- வணக்க மாதம்
- உத்தரிக்கிற ஆத்துமாக்கள்
- நாள் 26-30
இருபத்து ஆறாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி : திருச்சபையின் பலன்களை அடையலாமென்று மேலும் எடுத்துக்காட்டும் விளக்கமாவது
தியானம்
திருச்சபையினுடைய பலன்களைப் பெறுவது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ன எளிதுமாய், நித்தியமுமாய், விசேஷமுமாய் இருக்கிற வழியாகையால், இந்தப் பலன்களைக் குறித்து இன்று தினத்தில் இன்னும் தியானிக்கக்கடவோம். பலனுள்ள ஜெபங்கள் கணக்கிலடங்காமலிருக்கிறதினாலே அவைகள் எல்லாவற்றையும் விவரித்துக் காண்பிக்க முடியாது. அப்பேர்ப்பட்ட ஜெபங்களைத் தக்க பிரகாரமாய்ச் செபித்தால், அவைகளுக்குண்டான பலன்களைப் பெற்றுக் கொள்ளலாமென்பது சரியே.
அந்தப் பற்பல ஜெபங்களையல்லாமல் பலனுள்ள முறைமைகளும் அநேகமுண்டு; பலனுள்ள சபைகளும் அநேகமுண்டு பலனுள்ள ஜெபமாலைகளும் அநேகமுண்டு. பலனுள்ள நற்கிருத்தியங்களும் அநேகமுண்டு. இவையெல்லாம் மிகவும் நல்லதாயினும் வெகு பிரயோசனமுள்ளதாயினும் இவைகளை இவ்விடத்தில் முற்றிலும் வெளிப்படுத்துவது கூடாத காரியமென்கிறதினாலே, விசேஷமானவைகளை மாத்திரமே காட்டுவோம்.
முதலாவது : பலனுள்ள முறைமைகள் அநேகமுண்டென்று அறிவோம். அதாவது தியானம் பண்ணுதல். ஞான ஒடுக்கம் செய்தல், நவநாள் ஜெபங்களை அனுசரித்தல், தேவமாதாவினுடையவும், சூசையப்பருடையவும் வணக்க மாதத்தைக் கொண்டாடுதல், சிலுவைப்பாதை ஜெபித்தல் இது முதலானவைகளேயாம். இந்த சுகிர்த முறைமைகளுக்குள்ளே சிலுவைப்பாதையானது அதிக பலனுள்ளதாகையால், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அதனாலே அதிக உதவி சகாயம் கிடைக்குமென்கிறதற்குச் சந்தேகமில்லை. சிலுவைப்பாதை ஜெபிக்கிற தேவ பக்தியும், தேவ சிநேகமும், பாவத்தின் பேரிலே மெய்யான மனஸ்தாபமும், சேசுநாதருடைய திவ்விய இருதயத்தின் பேரில் உருக்கமான பற்றுதலும், இது முதலான சுகிர்த நன்மைகளும் பெறுவிக்கிறதற்கு எவ்வளவு நல்லவழியென்று இப்போது காண்பிக்கத் தேவையில்லை . ஆனால் சிலுவைப் பாதை மூலமாய் அடையக் கூடுமான ஞானப் பலன்களையும் , உன்னதமான நன்மைகளையும் எளிதாய்ப் பெற்றுக் கொள்ளலாமென்று ஒப்புவிக்கவேண்டியதான காரியந்தான் .
சிலுவைப்பாதையை மூன்று வகையாய்க் செபிக்கக்கூடும். முதலாவது சிலுவைப்பாதையின் 14 ஸ்தலங்கள்: தக்கவிதமாய் ஸ்தாபிக்கப்பட்ட கோவில்களிலே பிரசித்தமாய் அந்தச் சுகிர்த முறைமை நடக்கும்போது 14 ஸ்தலங்களிலும் சொல்லப்படுகிற தியானங்களையும் ஜெபங்களையும் கூடயிருந்து ஜெபிக்கிறது முதல் வகையாம். இரண்டாவது: மேற்சொன்ன கோவில்களிலே ஒவ்வொருவர் தனித் தனியேயானாலும், இரண்டு மூன்று பேர் கூடியாகிலும் 14 ஸ்தலங்களையும் ஒழுங்காய்ச் சேவித்து கர்த்தர் பாடுபட்ட துன்பங்களைச் சற்றே தியானித்து சில ஜெபங்களைச் செபிக்கிறது இரண்டாம் வகையாம்.
மூன்றாவது சிலுவைப் பாதை ஸ்தாபிக்கப்படாத இடங்களிலும் அல்லது ஸ்தாபிக்கப்பட்ட இடங்களிலே யாதோர் வியாதி விக்கினத்தை முன்னிட்டுக் கோயிலுக்குப் போகக்கூடாத காலங்களிலும் அதிகாரம்பெற்ற குருவினாலே விசேஷமாய் மந்தரிக்கப்பட்ட பாடுபட்ட சுருபத்தைக் கையிலே ஏந்திக் கொண்டு 14 ஸ்தலங்களுக்குப் பதிலாய் பரமண்டல மந்திரமும் பிரியதத்த மந்திரமும், 14 அர்ச் திரித்து தோத்திர மந்திரமும் வேண்டிக்கொண்டு சேசு கிறிஸ்து நாதருடைய ஐந்து திருக்காயங்களைக் குறித்து 5 பரமண்டல மந்திரமும் 5 பிரியதத்த மந்திரமும், 5 அர்ச் திரித்துவ தோத்திர மந்திரமும் ஜெபித்துக் கடைசியில் அர்ச் பாப்பானவருடைய சுகிர்த கருத்துகள் நிறைவேற பரமண்டல மந்திரமும், பிரியதத்தமந்திரமும், 1 திரித்துவ மந்திரமும் ஜெபித்துப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறதே மூன்றாம் வகையாம். சிலுவைப்பாதையின் பலன்களை அடைய மந்திரிக்கப்பட்ட பாடுபட்ட சுருபத்தை மற்றவர்களுக்கு விற்கவும் கொடுக்கவும் கூடாதாகையால் மேற்சொல்லிய பலன்களை அடைய அந்தச் சுருபத்தை உடையவருக்கு மாத்திரம் உதவுமல்லாமல் மற்றப்படியல்ல.
இந்தப் பலன்களை எளிதாய் அடையவும், கர்த்தர் பாடுபட்ட வர்த்தமானங்களைத் தியானிக்கவும், சில புஸ்தங்களிலே அந்தச் செபங்கள் அடங்கியிருப்பதால், அவைகளை ஒழுங்காய் அனுசரிப்பது உத்தமமாமே. ஆயினும், பலன்களை அடைய அவ்வளவு விரிவான ஜெபங்களைச் செய்ய அவசியமில்லாமையால், மேற்சொன்ன சுருக்கமான மூன்று வகையால் அதன் பலன்களை யெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்.
முன் சொன்ன ஞான நன்மைகளையும், பற்பலபலன் களையும் அடைவதற்கு, சிலுவைப்பாதை ஜெபிக்கிறவன் இஷ்டப்பிரசாதத்தோடே இருக்கவேண்டியதல்லாமல், பாவசங்கீர்த்தனம் பண்ணவும், நன்மை வாங்கவும், மற்ற ஜெபங்களைச் செபிக்கவும் அவசியமில்லையென்று அறியக்கடவீர்கள். மீண்டும் சிலுவைப்பாதைப் பலன்களை எளிதாய்ப் பெறத்தக்கதாக இப்போது சொன்ன வண்ணமே பக்தியுள்ளவர்களெல்லாரும் விசேஷ விதமாய் மந்திரிக்கப் பட்ட பாடுபட்ட சுருபத்தை வாங்கி வைத்திருக்கவேணும்.
இரண்டாவது: பலனுள்ள சபைகளும் அநேகமுண்டு. சேசுகிறீஸ்துநாதருடைய திரு இருதய சபையும், தேவமாதாவின் சபையும், தேவமாதாவினுடைய திரு இருதயத்தின் சிரேஷ்ட சபையும், வியாகுலமாதா சபையும், நன்மரன சபையும் இது முதலான பல சபைகளாம். அர்ச் பிராஞ்சீஸ்கு சலேஸியார் சொன்னதாவது 'நான் எல்லாச் சபைகளிலும் பிரவேசிக்கிறேன்; ஏனெனில், எப்பக்கத்திலும் ஞானப் பிரயோசனம் ஏதாகிலும் எனக்குக் கிடைக்கும்' என்பார். அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும், பொதுப்பட்ட அநேக சபைகளில் பிரவேசிக்கிறது அவ்வளவு நல்லதல்ல. ஒவ்வொருவர் தனக்கு இஷ்டமான ஒன்று, இரண்டு சபைகளில் பிரவேசித்து அதனுடைய கட்டளைகளை அனுசரித்தால் அது போதுமென்று எண்ணத்தகும்.
அந்தந்தச் சபையில் அநேகம் ஞானப்பிரயோசனம் இருப்பதுந் தவிர, சபையாருக்குள் அந்நியோன்னிய நேசமும், அந்நியோன்னிய உதவியும். அந்நியோன்னிய ஆதரவும், இது முதலான பொதுவான புண்ணிய பலன்களும் உண்டாயிருக்கிறதாமே அநேகம் சபைகளில் பிரவேசிக்கிறது நல்லதல்லவென்றாலும், எல்லோருக்கும் நன்மரணம் வேண்டியதாகையால், நன்மரணத்தைப் பெறுவிக்கும் நன் மரண சபையில் எல்லோரும் பிரவேசித்தால் உத்தமந்தானே. நன்மரண சபையாருக்கு அநேக பலன்களும், ஞான நன்மைகளும் இருப்பதுந் தவிர, செத்த சபையாருடைய ஆத்துமங்களுக்காகப் பூசைகளைச் செய்விக்கவும், ஜெபங்களைப் பொழியவும் தர்மங்களைக் கொடுக்கவும் வேணுமென்பது இச்சபையின் கட்டளையாம். இதெல்லாம் நன்மரண ஆயத்தம் என்னும் சிறு புத்தகத்தில் விவரமாய்க் காணலாம்.
மூன்றாவது பலனுள்ள உத்தரீயங்களும் அநேகமுண்டு. கர்மேலென்ற தேவமாதாவின் உத்தரீயமும், வியாகுல மாதாவின் உத்தரீயமும், ஜென்மபாவமில்லாத உற்பவித்த தேவமாதாவின் நீல உத்தரீயமும், சேசுகிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளின் சிவப்பு உத்தரீயமும் இது முதலியவைகளேயாம். இப்போது நாம் சபைகளைக் குறித்துச்
சொன்னது உத்தரியங்களுக்குச் செல்லுமென்கிறதினாலே, ஒவ்வொருவன் அநேக உத்தரியங்களைத் தரித்துக் கொள்ளாமல், ஒன்று இரண்டு தரித்தால் போதுமென்று எண்ணத்தகும்.
கர்மேலென்ற தேவமாதாவின் திரு உத்தரீயத்தைத் தரித்து சில விசேஷ காரியங்களை செலுத்துகிறவர்கள் அநேக நாள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிறதில்லையென்றும், தேவமாதாவினுடைய உறுதியான வாக்கியமானதால், எல்லாரும் இந்த உத்தரீயத்தை தரித்துப் பக்தியோடே வைத்திருக்க வேண்டியதுதானே. மற்ற உத்தரியங்களுக்குள்ளே ஜென்மபாவமில்லாமல் உற்பவித்த தேவ மாதாவின் நீல உத்தரீயம் அதிக பலனுள்ளது. இந்த உத்தரீயத்தைத் தரித்திருக்கிறவர்கள் அர்ச். திரித்துவத்துக்குத் தோத்திரமாகவும், ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் அர்ச். பாப்புவின் கருத்துகள் நிறைவேறவும், 6- பர, 6- பிரி, 6- திரி மந்திரமும் வேண்டிக்கொள்ளுகிறபோதெல்லாம் அதிக பரிபூரண பலன்களை அடைவார்களென்பது நிச்சயந்தான். அதற்குச் சாவான பாவமின்றி இஷ்டப்பிரசாதத்தோடே இருக்க வேண்டியதல்லாதே பாவிசங்கிர்த்தனம் பண்ணவும், திவ்விய நற்கருணை வாங்கவும், மற்ற ஜெபங்களை ஜெபிக்கவும் அவசியமில்லை. இந்தப் பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கலாம் என்கிறதினாலே, அந்த ஆத்துமாக்கள் எவ்வளவு உதவிசகாயம் அடைவார்களென்று அறிந்து, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்கள் இந்த உத்தரீயத்தைத் தரிக்காமலிருப்பார்களோ?
நாலாவது : பலனுள்ள ஜெபமாலைகளும் அநேகமுண்டு. 153 மணி அல்லது 53-மணி ஜெபமாலையும், வியாகுல மாதாவின் ஜெபமாலையும், சேசுகிறிஸ்துநாதருடைய திரு இரத்தத்தின் ஜெபமாலையும், அவருடைய திரு இருதய ஜெபமாலையும் இது முதலானவைகளேயாம். இந்த ஜெபமாலையெல்லாம் பலனும் பிரயோஜனமுள்ளதாயினும் அவர்களை ஒருமித்து ஜெபிக்கிறது சிரமமான காரியந்தான்.ஆனதால் இந்த ஜெபமாலைகளை அந்தந்த விசேஷ சமயத்தில் வேண்டிக்கொள்ளலாமேயல்லாமல், 53-மணி ஜெபமாலையை மாத்திரம் கூடுமானமட்டும் தினந்தோறும் ஜெபிக்கவேணும். இந்த ஜெபமாலைக்குப் பலவகைப் பலன்கள் உண்டாயிருக்கலாம்.
அர்ச் விரிச்சித்தம்மாள் பேர்கொண்ட பலன்கள் விசேஷமாய் திரளான பலன்களாகையால், அதற்கு தகுந்த அதிகாரம் பெற்ற குருவினிடத்திலிருந்து 53-மணி ஜெபமாலையை ஜெபிக்கிறார்கள் . அதில் வருகிற அப்போஸ்தலர்களுடைய மந்திரத்துக்கும், அந்தந்த பரமண்டல மந்திரத்துக்கும், அந்தந்த பிரியதத்த மந்திரத்துக்கும், நூறுநாட்பலன் பெற்றுக்கொள்வார்கள் அதல்லாமல் வருஷமுடிவில் அநேக பரிபூரண பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வளவு பலனுளள ஜெப மாலையை வேண்டிக் கொள்ளுகிறதே நமக்கு எவ்வளவோ பிரயோஜனமும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எவ்வளவோ உதவிசகாயமும் வருவிக்குமென்று அறிந்து அந்த ஜெபமாலையை அடிக்கடி ஜெபிப்பது நல்லதென்று அறியக்கடவீர்கள்.
ஐந்தாவது பலனுள்ள நற்கிருத்தியங்களும் அநேகமுண்டு. ஞான உபதேசம் போதித்தலும், கேட்டலும், வியாதிஸ்தரையும் சிறைப்பட்டவர்களையும் சந்தித்தலும், சேசுமரியேசூசை என்கிற திருக்குடும்பத்தைக் குறித்து மூன்று பிச்சைக்காரருக்குச் சாப்பாடு கொடுத்தலும், அந்நிய தேசங்களில் சத்திய வேதத்தைப் பரப்புதலாக்குகிற சபையுடைய கடமை முயற்சிகளும், திருப்பாலத்துவ சபையின் முயற்சிகளும் இது முதலியவைகளேயாம். இந்த நற்கிருத்தியங்களுக்குண்டான பலன்களை அடையவேணுமென்று விரும்பினால், இந்த நற்கிருத்தியங்களைச் செய்யும் போது பெற்றுக்கொள்ளலாம். இந்த பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குச் செல்லுமென்று அறியக்கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே எனக்காதரவாயிரும். -
செபம்
கருணாம்பார சர்வேசுரா ! எங்களுடைய முன்னோர்களும், எங்களுடைய சகோதரரும், இவ்வுலகத்தில் இருக்கும்போது சத்திய விசுவாசத்திலே நிலையாய் இருந்தார்களென்று கிருபையாய் நினைத்து, அவர்களுடைய ஆத்துமத்துக்கு தயை பொழியும். அவர்களுடைய கட்டுகளை அவிழ்த்து, கடன்களைப் பொறுத்து, பாவங்களை மன்னித்து. பிரதாபமுள்ள உம்முடைய இராச்சியத்துக்கு அவர்களை வரப்பண்ணவேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தாறாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பலனுள்ள யாதோர் நற்கிருத்தியத்தைச் செய்கிறது
புதுமை
நெயாப்பொலியென்ற இராச்சியத்தில் நல்ல கோத்திரத்தில் பிறந்த ஒரு துரைசானி இருந்தாள். கர்மேலென்னும் சபையைச் சேர்ந்த குருசுவாமியார் ஒருவர் உத்தரீயத்தைக் குறித்து செய்த பிரசங்கத்தைக் கேட்டு அந்தத் துரைசானி உத்தரீயத்தைப் பெற்றதுந் தவிர, அதற்குப் பிறகு தேவமாதாவின் பேரில் அதிகப் பக்தியாய் இருந்தாள். தனக்கு நன் மரணம் வரவும், உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அதிசீக்கிரத்திலே மீட்கப்படவும் விரும்பி, உத்தரீயத்துக்கடுத்த விசேஷ கடமையெல்லாம் அநுசரித்துக்கொண்டு வந்தாள்.
தக்க விதமாய் உத்தரீயத்தைத் தரித்தவர்களுடைய ஆத்துமங்களைப் பரலோக இராக்கினியான தேவமாதா சனிக்கிழமை மரிக்கச் சகாயம்பண்ணவேணுமென்று வேண்டிக்கொண்டிருந்தாள். சில வருஷத்துக்குப் பிற்பாடு அவள் வியாதியாய் விழுந்து, அந்த வியாதியினாலே தான் சாகப்போகிறதாயும், அடுத்த சனிக்கிழமை தனக்கு சாவு வரப்போகிறதென்றும் முன்னறிவித்தாளாம். அந்தப் பிரகாரமே அவள் பட்ட வருத்தமெல்லாம் மகா பொறுமையோடு சகித்த பிற்பாடு சனிக்கிழமை தானே இறந்தாள்.
இறந்தவளுடைய மகள், தன் தாய் இறந்ததினிமித்தம் அதிக துக்கப்பட்டுக்கொண்டிருக்கையிலே மகாத்துமாவான குரு சுவாமியார் ஒருவர் இறந்தவர்களுடைய ஆத்துமம் மோட்சத்துக்குப் போனதாக தெய்வச் செயலால் அறிந்து, அவள் மகளிடத்திலே வந்து சொன்னதாவது" பக்தியுள்ள மகளே! அழவேண்டாம் உன்னுடைய துக்கம் சந்தோஷமாக மாறவேணும். இவ்வுலகத்தில் உன்னுடைய தாய் இறந்திருந்தாலும், அவளே உனக்குப் பரலோகத்தில் ஆதரவாயிருப்பாள்.
என்னத்தினாலேயென்றால், இன்றுதானே தேவமாதாவின் கிருபையால் அவளுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு மோட்ச பேரின்ப இராச்சியத்தில் பிரவேசித்ததென்று உனக்கு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். ஆனதால் சந்தோஷப்பட்டு பிரதாபமுள்ள கன்னிகையான தேவமாதாவுக்குத் தோத்திரம் சொல்லுவாயாக" என்றார்.
கிறிஸ்துவர்களே! இப்போது சொன்ன புதுமையினாலே பக்தியோடு தரித்திருக்கிற திரு உத்தரீயத்தால் வருகிற ஞானபிரயோசனங்களைக் கண்டு நீங்களும் பக்தி விசுவாசத்தோடு திரு உத்தரீயத்தைத் தரித்துக்கொள்ள வேணுமென்று அறியக்கடவீர்களாக,
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி : திருச்சபையின் பலன்களை அடையலாமென்று மேலும் எடுத்துக்காட்டும் விளக்கமாவது
தியானம்
திருச்சபையினுடைய பலன்களைப் பெறுவது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ன எளிதுமாய், நித்தியமுமாய், விசேஷமுமாய் இருக்கிற வழியாகையால், இந்தப் பலன்களைக் குறித்து இன்று தினத்தில் இன்னும் தியானிக்கக்கடவோம். பலனுள்ள ஜெபங்கள் கணக்கிலடங்காமலிருக்கிறதினாலே அவைகள் எல்லாவற்றையும் விவரித்துக் காண்பிக்க முடியாது. அப்பேர்ப்பட்ட ஜெபங்களைத் தக்க பிரகாரமாய்ச் செபித்தால், அவைகளுக்குண்டான பலன்களைப் பெற்றுக் கொள்ளலாமென்பது சரியே.
