- புனிதர்கள்
- தொகுப்பு
- ஆகஸ்டு
ஆகஸ்டு மாதப் புனிதர்கள்
1. ஆகஸ்டு 1
2. ஆகஸ்டு 2
3. ஆகஸ்டு 3
4. ஆகஸ்டு 4
5. ஆகஸ்டு 5
6. ஆகஸ்டு 6
7. ஆகஸ்டு 7
8. ஆகஸ்டு 8
9. ஆகஸ்டு 9
10. ஆகஸ்டு 10
11. ஆகஸ்டு 11
12. ஆகஸ்டு 12
13. ஆகஸ்டு 13
14. ஆகஸ்டு 14
15. ஆகஸ்டு 15
16. ஆகஸ்டு 16
17. ஆகஸ்டு 17
18. ஆகஸ்டு 18
19. ஆகஸ்டு 19
20. ஆகஸ்டு 20
21. ஆகஸ்டு 21
22. ஆகஸ்டு 22
23. ஆகஸ்டு 23
24. ஆகஸ்டு 24
25. ஆகஸ்டு 25
26. ஆகஸ்டு 26
27. ஆகஸ்டு 27
28. ஆகஸ்டு 28
29. ஆகஸ்டு 29
30. ஆகஸ்டு 30
31. ஆகஸ்டு 31
2. ஆகஸ்டு 2
3. ஆகஸ்டு 3
4. ஆகஸ்டு 4
5. ஆகஸ்டு 5
6. ஆகஸ்டு 6
7. ஆகஸ்டு 7
8. ஆகஸ்டு 8
9. ஆகஸ்டு 9
10. ஆகஸ்டு 10
11. ஆகஸ்டு 11
12. ஆகஸ்டு 12
13. ஆகஸ்டு 13
14. ஆகஸ்டு 14
15. ஆகஸ்டு 15
16. ஆகஸ்டு 16
17. ஆகஸ்டு 17
18. ஆகஸ்டு 18
19. ஆகஸ்டு 19
20. ஆகஸ்டு 20
21. ஆகஸ்டு 21
22. ஆகஸ்டு 22
23. ஆகஸ்டு 23
24. ஆகஸ்டு 24
25. ஆகஸ்டு 25
26. ஆகஸ்டு 26
27. ஆகஸ்டு 27
28. ஆகஸ்டு 28
29. ஆகஸ்டு 29
30. ஆகஸ்டு 30
31. ஆகஸ்டு 31
ஆகஸ்டு 1
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (St. Alphonsus Liguori)
ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)
பாதுகாவல்: ஒப்புரவு தரும் அருள்தந்தையர் (Confessor), நல்லொழுக்க நீதி சார் இறையியலர்(Moral theologians)
பிறப்பு
27 செப்டம்பர் 1696
நேயாபல், இத்தாலி (Marinella bei Neapel, Italien)
இறப்பு
01 ஆகஸ்டு 1787
நேயாபல்(Nocera dei Pagani bei Neapel)
முத்திபேறுபட்டம்: 1816, திருத்தந்தை 7ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 29 மே 1839, திருத்தந்தை 16 ஆம் கிரகோரி
ஆயர்பட்டம்: 1762, திருத்தந்தை 13 ஆம் கிளமெண்ட், வடக்கு நேயாபல் (Diocese S.Agatha dei Goti im Norden von Neapel)
இவர் உரோமன் சட்டத்திலும், திருச்சபை சட்டத்திலும் பட்டம் பெற்றார். மறைபரப்பு பணியில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் குருத்துவ வாழ்விற்கு தன்னை ஈடுபடுத்தினார். இவரின் வாழ்வு மக்களிடையே பல தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக சிறப்பான இவரின் மறைபரப்புப் பணியால், நேப்பிள்ஸ் நகர் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் "புனித இரட்சகர்" என்ற பெயரில் ஒரு துறவற சபையை நிறுவினார். மக்களிடையே கிறிஸ்துவ வாழ்வை வளப்படுத்த, சிறப்பான மறையுரையை ஆற்றினார். ஒழுக்க நெறி சார்ந்த இறையியல் நூல்கள் பல எழுதினார். இவர் தலைசிறந்த இறையியல் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் ஆயர் பொறுப்பிலிருந்து விலகினார். தான் தொடங்கிய துறவற சபையில் வாழ்ந்தார். மரியன்னையின்மீது பக்தி, திவ்ய நற்கருணை சந்திப்பு, சிலுவைப்பாதை செய்தல் இவைகளில் தன் சபையிலுள்ளவர்களை ஈடுபடுத்தினார். எவற்றின் மீதும் பற்றுக்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.
இவர் பல பயணங்களை மேற்கொண்டு, நேப்பிள்ஸ் நாட்டில் சிறப்பான மறையுரையை ஆற்றி நன்மைகள் பல செய்தார், இவர் வயது முதிர்ந்தவராய் இருந்ததால் பார்வையிழந்து காணப்பட்டார். இதனால் சிலர் இவரை தவறான வழியில் நடத்தினர். எதிரிகளின் சூழ்ச்சியால், சில முக்கிய ஒப்பந்தங்களில் தெரியாமல், தவறாக கையொப்பமிட்டார். இதனால் இவரின் சபையில் பல பிளவுகள் உண்டானது. இதனால் அல்போன்ஸ் மனமுடைந்து, மிக வேதனை அடைந்தார். சில உறவுகளையும் இழந்தார். நோயினால் தாக்கப்பட்டு கொடுமையான வேதனையை அனுபவித்த அல்போன்ஸ் தனது 83 ஆம் வயதுவரை தன் சபையை சேர்ந்தவர்களாலேயே, ஒதுக்கி வைக்கப்பட்டார். இயேசுவின் பாடுகளை இடைவிடாமல் தனது இறுதி நாட்களில் அனுபவித்து இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
புனிதத்தின் ஊற்றே எம் இறைவா! உம்மீது தணியாத தாகம் கொண்டார். புனித அல்போன்ஸ் மரிய லிகோரி. புனித வாழ்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தார். மறைபணியின் வழியாக மக்களின் வாழ்வு நெறியை மாற்றினார். இவரின் போதனைகளை நாங்கள் கடைபிடித்து வாழ, எமக்கு உமதருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
புனித ஹாஸிகா (Haziga von Scheyern)
அரசி, சபை பாதுகாவலர் (Gräfin, Klosterförderin)
பிறப்பு 11 ஆம் நூற்றாண்டு, பவேரியா (Bayern)
இறப்பு 1103 ஷேயர்ன், பவேரியா(Bayern)
புனித பீட்டர் ஃபாபர் (Petrus Faber SJ)
பாரீசில் லயோலா இஞ்ஞாசியாரின் வகுப்பு தோழர் ஜெர்மனி நாட்டு கொலோன்Köln) நகரில் முதன்முதலில் யேசு சபையை 1544 ஆம் ஆண்டில் நிறுவியவர்.
பிறப்பு ஏப்ரல் 1506, வில்லாரட்(Villaret), பிரான்ஸ்
இறப்பு 1 ஆகஸ்டு 1546, உரோம், இத்தாலி
முத்திபேறுபட்டம் 5 செப்டம்பர் 1872, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
புனித பீட்டர் ஜுலியன் ஐமர்டு (Petrus Julianus Eymard)
சபை நிறுவுனர் (Eucharistiner SSS)
பிறப்பு 4 பிப்ரவரி 1811 லா முர்ரே டிஸரே(La Mure-d’Isere), பிரான்ஸ்
குருபட்டம் 1834
சபை நிறுவியது நற்கருணை சபை, 1856, பாரீஸ்
இறப்பு 1 ஆகஸ்டு 1868 லா முர்ரே டிஸரே(La Mure-d’Isere)
புனிதர்பட்டம் 9 டிசம்பர் 1962 திருத்தந்தை 23 ஆம் ஜான்
ஆகஸ்டு 2
புனித ஓசேபியஸ் (Eusebius von Vercelli)
ஆயர், மறைசாட்சி
பிறப்பு
283
சார்டினியன் (Sardinien), இத்தாலி
இறப்பு
1 ஆகஸ்டு 371
வெர்செல்லி, இத்தாலி
ஆரியனிஸ கொள்கையாளர்களால் (Arianism) கல்லால் எரிந்து கொல்லப்பட்டார்.
இவர் சில இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்த பின்னர் மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் உரோம் நகரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 345 ஆம் ஆண்டு வெர்செல்லி என்ற மறைமாவட்டத்திற்கு முதல் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய எளிமையான மறையுரையின் வழியாக திருச்சபையை அம்மண்ணில் பரவச் செய்தார். தம் மறைமாவட்டத்தில் ஆதின வாழ்க்கையை உருவாக்கினார். திருச்சபைக்காக மன்னர் கொன்ஸ்தான்சியுஸால்(Konsthansiysal) நாடுகடத்தப்பட்டார். அப்போது அவர் பல துன்பங்களை அனுபவித்தார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் நாட்டிற்கு திரும்பினார். ஆரியுசின் ஆதரவாளர்களுக்கு எதிராக நம்பிக்கையை திரும்பவும் நிலைநாட்டும்படியாக உழைத்தார்.
இவர் ஆரிய பதிதர்களின் அநீதிகளை சுட்டிக்காட்டினார். இதனால் மீண்டும் பாலஸ்தீன நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கு தான் அனுபவித்த துன்பங்களை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டார். மக்களும் மன்னனும் மனந்திரும்ப தன் துன்பங்களை பொறுமையோடு ஏற்று, வாழ்வை தியாகம் செய்தார்.
செபம்:
அன்பான ஆண்டவரே! உம்மை பறைசாற்றுவதில் ஆயராம் புனித யுசேபியு காட்டிய மன உறுதியை நாங்கள் கண்டுபாவிக்க செய்தருளும். அவர் போதித்த நம்பிக்கையை கடைபிடித்து, உம்மில் பங்கு கொண்டு வாழ எங்களுக்கு அருள்வீராக.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
குண்டெக்கர் (குன்ஸோ) Gundekar (Gunzo) von Eichstätt
ஜெர்மனி, ஐஷ்டேட் மறைமாவட்ட ஆயர்
பிறப்பு 10 ஆகஸ்டு 1019
இறப்பு 2 ஆகஸ்டு 1075, ஐஷ்டேட் (Eichstätt), ஜெர்மனி
திருத்தந்தை முதலாம் ஸ்டீபன் (Stephen I)
பிறப்பு இரண்டாம் நூற்றாண்டு, உரோம், இத்தாலி
திருத்தந்தையாக 254
இறப்பு 2 ஆகஸ்டு 257, உரோம்
ஆகஸ்டு 3
புனித லீதிரா St. Lydia
பிலிப்பியின்(இன்றைய கிரேக்கத்தின்) முதல் கிறித்தவர்
பிறப்பு
முதல் நூற்றாண்டு
தியத்திரா (அக்-ஈசார்), ஆசியா மைனர் Thyatira (Ak-Hissar), Asia minor
இறப்பு
முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு
---
பாதுகாவல்: சாயத்தொழில் (Patronin der Färber)
திருத்தூதர் பவுலால் மனமாற்றம் செய்யப்பட்ட முதல் பெண் இவர். திருத்தூதர் பவுல் இவரின் வீட்டிலேயே தங்கி இவருக்கு திருமுழுக்கு கொடுத்தார். இவர் பிலிப்பி (Philippi) என்ற நகரில் மனமாற்றம் அடைந்தார். இவரைப்பற்றி திருத்தூதர்பணி 16:14-15-ல் விளக்குகிறது. உரோமையரின் குடியேற்ற நகரமான பிலிப்பியில் பவுல் சில நாள்கள் தங்கியிருக்கும் வேளையில் ஓய்வுநாளன்று நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரை சென்றார். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினார். அங்கு தியத்திரா நகரை சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டு வந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தை திறந்தார். அவரும், அவர் வீட்டாரும் திருமுழுக்கு பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், "நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்" என்று கெஞ்சிக்கேட்டு எங்களை இணங்கவைத்தார்.
செபம்:
அற்புதங்களை செய்பவரே எங்கள் இறைவா! உமது திருவுளம் நிறைவேற புனித பவுல் மனமாற்றம் பெற்று, லீதியாவையும் மனமாறச் செய்துள்ளார். உம்மை நம்பி ஏற்றுக்கொண்டு, நாங்கள் பயணிக்க, எமக்கு உம் வழியை காட்டியருளும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
புனித அகஸ்டின் காசொடிக் (Augustinus Kazotic)
அக்ராம்(ஸாக்ரேப்) மறைமாவட்டத்தின் ஆயர் (Bischof von Agram(Zagreb)
பிறப்பு 1260, ட்ரௌவ்(Trau), குரோஷியா(Kroatien)
இறப்பு 3 ஆகஸ்டு 1323, லுசேரா(Lucera), இத்தாலி
புனித பூர்ஹார்டு (Burchard)
பிறப்பு 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு 3 ஆகஸ்டு1140,ரோட்(Rot), பாடன் வூயூட்டம்பெர்க்(Baden-Württemberg)
அனாக்னியின் புனித பீட்டர் (Petrus von Anagni)
அனாக்னி மறைமாவட்டத்தின் ஆயர்
பிறப்பு 1035, சாலெர்னோ(Salerno), இத்தாலி
இறப்பு 3 ஆகஸ்டு 1105, அனாக்னி, இத்தாலி
புனிதர்பட்டம் 1109
ஆகஸ்டு 4
புனித ஜான் மரிய வியான்னி St. John Mary Vianney
மறைப்பணியாளர்
பிறப்பு
8 மே 1786
டார்டில்லிDardilly near Lyon), பிரான்ஸ்
இறப்பு
4 ஆகஸ்டு 1859
ஆர்ஸ், பிரான்ஸ்
குருப்பட்டம்: 1815
புனிதர்பட்டம்: 1925, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பங்குதந்தையர்களின் பாதுகாவலர், 1929 (Patron von Pfarrer)
மரிய வியான்னி தன்னுடைய மறைபரப்பு பணியில் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தார். பெல்லேய் (Bellei) என்ற மறைமாவட்டத்தில் இருந்த ஆர்ஸ்(Ars) என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் மறைப்பணியை ஆற்றினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை, தன்னுடைய எளிய மறையுரையினாலும், செபத்தாலும் ஈர்த்தார். பாவிகள் மனந்திரும்ப இடைவிடாமல் செபித்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இறையடியார்கள் இவரின் மறையுரையைக் கேட்கவும், பாவமன்னிப்பு பெறவும் வந்து குவிந்தனர். பங்குத்தந்தையர்கள் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டுமென்பதில் இவர் அக்கறை காட்டி வந்தார். இவர் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார்.
