- தேவன்னை
- துன்ப முடிச்சுகளை அகற்றும் மாதா
வரலாறு
அருட்திரு ஜோகன் (Johann Melchior Georg Schmittdner ) தனது பெற்றோர் விவாகரத்து செய்யவிருப்பதை அறிந்து , மரியன்னையிடம் குடும்ப சமாதானத்திற்காக வேண்டினார் . அன்னையிடம் அவர் வேண்டியது நிறைவேறவே , தனது துன்ப முடிச்சை அகற்றிய அன்னையின் திரு உருவப்படத்தை வரைந்தார் . 1700 ஆம் ஆண்டு முதல்( Perlack, Augsburg, Germany) ஜெர்மனியில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது இந்தப் படம் . ஆயராக இருந்து 202ல் வேத சாட்சியாக மரித்த புனித ஐரேனியுஸ் என்னும் புனிதர் , புனித பவுல் கிறிஸ்துவை புதிய ஆதாமுக்கு உருவகப்படுத்தியது போல , மரியன்னையை புதிய ஏவாளுக்கு உருவகப்படுத்தினார் . கீழ்ப்படியாமையினால் ஏவாள் மனித குலத்திற்கு சாபம் என்னும் துன்ப முடிச்சை கொணர்ந்தாள். அன்னையோ , தனது கீழ்ப்படிதலின் மூலம் அத்துன்ப முடிச்சை அகற்றினார் . இதன் அடிப்படையிலேயே அன்னையின் இந்தப் படம் வரையப்பட்டது .
இந்தத் துன்ப முடிச்சுகள் தான் என்ன ?
நமது வாழ்வில் தீர்வு காண இயலாத பிரச்சனைகளையும் போராட்டங்களையும் நாம் சந்திக்கிறோம் .
குடும்பங்களிலே சமாதானமின்மை ,பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே கருத்து வேறுபாடு ,அவமரியாதை , வன்முறை , கணவன் மனைவிக்கிடையே உள்மனக் காயங்கள் ,குடும்பங்களிலே சந்தோசமும் சமாதானமும் இல்லாத நிலை . மட்டுமல்லாது குடும்பங்களிலே பிரிவினை , கணவன் மனைவியிடையே மோதல் , குடி மற்றும் போதைக்கு அடிமை ,வியாதி , வருத்தங்கள் , இறைப்பற்றின்மை ,கருக்கலைப்பு , மன அழுத்தம் , வேலையின்மை , பயம் , தனிமை எத்தனை எத்தனை துன்ப முடிச்சுகள் !! நமது ஆத்துமாவை அழுத்தி , மன அமைதியைக் குலைத்து , நம்மை இறைவனிடமிருந்து அவை பிரிக்கின்றன . இவற்றிலிருந்து நம்ம துன்ப முடிச்சு அகற்றும் மாதா காக்கிறார்
நாளுக்கு நாள் அன்னையின் பக்தி பெருகியது . குடும்பங்களிலே ஒற்றுமை மீண்டது .வியாதிகள் நீங்கின . பலர் ஆலயத்திற்கு குடும்பமாக வரத்துவங்கினர் . மகிழ்ச்சியும் நம்பிக்கையும் குடும்பங்களில் நிறைந்தன .வேலை இல்லாதவர்க்கு வேலை கிடைத்தது .அன்னையிடம் பற்றுக் கொண்ட ஆசீர்வாதங்களுக்காய் பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினர் .இதற்காகவே அன்னை தெரிந்தெடுக்கப்பட்டார் .
நமது துன்ப முடிச்சுகளை அகற்றி , உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைத் தருவது மட்டுமல்லாமல் விண்ணரசிலும் நமக்கு இடம் கிடைக்கும் பொருட்டு அன்னை நமக்காய் பரிந்து பேசுகிறார் .
சென்னையில் தாழம்பூரில் துன்ப முடிச்சகற்றும் அன்னைக்கு ஆலயம் உள்ளது . ஆசியாவிலேயே அன்னைக்கு அர்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் இதுவே
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையிடம் நவநாள் செபிக்கும் வகையாவது
1. சிலுவை அடையாளம் வரையவும்
2. மனஸ்தாப செபம் சொல்லவும் (கீழே உள்ளது )
3. செபமாலையின் முதல் மூன்று பத்து மணிகளைச் சொல்லவும்
4. அந்த நாளுக்கான தியான செபத்தைச் சொல்லவும்(கீழே உள்ளது )
5. செபமாலையின் இரண்டு பத்து மணிகளைச் சொல்லவும்
6. முடிச்சுகளை அகற்றும் அன்னையின் செபத்துடன் முடிக்கவும்
முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையிடம் செபம்
கன்னிமரியே,
அழகு அன்புத் தாயே,
மன்றாடும் குழந்தையை ஒருபோதும் புறக்கணியாத அன்னையே ,
உமது திரு இதயத்தில் இருந்து பெருக்கெடுத்து வழியும் அன்பினாலும்
முடிவில்லாத இரக்கத்தினாலும் குழந்தைகள் எமக்காய் அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட திருவே ,
உமது கருணைப் பார்வையை எம் மீது திருப்பி எமது வாழ்வை திணற வைக்கும் முடிச்சுகளைக் கண்ணோக்கியருளும்.
எனது துன்பம் , வலி , செயலிழக்கச் செய்யும் துன்ப முடிச்சுகள் அனைத்தையும் நீர் அறிவீர்
எங்கள் வாழ்க்கை நூலில் விழும் முடிச்சுகளை அவிழ்க்க கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்ற தாயே
உமது திருக்கரங்களில் என் வாழ்வை ஒப்படைக்கிறேன் .
உமது இரக்கப் பெருக்கை ஒரு போதும் ஒருவரும் நிறுத்த முடியாதென்றும் .உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சு உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகிறேன் .