அந்தப் பற்பல ஜெபங்களையல்லாமல் பலனுள்ள முறைமைகளும் அநேகமுண்டு; பலனுள்ள சபைகளும் அநேகமுண்டு பலனுள்ள ஜெபமாலைகளும் அநேகமுண்டு. பலனுள்ள நற்கிருத்தியங்களும் அநேகமுண்டு. இவையெல்லாம் மிகவும் நல்லதாயினும் வெகு பிரயோசனமுள்ளதாயினும் இவைகளை இவ்விடத்தில் முற்றிலும் வெளிப்படுத்துவது கூடாத காரியமென்கிறதினாலே, விசேஷமானவைகளை மாத்திரமே காட்டுவோம்.
முதலாவது : பலனுள்ள முறைமைகள் அநேகமுண்டென்று அறிவோம். அதாவது தியானம் பண்ணுதல். ஞான ஒடுக்கம் செய்தல், நவநாள் ஜெபங்களை அனுசரித்தல், தேவமாதாவினுடையவும், சூசையப்பருடையவும் வணக்க மாதத்தைக் கொண்டாடுதல், சிலுவைப்பாதை ஜெபித்தல் இது முதலானவைகளேயாம். இந்த சுகிர்த முறைமைகளுக்குள்ளே சிலுவைப்பாதையானது அதிக பலனுள்ளதாகையால், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அதனாலே அதிக உதவி சகாயம் கிடைக்குமென்கிறதற்குச் சந்தேகமில்லை. சிலுவைப்பாதை ஜெபிக்கிற தேவ பக்தியும், தேவ சிநேகமும், பாவத்தின் பேரிலே மெய்யான மனஸ்தாபமும், சேசுநாதருடைய திவ்விய இருதயத்தின் பேரில் உருக்கமான பற்றுதலும், இது முதலான சுகிர்த நன்மைகளும் பெறுவிக்கிறதற்கு எவ்வளவு நல்லவழியென்று இப்போது காண்பிக்கத் தேவையில்லை . ஆனால் சிலுவைப் பாதை மூலமாய் அடையக் கூடுமான ஞானப் பலன்களையும் , உன்னதமான நன்மைகளையும் எளிதாய்ப் பெற்றுக் கொள்ளலாமென்று ஒப்புவிக்கவேண்டியதான காரியந்தான் .
சிலுவைப்பாதையை மூன்று வகையாய்க் செபிக்கக்கூடும். முதலாவது சிலுவைப்பாதையின் 14 ஸ்தலங்கள்: தக்கவிதமாய் ஸ்தாபிக்கப்பட்ட கோவில்களிலே பிரசித்தமாய் அந்தச் சுகிர்த முறைமை நடக்கும்போது 14 ஸ்தலங்களிலும் சொல்லப்படுகிற தியானங்களையும் ஜெபங்களையும் கூடயிருந்து ஜெபிக்கிறது முதல் வகையாம். இரண்டாவது: மேற்சொன்ன கோவில்களிலே ஒவ்வொருவர் தனித் தனியேயானாலும், இரண்டு மூன்று பேர் கூடியாகிலும் 14 ஸ்தலங்களையும் ஒழுங்காய்ச் சேவித்து கர்த்தர் பாடுபட்ட துன்பங்களைச் சற்றே தியானித்து சில ஜெபங்களைச் செபிக்கிறது இரண்டாம் வகையாம்.
மூன்றாவது சிலுவைப் பாதை ஸ்தாபிக்கப்படாத இடங்களிலும் அல்லது ஸ்தாபிக்கப்பட்ட இடங்களிலே யாதோர் வியாதி விக்கினத்தை முன்னிட்டுக் கோயிலுக்குப் போகக்கூடாத காலங்களிலும் அதிகாரம்பெற்ற குருவினாலே விசேஷமாய் மந்தரிக்கப்பட்ட பாடுபட்ட சுருபத்தைக் கையிலே ஏந்திக் கொண்டு 14 ஸ்தலங்களுக்குப் பதிலாய் பரமண்டல மந்திரமும் பிரியதத்த மந்திரமும், 14 அர்ச் திரித்து தோத்திர மந்திரமும் வேண்டிக்கொண்டு சேசு கிறிஸ்து நாதருடைய ஐந்து திருக்காயங்களைக் குறித்து 5 பரமண்டல மந்திரமும் 5 பிரியதத்த மந்திரமும், 5 அர்ச் திரித்துவ தோத்திர மந்திரமும் ஜெபித்துக் கடைசியில் அர்ச் பாப்பானவருடைய சுகிர்த கருத்துகள் நிறைவேற பரமண்டல மந்திரமும், பிரியதத்தமந்திரமும், 1 திரித்துவ மந்திரமும் ஜெபித்துப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறதே மூன்றாம் வகையாம். சிலுவைப்பாதையின் பலன்களை அடைய மந்திரிக்கப்பட்ட பாடுபட்ட சுருபத்தை மற்றவர்களுக்கு விற்கவும் கொடுக்கவும் கூடாதாகையால் மேற்சொல்லிய பலன்களை அடைய அந்தச் சுருபத்தை உடையவருக்கு மாத்திரம் உதவுமல்லாமல் மற்றப்படியல்ல.
இந்தப் பலன்களை எளிதாய் அடையவும், கர்த்தர் பாடுபட்ட வர்த்தமானங்களைத் தியானிக்கவும், சில புஸ்தங்களிலே அந்தச் செபங்கள் அடங்கியிருப்பதால், அவைகளை ஒழுங்காய் அனுசரிப்பது உத்தமமாமே. ஆயினும், பலன்களை அடைய அவ்வளவு விரிவான ஜெபங்களைச் செய்ய அவசியமில்லாமையால், மேற்சொன்ன சுருக்கமான மூன்று வகையால் அதன் பலன்களை யெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்.
முன் சொன்ன ஞான நன்மைகளையும், பற்பலபலன் களையும் அடைவதற்கு, சிலுவைப்பாதை ஜெபிக்கிறவன் இஷ்டப்பிரசாதத்தோடே இருக்கவேண்டியதல்லாமல், பாவசங்கீர்த்தனம் பண்ணவும், நன்மை வாங்கவும், மற்ற ஜெபங்களைச் செபிக்கவும் அவசியமில்லையென்று அறியக்கடவீர்கள். மீண்டும் சிலுவைப்பாதைப் பலன்களை எளிதாய்ப் பெறத்தக்கதாக இப்போது சொன்ன வண்ணமே பக்தியுள்ளவர்களெல்லாரும் விசேஷ விதமாய் மந்திரிக்கப் பட்ட பாடுபட்ட சுருபத்தை வாங்கி வைத்திருக்கவேணும்.
இரண்டாவது: பலனுள்ள சபைகளும் அநேகமுண்டு. சேசுகிறீஸ்துநாதருடைய திரு இருதய சபையும், தேவமாதாவின் சபையும், தேவமாதாவினுடைய திரு இருதயத்தின் சிரேஷ்ட சபையும், வியாகுலமாதா சபையும், நன்மரன சபையும் இது முதலான பல சபைகளாம். அர்ச் பிராஞ்சீஸ்கு சலேஸியார் சொன்னதாவது 'நான் எல்லாச் சபைகளிலும் பிரவேசிக்கிறேன்; ஏனெனில், எப்பக்கத்திலும் ஞானப் பிரயோசனம் ஏதாகிலும் எனக்குக் கிடைக்கும்' என்பார். அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும், பொதுப்பட்ட அநேக சபைகளில் பிரவேசிக்கிறது அவ்வளவு நல்லதல்ல. ஒவ்வொருவர் தனக்கு இஷ்டமான ஒன்று, இரண்டு சபைகளில் பிரவேசித்து அதனுடைய கட்டளைகளை அனுசரித்தால் அது போதுமென்று எண்ணத்தகும்.
அந்தந்தச் சபையில் அநேகம் ஞானப்பிரயோசனம் இருப்பதுந் தவிர, சபையாருக்குள் அந்நியோன்னிய நேசமும், அந்நியோன்னிய உதவியும். அந்நியோன்னிய ஆதரவும், இது முதலான பொதுவான புண்ணிய பலன்களும் உண்டாயிருக்கிறதாமே அநேகம் சபைகளில் பிரவேசிக்கிறது நல்லதல்லவென்றாலும், எல்லோருக்கும் நன்மரணம் வேண்டியதாகையால், நன்மரணத்தைப் பெறுவிக்கும் நன் மரண சபையில் எல்லோரும் பிரவேசித்தால் உத்தமந்தானே. நன்மரண சபையாருக்கு அநேக பலன்களும், ஞான நன்மைகளும் இருப்பதுந் தவிர, செத்த சபையாருடைய ஆத்துமங்களுக்காகப் பூசைகளைச் செய்விக்கவும், ஜெபங்களைப் பொழியவும் தர்மங்களைக் கொடுக்கவும் வேணுமென்பது இச்சபையின் கட்டளையாம். இதெல்லாம் நன்மரண ஆயத்தம் என்னும் சிறு புத்தகத்தில் விவரமாய்க் காணலாம்.
மூன்றாவது பலனுள்ள உத்தரீயங்களும் அநேகமுண்டு. கர்மேலென்ற தேவமாதாவின் உத்தரீயமும், வியாகுல மாதாவின் உத்தரீயமும், ஜென்மபாவமில்லாத உற்பவித்த தேவமாதாவின் நீல உத்தரீயமும், சேசுகிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளின் சிவப்பு உத்தரீயமும் இது முதலியவைகளேயாம். இப்போது நாம் சபைகளைக் குறித்துச்
சொன்னது உத்தரியங்களுக்குச் செல்லுமென்கிறதினாலே, ஒவ்வொருவன் அநேக உத்தரியங்களைத் தரித்துக் கொள்ளாமல், ஒன்று இரண்டு தரித்தால் போதுமென்று எண்ணத்தகும்.
கர்மேலென்ற தேவமாதாவின் திரு உத்தரீயத்தைத் தரித்து சில விசேஷ காரியங்களை செலுத்துகிறவர்கள் அநேக நாள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிறதில்லையென்றும், தேவமாதாவினுடைய உறுதியான வாக்கியமானதால், எல்லாரும் இந்த உத்தரீயத்தை தரித்துப் பக்தியோடே வைத்திருக்க வேண்டியதுதானே. மற்ற உத்தரியங்களுக்குள்ளே ஜென்மபாவமில்லாமல் உற்பவித்த தேவ மாதாவின் நீல உத்தரீயம் அதிக பலனுள்ளது. இந்த உத்தரீயத்தைத் தரித்திருக்கிறவர்கள் அர்ச். திரித்துவத்துக்குத் தோத்திரமாகவும், ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் அர்ச். பாப்புவின் கருத்துகள் நிறைவேறவும், 6- பர, 6- பிரி, 6- திரி மந்திரமும் வேண்டிக்கொள்ளுகிறபோதெல்லாம் அதிக பரிபூரண பலன்களை அடைவார்களென்பது நிச்சயந்தான். அதற்குச் சாவான பாவமின்றி இஷ்டப்பிரசாதத்தோடே இருக்க வேண்டியதல்லாதே பாவிசங்கிர்த்தனம் பண்ணவும், திவ்விய நற்கருணை வாங்கவும், மற்ற ஜெபங்களை ஜெபிக்கவும் அவசியமில்லை. இந்தப் பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கலாம் என்கிறதினாலே, அந்த ஆத்துமாக்கள் எவ்வளவு உதவிசகாயம் அடைவார்களென்று அறிந்து, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்கள் இந்த உத்தரீயத்தைத் தரிக்காமலிருப்பார்களோ?
நாலாவது : பலனுள்ள ஜெபமாலைகளும் அநேகமுண்டு. 153 மணி அல்லது 53-மணி ஜெபமாலையும், வியாகுல மாதாவின் ஜெபமாலையும், சேசுகிறிஸ்துநாதருடைய திரு இரத்தத்தின் ஜெபமாலையும், அவருடைய திரு இருதய ஜெபமாலையும் இது முதலானவைகளேயாம். இந்த ஜெபமாலையெல்லாம் பலனும் பிரயோஜனமுள்ளதாயினும் அவர்களை ஒருமித்து ஜெபிக்கிறது சிரமமான காரியந்தான்.ஆனதால் இந்த ஜெபமாலைகளை அந்தந்த விசேஷ சமயத்தில் வேண்டிக்கொள்ளலாமேயல்லாமல், 53-மணி ஜெபமாலையை மாத்திரம் கூடுமானமட்டும் தினந்தோறும் ஜெபிக்கவேணும். இந்த ஜெபமாலைக்குப் பலவகைப் பலன்கள் உண்டாயிருக்கலாம்.
அர்ச் விரிச்சித்தம்மாள் பேர்கொண்ட பலன்கள் விசேஷமாய் திரளான பலன்களாகையால், அதற்கு தகுந்த அதிகாரம் பெற்ற குருவினிடத்திலிருந்து 53-மணி ஜெபமாலையை ஜெபிக்கிறார்கள் . அதில் வருகிற அப்போஸ்தலர்களுடைய மந்திரத்துக்கும், அந்தந்த பரமண்டல மந்திரத்துக்கும், அந்தந்த பிரியதத்த மந்திரத்துக்கும், நூறுநாட்பலன் பெற்றுக்கொள்வார்கள் அதல்லாமல் வருஷமுடிவில் அநேக பரிபூரண பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வளவு பலனுளள ஜெப மாலையை வேண்டிக் கொள்ளுகிறதே நமக்கு எவ்வளவோ பிரயோஜனமும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எவ்வளவோ உதவிசகாயமும் வருவிக்குமென்று அறிந்து அந்த ஜெபமாலையை அடிக்கடி ஜெபிப்பது நல்லதென்று அறியக்கடவீர்கள்.
ஐந்தாவது பலனுள்ள நற்கிருத்தியங்களும் அநேகமுண்டு. ஞான உபதேசம் போதித்தலும், கேட்டலும், வியாதிஸ்தரையும் சிறைப்பட்டவர்களையும் சந்தித்தலும், சேசுமரியேசூசை என்கிற திருக்குடும்பத்தைக் குறித்து மூன்று பிச்சைக்காரருக்குச் சாப்பாடு கொடுத்தலும், அந்நிய தேசங்களில் சத்திய வேதத்தைப் பரப்புதலாக்குகிற சபையுடைய கடமை முயற்சிகளும், திருப்பாலத்துவ சபையின் முயற்சிகளும் இது முதலியவைகளேயாம். இந்த நற்கிருத்தியங்களுக்குண்டான பலன்களை அடையவேணுமென்று விரும்பினால், இந்த நற்கிருத்தியங்களைச் செய்யும் போது பெற்றுக்கொள்ளலாம். இந்த பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குச் செல்லுமென்று அறியக்கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே எனக்காதரவாயிரும். -
செபம்
கருணாம்பார சர்வேசுரா ! எங்களுடைய முன்னோர்களும், எங்களுடைய சகோதரரும், இவ்வுலகத்தில் இருக்கும்போது சத்திய விசுவாசத்திலே நிலையாய் இருந்தார்களென்று கிருபையாய் நினைத்து, அவர்களுடைய ஆத்துமத்துக்கு தயை பொழியும். அவர்களுடைய கட்டுகளை அவிழ்த்து, கடன்களைப் பொறுத்து, பாவங்களை மன்னித்து. பிரதாபமுள்ள உம்முடைய இராச்சியத்துக்கு அவர்களை வரப்பண்ணவேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தாறாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பலனுள்ள யாதோர் நற்கிருத்தியத்தைச் செய்கிறது
புதுமை
நெயாப்பொலியென்ற இராச்சியத்தில் நல்ல கோத்திரத்தில் பிறந்த ஒரு துரைசானி இருந்தாள். கர்மேலென்னும் சபையைச் சேர்ந்த குருசுவாமியார் ஒருவர் உத்தரீயத்தைக் குறித்து செய்த பிரசங்கத்தைக் கேட்டு அந்தத் துரைசானி உத்தரீயத்தைப் பெற்றதுந் தவிர, அதற்குப் பிறகு தேவமாதாவின் பேரில் அதிகப் பக்தியாய் இருந்தாள். தனக்கு நன் மரணம் வரவும், உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அதிசீக்கிரத்திலே மீட்கப்படவும் விரும்பி, உத்தரீயத்துக்கடுத்த விசேஷ கடமையெல்லாம் அநுசரித்துக்கொண்டு வந்தாள்.
தக்க விதமாய் உத்தரீயத்தைத் தரித்தவர்களுடைய ஆத்துமங்களைப் பரலோக இராக்கினியான தேவமாதா சனிக்கிழமை மரிக்கச் சகாயம்பண்ணவேணுமென்று வேண்டிக்கொண்டிருந்தாள். சில வருஷத்துக்குப் பிற்பாடு அவள் வியாதியாய் விழுந்து, அந்த வியாதியினாலே தான் சாகப்போகிறதாயும், அடுத்த சனிக்கிழமை தனக்கு சாவு வரப்போகிறதென்றும் முன்னறிவித்தாளாம். அந்தப் பிரகாரமே அவள் பட்ட வருத்தமெல்லாம் மகா பொறுமையோடு சகித்த பிற்பாடு சனிக்கிழமை தானே இறந்தாள்.
இறந்தவளுடைய மகள், தன் தாய் இறந்ததினிமித்தம் அதிக துக்கப்பட்டுக்கொண்டிருக்கையிலே மகாத்துமாவான குரு சுவாமியார் ஒருவர் இறந்தவர்களுடைய ஆத்துமம் மோட்சத்துக்குப் போனதாக தெய்வச் செயலால் அறிந்து, அவள் மகளிடத்திலே வந்து சொன்னதாவது" பக்தியுள்ள மகளே! அழவேண்டாம் உன்னுடைய துக்கம் சந்தோஷமாக மாறவேணும். இவ்வுலகத்தில் உன்னுடைய தாய் இறந்திருந்தாலும், அவளே உனக்குப் பரலோகத்தில் ஆதரவாயிருப்பாள்.
என்னத்தினாலேயென்றால், இன்றுதானே தேவமாதாவின் கிருபையால் அவளுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு மோட்ச பேரின்ப இராச்சியத்தில் பிரவேசித்ததென்று உனக்கு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். ஆனதால் சந்தோஷப்பட்டு பிரதாபமுள்ள கன்னிகையான தேவமாதாவுக்குத் தோத்திரம் சொல்லுவாயாக" என்றார்.
கிறிஸ்துவர்களே! இப்போது சொன்ன புதுமையினாலே பக்தியோடு தரித்திருக்கிற திரு உத்தரீயத்தால் வருகிற ஞானபிரயோசனங்களைக் கண்டு நீங்களும் பக்தி விசுவாசத்தோடு திரு உத்தரீயத்தைத் தரித்துக்கொள்ள வேணுமென்று அறியக்கடவீர்களாக,
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இருபத்து ஏழாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற ஐந்தாம் வழி திவ்விய பூசையாம்
தியானம்
முன் செய்த தியானங்களில் ஜெப வேண்டுதலும் , பிச்சை தர்மமும், தவக்கிரியைகளும், திருச்சபையின் பலன்களும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம்பண்ணுகிற நல்ல வழிகளாமென்று காண்பிக்கப்பட்டது.இவைகளெல்லாம் பிரயோசனமுள்ளதாய் இருந்தாலும் , இவை மனுஷனாலே செய்யப்படுகிற நற்கிரியைகள் ஆகையால் இவைகளுக்கு அளவுமுண்டு , குறைவுமுண்டு . உன்னத திவ்விய பூசை அப்படியல்லவே . திவ்விய பூசையானது மட்டுமின்றி குறைவுமின்றி சர்வ வல்லபமுள்ள தேவ கிரியையாம். அதெப்படியென்றால் திருச்சபையில் நடந்துவரும் திவ்விய பூசையும், சேசு கிறிஸ்துநாதர் சுவாமி சிலுவையில் செலுத்தின திவ்விய பலியும் ஒன்றுதானென்று சொல்லவேண்டியதல்லாமல் வேறல்ல. சிலுவையில் நிறைவேறின திவ்விய பலியானது சேசுநாதரல்லவோ? திவ்விய பூசையில் தேவ பலியாக நிற்பவர் அவர்தாமே.
