- வணக்க மாதம்
- புனித சூசையப்பர்
- நாள் 1-5
புனித சூசையப்பர் உயர்ந்த நிலைக்கு தெரிந்து கொள்ளப்பட்டதை தியானிப்போம்
தியானம்
வல்லமை படைத்த இறைவன், பாவ இருளில் மூழ்கி கிடக்கம் மனித குலத்திற்கு மீட்பளிக்க விரும்பியதால் இயேசுக் கிறிஸ்துவை பூவுலகிற்கு அனுப்பி பாடுபட்டு மரித்து அதன்மூலம் நமக்கு முடிவில்லா வாழ்வை தரவிரும்பி பெண்களின் தூயவளான மரியன்னையை அவருக்கு தாயாராகத் தெரிந்து கொண்டார். இறைவன் தன்னருளால், வானதூதர்களையும், புனிதர்களையும் மரியன்னை காண்பதற்கு ஆசிவழங்கினார். அன்னையை ஜென்ம பாவமில்லாமல் பூமியில் பிறக்கச் செய்து, தூய ஆவியால் நிரப்பி வானுலகிலும் பூவுலகிலும் உயர்வடையச் செய்தார். தூய ஆவியால் மரியன்னை கருவுற்று இயேசுகிறிஸ்துவைப் பெற்றெடுப்பதற்கு ஒர் துணையும், இயேசுகிறிஸ்துவுக்கு பூவுலகில் ஒரு தந்தையும், வானுலகில் நீதிமானும் தேவைப்பட்டதால், சூசையப்பரை இறைவன் தேர்ந்தெடுத்து மரியன்னைக்கு கணவராகவும் குழந்தை இயேசுவுக்கு தந்தையுமாக்கினார். தக்க வயதை அடையும்வரை பேணிகாக்கும் நல்லதொரு தந்தையாக இவரை இறைவன் நியமித்தார்.
இறைவன், தன் மகனை முன்மாதிரிகையாக வளர்க்கும் பொறுப்பையும், அருளையும், ஆசியையும் புனித சூசையப்பருக்கு வழங்கினார். தூய மரியன்னைக்கு அளித்த உயர்வை விடவும் புனித சூசையப்பருக்கு அளித்த நீதிமான் என்ற உயர்வு, வானுலகிலும் பூவுலகிலும், யாருக்கும் வழங்கப்படவில்லை. அதனால் புனித சூசையப்பர் வானதூதர்களைவிடவும், தூயவர்களைவிடவும் மேலானவரென வேத வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறைவன் யாரை உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறாரோ அவர்களுக்கு அளப்பரிய ஆசியையும், அருளையும் நல்குவதோடு நற்குணததையும கொடையாக அளிக்கிறார். அரசனாக முடிசூட்டிகொள்கிறவர்கள் நல்லாட்சி செய்யவும், அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் இறைப்பணியை செவ்வனே செயலாற்றவும், வேறு பணிகளில் ஈடுபடுவோர் தத்தம் பணிகளை திறம்பட ஆற்றவும் இறைவன் விரும்புகிறார். எல்லா பணிகளுக்கும் மேலான பணிக்கு தெரிவு செய்யப்பட்ட புனித சூசையப்பருக்கு இறைவன் அவருடைய பெயர் என்றும் நிலைக்க மேலான அருளையும் ஆற்றலையும் அவருக்களித்தார்.
புனித சூசையப்பர் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து, தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை மிக நன்றாக செய்துமுடித்தார். அவர் பொறுமை, நம்பிக்கை, விசுவாசம், இறைஅன்பு, பணிவு ஆகிய நற்குணங்களைக்கொண்டு வாழ்ந்தார். அதனால் அவரை இறைவன் தூயவர்களை விடவும் மேலாக உயர்த்தினார். இதன்மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, நம்மை இறைவன் என்றென்றும் அன்புசெய்து வான்வீட்டைத் தருவதற்காக படைத்தார் என்பதுதான். அவர் கிறிஸ்தவர்களல்லாதோரையும் தம் அருளால் கிறிஸ்தவர்களாக்கினார். இறைவன் சகல வரங்களையும் அளித்து திருச்சபையை நிலைநிறுத்தி அருட்சாதனங்கள் வழியாக தம் அருங்கொடைகளை அளித்து வருகிறார்.
புனித ஞானப்பிரகாசியார், தமது இதயத்தைவிடவும் தான் கிறிஸ்தவனாய் இருப்பதே பெரிது என்று கூறியதுபோல் நாமும் எல்லா நலன்களைவிடவும் கிறிஸ்தவனாயிருப்பதே பெரிது என்பதை உணர்ந்து அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும். எத்தனையோ கிறிஸ்தவர்கள் இறைவனுக்கு வேதனை கொடுப்பதை நாம் அறிந்து, தவறு நடவாமல் இருப்போம். அவரவர்க்கு இறைவன் அளித்துள்ள பணிகளில் பிரமாணிக்கமாய் இருந்து அவரவர் கடமைகளில் புனித சூசையப்பரைப்போல் சரிவர செய்தால் அனைவரும் புனிதராவோம்; எப்பொழுதும் வான்விட்டில் எல்லையில்லா ஆனந்தமடைவோம். தன்னுடைய பணியை சரிவர செய்யாமல், வேறுபணியில், நிலையில் நன்றாக இருப்பேன் என எண்ணும் கிறிஸ்தவர்கள் தன் கடமையிலிருந்து தவறுகின்றனர். துறவறத்தார் தமக்குரிய ஒழுங்குகளை கடைப்பிடித்தால் மட்டுமே அவரின் வீட்டை அடைவார்கள். அதனால் கிறிஸ்தவர்கள் எல்லோரும் புனித சூசையப்பரை கண்டுணர்ந்து அவரவர் கடமைகளை சரிவர செய்வோம் என உறுதி கொள்வோம்.
புதுமை
பிரான்சு நாட்டில் லியோன் என்ற மாநகரில் அருளம்மாள் என்ற பத்தியுள்ள கன்னிகை இருந்தார். இவர் புனித ஊர்சுலா சபையைச் சேர்ந்த ஒரு துறவற இல்லத்தின் தலைவியாக இருந்தபோது கொடிய நோயால் அவதியுற்றார். அவர் புனித சூசையப்பரிடம் அதிக பக்தி கொண்டிருந்தார். நோய்வாய்ப்பட்டபோதும் மிக அதிக பக்தியோடு செபிப்பார். நோயின் கொடுமையால் நோயில்பூசுதல் எனும் அருட்சாதனத்தினைப் பெற்று அசைவற்று இருந்தபோது, பிற கன்னியர்கள் அவர் சாகப் போகிறார் என காத்திருக்கும்போது, திடீரென ஒர் அதிசய காட்சியை அவர் படுத்திருந்த அறையில் கண்டனர்.
அதிக ஒளியும், நறுமணமும், இன்னிசையும் உண்டாகி வான்வீடு தெரிந்தது. அப்போது அங்கு தெரிந்த மெத கூட்டத்தினிடையே அவருடைய காவல்தூதர், மகிமைநிறைந்த ஒரு வாலிப தோற்றத்தொடும், தங்கம்பொல் ஒளிவீசும் தலை முடியோடும், கையிலே எரியும் மெழுகுதிரியை பிடித்துக்கொண்டு காட்சி அளித்தார். அவரருகில் சூரிய ஒளியை மங்கச செய்யும் ஒளியுள்ள முகத்தோடும், பூவுலக மன்னர்களைவிட மேலான அலங்காரத்துடனும் புனித சூசையப்பர் வந்தார்.
சூசையின் முகம் இளவயது மனிதனுடைய சாயலாகவும், தலைமயிர் பொன்னிறமாகவும், அணிந்திருந்த ஆடை வெண்மையாகவும், அரசத் தோற்றத்துடனும் தோன்றியது. புனித சூசையப்பர் இரக்கமாய் அக்கன்னிகையிடம், "உன்னை மோட்ச இன்பத்தில் திளைக்க செய்வேன்" என்று கூறி பரிமளத் தைலத்தால் உடலின் பாதிக்கப்பட்ட பகுதியை தடவினார். அவர் தொட்ட உடனே அச்சகோதரி நோய் குணமடைந்து முன்பை விடவும் பலசாலியானார். புனித சூசையப்பர் அவர்களை தயவாய் ஆசிர்வதித்து மறைந்தார்.
உடனே அக்கன்னிகை முழந்தாள்படியிட்டு புனித சூசையப்பரை வணங்கினாள். பின்னர் பிற கன்னியர்களைப்போல் தனக்குரிய கடமைகளை நலமடைந்த சகோதரி தவறாது செய்து வந்தார். ஆனால் அவரை இதுவரை கவனித்து வந்த மருத்துவரோ இன்றோ நாளையோ இவர் இறக்கலாம் என தொடர்ந்து கூறியதால், இப்போது அச்சகோதரிக்கு நடந்துள்ளதை "இது அதிசயம்தான்" என்று எழுதி கொடுத்தார். மேலும் அச்சகோதரி பலவீனப்பட்ட இடத்தில் புனித சூசையப்பர் தடவிய நறுமண தைலத்தை துணியில் துடைத்து வைத்திருந்தார். அந்தத் துணியின் நறுமணம் வீசியதோடு பல நோயாளிகள் அதனைத் தொட்டதும் குணமடைநதனர. எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நமது துன்ப வேளைகளில் அவரைத் தேடி செல்வோம். (3பர, அரு, பிதா)
ஜெபம்
எல்லா தூயவர்களை விடவும் மேலான நிலைக்கு தெரிந்துகொள்ளப்பட்ட புனித சூசையப்பரே! உம்மை வணங்கி மகிமைப்படுத்துகிறோம். இறைவன் உமக்களித்த பணியை சரிவர செய்ததால் நீர் தூயவர்களுக்கும் மேலான தூயவரானிர் உமது மேலான உயர்வையும், புனிதத்துவத்தையும் பார்த்து உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் கிறிஸ்தவரென்ற பெயரை தூய்மையாய் காத்து அதற்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டிய உதவி புரிந்தருளும், எங்களைப்படைத்து காத்து சகல உதவிகளையும், அருளையும் தந்துகொண்டி ருக்கிற உமது மகனாகிய இயேசுகிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடும்படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
தூய மரியன்னையின் கணவரான புனித சூசையப்பரே வாழ்க! இயேசுவின் அன்புத் தந்தையாகிய புனித சூசையப்பரே வாழ்க! இறைவனின் அதிகாரத்தை செயல்படுத்தத் தெரிந்துகொள்ளப்பட்ட புனித சூசையப்பரே வாழ்க!
