- வணக்க மாதம்
- ஜெபமாலை அன்னை
- நாள் 26-31
இருபத்தாறாம் நாள்
தேவ இரகசியங்களைச் சிந்திப்பதின் இலாபம்
கிறிஸ்துவினுடைய ஒரே நோக்கம் உத்தமத்தனத்தைத் தேடிப் போவதாம் ."பிரியமான குழந்தைகளைப் போல கடவுளைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள் " என்று அர்ச் சின்னப்பர் சொல்லவில்லையா ? எவ்விதம் பின்பற்றுவது ? இயேசுநாதரைக் கண்டு பாவிப்பதில் ; "நானே வழி "என்றார் கிறிஸ்துநாதர் . அர்ச் கிரகோரியார் ஒரு உவமை சொல்லுகிறார் . ஓவியன் படம் தீட்டும்போது, தன்yகண் எதிரே ஒரு மாதிரியைக் கொண்டு அதைப் பார்த்துத் தன் தூரிகையைக் கையாளுகிறான். அதுபோலவே இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் கையாள வேண்டும் . அவரது புண்ணியங்களையும் தன் மனக்கண் முன் நிறுத்தி , அவரை ஓயாமல் உற்று நோக்கி தன் ஆத்துமமாகிய திரையில் இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் சித்தரிக்க வேண்டும் .அதற்கு செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைச் சிந்திப்பது சுலபமான வழி
நமது ஈடேற்ற அலுவலில் தேவ தாய்க்கு அதிக கவலை . ஆதலால் செபமாலை சொல்லுகையில் இயேசுவின் சீவியத்தைச் சிந்திக்கும்படி பற்பல அர்சிஷ்டவர்களைத் தூண்டினார். இதனால் கிறிஸ்தவ மக்கள் இயேசுவை ஆராதித்து மகிமைப்படுத்துவார்கள் , தங்கள் வாழ்க்கையையும் அவருடைய வாழ்க்கையையும் ஒத்திருக்கச் செய்வார்கள் என்பது அவரது எண்ணமும் ஆசையும் .
பெற்றோர்கள் சொல்லுவதையும் செய்வதையும் குழந்தைகள் கவனித்து அவர்களைப் போல - சில சமயம் தங்களுக்குத் தெரியாமலே - நடக்கப் பிரயாசைப்படுகிறார்கள் . ஒரு தொழில் கற்றுக் கொள்ளுகிறவன் தன் ஆசிரியர் செய்வதைப் போல் செய்யத் தேடுவான். அதே போல் செபமாலை செய்யும் தேவதாயின் மக்கள் திருத்தாயும் சேயும் செய்வது போல ஒவ்வொன்றையும் செய்யத் தேடுவார்கள் . ஆதலால் இயேசுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்க்க வேண்டும் .
இறைவன் பொழிந்த கிருபைகளை மறக்க வேண்டாமென்று முன்காலத்தில் மோயீசன் இஸ்ராயேலருக்குக் கற்பித்திருந்தார் . தம் வாழ்க்கையையும் , மரணத்தையும் , உத்தானத்தையும் கிறிஸ்தவர்கள் தங்கள் கண் முன் எப்போதும் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இயேசுநாதர் எவ்வளவு அதிகாரத்தோடு சொல்லக் கூடும் . ஒவ்வொரு தேவ இரகசியமும் அவருடைய நன்மைத்தனத்தையும் நம் ஈடேற்றத்தின் மேல் அவருக்குள்ள ஆவலையும் காட்டுகிறது .அவர் நம் ஆத்துமத்தின் பத்தா; நமது நேசர் ; அவரது அன்பை நாம் மறக்காமலிருக்க வேண்டும் என்பது நியாயம் அல்லவா?
அவரது வாழ்க்கையில் எல்லாம் முக்கியமானவை , அவரது அன்பை மகாத் துலக்கமாய் அவரது பாடுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன . எப்பக்தி முயற்சியினால் அவருக்கு அதிக மகிமை வருவிக்கக் கூடும் என்று முத் ஆஞ்செலா ஒரு நாள் இயேசுவைக் கேட்டாள். வந்த பதில் என்ன ? "மகளே என் காயங்களைப் பார் ". பின்னர் சிரசிலும் மற்ற இடங்களிலும் அவர் பட்ட காயங்கள் யாவற்றையும் காட்டி "உன்னுடைய ஈடேற்றத்திற்காக நான் இவைகள் யாவற்றையும் அனுபவித்தேன் . நான் உனக்குக் காட்டிய அன்புக்கு நீ என்ன கைம்மாறு செய்வாய் ? " என்றார் ஆண்டவர் . திவ்விய பூசை தானே அவரது மரணமும் பாடுகளும் . ஆதலால் தான் திவ்விய பூசை தமத்திருத்துவத்திற்கு அளவிறந்த மகிமையை அளிக்கிறது . பூசை நேரத்தில் மோட்ச வாசிகளுக்கும் சம்மனசுக்களுக்கும் மகா சந்தோசம்
தேவ ரகசியங்களை தியானித்து செய்யும் செபமாலையும் இறைவனுக்கு அளிக்கும் தோத்திரப்பலி எனலாம் . இயேசுவின் வாழ்க்கையை , பாடுகளை , மரணத்தை செபமாலை நினைப்பூட்டுகிறதன்றோ? இத்தகைய தியானம் மனிதனின் மனதை இளக்கி, மனஸ்தாபத்தை எழுப்பி , மனமாற்றுதளுக்குக் காரணமாகிறது . ஒரே ஒரு பாவியின் மனமாற்ற முதலாய் மோட்சத்தில் இறைவனுக்கும் சம்மனசுக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறதென்று இயேசுநாதர் சொல்லி இருக்கிறார் .
ஆதலால் தேவ இரகசியங்களைத் தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லி வருவோம்
செபம்
ஓ செபமாலை இராக்கினியே , அமலோற்பவ மாதாவே , சம்மனசுக்களின் அரசியே , மனுமக்களின் பாதுகாவலியே, ஈன சுகத்தின் வலையில் விழும் ஏழைகளின் மேல் இரக்கமாயிரும் . எங்கள் பலவீனத்தில் எங்களுக்குப் பலனைக் கொடுத்தருளும் . சோதனைகளோடு (பேயோடு , உடலோடு ) போடும் சண்டையில் எங்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தருளும் . மெய்யான மனஸ்தாபப்பட வேண்டும் என்று எங்களுக்குள்ள ஆசையைச் சுத்திகரித்தருளும் . பரிசுத்த கற்பின் இலட்சியம் உலகில் புத்தொளி பெற வேண்டும் என்று உமக்குள்ள ஆவல் நாங்கள் அறிந்ததே .
மாசற்ற இருதயத்தின் மாதாவே , இன்றைக்கு என் இருதயத்தையும் என் புத்தியையும் என்னை முழுவதுமே உமக்கு நேர்ந்து கொள்ளுகிறேன் என்று உறுதி கூறுகிறேன் . தயங்காத பிரமாணிக்கத்தோடு உமக்கு ஊழியம் செய்வதில் நிலைத்து நிற்பேன் . உம்மிடத்திலிருந்து நான் கேட்கும் விசேச வரம் என்னவென்றால் சோதனையி முதல் நாட்டத்தையே எதிர்த்தோட்டக் கிருபை செய்யும் . எனக்குப் பாவத்திற்குக் காரணமாயிருந்த எல்லாவற்றையும் விட்டோடும்படி அனுக்கிரகம் செய்தருளும்
செபமாலை இராக்கினியே என்னை இருதயத்தில் சுத்தமுள்ளவளாய்/வனாய் ஆக்கியருளும் ஆமென்
சரிதை
நம் தமிழ்நாட்டில் பல வீடுகளிலும் ஆலயங்களிலும் போம்பேயி மாதா படத்தைக் காணலாம் . போம்பேயி இத்தாலி நாட்டில் உள்ள ஒரு பட்டணம் .அங்கு 1876 ஆம் ஆண்டில் ஒரு பேராலயம் எழுப்பப்பட்டது ; செபமாளைப் பக்திக்கு ஒருபுது உத்வேகத்தைக் கொடுத்தது . செபமாலையினால் அங்கு நடக்கும் புதுமைகளுக்குக் கணக்கில்லை . இங்கு ஒன்றைக் குறிக்கலாம் . நேபில்ஸ் நகரப் பெண்ணொருத்தி - போர்த்துனா அக்ரெல்லி என்ற பெயர் கொண்டவள் - வியாதியை வீழ்ந்து பெரும் வாதனைகளை அனுபவித்து வந்தால் .பிரபலிய வைத்தியர்கள் பார்த்து அந்த நோயைக் குணமாக்க முடியாதென்றனர்.
அவளுக்கு அவளது உறவினர்கள் சிலர் 1884 ஆம் ஆண்டு பெப்ருவரி 16 ஆம் தேதி நவநாள் சொல்லத் துவங்கினர் .நவநாள் தொடங்கி 15 நாள் சென்று நோயாளி காட்சி கண்டாள். செபமாலை இராக்கினி சிம்மாசனத்தில் வீற்றிருந்தார் . அவரது மடியில் குழந்தை .அர்ச் கத்தரீனம்மாளும் அர்ச் டோமினிக்கும் அவருக்கு அருகில் நின்றனர் . செபமாலை மாதா சொல்லுவார் :" குழந்தை என் பற்பல மகிமைகளைச் சொல்லி என்னை அழைத்திருக்கிறாய் . இப்பொழுது எனக்கு மிகவும் பிடித்தமான திருச்செபமாலையின் இராக்கினியே என்ற பட்டத்தைச் சொல்லி அழைப்பதனால் நீ கேக்கும் வரத்தைக் கொடுக்க நான் தாமதியேன் .இந்த பெயர் எனக்கு மகாப் பிரியம் . இந்த நவனாலை மூன்று முறை செய் . நீ கேட்பதை எல்லாம் அடைவாய் "தாய் சொன்னபடி அப்பெண் செய்தாள் . பூரண குணம் பெற்றாள்.
மறுமுறையும் செபமாலை இராக்கினி அப்பெண்ணுக்குத் தோன்றி சொன்னார் : " என்னிடமிருந்து கிருபைகளைப் பெற ஆசிக்கிறவர்கள் செபமாலை சொல்லி மூன்று நவநாள் செய்வார்களாக . கிருபை பெறுவார்கள் . பெற்ற பின் நன்றியறிந்த தோத்திரமாக மூன்று செபமாலை நவநாள் செய்வார்களாக "
உண்மையான செபமாலை பக்தி நம் நாட்டில் வளர்வதாக
(ஒவ்வொரு நாளும் ஒரே கருத்துக்காக ஐம்பது மணியோ , நூற்றைம்பது மணியோ ஒன்பது நாள் சொல்லி வருவது ஒரு செபமாலை நவநாள் )
தேவ இரகசியங்களைச் சிந்திப்பதின் இலாபம்
கிறிஸ்துவினுடைய ஒரே நோக்கம் உத்தமத்தனத்தைத் தேடிப் போவதாம் ."பிரியமான குழந்தைகளைப் போல கடவுளைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள் " என்று அர்ச் சின்னப்பர் சொல்லவில்லையா ? எவ்விதம் பின்பற்றுவது ? இயேசுநாதரைக் கண்டு பாவிப்பதில் ; "நானே வழி "என்றார் கிறிஸ்துநாதர் . அர்ச் கிரகோரியார் ஒரு உவமை சொல்லுகிறார் . ஓவியன் படம் தீட்டும்போது, தன்yகண் எதிரே ஒரு மாதிரியைக் கொண்டு அதைப் பார்த்துத் தன் தூரிகையைக் கையாளுகிறான். அதுபோலவே இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் கையாள வேண்டும் . அவரது புண்ணியங்களையும் தன் மனக்கண் முன் நிறுத்தி , அவரை ஓயாமல் உற்று நோக்கி தன் ஆத்துமமாகிய திரையில் இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் சித்தரிக்க வேண்டும் .அதற்கு செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைச் சிந்திப்பது சுலபமான வழி
நமது ஈடேற்ற அலுவலில் தேவ தாய்க்கு அதிக கவலை . ஆதலால் செபமாலை சொல்லுகையில் இயேசுவின் சீவியத்தைச் சிந்திக்கும்படி பற்பல அர்சிஷ்டவர்களைத் தூண்டினார். இதனால் கிறிஸ்தவ மக்கள் இயேசுவை ஆராதித்து மகிமைப்படுத்துவார்கள் , தங்கள் வாழ்க்கையையும் அவருடைய வாழ்க்கையையும் ஒத்திருக்கச் செய்வார்கள் என்பது அவரது எண்ணமும் ஆசையும் .
பெற்றோர்கள் சொல்லுவதையும் செய்வதையும் குழந்தைகள் கவனித்து அவர்களைப் போல - சில சமயம் தங்களுக்குத் தெரியாமலே - நடக்கப் பிரயாசைப்படுகிறார்கள் . ஒரு தொழில் கற்றுக் கொள்ளுகிறவன் தன் ஆசிரியர் செய்வதைப் போல் செய்யத் தேடுவான். அதே போல் செபமாலை செய்யும் தேவதாயின் மக்கள் திருத்தாயும் சேயும் செய்வது போல ஒவ்வொன்றையும் செய்யத் தேடுவார்கள் . ஆதலால் இயேசுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்க்க வேண்டும் .
இறைவன் பொழிந்த கிருபைகளை மறக்க வேண்டாமென்று முன்காலத்தில் மோயீசன் இஸ்ராயேலருக்குக் கற்பித்திருந்தார் . தம் வாழ்க்கையையும் , மரணத்தையும் , உத்தானத்தையும் கிறிஸ்தவர்கள் தங்கள் கண் முன் எப்போதும் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இயேசுநாதர் எவ்வளவு அதிகாரத்தோடு சொல்லக் கூடும் . ஒவ்வொரு தேவ இரகசியமும் அவருடைய நன்மைத்தனத்தையும் நம் ஈடேற்றத்தின் மேல் அவருக்குள்ள ஆவலையும் காட்டுகிறது .அவர் நம் ஆத்துமத்தின் பத்தா; நமது நேசர் ; அவரது அன்பை நாம் மறக்காமலிருக்க வேண்டும் என்பது நியாயம் அல்லவா?
அவரது வாழ்க்கையில் எல்லாம் முக்கியமானவை , அவரது அன்பை மகாத் துலக்கமாய் அவரது பாடுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன . எப்பக்தி முயற்சியினால் அவருக்கு அதிக மகிமை வருவிக்கக் கூடும் என்று முத் ஆஞ்செலா ஒரு நாள் இயேசுவைக் கேட்டாள். வந்த பதில் என்ன ? "மகளே என் காயங்களைப் பார் ". பின்னர் சிரசிலும் மற்ற இடங்களிலும் அவர் பட்ட காயங்கள் யாவற்றையும் காட்டி "உன்னுடைய ஈடேற்றத்திற்காக நான் இவைகள் யாவற்றையும் அனுபவித்தேன் . நான் உனக்குக் காட்டிய அன்புக்கு நீ என்ன கைம்மாறு செய்வாய் ? " என்றார் ஆண்டவர் . திவ்விய பூசை தானே அவரது மரணமும் பாடுகளும் . ஆதலால் தான் திவ்விய பூசை தமத்திருத்துவத்திற்கு அளவிறந்த மகிமையை அளிக்கிறது . பூசை நேரத்தில் மோட்ச வாசிகளுக்கும் சம்மனசுக்களுக்கும் மகா சந்தோசம்
தேவ ரகசியங்களை தியானித்து செய்யும் செபமாலையும் இறைவனுக்கு அளிக்கும் தோத்திரப்பலி எனலாம் . இயேசுவின் வாழ்க்கையை , பாடுகளை , மரணத்தை செபமாலை நினைப்பூட்டுகிறதன்றோ? இத்தகைய தியானம் மனிதனின் மனதை இளக்கி, மனஸ்தாபத்தை எழுப்பி , மனமாற்றுதளுக்குக் காரணமாகிறது . ஒரே ஒரு பாவியின் மனமாற்ற முதலாய் மோட்சத்தில் இறைவனுக்கும் சம்மனசுக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறதென்று இயேசுநாதர் சொல்லி இருக்கிறார் .
ஆதலால் தேவ இரகசியங்களைத் தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லி வருவோம்
செபம்
ஓ செபமாலை இராக்கினியே , அமலோற்பவ மாதாவே , சம்மனசுக்களின் அரசியே , மனுமக்களின் பாதுகாவலியே, ஈன சுகத்தின் வலையில் விழும் ஏழைகளின் மேல் இரக்கமாயிரும் . எங்கள் பலவீனத்தில் எங்களுக்குப் பலனைக் கொடுத்தருளும் . சோதனைகளோடு (பேயோடு , உடலோடு ) போடும் சண்டையில் எங்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தருளும் . மெய்யான மனஸ்தாபப்பட வேண்டும் என்று எங்களுக்குள்ள ஆசையைச் சுத்திகரித்தருளும் . பரிசுத்த கற்பின் இலட்சியம் உலகில் புத்தொளி பெற வேண்டும் என்று உமக்குள்ள ஆவல் நாங்கள் அறிந்ததே .
மாசற்ற இருதயத்தின் மாதாவே , இன்றைக்கு என் இருதயத்தையும் என் புத்தியையும் என்னை முழுவதுமே உமக்கு நேர்ந்து கொள்ளுகிறேன் என்று உறுதி கூறுகிறேன் . தயங்காத பிரமாணிக்கத்தோடு உமக்கு ஊழியம் செய்வதில் நிலைத்து நிற்பேன் . உம்மிடத்திலிருந்து நான் கேட்கும் விசேச வரம் என்னவென்றால் சோதனையி முதல் நாட்டத்தையே எதிர்த்தோட்டக் கிருபை செய்யும் . எனக்குப் பாவத்திற்குக் காரணமாயிருந்த எல்லாவற்றையும் விட்டோடும்படி அனுக்கிரகம் செய்தருளும்
செபமாலை இராக்கினியே என்னை இருதயத்தில் சுத்தமுள்ளவளாய்/வனாய் ஆக்கியருளும் ஆமென்
சரிதை
நம் தமிழ்நாட்டில் பல வீடுகளிலும் ஆலயங்களிலும் போம்பேயி மாதா படத்தைக் காணலாம் . போம்பேயி இத்தாலி நாட்டில் உள்ள ஒரு பட்டணம் .அங்கு 1876 ஆம் ஆண்டில் ஒரு பேராலயம் எழுப்பப்பட்டது ; செபமாளைப் பக்திக்கு ஒருபுது உத்வேகத்தைக் கொடுத்தது . செபமாலையினால் அங்கு நடக்கும் புதுமைகளுக்குக் கணக்கில்லை . இங்கு ஒன்றைக் குறிக்கலாம் . நேபில்ஸ் நகரப் பெண்ணொருத்தி - போர்த்துனா அக்ரெல்லி என்ற பெயர் கொண்டவள் - வியாதியை வீழ்ந்து பெரும் வாதனைகளை அனுபவித்து வந்தால் .பிரபலிய வைத்தியர்கள் பார்த்து அந்த நோயைக் குணமாக்க முடியாதென்றனர்.
அவளுக்கு அவளது உறவினர்கள் சிலர் 1884 ஆம் ஆண்டு பெப்ருவரி 16 ஆம் தேதி நவநாள் சொல்லத் துவங்கினர் .நவநாள் தொடங்கி 15 நாள் சென்று நோயாளி காட்சி கண்டாள். செபமாலை இராக்கினி சிம்மாசனத்தில் வீற்றிருந்தார் . அவரது மடியில் குழந்தை .அர்ச் கத்தரீனம்மாளும் அர்ச் டோமினிக்கும் அவருக்கு அருகில் நின்றனர் . செபமாலை மாதா சொல்லுவார் :" குழந்தை என் பற்பல மகிமைகளைச் சொல்லி என்னை அழைத்திருக்கிறாய் . இப்பொழுது எனக்கு மிகவும் பிடித்தமான திருச்செபமாலையின் இராக்கினியே என்ற பட்டத்தைச் சொல்லி அழைப்பதனால் நீ கேக்கும் வரத்தைக் கொடுக்க நான் தாமதியேன் .இந்த பெயர் எனக்கு மகாப் பிரியம் . இந்த நவனாலை மூன்று முறை செய் . நீ கேட்பதை எல்லாம் அடைவாய் "தாய் சொன்னபடி அப்பெண் செய்தாள் . பூரண குணம் பெற்றாள்.
மறுமுறையும் செபமாலை இராக்கினி அப்பெண்ணுக்குத் தோன்றி சொன்னார் : " என்னிடமிருந்து கிருபைகளைப் பெற ஆசிக்கிறவர்கள் செபமாலை சொல்லி மூன்று நவநாள் செய்வார்களாக . கிருபை பெறுவார்கள் . பெற்ற பின் நன்றியறிந்த தோத்திரமாக மூன்று செபமாலை நவநாள் செய்வார்களாக "
உண்மையான செபமாலை பக்தி நம் நாட்டில் வளர்வதாக
(ஒவ்வொரு நாளும் ஒரே கருத்துக்காக ஐம்பது மணியோ , நூற்றைம்பது மணியோ ஒன்பது நாள் சொல்லி வருவது ஒரு செபமாலை நவநாள் )
இருபத்தேழாம் நாள்
செபமாலை உத்தமத்தனத்தின் பாதை
புனிதர்கள் இயேசுவின் வாழ்க்கையைத் தியானிப்பதே தங்கள் கதி எனக் கருதினார்கள் . அவருடைய புண்ணியங்களையும் பாடுகளையும் பற்றி தியானித்தனர் . இவ்விதம் கிறிஸ்தவ உத்தமத்தனத்தின் உச்சியில் சேர்ந்தனர் .
அர்ச் பெர்நார்து இவ்வித தியானத்தை ஒரு முறை தொடங்கிய பின் கடைசி நாள் வரை அத்தகைய தியானத்தில் நிலைத்திருந்தார் . அவர் சொல்லுகிறார் :" நான் மனம் மாறிய துவக்கத்தில் இயேசுவின் துக்கத்தை ஓர் மலர் கொத்தாக கட்டி என் இதயத்தின் மேல் வைத்தேன் . பாடுகளின் நேரத்தில் அவரை வாதித்த அடியையும் , ஆணிகளையும் முட்களையும் பற்றி நினைத்தேன் . என் மனதின் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்து ஒவ்வொரு நாளும் இந்த இரகசியங்களைப் பற்றி தியானித்தேன் "
வேத சாட்சிகளின் வழக்கமும் இதுதான்; அதனால் பெரும் வாதனை வருத்தங்கள் மத்தியிலும் அவர்கள் அசையாமல் நின்று வெற்றி கண்டனர் . வேத சாட்சிகளின் அதிசயத்துக்குரிய உறுதியான நிலைக்குக் காரணம் இயேசுவின் காயங்களை ஓயாமல் சிந்தித்தது தான் என அர்ச் பெர்நார்து மொழிகிறார் .
தேவ தாய் தன் வாழ்க்கை முழுதும் செய்தது என்ன ? அவருடைய தேவ மகனின் புண்ணியங்களையும் பாடுகளையும் தியானித்தார் . அவருடைய பிறப்பில் சம்மனசுக்கள் சந்தோசமாய்ப் பாடுவதைக் கேட்டதையும், இடையர்கள் அவரை ஆராதிப்பதைக் கண்டதையும் , மனதில் இருத்தி இந்த அதிசயங்களைப் பற்றி தியானித்தார் . மாமிசமான வார்த்தையின் மகிமையை அவரது ஆழ்ந்த தாழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தார் . மாட்டுக் குடிலில் தூங்குபவரை அவருடைய மகிமை சிம்மாசனத்தில் மோட்சத்தில் பிதாவோடு அமர்ந்திருப்பதை தரிசித்தார் . கடவுளின் வல்லமையையும் குழந்தையின் பலவீனத்தையும் நிறுத்துப் பார்த்தார் .