சிலுவையிலே பலியை நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த திவ்விய குரு சேசுநாதர்தாமே, இதிலேயும் பிரதான குருவாக திவ்விய பூசையை முடிப்பவர் அவர்தாமே .சிலுவையிலே அவர் தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார் . திவ்விய பூசையிலே தம்மை குருக்களுடைய கையால் ஒப்புக் கொடுக்கிறார் . சிலுவையிலே மெய்யாக மரித்தார் , திவ்விய பூசையிலே ஞானவிதமாக அவர் மரிக்கிறார் . ஆனால் அதிலேயும் இதிலேயும் ஒப்புக் கொடுக்கிற பலி ஒன்றுதான் .அதிலேயும் இதிலேயும் அந்த தேவ பலியை ஒப்புக்கொடுக்கிறவர் ஒருவர்தான். இதனால், சேசுநாதர்சுவாமி தம்மைச் சிலுவையிலே ஒப்புக் கொடுத்து பலியானது மட்டில்லாத பலனுள்ளதாகையால் அப்படித் தான் திவ்விய பூசையானது மட்டில்லாத பலனுள்ளதென்பது சத்திய விசுவாசமாம்.
திவ்விய பூசையின் பலன் சர்வலோக பாவத்தைப் போக்க வல்லதாயிருக்கிறதுமல்லாமல், இன்னும் அநேக கோடானகோடி உலகத்தின் பாவங்களைப் போக்கவும் வல்லதாயிருக்கிறது. இத்தனை வல்லபமுள்ள பூசை ஒரு நாளிலும் ஓரிடத்திலும் ஒருநேரத்திலுமாத்திரம் ஒப்புக் கொடுக்கப்படாமல், எந்நாளும் எவ்விடத்திலும் எந்நேரமுந்தானே செலுத்தப்படச் சர்வேசுரன் திருவுளமானார். இப்படிப்பட்ட பூசை உலகத்தில் இல்லாவிட்டால், இப்போது உலகத்தில் நடந்துவரும் அக்கிரமத்தால் உலகமெல்லாம் வெந்தழிந்து சர்வ சங்காரமாகியிருக்குமென்றுதான் சொல்ல வேண்டும். அநீதம் நிறைந்த இந்த உலகத்தின் பேரில் சர்வேசுரனுக்கு வரும் கோபத்தை இந்தப் பலி ஒன்றே அமர்த்தி தயை வருவிக்கிறது.
மட்டில்லாத பலனுள்ள இந்த திவ்விய பூசையை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக் கொடுக்கலாமென்பது சத்தியம் வழுவாத திருச்சபையினுடைய பூர்வீக காலத்தில் இருந்து இந்த நாள் மட்டும் இடைவிடாத வழக்கமானதால், திவ்விய பூசையினாலே அந்த ஆத்துமாக்களுக்கு எவ்வளவு உதவி சகாயம் வருமென்று சொல்லத்தகும் தன்மையல்ல. உள்ளபடி யோசனை பண்ணினால் வேதசாட்சிகள் பட்ட சகல வேதனைகளிலும், பெரிய தபோதனர் நடத்தின தவங்களிலும், தர்மவான்கள் கொடுத்த தர்மங்களிலும், திவ்விய பலியானது அதிக மேலானதும், அதிக பலனுள்ளதும், அதிக பிரயோசனமுள்ளதுமாய் இருக்கிறதென்கிறதினாலே அதெல்லாவற்றையும்விட ஒரு பூசையினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அதிக சகாயம் அதிக உதவியும் வருமென்கிறது சரியே.
அதல்லாமலும் சேசுகிறீஸ்துநாதர் சுவாமி தானே பிரதான குருவாக திவ்விய பூசையை ஒப்புக்கொடுக்கிறாரென்பதைப்பற்றி அதனுடைய பலன் அவராலே வருகிறதல்லாமல், பூசையைச் செய்கிற குருவினாலேயானாலும், பூசையைச் செய்விக்கிறவராலே என்கிலும் வராது. அதனாலே அந்தப் பலன் எப்போதும் மட்டுமின்றிக் குறைவுமின்றி அளவற்றதாயிருக்கிறதென்று சொல்ல வேண்டியதாகும்.
இது இப்படியிருக்க, தங்களுடையவர்களின் ஆத்துமாக்களுக்குப் பூரணமான ஆறுதலையும் சரியான இளைப்பாற்றியையும் நித்திய பேரின்பத்தையும் சீக்கிரத்தில் வருவிக்க விரும்புகிறவர்கள் அந்த ஆத்துமாக்களுக்காக அடிக்கடி திவ்விய பூசையை ஒப்புக்கொடுக்கச் செய்வார்களாம். எவனொருவன் செத்தநாளிலேதானே அவனுடைய ஆத்துமத்துக்காகத் திவ்விய பூசையைப் பண்ணுவிக்கிறது மல்லாமல், பின்பு அவன் செத்த மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும், முப்பதாம் நாளிலும் திவ்விய பூசையைப் பண்ணுவிக்கிறது திருச்சபையின் சுகிர்த வழக்கமாம். மேலும் வருஷாந்தர நாளிலும் அப்படிச் செய்வது பக்தியுள்ளவர்கள் அநுசரிக்கிற முறைமையாம்.
கிறிஸ்துவர்களே! உங்களுடையவர்களின் ஆத்துமாக்களை மெய்யாகவே நேசிப்பீர்களேயானால் திருச்சபையினுடைய இந்த மேன்மையான வழக்கத்தின்படியே செய்வீர்களாக. அந்தோ ! எத்தனையோ பேர்கள் ஒரு முறை திவ்வியபூசை பண்ணுவித்தபிற்பாடு மரித்தவர்களின் மட்டில் தங்களுடைய கடனெல்லாம் தீர்ந்தாற்போல அவர்களை மறந்துபோய் வேறொன்றும் செய்யாது போகிறார்கள்.
திவ்விய பூசையின் விசேஷ பலன் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கிடைக்கும்படிக்கு திவ்விய பூசையை பண்ணுவிக்கிறது அவ்வளவு நன்மையாயிருந்தாலும் பொதுப்பட அதற்குச் செய்யவேண்டிய செலவு கொடுக்கிறது எளிதான காரியமல்ல. ஆயினும் திவ்விய பூசையைப் பக்தியோடு காண்கிறவர்களுக்கு ஓர் மகாப் பலன் வருகிறதினாலே அடிக்கடி திவ்விய பூசை காண்கிறது பெரிய புண்ணியமாயிருக்கிறதுமல்லாமல், அதினாலே வரும் பலனை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அந்த ஆத்துமாக்களுக்கு வெகு ஆறுதலாயிருக்கும்.
கடைசியிலே திவ்வியநற்கருணையைப் பக்தி விசுவாசத் தோடு அடிக்கடி வாங்கினால் அதனால் வரும் ஞான பிரயோசனத்தையும் பலவீனத்தையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கலாம். அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறதற்கு அதுவே ஓர் உத்தம வழியாம். அதெப்படியென்றால் சற்குருவான சேசுநாதர் பாடுபட்டு மரித்துத் தம்முடைய திவ்விய இரத்தத்தினாலே அடைந்த பேறுபலன்களை ஏழு தேவதிரவிய அநுமானங்களின் வழியாக நமக்கு அளிக்கச் சித்தமானார். ஆயினும் மற்ற தேவதிரவிய அனுமானங்களெல்லாம் அந்தப் பேறுபலன்களை பங்குப்பங்காய்த் தந்து, தேவநற்கருணை மாத்திரமே எல்லா நன்மைகளின் ஊறணியும் காரணமுமாயிருக்கிற சேசு கிறிஸ்துநாதரை முழுமையும் நமக்குத் தந்து, அவருடனே ஞான நன்மைகளையெல்லாம் அடையப் பண்ணுகிறது. துளிதுளியாய்த் தண்ணீர் இறைத்து வயலுக்குப் பாய்ச்சுகிறதிலும் மடை திறந்து சம்பூரணமாய்ப் பாயப்பண்ணுகிறது உத்தமம் என்கிறதைப்போலேயும், காசு காசாய்த் திரவியம் சம்பாதிக்கிறதை விடப் பெரும் பொக்கிஷத்தைக் கைக்கொள்ளுகிறது மேன்மையென்கிறதைப்போலேயும், ஞானப் பயிரான புண்ணியங்களை விளைவிக்கவும், மோட்ச திரவியங்களான பிரசாதங்களை அடையவும், தவதானதர்மமென்னும் சுகிர்த கிரியைகளைச் செய்வதிலும் தக்க பக்தியோடு தேவநற்கருணையை வாங்குவது மேலான வழியாமே.
உயிரோடு இருக்கிறவர்களுக்குத் திவ்விய நற்கருணையை அடிக்கடி வாங்குகிறது அவ்வளவு பிரயோசனமுள்ளதாயிருக்க உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் வருவிக்கிற கருத்தோடே வாங்கினால் அந்த ஆத்துமாக்களுக்கு வருகிற உதவி சகாயம் எவ்வளவெனச் சொல்லி முடியுமோ? அதனாலே தம்பிமார்களே! உங்களுக்கு ஞானப்பிரயோசனமாகவும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதலாகவும் அடிக்கடி தக்க பக்தி விசுவாசத்தோடு திவ்விய நற்கருணை வாங்கப் பிரியப்படக்கடவீர்களாக,
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே எனக்கு ஆதரவாயிரும்.
செபம்
எங்கள் ஜீவியமும் எழுந்தேற்றமுமாய் இருக்கிற சேசுவே ! இவ்வுலகத்தை விட்டுப் பிரிகிற போது உமது
திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் எங்களுக்கு அன்னபானமாகக் கொடுத்துவைத்தீரே. இப்படிப்பட்ட உமது அளவில்லாத தயவைப் பார்த்து மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குத் தயைப்பண்ணும். விசேஷமாய் ஆறுதலற்றவர்கள் பேரில் அதிகமாய் இரக்கங் காண்பித்து யாவரையும் நித்திய ஜீவிய ஊற்றுகளாயிருக்கிற உம்முடைய இராச்சியத்திலே கொண்டுபோய் உம்மோடு ஒரு பந்தியிலிருந்து திவ்விய அமிர்தங்களை அநுபவிக்கும்படிக் கிருபை செய்தருள உம்மைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தோழாம் தேதியில் செய்ய வேண் டிய நற்கிரியையாவது: -
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பூசை செய்விக்கிறது அல்லது பூசை காண்கிறது.
புதுமை
கொலோனியாவென்ற மாநகரில் அர்ச். சாமிநாதர் உண்டுபண்ணின சபையைச் சேர்ந்த பக்தியுள்ள இரண்டு வாலிபச் சந்நியாசிகள் மேலான சாஸ்திரங்களைப் படித்துக்கொண்டிருந்தார்கள். இருவரிடத்திலும் நல்ல குணமும், இடைவிடா பக்தியின் பேரில் ஆசையும், படிப்பில் சுறுசுறுப்பும் இருந்தபடியினாலே இவர்களுக்குள்ளே உத்தம நேசம் இருந்தது. தங்களுக்குள்ளே யார் முதலில் சாவானோ அவனுடைய ஆத்துமத்துக்காக வேறொருவன் ஒருவருஷமளவாகத் திங்கட்கிழமைதோறும் ஒரு பூசையும், வெள்ளிக் கிழமைதோறும் ஒரு பூசையும் செய்வோமென்று தங்களுக்குள்ளே உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். படித்தபிற்பாடு குருபட்டம் வாங்கி இருவரும் பிரிந்து தேவ ஊழியத்துக்காக வெவ்வேறே இடத்துக்கு உழைக்கப் போனார்கள்.
இருவரும் அநேக வருஷமாய் எல்லா புண்ணியங்களையும் செய்து மகா கிருத்தியங்களையும் பண்ணின பிற்பாடு இருவரில் ஒருவர் முந்தி இறந்தார். வேறொருவர் இந்த செய்தியை அறிந்து அவருடைய ஆத்துமத்துக்காக அநேக ஜெபங்களைப் பொழிந்து தவங்களை நடத்தித் திரளான கண்ணீர் விட்டதேயன்றி. திவ்விய பூசையை மறந்துபோனார். ஒருநாள் அவர் தியானத்திலிருக்கும்போது இறந்தவருடைய ஆத்துமம் அவருக்குக் காணப்பட்டு என்னை மறந்து போனீரோ? எனக்காக செய்யவேண்டிய பூசைகளை செய்யாதிருப்பது ஏன்? என்றது. அதற்கு அவர் மறுமொழியாக பூசை பண்ணவில்லையென்பது மெய்தான். ஆயினும் உமக்காக என்னால் ஆனமட்டும் ஜெபமும் தவமும் பண்ணினேனே என்றார். அதற்கு மறுமொழியாக அந்த ஆத்துமம் எனது பிரியமுள்ள சகோதரரே, அப்படிச் சொல்லாதேயும், ஜெபமும், தவமும் நான் படுகிற அவதிக்குப் போதாதே,என்னைச் சுட்டெரிக்கும் நெருப்பை அவிக்கச் சேசுக் கிறிஸ்துநாதருடைய திவ்விய இரத்தந்தான் வேணும், நான் அநுபவிக்கிற அகோரமான வேதனைகளிலிருந்து திவ்விய பூசை மாத்திரமே என்னை இரட்சிக்க வல்லதாயிருக்கிறது. அதனாலே முன்னே நாம் இருவரும் உடன்படிக்கை செய்தது போல எனக்காக நீர் திவ்விய பூசையை ஒப்புக் கொடுப்பீராக என்றது. செய்வேனென்று இவர் சொல்லவே. வந்த ஆத்துமம் மறைந்துபோனது.
மறுநாள் காலையில் அந்த சந்நியாசியாரும் மடத்திலுள்ள மற்ற குருக்களும் அந்த ஆத்துமத்துக்காகத் திவ்விய பூசை செய்தார்களாம். அப்படிச் சிலநாள் திவ்விய பூசை செய்தபிற்பாடு மேற்சொன்ன ஆத்துமம் மகா மகிமையோடும், சந்தோஷத்தோடும் திரும்பி வந்து இந்த சந்நியாசியாருக்குக் காணப்பட்டு, என் பிரமாணிக்கமுள்ள சிநேகிதரே! எனக்காகச் செய்யப்பட்ட திவ்விய பூசையின் வல்லபத்தினால் என் உத்தரிப்பு முடிந்தது. இப்போது பரம கடவுளான சர்வேசுரனை மோட்சத்திலே பிரத்தியட்சமாய்த் தரிசிக்கப் போகிறேன். அதிலே உம்மை மறவாமல் உமக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லி மறைந்து போனது.
1793-ம் ஆண்டு பிரான்சு இராச்சியத்தில் ஒரு பலத்த கலாபம் நடந்தது. ஆஸ்தியுள்ள ஒரு மனுஷன் பாரீஸ் நகரத்துக்கு வந்து அங்கே எவ்வித அக்கிரமங்களையும் செய்து மற்ற குழப்பக்காரரோடு சேர்ந்து குற்றமில்லாத திரளான ஜனங்களை வெட்ட உத்தரவு பண்ணினான். ஒரு இராத்திரி ஒர் ஆற்றின் பாலத்தின் மேல் அவன் போகும்போது குழப்பக்காரர் இரண்டு பேர் அவனுக்கு எதிரே வந்து மகா கோபத்தைக் காட்டி இப்போது உன்னைக் குத்துவோமோ? அல்லது ஆற்றிலே தள்ளுவோமோ? இவ்விரண்டில் உமக்கு எது தேவை தெரிந்து கொள் என்றார்கள். அப்போது ஒருவருமில்லாத நடுச்சாம நேரமாயிருந்ததினாலே தப்பித்துக்கொள்ளுகிறதற்கு சமயமில்லையென்று கண்டு, என்னை ஆற்றிலே தள்ளுங்களென்றான். என்றவுடனே அவனை வெள்ளப் பெருக்காய் ஓடுகிற ஆற்றிலே தள்ளிப்போட்டார்கள்.
அவன் அலைகளுக்குள்ளே அமிழ்ந்துச் சாகப்போகிற நேரத்தில், சர்வேசுரனுடைய மட்டுக்கடந்த கிருபையால் மனந்திரும்பி தன் இருதயத்தில் பிரார்த்தித்ததாவது ஒ சர்வேசுரா! நான் ஜீவித்த பிரகாரத்துக்கு நரகமே எனக்கு கதியேயல்லாமல் வேறல்ல. ஆனாலும் என் பேரில் இரக்கமாயிரும், கர்த்தாவே இரக்கமாயிரும்" என்றவுடனே அவன் அலைகளோடே உருண்டு புரண்டு இறந்தான். கரைகாணாத கருணா சமுத்திரமான கிருபைநிறைந்த சர்வேசுரன் அந்த துரோகியை மன்னித்து அவன் ஆத்துமத்தை உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகத் தீர்வையிட்டார்.
அந்த மனுஷனுக்கு பக்தியுள்ள ஒரு மகள் மாத்திரம் இருந்தாள். தன் தகப்பன் நிச்சயமாகவே நரகத்துக்குப் போயிருப்பானென்று அவள் நினைத்து துக்க மிகுதியினாலே பாஸ் பட்டனத்தைவிட்டு வேறே தேசத்துக்குப் போய் அங்கே ஓயாமல் அழுது கொண்டிருந்தாள் . அநேகம் வருஷத்துக்குப் பிற்பாடு தேவ உத்தாரத்தின்படியே அந்த மனுஷனுடைய ஆத்துமம் தன் மகளுக்குத் தரிசனையாகி , தனக்கு மரண வேளையிலே சம்பவித்ததெல்லாம் அறிவித்து , நான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே பொறுக்கமுடியாத வேதனைகளை அனுபவிக்கிறேன் என்கிறதினாலே எனக்காக அநேக பூசைகளைச் செய்விக்க வேண்டுமென்று சொல்லி மறைந்து போனது .
அந்த பக்தியுள்ள மகளானவள் யாதொரு தாமதமின்றி, குருவானவரிடத்தில் வந்து நீரும் சுற்றமிருக்கிற எல்லாக் குருக்களும் என்னுடைய கருத்துக்காக நான் போதுமென்று சொல்லுமளவும் தினந்தோறும் திவ்வியபூசை செய்யவேணுமென்று கேட்டாள். அவள் கேட்டுக் கொண்டபடி ஒரு மாதத்துக்கதிகம் அநேகம் குருக்கள் திவ்விய பூசை பண்ணின பிறகு அந்த மனுஷனுடைய ஆத்துமம் தன் மகளுக்குத் திரும்பக் காணப்பட்டு என் மகளே!
என்னுடைய உத்தரிப்புக்காலம் முடிந்தது, இதோ மோட்சத்துக்குப் போகிறேன் என்று சொல்லி மறைந்து போனது. அப்போது அந்த பக்தியுள்ள மகள் சந்தோஷப்பட்டுக் குருவானவரிடத்தில் நடந்ததெல்லாம் வெளிப்படுத்தினாள்.
கிறிஸ்துவர்களே! இவ்விரண்டு சுகிர்த புதுமைகளினாலே திவ்விய பூசையானது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறதென்று அறிய வேண்டியதுமல்லாமல், மனுஷனானவன் எவ்வளவு அவலமான சாவாய்ச் சாகிறது போலே காண்பித்தாலும், அவனுடைய ஈடேற்றத்தின்பேரில் அவநம்பிக்கையாய் இருக்கக்கூடாது. அதனால் உங்களாலே கூடுமானமட்டும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக அடிக்கடி திவ்விய பூசை ஒப்புக்கொடுக்கச் செய்ய வேணுமென்று அறியக் கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற ஐந்தாம் வழி திவ்விய பூசையாம்
தியானம்
முன் செய்த தியானங்களில் ஜெப வேண்டுதலும் , பிச்சை தர்மமும், தவக்கிரியைகளும், திருச்சபையின் பலன்களும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம்பண்ணுகிற நல்ல வழிகளாமென்று காண்பிக்கப்பட்டது.இவைகளெல்லாம் பிரயோசனமுள்ளதாய் இருந்தாலும் , இவை மனுஷனாலே செய்யப்படுகிற நற்கிரியைகள் ஆகையால் இவைகளுக்கு அளவுமுண்டு , குறைவுமுண்டு . உன்னத திவ்விய பூசை அப்படியல்லவே . திவ்விய பூசையானது மட்டுமின்றி குறைவுமின்றி சர்வ வல்லபமுள்ள தேவ கிரியையாம். அதெப்படியென்றால் திருச்சபையில் நடந்துவரும் திவ்விய பூசையும், சேசு கிறிஸ்துநாதர் சுவாமி சிலுவையில் செலுத்தின திவ்விய பலியும் ஒன்றுதானென்று சொல்லவேண்டியதல்லாமல் வேறல்ல. சிலுவையில் நிறைவேறின திவ்விய பலியானது சேசுநாதரல்லவோ? திவ்விய பூசையில் தேவ பலியாக நிற்பவர் அவர்தாமே.
