கார்மேல் மாதாவின் சபையானது தனது பெயரை, இஸ்ரயேல் தேசத்தில் உள்ள, கன்னி மரியாளுக்கென்று , அவர் விண்ணுக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக முதன் முதலில் அர்பணிக்கப்பட்ட ஆலயம் இருக்கும் கார்மேல் மலையைப் பின்பற்றி எடுத்துக் கொள்கிறது.
புனித சைமன் ஸ்டாக் என்பவர் தனது நாற்பதாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள கார்மேல் சபையில் இணைகிறார். இஸ்ரயேலில் இருக்கும் கர்மேல் சபைக்கு அனுப்பப்பட்ட அவர் , கலகக்காரர்கள் அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் வரை அங்கிருந்து தன் செப தப ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டார்.அதன் பின், தனது சபைச் சகோதரர்களுடன் இங்கிலாந்து திரும்பிய அவர் , ஏகமனதாக கிபி 1245 ஆம் ஆண்டில் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் மாதாவின் பேரில் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். இதுவே கார்மேல் சபை இவரது தலைமையின் கீழ் தழைத்தோங்கக் காரணமாய் அமைந்தது. இன்று ஏறத்தாழ 764 ஆண்டுகளுக்கு முன்னர், 1251ம் ஆண்டில் கார்மேல் துறவு சபை இடையூறுகளுக்கு உள்ளானது. அச்சமயத்தில் சைமன் , தனது சபைக்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட சலுகையை வழங்குமாறு அன்னைமரியிடம் உருக்கமாகச் செபித்து வந்தார். இந்த நல்ல துறவியின் செபத்தைக் கேட்ட அன்னைமரியா, 1251ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கேம்பிரிட்ஜில் ஒரு கறுத்த ஆரஞ்சு வண்ண உத்தரியத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம் அவருக்குக் காட்சி கொடுத்துச் சொன்னார் :
“எனது அருமை மகனே, இந்த உத்தரியம் உங்கள் சபைக்குரியது. நான் உங்களுக்கு வழங்கும் சிறப்புச் சலுகையின் அடையாளம் இது. இதனை உனக்காவும், உனது கார்மேல் மலைச் சிறாருக்காகவும் நான் பெற்றது. இதை அணிந்துகொண்டு இறப்பவர்கள் நித்திய நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், இது மீட்பின் சிறப்பு அடையாளம், ஆபத்தில் காக்கும் கேடயம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கென சிறப்பாக வழங்கப்படும் உறுதி”
என்று. கழுத்தில் அணியும் இந்த உத்தரியத்தை அன்னைமரியாவிடமிருந்து பெற்றவர் புனித சைமன் ஸ்டாக். Stock என்றால் அடிமரம் என்று பொருள்.
புனித சைமன் அவர்களின் இளமைக்கால வாழ்வு பற்றி அவ்வளவாகத் தெரியவில்லையெனினும், இவர் தனது 12வது வயதிலிருந்தே ஓர் ஓக் மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த காலியான இடத்தில் துறவியாக வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் இளைஞனாக இருந்தபோது புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அங்கு கார்மேல் சபைத் துறவிகளுடன் சேர்ந்தார். பின்னர் ஐரோப்பா திரும்பி, கார்மேல் சபையின் பல இல்லங்களை நிறுவினார். குறிப்பாக, கேம்பிரிட்ஜ், ஆக்ஸஃபோர்டு, பாரிஸ், பொலோஞ்ஞா போன்ற பல்கலைக்கழக நகரங்களில் கார்மேல் சபை இல்லங்களை ஏற்படுத்தினார். கார்மேல் சபையை தியானயோக வாழ்விலிருந்து தர்மம் எடுத்து வாழும் சபையாக மாற்றினார்.
புனித சைமன் ஸ்டோக் விழா ஜூலை 16.