செய்ய வேண்டிய நற்செயல்
புனித சூசையப்பர் பீடத்தினை மலர்களால் அலங்கரிப்பது.
இரண்டாம் தேதி
புனித சூசையப்பர் பிறந்ததை தியானிப்போம்
தியானம்
தாவீது குலத்தில் புனித சூசையப்பர் பிறந்தார். அபிரகாம், ஈசாக்கு , யாக்கோபு, சூசை போன்ற ஞான தந்தையர்களும், சாலமன், எசேக்கியால், யோசியாஸ் போன்ற பேரரசர்களின் வழித்தோன்றல் தான் புனித சூசையப்பர். அவர் மரபுப்படி அரசராக இருந்திருக்க வேண்டியவர். யூதர்களும் அவர்களின் அரசர்கள் சிலரும் இறைவனுக்கு எதிராக செயல்பட்டதால் தாவீது குலத்தில் உள்ளவர்கள் அரசாட்சியிலிருந்து ஏழை குடிமக்களாக வாழ்ந்து வந்தனர் . அரச வம்சத்தில் தோன்றிய பெற்றோருக்கு மகவாய்ப் பிறந்த புனித சூசையப்பர், தன்னுடைய முன்னோர்களின் தன்மைக்குத்தக்க வாழந்து அவர்களுக்கு நற்பெயர் கிடைக்கச் செய்தார். அவர் ஒருபோதும் செல்வத்தை விரும்பவில்லை. தாழ்ச்சி, பொறுமை, அமைதி என்ற நற்குணங்களில் ஊறி போயிருந்தார்.
அவர் பிறந்தபோது அதற்குரிய பெரியவிழா பூவுலகில் நடைபெறவில்லை. ஆனால் வானுலகில் வானதூதர்கள் இவரது பிறப்பினை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இறைவனோ தன்னுடைய மகன் இயேசுகிறிஸ்துவை இவர் பரிசுத்தமாய் பேணி வளர்ப்பார் என்றும், இயேசுகிறிஸ்து தனக்கு இவர் வளர்ப்பு தந்தையாக இருப்பாரென்றும், தூய ஆவியானவரோ, இவர் தூய கன்னிமரிக்கு பரிசுத்த கணவராக இருப்பார் எனறும வானுலகில் மகிழ்ச்சியடைந்தனர். உலகில் உள்ள அனைதது சுகங்களையும் இவருக்கு அளிக்காமல் பக்தியையும், ஞானத்தையுமே இவருக்கு இறைவன் அபரிமிதமாக அளித்தார்.
வேத வல்லுநர்கள் கூறியதுபோல் இவர் ஜென்மப்பாவத்தோடு தாய் வயிற்றில் ஜெனித்தாலும், அவர் தாய் வயிற்றில் இருக்கும்போதே ஆசீர்வதிக்கப்பட்டார்.
பாவத்தினால் வருகின்ற துர்இச்சைகளிலிருந்து இவரைக் காத்தார் இறைவன். அருள் வழங்கப்பட்ட இவர் வாழ்நாளெல்லாம் கடவுளுக்கு ஏற்புடையவராக இருந்தார். அதனால் பெருமை கொள்ளாது மேன்மேலும் புண்ணிய வாழ்வில் ஈடுபட்டார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் புனித சூசையப்பரின் பிறப்பு எத்தகையது என அறிந்தோமோ அதுபோல் நாமும் ஞான வாழ்வு வாழ வேண்டும். பிதா, சுதன், தூய ஆவி இவர்மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தபோதும் உலக செல்வ சுகத்தை இவருக்கு மறுத்து வான் வீட்டிற்குரிய செல்வங்களை மட்டுமே அளித்தார்கள். நாமும் உலக இன்பங்களை மறந்து வானுலக இன்பத்தைத் தேடுவோம். செல்வத்தால் ஊதாரித்தனமும், ஆங்காரமும், உடலின் இச்சைகளால் மோகபாவமும் உண்டாகிறது. எனவே, இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கிறவர்கள் மோட்சத்தில் நுழைவது கடினமென்றும், பூவுலகில் துன்பப்படுகிறவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றும் இயேசுகிறிஸ்து கூறியுள்ளார்.
புனித சூசையப்பர் தனது குலப் பெருமையைப் பாராட்டாமல், ஆங்காரப்படாமல், தான் பிறந்த ஏழ்மை நிலையிலே சந்தோசமடைந்தார். அப்படியே நாமும் தாழ்ச்சியுடன் நமது சாதி, மத, செல்வ உயர்வுகளைப் பாராட்டாமல், ஆங்காரமின்றி பிறரிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய நிலைக்கு தக்கவாறு நாம் புண்ணிய வழியில் நடக்க வேண்டும். நடுத்தீர்வை நாளில் இயேசு நம்மிடம் நமது இனத்தைப் பற்றியோ, செல்வத்தைப்பற்றியோ, அந்தஸ்த்தைப் பற்றியோ விசாரிக்க மாட்டார். மாறாக எளியோருக்கு உதவி செய்தோமா என்பதை அறிந்து மோட்சம் அல்லது நரகத்தை அளிக்கிறார். இரக்கமில்லா செல்வந்தன் நெருப்பில் வேகும்போது ஏழை லாசர் இயேசுவின் மடியில் அமர்ந்திருக்கவில்லையா? இவர்களில் யார் மேலானவர் என்பதை நாம் தெரிந்து கொண்டு அதன்படி நாம் நடப்போம். தாய் தந்தையர் தங்களுடைய பிள்ளைகள் நல்லவர்களாகவும், செல்வந்தர்களாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டுமென்று விரும்புவர், அதற்காக செபிப்பர். நேர்ச்சை காணிக்கை செய்து கொள்வர். ஆனால் அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகவும், புண்ணிய நெறி வழுவாமல் நடக்க வேண்டுமென்றும் கடவுளிடம் கேட்டு கொள்வதில்லை.
புனித ஞானப்பிரகாச அரசரின் தாய் பிளங்கம்மாள் தன்னுடைய மகன் சாவான பாவம் செய்வதைவிட செத்துப் போவதே மேல் என்று சொன்னார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் நம் பிள்ளைகளை உலக விஷயங்களில் தவறான ஆர்வம் காட்டாமல் வானுலக புண்ணியங்களில் அதிக ஈடுபாடு காட்டுமாறு வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நமக்கு மனக்கஷ்டத்தினைக் கொடுக்காமல் உண்மையான மகிழ்ச்சியும், புகழ்ச்சியும் கிடைக்கும்படி வாழ்வார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
புதுமை
சுமார் 270 ஆண்டுகளுக்குமுன் இயேசு சபை துறவியான இராயப்பர் கோத்தோனியூஸ் வாழ்ந்து வந்தார். அவர் ஹென்றிக்குள் என்ற அரசர்க்கு ஆத்ம குருவாகவும், உற்ற நண்பனாகவும் இருந்தார். கிறிஸ்தவர்கள் அல்லாதவர் வசிக்கும் இடத்தில் துணிவோடு துறவற இல்லங்களை நிறுவி நற்செயல்களை செய்து வந்தார். அவர் புனித சூசையப்பரை தனக்கு ஆதரவாகவும் பாதுகாவலராகவும் தெரிந்து கொண்டு, அவரிடம் ஆழ்ந்த பக்தியோடு செபித்ததுமல்லாமல் பிரான்ஸ் நாடு முழுவதும் அவரது புகழைப் பரப்ப தன்னாலான முயற்சிகளை செய்து வந்தார். அவர் அந்நாட்டில் செய்த மறையுரைகளிலும், உரையாடல்களிலும், தான் எழுதிய நூலிலும் புனித சூசையப்பரை வாழ்த்தி, அனைவரும் அவரை வணங்கி அவரிடம் பக்தி நம்பிக்கை வைக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
அதனால் அந்நாட்டிலும், அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் புனித சூசையப்பரின் புகழ் பரவியது. மேலும் புனித சூசையப்பருக்கு மிக பிரபலமான பெரிய ஆலயம் ஒன்றினை நிறுவி, அதனை அழகுபடுத்தி, புனித சூசையப்பருக்கு திருவிழாவினை ஆடம்பரமாக நடத்தினார். புனித சூசையப்பரோ அக்குருவுக்கு தம் அருள் வரங்களை வழங்கி, அவருடைய துன்ப வேளைகளில் அவரை காத்து, அவரது நற்செயல்களில் ஆசீர்வதித்தார்.
இறுதியாக "தன்னுடைய நாளான மார்ச் 19-ஆம் தேதி இறப்பார்" என்று அக்குருவின் மரணத்தை முன்னறிவித்தார். மரண நேரத்தில் தூய மரியன்னை அவருக்குத் தோன்றி, தம் இரக்கத்தைக் காட்டி, "நீர் எனது கணவராகிய புனித சூசையப்பரிடம் கொண்டிருந்த பக்தியும், அவரது புகழை பரப்பியதற்காகவும் நான் உமக்கு உதவி செய்யவும் உம்மை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லவும் வந்தேன் என்றார். அவ்வாறு அவர் மரியன்னையின் கரங்களில் தன் உயிரைவிட்டு வானுலகம் சென்றார்.
புனித சூசையப்பரிடம் அதிக ஈடுபாடும் இத்தனையான பக்தியும் வைத்திருந்ததால் வாழ்நாளிலும், மரணவேளையிலும் அவர் நமக்கு உதவி செய்வார் என அறிந்துகொள்வோம். (3 பர, அரு, பிதா)
செபம்
அரச குலத்தில் பிறந்த தந்தையர்க்கு தந்தையே புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். தேவரீர் பூவுலக செல்வங்களை விரும்பாமல் ஏழ்மையான நிலையில் இறை சித்தத்திற்கு பணிந்து வாழ்ந்த புண்ணியங்களைப் பார்த்து உமக்குச் சீடர்களாக இருக்கிற நாங்கள் அழிந்துபோகும் உலக இன்பங்களில் ஆர்வங்காட்டாமல் அழியாத ஞான நன்மைகளை மட்டுமே தேடுவதற்கு உதவி செய்யும். வறுமைப் படுகிறவர்களுக்கு ஆதரவும், முன்மாதிரிகையாயிருக்கிற நீர் அவர்களைத் தேற்றி அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்க உதவும். இவ்வுலகில் செல்வம் நிறைய கிடைக்கப் பெற்றவர்கள் அகங்காரமடையாமல் (செருக்குறாமல்) தான தர்மங்கள் செய்து நித்திய வாழ்வை அடைய உதவி செய்தருளும். நாங்கள் எல்லோரும் உம்மை பின்பற்றி புண்ணிய நெறியிலிருந்து தவறாது மோட்ச இன்பத்தை அடைய உதவி செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
அரச குலத்தில் பிறந்த புனித சூசையப்பரே உமக்கு புகழ். உம்முடைய தாயின் வயிற்றிலிருக்கும்போதே ஆசி கிடைக்கப் பெற்றவரே உமக்கு புகழ். புண்ணிய நெறி பிறழாது வாழும் வரம் பெற்ற புனித சூசையப்பரே உமக்கு புகழ்.