சிலுவையிலே பலியை நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த திவ்விய குரு சேசுநாதர்தாமே, இதிலேயும் பிரதான குருவாக திவ்விய பூசையை முடிப்பவர் அவர்தாமே .சிலுவையிலே அவர் தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார் . திவ்விய பூசையிலே தம்மை குருக்களுடைய கையால் ஒப்புக் கொடுக்கிறார் . சிலுவையிலே மெய்யாக மரித்தார் , திவ்விய பூசையிலே ஞானவிதமாக அவர் மரிக்கிறார் . ஆனால் அதிலேயும் இதிலேயும் ஒப்புக் கொடுக்கிற பலி ஒன்றுதான் .அதிலேயும் இதிலேயும் அந்த தேவ பலியை ஒப்புக்கொடுக்கிறவர் ஒருவர்தான். இதனால், சேசுநாதர்சுவாமி தம்மைச் சிலுவையிலே ஒப்புக் கொடுத்து பலியானது மட்டில்லாத பலனுள்ளதாகையால் அப்படித் தான் திவ்விய பூசையானது மட்டில்லாத பலனுள்ளதென்பது சத்திய விசுவாசமாம்.
திவ்விய பூசையின் பலன் சர்வலோக பாவத்தைப் போக்க வல்லதாயிருக்கிறதுமல்லாமல், இன்னும் அநேக கோடானகோடி உலகத்தின் பாவங்களைப் போக்கவும் வல்லதாயிருக்கிறது. இத்தனை வல்லபமுள்ள பூசை ஒரு நாளிலும் ஓரிடத்திலும் ஒருநேரத்திலுமாத்திரம் ஒப்புக் கொடுக்கப்படாமல், எந்நாளும் எவ்விடத்திலும் எந்நேரமுந்தானே செலுத்தப்படச் சர்வேசுரன் திருவுளமானார். இப்படிப்பட்ட பூசை உலகத்தில் இல்லாவிட்டால், இப்போது உலகத்தில் நடந்துவரும் அக்கிரமத்தால் உலகமெல்லாம் வெந்தழிந்து சர்வ சங்காரமாகியிருக்குமென்றுதான் சொல்ல வேண்டும். அநீதம் நிறைந்த இந்த உலகத்தின் பேரில் சர்வேசுரனுக்கு வரும் கோபத்தை இந்தப் பலி ஒன்றே அமர்த்தி தயை வருவிக்கிறது.
மட்டில்லாத பலனுள்ள இந்த திவ்விய பூசையை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக் கொடுக்கலாமென்பது சத்தியம் வழுவாத திருச்சபையினுடைய பூர்வீக காலத்தில் இருந்து இந்த நாள் மட்டும் இடைவிடாத வழக்கமானதால், திவ்விய பூசையினாலே அந்த ஆத்துமாக்களுக்கு எவ்வளவு உதவி சகாயம் வருமென்று சொல்லத்தகும் தன்மையல்ல. உள்ளபடி யோசனை பண்ணினால் வேதசாட்சிகள் பட்ட சகல வேதனைகளிலும், பெரிய தபோதனர் நடத்தின தவங்களிலும், தர்மவான்கள் கொடுத்த தர்மங்களிலும், திவ்விய பலியானது அதிக மேலானதும், அதிக பலனுள்ளதும், அதிக பிரயோசனமுள்ளதுமாய் இருக்கிறதென்கிறதினாலே அதெல்லாவற்றையும்விட ஒரு பூசையினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அதிக சகாயம் அதிக உதவியும் வருமென்கிறது சரியே.
அதல்லாமலும் சேசுகிறீஸ்துநாதர் சுவாமி தானே பிரதான குருவாக திவ்விய பூசையை ஒப்புக்கொடுக்கிறாரென்பதைப்பற்றி அதனுடைய பலன் அவராலே வருகிறதல்லாமல், பூசையைச் செய்கிற குருவினாலேயானாலும், பூசையைச் செய்விக்கிறவராலே என்கிலும் வராது. அதனாலே அந்தப் பலன் எப்போதும் மட்டுமின்றிக் குறைவுமின்றி அளவற்றதாயிருக்கிறதென்று சொல்ல வேண்டியதாகும்.
இது இப்படியிருக்க, தங்களுடையவர்களின் ஆத்துமாக்களுக்குப் பூரணமான ஆறுதலையும் சரியான இளைப்பாற்றியையும் நித்திய பேரின்பத்தையும் சீக்கிரத்தில் வருவிக்க விரும்புகிறவர்கள் அந்த ஆத்துமாக்களுக்காக அடிக்கடி திவ்விய பூசையை ஒப்புக்கொடுக்கச் செய்வார்களாம். எவனொருவன் செத்தநாளிலேதானே அவனுடைய ஆத்துமத்துக்காகத் திவ்விய பூசையைப் பண்ணுவிக்கிறது மல்லாமல், பின்பு அவன் செத்த மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும், முப்பதாம் நாளிலும் திவ்விய பூசையைப் பண்ணுவிக்கிறது திருச்சபையின் சுகிர்த வழக்கமாம். மேலும் வருஷாந்தர நாளிலும் அப்படிச் செய்வது பக்தியுள்ளவர்கள் அநுசரிக்கிற முறைமையாம்.
கிறிஸ்துவர்களே! உங்களுடையவர்களின் ஆத்துமாக்களை மெய்யாகவே நேசிப்பீர்களேயானால் திருச்சபையினுடைய இந்த மேன்மையான வழக்கத்தின்படியே செய்வீர்களாக. அந்தோ ! எத்தனையோ பேர்கள் ஒரு முறை திவ்வியபூசை பண்ணுவித்தபிற்பாடு மரித்தவர்களின் மட்டில் தங்களுடைய கடனெல்லாம் தீர்ந்தாற்போல அவர்களை மறந்துபோய் வேறொன்றும் செய்யாது போகிறார்கள்.
திவ்விய பூசையின் விசேஷ பலன் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கிடைக்கும்படிக்கு திவ்விய பூசையை பண்ணுவிக்கிறது அவ்வளவு நன்மையாயிருந்தாலும் பொதுப்பட அதற்குச் செய்யவேண்டிய செலவு கொடுக்கிறது எளிதான காரியமல்ல. ஆயினும் திவ்விய பூசையைப் பக்தியோடு காண்கிறவர்களுக்கு ஓர் மகாப் பலன் வருகிறதினாலே அடிக்கடி திவ்விய பூசை காண்கிறது பெரிய புண்ணியமாயிருக்கிறதுமல்லாமல், அதினாலே வரும் பலனை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அந்த ஆத்துமாக்களுக்கு வெகு ஆறுதலாயிருக்கும்.
கடைசியிலே திவ்வியநற்கருணையைப் பக்தி விசுவாசத் தோடு அடிக்கடி வாங்கினால் அதனால் வரும் ஞான பிரயோசனத்தையும் பலவீனத்தையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கலாம். அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறதற்கு அதுவே ஓர் உத்தம வழியாம். அதெப்படியென்றால் சற்குருவான சேசுநாதர் பாடுபட்டு மரித்துத் தம்முடைய திவ்விய இரத்தத்தினாலே அடைந்த பேறுபலன்களை ஏழு தேவதிரவிய அநுமானங்களின் வழியாக நமக்கு அளிக்கச் சித்தமானார். ஆயினும் மற்ற தேவதிரவிய அனுமானங்களெல்லாம் அந்தப் பேறுபலன்களை பங்குப்பங்காய்த் தந்து, தேவநற்கருணை மாத்திரமே எல்லா நன்மைகளின் ஊறணியும் காரணமுமாயிருக்கிற சேசு கிறிஸ்துநாதரை முழுமையும் நமக்குத் தந்து, அவருடனே ஞான நன்மைகளையெல்லாம் அடையப் பண்ணுகிறது. துளிதுளியாய்த் தண்ணீர் இறைத்து வயலுக்குப் பாய்ச்சுகிறதிலும் மடை திறந்து சம்பூரணமாய்ப் பாயப்பண்ணுகிறது உத்தமம் என்கிறதைப்போலேயும், காசு காசாய்த் திரவியம் சம்பாதிக்கிறதை விடப் பெரும் பொக்கிஷத்தைக் கைக்கொள்ளுகிறது மேன்மையென்கிறதைப்போலேயும், ஞானப் பயிரான புண்ணியங்களை விளைவிக்கவும், மோட்ச திரவியங்களான பிரசாதங்களை அடையவும், தவதானதர்மமென்னும் சுகிர்த கிரியைகளைச் செய்வதிலும் தக்க பக்தியோடு தேவநற்கருணையை வாங்குவது மேலான வழியாமே.
உயிரோடு இருக்கிறவர்களுக்குத் திவ்விய நற்கருணையை அடிக்கடி வாங்குகிறது அவ்வளவு பிரயோசனமுள்ளதாயிருக்க உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் வருவிக்கிற கருத்தோடே வாங்கினால் அந்த ஆத்துமாக்களுக்கு வருகிற உதவி சகாயம் எவ்வளவெனச் சொல்லி முடியுமோ? அதனாலே தம்பிமார்களே! உங்களுக்கு ஞானப்பிரயோசனமாகவும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதலாகவும் அடிக்கடி தக்க பக்தி விசுவாசத்தோடு திவ்விய நற்கருணை வாங்கப் பிரியப்படக்கடவீர்களாக,
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே எனக்கு ஆதரவாயிரும்.
செபம்
எங்கள் ஜீவியமும் எழுந்தேற்றமுமாய் இருக்கிற சேசுவே ! இவ்வுலகத்தை விட்டுப் பிரிகிற போது உமது
திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் எங்களுக்கு அன்னபானமாகக் கொடுத்துவைத்தீரே. இப்படிப்பட்ட உமது அளவில்லாத தயவைப் பார்த்து மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குத் தயைப்பண்ணும். விசேஷமாய் ஆறுதலற்றவர்கள் பேரில் அதிகமாய் இரக்கங் காண்பித்து யாவரையும் நித்திய ஜீவிய ஊற்றுகளாயிருக்கிற உம்முடைய இராச்சியத்திலே கொண்டுபோய் உம்மோடு ஒரு பந்தியிலிருந்து திவ்விய அமிர்தங்களை அநுபவிக்கும்படிக் கிருபை செய்தருள உம்மைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தோழாம் தேதியில் செய்ய வேண் டிய நற்கிரியையாவது: -
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பூசை செய்விக்கிறது அல்லது பூசை காண்கிறது.
புதுமை
கொலோனியாவென்ற மாநகரில் அர்ச். சாமிநாதர் உண்டுபண்ணின சபையைச் சேர்ந்த பக்தியுள்ள இரண்டு வாலிபச் சந்நியாசிகள் மேலான சாஸ்திரங்களைப் படித்துக்கொண்டிருந்தார்கள். இருவரிடத்திலும் நல்ல குணமும், இடைவிடா பக்தியின் பேரில் ஆசையும், படிப்பில் சுறுசுறுப்பும் இருந்தபடியினாலே இவர்களுக்குள்ளே உத்தம நேசம் இருந்தது. தங்களுக்குள்ளே யார் முதலில் சாவானோ அவனுடைய ஆத்துமத்துக்காக வேறொருவன் ஒருவருஷமளவாகத் திங்கட்கிழமைதோறும் ஒரு பூசையும், வெள்ளிக் கிழமைதோறும் ஒரு பூசையும் செய்வோமென்று தங்களுக்குள்ளே உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். படித்தபிற்பாடு குருபட்டம் வாங்கி இருவரும் பிரிந்து தேவ ஊழியத்துக்காக வெவ்வேறே இடத்துக்கு உழைக்கப் போனார்கள்.
இருவரும் அநேக வருஷமாய் எல்லா புண்ணியங்களையும் செய்து மகா கிருத்தியங்களையும் பண்ணின பிற்பாடு இருவரில் ஒருவர் முந்தி இறந்தார். வேறொருவர் இந்த செய்தியை அறிந்து அவருடைய ஆத்துமத்துக்காக அநேக ஜெபங்களைப் பொழிந்து தவங்களை நடத்தித் திரளான கண்ணீர் விட்டதேயன்றி. திவ்விய பூசையை மறந்துபோனார். ஒருநாள் அவர் தியானத்திலிருக்கும்போது இறந்தவருடைய ஆத்துமம் அவருக்குக் காணப்பட்டு என்னை மறந்து போனீரோ? எனக்காக செய்யவேண்டிய பூசைகளை செய்யாதிருப்பது ஏன்? என்றது. அதற்கு அவர் மறுமொழியாக பூசை பண்ணவில்லையென்பது மெய்தான். ஆயினும் உமக்காக என்னால் ஆனமட்டும் ஜெபமும் தவமும் பண்ணினேனே என்றார். அதற்கு மறுமொழியாக அந்த ஆத்துமம் எனது பிரியமுள்ள சகோதரரே, அப்படிச் சொல்லாதேயும், ஜெபமும், தவமும் நான் படுகிற அவதிக்குப் போதாதே,என்னைச் சுட்டெரிக்கும் நெருப்பை அவிக்கச் சேசுக் கிறிஸ்துநாதருடைய திவ்விய இரத்தந்தான் வேணும், நான் அநுபவிக்கிற அகோரமான வேதனைகளிலிருந்து திவ்விய பூசை மாத்திரமே என்னை இரட்சிக்க வல்லதாயிருக்கிறது. அதனாலே முன்னே நாம் இருவரும் உடன்படிக்கை செய்தது போல எனக்காக நீர் திவ்விய பூசையை ஒப்புக் கொடுப்பீராக என்றது. செய்வேனென்று இவர் சொல்லவே. வந்த ஆத்துமம் மறைந்துபோனது.
மறுநாள் காலையில் அந்த சந்நியாசியாரும் மடத்திலுள்ள மற்ற குருக்களும் அந்த ஆத்துமத்துக்காகத் திவ்விய பூசை செய்தார்களாம். அப்படிச் சிலநாள் திவ்விய பூசை செய்தபிற்பாடு மேற்சொன்ன ஆத்துமம் மகா மகிமையோடும், சந்தோஷத்தோடும் திரும்பி வந்து இந்த சந்நியாசியாருக்குக் காணப்பட்டு, என் பிரமாணிக்கமுள்ள சிநேகிதரே! எனக்காகச் செய்யப்பட்ட திவ்விய பூசையின் வல்லபத்தினால் என் உத்தரிப்பு முடிந்தது. இப்போது பரம கடவுளான சர்வேசுரனை மோட்சத்திலே பிரத்தியட்சமாய்த் தரிசிக்கப் போகிறேன். அதிலே உம்மை மறவாமல் உமக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லி மறைந்து போனது.
1793-ம் ஆண்டு பிரான்சு இராச்சியத்தில் ஒரு பலத்த கலாபம் நடந்தது. ஆஸ்தியுள்ள ஒரு மனுஷன் பாரீஸ் நகரத்துக்கு வந்து அங்கே எவ்வித அக்கிரமங்களையும் செய்து மற்ற குழப்பக்காரரோடு சேர்ந்து குற்றமில்லாத திரளான ஜனங்களை வெட்ட உத்தரவு பண்ணினான். ஒரு இராத்திரி ஒர் ஆற்றின் பாலத்தின் மேல் அவன் போகும்போது குழப்பக்காரர் இரண்டு பேர் அவனுக்கு எதிரே வந்து மகா கோபத்தைக் காட்டி இப்போது உன்னைக் குத்துவோமோ? அல்லது ஆற்றிலே தள்ளுவோமோ? இவ்விரண்டில் உமக்கு எது தேவை தெரிந்து கொள் என்றார்கள். அப்போது ஒருவருமில்லாத நடுச்சாம நேரமாயிருந்ததினாலே தப்பித்துக்கொள்ளுகிறதற்கு சமயமில்லையென்று கண்டு, என்னை ஆற்றிலே தள்ளுங்களென்றான். என்றவுடனே அவனை வெள்ளப் பெருக்காய் ஓடுகிற ஆற்றிலே தள்ளிப்போட்டார்கள்.
அவன் அலைகளுக்குள்ளே அமிழ்ந்துச் சாகப்போகிற நேரத்தில், சர்வேசுரனுடைய மட்டுக்கடந்த கிருபையால் மனந்திரும்பி தன் இருதயத்தில் பிரார்த்தித்ததாவது ஒ சர்வேசுரா! நான் ஜீவித்த பிரகாரத்துக்கு நரகமே எனக்கு கதியேயல்லாமல் வேறல்ல. ஆனாலும் என் பேரில் இரக்கமாயிரும், கர்த்தாவே இரக்கமாயிரும்" என்றவுடனே அவன் அலைகளோடே உருண்டு புரண்டு இறந்தான். கரைகாணாத கருணா சமுத்திரமான கிருபைநிறைந்த சர்வேசுரன் அந்த துரோகியை மன்னித்து அவன் ஆத்துமத்தை உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகத் தீர்வையிட்டார்.
அந்த மனுஷனுக்கு பக்தியுள்ள ஒரு மகள் மாத்திரம் இருந்தாள். தன் தகப்பன் நிச்சயமாகவே நரகத்துக்குப் போயிருப்பானென்று அவள் நினைத்து துக்க மிகுதியினாலே பாஸ் பட்டனத்தைவிட்டு வேறே தேசத்துக்குப் போய் அங்கே ஓயாமல் அழுது கொண்டிருந்தாள் . அநேகம் வருஷத்துக்குப் பிற்பாடு தேவ உத்தாரத்தின்படியே அந்த மனுஷனுடைய ஆத்துமம் தன் மகளுக்குத் தரிசனையாகி , தனக்கு மரண வேளையிலே சம்பவித்ததெல்லாம் அறிவித்து , நான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே பொறுக்கமுடியாத வேதனைகளை அனுபவிக்கிறேன் என்கிறதினாலே எனக்காக அநேக பூசைகளைச் செய்விக்க வேண்டுமென்று சொல்லி மறைந்து போனது .
அந்த பக்தியுள்ள மகளானவள் யாதொரு தாமதமின்றி, குருவானவரிடத்தில் வந்து நீரும் சுற்றமிருக்கிற எல்லாக் குருக்களும் என்னுடைய கருத்துக்காக நான் போதுமென்று சொல்லுமளவும் தினந்தோறும் திவ்வியபூசை செய்யவேணுமென்று கேட்டாள். அவள் கேட்டுக் கொண்டபடி ஒரு மாதத்துக்கதிகம் அநேகம் குருக்கள் திவ்விய பூசை பண்ணின பிறகு அந்த மனுஷனுடைய ஆத்துமம் தன் மகளுக்குத் திரும்பக் காணப்பட்டு என் மகளே!
என்னுடைய உத்தரிப்புக்காலம் முடிந்தது, இதோ மோட்சத்துக்குப் போகிறேன் என்று சொல்லி மறைந்து போனது. அப்போது அந்த பக்தியுள்ள மகள் சந்தோஷப்பட்டுக் குருவானவரிடத்தில் நடந்ததெல்லாம் வெளிப்படுத்தினாள்.
கிறிஸ்துவர்களே! இவ்விரண்டு சுகிர்த புதுமைகளினாலே திவ்விய பூசையானது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறதென்று அறிய வேண்டியதுமல்லாமல், மனுஷனானவன் எவ்வளவு அவலமான சாவாய்ச் சாகிறது போலே காண்பித்தாலும், அவனுடைய ஈடேற்றத்தின்பேரில் அவநம்பிக்கையாய் இருக்கக்கூடாது. அதனால் உங்களாலே கூடுமானமட்டும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக அடிக்கடி திவ்விய பூசை ஒப்புக்கொடுக்கச் செய்ய வேணுமென்று அறியக் கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இருபத்து எட்டாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் செய்யத்தகும் உச்சிதமான நேர்ச்சிக் காணிக்கையை காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணத்தக்கதாக மேற்சொன்ன வழிகள் யாவும் நல்ல வழிகளென்று சொல்லவேணுமல்லாமல் மற்றபடியல்ல. ஆனால் அந்த வழிகளெல்லாம் இப்போது காண்பிக்கப்போகிற நேர்ச்சிக் காணிக்கையில் அடங்கியிருக்கிறபடியினாலே, அந்த நேர்ச்சிக் காணிக்கையானது உச்சிதமும், உன்னதமும், மேன்மையுமுள்ளதென்று கூறக்கடவோம். அந்த நேர்ச்சிக் காணிக்கை ஏதென்றும், எப்படிச் செய்யலாமென்றும், அதனாலே வருகிற ஞான நன்மைகள் எவ்வளவென்றும் இப்போது பார்ப்போம்.