புனித கார்மேல் அன்னையின் விழா ஜூலை 16
புனித உத்தரிய மாதாவுக்கு ஜெபம்
மிகவும் மதுரமுள்ள புனித கன்னிகையே ! பரம தேவ தாயே ! உம்முடைய முந்தையோராகிய பிதாப்பிதாக்களுள் மிகவும் பூச்சியமான கீர்த்தி பெற்றவராகிய ஆபிரகாம் என்கிறவருக்கு சர்வேசுரன் கொடுத்த வார்த்தைப்பாட்டின்படி , உம்முடைய திருப்புத்திரனாகிய இயேசுநாதரிடத்தில் சகல ஜாதி ஜனங்களும் இரட்சிக்கவும் , ஆசீர்வதிக்கவும் பட்டதைப் பற்றி உம்மோடே அகமகிழ்ந்து உம்மை வாழ்த்தி ஸ்துதித்து வணங்குகிறோம். சர்வலோகத்துக்கும் ஆனந்தமான இராக்கினியே ! சகலருக்கும் தயாபரியான ஆண்டவளே, பாவிகளுக்கு அடைக்கலமே , பரிதவிப்போருக்கு ஆதரவே , பாவப்பிணியை நீக்கும் பரம தேவ தாயே , உமக்கு உத்தம வணக்க தோத்திரம் பண்ணுகிற பக்தி சபைகளுக்குள்ளே உமக்கு விஷேஷ பிரியமும் மகிமையுமாயிருப்பதற்கு புனித உத்தரிய சபையை ஏற்ப்படுத்தச் சித்தமாகி , அத்தியந்த பக்தியால் உமக்கு உகந்தவரான புனித சிமியோன் ஸ்டோக் என்கிற மகத்துவமானவருக்கு திரு உத்தரியத்தைத் தந்தருளினீரே! அடியோர்களுக்கும் உமது ஆதரவின் ஈடாகத் தந்தருளிய இத்திரு ஆடையைப் பற்றி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம் . மீளவும் சாதாரண திருச்சபைக்குப் பிதாவும் , தலைமையான குருவுமான புனித பாப்பானவருக்கு மிகுந்த கிருபையுடனே தரிசனமாகி , உம்முடைய திரு உத்தரிய சபைக்கு உட்பட்டவர்களில் யாராவது ஒருவர் பூவுலகில் பக்திச் சுமுத்திரையுடனே நடந்த பிறகு , மரித்து உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு போவார்களேயாகில் , அதற்குப் பின் முதற் சனிக்கிழமையில் நீர் அவர்களை அத்தீயில் இருந்து மீட்டுக் கொண்டு , மோட்ச ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கப் பண்ணுவதாகத் திரு உளம் பற்றினீரென்றுவேத சாஸ்திரிகர் அநேகர் எழுதி வைத்தார்களே . இந்த வர்த்தமானம் உம்முடைய திருவடியார்களுக்கு எவ்வளவோ சந்தோஷத்திற்கும் நம்பிக்கைக்கும் இடமாயிருக்கிறது . ஆ தயாளமுள்ள தாயே !! அடியேன் மிகவும் பாவியாயிருந்தாலும் உமது அத்தியந்த தயாளத்தை நம்பி உம்முடைய திருக்குமாரனிடத்தில்எனக்குக் கிருபை கிடைக்கும்படி செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் . அன்புள்ள தாயே ! உமது திரு உத்தரியத்தைத் தரிசிக்கிற அடியேனைப் புறக்கணியாமல் உம்முடைய திருக்கரங்கொண்டு நடப்பித்தருளும். பின்னும் என் மரண சமயத்தில் எனக்கு வேண்டிய சகாயங்களைச் செய்து சகல சோதனை பொல்லாப்பு ஆக்கினைகளிலே நின்றும் உமது வேண்டுதலினால் என்னை இரட்சித்து, உம்முடைய திருக்குமாரனுடைய சமூகத்தில் என் ஆத்துமத்தை ஒப்புக் கொடுத்து, எனக்கு நித்திய மோட்ச பேரின்பத்தைப் பெறுவிக்க வேணுமென்று உம்மை மிகுந்த நம்பிக்கைப் பக்தி நேசத்துடனே வேண்டிக் கொள்ளுகிறேன் ஆண்டவளே ஆமென்.