ஒரு நாள் அர்ச் பிரிஜித்தம்மாளுக்கு நமதாண்டவள் சொல்லுவார் :" என் மகனின் அழகையும் அடக்கத்தையும் ஞானத்தையும் நான் தியானித்த போது என் உள்ளம் மகிழ்ச்சியால் கரை கடந்து பொங்கியது . கூர்மையான ஆணிகள் துளைக்கப்போகும் அவரது கரங்களையும் கால்களையும் கருதிய போது கண்ணீர் சொரிந்தது ; துக்கத்தாலும் வாதனையாலும் என் இதயம் பிளந்தது "
ஆண்டவரின் மோட்ச ஆரோகணத்திற்குப் பின் இயேசுவின் பாடுகளாலும் பிரசன்னத்தாலும் அர்ச்சிக்கப்பட்ட தலங்களை அடிக்கடி தரிசித்து வந்தார் . அத்தலங்களில் இருக்கும் போது அவரது அளவிறந்த அன்பையும் பயங்கரப் பாடுகளையும் பற்றி சிந்தித்தார்
முப்பதாண்டுகளாக மரிய மதலேனாள் இவ்வழக்கத்தை போமா என்ற ஊரில் தனிவாசத்தில் கையாண்டாள். திருச்சபையின் துவக்கத்தில் பரிசுத்த தலங்களைத் தரிசிக்கும் வழக்கம் சர்வ சாதாரணம் என்று அர்ச் ஜெரோம் சொல்லுகிறார் . கிறிஸ்தவர்கள் பற்பல நாடுகளில் இருந்தும் வந்து இந்த தலங்களைத் தரிசித்தனர் . இயேசு சபை ஸ்தாபகரான அர்ச் இஞ்ஞாசியார் எவ்வளவு இடைஞ்சல்களில் அவைகளைப் போய்த் தரிசித்தார் . குருக்களும் கன்னியர்களும் தான் விசுவாச சாத்தியங்களைப் பற்றியும் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் தியானிக்க வேண்டும் என்பது பெரும் தவறு . தங்கள் நிலைக்கேற்ற பிரகாரம் வாழ்வதற்கு குருக்களும் , துறவிகளும் இச்சத்தியங்களைப் பற்றி தியானிப்பது அவசியம் எனில் , சோதனை நிறைந்த உலகில் சிக்கிய இல்லறத்தார்களும் தங்கள் ஆத்துமத்தை இழந்து போகாவண்ணம் இச்சத்தியங்களைத் தியானிப்பது மகா அவசியம் அல்லவா ? திருச் செபமாலை தேவ இரகசியங்களில் இச்சத்தியங்கள் யாவும் எவ்வளவு நேர்த்தியாய்ப் பொதிந்திருக்கின்றன ! தேவ இரகசியங்களை தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லுவோமாக
செபம்
செபமாலை இராக்கினியே , மாசில்லா மாமரியே , பாவிகளுக்கு அடைக்கலமே , எங்கள் அன்புள்ள அன்னையை விட்டு நாங்கள் வேறெங்கே அடைக்கலம் தேடுவோம் ? பாவத்தின் வெட்கம் எங்களை மென்று தின்னும்போது உம்மிடத்தில் அல்லாமல் வேறெங்கு எங்களுக்குத் தேவையான அடைக்கலத்தையும் ஆறுதலையும் அடைவோம் ? நிச்சயமான புகலிடமாகிய இயேசுவின் திரு இருதயத்துக்கு கொண்டு போய்ச் சேர்க்கும் பாதையில் பதனமாய் எங்களை நடத்திச் சேர்த்தருளும்
மாதாவே மாமரியே நான் பாவத்தை அடிக்கடி கட்டிக் கொண்டேன் . அச்சமயங்களில் நரகத்தையோ மோட்சத்தையோ , என் மேல் நீர் கொட்டிய அன்பையோ நான் நினைக்கவில்லை . கருதவும் இல்லை . என் குற்றங்களின் ஞாபகம் இப்போது என் மனதைத் துளைக்கிறது . என் எண்ணங்களை வாட்டுகிறது . எனினும் என்னை வதைக்கும் குத்தலையும் தள்ளி வைப்பேன் . உமது அடைக்கலத்தை நம்பி இருக்கும் நான் சமாதானத்தையும் நம்பிக்கையையும் என் பாவங்களுக்கு மன்னிப்பையும் நிச்சயமாகக் கண்டடைவேன் . மதலேனா , அகுஸ்தீன் போன்றவர்களை போல ஆயிரக்கணக்கானவர்களை புன்முறுவலோடு என் ஆண்டவர் ஏற்றுக் கொண்டது போல , உம்முடைய மன்றாட்டினால் என்னையும் ஏற்றுக் கொள்வார் என்பது என் அசையா நம்பிக்கை
செபமாலை இராக்கினியே , அயராமல் எனக்காக நீர் மனுப்பேசி வருவதற்காக நான் என் முழு மனதோடு உமக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென்
சரிதை
லெப்பன்தோ (Lepanto) சண்டையில் துருக்கியர் முறியடிக்கப்பட்டனர் ; அவர்களுடைய கடல் ஆதிக்கம் நொறுங்கியது ; ஆனால் அவர்களது தரைப்படை தளரவில்லை . தலையோங்கியே நின்றது . கத்தோலிக்க ஐரோப்பாவை முழுவதும் தங்கள் அதிகாரத்துக்குள் கொண்டு வருவதே அவர்களது நோக்கம் . 1682 ஆம் ஆண்டில் அவர்கள் ஹங்கேரி தேசத்தில் நுழைந்து முன்னேறிக் கொண்டே போயினர் . அடுத்த ஆண்டு ஆஸ்திரியா தேசத்துத் தலைநகரான வியான்னாவுக்கு முற்றுகையிட்டனர் . ஆஸ்திரியா தன் சேனைகளைத் திரட்டும் முன்னரே இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட சேனை 1683 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி தாக்குதலை ஆரம்பித்தது . கிறிஸ்துவர்கள் சேனையில் ஒவ்வொரு நாளும் உயிர்ச்சேதம் ஏராளம் . போதாக்குறைக்குப் பஞ்சமும் கொள்ளை நோயும் புகுந்தன . நிர்பாக்கியம் ! மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன . வியன்னா துருக்கியர் கையில் விழுவதும் இன்றைக்கோ நாளைக்கோ என்றிருந்தது . ஆனால் லேயோப் பொல்து என்னும் சக்கரவர்த்தி தன் நம்பிக்கையை எல்லாம் செபமாலை மாதாவின் மேல் வைத்திருந்தார் . செபமாலை மாதா ஜெய மாதா அல்லவா ? திடீரென செப்டம்பர் 12 ஆம் தேதி போலந்து அரசன் துணைக்கு வந்து மூன்று தாக்குதலில் துருக்கி சேனையை தவிக்க வைத்துத் துரத்தி விட்டார் . இந்த வெற்றியின் நினைவாக செப்டெம்பர் 12 ஆம் தேதி மரிஎன்னும் நாமத்தின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது . செபமாலை இராக்கினியே வாழ்க
செபமாலை உத்தமத்தனத்தின் பாதை
புனிதர்கள் இயேசுவின் வாழ்க்கையைத் தியானிப்பதே தங்கள் கதி எனக் கருதினார்கள் . அவருடைய புண்ணியங்களையும் பாடுகளையும் பற்றி தியானித்தனர் . இவ்விதம் கிறிஸ்தவ உத்தமத்தனத்தின் உச்சியில் சேர்ந்தனர் .
அர்ச் பெர்நார்து இவ்வித தியானத்தை ஒரு முறை தொடங்கிய பின் கடைசி நாள் வரை அத்தகைய தியானத்தில் நிலைத்திருந்தார் . அவர் சொல்லுகிறார் :" நான் மனம் மாறிய துவக்கத்தில் இயேசுவின் துக்கத்தை ஓர் மலர் கொத்தாக கட்டி என் இதயத்தின் மேல் வைத்தேன் . பாடுகளின் நேரத்தில் அவரை வாதித்த அடியையும் , ஆணிகளையும் முட்களையும் பற்றி நினைத்தேன் . என் மனதின் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்து ஒவ்வொரு நாளும் இந்த இரகசியங்களைப் பற்றி தியானித்தேன் "
வேத சாட்சிகளின் வழக்கமும் இதுதான்; அதனால் பெரும் வாதனை வருத்தங்கள் மத்தியிலும் அவர்கள் அசையாமல் நின்று வெற்றி கண்டனர் . வேத சாட்சிகளின் அதிசயத்துக்குரிய உறுதியான நிலைக்குக் காரணம் இயேசுவின் காயங்களை ஓயாமல் சிந்தித்தது தான் என அர்ச் பெர்நார்து மொழிகிறார் .
தேவ தாய் தன் வாழ்க்கை முழுதும் செய்தது என்ன ? அவருடைய தேவ மகனின் புண்ணியங்களையும் பாடுகளையும் தியானித்தார் . அவருடைய பிறப்பில் சம்மனசுக்கள் சந்தோசமாய்ப் பாடுவதைக் கேட்டதையும், இடையர்கள் அவரை ஆராதிப்பதைக் கண்டதையும் , மனதில் இருத்தி இந்த அதிசயங்களைப் பற்றி தியானித்தார் . மாமிசமான வார்த்தையின் மகிமையை அவரது ஆழ்ந்த தாழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தார் . மாட்டுக் குடிலில் தூங்குபவரை அவருடைய மகிமை சிம்மாசனத்தில் மோட்சத்தில் பிதாவோடு அமர்ந்திருப்பதை தரிசித்தார் . கடவுளின் வல்லமையையும் குழந்தையின் பலவீனத்தையும் நிறுத்துப் பார்த்தார் .
ஒரு நாள் அர்ச் பிரிஜித்தம்மாளுக்கு நமதாண்டவள் சொல்லுவார் :" என் மகனின் அழகையும் அடக்கத்தையும் ஞானத்தையும் நான் தியானித்த போது என் உள்ளம் மகிழ்ச்சியால் கரை கடந்து பொங்கியது . கூர்மையான ஆணிகள் துளைக்கப்போகும் அவரது கரங்களையும் கால்களையும் கருதிய போது கண்ணீர் சொரிந்தது ; துக்கத்தாலும் வாதனையாலும் என் இதயம் பிளந்தது "
ஆண்டவரின் மோட்ச ஆரோகணத்திற்குப் பின் இயேசுவின் பாடுகளாலும் பிரசன்னத்தாலும் அர்ச்சிக்கப்பட்ட தலங்களை அடிக்கடி தரிசித்து வந்தார் . அத்தலங்களில் இருக்கும் போது அவரது அளவிறந்த அன்பையும் பயங்கரப் பாடுகளையும் பற்றி சிந்தித்தார்
முப்பதாண்டுகளாக மரிய மதலேனாள் இவ்வழக்கத்தை போமா என்ற ஊரில் தனிவாசத்தில் கையாண்டாள். திருச்சபையின் துவக்கத்தில் பரிசுத்த தலங்களைத் தரிசிக்கும் வழக்கம் சர்வ சாதாரணம் என்று அர்ச் ஜெரோம் சொல்லுகிறார் . கிறிஸ்தவர்கள் பற்பல நாடுகளில் இருந்தும் வந்து இந்த தலங்களைத் தரிசித்தனர் . இயேசு சபை ஸ்தாபகரான அர்ச் இஞ்ஞாசியார் எவ்வளவு இடைஞ்சல்களில் அவைகளைப் போய்த் தரிசித்தார் . குருக்களும் கன்னியர்களும் தான் விசுவாச சாத்தியங்களைப் பற்றியும் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் தியானிக்க வேண்டும் என்பது பெரும் தவறு . தங்கள் நிலைக்கேற்ற பிரகாரம் வாழ்வதற்கு குருக்களும் , துறவிகளும் இச்சத்தியங்களைப் பற்றி தியானிப்பது அவசியம் எனில் , சோதனை நிறைந்த உலகில் சிக்கிய இல்லறத்தார்களும் தங்கள் ஆத்துமத்தை இழந்து போகாவண்ணம் இச்சத்தியங்களைத் தியானிப்பது மகா அவசியம் அல்லவா ? திருச் செபமாலை தேவ இரகசியங்களில் இச்சத்தியங்கள் யாவும் எவ்வளவு நேர்த்தியாய்ப் பொதிந்திருக்கின்றன ! தேவ இரகசியங்களை தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லுவோமாக
செபம்
செபமாலை இராக்கினியே , மாசில்லா மாமரியே , பாவிகளுக்கு அடைக்கலமே , எங்கள் அன்புள்ள அன்னையை விட்டு நாங்கள் வேறெங்கே அடைக்கலம் தேடுவோம் ? பாவத்தின் வெட்கம் எங்களை மென்று தின்னும்போது உம்மிடத்தில் அல்லாமல் வேறெங்கு எங்களுக்குத் தேவையான அடைக்கலத்தையும் ஆறுதலையும் அடைவோம் ? நிச்சயமான புகலிடமாகிய இயேசுவின் திரு இருதயத்துக்கு கொண்டு போய்ச் சேர்க்கும் பாதையில் பதனமாய் எங்களை நடத்திச் சேர்த்தருளும்
மாதாவே மாமரியே நான் பாவத்தை அடிக்கடி கட்டிக் கொண்டேன் . அச்சமயங்களில் நரகத்தையோ மோட்சத்தையோ , என் மேல் நீர் கொட்டிய அன்பையோ நான் நினைக்கவில்லை . கருதவும் இல்லை . என் குற்றங்களின் ஞாபகம் இப்போது என் மனதைத் துளைக்கிறது . என் எண்ணங்களை வாட்டுகிறது . எனினும் என்னை வதைக்கும் குத்தலையும் தள்ளி வைப்பேன் . உமது அடைக்கலத்தை நம்பி இருக்கும் நான் சமாதானத்தையும் நம்பிக்கையையும் என் பாவங்களுக்கு மன்னிப்பையும் நிச்சயமாகக் கண்டடைவேன் . மதலேனா , அகுஸ்தீன் போன்றவர்களை போல ஆயிரக்கணக்கானவர்களை புன்முறுவலோடு என் ஆண்டவர் ஏற்றுக் கொண்டது போல , உம்முடைய மன்றாட்டினால் என்னையும் ஏற்றுக் கொள்வார் என்பது என் அசையா நம்பிக்கை
செபமாலை இராக்கினியே , அயராமல் எனக்காக நீர் மனுப்பேசி வருவதற்காக நான் என் முழு மனதோடு உமக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென்
சரிதை
லெப்பன்தோ (Lepanto) சண்டையில் துருக்கியர் முறியடிக்கப்பட்டனர் ; அவர்களுடைய கடல் ஆதிக்கம் நொறுங்கியது ; ஆனால் அவர்களது தரைப்படை தளரவில்லை . தலையோங்கியே நின்றது . கத்தோலிக்க ஐரோப்பாவை முழுவதும் தங்கள் அதிகாரத்துக்குள் கொண்டு வருவதே அவர்களது நோக்கம் . 1682 ஆம் ஆண்டில் அவர்கள் ஹங்கேரி தேசத்தில் நுழைந்து முன்னேறிக் கொண்டே போயினர் . அடுத்த ஆண்டு ஆஸ்திரியா தேசத்துத் தலைநகரான வியான்னாவுக்கு முற்றுகையிட்டனர் . ஆஸ்திரியா தன் சேனைகளைத் திரட்டும் முன்னரே இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட சேனை 1683 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி தாக்குதலை ஆரம்பித்தது . கிறிஸ்துவர்கள் சேனையில் ஒவ்வொரு நாளும் உயிர்ச்சேதம் ஏராளம் . போதாக்குறைக்குப் பஞ்சமும் கொள்ளை நோயும் புகுந்தன . நிர்பாக்கியம் ! மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன . வியன்னா துருக்கியர் கையில் விழுவதும் இன்றைக்கோ நாளைக்கோ என்றிருந்தது . ஆனால் லேயோப் பொல்து என்னும் சக்கரவர்த்தி தன் நம்பிக்கையை எல்லாம் செபமாலை மாதாவின் மேல் வைத்திருந்தார் . செபமாலை மாதா ஜெய மாதா அல்லவா ? திடீரென செப்டம்பர் 12 ஆம் தேதி போலந்து அரசன் துணைக்கு வந்து மூன்று தாக்குதலில் துருக்கி சேனையை தவிக்க வைத்துத் துரத்தி விட்டார் . இந்த வெற்றியின் நினைவாக செப்டெம்பர் 12 ஆம் தேதி மரிஎன்னும் நாமத்தின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது . செபமாலை இராக்கினியே வாழ்க
இருபத்தெட்டாம் நாள்
செபமாலையும் அர்ச் சூசையப்பரும்
பிரிக்க முடியாத மூன்று ஆட்களின் பெயர்களை பரிசுத்த ஆவியே வேதத்தில் எழுதி இருக்கிறார் . சேசு மேரி சூசை . காலா காலமும் இம்மூன்று நாமங்களும் முழங்கும் . தேவ தாயே செபமாலையைக் கொடுத்து தம் தேவ மகனின் உண்மையான சித்திரத்தை அதில் வரைந்திருக்கும் போது சூசையப்பரின் பேரும் அதில் கலக்காமல் இருக்க முடியுமா? ஒரு விதத்தில் சூசையப்பரின் இரகசிய சரிதை தான் செபமாலை என்றே சொல்லி விடலாம் . மனிதாவதாரத்திலும் ஈடேற்றத்திலும் சூசையப்பருக்குள்ள தொடர்பு என்னவென்று செபமாலையில் அறிய வருவோம் . திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி தானே ? அதில் சூசையப்பரைக் காணாமல் இருக்க முடியுமா ?
பரிசுத்த தமத்திருத்துவம் உலகத்தைப் படைத்து அதற்குத் தலைமை பூண்டு விளங்குவது போல , வேறொரு திரித்துவம் அதை ஈடேற்றுவதில் இறங்கியது . மனிதருடைய ஈடேற்றத்தில் முதல் பாகம் - முக்கிய பாகம் - இயேசுவுக்குத்தான் .அடுத்தபடியில் இரட்சகரின் தாயாகிய கன்னிமரியைக் காண்கிறோம் . இவர்கள் இருவரையும் விட்டு சூசையப்பரைப் பிரிக்க முடியுமோ? கடவுளுடைய அன்பாலும் இரக்கத்தாலும் கிறிஸ்து மேலும் மாமரியின் மேலும் இவருக்குச் செல்வாக்கை ஆண்டவர் அளித்துள்ளார் . நாசரேத்தின் திரித்துவமாகிய இம்மூவரும் கன்னிமை பூண்டவர்கள் . ஆதலால் சந்தோசத்திலும் துக்கத்திலும் இவர்கள் அதிகம் நெருங்கி நின்றனர்
இயேசுவும் மாறியும் சூசையப்பருக்குச் சொந்தம் , பத்தினி பத்தாவுக்குச் சொந்தம் அல்லவா ? இவருடைய கற்பின் நிமித்தம் , அவர்களுடைய தாம்பத்திய உறவு , ஞான உறவு அதிகம் நெருங்கிய உறவு , இயேசுவும் சூசையப்பரின் சொத்து தானே ? புனித பிரான்சிஸ் சலேசியார் சொன்ன உவமை எவ்வளவு இன்பகரமான பொருத்தமுள்ளது. ஒரு தோட்டத்திற்குள் ஒரு புறா வித்தொன்றைப் போட அது பெரிய மரமாகிப் பழுக்குமேயாகில் - தோட்டக்காரன் விதைக்காவிடினும் - அம்மரம் தோட்டக்காரனுடைய சொத்து . ஏனெனில் தோட்டம் அவனுக்குச் சொந்தம் . அதே போல் கன்னிமரி சூசையப்பரின் மெய்யான பத்தினியானபடியால் கன்னி மரியிடம் உற்பவித்த கனியாகிய இயேசுவும் சூசையப்பருக்குச் சொந்தம்
இந்த நெருங்கிய ஐக்கியத்தினால் தான் கடவுள் புனித சூசையப்பருக்கு மகத்தான அருட்கொடைகளை அளித்திருந்தார் . முதல் நாளில் இருந்து வந்த மரபை உறுதிப்படுத்தி புனித பொன்வாய் அருளப்பர் சொல்லுவார் . புனித சூசையப்பர் பிறக்கும் முன்னரே ஜென்ம பாவத்தில் இருந்து கழுவப் பெற்றார். தேவ தாய்க்கு அடுத்தபடியில் புனித சூசையப்பர் வரப்பிரசாதத்தின் ஊற்றாகிய இயேசுவோடு அதிகமதிகம் நெருங்கி இருந்த படியினால் பெரும் கிருபைகளைப் பெற்றார் . குழந்தை இயேசுவை தன் கரத்தில் ஏந்திச் சென்ற போதும் அவருக்குக் கன்னி முத்தம் அளித்த போதும் எவ்வளவு அன்னியோன்னிய ஆத்தும ஒற்றுமை பலித்திருக்கும் . சூசையப்பரிடத்தில் காண முடியாத புண்ணியம் இல்லை என்றே சொல்லலாம்
சூரிய பிரகாசம் ஒரு கண்ணாடியில் பாய அவ்வொளி அக்கண்ணாடியில் இருந்து பிரதிபலிக்குமேயாகில் இரண்டும் ஒரே பிரகாசமாகத்தான் விளங்கும் . அது போல சூசையப்பர் நேர் முகமாக எல்லா ஞானத்தையும் இயேசுவிடம் இருந்து பெறாவிடினும் தேவதாயிடமிருந்து பெற்றார். அவர் உள்ளத்தில் ஞானப் பிரகாசத்தை ஊற்றியவர் இயேசு . ஆதலால் சூசையப்பரின் உள்ளம் இயேசுவின் புண்ணியங்களால் பிரகாசிக்கிறது
இதனால் தான் தேவ இரகசியங்கள் முழுவதிலும் சூசையப்பரைக் காண்கிறோம் . இயேசுவின் பகிரங்க வாழ்க்கைக்கு முன்னர் இயேசு மேரி கரத்தில் சூசையப்பர் தன் உயிரைக் கொடுத்தார் என்பது ஐதீகம் . இயேசுநாதர் உயிர் விட்டவுடன் பாதாளம் சென்று பரகதியின் பாக்கியத்தை அங்கு உள்ளோருக்கு அளித்தார் . சூசையப்பருக்கு என்ன பாக்கியம், என்ன மகிழ்ச்சி ! இயேசு அவர்களைத் தம் கல்லறைக்கு அழைத்து வந்து உத்தானத்திற்கு முன் தம் காயங்களைக் காட்டியபோது புனித சூசையப்பர் எவ்வளவு தூரம் இயேசுவின் பாடுகளை உணர்ந்து அவைகளோடு ஒன்றித்துப் போயிருப்பார் . தேவ தாய்க்கு காட்சி கொடுத்த உயிர்த்த இயேசு தம் கைத்தாதைக்கும் தம் மகிமையைக் காட்டாமல் இருப்பாரோ ? மோட்ச ஆரோகணத்தின் போது தன் கைத்தாதையையும் தானே இயேசு அழைத்துக் கொண்டு போனார் . திருச்சபைக்குப் பாதுகாவலராக இருக்க வேண்டிய சூசையப்பர் , திருச்சபை பிறந்த சமயம் - பரிசுத்த ஆவியானவர் இறங்கின சமயம் - அங்கில்லாமலா இருந்திருப்பார் ? புனித சூசையப்பர் செபமாலையின் தேவ இரகசியங்கள் முழுதும் தோன்றுகிறார் என்றே சொல்லலாம்
திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி . அதே போல் ஒவ்வொரு கிறிஸ்துவக் குடும்பமும் திருக்குடும்பத்தின் தொடர்ச்சி . திருக்குடும்பத்தில் அவரது அலுவல் எத்தகையதோ அதே அலுவல் அவருக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு . உலக காரியத்திலும் - பழைய ஏற்பாட்டு சூசையைப் போல - ஞானக் காரியத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கு உதவி செய்கிறார்
குழந்தை இயேசுவை வளர்த்த சூசையப்பருக்கு குழந்தைகள் மேல் அன்பு. அதே போல் தொழிலாளர்களுக்கும் , கண்ணியர்களுக்கும், துன்பப்படுவோருக்கும் அகதிகளுக்கும் அவர் அன்பர் . உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கும் அவர் நண்பர் . பாதாளத்தில் இருந்த போது மோட்ச பாக்கியம் இல்லாத குறையை - மோட்சம் போன பின்பு கண்டுபிடித்திருப்பார் அல்லவா ?
