- தேவன்னை
- புனித மோட்ச இராக்கினி
தேவமாதா மோட்சத்துக்கு அழைத்துக் கொள்ளப் பட்ட தின் பேரில் ஜெபம் ( திருப்பலி நேரத்தில் சொல்லத் தக்கது).
மகா மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்துக்கு எழுந்தருளின பரிசுத்த தேவமாதாவே! நீர் சரீரத்தோடு வான மண்டலங்களைக் கிழித்தேறின மகிமை ,உமது சுகிர்தங்களுக்கு ஏற்ற வெகுமானந்தானே/அதேனெனில், மண்ணால் உண்டாக்கப்பட்ட சரீரம் மண்ணாய்ப் போக வேண்டுமென்று ஆதாம் செய்த பாவத்துக்கு ஆக்கினையாகக் கட்டளையிருந்தாலும், உம்மிடத்தில் அப்படிப்பட்ட பாவத்தின் அடையாள முதலாய் காணாததினால் அதற்குள்ள ஆக்கினையும் காணவில்லையே / அதனால் ஆண்டவர் தாம் மரித்தோரிடத்தில் நின்று எழுந்தருளினது போல உம்மையும் உயிரோடு எழுந்திருக்கப் பண்ணினார். தம்முடைய சரீரம் அழியாமல் இருக்கப் பண்ணித் தம்முடைய திருத்தேகம் நாலு வரப்பிரசாதங்களினால் அலங்கரிக்கப்பட்டது போல அவ்வலங்காரத்தை உமது சரீரத்துக்கும் கொடுத்தார்.
கடைசியாய் அவர் தாமே சரீரத்தோடு வானத்துக்கு ஏறினது போல, உம்மையும் அந்தப்படி ஆத்ம சரீரத்தோடு ஏறப் பண்ணினாரே! நீர் பரலோகத்துக்கு ஏறினபோது சந்திரன் உம்முடைய பாதத்தைத் தாங்க / சூரியன் உம்முடைய உடலில் போர்வையாய் படிய / தாரகைக் கணங்கள் உமது சிரசில் மகுடமாய் விளங்க /தூதர்கள் ஸ்துதியங்கள் பாட / பர மண்டலத்தில் சேர்ந்த உடனே /பிதா, சுதன் , இஸ்பிரித்து சாந்துவால் நித்திய பரலோக ராஜேஸ்வரியாக முடிசூட்டப்பட்டீரே /
ஆ! இவ்வித வெகுமான மகிமையோடு பரலோகத்துக்கு எழுந்தருளிய உம்மைக் கண்ட அடியேன் இன்று தானே உம்மோடே பறந்து வரத்தக்க ஆசையோடு இருக்கிறேன் . ஆனாலும் இந்த மண் சரீரபாரத்தோடு இப்படிப்பட்ட நன்மை பெற நான் பாத்திரமாகாதபடியால் இன்று உம்மோடு என்னுடைய நினைவைப் பரலோகத்துக்கு உயர்த்தி , இவ்வுலகத்தை மறந்து நடக்கப் பண்ணியருளும் . அப்படியே சாகுந்தனையும் உம்முடைய சலுகையால் நான் நடந்து உமக்குப் பணி செய்து என்னாத்துமம் பரலோகத்தில் சேர்ந்து எக்காலமும் உம்மைக் கண்டு ஸ்துதித்து மோட்ச ஆனந்தம் அனுபவிக்கும்படி கிருபை பண்ணியருளும் ஆமென்.
