- வணக்க மாதம்
- புனித சூசையப்பர்
- நாள் 6-10
ஆறாம் தேதி
புனித சூசையப்பர் சந்தேகப்பட்டதை தியானிப்போம்
தியானம்
புனித சூசையப்பர் கன்னிமரியாளை திருமணம் செய்தபிறகு வானதூதர் கன்னிமரிக்குத் தோன்றி மங்கள வார்த்தை கூறி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தது; இதோ ஆண்டவருடைய அடிமை; உம் வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும் என்று ஏற்றுக் கொண்டதன் பேரில் தூய ஆவியால் கருத்தரித்தாள். சிறிது நாட்களுக்குப் பிறகு தனது உறவினளான புனித எலிசபெத்தம்மாளை சந்திக்கச் சென்றாள். அவருடன் மூன்று மாதம் தங்கியிருந்து அவருக்கு பணிவிடை செய்துவிட்டு தனது ஊரான நாசரேத்து வந்தாள். அப்போது மரியன்னை கருவுற்றிருப்பதை அறிந்து புனித சூசையப்பர் அதிர்ந்தார். இறைவனின் திருச்சித்தத்தை அறியாதவராக இவர் இது எப்படி ஆனதோ என கலங்கி சந்தேகப்பட்டு மிகவும் வேதனை அடைந்தார். தாழ்ச்சியால் மரியன்னை தனக்கு நேர்ந்ததை தன் கணவரிடம் கூறாது விட்டுவிட்டார். புனித சூசையப்பர் நீதிமானாக இருந்தாலும், மரியன்னையை அவமானப்படுத்த விரும்பாததாலும் இரகசியமாக தன் மனைவியை விலக்கி வைக்க எண்ணினார்.
இவ்வாறு அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் வானதூதர் அவரது கனவில் தோன்றி "சூசையப்பரே! தாவீது அரசரின் குலத்தோன்றலே! உம் மனைவியை ஏற்றுக்கொள்ள சந்தேகப்படவேண்டாம். தூய ஆவியால் கருத்தரித்துள்ளார்; ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அந்த குழந்தைக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் தம்முடைய மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். அதன்பின் புனித சூசையப்பர் தன் மனைவியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். புனித சூசையப்பர் இறைச்சித்தத்தை அறியாமல் இருந்ததால் மரியன்னை கருவுற்றது எப்படி என சந்தேகத்திற்கு இடமளித்தாலும் அவருக்கு மன கஷ்டத்தை அளிக்காமலும் விசாரிக்காமலும் இருந்தார். அவர் இவ்வேளையில் மிகவும் மனகலக்கம் அடைந்திருந்ததால் யாரிடமும் முறையிடாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை இறைவன் அறிவிக்க வேண்டும் என்று செபித்தார்.
தமது மனைவியாகிய மரியன்னையை அவமானப்படுத்தாமல் யாருக்கும் தெரியாமல் விலக்கி அனுப்பவேண்டும் என முடிவெடுத்த போது இறைவன் வானதுதரை அனுப்பி மரியன்னையின் வயிற்றில் வளரும் இயேசுகிறிஸ்துபற்றிய பரம இரகசியத்தை வெளியிடச் செய்தார். புனித சூசையப்பர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தூயவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் துன்ப துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர் என்பதை கிறிஸ்தவர்கள் அறிய வேண்டும். இவ்வுலக வாழ்வு சோதனைகளும் வேதனைகளும் நிறைந்தது என உணர வேண்டும். மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். நாம் சில நேரங்களில் வானதுதர்களைப்போல் தூயவர்களாகவும், சில நேரங்களில் இறைவனுக்கு நிந்தை ஏற்படுத்துகிறவர்களாகவும் வாழுகிறோம். நிலையான இடம் வான்விடு என்பதை உணர வேண்டும். மகிழ்ச்சி வரும்போது ஆங்காரப்படாமலும், துன்ப வேளைகளில் சோம்பிப்போகாமலும், எதற்கும் பயப்படாமல் எல்லாவற்றிலும் உறுதியாக இருந்து இறைவனின் புகழ்ப் பாடினார். நாமும் அவ்வாறு நடப்போம்.
புனித சூசையப்பர் தேவனுடைய விருப்பத்தையும் திட்டத்தையும் அறியாததால் சந்தேகப்பட்டாலும் பொறுமையோடு செயல்பட்டார். நமக்கும் இத்தகைய பொறுமை இருந்தால் பல துன்பங்கள் வராமல் நன்மைகளை வரவழைக்கும். கணவன் - மனைவி, அண்ணன் - தம்பி, நண்பர்கள் இவர்களிடையே சந்தேகமும் வேறுபாடும் தோன்றுகிறபோது நாம் வைராக்கியம் கொண்டு வாழ்ந்தால் என்ன பயன்? கோபம் அதிக கெடுதலைத்தான் தோற்றுவிக்கும். அமைதிக்கு அது வழியல்ல. காயத்திற்கு மருந்து போட்டால் ஆறுமே தவிர மிளகுபொடியைத் தூவினால் ஆறுமா? அதனால் பொறுமை, தாழ்ச்சியால் எல்லா தடைகளும் அகலும். பொறாமை, கோபம், சோம்பல், ஆங்காரம் குடும்பத்தை சிதைக்கும்.
புனித சூசையப்பரைப்போல் துன்பம் அனுபவிக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும். நம்மை பெற்ற தாய் தந்தையரைவிடவும் இறைவன் அதிக பாசம் உடையவராதலால் நாம் துன்பப்படும்போது, நாம் நம்மை மீட்க செபிக்கும்போது, இயேசு கிறிஸ்துவைப்போல் உமக்கு விருப்பமானால் இந்த துன்பம் என்னை விட்டு அகலட்டும். உமது விருப்பப்படி ஆகட்டும் என செபிப்போம். விசுவசித்தால் இறைவன் நல்லதையே செய்வார்.
புனித சூசையப்பர் மனத்துயரில் இருக்கும்போது வானதூதரின் அறிவிப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதுபோல் நாம் துன்பம் வரும்போது பொறுமையாக இருந்து இறைவனிடம் செபித்து வந்தால் மறுஉலகில் நமக்கு பிரதிபலன் கிடைக்கும் என நம்புவோம்.
புதுமை
1856-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு தென்பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் புகழ்பெற்ற மனிதர் கொடிய நோயால் இறக்கும் நிலையில் இருந்தார். உலகத்தின் பார்வைக்கு நல்லவராக இருந்தபோதும், நீண்டகாலம் ஒப்புரவு அருட்சாதனத்தை பெறாமலும், இறைசெயல்களில் அசட்டையாகவும், இறைவனின் கட்டளைகளை சரிவர நிறைவேற்றாமலும் இருந்து வந்தார். அவன் உயிர்பிழைக்க மாட்டார் என்பதை அறிந்து அருட்பணியாளர்கள் அவரை ஒப்புரவு, நோயில் பூசுதல் போன்ற அருட்சாதனங்களைப் பெறவும், மரணத்திற்கு தயாராகும்படியும் அறிவுறுத்தினார்கள். 'மெதுவாக நடக்கட்டும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என நோயாளி கூறினார்.
நோயின் பிடி இறுக இறுக அவனது உறவினர்கள் அவனுக்காக இறைவனிடம் செபித்தார்கள். நோயாளியின் நெருங்கிய உறவினர் ஒருவர் புனித சூசையப்பரிடம் அடைக்கலம் தேட வேண்டும் என்று கன்னியர் இல்லம் ஒன்றிற்கு செய உதவி கேட்டு கடிதம் எழுதினார். நோயாளிக்கு நல்மரணம் நிகழ புனித சூசையப்பரிடம் இல்லத்தில் உள்ள அனைவரும் செபிக்க கேட்டிருந்தார். அவர்களும் அக்டோபர் 24-ஆம் நாள் முதல் செபிக்க தொடங்கினர். இவர்கள் செபிக்க தொடங்கிய நான்காம் நாளிலே நோயாளி மனம் திரும்பி தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி நோயில் பூசுதல் அருட்சாதனத்தினை பெற ஆவலாய் இருப்பதாகத் தெரிவித்தான். பின்னர் மனநிறைவோடு தன்னுடைய உயிரை இறைவனிடம் ஒப்படைத்தார்.