இவர் சிறு வயதிலேயே குருப்பட்டம் பெற்றார். கடுந்தவம், செபம், அயராத உழைப்பு இவைகளில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் தன் பங்குமக்களிடையே நிலவிய அநீதிகளை எளிதாக நீக்கினார். அம்மக்களுக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். திருப்பலி முடிந்தவுடன், ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் பாவமன்னிப்பு தொட்டியில் அமர்ந்து, பாவமன்னிப்பு வழங்குவார். தனது ஓய்வு நேரத்திற்கென்று வெகு குறைந்த நேரமே ஒதுக்கினார். பல கட்டிடங்களையும், ஆலயங்களையும் கட்டி எழுப்புவதைவிட, ஆன்மாக்களின் இதயங்களை கட்டி எழுப்புங்கள். அப்போது விண்ணுலகில் இடம் கிடைக்கும் என்று இப்புனிதர் அடிக்கடி கூறிவந்தார்.
செபம்:
அன்பான ஆண்டவரே! புனித ஜான் மரிய வியான்னிக்கு மனவுறுதியையும், வல்லமையும், இரக்கமும் அளித்து வழிநடத்தினீர். உம் வல்லமையால் அவர் மறைப்பரப்பு பணியை சிறப்பாக ஆற்றினார். நாங்களும் அவரது முன்மாதிரியை பின்பற்றி, உம் மக்களை பாவ வாழ்விலிருந்து மீட்பதற்கு தேவையான அருளை நீர் தந்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஸ்பாலட்டோவின் புனித ரேய்னர் (Rainer von Spalato)
ஸ்பாலட்டோ மறைமாவட்ட பேராயர்
பிறப்பு 12 ஆம் நூற்றாண்டு, இத்தாலி
இறப்பு 4 ஆகஸ்டு 1180, ஸ்பிலிட்(Split), குரோஷியா
பாதுகாவல் ஸ்பிலிட் நகரின் பாதுகாவலர்
ஆகஸ்ட் 5
✠ புனித ஒஸ்வால்டு ✠
(St. Oswald of North Umbria)
பிறப்பு : 604
வட உம்பிரியா
இறப்பு : 5 ஆகஸ்டு 642
வட உம்பிரியா
பாதுகாவல் : ஆங்கிலேய அரசர்கள், காண்டோன் நகர்
நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 5
புனித ஒஸ்வால்டு, 634 முதல் தமது மரணம் வரை வட உம்பிரியா நாட்டின் அரசராக இருந்தவர். இவரது தந்தை ஈத்தல்ஃபிரித் ((Ethelfrith)) ஆவார்.
ஓஸ்வால்டு ஸ்காட்லாந்தில் உள்ள கொலும்பான் என்ற ஊரில் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். 634ல் அவர் பிறந்த நாடான இங்கிலாந்தில் போர் மூண்டதால் ஸ்காட்லாந்திலிருந்து நாடு திரும்பினார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களை பராமரிக்க இன்னல்கள் பல அடைந்தார். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு உதவி செய்வதற்கென்று, ஆயர் எய்டன் Aidan என்பவரின் உதவியுடன் 635ல், ஹோலி ஐலாந்து தீவில் (Holy Island) இருந்த புனித ஆசீர்வாதப்பர் துறவற இல்லம் ஒன்றை கட்டினார்.
ஏராளமான கிறிஸ்தவ மக்களை உருவாக்கினார். அம்மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்து அவர்களுக்கு சிறந்ததோர் ஞானத்தந்தையாக திகழ்ந்தார். மிகச் சிறப்பாக கிறிஸ்தவர்களை காத்து, வழிநடத்திய இவரை ஹைட்னிஸ் அரசர் (Heidnisch King) தாக்கியபோது இறந்தார். ஓஸ்வால்டு இறந்த பின்னர், இவரின் பக்தி அதிவேகத்தில் பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி மற்றும் இன்னும் பல நாடுகளில் பரவியது.
பிரிட்டனில் சக்திமிகு ஆட்சியாளராக திகழ்ந்த ஒஸ்வால்டு "மேசர்ஃபீல்டு" போரில் (Battle of Maserfield) உயிர் துறந்தார்.
ஆகஸ்டு 6
திருத்தந்தை ஹோர்மிஸ்தாஸ் (Pope Hormisdas)
பிறப்பு
5 ஆம் நூற்றாண்டு,
ஃப்ரோஸினான்(Frosinone), இத்தாலி
இறப்பு
6 ஆகஸ்டு 523,
உரோம், இத்தாலி
திருத்தந்தையாக: 514-523
இவர் 514 ஆம் ஆண்டிலிருந்து 523 ஆம் ஆண்டு வரை திருத்தந்தையாக இருந்தார். திருச்சபையில் எண்ணிலடங்கா ஆலயங்களைக் கட்டினார். இவரது ஆட்சிக்காலத்தில், கான்ஸ்டான்ண்டினோபிளிலிருந்து 250 க்கும் மேற்பட்ட ஆயர்கள், உரோமுடன் இணைந்தார்கள். மற்றும் பல கீழை நாட்டு ஆயர்களையும் உரோம் கத்தோலிக்க திருச்சபையோடு இணைத்தார்.
திருமணமாகி மனைவியை இழந்த இவருக்கு சில்வேரியுஸ் Silverius என்ற பெயர் கொண்ட மகன் ஒருவர் இருந்தார். திருத்தந்தை ஹோர்மிஸ்தாஸிற்கு பிறகு, சில்வேரியுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை ஹோர்மிஸ்தாஸ் தனது பதவி காலத்தில் பல நற்செயல்களை புரிந்தார். இறை இயேசு காட்டிய நற்செய்தி பாதையில் தனது வாழ்வை வாழ்ந்தார். இவர் தன் வாழ்வின் இடரான சூழலிலும் கூட மிக மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தார். அக்காசியன் Acacian என்ற தப்பறைக் கொள்கைக்கு எதிராக போராடினார்.
செபம்:
அனைத்தையும் படைத்தாளும் இறைவா! கிறிஸ்தவம் தோன்றிய நாளிலிருந்து இந்நாள் வரை பல இடையூறுகளை தாண்டி, உம் திருச்சபையை வளர்த்தெடுத்தீர். இன்றும் எம் திருச்சபையோடு இருந்து எல்லா தீங்குகளிலிருந்தும் காத்து வழிநடத்தும். திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உமது சிறகுகளின் நிழலில் வைத்து காத்து, ஆவியின் வழிநடத்துதலால் வாழ வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
புனித கெஸலின் (Gezelin / Gozelin)
பிறப்பு 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு 29 ஜூலை 1149(?), ஆல்டன்பெர்க்(Altenberg), நோர்ட்ரைன்-வெஸ்ட்ஃபாலன் (Nordrhein-Westfalen), ஜெர்மனி
பாதுகாவலர் குழந்தைகளை ஆசீர்வதிக்க
புனித யூஸ்டூஸ் மற்றும் இரண்டு குருக்கள் (Justus und Pastor von Madrid
மறைசாட்சிகள்
பிறப்பு 295 அல்காலா டி ஹெனாரஸ்(Alcala de Henares), மட்ரிட், ஸ்பெயின்
இறப்பு 305 அல்காலா டி ஹெனாரஸ்(Alcala de Henares)
பாதுகாவல் மட்ரிட்(Madrid
ஆகஸ்டு 7
புனித கயட்டான் (Kajetan von Tiene)
சபை நிறுவுனர்
பிறப்பு
1480
ட்டியன்ன(Tiene), வீசென்சா(Vicenza), இத்தாலி
இறப்பு
7 ஆகஸ்டு 1547
நேயாபல், இத்தாலி
புனிதர்பட்டம்: 1671, திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
பாதுகாவல்: பவேரியா (Bayern)
இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டார். இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் திருச்சபை சட்டம் பயின்றார். பின்னர் குருத்துவ பயிற்சி பெற்று குருவானார். இவர் இஞ்ஞாசியாருடன் இணைந்து, திருச்சபையில் நடந்த கொடுமைகளை எதிர்த்து, திருச்சபையை நல்வழியில் நடத்தி செல்ல பெரும்பாடுபட்டார். தன் வாழ்நாள் முழுவதும் பிறரை எல்லாச் சூழலிலும் அன்பு செய்து வாழ்ந்தார். கடுமையான ஒறுத்தல் வாழ்வை வாழ்ந்து பல மாற்றங்களை மக்களிடையே கொண்டுவந்தார். ஏழைகளின் மேல் அதிக அன்பும் அக்கறையும் கொண்டுவாழ்ந்தார்.
தான் ஓர் அரச குடும்பத்தில் பிறந்ததால், தன் பெற்றோரின் சொத்திலிருந்து பெற்ற பணத்தைக்கொண்டு, தான் பிறந்த ஊரான விச்சென்சாவில் ஒரு மருத்துவமனையை கட்டினார். தான் வாழ்வு முழுவதையுமே நோயாளிகளுக்காக அர்ப்பணித்தார். தன் பிள்ளைகளாலும், உறவினர்களாலும், கைவிடப்பட்ட நோயாளிகளை, இறுதிமூச்சுவரை பராமரிக்க ஓர் துறவற சபையை தொடங்கினார். இவரால் தொடங்கப்பட்ட இச்சபையினர் "தியேற்றைன்ஸ்" (Thietrains) என்றழைக்கப்பட்டார்கள். வெனிஸ் நகரிலும், நேப்பிள்ஸ் நகரிலும் இச்சபையை பரவ செய்தார். இத்துறவற சபையினர் பிறருக்கு பணிசெய்வதின் வழியாக, இயேசுவை மக்களுக்கு அறிவித்து, அவரின் சாட்சிகளாயினர்.
புனித கயத்தான் இறைவேண்டலிலும் பிறருக்கு அன்புப்பணி ஆற்றுவதிலும் சிறந்தவராய் இருந்தார். இறக்கும்வரை இயேசுவுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து இறந்தார்.
செபம்:
அன்பு தெய்வமே எம் இறைவா! திருச்சபைக்காகவும், ஏழை மக்களுக்காகவும் உழைத்து உயிர் துறந்த புனித கயத்தானைப் போல, எங்கள் வாழ்வில் நாங்களும் உம்மை பற்றிக்கொண்டு, உமது விண்ணரசுக்கு சொந்தமான ஏழை மக்களின் மேல் அன்பு கொண்டு வாழ, நீர் உமது அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
புனித ஆஃப்ரா (Afra)
மறைசாட்சி
பிறப்பு மூன்றாம் நூற்றாண்டு, சைப்ரஸ்(?) (Cyprus/ Zypern)
இறப்பு ஆகஸ்டு 304, ஆக்ஸ்பூர்க்(Augsburg), பவேரியா(Bayern)
புனிதர்பட்டம் 1064, திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டர்
பாதுகாவல் ஆக்ஸ்பூர்க் மறைமாவட்டம், யாரும் நினையா ஆன்மாக்கள், மூலிகை செடிகள்
புனித ஆகத்தா ஏஞ்சல் மற்றும் காசியான் (Agathangelus und Cassian OFMcap)
கப்புச்சின் துறவியர், மறைசாட்சி
பிறப்பு (ஆகத்தா ஏஞ்சல்) 31 ஜூலை 1598, வெண்டோம்(Vendome), பிரான்ஸ் (காசியான்) 15 ஜனவரி 1607, நாண்டஸ்(Nantes), பிரான்ஸ்
இறப்பு (இருவரும்) 7 ஆகஸ்டு 1638, அட்டிஸ் அபேபா(Addis Abeba), எத்தியோப்பியா எத்தியோப்பிய இஸ்லாமியர்களால் தூக்கிட்டு கொல்லப்பட்டனர்
முத்திபேறுபட்டம் 23 அக்டோபர் 1904
ட்ரப்பானியின் புனித ஆல்பர்ட் (Albert von Trapani)
துறவி, மறையுரையாளர்
பிறப்பு 1212, ட்ரப்பானி, சிசீலியா(Sizilien), இத்தாலி
இறப்பு 7 ஆகஸ்டு 1307, மெஸ்சினா(Messina), சிசீலியா
ஆரெட்ஸோவின் புனித டொனாட்டூஸ் (Donatus von Arezzo)
ஆயர், மறைசாட்சி
பிறப்பு 300
இறப்பு 7 ஆகஸ்டு 362, ஆரெட்ஸோ, இத்தாலி
பாதுகாவல் ஆரெட்ஸோ மறைமாவட்டத்தின் பாதுகாவலர் ஜூலியன் அப்போஸ்டாடா என்ற அரசனால் கொல்லப்பட்டார்
திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் (Sixtus II)
மறைசாட்சி
பிறப்பு இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு
இறப்பு 6 ஆகஸ்டு 258, உரோம், இத்தாலி, வலேரியன்(Valerian) என்ற அரசனால் கொல்லப்பட்டார்
பாதுகாவல் நம்பிக்கையுள்ள பெண்களுக்கு, திராட்சை மற்றும் பீன்ஸ் விளைச்சலுக்கு
ஆகஸ்டு 8
புனித டோமினிக் (Dominikus OP)
சபை நிறுவுனர்
பிறப்பு
1170
காலேருவேகா(Caleruega),ஸ்பெயின்
இறப்பு
6 ஆகஸ்டு 1221
பொலோங்னா(Bologna), இத்தாலி
முக்திபேறுபட்டம்: 3 ஜூலை 1234
புனிதர்பட்டம்: திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
பாதுகாவல்: டோமினிக் சபையினருக்கு, காய்ச்சல் உள்ளோர்க்கு
இவர் தனக்கு 16 வயது நடக்கும்போது புனித அகஸ்டின் சபையில் சேர்ந்தார். பின்னர் பலேன்சியா என்ற நகரில் இறையியல் கற்றார். ஓஸ்மா நகரில் பணிபுரிந்த மறைபணியாளர்களுடன் சேர்ந்து மறைப்பணியாற்றினார். திருத்தந்தை 3 ஆம் இன்னொசெண்ட்(Pope Innocent III) அவர்களால் ஆல்பிஜென்சிய மக்களுக்கு எதிராக போராட அனுப்பப்பட்டார். அம்மக்களை தம் மறையுரையாலும், வாழ்வாலும் மனமாற்றினார். இப்பணியை தொடர்ந்து செய்ய தம்மோடு சில தோழர்களை இணைத்து, "போதகர்களின் சபை" என்ற சபையை நிறுவினார்.