வல்லமையின் தாயே
ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் உமது பலத்தினால் என்னை வாட்டி வதைக்கும் இந்தச் சிக்கலான முடிச்சுகளை ( உங்கள் துன்ப முடிச்சுகளை நினைத்து ஒப்படைக்கவும் )
உமது தூய திருக்கரங்களில் பெற்றுக் கொள்ளும்
தந்தையாம் கடவுளின் உன்னத மகிமை வெளிப்படும்படி
எனது துன்ப முடிச்சுகளை இப்போதும் என்றென்றைக்கும் அவிழ்த்துப் போடும்
எனக்கு ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர்
எனது பலவீனத்தில் எனது வலிமை நீர்
உம் திருமகன் யேசுவிடமிருந்து என்னைப் பிரிக்கும் சக்திகளை அழிப்பவர் நீரே
அம்மா ! எனக்குப் பதில் தாரும் பாதுகாத்தருளும்
வழிநடத்தும் காப்பாற்றும்
ஏனெனில் நீரே என் உறுதியான அடைக்கலம்
உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன் ஆமென்
Prayers courtesy Click here .நவநாள் செபங்கள் ஆங்கிலத்தில் கிடைத்தன . தமிழாக்கம் என்னுடையது . தமிழ் செபங்கள் உங்களிடம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்
மனஸ்தாப செபம் :
Oh my God I am heartily sorry for having offended you. I detest all my sins because I dread the loss of Heaven and the pains of Hell. But most of all, because I offended you, oh my God, who are all good and deserving of all my love. I firmly resolve, with the help of your grace, to confess my sins, to do penance, and to amend my life. Amen
ஓ என் தேவனே , என் பாவங்களால் உம்மை மனம் நோகச் செய்ததற்காக மனஸ்தாபப்படுகிறேன். பரலோகத்தின் இழப்புக்காகவும் நரகத்தின் வேதனைகளுக்காவும் என் பாவங்களை நான் வெறுக்கிறேன் . எல்லாவற்றிக்கும் மேலாக , ஓ என் தேவனே , நன்மைத்தனத்தின் ஊற்றும் என் அன்பிற்குப் பாத்திரருமான உம்மை மனம் நோகச் செய்த என் பாவங்களை நான் வெறுக்கிறேன். உமது பேரிரக்கத்தின் உதவியினால் என் பாவங்களை அறிக்கையிடவும், பரிகாரம் செய்யவும், என் வாழ்வை மாற்றவும் நான் உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன் ஆமென்
முதல் நாள் தியான செபம்
Dearest Holy Mother, Most Holy Mary, you undo the knots that suffocate your children, extend your merciful hands to me. I entrust to You today this knot....and all the negative consequences that it provokes in my life. I give you this knot that torments me and makes me unhappy and so impedes me from uniting myself to You and Your Son Jesus, my Savior.
I run to You, Mary, Undoer of Knots because I trust you and I know that you never despise a sinning child who comes to ask you for help. I believe that you can undo this knot because Jesus grants you everything. I believe that you want to undo this knot because you are my Mother. I believe that You will do this because you love me with eternal love.
Thank you, Dear Mother.
Mary, Undoer of Knots, pray for me.
The one who seeks grace, finds it in Mary's hands.
அன்பு நிறை மாதாவே, மகா பரிசுத்த தாயாரே , உமது பிள்ளைகளை திணறச் செய்யும் துன்ப முடிச்சுகளை அகற்றுபவரே , உமது இரக்கம் நிறைந்த கரங்களை என்னை நோக்கி நீட்டியருளும். என்னைத் துன்புறுத்தும் இந்த முடிச்சையும் ... (உங்கள் துன்பத்தை ஒப்புக் கொடுக்கவும் ) என் வாழ்வில் இதனால் வரும் வருத்தங்கள், வேதனைகளையும் நீர் அகற்றும். என்னை வேதனைப்படுத்தி , அலைக்கழித்து , உம்முடனும் உமது திருக்குமாரனிடமிருந்தும் என்னைப் பிரிக்கும் இந்தத் துன்ப முடிச்சை உம்மிடம் ஒப்படைக்கிறேன் .
துன்ப முடிச்சை அகற்றும் அன்னையே , உம்மை நம்பி உமது திருப்பாதம் அண்டி வரும் பாவியை ஒருபோதும் கைவிடாத அன்னையே , இந்தத் துன்ப முடிச்சை உமது மன்றாட்டுகளை ஒரு போதும் புறக்கணியாத உமது திருமகனிடம் பரிந்து பேசி என்னை விட்டு அகற்றும் அம்மா . முடிவில்லாத அன்பினால் என்னை நேசிக்கும் தாயே , இத்துன்ப முடிச்சை நீர் அகற்ற பிரியமுள்ளவராய் இருக்கிறீர் என்றும் இதை நீர் அகற்றுவீர் என்றும் நான் விசுவசிக்கிறேன். ஆமென்
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இரக்கத்தைத் தேடுபவர் , அன்னையின் கரங்களில் கண்டடைவர்
இரண்டாம் நாள் தியான செபம்
Mary, Beloved Mother, channel of all grace, I return to You today my heart, recognizing that I am a sinner in need of your help. Many times I lose the graces you grant me because of my sins of egoism, pride, rancor and my lack of generosity and humility. I turn to You today, Mary, Undoer of knots, for You to ask your Son Jesus to grant me a pure, divested, humble and trusting heart. I will live today practicing these virtues and offering you this as a sign of my love for You. I entrust into Your hands this knot (...describe) which keeps me from reflecting the glory of God.
Mary, Undoer of Knots, pray for me.
Mary offered all the moments of her day to God.
பிரியமுள்ள தாயாரே ,தேவ கிருபையின் நதியே, பாவியான நான் உமது உதவியைத் தேடி உம்மை நோக்கி வருகிறேன். என் வெறுப்பு ,தற்பெருமை , அகந்தை, ஆணவத்தினால் நீர் பெற்றுத் தந்த கிருபையை நான் பலமுறை இழந்துள்ளேன். துன்ப முடிச்சகற்றும் அன்னையே , உமது திருமகனிடமிருந்து தூய , தாழ்ச்சியுள்ள , முதிர்ந்த நம்பிக்கையுள்ள இருதயத்தை எனக்குப் பெற்றுத் தரும்படி உம்மை மன்றாடுகிறேன் . இந்த நற்குணங்களை நான் பின்பற்றி , உமக்கு என் வாழ்வைப் பரிசாக்க நான் ஆசிக்கிறேன். சர்வேசுரனின் மகிமையை நான் பிரதிபலிக்கத் தடையாய் இருக்கும் இந்தத் துன்ப முடிச்சை ... (நினைக்கவும் ) உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
துன்ப முடிச்சை அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அன்னை மரி தன் வாழ்வின் அத்தனை தருணங்களையும் இறைவனுக்கு ஒப்புவித்தார்
மூன்றாம் நாள் தியான செபம்
Meditating Mother, Queen of heaven, in whose hands the treasures of the King are found, turn your merciful eyes upon me today. I entrust into your holy hands this knot in my life...and allthe rancor and resentment it has caused in me. I ask Your forgiveness, God the Father, for my sin. Help me now to forgive all the persons who consciously or unconsciously provoked this knot. Give me, also, the grace to forgive me for having provoked this knot. Only in this way can You undo it. Before You, dearest Mother, and in the name of Your Son Jesus, my Savior, who has suffered so many offenses, having been granted forgiveness, I now forgive these persons...and myself, forever. Thank you, Mary, Undoer of Knots for undoing the knot of rancor in my heart and the knot which I now present to you. Amen.