புனித மோட்ச இராக்கினி புகழ்மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
மோட்ச அலங்காரியா கிய புனித மரியாளே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நித்திய காலமாய்ச் சர்வத்துக்கும் ஆண்டவளாகத் தேவ சித்தத்தால் நியமிக்கப்பட்ட மோட்ச அலங்காரியே,
பரலோக பூலோக இராக்கினியாக மாசில்லாமல் உற்பவித்த புனித மரியாயே,
ஆதிமுதல் நிகரற்ற பரிசுத்தத் தனமாய்ப் பிறந்த சுகிர்த அலங்காரியே,
எப்போதும் மாசில்லாதவளாய் விளங்கிய சுகிர்த அலங்காரியே,
விடியற்கால நட்சத்திரமாக உலகத்தில் உதித்த சுகிர்த அலங்காரியே,
பெண்ணால் அழிந்த உலகைப் பெண்ணாலே
மீட்கக் கருதின தேவபிதாவினால் இரட்சகருக்கு மாதாவாக நியமிக்கப்பட்ட சுகிர்த அலங்காரியே,
பரம நாயகியாகிய மரியென்னும் தயை நிறைந்த
நாமதேயம் சூட்டப்பட்ட சுகிர்த அலங்காரியே,
வயதில் வளர மென்மேலும் சகல புண்ணியங்களாலும்
அதிகரித்து விளங்கின சுகிர்த அலங்காரியே,
மனிதரெல்லார்க்கும் புண்ணிய மாதிரிகையாகவும்
ஞான தீபமாகவும் ஒளிர்ந்த சுகிர்த அலங்காரியே,
அருள் நிறைந்த மரியே வாழ்க என்று
தேவதூதனால் மங்களம் சொல்லப்பட்ட சுகிர்த அலங்காரியே,
நிகரற்ற அற்புதமாய் இஸ்பிரித்து சாந்துவின் வரப்பிரசாதத்தினாலே
கன்னிமையோடு கர்ப்பந்தரித்து அவதரித்த இரட்சகரைப் பெற்ற சுகிர்த அலங்காரியே,
தேவகுமாரனாகிய கர்த்தாவைப் பெறும் முன்னும், பெற்ற போதும் ,
பெற்ற பின்னும், கன்னி மகிமை கெடாத சுகிர்த அலங்காரியே
அப்படியே சர்வேசுரனுடைய புனித மாதாவாகிய சுகிர்த அலங்காரியே,
தேவ பிதாவின் குமாரத்தியுமாய், சுதனின் தாயாருமாய்,
பரிசுத்த ஆவியின் நேச பத்தினியுமாய் இருக்கிற சுகிர்த அலங்காரியே,
சர்வேசுரனுடைய உத்தம சாயலுமாய்த்
தேவாலயமுமாய் விளங்கிய சுகிர்த அலங்காரியே,
எங்கள் இரட்சணியத்தின் நிமித்தம் இயேசு நாதருடைய
திருப்பாடுகளுக்குப் பங்காளியான சுகிர்த அலங்காரியே,
அவர் உயிர்த்த போதும் மோட்சத்திற்கு எழுந்தருளின போதும்
அளவிறந்த ஆனந்தம் அனுபவித்த சுகிர்த அலங்காரியே,
சுவாமி மோட்சத்துக்கு ஆரோகணமான பின்பு திருச்சபைக்கு
ஆறுதலும் ஆதரவுமாக இவ்வுலகத்தில் நின்று போன சுகிர்த அலங்காரியே,
பூவுலகில் சஞ்சரித்த அளவும் நினைவினாலும்
ஆசையினாலும் பரலோகத்தில் தங்கின சுகிர்த அலங்காரியே,
தேவ சித்தத்தினால் உமக்குக் குறிக்கப்பட்ட
சீவிய காலமளவும் இப்பரதேச துன்பங்களை அத்தியந்த
தைரியம், பக்தி, பொறுமை முதலிய சற்குணங்களோடு அனுபவித்த சுகிர்த அலங்காரியே,
இவ்வுலகில் இருந்த நாளளவும் அதிகமதிகமாய் எல்லா வரங்களிலும்
அதிசயித்து நிகரற்ற புண்ணிய சம்பாவனை அடைந்த சுகிர்த அலங்காரியே,
உமது திரு மரண சமயத்தில் தூர தேசங்களில் இருந்த அப்போஸ்தலர்களை
முதலாய் அற்புதமாக வரும்படி செய்தருளிய சுகிர்த அலங்காரியே,
இப்பிரபஞ்சம் விடுவதற்கு முன் தாயின் அன்போடே