புகழ்மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சர்வ காலத்திற்கு முந்தி அநாதி பிதாவின் திருவுளத்தில் உற்பவமான உத்தமியே,
அவதரித்த தேவ சுதனை ஈன்ற திருக்கன்னிகையே
தூய ஆவியினோடே பரிசுத்த நேச பந்தனமான கன்னிகையே
புனித தமத் திருத்துவத்தின் உன்னதமான தேவாலயமே
சகல சிருஷ்டிப்புகளிலும் பிரதானமும் மேன்மையுமான ஆண்டவளே
ஆதித் தகப்பனால் வந்த தோஷமணுகாத சுந்தரியே
நரகசர்ப்பத்தின் நசுக்குகிறவளாக ஆதியில் தெரிவிக்கப்பட்ட பரமநாயகியே
மோயீசன் கண்ட அக்கினிக்குள் வேகாத அற்புத முட்செடியால் குறிக்கப்பட்ட கன்னித்தாயே
வரிவேதத்தில் அனேக முறை முன்னறிவிக்கப்பட்ட பரமநாயகியே
தேவகிருபையின் ஆலோசனை நிறைவேற எத்தனமான கருணாகரியே
மூவாறு கிரீடாதிபதிகளுடைய சந்ததியே
தேவ வரப்பிரசாதம் நிறைந்த சுகிர்த அலங்காரியே
மகா பற்றுதலான மன்றாட்டினால் உலக இரட்சணியத்தை தீவிரித்த உத்தம வீரத்தியே
பரம கர்த்தர் கீழ் பணிந்து வணங்கின மாதாவே
நேரம் வரும் முன்னே இயேசு நாதரால் அற்புதத்தைச் செய்வித்த தயாபரியே
இயேசு நாதர் எங்களை இரட்சிக்கும் பொருட்டு இரத்தப் பலியாவதற்கு உத்தரவு தந்த தாயே
உயிர்த்து எழுந்தருளின கர்த்தரின் தரிசனையால் ஆனந்த சந்தோஷம் அடைந்த தயாபரியே
தேவ நற்கருணையின் தாயும் தேவாலயமுமான கன்னிகையே
படைக்கப்பட்ட சகல வஸ்துக்களையும் விட சர்வேசுரனுக்கு மிகுதியான தோத்திரம் வருவித்த உத்தம உத்தமியே
பரம கர்த்தர் பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஏற்படுத்தின ஏக அரசியே
சர்வலோகத்திலும் தோத்திரமும் நமஸ்காரமும் பெற்ற சுகிர்த செல்வியே
பூர்வீகம் துவங்கி கார்மேல் என்னும் மலையில் தீர்க்கதரிசியான விசேஷபக் திவணக்கத்துடன் சேவிக்கப்பட்ட ஆண்டவளே
கார்மேல் சபையின் பேரில் கிருபை அருளும் அன்புள்ள மாதாவே
அதன் சிரேஷ்டரான சீமோன் ஸ்தோக் என்பவருக்குத் தரிசனையாகித்திரு உத்தரியத்தைத் தந்தருளின மாதாவே
திரு உத்தரியத்தின் மூலமாக ஆச்சரியத்துக்குரிய அநேக அற்புதங்களைச் செய்தருளின கருணா கரியே
திரு உத்தரியத்தை உம்முடைய ஊழியர்களுக்கு விசேஷ விருந்தாக நியமித்தருளின இராக்கினியே
திரு உத்தரியத்தை பக்தியுடன் தரிசிக்கிற கற்புள்ளோர்களின் பேரில் அத்தியந்த கிருபை நேசமுள்ள மாதாவே
இவ்வுலகில் பக்தியுள்ள உம்முடைய உத்தரியச் சபை யாரை நன்மை வரப்பிரசாதங்களினால் பூரிப்படைய செய்கிற ஆண்டவளே
பக்திப் பிரமாணிக்கத்துடன் திரு உத்தரியத்தைத் தரிக்கிரவர்களை நரகத்தில் விழவொட்டாத தயாபரியே
உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கும் உத்தரிக்கிற சபையாருக்கு இளைப்பாற்றியையும் , மோட்ச பேரின்பத்தையும் தீவிரமாய்ப் பெறுவிக்கிற உபகாரியே
பேரின்ப இரசமுள்ள உத்தரிய மாதாவே
சீவிய கனியைத் தந்த திரு விருட்சமே
தயாபமுள்ள இராக்கினியே
கிருபையின் தாயே
ஆனந்த மதுரமுள்ள கருனாகரியே
