- பொது ஜெபங்கள்
- ஜெபமாலை
This page is under construction
செபமாலை செபிக்கும் முறை
செபமாலையில் இரண்டு அம்சங்கள் உள்ளன
1. ஒரு பர., பத்து அருள்., ஒரு பிதா. , என்ற வாய்ச் செபம்
2. அதே வேலையில் நாம் உள்ளத்தில் தியானிக்க வேண்டிய மறை நிகழ்ச்சி என்கிற மனச் செபம்
மரியன்னை இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்தார் என்பதை லூக்கா இரு முறை நினைவு படுத்துகிறார்( லூக் 2:19,51). அந்த அன்னையின் இதயம் கொண்டு அவரது பார்வையில் நம் மீட்பின் மறை நிகழ்ச்சிகளை நாம் தியானிக்கிறோம்
அந்த மறை நிகழ்ச்சிகள் நம் மீட்புப் பணியில் நான்கு கட்டங்களாக உள்ளதை புனித சின்னப்பர் தெளிவு படுத்துகிறார்
1. தம்மையே வெறுமையாக்கி மனித உருவில் தோன்றினார் - மகிழ்ச்சி மறை உண்மைகள்
2. என் அன்பார்ந்த மைந்தர் இவரே - இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் - ஒளியின் மறை உண்மைகள்
3. சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார் - துயர மறை உண்மைகள்
4. கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தினார் - மகிமை மறை உண்மைகள்
நற்செய்தியின் பொழிவே செபமாலை என்பதால் அனைவரும் பாராட்டிப் படிக்க வேண்டிய பக்தி முயற்சி இது
செய்யும் முறை :
1. பாடுபட்ட சிலுவையில் - விசுவாசப்பிரமாணம்
2. பெரிய மணி - மெய்யான மனிதனும் மெய்யான இறைவனும் ஒன்றாயிருக்கிற இயேசு கற்பித்த செபத்தை சொல்லுவோம்
பரலோகத்தில் இருக்கிற ...
3. மூன்று சிறிய மணிகள் :
1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே ,
எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும்படியாக திரு மைந்தனை மன்றாடும் .அருள் நிறைந்த..
2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாக இருக்கிற புனித இறையன்னையே ,
எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உமது திருமைந்தனை மன்றாடும் .அருள் நிறைந்த ...
3. தூய ஆவியாரான இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராகவும் , நேசத்திற்குரிய பத்தினியுமாக இருக்கிற புனித இறையன்னையே ,
எங்களிடம் அன்பு வளரும்படியாக உமது திருமைந்தனை மன்றாடும் .அருள் நிறைந்த ..
4. மூன்று சிறிய மணிகளுக்குப் பின் : திருத்துவத்துதி :
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக . ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்
5. ஒவ்வொரு பேருண்மைகளையும் சொல்லி தியானிப்போம்
ஒரு பர 10 அருள் ஒரு பிதா சொல்லுவோம்
6. பத்து மணிகள் முடிந்ததும்
ஓ என் இயேசுவே ! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் . நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும் . சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும் . உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ அவர்களுக்கு விசேச தயை புரியும்
ஆரம்ப செபம்
அளவில்லாத சகல நன்மையையும் சுரூபியாயிருக்கிற சர்வேசுரா சுவாமி ! நீச மனிதருமாய் நன்றியரியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள் , மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச் சந்நிதியிலே இருந்து செபம் பண்ண பாத்திரமாக இல்லாதவர்களாக இருந்தாலும் தேவரீருடைய அளவில்லாத தயையை நம்பிக் கொண்டு தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும் புனித தேவமாதாவுக்கு ஸ்தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி செபம் செய்ய ஆவலாயிருக்கிறோம் . இந்த செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்க தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி ஆமென்
பரிசுத்த ஆவியானவருக்கு செபம்