நவநாள் செபத்திற்கு கடைசி நாளான சகல புனிதர்களுடைய நாளிலே நோயில் பூசுதலைப் பெற்று இவர் புனித சூசையப்பரின் உதவியால் மனம் திருந்தி நரகத்திலிருந்து மோட்சமடைந்தார் என மகிழ்ந்தனர். நவநாள் செய்ய கேட்டுக்கொண்ட மனிதரோ அந்த கன்னியர் இல்லத்திற்கு அழகிய புனித சூசையப்பர் திருஉருவத்தை அனுப்பிக் கொடுத்தார். அதனை ஆயர் அவர்கள் மந்திரித்து சிந்தனையுள்ள மறையுரையை நிகழ்த்தினார்.
நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ மரண நேரத்தில் ஒப்புரவு அருட்சாதனம் பெறாமல் இருந்தால் புனித சூசையப்பரிடம் அவருக்கு நன்மரணம் கிடைக்க செபித்தால் நிச்சயம் நன்மரணம் கிடைக்கும் என நம்புவோம். (3 பர, பிதா)
செபம்
துன்ப வேளைகளில் பொறுமை, அமைதி, தாழ்ச்சி முதலிய புண்ணியங்களை கடைப்பிடித்து வந்த புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். எல்லா இல்லறத்தாருக்கும் இப்புண்ணியங்கள் தேவையாக இருப்பதால் அவர்களுக்கு பணிவான அன்பை அளித்தருளும். துன்பப்படுகிறவர்கள் எல்லாம் மனம் தளர்ந்து விடாமல், பொறுமையோடு இறைவனிடம் ஆறுதலைக் கேட்டு பெற்றுக் கொள்ள செய்தருளும். உம்முடைய புண்ணியங்களைப் பார்த்து துன்ப வேளைகளில் கலங்கிப் போகாமல் புண்ணிய வழியில் உறுதியாய் நடக்க உதவும் படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலான புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம்.
சந்தேகப்படுகிறவர்களுக்குத் தெளிவு கொடுக்கிற புனித சூசையப்பரே! உம்மை வாழ்த்துகிறோம்.
பக்தியுள்ள குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கிற புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம்.
செய்ய வேண்டிய நற்செயல்
துன்ப துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுதல்.
புனித சூசையப்பர் சந்தேகப்பட்டதை தியானிப்போம்
தியானம்
புனித சூசையப்பர் கன்னிமரியாளை திருமணம் செய்தபிறகு வானதூதர் கன்னிமரிக்குத் தோன்றி மங்கள வார்த்தை கூறி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தது; இதோ ஆண்டவருடைய அடிமை; உம் வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும் என்று ஏற்றுக் கொண்டதன் பேரில் தூய ஆவியால் கருத்தரித்தாள். சிறிது நாட்களுக்குப் பிறகு தனது உறவினளான புனித எலிசபெத்தம்மாளை சந்திக்கச் சென்றாள். அவருடன் மூன்று மாதம் தங்கியிருந்து அவருக்கு பணிவிடை செய்துவிட்டு தனது ஊரான நாசரேத்து வந்தாள். அப்போது மரியன்னை கருவுற்றிருப்பதை அறிந்து புனித சூசையப்பர் அதிர்ந்தார். இறைவனின் திருச்சித்தத்தை அறியாதவராக இவர் இது எப்படி ஆனதோ என கலங்கி சந்தேகப்பட்டு மிகவும் வேதனை அடைந்தார். தாழ்ச்சியால் மரியன்னை தனக்கு நேர்ந்ததை தன் கணவரிடம் கூறாது விட்டுவிட்டார். புனித சூசையப்பர் நீதிமானாக இருந்தாலும், மரியன்னையை அவமானப்படுத்த விரும்பாததாலும் இரகசியமாக தன் மனைவியை விலக்கி வைக்க எண்ணினார்.
இவ்வாறு அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் வானதூதர் அவரது கனவில் தோன்றி "சூசையப்பரே! தாவீது அரசரின் குலத்தோன்றலே! உம் மனைவியை ஏற்றுக்கொள்ள சந்தேகப்படவேண்டாம். தூய ஆவியால் கருத்தரித்துள்ளார்; ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அந்த குழந்தைக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் தம்முடைய மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். அதன்பின் புனித சூசையப்பர் தன் மனைவியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். புனித சூசையப்பர் இறைச்சித்தத்தை அறியாமல் இருந்ததால் மரியன்னை கருவுற்றது எப்படி என சந்தேகத்திற்கு இடமளித்தாலும் அவருக்கு மன கஷ்டத்தை அளிக்காமலும் விசாரிக்காமலும் இருந்தார். அவர் இவ்வேளையில் மிகவும் மனகலக்கம் அடைந்திருந்ததால் யாரிடமும் முறையிடாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை இறைவன் அறிவிக்க வேண்டும் என்று செபித்தார்.
தமது மனைவியாகிய மரியன்னையை அவமானப்படுத்தாமல் யாருக்கும் தெரியாமல் விலக்கி அனுப்பவேண்டும் என முடிவெடுத்த போது இறைவன் வானதுதரை அனுப்பி மரியன்னையின் வயிற்றில் வளரும் இயேசுகிறிஸ்துபற்றிய பரம இரகசியத்தை வெளியிடச் செய்தார். புனித சூசையப்பர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தூயவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் துன்ப துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர் என்பதை கிறிஸ்தவர்கள் அறிய வேண்டும். இவ்வுலக வாழ்வு சோதனைகளும் வேதனைகளும் நிறைந்தது என உணர வேண்டும். மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். நாம் சில நேரங்களில் வானதுதர்களைப்போல் தூயவர்களாகவும், சில நேரங்களில் இறைவனுக்கு நிந்தை ஏற்படுத்துகிறவர்களாகவும் வாழுகிறோம். நிலையான இடம் வான்விடு என்பதை உணர வேண்டும். மகிழ்ச்சி வரும்போது ஆங்காரப்படாமலும், துன்ப வேளைகளில் சோம்பிப்போகாமலும், எதற்கும் பயப்படாமல் எல்லாவற்றிலும் உறுதியாக இருந்து இறைவனின் புகழ்ப் பாடினார். நாமும் அவ்வாறு நடப்போம்.
புனித சூசையப்பர் தேவனுடைய விருப்பத்தையும் திட்டத்தையும் அறியாததால் சந்தேகப்பட்டாலும் பொறுமையோடு செயல்பட்டார். நமக்கும் இத்தகைய பொறுமை இருந்தால் பல துன்பங்கள் வராமல் நன்மைகளை வரவழைக்கும். கணவன் - மனைவி, அண்ணன் - தம்பி, நண்பர்கள் இவர்களிடையே சந்தேகமும் வேறுபாடும் தோன்றுகிறபோது நாம் வைராக்கியம் கொண்டு வாழ்ந்தால் என்ன பயன்? கோபம் அதிக கெடுதலைத்தான் தோற்றுவிக்கும். அமைதிக்கு அது வழியல்ல. காயத்திற்கு மருந்து போட்டால் ஆறுமே தவிர மிளகுபொடியைத் தூவினால் ஆறுமா? அதனால் பொறுமை, தாழ்ச்சியால் எல்லா தடைகளும் அகலும். பொறாமை, கோபம், சோம்பல், ஆங்காரம் குடும்பத்தை சிதைக்கும்.
புனித சூசையப்பரைப்போல் துன்பம் அனுபவிக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும். நம்மை பெற்ற தாய் தந்தையரைவிடவும் இறைவன் அதிக பாசம் உடையவராதலால் நாம் துன்பப்படும்போது, நாம் நம்மை மீட்க செபிக்கும்போது, இயேசு கிறிஸ்துவைப்போல் உமக்கு விருப்பமானால் இந்த துன்பம் என்னை விட்டு அகலட்டும். உமது விருப்பப்படி ஆகட்டும் என செபிப்போம். விசுவசித்தால் இறைவன் நல்லதையே செய்வார்.
புனித சூசையப்பர் மனத்துயரில் இருக்கும்போது வானதூதரின் அறிவிப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதுபோல் நாம் துன்பம் வரும்போது பொறுமையாக இருந்து இறைவனிடம் செபித்து வந்தால் மறுஉலகில் நமக்கு பிரதிபலன் கிடைக்கும் என நம்புவோம்.