இப்பிரபஞ்ச பிரதேசத்தின் ஆறுதலே
உம்மை மன்றாடுகிரவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிற உபகாரியே
மனுமக்களின் இடையூறுகளின் பேரில் அனந்த இரக்கமுள்ள தயாபரியே
உமது பேரில் பக்தியுள்ளோருக்காக தேவ சந்நிதியில் அனுகூலமாக மனுப்பேசுகிற தாயே
கர்த்தரிடத்தில் அத்தியந்த வல்லபம் பெற்ற மாதாவே
தரித்திரருக்கு உதவி ஆறுதலான தரும பூரணியே
துன்பப்படுகிறவர்களுக்குத் தயாபரியே
நல்லோர்களுக்கு நற்கருணையே
உம்மை நம்பி வேண்டுகிறவர்களைக் கைவிடாத தாயே
பசாசின் தந்திரங்களில் திடமான ஆதரவே
மனந்திரும்புகிற பாவிகளுக்கு அடைக்கலமாகிய தயாபரியே
சகலருக்கும் அவசரமான ஆதரவே
இரட்சணியத்தின் நிச்சயமான துறையே
சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் உதவி செய்கிற மாதாவே
கன்னிசுத்தத்தின் உத்தம நெறியே
சகல புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான அமலியே
சகல நன்மை வரப்பிரசாதங்களின் பரம வாய்க்காலே
அடியோர்களுக்குச் சீவிய காரணமே
பூவுலகத்தின் நிச்சயமான நம்பிக்கையே
வானுலகத்தின் ஆச்சரியமான அலங்காரமே
குளிர்மதியை இணைத்தாளமிதித்த நல்ல பரம நாயகியே
பன்னிரண்டு வானுலகைச் சோதி மகிமை முடியாகத் தரித்த இராக்கினியே
செங்கதிரோனை உத்தரியமாக அணிந்த பேரின்ப சௌந்தரியே
பதிதர்களுக்கு எதிர்ப்படையே
பதித்த மதங்களை நிர்மூலமாக்குகிற சக்தியே
பசாசின் தலையை நசுக்கி சத்துருக்களைஎல்லாம் ஜெயித்து விலக்கும் சக்தியுடைத்தான நாயகியே
உத்தரிப்புச் சபையின் அவதியை குறைத்துத் தீர்க்கிற பரம உபகாரியே
யுத்தச் சபையின் உறுதித் தரிசனமாகிய ஆண்டவளே
ஜெயசீலசபையின் மகிமை அலங்காரமான இராக்கினியே
பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் பூர்த்தியான சந்தோசமே
சம்மனசுக்களுடைய இராக்கினியே
பிதாப்பிதாக்களின் நம்பிக்கையான நாயகியே
தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்ட கன்னித்தாயே
அப்போஸ்தலர்களுக்கு ஆனந்தமான துணையே
வேதசாட்சிகளுக்குத் திடமான உறுதியே
ஸ்துதியர்களுடைய பிரகாசமே
கன்னியர்களுடைய அரசியே
சகல புனிதர்களுடைய இராக்கினியே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சுவாமி நாங்கள் இந்த ஸ்தலத்திலே இருந்து கூப்பிடுகிற சத்தம்
தேவரீருடைய திருச்சந்நிதி மட்டும் வரக்கடவது
செபிப்போமாக
நித்திய பிதாவாகிய சர்வேசுரா சுவாமி ! முத்திப்பேறு பெற்றவருமாய் பரிசுத்த கன்னிகையுமாயிருக்கிற புனித உத்தரிய மாதாவின் வேண்டுதல்களைக் கேட்டு எங்கள் பேரில் கிருபை தயாபரராய் இவ்வுலகத்தில் எங்களுக்கு வேண்டிய நன்மை வரப்பிரசாதங்களையும் நாங்கள் இந்த பரதேசங்கடந்த பிற்பாடு உமது பிரத்தியட்ச தரிசனத்தையும் எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்துடனே மன்றாடுகிறோம் . இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி ஆமென்