திவ்விய ஸ்பிரித்து சாந்துவே தேவரீர் எழுந்தருளி வாரும் . பரலோகத்தின் பிரகாசத்தின் கதிர்களை வர விடும் . தரித்திரர்களுடைய பிதாவே , கொடைகளைக் கொடுக்கிறவரே , பேரின்ப ரசமுள்ள இளைப்பாற்றியே , பிரயாசத்திற்கு சுகமே அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும் . வெகு ஆனந்தத்தோடு கூடி இருக்கிற பிரகாசமே , உமது விசுவாசிகளின் உற்பனங்களை நிரப்பும் . உம்முடைய தெய்வீகமின்றி மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை . அசுத்தமாயிருக்கிறதை சுத்தம் பண்ணும் . உலர்ந்ததை நனையும் . நோவாய் இருக்கிறதை குணமாக்கும் . வணங்காததை வணங்கப் பண்ணும் . குளிரோடிருக்கிறதை குளிர் போக்கும் . தவறினதை செவ்வனே நடத்தும் . உம்மை நம்பின விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும் . புண்ணியத்தின் பேறு பலன்களையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி ஆமென்
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
1. தேவமாதாவுக்கு கபிரியேல் சம்மனசு மங்களம் சொன்னது
2. தேவமாதா எலிசபெத்தம்மாளைச் சந்தித்தது
3. கர்த்தர் பிறந்தது
4. கர்த்தரைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது
5. காணாமல் போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டு களி கூர்ந்தது
துயர் நிறை மறை உண்மைகள்
1. இயேசு பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்த்தது
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்டது
3. இயேசுவுக்கு முள் முடி சூடினது
4. இயேசு சிலுவையை சுமந்தது
5. இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்தது
மகிமை நிறை மறை உண்மைகள்
1. இயேசு உயிர்த்தெழுந்தது
2. இயேசு விண்ணேற்றம் அடைந்தது
3. தேவமாதா பேரிலும் அப்போஸ்தலர் பேரிலும் பரிசுத்த ஆவி இறங்கி வந்தது
4. தேவமாதா பரலோகத்திற்கு ஆரோபணமானது
5. தேவமாதா பரலோக பூலோக அரசியாக முடி சூட்டப்பட்டது
ஒளியின் மறை உண்மைகள்
1. இயேசு ஞானஸ்நானம் பெற்றது
2. இயேசு கானாவூர் திருமணத்தில் முதல் புதுமை நிகழ்த்தினது
3. இயேசு விண்ணரசைப் பறை சாற்றியது
4. இயேசு தாபோர் மலையில் உருமாறினது
5. இயேசு நற்கருணையை நிறுவினது
செபமாலை செபிக்கும் முறை
செபமாலையில் இரண்டு அம்சங்கள் உள்ளன
1. ஒரு பர., பத்து அருள்., ஒரு பிதா. , என்ற வாய்ச் செபம்
2. அதே வேலையில் நாம் உள்ளத்தில் தியானிக்க வேண்டிய மறை நிகழ்ச்சி என்கிற மனச் செபம்
மரியன்னை இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்தார் என்பதை லூக்கா இரு முறை நினைவு படுத்துகிறார்( லூக் 2:19,51). அந்த அன்னையின் இதயம் கொண்டு அவரது பார்வையில் நம் மீட்பின் மறை நிகழ்ச்சிகளை நாம் தியானிக்கிறோம்
அந்த மறை நிகழ்ச்சிகள் நம் மீட்புப் பணியில் நான்கு கட்டங்களாக உள்ளதை புனித சின்னப்பர் தெளிவு படுத்துகிறார்
1. தம்மையே வெறுமையாக்கி மனித உருவில் தோன்றினார் - மகிழ்ச்சி மறை உண்மைகள்
2. என் அன்பார்ந்த மைந்தர் இவரே - இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் - ஒளியின் மறை உண்மைகள்
3. சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார் - துயர மறை உண்மைகள்
4. கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தினார் - மகிமை மறை உண்மைகள்
நற்செய்தியின் பொழிவே செபமாலை என்பதால் அனைவரும் பாராட்டிப் படிக்க வேண்டிய பக்தி முயற்சி இது
செய்யும் முறை :
1. பாடுபட்ட சிலுவையில் - விசுவாசப்பிரமாணம்
2. பெரிய மணி - மெய்யான மனிதனும் மெய்யான இறைவனும் ஒன்றாயிருக்கிற இயேசு கற்பித்த செபத்தை சொல்லுவோம்
பரலோகத்தில் இருக்கிற ...
3. மூன்று சிறிய மணிகள் :
1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே ,
எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும்படியாக திரு மைந்தனை மன்றாடும் .அருள் நிறைந்த..
