- தேவன்னை
- பனிமய மாதா
வரலாறு
பனி பெய்ய இயலாத ஆகஸ்ட் மாதத்தில் பனி பெய்திராத உரோமை நகரில் ,உறைபனி பொழிந்து மலை முகடு முழுதும் மூடிய அதிசயம் ஆகஸ்ட் 5, கி பி 352 இல் நிகழ்ந்துள்ளது . உரோமையில் பத்திரிஸ் அருளப்பர் என்னும் செல்வச் சீமான் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி கொண்ட இத்தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லாதால் தங்கள் ஆஸ்தி அனைத்தையும் அன்னை மரியாளுக்கென அர்ப்பணிக்க முடிவு செய்தனர் .பாப்பரசர் திபெரியும் அவர்களின் ஆலோசனையின் பேரில் இதற்கென மாதாவிடம் இடையறாது மன்றாடி வந்தனர். இவர்களுக்குப் பதிலளிக்க திருவுளம் கொண்ட அன்னை , ஆகஸ்ட் 5 ஆம் தேதி இவர்கள் இருவரின் கனவிலும் தோன்றி , எஸ்கலின் மலையில் தனக்கென்று ஒரு ஆலயம் நிர்மாணிக்கும்படிகூறினார் . பனி பெய்திருக்கும் மலை முகட்டை அவர்களுக்கு அடையாளமாகத் தருவதாக உறுதியளித்தார் . இருவரும் பாப்பரசரிடம் செல்ல , அவரும் அதே கனவைக் கண்டதாகக் கூறினார். உரோமையில் பனி பொழிவதில்லை.ஆனால் அந்த இரவு முழுவதும் உறை பனி பெய்து போர்வை போல் மலையை மூடியது . காலையில் செய்தி அறிந்து பனி பெய்த இடத்தைக் காண பெருங்கூட்டம் கூடியது . பனி பெய்த இடத்தின் வடிவத்திலேயே ஆலயம் எழுப்பப்பட்டது. இதுவே பனிமய மாதாவுக்கென்று அர்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் .அப்போஸ்தலரான புனித லூக்கா தீட்டியதாகக் கூறப்படும் மாதாவின் ஓவியம் ஒன்று இங்கு உள்ளது.
பழைய ஏற்பாட்டில் கிதியோன் தன் போர்வை மட்டும் பனியில் நனைய வேண்டும் என்று வேண்டிய போதும் , தன் போர்வை மட்டும் பனியில் நனையக் கூடாது என்று வேண்டியபோதும் இறைவன் அந்த அடையாளத்தைக் கொடுத்தது போல் பனி பெய்யாத இடத்திலும், காலத்திலும் அன்னை செய்த இந்த அற்புதம் அவருக்கு பனிமய மாதா என்று பெயர் பெற்று தந்தது.
"Signora Das Nevis" - (போர்த்துகீசிய மொழியில்) "பனிமய அன்னை "
பனிமய மாதா திருநாள் - ஆகஸ்ட் 5
நவநாள் ஜெபம் (ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 5 வரை) -
எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக அரசியே!கஸ் திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே / உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையைத் வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரே! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதைக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களைத் தாய் பாராட்டு வாளா? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிடில் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடிநொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா / தஸ்நேவிஸ் மேரி அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் ஆமென்.
1 பர.அரு.திரி.
புனித தஸ்நேவிஸ் மாதாவுக்கு ஜெபம்
பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியே! சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரே! பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே! மனிதருக்கு அடைக்கலமே, சர்வலோகத்துக்கும் ஆண்டவளே, உமக்குப் பிள்ளைகளாயிருக்கிற நாங்களெல்லாரும் உமது திருப் பாதத்திலே சாஷ்டாங்கமாக விழுந்து எப்படியாகிலும் எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம். தேவமாதாவே! நீர்ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்தீரே, எங்கள் ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிகிற நேரம் நாங்களும் பாவமில்லாதிருக்கச் செய்தருளும் . மாதாவே! உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும், விசேசமாய் நாங்கள் சாகிற தருவாயில் மோட்சம் போகாதபடி பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளி நாங்கள் உம்முடைய திருக்குமாரன் அண்டைக்கு வரத் துணையாயிரும். இதினிமித்தமாய உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்டு நிற்கிறோம். அதை அடியோருக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே, மாதாவே, ஆண்டவளே, ஆமென்.