16 ம் நூற்றாண்டில் ஒரு குருவானவர் சொல்லுவார் :" தேவதாயின் பிரமாநிக்கமுள்ள தாசர்கலே , தேவ தாயின் செபமாலையைச் சொல்லும்போது அதன் முடிவில் அவர் பத்தாவாகிய சூசையப்பரைக் கண்டு ஒரு சிறு செபம் சொல்லுவது கஷ்டம் என்று எண்ணாதீர்கள் .இச்சிறு காணிக்கை கடவுளுக்கு மகாப் பிரியமாயிருக்கும் ; வானத்தையும் பூமியையும் மகிழ்விக்கும் ; இயேசுவின் கைத்தாதைக்குச் சாற்றும் துதியை கண்டு மோட்ச வாசிகள் அக்களிப்பார்கள் . இதனால் புனித சூசையப்பரின் மன்றாட்டால் வானுலக கிருபைகள் பூமியின் மேல் பொழியும் . 1889 ம் ஆண்டு 13ம் சிங்கராயர் பகிரங்கமாக , செபமாலை சொன்னபின் சூசையப்புக்கு ஒரு சிறு செபம் சொல்லச் சொன்னார் . அதை அவரே இயற்றினார் . செபமாலை முடிந்த பின் புனித சூசையப்பரிடம் திரும்பும்படி புனித பத்தாம் பத்தினாதரும் கேட்டுக் கொண்டார்
13 ஆம் சிங்கராயர் அர்ச் சூசையப்பர் பேரில் செய்த செபம்
அர்ச் சூசையப்பரே ! எங்களுடைய துன்ப துயரங்களில் உம்முடைய சரணமாக ஓடி வந்தோம் . உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின் உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறோம் . தேவ தாயாரான அமலோற்பவ கன்னி மரியாளின் பேரில் நீர் வைத்திருக்கிற அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து , அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய்ப் பார்த்தருளி எங்கள் தேவைகளிலே உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம் . திருக்குடும்பத்தைக் காத்து நடத்திய காவலனே ! இயேசுக்கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும் . அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே ! சகல பாவ மாசுகளிநின்றும் எங்களை தற்காத்தருளும்
வல்லமை பொருந்திய காவலனே , எங்கள் சத்துருக்களோடு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும் . மரண ஆபத்திலிருந்து திவ்விய பாலனை அன்று மீட்டு இரட்சித்தது போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் இருந்தும் இக்கட்டு இடையூறுகளில் இருந்தும் திருச்சபையைப் பாதுகாத்தருளும் . உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரியைப் பின்பற்றி பரிச்த்தமாய் சீவித்து பக்தியை மறித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும் ஆமென்
செபம்
செபமாலை இராக்கினியே , அமலோற்பவ மாதாவே ! எல்லா நாடுகளுக்கும் அரசியே , ஒரு பக்கம் எங்களைப் பயம் பிடித்திருந்தாலும் மறுபக்கம் உமது ஆதரவை நம்பி நிற்கிறோம் . நாஸ்திக நாச வலை கிழிந்து படுமென்றும் , தெய்வத்தை எண்ணாத சக்திகள் அனைத்தும் அழிந்து படும் என்றும் நீர் சொல்லாவிடில் நம்புவது எங்களுக்கு எளிதாய் இருந்திராது . ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லும் நாடு மனந்திரும்பும் என்ற உமது மதுர வாக்கு எல்லா நாடுகளுக்கும் அமைதியை அளிக்கிறது
வீடற்ற குழந்தைகளையும் நாடற்ற அகதிகளையும் எங்கள் எண்ணம் நாடுகிறது . இன்னும் கொலைகள் நிற்கவில்லையே . தேசத்தை விழுங்க அழிவு சக்தியின் சூழ்ச்சிகளை பல நாடுகள் அறியாமலோ ,பயத்தினால் எடுத்துக் காட்டத் துணியாமலோ பெரும் ஆபத்தில் விழும் தருவாயில் இருக்கின்றனவே , அழிந்த வித்திலிருந்து அழகான பூச்செடிகள் மலர்வது போல , நாசத்திற்குப் பின்னும் நீர் நாடுகளை எழுப்பக் கூடும் . எனினும் தாயே , வேத விரோதிகளின் கொடுமைகளை நினைக்கக் குலை நடுங்குகிறதே . உம பத்தாவாகிய புனித சூசையப்பரும் நீரும் கொலைகார ஏரோதன் கையிலிருந்து இயேசு குழந்தையைக் காப்பாற்றியதை நினைவு கூர்ந்து சீக்கிரம் அழிவு சக்திகளைப் பூண்டோடு அழித்து உலகில் அமைதியை நிலைநாட்டும் தாயே . எங்கள் மக்கள் உமது குரலுக்குச் செவி சாய்க்கவில்லையே, தங்கள் பாவ நாட்டங்களை விட்டு விட்டு உமது திருமகன் பாதம் சேரவில்லையே . உமது செபமாலையைப் பலர் செபித்தாலும் பக்தியாய்ச் செபிக்கிறார்களா? எங்கள் உள்ளத்தை முதன் முதல் சீர்ப்படுத்தி உலகிற்கு சீக்கிரம் அமைதியைக் கொண்டு வாரும் , அம்மா , செபமாலை மாதாவே ஆமென்
சரிதை
அர்ச் பெல்லார்மின் இயேசு சபையைச் சேர்ந்த துறவி . பக்திமான் . புனித ஞானப்பிரகாசியாருக்கு ஆத்தும குருவானவராக இருந்து அர்ச்சியசிஷ்டதனத்தின் கொடுமுடிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தவர் . மெய் இயல் , இறை இயல் இவற்றில் சிறந்த அறிவாளி . பிரசங்கத்தில் வல்லுநர் . வேதத்தைப் பற்றி அவர் எழுதிய நூல்களைக் கண்டாலே நமக்கு அச்சம் ; உள்ளத்தை உருக்கி எடுக்கும் பக்தி நூல்களையும் எழுதியவர்
அவருக்கு சிறுவயதிலிருந்தே தேவ தாயின் மேல் மிகுந்த பக்தி . சிறு பையனாக இருக்கும்போதே சக மாணவன் ஒருவனோடு தெரு வழியே போகும்போது தேவ தாயின் மந்திர மாலையையும் ,செபமாலையையும் சொல்லிக் கொண்டே நடப்பார் . உயிருள்ளவரையில் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்ல தவறியதில்லை . மகாக் கடினமான உழைப்பில் ஈடுபட்டிருந்த இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்க ஏற்படுத்திய சங்கத்தில் வந்த சாட்சி ஒருவர் சொல்லுவார் " செபமாலை சொல்ல இவர் தவறியதே இல்லை . அதைச் சொல்லும் போதே கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் " செபமாலையை நாளொன்றுக்கு ஒரு முறை தான் இவர் சொல்லி வந்தார் என்று கருதலாகாது . செபமாலை தான் இவருக்கு சதா தோழன் . படிப்பினால் களைப்புற்றிருக்கும் போது வெறும் தலையுடன் (குளிர் நாடுகளில் தலையை மூடாமல் இருப்பது பெரும் வாதனை ) செபமாலை சொல்லுவார் . காப்புவா நகரப் பேராயராக இருந்த போது அடிக்கடி செய்ய நேரிட்ட பயணங்களில் வண்டிக்குள் நுழைந்த உடனே செபமாலையைக் கையில் எடுத்துக் கொள்ளுவார்
1618 ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி புனித இராயப்பர் பேராலயத்தில் நர்கருனைச் சுற்றுப் பிரகாரம் எல்லாம் முடிந்தது . தன் நம்பரிடம் சொல்லுவார் . "சுற்றுப் பிரகாரம் முழுதும் மூன்று முறை 50 மணிச் செபம் செய்ய நேரம் இருந்தது " . நண்பர் அவரைக் கேட்டார் " நீங்கள் செபமாலையை எப்படிச் சொல்லுகிறீர்கள் ?" " பத்துக்கும் பத்துக்கும் இடையில் கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லுகிறேன் (இந்தச் சம்பிரதாய முறை அப்போதுவழக்கில் இல்லை ) ஒவ்வொரு பத்தும் முடிந்த பின் அவ்வந்த தேவ இரகசியத்திற்கு ஏற்ப ஒரு சிறு செபம் சொல்லுகிறேன் .அதன் பின் அடுத்த தேவ இரகசியத்தைப் பற்றி சற்றே தியானிக்கிறேன் " பின் வெகு அழுத்தமாய்ச் சொன்னார் " அருள் நிறைந்த மரியே என்ற சம்மனசின் மங்கலத்தை நிறுத்தி நிறுத்திச் சொல்லுகிறேன் . இம்மூன்று செபமாலைக்குத் தான் சுற்றுப் பிரகாரத்தில் நேரம் இருந்தது . வேறொரு வார்த்தைக்கு நேரமில்லை "
இவர் இவ்வளவு கவனமாய்ச் செபமாலை சொல்லி வந்ததால் தான் இவருக்கு செபமாலை சொல்லுவது அதிகக் களைப்பை ஏற்ப்படுத்தியது என்று அவரைத் தெரிந்தவர்கள் எண்ணி இருந்தனர் . இவர் மரிக்கும் முன் வியாதியாய் இருந்த காலை இவரை அறிந்திருந்த வைத்தியர் மந்திர மாலையையும் செபமாலையையும் சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டார் . அவருக்கோ செபமாலை சொல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது .அதலால் சிறிது நாள் சென்று சிறிது நேரம் மட்டும் செபமாலை சொல்ல வைத்தியர் அனுமதித்தார் . தேவ தாய்க்கும் அவர் மகனுக்கும் அதிக பிரியத்தைக் கொடுக்கக்கூடியதும் புண்ணியத்தில் வளரப் பெரிதும் உதவக்கூடியதுமான வழி தினந்தோறும் தவறாமல் செபமாலை சொல்லி வருவதாம் என்பார் இந்தப் புனிதர் .
செபமாலையும் அர்ச் சூசையப்பரும்
பிரிக்க முடியாத மூன்று ஆட்களின் பெயர்களை பரிசுத்த ஆவியே வேதத்தில் எழுதி இருக்கிறார் . சேசு மேரி சூசை . காலா காலமும் இம்மூன்று நாமங்களும் முழங்கும் . தேவ தாயே செபமாலையைக் கொடுத்து தம் தேவ மகனின் உண்மையான சித்திரத்தை அதில் வரைந்திருக்கும் போது சூசையப்பரின் பேரும் அதில் கலக்காமல் இருக்க முடியுமா? ஒரு விதத்தில் சூசையப்பரின் இரகசிய சரிதை தான் செபமாலை என்றே சொல்லி விடலாம் . மனிதாவதாரத்திலும் ஈடேற்றத்திலும் சூசையப்பருக்குள்ள தொடர்பு என்னவென்று செபமாலையில் அறிய வருவோம் . திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி தானே ? அதில் சூசையப்பரைக் காணாமல் இருக்க முடியுமா ?
பரிசுத்த தமத்திருத்துவம் உலகத்தைப் படைத்து அதற்குத் தலைமை பூண்டு விளங்குவது போல , வேறொரு திரித்துவம் அதை ஈடேற்றுவதில் இறங்கியது . மனிதருடைய ஈடேற்றத்தில் முதல் பாகம் - முக்கிய பாகம் - இயேசுவுக்குத்தான் .அடுத்தபடியில் இரட்சகரின் தாயாகிய கன்னிமரியைக் காண்கிறோம் . இவர்கள் இருவரையும் விட்டு சூசையப்பரைப் பிரிக்க முடியுமோ? கடவுளுடைய அன்பாலும் இரக்கத்தாலும் கிறிஸ்து மேலும் மாமரியின் மேலும் இவருக்குச் செல்வாக்கை ஆண்டவர் அளித்துள்ளார் . நாசரேத்தின் திரித்துவமாகிய இம்மூவரும் கன்னிமை பூண்டவர்கள் . ஆதலால் சந்தோசத்திலும் துக்கத்திலும் இவர்கள் அதிகம் நெருங்கி நின்றனர்
இயேசுவும் மாறியும் சூசையப்பருக்குச் சொந்தம் , பத்தினி பத்தாவுக்குச் சொந்தம் அல்லவா ? இவருடைய கற்பின் நிமித்தம் , அவர்களுடைய தாம்பத்திய உறவு , ஞான உறவு அதிகம் நெருங்கிய உறவு , இயேசுவும் சூசையப்பரின் சொத்து தானே ? புனித பிரான்சிஸ் சலேசியார் சொன்ன உவமை எவ்வளவு இன்பகரமான பொருத்தமுள்ளது. ஒரு தோட்டத்திற்குள் ஒரு புறா வித்தொன்றைப் போட அது பெரிய மரமாகிப் பழுக்குமேயாகில் - தோட்டக்காரன் விதைக்காவிடினும் - அம்மரம் தோட்டக்காரனுடைய சொத்து . ஏனெனில் தோட்டம் அவனுக்குச் சொந்தம் . அதே போல் கன்னிமரி சூசையப்பரின் மெய்யான பத்தினியானபடியால் கன்னி மரியிடம் உற்பவித்த கனியாகிய இயேசுவும் சூசையப்பருக்குச் சொந்தம்
இந்த நெருங்கிய ஐக்கியத்தினால் தான் கடவுள் புனித சூசையப்பருக்கு மகத்தான அருட்கொடைகளை அளித்திருந்தார் . முதல் நாளில் இருந்து வந்த மரபை உறுதிப்படுத்தி புனித பொன்வாய் அருளப்பர் சொல்லுவார் . புனித சூசையப்பர் பிறக்கும் முன்னரே ஜென்ம பாவத்தில் இருந்து கழுவப் பெற்றார். தேவ தாய்க்கு அடுத்தபடியில் புனித சூசையப்பர் வரப்பிரசாதத்தின் ஊற்றாகிய இயேசுவோடு அதிகமதிகம் நெருங்கி இருந்த படியினால் பெரும் கிருபைகளைப் பெற்றார் . குழந்தை இயேசுவை தன் கரத்தில் ஏந்திச் சென்ற போதும் அவருக்குக் கன்னி முத்தம் அளித்த போதும் எவ்வளவு அன்னியோன்னிய ஆத்தும ஒற்றுமை பலித்திருக்கும் . சூசையப்பரிடத்தில் காண முடியாத புண்ணியம் இல்லை என்றே சொல்லலாம்
சூரிய பிரகாசம் ஒரு கண்ணாடியில் பாய அவ்வொளி அக்கண்ணாடியில் இருந்து பிரதிபலிக்குமேயாகில் இரண்டும் ஒரே பிரகாசமாகத்தான் விளங்கும் . அது போல சூசையப்பர் நேர் முகமாக எல்லா ஞானத்தையும் இயேசுவிடம் இருந்து பெறாவிடினும் தேவதாயிடமிருந்து பெற்றார். அவர் உள்ளத்தில் ஞானப் பிரகாசத்தை ஊற்றியவர் இயேசு . ஆதலால் சூசையப்பரின் உள்ளம் இயேசுவின் புண்ணியங்களால் பிரகாசிக்கிறது
இதனால் தான் தேவ இரகசியங்கள் முழுவதிலும் சூசையப்பரைக் காண்கிறோம் . இயேசுவின் பகிரங்க வாழ்க்கைக்கு முன்னர் இயேசு மேரி கரத்தில் சூசையப்பர் தன் உயிரைக் கொடுத்தார் என்பது ஐதீகம் . இயேசுநாதர் உயிர் விட்டவுடன் பாதாளம் சென்று பரகதியின் பாக்கியத்தை அங்கு உள்ளோருக்கு அளித்தார் . சூசையப்பருக்கு என்ன பாக்கியம், என்ன மகிழ்ச்சி ! இயேசு அவர்களைத் தம் கல்லறைக்கு அழைத்து வந்து உத்தானத்திற்கு முன் தம் காயங்களைக் காட்டியபோது புனித சூசையப்பர் எவ்வளவு தூரம் இயேசுவின் பாடுகளை உணர்ந்து அவைகளோடு ஒன்றித்துப் போயிருப்பார் . தேவ தாய்க்கு காட்சி கொடுத்த உயிர்த்த இயேசு தம் கைத்தாதைக்கும் தம் மகிமையைக் காட்டாமல் இருப்பாரோ ? மோட்ச ஆரோகணத்தின் போது தன் கைத்தாதையையும் தானே இயேசு அழைத்துக் கொண்டு போனார் . திருச்சபைக்குப் பாதுகாவலராக இருக்க வேண்டிய சூசையப்பர் , திருச்சபை பிறந்த சமயம் - பரிசுத்த ஆவியானவர் இறங்கின சமயம் - அங்கில்லாமலா இருந்திருப்பார் ? புனித சூசையப்பர் செபமாலையின் தேவ இரகசியங்கள் முழுதும் தோன்றுகிறார் என்றே சொல்லலாம்
திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி . அதே போல் ஒவ்வொரு கிறிஸ்துவக் குடும்பமும் திருக்குடும்பத்தின் தொடர்ச்சி . திருக்குடும்பத்தில் அவரது அலுவல் எத்தகையதோ அதே அலுவல் அவருக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு . உலக காரியத்திலும் - பழைய ஏற்பாட்டு சூசையைப் போல - ஞானக் காரியத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கு உதவி செய்கிறார்
குழந்தை இயேசுவை வளர்த்த சூசையப்பருக்கு குழந்தைகள் மேல் அன்பு. அதே போல் தொழிலாளர்களுக்கும் , கண்ணியர்களுக்கும், துன்பப்படுவோருக்கும் அகதிகளுக்கும் அவர் அன்பர் . உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கும் அவர் நண்பர் . பாதாளத்தில் இருந்த போது மோட்ச பாக்கியம் இல்லாத குறையை - மோட்சம் போன பின்பு கண்டுபிடித்திருப்பார் அல்லவா ?