Mary, Undoer of Knots, pray for me.
Turn to Mary, you who desire grace.
இயேசுக்கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மனதில் இருத்தி தியானித்த மரியே ! விண்ணக அரசியே ! இறைவனின் பொக்கிஷத்தைக் கொண்ட அன்னையே , உமது கருணை நிறைந்த கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். என் வாழ்வில் வெறுப்பையும் மனக்கசப்பையும் தரும் இந்தத் துன்ப முடிச்சை .. (நினைக்கவும் )உமது கரங்களில் நான் தருகிறேன் . பிதாவிடமிருந்து என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தாரும் . தெரிந்தோ தெரியாமலோ இந்தத் துன்ப முடிச்சை என் வாழ்வில் வருவித்தவர்களை நான் மன்னிக்க அருள் தாரும் . இந்த முடிச்சை இதுவரை சிக்கலாக்கிய என் அறியாமையை நான் மன்னிக்கக் கிருபை செய்யும் . மன்னிப்பின் மூலமே இத்துன்ப முடிச்சை உம்மால் அகற்ற முடியும் . இதோ உமது சமூகத்தில் , துன்பங்களை ஏற்று , கொடியவர்களை மன்னித்த உமது திருக்குமாரனின் பெயரால் என்னையும் எனக்கு துன்பம் வருவித்தவர்களையும் நான் முழுமனதுடன் மன்னிக்கிறேன். என் இருதயத்தில் இருக்கும் வெறுப்பின் முடிச்சையும் என் துன்ப முடிச்சையும் அகற்றும் அன்னையே உமக்கே நன்றி ஆமென்
துன்ப முடிச்சு அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
கிருபையை விரும்புவோர் அன்னையிடம் திரும்புங்கள்
நான்காம் நாள் தியான செபம்
Dearest Holy Mother, you are generous with all who seek you, have mercy on me. I entrust into your hands this knot which robs the peace of my heart, paralyzes my soul and keeps me from going to my Lord and serving Him with my life.
Undo this knot in my love...., O mother, and ask Jesus to heal my paralytic faith which gets down hearted with the stones on the road. Along with you, dearest Mother, may I see these stones as friends. Not murmuring against them anymore but giving endless thanks for them, may I smile trustingly in your power.
Mary, Undoer of Knots, pray for me.
Mary is the Sun and no one is deprived of her warmth.
தாளம் நிறைந்த பரிசுத்த தாயாரே . என் மேல் இரக்கமாயிரும் . என் இருதய அமைதியைக் குலைத்து , என் ஆத்துமாவை முடங்கச் செய்து என்னை இறையன்பு செய்யத் தடுக்கும் இந்தத் துன்ப முடிச்சை உமது கரங்களில் நம்பிக்கையுடன் வைக்கிறேன் .
என் மீது பரிவு கொண்ட தாயாரே , இந்த துன்ப முடிச்சை அகற்றி , உமது திருமகனிடம் எனது முடமான விசுவாசத்தைக் குணப்படுத்த மன்றாடும் . என் வாழ்வின் தடைக் கற்களைக் கண்டு நான் நம்பிக்கை இழக்காமல் , இவற்றுக்கு எதிராய் முறுமுறுக்காமல் உமது வல்லமையில் நம்பிக்கை கொண்டு இவற்றுக்காய் உமக்கு நன்றி சொல்ல கிருபை தாரும்
துன்ப முடிச்சை அகற்றும் அன்னையே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மரியன்னை சூரியனைப் போன்றவர். எவருக்கும் அவரது அன்பின் கதிர் மறுக்கப்படுவதில்லை .
ஐந்தாம் நாள் தியான செபம்
Mother, Undoer of Knots, generous and compassionate, I come to You today to once again entrust this knot...in my life to you and to ask the divine wisdom to undo, under the light of the Holy Spirit, this snarl of problems. No one ever saw you angry; to the contrary, your words were so charged with sweetness that the Holy Spirit was manifested on your lips. Take away from me the bitterness, anger and hatred which this knot has caused me. Give me, o dearest Mother, some of the sweetness and wisdom that is all silently reflected in your heart. And just as you were present at Pentecost, ask Jesus to send me a new presence of the Holy Spirit at this moment in my life. Holy Spirit, come upon me!
Mary, Undoer of Knots, pray for me.
Mary, with God, is powerful.
கருணையும் இரக்கமும் கொண்ட துன்ப முடிச்சு அகற்றும் அன்னையே , இத்துன்ப முடிச்சை மீண்டும் ஒருவிசை உம்மிடம் ஒப்படைக்கிறேன் .. (ஒப்படைக்கவும் )உமது தெய்வீக ஞானத்தாலும் , பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் இந்த அச்சுறுத்தும் துன்ப முடிச்சை என்னிடமிருந்து அகற்றும். உம்மைக் கோபத்துடன் கண்டவர் எவருமில்லை . மதுரம் நிறைந்த உமது வார்த்தையால் பரிசுத்த ஆவியை உமது உதடுகளினின்று நீர் வெளிப்படுத்தினீர் . இத்துன்ப முடிச்சு என்னிலே உருவாக்கிய கசப்பையும் , கோபத்தையும் வெறுப்பையும் என்னிடமிருந்து நீக்கியருளும் . ஓ பரிசுத்த தாயாரே , உமது மாசற்ற இருதயத்திலிருந்து ஒளிவீசிய ஞானத்தையும் இனிமையையும் எனக்குத் தந்தருளும் . பெந்தேகோஸ்தே பெருவிழாவில் நீர் செய்தது போல , பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை உமது திருமகனிடமிருந்து பெற்றுத் தாரும் . பரிசுத்த ஆவியானவரே ! என்னில் எழுந்தருளி வாரும்
துன்ப முடிச்சு அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இறைவனோடு மரியாள் ஆற்றலுள்ளவர்
ஆறாம் நாள் தியான செபம்
Queen of Mercy, I entrust to you this knot in my life...and I ask you to give me a heart that is patient until you undo it. Teach me to persevere in the living word of Jesus, in the Eucharist, the Sacrament of Confession; stay with me and prepare my heart to celebrate with the angels the grace that will be granted to me. Amen! Alleluia!