செய்ய வேண்டிய நற்செயல்
புனித சூசையப்பர் சுரூபத்தின் முன் மெழுகுதிரி அல்லது விளக்கினை ஏற்றி வைப்பது.
புனித சூசையப்பர் பிறந்ததை தியானிப்போம்
தியானம்
தாவீது குலத்தில் புனித சூசையப்பர் பிறந்தார். அபிரகாம், ஈசாக்கு , யாக்கோபு, சூசை போன்ற ஞான தந்தையர்களும், சாலமன், எசேக்கியால், யோசியாஸ் போன்ற பேரரசர்களின் வழித்தோன்றல் தான் புனித சூசையப்பர். அவர் மரபுப்படி அரசராக இருந்திருக்க வேண்டியவர். யூதர்களும் அவர்களின் அரசர்கள் சிலரும் இறைவனுக்கு எதிராக செயல்பட்டதால் தாவீது குலத்தில் உள்ளவர்கள் அரசாட்சியிலிருந்து ஏழை குடிமக்களாக வாழ்ந்து வந்தனர் . அரச வம்சத்தில் தோன்றிய பெற்றோருக்கு மகவாய்ப் பிறந்த புனித சூசையப்பர், தன்னுடைய முன்னோர்களின் தன்மைக்குத்தக்க வாழந்து அவர்களுக்கு நற்பெயர் கிடைக்கச் செய்தார். அவர் ஒருபோதும் செல்வத்தை விரும்பவில்லை. தாழ்ச்சி, பொறுமை, அமைதி என்ற நற்குணங்களில் ஊறி போயிருந்தார்.
அவர் பிறந்தபோது அதற்குரிய பெரியவிழா பூவுலகில் நடைபெறவில்லை. ஆனால் வானுலகில் வானதூதர்கள் இவரது பிறப்பினை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இறைவனோ தன்னுடைய மகன் இயேசுகிறிஸ்துவை இவர் பரிசுத்தமாய் பேணி வளர்ப்பார் என்றும், இயேசுகிறிஸ்து தனக்கு இவர் வளர்ப்பு தந்தையாக இருப்பாரென்றும், தூய ஆவியானவரோ, இவர் தூய கன்னிமரிக்கு பரிசுத்த கணவராக இருப்பார் எனறும வானுலகில் மகிழ்ச்சியடைந்தனர். உலகில் உள்ள அனைதது சுகங்களையும் இவருக்கு அளிக்காமல் பக்தியையும், ஞானத்தையுமே இவருக்கு இறைவன் அபரிமிதமாக அளித்தார்.
வேத வல்லுநர்கள் கூறியதுபோல் இவர் ஜென்மப்பாவத்தோடு தாய் வயிற்றில் ஜெனித்தாலும், அவர் தாய் வயிற்றில் இருக்கும்போதே ஆசீர்வதிக்கப்பட்டார்.
பாவத்தினால் வருகின்ற துர்இச்சைகளிலிருந்து இவரைக் காத்தார் இறைவன். அருள் வழங்கப்பட்ட இவர் வாழ்நாளெல்லாம் கடவுளுக்கு ஏற்புடையவராக இருந்தார். அதனால் பெருமை கொள்ளாது மேன்மேலும் புண்ணிய வாழ்வில் ஈடுபட்டார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் புனித சூசையப்பரின் பிறப்பு எத்தகையது என அறிந்தோமோ அதுபோல் நாமும் ஞான வாழ்வு வாழ வேண்டும். பிதா, சுதன், தூய ஆவி இவர்மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தபோதும் உலக செல்வ சுகத்தை இவருக்கு மறுத்து வான் வீட்டிற்குரிய செல்வங்களை மட்டுமே அளித்தார்கள். நாமும் உலக இன்பங்களை மறந்து வானுலக இன்பத்தைத் தேடுவோம். செல்வத்தால் ஊதாரித்தனமும், ஆங்காரமும், உடலின் இச்சைகளால் மோகபாவமும் உண்டாகிறது. எனவே, இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கிறவர்கள் மோட்சத்தில் நுழைவது கடினமென்றும், பூவுலகில் துன்பப்படுகிறவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றும் இயேசுகிறிஸ்து கூறியுள்ளார்.
புனித சூசையப்பர் தனது குலப் பெருமையைப் பாராட்டாமல், ஆங்காரப்படாமல், தான் பிறந்த ஏழ்மை நிலையிலே சந்தோசமடைந்தார். அப்படியே நாமும் தாழ்ச்சியுடன் நமது சாதி, மத, செல்வ உயர்வுகளைப் பாராட்டாமல், ஆங்காரமின்றி பிறரிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய நிலைக்கு தக்கவாறு நாம் புண்ணிய வழியில் நடக்க வேண்டும். நடுத்தீர்வை நாளில் இயேசு நம்மிடம் நமது இனத்தைப் பற்றியோ, செல்வத்தைப்பற்றியோ, அந்தஸ்த்தைப் பற்றியோ விசாரிக்க மாட்டார். மாறாக எளியோருக்கு உதவி செய்தோமா என்பதை அறிந்து மோட்சம் அல்லது நரகத்தை அளிக்கிறார். இரக்கமில்லா செல்வந்தன் நெருப்பில் வேகும்போது ஏழை லாசர் இயேசுவின் மடியில் அமர்ந்திருக்கவில்லையா? இவர்களில் யார் மேலானவர் என்பதை நாம் தெரிந்து கொண்டு அதன்படி நாம் நடப்போம். தாய் தந்தையர் தங்களுடைய பிள்ளைகள் நல்லவர்களாகவும், செல்வந்தர்களாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டுமென்று விரும்புவர், அதற்காக செபிப்பர். நேர்ச்சை காணிக்கை செய்து கொள்வர். ஆனால் அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகவும், புண்ணிய நெறி வழுவாமல் நடக்க வேண்டுமென்றும் கடவுளிடம் கேட்டு கொள்வதில்லை.
புனித ஞானப்பிரகாச அரசரின் தாய் பிளங்கம்மாள் தன்னுடைய மகன் சாவான பாவம் செய்வதைவிட செத்துப் போவதே மேல் என்று சொன்னார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் நம் பிள்ளைகளை உலக விஷயங்களில் தவறான ஆர்வம் காட்டாமல் வானுலக புண்ணியங்களில் அதிக ஈடுபாடு காட்டுமாறு வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நமக்கு மனக்கஷ்டத்தினைக் கொடுக்காமல் உண்மையான மகிழ்ச்சியும், புகழ்ச்சியும் கிடைக்கும்படி வாழ்வார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
புதுமை
சுமார் 270 ஆண்டுகளுக்குமுன் இயேசு சபை துறவியான இராயப்பர் கோத்தோனியூஸ் வாழ்ந்து வந்தார். அவர் ஹென்றிக்குள் என்ற அரசர்க்கு ஆத்ம குருவாகவும், உற்ற நண்பனாகவும் இருந்தார். கிறிஸ்தவர்கள் அல்லாதவர் வசிக்கும் இடத்தில் துணிவோடு துறவற இல்லங்களை நிறுவி நற்செயல்களை செய்து வந்தார். அவர் புனித சூசையப்பரை தனக்கு ஆதரவாகவும் பாதுகாவலராகவும் தெரிந்து கொண்டு, அவரிடம் ஆழ்ந்த பக்தியோடு செபித்ததுமல்லாமல் பிரான்ஸ் நாடு முழுவதும் அவரது புகழைப் பரப்ப தன்னாலான முயற்சிகளை செய்து வந்தார். அவர் அந்நாட்டில் செய்த மறையுரைகளிலும், உரையாடல்களிலும், தான் எழுதிய நூலிலும் புனித சூசையப்பரை வாழ்த்தி, அனைவரும் அவரை வணங்கி அவரிடம் பக்தி நம்பிக்கை வைக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
அதனால் அந்நாட்டிலும், அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் புனித சூசையப்பரின் புகழ் பரவியது. மேலும் புனித சூசையப்பருக்கு மிக பிரபலமான பெரிய ஆலயம் ஒன்றினை நிறுவி, அதனை அழகுபடுத்தி, புனித சூசையப்பருக்கு திருவிழாவினை ஆடம்பரமாக நடத்தினார். புனித சூசையப்பரோ அக்குருவுக்கு தம் அருள் வரங்களை வழங்கி, அவருடைய துன்ப வேளைகளில் அவரை காத்து, அவரது நற்செயல்களில் ஆசீர்வதித்தார்.
இறுதியாக "தன்னுடைய நாளான மார்ச் 19-ஆம் தேதி இறப்பார்" என்று அக்குருவின் மரணத்தை முன்னறிவித்தார். மரண நேரத்தில் தூய மரியன்னை அவருக்குத் தோன்றி, தம் இரக்கத்தைக் காட்டி, "நீர் எனது கணவராகிய புனித சூசையப்பரிடம் கொண்டிருந்த பக்தியும், அவரது புகழை பரப்பியதற்காகவும் நான் உமக்கு உதவி செய்யவும் உம்மை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லவும் வந்தேன் என்றார். அவ்வாறு அவர் மரியன்னையின் கரங்களில் தன் உயிரைவிட்டு வானுலகம் சென்றார்.