இவர் துறவிகள் சிலரை, தன்னுடன் அழைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று போதித்தார். தான் தொடங்கிய சபையில் செபவாழ்வு, இறைவார்த்தையின் வழி வாழ்தல், இறைவனோடிணைந்து செயல்படுதல் என்பவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வாழ வற்புறுத்தினார். தாங்கள் வாழும் இவ்வாழ்வை மக்களிடையே செயல்படுத்தத்தூண்டினார். இறை அருட்சாதனங்களை மக்கள் பெற்று, இறைவனோடு இணையவும், இறைவனை தங்களின் வாழ்வில் கண்டுணரவும் வேண்டுமென்பதால் தோமினிக் இரவும், பகலும் அயராது உழைத்தார். மக்களின் பாவங்களை மன்னிக்க அன்னைமரியிடம் இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார்.
செபம்:
வாழ்வின் நாயகனே என் இறைவா! இறைவார்த்தையை இவ்வுலகில் பரப்ப, அயராது உழைத்த எம் புனிதரின் பாதையில் நாங்களும் சென்று, உமக்கு சான்று பகர்ந்து வாழ வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஆயர் ஆல்ட்மன் (Altmann von Passau)
பாஸவ் மறைமாவட்டத்தின் ஆயர்
பிறப்பு: 1015, வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி
இறப்பு: 8 ஆகஸ்டு 1091, சைசல்மவர்(Zeiselmauer), ஆஸ்திரியா
திருத்தொண்டர் குரியாகோஸ் (Cyriacus)
மறைசாட்சி
பிறப்பு: மூன்றாம் நூற்றாண்டு
இறப்பு: 304, உரோம், இத்தாலி
பாதுகாவல்: கடினமான தொழிலுக்கு, மரண வேளையில், பேய் பிடித்தோருக்கு
வார்டோ (Wardo – Famianus OCist)
துறவி
பிறப்பு: 1090, கொலோன்(Köln), ஜெர்மனி
இறப்பு: 8 ஆகஸ்டு 1150, கல்லீஸ்(Gallese), இத்தாலி
புனிதர்பட்டம்: 1154, திருத்தந்தை நான்காம் ஹாட்ரியான் (Hadrian IV)
ஆகஸ்டு 9
திருச்சிலுவையின் புனித தெரசா பெனடிக்டா(Edith Stein)
Holy Cross of St. Theresa Benadikta
மறைசாட்சி
பிறப்பு
12 அக்டோபர் 1891,
ப்ரேஸ்லவ்(Breslau), போலந்து
இறப்பு
9 ஆகஸ்டு 1942,
ஹிட்லர் வதை முகாம், அவுஷ்விட்ஸ்(Auschwitz), போலந்து
முத்திபேறுபட்டம்: 1 மே1987, கொலோன்(Köln), ஜெர்மனி, திருத்தந்தை 2 ஜான்பவுல்
31 ஆம் வயதில் யூத மதத்திலிருந்து மனமாறி துறவியானார்
இவர் ஓர் யூதர் குலத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட்டார். பல புனிதர்களின் வரலாற்றை ஆர்வமுடன் வாசித்து, அவர்களைப்போல வாழவேண்டுமென்று விரும்பினார். இவர் தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். இதனால் தாய் மிகவும் கடினப்பட்டு தன்பிள்ளைகளை வளர்த்தார். தெரசா மிகவும் அறிவாளியாக திகழந்தார். பல அறிவியல் அறிஞர்களின் நூல்களை வாசித்தார். அப்போது தன் தாய்க்கு உதவி செய்யும் நோக்குடன் ஒரு கிறித்துவ குடும்பத்தில் உதவி செய்ய சேர்ந்தார். அக்குடும்பத்தில் இருந்த ஒரு பெண், தன் தாயை போலவே விதவையாக இருந்தார். தன் கணவரை நினைத்து, திருச்சிலுவையை நோக்கி கண்ணீர்விட்டு மன்றாடி செபித்தார். தொடர்ந்து செபித்த அப்பெண்ணினால் கிறிஸ்துவ மதத்திற்கு தானும் மாற வேண்டுமென்று தூண்டப்பட்டார்.
அப்போது அவ்வூரிலிருந்த பங்கு தந்தையை அணுகி, தன் விருப்பத்தை தெரிவித்தார். அதன்பின் முறைப்படி செபங்களை கற்றுக்கொண்டு, திருமுழுக்கு பெற்று கிறித்தவராக மாறினார். பங்குத்தந்தையின் அறிவுரையின்படியும், விருப்பப்படியும் ஓர் கிறிஸ்துவ பள்ளியில் பயின்று, ஆலயக் காரியங்களில் ஈடுபட்டார். நன்கு கற்றுத் தேர்ந்த தெரசா யூதக் குலத்திலிருந்து, கிறிஸ்துவத்திற்கு மாறியபின், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியராக பணியாற்றினார். மிகச் சிறப்பாக பணிபுரிந்த அவர் ஹிட்லர் ஆட்சியால் பாதிக்கப்பட்டார். ஹிட்லரால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்.
அவ்வேளையில்தான் ஒருநாள் கார்மேல் மடத்திற்குள் தஞ்சம் புகுவதற்காக நுழைந்தார். நாளடைவில் அக்கன்னியர்களுள் தானும் ஒருவரானார். பலமுறை ஹிட்லரால் துன்புறுத்தப்பட்டபோதும், தான் " ஓர் கிறித்தவள்" என்றே கூறினார். இதனால் ஹிட்லர் யூத குலத்திற்கு, மேலும் பல துன்பங்களைக் கொடுத்தான். அப்படி இருந்தபோதும் கூட இறைவனை இறுகப்பற்றிக்கொண்டு தொடர்ந்து செபித்தார். ஹிட்லரின் பிடியிலிருந்தபோதும்கூட உடனிருந்த மக்களிடையே போதித்தார். இதனால் ஹிட்லரால் பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டு உயிர் துறந்தார்.
செபம்:
எல்லாம் வல்லவரே எம் தந்தையே! இதோ ஹிட்லர் ஆட்சியின்போது இறந்துபோன, எம் யூத குல சகோதர, சகோதரிகளை உம் பதம் வைக்கின்றோம். அவர்கள் அனைவரையும், நீர் கருணைகூர்ந்து உம் வான்வீட்டில் சேர்த்தருளும். இன்றும் யூத மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை நீர்தாமே அகற்றி, நல்வாழ்வளித்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• பிரான்ஸ் யேகர்ஸ்டேட்டர் Franz Jägerstätter
விவசாயி, கோயில் பணியாளர்
பிறப்பு: 20 மே 1907, ராட்குண்ட் Radegund, ஆஸ்திரியா
இறப்பு: 9 ஆகஸ்டு 1943, ப்ராண்டன்பூர்க், Brandenburg
• பாடர்போர்ன் ஆயர் ஹாடம்மர் Hathumar von Paderborn
பிறப்பு: எட்டாம் நூற்றாண்டு
இறப்பு: 9 ஆகஸ்டு 815, நார்ட்ரைன் வெஸ்ட்ஃபாலன் Northrhein-westfalen,Sachsen
ஆகஸ்டு 10
திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence)
மறைசாட்சி
பிறப்பு
230
ஸ்பெயின்
இறப்பு
10 ஆகஸ்டு 258
உரோம், இத்தாலி. வலேரியன் என்ற என்ற அரசனால் கொல்லப்பட்டார்.
பாதுகாவல்: வுப்பர்டால்(Wuppertal) மற்றும் நூரன்பெர்க்(Nürnberg) நகரங்களுக்கு.
இவர் உரோமைத் திருச்சபையின், திருத்தந்தை புனித 2 ஆம் சிக்ஸ்டஸிடம் (Pope Sixtus II) திருத்தொண்டராக இருந்தார். அப்போது மாமன்னன் வலேரியன் (Valerien) கிறித்தவர்களை அடக்கி, ஒடுக்கி துன்புறுத்தினான். அந்நேரத்தில் திருத்தந்தை 2 ஆம் சிக்ஸ்துவையும் அவருடன் இருந்த நான்கு திருத்தொண்டர்களையும் பிடித்து சென்று கொன்றான். அவர்கள் மரித்த நான்காம் நாளே லாரன்சும் மறைசாட்சியாக எரித்துக்கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சொந்தமான அனைத்து பொருட்களையும் எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தார். அரசன் கேட்ட கேள்விகளுக்கு லாரன்ஸ் கூறிய விடைகளை அரசன் தவறாக புரிந்துகொண்டான். அதனால் லாரன்சை ஒரு இரும்புக்கட்டிலில் போட்டு அதற்கடியில் நெருப்பு வைத்து கொளுத்தி கொல்லும்படி ஆணையிட்டான். ஆனால் லாரன்சோ, நெருப்பில் வேகும்போது இறைவனைப் போற்றி புகழ்ந்து செபித்தார். தன் உடல் முழுவதும் எரிந்த பிறகு, நன்றாக வெந்துவிட்டது, திருப்பிப்போடுங்கள் என்றார். இவரது கல்லறை காம்போ வேரோனா என்ற பகுதியில் தீபூர்த்தினா சாலை அருகே உள்ளது. அக்கல்லறையின்மேல் மாமன்னர் கொன்ஸ்தான்சியுஸ் பேராலயம் ஒன்றை எழுப்பினார். 4 ஆம் நூற்றாண்டிலேயே இப்புனிதரின் பக்தி பரவியது.
செபம்:
அன்பின் ஊற்றே எம் இறைவா! தனது வாழ்வை மக்களின் பணிக்காகவும், உமது இறையரசின் மேன்மைக்காகவும் அர்ப்பணித்து மறைசாட்சியாக மரித்த புனித லாரன்சை நினைத்து உமக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். அவர் உம்மை அன்பு செய்ததுபோல, நாங்களும் உம்மை அன்பு செய்து அவர் போதித்த வாழ்வின்படி நாங்கல் வாழவும், நீர் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
எரிக் ப்லோவ்பென்னிங் (Erich Plovpenning) அரசர்
மறைசாட்சி
பிறப்பு: 1216 , டென்மார்க்
இறப்பு: 10 ஆகஸ்டு 1250, ஷ்லெஸ்விக் (Schleswig), தன் சகோதரர் ஆபேலால் கொல்லப்பட்டார்
ஆகஸ்டு 11
அசிசி நகரின் புனித கிளாரா (Klara von Assisi OSCI)
சபை நிறுவுனர்
பிறப்பு
1194
அசிசி, இத்தாலி
இறப்பு
11 ஆகஸ்டு 1253
அசிசி, இத்தாலி
15 ஆகஸ்டு 1255
திருத்தந்தை 4 ஆம் அலெக்சாண்டர்
பாதுகாவல்: பார்வையற்றோர்
இவர் ஓர் பிரபு குலத்தில் பிறந்தவர். தனது இளம்வயதிலேயே அசிசியாரின் மறையுரையாலும், அவரின் ஏழ்மையான வாழ்வாலும் ஈர்க்கப்பட்டார். இதனால் அசிசியாரின் மறைபோதனைகளை தவறாமல் கேட்டு வந்தார். மிகவும் அழகான இளம்பெண் கிளாராவை திருமனம் செய்துகொடுக்க, இவரின் தந்தை ஏற்பாடு செய்தார். இதையறிந்த கிளாரா திருமண வாழ்வை விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். பிரான்ஸ் அசிசியார் இருக்கும் இடத்தை தேடி ஓடினார். அசிசியாரை சந்தித்ததும் அவரின் அறிவுரைப்படி புனித ஆசீர்வாதப்பர் சபையில் தங்கினார். அப்போது தன்னுடைய அரண்மனை ஆடைகளை களைந்து துறவற ஆடையை உடுத்திக்கொண்டார். தான் ஓர் துறவி என்பதை மனதில் கொண்டு தன் முடியையும் வெட்டிக்கொண்டார்.
கிளாரா அசிசியாரை போலவே மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். ஏழைமக்களுக்காக கடுமையாக உழைத்தார். பின்னர் பெண்களுக்கென்று ஓர் துறவற சபையை தொடங்கினார். அசிசியாரின் சபை ஒழுங்குகளையே தானும் கடைபிடித்து தன் சபையினரையும் வாழ வைத்தார். மிகவும் கடுமையான செப, தவ வாழ்க்கையை வாழ்ந்தார். இவரின் சபை ஐரோப்பிய நாடுகளில் பரப்பப்பட்டு, நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது. அன்றிருந்த கடுமையான ஒழுங்குகள், இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அசிசியாரின் சபை சகோதரர்களும், திருச்சபையிலிருந்து பல திருத்தந்தையர்களும், கர்தினால்கள், ஆயர்கள், குருக்களும் இவரை ஆன்மீக வழிகாட்டியாக தெரிந்துகொண்டு, இவரிடம் ஆலோசனை பெற்று வாழ்ந்தனர்.
இவர் தனது 59 ஆம் வயதில் தனது துறவற இல்லத்தில் இறைவார்த்தைகளை கேட்டபடியே உயிர்திறந்தார். இவர் இறந்த இரண்டே ஆண்டுகளில் புனிதர் பட்டம் பெற்றார்.
செபம்:
ஏழைகளின் தோழனே எம் இறைவா! ஏழ்மையை ஆடையாகக் கொண்டு வாழ்ந்த புனித கிளாராவைபோல, நாங்களும் ஏழ்மையை நேசித்து, ஏழைகளுக்கு உதவி செய்து , தொடர்ந்து உமது நண்பர்களாக வாழ எமக்கு நீர் உதவி செய்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை வேண்டுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
சுசான்னா (Susanna von Rom)
மறைசாட்சி
பிறப்பு: 3ஆம் நூற்றாண்டு, உரோம், இத்தாலி
இறப்பு: 304, உரோம்
பாதுகாவல்: உரோம் நகர்
ஆகஸ்டு 12
புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் (St. Jane Frances de Chantel)
பிறப்பு
28 ஜனவரி 1572
டிஜோன்(Dijon), பிரான்ஸ்
இறப்பு
13 டிசம்பர் 1641
பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 21 நவம்பர் 1751, 15 ஆம் பெனடிக்ட்
புனிதர்பட்டம்: 16 ஜூலை 1767, 13 ஆம் கிளமென்ட்
இவர் சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார். இதனால் இவர் இறைவனையே தாயாகக் கொண்டு வாழ்ந்தார். அரண்மனையில் இவர் வாழ்ந்தபோதும் கூட ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். பின்னர் இவர் தே ஷாந்தால் என்ற அரசரை திருமணம் செய்துகொண்டார். 6 பிள்ளைகளைப் பெற்றபின் திருமணமான ஏழு ஆண்டுகள் கழித்து தன் கணவரை இழந்தார். பின்னர் தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தப்பின்னர், தான் ஓர் துறவற சபையை தொடங்க விரும்பினார். இதனால் புனித பிரான்சிஸ் சலேசியாரை சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவித்தார்.