2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாக இருக்கிற புனித இறையன்னையே ,
எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உமது திருமைந்தனை மன்றாடும் .அருள் நிறைந்த ...
3. தூய ஆவியாரான இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராகவும் , நேசத்திற்குரிய பத்தினியுமாக இருக்கிற புனித இறையன்னையே ,
எங்களிடம் அன்பு வளரும்படியாக உமது திருமைந்தனை மன்றாடும் .அருள் நிறைந்த ..
4. மூன்று சிறிய மணிகளுக்குப் பின் : திருத்துவத்துதி :
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக . ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்
5. ஒவ்வொரு பேருண்மைகளையும் சொல்லி தியானிப்போம்
ஒரு பர 10 அருள் ஒரு பிதா சொல்லுவோம்
6. பத்து மணிகள் முடிந்ததும்
ஓ என் இயேசுவே ! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் . நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும் . சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும் . உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ அவர்களுக்கு விசேச தயை புரியும்
ஆரம்ப செபம்
அளவில்லாத சகல நன்மையையும் சுரூபியாயிருக்கிற சர்வேசுரா சுவாமி ! நீச மனிதருமாய் நன்றியரியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள் , மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச் சந்நிதியிலே இருந்து செபம் பண்ண பாத்திரமாக இல்லாதவர்களாக இருந்தாலும் தேவரீருடைய அளவில்லாத தயையை நம்பிக் கொண்டு தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும் புனித தேவமாதாவுக்கு ஸ்தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி செபம் செய்ய ஆவலாயிருக்கிறோம் . இந்த செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்க தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி ஆமென்
பரிசுத்த ஆவியானவருக்கு செபம்
திவ்விய ஸ்பிரித்து சாந்துவே தேவரீர் எழுந்தருளி வாரும் . பரலோகத்தின் பிரகாசத்தின் கதிர்களை வர விடும் . தரித்திரர்களுடைய பிதாவே , கொடைகளைக் கொடுக்கிறவரே , பேரின்ப ரசமுள்ள இளைப்பாற்றியே , பிரயாசத்திற்கு சுகமே அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும் . வெகு ஆனந்தத்தோடு கூடி இருக்கிற பிரகாசமே , உமது விசுவாசிகளின் உற்பனங்களை நிரப்பும் . உம்முடைய தெய்வீகமின்றி மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை . அசுத்தமாயிருக்கிறதை சுத்தம் பண்ணும் . உலர்ந்ததை நனையும் . நோவாய் இருக்கிறதை குணமாக்கும் . வணங்காததை வணங்கப் பண்ணும் . குளிரோடிருக்கிறதை குளிர் போக்கும் . தவறினதை செவ்வனே நடத்தும் . உம்மை நம்பின விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும் . புண்ணியத்தின் பேறு பலன்களையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி ஆமென்
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
1. தேவமாதாவுக்கு கபிரியேல் சம்மனசு மங்களம் சொன்னது
2. தேவமாதா எலிசபெத்தம்மாளைச் சந்தித்தது
3. கர்த்தர் பிறந்தது
4. கர்த்தரைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது
5. காணாமல் போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டு களி கூர்ந்தது
துயர் நிறை மறை உண்மைகள்
1. இயேசு பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்த்தது
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்டது
3. இயேசுவுக்கு முள் முடி சூடினது
4. இயேசு சிலுவையை சுமந்தது
5. இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்தது
மகிமை நிறை மறை உண்மைகள்
1. இயேசு உயிர்த்தெழுந்தது
2. இயேசு விண்ணேற்றம் அடைந்தது
3. தேவமாதா பேரிலும் அப்போஸ்தலர் பேரிலும் பரிசுத்த ஆவி இறங்கி வந்தது
4. தேவமாதா பரலோகத்திற்கு ஆரோபணமானது
5. தேவமாதா பரலோக பூலோக அரசியாக முடி சூட்டப்பட்டது
ஒளியின் மறை உண்மைகள்
1. இயேசு ஞானஸ்நானம் பெற்றது
2. இயேசு கானாவூர் திருமணத்தில் முதல் புதுமை நிகழ்த்தினது
3. இயேசு விண்ணரசைப் பறை சாற்றியது
4. இயேசு தாபோர் மலையில் உருமாறினது
5. இயேசு நற்கருணையை நிறுவினது
ஜெபமாலை செய்யும் பிற வழிகள்
புனித ஜெர்துருத்தம்மாளின் ஜெபமாலை
துவக்க செபம் : விசுவாசப்பிரமாணம் சொல்லித் துவங்கவும் . ஒரு பர ,மூன்று அரு, ஒரு திரி சொல்லவும் . பதக்கத்திலும் பெரிய மணிகளிலும் கர்த்தர் கற்பித்த செபத்தை சொல்லவும் .