புனித சூசையப்பரிடம் அதிக ஈடுபாடும் இத்தனையான பக்தியும் வைத்திருந்ததால் வாழ்நாளிலும், மரணவேளையிலும் அவர் நமக்கு உதவி செய்வார் என அறிந்துகொள்வோம். (3 பர, அரு, பிதா)
செபம்
அரச குலத்தில் பிறந்த தந்தையர்க்கு தந்தையே புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். தேவரீர் பூவுலக செல்வங்களை விரும்பாமல் ஏழ்மையான நிலையில் இறை சித்தத்திற்கு பணிந்து வாழ்ந்த புண்ணியங்களைப் பார்த்து உமக்குச் சீடர்களாக இருக்கிற நாங்கள் அழிந்துபோகும் உலக இன்பங்களில் ஆர்வங்காட்டாமல் அழியாத ஞான நன்மைகளை மட்டுமே தேடுவதற்கு உதவி செய்யும். வறுமைப் படுகிறவர்களுக்கு ஆதரவும், முன்மாதிரிகையாயிருக்கிற நீர் அவர்களைத் தேற்றி அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்க உதவும். இவ்வுலகில் செல்வம் நிறைய கிடைக்கப் பெற்றவர்கள் அகங்காரமடையாமல் (செருக்குறாமல்) தான தர்மங்கள் செய்து நித்திய வாழ்வை அடைய உதவி செய்தருளும். நாங்கள் எல்லோரும் உம்மை பின்பற்றி புண்ணிய நெறியிலிருந்து தவறாது மோட்ச இன்பத்தை அடைய உதவி செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
அரச குலத்தில் பிறந்த புனித சூசையப்பரே உமக்கு புகழ். உம்முடைய தாயின் வயிற்றிலிருக்கும்போதே ஆசி கிடைக்கப் பெற்றவரே உமக்கு புகழ். புண்ணிய நெறி பிறழாது வாழும் வரம் பெற்ற புனித சூசையப்பரே உமக்கு புகழ்.
செய்ய வேண்டிய நற்செயல்
புனித சூசையப்பர் சுரூபத்தின் முன் மெழுகுதிரி அல்லது விளக்கினை ஏற்றி வைப்பது.
மூன்றாம் தேதி
புனித சூசையப்பருக்கு பெயரிட்டதை தியானிப்போம்
தியானம்
புனித சூசையப்பர் பிறந்த எட்டாம் நாளில் அக்கால வழக்கப்படி சூசை என்று பெயர் சூட்டினார்கள். சூசையப்பர் என்ற பெயருக்கு முழுமையானவன், அதிகரிக்கிறவன், பெருவிக்கிறவன் என்ற பொருள் உண்டு. புனித தாமஸ் அருளப்பர் எழுதியதுபோல் சூசையப்பர் என்ற பெயர் அவரது புகழையும், நற்செயல்களையும் குறிக்கிறது. சகல மனிதர்களையும் மீட்க வந்த இயேசுகிறிஸ்து புனித சூசையப்பரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். உலகில் உள்ள அனைவராலும் போற்றப்படும் மரியன்னை இவருக்கு கீழ்ப்படிந்து வந்தார்.
சூசையப்பரோ மரியன்னையின் கணவராகவும் பாதுகாவலராகவும் இருந்ததால் இறைவன் தன் மகனையே அவருடைய கைகளில் தவழ செய்தார். அதைவிட வேறு பெரிய மகிமை எதுவுமில்லை. பெயருக்குரிய தன்மையோடு வாழாவிட்டால் அப்பெயருக்கே அவமானம். புனித சூசையப்பரோ தன்னுடைய பெயருக்கு களங்கம் வராதபடி தன்னுடைய புண்ணிய செயல்களினாலும், தான தர்மங்களினாலும் மேலும் அப் பெயருக்கு பெருமை சேர்த்தார். நாளுக்குநாள் தாழ்ச்சி, பொறுமை, விசுவாசம், பிறர் அன்பு போன்ற புண்ணியங்களிலே திளைத்து வேறு புனிதர்களை விடவும் பெரிய தூயவரானார்.
அவர் விண்ணகத்தில் சகல புனிதர்களுக்கும் மேலாக மரியன்னையை அடுத்து இருக்கிறார். நாம் எப்போதும் புண்ணியத்திலே வளர முயற்சி செய்ய வேண்டும். நாம் அவ்வாறு செபித்து நடக்கும் போது மேலும் நாம் இறைபக்தியில் வளர அவர் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்வார். அவர் தன் மகன்மீது எவ்வளவு பாசமாக இருந்தாரோ அதே அளவு திருச்சபை மக்கள் மீதும் அக்கறை காட்டுகிறார். அதனால்தான் அவரை திருச்சபையின் சிறப்பு பாதுகாவலராக வணங்குகிறோம். அவர் தன் பெயருக்கேற்ற விதத்தில் விளங்கினார். தாய் திருச்சபையானது இவரின் புண்ணிய நலன்களை கருத்தில் கொண்டு இயேசு, மரி என்ற உன்னத நாமங்களுடன் சேர்த்து இயேசு, மரி, சூசை என்று மக்கள் அனைவரும் வணங்கும்படிச் செய்தது. ஆகவே, நல்ல கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு, மரி, சூசை என்று அடிக்கடி சொல்லி தங்களுக்கு வரும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் காக்கப்பட்டு நல்மரணத்தை அடைவோம் என நம்பிக்கையோடு வணங்குகிறார்கள்.
- இப்படிப்பட்ட புனிதரின் புகழை அறிந்து கொண்ட நாம் சந்தோசப்படுவது சரியே. தந்தைக்குரிய புகழ் மக்களைச் சாரும். ஆனால் நாமும் நம்முடைய ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும். மகிமையுடைய பெயரை அவருக்கு சூட்டினார்கள், அவரும் அப்பெயருக்கேற்ப வாழ்ந்தார். நாமும் திருமுழுக்குப் பெற்றபோது ஒரு புனிதரின் பெயரை சூட்டினார்கள். அவ்வாறு சூட்டப்பட்டது வெறும் பெயர் என்று எண்ண வேண்டாம். நமது பெயர் கொண்ட புனிதரிடம் பத்தியோடு வேண்டிக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அவர் செய்த நற்செயல்களை நம் வாழ்வில் கடைப்பிடிக்க முயலவேண்டும். நற்செயல்களினால் அப்புனிதரின் பெயரை பெருமைப்படுத்த வேண்டும். எத்தனையோபேர் தங்களுடைய பாவ செயல்களால் தங்கள் பெயர் கொண்ட புனிதரை துன்பத்துக்குள்ளாக்குகிறார்கள். -
புனித சூசையப்பர் நாளுக்கு நாள் புண்ணிய வாழ்வு வாழ தனனை வருத்திக்கொண்டார். நாமும் அவ்வாறு செய்யவேண்டும். ஊதாரித்தனமானவன் அழியக்கூடிய செல்வத்தைச் சேர்க்க எவ்வளவு பாடுபடுகிறானோ அதுபோன்று அழியாத ஞானத்தை அதிகரிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இதுபற்றியே புனித கிரகோரி என்ற திருத்தந்தை, "நீங்கள் செல்வந்தனாக இருக்க விரும்பினால் உண்மையான செல்வத்தைத் தேடுங்கள், உயர்வான பதவிக்கு ஆசைப்பட்டால்வான்வீட்டை அடைய முயலுங்கள். சகல செல்வங்களை விரும்பினால் என்றென்றும் வான்வீட்டில் இருக்க விரும்ப வேண்டும்" என்று எழுதினார். உண்மையிலுமே முயற்சிக்கு தக்க பலன் உண்டு.
நாம் இவ்வுலகில் இருக்கும் காலத்தில் இறைவாழ்வு வாழ எவ்வளவு வருந்தி உழைப்பீர்களோ அவ்வளவுக்கு வான்விட்டில் மகிமை அடைவீர்கள். புனித சூசையப்பர் தமது பேரில் பக்தியுள்ள ஆத்மாக்கள் இறைவாழ்வு வாழவும், புனிதத் திருச்சபை எங்கும் பரவவும் விரும்புகிறார். அவருடைய திருப்பெயர் நமக்கு வெற்றிக்கொடி. எனவே, கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ வாழ்வு வாழவும் பிறமதத்தினர் சத்திய வேதத்தை கண்டடையவும் தேவையான அருட்பணியாளர்களை அனுப்ப வேண்டுமென்று நாம் இறைவனிடம் மன்றாட கடமைப்பட்டிருக்கிறோம். நாம் தீய சக்திகளிடம் போராடும் சூழ்நிலை வந்தாலும், ஆபத்து வேளைகளிலும் இயேசு, மரி, சூசை என விசுவாசத்தோடு அழைத்தால் நமக்கு உதவியும் ஆறுதலும் கிடைக்கும்.
புதுமை
நோயாபொலி என்ற நாட்டில் வெசுவியூஸ் என்ற நெருப்பு மலை இருக்கிறது. அதன் உச்சியில் அகன்ற பிளவு பாதாளம்போல் இருக்கிறது. இந்த பிளவிலிருந்து புகையும், தீப்பொறிகளும், அக்கினி பிழம்பும் வெளிப்படும். அப்போது அக்கினியின் உருதிய கற்கள், தந்தகம், இரும்பு போன்ற உலோகங்கள் வெள்ளப் பெருக்குப் போன்று புறப்பட்டு பயிர்களையும், ஊர்களையும் அழித்து நகருக்குள் நுழையும். 1637 -ஆம் ஆண்டு அதுபோல
நெருப்பு ஆறு புறப்பட்டு துலுக்கர் கொத்தாளம் என்ற நகரத்தை அழிப்பதுபோல் வந்தது. அப்போது அந்நகரத்தில் புனித சூசையப்பரின்மேல் அதிக பக்தியுள்ள கமீ என்ற பெண்மணி இருந்தாள். அவள் அந்த நெருப்பு ஆற்றைக் கண்டு சூசை என்ற தனது மருமகனைத் தூக்கி கொண்டு கடற்கரையைத் தேற விரைந்து ஓடினாள். அவள் சென்ற வழியில் நெருப்பு ஆறு பாய்ந்தோடியது. அதனால் கடற்கரைக்குச் செல்ல இயலவில்லை. அருகில் இருந்த 20 அடி பாறையில் குழந்தையை வைத்து விட்டு பாறையில் நின்று கடற்கரைக்குக் குதித்தார். பின்னர் மருமகனை நினைத்து வேதனையோடு சூசை சூசை என அழைத்து புனித சூசையப்பரிடம் மிகவும் பக்தியோடு வேண்டிக்கொண்டாள். அப்போது புனித சூசையப்பர் அக்குழந்தையைத் தூக்கிச்சென்று அப்பெண்ணிடம் ஒப்படைத்தார். அப்பெண்மணி பூரிப்படைந்து புனித சூசையப்பருக்கு நன்றி கூறினாள். நமக்கு துன்பங்கள் வரும்போது நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் மன்றாடினால் அவர் நம்மை கைவிடமாட்டார். (3 பர, அரு, பிதா)
செபம்
மகிமை நிறைந்த பெயர் கொண்ட பிதாப்பிதாவாகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். உம்முடைய புண்ணியங்களாலும் தான தர்மங்களாலும் உம் திருப்பெயரை மகிமைப்படுத்தினிரே, உமது சக்தி வாய்ந்த திருப்பெயரைப் பார்த்து, உமது பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு எங்கள் பாவத்தால் அவமானம் வருவிக்காமல், எங்கள் பக்தி விசுவாசத்தால் அனைவருக்கும்முன் அப்பெயரை மேன்மைப்படுத்த அருள் செய்யும். திருச்சபையானது தனது எதிரிகளை அழித்து எங்கும் அதன் புகழ் பரப்பி திருச்சபைக்கு ஆதரவாயிருக்கிற நீர் உதவவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இயேசு மரி சூசையே! எனது இதயத்தையும் ஆன்மாவையும் உமக்கு காணிக்கையாக்குகிறேன்.