Mary, Undoer of Knots, pray for me.
You are beautiful, Mary, and there is no stain of sin in You.
இரக்கத்தின் அன்னையே , இந்தத் துன்ப முடிச்சை .. (நினைக்கவும் )உம்மிடம் ஒப்படைக்கிறேன் . நீர் இத்துன்ப முடிச்சை அகற்றும் வரை எனக்கு இதைத் தாங்கும் பொறுமையைத் தந்தருளும் . நற்கருணையிலும் , ஒப்புரவு அருட்சாதனத்திலும் ஆண்டவரின் உயிருள்ள வார்த்தையை நான் விடாமுயற்சியுடன் தேட எனக்குக் கற்றுத் தாரும் . நான் பெற்றுக் கொள்ளவிருக்கும் மகிமையை உமது தூதர்களுடன் கொண்டாட என் இருதயத்தைத் தயார்படுத்தும் ஆமென்
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பேரழகு நிறைந்த மரியாளே , பாவத்தின் கறை உம்மிடம் காணப்படவில்லையே
ஏழாம் நாள் தியான செபம்
Mother Most Pure, I come to You today to beg you to undo this knot in my life...and free me from the snares of Evil. God has granted you great power over all the demons. I renounce all of them today, every connection I have had with them and I proclaim Jesus as my one and only Lord and Savior. Mary, Undoer of Knots, crush the evil one's head and destroy the traps he has set for me by this knot. Thank you, dearest Mother. Most Precious Blood of Jesus, free me!
Mary, Undoer of Knots, pray for me.
You are the glory of Jerusalem, the joy of our people.
தூய்மை நிறை அன்னையே , இந்தத் துன்ப முடிச்சை .. (நினைக்கவும் ) அகற்றவும் தீயோனின் கண்ணியை நீக்கவும் உம்மை மன்றாடுகின்றேன் . சாத்தானை மேற்கொள்ளும் வல்லமையை ஆண்டவரிடம் பெற்ற அன்னையே, சாத்தானின் எல்லா மாயை நிறைந்த கட்டுக்களை நான் இப்போதே விட்டுவிடுகிறேன் . இயேசுவே ஆண்டவர் என்றும் மெய்யான மீட்பர் என்றும் விசுவசிக்கிறேன் .சாத்தானின் தலையை நொறுக்கி நசுக்கின அன்னையே , இந்தத் துன்ப முடிச்சினால் சாத்தான் எனக்கு ஏற்படுத்திய எல்லாக் கண்ணிகளையும் அழித்தருளும். நீர் பெற்றுத் தரும் விடுதலைக்காக உமக்கு நன்றி . இயேசுவின் மகா பரிசுத்த இரத்தமே , எல்லாக் கட்டுகளுக்கும் என்னை நீங்கலாக்கி விடுவியும் ஆமென்
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எருசலேமின் மகிமையே , எங்கள் சந்தோசத்தின் காரணமே அன்னையே !
எட்டாம் நாள் தியான செபம்
Virgin Mother of God, overflowing with mercy, have mercy on your child and undo this knot...in my life. I need your visit to my life, like you visited Elizabeth. Bring me Jesus, bring me the Holy Spirit. Teach me to practice the virtues of courage, joyfulness, humility and faith, and, like Elizabeth, to be filled with the Holy Spirit. Make me joyfully rest on your bosom, Mary. I consecrate you as my mother, Queen and friend. I give you my heart and everything I have (my home and family, my material and spiritual goods.) I am yours forever. Put your heart in me so that I can do everything Jesus tells me.
Mary, Undoer of Knots, pray for me.
Let us go, therefore, full of trust, to the throne of grace.
கன்னித் தாயான அன்னையே , இரக்கம் நிறைந்தவளே , என் மீது இரக்கமாய் இருந்து இந்தத் துன்ப முடிச்சை என் வாழ்வில் இருந்து நீக்கியருளும் ... (நினைக்கவும் ) எலிசபெத்தம்மாளை நீர் சந்தித்தது போல என்னையும் நீர் இன்று சந்தியும் . உம் திருமகனையும் , பரிசுத்த ஆவியானவரையும் என்னுள்ளே கொண்டு வாரும் . தாழ்ச்சி , இரக்கம் , நம்பிக்கை , தைரியம், மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை எனக்குக் கற்றுத் தாரும் . எலிசபெத்தம்மாளை போல என்னையும் பரிசுத்த ஆவியால் நிரப்பும் . உமது சமூகத்திலே எனக்கு இளைப்பாறுதலைத் தந்தருளும் . என் தாயாரே ! அரசியே ! தோழியே ! என் இருதயத்தையும் என் குடும்பம் ,ஆத்துமம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன் . நீரே என்னை ஆளுகை செய்யும் . உம் திருமகன் சொல்வதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் ஆமென்
துன்ப முடிச்சு அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வாருங்கள் , இரக்கத்தின் அரியணையை நோக்கி நம்பிக்கையுடன் செல்வோம்
ஒன்பதாம் நாள் தியான செபம்
Most Holy Mary, our Advocate, Undoer of Knots, I come today to thank you for undoing this knot in my life...You know very well the suffering it has caused me. Thank you for coming, Mother, with your long fingers of mercy to dry the tears in my eyes; you receive me in your arms and make it possible for me to receive once again the divine grace.
Mary, Undoer of Knots, dearest Mother, I thank you for undoing the knots in my life. Wrap me in your mantle of love, keep me under your protection, enlighten me with your peace! Amen.
Mary, Undoer of Knots, pray for me.