முன் விவரித்தவண்ணமே, அந்தந்த புண்ணியத்துக்கும், அந்தந்த நற்கிரியைக்கும், பேறுபலன் , மன்றாட்டுப் பலன் , பரிகாரப் பலன் ஆகிய இம்மூன்று பலனுண்டு. மீண்டும் திவ்விய பூசையானது தேவ வணக்கத்துக்கும், நன்றியறிந்த தோத்திரத்துக்கும், வேண்டிய வரங்களைப் பெறுதலுக்கும் உதவுகிறதுமல்லாமல் பாவப் பரிகாரத்துக்கும் உதவுவது நிச்சயம் தான் . அந்தப் புண்ணியங்களினாலும் , அந்தந்த நற்கிருத்திரியங்களினாலும் , திவ்விய பூசைகளினாலும் நமக்குச் சொந்தமாய் வருகிற அந்தப் பரிகார பலனை முழுமையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நேர்ச்சிக் கடனாக காணிக்கை வைக்கிறதே மேற்சொன்ன உசித காணிக்கையாகும் .
மீளவும் நாம் மரித்தபின் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கும் நம்முடைய ஆத்துமத்துக்காக என்னஜெபம் தானதர்மம் செய்வார்களோ, எத்தனை பூசை பண்ணுவிப்பார்களோ, அவைகளினால் நம்முடைய ஆத்துமத்துக்கு வரப்போகிற பரிகாரப்பலனையெல்லாம் முன்னமே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கிறதேயாம். அந்த நேர்ச்சிக் காணிக்கை அதிகமதிகமாய் உதவும்படியாகவும், உத்தரிக்கிறஸ்தலத்துக்கு இராக்கினியான தேவமாதாவின் கையிலே எல்லாவற்றையும் ஒப்பித்து வைக்க வேணும்.
அப்படியே, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக நம்முடைய புண்ணியங்களினாலும் நற்கிரியைகளினாலும் நமக்கு வருகிற பரிகாரப் பலனையும், இனிமேல் நமக்காகச்செய்யப்படும் நற்கிருத்தியங்களாலும் திவ்விய பூசைகளாலும் நமக்கு வரப்போகிற பரிகாரப் பலனையும் சேர்த்து தேவமாதாவின் கையிலே நேர்ந்து ஒப்புக்கொடுக்கிறதே இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையாம்.
இந்த நேர்ச்சி காணிக்கை வாயினாலேயானாலும் மனதிலென்கிலும் செய்யத்தகும். அதை அடிக்கடி புதுப்பிக்கிறது நல்லதாயினும், அவசரமில்லை. அதனால் அற்பப்பாவத்துக்காவது சாவான பாவத்துக்காவது ஏதுவான ஒரு கடமையுமில்லை. அதை செய்தபிற்பாடு மனசில்லாதே போனால் விட்டுவிடலாம்; அப்படி விட்டுவிட்டால் அதனால் வருகிற ஞானப் பிரயோசனத்தை இழந்துபோகிற தல்லாது யாதொரு பாவம் இராது.
இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையை அர்ச். பாப்பானவர் அங்கீகரித்ததுமன்றியே, அதைப் பக்தியுள்ள எல்லோரையும் செய்ய ஏவிக்கொண்டும், செய்தவர்களுக்குத் திருச்சபையின் பொக்கிஷங்களைத் திறந்து ஏராளமான ஞான நன்மைப் பலன்களை அளித்துக் கொண்டும் வருகிறார். ஆனதினாலே திருச்சபையிலே எங்கும் எண்ணிக்கையில்லாத குருக்களும் சந்நியாசிகளும் கன்னியாஸ்திரிகளும் ஸ்திரி பூமான்களான கிறிஸ்துவர் களும் இந்தச் சுகிர்த நேர்ச்சிக் காணிக்கையைச் செய்கிறார்கள். இந்த சிந்து தேசத்திலே முதலாய் அநேகம் பேர்கள் அப்படி நேர்ந்துக் கொண்டார்களென்று அறிந்திருக்கிறோம்.
கிறிஸ்துவர்களே! நீங்களும் அப்படிச் செய்வீர்களேயானால் சர்வேசுரனுக்கு தோத்திரமும், தேவமாதாவுக்கு எவ்வளவு சந்தோஷமும், ஆத்துமாக்களுக்கு எவ்வளவு ஆறுதலும், உங்களுக்கு எவ்வளவு பிரயோசனமும் வருமென்பது சொல்லிலும் நினைவிலும் அடங்குந்தன்மை அல்ல. அதனாலே உங்களுக்கு யாதொரு குறை உண்டாகுமென்றும், நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும்போது உங்களுடைய பரிகாரப் பலனெல்லாம் முன்னமே கையளித்துவிட்டதைப் பற்றி உதவி சகாயமின்றி அதிக வருத்தப்பட வேண்டியதாய் இருக்குமென்றும் நினைக்க வேண்டாம்.
இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையை மேலான தேவசிநேகத்தினாலும் மேலான பிறசிநேகத்தினாலும் செய்கிறீர்கள் என்கிறதினாலே, சர்வேசுரனுடைய சந்நிதியிலே உங்களுக்கு அதிக பேறுபலனும் அதிக பரிகாரப் பலனும் உண்டாகுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. அதனாலே நீங்கள் உத்தரிக்க வேண்டிய வேதனைகள் சீக்கிரத்தில் முடிவதுமல்லாமல், மோட்ச பேரின்பத்தில் உங்களுக்கு அதிக மகிமையும், அதிக வெகுமதியம் கிடைக்கும். அர்ச் அமிர்தநாதர் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு நாம் கொடுக்கிறதெல்லாம் நமக்கு இவ்வுலகத்தில் தேவ வரங்களைப் பெறுவிக்குமென்றும் நாம் இறந்த பிற்பாடு அது ஒன்றுக்கு நூறாகக் கொடுக்கப் படுமென்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையைச் செய்யத்தகும் வகையாவது:
ஏக திரித்துவமான சர்வேசுரா !
உமக்கு அதிக தோத்திரத்தைச் செலுத்தவும், எங்கள் இரட்சகரான கேசுகிறீஸ்துநாதரை கண்டுபாவிக்கவும், தேவமாதாவுக்குப் பிரியப்படவும், நான் மனம் பொருந்தி உத்தரிக்கற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயமாக இப்போது எனக்குச் சொந்தமான பரிகாரப் பலன்யாவற்றையும், இனி எனக்கு வரத்தகும் பரிகாரப் பலன் எல்லாவற்றையும், என் மரணத்துக்குப்பின் எனக்காகச் செய்யப்படும் புண்ணிய தர்மங்களினாலும், திவ்விய பூசையினாலும் வரும் பரிகாரப்பலன் சகலத்தையும், தேவ மாதாவின் கையிலே வைத்துத் தேவரீருக்கு முழுமையும் கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன்.
ஆண்டவரான சர்வேசுரா! இந்த என்னுடைய நேர்ச்சிக்காணிக்கையை என் ஆத்துமத்துக்குப் பிரயோசனமாகக் கிருபையாய் ஏற்றுக் கொள்ள வேணுமென்று பிரார்த்தித்துக்கொள்ளுகிறேன்.
விவரம் :1-வது: நாம் சொன்னாற்போல இந்த நேர்ச்சிக் காணிக்கைக்கு யாதோர் கடனில்லை; அதைச் செலுத்தினால் புண்ணியமும் பலனும் சம்பாவனையுமாயிருக்கும். அதை செய்தபிற்பாடு நிறுத்தி விட்டாலும், அந்தப் புண்ணியப்பலன் இல்லாமற் போவதேயன்றிப் பாவமில்லை.
2-வது அப்படிப்பட்ட சுகிர்த நேர்ச்சிக் காணிக்கையைச் செய்திருந்தாலும், செய்யக்கடமைப்பட்டிருக்கிற கடன் முகாந்தரமாகவாவது நியாயத்துக்கென்கிலும் யாதொரு ஜெபங்களுக்கும் தர்மங்களுக்கும் விக்கினமாயிராது. அதாவது நம்முடையவர்களின்ஆத்துமங்களுக்கும், சிநேகிதர் உபகாரிகள் சபையார் முதலியவர்களுடைய ஆத்துமங்களுக்கும் நாம் விசேஷமாய் வேண்டிக்கொள்ள வேணுமென்று நமக்குக் கடனிருக்கிறபடியினாலே, நாம் முன்னே சொன்ன வண்ணமே நேர்ந்துவிட்ட நமது பரிகாரப் பலன் அவர்களுக்குத் தானே முதலில் உதவுமென்கிறது நிச்சயம்.
இப்பேர்ப்பட்ட உச்சித நேர்ச்சிக் காணிக்கையைச் செய்பவர்களுக்கு அர்ச் பாப்பானவர் அளித்த விசேஷபலன்:
முதலாவது: இந்த நேர்ச்சிக் காணிக்கையைச் செய்யுங் குருக்கள் அவர்கள் தினந்தினம் செய்யும் திவ்விய பூசையிலே பரிபூரண பலன் அடைவார்கள்.
இரண்டாவது : மற்ற விசுவாசிகள் திவ்விய நற்கருணை வாங்குகிறபோதெல்லாம் பரிபூரண பலனை அடைவதுமன்றியே, திங்கட்கிழமைதோறும் சாவான பாவமில்லாத ஆத்துமத்தோடு ஆத்துமாக்களைக் குறித்துத் திவ்விய பூசை காண்கிறபோதெல்லாம் பரிபூரணபலனை அடைவார்கள். இந்தப் பலன்களை அடைய, யாதொரு கோவிலைச் சந்தித்து, அர்ச். பாப்பானவருடைய சுகிர்த கருத்துகள் நிறைவேற வேண்டிக்கொள்ளவேண்டியதுமல்லாமல், அந்தப் பலன்களை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டியது.
மூன்றாவது: தாங்கள் அடையக்கூடுமான மற்றச் சகலமான பலன்களையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கலாம்.
நான்காவது : வியாதியினாலேயாவது, கோவிலில்லாத இடங்களில் செய்யவேண்டிய வேலையினிமித்தமாவது, வேறே விக்கினத்தினாலேயாவது திங்கட்கிழமை பூசைக்கு வரக்கூடாதவர்கள், ஞாயிற்றுக்கிழமைப் பூசைக் கண்டு மேற்சொன்ன பலன்களை அடையலாமென்று அறியக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
எங்கள் அடைக்கலமும் ஆரோக்கியமுமாயிருக்கிற சேசுநாதரே! தேவரீர் எங்களுக்காகப் பூங்காவனத்திலே தரையில் ஒடும்வரை சர்வாங்கமாய் இரத்தவேர்வை வேர்த்து மகா கோபதாபம் அநுபவித்தீரே. இந்த உம்முடைய விலைமதிப்பற்ற இரத்தத்தைப் பார்த்து, மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தெட்டாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
மேற்சொன்ன நேர்ச்சிக் காணிக்கையை மனதிருந்தால் செய்கிறது; அல்லது ஆத்துமாக்களைக் குறித்து 10
பரமண்டல மந்திரமும் 10 பிரிய தத்த மந்திரமும் வேண்டிக்கொள்ளுகிறது.
புதுமை
கர்த்துசியான் சபையில் உட்பட்டிருந்த தியோனிசியுஸ் என்கிறவர் எழுதின சுகிர்த சரித்திரமாவது அக்காலத்திலே புண்ணியம் நிறைந்த ஜெர்த்துருத் என்னப்பட்ட ஒரு கன்னியாஸ்திரி வாழ்ந்து வந்தாள். அவள் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் மிகவும் பக்தியாயிருந்தபடியினாலே அந்த ஆத்துமாக்களுக்கு உதவியாகத் தாம் செய்த ஜெபதப தான தர்மம் எல்லாவற்றையும் சேசு கிறிஸ்துநாதருடைய கையிலே அவர்களுக்கு ஒப்புக் கொடுப்பாள். அதனாலே சேசுகிறீஸ்துநாதர் சுவாமி இன்னின்ன ஆத்துமங்களுக்காக விசேஷமாய்ப் பிரயாசைப் படவேணுமென்று அவளுக்குப் புதுமையாய் அறிவித்துக் கொண்டு வருவார். அப்போது அந்தப் பக்தியுள்ள கன்னிகை அதிக ஜெபமும் அதிக தவமும் பண்ணுவாள்.
ஆத்துமாக்களோவென்றால் அவளுக்கு அநேகமுறை காணப்பட்டு தங்களுக்காகப் பட்ட பிரயாசைகளுக்கு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ணுவார்கள். அப்படி அவள் எந்நாளும் செய்து கொண்டு வந்தாள். கடைசியாய், வயது சென்று அவளே வியாதியாய் விழுந்து அவஸ்தையானாள். அச்சமயத்திலே துர்மனப்பசாசு அவளுக்குக் காண்பித்து, அவளைப்பார்த்து சிரித்து நகைத்து இப்போது உனக்கு உத்தரிக்கிற ஸ்தலத்திலே சரியான வேதனை வரப்போகுது. நீ செய்த புண்ணிய தர்மமெல்லாம் மற்ற ஆத்துமாக்களுக்கு கையளித்து விட்டுவிட்டதினால், நீ வெறுமனே சாகப்போகிறாய். நீ செய்த எல்லாக் குற்றங்களுக்கும் யாதோர் உதவியின்றி உபாதிக்கப்படுவாய் என்றது.
இந்தப் புண்ணியவதி அச்சோதனையால் களைத்து மயங்கி ஐயையோ எனக்கென்ன வருமோ? மற்றவர்களுக்கு என்னுடைய நற்கிரியைப் பலன்களெல்லாம் கையளித்த பிற்பாடு எனக்கு ஒன்றுமில்லையே. ஐயையோ எனக்கு வரப்போகிற உத்தரிப்பில் எந்த ஒரு ஆறுதலில்லாவிட்டால் எப்படி அதைப் பொறுத்துக்கொள்வேன்? என்னாண்டவரே! அப்படி ஆகுமோ? என்று அங்கலாய்த்துச் சொன்னாள். அகடினமே சேசு கிறிஸ்துநாதர் சுவாமி கிருபையுள்ள முகத்தோடு அவளுக்குத் தோன்றி துஷ்டப்பசாசைத் துரத்தி அவளுடைய களைப்பைத் தீர்த்து அவளுக்கு ச் சொன்னதாவது ஜெர்த்துருத்தென்பவளே! நீ துக்கப் படுகிறதற்கு காரணம் என்ன என்றார்.
அதற்கவள் ஆண்டவரே, உமக்கு தெரியாத காரியமோ? நான் செய்த புண்ணிய தருமமெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கையளித்து விட்டேனே. இப்போது என் கையில் ஒன்றுமில்லாமல் சாகப்போகிறேனே என்றாள். அதற்கு ஆண்டவரான சுவாமி சிரித்த முகத்தோடு என் மகளான ஜெர்த்துருத் தென்பவளே, ஏன் துக்கப்படுகிறாய்? நீ ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியானது எனக்கு வெகு பிரியமாய் இருக்கிறபடியினாலே உன் குற்றங்களுக்கு வரத்தகுமான வேதனையெல்லாவற்றையும் இக்கணமே மன்னித்துக் கொள்ளுகிறோம்.
நம்மைக் குறித்துத் தர்மம் செய்கிறவர்களுக்கு ஒன்றுக்கு நூறாக கொடுப்போமென்று நாம் வாக்களித்திருக்கிறோமென்கிறதினாலே, அம்மாத்திரத்துக்கு மோட்சத்தில் உன் வெகுமதி பெருகும். உன்னாலே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களெல்லாம் உன்னைப் பரமவிராச்சியத்துக்குக் கொண்டாட்டமாய்க் கூட்டிக்கொண்டுப்போக எதிரே வருவார்கள் என்று சொல்லி மறைந்துபோனார். ஜெர்த்துருத்தம்மாளோவென்றால் தாம் கண்டதும் கேட்டதும் கிட்ட நின்ற மற்ற கன்னியாஸ்திரிகளுக்கு வெளிப்படுத்தி ஆனந்த சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து பாக்கியமாய் மரித்தாள்.
கிறிஸ்துவர்களே! உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவியாக என்னத்தைச் செய்திருப்பீர்களோ அதற்கு நூறுபங்கு அதிகமாய் சுவாமி உங்களுக்கு தருவாரென்று அறிந்து, அச்சம் பயமின்றி உங்களுடைய புண்ணிய
தருமமெல்லாம் அந்த ஆத்துமாக்களுககு ஒப்புக்கொடுக்கக் கடவீர்களாக .
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் செய்யத்தகும் உச்சிதமான நேர்ச்சிக் காணிக்கையை காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணத்தக்கதாக மேற்சொன்ன வழிகள் யாவும் நல்ல வழிகளென்று சொல்லவேணுமல்லாமல் மற்றபடியல்ல. ஆனால் அந்த வழிகளெல்லாம் இப்போது காண்பிக்கப்போகிற நேர்ச்சிக் காணிக்கையில் அடங்கியிருக்கிறபடியினாலே, அந்த நேர்ச்சிக் காணிக்கையானது உச்சிதமும், உன்னதமும், மேன்மையுமுள்ளதென்று கூறக்கடவோம். அந்த நேர்ச்சிக் காணிக்கை ஏதென்றும், எப்படிச் செய்யலாமென்றும், அதனாலே வருகிற ஞான நன்மைகள் எவ்வளவென்றும் இப்போது பார்ப்போம்.
முன் விவரித்தவண்ணமே, அந்தந்த புண்ணியத்துக்கும், அந்தந்த நற்கிரியைக்கும், பேறுபலன் , மன்றாட்டுப் பலன் , பரிகாரப் பலன் ஆகிய இம்மூன்று பலனுண்டு. மீண்டும் திவ்விய பூசையானது தேவ வணக்கத்துக்கும், நன்றியறிந்த தோத்திரத்துக்கும், வேண்டிய வரங்களைப் பெறுதலுக்கும் உதவுகிறதுமல்லாமல் பாவப் பரிகாரத்துக்கும் உதவுவது நிச்சயம் தான் . அந்தப் புண்ணியங்களினாலும் , அந்தந்த நற்கிருத்திரியங்களினாலும் , திவ்விய பூசைகளினாலும் நமக்குச் சொந்தமாய் வருகிற அந்தப் பரிகார பலனை முழுமையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நேர்ச்சிக் கடனாக காணிக்கை வைக்கிறதே மேற்சொன்ன உசித காணிக்கையாகும் .
மீளவும் நாம் மரித்தபின் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கும் நம்முடைய ஆத்துமத்துக்காக என்னஜெபம் தானதர்மம் செய்வார்களோ, எத்தனை பூசை பண்ணுவிப்பார்களோ, அவைகளினால் நம்முடைய ஆத்துமத்துக்கு வரப்போகிற பரிகாரப்பலனையெல்லாம் முன்னமே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கிறதேயாம். அந்த நேர்ச்சிக் காணிக்கை அதிகமதிகமாய் உதவும்படியாகவும், உத்தரிக்கிறஸ்தலத்துக்கு இராக்கினியான தேவமாதாவின் கையிலே எல்லாவற்றையும் ஒப்பித்து வைக்க வேணும்.
அப்படியே, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக நம்முடைய புண்ணியங்களினாலும் நற்கிரியைகளினாலும் நமக்கு வருகிற பரிகாரப் பலனையும், இனிமேல் நமக்காகச்செய்யப்படும் நற்கிருத்தியங்களாலும் திவ்விய பூசைகளாலும் நமக்கு வரப்போகிற பரிகாரப் பலனையும் சேர்த்து தேவமாதாவின் கையிலே நேர்ந்து ஒப்புக்கொடுக்கிறதே இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையாம்.
இந்த நேர்ச்சி காணிக்கை வாயினாலேயானாலும் மனதிலென்கிலும் செய்யத்தகும். அதை அடிக்கடி புதுப்பிக்கிறது நல்லதாயினும், அவசரமில்லை. அதனால் அற்பப்பாவத்துக்காவது சாவான பாவத்துக்காவது ஏதுவான ஒரு கடமையுமில்லை. அதை செய்தபிற்பாடு மனசில்லாதே போனால் விட்டுவிடலாம்; அப்படி விட்டுவிட்டால் அதனால் வருகிற ஞானப் பிரயோசனத்தை இழந்துபோகிற தல்லாது யாதொரு பாவம் இராது.
இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையை அர்ச். பாப்பானவர் அங்கீகரித்ததுமன்றியே, அதைப் பக்தியுள்ள எல்லோரையும் செய்ய ஏவிக்கொண்டும், செய்தவர்களுக்குத் திருச்சபையின் பொக்கிஷங்களைத் திறந்து ஏராளமான ஞான நன்மைப் பலன்களை அளித்துக் கொண்டும் வருகிறார். ஆனதினாலே திருச்சபையிலே எங்கும் எண்ணிக்கையில்லாத குருக்களும் சந்நியாசிகளும் கன்னியாஸ்திரிகளும் ஸ்திரி பூமான்களான கிறிஸ்துவர் களும் இந்தச் சுகிர்த நேர்ச்சிக் காணிக்கையைச் செய்கிறார்கள். இந்த சிந்து தேசத்திலே முதலாய் அநேகம் பேர்கள் அப்படி நேர்ந்துக் கொண்டார்களென்று அறிந்திருக்கிறோம்.
கிறிஸ்துவர்களே! நீங்களும் அப்படிச் செய்வீர்களேயானால் சர்வேசுரனுக்கு தோத்திரமும், தேவமாதாவுக்கு எவ்வளவு சந்தோஷமும், ஆத்துமாக்களுக்கு எவ்வளவு ஆறுதலும், உங்களுக்கு எவ்வளவு பிரயோசனமும் வருமென்பது சொல்லிலும் நினைவிலும் அடங்குந்தன்மை அல்ல. அதனாலே உங்களுக்கு யாதொரு குறை உண்டாகுமென்றும், நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும்போது உங்களுடைய பரிகாரப் பலனெல்லாம் முன்னமே கையளித்துவிட்டதைப் பற்றி உதவி சகாயமின்றி அதிக வருத்தப்பட வேண்டியதாய் இருக்குமென்றும் நினைக்க வேண்டாம்.
இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையை மேலான தேவசிநேகத்தினாலும் மேலான பிறசிநேகத்தினாலும் செய்கிறீர்கள் என்கிறதினாலே, சர்வேசுரனுடைய சந்நிதியிலே உங்களுக்கு அதிக பேறுபலனும் அதிக பரிகாரப் பலனும் உண்டாகுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. அதனாலே நீங்கள் உத்தரிக்க வேண்டிய வேதனைகள் சீக்கிரத்தில் முடிவதுமல்லாமல், மோட்ச பேரின்பத்தில் உங்களுக்கு அதிக மகிமையும், அதிக வெகுமதியம் கிடைக்கும். அர்ச் அமிர்தநாதர் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு நாம் கொடுக்கிறதெல்லாம் நமக்கு இவ்வுலகத்தில் தேவ வரங்களைப் பெறுவிக்குமென்றும் நாம் இறந்த பிற்பாடு அது ஒன்றுக்கு நூறாகக் கொடுக்கப் படுமென்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையைச் செய்யத்தகும் வகையாவது:
ஏக திரித்துவமான சர்வேசுரா !
உமக்கு அதிக தோத்திரத்தைச் செலுத்தவும், எங்கள் இரட்சகரான கேசுகிறீஸ்துநாதரை கண்டுபாவிக்கவும், தேவமாதாவுக்குப் பிரியப்படவும், நான் மனம் பொருந்தி உத்தரிக்கற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயமாக இப்போது எனக்குச் சொந்தமான பரிகாரப் பலன்யாவற்றையும், இனி எனக்கு வரத்தகும் பரிகாரப் பலன் எல்லாவற்றையும், என் மரணத்துக்குப்பின் எனக்காகச் செய்யப்படும் புண்ணிய தர்மங்களினாலும், திவ்விய பூசையினாலும் வரும் பரிகாரப்பலன் சகலத்தையும், தேவ மாதாவின் கையிலே வைத்துத் தேவரீருக்கு முழுமையும் கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன்.
ஆண்டவரான சர்வேசுரா! இந்த என்னுடைய நேர்ச்சிக்காணிக்கையை என் ஆத்துமத்துக்குப் பிரயோசனமாகக் கிருபையாய் ஏற்றுக் கொள்ள வேணுமென்று பிரார்த்தித்துக்கொள்ளுகிறேன்.
விவரம் :1-வது: நாம் சொன்னாற்போல இந்த நேர்ச்சிக் காணிக்கைக்கு யாதோர் கடனில்லை; அதைச் செலுத்தினால் புண்ணியமும் பலனும் சம்பாவனையுமாயிருக்கும். அதை செய்தபிற்பாடு நிறுத்தி விட்டாலும், அந்தப் புண்ணியப்பலன் இல்லாமற் போவதேயன்றிப் பாவமில்லை.
2-வது அப்படிப்பட்ட சுகிர்த நேர்ச்சிக் காணிக்கையைச் செய்திருந்தாலும், செய்யக்கடமைப்பட்டிருக்கிற கடன் முகாந்தரமாகவாவது நியாயத்துக்கென்கிலும் யாதொரு ஜெபங்களுக்கும் தர்மங்களுக்கும் விக்கினமாயிராது. அதாவது நம்முடையவர்களின்ஆத்துமங்களுக்கும், சிநேகிதர் உபகாரிகள் சபையார் முதலியவர்களுடைய ஆத்துமங்களுக்கும் நாம் விசேஷமாய் வேண்டிக்கொள்ள வேணுமென்று நமக்குக் கடனிருக்கிறபடியினாலே, நாம் முன்னே சொன்ன வண்ணமே நேர்ந்துவிட்ட நமது பரிகாரப் பலன் அவர்களுக்குத் தானே முதலில் உதவுமென்கிறது நிச்சயம்.
இப்பேர்ப்பட்ட உச்சித நேர்ச்சிக் காணிக்கையைச் செய்பவர்களுக்கு அர்ச் பாப்பானவர் அளித்த விசேஷபலன்:
முதலாவது: இந்த நேர்ச்சிக் காணிக்கையைச் செய்யுங் குருக்கள் அவர்கள் தினந்தினம் செய்யும் திவ்விய பூசையிலே பரிபூரண பலன் அடைவார்கள்.
இரண்டாவது : மற்ற விசுவாசிகள் திவ்விய நற்கருணை வாங்குகிறபோதெல்லாம் பரிபூரண பலனை அடைவதுமன்றியே, திங்கட்கிழமைதோறும் சாவான பாவமில்லாத ஆத்துமத்தோடு ஆத்துமாக்களைக் குறித்துத் திவ்விய பூசை காண்கிறபோதெல்லாம் பரிபூரணபலனை அடைவார்கள். இந்தப் பலன்களை அடைய, யாதொரு கோவிலைச் சந்தித்து, அர்ச். பாப்பானவருடைய சுகிர்த கருத்துகள் நிறைவேற வேண்டிக்கொள்ளவேண்டியதுமல்லாமல், அந்தப் பலன்களை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டியது.
மூன்றாவது: தாங்கள் அடையக்கூடுமான மற்றச் சகலமான பலன்களையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கலாம்.
நான்காவது : வியாதியினாலேயாவது, கோவிலில்லாத இடங்களில் செய்யவேண்டிய வேலையினிமித்தமாவது, வேறே விக்கினத்தினாலேயாவது திங்கட்கிழமை பூசைக்கு வரக்கூடாதவர்கள், ஞாயிற்றுக்கிழமைப் பூசைக் கண்டு மேற்சொன்ன பலன்களை அடையலாமென்று அறியக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
எங்கள் அடைக்கலமும் ஆரோக்கியமுமாயிருக்கிற சேசுநாதரே! தேவரீர் எங்களுக்காகப் பூங்காவனத்திலே தரையில் ஒடும்வரை சர்வாங்கமாய் இரத்தவேர்வை வேர்த்து மகா கோபதாபம் அநுபவித்தீரே. இந்த உம்முடைய விலைமதிப்பற்ற இரத்தத்தைப் பார்த்து, மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தெட்டாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
மேற்சொன்ன நேர்ச்சிக் காணிக்கையை மனதிருந்தால் செய்கிறது; அல்லது ஆத்துமாக்களைக் குறித்து 10
பரமண்டல மந்திரமும் 10 பிரிய தத்த மந்திரமும் வேண்டிக்கொள்ளுகிறது.
புதுமை
கர்த்துசியான் சபையில் உட்பட்டிருந்த தியோனிசியுஸ் என்கிறவர் எழுதின சுகிர்த சரித்திரமாவது அக்காலத்திலே புண்ணியம் நிறைந்த ஜெர்த்துருத் என்னப்பட்ட ஒரு கன்னியாஸ்திரி வாழ்ந்து வந்தாள். அவள் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் மிகவும் பக்தியாயிருந்தபடியினாலே அந்த ஆத்துமாக்களுக்கு உதவியாகத் தாம் செய்த ஜெபதப தான தர்மம் எல்லாவற்றையும் சேசு கிறிஸ்துநாதருடைய கையிலே அவர்களுக்கு ஒப்புக் கொடுப்பாள். அதனாலே சேசுகிறீஸ்துநாதர் சுவாமி இன்னின்ன ஆத்துமங்களுக்காக விசேஷமாய்ப் பிரயாசைப் படவேணுமென்று அவளுக்குப் புதுமையாய் அறிவித்துக் கொண்டு வருவார். அப்போது அந்தப் பக்தியுள்ள கன்னிகை அதிக ஜெபமும் அதிக தவமும் பண்ணுவாள்.
ஆத்துமாக்களோவென்றால் அவளுக்கு அநேகமுறை காணப்பட்டு தங்களுக்காகப் பட்ட பிரயாசைகளுக்கு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ணுவார்கள். அப்படி அவள் எந்நாளும் செய்து கொண்டு வந்தாள். கடைசியாய், வயது சென்று அவளே வியாதியாய் விழுந்து அவஸ்தையானாள். அச்சமயத்திலே துர்மனப்பசாசு அவளுக்குக் காண்பித்து, அவளைப்பார்த்து சிரித்து நகைத்து இப்போது உனக்கு உத்தரிக்கிற ஸ்தலத்திலே சரியான வேதனை வரப்போகுது. நீ செய்த புண்ணிய தர்மமெல்லாம் மற்ற ஆத்துமாக்களுக்கு கையளித்து விட்டுவிட்டதினால், நீ வெறுமனே சாகப்போகிறாய். நீ செய்த எல்லாக் குற்றங்களுக்கும் யாதோர் உதவியின்றி உபாதிக்கப்படுவாய் என்றது.
இந்தப் புண்ணியவதி அச்சோதனையால் களைத்து மயங்கி ஐயையோ எனக்கென்ன வருமோ? மற்றவர்களுக்கு என்னுடைய நற்கிரியைப் பலன்களெல்லாம் கையளித்த பிற்பாடு எனக்கு ஒன்றுமில்லையே. ஐயையோ எனக்கு வரப்போகிற உத்தரிப்பில் எந்த ஒரு ஆறுதலில்லாவிட்டால் எப்படி அதைப் பொறுத்துக்கொள்வேன்? என்னாண்டவரே! அப்படி ஆகுமோ? என்று அங்கலாய்த்துச் சொன்னாள். அகடினமே சேசு கிறிஸ்துநாதர் சுவாமி கிருபையுள்ள முகத்தோடு அவளுக்குத் தோன்றி துஷ்டப்பசாசைத் துரத்தி அவளுடைய களைப்பைத் தீர்த்து அவளுக்கு ச் சொன்னதாவது ஜெர்த்துருத்தென்பவளே! நீ துக்கப் படுகிறதற்கு காரணம் என்ன என்றார்.
அதற்கவள் ஆண்டவரே, உமக்கு தெரியாத காரியமோ? நான் செய்த புண்ணிய தருமமெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கையளித்து விட்டேனே. இப்போது என் கையில் ஒன்றுமில்லாமல் சாகப்போகிறேனே என்றாள். அதற்கு ஆண்டவரான சுவாமி சிரித்த முகத்தோடு என் மகளான ஜெர்த்துருத் தென்பவளே, ஏன் துக்கப்படுகிறாய்? நீ ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியானது எனக்கு வெகு பிரியமாய் இருக்கிறபடியினாலே உன் குற்றங்களுக்கு வரத்தகுமான வேதனையெல்லாவற்றையும் இக்கணமே மன்னித்துக் கொள்ளுகிறோம்.
நம்மைக் குறித்துத் தர்மம் செய்கிறவர்களுக்கு ஒன்றுக்கு நூறாக கொடுப்போமென்று நாம் வாக்களித்திருக்கிறோமென்கிறதினாலே, அம்மாத்திரத்துக்கு மோட்சத்தில் உன் வெகுமதி பெருகும். உன்னாலே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களெல்லாம் உன்னைப் பரமவிராச்சியத்துக்குக் கொண்டாட்டமாய்க் கூட்டிக்கொண்டுப்போக எதிரே வருவார்கள் என்று சொல்லி மறைந்துபோனார். ஜெர்த்துருத்தம்மாளோவென்றால் தாம் கண்டதும் கேட்டதும் கிட்ட நின்ற மற்ற கன்னியாஸ்திரிகளுக்கு வெளிப்படுத்தி ஆனந்த சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து பாக்கியமாய் மரித்தாள்.
கிறிஸ்துவர்களே! உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவியாக என்னத்தைச் செய்திருப்பீர்களோ அதற்கு நூறுபங்கு அதிகமாய் சுவாமி உங்களுக்கு தருவாரென்று அறிந்து, அச்சம் பயமின்றி உங்களுடைய புண்ணிய
தருமமெல்லாம் அந்த ஆத்துமாக்களுககு ஒப்புக்கொடுக்கக் கடவீர்களாக .
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இருபத்து ஒன்பதாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்க வேண்டிய விசேச பக்தியைப் பரவச் செய்ய வேணுமென்று காண்பிக்கிற வகையாவது
தியானம்
இந்நாள் மட்டும் தியானங்களினால் கேட்ட புதுமைகளினாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் , உங்களுக்கு அதிக பக்தியும் இரக்கமும் வந்திருப்பதுமல்லாமல் அந்த ஆத்துமாக்களுக்கு உங்களால் இயன்ற மட்டும் உதவிசகாயம் பண்ண உறுதியான பிரதிக்கினை பண்ணியிருப்பீர்கள் என்கிறதற்குச் சந்தேகமில்லை .ஆயினும் நீங்கள் மாத்திரமே அந்த ஆத்துமாக்களின் பேரில் பக்தியாய் இருந்து அவர்களுக்காக பிரயாசைப்படுவது போதுமென்றெண்ணாமல், மற்றவர்களிடத்திலும் இந்த சுகிர்த பக்தி உண்டாகும்படிக்கு தக்க வழி உபாயமெல்லாம் தேடவேண்டியதுதானே. அப்படி உங்களாலே ஏவப்பட்ட மற்றவர்கள் செய்கிற நன்மை யாவும் உங்களுக்கு சொந்தம்போலிருக்குமென்கிறதினாலே அதற்குத் தக்க பலனை அடைவீர்களென்பது தப்பாது.
பக்தியானது நெருப்புக்குச் சமானமென்பார்கள். நெருப்பானது ஒரு க்ஷணத்திலே நிலைக்கொள்ளாமல் தானாய் எரிவதுமன்றியே, தன்னருகே இருக்கிற வஸ்துவிலும் பற்றி தன்னைப்போல் அதையும் நெருப்பாக்கி, காய்ந்ததை எரித்து ஈரத்தை உலர்த்திப் பற்றுவிக்குமல்லவோ? உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியும் அப்படித்தான் இருக்கவேண்டியது. இந்தப் பக்தியுள்ளவன் ஒரு க்ஷணமும் சும்மாயிராமல், சகல மனுஷரிடத்திலும் அந்தப் பக்தி எரியவேணுமென்று விரும்பி, அதற்காக ஆண்டவரை ஓயாமல் மன்றாடுவான்.
அதற்கேற்ற வழிகளை ஆசையோடு தேடுவான், தக்க சமயங்களிலே வேண்டிய புத்திமதிகளைச் சொல்வான், அந்தப் பக்தியினாலே வருகிற எவ்வகைப் பிரயோசனங்களையும் வெளிப்படுத்துவான், அந்த பக்தியை விவரித்துக் காட்டும் புஸ்தகங்களை வாசிக்கப்பண்ணுவான். வியர்த்தமாய்ப் புகைகிற நெருப்பு எதற்கு உதவும்? அது மெய்யான நெருப்பாகுமோ? நெருப்புக்கு நல்ல அனலைக் கொடுத்தால் நானாவித காரியத்துக்கும் உதவுகிறதுமல்லாமல் இரும்பு முதலான உலோகங்களை உருகப் பண்ணும். அப்படிப்போல பிறரிடத்தில் தாவாமல் தன்னிடத்திலேயே நின்றுவிடும் பக்தியை, அர்ச். கிறகோரியார் சொல்லியதுபோல, வீண் பக்தியென்றும், உதவாத பக்தியென்றும் கூற வேணும் ஆனதால் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் மெய்யான பக்தியுள்ளவன் அதைப் பரவச்செய்ய எப்போதும் விரும்புவான்.
அர்ச் அகுஸ்தீன், அர்ச் கிறிசோஸ்தோம், அர்ச். அமிர்தநாதர், அர்ச் கிறகோரியார், அர்ச். பெர்நார்துஸ், அர்ச் பிராஞ்சீஸ்கு சலேஸியார், அர்ச். லிகோரியார், அர்ச். லேயோநார்துாஸ் முதலான பெரிய அர்ச்சியசிஷ்டவர்கள் இந்தச் சுகிர்த பக்தியைப் பிறரிடத்தில் பற்றுவிக்கத் தாங்களெழுதின புஸ்தகங்களினாலே வெகு பிரயாசைப்பட்டார்களென்கிறது சரியே. அர்ச். லுயீத்கார்தம்மாள், அர்ச் ஜெர்த்துருத்தம்மாள், அர்ச். தெரேஸ்ம்மாள், அர்ச். பாஸி மரிமதலேனம்மாள், அர்ச். ஜெனுவா கத்தரீனம்மாள். முத்திப்பேறு பெற்ற மரிய மார்கரீத்தம்மாள் முதலான பேர் பெற்ற கன்னியாஸ்திரிகள் பெண்மணிகளாயிருந்தாலும் மேற்சொன்ன பக்தியை மேன்மைப்படுத்தி எங்கும் பரவும்படியாய் முயற்சி பண்ணினார்களாம்.
மீண்டும் சத்திய திருச்சபைக்குத் தலைவர்களான அர்ச் பாப்புமார்கள் அந்த உத்தமமான முறைமை மென்மேலும் வழங்கும்படிக்குத் தங்களுடைய நிருபங்களினால் அடிக்கடி சகலமான கிரிஸ்துவர்களை ஏவினதுமல்லாமல், அதற்கு அநேக ஞான நன்மைகளையும் பலன்களையும் தந்தருளினார்கள். அதல்லாமலும் தெய்வீக சாஸ்திரிகளான ஜேர்சோனியுசென்கிறவரும், சுவாரேசியூசென்கிறவரும் இன்னும் சில சாஸ்திரிகளும், பக்தியுள்ள குருக்களும், தாங்களெழுதின புஸ்தகங்களினாலென்கிலும் செய்த பிரசங்கங்களினாலேயானாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியானது பலனுள்ளதென்றும், பிரயோசனமுள்ளதென்றும் ஒப்பித்ததுந்தவிர, அதை எவரும் ஆசையோடு அனுசரிக்கவேணுமென்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். அந்நாள் முதலாய் இந்தச்சுகிர்த பக்தியைக் குறித்து எழுதின புஸ்தகங்கள் எத்தனையென்றும், அதற்காக ஸ்தாபித்த விசேஷ சபைகள் எத்தனையென்றும், அதைப் பரவச்செய்ய விரும்புகிறவர்கள் எத்தனையென்றும் சொல்லத்தகும் தன்மையல்ல.
கிறிஸ்துவர்களே ! உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்கவேண்டிய இந்த விசேஷ பக்தியானது பரவத்தக்கதாக எதையாகிலும் செய்தீர்களோ இல்லையோவென்று பாருங்கள் . இப்போது என்னத்தைச் செய்து கொண்டு வருவீர்கள் ? இனிமேல் என்னத்தைச் செய்ய வேணுமென்று நன்றாய் யோசித்துத் தீர்மானம் பண்ண வேண்டும் . இந்த சுகிர்த பக்தியானது மேன்மேலும் இந்த தமிழ் இராச்சியங்களிலே அதிகமதிகமாய் பரவ உங்களுடைய ஜெபத்தினாலும் உங்களுடைய நடத்தையினாலும் உங்களுடைய பிரயாசத்தினாலும் விரும்புவீர்களேயானால் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் உங்களுக்குப் பிரயோசனமும் வெகுமதியும் கிடைக்கும் என்கிறதற்குச் சந்தேகமில்லை .