சீஷர்களை ஆசீர்வதித்துத் தேற்றிய சுகிர்த அலங்காரியே,
அச்சமயத்தில் தரிசனையான சம்மனசுக்களால்
பேரின்ப சந்தோஷமடைந்த சுகிர்த அலங்காரியே,
தேவ சிநேக மிகுதியால் ஆத்துமம் பிரிந்து
பரலோகத்தில் சேர்ந்த மோட்ச அலங்காரியே,
சொல்லில் அடங்காத ஆனந்தத்துடன் உம்முடைய
திருக்குமாரன் சமூகத்தில் சேர்ந்த மோட்ச அலங்காரியே ,
சம்மனசுக்களும் அப்போஸ்தலர்களும் திருச்சங்கீதங்களைத்
தொனிக்க மிகுந்த பக்தி வணக்கத்தோடே சீஷர்களால் திருமேனி
அடக்கம் செய்யப்பட்ட மோட்ச அலங்காரியே,
மூன்று நாள் பரியந்தம் உமது திருக்கல்லறையில் கேட்கப்பட்ட
சம்மனசுக்களுடைய இன்பமுள்ள சங்கீதங்களால் ஸ்துதிக்கப்பட்ட மோட்ச அலங்காரியே,
மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்துப் பேரின்ப
இராச்சியத்துக்கு எழுந்தருளின மோட்ச அலங்காரியே,
அத்தியந்த மகிமை ஒட்டலோகமாய்ப் பரலோகத்தில் சேர்ந்த மோட்ச அலங்காரியே,
அப்பொழுது சம்மனசுக்களின் சேனைகளால் சொல்லில்
அடங்காத இன்ப சங்கீதங்களைக் கொண்டு ஸ்தித்துக்
கொண்டாடப்பட்ட மோட்ச அலங்காரியே,
உம்முடைய திருக்குமாரனால் நிகரற்ற
சுத்த நேசத்துடனே அரவணைக்கப்பட்ட மோட்ச அலங்காரியே,
பிதாப் பிதாக்கள் முதலிய சகல மோட்சவாசிகளினாலும்
வணங்கிக் கொண்டாடப்பட்ட மோட்ச அலங்காரியே,
சர்வலோகத்துக்கும் இராக்கினியாய்த் தேவ பிதாவினால்
மகிமைக் கிரீடம் சூட்டப்பட்ட மோட்ச அலங்காரியே,
உம்முடைய திருக்குமாரனின் அண்டையில்
மகிமைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற மோட்ச அலங்காரியே,
உமது திருப்பாதத்தால் சந்திரனை மிதிக்கும் மோட்ச அலங்காரியே,
அழகினால் பூரண சந்திரனை வென்று மகிமை
ஆடையாகச் சூரியனை அணிந்த மோட்ச அலங்காரியே,
பன்னிரண்டு நட்சத்திரங்களை முடியாகத் தரித்திருக்கும் மோட்ச அலங்காரியே,
சத்துருக்களுக்குப் பயங்கரம் வருவிக்கும் அணிவகுப்பான
பணிவிடைக்காரருள்ள வல்லபமுடைத்தான
மோட்ச அலங்காரியே,
சர்வலோகத்திலும் அளவிறந்த வல்லமை பெற்றிருக்கிற மோட்ச அலங்காரியே,
நரகசர்ப்பமாகிய பசாசின் தலையை நசுக்கிப்
பேய்களை எல்லாம் நடுங்கச் செய்து துரத்தும் மோட்ச அலங்காரியே,
தேவ இஷ்டப் பிரசாத பொக்கிஷங்களை உமது வசமாகக் கொண்டிருக்கிற மோட்ச அலங்காரியே,
கிருபை தயாபம் நிறைந்த இராக்கினியாகிய மோட்ச அலங்காரியே ,
எண்ணிறந்த நன்மை அற்புதங்களால்
உமது வல்லமையை விளங்கச் செய்தருளின மோட்ச அலங்காரியே,
பல முறை இராச்சியங்களையும் , பட்டணங்களையும் ,
குடும்பங்களையும் ஆபத்தினின்று இரட்சித்து நிலை நிறுத்திய மோட்ச அலங்காரியே,
சொல்லில் அடங்காத வேறு புதுமை உபகார சகாயங்களால்
உமது தயாளத்தைக் காட்டியருளிய மோட்ச அலங்காரியே,
எண்ணில் அடங்காத பேர்களை பேரின்ப இராச்சியத்தில் சேர்ப்பித்த மோட்ச அலங்காரியே,
பாவிகளுக்கு அடைக்கலமாகிய மோட்ச அலங்காரியே,