புனித சைமன் ஸ்டாக் என்பவர் தனது நாற்பதாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள கார்மேல் சபையில் இணைகிறார். இஸ்ரயேலில் இருக்கும் கர்மேல் சபைக்கு அனுப்பப்பட்ட அவர் , கலகக்காரர்கள் அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் வரை அங்கிருந்து தன் செப தப ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டார்.அதன் பின், தனது சபைச் சகோதரர்களுடன் இங்கிலாந்து திரும்பிய அவர் , ஏகமனதாக கிபி 1245 ஆம் ஆண்டில் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் மாதாவின் பேரில் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். இதுவே கார்மேல் சபை இவரது தலைமையின் கீழ் தழைத்தோங்கக் காரணமாய் அமைந்தது. இன்று ஏறத்தாழ 764 ஆண்டுகளுக்கு முன்னர், 1251ம் ஆண்டில் கார்மேல் துறவு சபை இடையூறுகளுக்கு உள்ளானது. அச்சமயத்தில் சைமன் , தனது சபைக்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட சலுகையை வழங்குமாறு அன்னைமரியிடம் உருக்கமாகச் செபித்து வந்தார். இந்த நல்ல துறவியின் செபத்தைக் கேட்ட அன்னைமரியா, 1251ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கேம்பிரிட்ஜில் ஒரு கறுத்த ஆரஞ்சு வண்ண உத்தரியத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம் அவருக்குக் காட்சி கொடுத்துச் சொன்னார் :
“எனது அருமை மகனே, இந்த உத்தரியம் உங்கள் சபைக்குரியது. நான் உங்களுக்கு வழங்கும் சிறப்புச் சலுகையின் அடையாளம் இது. இதனை உனக்காவும், உனது கார்மேல் மலைச் சிறாருக்காகவும் நான் பெற்றது. இதை அணிந்துகொண்டு இறப்பவர்கள் நித்திய நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், இது மீட்பின் சிறப்பு அடையாளம், ஆபத்தில் காக்கும் கேடயம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கென சிறப்பாக வழங்கப்படும் உறுதி”
என்று. கழுத்தில் அணியும் இந்த உத்தரியத்தை அன்னைமரியாவிடமிருந்து பெற்றவர் புனித சைமன் ஸ்டாக். Stock என்றால் அடிமரம் என்று பொருள்.
புனித சைமன் அவர்களின் இளமைக்கால வாழ்வு பற்றி அவ்வளவாகத் தெரியவில்லையெனினும், இவர் தனது 12வது வயதிலிருந்தே ஓர் ஓக் மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த காலியான இடத்தில் துறவியாக வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் இளைஞனாக இருந்தபோது புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அங்கு கார்மேல் சபைத் துறவிகளுடன் சேர்ந்தார். பின்னர் ஐரோப்பா திரும்பி, கார்மேல் சபையின் பல இல்லங்களை நிறுவினார். குறிப்பாக, கேம்பிரிட்ஜ், ஆக்ஸஃபோர்டு, பாரிஸ், பொலோஞ்ஞா போன்ற பல்கலைக்கழக நகரங்களில் கார்மேல் சபை இல்லங்களை ஏற்படுத்தினார். கார்மேல் சபையை தியானயோக வாழ்விலிருந்து தர்மம் எடுத்து வாழும் சபையாக மாற்றினார்.
புனித சைமன் ஸ்டோக் விழா ஜூலை 16.