இப்போது சொல்லப்போகிற ஐந்து காரியங்களையும் விசேசமாய் அனுசரிக்க வேண்டியது
1-வது : உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாகத் திருச்சபையிலே வழங்கிவருகிற மோட்சவிளக்கு, ஆத்துமாக்களுக்காகப் பிச்சை தர்மம், மரித்தவர்களுக்காகப் பூசைகள், கோவில் வேண்டுதல் முதலான சுகிர்த முறைமைகளை நல்லதென்று விசுவசித்து அங்கீகரிக்கிறது.மல்லாமல், அவைகளை விரோதிக்கிறவர்களைத் தடுத்து மறுக்கவேணும்.
2-வது: உத்தரிக்கிற ஆத்துமாக்களின் திருவிழாவையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்கமாதத்தையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குத் திருச்சபையில் ஒப்புக் கொடுக்கிப்பட்ட வருஷாந்திர ஐம்பத்திரண்டு திங்கட்கிழமைகளையும் அநுசரிப்பதுமன்றியே தினந்தோறும் கூடியமட்டும் சில ஜெபங்களைப் பண்ணவும், கொஞ்சம் தர்மம் செய்யவும் பிரியப்படக்கடவீர்கள்.
3 -வது : உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து அடிக்கடி உரையாட வேண்டியதுமல்லாமல், இந்தக் சுகிர்த பக்தி பரவும்படி சின்ன சவேரியார் என்று பேர்பெற்ற ரொஸ்சி அடிகளார் செய்த ஐம்பத்திரண்டு திங்கட்கிழமைப் பிரசங்கப் புஸ்தகத்தையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்கமாதமென்னும் இந்த புஸ்தகத்தையும், இவை போன்ற மற்ற சுகிர்த புஸ்தகங்களையும் வாசிக்கப்பண்ண வேணும்.
4 -வது :உங்களுடைய உறவின் முறையாரும், சிநேகிதரும், அறிமுகமானவர்களும் தங்களைச்சேர்ந்த ஆத்துமாக்களுக்காக உதவிசகாயம் செய்தார்களோ இல்லையோவென்று அவர்களை விசாரிக்கவேணும்
5-வது : போன தியானத்தில் வெளிப்படுத்தப்பட்ட உச்சித நேர்ச்சிக் காணிக்கையைச் செய்யும்படிக்குப் பக்தியுள்ளவர்களைத் தூண்டிவிடவேண்டும்.
கிறிஸ்துவர்களே! நல்ல கிறிஸ்துவன் எவனோ அவன் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாய் இருப்பானென்றும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவன் எவனோ, அவன் இந்தச் சுகிர்த பக்தி எங்கும் பரவும்படியாய்ப் பிரயாசைப்படுவானென்றும் இந்த தியானத்தினால் நீங்கள் அறிந்திருப்பீர்களென்பது நிச்சயம். ஆகையால் நீங்களும் அப்படியே செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
எங்கள் இருதயத்துக்கு ஆனந்தமான இயேசுவே ! மோட்சவாசிகள் காண விரும்புகிற உமது திருமுகம் துஷ்டரால் மூடிமறைக்கப்படவும், உமிழ்நீரால் அசுத்தப்படவும், கையால் அடிக்கப்படவும் திருவுளமானிரே, இப்படிப்பட்ட மனோவாக்குக்கெட்டாத வேதனை அநுபவித்த உம்முடைய திரு முகத்தைப் பார்த்து மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தொன்பதாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
இன்று அல்லது அடுத்த சனிக்கிழமை நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணுகிறது.
புதுமை
ஒரு சிங்காரத் தோப்பில் நல்ல புஷ்பமும் காய்கனியும் இருக்கிறாற்போல, சத்திய திருச்சபையில் எவ்வித புண்ணியங்களும் தர்மங்களும் உண்டாயிருக்கிறதென்பது சரியே. இராஜாக்கள் தரிக்கிற தங்கக் கிரீடத்தில் வயிரக்கற்களும், முத்துரத்தினங்களும் பிரகாசிப்பதுபோல, சேசுநாதருடைய கிரீடமான திருச்சபையில் பல சபைகள் துலங்குகின்றன. வியாதியஸ்தரை மகா பட்ச கவனத்தோடு விசாரிக்கும் பல சபைகளும் உண்டு. தாய் தகப்பனில்லாத பிள்ளைகளைச் சேர்த்து காப்பாற்றி வளர்க்கும் பல சபைகளுமுண்டு. தள்ளாத முதியோரை சலியாத பொறுமையோடும் தளராத அன்போடும் பராமரிக்கும் பல சபைகளுமுண்டு. புறமதத்தாருக்குள்ளேயும் துலுக்கருக்குள்ளேயும் சிறைப்பட்ட கிறிஸ்துவர்களை மீட்டிரட்சிக்கும் பல சபைகளுமிருந்தது. உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ண வேணுமென்று எல்லாச் சபைகளிலும் ஒரு பொதுப் பிரமானக்கட்டளை இருந்ததே தவிர, மற்றப்படி இந்தச் சுகிர்த கருத்துக்காக முன் காலங்களிலே யாதொரு விசேஷ சபையும் ஸ்தாபித்திருக்கக்காணோம்.
ஆனால் ஏறக்குறைய சில வருஷங்களுக்கு முந்திப் பிரான்சு இராஜதானிப் பட்டணமான பாரிஸ் மாநகரில் சர்வேசுரனுடைய விசேஷ ஏவலினாலே உதவிச் சபையெனப்பட்ட ஒரு கன்னியாஸ்திரிகளுடைய சபை ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சபையிலே சேர்ந்த பக்தியுள்ள கன்னியாதிரிகள் தாங்கள் ஜெபிக்கும் ஜெபமும், நடத்தும் தவமும், அநுபவிக்கும் வருத்தமும், செய்யும் நற்கிரியை யுமெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக முழுதும் ஒப்புக்கொடுக்கிறார்கள்.
இவர்கள், மற்றக் கன்னியாஸ்திரிகளைப் போல, தரித்திரம், கீழ்ப்படிதல், விரத்தத்துவம் ஆகிய இம்மூன்று பெரிய வார்த்தைப்பாடுகளைக் கொடுக்கிறதுமல்லாமல், நாலாம் வார்த்தைப்பாடாக, தங்களுடைய ஜெய தப தான தர்மத்தினாலே தங்களுக்கு இவ்வுலகத்தில் வரக்கூடிய பரிகாரப்பலனெல்லாவற்றையும், இறந்தபின் தங்களுக்காக நடத்தப்படும் ஜெபதப தருமங்கள், திவ்விய பூசைகளினால் தங்களுக்கு வரக்கூடிய பரிகாரப்பலன் யாவற்றையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நேர்ந்து ஒப்புக்கொடுக்கிறார்கள். மேலும், இந்தப் பக்தியுள்ள கன்னியாஸ்திரிகள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக அநேக விசேஷ ஜெபங்களைப் பண்ணுகிறதும் தவிர, சில நல்ல தர்மக்கிரியைகளையும் நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் தினந்தினம் இரவும் பகலும் அந்த ஆத்துமாக்களின்பேரில் தங்களுடைய அன்பு நேசம் பக்தி இரக்கமெல்லாம் வைத்திருக்கிறதினாலே இடையின்றி. ஒய்வின்றி, சலிப்பின்றி இவர்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாக வேண்டிய வழி உபாயமெல்லாம் தேடிக் கொண்டு வருவார்களாம். இதுவுமல்லாமல் ஸ்திரி பூமான்களான பக்தியுள்ள மற்ற கிறிஸ்துவர்களைத் தங்களுடன் சேர்ப்பித்து அவரவர்கள் தங்களுடைய அந்தஸ்துக்குத் தக்கது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவும்படிக்குச் செய்வார்கள்.
இந்தச் சுகிர்த சபையை அநேக மேற்றிராணிமார்கள் அங்கீகரித்ததுமன்றியே அப்போது திருச்சபையை மகிமையாய் ஆண்டுவந்த 9-ம் பத்திநாதர் என்னும் அர்ச் பாப்பானவர் இந்தச்சபைக்கு ஒரு விசேஷ ஆசீர்வாதத்தைத் தந்தருள சித்தமானார்.
கிறிஸ்துவர்களே ! இதெல்லாவற்றையும் கேட்ட நீங்களும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் விசேஷ பக்தி வைக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்க வேண்டிய விசேச பக்தியைப் பரவச் செய்ய வேணுமென்று காண்பிக்கிற வகையாவது
தியானம்
இந்நாள் மட்டும் தியானங்களினால் கேட்ட புதுமைகளினாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் , உங்களுக்கு அதிக பக்தியும் இரக்கமும் வந்திருப்பதுமல்லாமல் அந்த ஆத்துமாக்களுக்கு உங்களால் இயன்ற மட்டும் உதவிசகாயம் பண்ண உறுதியான பிரதிக்கினை பண்ணியிருப்பீர்கள் என்கிறதற்குச் சந்தேகமில்லை .ஆயினும் நீங்கள் மாத்திரமே அந்த ஆத்துமாக்களின் பேரில் பக்தியாய் இருந்து அவர்களுக்காக பிரயாசைப்படுவது போதுமென்றெண்ணாமல், மற்றவர்களிடத்திலும் இந்த சுகிர்த பக்தி உண்டாகும்படிக்கு தக்க வழி உபாயமெல்லாம் தேடவேண்டியதுதானே. அப்படி உங்களாலே ஏவப்பட்ட மற்றவர்கள் செய்கிற நன்மை யாவும் உங்களுக்கு சொந்தம்போலிருக்குமென்கிறதினாலே அதற்குத் தக்க பலனை அடைவீர்களென்பது தப்பாது.
பக்தியானது நெருப்புக்குச் சமானமென்பார்கள். நெருப்பானது ஒரு க்ஷணத்திலே நிலைக்கொள்ளாமல் தானாய் எரிவதுமன்றியே, தன்னருகே இருக்கிற வஸ்துவிலும் பற்றி தன்னைப்போல் அதையும் நெருப்பாக்கி, காய்ந்ததை எரித்து ஈரத்தை உலர்த்திப் பற்றுவிக்குமல்லவோ? உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியும் அப்படித்தான் இருக்கவேண்டியது. இந்தப் பக்தியுள்ளவன் ஒரு க்ஷணமும் சும்மாயிராமல், சகல மனுஷரிடத்திலும் அந்தப் பக்தி எரியவேணுமென்று விரும்பி, அதற்காக ஆண்டவரை ஓயாமல் மன்றாடுவான்.
அதற்கேற்ற வழிகளை ஆசையோடு தேடுவான், தக்க சமயங்களிலே வேண்டிய புத்திமதிகளைச் சொல்வான், அந்தப் பக்தியினாலே வருகிற எவ்வகைப் பிரயோசனங்களையும் வெளிப்படுத்துவான், அந்த பக்தியை விவரித்துக் காட்டும் புஸ்தகங்களை வாசிக்கப்பண்ணுவான். வியர்த்தமாய்ப் புகைகிற நெருப்பு எதற்கு உதவும்? அது மெய்யான நெருப்பாகுமோ? நெருப்புக்கு நல்ல அனலைக் கொடுத்தால் நானாவித காரியத்துக்கும் உதவுகிறதுமல்லாமல் இரும்பு முதலான உலோகங்களை உருகப் பண்ணும். அப்படிப்போல பிறரிடத்தில் தாவாமல் தன்னிடத்திலேயே நின்றுவிடும் பக்தியை, அர்ச். கிறகோரியார் சொல்லியதுபோல, வீண் பக்தியென்றும், உதவாத பக்தியென்றும் கூற வேணும் ஆனதால் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் மெய்யான பக்தியுள்ளவன் அதைப் பரவச்செய்ய எப்போதும் விரும்புவான்.
அர்ச் அகுஸ்தீன், அர்ச் கிறிசோஸ்தோம், அர்ச். அமிர்தநாதர், அர்ச் கிறகோரியார், அர்ச். பெர்நார்துஸ், அர்ச் பிராஞ்சீஸ்கு சலேஸியார், அர்ச். லிகோரியார், அர்ச். லேயோநார்துாஸ் முதலான பெரிய அர்ச்சியசிஷ்டவர்கள் இந்தச் சுகிர்த பக்தியைப் பிறரிடத்தில் பற்றுவிக்கத் தாங்களெழுதின புஸ்தகங்களினாலே வெகு பிரயாசைப்பட்டார்களென்கிறது சரியே. அர்ச். லுயீத்கார்தம்மாள், அர்ச் ஜெர்த்துருத்தம்மாள், அர்ச். தெரேஸ்ம்மாள், அர்ச். பாஸி மரிமதலேனம்மாள், அர்ச். ஜெனுவா கத்தரீனம்மாள். முத்திப்பேறு பெற்ற மரிய மார்கரீத்தம்மாள் முதலான பேர் பெற்ற கன்னியாஸ்திரிகள் பெண்மணிகளாயிருந்தாலும் மேற்சொன்ன பக்தியை மேன்மைப்படுத்தி எங்கும் பரவும்படியாய் முயற்சி பண்ணினார்களாம்.
மீண்டும் சத்திய திருச்சபைக்குத் தலைவர்களான அர்ச் பாப்புமார்கள் அந்த உத்தமமான முறைமை மென்மேலும் வழங்கும்படிக்குத் தங்களுடைய நிருபங்களினால் அடிக்கடி சகலமான கிரிஸ்துவர்களை ஏவினதுமல்லாமல், அதற்கு அநேக ஞான நன்மைகளையும் பலன்களையும் தந்தருளினார்கள். அதல்லாமலும் தெய்வீக சாஸ்திரிகளான ஜேர்சோனியுசென்கிறவரும், சுவாரேசியூசென்கிறவரும் இன்னும் சில சாஸ்திரிகளும், பக்தியுள்ள குருக்களும், தாங்களெழுதின புஸ்தகங்களினாலென்கிலும் செய்த பிரசங்கங்களினாலேயானாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியானது பலனுள்ளதென்றும், பிரயோசனமுள்ளதென்றும் ஒப்பித்ததுந்தவிர, அதை எவரும் ஆசையோடு அனுசரிக்கவேணுமென்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். அந்நாள் முதலாய் இந்தச்சுகிர்த பக்தியைக் குறித்து எழுதின புஸ்தகங்கள் எத்தனையென்றும், அதற்காக ஸ்தாபித்த விசேஷ சபைகள் எத்தனையென்றும், அதைப் பரவச்செய்ய விரும்புகிறவர்கள் எத்தனையென்றும் சொல்லத்தகும் தன்மையல்ல.
கிறிஸ்துவர்களே ! உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்கவேண்டிய இந்த விசேஷ பக்தியானது பரவத்தக்கதாக எதையாகிலும் செய்தீர்களோ இல்லையோவென்று பாருங்கள் . இப்போது என்னத்தைச் செய்து கொண்டு வருவீர்கள் ? இனிமேல் என்னத்தைச் செய்ய வேணுமென்று நன்றாய் யோசித்துத் தீர்மானம் பண்ண வேண்டும் . இந்த சுகிர்த பக்தியானது மேன்மேலும் இந்த தமிழ் இராச்சியங்களிலே அதிகமதிகமாய் பரவ உங்களுடைய ஜெபத்தினாலும் உங்களுடைய நடத்தையினாலும் உங்களுடைய பிரயாசத்தினாலும் விரும்புவீர்களேயானால் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் உங்களுக்குப் பிரயோசனமும் வெகுமதியும் கிடைக்கும் என்கிறதற்குச் சந்தேகமில்லை .
இப்போது சொல்லப்போகிற ஐந்து காரியங்களையும் விசேசமாய் அனுசரிக்க வேண்டியது
1-வது : உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாகத் திருச்சபையிலே வழங்கிவருகிற மோட்சவிளக்கு, ஆத்துமாக்களுக்காகப் பிச்சை தர்மம், மரித்தவர்களுக்காகப் பூசைகள், கோவில் வேண்டுதல் முதலான சுகிர்த முறைமைகளை நல்லதென்று விசுவசித்து அங்கீகரிக்கிறது.மல்லாமல், அவைகளை விரோதிக்கிறவர்களைத் தடுத்து மறுக்கவேணும்.
2-வது: உத்தரிக்கிற ஆத்துமாக்களின் திருவிழாவையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்கமாதத்தையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குத் திருச்சபையில் ஒப்புக் கொடுக்கிப்பட்ட வருஷாந்திர ஐம்பத்திரண்டு திங்கட்கிழமைகளையும் அநுசரிப்பதுமன்றியே தினந்தோறும் கூடியமட்டும் சில ஜெபங்களைப் பண்ணவும், கொஞ்சம் தர்மம் செய்யவும் பிரியப்படக்கடவீர்கள்.
3 -வது : உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து அடிக்கடி உரையாட வேண்டியதுமல்லாமல், இந்தக் சுகிர்த பக்தி பரவும்படி சின்ன சவேரியார் என்று பேர்பெற்ற ரொஸ்சி அடிகளார் செய்த ஐம்பத்திரண்டு திங்கட்கிழமைப் பிரசங்கப் புஸ்தகத்தையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்கமாதமென்னும் இந்த புஸ்தகத்தையும், இவை போன்ற மற்ற சுகிர்த புஸ்தகங்களையும் வாசிக்கப்பண்ண வேணும்.
4 -வது :உங்களுடைய உறவின் முறையாரும், சிநேகிதரும், அறிமுகமானவர்களும் தங்களைச்சேர்ந்த ஆத்துமாக்களுக்காக உதவிசகாயம் செய்தார்களோ இல்லையோவென்று அவர்களை விசாரிக்கவேணும்
5-வது : போன தியானத்தில் வெளிப்படுத்தப்பட்ட உச்சித நேர்ச்சிக் காணிக்கையைச் செய்யும்படிக்குப் பக்தியுள்ளவர்களைத் தூண்டிவிடவேண்டும்.
கிறிஸ்துவர்களே! நல்ல கிறிஸ்துவன் எவனோ அவன் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாய் இருப்பானென்றும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவன் எவனோ, அவன் இந்தச் சுகிர்த பக்தி எங்கும் பரவும்படியாய்ப் பிரயாசைப்படுவானென்றும் இந்த தியானத்தினால் நீங்கள் அறிந்திருப்பீர்களென்பது நிச்சயம். ஆகையால் நீங்களும் அப்படியே செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
எங்கள் இருதயத்துக்கு ஆனந்தமான இயேசுவே ! மோட்சவாசிகள் காண விரும்புகிற உமது திருமுகம் துஷ்டரால் மூடிமறைக்கப்படவும், உமிழ்நீரால் அசுத்தப்படவும், கையால் அடிக்கப்படவும் திருவுளமானிரே, இப்படிப்பட்ட மனோவாக்குக்கெட்டாத வேதனை அநுபவித்த உம்முடைய திரு முகத்தைப் பார்த்து மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தொன்பதாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
இன்று அல்லது அடுத்த சனிக்கிழமை நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணுகிறது.
புதுமை
ஒரு சிங்காரத் தோப்பில் நல்ல புஷ்பமும் காய்கனியும் இருக்கிறாற்போல, சத்திய திருச்சபையில் எவ்வித புண்ணியங்களும் தர்மங்களும் உண்டாயிருக்கிறதென்பது சரியே. இராஜாக்கள் தரிக்கிற தங்கக் கிரீடத்தில் வயிரக்கற்களும், முத்துரத்தினங்களும் பிரகாசிப்பதுபோல, சேசுநாதருடைய கிரீடமான திருச்சபையில் பல சபைகள் துலங்குகின்றன. வியாதியஸ்தரை மகா பட்ச கவனத்தோடு விசாரிக்கும் பல சபைகளும் உண்டு. தாய் தகப்பனில்லாத பிள்ளைகளைச் சேர்த்து காப்பாற்றி வளர்க்கும் பல சபைகளுமுண்டு. தள்ளாத முதியோரை சலியாத பொறுமையோடும் தளராத அன்போடும் பராமரிக்கும் பல சபைகளுமுண்டு. புறமதத்தாருக்குள்ளேயும் துலுக்கருக்குள்ளேயும் சிறைப்பட்ட கிறிஸ்துவர்களை மீட்டிரட்சிக்கும் பல சபைகளுமிருந்தது. உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ண வேணுமென்று எல்லாச் சபைகளிலும் ஒரு பொதுப் பிரமானக்கட்டளை இருந்ததே தவிர, மற்றப்படி இந்தச் சுகிர்த கருத்துக்காக முன் காலங்களிலே யாதொரு விசேஷ சபையும் ஸ்தாபித்திருக்கக்காணோம்.