பின்னர் பிரான்சிஸ் சலேசியாரை தன் ஆன்மீக குருவாக தேர்ந்தெடுத்து, அவர் காட்டிய வழியில் பின்தொடர்ந்தார். அரண்மனையில் வாழ்ந்ததால் முழுமையாக ஆன்மீக காரியங்களில் ஈடுபட முடியவில்லை என்பதை உணர்ந்து, அரண்மனையைவிட்டு வெளியேறினார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். அப்போது தன் ம்கனையும் இழந்தார். அச்சமயத்தில் பிளேக் நோய் பிரான்ஸ் நாட்டில் பரவியது. ஏராளமான மக்கள் அந்நோயால் இறந்தனர். அவரின் மருமகளும் அந்நோயால் தாக்கப்பட்டு இறந்தார். இதனால் இன்னும் மனமுடைந்த ஜேன் பிரான்சிஸ், பிளேக் நோயால் தாக்கப்பட்ட மக்களிடையே பணிபுரிந்தார். தன் அரண்மனை சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்காக செலவு செய்தார். அப்போதுதான் பிளேக் நோயால் பாதித்தவர்களுக்கு பணிபுரிவதற்கென்றே ஓர் துறவற சபையை நிறுவினார். தன் பிள்ளைகளையும், உற்றார், உறவினர் அனைவரையும் துறந்து இறைப்பணியை செய்தவர். ஆழ்ந்த விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டு, இடைவிடாமல் இறைபணி ஆற்றினார். தமக்கிருந்த எல்லாவற்றையுமே இறைவனின் மகிமைக்காக இழந்தார்.
செபம்:
நலமளிப்பவரே இறைவா! எம் சமுதாயத்தில் நோயால் பாதிக்கப்பட்டு, உடல் வேதனைகளை அனுபவிக்கிற ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உடல் நோய்களை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும், மனபலத்தையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
குரு அந்திரேயாஸ் அபெல்லோன் (Andreas Abellon OP)
துறவி, மறையுரையாளர்
பிறப்பு: 1375, பிரான்ஸ்
இறப்பு: 15 மே 1450, ஐக்ஸ்(Aix), பிரான்ஸ்
ஹிலாரியா (Hilaria von Augsburg)
மறைசாட்சி
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, ஆப்ரிக்கா
இறப்பு: ஆகஸ்டு 304, ஆக்ஸ்பூர்க், ஜெர்மனி. தியோக்லேசியனால்(Diocletian) எரித்து கொல்லப்பட்டார்
ஆகஸ்ட் 13
புனித போன்தியன் ✠ (Pope St. Pontian)
18ம் திருத்தந்தை : (18th Pope)
இயற்பெயர் : பொன்தியானுஸ்
பிறப்பு : c 200 சார்தீனியா, (Sardinia) ரோமப் பேரரசு
இறப்பு : 237 சார்தீனியா, (Sardinia) ரோமப் பேரரசு
நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 13
திருத்தந்தை போன்தியன் (Pope Pontian) ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் கி.பி. 230 முதல் 235 வரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை முதலாம் அர்பன் ஆவார். திருத்தந்தை போன்தியன் கத்தோலிக்க திருச்சபையின் 18ம் திருத்தந்தை ஆவார்.
வரலாறு : இவருக்கு முந்தைய திருத்தந்தையர்களை விடவும் இவரைப் பற்றி சிறிது அதிக தகவல்கள் கிடைத்துள்ளன. "லிபேரிய பட்டியல்" (Liberian Catalogue) என்னும் ஏட்டை நான்காம் நூற்றாண்டில் தொகுத்த ஆசிரியருக்கு அந்தக் கூடுதல் தகவல்கள் புதிதாக அப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக் குறிப்பேட்டிலிருந்து கிடைத்தன. 'ரோம் நகர் இப்போலித்து' (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் போன்தியனுக்கு முந்திய திருத்தந்தையர்கள் ஆட்சிக்காலத்தில் எதிர் - திருத்தந்தையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரும், போன்தியனும் வேறு திருச்சபைத் தலைவர்களும் திருச்சபைக்கு எதிராக இருந்த 'மாக்சிமினஸ் த்ராக்ஸ்' (Maximinus Thrax) என்ற ரோமப் பேரரசனால் சார்தீனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். எனவே, போன்தியன் 235 செப்டம்பர் 25 (அல்லது 28ம் நாள்) திருத்தந்தைப் பதவியைத் துறந்தார். இப்போலித்து என்ற எதிர் திருத்தந்தையால் திருச்சபையில் ஏற்பட்ட பிளவும் ஏறக்குறைய அதே சமயத்தில் முடிவுக்கு வந்தது. இப்போலித்து திருச்சபையோடு சமாதானம் செய்துகொண்டார்.
போன்தியன் எவ்வளவு காலம் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, போன்தியன் சார்தீனியாவில் உலோகச் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ததாலும், கொடூரமாக நடத்தப்பட்டதாலும் இறந்தார். அவர் 'தாவொலாரா' என்னும் தீவில் இறந்ததாக ஒரு மரபு உள்ளது.
உடல் அடக்கம் :
போன்தியனின் திருவிழா நவம்பர் 19ஆக இருந்தது. பின்னர் போன்தியனுக்கும் இப்போலித்துவுக்கும் ஒரே நாளில், ஆகஸ்ட் 13ம் நாள் விழாக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அந்த நாளில்தான் அவருடைய உடலின் மீபொருள்கள் கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் வைக்கப்பட்டன. போன்தியனின் மீபொருள்களைத் திருத்தந்தை ஃபேபியன் (ஆட்சி: 236-250) என்பவர் ரோம் நகருக்குக் கொண்டு வந்து, கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்தார். அவரது கல்லறையில் வைக்கப்பட்ட கல்வெட்டு 1909ல் கண்டெடுக்கப்பட்டது. அதில் "PONTIANOS, EPISK" என்னும் சொற்கள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து, "MARTUR" என்னும் சொல் வேறு ஒருவரால் சேர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதற்கு, "ஆயரும் மறைச்சாட்சியுமான போன்தியன்" என்பது பொருள்.
ஆகஸ்டு 14
புனித மாக்சிமிலியன் கோல்பே (Maximilian Kolbe OFMConv)
குரு, துறவி, மறைசாட்சி
பிறப்பு
7 ஜனவரி 1894
போலந்து Zdunska Wola, Poland
இறப்பு
14 ஆகஸ்டு 1941
ஹிட்லர் வதை முகாம், போலந்து
முத்திபேறுபட்டம்: 17 அக்டோபர் 1971 திருத்தந்தை ஆறாம் பவுல்
புனிதர்பட்டம்: 10 அக்டோபர் 1982 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
மாக்சிமிலியன் சிறுவயதிலிருந்தே அன்னை மரியின் மீது பக்திகொண்டு வளர்ந்தார். இளம் வயதிலேயே பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து குருவானார். இவர் குருத்துவ பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறும்போது, காசநோயால் தாக்கப்பட்டார். இறையன்னையின் அருளால் மீண்டும் குணம் பெற்றார். 1918 ஆம் ஆண்டில் உரோமையில் குருபட்டம் பெற்ற இவர் அன்னை மரியாளைப்பற்றி போதித்து, மக்களிடையே அன்னை மரியின் பக்தியை வளர்த்தார். பின்னர் "மாசற்ற மரியாவின் சேனை" என்ற பெயரில் ஓர் சபையைத் தொடங்கினார். அச்சபையை பல நாடுகளில் பரப்பி, மரியன்னையின் பக்தியை பரப்பினார். இவற்றிற்காக பலரிடம் அடிகள் பட்டு, பல அவமானத்திற்கு உள்ளானார்.
மறைப்பணியாளராக ஜப்பான் நாட்டிற்கு சென்றார். அங்கு திறம்பட நற்செய்தியை பறைசாற்றினார். மீண்டும் தன் தாய் நாடான போலந்து நாட்டிற்கு திரும்பினார். அப்போது போலந்து நாடு ஹிட்லரின் ஆட்சியால் பிடிப்பட்டது. அச்சமயத்தில் மூண்ட உலகப்போரில் மாக்சிமிலியனும் ஹிட்லரிடம் பிடிபட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாழ்வின்போது தன்னுடன் இருந்த மற்றவர்களிடம் மிக அன்பாக நடந்துகொண்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அம்மக்களிடம் இறையுணர்வை வளர்த்தார். அச்சமயத்தில் ஹிட்லரால் இளைஞர் ஒருவன் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டான். இவர் ஓர் திருமணமான இளைஞர். தன்னை விடுவிக்கும்படி ஹிட்லரிடம் கெஞ்சினான். ஆனால் அவன் கோரிக்கையை ஹிட்லர் ஏற்க மறுத்தான்.
இதனைக் கண்ட மாக்சிமிலியன் அவ்விளைஞனுக்கு உதவி செய்து சென்று, அவனை விடுவிக்கும்படி மன்றாடி, அவனுக்கு பதில் தன் உயிரை கொடுக்கிறேன் என்று கூறினார். கடைசியாக அவ்விளைஞனுக்குப் பதில் தம்மையே சாவுக்கு கையளித்தார். பிறருக்காக தன்னையே தியாகம் செய்தார்.
செபம்:
தியாகத்தின் மறு உருவே எம் தலைவா! உம் மக்கள் பாவ வாழ்விலிருந்து மீட்படைய நீர் சிலுவை சாவில் உம் உயிரை தியாகம் செய்தீர். தன் நண்பருக்காக உயிரை கொடுப்பது சிறந்த அன்பு என்று கூறி, மற்றவர்களுக்காக வாழ அழைத்தீர். புனித மாக்சிமிலியனும், தன்னுயிரையே மற்றவர்களுக்காக தியாகம் செய்தார். அவர்களின் முன்மாதிரியான வாழ்வை பின்பற்றி நாங்கள் வாழ எமக்கு உம் அருளை தந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஏபர்ஹார்டு Eberhard von Einsiedeln
துறவி
பிறப்பு: 890
இறப்பு: 14 ஆகஸ்டு 958, சுவிட்சர்லாந்து Einsiedeln, Schweiz
ஓசிபியூஸ் Eusebius von Rom
குரு, மறைசாட்சி
பிறப்பு: 3/4 ஆம் நூற்றாண்டு, உரோம் , இத்தாலி
இறப்பு: 350, உரோம். ஆரியனிஸத்தை எதிர்த்ததால் இரண்டாம் கான்ஸ்டாண்டின் என்ற அரசனால் (Konstantius II) கொல்லப்பட்டார்.
ஆகஸ்டு 15
சோய்சன்ஸ் நகர் ஆயர் அர்னூல்ஃப் (Arnulf von Soissons OSB)
அமைதியின் தூதர்
பிறப்பு
1040,
பமேலே Pamele, ஃப்லாண்டன் Flandern, பெல்ஜியம்
இறப்பு
15 ஆகஸ்டு 1087,
ஃப்லாண்டன் Flandern
புனிதர்பட்டம்: 1121, திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் Papst Kalixtus II
ஆயராக: 1081, சாய்சோன் மறைமாவட்டம் (Soissons)
பாதுகாவல்: பீர் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்போர்
இவர் ஓடன்பூர்க்கிலுள்ள Oudenbourg புருகே Brügge என்ற ஊரில் பெனடிக்டீனர் சபை ஒன்றை நிறுவினார் என்று கூறப்படுகின்றது. இவர் குதிரை சவாரி செய்யும் ஒருவரின் மகனாக பிறந்தார். இதனால் அர்னூல்ப், தன் தந்தையை பின்பற்றி, குதிரை சவாரி செய்வதை பற்றி மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். பின்னர் 1060 ல் புனித பெனடிக்டீனர் சபையில் சேர்ந்து குருவானார். இவர் 15 ஆண்டுகள் தனது குருத்துவ பணியை திறம்பட செய்தார். சிறந்த போதனையாளராக திகழ்ந்தார்.
1076 ஆம் ஆண்டு புனித பெனடிக்டீனர் சபையில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 1081 ஆம் ஆண்டு சோய்சன்ஸ் என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயராக இருக்கும்போது திருத்தந்தை 7ஆம் கிரகோரி அவர்களுக்கு பெரும் அளவில் உதவி செய்தார். அர்னூல்ப் தான் பிறந்த ஊரான பிளாண்டர்னில் மக்களிடையே அமைதி இல்லாமல் இருப்பதை உணர்ந்து பெரிதும் உழைத்தார். தன் உழைப்பின் பயனாக சமாதானத்தையும், அமைதியையும் அம்மக்களிடையே கொண்டுவந்தார். இதனால் இவர் பிளாண்டர்ன் நகர் மக்களால் "அமைதியின் அப்போஸ்தலர்" என்றழைக்கப்பட்டார். பின்னர் சில காரணங்களால் 1085 ஆம் ஆண்டு தனது ஆயர் பதவியிலிருந்து விலகினார்.
செபம்:
அமைதி அளிப்பவரே எம் தலைவா! இன்று உலகில் சண்டை, சச்சரவுகளால், பல்வேறு நாடுகளில் அமைதியின்றி மக்கள் அவதிப்படுகின்றார்கள். அந்நாடுகளை நீர் கண்ணோக்கும், உமது ஆசீர்வாதங்களை அபரிவிதமாக பொழிந்து, மக்களிடையே அமைதியை ஏற்படுத்தும் ஆதரவின்றி தவிக்கும் மக்களுக்கு தேவையானவை தந்து, உதவி செய்து அம்மக்களுக்கு வாழ்வு வழங்கிட நீர் வழிகாட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
புனித ஹயாசிந்த் Hyacinthus von Polen OP
டொமினிக்கன் சபைத்துறவி, மறையுரையாளர்
பிறப்பு: 12 ஆம் நூற்றாண்டு, ஓப்பல் Oppeln, போலந்து
இறப்பு: 15 ஆகஸ்டு 1257, கிராக்கவ் Krakau, போலந்து
புனிதர்பட்டம்: 1594, திருந்தந்தை எட்டாம் கிளமண்ட்
பாதுகாவல்: டொமினிக்கன் சபை, போலந்து, ரஷ்யா
மறைசாட்சி தார்சியுஸ் Tarsicius
திருத்தொண்டர்
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு(?)