16 ம் நூற்றாண்டில் ஒரு குருவானவர் சொல்லுவார் :" தேவதாயின் பிரமாநிக்கமுள்ள தாசர்கலே , தேவ தாயின் செபமாலையைச் சொல்லும்போது அதன் முடிவில் அவர் பத்தாவாகிய சூசையப்பரைக் கண்டு ஒரு சிறு செபம் சொல்லுவது கஷ்டம் என்று எண்ணாதீர்கள் .இச்சிறு காணிக்கை கடவுளுக்கு மகாப் பிரியமாயிருக்கும் ; வானத்தையும் பூமியையும் மகிழ்விக்கும் ; இயேசுவின் கைத்தாதைக்குச் சாற்றும் துதியை கண்டு மோட்ச வாசிகள் அக்களிப்பார்கள் . இதனால் புனித சூசையப்பரின் மன்றாட்டால் வானுலக கிருபைகள் பூமியின் மேல் பொழியும் . 1889 ம் ஆண்டு 13ம் சிங்கராயர் பகிரங்கமாக , செபமாலை சொன்னபின் சூசையப்புக்கு ஒரு சிறு செபம் சொல்லச் சொன்னார் . அதை அவரே இயற்றினார் . செபமாலை முடிந்த பின் புனித சூசையப்பரிடம் திரும்பும்படி புனித பத்தாம் பத்தினாதரும் கேட்டுக் கொண்டார்
13 ஆம் சிங்கராயர் அர்ச் சூசையப்பர் பேரில் செய்த செபம்
அர்ச் சூசையப்பரே ! எங்களுடைய துன்ப துயரங்களில் உம்முடைய சரணமாக ஓடி வந்தோம் . உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின் உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறோம் . தேவ தாயாரான அமலோற்பவ கன்னி மரியாளின் பேரில் நீர் வைத்திருக்கிற அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து , அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய்ப் பார்த்தருளி எங்கள் தேவைகளிலே உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம் . திருக்குடும்பத்தைக் காத்து நடத்திய காவலனே ! இயேசுக்கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும் . அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே ! சகல பாவ மாசுகளிநின்றும் எங்களை தற்காத்தருளும்
வல்லமை பொருந்திய காவலனே , எங்கள் சத்துருக்களோடு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும் . மரண ஆபத்திலிருந்து திவ்விய பாலனை அன்று மீட்டு இரட்சித்தது போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் இருந்தும் இக்கட்டு இடையூறுகளில் இருந்தும் திருச்சபையைப் பாதுகாத்தருளும் . உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரியைப் பின்பற்றி பரிச்த்தமாய் சீவித்து பக்தியை மறித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும் ஆமென்
செபம்
செபமாலை இராக்கினியே , அமலோற்பவ மாதாவே ! எல்லா நாடுகளுக்கும் அரசியே , ஒரு பக்கம் எங்களைப் பயம் பிடித்திருந்தாலும் மறுபக்கம் உமது ஆதரவை நம்பி நிற்கிறோம் . நாஸ்திக நாச வலை கிழிந்து படுமென்றும் , தெய்வத்தை எண்ணாத சக்திகள் அனைத்தும் அழிந்து படும் என்றும் நீர் சொல்லாவிடில் நம்புவது எங்களுக்கு எளிதாய் இருந்திராது . ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லும் நாடு மனந்திரும்பும் என்ற உமது மதுர வாக்கு எல்லா நாடுகளுக்கும் அமைதியை அளிக்கிறது
வீடற்ற குழந்தைகளையும் நாடற்ற அகதிகளையும் எங்கள் எண்ணம் நாடுகிறது . இன்னும் கொலைகள் நிற்கவில்லையே . தேசத்தை விழுங்க அழிவு சக்தியின் சூழ்ச்சிகளை பல நாடுகள் அறியாமலோ ,பயத்தினால் எடுத்துக் காட்டத் துணியாமலோ பெரும் ஆபத்தில் விழும் தருவாயில் இருக்கின்றனவே , அழிந்த வித்திலிருந்து அழகான பூச்செடிகள் மலர்வது போல , நாசத்திற்குப் பின்னும் நீர் நாடுகளை எழுப்பக் கூடும் . எனினும் தாயே , வேத விரோதிகளின் கொடுமைகளை நினைக்கக் குலை நடுங்குகிறதே . உம பத்தாவாகிய புனித சூசையப்பரும் நீரும் கொலைகார ஏரோதன் கையிலிருந்து இயேசு குழந்தையைக் காப்பாற்றியதை நினைவு கூர்ந்து சீக்கிரம் அழிவு சக்திகளைப் பூண்டோடு அழித்து உலகில் அமைதியை நிலைநாட்டும் தாயே . எங்கள் மக்கள் உமது குரலுக்குச் செவி சாய்க்கவில்லையே, தங்கள் பாவ நாட்டங்களை விட்டு விட்டு உமது திருமகன் பாதம் சேரவில்லையே . உமது செபமாலையைப் பலர் செபித்தாலும் பக்தியாய்ச் செபிக்கிறார்களா? எங்கள் உள்ளத்தை முதன் முதல் சீர்ப்படுத்தி உலகிற்கு சீக்கிரம் அமைதியைக் கொண்டு வாரும் , அம்மா , செபமாலை மாதாவே ஆமென்
சரிதை
அர்ச் பெல்லார்மின் இயேசு சபையைச் சேர்ந்த துறவி . பக்திமான் . புனித ஞானப்பிரகாசியாருக்கு ஆத்தும குருவானவராக இருந்து அர்ச்சியசிஷ்டதனத்தின் கொடுமுடிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தவர் . மெய் இயல் , இறை இயல் இவற்றில் சிறந்த அறிவாளி . பிரசங்கத்தில் வல்லுநர் . வேதத்தைப் பற்றி அவர் எழுதிய நூல்களைக் கண்டாலே நமக்கு அச்சம் ; உள்ளத்தை உருக்கி எடுக்கும் பக்தி நூல்களையும் எழுதியவர்
அவருக்கு சிறுவயதிலிருந்தே தேவ தாயின் மேல் மிகுந்த பக்தி . சிறு பையனாக இருக்கும்போதே சக மாணவன் ஒருவனோடு தெரு வழியே போகும்போது தேவ தாயின் மந்திர மாலையையும் ,செபமாலையையும் சொல்லிக் கொண்டே நடப்பார் . உயிருள்ளவரையில் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்ல தவறியதில்லை . மகாக் கடினமான உழைப்பில் ஈடுபட்டிருந்த இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்க ஏற்படுத்திய சங்கத்தில் வந்த சாட்சி ஒருவர் சொல்லுவார் " செபமாலை சொல்ல இவர் தவறியதே இல்லை . அதைச் சொல்லும் போதே கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் " செபமாலையை நாளொன்றுக்கு ஒரு முறை தான் இவர் சொல்லி வந்தார் என்று கருதலாகாது . செபமாலை தான் இவருக்கு சதா தோழன் . படிப்பினால் களைப்புற்றிருக்கும் போது வெறும் தலையுடன் (குளிர் நாடுகளில் தலையை மூடாமல் இருப்பது பெரும் வாதனை ) செபமாலை சொல்லுவார் . காப்புவா நகரப் பேராயராக இருந்த போது அடிக்கடி செய்ய நேரிட்ட பயணங்களில் வண்டிக்குள் நுழைந்த உடனே செபமாலையைக் கையில் எடுத்துக் கொள்ளுவார்
1618 ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி புனித இராயப்பர் பேராலயத்தில் நர்கருனைச் சுற்றுப் பிரகாரம் எல்லாம் முடிந்தது . தன் நம்பரிடம் சொல்லுவார் . "சுற்றுப் பிரகாரம் முழுதும் மூன்று முறை 50 மணிச் செபம் செய்ய நேரம் இருந்தது " . நண்பர் அவரைக் கேட்டார் " நீங்கள் செபமாலையை எப்படிச் சொல்லுகிறீர்கள் ?" " பத்துக்கும் பத்துக்கும் இடையில் கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லுகிறேன் (இந்தச் சம்பிரதாய முறை அப்போதுவழக்கில் இல்லை ) ஒவ்வொரு பத்தும் முடிந்த பின் அவ்வந்த தேவ இரகசியத்திற்கு ஏற்ப ஒரு சிறு செபம் சொல்லுகிறேன் .அதன் பின் அடுத்த தேவ இரகசியத்தைப் பற்றி சற்றே தியானிக்கிறேன் " பின் வெகு அழுத்தமாய்ச் சொன்னார் " அருள் நிறைந்த மரியே என்ற சம்மனசின் மங்கலத்தை நிறுத்தி நிறுத்திச் சொல்லுகிறேன் . இம்மூன்று செபமாலைக்குத் தான் சுற்றுப் பிரகாரத்தில் நேரம் இருந்தது . வேறொரு வார்த்தைக்கு நேரமில்லை "
இவர் இவ்வளவு கவனமாய்ச் செபமாலை சொல்லி வந்ததால் தான் இவருக்கு செபமாலை சொல்லுவது அதிகக் களைப்பை ஏற்ப்படுத்தியது என்று அவரைத் தெரிந்தவர்கள் எண்ணி இருந்தனர் . இவர் மரிக்கும் முன் வியாதியாய் இருந்த காலை இவரை அறிந்திருந்த வைத்தியர் மந்திர மாலையையும் செபமாலையையும் சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டார் . அவருக்கோ செபமாலை சொல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது .அதலால் சிறிது நாள் சென்று சிறிது நேரம் மட்டும் செபமாலை சொல்ல வைத்தியர் அனுமதித்தார் . தேவ தாய்க்கும் அவர் மகனுக்கும் அதிக பிரியத்தைக் கொடுக்கக்கூடியதும் புண்ணியத்தில் வளரப் பெரிதும் உதவக்கூடியதுமான வழி தினந்தோறும் தவறாமல் செபமாலை சொல்லி வருவதாம் என்பார் இந்தப் புனிதர் .
இருபத்தொன்பதாம் நாள்
செபமாலையும் சம்மனசுக்களும்
செபமாலை சொல்லும் வழக்கம் சிறிது பரவின காலை சம்மனசுக்களின் பக்தியும் பெரிதும் போற்றப்பட்டது என்று சொல்லலாம் . 12ம் நூற்றாண்டில் பற்பல தப்பறைகள் சம்மனசுக்க்ளைப் பற்றி நடமாடின . 1215 ஆம் ஆண்டில் 4ம் லூத்தரன் பொதுச்சங்கம் அழுத்தமாக தெளிவாய் மொழிந்தது என்னவெனில் , சம்மனசுக்கள் படைக்கப்பட்டவர்கள் . மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் சம்மனசுக்களைப் படைத்தார். வேதத்தில் சம்மனசுக்களுக்கு வழங்கும் பேரின் தமிழாக்கம் அஞ்சல் தூதர்கள் என்பதாம் .அவர்கள் சுத்த அரூபிகள் . உடலோடு - மனிதனைப் போல - இணைக்கப்படாதவர்கள் . இணைக்கப்படவும் உண்டாக்கப்பட்டவர்கள் அல்லர் அவர்கள் . அருமையான கானங்கள் இசைத்து ஆண்டவர் அருகில் அமர்ந்து அவரைத் துதித்து தோத்தரிக்கின்றனர். ஒரு நாளும் பாவத்தை அறியாதவர்கள் . ஆனதால் அவர்கள் கொழுந்து விட்டு எரியும் சிநேகத்தின் சோதிச் சுடர்கள் . கடவுளுடைய வேலைப்பாட்டின் மணிகள் , இறைவனுடைய ஆணைக்கு விரைந்து பணியத் தயாராய் இருக்கின்றனர்
கடவுள் அவர்களுக்குப் பிறகு மனுமக்களைப் படைத்தார் . மனிதர்களும் அவருடைய சட்டங்களுக்குப் பணிந்து ஈடேற்றத்தைச் சம்பாதிக்க வேண்டியவர்கள் . இச்சட்டம், இக்கதி , கடவுளின் இந்த இனிமையான நோக்கம் மனிதனுக்கு நன்றாய்த் தெரியும் . எனினும் பழைய ஏற்பாட்டின் காலத்திலும் புதிய சட்டத்தின் நாளிலும் இறைவனுடைய மதுரமான சித்தத்தை மனிதருக்கு அறிவிக்க கண்ணுக்குத் தோன்றும் விதம் சம்மனசுக்கள் தோன்றி இருக்கிறார்கள் . தோன்றுகிறார்கள் . ஈடேற்றத்தின் மக்களுக்கு உதவி செய்யும் ஆவிகள் என்று அவர்களைக் குறித்து சின்னப்பர் சொல்லிப் போனார் அல்லவா ? நமது ஈடேற்றத்தை நிறைவேற்றியவர் மனித அவதாரம் எடுத்த தேவ குமாரன் ஆனபடியால் அவருக்குப் பணிந்து நடக்கும் அவ்வலுவலில் அவர்களும் பங்கெடுப்பதில் அதிசயம் உண்டா ? ஆதலின் செபமாலையின் இரகசியங்களில் மறைந்தோ திறந்தோ சம்மனசுக்கள் தோன்றுவதைக் காண்கிறோம்
சம்மனசுக்களின் ஒன்பது விலாசம் , அவர்கள் எண்ணிக்கை அநந்தம். நம் கணக்குக்கு எட்டாதவை . கால பரிபூரணம் வந்த போது ஆதாமுக்கு ஆண்டவர் அளித்த வாக்கு நிறைவேறும் நாள் வந்தபோது அச்சுப செய்தியை அறிவிக்க கபிரியேல் என்னும் அதிதூதர் அனுப்பப்பட்டார்
கன்னிமரி செபத்தில் ஆழ்ந்திருந்தபோதோ , வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதோ அழகு வடியும் இந்த அஞ்சல் தூதர் மரிக்கு அதை அறிவிக்க அனுப்பப்பட்டார் . பிதாவாகிய கடவுளே உருவாக்கிய மேலான இதமான " அருள் நிறைந்த மரியே " என்ற வாசகத்தை முதன் முதல் உச்சரிக்கக் கபிரியேல் பாக்கியம் பெற்றார் . தம் புத்தி சாதுரியத்தினால் கன்னியின் சந்தேகங்களைத் தீர்த்து அவரது சம்மதத்தைப் பெற்று ஆவலோடு காத்திருந்த சம்மனசுக்களின் கூட்டத்திற்கு " வார்த்தையானவர் மனு உருவானார் " என்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை அறிவித்தார் . நவவிலாச சம்மனசுக்களுக்கு பொங்கி வழிந்த மகிழ்ச்சியை எடுத்து மொழிய முடியுமா ?
அடுத்த ஒன்பது மாதங்கள் அவர்கள் எவ்விதம் தங்கள் ஆனந்தத்தை வெளிக்காட்டாமல் அடக்கி வைத்திருந்தார்கள் என்பது ஒரு அதிசயம் . கடைசியில் முதல் கிறிஸ்துமஸ் வந்தது . கூட்டம் கூட்டமாய் மாலை மாலையாய் விண்ணுலகை விட்டு வானதூதர்கள் மண்ணுலகுக்கு இறங்கினர் . " உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாவதாக " என்று இசைத்தனர் . மோட்சத்தில் தங்களுக்கு தோழர்களாக இருக்க வேண்டிய மானிடரையும் மறக்காமல் " பூலோகத்தில் நல்ல மனதுள்ளோருக்கு சமாதானம் உண்டாவதாக " என்று இச்சமாதான ஆவிகள் ஆர்ப்பரித்தனர் . தங்கள் இனத்தாரில் சிலர் அகங்காரத்தினால் மனுதாவதாரம் எடுக்கப்போகும் மனுமகனுக்குச் செய்த துரோகத்துக்கு இவ்விதம் இன்று முதல் முதலாகப் பரிகாரம் செய்யப் பாக்கியம் பெற்றனர் . கடவுளுக்கு ஊழியம் செய்வதில் அவர்களுக்குள்ள மகிழ்ச்சியால் மனிதர்களும் மகிழ்ச்சியோடு ஊழியம் செய்யக் காந்தம் போல அவர்களை இழுப்பர். தங்களுக்கு இன்றிருந்த ஆனந்தத்தால் எல்லாச் சந்தோஷ தேவ இரகசியங்களையும் நிரப்புவர் . மலங்காட்டில் மலடியான உறவினளை மாமரி பார்க்கச் சென்ற போது இஸ்ராயேலரின் வனாந்தரப் பிரயாணத்தில் ஒளி மேகம் அவர்கள் மேல் படர்ந்து சென்றது போல , சம்மனசுக்களின் பிரகாசத் திரள் படர்ந்து சென்றிருக்க வேண்டும் . இயேசுவைத் தூக்கி எருசலேம் ஆலயம் சென்ற பொது இம்மகிமைக் காப்பாளர் தாயையும் சேயையும் விட்டு தூரம் பிரிந்திருக்க முடியுமா ? இயேசு எருசலேமில் தங்கிய முத்தினமும் சம்மனசுக்கள் தாயின் உள்ளத்தில் நம்பிக்கையின் ஆவி பறக்கச் செய்திருப்பார்கள் என்று நம்பலாம் அல்லவா?
பூங்காவனத்தில் மனம் ஒடிந்து கசப்பான பாத்திரத்தைக் கண்டு தளர்ந்து ஆண்டவர் தவிக்கும்போது பயம், பாவம் , மரணம் என்பவைகளோடு ஆண்டவர் மல்யுத்தம் தொடுத்த போது தம்மைச் சூழ்ந்து நின்ற சம்மனசுக்களின் பிரசன்னம் அவர் உள்ளத்தில் ஆறுதலின் ரேகைகளை ஒட்டியிருக்க வேண்டும்
அவர் தெரிந்து கொண்ட மூவரையும் நித்திரை கவர்ந்து கொண்ட போது , மனிதர்கள் தம்மை விட்டுப் பிரிந்து போவார்கள் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் பாய்ந்த போது , சம்மனசுகள் தம்மை விட்டுப் போகார்கள் என்ற எண்ணமான தைலம் மனதில் சிறிது குளிர்ச்சியைப் பரப்பியது . கற்றூணில் ச்கசையடிகள் அலறியபோது அவர்கள் தங்கள் சிறகுகளை விரித்து அண்டையில் இருப்பார்கள் . ஜனத்திரள் இழி சொல்லையும் பழி வசனத்தையும் பொழிந்தபோது அவைகளை அமர்த்தியது போல மக்கள் செவிக்கு எட்டாவண்ணம் இவர்கள் பண் இசைப்பார்கள் . பிலாத்தின் அரண்மனை முற்றத்தில் " அவனைச் சிலுவையில் அறையும் அறையும் " என்று மானிடப் பதர்கள் இரைந்த போது , அந்த இரைச்சலுக்கு மேலே பதின்மடங்கு சத்தமாய் நாவற்ற குரலில் " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சிமை உண்டாவதாக " என்று ஞானாதிக்கர்களின் ஆதிக்கத்தில் இவர்கள் கோஷிப்பார்கள். ஏரோதன் அரண்மனை வாசலில் மரியாதையற்ற கேள்விகளையும் சொல்லையும் வழங்கியபோது , அதைவிட ஆயிரமடங்கு சத்தமாய்த் தொனியற்ற குரலில் " பரிசுத்தர் , பரிசுத்தர் , மகிமையும் , பெருமையும் , செல்வாக்கும் பெற நீர் தகுதியுள்ளவர் " என்று பண் இசைப்பர் . உடல் எல்லாம் கிழிந்து உடைந்த தூணில் உட்கார்ந்து கொண்டு , முள்முடி சூட்டி , ஈன சேவகர்களின் பரிகாசத்துக்கு ஆளான போது," அவரிடம் உள்ளது அரச இதயம் ; தெய்வீகத்தின் இரத்தம் அவரது நாளத்தில் ஓடுகிறது . முள்முடி சூடி இரத்தத்தால் தோய்ந்த அவரது சிரசு , தெய்வீக ஞானத்திற்கு இருப்பிடம் " என்று விழுந்து விழுந்து அவரை ஆராதித்தனர் . கல்வாரிக்குப் போகும்போது மெய்க்காப்பாளர்கள் போல அவரைச் சுற்றித் தரையில் விழும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் , பூலோக ஆஸ்தியெல்லாம் சேர்த்து வாங்க முடியாத வைடூரியங்களைப் போல பாவித்து பதனமாய் பொறுக்கி எடுப்பர். வெளியரங்கமாய்த் தோன்றி இருந்தால் கசடர்கள் ஓட்டம் எடுத்திருப்பார்கள் , கர்த்தனின் திட்டம் நிறைவேறாதென்று மறைந்தே சென்றனர். இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்தவுடனே சேனை சேனையாய் வானதூதர்கள் இக்காட்சியைக் கண்டு அதிசயித்து ஆண்டவரை ஆராதித்தனர்
மகிமைத் தேவ இரகசியங்களில் என்றும் இல்லாத விதமாய் மக்கள் அருகில் இந்த மோட்ச மன்னர்களைப் பார்க்கிறோம். புத்தி பேதலித்த சில யூதர் இயேசுவின் கல்லறையைக் காவல் புரிய சில சேவகர்களை நிறுத்தினர் . வீண் வேலை . ஆயிரக்கணக்கான பரலோக இளவரசர்கள் திருச்சரீரத்தை பயபக்தியோடு காவல் காத்து நின்றனர் . மரிய மதலேனாளும் மற்ற பெண்களும் கல்லறையைக் காண வந்த காலை " உயிரோடிருப்பவரை மரித்தோரிடத்தில் ஏன் தேடுகிறீர்கள் " என்கிறார்கள் அத்தூதர்கள் . இயேசு மரித்ததாக அச்சம்மனசுக்கள் கருதவில்லை போலும் ."நீங்கள் இயேசுவைத் தேடுகிறீர்களா ?" அச்சம்மனசுக்களுக்கு இயேசுவைத் தேட அவசியமே இல்லை . அவர்கள் தாம் அல்லும் பகலும் கல்லறையைச் சூழ்ந்து நிற்கின்றனரே . உலக முடியுமட்டும் வானதூதர்கள் இயேசு மூன்று நாள் தங்கிய கல்லறையைக் காவல் புரிந்து நிற்பர். பெத்லேகேமின் நற்செய்தியை வானதூதர் உலகுக்கு அறிவித்தனர் . பூங்காவில் சம்மனசானவர் இயேசுவுக்கு ஆறுதல் சொல்லுகிறார் . கல்லறையில் அவர் வேலை முடிந்ததென்று வானதூதர் அறிவிக்கின்றனர் . " உயிர்த்தெழுந்து விட்டார் . அவர் இங்கில்லை . மரித்தோரிடமிருந்து எழுந்தவர் இனி ஒருநாளும் மரிக்க மாட்டார் "
நாற்பது நாள் இயேசு பூலோகத்தில் இருந்தபோது அவரது சிறிய ஆசையையும் நிறைவேற்றத் தேடுவது போல அவரைச் சூழ்ந்து சுற்றி சுற்றி வந்தனர் . அவர் பரலோகத்துக்கு ஆரோகணமானபோது மெய்க்காப்பாளர்கள் போல மகிமைப் பிரதாபத்தோடு இனிய குரலோடும் வீணை நாதத்தோடும் சங்கீதம் முழங்கிச் செல்லுகின்றனர் . அவர்களை நோக்கித்தான் " உங்கள் சிரசை உயர்த்துங்கள் "என்று தாவீது அரசர் பாடினாரா ?இப்பூவுலகில் முதலாய் அரசனுடைய மரணத்திற்குப் பின் அவன் தாயை பிரஜைகள் புறக்கணித்து விடுகிறார்களா ? முப்பத்து மூன்று ஆண்டுகளோ அதற்க்கு மேலோ தாயோடு தங்கியிருந்த சம்மனசுக்கள் அவருக்குத் துணையும் மகிமையுமாய் நின்றனர் . அவர் மரணத்திலும் அகலவில்லை . அவர் தேவ மகன் வந்து அவரைத் தாங்கி பரலோகம் எடுத்துச் சென்ற போது வானதூதர்களின் மோன மகிழ்ச்சி என்ன ? நம் மானிட மொழியில் அவர்களது மகிழ்ச்சியை விளக்க வேண்டுமேயாகில் விதம் விதமாய்ப் பாடினர் , பிரிவு பிரிவாய்ச் சங்கீதம் இசைத்தனர் . வாத்தியங்கள் கோஷித்தன . மேளங்கள் முழங்கின . ஆடினர் . நர்த்தனம் புரிந்தனர் . என்ன மகிழ்ச்சி ! மகுடாபிஷேக நேரத்தில் அரசிக்கு விதவிதமாய்க் காணிக்கை கொண்டு வர , போட்டி போட்டது போல வந்தனர் . தங்கள் வணக்கத்தைச் சமர்ப்பித்தனர் . கை கொட்டினர் . "அகில உலக அரசி வாழ்க , பரலோக பூலோக அரசி வாழ்க வாழ்க " என்று ஆர்ப்பரித்தனர் .