ஆனால் ஏறக்குறைய சில வருஷங்களுக்கு முந்திப் பிரான்சு இராஜதானிப் பட்டணமான பாரிஸ் மாநகரில் சர்வேசுரனுடைய விசேஷ ஏவலினாலே உதவிச் சபையெனப்பட்ட ஒரு கன்னியாஸ்திரிகளுடைய சபை ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சபையிலே சேர்ந்த பக்தியுள்ள கன்னியாதிரிகள் தாங்கள் ஜெபிக்கும் ஜெபமும், நடத்தும் தவமும், அநுபவிக்கும் வருத்தமும், செய்யும் நற்கிரியை யுமெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக முழுதும் ஒப்புக்கொடுக்கிறார்கள்.
இவர்கள், மற்றக் கன்னியாஸ்திரிகளைப் போல, தரித்திரம், கீழ்ப்படிதல், விரத்தத்துவம் ஆகிய இம்மூன்று பெரிய வார்த்தைப்பாடுகளைக் கொடுக்கிறதுமல்லாமல், நாலாம் வார்த்தைப்பாடாக, தங்களுடைய ஜெய தப தான தர்மத்தினாலே தங்களுக்கு இவ்வுலகத்தில் வரக்கூடிய பரிகாரப்பலனெல்லாவற்றையும், இறந்தபின் தங்களுக்காக நடத்தப்படும் ஜெபதப தருமங்கள், திவ்விய பூசைகளினால் தங்களுக்கு வரக்கூடிய பரிகாரப்பலன் யாவற்றையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நேர்ந்து ஒப்புக்கொடுக்கிறார்கள். மேலும், இந்தப் பக்தியுள்ள கன்னியாஸ்திரிகள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக அநேக விசேஷ ஜெபங்களைப் பண்ணுகிறதும் தவிர, சில நல்ல தர்மக்கிரியைகளையும் நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் தினந்தினம் இரவும் பகலும் அந்த ஆத்துமாக்களின்பேரில் தங்களுடைய அன்பு நேசம் பக்தி இரக்கமெல்லாம் வைத்திருக்கிறதினாலே இடையின்றி. ஒய்வின்றி, சலிப்பின்றி இவர்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாக வேண்டிய வழி உபாயமெல்லாம் தேடிக் கொண்டு வருவார்களாம். இதுவுமல்லாமல் ஸ்திரி பூமான்களான பக்தியுள்ள மற்ற கிறிஸ்துவர்களைத் தங்களுடன் சேர்ப்பித்து அவரவர்கள் தங்களுடைய அந்தஸ்துக்குத் தக்கது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவும்படிக்குச் செய்வார்கள்.
இந்தச் சுகிர்த சபையை அநேக மேற்றிராணிமார்கள் அங்கீகரித்ததுமன்றியே அப்போது திருச்சபையை மகிமையாய் ஆண்டுவந்த 9-ம் பத்திநாதர் என்னும் அர்ச் பாப்பானவர் இந்தச்சபைக்கு ஒரு விசேஷ ஆசீர்வாதத்தைத் தந்தருள சித்தமானார்.
கிறிஸ்துவர்களே ! இதெல்லாவற்றையும் கேட்ட நீங்களும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் விசேஷ பக்தி வைக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
முப்பதாம் தேதி
உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைத்து தியானிக்கிறது எவ்வளவு நல்லதென்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
இந்தக் கடைசி தியானத்தில், நமது நினைவினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இறங்கி நமது விசுவாசமாகிய ஞானக்கண்ணால் அதிலே அகோரமாய் எரியும் நெருப்பைக்கண்டு, அங்கே வெகுவாய் வருத்தப்படுகிற ஆத்துமாக்களைத் தரிசித்து, அதனால் நமக்கு யாதொரு சுகிர்த பிரயோசனத்தைத் தேட வேணும். இந்தத் தியானத்தினால் அநேக பெரும் பாவிகள் மனந்திரும்பினதுமன்றியே, தேவ ஊழியத்தில் அசட்டையாயிருந்தவர்களில் அனேகர் ஞானச் சுறுசுறுப்படைந்து உத்தம கிறிஸ்துவர்ளானார்களென்கிறது சரியே.
கிறிஸ்துவர்களே! நீங்களும் முன் தியானங்களில் சொன்னதைச் சுருக்கமாய்த் தியானிப்பதற்காகவும் உங்கள் பக்தியை எப்போதும் தூண்டி விடுகிறதற்காகவும் பின் வரும் புத்திமதிகளை தெரிந்து கொள்ளவேணும்:
முதலாவது சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்டு நமது ஆண்டவரான சேசுநாதருடைய திவ்விய இரக்கத்தினால்
மீட்டிரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாக்கள் அவ்வளவு கடின வேதனைகளால் உபாதிக்கப் படுகிறதற்கு முகாந்தரமென்ன ? அவர்கள் பூலோகத்தில் கட்டிக் கொண்ட சொற்ப பாவங்களுக்கும் செய்ய வேண்டிய பரிகாரமே, இந்த வேதனைகளுக்குக் காரணமல்லாமல் வேறல்ல. இது இப்படியிருக்க இப்படிப்பட்ட வேதனைகளை வருவிக்கும் பாவங்களைக் சொற்பமென்று கருதி அவைகளை அச்சமின்றிப் பயமின்றிச் செய்யக்கூடுமோ?
இரண்டாவது எந்த பாவத்துக்கும் தேவ நீதியின் படியே பரிகாரம் செய்ய வேண்டுமென்பது சத்திய விசுவாசமல்லவோ ? இவ்வுலகத்திலே தான் அந்தப் பரிகாரத்தை , ஜெப தப தான தருமங்களினாலும் ,திருச்சபையின் பலன்களினாலும் நேரிடுகிற பற்பல துன்பங்களைப் பொறுமையோடு அனுபவிப்பதினாலும், வெகு எளிதாய்ப் பண்ணலாம். அப்படிச் செய்யாவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மனோவாக்குக்கு எட்டாத வேதனைப்பட்டு அந்த பரிகாரத்தைச் செய்ய வேண்டியதாயிருக்குமென்பது தப்பாது. இது குன்றாத சத்தியமென்றறிந்து, நீங்கள் மென்மேலும் அதிக பக்தியோடும் சுறுசுறுப்போடும் உங்களாலான நற்கிரியைகள் எல்லாவற்றையும் நடப்பிக்கிறதுந் தவிர, வருகிற எல்லாப் பொல்லாப்புகளிலும் சலியாத பொறுமையை அநுசரிக்க வேணுமல்லவோ?
மூன்றாவது: எந்த மனுஷனுக்கும் பிரியப்பட வேணுமாகில் அவனுடைய பிள்ளைகளை நன்றாய் விசாரிக்க வேணுமென்பார்களே. அவ்வண்ணமே அவ்வளவு கடின ஆக்கினைகளைப்படுகிற அந்த ஆத்துமாக்கள் சர்வேசுரனுக்கும் சேசுகிறிஸ்துநாதருக்கும் மிகவும் உகந்த ஆத்துமமாக்களாகையால் அவர்களை மீட்டிரட்சிக்கப் பிரயாசைப்படுவது உத்தம தேவ சிநேகந்தான். அந்த ஆத்துமாக்களை மறந்து அவர்களுக்கு உதவிசகாயம் பண்ணாத மனுஷன், தான் சர்வேசுரனைச் சிநேகிக்கிறேனென்றால் தன்னைத்தானே ஏய்க்கிறானொழிய மற்றப்படியல்ல. மகனை நெருப்பிலே வேகவிடுவாயானால் அவனுடைய தகப்பனை நேசிக்கிறேனென்பாயோ? மேலும், சர்வேசுரன் உனக்குச் செய்த உபகாரங்களை மறந்தாயோ? நீ கட்டிக்கொண்ட பாவங்கள் எத்தனையென்று அறிவாயோ? அடைந்த உபகாரங்களுக்கு நன்றியறிதலைக் காண்பிக்கவும், பண்ணின துரோகங்களுக்கு மன்னிப்பை அடையவும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருப்பது உத்தம வழியல்லவா?
நான்காவது : அவ்வளவான வேதனைகளைப்படுகிற ஆத்துமாக்களைக் கண்டு, அவர்கள் புலம்புகிற புலம்பல்களையும் இடுகிற அபயக் குரல்களையும் கேட்டு புலி முதலாய் இரங்குமே. உங்களுக்குமாத்திரம் இரக்கமில்லாமற். போகுமோ அந்த ஆத்துமாக்கள் அகோர நெருப்பிலே வேகும்போது நீங்கள் சந்தோஷத்தைக் கொண்டாடலாமா? அந்த ஆத்துமாக்கள் இவ்வளவு துன்பப்படும்போது உங்களுக்கு நன்றாயிருக்குமோ?
ஐந்தாவது: உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்களுக்கு நானாவித நன்மை பிரயோஜனம் வருமென்பது நிச்சயமாகையால், உங்களுக்கு வரக்கூடிய சொந்த ஆதாயத்தைப் பற்றியாவது அந்த ஆத்துமாக்களுக்கு வேண்டிய முயற்சியைப் பண்ணுங்கள். நீங்கள் இவ்வுலகத்தில் படுகிற சோதனைகளில் மோசம்போகாமலும், வருகிற துயரங்களில் கலங்காமலும், நேரிடுகிற பொல்லாப்புகளில் மயங்காமலும், நன்னெறியிலே வழுவாதொழுகி நன் மரணமடைந்து, பேரின்ப வீட்டுக்குப் போவோமென்று உறுதியான நம்பிக்கை உங்களுக்கு உண்டாயிருக்க வேணுமானால் அந்த ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருங்கள்.
ஆறாவது: உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ண அநேக நல்ல வழிகளிருப்பதால் வருத்தமின்றித் துன்பமின்றி அவர்களுடைய வேதனைகளை அமர்த்தித் தணித்துக் குறைத்து முடியச் செய்யலாமே. நீங்கள் தினந்தினம் வழக்கமாய்ச் செபிக்கும் ஜெபங்களையும். நடத்தும் நற்கிரியைகளையும் தகுந்த கருத்தோடே செய்வீர்களேயானால், எத்தனையோ பலன்களையும் ஞானத்திரவியங்களையும் அடையக்கூடுமே. அப்படியிருக்க அவைகளை உங்களுடைய அசட்டையினாலே இழந்து போய், ஆத்துமாக்களுக்கு வரக்கூடிய உதவி சகாயத்தைத் தடுக்கிறீர்களே. இது பெரிய அநியாயமல்லவோ?
ஏழாவது அந்த ஆத்துமாக்களுக்கு உங்களாலான , உதவிசகாயமெல்லாம் பண்ணவேணுமென்று உங்களுக்கு அதிக ஆசையாயிருக்கிறதோ, முன் சொன்னவண்னமே நீங்கள் அடையக்கூடிய பரிகாரப்பலன் யாவற்றையும் அவர்களுக்கு முழுமையும் நேர்ச்சி செய்துவிடுங்கள். அப்படிச் செய்பவர்களுக்கு இம்மையிலேயும் மறுமையிலேயும் தாங்கள் கொடுத்ததற்கு ஒன்றுக்கு நூறாகக் கொடுக்கப்படுமென்கிறதை ஒரு போதும் மறவாதேயுங்கள்.
எட்டாவது கடைசியிலே எந்தப்பிரகாரமாய் அந்த ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணியிருப்பீர்களோ அந்தப்பிரகாரமாய்த்தானே நீங்களும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படுகிறபோது உங்களுக்கு செய்யப்படும். உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கொஞ்சம் உதவி சகாயம் மாத்திரம் வருவிக்க விரும்புவீர்களேயானால், உங்களுக்கும் கொஞ்சம் உதவிசகாயந்தான் வருமென்பது நிச்சயமாகையால், இனிமேல் உங்களுக்கு வேண்டியதை இப்போதே சேகரித்துக் கொள்ளுங்கள்
கிறிஸ்துவர்களே ! நெருப்பிலே விறகு போடாதே போனால் நெருப்பு அவிந்து போகுமே. அவ்வண்ணமே இந்த மாதத்திலே உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் உங்களிடத்தில் பற்றுவித்த பக்தியானது குறைந்து அவிந்துபோகாதபடிக்கு வருஷத்தில் வரும் அந்தந்த திங்கட்கிழமைகளிலே இப்போது சொன்ன தியானங்களில் ஒவ்வொன்றாய் வாசிக்க வேணுமென்று அறியக் கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மாசற்ற இருதயமே ! எனக்கு ஆதரவாய் இரும்
செபம்
எங்களுடைய உத்தம ஏக நன்மையாகிய சேசுவே ! தேவரீர் எங்கள் பாவங்களை உம்முடைய திருத்தோளின் பேரில் சிலுவையோடு சுமந்தீரே , இந்த மட்டில்லாத உபகாரங்களைப் பார்த்து மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குக் கிருபை செய்யும். விசேஷமாய் ஆறுதலற்றிருக்கிறவர்கள் பேரில் அதிகமாய் இரங்கி அவர்களுக்கு விரைவில் மோட்ச வாசலைத் திறக்க அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
முப்பதாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பக்தியோடு தேவநற்கருணை வாங்குகிறது.
புதுமை
ஆயிரத்து எண்ணுாற்று அறுபத்தேழாம் ஆண்டில் பாஸ்பட்டணத்தில் ஓர் ஏழைப் பெண்மணி ஒர் எஜமானிடத்தில் ஊழியம் பண்ணிக்கொண்டிருந்தாள். அவள் மாதந்தோறும் தான் பெற்றுக்கொள்ளுகிற சம்பளத்தில் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பூசைக்கு வேண்டிய பணங்கொடுத்துப் பூசை பண்ணுவிக்கிற வழக்கமாயிருந்தாள். எந்த ஆத்துமம் மோட்சத்துக்குப் போகிற தறுவாயிலிருக்குமோ அந்த ஆத்துமத்துக்கு அந்தப் பூசையை ஒப்புக்கொடுக்கவேணுமென்பாள். அவளுக்கு ஒரு கடின வியாதி வந்ததின் பேரில் தான் சேவித்த எஜமானை விட்டுவிட வேண்டியிருந்ததுமல்லாமல், தனக்குச் செளக்கியமாகிறதற்குத் தன் கையிலுள்ள பணமெல்லாம் செலவழிக்கவும் வேண்டியதாயிருந்தது.
கொஞ்சம் செளக்கியமாகி தான் வெளியே புறப்படுகிறநாளிலே அவள் கையில் அரை ரூபாய் மட்டும் இருந்ததல்லாமல் வேறே ஆஸ்தியில்லை. நல்ல நம்பிக்கையோடு சர்வேசுரனை பிரார்த்தித்துக்கொண்ட பிற்பாடு வேறே வேலை தேடப்போனாள். இவள் தேடப்போகையில் அர்ச் எஸ்தாக்கியாருடைய கோவிலைக் கண்டு அதில் கொஞ்சம் ஜெபம் பண்ணவேணுமென்று உள்ளே பிரவேசித்தாள். அந்நேரத்திலே ஒரு குருசுவாமியார் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து திவ்விய பூசை பண்ணிக்கொண்டிருந்தார். அதை அந்தப் புண்ணியவதியானவள் கண்டு, தான் அந்த மாதம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகப் பூசை பண்ணுவிக்கவில்லையென்று நினைத்துக் வருத்தப்பட்டாள்.
ஆனால் தன்னிடத்தில் அரை ரூபாய் மாத்திரம் இருந்ததைப் பற்றி அதைக் கொடுத்து விட்டால் தான் என்ன செய்வதென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். சற்று யோசித்தபிற்பாடு, பூசையைப் பண்ணுவிப்பேன். சர்வேசுரன் என்னை விட்டுவிடுவாரோ என்று நினைத்து, தன்னுடைய அரை ரூபாயை அங்கேயிருந்த வேறொரு குருவானவரிடத்திலே கொடுத்து உடனே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக பூசை பண்ண வேணுமென்று கேட்டாள்
அப்படியே அந்த பூசையை மகா பக்தியோடு தானுங் கண்ட பிற்பாடு தனக்கு ஏதேனும் பிழைப்பு கிடைக்குமோவென்று அஞ்சி நடந்து போனாள். கொஞ்ச தூரம் போன பிற்பாடு , ஒரு யோக்கியமான வாலிபன் அவளுக்கு எதிராய் வந்து , துக்கமுகத்தோடும் மகா வணக்க மரியாதையோடும், அவளுக்கு வந்தனஞ் சொல்லி நீ வேலை தேடுகிறாயல்லவோ? என்று அவன் கேட்க அவள் ஆமாம் ஐயா, வேலையைத்தான் தேடுகிறேன் என்றாள். அப்போது அவன் இன்ன தெருவீதியிலே இன்ன விட்டிலே இன்ன அரைசானியிடத்திலே போ அந்த துரைசானி உன்னை ஏற்றுக் நடத்துவாளென்றும் நீ அவளிடத்திலே நன்றாய் நிலைத்திருப்பாயென்றும் நினைக்கிறேன்" என்று சொன்னவுடனே தெருவீதியிலே நடந்துக்கொண்டிருந்த ஜனங்களுக்குள்ளே மறைந்து போனான்.
அந்தப் புண்ணியவதியோவெனில் அவ்வாலிபன் சொன்ன வீதியையும் வீட்டையும் விசாரித்து குறிப்பிட்ட விட்டுக்குப் போனாள். போனவுடனே கதவைத்தட்டிக் கூப்பிடவே, ஒரு துரைசானி கதவைத் திறந்து அவளை உள்ளே வா என்று பட்சத்தோடு கூப்பிட்டாள். அவள் உள்ளே பிரவேசித்தவுடனே அம்மா, உங்களுக்கு ஊழியம் பண்ண ஒரு
வேலைக்காரியைத் தேடுகிறீர்கள் என்று அறிந்து என்னை ஏற்றுக் கொள்ளுவீர்களோவென்று கேட்க வந்தேன் என்றாள்.
அதற்கு அந்த துரைசானியானவள் " என் பிரியமுள்ள தங்கச்சியே , நீ சொல்லுகிறது வெகு ஆச்சர்யமாய் இருக்கிறது . இப்போது தானே என்னிடத்திலே ஊழியம் பண்ணினவளைத் தள்ளினேன் . இது எனக்கு மாத்திரம் தெரியுமேயல்லால் வேறு யாருக்கும் தெரியாதே . உன்னை அனுப்பினது யார் சொல் என்றாள்.
அதற்கு அவள் "நான் தெரு வீதியிலே நடக்கும் போது ஒரு நல்ல வாலிபனான துரை என்னை இவ்விடத்திற்குப் போகச் சொன்னான். ஆகையால் எனக்கு ஒரு காசு முதலாய் ஐவேசியில்லாததினாலே இன்றைக்கே ஏதாவது ஒரு வேலையில் நான் அமர வேனும்" என்றாள்.
அதை துரைசானியானவள் கேட்டு அதிகமாய் பிரமித்து அந்த வாலிபன் யாரென்று ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பெண்ணானவள் சுற்றிலும் பார்த்து அந்த அறையில் தொங்கும் ஒரு படத்தைக் காட்டி "அந்த படத்திலேயிருக்கிற சாயல் என்னை அனுப்பின துரையினுடைய சாயல்" போலிக்கிறதென்றாள். துரைசானி அந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே பெருமூச்சுவிட்டு மூர்ச்சையாய் விழுந்தாற்போல சத்தம் போட்டுச் சொன்னதாவது "நீ என்ன சொல்லுகிறாய்? உனக்கு இன்றைக்கு சம்பவித்த சேதியை எனக்கு விவரமாய் சொல் "என்றாள். ஏழைப்பெண்
நடந்ததையெல்லாம் விவரமாய் சொன்னபிற்பாடு துரைசானி அவளைக் கட்டியனைத்து" நீ எனக்கு ஊழியக்காரியல்ல, மகள்தான்.இன்று நீ கண்ட வாலிபன் என் மகன்தான். அவன் இரண்டு வருஷத்துக்கு முந்திச் செத்துப்போய் நீ இன்று செய்வித்த பூசையினாலே உத்தரிக்கிற ஸ்தலத் திலிருந்து புறப்பட்டு மோட்சத்துக்குப் போயிருப்பானென்று எனக்கு நிச்சயமாய்த் தெரிகிறது. ஆனதினாலே நாம் இருவரும் இனிமேல் பிரியாமல் உத்தரிக்கிற ஆத்துமாக் களுக்காக வேண்டிக்கொள்ளுவோம் என்று சொல்லி, அவளைத் தன்னுடைய வீட்டிலே ஏற்றுக்கொண்டு தன் மகளைப் போல் நடத்தி வந்தாள்.
கிறிஸ்துவர்களே உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து இன்னின்ன காரியத்தைச் செய்து கொண்டு வருவோமென்று உறுதியான பிரதிக்கினை செய்ய வேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்