புனித கார்மேல் அன்னையின் விழா ஜூலை 16
புனித உத்தரிய மாதாவுக்கு ஜெபம்
மிகவும் மதுரமுள்ள புனித கன்னிகையே ! பரம தேவ தாயே ! உம்முடைய முந்தையோராகிய பிதாப்பிதாக்களுள் மிகவும் பூச்சியமான கீர்த்தி பெற்றவராகிய ஆபிரகாம் என்கிறவருக்கு சர்வேசுரன் கொடுத்த வார்த்தைப்பாட்டின்படி , உம்முடைய திருப்புத்திரனாகிய இயேசுநாதரிடத்தில் சகல ஜாதி ஜனங்களும் இரட்சிக்கவும் , ஆசீர்வதிக்கவும் பட்டதைப் பற்றி உம்மோடே அகமகிழ்ந்து உம்மை வாழ்த்தி ஸ்துதித்து வணங்குகிறோம். சர்வலோகத்துக்கும் ஆனந்தமான இராக்கினியே ! சகலருக்கும் தயாபரியான ஆண்டவளே, பாவிகளுக்கு அடைக்கலமே , பரிதவிப்போருக்கு ஆதரவே , பாவப்பிணியை நீக்கும் பரம தேவ தாயே , உமக்கு உத்தம வணக்க தோத்திரம் பண்ணுகிற பக்தி சபைகளுக்குள்ளே உமக்கு விஷேஷ பிரியமும் மகிமையுமாயிருப்பதற்கு புனித உத்தரிய சபையை ஏற்ப்படுத்தச் சித்தமாகி , அத்தியந்த பக்தியால் உமக்கு உகந்தவரான புனித சிமியோன் ஸ்டோக் என்கிற மகத்துவமானவருக்கு திரு உத்தரியத்தைத் தந்தருளினீரே! அடியோர்களுக்கும் உமது ஆதரவின் ஈடாகத் தந்தருளிய இத்திரு ஆடையைப் பற்றி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம் . மீளவும் சாதாரண திருச்சபைக்குப் பிதாவும் , தலைமையான குருவுமான புனித பாப்பானவருக்கு மிகுந்த கிருபையுடனே தரிசனமாகி , உம்முடைய திரு உத்தரிய சபைக்கு உட்பட்டவர்களில் யாராவது ஒருவர் பூவுலகில் பக்திச் சுமுத்திரையுடனே நடந்த பிறகு , மரித்து உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு போவார்களேயாகில் , அதற்குப் பின் முதற் சனிக்கிழமையில் நீர் அவர்களை அத்தீயில் இருந்து மீட்டுக் கொண்டு , மோட்ச ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கப் பண்ணுவதாகத் திரு உளம் பற்றினீரென்றுவேத சாஸ்திரிகர் அநேகர் எழுதி வைத்தார்களே . இந்த வர்த்தமானம் உம்முடைய திருவடியார்களுக்கு எவ்வளவோ சந்தோஷத்திற்கும் நம்பிக்கைக்கும் இடமாயிருக்கிறது . ஆ தயாளமுள்ள தாயே !! அடியேன் மிகவும் பாவியாயிருந்தாலும் உமது அத்தியந்த தயாளத்தை நம்பி உம்முடைய திருக்குமாரனிடத்தில்எனக்குக் கிருபை கிடைக்கும்படி செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் . அன்புள்ள தாயே ! உமது திரு உத்தரியத்தைத் தரிசிக்கிற அடியேனைப் புறக்கணியாமல் உம்முடைய திருக்கரங்கொண்டு நடப்பித்தருளும். பின்னும் என் மரண சமயத்தில் எனக்கு வேண்டிய சகாயங்களைச் செய்து சகல சோதனை பொல்லாப்பு ஆக்கினைகளிலே நின்றும் உமது வேண்டுதலினால் என்னை இரட்சித்து, உம்முடைய திருக்குமாரனுடைய சமூகத்தில் என் ஆத்துமத்தை ஒப்புக் கொடுத்து, எனக்கு நித்திய மோட்ச பேரின்பத்தைப் பெறுவிக்க வேணுமென்று உம்மை மிகுந்த நம்பிக்கைப் பக்தி நேசத்துடனே வேண்டிக் கொள்ளுகிறேன் ஆண்டவளே ஆமென்.