மகா பரிசுத்த அன்னையே , எங்களுக்காக பரிந்து பேசுபவரே , துன்ப முடிச்சை அகற்றுபவரே , என் வாழ்வின் துன்ப முடிச்சுகளை நீக்கியதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன் . இந்தத் துன்ப முடிச்சால் நான் பட்ட வேதனைகளை அறிந்து , என் கூக்குரலுக்கு செவிசாய்த்து என் கண்ணீரை உமது இரக்கப் பெருக்கினால் நீர் துடைத்தீர் . என்னை உம் கரங்களில் ஏற்றுக் கொள்ளும் . உமது திருமகனின் கிருபையை நான் மேலும் மேலும் அறியச் செய்தருளும்
துன்ப முடிச்சை அகற்றும் அன்னையே , என் துன்ப முடிச்சுகளை அகற்றியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன் . உமது அன்பினால் என்னை ஆதரித்து , உமது பாதுகாப்பில் உமது சமாதானத்தை நான் அறியச் செய்தருளும் ஆமென்
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அருட்திரு ஜோகன் (Johann Melchior Georg Schmittdner ) தனது பெற்றோர் விவாகரத்து செய்யவிருப்பதை அறிந்து , மரியன்னையிடம் குடும்ப சமாதானத்திற்காக வேண்டினார் . அன்னையிடம் அவர் வேண்டியது நிறைவேறவே , தனது துன்ப முடிச்சை அகற்றிய அன்னையின் திரு உருவப்படத்தை வரைந்தார் . 1700 ஆம் ஆண்டு முதல்( Perlack, Augsburg, Germany) ஜெர்மனியில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது இந்தப் படம் . ஆயராக இருந்து 202ல் வேத சாட்சியாக மரித்த புனித ஐரேனியுஸ் என்னும் புனிதர் , புனித பவுல் கிறிஸ்துவை புதிய ஆதாமுக்கு உருவகப்படுத்தியது போல , மரியன்னையை புதிய ஏவாளுக்கு உருவகப்படுத்தினார் . கீழ்ப்படியாமையினால் ஏவாள் மனித குலத்திற்கு சாபம் என்னும் துன்ப முடிச்சை கொணர்ந்தாள். அன்னையோ , தனது கீழ்ப்படிதலின் மூலம் அத்துன்ப முடிச்சை அகற்றினார் . இதன் அடிப்படையிலேயே அன்னையின் இந்தப் படம் வரையப்பட்டது .
இந்தத் துன்ப முடிச்சுகள் தான் என்ன ?
நமது வாழ்வில் தீர்வு காண இயலாத பிரச்சனைகளையும் போராட்டங்களையும் நாம் சந்திக்கிறோம் .
குடும்பங்களிலே சமாதானமின்மை ,பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே கருத்து வேறுபாடு ,அவமரியாதை , வன்முறை , கணவன் மனைவிக்கிடையே உள்மனக் காயங்கள் ,குடும்பங்களிலே சந்தோசமும் சமாதானமும் இல்லாத நிலை . மட்டுமல்லாது குடும்பங்களிலே பிரிவினை , கணவன் மனைவியிடையே மோதல் , குடி மற்றும் போதைக்கு அடிமை ,வியாதி , வருத்தங்கள் , இறைப்பற்றின்மை ,கருக்கலைப்பு , மன அழுத்தம் , வேலையின்மை , பயம் , தனிமை எத்தனை எத்தனை துன்ப முடிச்சுகள் !! நமது ஆத்துமாவை அழுத்தி , மன அமைதியைக் குலைத்து , நம்மை இறைவனிடமிருந்து அவை பிரிக்கின்றன . இவற்றிலிருந்து நம்ம துன்ப முடிச்சு அகற்றும் மாதா காக்கிறார்
நாளுக்கு நாள் அன்னையின் பக்தி பெருகியது . குடும்பங்களிலே ஒற்றுமை மீண்டது .வியாதிகள் நீங்கின . பலர் ஆலயத்திற்கு குடும்பமாக வரத்துவங்கினர் . மகிழ்ச்சியும் நம்பிக்கையும் குடும்பங்களில் நிறைந்தன .வேலை இல்லாதவர்க்கு வேலை கிடைத்தது .அன்னையிடம் பற்றுக் கொண்ட ஆசீர்வாதங்களுக்காய் பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினர் .இதற்காகவே அன்னை தெரிந்தெடுக்கப்பட்டார் .
நமது துன்ப முடிச்சுகளை அகற்றி , உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைத் தருவது மட்டுமல்லாமல் விண்ணரசிலும் நமக்கு இடம் கிடைக்கும் பொருட்டு அன்னை நமக்காய் பரிந்து பேசுகிறார் .
சென்னையில் தாழம்பூரில் துன்ப முடிச்சகற்றும் அன்னைக்கு ஆலயம் உள்ளது . ஆசியாவிலேயே அன்னைக்கு அர்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் இதுவே
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையிடம் நவநாள் செபிக்கும் வகையாவது
1. சிலுவை அடையாளம் வரையவும்
2. மனஸ்தாப செபம் சொல்லவும் (கீழே உள்ளது )
3. செபமாலையின் முதல் மூன்று பத்து மணிகளைச் சொல்லவும்
4. அந்த நாளுக்கான தியான செபத்தைச் சொல்லவும்(கீழே உள்ளது )
5. செபமாலையின் இரண்டு பத்து மணிகளைச் சொல்லவும்
6. முடிச்சுகளை அகற்றும் அன்னையின் செபத்துடன் முடிக்கவும்
முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையிடம் செபம்
கன்னிமரியே,
அழகு அன்புத் தாயே,
மன்றாடும் குழந்தையை ஒருபோதும் புறக்கணியாத அன்னையே ,
உமது திரு இதயத்தில் இருந்து பெருக்கெடுத்து வழியும் அன்பினாலும்
முடிவில்லாத இரக்கத்தினாலும் குழந்தைகள் எமக்காய் அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட திருவே ,
உமது கருணைப் பார்வையை எம் மீது திருப்பி எமது வாழ்வை திணற வைக்கும் முடிச்சுகளைக் கண்ணோக்கியருளும்.
எனது துன்பம் , வலி , செயலிழக்கச் செய்யும் துன்ப முடிச்சுகள் அனைத்தையும் நீர் அறிவீர்
எங்கள் வாழ்க்கை நூலில் விழும் முடிச்சுகளை அவிழ்க்க கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்ற தாயே
உமது திருக்கரங்களில் என் வாழ்வை ஒப்படைக்கிறேன் .
உமது இரக்கப் பெருக்கை ஒரு போதும் ஒருவரும் நிறுத்த முடியாதென்றும் .உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சு உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகிறேன் .