இயேசு மரி சூசையே! என் மரணநேரத்தில் எனக்கு உதவியாக இருங்கள்.
இயேசு மரி சூசையே! நான் இறந்த பிறகு என் ஆன்மா வான் வீட்டில் உங்களோடு எப்போதும் இருக்கும்படி உதவி செய்யும்.
செய்ய வேண்டிய நற்செயல்
ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்
புனித சூசையப்பருக்கு பெயரிட்டதை தியானிப்போம்
தியானம்
புனித சூசையப்பர் பிறந்த எட்டாம் நாளில் அக்கால வழக்கப்படி சூசை என்று பெயர் சூட்டினார்கள். சூசையப்பர் என்ற பெயருக்கு முழுமையானவன், அதிகரிக்கிறவன், பெருவிக்கிறவன் என்ற பொருள் உண்டு. புனித தாமஸ் அருளப்பர் எழுதியதுபோல் சூசையப்பர் என்ற பெயர் அவரது புகழையும், நற்செயல்களையும் குறிக்கிறது. சகல மனிதர்களையும் மீட்க வந்த இயேசுகிறிஸ்து புனித சூசையப்பரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். உலகில் உள்ள அனைவராலும் போற்றப்படும் மரியன்னை இவருக்கு கீழ்ப்படிந்து வந்தார்.
சூசையப்பரோ மரியன்னையின் கணவராகவும் பாதுகாவலராகவும் இருந்ததால் இறைவன் தன் மகனையே அவருடைய கைகளில் தவழ செய்தார். அதைவிட வேறு பெரிய மகிமை எதுவுமில்லை. பெயருக்குரிய தன்மையோடு வாழாவிட்டால் அப்பெயருக்கே அவமானம். புனித சூசையப்பரோ தன்னுடைய பெயருக்கு களங்கம் வராதபடி தன்னுடைய புண்ணிய செயல்களினாலும், தான தர்மங்களினாலும் மேலும் அப் பெயருக்கு பெருமை சேர்த்தார். நாளுக்குநாள் தாழ்ச்சி, பொறுமை, விசுவாசம், பிறர் அன்பு போன்ற புண்ணியங்களிலே திளைத்து வேறு புனிதர்களை விடவும் பெரிய தூயவரானார்.
அவர் விண்ணகத்தில் சகல புனிதர்களுக்கும் மேலாக மரியன்னையை அடுத்து இருக்கிறார். நாம் எப்போதும் புண்ணியத்திலே வளர முயற்சி செய்ய வேண்டும். நாம் அவ்வாறு செபித்து நடக்கும் போது மேலும் நாம் இறைபக்தியில் வளர அவர் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்வார். அவர் தன் மகன்மீது எவ்வளவு பாசமாக இருந்தாரோ அதே அளவு திருச்சபை மக்கள் மீதும் அக்கறை காட்டுகிறார். அதனால்தான் அவரை திருச்சபையின் சிறப்பு பாதுகாவலராக வணங்குகிறோம். அவர் தன் பெயருக்கேற்ற விதத்தில் விளங்கினார். தாய் திருச்சபையானது இவரின் புண்ணிய நலன்களை கருத்தில் கொண்டு இயேசு, மரி என்ற உன்னத நாமங்களுடன் சேர்த்து இயேசு, மரி, சூசை என்று மக்கள் அனைவரும் வணங்கும்படிச் செய்தது. ஆகவே, நல்ல கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு, மரி, சூசை என்று அடிக்கடி சொல்லி தங்களுக்கு வரும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் காக்கப்பட்டு நல்மரணத்தை அடைவோம் என நம்பிக்கையோடு வணங்குகிறார்கள்.
- இப்படிப்பட்ட புனிதரின் புகழை அறிந்து கொண்ட நாம் சந்தோசப்படுவது சரியே. தந்தைக்குரிய புகழ் மக்களைச் சாரும். ஆனால் நாமும் நம்முடைய ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும். மகிமையுடைய பெயரை அவருக்கு சூட்டினார்கள், அவரும் அப்பெயருக்கேற்ப வாழ்ந்தார். நாமும் திருமுழுக்குப் பெற்றபோது ஒரு புனிதரின் பெயரை சூட்டினார்கள். அவ்வாறு சூட்டப்பட்டது வெறும் பெயர் என்று எண்ண வேண்டாம். நமது பெயர் கொண்ட புனிதரிடம் பத்தியோடு வேண்டிக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அவர் செய்த நற்செயல்களை நம் வாழ்வில் கடைப்பிடிக்க முயலவேண்டும். நற்செயல்களினால் அப்புனிதரின் பெயரை பெருமைப்படுத்த வேண்டும். எத்தனையோபேர் தங்களுடைய பாவ செயல்களால் தங்கள் பெயர் கொண்ட புனிதரை துன்பத்துக்குள்ளாக்குகிறார்கள். -
புனித சூசையப்பர் நாளுக்கு நாள் புண்ணிய வாழ்வு வாழ தனனை வருத்திக்கொண்டார். நாமும் அவ்வாறு செய்யவேண்டும். ஊதாரித்தனமானவன் அழியக்கூடிய செல்வத்தைச் சேர்க்க எவ்வளவு பாடுபடுகிறானோ அதுபோன்று அழியாத ஞானத்தை அதிகரிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இதுபற்றியே புனித கிரகோரி என்ற திருத்தந்தை, "நீங்கள் செல்வந்தனாக இருக்க விரும்பினால் உண்மையான செல்வத்தைத் தேடுங்கள், உயர்வான பதவிக்கு ஆசைப்பட்டால்வான்வீட்டை அடைய முயலுங்கள். சகல செல்வங்களை விரும்பினால் என்றென்றும் வான்வீட்டில் இருக்க விரும்ப வேண்டும்" என்று எழுதினார். உண்மையிலுமே முயற்சிக்கு தக்க பலன் உண்டு.
நாம் இவ்வுலகில் இருக்கும் காலத்தில் இறைவாழ்வு வாழ எவ்வளவு வருந்தி உழைப்பீர்களோ அவ்வளவுக்கு வான்விட்டில் மகிமை அடைவீர்கள். புனித சூசையப்பர் தமது பேரில் பக்தியுள்ள ஆத்மாக்கள் இறைவாழ்வு வாழவும், புனிதத் திருச்சபை எங்கும் பரவவும் விரும்புகிறார். அவருடைய திருப்பெயர் நமக்கு வெற்றிக்கொடி. எனவே, கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ வாழ்வு வாழவும் பிறமதத்தினர் சத்திய வேதத்தை கண்டடையவும் தேவையான அருட்பணியாளர்களை அனுப்ப வேண்டுமென்று நாம் இறைவனிடம் மன்றாட கடமைப்பட்டிருக்கிறோம். நாம் தீய சக்திகளிடம் போராடும் சூழ்நிலை வந்தாலும், ஆபத்து வேளைகளிலும் இயேசு, மரி, சூசை என விசுவாசத்தோடு அழைத்தால் நமக்கு உதவியும் ஆறுதலும் கிடைக்கும்.
புதுமை
நோயாபொலி என்ற நாட்டில் வெசுவியூஸ் என்ற நெருப்பு மலை இருக்கிறது. அதன் உச்சியில் அகன்ற பிளவு பாதாளம்போல் இருக்கிறது. இந்த பிளவிலிருந்து புகையும், தீப்பொறிகளும், அக்கினி பிழம்பும் வெளிப்படும். அப்போது அக்கினியின் உருதிய கற்கள், தந்தகம், இரும்பு போன்ற உலோகங்கள் வெள்ளப் பெருக்குப் போன்று புறப்பட்டு பயிர்களையும், ஊர்களையும் அழித்து நகருக்குள் நுழையும். 1637 -ஆம் ஆண்டு அதுபோல
நெருப்பு ஆறு புறப்பட்டு துலுக்கர் கொத்தாளம் என்ற நகரத்தை அழிப்பதுபோல் வந்தது. அப்போது அந்நகரத்தில் புனித சூசையப்பரின்மேல் அதிக பக்தியுள்ள கமீ என்ற பெண்மணி இருந்தாள். அவள் அந்த நெருப்பு ஆற்றைக் கண்டு சூசை என்ற தனது மருமகனைத் தூக்கி கொண்டு கடற்கரையைத் தேற விரைந்து ஓடினாள். அவள் சென்ற வழியில் நெருப்பு ஆறு பாய்ந்தோடியது. அதனால் கடற்கரைக்குச் செல்ல இயலவில்லை. அருகில் இருந்த 20 அடி பாறையில் குழந்தையை வைத்து விட்டு பாறையில் நின்று கடற்கரைக்குக் குதித்தார். பின்னர் மருமகனை நினைத்து வேதனையோடு சூசை சூசை என அழைத்து புனித சூசையப்பரிடம் மிகவும் பக்தியோடு வேண்டிக்கொண்டாள். அப்போது புனித சூசையப்பர் அக்குழந்தையைத் தூக்கிச்சென்று அப்பெண்ணிடம் ஒப்படைத்தார். அப்பெண்மணி பூரிப்படைந்து புனித சூசையப்பருக்கு நன்றி கூறினாள். நமக்கு துன்பங்கள் வரும்போது நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் மன்றாடினால் அவர் நம்மை கைவிடமாட்டார். (3 பர, அரு, பிதா)
செபம்
மகிமை நிறைந்த பெயர் கொண்ட பிதாப்பிதாவாகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். உம்முடைய புண்ணியங்களாலும் தான தர்மங்களாலும் உம் திருப்பெயரை மகிமைப்படுத்தினிரே, உமது சக்தி வாய்ந்த திருப்பெயரைப் பார்த்து, உமது பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு எங்கள் பாவத்தால் அவமானம் வருவிக்காமல், எங்கள் பக்தி விசுவாசத்தால் அனைவருக்கும்முன் அப்பெயரை மேன்மைப்படுத்த அருள் செய்யும். திருச்சபையானது தனது எதிரிகளை அழித்து எங்கும் அதன் புகழ் பரப்பி திருச்சபைக்கு ஆதரவாயிருக்கிற நீர் உதவவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இயேசு மரி சூசையே! எனது இதயத்தையும் ஆன்மாவையும் உமக்கு காணிக்கையாக்குகிறேன்.