புதுமை
1856-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு தென்பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் புகழ்பெற்ற மனிதர் கொடிய நோயால் இறக்கும் நிலையில் இருந்தார். உலகத்தின் பார்வைக்கு நல்லவராக இருந்தபோதும், நீண்டகாலம் ஒப்புரவு அருட்சாதனத்தை பெறாமலும், இறைசெயல்களில் அசட்டையாகவும், இறைவனின் கட்டளைகளை சரிவர நிறைவேற்றாமலும் இருந்து வந்தார். அவன் உயிர்பிழைக்க மாட்டார் என்பதை அறிந்து அருட்பணியாளர்கள் அவரை ஒப்புரவு, நோயில் பூசுதல் போன்ற அருட்சாதனங்களைப் பெறவும், மரணத்திற்கு தயாராகும்படியும் அறிவுறுத்தினார்கள். 'மெதுவாக நடக்கட்டும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என நோயாளி கூறினார்.
நோயின் பிடி இறுக இறுக அவனது உறவினர்கள் அவனுக்காக இறைவனிடம் செபித்தார்கள். நோயாளியின் நெருங்கிய உறவினர் ஒருவர் புனித சூசையப்பரிடம் அடைக்கலம் தேட வேண்டும் என்று கன்னியர் இல்லம் ஒன்றிற்கு செய உதவி கேட்டு கடிதம் எழுதினார். நோயாளிக்கு நல்மரணம் நிகழ புனித சூசையப்பரிடம் இல்லத்தில் உள்ள அனைவரும் செபிக்க கேட்டிருந்தார். அவர்களும் அக்டோபர் 24-ஆம் நாள் முதல் செபிக்க தொடங்கினர். இவர்கள் செபிக்க தொடங்கிய நான்காம் நாளிலே நோயாளி மனம் திரும்பி தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி நோயில் பூசுதல் அருட்சாதனத்தினை பெற ஆவலாய் இருப்பதாகத் தெரிவித்தான். பின்னர் மனநிறைவோடு தன்னுடைய உயிரை இறைவனிடம் ஒப்படைத்தார்.
நவநாள் செபத்திற்கு கடைசி நாளான சகல புனிதர்களுடைய நாளிலே நோயில் பூசுதலைப் பெற்று இவர் புனித சூசையப்பரின் உதவியால் மனம் திருந்தி நரகத்திலிருந்து மோட்சமடைந்தார் என மகிழ்ந்தனர். நவநாள் செய்ய கேட்டுக்கொண்ட மனிதரோ அந்த கன்னியர் இல்லத்திற்கு அழகிய புனித சூசையப்பர் திருஉருவத்தை அனுப்பிக் கொடுத்தார். அதனை ஆயர் அவர்கள் மந்திரித்து சிந்தனையுள்ள மறையுரையை நிகழ்த்தினார்.
நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ மரண நேரத்தில் ஒப்புரவு அருட்சாதனம் பெறாமல் இருந்தால் புனித சூசையப்பரிடம் அவருக்கு நன்மரணம் கிடைக்க செபித்தால் நிச்சயம் நன்மரணம் கிடைக்கும் என நம்புவோம். (3 பர, பிதா)
செபம்
துன்ப வேளைகளில் பொறுமை, அமைதி, தாழ்ச்சி முதலிய புண்ணியங்களை கடைப்பிடித்து வந்த புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். எல்லா இல்லறத்தாருக்கும் இப்புண்ணியங்கள் தேவையாக இருப்பதால் அவர்களுக்கு பணிவான அன்பை அளித்தருளும். துன்பப்படுகிறவர்கள் எல்லாம் மனம் தளர்ந்து விடாமல், பொறுமையோடு இறைவனிடம் ஆறுதலைக் கேட்டு பெற்றுக் கொள்ள செய்தருளும். உம்முடைய புண்ணியங்களைப் பார்த்து துன்ப வேளைகளில் கலங்கிப் போகாமல் புண்ணிய வழியில் உறுதியாய் நடக்க உதவும் படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலான புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம்.
சந்தேகப்படுகிறவர்களுக்குத் தெளிவு கொடுக்கிற புனித சூசையப்பரே! உம்மை வாழ்த்துகிறோம்.
பக்தியுள்ள குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கிற புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம்.
செய்ய வேண்டிய நற்செயல்
துன்ப துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுதல்.
ஏழாம் தேதி
புனித சூசையப்பர் மரியன்னையை ஏற்றுக் கொண்டதை தியானிப்போம்
தியானம்
வானதுதரால் மரியன்னையின் கருத்தரிப்பு பற்றிய சேதி அறிந்ததும் இயேசுகிறிஸ்துவின் தாய், மண்ணக - விண்ணக அரசி என, சூசை மரியன்னையை வணங்கத் தொடங்கினர். அவர் தெய்வீகத்திற்கு இருப்பிடமும் ஆலயமுமாக இருந்தார். எல்லோராலும் வணங்கப்படுகிற வானதூதர் தன்னுடைய இல்லத்திற்கு வந்ததால் வீடு ஒளியும் தூய்மையும் அடைந்து இறைவனின் இருப்பிடமான ஆலயமாக விளங்கியதை உணர்ந்தார். மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட புனித சூசையப்பர் பக்தியோடு மரியன்னைக்கு உதவியாக இருந்தார். இத்தகையவளுக்கு தான் கணவனாக அமைந்தது இறைவன் அளித்த பாக்கியமாக கருதி தாழ்ச்சியோடு இறைவனை புகழ்ந்தார். -
அவர் ஏழையாக இருந்தபோதும் இரவும் பகலும் வேலை செய்து மரியன்னையை எந்த குறையுமின்றி பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வந்தார். புண்ணிய செயல்களால் தாயையும் மகனையும் மகிழ்வித்தார். இயேசுவின் தாய்க்கு கணவராக இருந்ததே அவருக்கு மிகப்பெரிய வல்லமையை அளித்தது. தூய ஆவியானவர் புனித சூசையப்பரை மரியன்னைக்கு தேர்ந்தெடுத்தப்போதே அவரை புண்ணியங்களினாலும் நிரப்பினார் என்று புனித பெர்நர்தீனுஸ் எழுதியுள்ளார். அரசியை திருமணம் செய்கிறவன் அரசனாவான் என்பது உண்மை. அதுபோல் விண்ணக அரசியை திருமணம் செய்ததால் அவர் வான்விட்டின் அரசரானார் என்று புனித லியோனார்டு உறுதி செய்தார்.
மரியன்னையோ தனது கணவரை அன்புசெய்து, பணிவிடை செய்து மகிழ்ந்தாள். இவர்கள் இருவருக்குமிடையே இருந்த புண்ணிய செயல்களைக்கண்டு வானதூதர்கள் மகிழ்ந்தனர். சகல வான தூதர்களும், புனிதர்களும் இவர்களின் புண்ணிய வாழ்வை முன் மாதிரிகையாக கொண்டு போற்றி புகழ்ந்தனர். கிறிஸ்தவ திருமணமானது ஏழு அருட்சாதனங்களுள் ஒன்றானதும் தூய்மையானதும் ஆகும். திருமண உறவிலே ஒருவரை ஒருவர் அனபு செய்து தங்களுடைய குழந்தைகளை நன்கு வளர்த்து, தங்கள் கடமைகளை சரிவர செய்து வந்தால் அவர்களது குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும். இல்லறத்தினரில் பலரும் புனிதர்களாகவும் விளங்குகின்றனர். இவர்கள் திருமணம் என்ற உறவினை இறைவனின் திருச்சித்தத்திற்கு இயைந்து பயன்படுத்தாவிட்டால் இவர்களுக்கு திருமணம் நரகத்திற்குச் செல்லும் வாசலாக அமைகிறது.
சிந்தனை
புனித சூசையப்பர் மரியன்னையிடம் பாசத்தோடு நடந்து கொண்டதுபோல் மரியன்னையும் விண்ணக மண்ணக அரசியாக இருந்தாலும் தனது கணவருக்கு கீழ்ப்படிந்து, வணங்கி மனைவிக்குரிய பணிவிடைகளை குறையற செய்து வந்தார் என அறிந்துள்ளோம். இல்லறத்தினர் இவர்களை நன்மாதிரிகையாக கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் பூவுலகில் மகிழ்ச்சியும் வானுலகில் மகிமையும் இருக்கும்.