புகழ் மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
சர்வலோக சராசரங்களையும் படைக்கும் முன்னே சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்ட திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, *
தீயை உமிழ்ந்து தீக்குணங்களையே செய்கிற ஆதிசர்ப்பத்தின் தலையை நொறுக்கி நசுக்கிய திவ்விய தஸ் நேவிஸ் மாதாவே,
குளிர்ந்த நிலவைப் பொழியும் சந்திரனைப் பாத தாமரையால் மிதித்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அடர்ந்த இருளை நீக்கும் செஞ்சுடராகிய ஆயிரங் கதிரோனை ஆடையாகத் தரித் திலங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பன்னிரண்டு விண்மீன்களைத் திருமுடியின் மகுடமாய்ச் ஆடி விளங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
மகாதீர்க்கத்தரிசிகளால் முன்னமே அறிவிக்கப்பட்ட மோட்ச அலங்காரியான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பிசாசு அணங்குகள் நடுங்கிப் பதுங்கும் பரிசுத்த நாமலங்காரியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
ஆறு மூன்று மகுடாதிபதிகளின் குல விளக்காய் விளங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
வலம்புரி உயிர்த்த வெண்முகத்தைப் பார்க்கிலும் மகா அலங்காரம் பொருந்திய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சகலவரப்பிரசாதங்களும் மலிந்த சம்பூரண அலங்காரியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
தாவீதரசரின் திருமுடியில் துவங்கிய ஜீவரெத்தினமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அருள் நிறைந்தவளே வாழ்கவென்று தேவதூதனால் வாழ்த்தி துதிக்கப்பட்ட திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பரலோக பூலோக பாதாள லோகமென்னும் திரிலோகங்களிலும் அடங்காத தேவாதி தேவனைத் திருவு திரத்திலடக்கித் தாங்கிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
கொடுங்கோலனாகிய ஏரோதரசனின் கொலை பாதகத்துக்கஞ்சி குழந்தையாயிருந்த உலக இரட்சகரை எகிப்து தேசத்திற்குக் கொண்டு போய் இரட்சித்தவளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
மகோன்னத பரிசுத்த கோதுமை அப்பத்தின் மாதாவாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அக்கினிக்குள் வேகாத அழகிய முட்செடியில் தோன்றிய அசரீரி வாக்கியத்தின் திருமகளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அப்போஸ்தலர்கள் மேலிறங்கிய சிவந்த அக்கினி நாக்கு உருவத்தின் அமல பத்தினியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பூலோக ஆசைகளை வெறுத்து மேலோக ஆசை கொண்ட வேத சாட்சிகளின் திடதைரியமான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பாவதுர்க் கந்தம் ஒழிக்கும் பரிமள தந்த மயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பேய்க் குணங்கொண்ட படைகளைச் சிதறடிக்கும் வாளாயுதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
வேத விரோதமாய்ப் பாரும் அடர்ந்த கார் மேகங்களைத் துரத்தி அழிக்கும் பிரசண்டமாருதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சத்தியத் திருச்சபையின் ஆறுதலின் வச்சிரத் தூணாகிய திவ்விய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
மோட்ச சாம்ராஜ்யத்தின் வெற்றித் தூணாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சன்னியாசிகளுக்கும் கன்னியாஸ்த்ரிகளுக்கும் முன் மாதிரிகையாகும் கற்பலங்காரம் நிறைந்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சர்வலோகங்களையும் பரிபாலிக்க நாம் அதிகாரமுடையோம் எனக் காண்பிக்க சர்வலோகநாயகனைத் திருக்கரத்தில் ஏந்தியிலங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
உலக மீட்பராகிய உமது குமாரன் ஞானஸ்நானம் பெற்ற நன்னீர் நிறைந்த யோர்தான் நதியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
ஆதித்தாய் தந்தை செய்த தோஷத்தை நீக்கி அடைபட்டிருந்த மோட்சகபாடத்தைத் திறந்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சத்திய வேதத்தை தூஷித்து அலையும் பதிதரின் பொல்லாத நாவிற்கு ஆணியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பாவங்களுக்காய்ப் பரிந்து பேசிபரகதி கொடுக்கும் வரம் நிறைந்த பாவிகளின் அடைக்கலமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
