் நெருக்கமாக இனைந்திருப்பதில் அடங்கியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக மெக்சிகோ அருகிலுள்ள ஒரு குன்றில் யூவான் தீகோ என்ற 55 வயது மேற்கிந்திய புதுக்கிறிஸ்தவனுக்கு அவருடன் அந்நியோன்மயாக உரையாடினார்கள்.
மாதா : “ கேள் என் மகனே, நான் அருமையாய் நேசிக்கிற என் மகன்களிளெல்லாம் மிகச் சின்ன மகனே !....உன் இருதயம் இனி கலங்கக வேண்டாம். இங்கே உன் அருகில் இருப்பது யார்? உன் தாயல்லவா ? நீ என் அன்பான நிழலடியின் பாதுகாப்பிற்குள் இல்லையா? நீ என் நெஞ்சுற்குள் பத்திரமாக நீ இருக்கிறாயல்லவா ? உனக்கு என்ன தேவையுள்ளது ? “ இப்படிக் கனிந்த மொழிகள்.
யூவான் : என் மாதாவே ! என் எஜமாட்டியே என் பிள்ளாய், என் மகள்களுக்குள் மிகச்சின்ன மகளே ! நான் உன்னை வருத்தப்படுத்திகிறேனா? நீ நன்றாக இருக்கிறாயா அம்மா ? மகிழ்ச்சியாய் இருக்கிறாயா அம்மா? நீ நன்கு உறங்கினாயா ? என் சின்ன மகளே ! இன்று காலை நலமே இருக்கிறாயா ? என் மாதாவே, இப்படிப்பட்ட அந்நியோன்ய அன்பே பரிகாரப்பக்தி ஆகும்.
ஒரு தந்தைக்கும் தாய்க்கும் மகிழ்ச்சியாயிருப்பது வீடா ? வீட்டிலுள்ள பொருட்களா ? அல்லது நிலபுலங்களா? அல்ல அவர்கள் குழந்தைகளே, அவர்களுக்கு மகிழ்ச்சியாகும். அவர்களே வீட்டில் செல்வமாகும். அதைப்போல் நேசிப்பதில் யாரையும் முந்த விடாத சேசுவுக்கும், மாதாவுக்கும் நாம்தான் மகிழ்ச்சியாயிருக்கிறோம். அவர்கள் நமக்காக பட்டு அனுபவித்த பாடுகளே அதற்கு அத்தாட்சி. எனவே அவர்கள் மீது கனிந்த அன்பு கொள்வது நியாயமல்லவா ?
கனிந்த அன்போடு அவர்களை நாம் நேசிப்போமென்றால் நாம் நம்மைப் பற்றிய எல்லாக் கவலைகளையும் மறந்து விடுவோம்.
அவர்களிடம் நாம் அனைத்தையும் கொடுத்துவிடுவோம். அவர்களுக்கு என்ன தேவையாயிருக்கிறதோ அதை நிறைவு செய்யப்புகுவோம். சேசு ஒரு அர்ச்சிஷ்ட்டவருக்கு இப்படிக் கூறியுள்ளார் : “ என்னை நினை, உன்னை நினைப்பேன், “ இதற்கு அர்த்தம் என்னவென்றால் சேசுவை நாம் கவனித்துக்கொண்டால் அவர் நம்மை கவனித்துக்கொள்வார். நாம் அவருடைய தேவைகளை நிறைவு செய்தால் அவர் நம்முடைய தேவைகளை நிறைவு செய்வார்.
பரிகாரம் செய்து கடவுளுக்கும் அவரின் திருத்தாய்க்கும் ஆறுதளிக்க விரும்புகிற நாம், நம்மைப் பற்றிய எல்லாக் கவலைகளையும் மறக்க வேண்டும். அதை அவர்களிடமே கொடுக்க வேண்டும். உலக பாவங்களால் நொந்து போயிருக்கிற அவர்களுக்கு ஆறுதலளித்து அவர்களின் வேதனையை போக்க முன் வரவேண்டும். அதற்கு அவர்கள் மீது கனிந்த அன்பு கொள்ள வேண்டும்.
இயேசுவுக்கே புகழ் !! இயேசுவுக்கே நன்றி !! மரியே வாழ்க !!