ஒவ்வொரு சிறிய பத்து மணிகளிலும் "நித்திய பிதாவே உமது திருமகனின் விலையேறப் பெற்ற இரத்தத்தோடு , இன்று உலகெங்கிலும் நிறைவேற்றப்படும் சகல திருப்பலிகளை ஒன்றித்து, எங்கள் இல்லத்திலும் , குடும்பத்திலும் திருச்சபையிலும் உலகெங்கிலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலும் இருக்கும் சகல ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென் "(ஒவ்வொரு முறை செபிக்கும் போதும் 1000 உத்தரிக்கிற ஆத்துமாக்களின் கடன் தீர்கிறது . )
ஒவ்வொரு பத்து மணி முடிவிலும்
"இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே , பாவிகளின் இருதயங்களை தேவ பிதாவின் சத்தியத்திற்கும் ஒளிக்கும் திறந்தருளும். மரியாளின் மாசற்ற இருதயமே பாவிகள் மனந்திரும்ப மன்றாடும் ஆமென் "
மற்றும் ஒரு திரி செபம் சொல்லவும்
Back to Top
துவக்க செபம் : விசுவாசப்பிரமாணம் சொல்லித் துவங்கவும் . ஒரு பர ,மூன்று அரு, ஒரு திரி சொல்லவும் . பதக்கத்திலும் பெரிய மணிகளிலும் கர்த்தர் கற்பித்த செபத்தை சொல்லவும் .
ஒவ்வொரு சிறிய பத்து மணிகளிலும் "நித்திய பிதாவே உமது திருமகனின் விலையேறப் பெற்ற இரத்தத்தோடு , இன்று உலகெங்கிலும் நிறைவேற்றப்படும் சகல திருப்பலிகளை ஒன்றித்து, எங்கள் இல்லத்திலும் , குடும்பத்திலும் திருச்சபையிலும் உலகெங்கிலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலும் இருக்கும் சகல ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென் "(ஒவ்வொரு முறை செபிக்கும் போதும் 1000 உத்தரிக்கிற ஆத்துமாக்களின் கடன் தீர்கிறது . )
ஒவ்வொரு பத்து மணி முடிவிலும்
"இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே , பாவிகளின் இருதயங்களை தேவ பிதாவின் சத்தியத்திற்கும் ஒளிக்கும் திறந்தருளும். மரியாளின் மாசற்ற இருதயமே பாவிகள் மனந்திரும்ப மன்றாடும் ஆமென் "
மற்றும் ஒரு திரி செபம் சொல்லவும்
Back to Top
இயேசுவின் திரு இரத்த செபமாலை
நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்.
இதோ ! ஆண்டவரின் சிலுவை. சத்துருகள் அகன்றுப் போகட்டும். இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள் அனைவரை விட்டும் அகன்று போகட்டும். யூதாகுலத்தின் சிங்கமும், தாவீதின் குலக் கொழுந்துமானவர் ஜெயம் கொண்டார். !அல்லேலூயா (3)
எல்லோரும்: இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும் (2 முறை)
செபிப்போமாக : எங்களுக்காகச் சிலுவையில் தொங்கிய இயேசு இரட்சகரே ! எங்கள்பகைவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாத்தருளும். சகல அபாய மரணத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றி மகா பாக்கியமான நல்ல மரணத்தையும், நித்திய பரலோக ஜீவியத்தையும் எங்களுக்குக் கட்டளை இட்டருளும். இரக்கம்நிறைந்த இயேசுவே! நீங்கள் சுமந்த பாரமான சிலுவையால் ஏற்பட்ட உம்தோளின் கொடூரக் காயத்தினையும் உம் ஐந்து திருக்காயங்களையும் பார்த்து, பாவிகளாகிய எங்கள் மேலும், பரிசுத்த சகல ஆத்துமாக்கள் மீதும் இரக்கமாயிரும். எங்களுக்காகப் பாடுகள் ஏற்ற இயேசுவே! அன்று புனிதத்துணியில் பதிந்த உம் திருமுகத்தை நாங்கள் தரிசிக்க இப்போதும் எப்போதும் எனக்கு வரம் அருளும். ஆமென் !