கணவர்கள் தங்கள் மனைவிகளை அடிமைகளாகவும் விலங்குகளாகவும் கருதாமல் அவர்கள்மீது அக்கறை கொண்டு அவர்களை உங்களைப்போல் அன்புசெய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு தக்க மரியாதையையும் அளித்து, பக்தியோடு புண்ணிய வழியில் செல்வதற்குரிய வழிவகைகளை செய்து கொடுக்கவேண்டும். மனைவியர் தூய மரியன்னையை நன்மாதிரியாய் கொண்டு கணவர்கள் தங்களுக்கு மேலானவர்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு பணிந்து பணிவிடை செய்து பக்தியோடு வாழ்ந்து வந்தால் மகிழ்ச்சியும், மகிமையும், புண்ணியமும் கிடைக்கும். இதற்காக நாம் நம்முடைய குடும்பங்களை புனித சூசையப்பருக்கு காணிக்கையாக்கி, நம் குடும்பங்களை ஆசீர்வதிக்கும்படி மன்றாடுவோம்.
புதுமை
மரியன்னை புனித எலிசபெத்தம்மாளை நலம் விசாரித்தல்' என்ற பெயரில் புனித பிரான்சிஸ் சலேசியூஸ் என்பவரும் புனித தெஹாந்தால் அருள் பிரான்சிஸம்மாளும் சேர்ந்து கன்னியர் சபையை தோற்றுவித்தார்கள். இச்சபையில் தெசோஸ் என்ற கன்னியர் ஒருவர் இருந்தார். இவர் செல்வந்தரின் மகளாயினும் மிகவும் பணிவாக பக்தியாக இருந்தார். ஆனால் எந்த துறவற சபையிலும் சேராமல் அவற்றை வெறுத்து வந்தார். புனித பிரான்சிஸ் (பிரான்சிஸம்மாளுக்கு) கனவில் "தேசோஸ் என்ற பெண் இக்கன்னியர் இல்லம் வந்தால் மேலும் பக்தியுடையவளாக இருப்பது மட்டுமல்லாமல் இச்சபைக்கு அரிய பொக்கிஷமாக அமைவாள்' என அறியவே இவர்கள் அப்பெண்ணிடம் மிகவும் அன்பொருந்தார்கள். மேலும் புனித சூசையப்பரிடம் அப்பெண் தங்கள் கன்னியர் இல்லம் வரவும் அங்கு நிலைத்திருக்கவும் அவருக்குள்ள வெறுப்பினை நீக்கவும் வெண்டிக் கொண்டார்கள். புனித சூசையப்பரும் அவ்வாறே நிறைவேறச் செய்தார். இதனை அறிந்த தெசோஸ் இறுதிவரை புனித சூசையப்பரை தனது காவல் தூதராக, பாதுகாவலர் என்றும் அழைத்தார்.
இவருக்கு கன்னியர் இல்லத்தில் பற்பல இன்னல்கள் வந்தபோதும் இவர் அவைகளைப் போக்க மேலும் மேலும் பக்தியில் மூழ்கினார். ஒருதடவை அசுத்த ஆவியினால் இவரது மனம் குழம்பி, பயத்தால் விவேகத்தையும் அறிவையும் இழந்து இருந்தபோது எழுத்தாணியினை எடுத்து தனது மார்பில் இயேசு மரி சூசை என இரத்தம் வழயுமளவுக்கு எழுதினார். அவர் அக்கன்னியர் இல்லத்தின் பொருளாளராக இருந்தபோது பணியாட்களுக்கு கூலி கொடுக்கவே பணமின்றி இருந்தது. அவர் புனித சூசையப்பரிடம் தனது பணப்பை காலியாக இருப்பதை காண்பித்து தந்தையிடம் கேட்பதைப்போல் உறுதியாக கேட்டார். பின்னர் முன்பின் தெரியாத சிலரால் பணம் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இதனால் புனித சூசையப்பர் ஞான வாழ்வில் மட்டுமின்றி உலகம் சம்பந்தப்பட்டவைகளிலும் உதவுவார் என்பதை அறிந்து அவரின் உதவியைக் கேட்போம். (3 பர, அரு, பிதா)
செபம்
இயேசுகிறிஸ்துவின் தாயாகிய மரியன்னையைப் பேணி காத்து வந்த புனித சூசையப்பரே உம்மை வணங்கி புகழ்கின்றோம். மரியன்னையிடம் நாங்கள் வைக்க வேண்டிய பக்தி வணக்கத்திற்கு நன்மாதிரியாய் இருந்து எங்களுக்கு காண்பித்திரே கன்னிமரியிடம் அனைவரும் பக்திகொள்ள செய்தருளும். சகல வல்லமை பொருந்திய மரியன்னை உமக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்ததை நாங்கள் கண்டுணரச் செய்தருளும். அவர் உம்மீது காட்டிய பரிவையும் பாசத்தையும் பார்த்து உம்மோடு மரியன்னையையும் சேர்த்து அன்புசெய்ய எங்களுக்கு அருள்புரியும். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
விண்ணக அரசியான கன்னிமரியாளை திருமணம் செய்த அரசராகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம்.
இவ்வுலகில் மரியன்னைக்கு ஆதரவாயிருந்த தந்தையாகிய புனித சூசையப்பரே! உமக்கு புகழ்!
விண்ணக அரசியால் வணங்கப்பட்ட புனித சூசையப்பரே! உம்மை வாழ்த்துகிறோம்.
செய்ய வேண்டிய நற்செயல்
மரியன்னையின் திருச்சுருபம் முன்பாக 3பர, அருள், பிதா சொல்வோம்.
எட்டாம் நாள்
புனித சூசையப்பர் குழந்தையாய் பிறந்த இயேசுவை ஆராதித்ததை தியானிப்போம்
தியானம்
அகஸ்துஸ் அரசரின் கட்டளைக்கிணங்க மரியன்னை கருவுற்று ஒன்பதாவது மாதத்தில் தங்கள் சொந்த ஊரான நாசரேத் ஊரினைவிட்டு தாவீது அரசரின் நகரமாகிய பெத்லேகம் நகரத்துக்கு குடி பெயர்ந்து சென்றபோது பேறுகாலம் வந்தது. புனித சூசையப்பர் தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் தங்க இடம் கேட்டு கிடைக்கவில்லை. ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் இருந்த மட்டுத் தொழுவத்தில் தங்கினர். அது மார்கழி மாதமாகையால் கடுங்குளிராய் இருந்தது. எந்தவித வசதியும் இல்லாத இடமாக இருந்தபோதும் சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்கள் வருவதுபோல் எந்தவித சிரமமுமின்றி இயேசுகிறிஸ்து சிறு குழந்தையாக பிறந்தார். அரசர்க்கு அரசரான அவருக்கு மாட்டுத்தொழுவம் அரண்மனையாகவும், வைக்கோல் சிம்மாசன அரியணையாகவும், கிழிந்த ஆடைகளே அரசப் போர்வையாகவும் கிடைத்தது. இயேசுபாலன் படும் துயரைப் பார்த்து புனித சூசையப்பரும், அன்னை கன்னிமரியும் மிகவும் மனம் வருந்தினர். இருப்பினும் அரசர்க்கு அரசரும், உலக மீட்பர் சிறு குழந்தையாய் தன் கண்ணெதிரே இருப்பதைப் பார்த்து மிகவும் இன்பமடைந்தனர்.
வானதூதர்களும் வானுலகினரும் அகமகிழ்ந்தனர். வானதூதர்களின் அறிவிப்பால் ஆடு மேய்ப்பவர்களும், மூன்று அரசர்களும் திருக்குழந்தையை வணங்க வந்ததையும் கண்ட புனித சூசையப்பருடன் அன்னையும் அளவிடமுடியாத ஆனந்தம் அடைந்தனர். பிறந்த இந்த குழந்தை மூன்று உலதையும் ஆளும் ஆற்றல் பெற்றது. வானுலகில் அனைவருக்கும் ஆனந்தத்தையும், பூவுலகில் அனைவருக்கும் மீட்பையும் அளிக்கவல்ல குழந்தை; கந்தலாடைகளால் மூடப்பட்ட குழந்தை - நவரத்தினங்களை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர். தீய ஆவி, நரகம், பாவம் இவற்றை வென்று நல்லவர்களையும் தீயவர்களையும் நடுத்தீர்க்கக்கூடியவர் என்பதையும் அறிந்து பயபக்தியோடு அவரை வணங்கினர்.