இப் பிரதேசத்தில் சஞ்சரிக்கிற உமது நேச பிள்ளைகளை மறவாத மோட்ச அலங்காரியே,
உமது பேரில் மெய்யான பக்தியுள்ளவர்களை ஒரு போதும் கைவிடா மோட்ச அலங்காரியே,
சீவிய நாளிலும் மரண நேரத்திலும் எங்களுக்கு
அடைக்கலமும் ஆதரவும் தேற்றரவுமாகிய மோட்ச அலங்காரியே,
சகல புனிதர்களையும் விட புண்ணியத்தினாலும்
மகிமையினாலும் விளங்குகிற மோட்ச அலங்காரியே,
சர்வலோகத்திலும் ஸ்துதி வணக்கக் கொண்டாட்டம்
பெற்றிருக்கிற மோட்ச அலங்காரியே,
படைப்புண்ட சகல வஸ்துக்களாலும் ஸ்துதிக்கவும்
மன்றாடவும் வணங்கவும் படுவதற்குப் பாத்திரமான மோட்ச அலங்காரியே,
கன்னியர்களுக்கு மாதிரிகையும் இராக்கினியுமாகிய மோட்ச அலங்காரியே,
சம்மனசுக்களுக்கும் மற்ற சகல புனிதர்களுக்கும் இராக்கினியான மோட்ச அலங்காரியே,
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
செபிப்போமாக
சர்வத்துக்கும் அதிபதி கர்த்தாவாகிய நித்திய சர்வேசுரா! அவதரித்த உம்முடைய திருக்குமாரனுக்கு மாதாவான புனித கன்னி மரியம்மாளை எங்களுக்குத் தாயாராகவும் இராக்கினியாகவும் தந்தருளினீரே /
உம்முடைய கிருபை வரப்பிரசாதத்தால் மோட்ச அலங்காரியான இந்தப் பரமநாயகியின்
உத்தம புண்ணியங்களை அடியோர்கள் இப் பரதேசத்தில் சஞ்சரிக்கிற வரைக்கும் முத்திரையாய்
அனுசரித்து உமது பேரின்ப தரிசனையில் அவருடைய ஆனந்த பாக்கியத்துக்குப் பங்காளியாகும்படிக்கு
எங்கள் மன்றாட்டுக்களையும், எங்கள் அன்புள்ள மாதா எங்களுக்காகச் செய்யும் மன்றாட்டுக்களையும்
கேட்டு எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும்.
இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி ஆமென்
கடைசியாய் அவர் தாமே சரீரத்தோடு வானத்துக்கு ஏறினது போல, உம்மையும் அந்தப்படி ஆத்ம சரீரத்தோடு ஏறப் பண்ணினாரே! நீர் பரலோகத்துக்கு ஏறினபோது சந்திரன் உம்முடைய பாதத்தைத் தாங்க / சூரியன் உம்முடைய உடலில் போர்வையாய் படிய / தாரகைக் கணங்கள் உமது சிரசில் மகுடமாய் விளங்க /தூதர்கள் ஸ்துதியங்கள் பாட / பர மண்டலத்தில் சேர்ந்த உடனே /பிதா, சுதன் , இஸ்பிரித்து சாந்துவால் நித்திய பரலோக ராஜேஸ்வரியாக முடிசூட்டப்பட்டீரே /
ஆ! இவ்வித வெகுமான மகிமையோடு பரலோகத்துக்கு எழுந்தருளிய உம்மைக் கண்ட அடியேன் இன்று தானே உம்மோடே பறந்து வரத்தக்க ஆசையோடு இருக்கிறேன் . ஆனாலும் இந்த மண் சரீரபாரத்தோடு இப்படிப்பட்ட நன்மை பெற நான் பாத்திரமாகாதபடியால் இன்று உம்மோடு என்னுடைய நினைவைப் பரலோகத்துக்கு உயர்த்தி , இவ்வுலகத்தை மறந்து நடக்கப் பண்ணியருளும் . அப்படியே சாகுந்தனையும் உம்முடைய சலுகையால் நான் நடந்து உமக்குப் பணி செய்து என்னாத்துமம் பரலோகத்தில் சேர்ந்து எக்காலமும் உம்மைக் கண்டு ஸ்துதித்து மோட்ச ஆனந்தம் அனுபவிக்கும்படி கிருபை பண்ணியருளும் ஆமென்.