வல்லமையின் தாயே
ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் உமது பலத்தினால் என்னை வாட்டி வதைக்கும் இந்தச் சிக்கலான முடிச்சுகளை ( உங்கள் துன்ப முடிச்சுகளை நினைத்து ஒப்படைக்கவும் )
உமது தூய திருக்கரங்களில் பெற்றுக் கொள்ளும்
தந்தையாம் கடவுளின் உன்னத மகிமை வெளிப்படும்படி
எனது துன்ப முடிச்சுகளை இப்போதும் என்றென்றைக்கும் அவிழ்த்துப் போடும்
எனக்கு ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர்
எனது பலவீனத்தில் எனது வலிமை நீர்
உம் திருமகன் யேசுவிடமிருந்து என்னைப் பிரிக்கும் சக்திகளை அழிப்பவர் நீரே
அம்மா ! எனக்குப் பதில் தாரும் பாதுகாத்தருளும்
வழிநடத்தும் காப்பாற்றும்
ஏனெனில் நீரே என் உறுதியான அடைக்கலம்
உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன் ஆமென்
Prayers courtesy Click here .நவநாள் செபங்கள் ஆங்கிலத்தில் கிடைத்தன . தமிழாக்கம் என்னுடையது . தமிழ் செபங்கள் உங்களிடம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்
மனஸ்தாப செபம் :
Oh my God I am heartily sorry for having offended you. I detest all my sins because I dread the loss of Heaven and the pains of Hell. But most of all, because I offended you, oh my God, who are all good and deserving of all my love. I firmly resolve, with the help of your grace, to confess my sins, to do penance, and to amend my life. Amen
ஓ என் தேவனே , என் பாவங்களால் உம்மை மனம் நோகச் செய்ததற்காக மனஸ்தாபப்படுகிறேன். பரலோகத்தின் இழப்புக்காகவும் நரகத்தின் வேதனைகளுக்காவும் என் பாவங்களை நான் வெறுக்கிறேன் . எல்லாவற்றிக்கும் மேலாக , ஓ என் தேவனே , நன்மைத்தனத்தின் ஊற்றும் என் அன்பிற்குப் பாத்திரருமான உம்மை மனம் நோகச் செய்த என் பாவங்களை நான் வெறுக்கிறேன். உமது பேரிரக்கத்தின் உதவியினால் என் பாவங்களை அறிக்கையிடவும், பரிகாரம் செய்யவும், என் வாழ்வை மாற்றவும் நான் உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன் ஆமென்
முதல் நாள் தியான செபம்
Dearest Holy Mother, Most Holy Mary, you undo the knots that suffocate your children, extend your merciful hands to me. I entrust to You today this knot....and all the negative consequences that it provokes in my life. I give you this knot that torments me and makes me unhappy and so impedes me from uniting myself to You and Your Son Jesus, my Savior.
I run to You, Mary, Undoer of Knots because I trust you and I know that you never despise a sinning child who comes to ask you for help. I believe that you can undo this knot because Jesus grants you everything. I believe that you want to undo this knot because you are my Mother. I believe that You will do this because you love me with eternal love.
Thank you, Dear Mother.
Mary, Undoer of Knots, pray for me.
The one who seeks grace, finds it in Mary's hands.
அன்பு நிறை மாதாவே, மகா பரிசுத்த தாயாரே , உமது பிள்ளைகளை திணறச் செய்யும் துன்ப முடிச்சுகளை அகற்றுபவரே , உமது இரக்கம் நிறைந்த கரங்களை என்னை நோக்கி நீட்டியருளும். என்னைத் துன்புறுத்தும் இந்த முடிச்சையும் ... (உங்கள் துன்பத்தை ஒப்புக் கொடுக்கவும் ) என் வாழ்வில் இதனால் வரும் வருத்தங்கள், வேதனைகளையும் நீர் அகற்றும். என்னை வேதனைப்படுத்தி , அலைக்கழித்து , உம்முடனும் உமது திருக்குமாரனிடமிருந்தும் என்னைப் பிரிக்கும் இந்தத் துன்ப முடிச்சை உம்மிடம் ஒப்படைக்கிறேன் .
துன்ப முடிச்சை அகற்றும் அன்னையே , உம்மை நம்பி உமது திருப்பாதம் அண்டி வரும் பாவியை ஒருபோதும் கைவிடாத அன்னையே , இந்தத் துன்ப முடிச்சை உமது மன்றாட்டுகளை ஒரு போதும் புறக்கணியாத உமது திருமகனிடம் பரிந்து பேசி என்னை விட்டு அகற்றும் அம்மா . முடிவில்லாத அன்பினால் என்னை நேசிக்கும் தாயே , இத்துன்ப முடிச்சை நீர் அகற்ற பிரியமுள்ளவராய் இருக்கிறீர் என்றும் இதை நீர் அகற்றுவீர் என்றும் நான் விசுவசிக்கிறேன். ஆமென்
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இரக்கத்தைத் தேடுபவர் , அன்னையின் கரங்களில் கண்டடைவர்
இரண்டாம் நாள் தியான செபம்
Mary, Beloved Mother, channel of all grace, I return to You today my heart, recognizing that I am a sinner in need of your help. Many times I lose the graces you grant me because of my sins of egoism, pride, rancor and my lack of generosity and humility. I turn to You today, Mary, Undoer of knots, for You to ask your Son Jesus to grant me a pure, divested, humble and trusting heart. I will live today practicing these virtues and offering you this as a sign of my love for You. I entrust into Your hands this knot (...describe) which keeps me from reflecting the glory of God.
Mary, Undoer of Knots, pray for me.
Mary offered all the moments of her day to God.
பிரியமுள்ள தாயாரே ,தேவ கிருபையின் நதியே, பாவியான நான் உமது உதவியைத் தேடி உம்மை நோக்கி வருகிறேன். என் வெறுப்பு ,தற்பெருமை , அகந்தை, ஆணவத்தினால் நீர் பெற்றுத் தந்த கிருபையை நான் பலமுறை இழந்துள்ளேன். துன்ப முடிச்சகற்றும் அன்னையே , உமது திருமகனிடமிருந்து தூய , தாழ்ச்சியுள்ள , முதிர்ந்த நம்பிக்கையுள்ள இருதயத்தை எனக்குப் பெற்றுத் தரும்படி உம்மை மன்றாடுகிறேன் . இந்த நற்குணங்களை நான் பின்பற்றி , உமக்கு என் வாழ்வைப் பரிசாக்க நான் ஆசிக்கிறேன். சர்வேசுரனின் மகிமையை நான் பிரதிபலிக்கத் தடையாய் இருக்கும் இந்தத் துன்ப முடிச்சை ... (நினைக்கவும் ) உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
துன்ப முடிச்சை அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அன்னை மரி தன் வாழ்வின் அத்தனை தருணங்களையும் இறைவனுக்கு ஒப்புவித்தார்
மூன்றாம் நாள் தியான செபம்
Meditating Mother, Queen of heaven, in whose hands the treasures of the King are found, turn your merciful eyes upon me today. I entrust into your holy hands this knot in my life...and allthe rancor and resentment it has caused in me. I ask Your forgiveness, God the Father, for my sin. Help me now to forgive all the persons who consciously or unconsciously provoked this knot. Give me, also, the grace to forgive me for having provoked this knot. Only in this way can You undo it. Before You, dearest Mother, and in the name of Your Son Jesus, my Savior, who has suffered so many offenses, having been granted forgiveness, I now forgive these persons...and myself, forever. Thank you, Mary, Undoer of Knots for undoing the knot of rancor in my heart and the knot which I now present to you. Amen.