இறப்பு: 3 ஆம் நூற்றாண்டு(?), உரோம், இத்தாலி
பாதுகாவல்: தொழிலாளர், பீடச்சிறுவர்கள்
ஆகஸ்டு 16
அரசர் முதலாம் ஸ்டீபன் Stephen I von Ungarn
ஹங்கேரியின் தேசிய புனிதர்
பிறப்பு
969
கிரான் Gran, ஹங்கேரி
இறப்பு
15 ஆகஸ்டு 1038,
ஹங்கேரி
பாதுகாவல்: ஹங்கேரி
இவர் ஏறக்குறைய 1000 ஆம் ஆண்டில் திருமுழுக்கு பெற்று, ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். தனது 20 ஆம் வயதில் பவேரியா நாட்டு அரசர் புனித 2 ஆம் ஹென்றியின் சகோதரி கிசேலா(Giesela) என்பவரை திருமணம் செய்துகொண்டார். தன் தந்தையின் இறப்பிற்குப்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சிபுரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார்.
இவர் அனுமதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்துவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்துவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார்.
ஸ்டீபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்கலையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்துவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். இவர் செய்த இறைப்பணியால் இவர் இறந்தபிறகும் இவரின் வலது கையானது. அழியாமல் இருந்தது. தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிக சிறந்தவராக திகழ்ந்தார்.
செபம்:
முதலும் முடிவுமான இறைவா! உம்மையே முழுமுதலாக கொண்டு, உம்மை மட்டுமே தன் நாட்டு மக்களில் மையமாக வைத்து, வாழ்ந்த புனித ஸ்டீபனின் அருஞ்செயல்களை நினைத்து, உமக்கு நன்றி நவில்கின்றோம், அவர் காட்டிய இறைவழியில் அம்மக்களை நீர் எந்நாளும் உடனிருந்து வழிநடத்தியருள் வேண்டுமாய் இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
புனித பியாட்ரிக்ஸ் டாசில்வா மெனஸ் Beatrix da Silva Meneses
சபை நிறுவுனர்
பிறப்பு: 1424, மொராக்கோ Ceuta, Marokko
சபை நிறுவிய ஆண்டு: 1484
இறப்பு: 16 ஆகஸ்டு 1490, டோலடோ Toledo, ஸ்பெயின்
புனிதர்பட்டம்: 3 அக்டோபர் 1976, திருத்தந்தை ஆறாம் பவுல்
ரோச் Rochus von Montpellier
திருப்பயணி, Pilger
பிறப்பு: 1295(?) மோண்ட்பெல்லியர் Montpellier, பிரான்ஸ்
இறப்பு: 16 ஆகஸ்டு 1327 மோண்ட்பெல்லியர்
பாதுகாவல்: வெனிஸ், மோண்ட்பெல்லியர், சிறையிலிருப்போர்
ஆகஸ்டு 17
புனித ஆமோர், மறைப்பணியாளர் (St.Amor, Amorbach)
பிறப்பு
ஏழாம் நூற்றாண்டு
ஸ்காட்லாந்து/ பிரான்ஸ்
இறப்பு
777
ஆமோர்பாஹ் Amorbach, பவேரியா, Germany
இவர் ஸ்காட்லாந்திலிருந்து மறைபணியாற்ற வந்தவர் என்றும், அக்குயிடானியன் (Aquitanien) என்ற ஊரைச் சார்ந்தவர் என்றும் வரலாறு கூறுகின்றது. இவர் எட்டாம் நூற்றாண்டில் மறைப்பணியை ஆற்றியுள்ளார். பின்னர் இவர் வூர்ட்ஸ்பூர்க் (Würzburg) என்ற மறைமாவட்டத்தில் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 734 ஆம் ஆண்டில் ஆமோர்பாக் என்ற ஊரில் ஆமோர் என்ற பெயரில் ஒரு துறவற சபையை நிறுவியுள்ளார்.
அமோர்பாக் என்பது ஓடன்வால்டு என்ற ஊரிலுள்ள ஓர் சிறிய கிராமம். வூர்ட்ஸ்பூர்க் என்ற மறைமாநிலத்தின் வடதென் பகுதிகளில் இவர் மிஷினரியாக பணிபுரிந்தார். இவர் அப்பகுதிகளில் மிகவும் போற்ற பெற்றவராக திகழ்ந்தார். இறை விசுவாசம் மக்களிடையே வளர வேண்டுமென்பதை குறிகோளாகக் கொண்டு பணியாற்றினார். இவர் தொடங்கிய "ஆமோர்" என்ற சபையை ஏறக்குறைய 30 ஆண்டுகள் கழித்து, புனித ஆசீர்வாதப்பர் சபையை சார்ந்தவர்கள் வழிநடத்தியுள்ளார்கள். இத்துறவற சபையினர் மக்களிடையே இறைபக்தியை பரப்பி, இறை நம்பிக்கையையும், விசுவாசத்தையும் சிறப்பான முறையில் வளர்த்தெடுத்துள்ளார்கள். இவ்விறைபக்தி இன்று வரை அவ்வூர் மக்களிடையே வேரூன்றி உள்ளது. அன்று ஆமோர்பாக்கிலிருந்த இத்துறவற சபைக்கு சொந்தமான ஆலயம், இன்று புரோட்டஸ்டாண்டு மக்களின் ஆலயமாக உள்ளது. 1734 ஆம் ஆண்டு 1000 ஆம் வருட ஜூபிலியையும் இச்சபைக் கொண்டாடியது. இவர் எழுப்பிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, பழமையான பெயர்பெற்ற ஆலயங்களில் சிறந்த ஆலயமாக போற்றப்படுகின்றது.
வெர்ஸ்(Wersch) என்ற ஊரைச் சேர்ந்த மாக்சிமிலியன் என்பவரே இவ்வாலயத்தை கட்டினார். ஆமோர் கூறியதின்படி அவ்வாலயம் அமைக்கப்பட்டு, அக்காலத்திலேயே மிகவும் அழகுவாய்ந்த ஆலயமாக ஆமோர் அதைக் கட்டினார். இறைவனின் இல்லத்திற்கு வருபவர்கள், இறைவனை அழகுற ஏற்று, வழிபட வேண்டுமென்ற நோக்குடன் மிக அழகாக கட்டப்பட்டது. இவ்வாலயம் கட்டி முடித்தபிறகு ஏராளமான மக்கள் திருப்பலிக்கு குவிந்தனர். ஆலயத்தில் மக்கள் தொகை கணக்கிட இயலாமல் இருந்தது. மிகப் புகழ்பெற்ற ஆலயமாக இவ்வாலயம் திகழ்ந்தது.
செபம்:
வாழ்வை வழங்கும் தந்தையே! நீர் ஒருவர் மட்டுமே நிலைவாழ்வு தருபவர் என்பதை உணர்ந்து, உம் மந்தையின் ஆடுகளை உம் வழி செல்ல தூண்டினீர். உம் தூண்டுதலை உணர்ந்து செயல்பட்ட புனித ஆமோரைப்போல, நாங்களும் உம் குரலுக்கு செவிசாய்க்க உம் வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
புனித கிளாரா Clara von Montelfalco OESA
துறவி, காட்சியாளர் Mystikerin
பிறப்பு: 1275, மோண்டேஃபால்கோ Montefalco, இத்தாலி
இறப்பு: 17 ஆகஸ்டு 1308, மோண்டேஃபால்கோ
புனிதர்பட்டம்: 8 டிசம்பர் 1881
புனித சிலுவை யோஹன்னா Johanna vom Kreuz
சபை நிறுவுனர்
பிறப்பு: 18 ஜூன் 1666, சவ்முர், பிரான்ஸ்
இறப்பு: 17 ஆகஸ்டு 1736, சவ்முர்
புனிதர்பட்டம்: 31 அக்டோபர் 1982
மம்மாஸ் Mammas
மறைசாட்சி
பிறப்பு: 255/260, காங்கிரா Gangra, துருக்கி
இறப்பு: 270/275, செசாரியா, கப்பதோக்கியா, துருக்கி
பாதுகாவல்: கால்நடைகள்
ஆகஸ்டு 18
புனித லூயிஸ் ஆல்பர்ட் ஹூர்டாடோ குருசாகா (St. Luis Alberto Hurtado Cruchaga, Jesuit)
சேசு சபை குரு
பிறப்பு
22 ஜனவரி 1901
சிலி (Chile)
இறப்பு
18 ஆகஸ்டு 1952
சிலி (Chile)
முத்திபேறுபட்டம்: 16 அக்டோபர் 1994 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
புனிதர்பட்டம்: 23 அக்டோபர் 2005 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
தந்தை: ஆல்பர்ட் ஹூர்டாடோ லரைன் (Alberto Hurtado Larrain)
தாய்: அன்னா குருசாகா டி ஹூர்டாடோ(Ana Cruchaga de Hurtado)
சகோதரன்: மிகுவேல்(Miguel)
இவர் மிகவும் வறுமையான ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். தங்குவதற்கென்று சிறிய வீடுகூட இல்லாமல், எந்தவித அடிப்படை வசதியுமே இல்லாமல் வாழ்ந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் வறுமையில் வளர்ந்தார். இதனைக்கண்ட இயேசு சபை குரு ஒருவர். இவரின் குடும்பத்திற்கு உதவி செய்தார். அக்குருவின் உதவியினால் ஆல்பர்ட் கல்வி பயின்றார். அறிவிலும், ஞானத்திலும் சிறந்து வளர்ந்த ஆல்பர்ட் தினமும் திருப்பலியில் பங்கெடுத்தார். தனது பங்குத் தந்தையின் வழிநடத்துதலின்படி, தன் வாழ்வை அமைத்தார். தான் ஓர் குருவாக வேண்டுமென்ற ஆசையை பங்குத்தந்தையிடம் தெரிவித்தார். அவரையே தன் ஆன்மகுருவாகவும் தேர்ந்தெடுத்தார். தான் படிக்கும்போதும் விடுமுறை நாட்களிலும் தன் ஊரை சுற்றியுள்ள குடிசைகளையும் சந்தித்து, மக்களை தேற்றியும் ஆறுதல்படுத்தியும் வந்தார்.
இவர் 1920 ஆம் ஆண்டு படைவீரராக சேர்ந்தார். 3 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தபின் மீண்டும் கல்லூரியில் சென்று படித்தார். தன் படிப்பை முடித்தபின் இயேசு சபையில் சேர்ந்தார். இயேசு சபையில் பயிற்சியை முடித்தபின் 1933 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று குருவானார். குருவான பிறகு சாண்டியாகோ என்ற நகரில், கல்லூரியில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஆசிரியர் பணியை ஆற்றியதோடு பல ஏழைமாணவர்களுக்கு உதவிகள் செய்து, அவர்களின் வீடுகளை சந்தித்து, வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். பின்னர், "எல் ஹோகார் டே கிறிஸ்டோ” (L Hogar de Christo) என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு ஒரு கருணை இல்லம் தொடங்கினார்.
எப்போதும் அவர் சமூக சிந்தனைகளை கொண்டு செயல்பட்டார். சமுதாயத்தை பற்றியும், ஏழைகளை பற்றியும் சில நூல்களை எழுதியுள்ளார். ஏழைகளின் நண்பரான ஆல்பர்ட் புற்றுநோயால் தாக்கப்பட்டு காலமானார். நோயால் தாக்கப்பட்ட நாளிலிருந்து இறக்கும்வரை பொறுமையோடும், மகிழ்வோடும் தன் நோயை ஏற்றுக்கொண்டார். இவர் இறந்தாலும் ஏழைகளின் மனங்களில் உயிருடன் வாழ்ந்தார்.
செபம்:
ஏழைகளின் நண்பனே! யாம் வாழும் இவ்வுலகில் எங்களைவிட எத்தனையோ பேர் சொத்து, சுகமின்றி, தேவையான அடிப்படை வசதியின்றி வாழ்கின்றனர். ஏழை மக்களை எங்களின் நண்பர்களாக ஏற்று, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, வழிகாட்டிட, உம் அருள் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
அகாப்பிட்டஸ் Agapitus von Praeneste
மறைசாட்சி
பிறப்பு: 255/260 பிரேனெஸ்ட் Praeneste, உரோம், இத்தாலி
இறப்பு: 270/275 பிரேனெஸ்ட் (15 வயது). அவுரேலியன் என்ற அரசனால் கொல்லப்பட்டார்
பாதுகாவல்: நோயுற்ற குழந்தைகள், பிரசவ தாய்மார்கள்
ஃப்லோரஸ் மற்றும் லவ்ரஸ் இரட்டையர் சகோதரர்கள்
மறைசாட்சியர்
பிறப்பு: 2 ஆம் நூற்றாண்டு(?), பைசாண்ட்ஸ் Byzanz (இன்றைய துருக்கி)
இறப்பு: 2 ஆம் நூற்றாண்டு(?),இல்லிரிக்கம் Illyricum (இன்றைய போஸ்னியா)
பாதுகாவல்: வீட்டுவிலங்குகள்
ஹெலனா Helena
அரசி
பிறப்பு: 255, பிட்டைனியா Bithynien (இன்றைய துருக்கி)
இறப்பு: 18 ஆகஸ்டு 330, நிக்கோடேமியா, இஸ்மித் Izmid (இன்றைய துருக்கி)
பாதுகாவல்: பிராங்க்ஃபர்ட், ட்ரியர்
ஆகஸ்டு 19
புனித ஜான் ஜுட் (Johannes Eudes CJM)
சபை நிறுவுனர்
பிறப்பு
14 நவம்பர் 1601
ரீ Ri, அர்கெண்டான் Argentan, பிரான்ஸ்
இறப்பு
19 ஆகஸ்டு 1680
சேன் Caen, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 1909 திருத்தந்தை பத்தாம் பயஸ்
புனிதர்பட்டம்: 31 மே 1925 திருத்தந்தை பதினோறாம் பயஸ்
இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்தவராக திகழ்ந்தார். மிக தாழ்ச்சியோடு ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்று வந்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை, தன் சிறுவயதிலிருந்தே, அன்போடு பராமரித்து, தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். சிறுவயதிலிருந்தே அன்னைமரியிடமும், இயேசுவிடமும் மன்றாடி தன் கற்பை காத்து வந்தார். இயேசு சபை குருக்களிடம் கல்வி பயின்று தேர்ந்தார். தான் குருவாகி பணிபுரிய வேண்டுமென்ற ஆர்வம் இவரிடம் கொழுந்துவிட்டு எரிந்ததால் "பிரெஞ்ச் ஆரட்டரி" என்றழைக்கப்பட்ட சபையில் சேர்ந்து, குருத்துவ பயிற்சி பெற்றார். தியானங்கள் கொடுப்பதிலும், செபிப்பதிலும், வல்லவரான இவர் பல மணி நேரம், எவ்வித இடையூறும் இல்லாமல் இறைவனோடு ஒன்றிணைந்து செபித்தார்.