இயேசு மரி சூசையே! என் மரணநேரத்தில் எனக்கு உதவியாக இருங்கள்.
இயேசு மரி சூசையே! நான் இறந்த பிறகு என் ஆன்மா வான் வீட்டில் உங்களோடு எப்போதும் இருக்கும்படி உதவி செய்யும்.
செய்ய வேண்டிய நற்செயல்
ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்
நான்காம் தேதி
புனித சூசையப்பர் தச்சுத்தொழில் செய்ததை தியானிப்போம்
தியானம்
தாவீது அரசரின் குலத்தில் தோன்றிய பெற்றோருக்கு மகனாக பிறந்தவர் புனித சூசையப்பர். ஆனால் அவர்கள் இவ்வுலக செல்வமின்றி இருந்ததால் புனித சூசையப்பர் ஏழையாக இருந்தார். ஆவா அரசகுலத்தில் தோன்றிய மரியன்னையைத் திருமணம் செய்து கொண்டபிறகு செல்வம் வந்தது என எண்ணவேண்டாம். மோட்சத்தின் அரசியாகிய மரியன்னை செல்வமிக்கவள் அல்ல. இயேசுகிறிஸ்து ஏழை குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாழ வேண்டும் என்பதற்காக அவருடைய வளர்ப்புப் பெற்றோர் ஏழைகளாக இருந்தனர். அதனால் புனித சூசையப்பர் வாழ்நாளெல்லாம் வறுமையில் வாழ்ந்ததோடு தச்சு வேலை செய்து இயேசுவையும் மரியன்னையையும் காப்பாற்றினார். அவர் கலப்பைகளையும் நுகத்தடிகளையும் செய்து வந்தார் என்பதால் ஆதி திருச்சபை இவற்றுக்கு மரியாதை அளித்தனர் என மறை சாட்சியான யுஸ்தினுஸ் எழுதி வைத்துள்ளார்.
இவர் அனைத்து புனிதர்களைவிடவும் மேலானவர் என்பதற்கு கரணங்கள் உண்டு.
முதலில் புனித சூசையப்பர் கடவுளின் திருச் தித்தத்திற்கு இயைந்து செல்வங்களை விரும்பாது எளிய ஏழையாக இருந்தார். மனிதனுக்கும் இறைவனுக்கும் ஏற்புடைய செயல்களை செய்து வந்தார். அக்கால அரசர்களும் செல்வந்தர்களும் இருந்ததை விட இவர் உயர்வானவராகவே இருந்தார்.
இரண்டாவது, புனித சூசையப்பர் தன்னுடைய வாழ்நாளில் பிரபலமான செயல்களையோ, புகழ்ப்பெறத்தக்க செயல்களையோ செய்தவரில்லை. மறைநூல்கள் அவர் "நீதிமானாக இருந்தார்" என்பதை மட்டுமே குறிப்பிடுகின்றன. இறைவனிடமும் இறைமக்களிடமும் அவர் நீதியுடன் தன் கடமைகளை செவ்வனே செய்துவந்தார். அதனால் தூய ஆவியால் அவர் நீதிமான் என அழைக்கப்பட்டார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்க வேண்டியது. இவ்வுலகில் செல்வந்தர்களும், வேலை செய்யாமல் சாப்பிடுகிறவர்களும் மிக சிலரே. மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உண்பவர்களும் ஏழைகளுமே மிக அதிகம். செல்வந்தர்களை பேறுபெற்றவர்கள், ஏழைகள் அபாக்கியசாலிகள் என்பது தவறு. இயேசுகிறிஸ்துவும், புனித சூசையப்பரும் தெரிந்து கொண்டது ஏழ்மையே. அதனால் ஏழைகளே பேறுபெற்றவர்கள். செல்வந்தர்கள் விண்ணகத்தை அடைவதைவிட ஏழை எளியோர் இறையாட்சியில் அடைவது எளிது. இவர்கள் இறைவனின் இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, பொறாமைப்படாமல் தங்களுக்கு கிடைத்த அந்தஸ்தை நினைத்து சந்தோஷமடைய வேண்டும். இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படியாமல் இருந்தால் அவர்கள் பட்ட துன்பங்களுக்கு எந்தவித பலனும் இருக்காது. அதனால் பூவுலகில் எவ்வளவு குறைவான நிலையில் இருந்தாலும், வறுமையில் வாடினாலும் வான் வீட்டின் மகிமையை அடையலாம்.
புனித சூசையப்பர் தான் வாழ்ந்த காலத்தில் அருஞ்செயல்கள் செய்யாமலும், உயர்வான வழியில் நடக்காமலும் இருந்த தன் தொழிலை குறைவின்றி செய்து பெரிய புனிதரானார். புனிதராவதற்கு கடின தவமும், அடிக்கடி ஒருவேளை நோன்பும், அதிக நேரம் செபத்திலும் இருக்க வேண்டும் என நாம் நினைப்பதுண்டு. இவை அனைத்தும் நன்றே இருப்பினும் இவைகளைக் கடைப்பிடிக்காமலும் புனிதராகலாம். ஒருவர் தம் கடமைகளை இறைவனுக்கு ஏற்புடையதாக தூய சிந்தனையுடன் செய்துவந்தால் புனித சூசையப்பரைப்போல் புனிதராகலாம்.
புனித இசிதோருஸ் என்ற தொழிலதிபதியும், புனித ஒமோபோனுஸ் என்ற வியாபாரியும், புனித எலிஜியுஸ் பொற்கொல்லர் தொழிலாளியும், அவ்வாறே புனிதர்களானவர்கள். முத்திப்பேறு பட்டம் பெற்ற லாபெர் பிச்சைக்காரனாகவும், புனித சீத்தம்மாள் எளிய வேலைக்காரியாக இருந்தும் தூயவர்களானவர்கள். புனித ஜெர்மானம்மாள் ஆடு மேய்ப்பதிலும் தூய தன்மையைக் கடைப்பிடித்து புனிதையானாள். அதனால் நாமும் நமக்குரிய பணியை கண்ணியமாக செய்து புனிதர்களாகலாம்.
மேலும், தூய ஆவியால் புனித சூசையப்பர் "நீதிமான்" என அழைக்கப்பட்டார். நாமும் எல்லாவற்றிலும் நீதிமான்களாக நடக்கிறோமா என நம்மையே கேட்டுப் பார்ப்போம். திருட்டு, பொய், பித்தலாட்டங்கள் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருப்பதால் பிற மதத்தினர் நம்மை இகழ்ந்து பேசுவார்கள். அதனால் மனம் மாறாமலும் இருப்பார்கள். இதற்கு காரணம் நமது செயல்பாடுகளில் நம்மையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். புனித சூசையப்பர் பெயரில் நம்முடைய பக்தியை அதிகரித்து புனிதர்களாவதற்கு நம்முடைய பாவங்களை விலக்கி நீதி தவறாமல் நடப்போம்.
புதுமை
இஸ்பானியா நாட்டில் ஒரு அரசர் புனித சூசையப்பரிடம் மிகவும் பத்தி கொண்டிருந்தார். வருடந்தோறும் இவரது விழாவினை மிகச் சிறப்பாகத் கொண்டாடுவார். அந்த அரசருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர். ஒரு வருடம் புனித சூசையப்பர் திருநாளன்று மூத்த மகன் இறந்தான். இரண்டாம் வருடம் அதேநாளில் இரண்டாவது மகன் இறந்தான். மூன்றாம் திருநாளைத் கொண்டாடினால் தனது மூன்றாவது மகனும் இறப்பான் என மனம் கலங்கி நாட்டைவிட்டு காடுகளில் சுற்றித்திரிந்தார். காட்டில் இரு மரங்களில் இரு வாலியர்கள் தூக்கிலிடப்பட்டு இறந்து இருந்ததைக் கண்டார். இருவரும் கொலையாளிகள் என்பதால் அவர்களும் கொலைச் செய்யப்பட்டிருந்தனர். -
அப்போது இவர் மனத்துயரத்துடன் இரு இறந்த வாலியர்களையும் பார்த்துக்கொண்டிருக்கும்போது வானதூதர் அவர் முன் தோன்றினார். உமது இரு மகன்களும் உயிரோடிருந்தால் இவர்களைப்போல் இறந்திருப்பார்கள் என தெரிந்துக்கொள்ளும் என வானதூதர் கூறினார். நீர் புனித சூசையப்பர்மேல் வைத்த பக்தியினால் அவர்கள் அப்படி இறவாமலும், உமக்கு அவமானம் ஏற்படாமலும், அவர்களுக்கு நரகத் தண்டனைக் கிடைக்காமலும் உதவியது புனித சூசையப்பரே, எனவே, அவருக்கு திருவிழா கொண்டாட தயங்க வேண்டாம். உமது மூன்றாவது மகன் நலமாயிருப்பான். அவன் நாளடைவில் ஆயராகி பல புண்ணியங்களை செய்து முதிர்ந்த வயதுவரை வாழ்வான் என்று கூறி வானதூதர் மறைந்தார்.
சிந்தனை:
அரசன் மனம் தெளிவுற்று முன்பைவிட அதிக பக்தியோடு திருவிழாவைக் கொண்டாடினார். வானதூதர் கூறியதுபோல் அவர் மகன் ஆயரானார். நாமும் நமது வாழ்வில் வரும் துன்பங்களை நன்மைக்காக வருகிறதென்று ஏற்றுக்கொள்வோம். (3 பர, அரு, பிதா)
செபம்
வறுமையோடு எளிமையாக வேலை செய்து துன்பப்பட்ட தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்கிறோம். இப்பூவுலகில் வறுமைப்படுகிறவர்களுக்கும், தாழ்ந்த நிலையில் பிறந்தவர்களுக்கும் கடினப்பட்டு உழைக்கிறவர்களுக்கும் நீர் மகிமையும், ஆறுதலும், முன் மாதிரிகையாக இருக்கிறீரே! இப்படி துன்பப்படுகிறவர்கள் அனைவரும் உம்மைப் பின்பற்றி துன்பங்களை பொறுமையோடு அனுபவிக்க அருள்தாரும். உமது எளிமையையும் துன்பத்தையும் பார்த்து உமது பக்தர்களாகிய நாங்கள் இவ்வுலக நன்மைகளுக்கு ஆசைப்படாமல் ஏழைகளாக விண்ணக இன்பத்தை அடைய உதவிசெய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கிற புனித சூசையப்பரே! உமக்கு புகழ். கடின வேலைகளை செய்பவர்களுக்கு முன்மாதிரிகையாக இருக்கின்ற புனித சூசையப்பரே! உமக்கு புகழ். தாழ்மையான தொழிலைச் செய்பவர்களுக்கு மகிமையான புனித சூசையப்பரே! உமக்கு புகழ்.