Back to Top
courtesy :St. Pio Rosary movement
நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்.
இதோ ! ஆண்டவரின் சிலுவை. சத்துருகள் அகன்றுப் போகட்டும். இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள் அனைவரை விட்டும் அகன்று போகட்டும். யூதாகுலத்தின் சிங்கமும், தாவீதின் குலக் கொழுந்துமானவர் ஜெயம் கொண்டார். !அல்லேலூயா (3)
எல்லோரும்: இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும் (2 முறை)
- ஒருவர் : இயேசுவின் திருசிரசிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே! எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும் (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே . . . . . . . . ) (5 முறை சொல்லவும்)
- ஒருவர் : இயேசுவின் திருத்தோளிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே(5) எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும். (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே . . . . . . . . ) (5 முறை சொல்லவும்)
- ஒருவர் : இயேசுவின் திருவிலாவிலிருந்து வழிந்தோடிய பரிசத்த இரத்தமும், தண்ணீருமே (5 முறை) எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும். இயேசுவின் அன்புக்கோட்டைக்குள்ளே . . . . .
- ஒருவர்: இயேசுவே! உமது திருக்கை, கால்களிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும். (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே . . . . . . . . ) (5 முறை சொல்லவும்)
- ஒருவர் : இயேசுவின் அனைத்துக் காயங்களிலிருந்தும் வழிந்தோடிய பரிசுத்தஇரத்தமே (5 முறை) எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும். இயேசுவே! உமது அன்புக்கோட்டைக்குள்ளே . . . . .
செபிப்போமாக : எங்களுக்காகச் சிலுவையில் தொங்கிய இயேசு இரட்சகரே ! எங்கள்பகைவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாத்தருளும். சகல அபாய மரணத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றி மகா பாக்கியமான நல்ல மரணத்தையும், நித்திய பரலோக ஜீவியத்தையும் எங்களுக்குக் கட்டளை இட்டருளும். இரக்கம்நிறைந்த இயேசுவே! நீங்கள் சுமந்த பாரமான சிலுவையால் ஏற்பட்ட உம்தோளின் கொடூரக் காயத்தினையும் உம் ஐந்து திருக்காயங்களையும் பார்த்து, பாவிகளாகிய எங்கள் மேலும், பரிசுத்த சகல ஆத்துமாக்கள் மீதும் இரக்கமாயிரும். எங்களுக்காகப் பாடுகள் ஏற்ற இயேசுவே! அன்று புனிதத்துணியில் பதிந்த உம் திருமுகத்தை நாங்கள் தரிசிக்க இப்போதும் எப்போதும் எனக்கு வரம் அருளும். ஆமென் !
Back to Top
courtesy :St. Pio Rosary movement
மரியன்னையின் தூய செபமாலை
துவக்கம் : நமது மீட்பருடைய 5 புனித காயங்களையும் மகிமைப்படுத்தி, 5 முறை சிலுவை வரையவும்.
பெரிய மணியில்: வியாகுலம் நிறைந்த மரியன்னையின் தூய இதயமே, உமது அடைக்கலத்தைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சிறிய மணியில்: பரிசுத்த மாதாவே அன்பினால் பற்றி எரியும் உமது தூய இதயத்தின் வழியாய் எங்களைக் காப்பாற்றும்.
முடிவில் பிதாவுக்கும். . . . . . (3 முறை)
தேவனின் தாயே, உமது அருள் வல்லமை நிறைந்த சிநேக அக்கினியை அகில உலக மனுக்குலத்தின் மீது இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் பொழிந்தருளும். ஆமென்.
மரியாயின் மாசற்ற இதயம் எங்கும், எப்போதும், மாட்சியும், மகிமையும், புகழும், வெற்றியும் பெறுவதாக !
Source : St. Pio Rosary movement
Back to Top