செபம்
செபமாலை இராக்கினியே , சம்மனசுக்களின் அரசியே , இறைவனுடைய கன்னி மாதாவே , எங்களுடையவும் எங்கள் தந்தையாகிய பாப்பரசருடையவும் விண்ணப்பத்தைச் செவி சாய்த்துக் கேட்டு மனுமக்கள் யாவருக்கும் திருச்சபையின் மேல் உண்மையான நேசத்தைத் தந்தருளும் . மற்ற ஆத்துமங்களை விட உம்முடைய பரிசுத்த ஆத்துமம் இயேசுக்கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியால் நிறையப்பெற்றிருந்தது. மனுக்குலத்தின் பேரால் தேவ குமாரன் மனுக்குலத்தோடு மணமுடிக்கச் சம்மதம் தந்தீர் . கிறிஸ்துவின் அவயவங்களின் அன்னை நீர் . உம்முடைய பரிசுத்த இருதயத்திற்கு எங்கள் தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் மனுக்குல முழுவதையும் நேர்ந்து கொண்டார் . உம்முடைய ஆத்துமும் சரீரமும் மோட்ச மகிமையின் கதிரை எப்பக்கமும் வீச உம்முடைய திருமகனோடு ஆட்சி செலுத்தும் ஆண்டவளே மகிமையுள்ள ஞான சரீரத்தின் சிரசினின்று ஞான சரீரத்தின் அவயவங்களில் எல்லாம் வரப்பிரசாதம் ஓயாமல் தாராளமாய் வழிந்தோடும்படி உமது திருக்குமாரனை ஒவ்வொரு நிமிஷமும் மன்றாட மறந்து போகாதே அம்மா , செபமாலை இராக்கினியே வாழ்க ஆமென்
சரிதை
மக்கள் செபமாலை சொல்லுவது தனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று படித்து படித்து நமக்கு தாய் சொல்லி வருகிறார் . செபமாலை எல்லா வரப்பிரசாதங்களுக்கும் வற்றாத ஊற்றாயிருக்கும் என்று 12ம் நூற்றாண்டில் இருந்து பக்திமான்கள் பலருக்கு ஆண்டவள் சொல்லி இருக்கிறார் .மசபியேல் குகையில் 18 முறை காட்சி கொடுத்த போதும் தம் செபமாலையைக் கரத்தில் ஏந்தி வந்தார் . பெர்னதெத்தையும் அவருடன் சென்றவர்களையும் செபமாலை செபிக்கச் சொன்னார் . அவர்களுக்கு முன் மாதிரியாக அவரே செபமாலையை உருட்டினார் . மேலும் பாத்திமாவில் தோன்றி செபமாலை பக்தியை வற்புறுத்தினார் . அவர்கள் செபமாலை செய்து முடித்த உடனே தோன்றினார் . என்ன சொன்னார்? " நான் செபமாலை ஆண்டவள் . உலகம் நாசமாகாதபடி உலக வாசிகள் செபமாலை செபிக்க வேண்டும் " என்று துவக்கத்திலேயே கூறினார் . மூன்று சிறுவர்களுக்கும் எச்சமயம் தோன்றினார் ? "பிரான்சீஸ்கோ மோட்சத்திற்குப் போவானா ? போவான் .. ஆனால் அவன் இன்னும் அநேகம் தடவை செபமாலை செபிக்க வேண்டும் " என்றார் . முதல் காட்சியிலே செபமாலை ஆண்டவள் என்ன கேட்டுக் கொண்டாள்?"உலகிற்குச் சமாதானம் வரும் வண்ணம் தினந்தோறும் செபமாலை சொல்லுங்கள் "
இது எவ்வளவு தூரம் அவர்களின் பிஞ்சு மனதில் பதிந்திருந்ததெனில், காட்சி முடிந்து அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் என்ன சொன்னார்கள் ? " உலகிற்கு சமாதானம் கொண்டு வரும்படி நாம் ஒவ்வொரு நாளும் செபமாலை செய்ய வேண்டுமென்று ஆசிக்கிறார் "
ஜூன் மாதக் காட்சியிலும் செபமாலை செய்யத் தூண்டியபின் ஒரு புது செபம் சொல்லக் கற்றுக் கொடுக்கிறார் ." ஓ எங்கள் இயேசுவே , எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும் . சகல ஆத்துமாக்களையும் உமது பரலோகத்தின் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ அவர்களுக்கு விசேச தயை புரியும் "
செப்டெம்பர் மாதம் 13ம் தேதி முப்பதாயிரம் பேருக்கு மேல் கூடி இருக்கின்றனர் . செபமாலை சொல்லுகின்றனர் . தேவ தாய் காட்சியில் மறுபடியும் என்ன கேட்டுக் கொள்ளுகிறார் ? "சமாதானத்திர்க்காக ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் "
அக்டோபர் மாதம் 13ம் தேதி கொட்டும் மழையில் நனைந்தாலும் அறுபதாயிரம் மக்களுக்கு மேல் மணிக்கணக்காய் "அருள் நிறைந்த மரியே, பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ........அருள் நிறைந்த மரியே ......பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ..." என்றும் பஜனை முழங்குகிறார்கள் . கடைசி முறையும் இச்சன சமுத்திரத்தை நோக்கிய வண்ணம் செபமாலை ஆண்டவள் மொழிந்த கடைசிப் பத்தி என்ன ? "இவர்கள் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கத்தைப் பின்பற்றுவார்களாக"
செபமாலையும் சம்மனசுக்களும்
செபமாலை சொல்லும் வழக்கம் சிறிது பரவின காலை சம்மனசுக்களின் பக்தியும் பெரிதும் போற்றப்பட்டது என்று சொல்லலாம் . 12ம் நூற்றாண்டில் பற்பல தப்பறைகள் சம்மனசுக்க்ளைப் பற்றி நடமாடின . 1215 ஆம் ஆண்டில் 4ம் லூத்தரன் பொதுச்சங்கம் அழுத்தமாக தெளிவாய் மொழிந்தது என்னவெனில் , சம்மனசுக்கள் படைக்கப்பட்டவர்கள் . மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் சம்மனசுக்களைப் படைத்தார். வேதத்தில் சம்மனசுக்களுக்கு வழங்கும் பேரின் தமிழாக்கம் அஞ்சல் தூதர்கள் என்பதாம் .அவர்கள் சுத்த அரூபிகள் . உடலோடு - மனிதனைப் போல - இணைக்கப்படாதவர்கள் . இணைக்கப்படவும் உண்டாக்கப்பட்டவர்கள் அல்லர் அவர்கள் . அருமையான கானங்கள் இசைத்து ஆண்டவர் அருகில் அமர்ந்து அவரைத் துதித்து தோத்தரிக்கின்றனர். ஒரு நாளும் பாவத்தை அறியாதவர்கள் . ஆனதால் அவர்கள் கொழுந்து விட்டு எரியும் சிநேகத்தின் சோதிச் சுடர்கள் . கடவுளுடைய வேலைப்பாட்டின் மணிகள் , இறைவனுடைய ஆணைக்கு விரைந்து பணியத் தயாராய் இருக்கின்றனர்
கடவுள் அவர்களுக்குப் பிறகு மனுமக்களைப் படைத்தார் . மனிதர்களும் அவருடைய சட்டங்களுக்குப் பணிந்து ஈடேற்றத்தைச் சம்பாதிக்க வேண்டியவர்கள் . இச்சட்டம், இக்கதி , கடவுளின் இந்த இனிமையான நோக்கம் மனிதனுக்கு நன்றாய்த் தெரியும் . எனினும் பழைய ஏற்பாட்டின் காலத்திலும் புதிய சட்டத்தின் நாளிலும் இறைவனுடைய மதுரமான சித்தத்தை மனிதருக்கு அறிவிக்க கண்ணுக்குத் தோன்றும் விதம் சம்மனசுக்கள் தோன்றி இருக்கிறார்கள் . தோன்றுகிறார்கள் . ஈடேற்றத்தின் மக்களுக்கு உதவி செய்யும் ஆவிகள் என்று அவர்களைக் குறித்து சின்னப்பர் சொல்லிப் போனார் அல்லவா ? நமது ஈடேற்றத்தை நிறைவேற்றியவர் மனித அவதாரம் எடுத்த தேவ குமாரன் ஆனபடியால் அவருக்குப் பணிந்து நடக்கும் அவ்வலுவலில் அவர்களும் பங்கெடுப்பதில் அதிசயம் உண்டா ? ஆதலின் செபமாலையின் இரகசியங்களில் மறைந்தோ திறந்தோ சம்மனசுக்கள் தோன்றுவதைக் காண்கிறோம்
சம்மனசுக்களின் ஒன்பது விலாசம் , அவர்கள் எண்ணிக்கை அநந்தம். நம் கணக்குக்கு எட்டாதவை . கால பரிபூரணம் வந்த போது ஆதாமுக்கு ஆண்டவர் அளித்த வாக்கு நிறைவேறும் நாள் வந்தபோது அச்சுப செய்தியை அறிவிக்க கபிரியேல் என்னும் அதிதூதர் அனுப்பப்பட்டார்
கன்னிமரி செபத்தில் ஆழ்ந்திருந்தபோதோ , வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதோ அழகு வடியும் இந்த அஞ்சல் தூதர் மரிக்கு அதை அறிவிக்க அனுப்பப்பட்டார் . பிதாவாகிய கடவுளே உருவாக்கிய மேலான இதமான " அருள் நிறைந்த மரியே " என்ற வாசகத்தை முதன் முதல் உச்சரிக்கக் கபிரியேல் பாக்கியம் பெற்றார் . தம் புத்தி சாதுரியத்தினால் கன்னியின் சந்தேகங்களைத் தீர்த்து அவரது சம்மதத்தைப் பெற்று ஆவலோடு காத்திருந்த சம்மனசுக்களின் கூட்டத்திற்கு " வார்த்தையானவர் மனு உருவானார் " என்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை அறிவித்தார் . நவவிலாச சம்மனசுக்களுக்கு பொங்கி வழிந்த மகிழ்ச்சியை எடுத்து மொழிய முடியுமா ?
அடுத்த ஒன்பது மாதங்கள் அவர்கள் எவ்விதம் தங்கள் ஆனந்தத்தை வெளிக்காட்டாமல் அடக்கி வைத்திருந்தார்கள் என்பது ஒரு அதிசயம் . கடைசியில் முதல் கிறிஸ்துமஸ் வந்தது . கூட்டம் கூட்டமாய் மாலை மாலையாய் விண்ணுலகை விட்டு வானதூதர்கள் மண்ணுலகுக்கு இறங்கினர் . " உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாவதாக " என்று இசைத்தனர் . மோட்சத்தில் தங்களுக்கு தோழர்களாக இருக்க வேண்டிய மானிடரையும் மறக்காமல் " பூலோகத்தில் நல்ல மனதுள்ளோருக்கு சமாதானம் உண்டாவதாக " என்று இச்சமாதான ஆவிகள் ஆர்ப்பரித்தனர் . தங்கள் இனத்தாரில் சிலர் அகங்காரத்தினால் மனுதாவதாரம் எடுக்கப்போகும் மனுமகனுக்குச் செய்த துரோகத்துக்கு இவ்விதம் இன்று முதல் முதலாகப் பரிகாரம் செய்யப் பாக்கியம் பெற்றனர் . கடவுளுக்கு ஊழியம் செய்வதில் அவர்களுக்குள்ள மகிழ்ச்சியால் மனிதர்களும் மகிழ்ச்சியோடு ஊழியம் செய்யக் காந்தம் போல அவர்களை இழுப்பர். தங்களுக்கு இன்றிருந்த ஆனந்தத்தால் எல்லாச் சந்தோஷ தேவ இரகசியங்களையும் நிரப்புவர் . மலங்காட்டில் மலடியான உறவினளை மாமரி பார்க்கச் சென்ற போது இஸ்ராயேலரின் வனாந்தரப் பிரயாணத்தில் ஒளி மேகம் அவர்கள் மேல் படர்ந்து சென்றது போல , சம்மனசுக்களின் பிரகாசத் திரள் படர்ந்து சென்றிருக்க வேண்டும் . இயேசுவைத் தூக்கி எருசலேம் ஆலயம் சென்ற பொது இம்மகிமைக் காப்பாளர் தாயையும் சேயையும் விட்டு தூரம் பிரிந்திருக்க முடியுமா ? இயேசு எருசலேமில் தங்கிய முத்தினமும் சம்மனசுக்கள் தாயின் உள்ளத்தில் நம்பிக்கையின் ஆவி பறக்கச் செய்திருப்பார்கள் என்று நம்பலாம் அல்லவா?
பூங்காவனத்தில் மனம் ஒடிந்து கசப்பான பாத்திரத்தைக் கண்டு தளர்ந்து ஆண்டவர் தவிக்கும்போது பயம், பாவம் , மரணம் என்பவைகளோடு ஆண்டவர் மல்யுத்தம் தொடுத்த போது தம்மைச் சூழ்ந்து நின்ற சம்மனசுக்களின் பிரசன்னம் அவர் உள்ளத்தில் ஆறுதலின் ரேகைகளை ஒட்டியிருக்க வேண்டும்
அவர் தெரிந்து கொண்ட மூவரையும் நித்திரை கவர்ந்து கொண்ட போது , மனிதர்கள் தம்மை விட்டுப் பிரிந்து போவார்கள் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் பாய்ந்த போது , சம்மனசுகள் தம்மை விட்டுப் போகார்கள் என்ற எண்ணமான தைலம் மனதில் சிறிது குளிர்ச்சியைப் பரப்பியது . கற்றூணில் ச்கசையடிகள் அலறியபோது அவர்கள் தங்கள் சிறகுகளை விரித்து அண்டையில் இருப்பார்கள் . ஜனத்திரள் இழி சொல்லையும் பழி வசனத்தையும் பொழிந்தபோது அவைகளை அமர்த்தியது போல மக்கள் செவிக்கு எட்டாவண்ணம் இவர்கள் பண் இசைப்பார்கள் . பிலாத்தின் அரண்மனை முற்றத்தில் " அவனைச் சிலுவையில் அறையும் அறையும் " என்று மானிடப் பதர்கள் இரைந்த போது , அந்த இரைச்சலுக்கு மேலே பதின்மடங்கு சத்தமாய் நாவற்ற குரலில் " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சிமை உண்டாவதாக " என்று ஞானாதிக்கர்களின் ஆதிக்கத்தில் இவர்கள் கோஷிப்பார்கள். ஏரோதன் அரண்மனை வாசலில் மரியாதையற்ற கேள்விகளையும் சொல்லையும் வழங்கியபோது , அதைவிட ஆயிரமடங்கு சத்தமாய்த் தொனியற்ற குரலில் " பரிசுத்தர் , பரிசுத்தர் , மகிமையும் , பெருமையும் , செல்வாக்கும் பெற நீர் தகுதியுள்ளவர் " என்று பண் இசைப்பர் . உடல் எல்லாம் கிழிந்து உடைந்த தூணில் உட்கார்ந்து கொண்டு , முள்முடி சூட்டி , ஈன சேவகர்களின் பரிகாசத்துக்கு ஆளான போது," அவரிடம் உள்ளது அரச இதயம் ; தெய்வீகத்தின் இரத்தம் அவரது நாளத்தில் ஓடுகிறது . முள்முடி சூடி இரத்தத்தால் தோய்ந்த அவரது சிரசு , தெய்வீக ஞானத்திற்கு இருப்பிடம் " என்று விழுந்து விழுந்து அவரை ஆராதித்தனர் . கல்வாரிக்குப் போகும்போது மெய்க்காப்பாளர்கள் போல அவரைச் சுற்றித் தரையில் விழும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் , பூலோக ஆஸ்தியெல்லாம் சேர்த்து வாங்க முடியாத வைடூரியங்களைப் போல பாவித்து பதனமாய் பொறுக்கி எடுப்பர். வெளியரங்கமாய்த் தோன்றி இருந்தால் கசடர்கள் ஓட்டம் எடுத்திருப்பார்கள் , கர்த்தனின் திட்டம் நிறைவேறாதென்று மறைந்தே சென்றனர். இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்தவுடனே சேனை சேனையாய் வானதூதர்கள் இக்காட்சியைக் கண்டு அதிசயித்து ஆண்டவரை ஆராதித்தனர்
மகிமைத் தேவ இரகசியங்களில் என்றும் இல்லாத விதமாய் மக்கள் அருகில் இந்த மோட்ச மன்னர்களைப் பார்க்கிறோம். புத்தி பேதலித்த சில யூதர் இயேசுவின் கல்லறையைக் காவல் புரிய சில சேவகர்களை நிறுத்தினர் . வீண் வேலை . ஆயிரக்கணக்கான பரலோக இளவரசர்கள் திருச்சரீரத்தை பயபக்தியோடு காவல் காத்து நின்றனர் . மரிய மதலேனாளும் மற்ற பெண்களும் கல்லறையைக் காண வந்த காலை " உயிரோடிருப்பவரை மரித்தோரிடத்தில் ஏன் தேடுகிறீர்கள் " என்கிறார்கள் அத்தூதர்கள் . இயேசு மரித்ததாக அச்சம்மனசுக்கள் கருதவில்லை போலும் ."நீங்கள் இயேசுவைத் தேடுகிறீர்களா ?" அச்சம்மனசுக்களுக்கு இயேசுவைத் தேட அவசியமே இல்லை . அவர்கள் தாம் அல்லும் பகலும் கல்லறையைச் சூழ்ந்து நிற்கின்றனரே . உலக முடியுமட்டும் வானதூதர்கள் இயேசு மூன்று நாள் தங்கிய கல்லறையைக் காவல் புரிந்து நிற்பர். பெத்லேகேமின் நற்செய்தியை வானதூதர் உலகுக்கு அறிவித்தனர் . பூங்காவில் சம்மனசானவர் இயேசுவுக்கு ஆறுதல் சொல்லுகிறார் . கல்லறையில் அவர் வேலை முடிந்ததென்று வானதூதர் அறிவிக்கின்றனர் . " உயிர்த்தெழுந்து விட்டார் . அவர் இங்கில்லை . மரித்தோரிடமிருந்து எழுந்தவர் இனி ஒருநாளும் மரிக்க மாட்டார் "
நாற்பது நாள் இயேசு பூலோகத்தில் இருந்தபோது அவரது சிறிய ஆசையையும் நிறைவேற்றத் தேடுவது போல அவரைச் சூழ்ந்து சுற்றி சுற்றி வந்தனர் . அவர் பரலோகத்துக்கு ஆரோகணமானபோது மெய்க்காப்பாளர்கள் போல மகிமைப் பிரதாபத்தோடு இனிய குரலோடும் வீணை நாதத்தோடும் சங்கீதம் முழங்கிச் செல்லுகின்றனர் . அவர்களை நோக்கித்தான் " உங்கள் சிரசை உயர்த்துங்கள் "என்று தாவீது அரசர் பாடினாரா ?இப்பூவுலகில் முதலாய் அரசனுடைய மரணத்திற்குப் பின் அவன் தாயை பிரஜைகள் புறக்கணித்து விடுகிறார்களா ? முப்பத்து மூன்று ஆண்டுகளோ அதற்க்கு மேலோ தாயோடு தங்கியிருந்த சம்மனசுக்கள் அவருக்குத் துணையும் மகிமையுமாய் நின்றனர் . அவர் மரணத்திலும் அகலவில்லை . அவர் தேவ மகன் வந்து அவரைத் தாங்கி பரலோகம் எடுத்துச் சென்ற போது வானதூதர்களின் மோன மகிழ்ச்சி என்ன ? நம் மானிட மொழியில் அவர்களது மகிழ்ச்சியை விளக்க வேண்டுமேயாகில் விதம் விதமாய்ப் பாடினர் , பிரிவு பிரிவாய்ச் சங்கீதம் இசைத்தனர் . வாத்தியங்கள் கோஷித்தன . மேளங்கள் முழங்கின . ஆடினர் . நர்த்தனம் புரிந்தனர் . என்ன மகிழ்ச்சி ! மகுடாபிஷேக நேரத்தில் அரசிக்கு விதவிதமாய்க் காணிக்கை கொண்டு வர , போட்டி போட்டது போல வந்தனர் . தங்கள் வணக்கத்தைச் சமர்ப்பித்தனர் . கை கொட்டினர் . "அகில உலக அரசி வாழ்க , பரலோக பூலோக அரசி வாழ்க வாழ்க " என்று ஆர்ப்பரித்தனர் .
செபம்
செபமாலை இராக்கினியே , சம்மனசுக்களின் அரசியே , இறைவனுடைய கன்னி மாதாவே , எங்களுடையவும் எங்கள் தந்தையாகிய பாப்பரசருடையவும் விண்ணப்பத்தைச் செவி சாய்த்துக் கேட்டு மனுமக்கள் யாவருக்கும் திருச்சபையின் மேல் உண்மையான நேசத்தைத் தந்தருளும் . மற்ற ஆத்துமங்களை விட உம்முடைய பரிசுத்த ஆத்துமம் இயேசுக்கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியால் நிறையப்பெற்றிருந்தது. மனுக்குலத்தின் பேரால் தேவ குமாரன் மனுக்குலத்தோடு மணமுடிக்கச் சம்மதம் தந்தீர் . கிறிஸ்துவின் அவயவங்களின் அன்னை நீர் . உம்முடைய பரிசுத்த இருதயத்திற்கு எங்கள் தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் மனுக்குல முழுவதையும் நேர்ந்து கொண்டார் . உம்முடைய ஆத்துமும் சரீரமும் மோட்ச மகிமையின் கதிரை எப்பக்கமும் வீச உம்முடைய திருமகனோடு ஆட்சி செலுத்தும் ஆண்டவளே மகிமையுள்ள ஞான சரீரத்தின் சிரசினின்று ஞான சரீரத்தின் அவயவங்களில் எல்லாம் வரப்பிரசாதம் ஓயாமல் தாராளமாய் வழிந்தோடும்படி உமது திருக்குமாரனை ஒவ்வொரு நிமிஷமும் மன்றாட மறந்து போகாதே அம்மா , செபமாலை இராக்கினியே வாழ்க ஆமென்
சரிதை
மக்கள் செபமாலை சொல்லுவது தனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று படித்து படித்து நமக்கு தாய் சொல்லி வருகிறார் . செபமாலை எல்லா வரப்பிரசாதங்களுக்கும் வற்றாத ஊற்றாயிருக்கும் என்று 12ம் நூற்றாண்டில் இருந்து பக்திமான்கள் பலருக்கு ஆண்டவள் சொல்லி இருக்கிறார் .மசபியேல் குகையில் 18 முறை காட்சி கொடுத்த போதும் தம் செபமாலையைக் கரத்தில் ஏந்தி வந்தார் . பெர்னதெத்தையும் அவருடன் சென்றவர்களையும் செபமாலை செபிக்கச் சொன்னார் . அவர்களுக்கு முன் மாதிரியாக அவரே செபமாலையை உருட்டினார் . மேலும் பாத்திமாவில் தோன்றி செபமாலை பக்தியை வற்புறுத்தினார் . அவர்கள் செபமாலை செய்து முடித்த உடனே தோன்றினார் . என்ன சொன்னார்? " நான் செபமாலை ஆண்டவள் . உலகம் நாசமாகாதபடி உலக வாசிகள் செபமாலை செபிக்க வேண்டும் " என்று துவக்கத்திலேயே கூறினார் . மூன்று சிறுவர்களுக்கும் எச்சமயம் தோன்றினார் ? "பிரான்சீஸ்கோ மோட்சத்திற்குப் போவானா ? போவான் .. ஆனால் அவன் இன்னும் அநேகம் தடவை செபமாலை செபிக்க வேண்டும் " என்றார் . முதல் காட்சியிலே செபமாலை ஆண்டவள் என்ன கேட்டுக் கொண்டாள்?"உலகிற்குச் சமாதானம் வரும் வண்ணம் தினந்தோறும் செபமாலை சொல்லுங்கள் "
இது எவ்வளவு தூரம் அவர்களின் பிஞ்சு மனதில் பதிந்திருந்ததெனில், காட்சி முடிந்து அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் என்ன சொன்னார்கள் ? " உலகிற்கு சமாதானம் கொண்டு வரும்படி நாம் ஒவ்வொரு நாளும் செபமாலை செய்ய வேண்டுமென்று ஆசிக்கிறார் "
ஜூன் மாதக் காட்சியிலும் செபமாலை செய்யத் தூண்டியபின் ஒரு புது செபம் சொல்லக் கற்றுக் கொடுக்கிறார் ." ஓ எங்கள் இயேசுவே , எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும் . சகல ஆத்துமாக்களையும் உமது பரலோகத்தின் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ அவர்களுக்கு விசேச தயை புரியும் "
செப்டெம்பர் மாதம் 13ம் தேதி முப்பதாயிரம் பேருக்கு மேல் கூடி இருக்கின்றனர் . செபமாலை சொல்லுகின்றனர் . தேவ தாய் காட்சியில் மறுபடியும் என்ன கேட்டுக் கொள்ளுகிறார் ? "சமாதானத்திர்க்காக ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் "
அக்டோபர் மாதம் 13ம் தேதி கொட்டும் மழையில் நனைந்தாலும் அறுபதாயிரம் மக்களுக்கு மேல் மணிக்கணக்காய் "அருள் நிறைந்த மரியே, பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ........அருள் நிறைந்த மரியே ......பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ..." என்றும் பஜனை முழங்குகிறார்கள் . கடைசி முறையும் இச்சன சமுத்திரத்தை நோக்கிய வண்ணம் செபமாலை ஆண்டவள் மொழிந்த கடைசிப் பத்தி என்ன ? "இவர்கள் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கத்தைப் பின்பற்றுவார்களாக"
முப்பதாம் நாள்
கூட்டுச் செபமாலை
1. பலன் கொடுக்கும் நவநாள் :
செபமாலை நவநாளைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறது . அதிலும் கேட்கும் வரத்தைத் தப்பாமல் கொடுக்கும் நவநாள் என்று ஒன்றைச் சொல்லுவார்கள் . இந்த நவநாள் போம்பேயி மாதா ஆலயத்தில் உதித்தது . 50 மணிச் செபமாலை தொடர்ந்து 54 நாட்கள் சொல்லுவதாம் . சந்தோஷ , துக்க , மகிமை மற்றும் ஒளியின் தேவ இரகசியங்கள் மாற்றிச் சொல்ல வேண்டும் . 27 நாட்களுக்கு கிருபையைப் பெறுவதற்காகவும் 27 நாட்களுக்கு அடைந்த கிருபைக்கு நன்றி செலுத்துவதற்காகவும் செபமாலை சொல்ல வேண்டும் . இதன் வல்லமையின் இரகசியம் விடாமல் செபம் செய்வதாம் .. எண்ணிக்கையில் அல்ல
2. உயிருள்ள செபமாலை :
150 மணி செபமாலையை ஒரு நாளில் சில கருத்துக்களுக்காகச் சொல்லி முடிக்க 15 பேர் கூட்டு சேர்கிறார்கள் . ஒருவரே 153 மணி செபமாலையை நாள்தோறும் சொல்ல அவகாசம் இல்லாமல் இருக்கலாம் . அல்லது 15 பேருடைய பக்தியினாலே கேட்பதை அடையலாம் என நம்பிக்கை இருக்கலாம் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பத்துமணி செபம் சொல்ல உடன்பாடு செய்து கொள்ளுகிறார்கள் . ஆளுக்கொரு தேவ இரகசியம் . குருஸ் மங்கள வார்த்தை சொன்னது ; சவரி எலிசபெத்தம்மாளை வினவினது ; பால் கர்த்தர் பிறந்தது எனலாம் . இப்பொதுக் கருத்துக்காக பத்து மணி சொன்னால் வேறு சொல்லக் கூடாது என்று அர்த்தமல்ல . சங்கேதப்படி ஒரு பத்து சொன்னபின் , அவகாசம் இருந்தால் தனிப்பட்ட முறையில் 50 மணிச் செபமாலையோ அதற்க்கு மேலோ சொல்லலாம்
உலக வாசிகளோ , குருக்களோ , துறவிகளோ இக்கூட்டை ஏற்படுத்தலாம் . பள்ளிகள் , கல்லூரிகள் , மருத்துவமனைகள் , விடுதிகள் பாசறைகள் என எங்கு வேண்டுமானாலும் இக்கூட்டை அமைக்கலாம் . அமெரிக்காவில் ஒரு பங்கில் 75 ஆண்டுகளாக 2000 பேருக்கு மேல் இக்கூட்டு செபமாலையைச் செய்து வருகின்றனர் .