செய்ய வேண்டிய நற்செயல்
துன்பப்படுவோருக்கு அன்பாய் இருந்து ஆறுதல் கூறுதல்.
ஐந்தாம் தேதி
புனித சூசையப்பர் கன்னிமரியை திருமணம் செய்ததை தியானிப்போம்
தியானம்
ஜென்மபாவமில்லாமல் பிறந்த மரியன்னை மூன்று வயதில் ஆலயத்தில் வைக்கப்பட்டு புண்ணிய நெறியில் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பதினான்கு வயதாகும்போது திருமணம் செய்துவைக்க விரும்பினார். பரிசுத்த தன்மை கெடாமல் இயேசுகிறிஸ்துவை பெற்றெடுக்க வேண்டும் என்று இருந்தது. தனிமையாக இருந்து இயேசுவைப் பெற்றெடுத்தால் யூதர்கள் தேவனுடைய சித்தத்தினை அறியாமல் தவறாகப் பேசுவர். அதனால் மரியாளுக்கு ஒருவரை கணவராக நியமிக்க வேண்டியிருந்தது. மேலும் சிறு குழந்தையாகப் பிறக்கப்போகும் இயேசுவுக்கு பாதுகாவலாக ஒரு வளர்ப்பு தந்தையும் தேவையாக இருந்தது. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் புனித சூசையப்பர்.
மறைநூல் வல்லுநர்கள் மரியன்னைக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பின்னர், தாவீது அரசகுலத்தில் பிறந்து திருமணமாகாத திருமண வயதில் உள்ள இளைஞர்களை வரவழைத்து ஒரு கோலினைக் கொடுத்து யார் கையில் இந்தக் கோல் மலருமோ அவருக்குத் தான் மரியன்னையை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. புனித சூசையப்பர் கையில் இருந்த கோல் மலர்ந்தது. மறைநூல் வல்லுநர்கள் மகிழ்ந்து மறைநூல்படி அவருக்கு கன்னிமரியாளை மணமுடித்து வைத்தனர். அந்த கோலானது இன்றும் நேயாய் பொலி என்ற நகரத்தில் மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வழக்கப்படி திருமணத்தின்போது புனித சூசையப்பர் கன்னிமரியாளுக்கு அணிவித்த மோதிரம் இன்றும் பெரூசியா நாட்டில் வைத்து வணங்குகின்றனர்.
திருமணம் நடந்தபிறகு புனித சூசையப்பர் கன்னி மரியாளை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து மரியாதையோடும், அதிக கவனத்தோடும் மரியாளுக்கு வேண்டியவைகளை அளித்து வந்தார். கன்னிமரியாளோ தனது கணவரைப்போல் நேசித்து அவருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார். திருமணம் என்றதும் ஆசாபாசங்கள் இருக்கும் என்பதற்கு இடமின்றி அப்பழுக்கின்றி இருவரும் பரிசுத்தமாய் இருந்தார்கள் என நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும். திருமணத்திற்கு முன்னே இருவரும் தனித்தனியே இறைவனிடம் தாங்கள் கன்னிமை கெடாமல் வாழப்போவதாக வாக்கு கொடுத்திருந்தனர். இதற்கு திருமணம் தடையாக இருக்கலாகாதென்பதை கடவுளின் ஆசியால் முன்னே அறிந்த பின்தான் திருமணத்தை முடித்தார்கள். மரணம் வரை கடைப்பிடித்தார்கள்.
நாம் புனித சூசையப்பரை கன்னிமரியாளுக்கு கணவனாகத் தெரிந்து கொண்டதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வுலகில் துறவறத்திற்கு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் திருச்சபைக்கு மாணிக்கமாகவும், வைரமாகவும் இருந்தாலும் அவர்கள் எண்ணிக்கை மிக குறைவே. குடும்பத்தவர்களாக இருக்க இறைவன் அழைத்தவர்கள் எண்ணிக்கையே மிக அதிகம். குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு புனித சூசையப்பர் திருமணம் முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். தூய எண்ணத்தோடு கடவுளின் எண்ணத்தை புனித சூசையப்பர் ஆலயத்தில் வைத்து மறைநூல் வல்லுநர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதுபோல நாமும் செய்தால் இறையருள் கிடைக்கும்.
எனவே, திருமணத்திற்கு முன்னர் சகுனம், ஜாதகம், நல்ல நாள், நல்ல நேரம், பொருத்தம் பார்ப்பதும், திருமணத்தின் போது பிற மதத்தவர் செய்யும் சடங்குகள் நிறைவேற்றுவது பாவமும் இறையன்புக்கு எதிரானதும் ஆகும். அப்படி செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
புனித சூசையப்பர், கன்னிமரியாளை அன்போடும், மரியாதையோடும் நடத்தினார். மரியாளும் தன் கணவருக்கு மேற்பட்டவராக இருந்தபோதும் கீழ்ப்படிந்து நடந்தார். அதனால்தான் பூமியிலே அதிக பலனும் மகிமையும் கிடைக்கப்பெற்றது. கிறிஸ்தவர்கள் திருமணத்திற்கு பின்னர் குடும்பங்களிலே பொறாமை, அகங்காரம் இவற்றால் மனவேறுபாடு ஏற்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
திருமணங்களிலே அவ்வாறு நடைபெறா வண்ணம் புனித சூசையப்பரிடமும் கன்னிமரியாளிடமும் செபிக்க வேண்டும். பிறக்கும் குழந்தைகளை இறைவன் அருட்கொடை என எண்ணி இறைவனுக்கு நன்றிகூற வேண்டும். புனித சூசையப்பர் எவ்விதம் இயேசு கிறிஸ்துவை அன்புடன் வளர்த்தாரோ அவ்விதமே நாமும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அவர்களுக்கு இளமையிலே இறைபக்தி, பயம், கீழ்ப்படிதல் ஆகியவை இருக்கும்படி வளர்க்க வேண்டும். இதற்கு இறை ஆசீர் தேவையானதால் நமது குடும்பங்களை இயேசு, மரி, சூசைக்கு காணிக்கையாக்க வேண்டும்.
புதுமை
இஸ்பானியா நாட்டில் உயர்ந்த குலத்தில் புனித அவிலா தெரசம்மாள் பிறந்தார். அவளது பதினெட்டு வயதில் துறவற சபையில் சேர்ந்தாள். மடத்தில் இருக்கும்போது குறைவான சாப்பாடு, அதிகமான ஜெபம், தவம் இவற்றால் உடல் மெலிந்தார். மருந்தினை மாற்றி சாப்பிட்டதால் நான்கு நாட்கள் எந்த உணர்ச்சியும் இன்றி இருந்தார். அவள் இறந்துவிட்டாள் என குருக்கள் அவஸ்தை திருப்பலி நிறைவேற்றி அடக்கம் செய்ய குழியும் வெட்டப்பட்டது. பின்னர் அவளுக்கு உணர்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவரது உடல் உறுப்புகள் சரிவர இயங்காமல் இருந்தது. அத்தோடு உடல் உறுப்புகள் அனைத்திலும் பயங்கரமான வலி இருந்தது. இவ்வாறு மூன்றரை ஆண்டுகள் கடுமையான வேதனையிருந்தாலும் அவர், கடவுளின் திரு சித்தத்திற்கு பணிந்து பொறுமையோடு நடந்துகொண்டார்.
என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும் நோய் குறையப் போவதில்லை என மருத்துவர்கள் கூறினர்.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு புனித சூசையப்பரிடம் விசுவாசத்தோடு செபித்தால் நோய் குணமாகும் என விசுவாசத்தோடு செபித்ததால் நோய் குணமானது. இதனைப் பார்த்தவர்கள் புனித சூசையப்பரை மகிமைபடுத்தினார்கள். புனித தெரசம்மாள், புனித சூசையப்பரின் புகழ் எல்லா இடமும் பரவ செபித்தார்கள். தான் நிறுவிய கார்மல் சபைக்கு பாதுகாவலராகவும், தங்களுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்பவராகவும் கொண்டு தம் மரணம் வரை அவருக்கு வணக்கம் செலுத்தி வந்தார்கள்.
புனித சூசையப்பரும் இவருக்கு பலமுறை காட்சியளித்து தனக்குள்ள அன்பைத் தெரியப்படுத்தி, பல துன்ப நேரங்களிலும் இவருக்கு காவலாக இருந்து காத்துவந்தார். "எனக்கு புனித சூசையப்பர் செய்த உதவிகள் எவ்வளவு என சொல்ல முடியாது. நான் உதவி கேட்டு ஒருபோதும் கிடைக்காமலிருந்ததில்லை. தூயவர்கள் அவர்களது பக்தர்கள் உதவி கேட்கும்போதெல்லாம் உதவி வழங்கும்படியான சிறப்பான ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். அதனால் புனித சூசையப்பரை தங்களுக்கு ஆதரவாகவும், பாதுகாவலராகவும் அனைவரும் வாழ்வில் கொள்ள வேண்டும்" இவ்வாறு புனித அவிலா தெரசம்மாள் எழுதி வைத்துள்ளார்கள்.
எனவே, புனித சூசையப்பரை பக்தி விசுவாசத்தோடு வேண்டிக் கொண்டால் நாம் கேட்பது கிடைக்கும் என அறிவோம்.
(3 பர, அரு, பிதா)
செபம்
இறைவனால் பரலோக பூலோக அரசியான மரியன்னையை திருமணம் செய்துகொள்ள தேர்ந்து எடுக்கப்பட்ட புனித சூசையப்பரே! உம்மை அன்புசெய்து, வணங்கி புகழ்கிறோம். நீர் சகல ஆண்களுக்கும், மரியன்னை சகல பெண்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நம்புகிறோம். இல்லறத்தாரை ஆசீர்வதித்து அவர்கள் நல்வழியில் செல்ல உதவும். உம்முடைய திருமணத்தை நினைத்து எப்போதும் மரியன்னைமேல் பக்தியும் நம்பிக்கையும் கொள்ள உதவி செய்யும் என உம்மிடம் வேண்டுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இல்லறத்தாருக்கு பாதுகாவலரான புனித சூசையப்பரே உம்மை மன்றாடுகிறோம்.
இல்லறத்தாருக்கு முன்மாதிரிகையான புனித சூசையப்பரே உம்மை மன்றாடுகிறோம்.
இல்லறத்தாருக்கு பாதுகாவலான புனித சூசையப்பரே உம்மை புகழ்கிறோம்.