Mary, Undoer of Knots, pray for me.
Turn to Mary, you who desire grace.
இயேசுக்கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மனதில் இருத்தி தியானித்த மரியே ! விண்ணக அரசியே ! இறைவனின் பொக்கிஷத்தைக் கொண்ட அன்னையே , உமது கருணை நிறைந்த கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். என் வாழ்வில் வெறுப்பையும் மனக்கசப்பையும் தரும் இந்தத் துன்ப முடிச்சை .. (நினைக்கவும் )உமது கரங்களில் நான் தருகிறேன் . பிதாவிடமிருந்து என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தாரும் . தெரிந்தோ தெரியாமலோ இந்தத் துன்ப முடிச்சை என் வாழ்வில் வருவித்தவர்களை நான் மன்னிக்க அருள் தாரும் . இந்த முடிச்சை இதுவரை சிக்கலாக்கிய என் அறியாமையை நான் மன்னிக்கக் கிருபை செய்யும் . மன்னிப்பின் மூலமே இத்துன்ப முடிச்சை உம்மால் அகற்ற முடியும் . இதோ உமது சமூகத்தில் , துன்பங்களை ஏற்று , கொடியவர்களை மன்னித்த உமது திருக்குமாரனின் பெயரால் என்னையும் எனக்கு துன்பம் வருவித்தவர்களையும் நான் முழுமனதுடன் மன்னிக்கிறேன். என் இருதயத்தில் இருக்கும் வெறுப்பின் முடிச்சையும் என் துன்ப முடிச்சையும் அகற்றும் அன்னையே உமக்கே நன்றி ஆமென்
துன்ப முடிச்சு அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
கிருபையை விரும்புவோர் அன்னையிடம் திரும்புங்கள்
நான்காம் நாள் தியான செபம்
Dearest Holy Mother, you are generous with all who seek you, have mercy on me. I entrust into your hands this knot which robs the peace of my heart, paralyzes my soul and keeps me from going to my Lord and serving Him with my life.
Undo this knot in my love...., O mother, and ask Jesus to heal my paralytic faith which gets down hearted with the stones on the road. Along with you, dearest Mother, may I see these stones as friends. Not murmuring against them anymore but giving endless thanks for them, may I smile trustingly in your power.
Mary, Undoer of Knots, pray for me.
Mary is the Sun and no one is deprived of her warmth.
தாளம் நிறைந்த பரிசுத்த தாயாரே . என் மேல் இரக்கமாயிரும் . என் இருதய அமைதியைக் குலைத்து , என் ஆத்துமாவை முடங்கச் செய்து என்னை இறையன்பு செய்யத் தடுக்கும் இந்தத் துன்ப முடிச்சை உமது கரங்களில் நம்பிக்கையுடன் வைக்கிறேன் .
என் மீது பரிவு கொண்ட தாயாரே , இந்த துன்ப முடிச்சை அகற்றி , உமது திருமகனிடம் எனது முடமான விசுவாசத்தைக் குணப்படுத்த மன்றாடும் . என் வாழ்வின் தடைக் கற்களைக் கண்டு நான் நம்பிக்கை இழக்காமல் , இவற்றுக்கு எதிராய் முறுமுறுக்காமல் உமது வல்லமையில் நம்பிக்கை கொண்டு இவற்றுக்காய் உமக்கு நன்றி சொல்ல கிருபை தாரும்
துன்ப முடிச்சை அகற்றும் அன்னையே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மரியன்னை சூரியனைப் போன்றவர். எவருக்கும் அவரது அன்பின் கதிர் மறுக்கப்படுவதில்லை .
ஐந்தாம் நாள் தியான செபம்
Mother, Undoer of Knots, generous and compassionate, I come to You today to once again entrust this knot...in my life to you and to ask the divine wisdom to undo, under the light of the Holy Spirit, this snarl of problems. No one ever saw you angry; to the contrary, your words were so charged with sweetness that the Holy Spirit was manifested on your lips. Take away from me the bitterness, anger and hatred which this knot has caused me. Give me, o dearest Mother, some of the sweetness and wisdom that is all silently reflected in your heart. And just as you were present at Pentecost, ask Jesus to send me a new presence of the Holy Spirit at this moment in my life. Holy Spirit, come upon me!
Mary, Undoer of Knots, pray for me.
Mary, with God, is powerful.
கருணையும் இரக்கமும் கொண்ட துன்ப முடிச்சு அகற்றும் அன்னையே , இத்துன்ப முடிச்சை மீண்டும் ஒருவிசை உம்மிடம் ஒப்படைக்கிறேன் .. (ஒப்படைக்கவும் )உமது தெய்வீக ஞானத்தாலும் , பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் இந்த அச்சுறுத்தும் துன்ப முடிச்சை என்னிடமிருந்து அகற்றும். உம்மைக் கோபத்துடன் கண்டவர் எவருமில்லை . மதுரம் நிறைந்த உமது வார்த்தையால் பரிசுத்த ஆவியை உமது உதடுகளினின்று நீர் வெளிப்படுத்தினீர் . இத்துன்ப முடிச்சு என்னிலே உருவாக்கிய கசப்பையும் , கோபத்தையும் வெறுப்பையும் என்னிடமிருந்து நீக்கியருளும் . ஓ பரிசுத்த தாயாரே , உமது மாசற்ற இருதயத்திலிருந்து ஒளிவீசிய ஞானத்தையும் இனிமையையும் எனக்குத் தந்தருளும் . பெந்தேகோஸ்தே பெருவிழாவில் நீர் செய்தது போல , பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை உமது திருமகனிடமிருந்து பெற்றுத் தாரும் . பரிசுத்த ஆவியானவரே ! என்னில் எழுந்தருளி வாரும்
துன்ப முடிச்சு அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இறைவனோடு மரியாள் ஆற்றலுள்ளவர்
ஆறாம் நாள் தியான செபம்
Queen of Mercy, I entrust to you this knot in my life...and I ask you to give me a heart that is patient until you undo it. Teach me to persevere in the living word of Jesus, in the Eucharist, the Sacrament of Confession; stay with me and prepare my heart to celebrate with the angels the grace that will be granted to me. Amen! Alleluia!