3. குடும்பச் செபமாலை
குடும்பத்தில் சமாதானத்தையும் பரிசுத்தத் தனத்தையும் காப்பாற்றுவதற்கு குடும்பத்தார் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கம் போற்றற்குரியது . அச்சமயத்தில் கிறிஸ்துவே குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கிறார் என்று சொல்லலாம் . தனிப்படச் சொல்லுவதை விட இக்கூட்டு செபத்துக்கு எவ்வளவோ பலன்கள். " என் நாமத்தினால் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்திருப்பார்களேயாகில் நான் அங்குள்ளேன்" என்று ஆண்டவர் சொல்லவில்லையா ? தாயும் தந்தையும் மக்களும் யாவரும் ஒன்றித்து வர வேண்டும் . அதற்க்க்காகச் சரியான நேரத்தைக் குறிக்க வேண்டும் . குழந்தைகள் தூங்கிப் போகும் சமயம் பின்னிரவில் வைத்தலாகாது . அலுவலகத்திற்குச் சென்றோர் திரும்பும் முன் வைத்தலாகாது . சில கடற்கரைகளிலோ, ஆலைகளிலோ வேலை செய்வோர் ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டுப் போவதால் ஆறு மணிக்கு முன் வைக்கலாம் .அப்பொழுது பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் திரும்பி விடுவர் . அல்லது பகல் உணவு உண்டு வேலைக்குப் போகும் முன் செபிக்கலாம் . பொதுவில் இரவு உணவுக்கு முன் கூடி செபிப்பது சிறந்த நேரம் எனலாம்
புதிதாய் மணம் செய்த இளம் தம்பதிகள் , மணமானவுடனே இப்பழக்கத்தைத் துவங்க வேண்டும் . தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு நாள் பலர் செபமாலைக்கு வர முடியாவிட்டாலும் இரண்டு பேராவது சேர்ந்து குடும்பத்தின் பேரால் அன்று செபமாலை சொல்ல வேண்டும் . விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்று செபமாலை சொல்லாமல் விட்டு விடக் கூடாது . விருந்தாளிகள் எம்மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் குடும்ப செபமாலை நடத்த வேண்டும் . வந்தவர்கள் குடும்பத்தைக் கண்ணியப்படுத்துவார்கள் . குடும்ப செபமாலை விசேசமாய்த் தற்காலத்தில் குடும்பத்தைக் காக்க செபமாலை அன்னை உருவாக்கிய கோட்டை . செபமாலை இராக்கினி ஆட்களையும் , குடும்பங்களையும் தேசங்களையும் சாதி சனங்களையும் ஏன் உலகையே காப்பாற்றி வருகிறார் . உலக சரிதை இதைச் சாற்றுகிறது
இங்கும் பற்பல இடங்களில் இதைக் கண்டோம் . இன்றைக்கோ குடும்பங்களைத்தான் பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது . குடும்பத்தை அழித்து அதன் வழியாகச் சமுதாயத்தையும் நாடுகளையும் அழிக்கத் திட்டமிட்டிருக்கிறது நரகம் . குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் . குடும்பம் காப்பாற்றப்பட்டால் உலகையே காப்பாற்றுவோம் .குடும்பத்திற்கு தன்னிலேயே ஒரு செல்வாக்கு உண்டு . குடும்பங்களின் சேர்க்கை தானே ஊரும் நாடும் ? அன்பினால் ஒன்றித்திருக்கும் குடும்பம் செபமாலையைச் செய்து வருமே யாகில் அதன் செல்வாக்கு இன்னும் அதிகரித்து , உலகைக் காப்பாற்றும் . குடும்பச் செபமாலை தாயின் மன்றாட்டினால் ஆண்டவரது உள்ளத்தையே கரைக்கிறது எனலாம்
உலக சிந்தை ,உலகப் பற்று , உலக நோக்கம் என்னாளுமே குடும்பத்திற்கும் நாட்டிற்கும் நஞ்சு. இக்காலத்தில் புதிய ஆபத்துக்கள் குடும்பத்தின் அன்பையும், ஒற்றுமையையும் சுகத்தையும் அழித்து சாக்கடையில் தள்ளிப் புதைக்கத் தேடுகின்றன . குடும்பக் கட்டுப்பாடு , மதச் சார்பற்ற சீர்திருத்த திருமணம், தற்காலிக உடன்பாடு , விவாகரத்து , காணா சிசுக்கொலை (கருக்கலைப்பு) போன்றவை சில. சில காலத்திற்கு முன் ஆடை நன்றாய் அணியத் தெரியாத நாடோடிகள் முதலாய் பகிரங்கமாய் இதைப் பற்றிப் பேசக் கூசுவார்கள். தற்காலமோ நாட்டின் உயிரையும் மதிப்பையும் காப்பற்றப் போவதாகச் சொல்லி அரசியல் பீடத்தில் அமர்ந்திருப்போரும் அதிகாரிகளும் நாட்டு மக்களின் பணத்தை ஓட்டைப் போலக் கருதி இந்த நரக போதனைகளைக் கற்றுக் கொடுக்க சாவடிகள் அமைத்தும் , இக்காணாக் கொலைக்கு வேண்டிய ஆயுதங்களை உற்பத்தி செய்தும் மலிவான விலைக்கு வழங்கப் போகிறார்களாம் . ஐயோ கேடு ! ஐயோ கேவலம் ! இந்த அக்கிரமங்களைப் பிரச்சாரப்படுத்த சுவரொட்டித் தாள்கள் என்ன ? ஏடுகள் என்ன , சினிமாக்கள் என்ன ? குடும்பங்களைக் குலைக்கவும் அழிக்கவும் தேடும் இந்நாட்களில் குடும்பத்தைக் காப்பாற்றக் கூடியவர் செபமாலை இராக்கினியும் குடும்ப செபமாலையுமே.
எங்குக் குடும்ப செபமாலை மலர்கிறதோ அங்கே மேற்சொன்ன தீமைகளை எதிர்த்து நிற்கத் தைரியம் உண்டு . நோய் வறுமை முதலியவைகளைச் சகிக்க சக்தியுண்டு . ஏனெனில் தந்தையும் தாயும் முழந்தாளில் இருந்து செபமாலை சொல்லுகிற போது நாம் இறைவனுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்னும் சத்தியத்தை மக்களுக்கு ஊட்டுகிறார்கள். "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே " என்று சொல்லும்போதே நாம் உலக மக்களைப் போல் மன்றாடுவதில்லை . நாம் தேவ மக்கள் ; அளவில்லாத அன்பும் வல்லமையும் உள்ள கடவுள் தாம் நம் தந்தை . தந்தைக்குரிய பட்சத்தோடு அவர் நம்மைப் பாதுகாத்து வருவார் , நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என பெற்றோரும் , பிள்ளைகளும் யாவரும் கற்றறிகிறோம்
"அருள் நிறைந்த மரியே " என்னும் மந்திரத்தை ஒரு பாதியை ஒருவரும் மறு பாதியை யாவரும் சொல்லுவதற்குப் பதில் யாவரும் முழுவதையும் சொல்லலாம் . அல்லது பாதிப் பேர் ஒரு பகுதியையும் சொல்லலாம் . தலைவர் தேவ இரகசியங்களை அறிவிக்கலாம் . அல்லது இறுதியில் கொடுத்திருக்கும் தியானத்தை அவர் வாசிக்கலாம் . அல்லது யாவரும் வாசிக்கலாம் .
குடும்பச் செபமாலை தமிழ்நாட்டில் ஏறக்குறைய நூறு ஆண்டுகளாகவே வழக்கில் இருந்தது எனலாம் . மதுரை மாகாணத்திற்கு வந்த இத்தாலிய , பிரெஞ்சு மிஷினரி குருக்கள் இவ்வழக்கத்தை ஊன்றினர். பாப்புமார்கள் குடும்பச் செபமாலையைப் பெரிதும் போற்றி இருக்கின்றனர் . " உங்கள் உள்ளத்திலும் , தேசத்திலும் சமாதானம் நிலவ வேண்டும் என்று ஆசிப்பீர்களேயாகில் ஒவ்வொரு மாலையும் ஒன்று சேர்ந்து செபமாலை சொல்லுங்கள் .வத்திக்கான் அரண்மனை முழுவதிலுமே செபமாலையை போல வேறொரு பொக்கிஷம் இல்லை. பல பலன்கள் கொடுக்கப்பட்ட இந்த எளிய முறைச் செபமான செபமாலை ஒவ்வொரு குடும்பத்திலும் மாலைதோறும் பிரமாநிக்கமாய் சொல்லப்படுவதாக . இவைதான் நான் உங்களுக்குச் சொல்லும் கடைசி மொழிகள் .நான் விட்டுச் செல்லும் ஞாபகச் சின்னம் " என்றார் 9ம் பத்திநாதர்
செபமாலையை பற்றி நிருபத்துக்கு மேல் நிருபம் எழுதிப் போன 13ம் சிங்கராயர் "குடும்பத்தில் செபமாலை சொல்லாத நாள் இருத்தலாகாது . தனிப்பட்டோரின் பக்தியை வளர்க்கவும் , சமூகத் தேவையை பரிகரிக்கவும் அது ஏற்ற வழி . மாதாவின் செபமாலையைக் குடும்பங்களில் சொல்லி வரும் பழைய மகிமை தழைத்திருக்குமேயாகில் , தப்பறைகளினாலோ மனம் பொருத்த மூடத்தனமான அறியாமையினாலோ விசுவாசத்தை இழந்து போகும் நிர்பாகியம் ஏற்படாது " என்று வரைந்தார்
11ம் பத்திநாதர் பெற்றோர்களுக்குச் சொல்லுவார் : குடும்பத்தின் தாயும் தந்தையும் குழந்தைகளுக்கு எதிலும் நன்மாதிரியாகக் காட்ட வேண்டும் . எனினும் பிரியமாய் மாலை நேரத்தில் ஒன்றாய்க் கூடி முழந்தாள் படியிட்டு செபமாலை சொல்லுவதில் நன்மாதிரியாயிருக்க வேண்டும் . இது மகா லாபகரமான இன்பமயமான வழக்கம் . இதனால் குடும்பங்களுக்கு சமாதானமும் ஏராளமான மோட்ச கிருபைகளும் கிடைக்கும் "
மாமரியின் பாப்பாண்டவரும் , மாமரியைத் திருக்காட்சியில் கண்டவருமான நம் திருத்தந்தை 12 ம் பத்திநாதர் குடும்ப செபமாலையைப் பற்றி பற்பல முறை இடை இடையிலே கூறி இருந்தாலும் 1952ம் ஆண்டு ஜூலை மாதம் குடும்ப செபமாலையைப் பற்றி நீண்ட நிருபம் அனுப்பினார் . குடும்பங்களில் மகிழ்ச்சியையும் கடவுளுடைய பெரும் கொடைகளையும் அடைவதற்கு நிச்சயமான வழி வேறொன்றுமில்லை . குடும்பச் செபமாலை வழக்கில் இருக்கும் குடும்பங்களில் உள்ள சிறார்கள் , பிற்காலத்திலும் செபமாலைப் பக்தி உள்ளவர்களாய் ஒழுக்கமுள்ளவர்களாய் இருப்பார்கள் . பொது செபத்துக்குரிய ஆசீர்வாதங்களும் அக்குடும்பத்துக்கு வரும் என்றார்
4.ஆலயத்தில் பொதுச் செபமாலை
பங்கிலுள்ள யாவரும் ஒன்று சேர்ந்து கோவிலில் செபமாலை சொல்லும் வழக்கத்தையும் போற்ற வேண்டும் .அதனால் பங்குக்குப் பெருத்த இலாபம்
செபம்
செபமாலை இராக்கினியே , பெத்லகேம் குழந்தைகளின் தாயே , எங்கள் உள்ளத்தில் குழந்தைக்குரிய குணத்தின் ஒரு சிறு பொறியைப் பற்ற வைத்தருளும் . திருக்குடும்பத்தின் அரசியே எங்கள் குடும்பத்தைக் கண்காணித்தருளும். அவைகளில் விசுவாசமும் அன்பும் பாசமும் மரியாதையும் தழைத்து ஓங்குவதாக . குழந்தைகளின் மாசற்ற தனத்தையும் , வாலிபத்தின் பரிசுத்தத்தனத்தையும் போற்றிப் பேணும் அன்னையே , ஒவ்வொரு குடும்பத்தின் குழந்தை மேலும் உமது கருணைக் கண்களை வீசியருளும். அமலோற்பவ ஆண்டவளே , மாசற்ற பாக்கியத்தில் அவர்களை வளரச் செய்தருளும் .அவர்கள் இல்லங்களை ஆசீர்வதித்தருளும் . அவர்கள் கற்கும் கல்விச்சாலைகளைக் கவனித்து நாஸ்திகக் காற்று அங்கு வீசாதபடி செய்யும் . ஒழுக்கமும் , கீழ்ப்படிதலும் , உழைப்பும் அப்பள்ளிகளில் தழைத்து ஓங்குவதாக . அவர்களின் ஆசிரியர்களைத் தெய்வ பயமுள்ளவர்களாக்கியருளும். அவர்கள் விளையாட்டிலும் இளைப்பாற்றியிலும் காலப்போக்குகளிலும் வான லோகத்தை மறவாதபடி ஞானத்திலும் வயதிலும் வரப்பிரசாதத்திலும் வளர்ந்து வருவார்களாக . குழந்தைகளின் செபத்தின் மூலமாக நாங்கள் சமாதானத்தையும் ஒற்றுமையையும் சுகிப்போமாக . உலகம் மெய்யான சீர்திருத்தம் அடையும் நாள் , உம்முடைய மன்றாட்டால் சீக்கிரம் உதயமாவதாக , செபமாலை இராக்கினியே ஆமென்
சரிதை
ஒரு ஸ்பெயின் தேசத்துப் பெண் , செபமாலைப் பக்தி மிகுந்தவள் ; புண்ணியத்தில் தேர்ந்தவள் ; பெரிய பிரசங்கியான ஒரு ஆயரிடத்தில் புண்ணியத்தில் இன்னும் அதிகம் முன்னேற ஆலோசனை கேட்டாள். ஆனால ஆயர் தான் அவளிடம் அதிகம் கற்றுக் கொண்டார் என்று சொல்லலாம் . அவள் தேவ இரகசியங்களைப் பற்றிச் சொன்ன வியாக்கியானங்களைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். தான் கற்ற படிப்புகளிலேயே இத்தகைய அரிய போதனை இல்லை என்றார் . இதுதான் கிறிஸ்தவத்தின் சாராம்சம் என்று களித்தார் .அன்று முதல் செபமாலையைப் பற்றி பிரசங்கிக்க ஆரம்பித்தார் . வெகு சீக்கிரம் மறைமாவட்டம் சீரடைந்து , ஒழுங்கீனம் குறைந்தது . உலகப் பற்றுதல் தொலைந்தது . விசுவாசத்தை இழந்த பலர் , நல்ல கிறிஸ்தவர்கள் ஆனார்கள் . எவ்வளவோ காலமாக தம் மறைமாவட்டத்தைச் சீர்திருத்த பிரயாசப்பட்டவர் அவர் . இப்பொழுது கிறிஸ்தவர்கள் செபமாலை சொல்லத் தொடங்கவே எவ்வளவு மாற்றம் ! செபமாலைப் பக்தியை இன்னும் பரப்புவதற்காக ஓர் அழகிய செபமாலையைக் கட்டி தன் இடையில் தொங்க விட்டுக் கொண்டார் . பிரசங்கம் செய்யும் போது அதை எடுத்துக் காட்டி "இயேசுவில் என் பிரிய சகோதரர்களே , ஆயரின் பற்பல விலையுயர்ந்த சின்னங்களை விட இதைத் தரித்திருப்பதில் தான் எனக்குப் பெருமை " என்றார்
டேனிஷ் குருவானவர் ஒருவர் இதே சரிதையைத் தான் சொல்லுகிறார் . தன் பங்கைச் சீர்திருத்த வெகுநாள் பிரயாசைப் பட்டபின் செபமாலைப் பக்தியை ஊட்டினார் . ஆறு மாதத்திற்குள் பங்கு சீர்திருத்தம் அடைந்தது
பல பிரசங்கங்களும் தியானங்களும் கேட்டும் மனம் திரும்பாத கல் நெஞ்சமுள்ள அக்கிரமிகளும் செபமாலையினால் மனந்திரும்பி இருக்கிறார்கள்
குடும்பச் செபமாலையையும் பொதுச் செபமாலையையும் போற்றுவோமாக
கூட்டுச் செபமாலை
1. பலன் கொடுக்கும் நவநாள் :
செபமாலை நவநாளைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறது . அதிலும் கேட்கும் வரத்தைத் தப்பாமல் கொடுக்கும் நவநாள் என்று ஒன்றைச் சொல்லுவார்கள் . இந்த நவநாள் போம்பேயி மாதா ஆலயத்தில் உதித்தது . 50 மணிச் செபமாலை தொடர்ந்து 54 நாட்கள் சொல்லுவதாம் . சந்தோஷ , துக்க , மகிமை மற்றும் ஒளியின் தேவ இரகசியங்கள் மாற்றிச் சொல்ல வேண்டும் . 27 நாட்களுக்கு கிருபையைப் பெறுவதற்காகவும் 27 நாட்களுக்கு அடைந்த கிருபைக்கு நன்றி செலுத்துவதற்காகவும் செபமாலை சொல்ல வேண்டும் . இதன் வல்லமையின் இரகசியம் விடாமல் செபம் செய்வதாம் .. எண்ணிக்கையில் அல்ல
2. உயிருள்ள செபமாலை :
150 மணி செபமாலையை ஒரு நாளில் சில கருத்துக்களுக்காகச் சொல்லி முடிக்க 15 பேர் கூட்டு சேர்கிறார்கள் . ஒருவரே 153 மணி செபமாலையை நாள்தோறும் சொல்ல அவகாசம் இல்லாமல் இருக்கலாம் . அல்லது 15 பேருடைய பக்தியினாலே கேட்பதை அடையலாம் என நம்பிக்கை இருக்கலாம் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பத்துமணி செபம் சொல்ல உடன்பாடு செய்து கொள்ளுகிறார்கள் . ஆளுக்கொரு தேவ இரகசியம் . குருஸ் மங்கள வார்த்தை சொன்னது ; சவரி எலிசபெத்தம்மாளை வினவினது ; பால் கர்த்தர் பிறந்தது எனலாம் . இப்பொதுக் கருத்துக்காக பத்து மணி சொன்னால் வேறு சொல்லக் கூடாது என்று அர்த்தமல்ல . சங்கேதப்படி ஒரு பத்து சொன்னபின் , அவகாசம் இருந்தால் தனிப்பட்ட முறையில் 50 மணிச் செபமாலையோ அதற்க்கு மேலோ சொல்லலாம்
உலக வாசிகளோ , குருக்களோ , துறவிகளோ இக்கூட்டை ஏற்படுத்தலாம் . பள்ளிகள் , கல்லூரிகள் , மருத்துவமனைகள் , விடுதிகள் பாசறைகள் என எங்கு வேண்டுமானாலும் இக்கூட்டை அமைக்கலாம் . அமெரிக்காவில் ஒரு பங்கில் 75 ஆண்டுகளாக 2000 பேருக்கு மேல் இக்கூட்டு செபமாலையைச் செய்து வருகின்றனர் .