செய்ய வேண்டிய நற்செயல்
ஒரு ஏழை குடும்பத்திற்கு முடிந்தளவு உதவியைச் செய்வது.
புனித சூசையப்பர் கன்னிமரியை திருமணம் செய்ததை தியானிப்போம்
தியானம்
ஜென்மபாவமில்லாமல் பிறந்த மரியன்னை மூன்று வயதில் ஆலயத்தில் வைக்கப்பட்டு புண்ணிய நெறியில் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பதினான்கு வயதாகும்போது திருமணம் செய்துவைக்க விரும்பினார். பரிசுத்த தன்மை கெடாமல் இயேசுகிறிஸ்துவை பெற்றெடுக்க வேண்டும் என்று இருந்தது. தனிமையாக இருந்து இயேசுவைப் பெற்றெடுத்தால் யூதர்கள் தேவனுடைய சித்தத்தினை அறியாமல் தவறாகப் பேசுவர். அதனால் மரியாளுக்கு ஒருவரை கணவராக நியமிக்க வேண்டியிருந்தது. மேலும் சிறு குழந்தையாகப் பிறக்கப்போகும் இயேசுவுக்கு பாதுகாவலாக ஒரு வளர்ப்பு தந்தையும் தேவையாக இருந்தது. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் புனித சூசையப்பர்.
மறைநூல் வல்லுநர்கள் மரியன்னைக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பின்னர், தாவீது அரசகுலத்தில் பிறந்து திருமணமாகாத திருமண வயதில் உள்ள இளைஞர்களை வரவழைத்து ஒரு கோலினைக் கொடுத்து யார் கையில் இந்தக் கோல் மலருமோ அவருக்குத் தான் மரியன்னையை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. புனித சூசையப்பர் கையில் இருந்த கோல் மலர்ந்தது. மறைநூல் வல்லுநர்கள் மகிழ்ந்து மறைநூல்படி அவருக்கு கன்னிமரியாளை மணமுடித்து வைத்தனர். அந்த கோலானது இன்றும் நேயாய் பொலி என்ற நகரத்தில் மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வழக்கப்படி திருமணத்தின்போது புனித சூசையப்பர் கன்னிமரியாளுக்கு அணிவித்த மோதிரம் இன்றும் பெரூசியா நாட்டில் வைத்து வணங்குகின்றனர்.
திருமணம் நடந்தபிறகு புனித சூசையப்பர் கன்னி மரியாளை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து மரியாதையோடும், அதிக கவனத்தோடும் மரியாளுக்கு வேண்டியவைகளை அளித்து வந்தார். கன்னிமரியாளோ தனது கணவரைப்போல் நேசித்து அவருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார். திருமணம் என்றதும் ஆசாபாசங்கள் இருக்கும் என்பதற்கு இடமின்றி அப்பழுக்கின்றி இருவரும் பரிசுத்தமாய் இருந்தார்கள் என நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும். திருமணத்திற்கு முன்னே இருவரும் தனித்தனியே இறைவனிடம் தாங்கள் கன்னிமை கெடாமல் வாழப்போவதாக வாக்கு கொடுத்திருந்தனர். இதற்கு திருமணம் தடையாக இருக்கலாகாதென்பதை கடவுளின் ஆசியால் முன்னே அறிந்த பின்தான் திருமணத்தை முடித்தார்கள். மரணம் வரை கடைப்பிடித்தார்கள்.
நாம் புனித சூசையப்பரை கன்னிமரியாளுக்கு கணவனாகத் தெரிந்து கொண்டதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வுலகில் துறவறத்திற்கு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் திருச்சபைக்கு மாணிக்கமாகவும், வைரமாகவும் இருந்தாலும் அவர்கள் எண்ணிக்கை மிக குறைவே. குடும்பத்தவர்களாக இருக்க இறைவன் அழைத்தவர்கள் எண்ணிக்கையே மிக அதிகம். குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு புனித சூசையப்பர் திருமணம் முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். தூய எண்ணத்தோடு கடவுளின் எண்ணத்தை புனித சூசையப்பர் ஆலயத்தில் வைத்து மறைநூல் வல்லுநர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதுபோல நாமும் செய்தால் இறையருள் கிடைக்கும்.
எனவே, திருமணத்திற்கு முன்னர் சகுனம், ஜாதகம், நல்ல நாள், நல்ல நேரம், பொருத்தம் பார்ப்பதும், திருமணத்தின் போது பிற மதத்தவர் செய்யும் சடங்குகள் நிறைவேற்றுவது பாவமும் இறையன்புக்கு எதிரானதும் ஆகும். அப்படி செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
புனித சூசையப்பர், கன்னிமரியாளை அன்போடும், மரியாதையோடும் நடத்தினார். மரியாளும் தன் கணவருக்கு மேற்பட்டவராக இருந்தபோதும் கீழ்ப்படிந்து நடந்தார். அதனால்தான் பூமியிலே அதிக பலனும் மகிமையும் கிடைக்கப்பெற்றது. கிறிஸ்தவர்கள் திருமணத்திற்கு பின்னர் குடும்பங்களிலே பொறாமை, அகங்காரம் இவற்றால் மனவேறுபாடு ஏற்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
திருமணங்களிலே அவ்வாறு நடைபெறா வண்ணம் புனித சூசையப்பரிடமும் கன்னிமரியாளிடமும் செபிக்க வேண்டும். பிறக்கும் குழந்தைகளை இறைவன் அருட்கொடை என எண்ணி இறைவனுக்கு நன்றிகூற வேண்டும். புனித சூசையப்பர் எவ்விதம் இயேசு கிறிஸ்துவை அன்புடன் வளர்த்தாரோ அவ்விதமே நாமும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அவர்களுக்கு இளமையிலே இறைபக்தி, பயம், கீழ்ப்படிதல் ஆகியவை இருக்கும்படி வளர்க்க வேண்டும். இதற்கு இறை ஆசீர் தேவையானதால் நமது குடும்பங்களை இயேசு, மரி, சூசைக்கு காணிக்கையாக்க வேண்டும்.
புதுமை
இஸ்பானியா நாட்டில் உயர்ந்த குலத்தில் புனித அவிலா தெரசம்மாள் பிறந்தார். அவளது பதினெட்டு வயதில் துறவற சபையில் சேர்ந்தாள். மடத்தில் இருக்கும்போது குறைவான சாப்பாடு, அதிகமான ஜெபம், தவம் இவற்றால் உடல் மெலிந்தார். மருந்தினை மாற்றி சாப்பிட்டதால் நான்கு நாட்கள் எந்த உணர்ச்சியும் இன்றி இருந்தார். அவள் இறந்துவிட்டாள் என குருக்கள் அவஸ்தை திருப்பலி நிறைவேற்றி அடக்கம் செய்ய குழியும் வெட்டப்பட்டது. பின்னர் அவளுக்கு உணர்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவரது உடல் உறுப்புகள் சரிவர இயங்காமல் இருந்தது. அத்தோடு உடல் உறுப்புகள் அனைத்திலும் பயங்கரமான வலி இருந்தது. இவ்வாறு மூன்றரை ஆண்டுகள் கடுமையான வேதனையிருந்தாலும் அவர், கடவுளின் திரு சித்தத்திற்கு பணிந்து பொறுமையோடு நடந்துகொண்டார்.
என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும் நோய் குறையப் போவதில்லை என மருத்துவர்கள் கூறினர்.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு புனித சூசையப்பரிடம் விசுவாசத்தோடு செபித்தால் நோய் குணமாகும் என விசுவாசத்தோடு செபித்ததால் நோய் குணமானது. இதனைப் பார்த்தவர்கள் புனித சூசையப்பரை மகிமைபடுத்தினார்கள். புனித தெரசம்மாள், புனித சூசையப்பரின் புகழ் எல்லா இடமும் பரவ செபித்தார்கள். தான் நிறுவிய கார்மல் சபைக்கு பாதுகாவலராகவும், தங்களுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்பவராகவும் கொண்டு தம் மரணம் வரை அவருக்கு வணக்கம் செலுத்தி வந்தார்கள்.
புனித சூசையப்பரும் இவருக்கு பலமுறை காட்சியளித்து தனக்குள்ள அன்பைத் தெரியப்படுத்தி, பல துன்ப நேரங்களிலும் இவருக்கு காவலாக இருந்து காத்துவந்தார். "எனக்கு புனித சூசையப்பர் செய்த உதவிகள் எவ்வளவு என சொல்ல முடியாது. நான் உதவி கேட்டு ஒருபோதும் கிடைக்காமலிருந்ததில்லை. தூயவர்கள் அவர்களது பக்தர்கள் உதவி கேட்கும்போதெல்லாம் உதவி வழங்கும்படியான சிறப்பான ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். அதனால் புனித சூசையப்பரை தங்களுக்கு ஆதரவாகவும், பாதுகாவலராகவும் அனைவரும் வாழ்வில் கொள்ள வேண்டும்" இவ்வாறு புனித அவிலா தெரசம்மாள் எழுதி வைத்துள்ளார்கள்.
எனவே, புனித சூசையப்பரை பக்தி விசுவாசத்தோடு வேண்டிக் கொண்டால் நாம் கேட்பது கிடைக்கும் என அறிவோம்.
(3 பர, அரு, பிதா)
செபம்
இறைவனால் பரலோக பூலோக அரசியான மரியன்னையை திருமணம் செய்துகொள்ள தேர்ந்து எடுக்கப்பட்ட புனித சூசையப்பரே! உம்மை அன்புசெய்து, வணங்கி புகழ்கிறோம். நீர் சகல ஆண்களுக்கும், மரியன்னை சகல பெண்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நம்புகிறோம். இல்லறத்தாரை ஆசீர்வதித்து அவர்கள் நல்வழியில் செல்ல உதவும். உம்முடைய திருமணத்தை நினைத்து எப்போதும் மரியன்னைமேல் பக்தியும் நம்பிக்கையும் கொள்ள உதவி செய்யும் என உம்மிடம் வேண்டுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இல்லறத்தாருக்கு பாதுகாவலரான புனித சூசையப்பரே உம்மை மன்றாடுகிறோம்.
இல்லறத்தாருக்கு முன்மாதிரிகையான புனித சூசையப்பரே உம்மை மன்றாடுகிறோம்.
இல்லறத்தாருக்கு பாதுகாவலான புனித சூசையப்பரே உம்மை புகழ்கிறோம்.
செய்ய வேண்டிய நற்செயல்
ஒரு ஏழை குடும்பத்திற்கு முடிந்தளவு உதவியைச் செய்வது.