இவர் 1626 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பின்னர் மறைப்பணியாளராகி பங்குகளுக்கு சென்று பல ஆண்டுகள் பணியாற்றினார். மறைப்பணியாளர்களை உருவாக்கும் பணியை மேற்கொண்டு, சிறந்த மறைப்பணியாளர்களை உருவாக்கினார். வழிதவறி அலைந்த பெண்களை ஒன்றுதிரட்டி, நல்வழிகாட்டி, வாழ்வை மாற்றி அமைத்தார். அவர்களை கிறிஸ்துவ வாழ்வில் ஈடுபடுத்த ஒரு சபையை நிறுவினார். அச்சபைக்கு "இயேசுமரி"(Jesus Mary) என்று பெயர் சூட்டினார். இவர், இன்னும் சில குருக்களின் துணைகொண்டு, சில அநீத கொள்கைகளை எதிர்த்தனர். அவ்வேளையும் மீண்டும் "நல்லாயன் கன்னியர்"(Good Shepherd Sisters) என்ற சபையையும் நிறுவினார்.
இயேசுவின் திரு இதய பக்தியையும், மரியாவின் மாசற்ற இதய பக்தியையும் ஊக்குவித்து வளர்த்தார். புனித மர்கரீத் மரியாள் பிரான்சு நாட்டில் திரு இதய ஆண்டவரிடம் காட்சி பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தன் துறவற இல்ல ஆலயத்தில் திரு இதய ஆண்டவரின் விழாவை கொண்டாடினார். இவர் குருமடத்தில் இருந்த காலத்தில் அனைவருக்கும் முன்மாதிரியான வாழ்வை, தன் செபத்தின் வழி வாழ்ந்தார். மறைப்பணியின்போது, பல தியானங்கள் கொடுப்பதன் வழியாக பலருக்கு ஆறுதல்படுத்தும் பணியையும், குணமளிக்கும் பணியையும், நற்செய்திப் பணியையும் ஆற்றினார். இதன் வழியாக எண்ணிடலங்கா மக்களை இறைவழி செல்ல வழிகாட்டினார்.
செபம்:
என்றும் வாழ்பவரே எம் இறைவா! இதயத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ளவர் நீர். உமது பக்தியை எம்மில் வளர்த்தருளும். இயேசுவின் திரு இதயத்தையும், அன்னைமரியின் மாசற்ற இதயத்தையும் நாங்கள் பெற்று வாழ, உமது ஆவியினால் எம்மை நிரப்பி வழிநடத்தியருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
காரிட்டாஸ் பிர்க்ஹைமர் Charitas Pirchheimer OSCI
துறவி, முத்திபேறுபட்டத்திற்கான பணி 1962 ல் தொடங்கப்பட்டது.
பிறப்பு: 21 மார்ச் 1467, ஐஷ்டேட்Eichstätt, பவேரியா, ஜெர்மனி
இறப்பு: 19 ஆகஸ்டு 1532 நூரன்பெர்க்Nürnberg, பவேரியா. ஜெர்மனி
எசேக்கியேல் மொரெனா டயஸ் Ezechiel Moreno y Dias OESA
ஆயர்
பிறப்பு: 10 ஏப்ரல் 1848, அல்பாரோ, ஸ்பெயின்
துணை ஆயராக: 1894, கொலம்பியா
ஆயராக: 1895 பாஸ்டோPasto மறைமாவட்டம், தெற்கு கொலம்பியா
இறப்பு: 19 ஆகஸ்டு 1906 மொண்டேகூடோ Monteagudo, ஸ்பெயின்
புனிதர்பட்டம்: 11 அக்டோபர் 1992 திருத்தந்தை இரண்டாம் ஜான்பவுல்
புனித லூட்விக் Ludwig von Toulouse
பேராயர்
பிறப்பு: 1274 நொசேரா Nocera, பாகானிPagani நேயாபல், இத்தாலி
இறப்பு: 19 ஆகஸ்டு 1297 பிரிக்னோலஸ்Brignoles, பிரான்ஸ்
புனிதர்பட்டம்: 1317
ஆகஸ்டு 20
புனித பெர்னார்டு கிலார்வாக்ஸ் Bernhard von Clairvaux
துறவி, மறைவல்லுநர்
பிறப்பு
1090
திஜோன்(Dijion), பிரான்சு
இறப்பு
20, ஆகஸ்டு 1153
கிளார்வாக்ஸ்( Clairvaux), பிரான்சு
புனிதர்பட்டம்: 18 ஜனவரி 1174 திருத்தந்தை 3 ஆம் அலெக்சாண்டர்
மறைவல்லுநராக: 1830, திருத்தந்தை எட்டாம் பயஸ்
பாதுகாவல்: பேய்பிடித்தோர், குழந்தை நோயாளர்கள்
இவர் ஓர் அரசர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் சிறந்த நன்னெறியில் இவரையும், இவரின் உடன்பிறந்தவர்களையும் வளர்த்தெடுத்தார்கள். சிஸ்டர்சியன்(Sistercien) சபையில் சேர்ந்து கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டார். அரசர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , சாதுவான வாழ்வை வாழ்ந்தவர். கடுமையான ஏழ்மையை தன் துறவற வாழ்வில் கடைபிடித்தார். தன் பெற்றோரின் வளர்ப்பை மறவாமல் செப வாழ்வில் ஈடுபட்டார். பின்னர் தன் உடன்பிறந்த சகோதரர்களும், தந்தையும் இவருடன் வாழ துறவற இல்லம் வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்கென்றிருந்த அனைத்தையுமே விற்று, மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தனர். தனிமையான வாழ்வு, கடுமையான செபம், ஒறுத்தல் இவைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்ந்தனர். அப்போது பிரான்சு நாட்டில் பரவிய "ஆல்பிஜென்ஸ்" என்ற கொள்கைகளை தைரியமாக எதிர்த்தனர். பெர்நார்டு எச்சவாலையும் தைரியமாக சந்தித்தார். மிக சிறந்த கிறிஸ்துவ மக்களை உருவாக்கினார். சிலுவைப் போரில் பணிபுரிய நல்ல கிறித்தவர்களை உருவாக்கினார். இவர்கள் விசுவாசத்தில் வளர, தன்னை முழுதும் கரைத்தார். பிறகு கிளேர்வே(Clarwo) என்ற ஆதீனத்துக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன்னுடன் வாழ்ந்த மற்ற துறவிகள் புண்ணியங்களை பேணி வளர்க்கும்படி, போதனைகளாலும், முன்மாதிரியாலும் சிறிய முறையில் வழி நடத்தினார். திருச்சபையில் பிரிவினைகள் அதிகம் தோன்றியதால் ஐரோப்பா நாடு முழுவதும் பயணம் செய்தார். திருச்சபையின் அமைதி நிலவ பெரிதும் உழைத்தார். அச்சமயத்தில் இறையியலைப்பற்றியும், கடுந்தவம் பற்றியும், ஏழ்மை வாழ்வைப்பற்றியும் பல நூல்களை எழுதினார். இவரின் பயணத்தின்பியோது இவரால் தொடங்கப்பட்ட ஆதீன மடத்தில், இறைவேண்டல் செய்யும் வேளையில் இறந்தார்.
செபம்:
மூவொரு இறைவா! புனித பெர்னார்டை, உமது இல்லத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பற்றி எரிய செய்தீர். உம் திருச்சபையில் அறிவொளியை வீசவும், அடுத்தவரின் மீது அன்பு கொள்ளவும் அவரை ஏற்படுத்தினீர். அவரைப்போல நாங்களும் உம்மால் தூண்டப்பட்டு, உமது தூய ஆவியின் வழிநடத்துதலில் வழிநடக்க இறைவா உம்மருளை தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஜார்ஜ் ஹேஃப்னர் Georg Häfner
குரு
பிறப்பு: 19 அக்டோபர் 1900 வூர்ட்ஸ்பூர்க் Würzburg, பவேரியா,Germany
இறப்பு: 20 ஆகஸ்டு 1942 டாஹவ்Dachau ஹிட்லர் வதை முகாம், பவேரியா,Germany
ஆகஸ்டு 21
புனித பத்தாம் பயஸ், திருத்தந்தை St. Pius X
திருத்தந்தை
பிறப்பு
2 ஜூன் 1835
ரீசே Riese, இத்தாலி
இறப்பு
20 ஆகஸ்டு 1914
ரோம், இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1951
புனிதர்பட்டம்: 29 மே 1954 திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
திருவழிபாட்டு பாடல்கள், கிரகோரியன் பாடல்கள், பூசைபுத்தகம், கட்டளை செபங்கள் போன்றவற்றை புதுப்பித்தவர்
நற்கருணையை விரைவில் பெற வழிவகுத்தவர் துறவறத்திற்கான படிப்பை புதுப்பித்தவர்
ஆயராக: 1884 மாண்டுவா மறைமாவட்டம் Mantua
திருத்தந்தையாக: 1903
இவர் ஓர் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிருந்தே சிறந்த அறிவாளியாக திகழ்ந்தார். தவறாமல் ஆலயம் சென்று திவ்விய நற்கருணையை சந்தித்து வந்தார். ஞானம் நிறைந்த இவர், ஆன்மீக காரியங்களில் இரவு, பகலென்று பாராமல், அதிக அக்கறை காட்டி வந்தார். ஆலயப் பணிகள் அனைத்தையும் மகிழ்ச்சியோடு செய்தார். பயஸ் 1858 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். குருத்துவ நிலைக்கு உயர்த்தப் பெற்றபின், தம் பணியை சிறப்பாக செய்தார். தம் பங்கிலிருந்த அனைத்துக்குடும்பங்களையும் சந்தித்து, கிறிஸ்துவ வாழ்வில் வளர்த்தெடுத்தார். பல மணி நேரம் ஆலயத்தில் அமர்ந்து செபித்தார். நேரம் பாராமல் பாவசங்கீர்த்தனம் கேட்டார். இவர் 1859 ஆம் ஆண்டு மாந்துவா(Manthu) நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் வெனிஸ் நகரத் திருச்சபையின் தலைமை ஆயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பிறகு 13 ஆம் சிங்கராயர்(Leo XIII) அவர்களின் மறைவுக்குப்பின் 1903 ஆம் ஆண்டு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்தையுமே கிறிஸ்துவுக்குள் புதுப்பிக்கவேண்டும் என்ற நோக்குடன் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதை வாழ்வில் நேர்மையை கடைபிடித்து , ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து, மன உறுதியோடு நிறைவேற்றி வைத்தார். இவரின் பண்புகளால் மெய்யடியார்களிடையே கிறிஸ்துவ வாழ்வை தூண்டி வளர்த்தார். திருச்சபைக்கு ஊறு விளைவித்த தவறான கருத்துக்களுக்கு எதிராக, வீரத்துடன் நடவடிக்கை எடுத்தார். தான் பிறந்து, வளர்ந்த ஏழ்மையான வாழ்வை விடாமல் கைபிடித்து வந்தார். மிகச் சிறப்பாக இறைப்பணியை செய்த இவர், முதல் உலகப்போர் மூண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் இறைவனடி சேர்ந்தார். இவர் தனது இறுதிமூச்சுவரை கத்தோலிக்க மக்களை பாதுகாத்து, அவர்களை ஆழமான விசுவாசத்தில் வளர்த்தெடுத்தார்.
செபம்:
வல்லமை தருபவரே எம் தலைவா! புனித பத்தாம் பயசை நீர் உமது ஆசீர்வாதத்தால் நிரப்பினீர். உமது திட்டத்தை அவரில் நிறைவேற்றினீர். உம்மைப்பற்றி எடுத்துரைக்க ஞானத்தையும், அறிவாற்றலையும் தந்தீர். அவர் கற்றுக்கொடுத்தவற்றின்படி நாங்கள் வாழ, எங்களை உம் பிள்ளைகளாக ஏற்று வாழ, உமது வல்லமையிய தந்தருளும்படியாக தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
பிரான்ஸ் ரைனிஷ் Franz Reinisch SAC
குரு, பல்லோட்டின் சபைத்துறவி
பிறப்பு: 1 பிப்ரவரி 1903 ஆஸ்திரியா
குருப்பட்டம்: 1928
இறப்பு: 21 ஆகஸ்டு 1942 பெர்லின்-பிராண்டன்பூர்க், ஜெர்மனி. நாசிஸத்தை எதிர்த்து மறையுரையாற்றியதால் ஹிட்லரால் கொல்லப்பட்டார்.
ஆகஸ்டு 22
புனித பிலிப்பு பெனிடியுஸ், Philippus Benitius OSM
சபை நிறுவுனர்
பிறப்பு
15 ஆகஸ்டு 1233,
புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு
22 ஆகஸ்டு 1285,
டோடி Todi, இத்தாலி
புனிதர்பட்டம்: 1671, திருத்தந்தை 10 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல்: சர்வைட் சபைக்கு
இவர் பெண்களுக்கான "சர்வைட்" Servites என்ற சபையை நிறுவினார். இவர் பாரிஸ் மற்றும் பதுவையில் Padua தனது மருத்துவ படிப்பையும், தத்துவயியல் படிப்பையும் படித்தார். தனது 19 ஆம் வயதில் சர்வைட் சபையில் சேர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து 1259 ல் குருப்பட்டம் பெற்றார். 1267 ல் சர்வைட் சபையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். தனது சபையை வலிமை பெற்ற சபையாக மாற்றினார். பின்னர் இத்தாலி ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று மிஷினரியாக பணியாற்றினார். அந்நாடுகளில் தன் சபையை பரப்பி, சில சர்வைட் துறவற இல்லங்களையும் கட்டினார்.
