- தேவன்னை
- சுப மங்கள மாதா
Thirukayana madha shrine, Pothakaalanvilai : website
சுப மங்கள மாதாவிடம் ஜெபம்
சுப மங்கள மாதாவே ! இரு நல் மனங்களை ஒன்றிணைத்து அவர்களின் மகிழ்ச்சியில் களிகூரும் அன்னையே ! உம்மை நோக்கி மன்றாடும் உம் பிள்ளையின் கூக்குரலைக் கேட்டருளும் . உம்மைப் பொறுப்போடும் ,அன்போடும் , அக்கறையோடும் பராமரிக்க , அன்பு காட்ட , புனித சூசையப்பரைப் பெற பேறு பெற்ற தாயே !இன்பத்திலும் துன்பத்திலும் என்னை ஏற்றுக் கொண்டு மதித்து அன்பு செய்யும் நல்லதொரு துணையைத் தேடித் தாரும் . அன்னையே ! உம்மால் எல்லாம் கூடும். என் வாழ்வில் இல்வாழ்க்கை என்னும் ஆசீர்வாதத்தால் நல்வாழ்க்கை துணை என்னும் பேரருளை ஏற்றி ஒளிர்வித்தருளும் . நீர் உருவாக்கிய திருக்குடும்பத்தைப் போல நானும் எனது எளிய இல்லற வாழ்வால் நல்லதொரு குடும்பத்தை உருவாக்கி தாய் திருச்சபை செழுமையுற எனக்காக மன்றாடும் தாயே ஆமென்
புகழ்மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
மகிமை தங்கிய புனித மரியாயே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சர்வேசுரனின் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
கிறிஸ்துவினுடைய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
கன்னியரில் உத்தம கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அழகோவியமாய் வீற்றிருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பொன்னிறமாய்க் காட்சி தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மங்காத பேரொளியாய் பொற்பை (பொத்தக்காலன்விளை ) நகரில் குடியிருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அமைதியின் ஊற்றாய் அமைந்திருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மோட்ச அலங்காரியாகிய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மாசில்லாமல் உற்பவித்த திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தீமைகள் எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பக்தர்களின் மனதை மகிழச் செய்யும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அற்புதம் புரியும் வல்லவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் இதயங்களைக் கவரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சர்ப்பத்தின் தலை மிதித்த சக்தியுடையவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் வறுமையை ஒழிக்கும் கொடைவள்ளலாகிய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்களுக்கு உதவிட என்றும் விரைந்து வரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
திருமண வரம் வேண்டுவோருக்கு திருமண வரம் தருபவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மரியென்னும் தயை நிறைந்த நாமத்தைப் பெற்ற திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சிறப்போடு பொற்பை நகரில் வீற்றிருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
குழந்தை செல்வம் வேண்டுவோருக்கு குழந்தை வரம் கொடுப்பவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நோயுற்றோரின் துன்பத்தை அகற்றி நலமருளும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தீய ஆவியின் கட்டுகளில் இருந்து விடுதலை தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அண்டி வருவோரை நல்வழி நடத்தும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உம்மை நம்பினோரை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
விண்ணகத்தின் ரோஜா மலரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தங்கத் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தாவீது ராஜா புத்திரியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வாக்குத்தத்தத்தின் பெட்டகமான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
ஞானம் நிறைந்த பொக்கிஷமான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வானுலக தாரகையான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
திருச்செபமாலையின் தாயான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மோட்சத்தின் வழியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உலகத்தின் சமாதான அரசியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இந்திய தேசத்தின் காவலியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அருள்தரும் இமயமான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
செபிப்போமாக
விண்ணகத் தந்தையே , புனித மரியாளை எல்லா அருட்கொடைகளாலும் அலங்கரித்து உமது திருமகனைப் பெற்றெடுக்கும் தாயாகத் தெரிந்து கொண்டீரே . அந்த உத்தமத்தாயின் வழியாக நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களைப் பெற்று , தூய்மையின் வழி நடந்து விண்ணகப் பேரின்பத்தைப் பெற்றுக் கொள்ள அருள் கூர்ந்தருளும் . எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ஆமென்