புனித மோட்ச இராக்கினி புகழ்மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
மோட்ச அலங்காரியா கிய புனித மரியாளே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நித்திய காலமாய்ச் சர்வத்துக்கும் ஆண்டவளாகத் தேவ சித்தத்தால் நியமிக்கப்பட்ட மோட்ச அலங்காரியே,
பரலோக பூலோக இராக்கினியாக மாசில்லாமல் உற்பவித்த புனித மரியாயே,
ஆதிமுதல் நிகரற்ற பரிசுத்தத் தனமாய்ப் பிறந்த சுகிர்த அலங்காரியே,
எப்போதும் மாசில்லாதவளாய் விளங்கிய சுகிர்த அலங்காரியே,
விடியற்கால நட்சத்திரமாக உலகத்தில் உதித்த சுகிர்த அலங்காரியே,
பெண்ணால் அழிந்த உலகைப் பெண்ணாலே
மீட்கக் கருதின தேவபிதாவினால் இரட்சகருக்கு மாதாவாக நியமிக்கப்பட்ட சுகிர்த அலங்காரியே,
பரம நாயகியாகிய மரியென்னும் தயை நிறைந்த
நாமதேயம் சூட்டப்பட்ட சுகிர்த அலங்காரியே,
வயதில் வளர மென்மேலும் சகல புண்ணியங்களாலும்
அதிகரித்து விளங்கின சுகிர்த அலங்காரியே,
மனிதரெல்லார்க்கும் புண்ணிய மாதிரிகையாகவும்
ஞான தீபமாகவும் ஒளிர்ந்த சுகிர்த அலங்காரியே,
அருள் நிறைந்த மரியே வாழ்க என்று
தேவதூதனால் மங்களம் சொல்லப்பட்ட சுகிர்த அலங்காரியே,
நிகரற்ற அற்புதமாய் இஸ்பிரித்து சாந்துவின் வரப்பிரசாதத்தினாலே
கன்னிமையோடு கர்ப்பந்தரித்து அவதரித்த இரட்சகரைப் பெற்ற சுகிர்த அலங்காரியே,
தேவகுமாரனாகிய கர்த்தாவைப் பெறும் முன்னும், பெற்ற போதும் ,
பெற்ற பின்னும், கன்னி மகிமை கெடாத சுகிர்த அலங்காரியே
அப்படியே சர்வேசுரனுடைய புனித மாதாவாகிய சுகிர்த அலங்காரியே,
தேவ பிதாவின் குமாரத்தியுமாய், சுதனின் தாயாருமாய்,
பரிசுத்த ஆவியின் நேச பத்தினியுமாய் இருக்கிற சுகிர்த அலங்காரியே,
சர்வேசுரனுடைய உத்தம சாயலுமாய்த்
தேவாலயமுமாய் விளங்கிய சுகிர்த அலங்காரியே,
எங்கள் இரட்சணியத்தின் நிமித்தம் இயேசு நாதருடைய
திருப்பாடுகளுக்குப் பங்காளியான சுகிர்த அலங்காரியே,
அவர் உயிர்த்த போதும் மோட்சத்திற்கு எழுந்தருளின போதும்
அளவிறந்த ஆனந்தம் அனுபவித்த சுகிர்த அலங்காரியே,
சுவாமி மோட்சத்துக்கு ஆரோகணமான பின்பு திருச்சபைக்கு
ஆறுதலும் ஆதரவுமாக இவ்வுலகத்தில் நின்று போன சுகிர்த அலங்காரியே,
பூவுலகில் சஞ்சரித்த அளவும் நினைவினாலும்
ஆசையினாலும் பரலோகத்தில் தங்கின சுகிர்த அலங்காரியே,
தேவ சித்தத்தினால் உமக்குக் குறிக்கப்பட்ட
சீவிய காலமளவும் இப்பரதேச துன்பங்களை அத்தியந்த