Mary, Undoer of Knots, pray for me.
You are beautiful, Mary, and there is no stain of sin in You.
இரக்கத்தின் அன்னையே , இந்தத் துன்ப முடிச்சை .. (நினைக்கவும் )உம்மிடம் ஒப்படைக்கிறேன் . நீர் இத்துன்ப முடிச்சை அகற்றும் வரை எனக்கு இதைத் தாங்கும் பொறுமையைத் தந்தருளும் . நற்கருணையிலும் , ஒப்புரவு அருட்சாதனத்திலும் ஆண்டவரின் உயிருள்ள வார்த்தையை நான் விடாமுயற்சியுடன் தேட எனக்குக் கற்றுத் தாரும் . நான் பெற்றுக் கொள்ளவிருக்கும் மகிமையை உமது தூதர்களுடன் கொண்டாட என் இருதயத்தைத் தயார்படுத்தும் ஆமென்
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பேரழகு நிறைந்த மரியாளே , பாவத்தின் கறை உம்மிடம் காணப்படவில்லையே
ஏழாம் நாள் தியான செபம்
Mother Most Pure, I come to You today to beg you to undo this knot in my life...and free me from the snares of Evil. God has granted you great power over all the demons. I renounce all of them today, every connection I have had with them and I proclaim Jesus as my one and only Lord and Savior. Mary, Undoer of Knots, crush the evil one's head and destroy the traps he has set for me by this knot. Thank you, dearest Mother. Most Precious Blood of Jesus, free me!
Mary, Undoer of Knots, pray for me.
You are the glory of Jerusalem, the joy of our people.
தூய்மை நிறை அன்னையே , இந்தத் துன்ப முடிச்சை .. (நினைக்கவும் ) அகற்றவும் தீயோனின் கண்ணியை நீக்கவும் உம்மை மன்றாடுகின்றேன் . சாத்தானை மேற்கொள்ளும் வல்லமையை ஆண்டவரிடம் பெற்ற அன்னையே, சாத்தானின் எல்லா மாயை நிறைந்த கட்டுக்களை நான் இப்போதே விட்டுவிடுகிறேன் . இயேசுவே ஆண்டவர் என்றும் மெய்யான மீட்பர் என்றும் விசுவசிக்கிறேன் .சாத்தானின் தலையை நொறுக்கி நசுக்கின அன்னையே , இந்தத் துன்ப முடிச்சினால் சாத்தான் எனக்கு ஏற்படுத்திய எல்லாக் கண்ணிகளையும் அழித்தருளும். நீர் பெற்றுத் தரும் விடுதலைக்காக உமக்கு நன்றி . இயேசுவின் மகா பரிசுத்த இரத்தமே , எல்லாக் கட்டுகளுக்கும் என்னை நீங்கலாக்கி விடுவியும் ஆமென்
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எருசலேமின் மகிமையே , எங்கள் சந்தோசத்தின் காரணமே அன்னையே !
எட்டாம் நாள் தியான செபம்
Virgin Mother of God, overflowing with mercy, have mercy on your child and undo this knot...in my life. I need your visit to my life, like you visited Elizabeth. Bring me Jesus, bring me the Holy Spirit. Teach me to practice the virtues of courage, joyfulness, humility and faith, and, like Elizabeth, to be filled with the Holy Spirit. Make me joyfully rest on your bosom, Mary. I consecrate you as my mother, Queen and friend. I give you my heart and everything I have (my home and family, my material and spiritual goods.) I am yours forever. Put your heart in me so that I can do everything Jesus tells me.
Mary, Undoer of Knots, pray for me.
Let us go, therefore, full of trust, to the throne of grace.
கன்னித் தாயான அன்னையே , இரக்கம் நிறைந்தவளே , என் மீது இரக்கமாய் இருந்து இந்தத் துன்ப முடிச்சை என் வாழ்வில் இருந்து நீக்கியருளும் ... (நினைக்கவும் ) எலிசபெத்தம்மாளை நீர் சந்தித்தது போல என்னையும் நீர் இன்று சந்தியும் . உம் திருமகனையும் , பரிசுத்த ஆவியானவரையும் என்னுள்ளே கொண்டு வாரும் . தாழ்ச்சி , இரக்கம் , நம்பிக்கை , தைரியம், மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை எனக்குக் கற்றுத் தாரும் . எலிசபெத்தம்மாளை போல என்னையும் பரிசுத்த ஆவியால் நிரப்பும் . உமது சமூகத்திலே எனக்கு இளைப்பாறுதலைத் தந்தருளும் . என் தாயாரே ! அரசியே ! தோழியே ! என் இருதயத்தையும் என் குடும்பம் ,ஆத்துமம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன் . நீரே என்னை ஆளுகை செய்யும் . உம் திருமகன் சொல்வதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் ஆமென்
துன்ப முடிச்சு அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வாருங்கள் , இரக்கத்தின் அரியணையை நோக்கி நம்பிக்கையுடன் செல்வோம்
ஒன்பதாம் நாள் தியான செபம்
Most Holy Mary, our Advocate, Undoer of Knots, I come today to thank you for undoing this knot in my life...You know very well the suffering it has caused me. Thank you for coming, Mother, with your long fingers of mercy to dry the tears in my eyes; you receive me in your arms and make it possible for me to receive once again the divine grace.
Mary, Undoer of Knots, dearest Mother, I thank you for undoing the knots in my life. Wrap me in your mantle of love, keep me under your protection, enlighten me with your peace! Amen.
Mary, Undoer of Knots, pray for me.
மகா பரிசுத்த அன்னையே , எங்களுக்காக பரிந்து பேசுபவரே , துன்ப முடிச்சை அகற்றுபவரே , என் வாழ்வின் துன்ப முடிச்சுகளை நீக்கியதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன் . இந்தத் துன்ப முடிச்சால் நான் பட்ட வேதனைகளை அறிந்து , என் கூக்குரலுக்கு செவிசாய்த்து என் கண்ணீரை உமது இரக்கப் பெருக்கினால் நீர் துடைத்தீர் . என்னை உம் கரங்களில் ஏற்றுக் கொள்ளும் . உமது திருமகனின் கிருபையை நான் மேலும் மேலும் அறியச் செய்தருளும்
துன்ப முடிச்சை அகற்றும் அன்னையே , என் துன்ப முடிச்சுகளை அகற்றியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன் . உமது அன்பினால் என்னை ஆதரித்து , உமது பாதுகாப்பில் உமது சமாதானத்தை நான் அறியச் செய்தருளும் ஆமென்
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்