இவர் கன்னிமரியாயின் மகனாகவும், தனது வளர்ப்பு குழந்தையாக தனது அரவணைப்பில் வீட்டில் வளரும் இயேசுகிறிஸ்து என்றும் தனக்கு நன்மரணத்தை அளிக்ககூடியவர் என்பதையும் உணர்ந்து, மகிழ்ந்து முத்தமிட்டு பாசத்தினை காட்டினார். நாமும் நம்மை மீட்க வந்த இயேசுகிறிஸ்துவில் மகிழ்ந்து நமது ஆன்மாவை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இயேசுகிறிஸ்து தன்னையே தாழ்த்தி ஏழ்மையிலும், வறுமையிலும் சிறுகுழந்தையாய் பிறந்தார். நம்மை அத்தகைய நிலையில் பிறக்க செய்தால் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வோமா? அப்படி அவரின் மகிமையை ஏற்றுக் கொண்டால் நாம் அவருடைய சீடர்கள் என சொல்லலாம். அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான அவர், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறுமையில் பிறந்தார். நாமோ இவ்வுலகச் செல்வங்களைச் சேர்ப்பதற்காக பொய், திருட்டுப் புரட்டுகளில் ஈடுபடுகிறோம். செல்வந்தர்களாக இருந்து செல்வத்தை துறந்து எளிமையாய் துறவறத்தில் ஈடுபட்டு வருகிறவர்களும் இருக்கிறார்கள். நாம் அவ்வாறு இல்லாவிட்டாலும் உலக செல்வங்களை நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்து ஏழ்மையில் பிறந்து உணவிற்கும் சிரமப்படும் பெற்றோரோடு அமைந்து வாழ்வில் துன்பப்பட்டு இறுதியில் சிலுவை யில் இறந்தார். நாமோ இவ்வுலகில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்து ஆடம்பரமாய் உடுத்தி, எந்த துன்பமும் அடையாமல் இருந்தும் எந்தவொரு தவச் செயல்களும் செய்யாமல் இருப்பது சரியாகுமா? அது விண்ணகத்திற்குச் செல்லும் வழியன்று, மாறாக நரகத்திற்குச் செல்லும் வழியே. அதனால் தாழ்ச்சி, மன எளிமை, துன்பங்களை சகித்தல் போன்றவைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புதுமை
1559-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்த லால்மான் என்பவர் தனது பதினெட்டாம் வயதில் உலக செல்வங்களை துறந்து செசுசபையில் சேர்ந்து குருவானார். இவர் புண்ணியவானாகவும் புனித சூசையப்பர்பால் மிகுந்த பக்தி உள்ளவராகவும் இருந்தார். அவர் இயேசு மரி சூசையிடம் அதிக பக்தி கொண்டு தனிப்பட்ட முறையில் விசேஷமாக செபித்து வந்தார். புனித சூசையப்பரை நன்மாதிரியாய் கொண்டால் அனைத்து புண்ணியங்களையும் அடையலாம் எனக்கருதி அவரைப்போல் நடந்தார். அதனால் அவர் நல்ல அருட்பணியாளர், பக்திமான் என பெயரெடுத்தார்.
தான் பக்தியில் திளைத்ததுமல்லாமல் பிறரையும் புனித சூசையப்பரை வணங்க செய்தார். புனித சூசையப்பரும் இக்குருவுக்கு தேவையான வரம் அருளி அவரை பாதுகாத்தார். ஒருவருடம் புனித சூசையப்பருடைய திருவிழாவுக்கு முன்னர் தான் தலைமை குருவாயிருந்த இல்லத்தில் உள்ள இரு அருட்பணியாளர்களை அழைத்து அவர்கள் கற்றுக்கொடுக்கும் குழநதைகளை வைத்து புனித சூசையப்பர் திருவிழாவினை வெகு சிறப்பாகக் கொண்டாடும்பக் கேட்டுக்கொண்டார். அப்படி செய்தால் (புனித சூசையப்பர் திருவிழாவன்று) அவரிடம் என்ன கேட்பீர்களோ அது நிச்சயமாக நடக்கும் என்றார். அக்குழந்தைகள் அனைவரும் ஒப்புரவு அருட்சாதனத்தினைப் பெற்று வெகு சிறப்பாக கொண்டாட நீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் மரியன்னையின் சிறப்புகளைப்பற்றியும் அழகிய நூலினை எழுதினார். வேறொருவர் வெளிநாடு போய் அங்கு கிறிஸ்தவ மதத்திற்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்து பிற மதத்தினரை கிறிஸ்தவர்களாக்கினார். இவர்கள் இருவருமே புனித சூசையப்பரின் மீது அதிக பக்தி கொண்டவர்கள். லால்மான் என்ற அருட்பணியாளர் புனித சூசையப்பர் பக்தியை உலகமுழுவதும் பரப்புவதிலேயே அக்கறை கொண்டார். தனனுடைய கல்லறையிலே புனித சூசையப்பர் படத்தினை பொறிக்கச் செய்தார்.
இத்தகைய அருஞ்செயல்களை செய்ய வல்லவர் புனித சூசையப்பர் என நாம் அறிய வேண்டும். (3பர, அரு, பிதா)
செபம்
குழந்தை இயேசுவை ஆராதித்து பாசமழை பொழிந்த புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். பாலகன் செல்வ சுகங்களை துறந்து அனைவராலும் புறக்கணிக்கப் பட்டு ஒதுக்கப்பட்ட மிருக ஜீவன்களுக்கெனவுள்ள தொழுவத்தில் பிறக்க விரும்பினாரே! நாங்களும் இயேசுவுக்கு பிடிக்காத மோசமான செயல்களை விலக்கி அவரைப் பின்பற்றி இவ்வுலக செல்வசுகங்களை தவிர்த்து அவரைப் பின் தொடரச் செய்தருளும், இயேசுவே உமது தந்தை புனித சூசையப்பர் உம்மை மகனாக ஏற்றுக் கொண்டது போல் எங்களையும் நீர் ஏற்றுக்கொள்ளும். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இயேசுகிறிஸ்து ஏழ்மையில் பிறந்தபோது மிகுந்த மனவருத்தம் அடைந்த புனித சூசையப்பரே! வாழ்க!
இயேசுகிறிஸ்து பிறந்தபோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த புனித சூசையப்பரே! வாழ்க.
இயேசுகிறிஸ்து பிறந்தபோது அன்பினால், பண்பினால் உருகிய புனித சூசையப்பரே! வாழ்க!
செய்ய வேண்டிய நற்செயல்
வறுமையில் வாழும் முதியவர் ஒருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் சிறுமிக்கும் உணவு அளித்தல்.
புனித சூசையப்பர் குழந்தையாய் பிறந்த இயேசுவை ஆராதித்ததை தியானிப்போம்
தியானம்
அகஸ்துஸ் அரசரின் கட்டளைக்கிணங்க மரியன்னை கருவுற்று ஒன்பதாவது மாதத்தில் தங்கள் சொந்த ஊரான நாசரேத் ஊரினைவிட்டு தாவீது அரசரின் நகரமாகிய பெத்லேகம் நகரத்துக்கு குடி பெயர்ந்து சென்றபோது பேறுகாலம் வந்தது. புனித சூசையப்பர் தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் தங்க இடம் கேட்டு கிடைக்கவில்லை. ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் இருந்த மட்டுத் தொழுவத்தில் தங்கினர். அது மார்கழி மாதமாகையால் கடுங்குளிராய் இருந்தது. எந்தவித வசதியும் இல்லாத இடமாக இருந்தபோதும் சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்கள் வருவதுபோல் எந்தவித சிரமமுமின்றி இயேசுகிறிஸ்து சிறு குழந்தையாக பிறந்தார். அரசர்க்கு அரசரான அவருக்கு மாட்டுத்தொழுவம் அரண்மனையாகவும், வைக்கோல் சிம்மாசன அரியணையாகவும், கிழிந்த ஆடைகளே அரசப் போர்வையாகவும் கிடைத்தது. இயேசுபாலன் படும் துயரைப் பார்த்து புனித சூசையப்பரும், அன்னை கன்னிமரியும் மிகவும் மனம் வருந்தினர். இருப்பினும் அரசர்க்கு அரசரும், உலக மீட்பர் சிறு குழந்தையாய் தன் கண்ணெதிரே இருப்பதைப் பார்த்து மிகவும் இன்பமடைந்தனர்.