3. குடும்பச் செபமாலை
குடும்பத்தில் சமாதானத்தையும் பரிசுத்தத் தனத்தையும் காப்பாற்றுவதற்கு குடும்பத்தார் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கம் போற்றற்குரியது . அச்சமயத்தில் கிறிஸ்துவே குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கிறார் என்று சொல்லலாம் . தனிப்படச் சொல்லுவதை விட இக்கூட்டு செபத்துக்கு எவ்வளவோ பலன்கள். " என் நாமத்தினால் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்திருப்பார்களேயாகில் நான் அங்குள்ளேன்" என்று ஆண்டவர் சொல்லவில்லையா ? தாயும் தந்தையும் மக்களும் யாவரும் ஒன்றித்து வர வேண்டும் . அதற்க்க்காகச் சரியான நேரத்தைக் குறிக்க வேண்டும் . குழந்தைகள் தூங்கிப் போகும் சமயம் பின்னிரவில் வைத்தலாகாது . அலுவலகத்திற்குச் சென்றோர் திரும்பும் முன் வைத்தலாகாது . சில கடற்கரைகளிலோ, ஆலைகளிலோ வேலை செய்வோர் ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டுப் போவதால் ஆறு மணிக்கு முன் வைக்கலாம் .அப்பொழுது பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் திரும்பி விடுவர் . அல்லது பகல் உணவு உண்டு வேலைக்குப் போகும் முன் செபிக்கலாம் . பொதுவில் இரவு உணவுக்கு முன் கூடி செபிப்பது சிறந்த நேரம் எனலாம்
புதிதாய் மணம் செய்த இளம் தம்பதிகள் , மணமானவுடனே இப்பழக்கத்தைத் துவங்க வேண்டும் . தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு நாள் பலர் செபமாலைக்கு வர முடியாவிட்டாலும் இரண்டு பேராவது சேர்ந்து குடும்பத்தின் பேரால் அன்று செபமாலை சொல்ல வேண்டும் . விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்று செபமாலை சொல்லாமல் விட்டு விடக் கூடாது . விருந்தாளிகள் எம்மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் குடும்ப செபமாலை நடத்த வேண்டும் . வந்தவர்கள் குடும்பத்தைக் கண்ணியப்படுத்துவார்கள் . குடும்ப செபமாலை விசேசமாய்த் தற்காலத்தில் குடும்பத்தைக் காக்க செபமாலை அன்னை உருவாக்கிய கோட்டை . செபமாலை இராக்கினி ஆட்களையும் , குடும்பங்களையும் தேசங்களையும் சாதி சனங்களையும் ஏன் உலகையே காப்பாற்றி வருகிறார் . உலக சரிதை இதைச் சாற்றுகிறது
இங்கும் பற்பல இடங்களில் இதைக் கண்டோம் . இன்றைக்கோ குடும்பங்களைத்தான் பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது . குடும்பத்தை அழித்து அதன் வழியாகச் சமுதாயத்தையும் நாடுகளையும் அழிக்கத் திட்டமிட்டிருக்கிறது நரகம் . குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் . குடும்பம் காப்பாற்றப்பட்டால் உலகையே காப்பாற்றுவோம் .குடும்பத்திற்கு தன்னிலேயே ஒரு செல்வாக்கு உண்டு . குடும்பங்களின் சேர்க்கை தானே ஊரும் நாடும் ? அன்பினால் ஒன்றித்திருக்கும் குடும்பம் செபமாலையைச் செய்து வருமே யாகில் அதன் செல்வாக்கு இன்னும் அதிகரித்து , உலகைக் காப்பாற்றும் . குடும்பச் செபமாலை தாயின் மன்றாட்டினால் ஆண்டவரது உள்ளத்தையே கரைக்கிறது எனலாம்
உலக சிந்தை ,உலகப் பற்று , உலக நோக்கம் என்னாளுமே குடும்பத்திற்கும் நாட்டிற்கும் நஞ்சு. இக்காலத்தில் புதிய ஆபத்துக்கள் குடும்பத்தின் அன்பையும், ஒற்றுமையையும் சுகத்தையும் அழித்து சாக்கடையில் தள்ளிப் புதைக்கத் தேடுகின்றன . குடும்பக் கட்டுப்பாடு , மதச் சார்பற்ற சீர்திருத்த திருமணம், தற்காலிக உடன்பாடு , விவாகரத்து , காணா சிசுக்கொலை (கருக்கலைப்பு) போன்றவை சில. சில காலத்திற்கு முன் ஆடை நன்றாய் அணியத் தெரியாத நாடோடிகள் முதலாய் பகிரங்கமாய் இதைப் பற்றிப் பேசக் கூசுவார்கள். தற்காலமோ நாட்டின் உயிரையும் மதிப்பையும் காப்பற்றப் போவதாகச் சொல்லி அரசியல் பீடத்தில் அமர்ந்திருப்போரும் அதிகாரிகளும் நாட்டு மக்களின் பணத்தை ஓட்டைப் போலக் கருதி இந்த நரக போதனைகளைக் கற்றுக் கொடுக்க சாவடிகள் அமைத்தும் , இக்காணாக் கொலைக்கு வேண்டிய ஆயுதங்களை உற்பத்தி செய்தும் மலிவான விலைக்கு வழங்கப் போகிறார்களாம் . ஐயோ கேடு ! ஐயோ கேவலம் ! இந்த அக்கிரமங்களைப் பிரச்சாரப்படுத்த சுவரொட்டித் தாள்கள் என்ன ? ஏடுகள் என்ன , சினிமாக்கள் என்ன ? குடும்பங்களைக் குலைக்கவும் அழிக்கவும் தேடும் இந்நாட்களில் குடும்பத்தைக் காப்பாற்றக் கூடியவர் செபமாலை இராக்கினியும் குடும்ப செபமாலையுமே.
எங்குக் குடும்ப செபமாலை மலர்கிறதோ அங்கே மேற்சொன்ன தீமைகளை எதிர்த்து நிற்கத் தைரியம் உண்டு . நோய் வறுமை முதலியவைகளைச் சகிக்க சக்தியுண்டு . ஏனெனில் தந்தையும் தாயும் முழந்தாளில் இருந்து செபமாலை சொல்லுகிற போது நாம் இறைவனுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்னும் சத்தியத்தை மக்களுக்கு ஊட்டுகிறார்கள். "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே " என்று சொல்லும்போதே நாம் உலக மக்களைப் போல் மன்றாடுவதில்லை . நாம் தேவ மக்கள் ; அளவில்லாத அன்பும் வல்லமையும் உள்ள கடவுள் தாம் நம் தந்தை . தந்தைக்குரிய பட்சத்தோடு அவர் நம்மைப் பாதுகாத்து வருவார் , நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என பெற்றோரும் , பிள்ளைகளும் யாவரும் கற்றறிகிறோம்
"அருள் நிறைந்த மரியே " என்னும் மந்திரத்தை ஒரு பாதியை ஒருவரும் மறு பாதியை யாவரும் சொல்லுவதற்குப் பதில் யாவரும் முழுவதையும் சொல்லலாம் . அல்லது பாதிப் பேர் ஒரு பகுதியையும் சொல்லலாம் . தலைவர் தேவ இரகசியங்களை அறிவிக்கலாம் . அல்லது இறுதியில் கொடுத்திருக்கும் தியானத்தை அவர் வாசிக்கலாம் . அல்லது யாவரும் வாசிக்கலாம் .
குடும்பச் செபமாலை தமிழ்நாட்டில் ஏறக்குறைய நூறு ஆண்டுகளாகவே வழக்கில் இருந்தது எனலாம் . மதுரை மாகாணத்திற்கு வந்த இத்தாலிய , பிரெஞ்சு மிஷினரி குருக்கள் இவ்வழக்கத்தை ஊன்றினர். பாப்புமார்கள் குடும்பச் செபமாலையைப் பெரிதும் போற்றி இருக்கின்றனர் . " உங்கள் உள்ளத்திலும் , தேசத்திலும் சமாதானம் நிலவ வேண்டும் என்று ஆசிப்பீர்களேயாகில் ஒவ்வொரு மாலையும் ஒன்று சேர்ந்து செபமாலை சொல்லுங்கள் .வத்திக்கான் அரண்மனை முழுவதிலுமே செபமாலையை போல வேறொரு பொக்கிஷம் இல்லை. பல பலன்கள் கொடுக்கப்பட்ட இந்த எளிய முறைச் செபமான செபமாலை ஒவ்வொரு குடும்பத்திலும் மாலைதோறும் பிரமாநிக்கமாய் சொல்லப்படுவதாக . இவைதான் நான் உங்களுக்குச் சொல்லும் கடைசி மொழிகள் .நான் விட்டுச் செல்லும் ஞாபகச் சின்னம் " என்றார் 9ம் பத்திநாதர்
செபமாலையை பற்றி நிருபத்துக்கு மேல் நிருபம் எழுதிப் போன 13ம் சிங்கராயர் "குடும்பத்தில் செபமாலை சொல்லாத நாள் இருத்தலாகாது . தனிப்பட்டோரின் பக்தியை வளர்க்கவும் , சமூகத் தேவையை பரிகரிக்கவும் அது ஏற்ற வழி . மாதாவின் செபமாலையைக் குடும்பங்களில் சொல்லி வரும் பழைய மகிமை தழைத்திருக்குமேயாகில் , தப்பறைகளினாலோ மனம் பொருத்த மூடத்தனமான அறியாமையினாலோ விசுவாசத்தை இழந்து போகும் நிர்பாகியம் ஏற்படாது " என்று வரைந்தார்
11ம் பத்திநாதர் பெற்றோர்களுக்குச் சொல்லுவார் : குடும்பத்தின் தாயும் தந்தையும் குழந்தைகளுக்கு எதிலும் நன்மாதிரியாகக் காட்ட வேண்டும் . எனினும் பிரியமாய் மாலை நேரத்தில் ஒன்றாய்க் கூடி முழந்தாள் படியிட்டு செபமாலை சொல்லுவதில் நன்மாதிரியாயிருக்க வேண்டும் . இது மகா லாபகரமான இன்பமயமான வழக்கம் . இதனால் குடும்பங்களுக்கு சமாதானமும் ஏராளமான மோட்ச கிருபைகளும் கிடைக்கும் "
மாமரியின் பாப்பாண்டவரும் , மாமரியைத் திருக்காட்சியில் கண்டவருமான நம் திருத்தந்தை 12 ம் பத்திநாதர் குடும்ப செபமாலையைப் பற்றி பற்பல முறை இடை இடையிலே கூறி இருந்தாலும் 1952ம் ஆண்டு ஜூலை மாதம் குடும்ப செபமாலையைப் பற்றி நீண்ட நிருபம் அனுப்பினார் . குடும்பங்களில் மகிழ்ச்சியையும் கடவுளுடைய பெரும் கொடைகளையும் அடைவதற்கு நிச்சயமான வழி வேறொன்றுமில்லை . குடும்பச் செபமாலை வழக்கில் இருக்கும் குடும்பங்களில் உள்ள சிறார்கள் , பிற்காலத்திலும் செபமாலைப் பக்தி உள்ளவர்களாய் ஒழுக்கமுள்ளவர்களாய் இருப்பார்கள் . பொது செபத்துக்குரிய ஆசீர்வாதங்களும் அக்குடும்பத்துக்கு வரும் என்றார்
4.ஆலயத்தில் பொதுச் செபமாலை
பங்கிலுள்ள யாவரும் ஒன்று சேர்ந்து கோவிலில் செபமாலை சொல்லும் வழக்கத்தையும் போற்ற வேண்டும் .அதனால் பங்குக்குப் பெருத்த இலாபம்
செபம்
செபமாலை இராக்கினியே , பெத்லகேம் குழந்தைகளின் தாயே , எங்கள் உள்ளத்தில் குழந்தைக்குரிய குணத்தின் ஒரு சிறு பொறியைப் பற்ற வைத்தருளும் . திருக்குடும்பத்தின் அரசியே எங்கள் குடும்பத்தைக் கண்காணித்தருளும். அவைகளில் விசுவாசமும் அன்பும் பாசமும் மரியாதையும் தழைத்து ஓங்குவதாக . குழந்தைகளின் மாசற்ற தனத்தையும் , வாலிபத்தின் பரிசுத்தத்தனத்தையும் போற்றிப் பேணும் அன்னையே , ஒவ்வொரு குடும்பத்தின் குழந்தை மேலும் உமது கருணைக் கண்களை வீசியருளும். அமலோற்பவ ஆண்டவளே , மாசற்ற பாக்கியத்தில் அவர்களை வளரச் செய்தருளும் .அவர்கள் இல்லங்களை ஆசீர்வதித்தருளும் . அவர்கள் கற்கும் கல்விச்சாலைகளைக் கவனித்து நாஸ்திகக் காற்று அங்கு வீசாதபடி செய்யும் . ஒழுக்கமும் , கீழ்ப்படிதலும் , உழைப்பும் அப்பள்ளிகளில் தழைத்து ஓங்குவதாக . அவர்களின் ஆசிரியர்களைத் தெய்வ பயமுள்ளவர்களாக்கியருளும். அவர்கள் விளையாட்டிலும் இளைப்பாற்றியிலும் காலப்போக்குகளிலும் வான லோகத்தை மறவாதபடி ஞானத்திலும் வயதிலும் வரப்பிரசாதத்திலும் வளர்ந்து வருவார்களாக . குழந்தைகளின் செபத்தின் மூலமாக நாங்கள் சமாதானத்தையும் ஒற்றுமையையும் சுகிப்போமாக . உலகம் மெய்யான சீர்திருத்தம் அடையும் நாள் , உம்முடைய மன்றாட்டால் சீக்கிரம் உதயமாவதாக , செபமாலை இராக்கினியே ஆமென்
சரிதை
ஒரு ஸ்பெயின் தேசத்துப் பெண் , செபமாலைப் பக்தி மிகுந்தவள் ; புண்ணியத்தில் தேர்ந்தவள் ; பெரிய பிரசங்கியான ஒரு ஆயரிடத்தில் புண்ணியத்தில் இன்னும் அதிகம் முன்னேற ஆலோசனை கேட்டாள். ஆனால ஆயர் தான் அவளிடம் அதிகம் கற்றுக் கொண்டார் என்று சொல்லலாம் . அவள் தேவ இரகசியங்களைப் பற்றிச் சொன்ன வியாக்கியானங்களைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். தான் கற்ற படிப்புகளிலேயே இத்தகைய அரிய போதனை இல்லை என்றார் . இதுதான் கிறிஸ்தவத்தின் சாராம்சம் என்று களித்தார் .அன்று முதல் செபமாலையைப் பற்றி பிரசங்கிக்க ஆரம்பித்தார் . வெகு சீக்கிரம் மறைமாவட்டம் சீரடைந்து , ஒழுங்கீனம் குறைந்தது . உலகப் பற்றுதல் தொலைந்தது . விசுவாசத்தை இழந்த பலர் , நல்ல கிறிஸ்தவர்கள் ஆனார்கள் . எவ்வளவோ காலமாக தம் மறைமாவட்டத்தைச் சீர்திருத்த பிரயாசப்பட்டவர் அவர் . இப்பொழுது கிறிஸ்தவர்கள் செபமாலை சொல்லத் தொடங்கவே எவ்வளவு மாற்றம் ! செபமாலைப் பக்தியை இன்னும் பரப்புவதற்காக ஓர் அழகிய செபமாலையைக் கட்டி தன் இடையில் தொங்க விட்டுக் கொண்டார் . பிரசங்கம் செய்யும் போது அதை எடுத்துக் காட்டி "இயேசுவில் என் பிரிய சகோதரர்களே , ஆயரின் பற்பல விலையுயர்ந்த சின்னங்களை விட இதைத் தரித்திருப்பதில் தான் எனக்குப் பெருமை " என்றார்
டேனிஷ் குருவானவர் ஒருவர் இதே சரிதையைத் தான் சொல்லுகிறார் . தன் பங்கைச் சீர்திருத்த வெகுநாள் பிரயாசைப் பட்டபின் செபமாலைப் பக்தியை ஊட்டினார் . ஆறு மாதத்திற்குள் பங்கு சீர்திருத்தம் அடைந்தது
பல பிரசங்கங்களும் தியானங்களும் கேட்டும் மனம் திரும்பாத கல் நெஞ்சமுள்ள அக்கிரமிகளும் செபமாலையினால் மனந்திரும்பி இருக்கிறார்கள்
குடும்பச் செபமாலையையும் பொதுச் செபமாலையையும் போற்றுவோமாக
முப்பத்தோராம் நாள்
செபமாலை செயமாலை
பொதுச் செபமாலையின் இலாபம் :
குடும்பச் செபமாலையைப் பற்றியும் , கோவிலில் செய்வதைப் பற்றியும் சொன்னோம் . செபமாலையை பற்றிய இரண்டொரு வார்த்தை : பொதுவில் சொல்லும் போது நம் கவனம் அதிகரிக்கிறது . பொதுவில் சொல்லும்போது ஒருவர் கவனக்குறைவாய் இருந்தாலும் மற்றவர்களுடைய பக்தி உருக்கம் அவனுக்கு ஈடு செய்வதோடு கூட அவனுடைய பக்தியை எழுப்புகிறது . தனித்து ஒருவன் ஒரு செபமாலை சொன்னால் ,அவனுக்கு ஒரு செபமாலையின் பலன் . முப்பது பேரோடு கூடி செபமாலை சொல்லுவானேயாகில் முப்பது செபமாலையின் பலன் அவனுக்குக் கிடைக்கிறது என்பது (திருச்சபையின் துணிந்த போதனையல்ல ) பக்திமான்களின் அபிப்பிராயம். தனிப்பட்ட செபத்தை விட பொது செபம் இறைவனுடைய கோபத்தை அமர்த்தவும் ,அவருடைய இரக்கத்தை உலகிற்குக் கொண்டு வரவும் அதிகம் உதவும் . பகைவர்களுக்கு விரோதமாய் ஒருவன் தனித்து நிற்பது எப்படி ? நூறு பேர் சேர்ந்து எதிர்ப்பது எப்படி? அதே போல பொதுவில் செபமாலை செய்யும்போது ஒரு சேனையே சாத்தானைத் தாக்குவது போலாம் . பேய் பயந்து அரண்டு அலறிக் கொண்டு ஓடுகிறது
ஆட்சேபனைகள் :
செபமாலை சொல்லுவதில் நிலைத்திருப்பது கஷ்டமான காரியம் . பலர் பலவற்றைச் சொல்லி ஏமாற்றத் தேடுவார்கள் . "இவனுக்கு வேறு வேலை இல்லையா ? ஓயாமல் செபமாலை செய்து கொண்டிருக்கிறானே சோம்பேறி " . " உனக்கு என்ன எண்ணம் தம்பி ? நாம் செய்ய வேண்டியதெல்லாம் செபமாலை மணியை உருட்டுவது ; மோட்சத்திலிருந்து பெரிய நதி ஆகாய கங்கையைப் போல உன் மடியில் வந்து விழப்போகிறது என்று நினைத்தாயா ? தன் கையே தனக்குதவி என்பதை நீ அறியாயோ ? வேலை மினக்கிட்டவனே , ஒரு சிறு செபத்தைச் சொல்லிவிட்டு உன் வேலையைப் போய்ப் பார் " . " விவிலியத்தில் ஆண்டவர் எந்த இடத்தில் செபமாலை செய்யச் சொல்லி இருக்கிறார் ?" " செபமாலை செய்வது நல்ல வழக்கம் தான் . யாருக்கு ? வேலையற்ற கிழவிக்கு . ...வசிக்கத் தெரியாத பாட்டிக்கு " என்று ஏளனம் செய்வார்கள் . இந்த மதிகெட்டவருக்கு எவ்விதம் பதில் சொல்லுவது என்று இந்நூலை வாசித்தவருக்குத் தெரியும் .
சூழ்நிலை :
நம் அகத்துப் பேய் தான் பெரிய பேய் . பராக்குகள் , நிலையற்ற குணம் , அசதி , இதய அசமந்தம் , உடல் களைப்பு முதலியன . ஞான சீவியத்தில் எங்கும் இவைகளோடு போராட வேண்டும் . செபமாலை சொல்லும் விஷயத்திலும் இவைகளோடு போராட வேண்டியது தான் .நாம் சம்மனசுக்கள் அல்ல . பராக்குகள் வரத்தான் செய்யும் .. சிறிது பிரயாசைப்பட்டு அவைகளை உதறிவிட்டு செபமாலை சொல்வோமேயாகில் தாய்க்கு நம் மேல் அதிக பிரியம் இருக்கும். இரண்டொருவருக்குப் பெரிய சோதனை ஒன்று உள்ளது . " நான் செபமாலை சொல்லத் தொடங்கினால் பராக்கின் மேல் பராக்கு , சோதனையின் மேல் சோதனை . என்னால் செபமாலை சொல்ல முடிவதில்லை" என்று செபமாலை சொல்லுவதை நிறுத்தி விடுகின்றனர் . என்ன பராக்கு வந்தாலும் செபமாலையைச் செய்து முடியுங்கள் . தேவ இரகசியங்களின் படங்களைக் கண் முன்னே நிறுத்துவோமேயாகில் பராக்கு குறையும் . 153 மணிச் செபமாலையை ஒரே நேரத்தில் சொல்லி முடிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம் . மூன்றாய் பிரித்து வெவ்வேறு நேரத்தில் சொல்லி வரலாம் . அவசியமாகில் பத்து பத்து மணியாய்ப் பிரித்து சொல்லி வரலாம்
நம்மாலான கவனத்தோடு சொல்லி வர வேண்டும் . அதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .சந்தடியில்லாத இடத்தில் அமரிக்கையாய் இருந்து சொல்லவேண்டும் . அவசியமானால் கண்களை மூடிக் கொள்ளலாம். கூடுமானால் முழந்தாளில் நிற்கலாம் . வாயோடு வாய் சொல்லாமல் சில சமயங்களில் வாய் விட்டுச் சொன்னால் கவனத்தை அது அதிகரிக்கும்
சுத்தக் கருத்தோடு சொல்ல வேண்டும் . எக்கருத்துக்கென்று திட்டமிட்டு ஏதேனும் ஒரு வரப்பிரசாதத்தையோ , கிருவையையோ கேட்கலாம் . நாம் ஒரு கிருபையை அடைய ஆர்வமுற்றோமேயாகில் பராக்கு குறையும் கவனம் அதிகரிக்கும்
பெருங் கிருபை :
இப்பக்தியைப் பரப்ப அதிகமாகப் பிரயாசைப்பட்டவர் கர்த்தூசியர் சபையைச் சேர்ந்த முத். டொமினிக் என்று வாசித்தோம் .1481ம் ஆண்டில் நமதாண்டவள் அவருக்கு தரிசனமாகிச் சொன்னது :" தேவ அருள் நிலையிலுள்ள ஒரு கிறிஸ்தவன் இயேசுவின் வாழ்க்கையையும் பாடுகளையும் சிந்தித்துக் கொண்டு செபமாலை செய்வானேயாகில் அவன் கட்டிக் கொண்ட எல்லாப் பாவத்திற்கும் முழு மன்னிப்பு அடைகிறான் "
செபமாலை சொல்வதினால் சாவான பாவம் மன்னிக்கப்படுகிறதென்பது அர்த்தமல்ல . சொல்லுகிறவன் தேவ அருள் நிலையில் இருக்கிறானே , அவன், உத்தரிக்க வேண்டிய அநித்திய ஆக்கினைஎல்லாம் முற்றிலும் நீங்கப் போகிறது என்பது சில அர்ச்சிஷ்டவர்களின் அபிப்பிராயம்
இதையே தான் செபமாலை இராக்கினி முத். ஆலன் ரோச்சுக்கு சொல்லிப் போனார் : " முழந்தாளில் இருந்து தேவ அருள் நிலையில் பக்தியாய் 53 மணிச் செபம் சொல்லுகிறவர்களுக்கு அளிக்கப்படிருக்கிற பலன்கள் அநேகம் என்று உனக்குத் தெரியும் அல்லவா ? செபமாலைப் பக்தியில் நிலைத்திருக்கிறவர்களுக்கு , தேவ இரகசியங்களைச் சிந்தித்து செபமாலை சொல்லுகிறவர்களுக்கு அவர்களுடைய கடைசி நாளில் அவர்கள் பாவங்களின் தோஷத்தையும் அபராதத்தையும் ஆக்கினையையும் எல்லாவற்றையும் மன்னிக்கும்படி செய்வேன் .அதாவது உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாமல் நேரே மோட்சம் . இது அரசரின் தாய் நான் ஆனபடியால் இதைச் செய்வது எனக்கு சுலபம் . நான் தேவ அருள் நிறைந்தவளாய் இருக்கிறபடியால் என் நேச மக்களுக்கு அவைகளை வழங்குவது என்னால் இயலும்"
தப்பித் தவறி சாவான பாவ நிலையில் இருந்தாலும் செபமாலை சொல்லத் தவறாதீர்கள் . நாம் மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்ய , மனதிரும்ப அது உதவும் . விசேஷமாய் பாவத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடும் ஆசையோடும் செபமாலை செய்வோமானால் சீக்கிரம் மனந்திரும்புவோம் . ஆனால் பாவத்தை விட்டு விட மனம் இல்லாமல் பாவ ஆசையிலும் , இச்சையிலும் , மகிழ்ச்சியிலும் மிதந்து கொண்டு செபமாலை செய்வது தேவ தாய்க்கு அவசங்கை செய்வதாம் . பெரிய பாவாக்கிராமி ஒருவன் பாவ இச்சையில் வேண்டுமென்று நீந்திக் கொண்டிருந்தவன் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லிவந்தான் .ஒருநாள் தேவ தாய் அவனுக்குத் தோன்றி ஒரு நேர்த்தியான பழத்தை அழுக்கு நிறைந்த தட்டில் வைத்திருப்பதைக் காட்டினார் . அவனுக்கு அதிசயமும் ஆத்திரமும் ." இவ்விதம் தான் நீ எனக்கு மரியாதை செய்கிறாய் . அழுக்கு மலிந்த களத்தில் அழகிய ரோஜா மலர்களை எனக்கு அளிக்கிறாய் . இத்தகைய கொடைகளை நான் ஏற்றுக் கொள்ளுவேனா " என்கிறார் ஆண்டவள்
உலகம் பாவ பிரமாண்ட நதி , அக்கிரமங்களின் ஆழ்ந்து அகன்ற ஆறு .அதில் எத்தனையோ ஆத்துமங்கள் அகப்பட்டு அழிந்தன . நாம் தப்பிக்க வேண்டும் அல்லவா ? அடர்ந்த இருள் மத்தியில் நாம் நிற்கிறோம் . எத்தனையோ ஞானிகளை இது குருடாக்கி இருக்கிறது . நாம் குருடாகாமல் இருக்க வேண்டும் அல்லவா ? மகா சாமர்த்தியமும் அனுபவமும் உள்ள பேய்க் கணங்கள் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன . நம்மைச் சோதிக்கின்றன . உலகம் , பேய் , உடல் என்ற பகைவர்களின் பிடிக்குத் தப்பிக்க வேண்டுமேயாகில் செபமாலையைத் தினம் சொல்வோம் . வணக்கத்தோடு முழங்காலில் இருந்து ஆத்தும சுத்தத்தோடு சொல்லுவோம்
செபம்
ஒ செபமாலை இராக்கினியே , தேவனின் தாயே , மனிதர்களின் மாதாவே , பாவிகளாகிய நாங்கள் உம் பாதம் தேடி வந்தோம் . எங்கள் ஆத்துமம் மேலே எலும்பாதபடி எங்கள் உடல் அதை இழுப்பதைப் பாரும் . எங்கள் துன்பத்தின் மேலும் எங்கள் துக்கத்தின் மேலும் உமது இரக்கப் பார்வை பாய்வதாக . உமது வதனம் எங்கள் வெற்றியையும் சந்தோசத்தையும் கண்டு மகிழ்வதாக . முன்னொரு நாள் உமது மகன் அருளப்பரைக் காண்பித்து சொன்னது போல இன்று எங்கள் ஒவ்வொருவரையும் காட்டி " இதோ உம் மகன்/மகள் " என்று சொல்வது உமது காதில் ஒலிப்பதாக .