இவர் சிறப்பாக ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிபுரிந்தார். வாழ்வில் எதுவுமே இல்லையென்றுணர்ந்த மக்களை, தன் இதயத்தில் சுமந்து, வாழ்விற்கு வழிகாட்டினார். எண்ணிலடங்கா ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றினார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! புனித பிலிப்பு பெனிடியுஸ் வழியாக பெண்களுக்கான சர்வைட் சபையை உருவாக்கினார். அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு. இவ்வுலகில் உமது பணியை தொடர்ந்து ஆற்ற இச்சபைக்கு தேவையான தேவ அழைத்தலைத் தாரும். இச்சபை கன்னியர்களோடு, உடனிருந்து வழிநடத்தியருளும். இச்சபையை வழிநடத்தும் சபை பொறுப்பாளர்களுக்கு தேவையான ஆவியின் அருள்கொடைகல் அனைத்தையும் தந்து, ஆசீர்வதித்திட வேண்டுமென்று இப்புனிதரின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
சிம்போரியானுஸ் Symphorianus von Autun Märtyrer
மறைசாட்சி
பிறப்பு: 165, ஆவ்டுன் Autun, பிரான்சு
இறப்பு: 180, ஆவ்டுன்
பாதுகாவல்: குழந்தைகள், பள்ளிச்சிறார்
ஆகஸ்டு 23
லீமா நகர் புனித ரோசா Rosa von Lima OSD
திருக்காட்சியாளர்
பிறப்பு
20 ஏப்ரல் 1586,
லீமா, பெரு,Peru
இறப்பு
24 ஆகஸ்டு 1617,
லீமா,Lima,பெரு,Peru
புனிதர்பட்டம்: 1671, திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
பாதுகாவல்: தென் அமெரிக்கா
இவர் வீட்டிலிருந்த குறைந்த காலத்திலேயே, புண்ணிய வாழ்வை பேணி வளர்க்கத் தொடங்கினார். இவர் மிகவும் அழகானவர். மிகவும் வறுமையில் வளர்ந்தவர். குடும்பச்சுமையை போக்க சிறு வயதிலிருந்தே கஷ்டப்பட்டு உழைத்தார். இவர் அழகாக இருந்ததினால், ஏராளமானோர் இவரை விரும்பத்தொடங்கினர். இதனால் தன் உடலை தானே அழித்துக்கொள்ள விரும்பினார்.
இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினர். ஆனால் இவரோ இயேசுவை பின்பற்றி அவருக்காக வாழ விரும்பினார். புனித தோமினிக்கின் 3 ஆம் சபையில் சேர்ந்து, துறவற உடையை அணிந்து கொண்டார். தவ வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி, செபவாழ்வில் ஆழ்ந்து இருந்தார். இறைவனோடு ஒன்றிணைந்து தியானிப்பதில் உயர்ந்த நிலையை அடைந்தார்.
செபம்:
அன்பான இறைவா! இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு விவசாய மக்களையும் நீர் ஆசீர்வதியும். தேவையான மழையை தந்து, விவசாயத்தை செழிப்படைய செய்யும், தேவையான வசதிகளை தந்து, இயற்கையின் வழியாக உம்மை நேசிக்க வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ரிச்சில்டிஸ் Richildis/ Richilt
கன்னியர்
பிறப்பு: 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 23 ஆகஸ்டு 1100, ஹோஹன்வார்ட் Hohenwart, பவேரியா
பாதுகாவல்: இடி, மின்னலிலிருந்து காக்க
ஆகஸ்டு 24
திருத்தூதர் பார்த்தலமேயு (நத்தனியேல்) Apostle Bartholomew
மறைசாட்சி
பிறப்பு
முதல் நூற்றாண்டு,
கானா Cana, கலிலேயா
இறப்பு
முதல் நூற்றாண்டு,
சிரியா
பாதுகாவல்: ஃப்ராங்க்பர்ட், கொடிய நோய்களை தீர்க்க
இவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர். இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்து, உயிர்த்து விண்ணேற்றம் பெற்றபின் இந்தியாவிற்கு சென்று மறைப்பணி செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. இவர் பிலிப்பு என்ற சீடரின் நண்பர். இவர் ஆர்மேனிய நாட்டிற்கு சென்று, அங்கு விசுவாசத்தை பரப்பினார் என்றும், அதன்பிறகுதான் தலைவெட்டப்பட்டு இறந்தார் என்றும் கூறப்படுகின்றது.
யோவான் நற்செய்தி 1:45-50 -ல் பின்வரும் இறைவாக்குகள் இவரை பற்றி மேலும் கூறுகிறது. "பிலிப்பு நத்தனியேலை போய்ப்பார்த்து, இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தை சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவின் அவர்" என்றார். அதற்கு நத்தனியேல், நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார். இயேசு, "பிலிப்பு உம்மை கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிட பெரியவற்றை காண்பீர்" என்றார்.
செபம்:
இரக்கமே உருவான தெய்வமே! உமது விசுவாசத்தைப் பரப்பி, அதன் பலனாக தன் உயிரை ஈந்த அப்போஸ்தலர் பார்த்தலோமேயு வழியில் சென்று, உம் விசுவாசம் இவ்வுலகில் நிலைக்க, உழைப்பதற்கு நல்ல மனதை எமக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
எமிலி டி வியாலர் Emilie de Vialar
சபை நிறுவுனர், திருக்காட்சியாளர்
பிறப்பு: 12 செப்டம்பர் 1797, கைலாக் Gailac, பிரான்ஸ்
இறப்பு: 24 ஆகஸ்டு 1856 மார்செல் Marseille, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 1939
புனிதர்பட்டம்: 24 ஜூன் 1951 , திருத்தந்தை 12 ஆம் பயஸ்
யோஹான்னா ஆண்டிடா தோரட் Johanna Antida Thouret
சபைநிறுவுனர்
பிறப்பு: 27 நவம்பர் 1765 பிரான்ஸ்
சபை துவங்கிய ஆண்டு: 1799
சபை அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு: 1819 , திருத்தந்தை எட்டாம் பயஸ்
இறப்பு: 24 நவம்பர் 1826 நேயாபல், இத்தாலி முத்திபேறுபட்டம்: 1926
புனிதர்பட்டம்: 14 ஜனவரி 1934, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
மரியா மிக்கேலா டெஸ்மைசியர்ஸ் Maria Michaela Desmaisieres
சபை நிறுவுனர்
பிறப்பு: 1 ஜனவரி 1809 மட்ரித், ஸ்பெயின்
சபை துவங்கிய ஆண்டு: 1859
இறப்பு: 24 ஆகஸ்டு 1865, வாலன்சியா, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 1925
புனிதர்பட்டம்: 4 மார்ச் 1934, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
ஆகஸ்டு 25
புனித ஒன்பதாம் லூயிஸ், அரசர் (St. Louis IX / Ludwig IX)
பிறப்பு
25 ஏப்ரல் 1219,
பிரான்ஸ்
இறப்பு
25 ஆகஸ்டு 1270
துனிசியா
புனிதர்பட்டம்: 1297, திருத்தந்தை எட்டாம் போனிபாஸ்
அரசராக: 1230, 11 வயதில்
பாதுகாவல்: முயூனிக், சார்ப்ர்யூக்கன், பெர்லின், பிரான்சிஸ்கன் 3 ஆம் சபைக்கு பாதுகாவலர்
லூயிஸ் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தையின் பெயர் லூயிஸ் டி லையன்(Louid de Lion). இவரின் தாய் ப்லான்சே(Blanche). இவரின் தாத்தா பிரான்சு நாட்டு அரசர் இரண்டாம் பிலிப்பு. புனித லூயிஸ் 9 வயதாக இருக்கும்போதே, இவரின் தாத்தா இறந்துவிட்டார். இதனால் இவரின் தந்தை 8 ஆம் லூயிஸ் அரச பதவியேற்றார். 8 ஆம் லூயிசை பதவியேற்ற 3 ஆண்டுகளில் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார். அதனால் லூயிஸ் தனது 12 வயதிலேயே நாட்டின் அரசராக பதவியேற்றார். ஒன்பதாம் லூயிஸ் என்று பெயர் பெற்றார். லூயிஸ் திருமணம் செய்து, 11 குழந்தைகளை ஆண்டவரின் ஆசீரோடு பெற்றார். தன் குழந்தைகளை தானே சிறந்த முறையில் பேணி வளர்த்து பயிற்றுவித்தார். தவப் பற்றிலும், செப ஆர்வத்திலும், ஏழை எளியவர் மீது கொண்ட அன்பிலும் சிறந்து விளங்கினார். தன் நாட்டு மக்களின் ஆன்மீக நலத்திலும் அவர்களிடையே அமைதியை உருவாக்குவதிலும் அக்கறைகொண்டு, ஆட்சி செய்தார். கிறித்துவின் கல்லறையை விடுவிக்குமாறு சிலுவைப்போர் மேற்கொண்டார். இவர் 1226 ஆம் ஆண்டிலிருந்து, தான் இறக்கும்வரை அரசராக இருந்தார். இவர் 1248 ஆம் ஆண்டு 7 வது சிலுவைப்போரையும், 1270 ஆம் ஆண்டு மீண்டும் 8 வது சிலுவைப்போரையும் நடத்தினார். இவர் அரசர்களிலேயே முதல் புனிதர் என்ற பெயர் பெற்றார்.
செபம்:
நல்ல ஆயனாம் எம் இறைவா! பிரான்சு நாட்டில் லூயிஸ் என்ற ஓர் நல்ல அரசரைக் கொடுத்து, உம் மக்களை நீர், அவர் வழியாக உம்மால் ஈர்த்துள்ளீர். இன்றும் அரசர்களாக இருந்து ஆட்சி புரிபவர்களை நீர் வழிநடத்தியருளும். மக்களை நீதியோடும் நேர்மையோடும் ஆட்சி செய்திட உம் அருள் தருமாறு தந்தையே உம்மிடம் மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
புனித ஜோசப் காலசன்ஸா Joseph von Calasanza SP
சபைநிறுவுனர்
பிறப்பு: 11 மார்ச் 1556, பெரால்டா Peralta, ஸ்பெயின்
குருப்பட்டம்: 1583
சபை அங்கீகாரம்: 1617 திருத்தந்தை ஐந்தாம் பவுல் 1621 திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
இறப்பு: 25 ஆகஸ்டு 1648, உரோம், இத்தாலி
புனிதர்பட்டம்: 1767 திருத்தந்தை 13 ஆம் கிளமென்ட்
சிலுவை யேசுவின் புனித மரியா Mariam Baouardy / Maria vom gekreuzigten Jesus OCarm
கன்னியர், திருக்காட்சியாளர்
பிறப்பு: 5 ஜனவரி 1846, அபெல்லின் Abellin , நாசரேத், பாலஸ்தீனா
இறப்பு: 25 ஆகஸ்டு 1878, பெத்லகேம்
முத்திபேறுபட்டம்: 13 நவம்பர் 1983, திருத்தந்தை இரண்டாம் ஜான்பவுல்
ஆகஸ்டு 26
யேசுவின் புனித தெரசாள் Theresia von Jesus OSCI (Teresa Jornet y Ibars)
கன்னியர்
பிறப்பு
9 ஜனவரி 1843
ஐடோனா Aytona, ஸ்பெயின்
இறப்பு
26 ஆகஸ்டு 1897
பார்பஸ்ட்ரோ Barbastro, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 1958, திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்
புனிதர்பட்டம்: 27 ஜனவரி 1974 திருத்தந்தை ஆறாம் பவுல்
இவர் சிறுவயதிலிருந்தே பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். அனைத்து துன்பங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டார். இவர் சிறுவயதிலிருந்து, தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசை கொண்டார். தன் விருப்பத்தை பல துறவற இல்லத்தில் தெரிவித்தார். ஆனால் இவரை, துறவறத்திற்கு சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை, எத்துறவற சபையினரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஓர் ஆசிரியராக படித்து, பின்னர் பள்ளியில் ஆசிரியர் பணியை செய்தார்.
நாளடைவில் தன் விருப்பத்தை, தன்னுடைய ஆன்ம வழிகாட்டியிடம் தெரிவித்தார். அவர் காட்டிய வழியில் சென்ற தெரசா, 1872 ஆம் ஆண்டு பார்பஸ்ட்ரோ(Barbastro) என்ற ஊரில், ஒரு துறவற சபையை தொடங்கினார். இச்சபைக்கு "ஏழைகளின் எளிய அருட்சகோதரிகள்"(Little sisters of poor) என்ற பெயரை சூட்டினார். ஏழையாக பிறந்து, வளர்ந்த தெரசா, தன் சபையையும் ஏழைகளுக்காகவே ஏற்படுத்தினார். இத்துறவற சபை முதலில் லெரிடா(Lerida) என்ற ஊரில் தொடங்கப்பட்டது. ஏழைகளுக்கான இச்சபை தெரசா இறக்கும்போது, 50 துறவற இல்லமாக பெருகி, வளர்ச்சி அடைந்தது.