கடலிலும் வனத்திலும் வருந்தும் பக்தர்களுக்கு வலியதரிசனையாகி அவர்கள் ஆபத்தில் அகமகிழ்வோடு உதவி புரியும் அபயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
தீராத நோயாளிகளுக்கு உத்தம ஒளஷதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
வாடாத திவ்விய மணம் வீசும் புஷ்பமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அழுகண்ணீர்களின் அழியாத பாக்கியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
மகாத்துமாக்களின் மகத்துவம் தங்கிய நல்ல ஆலோசனையாகும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
தரும் வான்களின் விசேஷ தயாளமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பொறுமையின் குன்றாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
தாழ்ச்சியின் பொக்கிஷமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
நவவிலாச சம்மனசுக்களின் மகிமை மிகுந்த அரசியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சத்திய வேக இராஜாக்களுக்குள் மேதானத்தை வளர்க்கும் சக்கரவர்த்தினியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பரலோக சக்கரவர்த்தியின் அமல பத்திராசனமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
கொள்ளை நோயை விலக்கும் வல்லபம் வாய்ந்த மகா பண்டிகையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சர்வலோகநாயகன் சொன்ன சத்திய வாக்கியத்தின் சாட்சியாகிய வானமண்டலத்தில் பிரகாசிக்கும் பச்சை வில்லாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
வெண்பொன்னை நிகர்த்த பனிமயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
நீலோற்பவத்தைப் பழிக்கும் இரு நேத்திரங்களால் எங்களை எந்நாளும் ரட்சித்துக் காத்தருளும் காருண்ணிய தாயாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சாதுக்களாகிய சகல புனிதர்களின் சதானந்தமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சிலுவை பத்திராசனத்தில் உயிர் விடுந் தருணம் உலக இரட்சகராகிய உமது திருமகனால் எங்களுக்குக் கையளிக்கப்பட்ட ஏக அடைக்கலத் தாயாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
உரோமை மாநகரில் பத்திரீஸ் அருளப்பருக்கும் அவர் மனைவிக்கும் பிரசன்னமாகி என்கலின் மலையில் ஒரு தேவாலயம் கட்டும்படி திருவாய் மலர்ந்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பனி பெய்யக் கூடாத உஷ்ண காலத்தில் உறைபனியைப் பெய்வித்து ஆலயம் கட்ட இடத்தையும் அளவையும் காண்பித்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பரிசுத்த திபேரியும் பாப்பரசருக்குத் தரிசனை தந்து அதிசயங்களைச் செய்தருளிய எஸ்கலின் மலை நாயகியான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்களுடைய எளிய விண்ணப்பங்கள் இறைவனால் அங்கீகரிக்கப்படும் பொருட்டு, திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே ,
* எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
செபிப்போமாக
சர்வலோக கர்த்தாவும், உலக மீட்ப ருமாகிய உத்தம இயேசுவே! தேவரீரை மனித சுபாவத்தின் படியே பெறு முன்னும், பெற்ற போதும், பெற்றதின் பின்னும் கன்னிமை குன்றாதிருக்க வரம் பெற்ற தேவரீருடைய திரு மாதாவின் பாதார விந்தங்களை அடைக்கலமாய்த் தேடிக் கொள்கிற அடியோர், அத் திரு மாதாவின் வல்லமையுள்ள மன்றாட்டினால் உலகம், சரீரம், பசாசென்னும் சத்துருக்களுடைய மாயையாதிய அந்தகாரத்துள் அகப்படாமல், தேவரீருடைய பரிசுத்த வரப்பிரசாதமாகிய திருச்சுடர் பரவிய இருதயங்களோடு இவ்வுலகத்தில்தேவரீருக்குப் பணி செய்து சதn காலமும் பேரின்ப வீட்டில் அத் திருத்தாயாரோடும் சகல வானோர்களோடும் தேவரீரைத் தோத்தரித்து வாழ கிருபை புரிந்தருளும் சுவாமி . பிதாவோடும், தூய ஆவியோடும் சதாகாலமும் சீவியருமாய் இராட்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாய் இருக்கிற ஆண்டவரே ஆமென்.