புகழ்மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சர்வ காலத்திற்கு முந்தி அநாதி பிதாவின் திருவுளத்தில் உற்பவமான உத்தமியே,
அவதரித்த தேவ சுதனை ஈன்ற திருக்கன்னிகையே
தூய ஆவியினோடே பரிசுத்த நேச பந்தனமான கன்னிகையே
புனித தமத் திருத்துவத்தின் உன்னதமான தேவாலயமே
சகல சிருஷ்டிப்புகளிலும் பிரதானமும் மேன்மையுமான ஆண்டவளே
ஆதித் தகப்பனால் வந்த தோஷமணுகாத சுந்தரியே
நரகசர்ப்பத்தின் நசுக்குகிறவளாக ஆதியில் தெரிவிக்கப்பட்ட பரமநாயகியே
மோயீசன் கண்ட அக்கினிக்குள் வேகாத அற்புத முட்செடியால் குறிக்கப்பட்ட கன்னித்தாயே
வரிவேதத்தில் அனேக முறை முன்னறிவிக்கப்பட்ட பரமநாயகியே
தேவகிருபையின் ஆலோசனை நிறைவேற எத்தனமான கருணாகரியே
மூவாறு கிரீடாதிபதிகளுடைய சந்ததியே
தேவ வரப்பிரசாதம் நிறைந்த சுகிர்த அலங்காரியே
மகா பற்றுதலான மன்றாட்டினால் உலக இரட்சணியத்தை தீவிரித்த உத்தம வீரத்தியே
பரம கர்த்தர் கீழ் பணிந்து வணங்கின மாதாவே
நேரம் வரும் முன்னே இயேசு நாதரால் அற்புதத்தைச் செய்வித்த தயாபரியே
இயேசு நாதர் எங்களை இரட்சிக்கும் பொருட்டு இரத்தப் பலியாவதற்கு உத்தரவு தந்த தாயே
உயிர்த்து எழுந்தருளின கர்த்தரின் தரிசனையால் ஆனந்த சந்தோஷம் அடைந்த தயாபரியே
தேவ நற்கருணையின் தாயும் தேவாலயமுமான கன்னிகையே
படைக்கப்பட்ட சகல வஸ்துக்களையும் விட சர்வேசுரனுக்கு மிகுதியான தோத்திரம் வருவித்த உத்தம உத்தமியே
பரம கர்த்தர் பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஏற்படுத்தின ஏக அரசியே
சர்வலோகத்திலும் தோத்திரமும் நமஸ்காரமும் பெற்ற சுகிர்த செல்வியே
பூர்வீகம் துவங்கி கார்மேல் என்னும் மலையில் தீர்க்கதரிசியான விசேஷபக் திவணக்கத்துடன் சேவிக்கப்பட்ட ஆண்டவளே
கார்மேல் சபையின் பேரில் கிருபை அருளும் அன்புள்ள மாதாவே
அதன் சிரேஷ்டரான சீமோன் ஸ்தோக் என்பவருக்குத் தரிசனையாகித்திரு உத்தரியத்தைத் தந்தருளின மாதாவே
திரு உத்தரியத்தின் மூலமாக ஆச்சரியத்துக்குரிய அநேக அற்புதங்களைச் செய்தருளின கருணா கரியே
திரு உத்தரியத்தை உம்முடைய ஊழியர்களுக்கு விசேஷ விருந்தாக நியமித்தருளின இராக்கினியே
திரு உத்தரியத்தை பக்தியுடன் தரிசிக்கிற கற்புள்ளோர்களின் பேரில் அத்தியந்த கிருபை நேசமுள்ள மாதாவே
இவ்வுலகில் பக்தியுள்ள உம்முடைய உத்தரியச் சபை யாரை நன்மை வரப்பிரசாதங்களினால் பூரிப்படைய செய்கிற ஆண்டவளே
பக்திப் பிரமாணிக்கத்துடன் திரு உத்தரியத்தைத் தரிக்கிரவர்களை நரகத்தில் விழவொட்டாத தயாபரியே
உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கும் உத்தரிக்கிற சபையாருக்கு இளைப்பாற்றியையும் , மோட்ச பேரின்பத்தையும் தீவிரமாய்ப் பெறுவிக்கிற உபகாரியே
பேரின்ப இரசமுள்ள உத்தரிய மாதாவே
சீவிய கனியைத் தந்த திரு விருட்சமே
தயாபமுள்ள இராக்கினியே
கிருபையின் தாயே
ஆனந்த மதுரமுள்ள கருனாகரியே