செபம்:
ஏழைகளின் தோழனே எம் இறைவா! ஏழைகளை நீர் பேறுபெற்றவர்கள் என்று புகழ்ந்தீர். உம்மீது கொண்ட அன்பால் துறவற சபையை ஏற்படுத்தி, உம் பணியை சிறப்பாக ஆற்றிய தெரசாவை நினைத்து, உமக்கு நன்றி கூறுகின்றோம். அவரின் வழியாக தொடர்ந்து உம் ஆசீரால், ஏழை, எளிய மக்களை நிரப்பி, வழிநடத்தியருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
கிரகோரி ஃபால்சல் Gregor von Pfalzel (von Ulrecht) OSB
சபைத்துறவி
பிறப்பு: 707
இறப்பு: 25 ஆகஸ்டு 776, நெதர்லாந்து
புனித யோஹான்னா எலிசபெத் Johanna Elisabeth (Bichier des Ages)
சபைநிறுவுனர்
பிறப்பு: 5 ஜூலை 1773 பிரான்ஸ்
இறப்பு: 26 ஆகஸ்டு 1838, லா பூயே La Puye, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 1934 திருத்தந்தை 9 ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 6 ஜூலை 1947 திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
ஆகஸ்டு 27
மோனிக்கா Monika
புனித அகுஸ்தினாரின் தாயார்
பிறப்பு
332, டாகஸ்டே Tagaste,
நுமிடியன் Numidien (இன்றைய அல்ஜீரியா)
இறப்பு
அக்டோபர் 387,
ஓஸ்டியா Ostia,
இத்தாலி
பாதுகாவல்: கிறித்தவ பெண்கள், தாய்மார்கள்
புனித மோனிக்கா சிறு வயதிலேயே பத்திரிசியுஸ் (Patricius) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் பல குழந்தைகளுக்கு தாயானார். அவர்களில் ஒருவர்தான் புனித அகுஸ்தீன். தன் மகன் மனம் போன போக்கில் வாழ்ந்ததால், அவரை மனந்திருப்ப, எப்போதும் கண்ணீருடன் இறைவேண்டல் செய்தார். தன் கணவரின் இறப்பிற்கு பின் தன் குழந்தைகளுக்காகவும், பல வேதனைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்தார். அகுஸ்தீனின் நல்வாழ்விற்காக ஆயர்களை சந்தித்து, தன் மகனுக்கு, ஆன்மீக காரியங்களில் வளர்ந்து, நல்ல கிறிஸ்துவனாக வாழ உதவும்படி மன்றாடினார்.
தன் கணவரையும், தன் மாமியார், மகன் அனைவரையும், தன் இடைவிடா செபத்தினாலேயே, மனமாற்றி, திருமுழுக்கு பெறவைத்து, கிறிஸ்துவர்களாக மாற்றினார். இறுதிமூச்சுவரை திருச்சபையின் மக்களாக வாழ வேண்டுமென்று தன் மகன்களுக்கு அறிவுறுத்தினார். இவர் கார்த்தேஜ்(Carthej) என்ற நகரிலிருக்கும் புனித சிப்ரியன் ஆலயத்தில் அமர்ந்து செபிக்கும்போது, தன் மகன் அகுஸ்தீன் உரோம் நகர் சென்றார். இதையறிந்த அத்தாய், மகனைக் காண ஓடோடி கப்பலேறி வந்துகொண்டிருக்கும்போது, சுகமில்லாம் இறந்துவிட்டார்.
செபம்:
துயரப்படுவோர்க்கு ஆறுதல் அளிப்பவரே எம் தந்தையே! தன் மகன் அகுஸ்தீனின் மனமாற்றத்திற்காக பரிவன்புடன் கண்ணீர் சிந்திய புனித மோனிக்காவைப்போல, நாங்களும் எங்கள் பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி, உமதருளால் மனமாற்றம் பெற்றிட உதவி செய்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
அன்னை மரியின் முத்திபேறுபெற்ற டோமினிக் Dominikus a Matre Dei CP
சபைத்தலைவர்
பிறப்பு:
22 ஜூன் 1792
விதர்போ Palanzano bei Viterbo,
இத்தாலி
இறப்பு:
27 ஆகஸ்டு 1849
இங்கிலாந்து
முத்திபேறுபட்டம்: 27 அக்டோபர் 1963, உரோம், திருத்தந்தை ஆறாம் பவுல்
ஆகஸ்டு 28
புனித அகுஸ்தீன்/ அகுஸ்தினார் / அகஸ்டீன் St.Augustine
ஆயர், மறைவல்லுநர்
பிறப்பு
13 நவம்பர் 354 ,
டாகஸ்டேTagaste, நுமிடியன் Numidien, (இன்றைய அல்ஜீரியா)
இறப்பு
28 ஆகஸ்டு 430
ஹிப்போ, நுமிடியன் Numidien,(இன்றைய அல்ஜீரியா)
குருப்பட்டம்: 394
ஆயர்பட்டம்: 396, ஹிப்போ மறைமாவட்டம் Hippo, வட ஆப்ரிக்கா
பாதுகாவல்: இறையியல் அறிஞர்கள்
புனித அகுஸ்தீன் தனது இளமைப் பருவத்தை தவறான போதனையிலும், ஒழுக்கமற்ற நடத்தையிலும் அமைதியின்றி கழித்தார். தன் தாய் மோனிக்காவின் இறைவேண்டலினால் மனந்திரும்பினார். பின்னர் இறைநூலைப் படித்தும், தன் தாயின் விருப்பப்படியும் இறைவழியில் சென்றார்.
மிலானில் மனந்திரும்பிய இவர், 387 ஆம் ஆண்டில், மிலான் ஆயர் அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் தம் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். தனது 42 ஆம் வயதில் ஹிப்போ என்றழைக்கப்படும் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 34 ஆண்டுகள் தம் மந்தைக்கு எடுத்துக்காட்டான வாழ்வை வழங்கினார். ஏராளமான மறையுரைகளாலும், நூல்களாலும் மக்களை பயிற்றுவித்தார். ஏறக்குறைய 100 நூல்களுக்கும் மேல் எழுதினார். அவற்றைக் கொண்டு தம் காலத்தில் நிலவிய தவறான கருத்துக்களுக்கு எதிராக இடையறாது போராடினார். திறம்பட திருமறையை தெளிவுபட எடுத்துரைத்தார்.
செபம்:
எண்ணங்களை கடந்து செயல்படுபவரே! உம் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். புனித அகுஸ்தீன் மனந்திரும்பி உம்மை ஏற்றுக்கொண்டு. பின்பற்றியதுபோல வழி தவறி அலையும் இளையோர்களை உம்பால் ஈர்த்து அவர்களில் உம் சித்தத்தை நிறைவேற்றிட வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
முத்திபேறுபெற்ற கேப்ரே மைக்கேல் Ghebre Michael
குரு, மறைசாட்சி
பிறப்பு: 1788 மெர்ட்டுல் மரியம் Mertule Mariam, எத்தியோப்பியா
இறப்பு: 2 ஆகஸ்டு 1855, எத்தியோப்பியா
முத்திபேறுபட்டம்: 3 அக்டோபர் 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
புனித யோவாகிமா வெட்ரூனா Joachima Vedruna
சபை நிறுவுனர்
பிறப்பு: 16 ஏப்ரல் 1783, பார்சிலோனா, ஸ்பெயின்
சபை துவங்கிய ஆண்டு: 1826 “Karmeliterinnen von der Liebe”
இறப்பு: 28 ஆகஸ்டு 1853, விஷ் Vich, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 1940
புனிதர்பட்டம்: 12 ஏப்ரல் 1959 திருத்தந்தை 23 ஆம் அருளப்பர்
ஆகஸ்டு 29
புனித திருமுழுக்கு யோவான் தலை வெட்டப்பட்ட நாள் (The Beheading of St. John the Baptist)
யோவான் நேர்மையையும், தூய்மையும் கொண்டு வாழ்ந்தார். இதை அறிந்த ஏரோது அரசன் அவரை சிறையலடைத்தான் (எசாயா 49:1-2) ல் கூறுவதுபோல மறைசாட்சியாக மரித்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழி மரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், "மனமாறி திருமுழுக்கு பெறுங்கள்" என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் "நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை" என்று கூறினார் (திருத்தூதர்பணி 13:23-25) ஏரோது அரசன் குடித்து, ஏரோதியாளின் நடனத்துக்கு அடிமையாகி தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றவே, தன் காவலனை அனுப்பி சிறையிலிருந்த யோவானுடைய தலையை வெட்ட செய்தான். பின்னர் யோவானின் சீடர்கள் வந்து, அவரின் உடலை எடுத்து சென்றனர். ஜெலாசியன் திருத்தந்தைக்கு உரித்தாக்கப்படுகின்ற முற்கால வழிபாட்டு புத்தகத்தில் கண்டுள்ளபடி இன்றைய திருநாளின் பெயர், "புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்" என்றும், "புனித திருமுழுக்கு யோவானின் தலை வெட்டுண்டது" என்றும் அழைக்கப்படுகின்றது.
செபம்:
ஆற்றலும், ஆறுதலும் அருளுகின்ற இறைவா! அறிவிக்கும் நற்செய்தி பணியாளராக புனித திருமுழுக்கு யோவானை நீர் ஏற்படுத்தினீர். உண்மைக்கும், நீதிக்கும் அவர் சாட்சியாக தம் உயிரை ஈந்ததுப்போல, நாங்களும் உம் போதனைகளை எடுத்துரைக்க ஊக்கமுடன் பாடுபட உமதருளை தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
சபீனா Sabina
மறைசாட்சி
பிறப்பு: முதல் நூற்றாண்டு, உரோம், இத்தாலி
இறப்பு: ஆகஸ்டு 120 (126), உரோம், இத்தாலி
பாதுகாவல்: உரோம், குழந்தைகள், மனைவியர்
ஆகஸ்டு 30
புனித ஜான் ரோச், மறைசாட்சி (St.John Roche, Martyr)
பிறப்பு
அயர்லாந்து
இறப்பு
1588,
இங்கிலாந்து
முத்திபேறுபட்டம்: 1929, திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர்
பாதுகாவல்: கப்பல், படகு ஓட்டுநர்கள்
புனித மர்கரீத் வார்டு(Margaret Ward) மற்றும் அருள்தந்தை ரிச்சர்டு வாட்சன்(Richard Watson) ஆகிய இருவரும் மிகஸ் சிறப்பாக மறைப்பணியை செய்தனர். இதனால் கத்தோலிக்க திருச்சபையை பிடிக்காத புரட்டஸ்டாண்டு இங்கிலாந்து அரசி இருவரையும் பிடித்துச் சென்று சிறையலடைத்தார். இவர்கள் இருவரையும் யாருக்கும் தெரியாமல் ஒரு படகு மூலம் அவர்களை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்தார் புனித ஜான் ரோச். இதனை தெரிந்துகொண்ட அரசி அவரை சிறையில் அடைத்தார். இரண்டு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஒன்று, அரசியிடம் சென்று மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது புரட்டஸ்டாண்டு சபைக்கு மாறவேண்டும். இவ்விரு நிபந்தனைகளையும் மறுத்தார். இதனால் கோபங்கொண்ட அரசி அவரை தூக்கிட்டு கொன்றார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! இன்றைய நாளில் நினைவு கூறும் மறைசாட்சியான ஜான் ரோச் ஆற்றிய வல்ல செயல்களை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். இவருக்கு நீர் அளித்த மன உறுதியையும், தைரியத்தையும், நாங்களும் பெற்று, உம்மை இவ்வுலகில் நிலைநாட்டிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
பெலிக்ஸ் மற்றும் அடாக்டஸ் Felix und Adauctus
மறைசாட்சியர்
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, உரோம்(?), இத்தாலி
இறப்பு: 300 உரோம். மாக்சிமியான் அல்லது தியோக்லேசியன் காலத்தில் கொல்லப்பட்டனர
ஆகஸ்டு 31
புனித ரேமண்ட் நொன்னாட்டூஸ் (St.Raymon Nonnatus OdeM)
பிறப்பு
1204,
போர்டெல்லா(Potella), ஸ்பெயின்
இறப்பு
31 ஆகஸ்டு 1240
கார்டோனா Cardona, ஸ்பெயின்
புனிதர்பட்டம்: 1657, திருத்தந்தை 7 ஆம் அலெக்சாண்டர்
பாதுகாவல்: கர்ப்பிணிகள்,தாதியர்
புனித ரேமண்ட் தன் தாயின் கருவில் இருக்கும்போதே, இவரின் தாய் இறந்துவிட்டார். அதனால் அறுவை சிகிச்சை செய்து ரேமண்ட் வெளியில் கொணரப்பட்டார். சிறுவயதிலிருந்தே இயேசுவின் மீது அன்பும், பக்தியும் கொண்டு வளர்க்கப்பட்டார். அயலாரிடம் அன்பு காட்டுவதிலும் சிறந்தவராய் திகழ்ந்தார். தான் குருவாகி பணிபுரிய வேண்டுமென்று ஆசைக் கொண்டார். இவ்வாசை நிறைவேற "மெர்சேடாரியன்ஸ்" (Mercedarians) என்ற சபையில் சேர்ந்து குருவானார். இவர் 1222 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பின்னர் வாலென்சியா(Valencia) என்ற நாட்டிற்கு மறைபரப்பு பணியை செய்ய, அவரின் சபை தலைவரால் அனுப்பப்பட்டார். மிகச் சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். அப்போது அந்நாட்டில் ஏறக்குறைய 140 கிறிஸ்துவர்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். ரேமண்ட்தான் அம்மக்களை அடிமைத்தனத்தினின்று மீட்டார். அதன்பிறகு அவர் வட ஆப்ரிக்காவில் மறைப்பணியை செய்ய அனுப்பப்பட்டார். அங்கும் 250 பேர் அடிமைகளாக இருந்தவர்களை மீட்டார். அதன்பிறகு இவரின் பணி தூனிஸ்(Tunis) என்ற நகரில் தேவைப்படவே, மீண்டும் தூனிஸ் நகருக்கு அனுப்பப்பட்டார். மிகச் சிறந்த முறையில் மறைபரப்புப் பணியை ஆற்றிய இவரை, அந்நாட்டு மக்களால் சிறைபிடித்து வைக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டார். சிறையில் இருக்கும்போது அவரின் உதடுகள் இரண்டையும் இழுத்து பிடித்து, உதடுகளின் நடுவே, துளைப்போட்டு, இரும்பு பூட்டைக்கொண்டு, இவரின் வாயை பூட்டினர். அப்போது அக்கொடியவர்கள் ரேமண்ட்டை மறைபரப்பு பணியை ஆற்ற முடியாமல் செய்து வதைத்தனர். அங்கு அவர் பல துன்பங்களை அனுபவித்து இறந்தார்.
செபம்:
விடுதலை அளிப்பவரே எம் தலைவா! இவ்வுலகில் இன்னும் எத்தனையோ பேர் எல்லாவிதங்களிலும், அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நீர் ஒருவரே ஒவ்வொருவருக்கும் நடுவராக இருந்து, அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து விடுதலை அளித்து, வாழ்வு வழங்கிட வேண்டுமென்று புனித ரேமண்ட் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
முத்திபேறுபெற்ற ஜான் ஜுவெனல் அன்சினா Johannes Juvenal Ancina
சலூசோ மறைமாவட்ட ஆயர் Bischof von Saluzzo
பிறப்பு: 19 அக்டோபர் 1545, ஃபோஸானோFossano, இத்தாலி
இறப்பு: 31 ஆகஸ்டு 1604, சலூசோ Saluzzo, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1890