மன வல்லிய ஜெபம்
சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும், சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம் ஆமென்
பனி பெய்ய இயலாத ஆகஸ்ட் மாதத்தில் பனி பெய்திராத உரோமை நகரில் ,உறைபனி பொழிந்து மலை முகடு முழுதும் மூடிய அதிசயம் ஆகஸ்ட் 5, கி பி 352 இல் நிகழ்ந்துள்ளது . உரோமையில் பத்திரிஸ் அருளப்பர் என்னும் செல்வச் சீமான் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி கொண்ட இத்தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லாதால் தங்கள் ஆஸ்தி அனைத்தையும் அன்னை மரியாளுக்கென அர்ப்பணிக்க முடிவு செய்தனர் .பாப்பரசர் திபெரியும் அவர்களின் ஆலோசனையின் பேரில் இதற்கென மாதாவிடம் இடையறாது மன்றாடி வந்தனர். இவர்களுக்குப் பதிலளிக்க திருவுளம் கொண்ட அன்னை , ஆகஸ்ட் 5 ஆம் தேதி இவர்கள் இருவரின் கனவிலும் தோன்றி , எஸ்கலின் மலையில் தனக்கென்று ஒரு ஆலயம் நிர்மாணிக்கும்படிகூறினார் . பனி பெய்திருக்கும் மலை முகட்டை அவர்களுக்கு அடையாளமாகத் தருவதாக உறுதியளித்தார் . இருவரும் பாப்பரசரிடம் செல்ல , அவரும் அதே கனவைக் கண்டதாகக் கூறினார். உரோமையில் பனி பொழிவதில்லை.ஆனால் அந்த இரவு முழுவதும் உறை பனி பெய்து போர்வை போல் மலையை மூடியது . காலையில் செய்தி அறிந்து பனி பெய்த இடத்தைக் காண பெருங்கூட்டம் கூடியது . பனி பெய்த இடத்தின் வடிவத்திலேயே ஆலயம் எழுப்பப்பட்டது. இதுவே பனிமய மாதாவுக்கென்று அர்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் .அப்போஸ்தலரான புனித லூக்கா தீட்டியதாகக் கூறப்படும் மாதாவின் ஓவியம் ஒன்று இங்கு உள்ளது.
பழைய ஏற்பாட்டில் கிதியோன் தன் போர்வை மட்டும் பனியில் நனைய வேண்டும் என்று வேண்டிய போதும் , தன் போர்வை மட்டும் பனியில் நனையக் கூடாது என்று வேண்டியபோதும் இறைவன் அந்த அடையாளத்தைக் கொடுத்தது போல் பனி பெய்யாத இடத்திலும், காலத்திலும் அன்னை செய்த இந்த அற்புதம் அவருக்கு பனிமய மாதா என்று பெயர் பெற்று தந்தது.
"Signora Das Nevis" - (போர்த்துகீசிய மொழியில்) "பனிமய அன்னை "
பனிமய மாதா திருநாள் - ஆகஸ்ட் 5
நவநாள் ஜெபம் (ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 5 வரை) -
எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக அரசியே!கஸ் திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே / உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையைத் வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரே! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதைக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களைத் தாய் பாராட்டு வாளா? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிடில் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடிநொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா / தஸ்நேவிஸ் மேரி அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் ஆமென்.
1 பர.அரு.திரி.
புனித தஸ்நேவிஸ் மாதாவுக்கு ஜெபம்
பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியே! சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரே! பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே! மனிதருக்கு அடைக்கலமே, சர்வலோகத்துக்கும் ஆண்டவளே, உமக்குப் பிள்ளைகளாயிருக்கிற நாங்களெல்லாரும் உமது திருப் பாதத்திலே சாஷ்டாங்கமாக விழுந்து எப்படியாகிலும் எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம். தேவமாதாவே! நீர்ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்தீரே, எங்கள் ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிகிற நேரம் நாங்களும் பாவமில்லாதிருக்கச் செய்தருளும் . மாதாவே! உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும், விசேசமாய் நாங்கள் சாகிற தருவாயில் மோட்சம் போகாதபடி பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளி நாங்கள் உம்முடைய திருக்குமாரன் அண்டைக்கு வரத் துணையாயிரும். இதினிமித்தமாய உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்டு நிற்கிறோம். அதை அடியோருக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே, மாதாவே, ஆண்டவளே, ஆமென்.