வானதூதர்களும் வானுலகினரும் அகமகிழ்ந்தனர். வானதூதர்களின் அறிவிப்பால் ஆடு மேய்ப்பவர்களும், மூன்று அரசர்களும் திருக்குழந்தையை வணங்க வந்ததையும் கண்ட புனித சூசையப்பருடன் அன்னையும் அளவிடமுடியாத ஆனந்தம் அடைந்தனர். பிறந்த இந்த குழந்தை மூன்று உலதையும் ஆளும் ஆற்றல் பெற்றது. வானுலகில் அனைவருக்கும் ஆனந்தத்தையும், பூவுலகில் அனைவருக்கும் மீட்பையும் அளிக்கவல்ல குழந்தை; கந்தலாடைகளால் மூடப்பட்ட குழந்தை - நவரத்தினங்களை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர். தீய ஆவி, நரகம், பாவம் இவற்றை வென்று நல்லவர்களையும் தீயவர்களையும் நடுத்தீர்க்கக்கூடியவர் என்பதையும் அறிந்து பயபக்தியோடு அவரை வணங்கினர்.
இவர் கன்னிமரியாயின் மகனாகவும், தனது வளர்ப்பு குழந்தையாக தனது அரவணைப்பில் வீட்டில் வளரும் இயேசுகிறிஸ்து என்றும் தனக்கு நன்மரணத்தை அளிக்ககூடியவர் என்பதையும் உணர்ந்து, மகிழ்ந்து முத்தமிட்டு பாசத்தினை காட்டினார். நாமும் நம்மை மீட்க வந்த இயேசுகிறிஸ்துவில் மகிழ்ந்து நமது ஆன்மாவை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இயேசுகிறிஸ்து தன்னையே தாழ்த்தி ஏழ்மையிலும், வறுமையிலும் சிறுகுழந்தையாய் பிறந்தார். நம்மை அத்தகைய நிலையில் பிறக்க செய்தால் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வோமா? அப்படி அவரின் மகிமையை ஏற்றுக் கொண்டால் நாம் அவருடைய சீடர்கள் என சொல்லலாம். அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான அவர், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறுமையில் பிறந்தார். நாமோ இவ்வுலகச் செல்வங்களைச் சேர்ப்பதற்காக பொய், திருட்டுப் புரட்டுகளில் ஈடுபடுகிறோம். செல்வந்தர்களாக இருந்து செல்வத்தை துறந்து எளிமையாய் துறவறத்தில் ஈடுபட்டு வருகிறவர்களும் இருக்கிறார்கள். நாம் அவ்வாறு இல்லாவிட்டாலும் உலக செல்வங்களை நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்து ஏழ்மையில் பிறந்து உணவிற்கும் சிரமப்படும் பெற்றோரோடு அமைந்து வாழ்வில் துன்பப்பட்டு இறுதியில் சிலுவை யில் இறந்தார். நாமோ இவ்வுலகில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்து ஆடம்பரமாய் உடுத்தி, எந்த துன்பமும் அடையாமல் இருந்தும் எந்தவொரு தவச் செயல்களும் செய்யாமல் இருப்பது சரியாகுமா? அது விண்ணகத்திற்குச் செல்லும் வழியன்று, மாறாக நரகத்திற்குச் செல்லும் வழியே. அதனால் தாழ்ச்சி, மன எளிமை, துன்பங்களை சகித்தல் போன்றவைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புதுமை
1559-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்த லால்மான் என்பவர் தனது பதினெட்டாம் வயதில் உலக செல்வங்களை துறந்து செசுசபையில் சேர்ந்து குருவானார். இவர் புண்ணியவானாகவும் புனித சூசையப்பர்பால் மிகுந்த பக்தி உள்ளவராகவும் இருந்தார். அவர் இயேசு மரி சூசையிடம் அதிக பக்தி கொண்டு தனிப்பட்ட முறையில் விசேஷமாக செபித்து வந்தார். புனித சூசையப்பரை நன்மாதிரியாய் கொண்டால் அனைத்து புண்ணியங்களையும் அடையலாம் எனக்கருதி அவரைப்போல் நடந்தார். அதனால் அவர் நல்ல அருட்பணியாளர், பக்திமான் என பெயரெடுத்தார்.
தான் பக்தியில் திளைத்ததுமல்லாமல் பிறரையும் புனித சூசையப்பரை வணங்க செய்தார். புனித சூசையப்பரும் இக்குருவுக்கு தேவையான வரம் அருளி அவரை பாதுகாத்தார். ஒருவருடம் புனித சூசையப்பருடைய திருவிழாவுக்கு முன்னர் தான் தலைமை குருவாயிருந்த இல்லத்தில் உள்ள இரு அருட்பணியாளர்களை அழைத்து அவர்கள் கற்றுக்கொடுக்கும் குழநதைகளை வைத்து புனித சூசையப்பர் திருவிழாவினை வெகு சிறப்பாகக் கொண்டாடும்பக் கேட்டுக்கொண்டார். அப்படி செய்தால் (புனித சூசையப்பர் திருவிழாவன்று) அவரிடம் என்ன கேட்பீர்களோ அது நிச்சயமாக நடக்கும் என்றார். அக்குழந்தைகள் அனைவரும் ஒப்புரவு அருட்சாதனத்தினைப் பெற்று வெகு சிறப்பாக கொண்டாட நீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் மரியன்னையின் சிறப்புகளைப்பற்றியும் அழகிய நூலினை எழுதினார். வேறொருவர் வெளிநாடு போய் அங்கு கிறிஸ்தவ மதத்திற்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்து பிற மதத்தினரை கிறிஸ்தவர்களாக்கினார். இவர்கள் இருவருமே புனித சூசையப்பரின் மீது அதிக பக்தி கொண்டவர்கள். லால்மான் என்ற அருட்பணியாளர் புனித சூசையப்பர் பக்தியை உலகமுழுவதும் பரப்புவதிலேயே அக்கறை கொண்டார். தனனுடைய கல்லறையிலே புனித சூசையப்பர் படத்தினை பொறிக்கச் செய்தார்.
இத்தகைய அருஞ்செயல்களை செய்ய வல்லவர் புனித சூசையப்பர் என நாம் அறிய வேண்டும். (3பர, அரு, பிதா)
செபம்
குழந்தை இயேசுவை ஆராதித்து பாசமழை பொழிந்த புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். பாலகன் செல்வ சுகங்களை துறந்து அனைவராலும் புறக்கணிக்கப் பட்டு ஒதுக்கப்பட்ட மிருக ஜீவன்களுக்கெனவுள்ள தொழுவத்தில் பிறக்க விரும்பினாரே! நாங்களும் இயேசுவுக்கு பிடிக்காத மோசமான செயல்களை விலக்கி அவரைப் பின்பற்றி இவ்வுலக செல்வசுகங்களை தவிர்த்து அவரைப் பின் தொடரச் செய்தருளும், இயேசுவே உமது தந்தை புனித சூசையப்பர் உம்மை மகனாக ஏற்றுக் கொண்டது போல் எங்களையும் நீர் ஏற்றுக்கொள்ளும். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இயேசுகிறிஸ்து ஏழ்மையில் பிறந்தபோது மிகுந்த மனவருத்தம் அடைந்த புனித சூசையப்பரே! வாழ்க!
இயேசுகிறிஸ்து பிறந்தபோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த புனித சூசையப்பரே! வாழ்க.
இயேசுகிறிஸ்து பிறந்தபோது அன்பினால், பண்பினால் உருகிய புனித சூசையப்பரே! வாழ்க!
செய்ய வேண்டிய நற்செயல்
வறுமையில் வாழும் முதியவர் ஒருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் சிறுமிக்கும் உணவு அளித்தல்.