அன்னையே என்று உம்மை அழைக்கும் நாங்கள் உம்மை எங்கள் உலக வாழ்வில் ஆதரவாகவும் ஆறுதலாகவும் வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்
சூரியனை ஆடையாக அணிந்து விண்மீனை முடியாய்ச் சூடி இயேசுவுக்கு அடுத்தபடியில் சம்மனசுக்களுக்கும் மோட்சவாசிகளுக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் அரசியே , எங்கள் இதய நோயைப் போக்கி எங்களுடையவும் திருச்சபையுடையவும் துன்பங்களைத் துடைத்து அமைதியையும் ஆனந்தத்தையும் கொடுத்தருளும் . திருச்சபையைப் பாதுகாத்தருளும் . சாத்தானின் தலையை நசுக்கிய செல்வியே , விசுவாச விரோதிகளின் தலையையும் கொட்டத்தையும் அடக்கி , உலகிற்கு சமாதானத்தையும் பாக்கியத்தையும் கொடுத்தருளும் . செபமாலையைக் கொண்டாடும் நாங்கள் சோதனையை வென்று உலகின் மேலும் , உடலின் மேலும் அலகையின் மேலும் வெற்றி கண்டு உமது பாக்கியமான சுந்தர சோபனத்தையும் உம் திரு மகனின் முக தரிசனத்தையும் என்றென்றும் கண்டு களிக்க கிருபை கூர்ந்தருளும் ஆமென்
சரிதை
நாகப்பட்டினத்தில் இருந்த புனித சூசையப்பர் கல்லூரியில் அமிர்தசாமி என்ற மாணவன் ஒருவன் இருந்தான் .அவன் நல்ல பையன் தான் .அதனால் தான் துறவற சபையில் சேர்ந்தான் . சில ஆண்டுகள் சென்று பேயின் சோதனைக்கு உள்ளாகி சந்நியாசத்தை உதறிவிட்டு உலகிற்குத் திரும்பினான் . தன் பெயரை அமிர்தலிங்கம் என்று மாற்றிக் கொண்டான் . மணமுடித்தான் . கோயிலுக்குப் போவதை நிறுத்தினான் . பக்தி முயற்சிகளை விட்டுவிட்டான் . அவனுக்கு இரவும் பகலும் ஒரே வேலை .குருக்களுக்கு விரோதமாய் சகல அக்கிரமங்களையும் கக்குவான் . அவன் உற்றாரும் உறவினரும் பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் . கிறிஸ்தவ ஒழுக்கத்திற்கு வருமாறு அவனுக்கு புத்தி சொல்லிப் பார்த்தார்கள் . கெஞ்சினார்கள் . அவன் அவர்களை ஏளனம் செய்தான் . அசட்டு சிரிப்பு தான் அவனது பதில்
"சாம்பலைப் பூசிக் கொள்ள பாப்பாண்டவர் உத்தரவு கொடுத்துள்ளார் . இந்த வஞ்சக நெஞ்சமுள்ள குருக்கள் தான் நம்மை ஏமாற்றி அலைகிறார்கள் " என்று பொய்யும் பித்தலாட்டமும் கலந்து பேசினான் . இவ்விதம் நாற்பது ஆண்டுகளாக அவன் பேய்க்கு அடிமையாக அலைந்தான்
வியாதியாய் விழுந்தான் .சாகக் கிடந்தான் . குருவானவரை அழைத்து வந்தனர் . குருவானவர் அவனை அண்டிப் பட்சமாய்ப் பேசினார் . " மகனே , இறைவனிடம் போகும் முன்னர் பாவசங்கீர்த்தனம் செய்வது நல்லது அல்லவா ? பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்கிறாயா ?" "முடியவே முடியாது " என்று சாதித்தான் . இறுதியில் "குருக்களை நம்பக் கூடாது . அவர்களிடமா பாவசங்கீர்த்தனம் செய்வது ?" என்றான் . குருவானவர் வீட்டை விட்டு வெளியே சென்றார் .அவருக்கு செபமாலை மேல் அதிக பக்தி . செபமாலையை எடுத்து செபித்தார் .சொல்லி முடித்தபின் நோயாளியண்டை சென்றார் . அவன் பிரியம் என்னவென்று கேட்டார் . " நீங்கள் சொன்னபடியெல்லாம் செய்யத் தயாராயிருக்கிறேன் " என்றான் . அவனைத் தயார் செய்து அவனுடைய பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டார் . கடைசித் தேவதிரவிய அனுமானங்களைக் கொடுத்தார் . அவனும் பாக்கியமான மரணம் அடைந்தான் . செபமாலை ஜெயமாலை!!!
செபமாலை செயமாலை
பொதுச் செபமாலையின் இலாபம் :
குடும்பச் செபமாலையைப் பற்றியும் , கோவிலில் செய்வதைப் பற்றியும் சொன்னோம் . செபமாலையை பற்றிய இரண்டொரு வார்த்தை : பொதுவில் சொல்லும் போது நம் கவனம் அதிகரிக்கிறது . பொதுவில் சொல்லும்போது ஒருவர் கவனக்குறைவாய் இருந்தாலும் மற்றவர்களுடைய பக்தி உருக்கம் அவனுக்கு ஈடு செய்வதோடு கூட அவனுடைய பக்தியை எழுப்புகிறது . தனித்து ஒருவன் ஒரு செபமாலை சொன்னால் ,அவனுக்கு ஒரு செபமாலையின் பலன் . முப்பது பேரோடு கூடி செபமாலை சொல்லுவானேயாகில் முப்பது செபமாலையின் பலன் அவனுக்குக் கிடைக்கிறது என்பது (திருச்சபையின் துணிந்த போதனையல்ல ) பக்திமான்களின் அபிப்பிராயம். தனிப்பட்ட செபத்தை விட பொது செபம் இறைவனுடைய கோபத்தை அமர்த்தவும் ,அவருடைய இரக்கத்தை உலகிற்குக் கொண்டு வரவும் அதிகம் உதவும் . பகைவர்களுக்கு விரோதமாய் ஒருவன் தனித்து நிற்பது எப்படி ? நூறு பேர் சேர்ந்து எதிர்ப்பது எப்படி? அதே போல பொதுவில் செபமாலை செய்யும்போது ஒரு சேனையே சாத்தானைத் தாக்குவது போலாம் . பேய் பயந்து அரண்டு அலறிக் கொண்டு ஓடுகிறது
ஆட்சேபனைகள் :
செபமாலை சொல்லுவதில் நிலைத்திருப்பது கஷ்டமான காரியம் . பலர் பலவற்றைச் சொல்லி ஏமாற்றத் தேடுவார்கள் . "இவனுக்கு வேறு வேலை இல்லையா ? ஓயாமல் செபமாலை செய்து கொண்டிருக்கிறானே சோம்பேறி " . " உனக்கு என்ன எண்ணம் தம்பி ? நாம் செய்ய வேண்டியதெல்லாம் செபமாலை மணியை உருட்டுவது ; மோட்சத்திலிருந்து பெரிய நதி ஆகாய கங்கையைப் போல உன் மடியில் வந்து விழப்போகிறது என்று நினைத்தாயா ? தன் கையே தனக்குதவி என்பதை நீ அறியாயோ ? வேலை மினக்கிட்டவனே , ஒரு சிறு செபத்தைச் சொல்லிவிட்டு உன் வேலையைப் போய்ப் பார் " . " விவிலியத்தில் ஆண்டவர் எந்த இடத்தில் செபமாலை செய்யச் சொல்லி இருக்கிறார் ?" " செபமாலை செய்வது நல்ல வழக்கம் தான் . யாருக்கு ? வேலையற்ற கிழவிக்கு . ...வசிக்கத் தெரியாத பாட்டிக்கு " என்று ஏளனம் செய்வார்கள் . இந்த மதிகெட்டவருக்கு எவ்விதம் பதில் சொல்லுவது என்று இந்நூலை வாசித்தவருக்குத் தெரியும் .
சூழ்நிலை :
நம் அகத்துப் பேய் தான் பெரிய பேய் . பராக்குகள் , நிலையற்ற குணம் , அசதி , இதய அசமந்தம் , உடல் களைப்பு முதலியன . ஞான சீவியத்தில் எங்கும் இவைகளோடு போராட வேண்டும் . செபமாலை சொல்லும் விஷயத்திலும் இவைகளோடு போராட வேண்டியது தான் .நாம் சம்மனசுக்கள் அல்ல . பராக்குகள் வரத்தான் செய்யும் .. சிறிது பிரயாசைப்பட்டு அவைகளை உதறிவிட்டு செபமாலை சொல்வோமேயாகில் தாய்க்கு நம் மேல் அதிக பிரியம் இருக்கும். இரண்டொருவருக்குப் பெரிய சோதனை ஒன்று உள்ளது . " நான் செபமாலை சொல்லத் தொடங்கினால் பராக்கின் மேல் பராக்கு , சோதனையின் மேல் சோதனை . என்னால் செபமாலை சொல்ல முடிவதில்லை" என்று செபமாலை சொல்லுவதை நிறுத்தி விடுகின்றனர் . என்ன பராக்கு வந்தாலும் செபமாலையைச் செய்து முடியுங்கள் . தேவ இரகசியங்களின் படங்களைக் கண் முன்னே நிறுத்துவோமேயாகில் பராக்கு குறையும் . 153 மணிச் செபமாலையை ஒரே நேரத்தில் சொல்லி முடிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம் . மூன்றாய் பிரித்து வெவ்வேறு நேரத்தில் சொல்லி வரலாம் . அவசியமாகில் பத்து பத்து மணியாய்ப் பிரித்து சொல்லி வரலாம்
நம்மாலான கவனத்தோடு சொல்லி வர வேண்டும் . அதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .சந்தடியில்லாத இடத்தில் அமரிக்கையாய் இருந்து சொல்லவேண்டும் . அவசியமானால் கண்களை மூடிக் கொள்ளலாம். கூடுமானால் முழந்தாளில் நிற்கலாம் . வாயோடு வாய் சொல்லாமல் சில சமயங்களில் வாய் விட்டுச் சொன்னால் கவனத்தை அது அதிகரிக்கும்
சுத்தக் கருத்தோடு சொல்ல வேண்டும் . எக்கருத்துக்கென்று திட்டமிட்டு ஏதேனும் ஒரு வரப்பிரசாதத்தையோ , கிருவையையோ கேட்கலாம் . நாம் ஒரு கிருபையை அடைய ஆர்வமுற்றோமேயாகில் பராக்கு குறையும் கவனம் அதிகரிக்கும்
பெருங் கிருபை :
இப்பக்தியைப் பரப்ப அதிகமாகப் பிரயாசைப்பட்டவர் கர்த்தூசியர் சபையைச் சேர்ந்த முத். டொமினிக் என்று வாசித்தோம் .1481ம் ஆண்டில் நமதாண்டவள் அவருக்கு தரிசனமாகிச் சொன்னது :" தேவ அருள் நிலையிலுள்ள ஒரு கிறிஸ்தவன் இயேசுவின் வாழ்க்கையையும் பாடுகளையும் சிந்தித்துக் கொண்டு செபமாலை செய்வானேயாகில் அவன் கட்டிக் கொண்ட எல்லாப் பாவத்திற்கும் முழு மன்னிப்பு அடைகிறான் "
செபமாலை சொல்வதினால் சாவான பாவம் மன்னிக்கப்படுகிறதென்பது அர்த்தமல்ல . சொல்லுகிறவன் தேவ அருள் நிலையில் இருக்கிறானே , அவன், உத்தரிக்க வேண்டிய அநித்திய ஆக்கினைஎல்லாம் முற்றிலும் நீங்கப் போகிறது என்பது சில அர்ச்சிஷ்டவர்களின் அபிப்பிராயம்
இதையே தான் செபமாலை இராக்கினி முத். ஆலன் ரோச்சுக்கு சொல்லிப் போனார் : " முழந்தாளில் இருந்து தேவ அருள் நிலையில் பக்தியாய் 53 மணிச் செபம் சொல்லுகிறவர்களுக்கு அளிக்கப்படிருக்கிற பலன்கள் அநேகம் என்று உனக்குத் தெரியும் அல்லவா ? செபமாலைப் பக்தியில் நிலைத்திருக்கிறவர்களுக்கு , தேவ இரகசியங்களைச் சிந்தித்து செபமாலை சொல்லுகிறவர்களுக்கு அவர்களுடைய கடைசி நாளில் அவர்கள் பாவங்களின் தோஷத்தையும் அபராதத்தையும் ஆக்கினையையும் எல்லாவற்றையும் மன்னிக்கும்படி செய்வேன் .அதாவது உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாமல் நேரே மோட்சம் . இது அரசரின் தாய் நான் ஆனபடியால் இதைச் செய்வது எனக்கு சுலபம் . நான் தேவ அருள் நிறைந்தவளாய் இருக்கிறபடியால் என் நேச மக்களுக்கு அவைகளை வழங்குவது என்னால் இயலும்"
தப்பித் தவறி சாவான பாவ நிலையில் இருந்தாலும் செபமாலை சொல்லத் தவறாதீர்கள் . நாம் மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்ய , மனதிரும்ப அது உதவும் . விசேஷமாய் பாவத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடும் ஆசையோடும் செபமாலை செய்வோமானால் சீக்கிரம் மனந்திரும்புவோம் . ஆனால் பாவத்தை விட்டு விட மனம் இல்லாமல் பாவ ஆசையிலும் , இச்சையிலும் , மகிழ்ச்சியிலும் மிதந்து கொண்டு செபமாலை செய்வது தேவ தாய்க்கு அவசங்கை செய்வதாம் . பெரிய பாவாக்கிராமி ஒருவன் பாவ இச்சையில் வேண்டுமென்று நீந்திக் கொண்டிருந்தவன் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லிவந்தான் .ஒருநாள் தேவ தாய் அவனுக்குத் தோன்றி ஒரு நேர்த்தியான பழத்தை அழுக்கு நிறைந்த தட்டில் வைத்திருப்பதைக் காட்டினார் . அவனுக்கு அதிசயமும் ஆத்திரமும் ." இவ்விதம் தான் நீ எனக்கு மரியாதை செய்கிறாய் . அழுக்கு மலிந்த களத்தில் அழகிய ரோஜா மலர்களை எனக்கு அளிக்கிறாய் . இத்தகைய கொடைகளை நான் ஏற்றுக் கொள்ளுவேனா " என்கிறார் ஆண்டவள்
உலகம் பாவ பிரமாண்ட நதி , அக்கிரமங்களின் ஆழ்ந்து அகன்ற ஆறு .அதில் எத்தனையோ ஆத்துமங்கள் அகப்பட்டு அழிந்தன . நாம் தப்பிக்க வேண்டும் அல்லவா ? அடர்ந்த இருள் மத்தியில் நாம் நிற்கிறோம் . எத்தனையோ ஞானிகளை இது குருடாக்கி இருக்கிறது . நாம் குருடாகாமல் இருக்க வேண்டும் அல்லவா ? மகா சாமர்த்தியமும் அனுபவமும் உள்ள பேய்க் கணங்கள் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன . நம்மைச் சோதிக்கின்றன . உலகம் , பேய் , உடல் என்ற பகைவர்களின் பிடிக்குத் தப்பிக்க வேண்டுமேயாகில் செபமாலையைத் தினம் சொல்வோம் . வணக்கத்தோடு முழங்காலில் இருந்து ஆத்தும சுத்தத்தோடு சொல்லுவோம்
செபம்
ஒ செபமாலை இராக்கினியே , தேவனின் தாயே , மனிதர்களின் மாதாவே , பாவிகளாகிய நாங்கள் உம் பாதம் தேடி வந்தோம் . எங்கள் ஆத்துமம் மேலே எலும்பாதபடி எங்கள் உடல் அதை இழுப்பதைப் பாரும் . எங்கள் துன்பத்தின் மேலும் எங்கள் துக்கத்தின் மேலும் உமது இரக்கப் பார்வை பாய்வதாக . உமது வதனம் எங்கள் வெற்றியையும் சந்தோசத்தையும் கண்டு மகிழ்வதாக . முன்னொரு நாள் உமது மகன் அருளப்பரைக் காண்பித்து சொன்னது போல இன்று எங்கள் ஒவ்வொருவரையும் காட்டி " இதோ உம் மகன்/மகள் " என்று சொல்வது உமது காதில் ஒலிப்பதாக .
அன்னையே என்று உம்மை அழைக்கும் நாங்கள் உம்மை எங்கள் உலக வாழ்வில் ஆதரவாகவும் ஆறுதலாகவும் வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்
சூரியனை ஆடையாக அணிந்து விண்மீனை முடியாய்ச் சூடி இயேசுவுக்கு அடுத்தபடியில் சம்மனசுக்களுக்கும் மோட்சவாசிகளுக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் அரசியே , எங்கள் இதய நோயைப் போக்கி எங்களுடையவும் திருச்சபையுடையவும் துன்பங்களைத் துடைத்து அமைதியையும் ஆனந்தத்தையும் கொடுத்தருளும் . திருச்சபையைப் பாதுகாத்தருளும் . சாத்தானின் தலையை நசுக்கிய செல்வியே , விசுவாச விரோதிகளின் தலையையும் கொட்டத்தையும் அடக்கி , உலகிற்கு சமாதானத்தையும் பாக்கியத்தையும் கொடுத்தருளும் . செபமாலையைக் கொண்டாடும் நாங்கள் சோதனையை வென்று உலகின் மேலும் , உடலின் மேலும் அலகையின் மேலும் வெற்றி கண்டு உமது பாக்கியமான சுந்தர சோபனத்தையும் உம் திரு மகனின் முக தரிசனத்தையும் என்றென்றும் கண்டு களிக்க கிருபை கூர்ந்தருளும் ஆமென்
சரிதை
நாகப்பட்டினத்தில் இருந்த புனித சூசையப்பர் கல்லூரியில் அமிர்தசாமி என்ற மாணவன் ஒருவன் இருந்தான் .அவன் நல்ல பையன் தான் .அதனால் தான் துறவற சபையில் சேர்ந்தான் . சில ஆண்டுகள் சென்று பேயின் சோதனைக்கு உள்ளாகி சந்நியாசத்தை உதறிவிட்டு உலகிற்குத் திரும்பினான் . தன் பெயரை அமிர்தலிங்கம் என்று மாற்றிக் கொண்டான் . மணமுடித்தான் . கோயிலுக்குப் போவதை நிறுத்தினான் . பக்தி முயற்சிகளை விட்டுவிட்டான் . அவனுக்கு இரவும் பகலும் ஒரே வேலை .குருக்களுக்கு விரோதமாய் சகல அக்கிரமங்களையும் கக்குவான் . அவன் உற்றாரும் உறவினரும் பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் . கிறிஸ்தவ ஒழுக்கத்திற்கு வருமாறு அவனுக்கு புத்தி சொல்லிப் பார்த்தார்கள் . கெஞ்சினார்கள் . அவன் அவர்களை ஏளனம் செய்தான் . அசட்டு சிரிப்பு தான் அவனது பதில்
"சாம்பலைப் பூசிக் கொள்ள பாப்பாண்டவர் உத்தரவு கொடுத்துள்ளார் . இந்த வஞ்சக நெஞ்சமுள்ள குருக்கள் தான் நம்மை ஏமாற்றி அலைகிறார்கள் " என்று பொய்யும் பித்தலாட்டமும் கலந்து பேசினான் . இவ்விதம் நாற்பது ஆண்டுகளாக அவன் பேய்க்கு அடிமையாக அலைந்தான்
வியாதியாய் விழுந்தான் .சாகக் கிடந்தான் . குருவானவரை அழைத்து வந்தனர் . குருவானவர் அவனை அண்டிப் பட்சமாய்ப் பேசினார் . " மகனே , இறைவனிடம் போகும் முன்னர் பாவசங்கீர்த்தனம் செய்வது நல்லது அல்லவா ? பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்கிறாயா ?" "முடியவே முடியாது " என்று சாதித்தான் . இறுதியில் "குருக்களை நம்பக் கூடாது . அவர்களிடமா பாவசங்கீர்த்தனம் செய்வது ?" என்றான் . குருவானவர் வீட்டை விட்டு வெளியே சென்றார் .அவருக்கு செபமாலை மேல் அதிக பக்தி . செபமாலையை எடுத்து செபித்தார் .சொல்லி முடித்தபின் நோயாளியண்டை சென்றார் . அவன் பிரியம் என்னவென்று கேட்டார் . " நீங்கள் சொன்னபடியெல்லாம் செய்யத் தயாராயிருக்கிறேன் " என்றான் . அவனைத் தயார் செய்து அவனுடைய பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டார் . கடைசித் தேவதிரவிய அனுமானங்களைக் கொடுத்தார் . அவனும் பாக்கியமான மரணம் அடைந்தான் . செபமாலை ஜெயமாலை!!!