புகழ் மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
சர்வலோக சராசரங்களையும் படைக்கும் முன்னே சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்ட திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, *
தீயை உமிழ்ந்து தீக்குணங்களையே செய்கிற ஆதிசர்ப்பத்தின் தலையை நொறுக்கி நசுக்கிய திவ்விய தஸ் நேவிஸ் மாதாவே,
குளிர்ந்த நிலவைப் பொழியும் சந்திரனைப் பாத தாமரையால் மிதித்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அடர்ந்த இருளை நீக்கும் செஞ்சுடராகிய ஆயிரங் கதிரோனை ஆடையாகத் தரித் திலங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பன்னிரண்டு விண்மீன்களைத் திருமுடியின் மகுடமாய்ச் ஆடி விளங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
மகாதீர்க்கத்தரிசிகளால் முன்னமே அறிவிக்கப்பட்ட மோட்ச அலங்காரியான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பிசாசு அணங்குகள் நடுங்கிப் பதுங்கும் பரிசுத்த நாமலங்காரியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
ஆறு மூன்று மகுடாதிபதிகளின் குல விளக்காய் விளங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
வலம்புரி உயிர்த்த வெண்முகத்தைப் பார்க்கிலும் மகா அலங்காரம் பொருந்திய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சகலவரப்பிரசாதங்களும் மலிந்த சம்பூரண அலங்காரியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
தாவீதரசரின் திருமுடியில் துவங்கிய ஜீவரெத்தினமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அருள் நிறைந்தவளே வாழ்கவென்று தேவதூதனால் வாழ்த்தி துதிக்கப்பட்ட திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பரலோக பூலோக பாதாள லோகமென்னும் திரிலோகங்களிலும் அடங்காத தேவாதி தேவனைத் திருவு திரத்திலடக்கித் தாங்கிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
கொடுங்கோலனாகிய ஏரோதரசனின் கொலை பாதகத்துக்கஞ்சி குழந்தையாயிருந்த உலக இரட்சகரை எகிப்து தேசத்திற்குக் கொண்டு போய் இரட்சித்தவளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
மகோன்னத பரிசுத்த கோதுமை அப்பத்தின் மாதாவாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அக்கினிக்குள் வேகாத அழகிய முட்செடியில் தோன்றிய அசரீரி வாக்கியத்தின் திருமகளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அப்போஸ்தலர்கள் மேலிறங்கிய சிவந்த அக்கினி நாக்கு உருவத்தின் அமல பத்தினியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பூலோக ஆசைகளை வெறுத்து மேலோக ஆசை கொண்ட வேத சாட்சிகளின் திடதைரியமான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பாவதுர்க் கந்தம் ஒழிக்கும் பரிமள தந்த மயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பேய்க் குணங்கொண்ட படைகளைச் சிதறடிக்கும் வாளாயுதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
வேத விரோதமாய்ப் பாரும் அடர்ந்த கார் மேகங்களைத் துரத்தி அழிக்கும் பிரசண்டமாருதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சத்தியத் திருச்சபையின் ஆறுதலின் வச்சிரத் தூணாகிய திவ்விய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
மோட்ச சாம்ராஜ்யத்தின் வெற்றித் தூணாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சன்னியாசிகளுக்கும் கன்னியாஸ்த்ரிகளுக்கும் முன் மாதிரிகையாகும் கற்பலங்காரம் நிறைந்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சர்வலோகங்களையும் பரிபாலிக்க நாம் அதிகாரமுடையோம் எனக் காண்பிக்க சர்வலோகநாயகனைத் திருக்கரத்தில் ஏந்தியிலங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
உலக மீட்பராகிய உமது குமாரன் ஞானஸ்நானம் பெற்ற நன்னீர் நிறைந்த யோர்தான் நதியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
ஆதித்தாய் தந்தை செய்த தோஷத்தை நீக்கி அடைபட்டிருந்த மோட்சகபாடத்தைத் திறந்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சத்திய வேதத்தை தூஷித்து அலையும் பதிதரின் பொல்லாத நாவிற்கு ஆணியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பாவங்களுக்காய்ப் பரிந்து பேசிபரகதி கொடுக்கும் வரம் நிறைந்த பாவிகளின் அடைக்கலமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