ஒன்பதாம் தேதி
புனித சூசையப்பர் குழந்தை இயேசுவை தன் மகனாக வளர்த்ததை தியானிப்போம்
தியானம்
இறைவனால் படைக்கப்பட்ட பெற்றோர் அனைவருமே தம் பிள்ளைகளிடம் பற்றும் பாசமும் உடையவர்களாக இருக்கிறார்கள். தந்தை தன் மகனிடம் காட்டும் அன்பைவிடவும் அதிகமாக புனித சூசையப்பர் இயேசு பாலனிடம் காட்டினார். இறைவன் தன் மகனிடம் காட்டிய அன்பை புனித சூசையப்பரும் இயேசு பாலனுக்கு காட்டினார். புனித சூசையப்பர் இறைமகன் இயேசுவைத் தன் மகன் என அழைக்கும் பெருமை அடைந்தார். இயேசு பாலன் அவரை, அப்பா, தந்தை, பிதா என அழைத்து அன்பு செலுத்தினார். மகனே என அவர் அழைத்தபோது அவரது அன்பானது தேனினும் இனிதாகவும், கடலைவிட பெரிதாகவும் இருந்தது.
இறைமகன் புனித சூசையப்பரின் அரவணைப்புக்கு வந்தபோது உலக செல்வங்கள் அவருக்கு கிடைக்கவில்லை, மாறாக துன்பமே அதிகமாகபட்டார். முன்னர் அவர் தன்னுடைய வீட்டில் வேலை செய்து அங்கும் இங்கும் அலையாது அன்றாட வாழ்வை சிரமமின்றி கழித்து வந்தார். ஆனால் இயேசு பாலன் அவரிடம் வந்தபோது தன் சொந்த வீட்டைவிட்டு பெத்லேகேமுக்குச் சென்று மாட்டுத் தொழுவத்தில் தங்க வேண்டியிருந்தது. பின் ஏரோது மன்னனுக்கு பயந்து ஏழு ஆண்டுகள் பரதேசியாய் ஓடி தாயையும், மகனையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. பனிரெண்டாம் வயதில் தாயையும், தந்தையையும் விட்டு அறிவிலி போதகர்களிடம் வேதம் போதித்ததால் காணாமல் சென்றபோது மிகவும் கவலை அடைந்தார். அவர் இயேசு பாலனுக்கு தந்தையாக இருந்ததால் இத்தகைய துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. நீதிமான்களை இறைவன் அதிகம் சோதிப்பார். மரியன்னைக்கும் இயேசு பாலனுக்கும் அதிகமாக முன்மாதிரி செய்ய வேண்டியிருந்தது. அவர் ஏரோது மன்னனுக்கு பயந்து வீட்டை விட்டுச் சென்றபோது இவர்களுக்கு உணவு மற்றும் அடைக்கலம் அளிக்கவே அவர் பெரிதும் துன்பமுற்றார். அவை வானதுதர்களால் மட்டுமே உணரமுடிந்தது.
இதன்மூலம் நாம் அறிய வேண்டியது எத்தகைய சூழ்நிலையிலும் புனித சூசையப்பர் இயேசு பாலனிடம் அளவிட முடியாத அன்புடன் நடந்து கொண்டார். நாமும் நம்மை மீட்க இயேசு கிறிஸ்து வறுமையிலும் புனித சூசையப்பரோடு தச்சு வேலையிலும் வாழ்ந்து, பாடுபட்டு சிலுவையில் மரித்தார் என்பதால் நாம் அவரை அதிகமாக அன்பு செய்ய வேண்டும். புனித பவுல் இயேசுவை நேசிக்காதவன் சபிக்கப்பட்டவன் என்று கூறுகிறார். எனவே, நாம் சாவான பாவத்தின் சந்தர்ப்பங்களை விலக்கி சாபத்திலிருந்து விடுபட்டு அவரை அதிகமாக நேசிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறவன் சிலுவையின்மீது அதிக விருப்பு கொண்டு அதனை சுமக்க தயாராய் இருக்க வேண்டும். சிலுவையினால் நித்திய வாழ்வு உண்டு, மீட்பு உண்டு, பாவங்களை வெற்றிகொள்ள தைரியம் உண்டு, ஆன்ம பலமும் முடிவில்லா இன்பமும் உண்டு. சிலுவையால் மனதுக்கு மகிழ்ச்சியும், தூய்மையும் கிடைக்கும். எனவே, நம்முடைய சிலுவையாகிய துன்பங்களை சுமந்து அவர் பின்னே செல்வோம், நித்திய வாழ்வை அடைவோம்.
புனித சூசையப்பர் இறைச்சித்தத்திற்காக துன்பங்களை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டதுபோல் நாமும் நமக்கு வரும் துன்பங்களை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்வோம். நமது முன்மாதிரியான வாழ்விலிருந்து பாவிகளையும் பிறரையும் இறைவன் அன்பில் பண்பில் இழுத்து வருவோம். அப்படி நாம் முயற்சி செய்வதே இறைவனுக்கு விருப்பமான செயல் என்பதறிவோம்.
புதுமை
பிரான்ஸ் நாட்டில் மொன் மொஹான்சி என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு சகல செல்வங்களும் இருந்ததால் அகங்காரம் கொண்டு அரசரின் முதல்மந்திரிக்கு எதிராக கலகம் உண்டாக்கி போர் செய்தார். ஆனால் பொரில் தோல்வியடைந்து கலகம் உண்டாக்கியதற்காக மரண தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவரது மனைவி அவருக்கு பெரிய கல்லறை கட்டுவித்து தான புனித பிரான்சீஸ் சலேசியூஸ் தோற்றுவித்த கன்னியர் இல்லத்தில் சேர்ந்தார். அவர் இதற்குமுன் சகல உலக செல்வங்களை அனுபவித்தாலும் அவர் முற்றும் துறந்து புனித சூசையப்பரை நன்மாதிரியாய் கொண்டு ஏழ்மையோடு, கீழ்ப்பழந்து இல்லத்தின் கட்டுப்பாடுகளுக்கேற்ப எல்லா வேலைகளையும் செய்து மகிழ்ச்சியாய் வாழ்ந்தார். புனித சூசையப்பரின் புண்ணியங்களை தானும் கடைப்பிடித்து வந்ததால் சில ஆண்டுகளுக்குப் பின் அவர் கன்னியர் இல்லத்தின் தலைவியானார். அப்போது அவருக்கிருந்த அதிகாரத்தைக் கொண்டு புனித சூசையப்பரின் புகழை பரப்பினார்.
இந்த சூழ்நிலையில் அப்பெண்மணிக்கு ஒரு கால் நடக்க முடியாமல் போனது. எந்த மருந்தும், மருத்துவரும் குணப்படுத்த இயலவில்லை.
எனவே கன்னியர் இல்ல ஒழுங்குப்படி நோயின் நிமித்தம் இவருக்கு ஒழுங்குகள் கடைப்பிடிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. உடனே அவள் புனித சூசையப்பருக்கு நவநாள் செய்ய தொடங்கினாள். நவநாள் தொடங்கிய நான்காம் நாளன்று இரு கன்னியர் துணையோடு திருப்பலிக்கு சென்றபோது தனது கால் வலி அற்புதமாய் நீங்கி குணமடைந்தது. திருப்பலி முடிந்ததும் யாருடைய துணையும் இன்றி நடமாடிக் கொண்டிருந்தாள். அவளும் கன்னியர்களும் இந்த புதுமை புனித சூசையப்பரால் நடைபெற்றது என்பதை உணர்ந்து அவருக்கு பீடம் கட்டி அவரை வணங்கி அவரது புகழை பரப்பி நல் மரணத்தை அடைந்தாள்.
நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கெல்லாம் புனித சூசையப்பர் ஆதரவாய் இருப்பார். நாம் புண்ணிய வழியில் நடக்க உதவுவார்
என்பதை நம்பி அவரிடம் அதிக பக்தியாய் இருப்போம். (3 பர, அரு, பிதா)
செபம்
இயேசு பாலனையும், அன்னை கன்னிமரியையும் மிகுந்த சிரமப்பட்டு வளர்த்த புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம்.