தைரியம், பக்தி, பொறுமை முதலிய சற்குணங்களோடு அனுபவித்த சுகிர்த அலங்காரியே,
இவ்வுலகில் இருந்த நாளளவும் அதிகமதிகமாய் எல்லா வரங்களிலும்
அதிசயித்து நிகரற்ற புண்ணிய சம்பாவனை அடைந்த சுகிர்த அலங்காரியே,
உமது திரு மரண சமயத்தில் தூர தேசங்களில் இருந்த அப்போஸ்தலர்களை
முதலாய் அற்புதமாக வரும்படி செய்தருளிய சுகிர்த அலங்காரியே,
இப்பிரபஞ்சம் விடுவதற்கு முன் தாயின் அன்போடே
சீஷர்களை ஆசீர்வதித்துத் தேற்றிய சுகிர்த அலங்காரியே,
அச்சமயத்தில் தரிசனையான சம்மனசுக்களால்
பேரின்ப சந்தோஷமடைந்த சுகிர்த அலங்காரியே,
தேவ சிநேக மிகுதியால் ஆத்துமம் பிரிந்து
பரலோகத்தில் சேர்ந்த மோட்ச அலங்காரியே,
சொல்லில் அடங்காத ஆனந்தத்துடன் உம்முடைய
திருக்குமாரன் சமூகத்தில் சேர்ந்த மோட்ச அலங்காரியே ,
சம்மனசுக்களும் அப்போஸ்தலர்களும் திருச்சங்கீதங்களைத்
தொனிக்க மிகுந்த பக்தி வணக்கத்தோடே சீஷர்களால் திருமேனி
அடக்கம் செய்யப்பட்ட மோட்ச அலங்காரியே,
மூன்று நாள் பரியந்தம் உமது திருக்கல்லறையில் கேட்கப்பட்ட
சம்மனசுக்களுடைய இன்பமுள்ள சங்கீதங்களால் ஸ்துதிக்கப்பட்ட மோட்ச அலங்காரியே,
மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்துப் பேரின்ப
இராச்சியத்துக்கு எழுந்தருளின மோட்ச அலங்காரியே,
அத்தியந்த மகிமை ஒட்டலோகமாய்ப் பரலோகத்தில் சேர்ந்த மோட்ச அலங்காரியே,
அப்பொழுது சம்மனசுக்களின் சேனைகளால் சொல்லில்
அடங்காத இன்ப சங்கீதங்களைக் கொண்டு ஸ்தித்துக்
கொண்டாடப்பட்ட மோட்ச அலங்காரியே,
உம்முடைய திருக்குமாரனால் நிகரற்ற
சுத்த நேசத்துடனே அரவணைக்கப்பட்ட மோட்ச அலங்காரியே,
பிதாப் பிதாக்கள் முதலிய சகல மோட்சவாசிகளினாலும்
வணங்கிக் கொண்டாடப்பட்ட மோட்ச அலங்காரியே,
சர்வலோகத்துக்கும் இராக்கினியாய்த் தேவ பிதாவினால்
மகிமைக் கிரீடம் சூட்டப்பட்ட மோட்ச அலங்காரியே,
உம்முடைய திருக்குமாரனின் அண்டையில்
மகிமைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற மோட்ச அலங்காரியே,
உமது திருப்பாதத்தால் சந்திரனை மிதிக்கும் மோட்ச அலங்காரியே,
அழகினால் பூரண சந்திரனை வென்று மகிமை
ஆடையாகச் சூரியனை அணிந்த மோட்ச அலங்காரியே,
பன்னிரண்டு நட்சத்திரங்களை முடியாகத் தரித்திருக்கும் மோட்ச அலங்காரியே,
சத்துருக்களுக்குப் பயங்கரம் வருவிக்கும் அணிவகுப்பான
பணிவிடைக்காரருள்ள வல்லபமுடைத்தான
மோட்ச அலங்காரியே,
சர்வலோகத்திலும் அளவிறந்த வல்லமை பெற்றிருக்கிற மோட்ச அலங்காரியே,