இப்பிரபஞ்ச பிரதேசத்தின் ஆறுதலே
உம்மை மன்றாடுகிரவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிற உபகாரியே
மனுமக்களின் இடையூறுகளின் பேரில் அனந்த இரக்கமுள்ள தயாபரியே
உமது பேரில் பக்தியுள்ளோருக்காக தேவ சந்நிதியில் அனுகூலமாக மனுப்பேசுகிற தாயே
கர்த்தரிடத்தில் அத்தியந்த வல்லபம் பெற்ற மாதாவே
தரித்திரருக்கு உதவி ஆறுதலான தரும பூரணியே
துன்பப்படுகிறவர்களுக்குத் தயாபரியே
நல்லோர்களுக்கு நற்கருணையே
உம்மை நம்பி வேண்டுகிறவர்களைக் கைவிடாத தாயே
பசாசின் தந்திரங்களில் திடமான ஆதரவே
மனந்திரும்புகிற பாவிகளுக்கு அடைக்கலமாகிய தயாபரியே
சகலருக்கும் அவசரமான ஆதரவே
இரட்சணியத்தின் நிச்சயமான துறையே
சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் உதவி செய்கிற மாதாவே
கன்னிசுத்தத்தின் உத்தம நெறியே
சகல புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான அமலியே
சகல நன்மை வரப்பிரசாதங்களின் பரம வாய்க்காலே
அடியோர்களுக்குச் சீவிய காரணமே
பூவுலகத்தின் நிச்சயமான நம்பிக்கையே
வானுலகத்தின் ஆச்சரியமான அலங்காரமே
குளிர்மதியை இணைத்தாளமிதித்த நல்ல பரம நாயகியே
பன்னிரண்டு வானுலகைச் சோதி மகிமை முடியாகத் தரித்த இராக்கினியே
செங்கதிரோனை உத்தரியமாக அணிந்த பேரின்ப சௌந்தரியே
பதிதர்களுக்கு எதிர்ப்படையே
பதித்த மதங்களை நிர்மூலமாக்குகிற சக்தியே
பசாசின் தலையை நசுக்கி சத்துருக்களைஎல்லாம் ஜெயித்து விலக்கும் சக்தியுடைத்தான நாயகியே
உத்தரிப்புச் சபையின் அவதியை குறைத்துத் தீர்க்கிற பரம உபகாரியே
யுத்தச் சபையின் உறுதித் தரிசனமாகிய ஆண்டவளே
ஜெயசீலசபையின் மகிமை அலங்காரமான இராக்கினியே
பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் பூர்த்தியான சந்தோசமே
சம்மனசுக்களுடைய இராக்கினியே
பிதாப்பிதாக்களின் நம்பிக்கையான நாயகியே
தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்ட கன்னித்தாயே
அப்போஸ்தலர்களுக்கு ஆனந்தமான துணையே
வேதசாட்சிகளுக்குத் திடமான உறுதியே
ஸ்துதியர்களுடைய பிரகாசமே
கன்னியர்களுடைய அரசியே
சகல புனிதர்களுடைய இராக்கினியே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சுவாமி நாங்கள் இந்த ஸ்தலத்திலே இருந்து கூப்பிடுகிற சத்தம்
தேவரீருடைய திருச்சந்நிதி மட்டும் வரக்கடவது
செபிப்போமாக
நித்திய பிதாவாகிய சர்வேசுரா சுவாமி ! முத்திப்பேறு பெற்றவருமாய் பரிசுத்த கன்னிகையுமாயிருக்கிற புனித உத்தரிய மாதாவின் வேண்டுதல்களைக் கேட்டு எங்கள் பேரில் கிருபை தயாபரராய் இவ்வுலகத்தில் எங்களுக்கு வேண்டிய நன்மை வரப்பிரசாதங்களையும் நாங்கள் இந்த பரதேசங்கடந்த பிற்பாடு உமது பிரத்தியட்ச தரிசனத்தையும் எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்துடனே மன்றாடுகிறோம் . இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி ஆமென்