பூவுலக மக்கள் அனைவரும் நன்றியோடு உம்மை வணங்குகிறார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து வான் வீட்டை அடையச் செய்ய அவர்களை ஆசீர்வதித்தருளும். உமது பக்தர்களான நாங்கள் அனைவரும் எங்களுக்கு வரும் துன்ப துயரங்களை பொறுமையோடு சகித்துக்கொள்ள எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று உம்மை வேண்டுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இயேசுகிறிஸ்துவை முழுமனதோடு நேசித்த புனித சூசையப்பரே!எங்களுக்கு இறையன்பு வர செய்தருளும்.
மிகவும் துன்ப துயரங்களோடு இயேசுநாதரை வளர்த்த புனித சூசையப்பரே நாங்கள் பொறுமையோடு துன்பங்களை சகிக்க உதவிசெய்யும்.
இயேசுநாதருக்காக அதிக பிரயாசைப்பட்ட புனித சூசையப்பரே , நாங்கள் அவருக்கு மட்டுமே சேவை செய்ய உதவி செய்யும்.
செய்ய வேண்டிய நற்செயல்
ஒரு ஏழை குடும்பத்திற்கு நம்மால் இயன்ற அளவு உதவுதல் வேண்டும்.
10-ம் தேதி
புனித சூசையப்பர் குழந்தை இயேசு பிறந்த 8-ஆம் நாள் இயேசு என பெயர் சூட்டியதை தியானிப்போம்
தியானம்
இயேசு பிறந்த எட்டாம் நாள் அக்கால வழக்கப்படி திருச்சடங்கு நிறைவேற்றி "இயேசு' என பெயரிடப்பட்டது. இது ஜென்மப் பாவத்தைப் போக்குவதற்காக நிறைவேற்றப்படும் சடங்காக கருதப்பட்டது. இத்திருச்சடங்கில் சிறுகுழந்தையின் உடலில் விருத்தசேதனப் படுத்தி, பின்னர் மருந்திடுவர். குழந்தைகள் அப்போது அழுவதுண்டு. புனித சூசையப்பரும் அக்கால வழக்கப்படி அருட்சாதனங்களை இயேசுவுக்கு அளிக்கசெய்தார். புனித சூசையப்பர் எல்லாக் கடமைகளையும் சரிவர நிறைவேற்றிவந்தார். இயேசு பாலனிடமிருந்து வந்த இரத்தத்தினைக் கண்டு புனித சூசையப்பரும் மரியன்னையும் வேதனையடைந்து, சிந்திய இரத்தத்தினை இறைவனுக்கு காணிக்கையாக்கி இயேசு என்ற திருப்பெயரை உடையவர் தங்களைப் படைத்த இறைவனின் திருக்குமாரன் என்பதை அறிந்து வானதுதர்கள் மகிழ, பசாசுகள் பயந்து பணிந்து வணங்கியது. மேலும் இயேசு என்ற திருநாமம் நறுமணத் தைலத்தைப்போல் இருக்கிறது வேத நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு என்னும் பெயர் நறுமணத் தைலத்தைப்போல் இருப்பதால் ஞான ஒளிக்கும், ஞான உணவிற்கும் உதவும் என புனித பெர்நர்தூஸ் கூறியுள்ளார். இப்பெயர் அக இருள், பாவ இருளை அகற்றுவதோடு பக்தியும் விசுவாசத்தோடும் கூறுகிறவர்களுக்கு ஞானப்பலன் கிடைக்கும்.
கிறிஸ்தவர்களாகிய நாம் பசாசின் சோதனை வழியாக வரும் பாவ இருளில் மூழ்காதபடியும், நமக்கு வரும் துன்ப துயரங்களை பொறுமையோடு தாங்கிக் கொள்ளவும் இப்பெயர் போதும். இந்த திருநாமத்தை அறிக்கையிட்டு நாம் கூறுவதால் மோட்சத்திற்குச் செல்லலாம். வேறு எவ்வழியிலும் வான்விடு செல்ல இயலாது என பேதுரு கூறியுள்ளார். மனதில் இயேசு என்னும் பெயரை உச்சரித்தால் பரிபூரண பலன் உண்டு. ஒவ்வொருதடவை கூறும்போதும் பலன் உண்டு என்பதை அறிவோம்.
புதுமை
பாரீஸ் என்னும் நகரத்தில் ஒருவன் பல வருடங்களாக தீய வழியில் சென்று கொண்டிருந்தான். துறவியாக இருந்த இம்மனிதனின் சகோதரன் இவருடைய மரணத்தையும், இறைவன் அளிக்க இருக்கிற தீர்ப்பையும், அதனால் வரக்கூடிய தீய பலன்களையும் அமுக்க, தன் சகோதரனுக்கு விவரித்து வந்தார். இவ்வுலகில் தீயோர்க்கு வருகிற வியாதி, துன்ப துயரங்கள், அவமரியாதை, அவமானம இவற்றினை எடுத்துக்கூறியும் நாளுக்கு நாள் பாவச்சேற்றினில் அமிழ்ந்து கொண்டே இருந்தான். இந்த துறவியோ தனது முயற்சியில் பலனற்றும் போவதை கண்டு பெரிதும் மனம் வருந்தி புனித சூசையப்பரின் உதவியை நாடினார். இந்த கொடியவன் மனம் திருந்த ஒன்பது நாட்கள் திருப்பலி புனித சூசையப்பரைக் குறித்து நிறைவேற்றினார். பின்னர் அடுத்த ஒன்பது நாட்கள் சில புண்ணியவான்களை நற்கருணை உட்கொள்ள செய்தார். அப்போது அத்தீயவன் தொழு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் அவதியுற்றபோது மனந்திரும்பி இறைவன் தன் பாவங்களை மன்னிக்கும்படி ஒப்புரவு அருட்சாதனத்தைப்பெற்று அவன் மனந்திரும்பியதும் புனித சூசையப்பரின் தயவால் நோய் குணமானது. பின்னர் பக்தி முயற்சிகளிலே ஈடுபட்டு நன்மரணம் அடைந்தான். ஒரு புண்ணியவதி ஒரு தடவை தவறி மோக பாவம் செய்தாள். அதனை ஒப்புரவில்கூற வெட்கப்பட்டு மறைத்து வந்தாள். அதனால் மனம் வருந்தி பயத்தோடு வாழ்க்கை நடத்தி வந்தாள். புனித சூசையப்பரிடம் தனக்கு திடமான மனதும தைரியமும் கிடைக்கப்பெற்று நல்ல ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவதற்காக செபித்தாள். புனித சூசையப்பரின் அருளால் ஒப்புரவில் தன் பாவங்களை மறைக்காது வெளிப்படுத்தினாள். அவளுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைத்தது. நாம் ஒப்புரவு அருட்சாதனத்தினை பெறும்போது வெளிப்படையான நல்ல இறைவனுக்கு ஏற்புடைய விதத்தில் பாவங்களை வெளியிட புனித சூசையப்பரிடம் வேண்டுவோம். (3 பர, அரு பிதா)
செபம்
இயேசு பிறந்த எட்டாம் நாள் அவருக்கு இயேசு எனப் பெயரிட்ட புனித சூசையப்பரே! உம்மை பணிவன்புடன் வணங்கி புகழ்கின்றோம். இயேசு என்னும் நற்பெயரை மூவுலகத்தாரும் தாழ்ச்சியுடன் வணங்குவார்களாக! இப்பெயரால் அசுத்த ஆவிகளின் சக்தி முறியடிக்கப்படவும், திருச்சபையின் எதிரிகள் மறையவும், பிற மதத்தவர் மனந்திரும்பவும் செய்வீராக! உமது பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் இத்திருப்பெயரை எக்காலமும், வாழ்நாளிலும், மரண வேளையிலும் உச்சரிக்க உதவும்படி உம்மை நோக்கி பணிவாக செபிக்கிறோம்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
இயேசு என்ற திருப்பெயருக்கு எக்காலமும் புகழ் உண்டாகுக . இயேசு என்ற திருப்பெயரை கிறிஸ்தவர்கள் அனைவரும் வணங்குவோம். இயேசு என்ற திருப்பெயருக்கு அசுத்த ஆவிகள் பயந்து ஓடக்கடவதாகும்.
செய்ய வேண்டிய நற்செயல்
பிறமதத்தவர்கள் மனந்திரும்ப இயேசுநாதரிடம் செபிப்பது.