நரகசர்ப்பமாகிய பசாசின் தலையை நசுக்கிப்
பேய்களை எல்லாம் நடுங்கச் செய்து துரத்தும் மோட்ச அலங்காரியே,
தேவ இஷ்டப் பிரசாத பொக்கிஷங்களை உமது வசமாகக் கொண்டிருக்கிற மோட்ச அலங்காரியே,
கிருபை தயாபம் நிறைந்த இராக்கினியாகிய மோட்ச அலங்காரியே ,
எண்ணிறந்த நன்மை அற்புதங்களால்
உமது வல்லமையை விளங்கச் செய்தருளின மோட்ச அலங்காரியே,
பல முறை இராச்சியங்களையும் , பட்டணங்களையும் ,
குடும்பங்களையும் ஆபத்தினின்று இரட்சித்து நிலை நிறுத்திய மோட்ச அலங்காரியே,
சொல்லில் அடங்காத வேறு புதுமை உபகார சகாயங்களால்
உமது தயாளத்தைக் காட்டியருளிய மோட்ச அலங்காரியே,
எண்ணில் அடங்காத பேர்களை பேரின்ப இராச்சியத்தில் சேர்ப்பித்த மோட்ச அலங்காரியே,
பாவிகளுக்கு அடைக்கலமாகிய மோட்ச அலங்காரியே,
இப் பிரதேசத்தில் சஞ்சரிக்கிற உமது நேச பிள்ளைகளை மறவாத மோட்ச அலங்காரியே,
உமது பேரில் மெய்யான பக்தியுள்ளவர்களை ஒரு போதும் கைவிடா மோட்ச அலங்காரியே,
சீவிய நாளிலும் மரண நேரத்திலும் எங்களுக்கு
அடைக்கலமும் ஆதரவும் தேற்றரவுமாகிய மோட்ச அலங்காரியே,
சகல புனிதர்களையும் விட புண்ணியத்தினாலும்
மகிமையினாலும் விளங்குகிற மோட்ச அலங்காரியே,
சர்வலோகத்திலும் ஸ்துதி வணக்கக் கொண்டாட்டம்
பெற்றிருக்கிற மோட்ச அலங்காரியே,
படைப்புண்ட சகல வஸ்துக்களாலும் ஸ்துதிக்கவும்
மன்றாடவும் வணங்கவும் படுவதற்குப் பாத்திரமான மோட்ச அலங்காரியே,
கன்னியர்களுக்கு மாதிரிகையும் இராக்கினியுமாகிய மோட்ச அலங்காரியே,
சம்மனசுக்களுக்கும் மற்ற சகல புனிதர்களுக்கும் இராக்கினியான மோட்ச அலங்காரியே,
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
செபிப்போமாக
சர்வத்துக்கும் அதிபதி கர்த்தாவாகிய நித்திய சர்வேசுரா! அவதரித்த உம்முடைய திருக்குமாரனுக்கு மாதாவான புனித கன்னி மரியம்மாளை எங்களுக்குத் தாயாராகவும் இராக்கினியாகவும் தந்தருளினீரே /
உம்முடைய கிருபை வரப்பிரசாதத்தால் மோட்ச அலங்காரியான இந்தப் பரமநாயகியின்
உத்தம புண்ணியங்களை அடியோர்கள் இப் பரதேசத்தில் சஞ்சரிக்கிற வரைக்கும் முத்திரையாய்
அனுசரித்து உமது பேரின்ப தரிசனையில் அவருடைய ஆனந்த பாக்கியத்துக்குப் பங்காளியாகும்படிக்கு
எங்கள் மன்றாட்டுக்களையும், எங்கள் அன்புள்ள மாதா எங்களுக்காகச் செய்யும் மன்றாட்டுக்களையும்
கேட்டு எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும்.
இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி ஆமென்