கடலிலும் வனத்திலும் வருந்தும் பக்தர்களுக்கு வலியதரிசனையாகி அவர்கள் ஆபத்தில் அகமகிழ்வோடு உதவி புரியும் அபயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
தீராத நோயாளிகளுக்கு உத்தம ஒளஷதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
வாடாத திவ்விய மணம் வீசும் புஷ்பமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
அழுகண்ணீர்களின் அழியாத பாக்கியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
மகாத்துமாக்களின் மகத்துவம் தங்கிய நல்ல ஆலோசனையாகும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
தரும் வான்களின் விசேஷ தயாளமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பொறுமையின் குன்றாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
தாழ்ச்சியின் பொக்கிஷமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
நவவிலாச சம்மனசுக்களின் மகிமை மிகுந்த அரசியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சத்திய வேக இராஜாக்களுக்குள் மேதானத்தை வளர்க்கும் சக்கரவர்த்தினியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பரலோக சக்கரவர்த்தியின் அமல பத்திராசனமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
கொள்ளை நோயை விலக்கும் வல்லபம் வாய்ந்த மகா பண்டிகையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சர்வலோகநாயகன் சொன்ன சத்திய வாக்கியத்தின் சாட்சியாகிய வானமண்டலத்தில் பிரகாசிக்கும் பச்சை வில்லாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
வெண்பொன்னை நிகர்த்த பனிமயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
நீலோற்பவத்தைப் பழிக்கும் இரு நேத்திரங்களால் எங்களை எந்நாளும் ரட்சித்துக் காத்தருளும் காருண்ணிய தாயாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சாதுக்களாகிய சகல புனிதர்களின் சதானந்தமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
சிலுவை பத்திராசனத்தில் உயிர் விடுந் தருணம் உலக இரட்சகராகிய உமது திருமகனால் எங்களுக்குக் கையளிக்கப்பட்ட ஏக அடைக்கலத் தாயாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
உரோமை மாநகரில் பத்திரீஸ் அருளப்பருக்கும் அவர் மனைவிக்கும் பிரசன்னமாகி என்கலின் மலையில் ஒரு தேவாலயம் கட்டும்படி திருவாய் மலர்ந்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பனி பெய்யக் கூடாத உஷ்ண காலத்தில் உறைபனியைப் பெய்வித்து ஆலயம் கட்ட இடத்தையும் அளவையும் காண்பித்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
பரிசுத்த திபேரியும் பாப்பரசருக்குத் தரிசனை தந்து அதிசயங்களைச் செய்தருளிய எஸ்கலின் மலை நாயகியான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்களுடைய எளிய விண்ணப்பங்கள் இறைவனால் அங்கீகரிக்கப்படும் பொருட்டு, திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே ,
* எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
செபிப்போமாக
சர்வலோக கர்த்தாவும், உலக மீட்ப ருமாகிய உத்தம இயேசுவே! தேவரீரை மனித சுபாவத்தின் படியே பெறு முன்னும், பெற்ற போதும், பெற்றதின் பின்னும் கன்னிமை குன்றாதிருக்க வரம் பெற்ற தேவரீருடைய திரு மாதாவின் பாதார விந்தங்களை அடைக்கலமாய்த் தேடிக் கொள்கிற அடியோர், அத் திரு மாதாவின் வல்லமையுள்ள மன்றாட்டினால் உலகம், சரீரம், பசாசென்னும் சத்துருக்களுடைய மாயையாதிய அந்தகாரத்துள் அகப்படாமல், தேவரீருடைய பரிசுத்த வரப்பிரசாதமாகிய திருச்சுடர் பரவிய இருதயங்களோடு இவ்வுலகத்தில்தேவரீருக்குப் பணி செய்து சதn காலமும் பேரின்ப வீட்டில் அத் திருத்தாயாரோடும் சகல வானோர்களோடும் தேவரீரைத் தோத்தரித்து வாழ கிருபை புரிந்தருளும் சுவாமி . பிதாவோடும், தூய ஆவியோடும் சதாகாலமும் சீவியருமாய் இராட்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாய் இருக்கிற ஆண்டவரே ஆமென்.
மன வல்லிய ஜெபம்
சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும், சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம் ஆமென்